கருவின் கரு - 137
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
தகாத உறவுகள் - தாய் தந்தை என்னும் பந்தத்தை உடைத்து எறிகின்றன -- அந்த மகள் எங்கே போவாள் ??- செய்யாத தவறினால் மனம் செய்யும் ஒரு பாடல் - உருகவைக்கும் ....
https://youtu.be/WMM51gNwkxA
Printable View
கருவின் கரு - 137
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
தகாத உறவுகள் - தாய் தந்தை என்னும் பந்தத்தை உடைத்து எறிகின்றன -- அந்த மகள் எங்கே போவாள் ??- செய்யாத தவறினால் மனம் செய்யும் ஒரு பாடல் - உருகவைக்கும் ....
https://youtu.be/WMM51gNwkxA
'பிள்ளை மனம் கலங்குதென்றால்'
http://directorksomu.com/images/Film...laigappu_1.jpg
நடிகர் திலகத்தின் அபூர்வ பாடல்.
ஆனந்தபுரி சமஸ்தானத்தின் மகாராஜா தன் மகன் விஜயேந்திரனை மகுடம் சூட்டப் பணிக்கிறார். மறுக்கிறான் மகன். காரணம் காதல். ஒரு சாதாரணப் பெண் வடிவின் மீது வலிமையான காதல். தந்தையுடன் தர்க்கம் புரிகிறான். காதலே பெரிது என்கிறான். கோ கோபமுறுகிறான். வடிவை வாலிப மகன் மறக்கத்தான் வேண்டும் என்று வலியுறுத்துகிறான். மகன் பணிந்தானில்லை. ஒன்று வடிவு இல்லை நான்... இருவரில் ஒருவரை இழந்துதான் தீர வேண்டும் என்று தனயனுக்கு தர்மசங்கடத்தை தருகிறான் தகப்பன்.
மகாராஜாவா?...
மாதர்குல மாணிக்கமா?...
காதலா?...
பாசமா?...
எதைத் தேர்ந்தெடுத்தான் விஜயன்?
ஆம்..காதல்... தீராக் காதல். அதைத்தான் தேர்ந்தெடுத்தான். அருமைக் காதலி வடிவுக்காக அரண்மனையைத் துறக்க சித்தமாகி, புத்தனை உதாரணம் காட்டி புறம் செல்லுகிறான். நண்பன் தடுக்கிறான். ஆனாலும் விஜயன் வீழ்ந்தானில்லை.
விருப்ப மகன் விஜயேந்திரன் பிரிவால் துயருற்று, பேச்சு இழந்து, படுத்த படுக்கையாகிறான் ஆனந்தபுரி அரசன். நிலைமை மோசமாகிறது. மரண வாயிலை நோக்கி துரிதமாக பயணிக்கிறான் மன்னன். செய்தி விஜயனுக்கு போய்ச் சேர்கிறது.
பிடிவாத மகன் பிதாவுக்குப் பிடித்த பிரிவு வியாதியால் பித்துப் பிடித்தவன் போல் ஆகிறான். கண்களை மறைத்த காதலை மீறி கண்ணான தந்தையைப் பார்க்க கண்ணீருடன் ஓடி வருகிறான். மன்னன் மயக்கத்தில் கிடக்கிறான். விஜயன் தந்தையின் கோலத்தைப் பார்த்து விசும்புகிறான். தான் செய்தது தவறென்று புலம்புகிறான்.
'வா விஜயா என்று வாய் நிறையக் கூப்பிடுங்கள்' என்று அழுகிறான்.
'காதலைத் துறப்பேன்...கடமையைச் செய்வேன்...காவலனே எழுந்திரு...உன்னை ஒரு கணமும் இனிப் பிரிவேனில்லை'...என்று கதறுகிறான்.
'நீ போனால் அதற்கு முன் என் உயிர் போகும்' என்று உயிர் போட்டிக்கு முந்த முயற்சிக்கிறான்.
