இவன் வேற மாதிரி - சினிமா விமர்சனம்
ஜாலி கேலி இளைஞர் பருவத்தில் ஒருவன் சமூகப் பொறுப்போடு யோசித்தால்... அவன் வேறு மாதிரிதானே!
சட்டக் கல்லூரிக் கலவரத்தில் மூன்று மாணவர்கள் பலியாகக் காரணமான சட்ட அமைச்சரைத் தண்டிக்க நினைக்கிறார் 'காமன் மேன்’ விக்ரம் பிரபு. அதற்காக பரோலில் வெளிவந்திருக்கும் அவரது தம்பி வம்சி கிருஷ்ணாவைக் கடத்துகிறார். வம்சி மீண்டும் சிறைக்குச் செல்லாததால், அமைச்சரின் பதவி பறிபோகிறது. வம்சி தன்னைக் கடத்தியவன் யார் என்று வெறிபிடித்துத் தேடுகிறார். விக்ரம் பிரபுவை அவர் கண்டுபிடித்தாரா... பழிதீர்த்தாரா?
'சட்டத்தைக் கையில் எடுக்கும் இளைஞன்’ என்ற ஒன் லைன்தான். ஆனாலும், ஆரம்பக் காட்சியிலேயே கதையை ஆரம்பிப்பது, சின்னச் சின்ன ட்விஸ்ட்கள், க்யூட் காதல் ஐடியாக்கள், பரபர ஆக்ஷன் எனப் படத்தை செம சுவாரஸ்யப்படுத்துகிறார் இயக்குநர் சரவணன்.
http://cdnw.vikatan.com/av/2013/12/y...images/p10.jpgகொடூர வில்லனை இறுக்கமும் மூர்க்கமுமாகப் பந்தாடும் கேரக்டருக்கு விக்ரம் பிரபுவின் அபார உயரமும் அகல முகமும் ஓ.கே. ஆனால், மற்ற சமயங்களிலும் அதே இறுக்கம் தேவையா விக்ரம்? காதல் காட்சிகளில்கூட பற்களைக் கடித்துக்கொண்டேவா? ரிலாக்ஸ் ப்ரோ!
அத்தனை பெரிய கண்களில் அத்தனை காதலைக் கொட்டி நடித்திருக்கும் சுரபிதான் (அறிமுகம்) படத்தின் ஜாலி வைட்டமின். மந்திரிச்சுவிட்ட அப்பாவிக் கோழியாக மீன்தொட்டியோடு திரிவதும், 'மீன்தொட்டி மாதிரி குழந்தையையும் விட்டுட்டுப் போயிருவானோ’ என்று பதறுவதுமாக... இன்ச் பை இன்ச் ஈர்க்கிறார். வம்சியின் திமுதிமு உடலும் குறுகுறு பார்வையும் வில்லன் கேரக்டருக்கு நச்!
'இதுவே நல்ல பொண்ணுதான் சார்... 20 நிமிஷமா செல்லுக்கு ஒரு எஸ்.எம்.எஸ்., கால்கூட வரலை. இதைவிட வேற என்ன வேணும்?’ நீள... நீளமாகக் கடக்கும் காதல் காட்சிகளில் இப்படியான சிலபல வசனங்கள், செம!
மருத்துவமனையில் இரண்டு போலீஸ்காரர்களைக் கொன்று விட்டு வம்சி தப்பித்த செய்தியில் ஊரே அலறிக்கொண்டிருக்கிறது. அந்தச் சமயம் சுரபியைக் காணவில்லை என்றால், செம ஷார்ப் ஹீரோவின் சிந்தனை என்னவாக இருக்க வேண்டும்? ஆனால், விக்ரம் பிரபுவோ சுரபியை http://cdnw.vikatan.com/av/2013/12/y...mages/p10h.jpgஒருதலையாகக் காதலித்தவனைத் தேடுகிறார், அலமாரிகளைத் துழாவுகிறார். வில்லன், சுரபியை எங்கே பதுக்கியிருக்கிறான் என்பதுதான் திகீர் ட்விஸ்ட். ஆனால், அதைப் பார்வையாளர்களுக்குத் தெரிவித்த பிறகும், மிகப் பொறுமையாகக் கடக்கிறது க்ளைமாக்ஸ் காட்சிகள்.
'யதார்த்தமாக’ விக்ரம் பிரபுவும் சுரபியும் சந்தித்துக்கொண்டே இருப்பது, 'யதார்த்தமாக’ விக்ரம் பிரபுவின் பைக்கில் வில்லன் ஏறுவது, 'யதார்த்தமாக’ வில்லன் கோஷ்டி வக்கீல் சுரபியை முன்னரே பார்த்திருப்பது, 'யதார்த்த மாக’ கருங்காலி போலீஸிடம் சுரபியின் பெற்றோர் குற்றம் சொல்வது, 'யதார்த்தமாக’ சுரபி இருப்பிடத்தை விக்ரம் பிரபு கண்டுபிடிப்பது என இது மாதிரி இத்தனை 'யதார்த்தம்’கள் சாத்தியமா?
அந்த இடங்களில் கொஞ்சம் புது மாதிரி யோசித்திருக்கலாம்!
- விகடன் விமர்சனக் குழு