-
என்னதான் முடிவு?...
முடிவை நோக்கித் தொடர்கிறது..தொடர்ந்து முடிகிறது.
http://i.ytimg.com/vi/-SIF_EPNkYI/hqdefault.jpg
தம்பியோ கைதி என்று மாப்பிள்ளை வீட்டாரால் அறியப்பட்டு திருமணம் தடைபடுகிறது. 'உன் பழி உணர்ச்சி தீர நீயே உன் தங்கையைக் கொன்றுவிடு' என்று அண்ணன் தம்பியிடம் கத்தியை வெறுப்புடன் எடுத்துத் தருகிறான். அப்போதும் தம்பி தான் பழிவாங்கக் காத்திருப்பவனை கொலை செய்து 'அந்த பிணத்தின் மேல் உன் கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்' என்று தங்கையிடம் சூளுரைத்தபடி நிற்கிறான்.
கல்யாண வீட்டில் சலசலப்பு. மானேஜர் வந்துவிட்டார். திருமணத்திற்கு வரும் மானேஜர் பெரியவரை ஊரே வரவேற்கிறது. அவர் புகழ் பாடி தெய்வமாக அவரைக் கொண்டாடுகிறது. தூரத்தில் தெரியும் அவரை தம்பி உற்றுப் பார்க்கிறான். தெரிந்த முகம் போல் தெரிகிறது. ஊரார் அனைவரும் அந்த உத்தமரின் காலில். அண்ணன் விவரம் சொல்லுகிறான். தம்பி கொலை செய்யக் காத்திருக்கும் அந்தப் பெரிய மனிதரிடமே தம்பிக்கு புத்தி சொல்ல சொல்கிறான் அந்த அப்பாவி அண்ணன்.
தம்பியை நோக்கி வரும் மானேஜர் அவனை அடையாளம் கண்டு கொள்கிறார். கொஞ்சமும் அவர் சலனப்படவில்லை. அவர் முகத்தில் மரண பீதி இல்லை. நடுக்கம் இல்லை. செய்த பாவங்களுக்கு சந்தோஷத்துடன் அவர் தண்டனை அனுபவிக்கத் தயார்.
அவனிடம் 'என்னைத் தெரியலையா... நான்தான்... உன்னை கொலைகார பட்டம் கொடுத்து ஆயுள் கைதியாய் அனுப்பிய கொடும்பாவி நான்தான்.... உன் தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்' என்று அவன் கையில் இருக்கும் கத்தி முன் தலை குனிகிறார்.
http://i.ytimg.com/vi/O8OzS5rbW3E/hqdefault.jpg
பழி உணர்ச்சியும் கொலை உணர்ச்சியும் மேலோங்கி இருக்க அந்தப் பெரியவரை தரதரவென ரூமிற்குள் இழுத்துச் சென்று தாழிட்டுக் கொள்கிறான் தம்பி. அனைவரும், பதட்டத்துடனும், அதிர்ச்சியுடனும் சென்று கதவை தட்டுகின்றனர். தாங்கள் வணங்கும் அந்த மனித சாமிக்கு ஏதாவது நேர்ந்தால் அத்தனை பேரும் தம்பியைக் கொல்லும் கொலைகாரர்கள் ஆவோம் என்று எச்சரிக்கிறார்கள். உள்ளே ஒரு சப்தமும் இல்லை. ஊரே கூடி கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தால்...பார்த்தால்?...
அந்த மனித தெய்வம் முன் மண்டியிட்டுக் கிடக்கிறான் தம்பி கண்களில் நீர் நிறைய. அவன் அவரைக் கொலை செய்யவில்லை. மாறாக அவர் பாதங்களை அவன் கண்ணீரால் கழுவி கதறுகிறான். அவருடைய நல்ல குணங்களை அவன் உணர்ந்து விட்டான். அவர் திருந்தியதை அறிந்து விட்டான். புத்தி தெளிந்து விட்டான். அவன் வாழ்வு சீர்குலையக் காரணமாயிருந்த அந்த பெரிய மனிதர் ஆனந்தத்துடன் கூடிய அழுகை அழுகிறார். 'வைஷ்ணவ ஜனதோ' பின்னணியில் ஒலிக்க இருவரும் மனதார தழுவிக் கொள்கின்றனர் மனமொத்த அன்பினால். அன்பு வென்றது. பாவம் உணர்ந்து செய்த புண்ணியம் வென்றது. செய்த தர்மம் அதர்மத்தை வீழ்த்தியது. பழி உணர்ச்சி தோற்றுப் போனது.
