-
புரட்சித்தலைவர் முதல்வராக இருந்த. காலத்தில் தி.மு.க.என்ற கட்சி தவிர மற்ற அனைத்து கட்சியினரும்.அவர் மீது தனிப்பட்ட மதிப்பு மரியாதை வைத்திருந்தனர் அதனால் எந்த ஒரு போராட்டம் மறியல் என்றாலும் புரட்சித்தலைவரிடம் அனுமதி கேட்பது வழக்கம் ஆகும். அந்த வகையில் கம்யூனிஸ்ட் கட்சியும் விதிவிலக்கு அல்ல. அவர்கள் எப்போதும் எதாவது ஒரு போராட்டம் நடத்த வேண்டும் என்பதற்காக கட்சியில் முக்கிய பிரமுகர்கள் பத்து பதினைந்து பேர் ஒன்று கூடி புரட்சித்தலைவரிடம் அனுமிதி கேட்க செல்வார்கள் அப்படி செல்பவர்கள் புரட்சித்தலைவரைக் கண்டதும் அவருடைய விருந்தோம்பல் உபசரிப்பு அன்புடன் கட்டி அனைத்து அவர்களை வரவேற்கும் பணிவு நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று அவர்கள் கேட்பதற்கு முன்பு இவர் கேட்டு ஆச்சரியம் படசெய்துவிடுவார் அதனாலே அவர்கள் வந்த நோக்கம் மறந்து திரும்பிவிடுவார்கள் இப்படி ஒவ்வொரு முறையும் சென்று புரட்சித்தலைவரின் அன்பில் கட்டுப்பட்டு திரும்புவது வழக்கமாகியது ..இப்படியே சென்றால் நாம் போராட்டம் நடத்துவது எப்படி நம்ம எதிர்ப்பு எப்படி காட்டுவது என்பது புரியாமல் தவித்தனர்.பிறகு ஒரு முடிவு செய்தனர். பத்து பதினைந்து பேர் போனால்தான் எம். ஜி. ஆர் விருந்தோம்பல் உபசரித்து அனுப்பிகிறார் .அதே ஐநூறு ஆயிரம் பேர் ஒன்றாக சென்றால் அவரால் எப்படி அனைவருக்கும் உணவு கொடுக்க முடியும். அதனால் ஒரு முறை அப்படி செய்வோம் என்று முடிவு செய்து. புரட்சித்தலைவர்க்கு எந்த வித தகவலும் சொல்லாமல் தீடீரென்று ஒரு நாள் சுமார் ஆயிரம் பேருக்கு மேல் ஒன்று கூடி புரட்சித்தலைவரின் அலுவலகம் நோக்கி மிக பெரிய பிராண்டமான ஊர்வலமாக சென்றனர். கம்யூனிஸ்ட் கட்சியினர் எதோ கோரிக்கை வைக்கவேண்டும் என்று மிக பெரிய ஊர்வலம் உங்களைக் நோக்கி வந்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி புரட்சித்தலைவர்க்கு தெரிவிக்கப்படுகிறது. உடனே தனது உதவியாளர் அழைத்து வந்தவர்கள் அனைவரும் வெயிலில் நிற்க வேண்டாம் அவர்களது கோரிக்கை எதுவாயினும் நிறைவேற்றுகிறேன் சிறிது நேரத்தில் வருகிறேன். அது வரை அருகில் உ ள்ள திருமணம் மண்டபத்தில் இருக்க சொல்லுங்க என்று தகவல் கூறி அனுப்பினார்.
உதவியாளர் புரட்சித்தலைவர் சொன்ன தகவலை ஊர்வலம் வந்தவர்களிடம் கூறுகிறார். அவ்வளவு பேரும் அருகே உள்ள திருமணம் மண்டபம் சென்றனர்.
அங்கே சென்றவர்களுக்கு மிக பெரிய அதிர்ச்சியானார்கள் காரணம். வந்துருந்த ஆயிரம் பேருக்கும் பிரமாண்டமான சமபந்தி அறுசுவை உணவு பரிமாறு பட்டு தயராக இருந்தது. அங்குள்ளவரிடம் கேட்டதற்கு தலைவர்தான் நீங்கள் வருவிர்கள் என்பதால் உணவு தயாராக இருக்க சொன்னார். என்றனர். ஆயிரம் பேரும் வயிறு நிறைவுடன் உணவு உண்டு சென்றனர். உண்ட உணவுக்கு நன்றி சொல்வதா .அல்லது போராட்டா கோரிக்கை வைப்பதா என்பது புரியாமல். தவித்தனர் .
கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம் இதைப்பற்றி புரட்சித்தலைவரிடம் கேட்டார். உங்களுக்கு இவ்வளவு பேர் வருவார்கள் என்று முன்பே தெரியுமா. இத்தனை பேருக்கு உணவு கொடுக்கப்பட்டது எப்படி சாத்தியம் ஆனது என்று கேட்டார். அதற்கு புரட்சித்தலைவர் கூறிய பதில்
ஆயிரம் பேர் என்பது குறைவு அடுத்த முறை இருபாதாயிரம் பேரை அழைத்து வாருங்கள் அத்தனை பேருக்கும் உணவு தரகூடிய தகுதியை ஆண்டவன் உங்கள் மூலம் தருகிறார். உங்கள் கோரிக்கை போராட்டம் எல்லாம் என் கண்ணூக்கு தெரியல. வந்தவர்கள் எத்தனை பேர் பசியில் இருப்பார்கள் எந்த சூழ்நிலையில் வந்திருப்பார்கள் என்பதை நான் அறிவேன் .உங்கள் போராட்டம் கோரிக்கை எப்போது வேண்டுமானாலும் நிறைவேற்றலாம் அது பெரிய விஷயம் அல்ல. ஆனால் வயிற்று போராட்டம் அந்த நேரத்தில் மட்டும்தான் நிறைவேற்ற முடியும்
முதலில் வயிற்றுபசியை போக்குவோம் பிறகு மற்றதை பார்ப்போம் என்பதுதான் என் மனதில் தோன்றியது தவிர மற்றப்படி இனிமேல் தான் சிந்திக்கனும் என்றார்
புரட்சித்தலைவர் பதிலை கேட்டதும். கல்யாணசுந்தரம் தன்னையறியாமல் புரட்சித்தலைவர் கைகளைப்பிடித்து கண்ணீர் மல்க முத்தமிட்டார்........ Thanks...
-
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.....
அடிமைப்பெண் - பாகுபலி
அடிமைப்பெண் 1969ம் ஆண்டு வெளியான அக்காலத்து பிரமாண்டப் படம். பாகுபலி 2015ல் வெளியான பிரமாண்டப் படம்.
50 வருடங்களுக்கு முன்பு
வெளியான படம்தான் அடிமைப்பெண். இந்தப் படத்தின் ஒவ்வொரு அம்சமும் அக்காலத்தில் வெகுவாக சிலாகித்துப் பார்க்கப்பட்டது, ரசிக்கப்பட்டது.
நிஜ சிங்கத்துடன் சண்டை போட்ட "வாத்தியார்"
அடிமைப் பெண் படத்தில் நிஜ சிங்கத்துடன் சண்டை போட்டிருப்பார் எம்.ஜி.ஆர். இந்தப் படத்துக்காக, அந்த சிங்கத்தை தனது வீட்டுக்கே வரவழைத்து தினசரி சாப்பாடு போட்டு அதை தனக்குப் பழக்கிக் கொண்டாராம் எம்.ஜி.ஆர். கிளைமேக்ஸ் காட்சியில் இந்த சிங்கச் சண்டை மயிர்க்கூச்செறிய வைத்தது அந்தக் காலத்து ரசிகர்களை.
ஜெய்ப்பூர் அரண்மனையில்
படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஜெய்ப்பூர் அரண்மனையில் வைத்திருந்தனர். ராஜஸ்தான் பாலைவனத்தில் ஒட்டகச் சண்டைக் காட்சிகளைப் படமாக்கியிருந்தனர்.
வசூல் ராஜா
அடிமைப்பெண் படம் அப்போதைய கணக்குப்படி ரூ. 2.30 கோடியை வசூலித்ததாக கூறுகிறார்கள். இப்போதுள்ள கணக்குக்கு அது ரூ. 350 கோடி என்று கணக்கிடப்படுகிறது.
100 நாள்தான் ஷூட்டிங்
அடிமைப் பெண் படத்தின் ஷூட்டிங் ஜஸ்ட் 100 நாட்களில் முடிந்து போனது. பாகுபலியின் ஷூட்டிங்கோ கிட்டத்தட்ட 3 வருடம் ஆனது.
சிலிர்க்க வைத்த கிளைமேக்ஸ்
கிளைமேக்ஸ் மிகவும் உணர்ச்சிகரமாக, திரில்லாக இருக்கும். வெறும் கையுடன், கிரேக்க நாட்டு ஸ்டைலில் எம்.ஜி.ஆர். சிங்கத்துடன் போட்ட அந்த சண்டை.. இந்தக் காலத்து சிக்ஸ் பேக் ஹீரோக்கள் பிச்சை வாங்க வேம்ண்ம்.
கம்ப்யூட்டர் இல்லை. கிராபிக்ஸும் இல்லை
அடிமைப்பெண் படமான காலத்தில் கம்ப்யூட்டர் கிடையாது, கிராபிக்ஸ் கிடையாது, அனிமேஷன் கிடையாது. பிளை கேம் கி்டையாது, ஹெலிகேம் கிடைாயது. அகேலா கிரேன் கிடையாது. டிஜிட்டல் கேமரா கிடையாது. எந்த வசதியுமே இல்லாத பட்டிக்காட்டு சினிமா சூழல் அப்போது இருந்தது. ஆனால் இசையில், நடிப்பில், பிரமாண்டத்தில் பிரமிக்க வைத்த படம் அடிமைப் பெண்.
திருப்பம்.. திரில்
சாதாரண இந்தக் கதையை திருப்பங்கள், ஆச்சரியங்களுடன் விறுவிறுப்பாக படமாக்கியிருப்பார்கள் அடிமைப்பெண் படத்தில். காதல் காட்சிகள், சண்டைக்
காட்சிகள், வீராவேசம், கோபம், குரோதம், துரோகம், வர்த்தகம் என அத்தனையும் கலந்த அதிடிப்படம் அடிமைப்பெண்.
தீர்ப்பு
எனவே பாகுபலியைப் பார்த்து பிரமிக்கும் அதே நேரத்தில் நம் 'சொந்த' அடிமைப்பெண்ணை கொண்டாடுவோம். இந்தக் கால இளைஞர்கள் கட்டாயம் அடிமைப்பெண்ணை ஒருமுறை பார்க்குமாறு சொல்லுவோம்....... Thanks...
