அன்புள்ள கண்பட் அவர்களே..
கண்படுமோ எனும் அளவுக்கு நம்மவரை அலங்கரிக்கும் அழகுப்பதிவு..
உங்கள் ரசனையை ரசித்து வாழ்த்துகிறேன்..
Printable View
அன்புள்ள கண்பட் அவர்களே..
கண்படுமோ எனும் அளவுக்கு நம்மவரை அலங்கரிக்கும் அழகுப்பதிவு..
உங்கள் ரசனையை ரசித்து வாழ்த்துகிறேன்..
தவறிய முத்துகள்...
கையில் இருப்பவற்றைவிட கைப்பற்ற தவறவிட்டவை மேல் ஓர் ஆற்றொணா ஏக்கம் இருக்கும்..
விந்தை மனது நமது..
அருகில் இருக்கும் மகனைவிட அயல்தேசத்தில் இருக்கும் மகனை எண்ணி நெடுமூச்செறியும் தாய்மனம் போல...
நாம் காணாமலே மறைக்கப்பட்ட - தயாரிப்பு நிலையியிலேயே முடங்கிவிட்ட பாடல்கள், படங்கள் பற்றி எப்பொழுதும் எனக்கு தனி ஏக்கம் உண்டு..
ஞாயிறும் திங்களும் - இராகவேந்திரர் அளித்த நிழற்படங்கள் - அக்கனலை இன்னும் மூட்டிவிட...
என் நினைவனல்கள்....
--------------------------------------------
என் நினைவு ஒன்றுதான் - அவன் ஒரு சரித்திரம் படத்துக்காக உருவாக்கப்பட்ட பாடல்.. ( பின்னர் அதே தயாரிப்பாளரின் பெருமைக்குரியவளில் சேர்ந்தது)
அடேயப்பா ராஜப்பா சங்கதி என்ன - வசந்தமாளிகை. வாணிஶ்ரீயுடன் இணைந்த இந்த அதிரடிப்பாடல் கண்டிருந்தால் என் கதி என்ன?????
பொம்பளயா லட்சணமா பொடவையக் கட்டு, கேட்டாயே ஒரு கேள்வி - இளைய தலைமுறை
( வாணிஶ்ரீ என்றாலே பாடல்கள் சேதாராமகும் போல...
------------------------------------------------------------------------------------
நடிகர்திலகம் ஒருவர் மட்டுமே படம் முழுதும் அவர் ஒருவர் மட்டுமே வரும் வையில் அமைந்த கதை செய்து படம் எடுக்க ஶ்ரீதர் வைத்திருந்த திட்டம்..
திப்புசுல்தான் - தஞ்சைவாணன் முயற்சியில் இராஜாஜி ஆசையை நிறைவேற்ற நடிகர்திலகம் செய்த முயற்சி..
தந்தை பெரியாராய் வாழ்ந்துகாட்டிவிட அவர் கொண்டிருந்த ஆசை..
மாடிவீட்டு ஏழை விளம்பரத்துடன் வந்து ஆசை மூட்டிய துள்ளி வருகுது வேல் விளம்பர மிரட்டல் தோற்றம்..
---------------------------------------------------
நிறைவேறாக் கனவுகளும் ஒரு வகையில் சுகமானவையே!
mouses are jumping when the cat is not around!!!???
உண்டு பசியாற,
உலகம் வரட்டுமென்று,
கண்டு தேன் கலந்து
கறந்த பால் கறந்தபடி
கொண்டு வந்து வைத்து
கூப்பிட்டேன் வருகவென்று
பசியாற ஓடி வந்த
பத்து பேர் மத்தியிலே,
பகையாற ஒருவன் வந்த
பாவத்தை என்ன சொல்வேன்!!
மிக்க நன்றி காவேரிக்கண்ணன் அவர்களே..
என் விரல்களை தட்டச்சில் ஓட வைப்பது,
அதில் ஓடும் ரத்தமாகிய உங்களைப்போன்ற
சிறந்த பதிவர்கள் இடும் பதிவே..
// ஒரு பாடலுக்கு வாயசைப்பது என்றால் என்ன என இலக்கணம் எழுதிய தொல்காப்பியர், நம் தலைவர் .
ஒரு பாடலை பாடும்போது கண்கள் அடிப்படை உணர்வை முதலிலிருந்து, முடிவு வரை பிரதிபலிக்கவேண்டும்.
உதடுகள் தேவையான அழுத்தத்தை தேவையான இடத்தில அளிக்கவேண்டும்.
வாய் திறக்கும் அளவு, கன்னத்தை அசைக்கும் அளவு இவைகளை கவனமாக கையாளவேண்டும். //
"naalai pOgaamal naan iruppEnOOOOO.........OOOOOOO......OOOOOO"
(nandhanar keerthanai in Rajapart Rangadurai)
vaayasaippadhu eppadi endru ilakkanam vaguththavar.
To whomsover it may concern.
என் கட்சிக்காராகிய ganpat என்று பெயருள்ள ஒரு அப்பாவி,
எந்த உள்குத்துமின்றி தலைவரின் ரத்த திலகம் படத்தின் ஒரு பாடல் வரிகளை,
பிறர் கண்டு மகிழ போட்டுள்ளார்.அதில் ஒவ்வொரு வார்த்தையாக பெயர்த்து எடுத்து,
அதன் அர்த்தம என்ன தலையை தட்டியபடி யோசிப்பது சட்டப்படி குற்றமாகும்.
அதற்கு என் கட்சிக்காரர் எந்த வகையிலும் பொறுப்பாக மாட்டார் என தெரிவித்துக்கொள்கிறேன்..
இப்படிக்கு..
பாரிஸ்டர் ரஜினிகாந்த்.
கண்பட் அவர்களே
சிலவற்றை நான் எழுதினால் எப்படி இருக்கலாம் என என் மனச்சித்திரம் எழுகிறதோ
அதை விஞ்சும் பலபல பதிவுகள் இங்கே..
நீங்கள், அன்பு வாசு, முரளி ஶ்ரீனிவாஸ், சாரதா, பார்த்த- சாரதி ( நன்றி - வனஜா அவர்களுக்கு) என நான் கண்டு வியந்து ரசிக்கும் எழுத்தர்கள் அநேகம்..
அத்தனை விரல்களுக்கும் ஒரே உத்வேகர் நம் உற்சவ கணேசமூர்த்தி அல்லவா?
------------------------------------------
உங்கள் பாலமுதப் பரிமாறக் கவிதைக்கும்
பூனை உவமையுடன் வந்த கோபால் பக்தருக்கும்..
அண்ணலின் பாடல் வரிகள் சில-
அன்பால் குழந்தை கடிக்கின்றது
அதுவும் கொஞ்சம் வலிக்கின்றது
தடவிப்பார்த்தால் இனிக்கின்றது
தாய்மை உள்ளம் துடிக்கின்றது..
--------------------------------
கொஞ்ச நேரம் காற்றடித்து ஓய்ந்துபோகலாம் - வானில்
கூடிவரும் மேகங்களும் கலைந்துபோகலாம்..
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும்...
Mr. PARTHASARATHY,
"ellorum kondaaduvom Allahvin peyarai solli"
"ellorum kondaadinom.. ungal arputhamaana virivaakkaththai padiththu"
you have observed each and every moment and movement of nadigarthilagam.
what an involvement you poured in each song. excellent sir.
you have capable of working for a doctorate. good.