மதுரை- சென்ட்ரல் dts "விவசாயி" 1 லட்சம் ரூபாய் வசூலை கடந்து புது அத்தியாத்தை உருவாக்கி அற்புதம் கண்டிருக்கிறார் நம் திரையுலக தந்தை மக்கள் திலகம், நன்றி செய்தி தந்த நண்பர்கள்...
Printable View
மதுரை- சென்ட்ரல் dts "விவசாயி" 1 லட்சம் ரூபாய் வசூலை கடந்து புது அத்தியாத்தை உருவாக்கி அற்புதம் கண்டிருக்கிறார் நம் திரையுலக தந்தை மக்கள் திலகம், நன்றி செய்தி தந்த நண்பர்கள்...
பெங்களுரில் இன்று தலைவரின் 101வது பிறந்த நாள் விழா. டவுண்ஹாலில் நடைப்பெறுக்கிறது. விழாவிற்கு அண்ணன் சைதை திரு. துரைசாமி அவர்கள். திரு. எம். ஏ. முத்து அண்ணன் மதுரை முன்னாள் மேயர் திரு. நவநீதக்கிருஷ்ணன் திரு. துரைகருணா அண்ணன் உடன்....
கர்நாடகா மாநிலம் பெங்களூர் டவுன் ஹால் 8-7-2018 ஞாயிறு நடந்த எம்ஜிஆர் 101 வது பிறந்த நாள் விழாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடா சவுகார்ஜானகி ஐசரிகணேஷ் சைதை துரைசாமி துரைகருணா ஆகியோர் கர்நாடக அதிமுக அமைப்பாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் நடந்த்து.தேவகவுடா பேசும் போது எம்ஜிஆர் அவர்களை இரண்டு முறை பார்த்திருக்கிறேன்.எம்ஜிஆர் ரசிகர்களை பார்ப்பது மகிழ்ச்சி என்றார்.
ஒரு காலத்தில் குல்லா கண்ணாடி பற்றி கிண்டல் செய்தவர்கள் இன்று 101 குழந்தைகளுடன் மீண்டும் பிறந்துள்ளார்.
101 குழந்தை களுக்கும் எம்ஜிஆர் மாதிரி குல்லா கண்ணாடி ஜிப்பா வேஷ்டி அறிந்து வந்தனர்.திரைப்படத்தில் எம்ஜிஆர் அவர்களுக்கு உடைகள் தைப்பவர் பாக்தாத் திருடன் முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை பணியாற்றிய எம்.ஏ. முத்து வந்திருந்தார்.
எம்ஜிஆர் - ஜெயலலிதா பற்றி கன்னடத்தில் புத்தகத்தை வெளியிட்டார் முன்னாள் பிரதமர் தேவகவுடா அவர்கள்.
[ சவுகார் ஜானகி பேசும் போது என்னை பண்பட்ட நடிகை என்று எம்ஜிஆர் பாராட்டினார். ஒளிவிளக்கு படத்தில் இறைவா உன் மாளிகை பாட்டு எனக்கு பெயர் தந்த்து. எம்ஜிஆர் இல்லாத போதும் இவ்வளவு ரசிகர்கள் வந்த்து எனக்கு அதிசயமாக உள்ளது என்றார்.
சவுகார்ஜானகி - எம்.ஏ.முத்து அவர்கள்.
[: எம்ஜிஆர் அவர்கள் மறைந்து 30 வருடம் திரைப்படத்தில் நடித்து 40 வருடம் ஆன பிறகும் ரசிகர்கள் மக்கள் வருகிறார்கள் என்றால். அது எம்ஜிஆர் அவர்களுக்கு மட்டும் தான். இதைத்தான் இன்று தேவகவுடா அவர்களும் சவுகார்ஜானகி அவர்களும் வியப்பதாக பாராட்டி பேசினார்கள்... Thanks Friends...
8.7.2018
பெங்களூரில்* மக்கள் திலகத்தின் 101வது* பிறந்த நாள் விழா சிறப்பு செய்தி*
பெங்களுர் நகரின் மையப்பகுதியான* டவுன் ஹால்* அரங்கில் 40 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்* குரல் ஒலித்தது* மிகப்பெரிய சாதனை*
காலை 11 மணி முதல்* இரவு 9 மணி வரை* விழா நிகழ்ச்சிகள்* சிறப்பாக நடந்தேறியது .
காலையில் திரு* *சைதை துரைசாமி* சிறப்பு விருந்தினராக* கலந்து கொண்டார் .
