-
thOzikku
நான் எழுதினால்தான் நீ எழுதுகிறாய்
தோழீ! உனக்கும் எனக்கும் வாய்த்தது
என்ன பொருத்தமோ? -- இதற்கு
என்ன அருத்தமோ?
நான் சிரித்தால் நீயும் சிரிக்கிறாய்,
தோழீ ! உன்னுள்ளம் எனதோடு
ஒன்று பட்டதோ?--சிரிக்காதபோது
நின்றுவிட்டதோ?
நான் அழுதுவிட்டால் நீயும் அழுதுவிடுவாயோ?
தோழீ! காரணம் தேவையில்லையோ?
அறியவும் ஆவலில்லையோ?
-
தோழனுக்கு..
குறுந்தகவல்கள் வேலை செயவில்லை
மின்னஞ்சல்களுக்கான மெய்ன் சர்வரில்
ஏதோ கோளாறு
தொலைபேசி செய்யலாமென்றால்
சுண்டு விரலில் சுளுக்கு..
என்றெல்லாம் காரணம் சொல்ல மாட்டேன்..
ஏதோவேதனை
ஏதோ தொடர் வேலைகள்..
உனக்கு மட்டுமல்ல
எதுவும் எழுதுத்ற்குக் கற்ப்னை
ஓடவில்லை.
ஏனெனத் தெரிய்வில்லை
எழுதுவேன் விரைவில்
என்ச் சொல்லும் போது
ஏன் உன் எழுத்துக்கள் பார்த்தால்
என் சோகம் போகாதா எனக் கேள்வி
என்னுள் எழுகிறது..
-
அன்பின் சிவமாலா
நேற்றும் இன்றும் வலைப்பக்கம் வர நேரம் விளையவில்லை..இப்போது தான் பார்த்தேன்.அது தான் மேற்க்ண்ட மடல்..
-
கள்ளங்க்ள் கரைந்தோட கண்களிலே காட்டிவிடும்
உள்ளத்தில் பொங்கும் ஒளி
தீபாவளி வருது என்ன பாட்டு தரப்போறீங்க
-
அணுகுண்டு...
பச்சை நிறத்துடன் இருந்த
ரப்பர் வளையத்தைத்
தொட்டபடி படுத்திருந்த சிறுமியைப் பார்த்தபடி
அப்பா சொன்னார்
எப்படியாவது இவளுக்கு
மேலும்பாட்டுப்பயிற்சி கொடுத்து
தொலைக்காட்சிப் போட்டியில்
அடுத்தபடிக்குச் செல்ல வைக்கவேண்டும்..
அம்மாவும் சொன்னாள்..
ஆமாங்க.. அதான் எனக்கும் டென்ஷனா இருக்கு..
கண்ணை மூடியிருந்த
சிறுமி நினைத்துக் கொண்ட்து...
பாவம் அப்பா அம்மா..
எப்படியாவது என்னைத்
தோக்க வச்சிடு சாமி
-
வெடி..
முதல் நாள் அனுப்பிய
மின்ன்ஞ்சலை படித்திருப்பாள்
நேரில் பார்த்தால் திட்டுவாள்
அதோ வருகிறாளே
கொஞ்ச்ம் பார்த்தும் பாராமல்
நடக்கலாம் என
நடந்தவனை
கைபற்றி இழுத்து
அவள் சிரித்த போது
சந்தோஷமாய் இருந்தாலும்
சரவெடி புஸ்வாணமாய் ஆனதில்
கொஞ்சம் ஏமாற்றம் தான்..
*
-
தரைச் சக்கரம்..
சுத்து சுத்தென்று
ஓரிட்த்தில் நிற்காமல்
சுற்றினாலும்
எப்படியும் எங்காவது
மோதி நிற்கத் தான் வேண்டும்..
அல்லது
தடாலென நின்று விட்வேண்டும்
என
சொல்லாமல் சொல்கிறது த்த்துவம்..
*
-
புஸ்வாணம்
பூச்சிதறலாய் சிதறுவதை
கண்ணிடுக்கி
ஒருகையால் தூக்கிய
ப்ட்டுப்பாவாடையை
இறக்கத் தோன்றாமல்
பார்ப்பவளை பார்த்துக்கொண்டே
மனசே இல்லாமல்
நின்று போகிறது
*
-
சரவெடி
சும்மா வா..
ஒண்ணும் பண்ணாது..
ஓஹ் எனக்கு பயங்க..
தைர்யமா வா நான் இருக்கேன்ல..
ச்ச்.. அம்மா பாக்கறாங்க..
புதுமனைவி தடுக்கத் தடுக்க
கையில் ஊதுபத்தி கொடுத்து
சரவெடியைத் தோரணமாய்க்
கையில் பிடித்து
தைர்யமா திரில வை சொல்லி
கண்சுருக்கி வைத்தவள்
திரி பற்றியதும்
ஸ்ஸ் நீங்களும் போட்டுடுங்க
எனச் சொல்லி தள்ளிச்செல்ல..
படபடவென முழங்க
தூரப்போட்டு
அடங்கும் வரை கொஞ்சம் பயமாய்ப் பார்த்த
மனைவியின் அழகை ரசித்தவ்னின்
கண்ணில் பட்ட்து
சத்தம் அடங்கிய சரத்தின்
பக்கம்
விழுந்திருந்த மல்லிகைச் சரம்...
-
சிகப்புக் கலர் தீக்குச்சி..
வாடா
இப்படி ஒரசணும்..
மாத்தேன் போ..
சரி நான் செய்றேன் நீ பாரு
பய்ம்மா இர்க்கு வெடிக்குமா..
பார்..
பற்ற வைத்து பிஞ்சுக்கையில்
கொடுக்க
ஸ் ஆ என கையைப் பின்னால் இழுத்து
அழ
தரையில் விழுந்த தீக்குச்சியின் பிரதிபலிப்பு
குழந்தையின் கண்களில்..
*