இன்னுமொரு பாட்டு வ. நி. சி யில் ..எப்போது கேட்டாலும் கொஞ்சம் மனசை உருக்கும்..
*
தீர்த்தக் கரையினிலே -தெற்கு மூலையில்
செண்பகதோ ட்டத்திலே,
பார்த்திரு ந்தால் வருவேன்-வெண்ணிலாவிலே
பாங்கியோ டெ ன்றுசொன்னாய்.
வார்த்தை தவறிவிட்டாய்-அடி கண்ணம்மா
மார்பு துடிக்குதடீ!
பார்த்த விடத்திலெல்லாம்-உன்னைப் போலவே
பாவை தெரியுதடீ!
மேனி கொதிக்குதடீ-தலை சுற்றியே
வேதனை செய்குதடீ !
வானி லிடத்தையெல்லாம்-இந்த வெண்ணிலா
வந்து தாழுவுது பார்.
மோனத் திருக்குதடீ-இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே.
நானொருவன் மட்டிலும் -பிரிவென்பதோர்
நரகத் துழலுவதோ?
*
மகாகவி மகாகவிதான்..