-
என்ன வசந்தமாளிகை டிஜிட்டலில் வருகிறது...
அதுவும் அதிக கட்டணம் கொண்ட பெரிய தியேட்டர்களில் வெளிவருகிறது...
புதுப்படங்களே... மூன்று நாட்களை தாண்ட தள்ளாட்டம் பே...ாடுகிறது,
அதிகபட்சம் ஒருவாரம் ஒடினாலே பெரிய வெற்றி என எதிரிகள் மட்டுமல்ல ஒட்டு மொத்த திரையுலகமே நினைத்துக் கொண்டிருந்தது,
ஆனால்,
யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்,
23 புது படங்கள் ரிலீஸ்,
அதிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட
பெரிய படங்கள் 10,
ஆடிக்காத்துல அம்மியும் பறக்குது என்பது போல்,
விஜய் சேதுபதியின் சிந்துபாத்
விக்ரமின் கடாரம் கொண்டான் முதல்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கூர்கா, தர்மபிரபு போன்ற சிறிய படங்களும் வரை....
இதில் ஜோதிகாவின் ராட்சசி படத்திற்கு 50% டிக்கெட் சலுகை வேறு...
அனைத்து படங்களும், அழகாபுரி ஜமீனுக்கு முன்னால் துாள்... துாள்....
மதுரையில் வசந்தமாளிகையில் இணைந்த 50வது நாள் விழா, வண்டியூர் கல்லானையில்
மதுரை புறநகர் மாவட்ட சிவாஜி மன்றத்தின் சார்பில் கொண்டாடப்படுகிறது.
மதுரை புறநகர் மாவட்ட சிவாஜி மன்ற நிர்வாகிகள் அனைவருக்கும் சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...b6&oe=5DA82569
Thanks Sundar Rajan
-
-
-
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை,
வேலம்மாள் மருத்துமனை இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
... கிராமப் பகுதிகளை தேர்ந்தெடுத்து, கிட்டத்தட்ட ஒருமாத காலமாக இதற்கென நாட்களை செலவழித்தோம்.
அதன் பலனாக, 3 மணி நேரத்தில் 214 மக்கள், முகாம் மூலம் பயனடைந்தனர், இதில் 75க்கம் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்தனர் என்பது பெருமைக்குரிய செய்தி.
இதுபோல, மருத்து முகாம்களில் 150 பேருக்கு மேல் வருவது சிரமம் தான் என்றார், வேலம்மாள் மருத்துவமனை முகாம் மேலாளர்,
ஆனால், உங்களைது உழைப்பு மற்றும் விளம்பரங்களினால் 214 போ் வந்துள்ளனர், என பெருமையாக கூறினார்.
முகாமுக்கு வந்த 60 வயதுக்கும் மேற்பட்ட பெரியவர்கள், தங்கள் இளமை காலத்தில் நடந்த நிகழ்ச்சிகள் மற்றும் நடிகர்திலகத்தின் பெருமைகளை கூறி சந்தோசப்பட்டனர்.
முகாம் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு......
முகாமிற்கு வந்து சிறப்பித்தவர்களின் புகைப்படங்கள் அடுத்தப் பதிவில்.....
