குருவை படமெடுக்கும் சிஷ்யர்.
http://i1087.photobucket.com/albums/...4b02c3c165.jpg
Printable View
குருவை படமெடுக்கும் சிஷ்யர்.
http://i1087.photobucket.com/albums/...4b02c3c165.jpg
'பலே பாண்டியா' ஆனந்த விகடன் விமர்சனம்
http://i1087.photobucket.com/albums/...570541eb8e.jpg
அன்புள்ள திரு. கோபால்,
எனது "எங்கே நிம்மதி" பாடல் ஆய்வைப் பாராட்டியதோடு மட்டுமல்லாமல், தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
பார்த்தசாரதி சார்,
இன்று தான் உங்களுடைய "எங்கே நிம்மதி" பாடல் பற்றிய திறனாய்வு படித்தேன் அற்புதம் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை . படித்தவுடன் என் மனதில் தோன்றிய உணர்வு என்னவென்றால் "தேவாரம் திருவாசகம் மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தம்" போன்றவை சம்பந்தர்,நாவுக்கரசர்,சுந்தரர்,மாணிக்கவாசகர்,பன்னி ரு ஆழ்வார் போன்றவர்களால் பாடப்பட்டு பின்னாளில் சேக்கிழார் அவர்களால் பெரிய புராணம் என்றும் நாத முனி அவர்களால் நாலாயிர திவ்ய பிரபந்தம் என்றும் தொகுக்கப்பட்டு பொருள் விளக்கத்துடன் வந்தது போல் நம்மவரின் பாடல் காட்சிகளின் தொகுப்பு ஒன்று (திரு பம்மலார் அவர்கள் முயற்சியினால் ) வெளி வருமா என்று ஒரு ஏக்கம் தோன்றி விட்டது .
தமிழின் சிறப்பு நடிகர் திலகம் என்றால் வார்த்தைகளின் சிறப்பு சாரதி சார் அவர்கள் என்றால் மிகை ஆகாது
ஊர் கூடி தேர் இழுப்போம்..
ஒவ்வொருவரும் தேவை..
வேண்டாம் பிரிவு நடிகர்திலகத்தின் இதயங்களே..
வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே!
http://www.youtube.com/watch?v=5PYAmWkBwc4
என்ன நடக்கிறது இங்கே?
இந்த தளத்தின் பதிவுகளால் கவரப்பட்டு,நானும் ஏதாவது எழுதலாமே எனும் ஆசையில் கடந்த ஏப்ரல மாதம் என் பெயர் மற்றும் விவரங்களைப்பதிவு செய்தேன்.ஏதோ அழைப்பு வரும் என நினைத்தால் மாதங்கள் ஆறு ஆகியும் ஒன்றையும் காணோம்.இத்தனைக்கும் இங்கு moderator என கருதப்படும் நபர்களுக்கு பிரத்யேக messages வேறு அனுப்பியும் ஒரு பலனும் இல்லை.சரி இது இந்திய அரசால் நடத்தப்படுகிறது போலும் என மனதை திடப்படுத்திக்கொள்ள,திடீரென நண்பர் கோபால்,பிரபு,முரளி,பார்த்தசாரதி அபயமளித்து என்னை ஒரு அங்கத்தினர் ஆக்கினர்.
உள்ளே வரும்போதே சில துவந்த யுத்தங்கள் நடைபெற்றுகொண்டிருந்தன.பெயர்கள் இங்கு தேவையில்லை.
Being a system dependent person,I found these things funny and indigestible.சரி நாம் நம் வேலையை செய்யலாம்
என ஆரம்பித்தேன்.எனக்கு மகாஸ்ரீஸ்ரீ உ.வே.சா. போல பரண் மீது ஏறி ஓலைச்சுவடிகளை தட்டியெடுத்து அதை பிரசுரிக்கும் மனப்பாங்கு இல்லை.நடிகர் திலகம் அவர்களின் சில சிறப்புகளை வேறொரு பரிமாணத்தில் காண்பிக்க ஆவலும் ஆர்வமும் கொண்டு, அதே மனப்பாங்குடன் எழுதி வந்த சில அங்கத்தினர்களுடன் அளவளாவி நட்பு பாராட்டி வந்தேன்.அதில் முக்கியமானவர் வனஜா.ஒரு சிறந்த நட்புணர்வோடும்,நகைச்சுவை உணர்வோடும் அவர் எல்லாரிடமும் பழகிய விதம என்னை கவர்ந்தது.
அப்பொழுது கோபால் அவர்களின் அந்த பதிவு வெளியாகியது.அதை திடீரென வாசு கடுமையாக எதிர்த்தபோது ,வனஜா இயல்பாக "அதில் ஒரு குற்றமும் இல்லையே?நம் நடிகர் திலகம் நடித்து வெளிவந்து நாம் எல்லாரும் பார்த்த ஒரு படக்காட்சியைத்தான் கோபால் விவரித்துள்ளார்?" என வினவியபோது,வாசுவின் பதில் மிக அநாகரீகமாக அமைந்து, வனஜாவை இந்த தளத்தை விட்டு வெளியேற வைத்தது.அது மிக சரியான முடிவு.
