நம்நாடு திரைப்படம் வெளியான தேதி :07/11/1969.
49 ஆண்டுகள் நிறைவு. விடுபட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i66.tinypic.com/vrc2vq.jpg
Printable View
நம்நாடு திரைப்படம் வெளியான தேதி :07/11/1969.
49 ஆண்டுகள் நிறைவு. விடுபட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i66.tinypic.com/vrc2vq.jpg
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கதாநாயகனாகநடிக்கத் தொடங்கியதிலிருந்து அவர் நடிப்புலகிலிருந்து விலகிய வரையிலும் அவரால் எந்தபடமும் வெளிவராமல் நின்று போனதில்லை. தான் கதாநாயகனாக நடிக்கின்ற படங்கள் எந்தக் காரணத்திற்காக வெளிவராமல் நின்றுப் போனாலும் அதற்கு தான் மட்டுமே காரணம் என்று திரையுலகில் பேசத் தொடங்கி விடுவார்கள் என்பதால் அந்த விஷயத்தில் மிகவும் கவனமாக செயல்படுவார்.
ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளும்போதே இயக்குநரால் படத்தை சரியாக இயக்க முடியுமா? தயாரிப்பாளரால் படத்தை எடுத்து முடித்து வெளியிட முடியுமா? போன்ற விஷயங்களை விசாரித்து தெரிந்துக்கொண்ட பிறகுதான் படத்தை ஏற்றுக் கொள்வார். சினிமாவில் நுழைந்து நடித்து வளர்ந்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தால்போதும் என்று ஆர்வக் கோளாறினால் ஏற்றுக்கொண்ட சில படங்கள் பூஜையோடும், சில நாட்கள் நடந்த படப்பிடிப்போடும் நின்று போயிருக்கின்றன.
அவர் முதன்முறையாக நடித்த 'சாயா' படமும் எடுத்துமுடித்து வெளிவராமல் போனது. 'அதிரூப அமராவதி' என்ற படமும் நடித்து முடித்து கொடுத்தும் வெளிவராமல் நின்றுபோனது. 'மாடிவீட்டு ஏழை' நடிகர் சந்திரபாபுவின் தவறான நடவடிக்கைகளால் நின்றுபோனது. ஆனால் எம்.ஜி.ஆர். நடித்த 1970ஆம் ஆண்டு வெளிவந்த 'தலைவன்' படம் நீண்ட மாதங்கள் முடிக்க முடியாமல் இழுத்துக் கொண்டே போனது. பி.ஏ. தாமஸ் தனது தாமஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து புதிய இயக்குநர் சிங்கமுத்துவுடன் இணைந்து இயக்கினார். இதில் எம்.ஜி.ஆர்.வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தார். இவருக்கு ஜோடியாக 'கண்ணன் என் காதலன்' (1968) படத்திற்கு பிறகு வாணிஸ்ரீ இணைந்து நடித்தார்.
இவர்களுடன் எஸ்.ஏ.அசோகன், எம்.என்.நம்பியார், எஸ்.வி.ராமதாஸ், ஒ.ஏ.கே.தேவர், நாகேஷ், ஜோதிலட்சுமி, மனோரமா, சி.எஸ்.பாண்டியன், திருச்சி சௌந்தர்ராஜன் ஆகியோர் நடித்திருந்தனர். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைக்க, பாடல்களை கவிஞர் வாலி எழுதியிருந்தார். வசனம் ஆர்.கே.சண்முகம், ஒளிப்பதிவு பி.எல்.நாகப்பா, சண்டைப்பயிற்சி மாடக்குளம் அழகிரிசாமி. கருப்பு வெள்ளை படத்திலிருந்து கலருக்கு மாறிவிட்ட காலம் அது.
எம்.ஜி.ஆரின் 'ரகசிய போலிஸ் 115' (1968), 'குடியிருந்த கோயில்' (1968), 100வது படமான 'ஒளிவிளக்கு' (1968), 'அடிமைப் பெண்' (1969), 'நம்நாடு' (1969) போன்ற படங்கள் கலரில் எடுத்து முடிக்கப்பட்டு வெளியாகி பெரும் வெற்றி கண்டன. 'தலைவன்' (1970) படம் மட்டும் எடுத்து முடிக்கவும் முடியாமல் வெளியிடவும் முடியாமல் கருப்பு வெள்ளையில் சிக்கிக் கொண்டது. அதன்பிறகு எடுக்கப்பட்ட படங்களான 'என் அண்ணன்' (1970), 'மாட்டுக்கார வேலன்' (1970), 'எங்கள் தங்கம்' (1970), 'தேடி வந்த மாப்பிள்ளை' (1970) ஆகிய படங்கள் கலரில் வெளி வந்தன.
'ஒரு தாய் மக்கள்' (1971), 'அன்னமிட்ட கை' (1972) போன்ற படங்கள் கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டதால் 'தலைவன்' படத்தையும் கருப்பு வெள்ளையிலேயே எடுத்தனர். ஆனால் பி.ஏ.தாமஸ் எவ்வளவோ முயற்சி செய்தும் படத்தை முடித்து வெளியிட முடியாமல் போனது. இந்த தாமதத்துக்கு எம்.ஜி.ஆர் எந்த வகையிலும் காரணமல்ல, தயாரிப்பாளர் பி.ஏ.தாமஸும் காரணமல்ல, பைனான்ஸ் பிரச்சனையும் இல்லை. ஆனால் 'தலைவன்' படத்தை எடுத்து முடிக்க முடியாமலும் வெளிட முடியாமலும் திணறிக் கொண்டிருந்தார்கள்.