-
#மெருகேற்றிக்கொண்ட #வாத்தியார்
சாலிவாஹனன் படத்தின் கதாநாயகன், ரஞ்சன். வில்லன், டி.எஸ் பாலையா. கதாநாயகிகள் அன்றைக்கு கவர்ச்சிக்கன்னி என ரசிகர்களால் சிலாகிக்கப்பட்ட டி.ஆர்.ராஜகுமாரி மற்றும் கே.எல்.வி வசந்தா. கதாநாயகன் ரஞ்சன், தமிழ்சினிமாவின் முதல் அஷ்டாவதானி நடிகர்.
அன்றைய காலகட்டத்தில் இத்திரைப்படத்தைப் பற்றி ஒரு பாப்புலரான பத்திரிகையில் வந்த விமர்சனம் :
“இந்தக் கதையை டைரக்டர் சீர்படுத்த முயற்சிக்கவில்லை. அதற்குப் பதிலாக நடிகைகளைக் கவர்ச்சியாகப் பதிவு செய்வதில் சிரத்தை காட்டியிருக்கிறார். கே.எல். வி வசந்தாவை வெறுக்கத்தக்கபடி மேலாடை தரிக்கச் செய்திருக்கிறார். இதில் தேவையில்லாத வெறுக்கத்தக்க குளோசப் ஷாட்டுகள் வேறு. ராஜகுமாரி தோற்றமும் இதுபோலவே படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.
ரஞ்சனுக்கு வேஷம் துளிக்கூடப் பொருத்தமில்லை. அவரது முகத்தோற்றம் அவருக்கு எதிராக நிற்கிறது. மேக்கப் சகிக்கக்கூடியதாக இல்லை. முகத்தில் வீரத்துக்குப் பதில் அசடும் அறியாமையும் தாண்டவமாடுகின்றன. அவருடன் காதல் காட்சிகளில் மட்டுமு டி.ஆர். ராஜகுமாரி நன்றாக நடித்திருக்கிறார்.....”-
நீளமான இந்த விமர்சனத்தின் இடையே அந்த பத்திரிகை ஒரு கதாபாத்திரத்தை மட்டும் பட்டும் படாமல் ஒரேவரியில் பாராட்டியிருந்தது.
அது, நம்ம வாத்தியார் பற்றியது தான். “எம்.ஜி.ராம்சந்தர் போடும் கத்திச்சண்டை பாராட்டும்படி உள்ளது..." என்ற அந்த ஒருவரியினால் உச்சிக்குளிர்ந்து போனது வாத்தியாருக்கு.
கதாநாயகனை கண்டமேனிக்கு சாடியும் அதேசமயம் துணைபாத்திரத்தை பாராட்டியும் எழுதப்பட்ட இந்த விமர்சனம், 'வெறும் நடிப்புத்திறமையும் அழகும் மட்டுமே சினிமாவுக்கான மூலதனம் இல்லை. பல விசயங்களிலும் நம்மை மெருகேற்றிக்கொண்டால் மட்டுமே மற்றவர்களிடமிருந்து தாம் தனித்துத் தெரிவோம்' என்ற எண்ணத்தை வாத்தியாரின் மனதில் இன்னொரு முறை ஆழமாக விதைத்தது.
அந்த உறுதியோடு முன்னைவிடவும் சுறுசுறுப்போடு தன் தகுதிகளை வளர்த்துக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடத்துவங்கினார் நம்ம வாத்தியார்....... Thanks...
-
பொதுவா நம்ம வாத்தியார் மீது ஒரு தவறான செய்தி கூறுவார்கள் அது என்னவென்றால் அவர் நடிக்கிற படத்தில் படப்பிடிப்பு தாமதமாக நடைப்பெறுகிறது ..அதற்கு என்ன காரணம் என்பது அறியாமல் பல. தவறான. கருத்துக்கள் கூறுவார்கள் சில சண்டாளர்கள்,.அதற்க்கான காரணம் இதோ நான் அறிந்தவை
1...புரட்சித்தலைவர் படப்பிடிப்பில் இருக்கும் போது தீடீரென்று அறிஞர் அண்ணாவிடம் தகவல் வரும் உடனே புறப்பட்டு வரும்படி அதனால் படப்பிடிப்பு அப்படியே நிறுத்தி விட்டு அண்ணாவின் கட்டளைக்கு பணிந்து புறப்பட்டு சென்று விடுவார் அப்படி புறப்படவில்லையென்றால் அண்ணா கூப்பிட்டு போகல என்று தவறானா கருத்து திணித்து பத்திரிகையில் எழுதி விடுவார்கள் என்பதால் ....போகாமல் இருந்தால் அண்ணா மீது பற்று இல்லை என்று நினைப்பார்கள் மதிக்க வில்லை என்று கதைக்கட்டி விடுவார்கள் போனால் படப்பிடிப்பு நின்றுவிடும் இப்படி இரண்டுக்கும் மத்தியில்தான் அவர் படப்பிடிப்பு நடைப்பெறும்
