s.These days office is bit boring.
Printable View
s.These days office is bit boring.
ஒரு டி.வி.சீரியலில் உலகமகா போர் மற்றும் சொதப்பல் கேரக்டரைப் பார்த்திருக்கிறீர்களா?. அரிய வாய்ப்பு. 'ஆபீஸ்' தொடரில் வரும் ராஜி என்ற கேரக்டர்தான். ஸ்ருதி (தென்றல் துளசி) இந்த கேரக்டரில் நடித்திருக்கிறார். சொதப்பல்னா சொதப்பல் அப்படி ஒரு சொதப்பல். அவளது காதலனாக வரும் கார்த்திக்கும் அப்படி ஒரு சொதப்பல் (என் பெயரைக் கெடுக்க இப்படி ஒரு ரோல்).
ராஜி தன் காதலைச் சொல்வதற்கே 130 எபிசோட்கள் முழுங்கி விட்டாள். இதற்கிடையில் கிராமத்திலிருக்கும் அவளது மீசக்கார அப்பன் வேறொரு அமெரிக்க மாப்பிள்ளைக்கு நிச்சயம் செய்து விடுகிறானாம். அதன்பிறகும் கார்த்திக்கை காதலிப்பாளாம். ஆனால் அதை வாய்விட்டு சொல்ல மாட்டாளாம். அதே சமயம் அவனை இன்னொருத்தி நாகரிகமான முறையில் தெரிவித்தால் எரிந்து விழுவாளாம். அதை வைத்து அவனை படாத பாடு படுத்துவாளாம். அதிலும் காதலர்கள் ரெண்டுபேரும் பக்கத்து பக்கத்து சீட்டில் உட்கார்ந்து கொண்டு பேசுவதையும், அவர்களிருவரும் இரவில் போனில் பேசிக்கொள்வதையும் பார்த்தால் / கேட்டால் 'இவ்வளவு கொடுமையான உலகத்தில் நாம் வாழத்தான் வேண்டுமா?' என்ற முடிவை எடுப்பீர்கள். அறுவைன்னா அறுவை, அப்படி ஒரு அறுவை.
இவர்களைவிட நகைச்சுவை பாத்திரங்களாக வரும் சேல்ஸ் டிபார்ட்மெண்ட்டைச் சேர்ந்த நான்கு கோமாளிகள் எவ்வளவோ மேல். அட்லீஸ்ட் சிரிக்க வைக்காவிட்டாலும், நம் பிரஷரை எகிற வைக்கவில்லை.
சரி, இந்த தொடரில் சுவையான பாத்திரங்களே இல்லையா?. இருக்கின்றன இரண்டே இரண்டு. ஒருவர் கட்-அன்ட்-ரைட் ஆபீசர் விஸ்வநாதன், இன்னொருவர் சூசன். ஒரு நேர்மையான, வாங்கும் சம்பளத்துக்கு ஒழுங்காக உழைக்கக்கூடிய, அடுத்தவர் பெர்சனல் மேட்டரில் தலையிடாத அருமையான (ஆனால் சற்று சிடுசிடு) கேரக்டர் விஸ்வநாதன். சூசனைப் பொருத்தவரை கார்த்திக்கை காதலிக்கும் இன்னொரு கேரக்டர். ராஜி போல சொதப்பாமல் நேரடியாக தன் காதலைத் தெரிவித்த டீசண்ட் கேரக்டர். ஏற்கெனவே திருமணமாகி டைவர்சானவள்.
தன் காதலை தெரிவிக்கும் முன் ராஜியை அழைத்து 'நீ கார்த்திக்கை காதலிக்கிறியா?' என்று கேட்டு அவள் 'இல்லையில்லை எங்களுக்குள் வெறும் பிரண்ட்ஷிப்தான்' (ஒம்மூஞ்சி) என்று சொன்னபிறகே தன் காதலை கார்த்திக்கிடம் சொன்னவள். அந்த கேணப்பயலும் உடனே மறுக்காமல் கல்லுளிமங்கன் ஆக இருந்து சூசன் மனதில் ஆசையை வளர்த்தவன்.
மீட்டிங் டேபிளில் ராஜி, கார்த்திக், லக்ஷ்மி, விஷ்ணு ஆகியோரை வைத்துக்கொண்டே தான் கார்த்திக்கை காதலிப்பதாக சூசன் பகிரங்கமாக சொன்னபோதும் இருவரும் 'ஜிஞ்சர் தின்ற மங்கி' போல இருந்தனரே தவிர மறுக்கவில்லை.