எம்.ஜி.ஆர். சரியாகக் கால்ஷீட் கொடுக்காததால் படத்தை முடிக்க முடியாமல் தயாரிப்பாளர் தவிப்பு, தயாரிப்பாளரிடம் பணம் இல்லாததால் பைனான்ஸ் கேட்டு அலைந்துக் கொண்டிருக்கிறார் என்று பத்திரிகைகளில் செய்திகள் வந்து கொண்டிருந்தன. இதையறிந்த எம்.ஜி.ஆர். தயாரிப்பாளரை நேரில் அழைத்துப் பேசினார். "என்ன பிரச்சனை? ஏன் படப்பிடிப்புகளை முடித்து படத்தை வெளியிட முயற்சி செய்ய மாட்டேங்கறீங்க? ஏதாவது பைனான்ஸ் பிராப்ளமா? நான் ஏற்பாடு செய்து கொடுக்கிறேன்," என்று கேட்டார்.
"பைனான்ஸ் பிராப்ளம் ஒன்றுமில்லை. என்ன முயற்சி செய்தாலும் ஏதாவது ஒரு தடை வந்துக் கொண்டிருக்கிறது. அதுதான் ஏன்னு புரியவில்லை," என்று தயாரிப்பாளர் தாமஸ் தன்னிலை விளக்கம் கொடுத்தார். அதன் பிறகு எம்.ஜி.ஆர் 'தலைவன்' படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பை முடித்து வெளியிடுவதற்கான பொறுப்பைதானே ஏற்றுக் கொண்டார். தயாரிப்பாளரும் படப்பிடிப்பிற்கான மொத்த செலவுக்கான பணத்தை எம்.ஜி.ஆரிடமே ஒப்படைத்தார்.
எம்.ஜி.ஆரும் கவனமாக சுறுசுறுப்பாகச் செயல்பட்டார். ஆனாலும் ஏதாவதொரு தடை வந்துக் கொணடிருந்தது. 'என்ன இது... ஒரே மர்மமாக உள்ளதே' என யோசிக்கத் தொடங்கினார் எம்ஜிஆர். படத்தின் வசனகர்த்தா ஆர்கே சண்முகத்தை வரவழைத்து படத்தின் மொத்த வசன காட்சிகளையும் படித்துக் காட்டச் சொன்னார். ஆர்.கே.சண்முகமும் படத்தின் முழு வசனத்தையம் படித்துக் காட்டினார். அதில் தடை ஏற்படுகின்ற வகையில் எந்தக் காட்சியும், வசனமும் இல்லை. அதன்பிறகு படத்தின் பாடலாசிரியர் கவிஞர் வாலியை வரவழைத்து படத்தின் தாமதம் குறித்துப் பேசினார். அதற்கு கவிஞர் வாலி படத்தின் தயாரிப்பாளர் பெயரும், நிறுவனத்தின் பெயரும்தான் அதற்கு காரணம் என்று கூறிவிட்டார். தயாரிப்பாளர் தாமஸ், தாமஸ் பிக்சர்ஸ். படம் 'தாமஸ'மாவதற்கு இதுதான் காரணம் என்றார்.
எம்.ஜி.ஆர்.விழுந்து விழுந்து சிரித்துவிட்டு, "ஓ... இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்," என்று சொன்னார். "இந்தப் படத்திற்காக நீங்கள் எழுதிய பாடல் வரிகளைச் சொல்லுங்கள் கேட்கலாம்," என்றார் எம்.ஜி.ஆர். வாலி தன் பாடல் வரிகளை சொல்லத் தொடங்கினார். 'அறிவுக்கு வேலைக் கொடு...', 'பாய் விரித்தது பருவம்...', 'ஓடையிலே ஒரு தாமரைப்பூ...', 'நீராழி மண்டபத்தில்...' என்று பாடல் வாரிகளைச் சொன்னார்.
குறுக்கிட்ட எம்.ஜி.ஆர், "நீராழி மண்டபத்தில்...' பாடல் வரிகளை விளக்கமாகச் சொல்லச் சொன்னார். 'நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்திவரும் நள்ளிரவில் தலைவன் வாராமல் காத்திருந்தாள் பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள், நாடாளும் மன்னவனின் இதயத்தின் சிறையில் தனிமை தாளாமல் தவித்திருந்தாள்...' என்று வாலி பாடல் வரிகளைச் சொல்லி முடிப்பதற்குள் எம்.ஜி.ஆர். குறுக்கிட்டார். "போதும் போதும் நிறுத்துங்க... இந்தப் பாடலில் உள்ள 'தலைவன் வாராமல் காத்திருந்தாள் பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள் தனிமை தாளாமல் தவித்திருந்தாள்...' இந்த வரிகளில் உள்ள அறச் சொல்தான் படத்தை இந்தப் பாடுபடுத்தியிருக்கிறது. எப்பொழுதுமே என்படங்களில் வசனத்திலோ, பாடல்களிலோ இது போன்ற அறச்சொல் வராமல் பார்த்து கொள்வேன், என் படம் பார்க்கின்றவர்களுக்கு நம்பிக்கையூட்டுகின்ற வகையில் தான் வசனமும் இருக்கும் பாடல்களும் இருக்கும்.
பொதுவாக யாரேடும் பேசும்போதோ, பாடும்போதோ, பாடல் எழுதும்போதோ, இதுபோன்ற அறச்சொல் வந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சிலநேரங்களில் நமது வாழ்க்கையையே கூடபாதித்துவிடும்... ஏனென்றால் தமிழில் ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் என்பார்கள்," என்றார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர்.சொன்னது உண்மை. தமிழின் வல்லமை, மகத்துவம் அப்படி.