தான் இல்லாத நேரத்தில் தன் வீணையைக் கொண்டு வரச் சொல்லி அதில் ஆறுதல் அடைந்த தந்தையின் கதை கேட்டு அந்த வீணை மூலமாகவே இசை மீட்டிப் பாடுகிறான். வாய்ப் பேச்சிழந்த தந்தையின் நிலை எண்ணி வாடிப் பாடுகிறான்.
http://i.ytimg.com/vi/wlv1SHOEKYQ/hqdefault.jpg
பிள்ளை மனம் கலங்குதென்றால் பெற்ற மனம் கரையாதோ
பிள்ளை மனம் கலங்குதென்றால் பெற்ற மனம் கரையாதோ
பெருங்கதை முடிந்து விட்டால் சிறுகதைகள் தேம்பாதோ
பெருங்கதை முடிந்து விட்டால் சிறுகதைகள் தேம்பாதோ
பிள்ளை மனம் கலங்குதென்றால் பெற்ற மனம் கரையாதோ
கரைகளும் உடைந்து விட்டால் நதியின் வெள்ளம் வழியாதோ
கரைகளும் உடைந்து விட்டால் நதியின் வெள்ளம் வழியாதோ
கண் மூடி நீ கிடந்தால் என் இதயம் உடையாதோ
கண் மூடி நீ கிடந்தால் என் இதயம் உடையாதோ
காற்றோட்டம் நின்று விட்டால் உயிர்களெல்லாம் மடியாதோ
காற்றோட்டம் நின்று விட்டால் உயிர்களெல்லாம் மடியாதோ
காவலனே நீ மறைந்தால் என் கதையும் முடியாதோ
பிள்ளை மனம் கலங்குதென்றால் பெற்ற மனம் கரையாதோ
கன்றழுத குரல் கேட்டு தாய்ப்ப்பசுவும் கதறியதோ
கன்றழுத குரல் கேட்டு தாய்ப்ப்பசுவும் கதறியதோ
நான் இன்றழுத குரல் கேட்டு நின் கண்ணீர் பெருகியதோ
இன்றழுத குரல் கேட்டு நின் கண்ணீர் பெருகியதோ
அன்னை முகம் பார்த்ததில்லை
அவள் மடியில் தவழ்ந்ததில்லை
அன்னை முகம் பார்த்ததில்லை
அவள் மடியில் தவழ்ந்ததில்லை
அய்யா உன் துணை தவிர வேறு துணை ஏதுமில்லை
அய்யா உன் துணை தவிர வேறு துணை ஏதுமில்லை
வேறு துணை ஏதுமில்லை
'திரை இசைத் திலகம்' கே.வி.மகாதேவன் அவர்களின் இசையில் 'வடிவுக்கு வளைகாப்பு' திரைப்படத்தில் இடம் பெற்ற அபூர்வப் பாடல். 'ஏனழுதாய்? ஏனழுதாய்?' பாடல் நம் நினைவுக்கு வராமல் இருக்காது
விஜயேந்திர இளவரசனாக நடிகர் திலகம். மன்னனாக வி.கே.ஆர். நடிகர் திலகம் வீணை எடுத்து மீட்டி மனமுருகப் பாடுவது மகோன்னதம்.
அருமையான குளோஸ்-அப் காட்சிகள். எந்த எந்த ஆங்கிள்களில் நடிகர் திலகத்தைக் கவர் செய்வது என்று காமிராமேனுக்குக் குழப்பம்.
'கன்றழுத குரல் கேட்டு தாய்ப் பசுவும் கதறியதோ'
என்று திலகம் பாடும்போது சுயநினைவிழந்த மன்னன் கண்களிலிருந்து அவனையறியாமல் கண்ணீர் வழியும் காட்சி காட்சிக்கே சிகரம். நம் கண்களிலும் அதே கோலம். அதற்குக் காரணம் நடிப்பின் ஜாலம்.
விதவிதமான காமிராக் கோணங்களில் தனக்கே உரிய முத்திரை வாயசப்புடன், கண்களில் கண்ணீருடன், சுத்தமான வீணை சுதி மீட்டலுடன், கனமான அமைதி நடிப்பைத் தந்து நம்மை அழவைக்கிறார் நடிகர் திலகம். வி.கே.ராமசாமியும் படுத்த படுக்கையில் படுபாந்தம். (படத்தயாரிப்பில் பாதி பங்குதாரர் இவர். மீதி ஏ.பி.என்.)
தந்தையின் பெருமையை பிள்ளை பேசும் பாடல். முன்பு 'மகளுக்காக' தந்தை பாடினான். இன்று தந்தைக்காக பிள்ளை பாடுகிறான்.
இரண்டுமே தந்தை பெருமை பேசுபவை.
ரவி சார் மீண்டும் மன்னிக்க. கடலூர் நண்பரும் சேர்த்துத்தான்.:)
https://youtu.be/wlv1SHOEKYQ
வாசு - மூன்றாவதாக புண்ணியம் செய்த பாடல் - நெய்வேலி பயணம் - எந்த வேலி போட்டாலும் பாடல்கள் பல உங்கள் ஊரைப்பார்த்து தான் பயணிக்கின்றன --- எனக்கு இப்பொழுது ஞாபகத்திற்கு வருவது இந்த படம் தான் !!!
http://i818.photobucket.com/albums/z...psdj835x7b.jpg
டியர் வாசு சார்,
நிஜமாகவே பார்த்திராத படம், பார்த்திராத கேட்டிராத பாடல். நடிகர்திலகத்தின் படப்பட்டியலில் 'வடிவுக்கு வளைகாப்பு' என்ற படம் இடம்பெற்றுள்ளது என்பதைத் தவிர மேலதிக விவரங்கள் எதுவும் தெரியாதிருந்தது. இன்று உங்கள் புண்ணியத்தில் கொஞ்சம் அறிமுகம் கிடைத்தது.
1963-ல் வந்த படம் என்று நினைக்கிறேன். இதே ஆண்டில்தான் ஏ.பி.என். - வி.கே.ஆர். இணைந்து தயாரித்த குலமகள் ராதையும் வந்தது. (1963 கேவி.மகாதேவன் ஆண்டு என்று கோபால் சார் சொல்வார்). இதன்பின் வி.கே.ஆர். பிரிந்து விட்டார் என்று நினைக்கிறேன். வி.கே.ஆரை கழற்றி விட்ட காரணத்தாலேயே நவராத்திரியில் நடிக்க நடிகர்திலகம் மறுத்துவிட்டாராம். மீண்டும் வி.கே.ஆர். பழைய நண்பனுக்காக வற்புறுத்தி நடிகர்திலகத்தை நடிக்க வைத்தாராம். அதன்பின் வி.கே.ஆருக்கு ஏ.பி.என் தன படங்களில் நடிக்க வாய்ப்புக் கொடுக்கவேயில்லை என்று கேள்வி.
சமஸ்தானங்களின் கதை பழையதாகிப் போன காலகட்டத்தில் வந்ததால் வெற்றிபெறவில்லை என்று நினைக்கிறேன். அதில் தப்பிப் பிழைத்ததோடு மாபெரும் சரித்திரத்தையும் படைத்தது வசந்தமாளிகை மட்டுமே.
ஒவ்வொரு முறையும் அரிய, அபூர்வ பாடல்களோடு வரும் உங்களுக்கு பாராட்டுக்கள்.
From Vaazhkkai(1949)
aasai koLLum meesaai uLLa aambaLaiya paathiyaa........
http://www.youtube.com/watch?v=ZelSkcKSXec
From Jeevitham (1950)
Chakkanaina Boya......
http://www.youtube.com/watch?v=yORkx1zZjPs
The original tune from Patanga(1949)
Pyar ki jahan nirali sarkar....
http://www.youtube.com/watch?v=uqDhw8TKmuQ
The tune was not used in the Hindi version of Vaazhkkai, Bahar.
I will never forget this song. When my father was transferred to another location after I started 8th standard in 1950, he was welcomed with a song in this tune -'aasai koLLum meesai uLLa aNNaavai paatheengaLaa......' :)
TMS- P.SUSEELA
https://youtu.be/Tk9JS0zTZ5A
TMS- JANAKI
https://youtu.be/SXcf1djh2DE
TMS- LR ESWARI
https://youtu.be/E5U55FsVikE
நன்றி வினோத் சார் - இந்த திரியில் உங்கள் மனதிற்குப்பிடித்த மற்ற நடிகர் , நடிகைகளின் பாடல்களையும் பதிவிடுவீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம் ...
