hmm ok :)
Printable View
hmm ok :)
HOW DID THE LION GOT ITS MANE?
(in coherence with rudyard kipling's how did camel got its hump.how the leopard got its spots,etc.
"லூசுப்பெண்ணே...." பாடலை ரேடியோ சிலம்பரசன் குரலில் மிமிக்ரி செய்துகொண்டிருந்தது.சிங்கம்,சிறுத்தை,புலி மூன்றும் குட்டிச்சுவரின் மேல் அமர்ந்துகொண்டு கரடியை ராகிங் செய்துகொண்டிருந்தன.திடீரென்று ஓர் அழகிய நரி அங்கு தென்பட,மூவரும் தலையை வாரிக்கொண்டு சுவற்றிலிருந்திறங்கினர்.சிங்கம் தெரியாதது போல போய் நரியை முட்டி இருவௌம் குனிந்து சிதறியவற்றை எடுக்க ரொமான்ஸுக்காக காதலுக்கு மரியாதை தீம் சாங்.மெல்ல சிங்கம் நெற்றியில் பேனாவை இடித்து கவியியற்ற பழகியது.தினந்தோறும் பைத்தியக்காரன் போல sms-உம் e-mail-உம் அனுப்பியது.நரி,மனமறியாது காதல் வலையில் சிக்குண்டது.இன்பத்தில் இருவரும் உட்புகுந்தூடுருவி திளைக்கலாயினர்.ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் அமெரிக்க காடுகளில் டூயட் ஆடினார்கள்.வழக்கம் போல சிறுத்தையும்,புலியும் ரீட் வாங்கிக்கொண்டன.அவ்வப்போது மடலை தூதாய் எடுத்தபடி.காட்டின் அருவி,குகை,மலை எல்லாம் காதலர்களின் வாசற்தலமாயிற்று.திடீரென்று நரியின் வீட்டில் பெண் பார்த்து விட்டார்கள்.சிங்கத்தின் அப்பா வேறு நாட்டாமையானதால் சாதி வழக்கம்,சம்பிரதாயம் என ஏக கெடுபிடி.எல்லாவற்றையும் சிங்கம் உடைத்துக்கொண்டு முன்னேற சிங்கவிழியில் விழுந்த பிம்பம் நரியின் கழுத்தில் கண்ணாடியணிந்த ஒரு பட்டதாரி நரி தாலி சாதியதே.மனம் வெதும்பி குடித்தது.சோககீதங்கள் வாசித்தது.....அப்புறம் தாடி வளர்த்துக்கொண்டது.அதையே மற்ற சிங்கங்களும் பின்பற்றின,அந்த சிங்கத்தின் அஞ்சலியாக.இதை நாம் பிடரி(mane)என்று அழைக்கிறோம்.
(சிறுத்தையும்,புலியும் என்ன ஆயின என்று நீங்கள் கேட்கலாம்.அவை தத்தம் வீட்டில் பார்த்த மணமகள்களை விவாகம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டன)
இதுவே சிங்கத்துக்கு பிடரிமுளைத்த கதை!
கடிவாளக்குதிரை.
சேவலை ஓவர்டேக் செய்யும் மின்னனு கடியாரம் என் நித்திரை கலைக்க,காதைத்திருகி அணைக்கிறேன்,
என் உறக்கத்தையும் சேர்த்து.
நட்சத்திரங்களுடன் கைகோத்து டியூஷன் வகுப்புக்கு புறப்பாடாக calculus எனக்கு தாலட்டு பாடுகிறது.
ஆசிரியரது கர்ணகொடூரமான கத்தல் என்னை வெளியே அனுப்பிவிட கொஞ்சம் காலைக்காற்றை முத்தமிடுகிறேன்.
மீண்டும் வீடு திரும்புகிறேன்.
கழிவறைக் குழாய்களுக்கும்,வாளிகளுக்கும் ஒரு நிர்வாண நடனம் புரிந்தபடி முடிகிறது அரைகுறை ஸ்நானம்.
lambhorgini-யென பாவிக்கும் மிதிவண்டியை செலுத்துகிறேன் நரகத்திற்கு,இன்னும் சுருக்கமாக பள்ளிக்கு.
அங்கே என்னைப்போலவே செத்துப்போயிருக்கும் பலருக்கு வணக்கம் சொல்கிறேன்.
மீண்டும்மீண்டும் என் மண்டை புத்தகத்தின் மேல் குறட்டைகளோடு மோதிக்கொள்கிறது.
மொழி தெரியாத ஊரின் நாடகமாய் வகுப்புகள் கண்களை கரிக்க வைக்கின்றன.
மாலையாகிவிட்டபடியால் சமோசா வாசம் கனவுகளில்கூட வரும்.
இறுதிமணி கனவுக்கண்ணாடியை உடைத்து வீடு செலுத்தும்.
சாயுங்காலம் முழுதும் மறுநாள் வாந்தியெடுக்க வேந்திய பக்கங்களை புசித்தாக வேண்டும்.
அடுத்த நாளுக்காக இரவில் மீண்டும் அலாரம் வைக்க வேண்டும்.
சேவலை ஓவர்டேக் செய்யும் மின்னனு கடியாரம் என் நித்திரை கலைக்க....
இப்போது சொல்லுங்கள் இது அறுபதாம் சுதந்திர ஆண்டா?
************************************************** *************
பின்குறிப்பு:மன்னிக்கவும் தூக்கத்தில் நெடுவினா பாங்கில் பாயிண்டு,பாயிண்டாக எழுதிவிட்டேன்,நல்லுறங்க வாழ்த்துக்கள்.
