-
தனியார் தொலைக்காட்சிகளில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் ஒளிபரப்பு விவரம் .
-------------------------------------------------------------------------------------------------------------------------------
25/04/2020* - ஜெயா மூவிஸ் - காலை 7 மணி* *-* பாசம்*
* * * * * * * * * *சன் லைப்* *- காலை* 11 மணி - உழைக்கும் கரங்கள்*
* * * * * * * * * * முரசு டிவி - காலை 11 மணி /இரவு 7 மணி -தாயை காத்த தனயன்*
* * * * * * * * * * புதுயுகம் டிவி* *- இரவு 7 மணி* * -கன்னித்தாய்*
26/04/20* * * * * சன் லைப்* *- காலை 11 மணி* -* கணவன்*
27/04/20* * * ஜெயா மூவிஸ் - காலை 7 மணி* - இதய வீணை*
* * * * * * * * * *-* * சன்* லைப்* - காலை 11 மணி* - உரிமைக்குரல்*
* * * * * * * * * * * * மீனாட்சி டிவி - இரவு 11 மணி* - விவசாயி*
28/04/20* * * - பெப்பர்ஸ் டிவி -காலை 4 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * * * * - ஜெயா மூவிஸ் -காலை 7 மணி* -பணக்கார குடும்பம்*
* *முரசு டிவி _காலை 11 மணி /இரவு 7 மணி -*அலிபாபாவும் 40திருடர்களும்*
* * * * * * * * * * * வானவில் டிவி* -பிற்பகல் 2 மணி* - நீரும் நெருப்பும்***
மூன்* டிவி* *-இரவு 7.30 மணி* -தாய்க்கு*தலை மகன்*
29/04/20* * * சன் லைப்* * - காலை 11 மணி* - அரச கட்டளை*
* * * * * * * * * *
-
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 15. செவ்வாய்
எம்ஜிஆர் பக்தர்களே
முதலமைச்சர் பதவியை பயன்படுத்தி
அடுத்தவர் சொத்துக்களை மிரட்டி எழுதி வாங்காத. அருமை தலைவன் எம்ஜிஆர் அவர்களுக்கு
நினைவுப்பரிசு வழங்குபவர்
விஜயபாலன் எம் எல் ஏ
1980. + 1984 ஆண்டுகளில் நடைபெற்றசட்டசபை பொதுத் தேர்தலில்
பூம்புகார்
சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்
எம்ஜிஆர் மறைந்த பிறகு ஜானகி அம்மையாரை முதலமைச்சராக கொண்டுவந்த எம்எல்ஏக்களில் இவரும் ஒருவர்
உப்பிட்ட எம்ஜிஆர் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்தவர்
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதவர்....... Thanks...
-
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தைப் பார்த்து விட்டு வந்த எம்ஜிஆர் ரசிகர்கள் இருவர் இப்படிப் பேசிக் கொண்டார்களாம்.
“ என்னய்யா சிவாஜியை கடைசியில் தூக்கில தொங்கவிட்டுட்டாங்க.
இதே படத்துல வாத்தியாரு நடிச்சிருந்தா அந்தத் தொரையைப் புடிச்சு தூக்கில தொங்கவிட்டிருப்பாரு”......
இப்படி அடிக்கடி மேடையில் நகைச்சுவையாகச் சொன்னவர்
சிவாஜி ரசிகர் மன்றத் தலைவராக இருந்த திரு.சின்ன அண்ணாமலை.
அதே சின்ன அண்ணாமலை
எம்ஜிஆர் முதல்வரான பிறகு
இதே நகைச்சுவைத் துணுக்கை மேடையில் சொல்லிவிட்டு
“இப்படி வரலாற்றையே புரட்டிப் போடக்கூடிய வல்லமை படைத்தவர்தான் நமது முதல்வர் எம்ஜிஆர்” என்று பேசியதும் உண்டு.
......”திரைத்தமிழ்”......... Thanks...
-
-
ஸ்ரீ MGR. வாழ்க.