பல திரையுலகக் கலைஞர்களின் வாழ்க்கையையே இதுபோன்ற அறச்சொற்கள் பாதித்திருக்கின்றன என்பது உண்மைதான். இப்படித்தான் எம்.கே.தியாகராஜபாகவதர் தான் நடித்த ஒரு படத்தில் 'பாடமாட்டேன் இனி பாடமாட்டேன் அப்பனை (சிவன்) பாடிய வாயால் இந்த சுப்பனை (முருகன்) பாடமாட்டேன் என்று பாடினார். இதேபோன்று நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி அப்படித்தான் ஒரு படத்தில் 'பாட மாட்டேன் இனி பாட மாட்டேன் வாய்திறந்து இனி பாடமாட்டேன்' என்று ஒரு படத்தில் பாடி நடித்தார். அதன்பிற்கு அவர் எந்தப்படத்திலும் பாடி நடிக்கவில்லை. அத்தோடு இந்த மாபெரும் கலைஞர்களின் கலையுலகப் பயணமும் முடிந்தது. எம்ஜிஆர் சொன்னது போலவே, அந்த அறச் சொற்கள் மாற்றப்பட்ட பிறகு, 'தலைவன்' பட வேலைகள் பரபரவென தடையின்றி முடிவடைந்தன. 'தலைவன்' படத்தை எம்.ஜி.ஆரே வெளியிட்டார்.
Courtesy - net
தமிழ் சினிமாவில் பல முதன்மைகளை, புதுமைகளை நிகழ்த்தியவை எம்ஜிஆர் படங்கள்.
* எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் ஆங்கிலத்தில் டைட்டில் கார்டு காட்டப்பபட்ட முதல் திரைப்படம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்'.
* எம்.ஜி.ஆர். நடித்து தரக்குறைவான பத்திகைகளின் போக்குக்கு எதிர்த்து எடுக்கப்பட்டு வெளி வந்தப் படம் சரவணா பிலிம்ஸ் 'சந்திரோதயம்'. அன்றைய சூழலில் ஒரு முன்னணிப் பத்திரிகையை முற்றாக எதிர்த்து நடித்தார் எம்ஜிஆர்.
* எம்.ஜி.ஆர். நடித்து காளைமாட்டுடன் மோதும் (ஜல்லிக்கட்டு) காட்சியை முதன்முதலாக தமிழ் சினிமாவில் காட்டிய படம் 'தாய்க்குப்பின் தாரம்'.
* எம்.ஜி.ஆர். நடித்து தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெருமையை திரைப்படம் மூலம் உலகுக்கு தெரிவித்த படம் கிருஷ்ணா பிக்சர்ஸ் தயாரித்த 'மதுரை வீரன்'.
* எம்.ஜி.ஆர். நடித்து புலியுடன் மோதும் சண்டைக் காட்சியை முதன்முதலாக திரைப்படமாக்கப்பட்டு வெளிவந்த படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ் தயாரித்த 'குலேபகாவலி'.
* எம்.ஜி.ஆர். நடித்து சண்டைக் காட்சியின்போது 350 பவுண்ட் எடைக்கொண்ட சண்டை நடிகரை அலக்காக தூக்கி நிறுத்தி சண்டை காட்சியில் சாதனைப் புரிந்த படம் ஏவிஎம்மின் 'அன்பேவா'.
* எம்.ஜி.ஆர். நடித்து கிராமங்களில் நடக்கும் மாட்டு வண்டிபோட்டியை முதன் முதலில் திரைப்படத்தில் காட்டிய படம் ஆர்.ஆர்.பிக்சர்ஸ தயாரித்த '.குடும்பத்தலைவன்
* எம்.ஜி.ஆர். நடித்து முதன்முறையாக யோகா பயிற்சியை படத்தின் மூலம் மக்களுக்கு சொல்லிக் கொடுக்கும் காட்சி இடம்பெற்ற படம், தாமஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த 'தலைவன்'.
* எம்.ஜி.ஆர். உடற்பயிற்சி ஆசிரியராக நடித்து உடல் வளர்ச்சிக்கு தேவையான அனுகு முறையை மாணவர்களுக்கு சொல்லித் தரும் காட்சியை முதன் முதலாக படமாக்கப்பப்பட்ட படம் 'ஆனந்தஜோதி', 'பணம் படைத்தவன்'.
எம்.ஜி.ஆர். நடித்து முதன்முதலாக கிராமத்து காட்சியும், நகரத்து காட்சியையும் இணைத்து கதை அமைத்து திரைப்படமாக வெளிவந்த படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ் 'பெரிய இடத்துப் பெண்'.
எம்.ஜி.ஆர். நடித்து பேருந்தில் பணியாற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட படம் தேவர் பிலிம்ஸ் 'தொழிலாளி'.
எம்.ஜி.ஆர். நடித்து மீனவ மக்களின் போராட்ட வாழ்க்கையை முழுமையாக படமாக்கப்பட்டு வெளிவந்து வெற்றிப்பெற்ற படம் சரவணா பிலிம்ஸ் 'படகோட்டி'.
எம்.ஜி.ஆர். நடித்து ஓய்வில்லாத ஒரு பிரபலமான தொழிலதிபரின் காதல் கதையை முழுமையாக முதன்முறையாக படமாக்கப்பட்ட படம் ஏவிஎமின் 'அன்பே வா'.