இப்போது என்னவோ ராஜிக்கு சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர ென்று ரோஷம் பொத்துக்கொண்டு வர, சூசனிடம் மோதுகிறாள். சூசன் தன் சித்து வேலைகளைத் துவங்கிவிட்டாள். அவளிடம் ராஜியும் கார்த்திக்கும் மாட்டிக்கொண்டு படும் பாட்டைக்காண காத்திருப்போம்.
என்னமோ இந்த சீரியலில் மட்டுமாவது வில்லி ஜெயித்தால் நன்றாக இருக்கும்.....
'ஆபீஸ்' தொடரில் ஆபீஸில் ராஜியும் கார்த்திக்கும் பக்கத்து பக்கத்து சீட்டில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதை பார்த்திருக்கிறீர்களா?. இதோ அந்த உரையாடல் (இந்த தொடருக்கு உரையாடல் எழுதுபவருக்கு நோபல் பரிசு சிபாரிசு செய்கிறேன்).
கார்த்திக் ஆரம்பிக்கிறான்.... ராஜி தொடர்கிறாள்.....
'என்ன?'
'என்ன?'
'என்ன பார்க்கிறே?'
'எப்போ பாத்தேன் ?'
இப்போ பத்தியே
'அப்படியா?'
'ஆமாம்'
'ஆமான்னா?'
'ஆமான்னா ஆமாம்தான்'
'சரி அதுகென்ன இப்போ?'
'எதுக்கு பார்த்தே?'
'அதான் பாக்கலைன்னு சொல்றேன்ல'
'இல்லே நீ பார்த்தே'
'சரி, பார்த்தேன்னே வச்சுக்குவோம்'
'எதுக்கு பார்த்தே'
'என்னது?'
'எதுக்கு பார்த்தேன்னு கேட்டேன்'
'சும்மா பார்த்தேன்'
'சும்மான்னா?'
'சும்மான்னா சும்மாதான்'
'அதான் எதுக்குன்னு கேக்கிறேன்'
'நான் உன்னைப் பார்க்க கூடாதா?'
'பாக்கக்கூடாதுன்னு நான் சொன்னேனா?'
'இல்லையே'
'அப்புறம் எதுக்கு'
'பாக்க கூடாத்துன்னா சொல்லிடு நான் பாக்கலை'
'உனக்கு இப்போ என்ன வேணும்?'
'இல்லே, பார்த்தா உனக்கு கோபம் வருதான்னு பார்த்தேன்'.
'அப்படீன்னா?'
'அப்படித்தான்'
'என்ன அப்படித்தான்?'
'அப்படித்தான்னா அப்படித்தான்'
விளம்பர இடைவேளை.
(ஐயய்யோ, டி.வி.யை உடைக்க கல்லெல்லாம் எடுக்காதீங்க. அது நம்ம வீட்டு டி.வி.ங்க. கூலாக ரிமோட்டை எடுத்து வேறு உருப்படியான சேனலுக்கு மாத்துங்க. விஜய் டி.வி.ப்ரோக்ராம் எல்லாமே நல்லா இருக்கும்னு சொல்லி சொல்லி திருஷ்டி பட்டுடுச்சு. அதற்கு திருஷ்டி பொட்டுதான் 'ஆபீஸ்' சீரியல்).
since Facebook is down, I am going to do the newsfeed for Super Singer here in Hub
This week's programme is Endrendum Raaja featuring a week-long of Ilaiyaraja songs.
Makapa and Bhavana are back as hosts.
Judges are Srinivas, Sujatha, Shailaja, TL Maharajan
Each contestant will sing two songs.
Sai Vignesh begins the week with Ilamai ennum poongkaatru from Pagalil Oru Iravu
voice is too soft and unable to match SPBala, but otherwise he is ok
orchestra seems to have been enhanced... I see at least 6 violinc
TLM - nallaa paaduneenga. only problem you closed your eyes and sang. SPB smiles throughout the song. Pramatham
Shailaja - could have been huskier. But still nice.
Sujatha - you really rocked
Srini - Very nice.
Singer Shrivarthini is here to share her experiences singing in Thiruvaasagam. Also she is singing in IR's shows.
Next contestant Soundarya sings en vaanile from Johnny (sung by Jency originally)
She begins well.... better diction than Jency :D
Soundarya's detractors can now give it a rest. Hes performance is superb! :thumbsup: