-
நாட்குறிப்பு எழுத புது ஆசை வருது
நாட்டு நடப்பை பதித்து வைக்கணும்
நாளுக்கொரு சேதி புழுதி கிளப்புது
நாகரிகமானது பக்தியும் ஆன்மீகமும்
சாமியும் சாமியாரும் காத்து வந்ததனரே
கருவூலங்களில் கொழிக்கும் கோடி செல்வம்
கொட்டுது கொட்டுது மழை சண்டமாருதமாய்
புதையலென்றால் புதையல் பாரறியாதது
புட்டபர்த்தி நேற்று பத்மனாபர் கோயிலின்று
அரங்கநாதனின் கருடன் பின் பொற்குவியல்
பத்திரிக்கையில் படித்தேன் செய்தி இன்று
என்றும் வளங்கள் நிறைந்தது எங்கள் நாடு
-
நாடு போற்றிட நல்லவை கொண்டுதான் வந்த
கூடு போன்றதாய் உருவிலே புன்னகை சி ந்தி
ஊடி ம்க்களின் உணர்விலே எழுச்சியும் ஊட்டி
தேடிச் சுதந்திரம் கண்டவர் தாமவர் காந்தி...
-
காந்திக்குப் பிடித்த மூன்று குரங்கு பொம்மை
என் வீட்டு கூடத்தை அலங்கரிப்பதுண்மை
காண்போர்க்கெல்லாம் நினைவூட்ட வேண்டுமது
கண்ணியமான கருத்துள்ள கட்டுப்பாடென்று
ஆயின் ஐயமொன்று எழுகின்றது மனதிலே
கண்ணில் விழுந்த சிறு தூசென உறுத்துது
கூடத்தில் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கும்
குரங்கு மூன்றும் கலங்குமோ குழம்புமோ
எப்போதும் ஊமையாய் செவிடாய் குருடாய்
இருந்திடத்தான் வேண்டுமோ கலியுகத்தில்
தீயவை என்பதன் புதுப் புது அர்த்தங்கள்
அனர்த்தங்கள் அரிதாரங்கள் புரியாமலே
-
புரியாமலேயே
நடக்கின்றன
சில மாற்றங்கள்..
சில நிகழ்வுகள்..
**
சின்ன வயதில்
விழுந்து விழுந்து படித்து
பத்தாம் வகுப்பு வரை
முதலில் வந்த
பக்கத்து வீட்டு செல்வக்குமார்
பதினொன்றில் தடம் மாறி
கல்லூரிப் பக்கம் போகாமல்
ஊர்சுற்றும் ரவுடியாக மாறியது ஒன்று..
அடக்க ஒடுக்கமாக
பிறரைப் பார்க்கவே கூச்சப் படும்
குணம் கொண்ட
ரெட்டைத் தெரு சுகன்யா
காலப் போக்கில்
டெல்லிக்கு வேலைக்குச் சென்று
அங்குள்ள பஞ்சாபிப் பையனை
மணமுடித்து
பின் சொந்த ஊர் வந்த போது
எந்த வித தயக்கமுமில்லாமல்
என்னைப் பார்த்த போது
ஹாய் அங்கிள் எனப் புன்சிரித்த து..
மகன்களின் மீது மட்டும்
அன்பையும் பணத்தையும்கொட்டும்
எனது பாசக்கார மாமியார்
துரத்தித் துரத்தி
என் மனைவியுடன் தான் இருப்பேன் என
வெளி நாட்டில் இருந்த என்னை
குடியுரிமை விசா வாங்க வைத்து
வந்து
இருந்த இரண்டு மாதங்களில்
ஒரு இரவில்
மாரடைப்பில் மரித்த து....
முன்னர் இருந்த ஆட்சி
மோசமானது என
விழுந்து விழுந்து
சுட்டிக்காட்டிய பத்திரிகைகள்
மற்றும் தொலைக்காட்சிகள்
எல்லாம்
புதிய ஆட்சியின் செயல்பாடுகளைப்
பற்றி
முழுமையாக அலசாமல்
சிலவருடங்களுக்கு முன் தான்
வந்த
திரைப்பட நடிகரின் திருமணத்தை
வெகு வெகு முக்கியமாக
மக்களிடம் கொண்டு செல்வது....