எம்.ஜி.ஆர். நடித்து பம்பாய் நகரில் முழுமையாக படமாக்கப்பட்டு வெளிவந்த படம் ராகவன் புரொடக்ஷன்ஸ் 'சபாஷ் மாப்பிள்ளே'.
எம்.ஜி.ஆர். நடித்து ரிக்ஷாவில் அமர்ந்தபடியே சிலம்பு சண்டை போடும் காட்சியை தமிழ் சினிமாவிலேயே முதன்முறையாக எடுக்கப்பட்ட படம் 'ரிக்ஷாக்காரன்'. இந்தப் படத்துக்காக இந்திய அரசங்கத்திடமிருந்து பாரத பட்டத்தைப் பெற்றார்.
எம்.ஜி.ஆர். படத்தில்தான் நடிகர் முத்துராமன் அறிமுகமானார். படம் 'அரசிளங்குமரி'.
எம்.ஜி.ஆர். படத்தில் அறிமுகமான இன்னொரு முக்கிய நடிகர் அசோகன். படம் 'பாக்தாத் திருடன்'.
எம்.ஜி.ஆர். நடித்து அண்ணன், தங்கை பாசத்தை முழுமையாக சினிமாவில் காட்டப்பட்டப்படம் முதல்படம் 'என் தங்கை'. எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் அதிக நாட்கள் (352) ஒடிய படமும் 'என் தங்கை' தான்.
எம்.ஜி.ஆர். நடித்து நல்ல கருத்துகளை வலியுறுத்தும் தலைப்பில் வெளிவந்த படங்கள்: 'நல்லவன் வாழ்வான்', 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தர்மம் தலைக்காக்கும்', 'பெற்றால் தான் பிள்ளையா', 'சிரித்து வாழ வேண்டும்', 'நீதிக்குத் தலைவணங்கு'.
எம்.ஜி.ஆருடன் இணைந்து 9 கதாநாயகிகள் நடித்த படம் 'நவரத்னம்'. தமிழில் இதுவும் ஒரு 'முதல்முதலாக'தான்.
எம்.ஜி.ஆர். நடித்து கிழக்கு ஜெர்மன், எகிப்து, துருக்கி, இஸ்ரேல் போன்ற நாடுகளில் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப் படம் 'நாடோடி மன்னன்' (1958). இந்தப் படம் வெளிவந்த போது ரிசர்வேஷனிலும் சாதனைப் புரிந்தது.
எம்.ஜி.ஆர். நடித்து, ஈரான் நாட்டு படவிழா, மாஸ்கோ படவிழா, சர்வதேச படவிழா தாஷ்கண்ட் படவிழா, கோவா படவிழா என்று பல விழாக்களில் கலந்துக் கொண்ட முதல் தமிழ்ப்படம் சத்யா மூவிஸ் 'இதயக்கனி'. இந்தப் படத்தின் 100 நாள் வெற்றி விழா ஆந்திரா முதல்வர் என்.டி.ராமாராவ் தலைமையில் நடந்தது (அப்போது அவர் முதல்வராகவில்லை. எம்ஜிஆருக்குப் பிறகுதான் அவர் அரசியலுக்கு வந்தார்).
எம்.ஜி.ஆர். நடித்து சென்னை சத்யம் திரையரங்கில் ஓடி 100 NAL விழா கொண்டாடிய முதல் தமிழ்ப் படம் 'இதயக்கனி'.
எம்.ஜி.ஆர். நடித்த 'நீரும் நெருப்பும்' படத்திற்காக நடந்த ரிசர்வேஷன் கூட்டத்தை கட்டுப்படுத்துவற்காக குதிரைப்படை வரவழைக்கப்பட்டது, தமிழ் சினிமாவில் முதல்முறை நடந்த அதிசயம்.
எம்.ஜி.ஆர். அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு வயோதிகர் வேடத்தில் ஒருசில காட்சிகளில் நடித்த படங்கள் 'மலைக்கள்ளன்', 'குலேபகாவலி', 'பாக்தாத் திருடன்', 'படகோட்டி'.
அன்றைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். நடித்து விஞ்ஞான அடிப்படையில் உருவான கதையை படமாக்கப்பட்ட படங்கள் 'கலையரசி', 'உலகம் சுற்றும் வாலிபன்'. இந்த ஜானரில் வெளிவந்த முதல் தமிழ்ப் படம் என்ற பெருமை கலையரசிக்கே.
எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளி வந்த முதல் சமூகப்படம் 'திருடாதே'.
எம்.ஜி.ஆர். நடித்து தனது தாயாரின் பெயரில் சத்யா ராஜா பிலிம்ஸ் சார்பில் தயாரித்து, சகோதரர் எம்.ஜி. சக்கரபாணியை இயக்குநராகப் பணியாற்ற வைத்த படம் 'அரசக் கட்டளை'.
எம்.ஜி.ஆர். நடித்து பொங்கல் திருநாளன்று வெளிவந்து வெற்றிப்பெற்றப் படங்கள் 'அலிபாபாவும் 40 திருடர்களும்', 'சக்கரவத்தி திருமகள்', 'அரசிளங்குமரி', 'ராணி சம்யுக்தா', 'பணத்தோட்டம்', 'வேட்டைக்காரன்', 'எங்க வீட்டுப் பிள்ளை', 'அன்பேவா', 'தாய்க்குத் தலைமகன்', 'ரகசிய போலீஸ் 115, 'மாட்டுக்காரவேலன்', 'மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியன்'.