:lol: :rotfl:Quote:
Originally Posted by VENKIRAJA
:clap:
தருமபுரி ட்ரெய்லர்.
with just a day to go to diwali,lets sneek peek a trailor of captain vijaykanth+dooptain perarasu combo's DHARMAPURI.
(lets assume captain's name to be dharma)
முதலில் இரண்டு கண்கள் தோன்றுகின்றன,அதில் கட்சிக்கொடி பிரதிபலிப்பாகிறது.
அந்தக்கண் மெல்ல சவசவவென நரம்பேறுகின்றன....அப்படியே திரை முழுக்க சிவப்பாகிவிடுகிறது.
FROM THE PRODUCER OF AZHAGESAN,AMBUTTU IMBUTTU EMBUTTU,JORE,VAYASU PASANGA,etc....
FROM THE DIRECTOR OF THIRUPPACHI,SIVAKASI,THIRUPATHI...
PURATCHIKKALIJNAR VIJAYKANTH IN DHARMAPURI:the judge,the jury,the executioner.
ஆயிரம் யானைகள் பேக் கிரவுண்டில் நடந்துவர கேப்டன் வருகிறார்,வணக்கம் போடுகிறார்.
"தருமா வந்தா கருமம்
எருமையை போல இருக்கும்..." என்ற intro சாங்.
சிகப்பு ஷர்ட்,நீல பெல்ட்,பச்சை பேண்ட்,மஞ்சா ஷூ போட்டு அவர் பல திசைகளில் திரும்புகிறார்.
(dance master:kanal kannan;நடனம்,சண்டை எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கும்)
விஜயகாந்த் நடக்க d.t.s-ல் ஹா ஹா தருமா ஹா ஹா தருமா என்றுசொல்ல கேப்டன் ஒரு ஏழுமாடி ஹோட்டலின் சுவர் வழியாகவே
மொட்டைமாடி அடைகிறார்.
[scenum fightum nadunauve mix aaki varukinrana]
டேய்!
எவனாயிருந்தாலும் சரி(ஒருவனை எகிறி கைமுட்டியால் முகத்தில் எத்துகிறார்)
எமனாயிருந்தாலும் சரி(கையால் இருவர் காலால் இருவர் என நால்வரை அடித்து துவம்சம் செய்கிறார்)
என் பேரோ தருமா!(பறவைகள் கோபுரத்திலிருந்து பறந்து நிற்க,அலைகள் நிற்கின்றன)
என்கிட்ட வச்சிக்கிட்டீங்க(நாக்கை மடித்து)ஆயிடுவீங்க குருமா!(அலைகள் ஓடுகின்றன,பறவைகள் பறக்கின்றன)
lady voice:theni kunjaramma.
"கும்பிடப் போன அனுமாரு - அட
குறுக்கே வந்ததடா!
குறுக்கே வந்த அனுமாரு என்
கூடே ஆடுதடா!"
ஹீரோயினி:சார்,சார்!1 4 3.
கேப்டன்:ஏய் நான் தமிளன்!
ஹீரோயினி:ச..சா.சார்!ஐ லவ் யூ!
கேப்டன்:அப்பிடி தமிள்ல சொல்லு!
(திரும்பி)ஏய் நான் விஜயகாந்தா இருக்குறதும்,எஸ்.ஜே.சூர்யாவா மாறுறதும் உன் கையில தான் இருக்கு.
வாலில்லாத யானையாக ராபின் பிளு சிலீவ்லெஸ் பஞ்சகச்சத்தோடு:
"அட என்னத்த சொல்லுவேங்கோ!
africa யானை ஆடுதுங்கோ
africa யானை ஆடட்டுங்கோ
தாம்புக்கயித்தால கட்டிப்போடுங்கோ."
அவ்வப்போது ஆவ் ஆஆவ் என்றெல்லாம் செய்கிறார்.படத்தின் ஹைலைட்டாக தொப்புளில் ராக்கெட் விடுகிறார்.
மதுரை ஏர்ப்போர்ட் zoom செய்யப்படுகிறது.பிளைட் மேகங்களுக்கு நடுவே பாயும் போது ஒருவர் புட்போர்டில்
தொங்கியபடிக்கு பாடி வருகிறார்.வெள்ளை கோட்-சூட்டில் லேண்டிங் ஆவதற்கு முன்பே ரன்னிங்கில் விமானத்தை விட்டு
இறங்குகிறார்.அவர் வேறு யார் நம் பேரரசு தான்!
ஏர்ப்போர்டில் கஸ்டம்ஸ் ஆபீசரிடம் ஒரு ரீல்நீள ஸ்டண்ட்.ஏண்டா எது மூடியிருந்தாளும் திறந்து
பார்த்துடுவியா?படவா!தொழில்ல மொத்தம் மூணு வகை இருக்கு.....!
காண்டாமிருக சைஸ் மாலையோடு விஜயகாந்த் வணக்கம் சொல்ல பேரரசு அவரை கட்டிக்கொள்ள தீபாவளி நல்வாழ்த்துக்கள் என
போடுகிறார்கள்.
story(!)screenplay,dialogue,dubbing,cast,mixing,po ster,editing,lyrics,lighting,villain,re-recrding,music,camera,choreo,make-up,helper boy,direction:PERARASU.
:lol: :rotfl:
a 9 word story:
"என்னை கொலை செய்ய வருகிறார்கள.காப்பாற்றுங்கள்,காப்பாற்றுங்கள்,ஐயோ... ..."
"ச்சீ கனவு"
:rotfl:Quote:
Originally Posted by VENKIRAJA
adachi.dreams have no limits. a guy can have any dream. even i m dreaming of killiing u :twisted: :shock: :x :?: :roll: :cry: