திருச்சி- ராமகிருஷ்ணா dts., திரையரங்கில் புரட்சிதலைவர் வழங்கும்மகத்தான வெற்றி வசூல் காவியம்" உழைக்கும் கரங்கள்",25-01-2020 முதல் வெற்றி உலா......... Thanks.........
Printable View
திருச்சி- ராமகிருஷ்ணா dts., திரையரங்கில் புரட்சிதலைவர் வழங்கும்மகத்தான வெற்றி வசூல் காவியம்" உழைக்கும் கரங்கள்",25-01-2020 முதல் வெற்றி உலா......... Thanks.........
https://youtu.be/sPui3jpSejo......... Thanks.........
"திண்டுக்கல் மாநகரில் சரித்திர நாயகன் பாரதரத்னா டாக்டர் புரட்சி தலைவர் அவர்களின் பார் போற்றும் விழா"
மனித நேய மாணிக்கம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு,
பக்தர்கள் அறக்கட்டளை சார்பில் தொடர்ந்து விழா நடத்தி தற்சமயம் 15ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்து மாபெரும் சாதனை படைத்து வருகிறார் சகோதரர் " திண்டுக்கல் மலரவன்
மிகவும் எளியவர் திண்டுக்கல் மலரவன்!!
நமது புரட்சி தலைவரின் விழா நடத்தி சாதனை படைப்பதில் மிகுந்த வல்லமை படைத்தவர் திண்டுக்கல் மலரவன்!!
திண்டுக்கல், திருச்சி பக்தர்கள் சார்பில் நடைபெறும் மாபெரும் வரலாற்று விழா!!
பணத்தால் அதுவும் நமது தலைவர் அவர்களால் வசதி படைத்த ஜாம்பவான்கள் மத்தியில் திண்டுக்கல் மலரவன் தனது ஏழ்மை நிலையிலும் விடாமுயற்சியோடு விழா நடத்தி தலைவரின் மணிமகுடத்தில் ஒரு வைரக்கல்லாக ஜொலித்து வாழ்ந்து வரலாறு படைப்பவர்!!
நமது தங்கத்தலைவர் முதன்முதலில் திண்டுக்கல் பாராளுமன்றத் தேர்தலில் 1973ஆம் ஆண்டு திரு மாயத்தேவர் அவர்களை நிறுத்தி ....
துரோகிகளே!!
திண்டு எங்களுக்கு ....
கல் உங்களுக்கு ....
என்று போர்ப்பரணி பாடியதுடன் களத்தில் வெற்றிமுரசு கொட்டியவர்!!
நமது தலைவரை நிலைநிறுத்திய திண்டுக்கல் மாநகரில் நடைபெற இருக்கும் மனித நேய விழாவில் கலந்து கொள்ள தபால் வழியே அழைப்பிதழ் கொடுத்து அழைத்திருக்கிறார் திண்டுக்கல் மலரவன்!!
அழைப்பிதழ் கிடைத்தவர்கள், முகநூல் உறவுகள், உண்மை பக்தர்கள் அனைவரையும் திண்டுக்கல் மாநரமே குலுங்கும் வகையில் மனித நேய மாணிக்கம் எம்ஜிஆர் பக்தர்கள் குழு சார்பில் இந்தப் பதிவினை அழைப்பாக ஏற்றுக்கொண்டு விழாவில் கலந்து கொள்ள வருமாறு அன்போடு அழைக்கின்றோம்!!
நமது தலைவரின் உண்மை பக்தர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு திண்டுக்கல் மலரவன் சார்பில் நடைபெறும் விழாவினை மாண்புறச் செய்வோம்!!
வரலாற்று நாயகனின் புதியதோர் வரலாற்று நிகழ்வினை மீண்டும் திண்டுக்கல் மாநகரில் பதிவிடுவோம்!!
அழைக்கிறார் திண்டுக்கல் மலரவன்.....
அணி திரள்வோம்....
வரலாறு படைப்போம்....
வாருங்கள் தோழர்களே!!
நாள் : 9-02-2020 ஞாயிற்றுக்கிழமை
நேரம் :
காலை 10.30 To இரவு 9 மணி வரை
இடம் :
மகாலிங்க நாடார்
தெய்வானையம்மாள் திருமண
மண்டபம்.
