http://i63.tinypic.com/vqh45x.jpg
Printable View
சேலம் அண்ணா பூங்கா அருகில் அமைந்துள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் செல்வி ஜெயலலிதா மணி மண்டபம் கடந்த மாதம் முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது .
நானும் சேலத்தில் உள்ள எம்.ஜி.ஆர். பக்தர் திரு.குப்புசாமி அவர்களும் மணி மண்டபத்திற்கு விஜயம் செய்து சிலைகளை பார்வையிட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i68.tinypic.com/mwcwut.jpg
http://i63.tinypic.com/2cdydef.jpg
http://i65.tinypic.com/2i7mufd.jpg
http://i67.tinypic.com/2i58gm.jpg
சாதனை!
சரித்திரம்!!
சகாப்தம்!!!
இந்த சாதனை படைக்க இனி ஒருவன் வரமுடியுமா?
அன்று இதேநாளில் 10.02.1985 நமது இதயதெய்வம் அனைத்து போலி பிரசாரத்தையும் பொய்யாக்கி அமெரிக்கா புருக்லீன் மருத்துவமனையில் சிகிச்சை செய்து கொண்டு தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வராக பதவி ஏற்ற நாள்........... Thanks wa.,
முப்பிறவி கண்ட மூகாம்பிகை செல்வன் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அமெரிக்கா திருநாட்டில் புரூக்ளின் மருத்துவமனையில் 123 நாட்கள் சிகிச்சை முடித்துவிட்டு மூன்றாவது முறையாக தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்ற தினம் இன்று.
1985ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் பத்தாம் தேதி தமிழக முதல்வராக அவர் மட்டும் எஸ். எல். குரான் அவர்களிடம் பொறுப்பேற்றுக்கொண்டார் ஒரு வார காலம் அவர் மட்டுமே எல்லா இலாகா களையும் கவனித்தார் இந்த நிகழ்வால் தமிழகமே வியந்து போய் இருந்தனர் பின் ஒரு வாரம் கழித்து அண்ணன் நாவலர், பண்ருட்டியார் போன்ற 14 அமைச்சர்களை பதவி ஏற்க செய்த நிகழ்வு சரித்திர நிகழ்வு.
🌱 கா .தவசி BA BL 🌱
EX MLA ( ஆண்டிபட்டி ) அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர்.... Thanks wa.,
#புர*ட்சித்த*லைவ*ர் தமிழகத்தின் 8-ஆவது முதல்வராக 3-ஆவது முறையாக பதவி ஏற்ற நாள் இன்று...
ஆம் அவர் பதவியேற்ற நாள் 1985-ஆண்டு பிப்ர*வ*ரி மாதம் இதே 10-ஆம் தேதிதான்..
இதில் வியப்பூட்டும் தகவல் ஒன்று உண்டு...
தமிழகத்தின் எட்டாவது சட்டமன்ற தேர்தலான இந்த தேர்தல் நடைபெற்ற நாள் டிச*ம்ப*ர் 24, 1984 ஆகும்.
இந்த நாளிலிருந்து ச*ரியாக மூன்றாண்டுக*ள் க*ழிந்து இதே நாளில்தான் நம் #மக்கள்திலகம் இயற்கை எய்தினார்..
இந்த தேர்தலில் நம் கழக கூட்டணி பெற்ற மொத்த வாக்குகள்: 1,16,81,221
வாக்கு சதவீதம்: 53.87%
வெற்றி வாகை சூடிய தொகுதிகள்: 195
இத்தேர்தலில்தான் 'எம்.ஜி.ஆர் ஃபார்முலா' என்றழைக்கப்படும் கூட்டணி உடன்பாட்டு முறை முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது.
இதன்படி நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியில் இடம் பெறும் தேசியக் கட்சிக்கு 70 % இடங்களும், மாநிலக் கட்சிக்கு 30% இடங்களும் ஒதுக்கப்பட்டன.
அதே சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியில் இடம் பெறும் தேசிய கட்சிக்கு 30% இடங்களும், அதிமுகவுக்கு 70% இடங்களும் ஒதுக்கப்பட்டன.
1984-ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்த இந்த தேர்தலில் கருணாநிதி சட்டமன்றத்துக்கு போட்டியிடவில்லை... அப்போது அவர் மேலவை உறுப்பினர்...
ஆனால் '50-ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் கருணாநிதி' என்று எப்போதும் போல திமுக வரலாற்றை திருத்தி பொய்யை மட்டுமே சொல்லும்.................. Thanks wa.,
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மாநகரம் முழுவதும் பக்தர்கள், கட்சி பிரமுகர்கள் அமைத்திருந்த பேனர்கள், ஏற்பாடு செய்த சுவரொட்டிகள் நண்பர்களின் பார்வைக்கு .
சூளைமேடு சந்திப்பு
http://i65.tinypic.com/166ytg9.jpg