எம்ஜிஆர் பக்தர்களே
படத்தில் இருப்பவர் பெயர்
வேலாயுதம் நல்ல சிவா
திருவாங்கூர் ஸ்டேட் பாங்க் அதிகாரி
அவரைப் பற்றி
நான்கு மணி நேரத்திற்கு முன்பாக நான் ஒரு பதிவு வெளியிட்டிருந்தேன்
அவர் எம்ஜிஆர் அவர்களைப் பற்றி எந்த அளவுக்கு வெறி பிடித்து
எம்ஜிஆர் அவர்களுடைய வரலாறுகளை சேகரித்து வைத்துள்ளார் என்பதற்கு இந்தப்பதிவு சாட்சி
//////////////////////////////////////////
வேலாயுதம் நல்ல சிவா / ஆகிய
என்னிடம் நமது தலைவரின் பிறந்தநாளை குறிக்கும் எண்கள் உள்ள ரூபாய் 1 முதல் 500 வரையிலும் மற்றும் கால் முறிவு அடைந்தநாள், ஜானகி அம்மாளை மணம்புரிந்தநாள், குண்டடி பட்ட நாள், திமுகவில் இருந்து நீக்க பட்ட நாள், அதிமுக தொடக்க நாள், முதல் அமைச்சரான நாள், சட்டசபை பதிவேட்டில் கையொப்பம் இட்டநாள், கார்நம்பர், அரசு டிஸ்மிஸ் ஆன நாள், சத்துணவு துவக்க நாள், அப்போலோவில் அட்மிட் ஆனநாள், பூருகிளினில்இருந்த நாள்கள், மறைந்த நாள், பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டநாள், பாலக்காட்டில் உள்ள நினைவு இல்லம் திறந்த நாள் ஆகியவையும் குறிக்கும் 10 ரூபாய் நோட்டுகள் உள்ளது..
நன்றி அய்யா......... Thanks...
-
இதயதெய்வம் புரட்சித் தலைவரின் தொண்டர்களில் மிக வித்தியாசமானவர் திரு.வேலாயுதம் ஆவார்கள்.தலைவரின் மீது அவர் கொண்டிருக்கும் பக்தி அபாரமானது.தொண்டர்தம் இதயங்களில் தலைவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.தலைவரின் இதயத்தில் தொண்டர்கள் வாழ்ந்தனர்.இதுவே நம் வரலாறு! இப்படிப்பட்ட உலகிலேயே யாருக்கும் இல்லை.. மூன்று வகையான சிறப்பு நம் தலைவருக்கே உண்டு.(1) அன்றும்-இன்றும்-என்றும் மாறாத பாசமும்,அன்பும் கொண்டு இதயதெய்வம் புரட்சித் தலைவரின் புகழைப் பாடும் தொண்டர்கள்.(2)எந்தவித உழைப்பும் இல்லாமல் புரட்சித் தலைவரின் கட்சியில் -ஆட்சியில் இருந்து கொண்டு-அவர் படத்தை மறைத்து பிழைப்பு(துரோகிகள்) நடத்துபவர்கள்.(3)தீய எண்ணம் கொண்ட எதிரிகள்-அரிதாரம் பூசினால் போதும்-அரியணை ஏறிவிடலாம் என ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்களை முட்டாளாக நினைக்கும் எத்தர்கள்..எவராக இருந்தாலும் புரட்சித்தலைவரை சொல்லாமல் வெளியே நடமாட முடியாது. இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் என்பது மாபெரும் சக்தி.திரு.வேலாயுதம் அவர்களுக்கு தலைவரின் ஆசி நிச்சயம் உண்டு.வாழ்த்துக்கள்! நன்றி!!!... Thanks...
-
கொடுத்ததெல்லாம் கொடுத்தார் அது
யாருக்காக கொடுத்தார்.
ஒருத்தருக்கா கொடுத்தார் இல்லை
ஊருக்காக கொடுத்தார்.
புரட்சித்தலைவர் நல்ல காரியங்களுக்கு நன்கொடை வழங்குவதிலும் சரி; நாட்டுக்கும், மொழிக்கும் உழைத்தவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதிலும் சரி, முதல் ஆளாக நிற்பார். அப்படி உதவுவதில் அரசு நடைமுறைகளால் தாமதமோ, விதிமுறைகள் மீறலோ இல்லாமல் பார்த்துக் கொள்வார்!
வெள்ளையருக்கு சிம்ம சொப்பன மாகத் திகழ்ந்த லோகமான்ய பாலகங்காதர திலகருக்கு புனேயில் வெண்கல சிலை வைக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்தது. தேசியத் தலைவரான திலகரின் சிலை நிறுவ மற்ற மாநிலங்களின் பங்களிப் பும் இருக்க விரும்பி, எல்லா மாநிலங்களிடமும் மகாராஷ்டிர அரசு நிதி கோரியது.
திலகரின் பேரன் அந்த மாநிலத்தின் சட்ட மேலவைத் தலைவராக இருந்தார். சிலை அமைக்க நிதி கோருவதற்காக அவர் தமிழகம் வந்தார். அப்போது, தமிழக சட்ட மேலவைத் தலைவராக இருந்த ம.பொ.சி.க்கு முன்கூட்டியே கடிதம் எழுதிவிட்டு, குறிப்பிட்ட நாளில் வந்து அவரை சந்தித்தார். அன்று தமிழக சட்டப்பேரவை மற்றும் மேலவைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.
மேலவைத் தலைவரான ம.பொ.சி- யின் அறையில் அவரை சந்தித்த திலக ரின் பேரன், முதல்வர் எம்.ஜி.ஆரை சந்திக்க விருப்பம் தெரிவித்தார். அதை அறிந்து, பேரவை நடவடிக்கைகளில் பங்கு கொண்டிருந்த முதல்வர் எம்.ஜி.ஆரும் ம.பொ.சி.யின் அறைக்கு வந்துவிட்டார். திலகருக்கு சிலை அமைக் கப்பட இருப்பதையும் தமது வருகைக் கான நோக்கத்தையும் அவரிடம் திலகரின் பேரன் தெரிவித்தார். உடனே, தனது செயலாளரை அழைத்த எம்.ஜி.ஆர்., அவரது காதில் ஏதோ சொன்னார்.
செயலாளர் வெளியே சென்று முதல்வரின் அறையிலிருந்து காசோலை புத்தகத்தைக் கொண்டு வந்தார். காசோ லையில் ரூ.50 ஆயிரம் தொகையை எழுதி கையெழுத்திட்டு ‘‘திலகர் சிலை அமைக்க இது என் நன்கொடை’’ என்று கூறி திலகரின் பேரனிடம் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.! இவ்வளவு பெரிய தொகையை, அதுவும் முதல்வர் தனிப் பட்ட முறையில் தருவார் என்று எதிர் பார்க்காத திலகரின் பேரன், அவருக்கு மகிழ்ச்சியுடன் நன்றி கூறினார். காசோலையைப் பெற்றுக் கொண்ட அவருக்கு மனதில் ஒரு சந்தேகம்.
‘‘அரசிடம் இருந்துதான் பணத்தை எதிர்பார்த்தேன். நீங்கள் சொந்தப் பணத் தில் இருந்தே கொடுத்து விட்டீர்களே?’’ என்று எம்.ஜி.ஆரிடம் கேட்டார். ‘அரசு மூலம் கொடுக்காமல் நீங்களே கொடுத் தது ஏன்?’ என்ற அவரது சந்தேகம் அந்தக் கேள்வியில் தொக்கி நின்றது. அது எம்.ஜி.ஆருக்குப் புரியாமல் போய் விடுமா? ‘‘அரசாங்க நிதியில் இருந்து கொடுப்பதென்றால் நான் எழுதும் கடிதம் முறைப்படி ஒவ்வொரு துறையாகச் சென்று ஒப்புதல் பெற்று பணம் கிடைக்க மாதக்கணக்கில் ஆகும். அதைத் தவிர்க் கவே என் சொந்தப் பணத்தைக் கொடுத் தேன். மேலும், திலகரின் சிலை அமைய நானே நன்கொடை வழங்குவதில் எனக்கு மகிழ்ச்சி!’’ என்று புன்முறுவலுடன் எம்.ஜி.ஆர். சொல்ல, நடைமுறைக்கேற்ப முடிவெடுக்கும் அவரது திறனையும் தேசப்பற்றையும் கண்டு சிலிர்த்தார் திலகரின் பேரன்!