கருவின் கரு - 138
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
உண்மை சம்பவம் 21:
இன்று என் மகளின் டீச்சர் வீட்டுக்கு வந்திருந்தார் - என் மகள் 5வது வகுப்பு - Oakridge இன்டர்நேஷனல் ஸ்கூல் . மகள் அந்த டீச்சர் வந்திருந்த பொழுது வீட்டில் இல்லை . வரவேற்ற நான் டீச்சர்க்கு காபி , டிபன் வரவழைத்தேன் - மனைவியும் ஊரில் இல்லை . அவள் இருக்கும் போதே சமையல் கட்டுக்கு போனதில்லை - இப்பொழுது மட்டும் எப்படி போக முடியும் ? --
மெதுவாக டீச்சரிடம் பேச்சுக்கொடுத்தேன் - " டீச்சர் அக்ஷயா எப்படி படிக்கிறாள் ? கிளாஸ் இல் ஒழுங்காக நடந்துகொள்கிறாளா ?? "
" சார் - நீங்கள் ரொம்பவும் கொடுத்து வைத்தவர் - அக்ஷயா உங்களுக்கு மகளாக பிறக்க - இன்று அவளின் வகுப்பே ஒரு பெரிய பாடத்தை அவளிடம் இருந்து கற்றுக்கொண்டது - அதைச்சொல்லத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன் ---- "
"very interesting " சொல்லுங்கள் - கேட்க மனமும் , காதும் தயாராகின ..
" இன்று ஒரு சின்ன டெஸ்ட் வைத்தோம் - குடும்பத்தில் உள்ள பிடித்தமான எல்லாருடைய பெயர்களையும் போர்டுஇல் எழுதச்சொன்னேன் .. அக்ஷயா வந்து இப்படி எழுதினாள் .....
" அம்மா , அப்பா , தம்பி , ஈஷா ( friend ) , தாத்தா , பாட்டி - இப்படி பல "
நான் இதில் இரண்டு வேண்டாத பெயர்களை அழித்துவிட சொன்னேன் - அக்ஷயா அழ ஆரம்பித்து விட்டாள் - சும்மா இது ஒரு விளையாட்டுத்தான் என்று சொல்லி இரண்டு பேரை போர்டுஇல் இருந்து நீக்கச்சொன்னேன் - அவள் தாத்தா , பாட்டி பெயரை நீக்கினாள் - பிறகு மீண்டும் இரண்டு பெயர் -- ஈஷா , தம்பியின் பெயர் நீங்கியது - மீண்டும் ஒரு பெயரை நீக்கச்சொன்னேன் - அவளின் அழுகை அதிகமாகியது - அம்மா என்ற பெயரை நீக்கினாள் - உங்கள் பெயர் கடைசி வரையில் நீக்கப்படவில்லை ...
அவளிடம் என்ன காரணம் என்று கேட்டேன் - அவள் சொன்ன பதில் எங்கள் எல்லோருக்கும் ஒரு பாடமாய் அமைந்தது ---
" டீச்சர் என் தாத்தா பாட்டி ரொம்பவும் வயதானவர்கள் - சுவாமி என்னுடன் ரொம்ப நாளைக்கு சேர்ந்து வாழ விட மாட்டார் - அதனால் அவர்களின் பெயரை முதலில் நீக்கினேன் .. ஈஷா என்னுடன் தொடர்ந்து வளர்வாள் , வருவாள் என்று சொல்ல முடியாது , என் தம்பியும் அப்படித்தான் - வளர்ந்தபின் எங்கு செல்வான் என்று சொல்ல முடியாது - என் அம்மா என்னுடன் என்றும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் . முடியுமா என்று புரியவில்லை - ஆனால் எனக்கு என் அப்பா வேண்டும் - என்றும் அவர் என்னுடன் இருக்க வேண்டும் , மனதால் , நினைவால் , செயலால் -- அவர் இல்லாத உலகம் எனக்கும் தேவை இல்லை ------"
மொத்த வகுப்பே அவளுக்கு கைத்தட்டி ஆரவாரம் செய்தது சார் !
" அக்ஷயா ! யாருக்கு புரிகிறதோ இல்லையோ நம் பந்தம் - இந்த டீச்சருக்கு புரிந்து விட்டது --- என்னை நீ இன்று புதிதாக பெற்று எடுத்தாய் மகளே !!" - எவ்வளவு நேரம் தனிமையில் அழுதேன் என்று எனக்கே தெரியவில்லை . -----
https://youtu.be/PZsBzGTglbA?list=RDp3X7wZEXpfs