நத்தம் ரோடு, ( இரயில் நிலையம்)
அருகில்
நாகல் நகர், திண்டுக்கல் - 3
வெளியூரில் இருந்து வரும் அன்பர்கள் முதல்நாள் இரவில் வந்தால் திருமண மண்டபத்தில் தங்கிக்கொள்ளலாம்.
குறிப்பு:
விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அனைவருக்கும் மதிய உணவு,
மாலை தேநீர் வழங்கப்படும்.
நமது புரட்சி தலைவர் அவர்களின் உண்மை பக்தர்கள் அனைவரையும் தமிழகத்தின் பக்தர்கள் மற்றும் அண்டை மாநில பக்தர்கள் அனைவரையும்
வருக! வருக! வருக!!
என விழாக்குழுவினர் சார்பில் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.......... Thanks.. ......
குலேபகாவலி !
__________________
ஆஸ்கார் எனும் அரைவேக்காடுத்தனத்தை கையாள்பவர் இதை உற்று நோக்குங்கள் .
அடுக்கடுக்கான கேள்விகளில் அறிவுத் திறனை அடக்கி ஆளும் மக்கள் திலகம் .
அவரின் பதில்களால் ராணி அவர்கள் மக்கள் திலகத்தின் திறம்பட பதில்களை படிப்படியாக உள் வாங்கும் பாங்கு அதை கண்களால் நம்மையும் உணரவைக்கும் தன்மை !
இறுதியில் ராணி அவர்கள் மெய்மறந்து மக்கள் திலகத்தை நோக்க நிதானமாக நின்று ராணியை , ராஜபார்வை பார்க்கும் நம் மக்கள் திலகம் .
தலை சிறந்த நடிப்பு என்பது யதார்தத்தின் வெளிப்பாடு இதை லாவகமாக கையாள்வார் மக்கள் திலகம் .
இதை முழவதுமாக உற்றுப் பாருங்கள் .
யதார்த்தத்தின் இலக்கணம் இந்த கேள்வி பதில் காட்சி தான் .
........... Thanks.........
தினமலர் -27/01/20
--------------------------------
*கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை ,பிரபல நடிகர்களை வைத்து மணிரத்னம் இயக்குகிறார் . இந்நிலையில் , தவச்செல்வன் இயக்கத்தில் இந்நாவல்*அனிமேஷனில் உருவாகிறது .**
எம்.ஜி.ஆர். ஜெயலலிதா உருவங்களில் தயாராகும் இப்படம் குறித்து தவச்செல்வனிடம் கேட்டபோது , மணிரத்தனத்துக்கு போட்டியாக இப்படத்தை*உருவாக்கவில்லை . இரண்டு படங்களும் வேறு என்றார் .
தினத்தந்தி -26/01/20
---------------------------------
எம்.ஜி.ஆர். கனவு நனவாகிறது .
-------------------------------------------------
கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் நீண்ட நாள் கனவாக இருந்தது .* "போஸ்டர்" வரை வந்து அந்த படம் கைவிடப்பட்டது .எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் அன்று அந்த கனவை நனவாக்கும் முயற்சியாக வந்தியத்தேவன் பொன்னியின் செல்வன்* பாகம் -1 என்கிற பெயரில்*அனிமேஷன் திரைப்படம் தயாராகிறது . மதன் கார்க்கி இந்த படத்துக்காக பாடல்கள் மற்றும் வசனங்களை எழுதி இருக்கிறார்
மலேசியாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். கலை விழா*
-----------------------------------------------------------------------------------------
இதயக்கனி சமூக நல மன்றம் படைக்கும் மற்றும் இதயக்கனி இசை குடும்பம் படைக்கும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கலை விழா மற்றும் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 103 வது பிறந்த நாள் விழா* கடந்த 18/01/2020 சனியன்று இரவு 7 மணிக்கு மேல் டேவன்* ராயா மாசாய் , ஜோகூர் மாநிலம் , மலேசியாவில் மிக சிறப்பாக*இன்னிசை நிகழ்ச்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாடல்கள் ஒலித்தன .பல பாடல்களுக்கு நடன கலைஞர்கள் நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தனர் .
