http://i65.tinypic.com/34xq92e.jpg
Printable View
தமிழ் இந்து -22/3/2019
http://i67.tinypic.com/4voaas.jpg
http://i63.tinypic.com/2qird4o.jpg
பெங்களூரில் கடந்த 10/03/19 அன்று நடைபெற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 102 வது பிறந்த நாள் விழாவில் மலேசிய இசை குழுவினர் திரு.மேகநாதன் அவர்கள் தலைமையில் இன்னிசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது .
அப்போது கீழ்கண்ட பாடல்கள் இசைக்கப்பட்டன :
1. புத்தன் இயேசு காந்தி பிறந்தது - சந்திரோதயம்
2. நான் மாந்தோப்பில் -எங்க வீட்டு பிள்ளை
3. எங்கே போய்விடும் காலம் - தாழம்பூ
4. வெற்றி மீது வெற்றி வந்து - தேடி வந்த மாப்பிள்ளை
5. உலகமெங்கும் ஒரே மொழி - நாடோடி
6. நான் ஆணையிட்டால் - எங்க வீட்டு பிள்ளை
7.நானொரு குழந்தை - படகோட்டி
8. நினைத்தேன் வந்தாய் - காவல்காரன்
9. அவள் ஒரு நவரச நாடகம் -உலகம் சுற்றும் வாலிபன்
10. நீயேதான் எனக்கு மணவாட்டி -குடியிருந்த கோயில்
11. நினைத்ததை நடத்தியே முடிப்பவன் -நம்நாடு
12. நாளை நமதே - நாளை நமதே
13. லில்லி மலருக்கு கொண்டாட்டம் -உலகம் சுற்றும் வாலிபன்
14. போய்வா நதி அலையே - பல்லாண்டு வாழ்க
15. கண்ணை நம்பாதே -நினைத்ததை முடிப்பவன்
16. என்னருகே நீ இருந்தால் - திருடாதே
17.கண்போன போக்கிலே - பணம் படைத்தவன்
18. எங்கிருந்தோ ஆசைகள் - சந்திரோதயம்
19. ஆடலுடன் பாடலைக் கேட்டு -குடியிருந்த கோயில்
20. பாடும்போதுநான் தென்றல் காற்று- நேற்று இன்று நாளை
21.கடவுள் ஏன் கல்லானான் -என் அண்ணன்
22. உன்னை அறிந்தால் -வேட்டைக்காரன்
23. தரைமேல் பிறக்க வைத்தான் -படகோட்டி
24.கனிய கனிய மழலை பேசும் -மன்னாதி மன்னன்
25. தங்க தோணியிலே - உலகம் சுற்றும் வாலிபன்
26.வேட்டையாடு விளையாடு - அரச கட்டளை
27. அதோ அந்த பறவை போல - ஆயிரத்தில் ஒருவன்
" எம்.ஜி.ஆரின் எச்சில் நாக்கில் என் பாடல்கள்
ஏறுமுன் – என் முகத்தில் காலம் உமிழ்ந்த
எச்சில்கள் கொஞ்சமா நஞ்சமா?
ஏச்சுகளையும் எள்ளல் பேச்சுகளையும் எதிர் கொள்ள முடியாமல் – எப்பொழுதோ நான் திருச்சிக்குத் திரும்பியிருப்பேன் – கோடம்பாக்கம் நமக்குக் கொஞ்சமும் ஒத்து வராதென்று! வழிமறித்து நின்று என்னை ஆற்றுப்படுத்தியது எம்.ஜி.ஆரின் வரலாறுதான்; அதனால்தான் – அவரை நான் அப்படியே விழுங்கி என் உயிர் நாடியில் உட்கார்த்தி வைத்திருக்கிறேன்!
நடிகர் எம்.கே.ராதா அவர்களின் தந்தையார் திரு.கந்தசாமி முதலியார். அவர் திரு.எஸ்.எஸ்.வாசன் எழுதிய ‘சதிலீலாவதி’ கதையை வாங்கிப் படமெடுத்தார்.
‘சதிலீலாவதி’யில் எம்.ஜி.ஆர். ஒரு சப்–இன்ஸ்பெக்டராக வருகிறார்.
பின் –
‘பிரகலாதா’வில் ஒரு சிறிய வேடம்.
பின்
‘சாலிவாகனன்’ படத்தில் வில்லனாக வருகிறார்.
இந்தப் படத்தில் திரு.ரஞ்சன் கதாநாயகன். ரஞ்சனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஒரு அற்புதமான கத்திச் சண்டை அந்தப் படத்தில் உண்டு.