அருமையான பின்னணி விளக்கத்துடன் படம் முடிகிறது.
'மனிதன் தவறு செய்யாத போது மனிதனாகவே இருக்கின்றான்.
தவறு செய்யும் போது அதே மனிதன் மிருகமாக மாறி விடுகின்றான்.
மிருகம் தன்னை உணர்ந்து திருந்தும் போது தெய்வத் தன்மை அடைந்து விடுகிறது.
தெய்வத்தன்மை அடைந்த மனிதன் உலகத்தில் வாழத்தானே வேண்டும்?'
என்ன அருமையான ஒரு படம்! என்ன ஒரு மெஸேஜ்!
கொடுமைக்கார மானேஜராகவும் திருந்திய பெரியவராகவும் பாலையா நடிப்பில் கொடிகட்டிப் பறக்கிறார். பழுத்த அனுபவம் பேசுகிறது. 'பாவி என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே' என்று கோவில் கோவிலாக சென்று பாவங்களைத் தீர்க்க மனமுருக வேண்டுவது அருமை. தான தருமங்களை புத்திமதியோடு அளிப்பது அம்சம்.
பழி வாங்கும் இளைஞனாக ராஜன். ஏ.வி.எம்.ராஜன். உணர்ந்த, உயர்ந்த நடிப்பு. அண்ணனாக வி.எஸ்.ராகவன். இவர் நடித்த படங்களிலேயே இதுதான் இவரது சிறந்த நடிப்பைக் கொண்ட படம் என்பேன்.
குடிகார பணக்காரராக வி.கே ராமசாமி. ராகவனின் மனைவியாக அஞ்சலி தேவி. தங்கையாக 'பலே பாண்டியா' வசந்தி. (இவர் பி.ஏ பட்டப்படிப்பு முடித்தவர்) நிர்மலா ('வெண்ணிற ஆடை' அல்ல) என்ற முகம் அறியாத நடிகை ராஜன் ஜோடி. மற்றும் கே.எஸ்.ஜி படங்களின் ஆஸ்தான குத்தகை நடிகர்கள் கரிக்கோல் ராஜ், சாமிக்கண்ணு, கவர்ச்சி வில்லன் கண்ணன், 'அய்யா.. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்' வீராசாமி, நம்பிராஜன், ராஜவேலு அனைவரும் உண்டு.
ரவி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு. பாடல்களை கொத்தமங்கலம் சுப்புவும், கோபாலின் காவிய கவிஞனான மாயவநாதனும் இயற்றி இருப்பார்கள்.
மகரிஷியின் மூலக்கதைக்கு திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி இருப்பார் கோபாலகிருஷ்ணன் என்னும் 'இயக்குனர் திலகம்'.
இசை ஆர்.சுதர்சனம். அருமையான பாடல்கள்.
பாடகர் திலகத்தின் 'பாவி என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே'
'நீண்ட மதிற்சுவரும்
நெட்ட நெடுங் கோபுரமும்
சூழ்ந்து மறைத்திருக்கும்
சுத்தவெளி பொற்சபையே'
உருக்கி, உருக்குலையச் செய்யும் பாடல்.
https://youtu.be/l62mkvoVwEA
'பொண்ணப் பார்த்து மயிலக் காள மயங்கிதிப்போது' சுசீலாவின் குரலில் கிறங்கடிக்கும் கிராம பாணிப் பாடல். அலுப்பே ஏற்படுத்தாத பாடல்.
https://youtu.be/DOGmJERSWMQ
'தமிழ்க் கலைதனில் விழுந்த களை எடுப்பாய்' என்ற கலைநிகழ்ச்சி நாட்டியப் பாடல். படத்தில் பாடுபவர் நமது எஸ்.ஏ.கண்ணன். லட்சுமி ராஜம், காஞ்சனா, உதய சந்திரிகா ( இவரே பின்னால் கே.எஸ்.ஜியின் 'சுவாதி நட்சத்திரம்' படத்தின் கண் தெரிந்தும் தெரியா நாயகி) இவர்களின் நடனத்தில். நவநாகரீகக் கலையை கேலி செய்து, தமிழ்க் கலைகளின் பெருமை குறைகிறதே, குலைகிறதே என்று கவலைப்படும் கலைப் பாட்டு.
https://youtu.be/ungtfrjVcCw
-
-
வாசு சார்
அருமை.... என்னதான் முடிவு படத்தை மிகச் சிறப்பாக மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளீ்ர்கள். சரியான திசையில் இத்திரியை எடுத்துச் செல்லும் தங்கள் பணியின் மூலம் புதிய தலைமுறையினருக்கு அந்நாளைய நல்ல படங்களை, மக்கள் அதிகம் அறிந்திராத படங்களை, அவற்றின் சிறப்பை எடுத்துச் சொல்ல ஏதுவாகிறது.
தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
அடியேனும் என் பங்கிற்கு சில அபூர்வ படங்களைப் பற்றிப் பகிர்ந்து கொள்கிறேன்.
மற்ற நண்பர்களுக்கும் இந்த வேண்டுகோளை விடுக்கிறேன்.
முரளி சார், கோபால், விநோத், கலைவேந்தன், சி.க., ராஜேஷ் உள்ளிட்ட அனைத்து நண்பர்களும் பங்கு கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.
குறிப்பாக கிருஷ்ணாஜீ அவர்களின் நினைவாற்றலுக்கும் அநுபவங்களின் பகிர்தலுக்கும் இது சரியான தளமாக இருக்கும்.
-
வாசு,
அற்புதம் என்ற வார்த்தை தவிர எதை சொல்வது?(முரளியிடம் கடன்). என்னவோ நேரில் உன்னுடன் அந்த படத்தை பற்றி உரையாடுவது போல உள்ளது.
எனக்கு பிடித்த மகரிஷி(பனிமலை) ,எனக்கு பிடித்த கே.எஸ்.ஜி இணைவு. ஏன் தோல்வி கண்டது என்ற கேள்விக்கு விடையில்லை. மறதி நோயால் ,பண்ணை வீட்டில் தங்கி ஓய்வு பெற்று வரும் கே.எஸ்.ஜி க்கு இதை யாராவது படித்து காட்ட வேண்டும்.
நன்றி ,இவ்வளவு முயற்சிகளுக்கு.
-
நண்பர்களே
மேற்காணும் என்ன தான் முடிவு படப்பாடலான பாவி என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே பாடலின் பாதிப்பில் 80களின் கடைசி அல்லது 90களின் துவக்கத்தில், கிட்டத்தட்ட அதே மெட்டில் இன்னொரு பாடல் வெளிவந்து மிகப்பிரபலமானது.
கண்டு பிடிக்க முடியுமா
-
Roshomon - Akira Kurosawa -Japanese -1950
Dont believe everything you hear .There are always three sides to a story. Yours,Theirs and the Truth........
பல பாத்திரங்கள்.பலவித மாற்று கூற்றுக்கள்,தன சுயநலமா அல்லது
தற்காப்பா ,ஒன்றுக்கொன்று முரண்பட்டு மாறுபடுவது ,அதுவும் பேச வந்த அல்லது விசாரணைக்கு வரும் ஒரே விஷயத்தை பற்றி. இந்த படம் உண்மையை கண்டறிவதில் ,அதன் இறுதியை இறுதி செய்வதில் அலையாமல் நிஜத்திற்கு பன்முகங்கள் உண்டு என்று காட்டிய படம்.
இந்த படம் ஒரு period Drama என்ற வகை.
கிகோரி என்ற விறகு வெட்டி Roshomon Gate (City Gate of Kyoto )என்ற இடத்தில் ஒரு வழிப்போக்கனுடன் இளைப்பாறும் போது , ஒரு கொலை செய்ய பட்டு கிடந்த சமுராய் உடலை பார்த்ததாக சொல்வான்.அங்கு வரும் இன்னொரு மத போதகர் சமுராய் தன மனைவியோடு காட்டு வழி போவதை பார்த்ததாக கூறுவார்.
