அழகான பாடல்..அங்கே வெப்ப்மா..இங்கே இன்னும் மெல்லிய குளிர் இருக்கிறது...இன்னும் ஏசி போட் ஆரம்பிக்கவில்லை..அனேக்மாக அடுத்த வாரம் ஆரம்பிக்கும் என நினைக்கிறேன்.
Printable View
அழகான பாடல்..அங்கே வெப்ப்மா..இங்கே இன்னும் மெல்லிய குளிர் இருக்கிறது...இன்னும் ஏசி போட் ஆரம்பிக்கவில்லை..அனேக்மாக அடுத்த வாரம் ஆரம்பிக்கும் என நினைக்கிறேன்.
முன் பக்கத்தில உள்ள நழுவல்கள் படிச்சுடுங்க... இது பாட்டுக்குப் பாட்டுக்காக எழுதியது...
போச்சு போச்சுவென்றே பொங்குவதும் போதாமல்
...பேச்சில் நல்வார்த்தை சிறிதேனும் சொல்லாம்ல்
வீச்சு வீச்சென்றே விள்ங்காமல் கத்துவதும்
...வில்லி நாயகனின் நாயகியை வீழ்த்திடவே
பூச்சி பிடிக்கின்ற பல்லியைப்போல் காய்நகர்த்தி
... பொன்னும் மணிநகையும் புடவையும் தானுடுத்தி
சூழ்ச்சி செய்வதையும் விடாமலே பார்த்திடுவார்
...சோம்பல் மாந்தரவ்ர் தொலைக்காட்சித் தொடரினிலே
இதுவும் பாட்டுக்குப் பாட்டுக்காய் எழுதியது..
நானாகத் தானிருந்த கால மெப்போ
...நலமாகத் தானிருந்த பொழுது மெப்போ.
தானாடி என்னுடனே ஓடி யாடி
..தயங்காமல் என்மழலைப் பேச்சி லாடி
ஆணாக எனைவளர்த்த அன்னை கூட
..அழ்காக இருந்திருந்த நாட்க்ள் தானா..
தேனாகப் பலவாறாய்ப் பேசி வானில்
..திசைக்கெல்லாம் பறந்திருந்த இளமைப் போதா
ஊனாசை உயிராசை எல்லாம் கொண்டே
..உறங்காமல் ப்லவாறாய்ச் செல்வம் சேர்த்து
காணாமல் போய்விட்ட வெள்ளை உள்ளம்
..கண்களிலே மறுபடியும் தெரியுங் காலம்
வீணாசை என்றேதான் அறிந்த போதும்
...வேடிக்கை தனைக்கூட்டும் விந்தை நெஞ்சால்
தானாகத் தோன்றிடுமோ என்றே உள்ளே.
..தவித்தபடி கேட்கின்றேன் விடைதான் எங்கே...
Well written poems,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
Enjoy the coolness of the climate and write more...
விடைதன்னை வியனுலகம்
விரிந்தெங்கும் தேடுகின்ற
நடைசிறந்த கவியுடையார்
அடைந்திடுக இனியவிடை.
தொலைக்காட்சி நிகழ்வுகளைத்
தொலைவில்நின்றே அலசியிந்த
வலைத்தளத்தில் வளர்த்துவதும்
வண்டமிழ்க்கும் இலக்கியமே.
உள்ளத்துக் கிடக்கைகளை
ஒளிவறவும் மறைவறவும்
தெள்ளிதினே தெரிவிக்கும்
திறனிதற்கோ ஒப்பரிதாம்.
வெள்ளமொரு வீறுகொண்டு
விரைந்தணையைக் கடந்ததுபோல்
கள்ளமற வருமொழிகள்
பொருத்தமென்பார் கருத்துடையார்.
நன்றிங்க..
ஒங்களுக்கு சுலபமா வஞ்சி வருது..ம்ம்
எத்துணைப் பேருவகை ஏலா தியம்புதற்கே
அத்துணையும் இன்ப மயமாகும் --ஒத்தியன்றே
உள்ளபடி ஓங்கித் திளைத்திடுக -- நல்லபடி
நாளைக்கு வஞ்சி நயம்தருவாள் என்னகுறை
அல்லல் அலுவலகம் ஆய்வுகள் என்றாலும்
இல்லையிவை என்னும் இன்ஞாலம் -- இல்லையில்லை!
சொல்லுங்கள் வஞ்சியே சோர்வின்றி வந்திடுவள்
வெல்லுங்கள் வெல்கவே வேல்.
அருட்கவிகள் வாழ்ந்தவந் நாளில்நாம் வாழ்ந்தே
இருப்பினது இன்பமே நெஞ்சம் -- பொருத்தி
அவரருகில் நின்று செவிமடுத்தல் போல்பே(று)
எவர்க்கெளிதாய்க் கிட்டு மினி.
This was composed some years back and published in uNarvuakaL forum, which now appears to have changed,
I have now re-written the stanza to put it in veNba format.
ஒரு --
குமரியின்மேல் உனக்குக்
கோபம் வந்திடுமானால்
கொடிகளுடன் சென்று விளையாடுவாய்!
கொடிகள் அவைபல தடைகள் தமைத்தாண்டி,
படரும் திறன்கண்டு பயன்காணுவாய்,
மடியும் வாஞ்சைஅது முடியும் கணம் வருமுன்
நொடியும் தயங்காமல் படிபேணுவாய்.
நொசித்தன்பு மாறாத படிபேணுவாய்.
(ஒரு குமரியின்)
Ref to a Malaysian case in which an accountant (young female ) was killed with 5 stab wounds by a low grade worker .He was apparently so angry with her.....Isn't there a way of channeling such emotional surges to some positive direction....? These lines deal with such situation albeit in an oversimplified manner....
இரண்டு குருவித் தோழிகள் பேசிக்கொண்டார்கள். பின் கூரையின் கீழ் அவர்கள் இருப்பிடத்திற்குப் பறந்து சென்றுவிட்டார்கள்.
அப்பம் எறிந்தாள் சிவமாலா -- தோழீ
அதுநம் விருந்தாம் வருவாயே.
வெப்பம் மிகுந்திடில் கூரையுண்டு - தோழீ
வேறேது வேண்டும் மகிழ்வாயே
கூரையின் கீழொரு மண்டபமாம் -- கேள்
குறையில்லை அங்கே வருவாயே.
ஆருமே அங்கு வருவதில்லை -- எனில்
அஞ்சா அரசும் நமதல்லவோ
முட்டை குஞ்சென்றே எதனையுமே --திருடி
முடக்கிடும் தீமைகள் நேர்வதில்லை;
பட்டாவைப் பெற்ற நிலத்தினிலும் --மிகப்
பண்ணாகும் நல்லிடம் வந்திடுவாய்.
note: வகையுளி: முட்டைகுஞ் / சென்றே / எதனையுமே. இதை முட்டை குஞ்சென்றே எதனையுமே என இயல்பாகவே எழுதியுள்ளேன்.