Originally Posted by
chinnakkannan
கிறுக்கரே..வாங்க வாங்க..ஏதோ நானும் தான்கிறுக்கறேனாக்கும்.. பாருங்க பொய்யூன் கொடுத்திருக்காங்க..(புலவின் தமிழ்வார்த்தையா?)
*
பொய்யூன் கொடுத்த புலவியே நாங்களதை
மெய்யுள் செலுத்துவோ மே..
ஒருகவளம் தாவென்றால் ஒன்பதைத் தந்தே
சிறுவயிற்றை சோபித்தீர் தான்..
மாறும் சுவைக்கு மணமுடன் சேர்த்திட்ட
சாறுதான் சோயாவா சொல்..
(சோயா சாஸ் லாம் இல்லாமத் தான் என் மனைவி செய்திருந்தார்!)
மீன்விழியைக் கண்டு மிகமகிழ்வு கொண்டதுபோல்
ஊன்இல்லாச் சோற்றை உணர்வுடன் கொடுத்தவும்
தீந்தமிழைக் கண்டுமனம் தீர்க்கமாய்க் கொண்டகளி
பூந்தென்றல் தீண்டிய பூ