திரு ஐசரி கணேஷ்*
திரு* நவநீத கிருஷ்ணன்*
திரு* *முத்து
மற்றும்* பலர்* கலந்து கொண்டார்கள் . மக்கள் திலகம் எம்ஜிஆர் போல் வேடமிட்டு 101 ஆண் - பெண்* *குழந்தைகள்* அழகாக* மேடையில் தோன்றி* கண்களுக்கு* விருந்து தந்தார்கள் .
*கர்நாடக மாநில* * நடிகர்* திலகம் சிவாஜி மன்ற தலைவர் திரு ம..நடராசன் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார் . அவரை விழா குழுவினர் கவுரவித்தார்கள்**
மாலையில்* அரங்கம்* நிறைந்து விட்டது . பலர் நின்று கொண்டே விழாவை* ரசித்து பார்த்தார்கள்*
திரு தேவ கவுடா* *முன்னாள் பாரத பிரதமர்*
திருமதி* சவுகார் ஜானகி*
திரு* ஐசரி கணேஷ்*
திரு முத்து*
திரு சம்பத் ராஜ்* பெங்களுர் மேயர்*
திரு ஆர்.வி .தேவராஜ்* சட்ட மன்ற உறுப்பினர்*
திரு சரவணன்* சட்ட மன்ற* மேலவை* உறுப்பினர்*
மற்றும் பல பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்* பிரமுகர்கள் தமிழக எம்ஜிஆர்* மன்ற பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்*
மக்கள் திலகம் எம்ஜிஆர் என்ற தனி* மனிதருக்கு கர்நாடக மாநிலத்தில் தமிழகத்தை* போலவே* மக்கள் செல்வாக்கும்* ரசிகர்களின் செல்வாக்கும்* நிறைந்திருப்பது* மனமகிழ்வை தருகிறது ..... Thanks...
எம்.ஜி.ஆரின் வாடகை!!
--------------------------------------
நெப்டியூன் ஸ்டூடியோ!!
எம்.ஜி.ஆர்--தம் குடும்ப வறுமைக்காக நடிக்க வேண்டி மோகத்துக்காகவும் நா வறண்ட தாகத்துக்காகவும் நடையாய் நடந்து ஏகத்துக்கும் அவமானப் பட்ட ஸ்டூடியோ!!
ஒரு வாய் சோற்றுக்குத் தானே இந்த அவமானம்?? தருவாய் நீயே,,பல நூறு பேருக்கு அன்னம்!! என்று--பெறுவாய் இந்த ஸ்டூடியோவை என்று காலம்,,தன் பெரு-வாய் கொண்டு,,எம்.ஜி.ஆரை அழைத்து அவரையே அந்த ஸ்டூடியோவின் அதிபர் ஆக்கியது!!
அது தான் சத்யா ஸ்டூடியோ!!
நகல் ஒருவரை அசல் என்று எண்ணி ஏமாந்ததும்???
அகல்!! இந்தக் கட்சியிலிருந்து,,அவராலேயே வெளியேற்றப்பட்டு--
அகல் என்ற வெளிச்சமாம் தம் கட்சியை ஆரம்பித்ததும் எம்.ஜி.ஆர் இந்த ஸ்டூடியோவில் தானே??
அது 1978--79--காலம்!!
முதல் அமைச்சரான பிறகு நாட்டு நிர்வாகத்தில் கவனம் செலுத்துவதால்--இந்த ஸ்டூடியோவை மூட மனம் இல்லாத மக்கள் திலகம்--
பத்மனாபன்--சந்திரன்--ஹரி உட்பட சிலரை அழைத்து--நீங்களே இதை பொறுப்பு ஏற்று நடத்துங்கள்? மாத வாடகையையும் நீங்களே முடிவு செய்து அதை எனக்குக் கொடுங்கள் என்று கூறுகிறார்??
அதாவது--குடியிருப்பவன் கொடுப்பதே வாடகை??
அவர்களும்--ஒரு குறிப்பிட்டத் தொகையை முடிவு செய்து,,எம்.ஜி.ஆரிடம் சொல்ல--வள்ளலும் ஏற்றுக் கொள்கிறார்!!
நான்கைந்து மாதங்கள் கடந்த நிலையில்--
ஒரு நாள் அந்த ஸ்டூடியோ பக்கமாக வந்த எம்.ஜி.ஆர்,,பத்மனாபனிடம் அப்பாவியாகக் கேட்கிறார்??