இது விசாரணைக்கு வரும். முதலில் கொள்ளை காரன்(தஜமாறு) சாட்சி சொல்வான். தன மனைவியோடு போகும் சமுராயை ,பழைய வாட்கள்,கேடயங்கள் சேகரத்தை பார்க்கும் சாக்கில் அழைத்து அவனை கட்டி போட்டு அவன் மனைவியை (கோடரியால் தற்காத்து கொள்ள முயலுவாள்) Seduce செய்து கணவன் எதிரிலேயே உறவு கொண்டு விடுவான்.ஆனால் இருவர் எதிரில் இந்த நிகழ்ச்சி நடந்ததால் ,அவமான படாமல் தப்பிக்க ,தன் கணவனுடன் போராடி அவனை கொள்ள சொல்வாள்.தஜோமொரு ,சமுராயை ஜெயித்து கொன்று விட , அந்த விலையுயர்ந்த கவசத்தோடு மனைவி ஓடி விடுவாள்.
பிறகு அந்த மனைவியின் சாட்சி.கொள்ளைக்காரன் கற்பழித்து விட்டு ஓடி விட, தன்னை மன்னிக்க சொல்லி கணவனை கெஞ்சுவாள்.தன்னை கொன்று விட சொல்லுவாள். ஆனால் ஒரு வெறுப்பு கலந்த உதாசீனத்தொடு கணவன் பார்க்க ,மயக்கமுற்று விடுவாள்.எழுந்து பார்த்தால் மார்பில் கோடரியுடன் கணவன். அதை எடுத்து தன்னை மாய்த்து கொள்ள முயன்று தொல்வியுருவாள்.
பிறகு ஒரு மீடியம் மூலம் ,இறந்த சமுராயை கூப்பிட்டு அவனை சொல்லச் சொல்ல ,அவன் வேறு விதமாக சொல்லுவான்.வன்புணர்ச்சி செய்த கொள்ளைகாரன் ,தன்னோடு வந்து விடும் படி சமுராய் மனைவியை அழைக்க அவள் ஒப்பு கொண்டு கணவனை கொன்று விட சொல்கிறாள்.அதனால் வெறுப்படையும் தஜமுறு ,அவளை கொல்வதா வேண்டாமா என்று யோசித்து,சமுராயை விட்டு விட்டு சென்று விடுகிறான்.சமுராய் வெறுப்பில் தன்னை தானே மாய்த்து கொள்ள, அந்த கோடரியை யாரோ ஒருவர் மார்பிலிருந்து எடுப்பார்.
விறகு வெட்டி ,எல்லா கதையும் தப்பு என்று மறுத்து,தான் கண்டதாக ஒன்றை சொல்லுவான். தஜமுறு ,சமுராய் மனைவியை மணந்து கொள்ளும் படி கேட்க, அந்த பெண் சமுராயை தப்பிக்க விடுகிறாள்.ஆனால் கேட்டு போன பெண்ணிற்காக போராட கணவன் மறுக்க ,இருவர் ஆண்மையையும் பழித்து போராட தூண்டுகிறாள் அப்பெண்.சண்டை நடக்கும் போது தப்பியோடும் அப்பெண்ணை ,வென்ற கொள்ளை காரனால் பிடிக்க முடியவில்லை.
அப்போது விறகு வெட்டி,வழிப்போக்கன்,மத போதகர் ,அனாதையாக விடப்பட்ட குழந்தை ஒன்றை பார்க்க,அதன் ஆடையை திருடி போக நினைக்கும் வழிபோக்கனை கண்டிப்பான் விறகு வெட்டி.வழிபோக்கனோ, சாட்சி சொல்ல முன்வராத விறகு வெட்டியே கோடாலியை திருடியவன் என்று குற்றம் சாட்டி ,ஒரு திருடன் இன்னொருவனை குறை சொல்ல தகுதியில்லை என்று போய் விடுகிறான்.மத போதகனோ எல்லோரும் சுயநலமாக செயல் படுவதால் மனிதத்தில் நம்பிக்கை இழப்பதாக நொந்து கொள்வான். பிறகு விறகு வெட்டி,அந்த குழந்தையை எடுத்தணைத்து,தன்னுடைய ஆறு குழந்தைகளுடன் ஏழாவதாக வளர்த்து கொள்வதாக எடுத்து போவான். மனிதம் வாழும் நம்பிக்கையுடன் மழை நின்று மப்பு விட்டு சூரியன் தோன்றுவதில் படம் முடியும்.
