-
தூங்குகிறான் தூளியிலே சின்னக் கண்ணன்
..சுற்றிநீயும் ஆட்டாதே விழித்துக் கொள்வான்
பாங்காக அவன்முறுவல் முகத்தில் தானே
..ப்ரவசத்தைக் கூட்டுதடி அடியே தோழி
தேங்கிடுமே மென்காற்று அவனைச் சுற்றி
..தேகத்தை விட்டெங்கும் போகா வண்ணம்
நீங்கிடுமே நாம்ப்ட்ட துயரம் எல்லாம்
..நீலவண்ணன் தரிசனத்தில் என்றும் தானே..
-
தானே நடக்கும் என்றிருப்பவரன்றி
தெய்வம் நடத்தும் என்போருக்கும்
நானே நடத்துவேன் எனக்கொள்வாரும்
உய்யம் அடைவோம் எனமுயற்சிசெய்
வானேறி பிரபஞ்சங்காணும் ஏற்றம் பெறுவர்
-
பெறுவர் நண்பர் சற்று நிம்மதி
அகராதி பேசி வார்த்தையாடி
தொல்லை தரும் கிழவியும்
விடுமுறையில் செல்வதால்
:noteeth:
-
//enga leaveletter..not acceptable :) //
விடுமுறையில் செல்வதால் என்ன ஆகும்
...விகசிக்கும் நெஞ்சமது ஊரைக் கண்டு
கடுகடுத்த முகத்துடனே பணிகள் செய்து
..களிப்புகளை மறந்திருந்த மனமும் இன்று
படுத்துவிடும் மகிழ்வில்தான் ஊரில் உள்ள
..பலவிதமாய் நண்பர்கள் உறவைக் கண்டே
சுடும்நினைவு பின்னாலே முடிந்தபின்னால்..
.இருந்தாலும் முன்னாலே அனுப விப்போம்..!
-
அனுபவிப்போம் நன்றே அமர்க்களம் இன்றே
அறவழி வாழ்வுதனை ஐம்புலம் துணை கொண்டே
நேற்று என்பதேதோ சரித்திர நினைவாம்
நாளை என்பதுவோ மர்மத்தின் நிழலாம்
இன்று மட்டுமே இயற்கையின் வெகுமதி
என்றும் அதனை ‘ப்ரெசன்ட்’ எனக்கொள்
https://encrypted-tbn0.gstatic.com/i...NLZA_i0YdElTnw
-
எனக்கொள் எனக்கொள் எனக் கொண்டால்
தனக்கொள் தனக்கொள் என்று தனதாக்கிக்கொண்டு
எவருமே ஏகடியம் பேசும் வாய்ப்பால்
தன்னிலை உணர்ந்தே எவரும் கொள்வர்
எனவறிந்தே பிறர் கொள்ள ஏற்றுக் கொள்வர்
தாமும் பிறர்க்குரியர் என உணர்வார்
-
உணர்வார் தங்கள் வெற்றி
ஓய்ந்தே அமரும் காலத்தில்
ஆற்றிய கருமம் எண்ணுங்கால்
அகத்துடன் முகமலர்ந்தாலே
-
முகமலர்ந் தாலே ஓதோழி
..மூச்சது திரும்ப வந்துவிடும்
உவந்ததன் தன்மை தான்காட்டும்
..ஒருசெயல் அதுதான் என் தோழி
சுகமிலை என்றே சொன்னதனால்
..சுரத்தினைப் போக்க வேண்டுமென்றே
அகத்திலே செய்த சிறுமருந்தை
..அவரிடம் நானே அனுப்பிவைத்தேன்..
சுளித்தே குடித்துத் தானிருப்பார்..
..சுர்ரெனப் புளிக்கும் அதுவன்றோ
விழிகள் நன்றாய் மூடிவிட
..விரைந்தே தூக்கம் வந்திருக்கும்
துளியாய் சிரித்தார் என்கின்றாய்..
..சுரவலி ஓடிச் சென்றிருக்கும்
வலியைப் போக்க நான்செல்ல
..வழியும் இருந்தால் சொல்லடிநீ
-
வழி நீயே காட்டுவாய்
என நானே நீட்டினேன் நோட்டை
சுழி ஒன்றே பொருத்தம்
என சொல்லி மதிப்பெண் இட்டார்
கழி கொண்டே அடிப்பார்
என நானே புரியாமல் விலகினேன்
பழி ஒன்றே சொல்லத்த்தான்
எனை நானே தேடினேன் தந்தைக்கு
சுழி இல்லா மதிப்பெண்
எனைத் தேடி எப்போ வரும்
இழி இல்லா கணிதம்
என எனக்கு எப்போ புரியும்
-
புரியு மெனநினைத்தால் புருவத்தை உயர்த்தித்தான்
...பூவை முகமாறி பல்வாறாய்க் கேள்விகளை
விரியும் பார்வையதன் மூல்மாகக் கேட்டிடுவாள்
...விழிகள் சிவந்திருக்கும் வேடிக்கை மறைந்துவிடும்
சரிதான் காத்திருப்பின் கஷ்டமென நானறிவேன்
..தங்கம் சின்னப்பூ ஜிஞ்சும்மா என்றாலோ
சுழிப்பாள் உதட்டினையும் பின்னங்கே வெடித்திடுமே
..சூறா வளியாகச் சொற்றொடர்கள் திட்டல்கள்..
மெல்லப் பின்வாங்கி மேவியவள் கைபற்றி
..மேனி தனையிழுத்து மென்முத்தம் பதித்தாலோ
துள்ளி விலகிடுவாள் துச்சமெனத் தான்பார்த்தே
..சும்மா சால்ஜாப்பு சொல்லாதீர் எனச்சொல்ல
அல்லி அழகியலே ஆனமட்டும் கெஞ்சுகிறேன்
..ஆனா லிக்கோபம் உன்னழகைக் கூட்டுதெனச்
சொல்லி மறுபடியும் கெஞ்சத்தான் வஞ்சுகத்தின்
..சொக்கும் இதழ்விரியும் ஊடலதும் பறந்திடுமே..