2....தமிழகத்தில் எங்கு தீ விபத்து ஏற்ப்பட்டாலும் மழை வெள்ளம் ஏற்ப்பட்டாலும் அங்கே வந்து முதல் உதவி புரட்சித்தலைவரின் உதவித்தான் இருக்கும் யாருக்கு எந்த ஆபத்து இருந்தாலும் அவர்கள் நாடுவது புரட்சித்தலைவரின் உதவித்தான் ஒவ்வொரு முறையும் பட.ப்பிடிப்பு நடைப்பெறும் போதும் இப்படி எதாவது அசம்பாவிதம் நடை.ப்பெறும் உடனே புரட்சித்தலைவர் படப்பிடிப்பு நிறுத்திவிட்டு பிறர்க்கு உதவிட சென்று விடுவார் இதனால் அவர் படப்பிடிப்பு தாமதம் ஏற்படும்
3...அரசியல் கட்சி பொதுக்கூட்டம் தேர்தல் பிரச்சாரம் அரசியல் பிரமுகர்கள் பொது நிகழ்ச்சி என்று பல்வேறு அழைப்பு க்கள் நிகழ்வுகள் மத்தியில்தான் படப்பிடிப்பு நடைப்பெறும்
4......புரட்சித்தலைவருடன் நடிக்கும் நடிகர் நடிகைகள் பலர் ஒரே நேரத்தில் 4. ..5..படத்தில் நடிப்பார்கள் அடுத்த பட.த்தில் படப்பிடிப்பு கலந்துக்கொள்ள. இயக்குனர் களிடம் அனுமதி கிடைக்காது அந்த காலத்தில் மிகவும் கண்டிப்பு மிக்க. இயக்குனர் இருந்தனரர் அதனால் புரட்சித்தலைவரிடம் சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள் இதனால் புரட்சித்தலைவர் மீது அபாண்டமா பழி வரும் வாத்தியாரிடம் இதைப்பற்றிறி கேட்டபோது அதற்கு அவர் கூறிய. பதில்.. இதுதான் அவர்கள் சம்பாதிக்கும் நேரம் அவர்களுக்கு சினிமா தவிர் வேறு தொழில் தெரியாது அதனால் அவர்கள் பிழைப்புக்கு நாம் தடையாக இருக்க கூடாது என்பார் இப்படி உதவி செய்து படப்பிடிப்பு தாமதம் ஏற்படுவது உண்டு..
..
5....படப்பிடிப்பு முடியும் தருவாயில் கிளைக்மாஸ் காட்சியில் உடனே நடித்துக்கொடுக்கமாட்டார் காரணம் ? ....தன்னுடன் நடிக்கும் சக கலைஞர்களுக்கும் விருந்து கொடுப்பார் யாருக்காவது எதாவது பிரச்சினை சம்பளம் பாக்கி இருக்க கவனிப்பார் அப்படி எதாவது இருந்தால் முதலில் அதை தீர்த்தப்பிறகுத்தான் படப்பிடிப்பு நடக்கும் தன்னைப்போல் மற்றவர்களை நினைத்து பிற. நலனில் அக்கறை காட்டுவதாலும் படப்பிடிப்பு தாமதம் ஏற்படும்
6...குடும்பம் அரசியல் பொது சேவை சினிமா இந்த நான்கு வாழ்க்கையிலும் எதிலும் யாருக்கும் குறைபாடு இல்லாமல் வாழ்வது மிகவும் கடினம் ஆனால் நம்ம வாத்தியார் நான்கு வாழ்க்கையிலும் எல்லோருக்கும் வழிகாட்டியா வாழ்ந்துக்காட்டினார்
பின்குறிப்பு இதற்கு ஆதாரம் புரட்சித்தலைவருடன் நடித்தவர்கள் கூறியது
அவரைப்புரிந்துக்கொண்டு படம் எடுத்தவர்கள் இரண்டு பேர்
ஒன்று R. M. . வீரப்பன் மற்றொருவர் சாண்டோ சின்னப்ப தேவர்....... Thanks...
-
கவியரசு கண்ணதாசன் அவர்கள
உன்னையறிந்தால் உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் என்ற பாடல் எமுதிக்கொண்டிருந்த நேரம் கண்ணதாசன் காண அவரது வீட்டுக்கு நடிகவேள் M..R..ராதா அவர்கள் வந்தார் ..கண்ணதாசன் எமுதிய பாடலை வாங்கி படித்துபார்த்தார் பாடல் வரிகள் M.R.ராதாவை வெகுவாக கவர்ந்தது கண்ணதானை அப்படியே கட்டி தழுவி பாரட்டினார். என்னய்யா கவிஞர் நீ உன்னைபோல் கவிஞர் நான் பார்த்ததில்லை பிரமாதமான பாடல் கண்டிப்பாக இந்த பாடல் காலத்தால் அழிக்க முடியாது உலகளவில் பேசப்படும் என்று பாராட்டு தெரிவித்தார்.
ஆமா இந்த பாடல் யாருக்காக எமுதப்பட்டது என்று கேட்டார்..
அதற்கு கண்ணதாசன் நீங்களே சொல்லுங்க யாருக்கு இந்த பாடல் பொருந்தும் நீங்கள் சரியான பதில் தந்தால் அந்த பாடல் அவர்க்கே போய் சேரும் தவறான பதிலாக. இருந்தால் இந்த பாடல் உங்களுக்கு கொடுத்து விடுகிறேன் நீங்கள் உங்கள் சொந்த படத்துக்கு பயன் படுத்திக் கொளேளுங்கள் என்றார்.