நிகழ்ச்சி தொகுப்பாளர் : இதயக்கனி சுகுமாறன்*
தினமலர்*
-------------------
அ .தி.மு.க.வை .மிஞ்சி எம்.ஜி.ஆரை புகழ்கிறார் பா.ஜ .க .மாநில செயலர் .
--------------------------------------------------------------------------------------------------------------------
எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா, மதுரையில் நடந்தது .* இதில் பங்கேற்க்க பா .ஜ .க. மாநில செயலர் ஸ்ரீநிவாசன் , எம்.ஜி.ஆர். நடிகர் என்ற முறையிலும், அரசியல் கட்சி தலைவர் என்ற முறையிலும் எந்த இடத்திலும், எந்த கடவுளையும் நிந்தனை செய்து மக்களை காயப்படுத்தியது இல்லை.* திராவிட இயக்கங்களை பிரிவினைவாத சிந்தனையில் இருந்து மீட்டு எடுத்தவர் .
எம்.ஜி.ஆர். ஒருபோதும் தேசத்தையோ , தேசிய ஒருமைபாட்டையோ, கேலி பேசியது இல்லை .* மத்திய அரசுடனும், பக்கத்துக்கு மாநிலங்களுடனும் , அரசியல் நல்லுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக திகழ்ந்தார் .* தேசியத்தையும், தெய்வீகத்தையும் போற்றுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் காலடி மண்ணை திருநீராக நினைப்பவன் பா . ஜ க. தொண்டன் என்றார் .
இதைக் கேட்ட தொண்டர்கள் , எம்.ஜி.ஆர். புகழ் பாடுவதில் , அ. தி.மு.க. காரர்களை மிஞ்சிவிடுகிறாரே இவர் என ஆச்சரியப்பட்டனர் .
தூத்துக்குடியில் வேங்கையன் வெற்றி விஜயம் மற்றும் கொண்டாட்டம்*
-----------------------------------------------------------------------------------------------------------------
தூத்துக்குடி சத்யா அரங்கில் கடந்த 24/01/20 வெள்ளி முதல் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றி படைப்பான டிஜிட்டல் "அடிமைப்பெண் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
ஞாயிறு மாலை காட்சி (26/01/20) அரங்கு நிறைந்தது . மேலும் 150 நபர்கள்* நின்றபடியும் , தரையில் அமர்ந்தவாறும் படம் பார்த்தனர் . மொத்த பார்வையாளர்களில் சுமார் 100பேர் பெண்கள் .* மொத்த பார்வையாளர்கள் 550.
பார்வையாளர்கள் அனைவருக்கும் அரங்க நிர்வாகம் சார்பில், கோழி பிரியாணி, முட்டை பிரியாணி இலவசமாக வழங்கப்பட்டது .ரசிகர்கள் பட்டாசு வெடித்து அரங்க வாயிலில் கொண்டாட்டம். அரங்கத்தில் வேங்கையன் தோன்றும் பல காட்சிகளில் அலப்பரை அரங்கம் அதிரும் வகையில் இருந்தது .**
தகவல்கள் உதவி : நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .
தி.மு.கவிற்கு தீனிபோடுகின்ற எந்த கேள்விக்கும் பதில் சொல்லமாட்டேன் முன்னாள் மேயர் சைதை துரைசாமி பேட்டி
பொன்மனச்செம்மல் டாக்டர் எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா சென்னை தி நகரில் நடைபெற்றது
இதில் சிறப்புஅழைப்பாளராக முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்....
எம்.ஜி.ஆர் அவர்களின் புகழை காப்பாற்றுவது நாட்டுமக்களுக்கு அவர்செய்த சேவைகளை இளையதலைமுறைக்கு கொண்டு செல்வதைத்தான் எங்களது கடமையாக செய்துவருகிறோம்!
சென்ட்ரல் ரயில் நிலையத்திற்க்கும்,கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கும் எம்.ஜி.ஆர் பெயர் வைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் எடுத்த முயற்சிகள் மறக்கமுடியாதது.
Whatsapp msg