எம்.ஜி.ஆர். நடித்த திகில், மர்மம், கொலை, போன்ற காட்சிகளை சித்தரித்து எடுக்கப்பட்ட படங்கள் 'தர்மம் தலைகாக்கும்', 'என் கடமை', 'தாழம்பூ.
எம்.ஜி.ஆர். நடித்து காட்டின் பின்னணியில் எடுக்கப்பட்ட படங்கள் 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தாயைக்காத்ததனயன்', 'வேட்டைக்காரன்'.
எம்.ஜி.ஆர். சீர்காழியில் நடந்த 'அட்வகேட் அமரன்' நாடகத்தில் நடித்த போது கால் முறிந்து பின் குணமாகி மீண்டும் வந்து நடித்து கொடுத்தப் படம் 'தாய் மகளுக்கு கட்டிய தாலி'.
எம்.ஜி.ஆர். நடித்து கோவா கடற்கரையில் படமாக்கப்பட்ட படங்கள் 'நாடோடி மன்னன்', 'ஆயிரத்தில் ஒருவன்', கேரளா கடற்கரையில் முழுமையாக படமாக்கப்பட்ட படம் 'படகோட்டி'.
எம்.ஜி.ஆர். முதன்முதலில் வண்ணத்தில் நடித்து கொடுத்த படங்களும், நிறுவனங்களும் : 'அலிபாபாவும் 40 திருடர்களும்' - மாடர்ன் தியேட்டர்ஸ், 'படகோட்டி' - சரவணா பிலிம்ஸ், 'எங்கவீட்டுப் பிள்ளை' - விஜயா வாஹினி, 'ஆயிரத்தில் ஒருவன்' - பத்மினி பிக்சர்ஸ், 'அன்பேவா' - ஏவிஎம், 'பறக்கும் பாவை' - ஆர்.ஆர்.பிக்சர்ஸ் (டிஆர் ராமண்ணா), 'ஒளிவிளக்கு' - ஜெமினி பிக்சர்ஸ், 'நல்ல நேரம்' - தேவர் பிலிம்ஸ்.
எம்.ஜி.ஆர். வில்லனாக நடித்த படங்கள் : 'சாலிவாகனன்', 'பணக்காரி', 'மாயா மச்சீந்திரா'. 'சாலிவாகனன் படத்தில் ரஞ்சன் கதாநாயகனாக நடித்தார். 'பணக்காரி' படத்தில் வி.நாகையா கதாநாயகனாக நடித்தார்.
எம்.ஜி.ஆர். நடித்து விளம்பரப்படுத்தப்பட்டும், பூஜைபோடப்பட்டும் நின்று போன படங்களின் பட்டியலும் கொஞ்சம் பெரிதுதான்.
'சாயா', 'குமாரதேவன்', 'வாழப் பிறந்தவன்', 'பாகன் மகன்', 'மக்கள் என் பக்கம்', 'மறுபிறவி', 'தந்தையும் மகனும்', 'வெள்ளிக்கிழமை', 'தேனாற்றங்கரை', 'அன்று சிந்திய ரத்தம்', ' இன்ப நிலா', 'பரமபிதா', 'ஏசுநாதர்', 'நாடோடியின் மகன்', 'கேரளக் கன்னி', 'கேப்டன் ராஜா', 'வேலு தேவன்', 'உன்னை விடமாட்டேன்', 'புரட்சிப் பித்தன்', 'சமூகமே நான் உனக்கே சொந்தம்', 'தியாகத்தின் வெற்றி', 'எல்லைக் காவலன்', 'சிலம்புக்குகை', 'மலைநாட்டு இளரவசன்', 'சிரிக்கும் சிலை, 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு, இன்பக் கனவு', 'நானும் ஒரு தொழிலாளி'.
Ccourtesy net
எம்ஜிஆரின் 'மனவலிமை''
1969ல் திமுக ஆட்சி நடைபெற்ற நேரத்தில் திமுக கட்சியின் பொருளாளராகவும் சட்ட மன்ற உறுப்பினராகவும் இருந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த படமான ''நம்நாடு '' அரசியல் படமாக தீபாவளிக்கு வெளிவந்தது .
படம் முழுவதும் அரசியல் . நாட்டில் நடந்த அரசியல் கொலைகள் , கொள்ளைகள் லஞ்சம் அநீதியான தலைவர்களின் போக்கு என்று தைரியமாக எக்காலத்திற்கும் பொருத்தமான படமாக மக்களுக்கு தந்தார் .
எம்ஜிஆரின் இந்த தைரியம் எந்த ஒரு நடிகருக்கும் என்றுமே வந்தது இல்லை . இனி வரப்போவதும் இல்லை .
மக்களின் அன்றாட பிரச்சனைகளை முன் வைத்து எடுத்த படம் நம்நாடு
அனல் பறக்கும் வசனங்கள் படத்திற்கு பெருமை சேர்த்தது .
அருமையான பாடல்கள் . எம்ஜிஆரின் யதார்த்தமான நடிப்பு பிரமாதம்
நம்நாடு - மக்களின் ஏகோபித்த பாராட்டை பெற்று வசூலில் முதலிடம் பெற்றது
புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் வழியில் விஜய் செல்கிறார் என ரசிகர்கள் சொல்கின்றனர். விஜய் போல் வேறு எந்த நடிகரும் சமீப காலங்களில் சமூகப் பிரச்சனையை பேசியது இல்லை என்றும், எம்ஜிஆரைப் போலவே திரைப்படத்தில் சமூக பிரச்சனையை கையாளுவதாகத் தெரிகிறது. அவர் அரசியலுக்கு வருவதற்காக இவ்வாறு செய்கிறார் என்று பதிவிட்டுள்ளனர்.
Sarkaar comments
சர்கார் அமைக்க எம்ஜிஆரின் ரூட்டில் செல்லும் விஜய்! ட்விட்டரில் குவியும் பாராட்டுக்கள்!
காலத்தை வென்ற காவிய நாயகன் திரு. எம்.ஜி.இராமச்சந்திரன்
பாரதரத்னா திரு. M.G.இராமச்சந்திரன் அவர்கள் மீது எனக்கு நிறைந்த அபிமானமும் ஈடுபாடும் உண்டு. அவரை ஒரு நடிகராக பார்ப்பதைவிட காலத்தை வென்ற மக்களைக் கவர்ந்த மாபெரும் காவிய நாயகனாகவே நான் பார்க்கிறேன்.
பாரதரத்னா திரு.M.G.இராமச்சந்திரன் அவர்களின் நூற்றாண்டையொட்டி அவரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள சமூக வலையில் ஒரு தளத்தை உருவாக்க உள்ளேன். அதில் எனது மனதிற்குப் பட்டதை உள்ளது உள்ளபடி பதிவு செய்ய உள்ளேன். நிறைகள் மட்டுமன்றி குறைகளும் இதில் பதிவு செய்யப்படலாம். எனது பதிவுகள் யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல என்பதை இங்கே தெளிவு படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.
இன்றைய சூழ்நிலையில் அரசியல் மற்றும் பொது வாழ்வில் சிறப்பாக நல்லதொரு பேரும் புகழுடனும் வாழ்ந்து காட்டிய தலைவர்கள் மற்றும் மகான்களைப்பற்றி பேசவே தகுதியற்றவர்களெல்லாம்.
1) அவர்களைப் பற்றி இல்லாதது பொல்லாததை எல்லாம் பேசி எல்லாம் தெரிந்தது போல் வேடமிட்டு அவர்களின் பெயரை மாசு படுத்த நினைக்கினறனர் அல்லது.
2) அவர்களின் பெயரைத் தனது சொந்த லாபங்களுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.
இன்றைய இளைய தலைமுறையினர் உண்மை நிலவரம் அறிய வேண்டும் விபரமற்ற வீணர்களின் வீண்வாதங்களால் தடம் புரண்டுவிடக்கூடாது அரசியல்வாதிகள் தன்னலமற்ற ஒப்புயர்வற்ற தலைவர்கள் வழி
courtesy net
#இலவசம்
#தெரியாதவர்கள் #தெரிந்து #கொள்ளட்டும்
பள்ளியில் சத்துணவு இலவசம்,
நோட்டு புக்,
பை இலவசம்,
ஏன் நாம் பலர் கற்ற கல்வியே இலவசம் தான்..
விவசாய மின்சாரம் இலவசம்,
இன்னும் மானியம் பல
ரேஷன் அரிசி இலவசம்
அது இல்லையென்றால் நாட்டில் இன்று பலர் பட்டினி..
முதலில் கொடுத்த இலவசம் கல்வி
பள்ளி மாணவர்களுக்கு செருப்பு இலவசம்
சிலருக்கு செருப்பே அப்ப தான்யா கிடைத்தது காரணம் ஒன்று வறுமை இன்னென்று பல ஒடுக்கப்பட்ட மக்கள் செருப்பு அணிய கூட இந்த சமூகம் விடவில்லை. அதை தகர்த்தது இலவசம்
இலவச பள்ளி சீருடை, பஸ் பாஸ் சாமானியனையும் படிக்க வைத்த இலவசம்..
அரசாங்க ஆஸ்பத்திரியில் சிகிச்சை இலவசம்
சில மாநிலங்களில் 5ரூபாய் என்று குறைந்தபட்ச கட்டணம் உண்டு. நம் தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனையில் அனைத்தும் இலவசம்..
மகளிருக்கு கொடுக்கப்படும் நிதி உதவிகள் இலவசம். எத்தனை பெண்கள் திருமணம் நடைப்பெற இலவச நிதி உதவியுள்ளது...
டிவி, மிக்சி, கிரைண்டர் எல்லாம் அவன் பரம்பரையே பார்த்தது இல்லை. அதை அவனுக்கு வழங்கியது இலவசம்..
பொத்தாம் பொதுவாக இலவசங்களை குறைகூறி செல்வது சரியில்லை.
கூடி வாழ்ந்த இடம் குப்பம், சேர்ந்து வாழ்ந்த இடம் சேரி, மீனவர் வாழ்விடம் பட்டினம், பாக்கம் எனவும் அழைக்கப்படுகிறது. அப்படிப்பட்ட மீனவ, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தந்தது உங்கள் இலவசம் லிஸ்ட்டில் அடங்கும்.
இப்படி பாமரனை உயர்த்த அவனுக்கு உறைவிடம்,உணவு, கல்வி, உடை,சுகாதாரம் எல்லாம் இலவசமாக கொடுத்தது பெரிய பொருளாதார பின்னடைவு தரும் எனில் அதை ஏற்ப்போம். அது ஒன்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வரா கடனை விட பெரிய பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தப் போவதில்லை.
இளம் தலைமுறையினர் மத்தியில் இதுவரை எல்லாமே தவறு இனி தான் எல்லாத்தையும் மாத்தனும் என்றும்.இலவசம் ஒழிப்பு என்றும் கோஷம் பரப்பும் முன்,கார்ப்பரேட் கம்பெனிகளின் வரா கடனை வசூலிப்பது எப்படி என யோசியுங்கள்.
