Kushboo invited by United Nations
http://chennai365.com/wp-content/upl...o/kushboo1.jpg
Printable View
Quote:
சாதனைப்பெண்கள்
மகளிர் தினத்தில் ஒவ்வொரு துறையிலும் சாதித்த பெண்களை கவுரவித்து விழா எடுத்தது ராஜ் டிவி.
டாக்டர் சரண்யா நாராயண், கல்வியாளர் பத்மினி மணி, சமூகசேவகியும் நடனக்கலைஞருமான ஷோபனா ரமேஷ், நர்த்தகி நட்ராஜ், இயக்குனர் ஜெயதேவி, கவிஞர் விசாலிகண்ணதாசன், சுமா ஹரிஸ் ஜெயராஜ், சத்யபிரேமா ஆகியோர் தங்கள் துறை சார்ந்த சாதனைக்காக விருதுகள் பெற்றார்கள். நடிகர்கள் பார்த்திபன், சேரன், இயக்குனர் வசந்த், நடிகைகள் கவுதமி, தேவயானி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்கள். விரைவில் ராஜ் டிவியில் இந்த நிகழ்ச்சியை காணலாம்.http://www.dailythanthi.com/muthucha...20317/TV04.jpg
நன்றி: தினதந்தி
சீரியல் பாட்டு!
Quote:
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு பாட்டு எழுதி வருபவர் கிருதயா. அத்திப்பூக்கள், பெண்டாட்டி தேவை, பைரவி, வினாயகர் திருவிளையாடல், பிள்ளை நிலா, மகாராணி, பாரிஜாதம், காஞ்சனா, சாந்தி நிலையம், எங்கே பிராமணன், பொக்கிஷம் என இப்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பல சீரியல்களுக்கும் இவர் பாட்டு தான். இந்த வகையில் சின்னத் திரையில் இதுவரை இவர் எழுதியிருக்கும் பாடல்கள் ஐநூறைத் தொட்டிருக்கிறது.
இதில் அதிக பாடல்கள் எழுதியிருப்பது டைரக்டர் கே.பாலசந்தர் இயக்கிய சீரியல்களுக்கு.
`சின்னத்திரையிலேயே செட்டிலாகி விட்டவர், பெரிய திரைக்கு எழுதியிருக்கிறாரா?' கேட்டால் அங்கும் குசேலன், பரமசிவம் உள்ளிட்ட 70 படங்களுக்கு எழுதியிருக்கிறாராம்.
சின்னத்திரையில் இருந்து...
http://dailythanthi.com/muthucharam/...20421/TV06.jpg
Quote:
சன் டிவியில் வரும் `நாதஸ்வரம்' தொடரில் செல்வரங்கம் கேரக்டரில் வந்து ரசிகர்கள் மனதில் பதிந்து போனவர் ரவிராகுல். கதைப்படி இவர் மவுலியின் மூத்த மகள் மகேஸ்வரியின் கணவர். இவர் தடம் மாறிக்கொண்டிருக்கும் காட்சிகள் தான் தொடரின் இப்போதைய `ஹாட் டாபிக்.'
இவருக்கு முன்கதைச் சுருக்கம் அவசியமில்லை. கஸ்தூரிராஜாவால் `ஆத்தா உன்கோயிலிலே' படத்தில் நாயகனாக அறிமுகமானவர். அடுத்து அகத்தியன் இயக்கத்தில் `மாங்கல்யம் தந்துனானே,' முத்துவிஜயன் இயக்கத்தில் தமிழ்ப்பெண்ணு, பிரபுவின் தம்பியாக மிட்டாமிராசு படங்களில் நாயகனாக நீடித்தவர்.
படங்களைத் தொடர்ந்து தேடிவந்த தொடர் வாய்ப்புக்களையும் பற்றிப் பிடித்துக் கொண்டவருக்கு நாதஸ்வரம் 53-வது தொடர். இந்த தொடரில் கிடைத்த பெயர் இதுவரை எந்த தொடரிலும் கிடைத்ததில்லை என்பதை பெருமையாகவே சொல்கிறார். தொடருக்கான படப்பிடிப்பு முழுக்க காரைக்குடியிலேயே நடப்பதால் மாதத்தில் 12 நாள் இவரை காரைக்குடியில் தான் காண முடிகிறது.