நன்றி:ஶ்ரீதர் சுவாமி நாதன்.......... Thanks...
-
இன்று கவிஞர் வாலி...
ஏழாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி சாதனைப் புரிந்தவர் கவிஞர் வாலி. அவர் எழுதிய பெரும்பாலான பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவை.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், அஜித், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என அனைத்து தலைமுறை கதாநாயகர்களுக்கும் பாடல்கள் எழுதி இறக்கும்போது கூட பிஸியான பாடலாசிரியராகவே இருந்தவர் கவிஞர் வாலி.
எம்.ஜி.ஆரின் படங்களுக்கு அதிகமாக பாடல்களை எழுதி புகழிலும், பொருளாதாரத்திலும் உயர்ந்த அவர், எம்.ஜி.ஆரின் கொள்கை பாடல்கள், தத்துவப் பாடல்களை என்று எழுதி அவரது அரசியல் வாழ்க்கைக்கே உறுதுணையாக இருந்தார். தான் நடிக்கும் படங்களுக்கெல்லாம் வாலி பாடல்களை எழுத வேண்டும் என்று எம்.ஜி.ஆரால் சிபாரிசு செய்யப்பட்டவர்.
இதே வாலிதான் எம்.ஜி.ஆருக்காக முதன்முதலாக பாடல் எழுதப் போய், அந்தப்பாடலை ஒகே சொல்ல வைப்பதற்கும், படமாக்கப்படுவதற்கும் படாதபாடுபட்டுவிட்டார். எம்.ஜி.ஆருக்காக வாலியால் எழுதப்பட்ட அந்த முதல் பாடல் பெரும் சோதனைக்குள்ளானது. இந்த அனுபவங்களை அவர் ஏற்கெனவே பகிர்ந்துள்ளார்.
கவிஞர் வாலிக்கு பாடல் எழுதுகின்ற முதல்வாய்ப்பு கெம்புராஜ் அர்ஸ் தயாரித்து இயக்கி நடித்த 'அழகர் மலைக்கள்ளன்' (1958) படம் மூலம் கிடைத்தது. நடிகர் வி.கோபாலகிருஷ்ணன் இந்த வாயப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். இந்தப்படத்தில் நடிகர் கே.பாலாஜி 'சபாஷ் மீனா', மாலினி, வி.கோபாலகிருஷ்ணன், விஜயகுமாரி, ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப்படத்திற்கு கோபாலம் என்பவர்தான் இசையமைப்பாளர். வாலி முதல் பாடலை இப்படி எழுதிக் கொடுத்தார்... 'நிலவும் தாரையும் நீயம்மா உலகம் ஒருநாள் உனதம்மா...'
இந்தப் படத்திற்கு பிறகு சில படங்களில் பாடல் எழுத வாய்ப்புகளை தேடிப் பெற்றார் வாலி. ஆனாலும் வாலியும் ஒரு பாடலாசிரியர் என்ற அங்கீகாரம் சரியாக அமையவில்லை. போராட்டம் தொடர்ந்தது.
ஒருநாள் அரசு பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து பாடல் எழுதும் வாய்ப்பு தேடி வந்தது... ஓடிப் போய்ப் பார்த்தார் வாலி. அங்கே டைரக்டர் ப நீலகண்டன், இசையமைப்பாளர் டிஆர் பாப்பா ஆகியோர் இருந்தார்கள்.