அதை தொடர்ந்து கோபாலும் தார்மீக பொறுப்பேற்று வெளியேறியுள்ளார்.அதுவும் சரியான முடிவே!
ஆனால் வாசுவும் வெளியேறப்போவதாக சொல்லியிருப்பது வியப்பாக இருக்கிறது.அவர் தான் எழுதிய பதிவிற்கு வனஜாவிடம் வருந்தியிருந்தாலே போதுமே! யாரும் வெளியேற வேண்டாமே!
சரி ஒரு பதிவு எதாவது ஒரு காரணத்திற்காக ஒரு அங்கத்தினருக்கு பிடிக்கவில்லை என வைத்து கொள்வோம்.
அப்பொழுது அவர் செய்ய வேண்டியதுதான் என்ன? சற்று யோசிப்போம்.
தொடர்கிறேன்..
என்ன நடக்கிறது இங்கே?
தொடர்கிறேன்..
அவர் மறுபதிவு ஒன்றை இட்டு தன் எதிர்ப்பை தெரிவிக்கலாம்.
அதை moderators க்கும் அனுப்பி அந்த ஆட்சேபகரமான பதிவை நீக்கும்படி வலியுறுத்தலாம்.
இதற்கான வழிமுறைகள் இங்கு தற்போது உள்ளனவா எனத்தெரியவில்லை.
அதை உடனடியாக அமல படுத்த வேண்டும்.
ஆனால் வாசு செய்தது moral policing வேலை..நம் பஜ்ரங் தால் செய்வதுபோல தானே கோதாவில் இறங்கி சரி செய்யப்பார்த்தது.அது மிகத்தவறான அணுகுமுறை.நாளை நானே "கப்பலோட்டிய தமிழன் படத்தில் சில காட்சிகளில் சுப்பையா நடிப்பு தலைவர் நடிப்பையும் விஞ்சியது" என்று எழுதினால்.."ஏண்டா கண்பத்துன்னுபேர வச்சுகினுகிரே.அத்தனையுமா குருடு?"என ஒரு அன்பர் பதில் எழுதினால்?
முடிவாக moderators களுக்கு ஒரு வேண்டுகோள்..
போஸ்ட் எண் 1907 ஐப்படியுங்கள்.
நீங்கள் வாசு செய்தது சரி என நினைத்தால் அவரை மீண்டும் பதிவிட அழையுங்கள்.வனஜாவும் கோபாலும் வருவதும் வராததும் அவர்கள் இஷ்டம்.
அதற்கு மாறாக நீங்கள் வாசு செய்தது தவறு என நினைத்தால்அதை இங்கு பதிவு செய்து, வனஜா & கோபாலை மீண்டும் வர அழைக்கவும்.அப்படி வாசுவும் திரும்ப வர வேண்டுமென்றால் அவர் மேற்கண்ட தன் பதிவுக்கு வனஜா விடம் வருத்தம் தெரிவித்த பிறகே அனுமதிக்க வேண்டும்.
உங்கள் முடிவிற்கு (வெளியிலிருந்து) காத்திருப்பேன்.
நன்றி.
அனைவருக்கும்
நேருக்கு நேர் பேசுவதிலே 40 சதமே சொல்வழி கேட்பவர் மனம் சேரும்..
மீதி எல்லாம் உடல்மொழி, குரல் பாவம்.
இவைதான் பிரதான தொடர்பு சாதனங்கள்.
தொலைபேசியில் பேசினால் 30 சதத்துக்கும் குறைவாய்த்தான் சேரும்.
அதனால்தான் தொலைபேசியில் பேசும்போதும்
மகிழ்ச்சி என்றால் முகம் மலர்ந்தபடி பேசினால் கேட்பவர்க்கு அந்த உணர்வு கொஞ்சம் சேரும்..
சரி, எழுத்தால் எத்தனை சதம் சேர்ப்பிக்க முடியும்?
அதுவும் ஒரு நிமிட எதிர்வினைப் பதிவில்..
ஒரு வரி சொல்லாடல் பதிவில்..
புரிந்துகொள்ளப்படாமைக்கும்
தவறாக புரிந்துகொள்ளப்படுதலுக்குமான
Recipe -- அவசர எழுத்தில் இயற்கையாகவே இருக்கிறது.
நேற்று நடந்தவை எழுத்துச் சிதறல்கள்..
நம் அனைவரின் மனமும் சிவாஜி பாசம் என்ற பந்தத்தால் பிணைக்கப்பட்டன அல்லவா?
சம்பந்தப்பட்ட அனைவருமே ஒருவரை ஒருவர் அனுசரித்து, புரிய முயன்று மீண்டும் வாருங்கள் என அழைக்கிறேன்..
தீர்ப்புகள் அல்ல.. தீர்வுகள் போதும் நட்புக்குள்.. குடும்பத்துள்..