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...34&oe=5DEEB816
Thanks Sundar Rajan
-
1964- கர்ணன் 6 திரையரங்குகளில் 100 நாளுக்கும் மேலாக ஓடி வெற்றி கண்ட காவியம்,
1969- சிவந்த மண் 10 திரையரங்குகளில் 100 நாட்களுக்கும் மேலாக ஓடி சாதனை படைத்தது,
1980- பட்டாக்கத்தி பைரவன் தமிழகத்தில் வசூலைக் குவித்ததோடு கடல் கடந்து இலங்கையிலும் கூட இரண்டு அரங்குகளில் 150 நாட்கள் வரை ஓடி வெற்றி கண்டது,
... இப்படியான வரலாற்றுச் சுவடுகள் இருக்க மீண்டும் மீண்டும் கர்ணன் நஷ்டம், சிவந்த மண் தோல்வி என ஒரு உண்மையையும் கருத்தில் கொள்ளாமல் பொய் செய்திகளை மட்டுமே தொடர்ந்து சொல்லி வருகிறது ஒரு கும்பல்,
போகிற போக்கில் சிவாஜி படம் ஓடவில்லை, அந்த படத்தால் தயாரிப்பாளர் நஷ்டமடைந்தார், என எழுதி புத்தகம் வெளியிடும் புத்தக எழுத்தாளர் மற்றும் பதிப்பகத்தாருக்கு அப்படி என்ன தான் வஞ்சனை இருக்கிறதோ தெரியவில்லை, ஒரு வேளை ஆட்சியாளர்கள் ஏதாவது வெகுமதி கொடுப்பார்கள் என்ற எண்ணம் கூட இருக்கலாம், அதில் உண்மையும் இருக்கிறது,
இப்படித்தான் எதேச்சையாக "தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்" என்ற புத்தகத்தை வாங்கிப் புரட்டி தொலைத்து விட்டேன், புரட்ட புரட்ட ஒரே பொய் செய்திகள், எந்த மகராசன் எழுதியது என பிறகு தான் பார்த்தேன்,கே.என் சிவராமன் என்ற ஒரு எழுத்தாளர், அப்புறம் தான் விளங்கியது இது தினத்தந்தியில் தொடராக வெளிவந்தது, அந்தத் தொடரை ஓரிரு வாரங்கள் படித்தேன் பிறகு நிறுத்திக் கொண்டேன், இப்படியான எழுத்தாளர்கள் எப்படித்தான் குறைத்து எழுதினாலும் நடிகர் திலகம் சிவாஜி ஆதரவாளர்கள் எந்த கண்டனத்தையும் தெரிவிப்பது இல்லை, சாதாரணமாக கடந்து செல்வது பழகிப் போய்விட்டதும் கூட,
1982 ஆம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் நடிகர் திலகத்தை வரவேற்க கூடிய ரசிகர்கள் கொஞ்சமும் எதிர்பாராத வண்ணம் லட்சக்கணக்கில் குவிந்து விட்டனர், அன்றைய எம்ஜிஆர் அரசு செய்வதறியாது திகைத்து கூட்டத்தை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தியது, வரலாற்றில் ஒரு அரசு ரசிகர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் இது தான், கொதித்தெழுந்த நடிகர் திலகம் ரசிகர்கள் எதிர் வினை ஆற்றத் துவங்கிய போது அரசுக்கு அமைதியை நிலைநாட்டுவதில் பெரும் பின்னடைவு ஏற்படுவதை உணர்ந்து நடிகர் திலகத்தை அறிக்கை விட கேட்டுக் கொண்டது, அதன் பின்னரே அன்று அமைதி நிலவியது, அப்பேற்ப்பட்ட போர்க்குணம் கொண்டவர்கள் தான் சிவாஜி ரசிகர்கள், ஆனால் எல்லாமும் தலை கீழானது போல உள்ளது அதையடுத்த நிகழ்வுகள் யாவும்,
இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் நாஞ்சில் இன்பா அவர்கள் எழுதி வந்த செல்லுலாய்ட் சோழன் தொடரில் பராசக்தி வெற்றியைப் பற்றியும் அதே ஆண்டு எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த என் தங்கை படத்தின் உண்மையான தோல்வியையும் குறிப்பிட்டு இருந்தார், விட்டார்களா எம்ஜிஆர் ஆதரவாளர்கள் இருபது பேர்கள் வரை திரட்டிக் கொண்டு பத்திரிகை அலுவலகத்தை முற்றுகை இட்டனர், எதிர்ப்பு குரல் கொடுத்தனர்,
ஆனால் பாருங்கள் உண்மைக்கு மாறாக சிவாஜி படங்களை பற்றிய செய்திகளை வெளியிடும் எழுத்தாளர்களையோ பத்திரிகை, ஊடக அலுவலகங்களையோ நாம் சின்னதாக கூட ஒரு எதிர்ப்பையும் தெரிவிப்பது இல்லை,
அப்படியே ஒரு சிலர் அமைப்பு ரீதியாக எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் அவர்கள் அரசியல் செய்கிறார்கள் என மட்டம் தட்டுவ்து சிறப்பாகவே நடைபெறுகிறது,