"நீங்க நல்லா பாட்டு எழுதுவீங்கனு மா.லட்சுமணன் சிபாரிசு பண்ணார். அதனால்தான் உங்களை அழைத்திருக்கிறோம்," என்று சொன்னபடி வாலியை வரவேற்றார் டைரக்டர் ப.நீலகண்டன். மா.லட்சுமணனுக்கு மனதிற்குள் நன்றி சொன்னார் வாலி. ஏற்கனவே இசையமைப்பாளர் டிஆர் பாப்பா மீது கவிஞர் வாலிக்கு ஒரு மரியாதை உண்டு. இவருடைய இசையில் பல பாடல்கள் பிரபலமாகியிருக்கின்றன.
"இந்தப் படத்தின் கதாசிரியர் யார் தெரியுமா? கதாநாயனாக நடிக்க போகிறவர் யார் தெரியுமா?," என்று கேள்விமேல் கேள்விகேட்டுக் கொண்டிருந்தார் டைரக்டர் ப.நீலகண்டன்.
"தெரியாது சார்..." என்று மெல்ல தலையாட்டினார் கவிஞர் வாலி. ப.நீலகண்டன் தொடர்ந்தார்.
இந்தப் படத்தின் கதாசிரியர் பேரறிஞர் அண்ணா, கதாநாயகன் எம்.ஜி.ஆர், இயக்குநர் நான்தான் ப.நீலகண்டன்," என்று சொல்லி முடித்ததும் கவிஞர் வாலிக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இப்படி ஒரு பெரிய வாய்ப்பு வரும் என்று கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை. 'பேரறிஞர் அண்ணாவின் கதைக்கு, எம்.ஜி.ஆர். நாயகராக நடிக்கும் படத்திற்கு பிரபல இயக்குvர் ப.நீலகண்டன் இயக்கத்தில் நான் பாடல் எழுதுவேன் என்று நினைத்துகூட பார்க்கவில்லை'. மனதிற்குள் துள்ளி குதித்தார்.
ப.நீலகண்டன் தொடர்ந்து, "இந்தப் படத்தின் பெயர் 'நல்லவன் வாழ்வான்', இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிகை ராஜ சுலோச்சனா நடிக்கிறாங்க. அவர்கள் இரண்டுபேரும் இணைந்து பாடும் டூயட் பாடலை எழுதத்தான் உங்களை கூப்பிட்டிக்கிறோம்," என்று பாடல் காட்சிக்கான சூழ்நிலையை விளக்கினார் ப.நீலகண்டன். வாலி எழுதிக் கொடுத்தார்.
'சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்
சிந்திய கண்ணீர் மாறியதாலே...'
ப.நீலகண்டனுக்கு வாலி எழுதிய பாடல் பிடித்துவிட்டது. அடுத்து படத்தின் கதாசிரியர் பேரறிஞர் அண்ணாவிடம் வாலியின் பாடல்போனது. அதைப் படித்துப் பார்த்த அண்ணா சிலவரிகளைக் குறிப்பிட்டு சொல்லி அவற்றை மாற்றாமல் அப்படியே பாடலாக்குங்கள் சிறப்பாக இருக்கிறது என்று சொல்லி அனுப்பினார். அண்ணாவின் பாராட்டு பெற்றதில் கவிஞர் வாலிக்கு மகிழ்ச்சி. 'நல்லவன் வாழ்வான்' (1961) படத்தின் படப்பிடிப்பு சாரதாஸ் ஸ்டுடியோவில் நடந்து கொண்டிந்தது. எம்.ஜி.ஆர் - ராஜசுலோக்சானா நடித்துக் கொண்டிந்தார்கள். படப்பிடிப்பிலிருந்த எம்.ஜி.ஆர். பாடலை கேட்க சாரதாஸ் ஸ்டுடியோவின் ஏ.ஸி.அறைக்கு வந்தார். வாலியும், டி.ஆர்.பாப்பாவும் காத்திருந்தார்கள்.