டியர் கண்பத்,
நான் இந்த விவாதங்களில் ஈடுபட வேண்டாம் என்று தான் இருக்கிறேன். வாசு மேல் உள்ள கருத்து வேற்றுமையில் என் பெயரையும் இழுத்து திரியை நாங்கள் எங்கள் பாணியில் கொண்டு செல்ல விழைவதாக நண்பர் எழுதியிருக்கிறார். நான் மேலும் மேலும் வளர்க்க வேண்டாம் என அமைதியாய் இருக்கிறேன். தங்களுடைய விவாதங்களில் என் பெயர் ஏன் அடிபடுகிறது. தெரியவில்லை.
தாங்கள் ஏப்ரல் 2012ல் தான் வந்துள்ளீர்கள். இன்னும் 100 பதிவுகள் வரவில்லை. தங்களுக்கு ஒரு ஆண்டுக்கு முன் வந்தவர் வாசுதேவன். இரவு பகலாக உழைத்து இன்று 3000 பதிவுகளை எட்டும் நிலையில் இருக்கிறார். பல்வேறு சொந்த அலுவல்களுக்கிடையில் நாங்கள் - தங்கள் பாஷையில் சொல்வதானால் - பரண் மேல் ஏறு தூசு தட்டி ஆவணங்களை இங்கு பதிவிடுகிறோம். இவற்றின் அருமை தங்களுக்குத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. அதனை கேலி செய்யும் வகையில் பதிவினை எழுதியது அதிர்ச்சியளிக்கிறது. ஆய்வெழுத எவ்வளவு சிரமம், எவ்வளவு நேரம், எவ்வளவு உழைப்பு தேவைப் படுகிறதோ அதைப் போல் பல மடங்கு, ஆவணங்களைத் தருவதற்கு தேவைப் படுகிறது. இன்றைக்கு ஒரு பழைய பேப்பர், சுமார் 40 அல்லது 50 ஆண்டுகளுக்கு முன்பான நாளிதழைத் தேடி எடுத்து பிரதி எடுக்க தேவைப் படும் சிரமங்களை யும் பொருட்செலவையும் சற்றே விசாரித்துப் பாருங்கள், தங்களுக்கு அதனுடைய மதிப்புத் தெரியும். அந்த அடிப்படையில் பார்த்தால் நமது பம்மலார் இதுவரை நமக்கு அளித்துள்ள ஆவணங்கள் - விலை மதிப்பற்றவை என்பது ஒரு பக்கம் - குறைந்த பட்சம் 70 ஆயிரம் ரூபாய்களிலிருந்து ரூ. 1.0 லட்சம் வரைக்கும் மதிப்புப் பெறும். பம்மலார், வாசுதேவன் போன்ற நமது சிவாஜி ரசிக நண்பர்களெல்லாம் பிரதிபலன் எதிர்பார்த்தா செய்கிறார்கள்.
வாசு சொன்னது என்ன நாகரீகமாக எழுதுங்கள் என்றார். அவர் மேற்கோள் காட்டியது நடிகர் திலகத்தின் இளைய தலைமுறை படப் பாடல் என்பதும் தங்களுக்குத் தெரியாததல்ல ..அவர் எழுதியது போல் இது அறிவுஜீவிகளுக்கு மட்டுமான திரியில்லை, சாதாரணமானவர்களும் படிக்கிறார்கள். நிறைய மகளிரும் படிக்கிறார்கள். சிவகாமியின் செல்வன் பாடலைப் பற்றி முதல் பதிவில் இருந்த நாகரீகம் இரண்டாம் பதிவில் இல்லாததாக உணர்ந்து வாசு தன் மன வருத்தத்தை எழுதியிருக்கிறார். தாங்கள் இரு சாராரையும் உரிமையோடு கண்டித்திருந்தால் அதில் நிச்சயம் அனைவரும் பாராட்டி யிருப்பர். ஆனால் யாராவது ஒருவர் போக வேண்டும் எனத் தாங்கள் எழுதியிருப்பது வியப்பை அளிக்கிறது. மற்ற அனைவரும் மன வருத்தங்களை மறந்து மீண்டும் அனைவரும் ஒன்று சேர்ந்து நடிகர் திலகத்திற்காக பதிவுகளை இட வேண்டும் என பொதுவாக கேட்டுக் கொள்வார்கள். ஆனால் தாங்களோ யாராவது ஒருவர் போக வேண்டும் என்று பொருள் தரும் வகையில் எழுதியுள்ளீர்கள். அல்லது அப்படி எனக்குத் தோன்றுவது தவறா தெரியவில்லை.
தேவையற்ற விவாதங்களில் ஈடுபடாமல் நடிகர் திலகத்தின் நடிப்பின் சிறப்பையும் அவருடைய சமுதாயப் பணிகளையும் பற்றி விவாதிக்கலாமே என வாசுதேவன் ஆலோசனை கூறியதில் என்ன தவறு உள்ளது என எனக்கு தெரியவில்லை.