என்ன கவிஞர் இப்படி கேட்டிட்டுங்க உங்கள் பாடல்க்கு உயிர் கொடுக்க எம். ஜி. ஆர். ஒருவர்தான் இருக்கிறார் அவரைத் தவிர வேறு எவருக்கும் பொருந்தாது
எனக்கு கொடுத்தால் என் தலைமுறை வரைத்தான் பேசப்படும். ஆனால்
எம்.ஜி. ஆர் க்கு பல தலைமுறை தாண்டி நிலைக்கும் என்றார்
...உடனே கவியரசு கண்ணதாசன் M.R.ராதாவை கட்டி தழுவி நான் நினைத்தேன் நீங்கள் சொல்லி விட்டீர்கள் ..இது கண்ணதாசன் பாடல் என்பதை தாண்டி எம்.ஜி.ஆர் பாடல் என்றுத்தான் பேசப்படும்
சில நாட்கள் கழித்து படப்பிடிப்பில் புரட்சித்தலைவரை சந்தித்த M.R.ராதா அவர்கள்
எல்லா நடிகர்களும் கவிஞர்களின் வரிகளுக்கு வாய் அசைவு கொடுப்பது சுலபம் ஆனால் வாழ்ந்துக்காட்டுவது கடினம் நீங்கள் வாழவும் வைக்கிறீர்கள் வாழ்ந்தும் காட்டுகிறீர்கள் என வாழ்த்து கூறி கண்ணதாசன் எமுதிய. பாடலையும் குறிப்பிட்டு பாரட்டினார் ..
M.R.ராதாவால் பாரட்டுப்பெற்ற பாடலுக்கு புரட்சித்தலைவர் கண்ணதாசனுக்கு இரண்டு மடங்கு சம்பளம் தந்து மகிழ்ச்சி கடலில் நீந்த வைத்தார்
எல்லா பாடல் வரிகளையும் கவனிக்கும் புரட்சித்தலைவர் இந்த பாடலை மட்டும் கவனிக்க வில்லை திருத்தவும் இல்லை.......... Thanks...
-
.நமது தெய்வம் பொன்மனச்செம்மல் வித்தியாசமான நடிப்பில் ரசிகர்களின் மனதில் வெற்றி கண்ட வெற்றிச்சித்திரம் பாசம் படத்தில் இடம்பெற்ற பாடல்
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக என்ற பாடல் வாத்தியார் வாழ்வில் மறக்க முடியாத ஒர் உன்னதமான அற்புதமான பாடல் ...
அன்றைக்கு கதைக்காகவும் தாயாரிப்பாளர்கள் வேண்டுதலுக்காகவும் இயக்குனர்களின் திரைக்கதைக்காகவும்தான் பாடல்கள் எமுதப்பட்டது.
முதல் முதலாக கதாநாயகன் அந்தஸ்து உயர்த்தி கதாநாயகன் பெருமைகளைப் குறிப்பிட்டு எழுதபட்ட முதல் பாடல் முதல் படம் இதுதான் இந்தபாடல் வெளியிடப்பட்டு புரட்சித்தலைவர் புகழுக்கு மேலும் புகழ் சேர்த்தது.
இப்பாடல்க்கேட்டு அன்றைய. முன்னணி கதாநாயகன்கள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் பலர் கவியரசு கண்ணதாசன் வீட்டுக்கு படையெடுத்தனர் எங்களுக்கும் இது போன்ற பாடல் எழுதி தருமாறு கேட்டனர்
அதற்கு கவியரசு கண்ணதாசன் தந்த பதில் நான் எம்..ஜி..ஆர்க்காக பாடல் எமுதனும் என்று எழுத வில்லை நான் எழுதிய பாடலுக்கு அவர் பொருத்தமானர்
அதுப்போல் நான் எத்தனையோ பாடல் எழுதியுள்ளோன் அவற்றில் எதாவது ஒரு பாடலுக்கு உங்களுக்குள் பொருத்திக்கொள்ளுங்கள் என்றார் .
...
பத்து ஆண்டுகள் கழித்து 1965 ம்ஆண்டு முதல் 1975 ம்ஆண்டு வரை உள்ள. முன்னனி கதாநாயகன்கள் 1975 ம்ஆண்டு முதல் 1980 ம்ஆண்டு வரை உள்ள முன்னணி கதாநாயகன்கள் கவியரசு கண்ணதாசனிடம் இதே கேள்வி கேட்டனர்
அதற்கு கவியரசு சொன்ன பதில் எம் ஜி ஆர் போல் பாடல் கேட்கிறீர்கள் தவறில்லை ஆனால் உங்களால்
எம். ஜி. ஆர்.போல் சினிமாவில் கொள்கையுடன் நடித்து நிலைக்க முடியுமா?
எம். ஜி. ஆர் போல வாழ்க்கையில் மனிதநேயம் வள்ளல் தனம் வுடன் வாழமுடியுமா?..
எம். ஜி. ஆர் போல் அரசியலில் பண்பு பணிவு ஊழலற்ற அரசாக ஜொலிக்க முடியுமா? ..இதெல்லாம் சாத்தியமாகும் என்றால் நான் உங்களுக்காக பாடல் எமுதி தருகிறேன். என்றார்.
1996 ம்ஆண்டு கவியரசு கண்ணதாசன் பவள விழாவில் விசாலி கண்ணதாசன் கூறியது ...... Thanks...