எம்.ஜி.ஆரை ப.நீலகண்டன் அழைத்து வந்தார்.
"இவர்தான் பாடலாசிரியர் வாலி" என்று எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
உடனே எம்.ஜி.ஆரும் "நான்தான் எம்.ஜி.ராமச்சந்திரன் நடிகர்" என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.
"பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லையே... என்னண்ணே?" என்றார் வாலி.
"உங்களை எனக்கு அறிமுகப்படுத்திய டைரக்டர் என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்தவில்லையே... அதனால்தான் என்ன அறிமுகப்படுத்திக் கொண்டேன்," என்றார் எம்.ஜி.ஆர்.
டி.ஆர். பாப்பா பாடி காட்டினார். எம்.ஜி.ஆருக்கு பாடல் பிடித்துவிட்டது. வாலிக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை, கடவுளை வேண்டிக் கொண்டார். எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இந்தப் பாடல் ஒ.கே. ஆகிவிட வேண்டும் என்று. பாடலுக்கான ரிக்கார்டிங் வேலைகள் நடந்தன. பகல் 12 மணிக்கு எம்.ஜி.ஆர். வந்தார். பாடலைக் கேட்டார். பாட்டின் பின்னணி இசை திருப்தியாக இல்லை. சிலமாற்றங்கள் செய்ய வேண்டும் என்றார். மாற்றங்கள் செய்ய வேண்டியதற்கான நேரம் போதுமானதாக இல்லாததால் ரிக்கார்டிங் ரத்து செய்யப்பட்டது. 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் சாரதா ஸ்டுடியோவில் பாடல் ஒலிப்பதிவிற்கான தேதி குறிக்கப்பட்டது. அன்று பகல் 12 மணியளவில் இந்தப் பாடலை பாடவேண்டிய பின்னணி பாடகி பி.சுசிலாவிற்கு உடல நலம் சரியில்லாமல் போனது. ஒலிப்பதிவு ரத்து செய்யப்பட்டது. வந்த இந்த பெரிய வாய்ப்புக்கு இப்படி சோதனைகள் வருகின்றதே என்று வாலிக்கு வேதனை அதிகமாகிவிட்டது.
பிறகு ஒரு மாதம் கழித்து இன்னொரு நாள் ஒலிப்பதிவிற்கான தேதி குறிக்கப்பட்டது. அன்று சீர்காழி கோவிந்தராஜனின் சாரீரம் உதவும்படியாக இல்லை என்று கூறி ஒலிப்பதிவு ரத்து செய்யப்பட்டது.
இறுதியில் இந்தப்பாட்டு ராசியில்லாத பாட்டு அதனால் மருதகாசியை வரவழைத்து வேறு பாட்டு எழுத வைத்து ஒலிப்பதிவு செய்வோம் என்று டைரக்டர் ப.நீலகண்டன் முடிவெடுத்தார். மருதகாசி வரவழைக்கப்பட்டார்.
மருதகாசியும் வாலியின் பாடலை வாங்கி படித்தார். "இந்தப் பையன் நல்லாதான் பாடலை எழுதியிருக்கிறான். இவனுடைய வாழ்க்கை என்னால் கெட்டுப் போவதை நான் விரும்பவில்லை. இந்தப் பாட்டையே வைத்துக் கொள்ளுங்கள்... பாப்புலராகும்," என்று சொல்லிவிட்டு போய்விட்டார். வேறு வழியில்லாமல் வாலியின் பாடலையே பதிவு செய்து படப்பிடிப்புக்கு போனார்கள்.
நியூட்டன் ஸ்டுடியோடிவில் பாடலை முழுவதுமாக படம் பிடிக்க பிரம்மாண்டமான செட் போட்டார்கள். ஒருமலை, வழியும் அருவி, அருவி வந்து விழும் தடாகம் என அழகான செட். எம்.ஜி.ஆர், ராஜசுலோச்சனா ஆடிப் பாடுவதுபோல நடன இயக்குநர் ஒத்திகைப் பார்த்தார்.