அதில் – எம்.ஜி.ஆர். Risk எடுத்துக் கத்தியைச் சுழற்றியதில், பெரும் புகழ் அவருக்கு வரக்கூடும் என்ற காழ்ப்பின் காரணமாக –
அந்தக் காட்சியின் நீளம், அதுவும் எம்.ஜி.ஆர். பங்கு பெறும் Shot - கள் குறைக்கப்படுகிறது!
பிறகு –
தியாகராஜ பாகவதர் அவர்கள் நடித்த ‘அசோக்குமார்’ படத்திலும்; ‘ராஜமுக்தி’ படத்திலும் சிறிய வேடங்களில் வருகிறார். இந்த வேடங்களை அவர் பெறக் காரணமாக இருந்தவர் டைரக்டர் திரு.ராஜாசந்திரசேகர் அவர்கள். இவர், திரு. டி.ஆர்.ரகுநாத் அவர்களின் தமையனார்.
ஜூபிடர் ‘அபிமன்யு’வில் – அர்ஜுனனாக வருகிறார்!
ஜூபிடர் ‘ஸ்ரீமுருக’னில் – சிவதாண்டவம் ஆடுகிறார்!
ஜூபிடர் ‘ராஜகுமாரி’யில் தான் கதாநாயகனாகிறார். இந்தப் படத்தில்தான் திரு.ஏ.எஸ்.ஏ.சாமியின் உதவி வசன கர்த்தாவாகக் கலைஞர் அவர்கள் பணியாற்றுகிறார்கள்! பிறகு
‘மருதநாட்டு இளவரசி’;
‘மந்திரிகுமாரி’;
‘மலைக்கள்ளன்’ – இப்படித் தொடர்ந்து பெரும் பெயர் பெறுகிறார்!
‘மலைக்கள்ள’னில் எம்.ஜி.ஆர். புகழின் உச்சிக்குப் போகிறார்.
‘நாடோடி மன்னன்’ மூலம் – இனி, உயர உயரமில்லாத உயரத்தில் போய் உட்காருகிறார்!
வாலியின் எனக்குள் எம்.ஜி.ஆர் தொடரிலிருந்து............ Thanks wa.,
MGR & Sowcarjanaki
செளகார் அம்மா mgr உடன் நடித்த அனுபவங்களை சொல்கிறார்.
Phool Aur Pattthar ஹிந்தி படம் Mgr அவர்களை வைத்து 100வது படமாக
ஒளிவிளக்கு திரு. வாசன் ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்.
எனக்கு மீராகுமாரி நடித்த ரோல் மிகவும்
பிடித்தது.MGR வீட்டிற்கு போன் செய்தேன்.
ஜானகி அம்மா போன் எடுத்தார்கள்.
அம்மா நான் செளகார் பேசறேன் அண்ணிடம் பேசனும் என்றவுடன் MGR லைனில் வந்தார்.
அண்ணா உங்கள் ஒளிவிளக்கு படத்தில்
எனக்கு மீராபாய் நடித்த ரோல் நடிக்க ஆர்வமாக உள்ளது என சொன்னேன்.
அப்படியாமா என ஆச்சிரியமாக கேட்டுவிட்டு
நாளைக்கு சொல்லரேனம்மா என போனை
வைத்துவிட்டார்.
ஆனால் அடுத்த 1** நேரத்தில் ஜெமினி
தாயரிப்பு நிறுவனத்தில் இருந்து விசாரித்தார்கள்.
ஓ MGR அண்ணன் ஜெமினி வாசனிடம்
சொல்லி ஏற்பாடு செய்துவிட்டார் என புரிந்து
கொண்டேன்.
நான் கேட்டவுடன் உடனடியாக அவர் ஏற்பாடு செய்தது எனக்கு மிக சந்தோசம்.
மிக சிறப்பான படமாக மாபெரும்
வெற்றிபடமானது " ஒளிவிளக்கு"
பின்னாளில்
அவர் உடல் நிலை சரியில்லாத போது
"" இறைவா உன் மாளிகையில்"
நான் பாடுவதாக அமைந்த பாடல் தமிழகம் எங்கும் அவர் உடல் நலம் வேண்டி பிராத்தனை பாடலாகி அவர் நலமுடன் வந்ததில் எனக்கு ஓர் ஆத்ம திருப்தி!
*****
"உள்ளமதில் உள்ளவரை
அள்ளிதந்த நல்லவரை
விண்ணுலகம் வா என்றால்
மண்ணுலகம் என்னாகும் "...... Thanks wa.,