-
பேரறிஞர்அண்ணா அவர்கள் ஒரு முறை வேலுர் பொதுக்கூ.ட்டத்தில் கலந்துக்கொண்டு விட்டு சென்னைக்கு வந்துக்கொண்டுருந்தார்.வரும் வழியில் புரட்சித்தலைவர் நடித்த காவல்காரன் படத்தில் இடம்பெற்ற பாடல் அவர் காதில் ரீங்காரம் இட்டது பாடல் வந்த திசையில் நோக்கி சென்று வண்டியே நிறுத்த சொன்னார் ...அப்போதுத்தான் காவல்காரன் வெளி வந்து வசூலில் சாதனை செய்துக்கொண்டிருந்தது.வண்டி ஒரு தியேட்டர் அருகே சென்று நின்றது. தியேட்டர் அதிபர் அழைத்து தான் வந்த செய்தி யாரிடமும் கூற வேண்டாம். நான் மக்களோடு சேர்ந்து படம் பார்க்க போகிறேன் என்று கூறி தியேட்டர்க்குள் சென்று காவல்காரன் படம் பார்த்தார் ..படம் ஆரம்பம் முதல் இறுதி வரைக்கும் கைத்தட்டல் விசில் சத்தம் காதைபிளந்தது மக்கள் மகிழ்ச்சி கடலில் மூழ்கி ஆரவாரம் செய்தனர். காட்சிக்கு காட்சி வாத்தியாரே தலைவா என்ற குரல்கள் ஒலித்துக்கொண்டே இருந்தது
அண்ணா படம் பார்க்காமல் மக்களின் சந்தோஷம் மகிழ்ச்சி கண்டு பூரிப்பு அடைந்தார் எத்தனையோ கவலைகள் பிரச்சினைகள் மறந்து இந்த மூன்று மணி நேரத்தில் அடையும் மகிழ்ச்சி கண்டு வியந்தார் ஆச்சரியம் அடைந்தார். படம் முடிந்தவுடன் தனது அலுவலகம் சென்று நான் உடனே காவல் காரன் படம் பார்க்கனும் அதற்க்கான ஏற்பாடு செய்யுங்கள் என்றார் .அப்போது உடன் வந்தவர் கே.ட்டார் .ஐயா இப்போதுத்தான் தியேட்டரில் சென்று படம் பார்த்தோம் மீண்டும் பார்க்க. வேண்டும் என்கிறீர்களே என்றார்
அதற்கு பேரறிஞர் அண்ணா தந்த விளக்கம் நான் படம் பார்க்கனும் என்றுத்தான் சென்றேன் ஆனால் மக்களின் சந்தோஷம் ஆரவாரம் மகிழ்ச்சி கண்டு அவர்களைத்தான் ரசித்தேன் எம். ஜி. ஆர் மீது அவர்கள் வைத்திருந்த உண்மையான அன்பு பற்று பாசம் கண்டு பெருமிதம் கொண்டேன்.ஒரு திரைப்படத்துக்கு தேவையான அத்தனை அம்சமும் எம். ஜி.ஆர் மக்களுக்கு தந்து அவர்கள் மனம் திருப்தி ஏற்படுத்தியுள்ளார் இதைவிடப் ஒரு திரைப்படத்துக்கு என்ன தகுதி வேண்டும் ..மக்களின் உண்மையான சந்தோஷம்தான் சிறந்த விருதுக்கான தகுதியான படம் ஆகும் இந்த ஆண்டு சிறந்த திரைப்படம் காவல் காரன் என்று அறிவியுங்கள் என்றார் மக்கள் ரசித்த திரைப்படம் நானும் ரசிக்க விரும்புகிறேன் என்றார் ...
பின்குறிப்பு.... ...புரட்சித்தலைவர் விவசாயி திரைப்படம் தேர்ந்தெடுக்க சொன்னார் காரணம் காவல் காரன் தனது சொந்த கம்பேனி சத்யா மூவிஸ் என்பதால் பலர் தவறான கருத்து கூறுவார்கள் என்பதால் விவசாயி திரைப்படம் சொன்னார்.
ஆனால் அண்ணா அதற்க்கெல்லாம் இடம் தராமல் காவல் காரன் முன்பே அறிவித்தால் அதுவே சிறந்த படமாக தேர்ந்தெடுத்தார்........ Thanks...
-
கவியரசு கண்ணதாசன் பிடித்த பாடல்
பாராட்டிய பாடல்
படகோட்டி,படத்தில் வரும் கரைமேல் பிறக்க வைத்தான் என்ற பாடல். .
