Originally Posted by app_engine
ஆயிரம் இருந்தாலும் எங்களை மாதிரி அயல்நாட்டில் வாழும் இந்தியர்கள் இங்கே விட்டுக்கொடுக்காமல் தான் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்குத்தெரியுமா?
அது மட்டுமல்ல, மென்பொருள் மற்றும் இன்ன பிற தொழில்நுட்பத்துறை இளைஞர்களால் தான் இன்று ஓரளவுக்காவது பன்னாட்டரங்கில் பாரதம் தலை கொஞ்சம் நிமிர்ந்திருக்கிறதென்பது நீங்கள் ஒப்புக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் நிதர்சனமான விஷயம். அதற்கும் ஒரு முக்கியக்காரணம் ஆங்கில அறிவு போன்ற, பழங்காலத்து இந்தியாவுக்கு பந்தம் இல்லாத விஷயங்கள் என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி. ஆதலினால், தங்கள் "வெளிநாட்டவர் வெறுப்புணர்வு" நீக்கம் செய்வது நாட்டுக்கு நீங்கள் செய்யும் ஒரு சின்ன உபகாரமாக இருக்கும் :-)
நன்றி!
விரைவில் இந்த இழைக்குப்பூட்டு எதிர்பார்க்கிறேன். இல்லாவிட்டாலும், என் வாய்க்கு (இந்த இழையைப்பொறுத்த மட்டில்) பூட்டு
:-)