#1873.
கோபாலாரே
ஆஹா அந்த சுட்டு விரல் அசைவு!! யாருக்கையா வரும் அந்த ஸ்டைல்??
கையை அசைத்தால் அது வேண்டாம் என பொருள்.சுட்டு விரலை மட்டும் அசைத்தால் அது இல்லை என பொருள் என்று இலக்கணம் எழுதியவரல்லவோ அவர்!
சுட சுட பார்த்துவிட்டு எழுதுகிறேனாக்கும்!
Printable View
#1873.
கோபாலாரே
ஆஹா அந்த சுட்டு விரல் அசைவு!! யாருக்கையா வரும் அந்த ஸ்டைல்??
கையை அசைத்தால் அது வேண்டாம் என பொருள்.சுட்டு விரலை மட்டும் அசைத்தால் அது இல்லை என பொருள் என்று இலக்கணம் எழுதியவரல்லவோ அவர்!
சுட சுட பார்த்துவிட்டு எழுதுகிறேனாக்கும்!
மூவாயிரம் பதிவுகளை கடந்தும், எங்கள் பீஷ்மாச்சாரியார் தொடர்ந்து களத்தில் விளையாடி கொண்டிருக்கிறார். வேந்தரே, என் மன பூர்வமான வாழ்த்துக்கள். தங்களால் ஒதுக்க பட்ட இந்த கர்ணன், வேறு களத்தில், விளையாடி கொண்டிருக்கிறேன். உங்கள் திரி அமோகமாய் வெற்றி கொடி நாட்டி வருகிறது.
எஸ்வி சார், நாங்களே நேரம் கடந்து கவனிப்பவைகளை, விரைவாக கவனித்து எங்களை வாழ்த்தும் இந்த கனிவுக்கு, என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
டியர் கோபால் சார்,
தங்களுடைய பாராட்டிற்கு நன்றி.
நான் யாரையுமே ஒதுக்கவில்லை, அப்படி யிருக்கும் போது உங்களை மட்டும் ஒதுக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை. விவாதங்களுக்காக மற்ற இரு திரிகளையும் வைத்துக் கொண்டு தகவல்களுக்கு என்று இதை வைத்துக் கொள்ளலாமே என்கிற நோக்கத்தில் தான் அந்தத் திரி துவங்கப் பட்டது. பாடல்களைக் கூட நம்முள் நிழலாடும் பழைய நினைவுகளின் பகிர்மானங்களுக்கு வடிவம் கொடுக்கலாமே என்ற நோக்கத்தில் என் விருப்பம் பகுதியும் துவங்கப் பட்டது.
தாங்கள் எந்தக் களத்திலும் புகுந்து விளையாடுவீர்கள் என்பதை அறியாதவனா நான்.
Filmography is like other NT threads. Every one can contribute.
அன்புடன்
ராகவேந்திரன்
படம் - சிவகாமியின் செல்வன். -26 ஜனவரி 1974.
பாடல்- எத்தனை அழகு கொட்டி கிடக்குது.
பாடலாசிரியர்- புதுமை பித்தன்
இசையமைப்பு- மெல்லிசை மன்னர்.
நடிப்பு- சிவாஜி-வாணிஸ்ரீ.
இயக்கம்- சீ .வீ.ராஜேந்திரன்.
நான் பதினைந்து வயது வயதுக்கு வந்த விடலையாய் ,மீசை முளைக்கும் பருவத்தில், இனம் பிரியா குழப்ப இன்ப உணர்வுகள் வாட்டி வதைத்த போது ,நான் மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்ந்த படம் (குடந்தை நூர்மஹாலில் வரிசையாய் ஐந்து நாட்கள்,பிறகு விரல்கள் போதாது)
அதிலும், என் விருப்பமான ஜோடியின் எத்தனை அழகு பாடலுக்காக மட்டும்(amatory மூட்,erotic arousal எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள்)இத்தனை முறை!!!!????
ஆனால் அதே பாடலை, உலகத்தில் இன்பங்கள் பாக்கி உண்டா என்ற பருவத்தில் பார்க்கும் போதும், ஒரு உருது கவிதை, ஒரு erotic சிற்பம் (அ )சித்திரம் பார்க்கும் புத்துணர்வை தருகிறது என்றால் எழத பட வேண்டியதே.
பொதுவாக சிவாஜி,பெண்களை விட ,பெண்களின் அம்மாக்களையே குறி வைத்தவைத்த முதல் அறுபதுகளில் இருந்து விடு பட்டு, பெண்களையும்,வாலிபர்களையும் ஈர்க்க தொடங்கி ,வசந்த மாளிகையில் ராஜாவாய் சுமதி சுந்தரியுடன் , இளைய மன்மதனாக ஜொலித்த கால கட்டம். வேறெந்த நடிகையுடன் நடித்ததை விட, வாணிஸ்ரீ.யுடன் அவர் நெருக்கம் உயர்ந்த மனிதனில் தொடங்கி நல்லதொரு குடும்பம் வரை தொடர்ந்தது.
காதல் காட்சி என்ற போதும் பொத்தாம் பொதுவாக நடிக்காமல், பாத்திர இயல்பு படி,வித்தியாசம் காட்டி ,சூழ்நிலை, கதையமைப்பு புரிந்து நடிக்கும் சுவை ஆஹா!! அதிலும் எத்தனை variety !!!எவன் எவனையோ காதல் மன்னன் என்று அழைக்கிறோமே?இவனல்லவோ காதல் பேரரசன் என்று தோன்றும்.
பொதுவாக erotism என்பது நமது கோவில்கள்,மத நூல்களில் கொண்டாட பட்ட போதும் ,british inhibitions காரணமாய் ,sexual slavery and deprivation இல் அகப்பட்டு, நல்ல hightened aesthetics என்று சொல்ல படும் erotic sensual intense romance என்று சொல்ல படும் காட்சிகளே எந்த இந்திய படங்களிலும் இல்லை.(அப்படியே ஒன்றிரண்டு வந்தாலும், காஞ்ச மாடு கம்பங்கொல்லையில் புகுந்த case தான்). எனக்கு தெரிந்த வரை இந்த Erotic genre இலும் முழு மதிப்பெண் நம் நடிகர் திலகத்துக்கே.நெஞ்சத்திலே நீ-சாந்தி, மெல்ல நட-புதிய பறவை,பலூன் காட்சி-சுமதி என் சுந்தரி, plum கடிக்கும் வசந்த மாளிகை என்று ஆயிரம் இருந்தாலும் ,இந்த குறிப்பிட்ட பாடல் erotic திலகம்.
இனிய நண்பர் திரு கோபால் சார்
நடிகர்திலகம் திரியில் எல்லா பாகங்களையும் ஒரு ரசிகன் என்ற முறையில் படித்து வருகின்றேன் .
நடிகர்திலகத்தின் ரசிகர்கள் அனைவரின் பங்களிப்பும் மிகவும் சுவாரசியமாகவும் ,கட்டுரைகள் -பாடல் ஆய்வுகளும்
சிறப்பாக உள்ளது .
பம்மல் சுவாமிநாதன் சார் - சாரதா மேடம் - கார்த்திக் சார்
பதிவுகள் இல்லாதது ஒரு குறை .
புதிய வரவான வனஜா மேடம் -ஆதிராம் - கல்நாயக்
கணபதி -கண்ணன் - ஆகியோரின் பதிவுகள் அருமை .
அனைவருக்கும் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் .
என்றும் நட்புடன்
வினோத்
எத்தனை அழகு பாடலில்(ஒரே டேக்கில் படமாக்க பட்டதாம்.hats off ! ஒரு சப்பை முத்த காட்சியை 20 டேக் எடுக்கும் கலிகாலம்) முதலில் களம். தங்களுக்குள் மண பந்த ஒப்பந்தம் புரிந்த(மற்றவர்கள் அறியாமல்) ஒரு ஜோடி ஒரு மழை நிறைந்த குளிர் இரவில்,ஒரு அறைக்குள் மாட்டி, தங்களை இழக்கும் காட்சி. அவனுக்கோ இன்பத்தை சோதிக்கும் ஆர்வமும், சுவைக்க துடிக்கும் அவசரமும்,தன்னை மறந்த நிலை. அவளுக்கோ, தயக்கம் கலந்த சம்மதம், தவிக்க விடும் நாணம்,உரிமையரியா உறவின் அறியா அச்சம் என இந்த ஜோடியின் தவிப்பை, சிவாஜியும் ,வாணிஸ்ரீ யும் அற்புதமாய் expressions ,body language ,suggestive movements என்று பின்னியிருப்பார்கள்.
முதலில் இந்த பாடலில் சி.வீ.ஆரின் colour sense and psychology யை பாராட்டியே ஆக வேண்டும்.(இதை அவர் சுமதி என் சுந்தரியிலேயே அற்புதமாக கையாண்டிருப்பார்) வாணிஸ்ரீ முதலில் ஒரு பிங்க் நிற புடவை அணிந்து அறைக்குள் வருவார். பிங்க் ஒரு வளர் சிறுமியின் பெண்மை குறியீடு. பிறகு சிவப்பு வண்ண அவசர ஆடைக்கும் மாறுவார்.சிவப்பு feeling of intense excitement ,romantic warmth ஐ enhance பண்ணும் நிறம்.ஆணுடையது வெளிர் பச்சை நிறம்.fertility ,bodily functional assurance குறிப்பது. இந்த இரண்டு நிறங்களின் இணைப்பே பாதி mood elater ஆக காரணியாகும்.
இதை விட hero -heroine physical ஆன எவ்வளவோ சிவாஜி பாடல்கள் கூட உண்டு. ஆனால், இந்த காட்சி தந்த intensity எந்த காட்சியும் தந்ததில்லை.
ஒரு இள விமானியை, ஒரு target நோக்கி படையெடுக்கும் adventurism ,experimentation முதலிய உணர்ச்சிகளுடன்,ஒரு அவசரம் கலந்த காம விழைவை அற்புதமாய் பிரதிபலிப்பார் NT .வாணிஸ்ரீ (AVM ராஜன் சொல்வது போல சிவாஜிக்காக பிரம்மா ஸ்பெஷல் ஆய் படைத்த கருப்பழகி) சிவாஜியுடன் இழைந்தும், தயங்கியும், உணர்ச்சி வசபட்டும், சூழ்நிலையறிந்து விலகுவதும், இறுதியில் தொடர் தூண்டுதலால் இணங்குவதும் என அற்புதமாய் NT க்கு ஈடு கொடுத்திருப்பார்.
தன இடத்திலிருந்து எழுந்த உடன் சிவாஜி தன pant அய் suggestive ஆக கையால் சிறிதே உயர்த்தும் காட்சி(ஆண்டவன் கட்டளை அழகே வாவிலும் இது உண்டு) , பிறகு ஒரு இலக்கில்லாமல் விலகும் வாணிஸ்ரீயை ஒரு குறிப்பின்றி தடவுவார். பிறகு ஒரு இலக்கில்லா passionate முத்தங்கள்(ஒரு awkward அவசரம் தெரியும்),பிறகு குறிப்பை உணர்த்தும் coat -stand காட்சி, திரை காட்சி என அவசர தூண்டல் ,ஓரு அனுபவமின்மையின் awkward desperation ஐ மிக அழகாக உணர்த்துவார். இதில், வாணிஸ்ரீயின் திரையை இறுக்கும் கைகள்,என்று எல்லாமே suggestive erotism .physical ஆக மிக குறைவான ,தேவையான அணைப்புகள் மட்டுமே இருக்கும்.
பிறகு மஞ்சத்தில் ஓரளவு தயார் நிலைக்கு ஆளானாலும் ,பிறகு அரை மனதுடன் தயங்கி விலகி, தலையணையை மார்புடன் வைத்து காத்து கொள்ள எண்ணும் வாணிஸ்ரீயை ,ஒரு இரையை குறி வைக்கும் இறுதி ஆவேசத்துடன் சிவாஜி அணைத்து இணங்க வைப்பார்.
ஆபாசம், கவர்ச்சிக்கு விடை தெரியாமல் இன்றும் முழிக்கும், நம் தமிழ் நாட்டு தாய்,தந்தை குலங்களுக்கு, இந்த காட்சியின் அழகும்,அமைப்பும், erotic hightened emotional aesthetics புரியாமல்,இந்த படத்தை கை விட்டனர்.இந்த காட்சியில்,மற்ற காதல் காட்சிகளில் இல்லாத, எந்த மிகையும் இருக்காது. சம்பத்த பட்டவர்களின் உணர்வு மிகு நடிப்பாற்றல்,அழகுணர்ச்சி மிகுந்த suggestive shots &gestures தவிர.,
கோபால், ஒரு வழியா உங்க வியட்நாம் வீடு இடுகைகளைப் படிச்சேன். முதல் 2-3 பகுதிகள் நீங்க எழுதும்போதே படிச்சிருந்தேன். மிச்சத்தை இன்னிக்கு. நல்ல அலசல்.
நீங்க சொன்ன சிலபல காட்சிகள் என் நினைவில் இல்லை அப்டீன்றதுலேர்ந்தே நான் இந்த படத்தை மறுபடி பார்த்துட்டு தான் பேசணும்னு வச்சிருக்கேன்.
இதை revisit பண்றதுல எனக்கு எப்போதும் மனத்தடை உண்டு. அது கொஞ்சம் தளர்ந்திருக்கு. குறைந்தபட்சம் நீங்க எழுதினதை முழுசா appreciate பண்றதுக்காச்சும் ஒரு தடவை பார்க்கணும். பார்த்துட்டு வரேன்.
அதுக்குள்ள எங்கயாவது கௌரவத்தைப் பத்தி எழுதி வச்சிடாதீங்க :lol2:
ஒரு மரத்துக் கிளிகள் ஒன்றை விட்டு ஒன்று பறந்தால்..
http://www.youtube.com/watch?v=31lPks6WVLE
நடிகர்திலகம் ஆன்மா கலங்காதா?
எதற்காகக் கூடினோம்? அதை மறக்கலாகுமா?
எல்லாரும் கொண்டாடுவோம் - நடிகர்திலகத்தை
சட்டென மறப்போம் - மற்றவற்றை..
நன்றி திரு கண்ணன் அவர்களே.
மக்கள் திலகம் திரியில் நீங்கள் எங்களை பாராட்டியும் மக்கள் திலகத்தின் பாடலின் பெருமையினையும் பதிவிட்ட உங்களுக்கு நன்றி