முதல் ஷாட். எம்.ஜி.ஆர், 'சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்' என்னும் பாடல் வரிக்கு ஏற்ப வாயசைத்துக் கொண்டே கரையிலிருந்து தடாகத்திற்குள் இறங்கினார். கரை உடைந்து ஃப்ளோர் முழுவதும் வெள்ளக்காடாயிற்று. படப்பிடிப்பும் ஒத்தி வைக்கப்பட்டது. வாலி துவண்டு போனார்.
'இந்த பாடலுக்கே இத்தனை தடங்கள் என்றால் நம் எதிர்காலம் என்னாவது?'
நல்லவேளை செட்டு சீர் செய்யப்பட்டு பாடல்காட்சியும் நல்லவிதமாக படமாக்க்கப்பட்டது. படத்திலும் இடம் பெற்றது. இந்தப்படம் சென்சாருக்குப் போனபோது இறுதியில் வரும் பாடல் வரிகளில் ஆட்சேபணைக்குரியதாக இருப்பதாக சரணத்தில் உள்ள சிலவரிகளை சென்சார் வெட்டியது.
இத்தனை வேதனை, சோதனைகளுக்குப் பிறகுதான் வாலி, எம்.ஜி.ஆருக்காக எழுதிய பாடல் இடம் பெற்று படமும் வெளிவந்தது.
'நல்லவன் வாழ்வான்' என்ற படத்தின் தலைப்பின் படி எத்தனை சோதனை, வேதனை வந்தாலும் 'நல்லவன் வாழ்வான்' என்பது வாலியின் வாழ்க்கையில் உண்மையானது.
'நல்லவன் வாழ்வான்' முதல் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' வரை எம்.ஜி.ஆருக்காக அதிகமான பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் வாலிதான் என எம்ஜிஆர் சரித்திரத்தில் இடம் பிடித்தார்.
நன்றி
பெரு துளசிபழனிவேல்........ Thanks...
-
கவியரசு அவர்கள் எம் ஜி ஆரின் 48 படங்களில் 218 பாடல்களும் ,வாலி 51 படங்களில் 182 பாடல்களும் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் படங்களுக்கு பாடல் எழுதி உள்ளனர்
அருமையான பதிவு.
அதற்கு உகந்த பாடல்..... நன்றி நண்பரே...
கவிஞர் வாலி இவரது இயற்பெயர்
டி. எஸ். ரங்கராஜன், இவர் 29-10-1931-ல்
பிறந்தார்.
2007 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது....... Thanks VN
-
வாலியைப் பற்றி கவிதைப் பதிவிடுவதாக இருந்தேன். கண்ணதாசனுக்கு இணையாகக் கடை விரிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை!! எம்.ஜி.ஆரால் தான் ஊருக்கு இவர் முகவரி தெரிந்தது என்றாலும்--அதைத் தன் திறமையால் தக்க வைத்துக் கொள்வது பெரிய விஷயம்!!
முத்துலிங்கம்--புலமைப் பித்தன்-- நா.காமராசன் போன்றோர் கூட எம்.ஜி.ஆரால் திரைக்கு வந்தவர்கள் தான். ஆனால் அவர்களால் காலத்துக்கு ஏற்றார் போல் எழுத முடியவில்லை!!
மாதவிப் பொன் மயிலாள் எழுதிய கை தான்
முக்காபுலாவும் இயற்றியது!!
ஒப்பனைக்கும் விற்பனைக்கும் எழுதினாலும்
கற்பனைக்குப் பஞ்சம் இருந்திருந்தால்-
சொற்-புனைக்கும் சொக்கட்டான் ஆட்டம் எப்படி ஆடியிருக்க முடியும்??
கண்ணதாசனுக்கு இணையாகவே வலம் வந்த இந்தத் தமிழுக்கு என் அஞ்சலி!..... Thanks...