http://i1146.photobucket.com/albums/...ps943cb8c8.jpg
இது ஒரு பழைய திரைப்படத்தின் டைட்டில் காட்சியில் இடம் பெறுகிறது. இது நான் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஆனால் இது எந்த திரைப்படத்தின் டைட்டில் காட்சி என சொல்ல முடியுமா
Printable View
http://i1146.photobucket.com/albums/...ps943cb8c8.jpg
இது ஒரு பழைய திரைப்படத்தின் டைட்டில் காட்சியில் இடம் பெறுகிறது. இது நான் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஆனால் இது எந்த திரைப்படத்தின் டைட்டில் காட்சி என சொல்ல முடியுமா
கை கொடுத்த தெய்வம்-ன்னு அதுல போட்டிருக்கே !
தங்களுக்கு நான் பதில் அளித்தால் அதுவே விடையாகி விடும்
கை கொடுத்த தெய்வம்?
Raman Eththanai Ramanadi!?
Navagraham?
பங்கெடுத்துக் கொண்டு விடையை யூகிக்க முயன்ற ஒவ்வொரு நண்பருக்கும் நன்றியும் பாராட்டுக்களும்.
ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுபதினம் பாடல் நினைவிருக்கின்றதா..
ஒரு சரணத்தில் வரும் வரிகள் ...
"நிறைகுடம் போலொரு திரைப்படம் வந்தால் ரசிகருக்கதுதான் சுபதினம் ..."
இந்த வரிகளும் நினைவிருக்கும்...
http://i1146.photobucket.com/albums/...ps943cb8c8.jpg
இந்த வரிகளின் போது வரும் காட்சி தான் மேலே நீங்கள் பார்க்கின்றீர்கள்
கவிதைச் சரம்
கவிதைச் சரம்... சாதாரணமாகவே கவிதை மலர்களால் சரம் தொடுப்பதென்றால் கற்பனை ஊற்று பொங்கி எழுமன்றோ...
அதுவும் நடிகர் திலகத்தின் புன்னகை தவழும் மதிமுகம் என்றால் கேட்கவும் வேண்டுமோ..
தொடுப்போமே..கவிதைச்சரத்தை சூடுவோமே..
http://i1146.photobucket.com/albums/...psa13c7a64.jpg
முதலடியை முன்னதாக முடிவெடுத்துக் கொள்வோமே
தொடர்கின்ற வரிகளிலே இலக்கியமாய்ப் படைப்போமே..
இதோ...
முதலடி --- நீ வரவேண்டும் என எதிர்பார்த்தேன்..
தொடக்கமாக அடியேனின் பணிவான படைப்பு
நீ வரவேண்டும் என எதிர்பார்த்தேன்
உன் தடம் பார்த்து விழி பூத்திருந்தேன்
புன்னகை தவழும்
உன் மதிமுகமே
இருளைப் போக்கி
இன்னொளி வீசுமே
வீசும் இன்னொளி
வாசல் முழுவதும்
உன் வரவுரைக்கும்
உளம் மகிழ்ந்தாடும்...
என் மனம் உரைப்பது
எவர்க்கும் உரைக்கும்
எம்முள் நீ இன்னும்
வாழ்ந்து வருவதை..
....
இனியென்ன
தொடருங்கள் நண்பர்களே..
சி.க. சார் ... உங்களைத்தான்...
வாசு சார்... உங்களைத்தான்...
கோபால் சார்... உங்களைத்தான்...
முரளி சார்... உங்களைத்தான்...
சிவாஜி செந்தில்... உங்களைத்தான்...
இங்குள்ள நண்பர்கள்
அனைவருமே
உங்களைத்தான்..
வாருங்கள்..
கலைத்தாயின் தவப்புதல்வனுக்கு
கவிதைச்சரம் சூட்டுங்கள் ...
தொடர்ந்து இது போன்ற அபூர்வ நிழற்படங்களை இங்கு பகிர்ந்து கொண்டு சூட்டி மகிழ்வோம் கவிதைச்சரம்..