I guess Kamal was always between 5 5' to 5 6'. Rajini is probably just a few inches taller than Kamal. Not a great deal but slightly taller
He is mostly 5'8" - apoorva sagodhargal mayilsamy...
Bill4u sonna photo - this is really confusing. Salman is 5'9''!
http://archives.deccanchronicle.com/...b/DSC_0159.jpg
Yep .. thats the one! Here's a close up. He might be an inch or so shorter than Salman Khan.
Attachment 3515
கமல் - கவுதமி நடிக்கும் படத்தில் மோகன்லால் மகன் அறிமுகம்
சமீபத்தில் த்ரிஷ்யம் என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் அவர்களின் மகன் பிரணவ், த்ரிஷ்யம் தமிழ் ரீமேக் படமான பாபநாசம் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
கமல்ஹாசன் மற்றும் கவுதமி நடிப்பில் த்ரிஷ்யம் படத்தின் ரீமேக் பாபநாசம் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை மலையாளத்தில் இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது குற்றாலம், தென்காசி மற்றும் பாபநாசம் ஆகிய பகுதிகளில் நடந்து வருகிறது.
இந்நிலையில் மோகன்லால் மகன் பிரணவ், இந்த படத்தில் உள்ள முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் உறுதிப்படுத்தியுள்ளார். பிரணவ் ஏற்கனவே பல மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். அவர் நடித்து கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்த "புனர்ஜனி" என்ற மலையாள படத்திற்காக அவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது கேரள அரசினால் வழங்கப்பட்டது. தமிழ் படத்தில் அறிமுகமாகும் பிரணவ் அவர்கள் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
http://www.indiaglitz.com/2965299029...il-news-113047
கமலும் ஜீயரும்
அன்புள்ள ஜெமோ
குமுதம் பேட்டியில் நீங்கள் கமலஹாசனின் நாத்திகமும் உங்கள் ஆத்திகமும் ஒன்றுதான் என்று சொல்லியிருந்தீர்கள்.
கீழே உள்ள படத்தைப்பாருங்கள். இதில் நான்குநேரில் ஜீயர் அருகே பவ்யமாக அமர்ந்திருப்பது அந்த நாத்திகர் கமலஹாசன் தான் .
உங்கள் ஆத்திகமும் இதுதானா?
‘தழல்’ முடியரசன்
அன்புள்ள தழல்,
படத்தை இன்னொரு முறை பாருங்கள். கமல் நெற்றியில் விபூதியுடன் இருக்கிறார். விபூதி அல்ல மேக்கப். பாபநாசம் படத்தில் வரும் சுயம்புலிங்கத்தின் தோற்றம் வானமாமலை ஆலயத்தில் படப்பிடிப்பு நடந்தபோது நானும் அங்கிருந்தேன். அது நான் எழுதும் படம். தமிழகத்தில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள எந்த ஆலயத்திலும் படப்பிடிப்புக்கு அனுமதி இல்லை என்பதை அறிந்திருப்பீர்கள். நான்குநேரி வானமாமலை ஆலயத்தில் வெளிப்பிராகாரத்தில் சில பகுதிகள் மட்டும் மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளவை. ஆகவே அங்கே படப்பிடிப்பு நடத்த கோரினோம். ஜீயர் அவர்கள் அனுமதி அளித்தார்
அங்கே படப்பிடிப்பு நடந்தபோது ஜீயரைச் சென்று சந்தித்து மரியாதை செலுத்தினார் கமல். அந்தப்படம்தான் அது. நாத்திகர் என்றால் மரியாதை தெரியாதவர் என நான் நினைக்கவில்லை. நீங்கள் ஏன் நினைக்கவேண்டுமென புரியவில்லை.
முன்பு ஒரு காலத்தில் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகளைக் காண ஈவேரா சென்றிருந்தார். திரும்பும்போது அவர் அளித்த விபூதியை நெற்றியில் அணிந்துகொண்டார். படம் கூட வெளியாகியிருக்கிறது
ஜெ
http://www.jeyamohan.in/?p=61051