இந்த பட இயக்குனர் அகிரா குரோசவா ,மேற்கத்திய நாடுகளால் பெரிதும் கொண்டாட பட்டவர். பலருக்கு ஊக்கு சக்தியாக,வழிகாட்டியாக விளங்கிய இயக்குனர்.இவரின் ikiru ,idiot ,seven samurai ,red beard முதலிய படங்கள் குறிப்பிட பட வேண்டியவை. இவர் திரைக் கதையே படத்தின் ஜீவன் என்று நம்பியவர். ஒவ்வொரு விஷயத்திலும் நுணுக்கமாக கவனம் செலுத்தியவர். திரைக்கதை எழுதுவது,design மேற்பார்வையிடுவது,நடிகர்களுக்கு ஒத்திகை ,ஒவ்வொரு ஷாட்டையும் தீர்மானிப்பது,எடிட்டிங் ,முதலான எல்லாவற்றிலும் கவனம் செலுத்துவாராம்.
உதாரணமாக seven samurai படத்துக்காக ,ஆறு பெரிய புத்தக குறிப்புகள்,சமுராய்களின் நடை,உடை,பாவனை,சாப்பாடு பேச்சு ,நடத்தை (அவர்கள் எப்படி காலனி அணிவார்கள் என்பது உட்பட)அனைத்து குறிப்புகளை எடுத்ததுடன் ,பல சமுராய் குடும்பங்களை அழைத்து ,நடிப்பவர்களை திருத்த சொல்வாராம்.
இவருக்கு நடித்த, இசையமைத்த,கேமரா இயக்கிய எல்லோரையும் குரோசவா குழு என்றே அழைப்பார்களாம். கேமரா ,எடிட்டிங்,இசை எல்லாவற்றிலும் பல புதிய நுணுக்கங்களை கையாண்டவர்.சப்தங்களை அளவறிந்து பயன்படுத்தியவர்.மியகாவா கேமரா . ஹயசாகா இசை. Toshiro miffune ஆஸ்தான நடிகர்.(பல நடிப்பு முறைகளில் நடிகர்திலகத்தை நினைவு படுத்துவார்)
வெளிச்சம்- நிழல்-இருள் எல்லாம் குறியீடுகள். பல பல சிந்தனையை தூண்டியவை.
ஆனால் இவர் நேரடி கதைசொல்லி, மேற்கத்திய பாணியில் சமரசம் செய்தவர், ஜப்பான் உலக போரில் அடைந்த அவமானத்தை சமாளிக்கும் போக்கில் படமெடுத்தவர்,படங்களில் பெண்களை போற்றாதவர் ,இவரை விட யசிஜிரா ஒசுவே சிறந்த இயக்குனர் என்று மேற்கத்திய விமர்சகர்களாலும், ஜப்பான் விமர்சகர்களாலும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டவர்.
எந்த விமரிசனமும் ,அதீத திறமைசாலியான இவர் புகழை குறைக்க முடியாமல்(,(நம் நடிகர்திலகம் போல) இவர் நூற்றாண்டின் சிறந்த இயக்குனராக பெயர் பெற்றார்.
இந்த படம் ரோஷோமோன் ஒரு சராசரி கேமரா லென்ஸ் வைத்து deep -focus முறையில் எடுக்க பட்டது .மூவர் சம்பந்த பட்ட close -up ஷாட் படத்தின் கருவின்கருவை காட்டி விடும்.
இந்த படத்தில் ஒவ்வொருவர் விவரிப்பிலும் 80% ஒற்றுமை. அங்கங்கே அவரவர் வசதிக்கு கொஞ்சம் மாறுபடும். இதை cameraman ஒவ்வொரு விவரிப்பிலும் காட்டும் வித்தியாச கோணங்கள் அபாரம். இத்தனைக்கும் சூரிய ஒளியில் ,கண்ணாடியை reflector போல வைத்து காட்டில் எடுக்க பட்ட காட்சிகள் ஜால விளையாட்டு.
ஒளியையும் ,நிழலையும், மழையையும்,சூரியனையும்,மப்பு மந்தாரத்தையும் கதாபாத்திர எண்ண எழுச்சிகள்,,மற்றும் குறியீடுகளாய் அமையும். இறுதி காட்சி அதற்கு சான்று. (இரண்டே செட் ரோஷோமோன் வாயில்,விசாரணை இடம்.மீதி காட்டில்.)