இலவசம் பிச்சை அல்ல.. அது வரிப்பணத்தில் எளியோரை எழுப்பி விடும் ஏணி....... இதயம் கருத்தில் கொண்டே அன்றே "தீர்க்கதரிசி" மக்கள் திலகம் இலவச திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தார்...
நண்பர்களே (மாற்று முகாம்), இப்போது வந்திருக்கும் சர்க்கார் படத்தில் 'கள்ள ஒட்டு' நிகழ்வை நினைவு படுத்தும் ஓர் காட்சியில் அவர்கள் அபிமான நடிகர் (.....சன்) ஒட்டயே போட்ட ஊர்.... என ஒரு காட்சி பெருமை படுத்தாமல், சிறுமை , வேதனை படுத்துவதாக அமைந்துள்ளது என பார்த்தவர் கூறினார்... இதை கண்டித்து அவர்கள் பக்கத்தில் மறுப்பு அல்லது கண்டனம் தெரிவுத்துளார்களா?!
முகநூல், வாட்ஸப்ப் போன்றவற்றில் மக்கள் திலகம் அபிமானிகள் கூட, குறைச்சல் இல்லாமல் சரியாக புள்ளி விபரங்கள் அளிக்கின்றனர்... ஆனால் ஒரு சில மாற்று முகாம் நடிகர் ரசிகர்கள் என சொல்லி கொள்பவர்கள் தப்பும், தவறாகவும் அவர்கள் படங்கள் ஓடிய நாட்களை பதிவு செய்து அவர்களுடைய நடிகர் மேல் தப்பான அபிபிராயத்தையே ஏற்படுத்துகின்றன என்பதை அவர்கள் உணர வில்லையோ?!.....
இந்து தமிழ் திசைToggle navigation
சிந்தனைக் களம் சிறப்புக் கட்டுரைகள்
அரசாங்கம் கொடுத்த மடிக்கணினி உதவியால்தான் நான் ஐஆர்எஸ் ஆனேன்: விஜய் - முருகதாஸ் சார்ஸ்!
62 8.76K Subscribe
Published : 09 Nov 2018 09:57 IST
Updated : 09 Nov 2018 13:50 IST
இலவசங்களை வெகுமக்கள் மயக்குத் திட்டங்கள் என வசைபாடுகிறார்கள். கல்விக்கடனில் படித்த எனக்கெல்லாம் கல்லூரிக் காலத்தில் ஒரு மடிக்கணினி எல்லாம் பெருங்கனவு. கணினி மையத்திலும், நண்பர்களிடம் கையேந்தியும்தான் அறிவுத்தேடலில் ஈடுபட முடிந்தது. மடிக்கணினி இல்லாமல் கைவலிக்க வலிக்க பொறியியல் பாடங்களைக் கையால் எழுதி மொழிபெயர்த்த வலிகளைப் போக்கியது - நீங்கள் இலவசம் என நகையாடுகிற அரசாங்க மடிக்கணினிதான். அதில் அத்தனை பாடங்கள், நூல்களைச் சேகரம் செய்து தந்திருந்தார்கள். அதன் உதவியோடுதான் என் குடிமைப்பணித் தேர்வு முயற்சிகள் சாத்தியமாகின.
“பெண்களுக்கு இலவச மருத்துவக் கல்வி, சென்னை மருத்துவக் கல்லூரிதான் தந்தது. அது இல்லாமல் போயிருந்தால் நானெல்லாம் மருத்துவமே படிக்க முடிந்திருக்காது” என மனநல மருத்துவத்தில் மகத்தான சாதனைகள் புரிந்த சாரதா மேனன் குறிப்பிட்டிருக்கிறார்.
பெண்களின் பொருளாதார விடுதலை, வேலைவாய்ப்பை இலவச மிதிவண்டிகள் எப்படியெல்லாம் அதிகரித்தன என்பது குறித்த தீர்க்கமான ஆய்வுகள் உண்டு. மட்டையடி அடிப்பவர்களுக்கு இவையெல்லாம் கண்ணில் படாது. அது இலவசம் அல்ல; சமூகக் கடமை. ஒவ்வொரு நகர்வுக்கும் ஆண்களைச் சார்ந்திருக்க வேண்டிய வேதனையிலிருந்து விடுதலை தந்த அரிய முன்னெடுப்பு மிதிவண்டிகள். உச்சிவெயில் தெரியாமல் உல்லாச மகிழுந்துகளில் வலம்வருகிறவர்களுக்கு இவை வெகுமக்கள் மயக்குத் திட்டங்களாக மட்டும் தெரிவதில் ஆச்சரியமென்ன!
சமூகத் தேர்வு எனப் பேராசிரியர் அமர்த்திய சென் குறிப்பிடும் மக்களுக்கான சரியான தேர்வுகள் தமிழ்நாட்டில் செயல்திறத்தோடு கொண்டுசேர்க்கப்படுவது ஒன்றும் விபத்தில்லை. பிரச்சினைகள் சார்ந்த தமிழக மக்களின் அணிதிரட்டல்கள் மிக முக்கியமான காரணம் என நரேந்திர சுப்ரமணியன், விவேக் சீனிவாசன் ஆகியோரின் ஆய்வுகள் நிறுவுகின்றன. இவற்றை 'ஓசி' எனக் கொச்சைப்படுத்துபவர்கள் தட்டையான பார்வை கொண்டவர்கள்.