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...fe&oe=5DD65C92https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...46&oe=5DECA5A9https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...65&oe=5DECB067
Thanks Sekar
-
மேற்கண்ட கட்டுரைக்கான் பின்னூட்டங்கள் சில
1952 லிருந்து 1999வரை இடைவிடாது 47 ஆண்டுகள் நடித்துவந்த288 படங்களும் கௌரவ நடிகராக 19 படங்களும்
இதைத் தவிர ஆயிர கணக்கான நாடகங்களும் மராட்டிய தூர்தர்ஷனுக்கு சத்திரபதி சிவாஜியாக நடித்து அரும்பெரும் சாதனைகளை அவர் அளவுக்கு நடத்தியவர் குறைவுதான். அவர் பெற்ற விருதுகளைப்போல் யாரும் பெறவில்லை. உலகத்து தேசங்கள் எகிப்து, அமெரிக்கா, மலேஷியா, சிங்கப்பூர், மொரிஷஸ், பிரான்ஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் அவருக்கு தந்த மரியாதையை உலகம் அறியும். 47 ஆண்டுகள் ஓய்வரியா உழைத்த மகன் அடுத்த இரண்டாண்டுகள் இருந்தார் 2001ல் மறைந்தார். மறைந்து18 ஆண்டுகள் ஆனாலும் அவர் புகழ் பாடும் கூட்டம் இன்னும் இருக்கிறது. கர்ணன், ராஜபாட் ரங்கதுரை, வசந்த மாளிகை இவைகள் இந்த கால வெளியீட்டிற்கு பின்னும் மாபெரும் வெற்றியை ஈட்டித்தருவது தமிழனுக்கு பெருமை இல்லையா? தமிழன் பெயரை தமிழன் குலைப்பானா? ஆம் சிலையெடுத்து அவமானத்தை வாங்கிக் கொண்டது போதாது. சிவாஜி ரசிகர்களுக்கு எந்தக் கட்சியின் பின் புலம் இல்லை. ஆனாலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அத்தனை ரசிகர்கள் மடிந்து போனாலும் "அவன் ஒரு சரித்திரம்"
கலை உள்ளவரை கணேசனார் புகழை மறைக்க எந்த சக்தியாலும் முடியாது. இது சத்தியம்! வாழ்க அய்யன் சிவாஜி!
நன்றி
-
நாம் பதிவிடும் செய்திகள் அண்ணனின் சாதனைகளாக மட்டும் இருக்கட்டும்.
இன்று நேற்றல்ல .. பல காலமாக அண்ணனை குறைத்தே மதிப்பிட்டு எழுதும் வழக்கம் பல பத்திரிக்கைகள் செய்து வரும் தொழில்.
நமது வெற்றிகளும் சாதனைகளும் அவர்கள் கண்களுக்குத் தெரிவதில்லை...
நாம் கவலைப் படவும் தேவையில்லை..
ஏனெனில் சூரியனை மேகங்கள் மறைக்க இயலாது .
நன்றி முகநூல்
-
அன்றைய காலத்தில் செய்ததில் அரசியல் காரணமாக இருக்கலாம் சார்,
இப்போது இப்படி குறைத்து எழுதுவதெண்பதை நாம்.அனுமதிக்கக் கூடாது சார்
இப்போ விரோதிகளின் பழைய தகிடுதத்தம் முடியாது நண்பரே. சிவாஜி ரசிகர்களின் எண்ணிக்கை இப்போது மூன்று மடங்கு கூடியுள்ளனர்
...........................
இப்போ விரோதிகளின் பழைய தகிடுதத்தம் முடியாது நண்பரே. சிவாஜி ரசிகர்களின் எண்ணிக்கை இப்போது மூன்று மடங்கு கூடியுள்ளனர்
-
கூடியிருக்கும் போது நாம் வலுவான எதிர்ப்பை தெரியப்படுத்த வேண்டும் சார்
........
எதிர்ப்பு கட்டாயம் தெரிவிக்க வேண்டும் நமக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவாளர்களும் உண்டு. அது நன்றாக தெரிந்துதான் புல்லுருவிகள் நம்மிடையே ஊடுருவி உள்ளனர்
-
ஊடகங்களும் சேர்ந்து
கொண்டு திட்டமிட்ட சதி அரசியல் வாதிகளால் தயாரிக்கப்பட்டு பிரச்சாரம் நடந்ததை ரசிகர்கள் சகிக்க முடியாமல் பொருமும் போதும் குமுறும் போதும் வேற்று மாநிலத்தோர் மிகவும் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார்கள் நடிகர் திலகத்தின் மீது. வெளி நாட்டினர் கூட மரியாதை வைத்திருந்தனர். அரசியல் பலமும் பண பலமும் இல்லாத சிவாஜி ரசிகர்கள் அராஜகத்தின் முன் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் அவருடைய புகழை யாராலும் பொய்களாலும் புரட்டுகளாலும் குறைய செய்ய முடியவில்லை