கவிஞர் வாலி முதல் முறையாக ஒரு படத்தில் முழு பாடல் எமுதிய
முதல் படம் படகோட்டி....அப்படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்
இன்னும் சொல்லனும் என்றால் பாட்டுக்கு ஒரு படம் இப்படம் வெளியான முதல்
தமிழகத்தில் உள்ள அனைத்து சென்டரில் இப்படத்தில் வரும் பாடல்கள்தான் ஒலித்தது இப்படத்தில் வரும் பாடல்கள் பாராட்டாத பத்திரிக்கைகள் கிடையாது
பாராட்டாத தலைவர்கள் கிடையாது
கவிஞர்கள் பாடலாசிரியர்கள் இசையமைப்பாளர்கள் .இப்படி அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்தார்கள்
ஏன் அன்றைய முன்னனி கவிஞர்கள் பலர் ஒன்று கூடி கவிஞர் வாலிக்கு பாராட்டு விழா நடத்தினர். இதில் பங்கேற்ற அனைவரும் கவிஞர் வாலியை பாராட்டினார்கள்
அதில் கவியரசு கண்ணதாசன் வாலியைப்பற்றி பாராட்டிய சில வரிகள்
படகோட்டி படம் புரட்சிநடிகர் எம். ஜி.ஆர். க்கு மேலும் ஒரு வெற்றி மகுடம் சூட்டும் இனி புரட்சிநடிகரின் ஆஸ்தான கவிஞராக வாலி திகழ்வார். இப்படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களும் அற்புதமாக செதுக்கிள்ளார் கவிஞர் வாலி
அதிலும் குறிப்பாக என்னை மிகவும் கவர்ந்தது பிடித்தது கரைமேல் பிறக்க வைத்தான் என்ற பாடல். காரணம். வாலி இதை ஒரு கவிஞராக இருந்து எமுதினாரா அல்லது ஒரு மீணவராக இருந்து எமுதியாதா என்று என்னால் யூகிக்க முடியல. . ஒரு மீணவன் துன்பம் பற்றி அவனிடம் போய் கேட்டாலும் இந்தளவுக்கு கூறுவானா என்பது சந்தேகமே ஆனால் கவிஞர் வாலி அதைவிட ஆழமாக வேரூன்றி செதுக்கியுள்ளார் இப்பாடல் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து பல பேர் வியர்ந்து பாராட்டுக்கு பொருத்தமான கவிஞராக திகழ்கிறார். இப்படி பல இடங்களில் பலர் பாராட்டு பெற்ற வாலி முடிவாக கூறியது
பல பேர் பாராட்டு பெற்ற நான் இன்று ஒரு கவிஞன் என்ற அந்தஸ்து பெறுவதற்கு காரணம் புரட்சிநடிகர் எம். ஜி.ஆர். நான் பல நாள் பட்ட கஷ்டம் துயரம் எல்லாம் அவரைக்கண்டவுடன் ஒரு நோடியில் பறந்து போனது வறுமை பசி பட்டினி யாவும் மறந்து போனது எனது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் அக்கறையுடன் எடுத்துக் கொண்டவர் இனி நான் எந்த உயரம் சென்றாலும் எம் ஜி ஆர் என்ற ஒரு மாமனிதர்தான் எனக்கு அடையாளம் என்றார்..... Thanks.........
-
எம்ஜிஆர் பக்தர் s.குமார் அவர்களுக்குக்காக இப்பதிவு எமுதிகிறேன்
பொதுவாக புரட்சித்தலைவர் பாடல் என்றாலே கருத்துக் ஆழமிக்க பாடல் என்பது ஊர் உலகம் முழுவதும் அறிந்த உண்மை ஆனால் அதன் உண்மையான உட்பொருளும் கருத்துக்கள் பலர் அறிந்திருக்கவில்லை. . அவர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம். ....பணத்தோட்டம் படத்தில் வரும் ஒரு பாடல் வரிகள். ...
என்னத்தான் நடக்கும் நடக்கட்டுமே. ..என்ற பாடலில் வரும் ஒரு வரி. ..
. பின்னாலே தெரிவது அரிச்சுவடி
முன்னாலே இருப்பது அவன் வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்து போராடு
இப்பாடல் கருத்து. ..பின்னாலே தெரிவது அரிச்சுவடி என்றால்
நடந்து முடிந்த சம்பவம். சுவடு என்றால் வரலாறு. இறந்த காலத்தை குறிக்கும்
இறந்த காலம் மீண்டும் வராது அதனால் அதைப் பற்றி நீ சிந்திக்க வேண்டாம்.
முன்னாலே இருப்பது அவன் வீடு..இக்காட்சி யில் இறைவன் ஆலயத்தைக்காட்டி பாடுவார்..உன்னுடைய எதிர்காலம் இறைவனிடம் உண்டு அதை அவன் பார்த்துக்கொள்வான்.அதனால் அதைப்பற்றி.நீ சிந்திக்காதே
நடுவினிலே நீ விளையாடு...இப்போது நடப்பது நிழல் காலம் இந்த காலத்தில்
நல்லது செய்து நல்லதை நினைத்து வாழ்ந்தால். .எதிர் காலம் உன்னை தேடி வரும். இறந்த காலம் பேசப்படும்
அதாவது நடந்து முடிந்த சம்பவம் பற்றி பேச வேண்டாம்
நடக்க போறதைப்பற்றி யோசிக்க வேண்டாம் இப்போமுது நடக்க வேண்டியதை மட்டும் சிந்திப்போம் செயல் படுத்துவோமா. ...
என்பதே இப்பாடலின் உட்பொருளின் கருத்தாகும்........ Thanks...
-
1968 ---குடியிருந்தக்கோயில். ....ஒளிவிளக்கு ...
1969 --- அடிமைப்பெண்,......நம்நாடு...
1970 ---மாட்டுக்காரவேலன் தொடர்ந்து 5_வது வெள்ளி விழா படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது இந்த வெற்றி புரட்சித்தலைவர் ஒருவரால் மட்டுமே தரமுடியும். ? என்பது பலர் அறிந்த உண்மை ஆனால் அதன் பின்னனி என்ன என்பது பலர் அறியாமல் இருப்பதும் உண்மையாகும். அதற்கு ஒர் உதாரணம் இப்பதிவு எமுதிகிறேன். .1970- ம் ஆண்டு வெளிவந்த மாட்டுக்காரவேலன் வெள்ளி விழா கொண்டாடி மாபெரும் வசூல் செய்து சாதனை படைத்தது. படம் பொங்கல் திருநாள் அன்று வெளிவந்தது. ஆனால் அப்படம் தீபாவளிக்கு வரவேண்டியது காலதாமதமாக பொங்கலுக்கு வெளிவந்தது ...அதற்கு காரணம். ....
