Quote:
அன்புள்ள திரு சூர்யா,
கமல்ஹாசனின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ஒரு வரி கூட இவ்விமர்சனத்தில் இல்லை. கட்டுரையின் தலைப்பு ‘உத்தம வில்லனும், கமலஹாசனும்’. எனவே கமலஹாசன் என்னும் திரைக் கலைஞன் பற்றிய விமர்சனமும் இதில் உள்ளது. கமலஹாசன் படங்களில், அவசியமே இல்லாமல், கதைக்குத் தேவையே இல்லாத போதும், அவரது பாத்திரங்களும், கதைகளும், சம்பவங்களும் அவரது தனிப்பட்ட நம்பிக்கை, கொள்கைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு இருக்கையில் அந்தத் தொங்கல் பற்றி விமர்சித்து எழுதுவது அவசியமாகிறது. இது பற்றி ஒரு தனிக் கட்டுரையே எழுதலாம். சுருக்கமாக : விக்ரமில் தேசத்துரோகி ஏன் ஒரு பிராமண மாமியின் கணவனாக இருக்க வேண்டும்? தேவர் மகனில் மதன் பாப் ஏற்ற வக்கீல் பாத்திரம், அவ்வை சண்முகியில் ரவிக்கை அவிழ்ப்புக் காட்சி, அன்பே சிவத்தில் வரும் ரயில் திருடன் மற்றும் அவன் குரு பந்துலு, திருநீறணிந்த ‘போற்றி, போற்றி’ படையாச்சி, மன்மதன் அம்புவில் தாயார் உஷா உதூப் மகன் மாதவன் உறவு, விஸ்வரூபத்தில் சற்றும் அவசியமில்லாமல் சிக்கன் சாப்பிட அழைக்கப்படும் பாப்பாத்தியம்மா, எல்லாம் இன்ப மயம் முதலியார், காதலா காதலாவில் காட்டப் படும் முருகர், பம்மல் சம்பந்தம் பரமசிவன், சிம்ரன், இப்போது நரசிம்மர்… – இவற்றுக்கு எதிராக புடம் போட்ட தங்கங்களாகவே வரும் இதர மதப் பாத்திரங்கள். இப்போது உத்தம வில்லனில் கூட ‘யா அல்லா’ என்னும் பூஜா குமார், கத்தோலிக்கராக இருப்பதால் பரந்த மனதோடு இருக்கும் ஜேகப் ஜெயராம். இவை அனைத்துமே இப்படங்களுக்குத் தேவையானவை அல்ல. இவை தவிர்க்கப் பட்டிருந்தால் ஒரு சிறு மாற்றமும் கதைக்கோ, பாத்திரங்களுக்கோ ஏற்பட்டிருக்காது. முழுக்க முழுக்க கமலஹாசன் தன் துவேஷத்தின் தாகத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளவை. எனவே விமர்சனத்துக்குரியவை.
My reply (yet to be approved)
Quote:
@tekvijay on May 21, 2015 at 9:29 pm said:
Your comment is awaiting moderation.
மூன்றாம்பிறை – ஸ்ரீதேவி தொலைந்தபின்னர் தேடும்போது சாமி கும்பிடுதல்,
தேவர்மகன் – மாசறு பொன்னே வருக அம்மன் பாடல்
விருமாண்டி – சிறுதெய்வ வழிபாடு
ஹேராம் – வைஷ்ணவ ஜனதோ
குணா – அபிராம பட்டர் உருவகம், அபிராமி அந்தாதி பாடல், டைட்டிலேயே க்ரெடிட் கொடுத்தது
மகாநதி – ஸ்ரீரங்கம் கோவில் சார்ந்த பாடல், காட்சி
தசாவதாரம் – கணக்கில்லா வைணவ போற்றல் பாடல் வரிகள், காட்சிகள். படமே விஷ்ணுவின் 10 அவதாரங்களுடன் ஒப்பிடப்பட்டது. என்னப்பா கமல் திடீர்னு ஆத்திகரா மாறிட்டாரா என ஒரு சாராரும், நான் அப்பவே சொல்லல! கமலுக்குள்ள ரொம்பநாளா ஒரு வைணவ ஆத்திகர் ஒளிஞ்சிட்டிருக்கார்னு என சிலர் சொன்னது.
“எல்லாரையும் அந்த அல்லா தான் காப்பாத்தினார்” என கலிஃபுல்லா சொல்லும்போது, “இல்லை இல்லை, காப்பாத்தினது பல்ரம் நாயுடுவின் முட்டாள்தனம் தான்” என சொல்லாமல் சொல்வதுபோல், பல்ராம் நாயுடு பறக்கும் ஹெலிகாப்டரை அப்போது காட்டுவது…
விஸ்வரூபம் – முதல் பாடலில் ஆண்டால்/கண்ணன் போற்றி வரிகள்,
உத்தமவில்லன் – முதல் தெய்யம் பாடலில் – சிவமே தவமே, இன்னும் சில சிவன் போற்றி வரிகள், அர்ஜுனன் தவம், பாசுபதாஸ்திரம் வாங்கும் காட்சி. கடைசி இரணியன் பாடலில், ப்ரகலாதன் மூலம் ஹரி போற்றும் வரிகள்.
இப்படி கமல் தன் படத்தில், இந்து கடவுள்கள் போற்றும் வரிகளும் குறைவில்லாமல் தான் வைத்திருக்கிறார். இன்னும் கூட விடுபட்டவை ஏதாவது இருக்கும். சொல்லப்போனால் கமல் ரஜினியைவிட அதிகமாக இந்துத்துவ போற்றி காட்சிகள் வசனங்கள் கதைகள் தன் படத்தில் வைத்திருக்கிறார். ஆனால், கமலை குறை சொல்லும் இந்து ஆத்திகர்கள் இதையெல்லாம் கணக்கிலெடுக்கமாட்டார்கள்!