Originally Posted by
kalnayak
chi.ka.,
அவன்தான் மனிதன் படம் பற்றி நடிகர் திலகம் திரியில் முரளி அவர்கள் பதிவிட்ட பின்பு அங்கும் இங்கும் அதிகமாக விவாதிக்கப்படும் பாடலாக 'ஆட்டுவித்தால் யாரொருவர்' பாடல் விளங்குகிறது. நான் மிகச் சிறிய வயதில் மதுரையில் (எந்த திரை அரங்கம் என்று கூட தெரியவில்லை) என் அம்மாவுடன் போய் பார்த்து என்று என் நினைவில் வாழும் திரைப் படமாகவும், என் நெஞ்சில் கலந்த பாடலாகவும் இதை நினைக்கிறேன். மிகச் சிறிய வயதில் மதுரைக்கு வந்த போது பார்த்தால் என் அம்மா அடிக்கடி அங்கே படம் பார்த்தோம் என்று சொல்லி நினைவு படுத்துவார்கள். கடைசிப் பாடலான 'மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று' பாடலும் வாழ்வியல் தத்துவத்தை விளக்குவதாகவே படுகிறது. இதில் கவியரசரை வெல்ல இன்னும் ஒரு கவிஞர் வர முடியாது என்றே தோன்றுகிறது. பாடிய பாடகர் திலகத்தைப் பற்றி நான் சொல்ல என்ன இருக்கிறது. நாமெல்லாம் பார்த்து, கேட்டு ரசிக்க கொடுத்து வைத்திருக்கிறோம். அதிலும் குறிப்பாக 'விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால், மதியும் மயங்குதடா' - என் காதில் ரீங்காரம் இட்டுக் கொண்டு இருக்கிறது. விவரம் புரியாத வயதில் பார்த்து மனதில் ஏற்றி வைத்து கால ஓட்டத்தை கணக்கிட வைத்துக் கொண்டு இருக்கிறதுஇந்த திரைப் படமும் இதன் பாடல்களும். என்னமோ போங்க.