-
பூரணத்தை முழுதாய்க் கொண்டே
இருந்த தா இளையவன் சிரித்த சிரிப்பும்..?
*
அரியணை மேலே அண்ணலுமே
அருகில் சீதை அமர்ந்திருக்க
அனுமனும் பணிவாய்த் தரையினிலே
அழகாய்த் தொழுதே அமர்ந்திருக்க
பின்னால் கொற்றக் குடையைத்தான்
பிடித்தே நின்ற இளயவனின்
அருகில் வந்தாள் நித்ராவும்
வ்ரவா நண்பா எனக்கேட்டாள்..
லஷ்மணன் நினைவோ முன்னால்போய்
லட்சியம் அடைய அவளிடமே
ஈரேழ் ஆண்டுகள் முன்னாலே
கேட்ட்தை நினைத்தே பார்த்ததுவே..
*
’நித்ரா தேவி உந்தனைத் தான்
நெஞ்சினில் பதித்து வணங்கிடுவேன்
இன்றுத் தொடங்கி ஈரெழு
ஆண்டுகள் எந்தன் அருகினிலே
வராமல் இருந்தால் நான் மகிழ்வேன்
அண்ணல் அண்ணி இவர்களுக்கு
பணிவிடை செய்தே மகிழ்ந்திடுவேன்..”
இளையவன் பணிவாய்க் கேட்டிடவும்
மெல்ல்ச் சிரித்தே தான் சொன்னாள்
’ ஈரே ழாண்டுகள் நானுந்தன்
அருகிலே என்றும் வரமாட்டேன்..
ஆண்டுப் பொழுது கழிந்தவுடன்
உடனே வருவேன் விடமாட்டேன்..
இளைய லஷ்மணப் பெருமாளே..
இனிதாய்ப் போய்வா’ என்றவள் தான்
இன்று பட்டா பிஷேகம் என்றே
நன்றாய் உணர்ந்தும் தான் கூட
நல்ல சமயம் பார்த்தே தான்
வருகிறேன் என்கிறாள் என்செய்ய
என்றே மனதுள் நினைத்தபடி
இளையவன் மெல்லச் சிரித்தனன்தான்..
*
பலரும் அங்கே பலவிதமாய்
இளையவன் சிரிப்பைத் தான் நினைத்தார்..
**
நாட்கள் கோள்கள் எல்லாம் தான்
முன்பே பார்த்தே தான் குறித்தீர்..
அண்ணல் அரியணை ஏறத்தான்
இவ்வளவு ஆண்டுகள் ஆனதையா..
என்றே சிரிக்கிறான் என நினைத்தார்
பிரம்ம ரிஷியான வஷிஷ்டரும் தான்..
*
எவ்வளவு கஷ்டம் தான்பட்டாய்
இனிய சித்தி நீயும்தான்
பரதன் அம்ர முடிந்த்துவோ..
பாதுகை தானே ஆண்ட்து..
என்றே நினைத்துச் சிரிக்கின்றான்
என்றே நினைத்தாள் கைகேயி..
*
கோட்டைக் கிழித்தே தான்சொன்னேன்
அண்ணி தாண்டாதே என்று..
என்னைச் சொற்களி னால்கிழித்தே
அனுப்பித் தாண்டினீர் என்னாச்சு..
கஷ்டம் இல்லாதிருந்திருக்கும்..
கனிவாய் என்சொல் கேட்டிருந்தால்’
என்றே நினைத்துச் சிரிக்கின்றான்
என்றே நினைத்தாள் சீதையும் தான்..
*
தம்பி உடம்பைப் பார்த்துக்கொள்
ஒழுங்காய் உணவை உண்டாயா
உறக்கம் நன்றாய்க் கொண்டாயா...
ஈரேழாண்டுகள் உடன் இருந்தும்
ஒருவார்த்தை இவனைக் கேட்ட்தில்லை..
அதைத்தான் நினைத்துச் சிரிக்கின்றான்
என்றே நினைத்தார் அண்ணலும்தான்..
*
லஷ்மணப் பெருமாள் யாரென்றால்
அண்ணலின் அம்சம் தானன்றோ..
பூரணம் என்ற பரம்பொருளைக்
கிள்ளியே அங்கே நின்றதன்றோ..
பூரண்ந்தன்னைக் கிள்ளினாலும்
பூரணத்தைத் தான் அடையும்..
அதுவே இறையின் விதியன்றோ..
**
பூத்த்து என்னவோ ஒருசிரிப்பு
பலரது நினைவில் பல பூக்கள்..
மலரச்செய்த லஷ்மணனை
மயங்க வைத்தாள் நித்ராவும்
சற்றே லஷ்மணன் கண்மூடக்
குடையும் சற்றே சாய்ந்த துவே..
*
-
சாய்ந்ததுவே சாம்ராஜ்யம்
சாகச ராணியின் சிரிப்பில்
பெண்பால் கவர்ச்சி வீழ்ச்சியா
பலியானார் விசுவாமித்திரரும்
சுட்டுவிரலில் ஆட்டி வைக்க
சுண்டெலியாய் ஆணை மாற்ற
வரம் வாங்கி வந்தவள்தான்
வரலாறு உரைக்கும் உண்மை
மோகினியே அமுதினைத் தா
மோகத்தால் ஆணை அழிக்காதே
-
அழிக்காதே..