பத்தாம் வகுப்பு முடித்தால் திருமண உதவித்தொகை என்பதால் கல்வி பெற்ற பெண்கள் பலருண்டு. வயிறு காயாமல் இருக்கப் பள்ளி நோக்கி வரவைத்தது இலவச மதிய உணவுத் திட்டம்தான். அதைச் சத்துணவு, முட்டை, வாழைப்பழம் என விரிவாக்கியது சமூக நீதி! புனிதம் கெடும் என்று அடிப்படைவாதிகள் முட்டுக்கட்டை போடுவதால், சத்துணவில் முட்டை கிடைக்க வழியில்லாமல் பல மாநிலங்களில் பழங்குடியின, ஏழைப் பிள்ளைகள் அல்லலுறுகிறார்கள். அந்த மாநிலங்களையும் தமிழகத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
இலவசங்கள் எல்லாம் இலவசங்கள் அல்ல. அவற்றின் அமலாக்கம், பயனாளிகள் சார்ந்த கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அவற்றை ஊழல், கேடு என்கிற அளவுக்குப் பேசுபவர்கள் கடந்த காலம் அறியாதவர்கள். ஒரு சீரியல் பார்க்க நவீனத் தீண்டாமையோடு யார் வீட்டு வாசலிலோ நின்ற வலியெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. பேருந்துக் கட்டணம் கட்டக் காசில்லாமல் நடந்தே பல மைல் தூரம் கடந்து படித்தோரின் கதை தெரியாது. ‘கவுன்சிலிங்குக்குக் கட்ட ஐயாயிரமா?’ என கையறு நிலையில் தவித்த குடும்பங்களில் முதல் தலைமுறைப் பட்டதாரிகள் எழுவது ஏன் என அறிவீர்களா? ஊழல் ஒழிப்பு என்கிற ஜிகினாத்தாளில் சுற்றி ‘நீங்கள் பிச்சைக்காரர்கள்’ எனத் தரப்படும் மசாலா அரைவேக்காடானது, அருவருப்பானது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., (ஆதரித்தார்).....
- பூ.கொ.சரவணன். .... Thanks Friends...
உலையில் அரிசியை வைத்து விட்டு அரிசி கிடைக்கும் என்று நம்பி. ஒருவர் வீட்டுக்குப்போகலாம்னா அது.புரட்சிநடிகர் எம் ஜி ஆர் அவர்களின் வீடுதான் இது புரட்சித்தலைவரின் சினிமாவையும் அரசியலையும் மட்டம்தட்டிய துக்ளக் பத்திரிகை ஆசிரியர் திரு சோ.. ராமசாமி சொன்னது தன்னை எதிர்ப்பவனும் புகழும்படிவாழ்ந்த உலகத்தின் எட்டாவதுவள்ளல் எம் ஜி ஆர் அவர்களின் வள்ளல்தன்மையில் அனைவருக்கும் இனிய காலைவணக்கம் மதுரை.எஸ் குமார்..... Thanks Friends...
ஆயிரத்தில் ஒருவன்!
-------------------------------------
லாவகமாக
நளினமாக!
உமது குத்து வாளை எடுத்துக் கொள்ளும்
ஓரே ஷாட் கேமரா மேன் ராமமூர்த்தியின் உறவினர் தியாகராஜன் என் நண்பர் கூறியது!
மக்கள் திலகத்தின் சண்டை காட்சிகளில் ஸ்டெப்ஸ் தப்பாது ஜாக்கிசான் கூறியது
நிதர்சனம் தானே!
வந்த வேலை
அதைத் தானே செய்து கொண்டிருக்கிறேன்
புரட்சி தலைவர் புகழ் பாடினால் என் உள்ளம்
புளகாங்கிதம் அடையுமே அதைத் தான் சொன்னேன்
அதைத் தான் செய்து கொண்டிருக்கிறேன்!
ஹயாத்!....... Thanks Friends...
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்து , இயக்குனர் ஸ்ரீதர் தயாரித்த படங்களிலேயே அதிக வசூல் சாதனை பெற்ற மாபெரும் வெற்றி படைப்பான
1974ம் ஆண்டில் வசூலில் முதலிடம் வகித்த "உரிமைக்குரல் " வெளியான நாள்
07/11/1974. 44 ஆண்டுகள் நிறைவு பெற்றது .
1974ம் ஆண்டில் இரண்டாம் வெளியீட்டில் 50 நாட்களுக்கும் மேலாக சுமார் 85 அரங்குகளில் வெற்றி கண்ட காவியம் .
சென்னை ஓடியன் , மகாராணியில் 106 நாட்கள், உமாவில் 100 நாட்கள் ,
நூர்ஜஹான் 50 நாட்கள்,ஓடியது .
மதுரை சினிப்ரியா 200 நாட்கள், மினிப்ரியா 29 நாட்கள், நெல்லை லட்சுமி -182 நாட்கள் கோவை கீதாலயா 150 நாட்கள் ஈரோடு ராயல் 155 நாட்கள்
சேலம் சங்கம் 127 நாட்கள் திருச்சி சென்ட்ரல் 114 நாட்கள் தஞ்சை யாகப்பா 105 நாட்கள் குடந்தை டைமண்ட் 105நாட்கள் பட்டுக்கோட்டை முருகையா 101 நாட்கள் காஞ்சி லட்சுமி 50 நாட்கள் ஓடியது
திருநெல்வேலி நகரில் இதுவரையில் எந்த திரைப்படமும் செய்யாத சாதனை
உரிமைக்குரல் 182 நாட்கள் ஓடிய சாதனை முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
http://i65.tinypic.com/2e1d8xf.jpg