ஒரு மாச வாடகை கூட எனக்கு இதுவரை வரவில்லையே??
பத்மனாபனின் வருத்தம் கலந்த விளக்கம்??
இல்லேங்க!1 கடந்த சில மாதங்களாக சரியான அளவு வேலையே வருவதில்லை!! சொற்பமாக வரும் வருமானம்--மின் செலவு--இதர உபகரண செலவு--தொழிலாளர்கள் சம்பளம் என்று சரியாகப் போய் விடுகிறது!! சொல்லப் போனால் போன மாத சம்பளமே தொழிலாளர்களுக்கு இன்னமும் கொடுக்கவில்லை???
சற்று நேரம் தீவிர சிந்தையில் மௌனம் காத்த எம்.ஜி.ஆர்--பத்மனாபனிடம் இப்படிச் சொல்கிறார்??? சரி!! தொழிலாளர்களின் சம்பள பாக்கி கணக்கு விபரங்களோடு நாளை தோட்டத்துக்கு வந்து அந்தத் தொகையை வாங்கிச் செல்லுங்கள்????
வாடகை வசூலிக்க வந்தவர்--கையை விட்டு கொடுத்த கதையை இது வரை நாம் எங்காவது கேள்விப்பட்டிருக்கிறோமா????
பின் நாட்களில் அதைத் தொழிலாளர்களுக்கே உரிமை ஆக்கியது வேறு விஷயம்???
எங்கவீட்டுப் பிள்ளையில்--
குமரிப் பெண்ணின் உள்ளத்தில் குடியிருக்க வாடகை தருவததாகக் கூறியவர்--
சத்யா ஸ்டூடியோவில்--வாடகையை வாங்கிக் கொள்ளவில்லை???... Thanks friends...
வள்ளல்களுக்கு எல்லாம் வள்ளல் திலகமாக விளங்கிய, விளங்கும் மக்கள் திலகம் சாதாரண நிலையில் இருந்தபோதும், மிக பெரியளவில் வளர்ந்தபோதும் அவர் செய்த தான தர்மங்கள் விபரங்கள் சில செய்திகள் தான் நாம் அறிந்தது, பற்பல விஷயங்கள் நமக்கு ஒவ்வொரு பல தரப்பட்ட நபர்களிடமிருந்து தகவல்கள் இறைவன் விடும் கட்டளையாக வந்து கொண்டேயிருக்கும் என்பது திண்ணம்...
எனது 21000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்/பாராட்டுக்கள் நேரிலும், தொலைபேசி /அலைபேசி மூலம் வழங்கிய கீழ்காணும் நல்ல உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி .
திருவாளர்கள் : ரவிச்சந்திரன் , நெறியாளர், திருப்பூர்.
எம்.பாபு, பெங்களூரு .
கா.நா. பழனி, பெங்களூரு
சிரஞ்சீவி அனீஸ் (பத்திரிகை ஆசிரியர் ).
திருமதி சுதா விஜயன் ,
நாகராஜன்,(விநியோகஸ்தர் ), திண்டுக்கல் .
சிவாஜி பாபு,
ரவிசங்கர்
சி.வி. ராமலிங்கம் ,(பரோடா வங்கி )
ஆர்.முருகேசன், (பரோடா வங்கி )
வி.என்.சுந்தர் , (பரோடா வங்கி )
வி.முரளிதரன் (பரோடா வங்கி )
எச்.நாகேஷ் பந்தார்கர் (பரோடா வங்கி )
எஸ். செல்வம் , (பரோடா வங்கி )
என். ராஜேந்திரன் , (கிளை மேலாளர் , எல்.ஐ.சி.)
தம்பாச்சாரி என்கிற தாமோதரன்
மோகன் (மின்சார வாரியம் )
எம்.எஸ். மணியன் , (.ஐ.ஓ பி )
தாமஸ் (மாநகர போக்குவரத்து கழகம் )
கிருஷ்ணசாமி
பாஸ்கரன் , குன்றத்தூர் ,
எஸ்.எம்.மோகன்குமார் , வழக்கறிஞர் .
சிட் கோ சீனு (தலைமை கழக பேச்சாளர் )அ.தி.மு.க. -
சி. ரவீந்திரன்
- http://i63.tinypic.com/23utzbm.jpg
பெங்களுருவில் கடந்த ஞாயிறு அன்று (8/7/18) நடைபெற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 101 வது பிறந்த நாள் நிகழ்ச்சி பற்றிய புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i68.tinypic.com/166ann9.jpg