அந்த கால படங்களில் 200 சாட் இருந்தாலே பெரிசு. 407 ஷாட்கள் எடுத்து எடிட் டருக்கு செம வேலை. அழகாக டெக்னிகல் திறமை,அனுபவம் எல்லாவற்றையும் காமெரா,எடிட்டிங் காட்டி விடும் இயக்குனர் தலைமையில்.
குரசோவா வுக்கு மௌன படங்கள் மிக பிரியம். படங்களில் மௌனம் பெரும் பங்கு வகித்தாலும் (இரைச்சல் படங்களை இன்னும் கடினமாக்கி விட கூடும்). இவர் பாத்திரங்கள் சூழ்நிலைகளுக்கு தக்க அப்போது பிரபலமான பாடல்,இசை ஆகியவற்றை உபயோகிப்பார். பெரும்பாலும் பாரம்பரிய இசை. அதிலும் counter -point என்பதில் பிரியம். (இளையராஜா ரசிகர்களிடம் கேளுங்கள்)
குரசோவா ,அப்பா இறந்ததும் புதிய பறவை கோபால் ரேஞ்சில் விரக்தியுடன் உலவும் போது ,ஒரு துள்ளலிசை கேட்டு மூட் மாறியதிலிருந்தே counter -point ரசிகராகி விட்டார்.படத்திலும் பரவலாக உபயோகிப்பார்.
பின்னாட்களில் ,seven samurai ,படத்திலிருந்து Long Lenses ,Telephoto Lenses ,உபயோகித்து,பல காமிராக்களில் படம் பிடித்து, தொகுப்பில் ,நடிகர்களே எதிர்பார்த்திராத நடிப்பை,இயல்பாக கொண்டு வந்து விடுவாராம்.பின்னாட்களில் அகல திரைக்கும் போனார்.
கம்ப்யூட்டர் இல்லாத காலத்திலேயே இவர் எடிட்டிங் நேர்த்தி அலாதி. வெட்டிலிருந்து ,எடிட்டிங் படத்தின் ஓட்டத்தோடு செல்லும் படி அமையும்.காமிராவை ஒரு நடிகர் அல்லது இடத்தின் அருகாமைக்கு கொண்டு சென்று பின் நகர்வதை, கிரேன் ஷாட் வைக்காமல்(Tracking Shots with Dissolve ),jump Cut match செய்து சாதித்தாராம். இதன் தன்மையே அலாதி.
இத்தனைக்கும் இவர் படங்கள் நேர்கோட்டில்,சாதாரமாக, சம்பவங்களின் தொகுப்பில் ,பழைய பாணியிலே நகரும் தன்மையுடையது. ஆனால் படமாக்கும் விதத்தில்,திரைகதை நேர்த்தியில் பள பள புதுமையில் அனைவரையும் கட்டி விடும்.
-
கோபால்.
http://nihilist.fm/wp-content/upload...ma_en_Fuga.jpg
அனுபவித்து ஒவ்வொரு எழுத்தாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். இந்தக் கதையை மற்றவருக்கு வாயால் சொல்வது கூட ரொம்பக் கடினம். ஆனால் அகிரா கதை சொல்லும் தேர்ச்சி அதே நேர்த்தியை உங்கள் எழுத்தில் காணுகிறேன். இது வெறும் புகழ்ச்சியோ அல்லது தூக்கி வைத்துக் கொண்டாடுதலோ இல்லை. சகல திறமையும், உணமையான ரசிப்புத் தன்மையும் கொண்ட ஒரு அற்புதமான ரசிகனுக்கு, விமர்சகனுக்கு ஒரு ரசிகனாக நான் தரும் மரியாதை. ஏற்றுக் கொள்ளுங்கள். மய்யத்தின் கொண்டாடப்படவேண்டிய மகுடம் நீங்கள். உங்களால் உலக சினிமாக்களின் தரங்களைப் பற்றி இப்போது இலகுவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. அதற்காக ஆத்ம நண்பனாக நான் பெருமிதம் கொள்கிறேன்.
Toshiro miffune
http://i.ytimg.com/vi/mzK0ug1dqdk/maxresdefault.jpg
'Roshomon' பற்றி என்ன சொல்ல? எனக்கு 10 பக்கங்கள் கூட போதாது. ஒரே வார்த்தை. இணையே இல்லா உலகத் தரம். அவ்வவளவுதான் சொல்ல முடியும். இதில் நடித்த நடிகர்கள் பெரும்பாலும் seven samurai படத்திலும் பங்கு பெற்றிருப்பார்கள் முற்றிலும் வித்தியாசமாக. இல்லையா?
-
L 'Avventura(1960)/L'Notte(1961)/L'Eclisse(1962)- Trilogy-Italy- Michel Angelo Antonioni.
ஒரு கவிதையை, நாவலை திரையில் பார்த்து ,அதே உணர்வை காணொளி ஊடகம் மூலம் அதிசய உணர்வை அனுபவித்துள்ளீர்களா?படத்தை நகர்த்த கதை மாந்தர்களின் உள்ளுணர்வும் அவர்களது மன நிலை மட்டுமே போதும் , கதை சம்பவங்கள் தேவையே இல்லை, அப்படி நிகழ்ந்தாலும் கதையை மேலெடுத்து செல்லாமல், அவர்களே மீதி கதாபாத்திர உணர்வுகளை பார்வையிடுவது போல ,உணர்வின்,மாறும் மனநிலையின்(moods ),விரக்தி, சோர்வு,அயர்ச்சி (Boredom )இவற்றை திரையில் உணர்ந்து வாழ்க்கையோடு ஐக்கியம் கண்டிருக்கீர்களா?
நாடக முறையில் கதைசொல்லல், நடைமுறை யதார்த்தம் இவற்றை தூக்கி கடாசி விட்டு , nerration என்னும் சொல்லும் முறையை மாற்றி அமைத்த கவி இயக்கினர் நடைமுறைக்கு விளங்காத ,கடினமான mood pieces (துரித மனநிலை மாற்றங்களின் துண்டுகளை இணைத்தல்) விளக்கமாக ,விஸ்தாரமாக படங்களில் தொடுப்பார். படிமங்கள்,(images ),அமைப்பு முறை (Design )என்பதில் கவனம் செலுத்தி,கதாப்பாத்திரங்களின் விஸ்தார கதை சொல்லல் முறையை தவிர்ப்பார்.ஒரு வித்யாசமான ,மாறுபாடான அமைப்பு ,அது சார்ந்த பார்வை கோணங்கள்,பாத்திரங்களின் நடப்பு முறைகள் என்பது சினிமாவுக்கு எத்தனை சாத்தியங்கள் உள்ளது என்று நமக்கு உணர்த்தி விடும். ஒரு துரித நிகழ்தல் என்பதை தவிர்த்து சின்ன சின்ன விஷயங்களை ,கூரிய பார்வையில் ,மிக மிக விஸ்தார கவனத்துடன் செதுக்குவார்.
apu trilogy என்று சத்யஜித் ரே யின் பதேர் பாஞ்சாலி,அபராஜிதோ,அபுர் சன்சார் சொல்ல படுவது போல Adventure ,Night ,Eclipse என்று பொருள் படும் மூன்று படங்கள் trilogy என்ற வகை.
நான் சுருக்கி பின்னணி கொடுத்தாலும் ,இவை கதை கேட்டு ரசிக்க வேண்டிய படங்களல்ல. பார்த்து உணர வேண்டிய காவியங்கள்.(சன் டீவீ ,கலைஞர் டி.வீ திரைக்காவியங்கள் நினைவு வந்தால் மூளையை dry wash கொடுத்து பின் இங்கு வரவும்)
L 'Avventura அன்னா ,கிளாடியா என்று நண்பிகளையும்,அன்னாவின் ஆண் நண்பன் சாண்ட்ரா என்பரை சுற்றி சுழலும். அன்னா ஒரு அசாதாரண சூழ்நிலையில் மாயமாகி விட ,அவளை தேடியலையும் கிளாடியா,சான்டிரா ஈர்க்க பட, கிளாடியா ஒரு குற்ற உணர்வுடன் இதனை அரை மனதுடன் அணுகுகிறாள். இறுதியில் ,ஒரு நிகழ்வு ,சாண்ட்ரா ஒரு சந்தர்பத்தில் தவறி விட,கிளாடியா குற்றவுணர்வு குறைந்து ஏற்கும் மனநிலைக்கு வருகிறாள். இந்த படம் ஒரு உள்மன பயணம். காட்சியமைப்புக்கள் ,விஸ்தாரமாய் சொல்ல படும் உணர்வு நிலைகள் என்று ஒரு அற்புத படைப்பு.
L 'Notte என்பது கியோவன்னி என்ற கதாசிரியனுக்கும்,லிடியா என்ற அழகான மனைவிக்கும் இடையேயான திருமண பந்தம் சலிப்பும்,அலுப்பும் கொண்டு முறிவை நோக்கி நகரும்.கடைசியில் அவர்கள் வேகத்துடன் ,உறவில் திளைப்பதில் முடியும்.அவன் எனக்கு inspiration இல்லை நினைவுகள் மட்டுமே உள்ளன என்பதும், ஏதாவது செய்யத்தானே வேண்டும் என்று அவள் சொல்வதும்,கணவன் இன்னொரு பெண்ணிடம் அதீத நட்பு விழையும் போது பொறாமை கூட இல்லாத சலித்த மனநிலை அடைவதும்,தன்னை ஒரு காலத்தில் அடைய விரும்பிய நண்பனின் மரணம்,கணவன் தனக்கு எழுதிய பழைய காதல் (அவனுக்கே நினைவில்லாத)கடிதத்தை படிக்க கொடுப்பதும், விருந்தில் பைத்தியக்காரதனமான விரோத உணர்வில்(உப்பு பெறாத விஷயங்களில்) விருந்தினர் ஒருவரையொருவர் கலாய்ப்பதும் ,ஒருவருக்கும் வாழ்க்கையில் உந்துதலோ,நோக்கமோ அற்றிருப்பதை பல்லிளிக்க வைக்கும்.
L 'Eclisse முடிவு trilogy . விட்டோரியோ ,ரிக்கார்டோவின் விருப்பமின்றியே மண மன முறிவுடன் தாயிடம் செல்கிறாள்.அங்கு பியரோ என்ற பங்கு சந்தை தரகனை பார்த்து விருப்பம் கொள்ள ,இறுதியில் இருவருமே குறிப்பிட்ட இடத்தில் சந்திப்பதாக சொல்லி ,இருவருமே வராத முடிவு. அப்பப்பா ,ஒரு கதையில் கூட கதாசிரியர் இவ்வளவு ஆழம் கொடுக்க முடியுமா?பங்கு சந்தை காட்சிகள் (அந்த கால), அங்கு ஒருவருக்கு இரங்கல் நேரத்தின் போதும் மணியடிப்பதும்,அது முடிந்தவுடன் ,உடனே பரபரப்பு திரும்புவதும்,இறந்த மனிதனை பற்றி கவலை படாமல் பியரோ ,காரில் விழுந்த ஒடுக்கி பற்றி கவலை படுவதும்,அம்மாவும் பணம் பற்றிய சிந்தையில்,இவள் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்க மறுப்பதும்,இவளுக்கே தப்பிப்பே இல்லாத ஆயுள் கிரகணம் பிடித்து விட்டதை காட்டும்.
என் எழுத்தை தொடர்ந்து மற்றதை பார்க்க மனமில்லை என்றாலும், இந்த மூன்று கவிதைகளையாவது பார்த்து சுவையுங்கள்.
-
சமீப காலமாக பல திரைப்படங்கள் இணைய தளத்தில் தரவேற்றப் பட்டிருந்தாலும் நம் நாட்டில் அனுமதிக்கப் படாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணம் தெரியவில்லை. என்றாலும் நல்ல படங்களை பார்த்து ரசிக்க விரும்புவோர்க்கு இது ஏமாற்றமே. அந்த வகையில் மேற்காணும் மூன்று படங்களின் காணொளிப் பக்கங்களும் நம் நாட்டில் காண முடியாது. எனவே அவற்றின் நிழற்படங்கள் நம் பார்வைக்கு இங்கே.
மைக்கேலாஞ்சலோ அந்தோணியானி .. உலக சினிமா சரித்திரத்தில் தவிர்க்க முடியாத பெயர். காட்சிப்படுத்துதலில் பல இயக்குநர்களுக்கு முன்னோடி.
http://www.okcmoa.com/wp-content/upl...vie-poster.jpg
http://41.media.tumblr.com/b65a21b5d...6tzo1_1280.jpg
https://upload.wikimedia.org/wikiped...lisse_film.jpg
-