அழி..
எதிர்ச்சொல் நேர்ச்சொல் விளையாட்டு
சின்ன வயதில்
அப்பாவிடம் விளையாடுவது பிடிக்கும்..
கற்றுக்கொண்ட்தும் நிறைய..
வளர்ந்த பின்னர் ஒரு நாள்.
மனதிலிருப்பதைச் சொல்வதற்காக....
எதிர்ச்சொல் விளையாடலாமா..டாட்...
‘காதலிக்காதே’ இதற்கு என்ன..
’சரி’ என்றார் அப்பா..!
-
அப்பாவுக்கு இன்று தாய் வேஷம்
வக்கணையாய் சமைத்து ஊட்டி
விளையாடிக் களித்துப் பின்னே
கதை சொல்லி தூங்கவைத்து
முழு நேர பிள்ளை வளர்ப்பு
பொறுப்பான வீட்டு பராமரிப்பு
இதுவும் புருஷ லட்சணமென்று
இன்றைய அம்மா காட்டுகிறாள்
-
காட்டுகிறாள் இயற்கை அன்னை
தனது மனதிற்குள்
பொங்கும் சீற்றத்தை..
கடலைப் பொங்க வைக்கிறாள்
பூமியை ஆட வைக்கிறாள்
ஒரு நாள் அழித்தும் விடுவாள்..
இது தெரியாமல்
இன்னும்
மண்ணின் மைந்தர்கள் என சொல்பவர்கள்
போடுகின்றனர் ஆட்டம்..
-
ஆட்டம் போட்டோம்
அன்று பாட்டி வீட்டில்
கோடை விடுமுறையில்
கூட்டமாய் உறவினர்
கற்றோம் பல விஷயம்
கூட்டமில்லை இன்று
கலையும் திறனும் கற்பிக்க
களமிறங்கும் மையங்கள்
காசினை குவித்திட
காலம் இது புதிது
குழந்தைகள் வளரும்
களமும் சவாலானது
-
சவாலானது எனச் சொல்ல முடியாது..
வரிசையாய் அடுக்கியிருக்கும் புத்தகங்கள்..
இடமும் சின்னதாக இருக்கும்..
கொஞ்சமாய் எடுத்துப் பார்த்து
கீழே வைத்து
அடுத்த்தைப் பார்க்க வேண்டும்..
அடுக்கிலிருந்து தவறிவிழும்
புத்தகங்கள் தூசு கிளப்பும்..
சற்றே தும்மல் வரச் செய்யும்..
இருந்தாலும்..
பொறுமையாய்த் தேடினால்
பொக்கிஷம் கிடைக்கும்..
கல்கியின் அமரதாரா மணியத்தின் படங்களுடன்..
சாண்டில்யனின் கடல்புறா பழைய லதாவின் ஓவியத்தில்..
ஏர்போர்ட் ராகிர தமிழாக்கம்..
கொஞ்சம் பழுப்படைந்த ஆங்கிலப் புத்தகங்கள்..
தேர்ந்தெடுத்த்தைக்
கடைக்கர் ர ரிடம் சொன்னால்..
ஆர்வத்திற்கேற்ப விலை சொல்வார்..
பேரம் பேசவேண்டும்..
எனில் அப்போது கைச்செலவுப்பணம் குறைவு..
முழுதும் வாங்க முடியாமல்
சிலவற்றை தியாகம் செய்ய வேண்டும்...
வாங்கியதை வீட்டில் எடுத்து
ஒவ்வொன்றாய்
படிக்கும் சுகம் இருக்கிறதே..அட்டா..
இப்போது
புதியவைகளையே வாங்க முடிகிறது..
இருப்பினும்
அன்று அப்படி வாங்கிய சந்தோஷம் இல்லை....
வாங்கலாம் என்றால்
பழைய புத்தக்க் கடைகளும்
அவ்வளவாய் இல்லை..
-
இல்லை இன்று இலக்கணம்
இயல்பாய் மலர்ந்து காய்த்து
இனிப்பாய் கனிந்த காட்சி
பொருத்தமான பருவத்தில்
பூக்காத மணக்காத சூல்கொள்ளா
பொருள் தேடும் பெண்பூவில்
இருக்கிறதா ஈர்க்கும் அழகோ
இனம் வளர்க்கும் சாரமோ
-
சாரம் எல்லாம் அவிழ்த்து,
எல்லா வேலைகளும் முடிந்து,
வண்ணமயமாய்...
புதியதாய் நடிக்கும் வெகு இளைய கதானாயகி போலப்
பளிச்சென இருந்த்து..
ம்ம்.இரண்டு வருடப் பழக்கம்..
இனி அவ்வளவு தான்..
கடைசி நாள் சம்பளம்
மேஸ்திரி வாங்க
கையசைத்தது வீடு...
-
வீடு போ போங்குது
காடு வா வாங்குது
பெருசுகள் சொல்லில் அலுப்பு
பொழுதுக்கும் பேசும் புரணி
மனம் முழுக்க வினை வம்பு
மரியாதை தகும் வயது
அதனால் தப்பிக்கும் தவறு
இப்படியும் இருக்கு சில கிழடு