இந்த தொடரில் நடிக்க வந்த 6 மாதங்களில் மறுபடியும் பெரிய திரையில் இருந்து `பொல்லாங்கு' படத்துக்கான நாயகன் வாய்ப்புக்கான அழைப்பு. தொடர்ந்து 6 மாதம் கால்ஷீட் கேட்டிருக்கிறார்கள். அதுபற்றி இவர் நாதஸ்வரம் இயக்குனர் திருமுருகனிடம் வாய் திறக்க, அவரோ, `சினிமா வாய்ப்பை விட்டுடாதீங்க. நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்' என்று சந்தோஷமாய் அனுப்பி வைத்திருக்கிறார்.
ஆனால் 6 மாத்திற்குப் பதிலாக 7 மாதம் ஆகி விட, திருமுருகன் அழைத்துப் பேசியிருக்கிறார். சினிமா இயக்குனராகவும் இருந்தவர் என்ற முறையில் சினிமாவில் இது மாதிரியான தாமதம் சகஜம் என்பதை புரிந்து கொண்டவர், மறுபடியும் செல்வரங்கம் கேரக்டரில் ரவிராகுலை தொடரில் உலவ விட்டிருக்கிறார்.
இதுபற்றி ரவிராகுல் கூறும் போது, "டைரக்டர் நினைத்திருந்தால் என் கேரக்டரில் `இவருக்குப் பதில் இவர்' என்று ஒரு கார்டு போட்டுவிட்டு இன்னொரு நடிகரை நடிக்க வைத்திருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. மாறாக அந்த செல்வரங்கம் கேரக்டரை இன்னும் விரிவுபடுத்தி கதையின்முக்கிய தளத்தில் அதைக்கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். ஒரு தலைசிறந்த படைப்பாளியான அவரது நல்ல மனத்திற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்'' என்கிறார்.
Quote:
அபிநயா-17
சின்னத்திரை உலகில் பல வெற்றித் தொடர்களைத் தயாரித்து, தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்திருக்கும் அபிநயா கிரியேஷன்ஸ் நிறுவனம் பதினேழாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இதற்கான விழாவில், அந்நிறுவன ஆக்கத் தலைவர், மற்றும் கதையாசிரியர் ஜே.கே.வை சந்தித்து உரையாடினோம். இனி, அவரது மனம் திறந்த கலகலப்பான பேட்டி.
பதினேழாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறீர்கள்? எப்படி உணர்கிறீர்கள்?
"நல்ல கதை இருந்தால் வெற்றி பெறுவோம். அதேபோல் நல்ல நண்பர்களாக இணைந்து ஒரு பிராஜக்ட் செய்யும்போது, பலருடைய ஒத்துழைப்பும் நமக்கு கிடைக்கிறது. எந்த ஒரு தொழிலிலும் அதிகாரம் செய்யக்கூடாது. நட்புதான் சாதிக்கும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.''
இதுவரை வந்த தொடர்கள் பற்றி?
"1996-ம் ஆண்டு மே 7-ந்தேதி எங்களது முதல் தயாரிப்பாக கோவை அனுராதாவின் `காஸ்ட்லி மாப்பிள்ளை' என்கிற முதல் தொடர் ஒளிபரப்பானது. அதிலிருந்து தொடர்ச்சியாக `மாண்புமிகு மாமியார்', `மகாராணி செங்கமலம்', `கிரீன் சிக்னல்', `செல்லம்மா', `மங்கள அட்சதை', `கேள்வியின் நாயகனே', என் பெயர் ரங்கநாயகி' என வாராந்திர தொடர்களாக 8 தயாரித்தோம். 2002 மே மாதம் `மாங்கல்யம்' என்ற முதல் மெகா தொடரை எடுத்தோம். அது 330 எபிசோட்கள் ஒளிபரப்பானது. அதையடுத்து `ஆடுகிறான் கண்ணன்', `தீர்க்க சுமங்கலி', `செல்லமடி நீ எனக்கு', திருப்பாவை', `அனுபல்லவி', இப்போது ஒளிபரப்பாகி வரும் `வெள்ளைத்தாமரை' என எங்கள் தயாரிப்புப் பணி தொடர்கிறது.
"உங்கள் தொடர்கள் சமூக நோக்கு கொண்டதாக இருக்க காரணம்?
"சமுதாயத்தில் புரையோடிப்போன விஷயங்களை மக்களுக்குப் புரியும்படி எடுத்துச் சொன்னால் அது சரியாகப் போய்ச் சேரும் என்று புரிந்து கொண்டேன். ஒரு தொடர் வரதட்சணை கொடுமையை மையப்படுத்தியது, மற்றொன்று தீண்டாமையைப் பற்றியது. அடுத்தது மாமியார் மருமகள் சண்டை ஏன் உருவாகிறது என்பதை சொன்னது. தம்பதிகளுக்குள் புரிதல் இல்லாமையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்காரணம் என்பதை இன்னொரு தொடர் சொன்னது. குடும்ப உறவுகளை மதிக்க வேண்டும், வெறுக்கக்கூடாது என்பதை ஒரு தொடராக்கினோம். கணவன் மனைவிக்குள் இருக்கும் மெல்லிய காதலை சொன்னது `மகாராணி செங்கமலம்'. ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க வேண்டும் என்பதை மையப்படுத்திச் சொன்னது `கிரீன் சிக்னல்.' கணவன் மனைவிக்குள் ரகசியங்கள் கூடாது என்பதை சொன்னது `மங்கள அட்சதை'. இப்படி எங்களுடைய ஒவ்வொரு தொடரிலும் ஒரு வித்தி யாசமான நல்ல கதையும் மக்களுக்கு நல்ல மெசேஜ×ம் இருக்கும்.
"அவுட்டோர் படப்பிடிப்பில் வித்தியாசமான அனுபவம்?''
http://www.dailythanthi.com/muthucha...0505/TV-07.jpg
"கொடைக்கானலுக்கு ஒரு முறை சூட்டிங் போனோம். சூட்டிங் எடுக்க அனுமதியே கிடைக்கவில்லை. ஒருத்தர் என்ன தொடர் என்று கேட்க, கம்பெனி பேரைச் சொல்லி, தொடரின் பெயர் `தீர்க்கசுமங்கலி' என்று சொன்னதும், உடனே "தீர்க்க சுமங்கலியா? சூப்பர் கதையாச்சே? நீங்க தாராளமாக சூட்டிங் எடுத்துக்கோங்க''ன்னு சொன்னாங்க. இது தான் எங்கள் தொடருக்கான மரியாதை.''
நன்றி: தினதந்தி
என்.டி.டி.வி- இந்து சேனல் தமிழகம் முழுவதும் ஒளிபரப்பு!Quote:
சென்னையில் மெட்ரோ சேனலாக ஒளிபரப்பாகிவந்த என்.டி.டிவி – இந்து தொலைக்காட்சி இனி தமிழ்நாடு முழுவதும் ஒளிபரப்பாகும் என்று அந்த தொலைக்காட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
என்.டி.டி.வி. இந்து சேனல் இதுவரை சென்னையில் மட்டுமே ஒளிபரப்பாகி வந்தது. இப்போது அரசு கேபிள், எஸ்.சி.வி. கேபிள் மற்றும் டி.டி.எச். மூலமாக தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் என்.டி.டி.வி. இந்து சேனலை பார்க்கும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இதுவரை ஆங்கிலத்தில் ஒளிபரப்பாகி வந்த இந்த சேனல், இப்போது தமிழிலும் செய்திகளையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறது.
தமிழ் செய்திகள் காலை 7.30 மணிக்கு தொடங்கி, 8.30, 9.30, முற்பகல் 11 மணி, மதியம் 12 மணி, 1.30, பிற்பகல் 3 மணி, மாலை 6.30, இரவு 7.30, 8.30 ஆகிய நேரங்களில் ஒளிபரப்பாகின்றன. என்.டி.டி.வி இந்து தொலைக்காட்சியில் செய்தி தவிர பல சுவாரசிய நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகி வருகின்றன. அதில் `கோடம்பாக்கம் அக்கம்பக்கம்' நிகழ்ச்சி குறிப்பிடத்தக்க ஒன்று. இதில்
தமிழ்த்திரை உலகின் படவிழாக்கள், சிறப்பு நிகழ்வுகள் மற்றும் திரை பிரபலங்கள் பற்றி இந்த நிகழ்ச்சியில் ரசிக்கலாம். ரேவதி ஞானமுருகன் தொகுத்து வழங்குகிறார்.
சின்னத்திரையில் இருந்து...
