Quote:
நவராத்திரி பிரமோற்சவம்
பிரம்மனால் தொடங்கி வைக்கப்பட்டது திருமலை திருப்பதி ஸ்ரீவாரி ஸ்வாமி பிரம்மோற்சவம். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த தெய்வீகத் திருவிழா, இந்த ஆண்டு நவராத்திரி கொண்டாட்டத்துடன் இணைந்து அமைகிறது.
அங்குரார்ப்பணம் (விதையிடுதல்), கொடியேற்றம், பெரிய சேஷ, சிறிய சேஷ, ஹம்ச, சிம்ம முத்துப்பந்தல், கல்பவிருட்ச, சர்வ பூபால, தந்தப்பல்லக்கு (மோகினி அவதாரம்), கருட, அனுமான், கஜ, சூர்ய, ப்ரபை, சந்திர ப்ரபை அசுவ ஆகிய வாகனங்களில் திருமலைத் தெய்வத்தின் அருள் உலாவும் தங்க ரதம், தேர்த் திருவிழா, சுக்ர தீர்த்தம், கொடியிறக்கம் மற்றும் நாள்தோறும் இடம்பெறும் ஸ்நபன திருமஞ்சனம், ஊஞ்சல் சேவை ஆகியவற்றுடனும் அற்புதமான பாசுரங்கள், பாடல்கள், வர்ணனைகள், தெய்வ திருக்காட்சிகளுடனும் திருவருள் திருவிழாவை வழங்கி வருகிறது, ஜெயா டி.வி.