ஜெயந்தி பிலிம்ஸ் படத்தின் தயாரிப்பாளர் கனகசபை ரத்தினம் படம் முழுவதும் எடுத்தபின் புரட்சித்தலைவரிடம் போட்டுகாண்பித்தார். படத்தின் கதை படி புரட்சித்தலைவர் வக்கீல் அதனால் கடைசி கிளைமாக்ஸ் காட்சியில் நீதிமன்றம் காட்சிகள்தான் வைக்கப்பட்டது புரட்சித்தலைவர் நீதிமன்றத்தில் வாதாடி அசோகனுக்கு தண்டனை வாங்கிக்கொடுப்பதுப்போல் வழக்காடு காட்சி இடம் பெற்று இருந்தது அப்போது கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளில் இல்லை. ..புரட்சித்தலைவர்க்கு படம் முழுக்க பார்த்த பிறகு மனம் திருப்தி அளிக்கவில்லை அதனால் தயாரிப்பாளர் இயக்குநர் இருவரையும் அழைத்து இந்த காட்சியினை எடுத்து விட்டு கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ...
இதைக்கேட்டதும் தயாரிப்பாளர் முகம் வாடியது. படம் முழுக்க முடிந்த பிறகு இனி மீண்டும் செட்டிங்ஸ் அமைத்து எடுத்து முடிக்க நாள் ஆகும் செலவும் அதிகம் ஆகும் அதனால் வேறு ஒரு தயாரிப்பாளரிடம் படத்தை ஒப்படைத்துவிட்டு நாம் ஒதுங்கிக்கொள்வோம் அல்லது கதை விவாதத்தில் புரட்சித்தலைவரிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவோம். மீண்டும் புரட்சித்தலைவரிடம் வந்து ஐயா படத்தின்கதைப்படி நீங்கள் வக்கீல் நீதிமன்றம் காட்சி இடம் பெற்றால்தான் அதில் உங்கள் வாததிறமையுமீ சமூக கருத்துக்கள் மக்களிடம் இருந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். .அதுமட்டுமல்ல பத்திரிக்கையாளர்கள் பொதுமக்கள் விமர்சனம் செய்து படத்தின் வெற்றி வசூல் பாதிக்கும் என்றார்.... உடனே அதற்கு புரட்சித்தலைவர் தந்த பதில். ..
கதைப்படி நான் வக்கீல் ஆக இருந்தாலும் நீதிமன்றம் காட்சி இரண்டு மூன்று முறை வைத்திருக்க வேண்டும். ஏற்கனவே நான் நடித்த நீதிக்குப்பின்பாசம்படத்தில் அப்படி ஒரு காட்சி இருந்ததால்தான் அப்படம் வெற்றி பெற்றது வசூலில் லாபம் பார்த்தது நீங்கள் ஒரு காட்சியில் மட்டும் நீதிமன்றம் காட்சி வைத்திருந்தால் அவை பலர் கேள்விக்கு சாதகமாக அமையும் அதே நான் சொல்வதுப்போல் கடைசி கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளில் மக்கள் கதையை மறந்து இதிலே ஆர்வம் காட்டி மகிழ்ச்சி அடைவார்கள் மக்கள் தரும் வெற்றி எந்த பத்திரிகையாளர் விமர்சனம் வெற்றியை பாதிக்காது வசூலும் குறையாது..நான் சொல்வதுப்போல் கடைசி கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை எடுக்க வேண்டும் அதற்கான ஏற்பாடுகளை நானே செய்து விடுகிறேன் என்று கூறி அனுப்பி வைத்தார். தயாரிப்பாளர் கனகசபை இனிமேல். .... எம் ஜி ஆர் வைத்து படம் எடுக்க கூடாது என்று முடிவு செய்து விட்டார்.
அதன் பின்னர் புரட்சித்தலைவர் அதற்கான பயிற்சி பெற்ற பிறகுதான் செட்டிங்ஸ் அமைத்து சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்டது கடைசி கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை எடுக்க இரண்டு மாதங்கள் ஆனது தீபாவளிக்கு வரவேண்டிய படம் பொங்கலுக்கு வெளிவந்தது வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. ..
படத்தின் தயாரிப்பாளர் கனகசபை பணம் மழையில் நனைந்தார் அவர் வாழ்விலே அவ்வளவு பெரிய அளவில் வசூல் பார்த்ததில்லை. ..எந்தளவுக்கு புரட்சித்தலைவர் மீது கோபம் இருந்ததோ அவையெல்லாம் மறந்து இனிபடம் எடுத்தால் புரட்சித்தலைவர் வைத்துதான் எடுக்கவேண்டும் என்று முடிவு செய்து விட்டார். .......
மாட்டுக்காரவேலன் வசூலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அந்த ஆண்டு வெளிவந்த படங்களிலேயே அதிக அளவில் வசூலில்
சக்கரவர்த்தியாக திகழ்ந்தது இப்படி ஒவ்வொரு திரைப்படத்தின் வெற்றிக்கு முதல் காரணம் நமது தெய்வம் புரட்சித்தலைவர் தான்....... Thanks...