Quote:
சின்னத்திரையில் தயாரிப்பாளர் ஜே.கே.யின் அபிநயா கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் உருவான பெரியதிரை இயக்குனர்கள் அதிகம். ஆரம்பத்தில் அபிநயா கிரியேஷன்சில் 7 வருடம் இயக்க பின்னணியில் இருந்த சமுத்திரக்கனி, பின்னாளில் பெரிய திரையில் `நாடோடிகள்' படத்தை இயக்கி பெரும் புகழ் பெற்றார்.
இதே நிறுவனத்துக்கு `மாங்கல்யம், ஆடுகிறான் கண்ணன்' தொடர்களை இயக்கிய பத்ரி, அப்புறமாய் பெரிய திரையில் `வீறாப்பு, தம்பிக்கு இந்த ஊரு' படங்களை இயக்கினார். இங்கிருந்த ஒளிப்பதிவாளர் சித்திரைச்செல்வன் சினிமாவில் `ஆக்ரா' என்ற படத்தை இயக்கினார். வசனகர்த்தா பாலு இப்போது சினிமாவில் வசனகர்த்தாவாக நீடிக்கிறார்.
தீர்க்கசுமங்கலி தொடரை இயக்கிய பிரியன், சினிமாவில் `ஐவர்' படத்தை இயக்கினார். இப்போது விஜய்வசந்த் நடிக்கும் `மதில்மேல் பூனை' படத்தை இயக்கி வரும் ஆனந்த் கூட அபிநயாவின் கண்டுபிடிப்பு தான்.
தொடர்ந்து அபிநயா தொடர்களுக்கு இசையமைத்து வரும் சத்யா, `எங்கேயும் எப்போதும்' படம் மூலம் தேர்ந்த இசையமைப்பாளராக புகழ் பெற்றார்.அபிநயாவின் மக்கள்தொடர்பாளர் பாலனும் இப்போது `ஒத்தவீடு' என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆகியிருக்கிறார்.
அடுத்து அபிநயாவில் இருந்து இயக்குனராகப் போகிறவர் பிரசன்னா. இவர் அபிநயா ஜே.கே.யின் இளைய மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அபிநயாவின் ராசியே ராசி!
Quote:
எம்.ஜி.ஆர். தந்த வாய்ப்பை `கோட்டை' விட்ட வாலி
வசந்த் டிவியில் சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு `வாலி-1000' என்ற தலைப்பில் கவிஞர் வாலியின் சுவாரசிய கலைப்பயண அனுபவங்கள் இடம்பெற்று வருகிறது. வாலியை நடிகை குஷ்பு, டைரக்டர் வெங்கட்பிரபு ஆகியார் சந்தித்து உரையாடிய பகுதிகள் வரும் வாரங்களில் இடம் பிடிக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆருடனான தனது அனுபவங்களை நெஞ்சம் நெகிழும் விதத்தில் வாலி விவரிக்கிறார். ஒருமுறை எம்.ஜி.ஆர். படம் ஒன்றுக்கு வாலி பாட்டெழுதிக் கொண்டிருந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். திடீரென வாலியிடம், `உங்க அம்மா பெயர் என்ன?' என்று கேட்டிருக்கிறார். வாலியும் `பொன்னம்மா' என்று அம்மா பெயரை சொல்லியிருக்கிறார். `உடனே உங்கம்மா பெயரில் ஒரு படக்கம்பெனியை சேம்பர்ல பதிவு செஞ்சிடுங்க' என்றிருக்கிறார் எம்.ஜி.ஆர். வாலி புரியாமல் எம்.ஜி.ஆரைப் பார்க்க, அவரோ `நீங்கள்அம்மா பெயரில் ஆரம்பிக்கும் கம்பெனிக்கு நான் கால்ஷீட் தருகிறேன். படத்தில் கிடைக்கும் லாபத்தில் நீங்க நிம்மதியாக செட்டிலாயிடலாம்' என்றிருக்கிறார்.