**
இன்னும் இன்னும்...
புரியாமல் நடக்கும்
மாற்றங்களும்,
புரியாமல் நடக்கும்
நிகழ்வுகளும்...
தொடர்கதை தான்...
புரியவும் முயற்சிக்க் கூடாது..
ஏனெனில்
இது தான்
உலகம்...
-
உலகம் சுற்றி வந்த
வாலிபன் முன்
உமையாளையும் உமாபதியையும்
சுற்றி வந்து
உலகத்திற்கு virtualisationai
உணர்த்திய விநாயகனே போற்றி போற்றி!!!
-
கிறுக்கன்.
-
போற்றி வளர்ப்பான் நல்ல தோட்டக்காரன்
செடிகளின் தனித்தன்மை தேவை அறிந்து
நிழலா வெயிலா நீர் விட்டிடும் அளவென்ன
கவாத்து செய்யும் காலமறிந்து ஒடித்து
சீராக நேராக எழிலாக மரம் திருத்தி
தக்க பருவத்தே தீதில்லா உரமிட்டு
அயராத உழைப்பும் கவனமும் குவித்து -
குடும்பமெனும் தோட்டத்து உறவுகளை
அங்ஙனமே பராமரிக்கும் இல்லாளின்
ஞானத்திலே ஞாலம் தழைத்திருக்குமே
-
தழைத்திருக்குமே
செல்வம், பசுமை, மகிழ்ச்சி எல்லாம் நிறைந்து...
இப் புவி..
எப்பொழுது என்றால்...
**
பருவத்தே தவறாமல்
நல்லமழை பொழிந்து
பயிர்கள் செழித்து வளர்ந்தால்..
*
விவசாயியிடம்
நியாய விலைக்கே காய்கறி மற்ற உணவுப் பொருட்களை
வியாபாரி வாங்கி
மக்களிடமும்
நியாய விலைக்கே விற்றால்...
*
அரசியல்வாதிகள்
இன்முகத்துடன்
மனதார மக்களுக்காகவே உழைத்தால்..
*
காதலியின் நிஜ அழகை
தைரியமாக் க் காதலன் சொன்னால்...!
*
தமிழ்த் திரைப்பட்த் தயாரிப்பாளர்கள்
கதானாயகனிடம் வன்முறையையும்
கதானாயகியின் இடைப்பிரதேசத்தையும்
காட்டுவதை விட்டு
தரமான அதே சமயத்தில்
மற்றவர்களுக்கு நஷ்டமடைய வைக்காமல்
பொழுதையும் போக்கும்
நல்ல திரைப்படங்கள் கொடுத்தால்..
*
தொலைக்காட்சித் தொடர்கள்
அழுகை,பழிவாங்குதல்,
இரண்டு மூன்று பெண்டாட்டிகள்
போன்ற கருக்களை விட்டு
இயல்பாய்ப் படம் எடுத்தால்...
**
கல்லூரி மாணவ மாணவிகள்
தமிழில் ஷாப்பிங்க் மால் எனச் சொல்லப் படுகிற
விற்பனை வளாகங்களில்
அளவில்லாமல். அழகிய சிறிய உடையோடு
போய்வந்து கொண்டிராமல்
சமர்த்தாய் படிக்கும் நேரத்தில் படித்து
சுற்றும் நேரத்தில்
கட்டுப்பாட்டுடன் சுற்றி
பெற்றோரின் பணத்தை செலவழிக்காமல்
இருந்தால்...
**
பத்திரிக்கைகள்
புரியும்படியான
சிறுகதைகளையும்
அழகிய நற்கவிதைகளையும்(இதைப்போன்ற)
சிறந்த நகைச்சுவையையும்,
இளம் கதானாயகிகளின்
முழு ஆடை அணிந்த புகைப்படங்களையும்
வெளியிட்டிருந்தால்..
*
இளம்பெண்கள்
அழகிய ஆடை ஆபரணங்களை அணிந்து
திருட்டுபயமில்லாமல்
இரவில் நடக்க முடிந்தால்...
*
தங்கம் வெள்ளி போன்றவை
பாம ர ர்களும் வாங்கும் படி
விலை குறைவாயிருந்தால்..
**
ம்ம்..
பெருமூச்சு தான் வருகிறது..
இந்த பகற்கனவில்...
இவை எப்போ நடக்கும் சொக்கா...!
-
சொக்கா என
உதவிக்கு அழைத்தவனுக்கு
பக்கா பாட்டு
கொடுக்காமல்
பொருள் புதைந்த
பாட்டெழுதி
encoding எடுத்துரைத்த
சிவாய நாம:
-
சிவாய நாமஹ..
இப்படித்தான் அந்தக்காலத்தில
என்னோடவீட்டுக்காரர்..ஒன்னோட தாத்தா
கடுதாசில்ல ஆரம்பிப்பாக..
நல்லா இருக்கியாப்பா..
நா ஒன் பாட்டி எழுதறேண்..
என்னது..ரெண்டு சுழி ன தான் போடோணும்..
நா செளக்கியம் நீ செளக்கியமாப்பா..
நீ எனக்கு அனுப்பிச்ச
ஐ நூறு டாலர் வந்துச்சுன்னு
ஒன் மதனி சொன்னா..
ஐயாயிரம் ரூபாயாமே..
அவ்வளவு எதுக்குப்பா
இந்த குருட்டுக் கிழவிக்கு...
ஏற்கெனவே
ஒம் மதனி
காலேல கேப்பக் கஞ்சி,
மத்தியானம் நீர்சோறு
ராத்திரில்ல ரெண்டு பூவ்ன் ப்ழம் கொடுக்கா..
ராசா சாப்பாடு தாம்ப்பா..
சீரணம் ஆவணும்ல..
நல்லாத்தான் இருக்கேன்
கொல்லப்பக்கத்தில
மாட்டுக்கொட்டாய் கிட்ட இருக்கற ரூம்புல தான்..
என்ன ஒடம்புல சுகராம்..
கம்பவுண்டர் நெதக்கும் ஊசி போடறார்..
என்ன ராத்திரில்ல் தட்வித் தடவி
பாத்ரூம் போறது தான் கஷ்டம்...
அதான் விழாம வந்துடுவம்ல..
நீ அமெரிக்கா போயும் நாளாச்சு பாரு..
எப்போ என்ன்பாக்க இந்த கள்ளந்திரிக்கு வருவ..
ம்ம்
என்னால தான் ஒன்ன பாக்க முடியாது..
கொஞ்சம் ஒன்னோட கை பிடிச்சுக்கலாமேப்பா..
அண்ணன்கிட்டயும் சொல்லி அலுத்துப்புட்டேன்
ஒங்கிட்ட சொன்னானா
முடிஞ்சா நா இருக்கறச்சயே வா..
இல்ல என்னப்பத்தி தகவல் கெடச்சா
கண்டிப்பா வந்து என்னப் பாக்கோணும்..செரியா..
ஏய் என்ன புள்ள நீ அழுவுற்..
இந்த லெட்டர ஏதோ ஈமெயிலாமே
அதுல
பக்கத்து வீட்டு படிக்கற் புள்ள மூலமா
அனுப்பறேன்...
ம்ற்க்காம பாக்க வா ராசா..
உசிரோட பாத்தா இன்னும் சந்தோஷம்..
***
-
சந்தோஷம் மல்லி முல்லை போல
மறைக்க முடியாது மணப்பதை
சுற்றிலும் பரப்பும் ரம்மியத்தை
தனக்கு மட்டுமது சொந்தமில்லை
தழுவ வரும் நிலாக்கால கடலலை
நினைவு வங்கியின் நிரந்தர இருப்பு