:oops: ஹி ஹி ஹி ஆர்வக்கோளாறின் காரணமாய் கவனிக்கவில்லை :oops: :)Quote:
Originally Posted by aanaa
Printable View
:oops: ஹி ஹி ஹி ஆர்வக்கோளாறின் காரணமாய் கவனிக்கவில்லை :oops: :)Quote:
Originally Posted by aanaa
உண்மை :bow:Quote:
Originally Posted by aanaa
Feb 12th
_______
நேற்றைய தொடரில், உங்கள் வீட்டிலும் எங்கள் வீட்டிலும் நடக்கும் நிகழ்வுகள் தான்.
ஆசையுடன் பேரனுக்கு பிடித்ததை எல்லாம் சமைத்தெடுத்துக்கொண்டு அவனைப் பார்க்கச்செல்லும் தாத்தா பாட்டி,
காதல் போன்றதொரு ஈர்ப்பை சொல்லத்தெரியாத சாஸ்த்ரிகள் மகன், அவனை சொல்லவைக்க ஊடல் கொண்டாடும் ஜட்ஜின் மகள்,
புதிதாய் ஒன்றும் இதைப்பற்றி நான் அலச விரும்பவில்லை என முன்பே கூறியிருந்தேன்.
இடையிடையே தொகுதித் தேர்தல் பற்றிய கதைக்களங்களும் இருந்தன.
பிராமணன் ஏன் சமஸ்க்ருதம் படித்தல் தவறா? சமஸ்க்ருதம் படிப்பதால் அவன் தமிழன் அல்ல என்பது எப்படி நியாயமான வாதம்? என்பது போன்ற தர்க்க விவாதங்களுக்கு சோவின் பார்வை மட்டும் சுவாரஸ்யமாய் இருந்தது.
விவாததிற்கும் எதிர்விவாததிற்கும் வலைவிரிக்கும்படி இருந்தது. சமஸ்க்ருதத்தை, ஏற்றுக்கொண்டதால் பிராமணன் தமிழன் அல்ல என்றால், தாம் ஓதும் குர்-ஆன் -இல் அரபு மொழிக் கலந்து ஓதும் முஸ்லிம் தமிழன் அல்ல என்று சொல்ல முடியுமா? லத்தின்மொழி கலந்திருக்கும் பைபிளை ஓதும் க்ருத்துவன் தமிழன் அல்ல என்று சொல்ல முடியுமா? என்று காரசாரமாய் தம் கோணத்தை பகிர்ந்து முடித்தார்.
I couldn't watch it yesterday :oops:Quote:
Originally Posted by Shakthiprabha
But this question tells it all. Very good opinion about Sanskrit, Bible and Kuran. Slapping on the face of those who say Sanskrit is not for Tamilan. :bow:
really appreciable ! adithu sollappadum or karuthu ....Quote:
Originally Posted by viraajan
thank uQuote:
Originally Posted by Shakthiprabha
நன்றி ஆனா.
Feb - 13th
______
சோவின் கருத்துப் பரிமாற்றத்தில் 'இன்னொரு மொழியின் துவேஷம் தேவையில்லை என்ற கருத்தையொட்டி, சமஸ்க்ருத பாஷையில் புனையப்பட்ட உயர்ந்த காவியங்கள் மட்டுமின்றி விஞ்ஞான ஆராய்ச்சிகள், தகவல்கள்' என பல பொக்கிஷங்கள், சமஸ்க்ருத மொழியில் புனையப்பட்டிருபப்தை சுட்டிக்காட்டினார்.
யான் எனது எம் மொழி என்ற பிரிவு மனப்பான்மையை விடுத்து எதிலும் நல்லனவற்றை எடுத்துக்கொண்டால் நமக்கும் நன்மையே அல்லவா விளைகிறது என்ற தொனியில் அவர் பேச்சு தொடர்ந்தது.
நீலகண்டன் (கோபு?) அஷோக்கை ஆன்மீக மடத்திலிருந்து வெளிவருவதைக் கண்டு, நாதனிடம் தன் மனவருத்ததை தெரிவிக்கிறார். சதா பூஜை புனஸ்காரம் என்று வளர்க்கப்பட்டதால் அவன் மற்றோரைப்போல் இல்லாமல் வித்தியாசமாய் பண்டாரம் போல் திரிவதாக குறைப்பட்டுக்கொள்கிறார். மதம், ஆச்சாரம், எல்லாமே உபயோகமற்றது என்றும், தான் இதை எல்லாம் அனுஷ்டிக்காததாலேயே தன் குடும்பம் சௌகரியமாக இருப்பதாய் அங்கலாய்த்தார்.
குயிலி (நீலகண்டன் மனைவி) ஊரார் வம்பில் ஏன் தலையிடுகிறீர்கள் என்று கடிந்து கொண்டாலும், தம் உறவினர் மகன் ஒருவன், பண்டாரம் போல் திரிவதைக் கண்டு எவ்வாறு சும்மாய் இருப்பது என்று வருந்துகிறார் நீலகண்டன்.
இதனைக் கேட்ட நாதனும், அவர் மனைவியும், அஷோக்-கிடம் "ஏன் இப்படி இருக்கிறாய்" என்று கேள்விகள் அடுக்குகின்றனர். "நீ எதையோ பறிகொடுத்தவன் போல் ஏன் சோகம் கப்பிய முகத்துடன் சிந்தனையில் இருக்கிறாய்." என்று நாதன் வினவ.
"ஆமாம் அப்பா! நான் என்னையே தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கிறேன்" என்கிறான் அஷோக்.
"என்ன வேணும் உனக்கு, சொல்லு நானும் சேர்ந்து தேடுகிறேன். என்ன தெரியணும் உனக்கு சொல்லு, எனக்கு தெரிஞ்சதை நானும் சொல்றேன்" என்று சொல்ல
"ஆத்மானுபூதி பற்றி தெரியுமாப்பா" என்று வினவ அவர் வேதனையுடன் வாயடைத்துப் போய் வெறுப்புடன் இடத்தை விட்டு நகர்கிறார்.
அவன் மற்றவனைப் போல் சினிமா ட்ராமா என்று சுற்றாமல் மடம், இறைவன் என சுற்றுகிறானே என கவலை தொனிக்க பேசும் நாதன் பேச்சு யதார்த்தமாய் இருந்தது. அவரின் வருத்தம், கோபம், இயலாமை அழகாய் வெளிப்பட்டது.
"யாரு நீலகண்டனா சொன்னது? பேரு தான் தூரத்து சொந்தம், ஆனா எப்பவும் கிட்டகயே தான் இருக்கார்' என்று நளினி இயல்பாய் அங்கலாய்ப்பது புன்னகைக்க வைக்கிறது.
(தொடரும்)
( Actress NaLini, is racing wildly in the contest to win our hearts )
நன்றி சாரதாQuote:
Originally Posted by Shakthiprabha
//தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கிறேன்//
விடை கிடைக்குமா
ஷக்தி :)Quote:
Originally Posted by aanaa