வாலியின் மேலான பிரியத்தில் எம்.ஜி.ஆர். இப்படிச் சொல்ல, வாலியோ, `அண்ணே... நான் எப்போதும் போல பாட்டெழுதிக்கிட்டு உங்க அன்புக்குரியவனாகவே இருந்திடறேனே' என்று சொல்லியிருக்கிறார். இந்த சம்பவத்தை நினைவுகூர்ந்த வாலி, "எம்.ஜி.ஆர். தனக்குப் பிரியமானவர்களை இப்படி கவுரவிக்க நினைப்பது வழக்கம். ஆனால் எனக்கு பாட்டெழுதுவது தவிர, வேறெதுவும் தெரியாது என்பதால் அவராக தந்த அட்சய பாத்திரத்தை வாங்காமல் தவிர்த்து விட்டேன்'' என்று நெகிழ்கிறார்.
அதுமாதிரி ரஜினிக்காக ஒரு கதை தயார் செய்து ஒரு பிரபல நிறுவனத்திடம் கொடுக்க, அவர்கள் அதில் இன்னொரு நடிகரை போட்டு படம் எடுக்க முடிவு செய்தபோது, ரஜினிக்காக எழுதிய கதையில் அவர் தான் நடிக்க வேண்டும் என்று அந்தக்கதையை வாங்கிக்கொண்டு வந்துவிட்டதையும் நினைவு கூர்ந்தார். ரஜினிக்கான அந்தக்கதை இப்போதும் வாலியிடம் தான் இருக்கிறதாம்!
நன்றி: தினதந்தி
Quote:
ராமருக்கும்... கிருஷ்ணருக்கும்...
பின்னணி பாடகர்களின் மறக்க முடியாத குரலுக்கு சொந்தக்காரர் கண்டசாலா. 1945-1970 பீரியடில் இசையமைப்பாளராகவும் வலம் வந்த அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராட்டி, இந்தி, சிங்களம், பெங்காலி என பல மொழிகளில் பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் பாடி ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர்.
கண்டசாலாவின் இளையமகன் ரத்னகுமார் இதில் கொஞ்சம் மாறுபட்டிருக்கிறார்.அப்பா பாட்டு என்றால் இவர் பேச்சு. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சமஸ்கிருதம் உள்பட 1076 படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார். தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் ஏறக்குறைய 10 ஆயிரம் எபிசோடுகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். ஐம்பது டாகுமென்ட்டரி படங்களுக்கும் பேசியுள்ள இவர், மேடைக்கச்சேரி பாடகரும் கூட. 32 வருடமாக இந்தக் கலையை நேசித்து செய்து வருகிறார்.
இவர் டப்பிங் பேசிய படங்களில் கடலோரக்கவிதைகள், கலைஞன், இந்திரன் சந்திரன், தர்மதுரை, ஜீவா, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, ஜல்லிக்கட்டு, வீடு, முகமூடி முக்கியமானவை.
நடிகர் சங்கம் வழங்கிய `கலைச்செல்வம்', டப்பிங் ïனியன் வழங்கிய `குரல் செல்வம்', ஆந்திர அரசாங்கம் வழங்கிய `நந்தி அவார்டு' ஆகிய விருதுகளை பெற்றுள்ள இவருக்கு, வீணா, வாணி என இரண்டு மகள்கள். இதில் வீணா கல்லூரியில் படித்துக் கொண்டே பாடகியாகவும், அப்பா வழியில் பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருந்து வருகிறார்.
`தேன்கூடு' என்ற குடும்பப்பாங்கான படத்தையும் தயாரித்து வெளியிட்டுள்ளார். சென்னையில் உள்ள ஆந்திரா கிளப்பின் பொழுதுபோக்கு பிரிவில் செயலாளராகவும் இருக்கிறார்.
இவரது சமீபத்திய சாதனை, இம் மாதம் 4-ம் தேதி நடந்தது. அன்று காலை 10 மணிக்கு டப்பிங் பேச ஆரம்பித்தார். இடைவிடாமல் 8 மணி நேரம் தொடர்ந்து பேசி இந்தியா புக் ஆப் ரெக்கார்டு, ஆசியா புக், ஆப் ரெக்கார்டு, அமேஸிங் வொர்ல்டு ரெக்கார்டு சாதனைக்கு சொந்தக்காரராகி இருக்கிறார்.
தூர்தர்ஷனில் வந்த ராமாயணம் தொடரில் ராமருக்கும், ஸ்ரீகிருஷ்ணர் தொடரில் கிருஷ்ணருக்கும் வருடக் கணக்கில் குரல் கொடுத்து வந்த பெருமையும் இவருக்குண்டு
நன்றி: தினதந்தி