Article from Today's deccan herald
http://www.deccanherald.com/content/...s-made-of.html
Printable View
Article from Today's deccan herald
http://www.deccanherald.com/content/...s-made-of.html
திரு முத்தையன் அம்மு அவர்கள் பகிர்ந்து கொண்டுள்ள மேலே காணப்படும் இரு நிழற்படங்களிலும் மேலும் ஒற்றுமைகள் உள்ளன.
இரண்டுமே மெர்க்காராவில் படமாக்கப்பட்ட காட்சிகள். இரண்டுமே ஒரே ஆண்டில் - 1975ல் - வெளிவந்தவை. இதயக்கனி, டாக்டர் சிவா இரண்டிற்குமே இசை மெல்லிசை மன்னர்.
வேற்றுமைகள் ... இதயக்கனியில் இப்பாடல் காட்சிக்கான பாடலைப் பாடியவர் டி.எம்.எஸ். அவர்கள். டாக்டர் சிவா பாடலைப் பாடியவர் ஜேசுதாஸ். இதயக்கனியில் இப்பாடலாசிரியர் நா. காமராசன், டாக்டர் சிவா விற்காக எழுதியவர் வாலி.
இதே போல் பாடலின் சூழல் வேறு.
http://i1065.photobucket.com/albums/...psrt2mpjkj.jpg
இரண்டாவது முறையாக
கோவை மாவட்ட சிவாஜி ரசிகர்
மன்றங்களின் கலந்தாய்வு கூட்டம்இன்று காலை வ.உ.சி .பார்க்கில்நடைபெற்றது.
கூட்டம் நடைபெற்ற சிறிது நேரத்தில் கேன்சர் நோயால் பாதிப்படைந்த நபர்ஒருவர்உதவி கேட்டு வந்தார்.அவருக்கு 5 நிமிடத்தில்1500 ரூபாய் சிவாஜி ரசிகர்களின் சார்பாக வழங்கப்பட்டது.
கூட்டத்தில் கட்டபொம்மன் படத்திற்கு சிறப்பாக செய்வது பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.
மேலும்சென்னையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்குகோவையில்
்இருந்து100 நபர்களுக்கு மேல் செல்வது என முடிவு செய்யப்பட்டது.
திரு முத்தையன் அம்மு - உங்களிடமிருந்து கற்று கொள்ளவேண்டியவை - பொறுமையும் , கடமை உணர்ச்சியும் , ஒரு புகை படத்தை upload பண்ணுவது எவ்வளவு கடினம் என்பதை சமீபத்தில் தான் உணர்ந்துகொண்டேன் - சரியான புகைப்படமாக இருக்கவேண்டும் , சரியாக கை கால்களுடன் படத்தை upload செய்யவேண்டும் , திரியில் ஏற்றும் முன் ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்துக்கொள்ள வேண்டும் , photobucket மூலம் படம் போடுவதென்றால் நமக்கு கொடுக்கப்பட்ட வரைமுறைக்குள் இருக்கவேண்டும் - ஒரு படத்திற்கே இப்படி என்றால் , மழை பெய்வதுபோல் , அம்புகள் வில்லிலிருந்து வருவதைப்போல போட மிகுந்த பொறுமையும் , திறமையும் இருக்க வேண்டும் . சாதாரண விஷயம் இல்லை சார் ! உங்கள் படங்கள் இரு திரிக்கும் ஒரு பாலமாகவும் , ஒற்றுமையை வளர்க்கக்கூடியதாகவும் இருக்கின்றது - உங்கள் கடமை உணர்ச்சிக்கு ஒரு பெரிய salute !!!
அன்புடன்
ரவி
MADURAI CENTRAL THEATER is the POINT OF ATTRACTION
NADIGAR THILAGAM's CLASSIC BLOCKBUSTER PAAVAMANIPPU ROCKS @ CENTRAL THEATER, MADURAI SINCE FRIDAY.
THIRD CONSECUTIVE DAY, PAAVAMANIPPU HAS SURPASSED THE COLLECTION OF ALL PREVIOUS SCREENED FILMS IF THE INFORMATION FROM THE SOURCE HAS TO BE BELEIVED.
TILL TODAY EVENING, PAAVAMANIPPU HAS COLLECTED A WHOPPING RS.60,000 (APPROXIMATELY).
THANKS TO THE EXCELLENT POSTER DESIGN OF Mr. SUNDERRAJAN & AN EXCELLENT FILM CHOOSING CAPABILITY OF Mr. V.CHANDRASEKHAR.
MORE SPECIFICALLY, THIS THE 4th TIME THAT Mr. CHANDRASEKHAR & Mr. SUNDERRAJAN TEAM PROVED ONE OF THE UNREALISTIC BIASED CRITIC OF MADURAI WRONG & WHO DELIBERATELY HAD GIVEN NEGATIVE OPINION ABOUT "PAAVAMANIPPU" TO THE THEATER MANAGEMENT.
I PITY THAT UNREASONABLE, UNREALISTIC BIASED CRITIC FOR HIS CONTINUOUS FAILURE IN TRYING TO DAMAGE THE IMAGE OF A GOOD FILM IN THE MIND OF THE THEATER MANAGEMENT IN TERMS OF THE FILM's CURRENT CAPABILITY AT BOX OFFICE ! AN ATTEMPT PURELY AIMED @ BRAINWASHING THE THEATER MANAGEMENT SO THAT THEY DO NOT SCREEN SUCH EXCELLENT FILMS OF NADIGAR THILAGAM!
THEATER MANAGEMENT HAS ALREADY UNDERSTOOD HIS INTENTIONS AND AM SURE, THEY WILL POOH - POOH THIS PERSON SHORTLY !!!!
CONGRATULATIONS CHANDRASEKHAR SIR & SUNDERRAJAN SIR FOR YOUR UNTIRING EFFORTS IN ONCE AGAIN ESTABLISHING OUR FOOTING @ MADURAI CENTRAL !!!
THOUGH, WE DO NOT HAVE THE ADVANTAGE OF ONE MORE GOVERNMENT HOLIDAY IN THE NEXT FEW DAYS, AM SURE, PAAVAMANIPPU WILL REMAIN THE TOPPER FOR THE FIRST 4 DAYS COLLECTION & WILL CLIMB UP THE LADDER TO NO.1 !
EXCELLENT WORK TEAM SIVA MOVIES !!!! CONGRATS...!!! WISHING YOU MANY MORE LAURELS & ACHIEVEMENTS IN THE YEARS TO COME !!!
YOU HAVE SHOWCASED AN EXCELLENT THEME FILM ...NEED OF THE HOUR SUBJECT !!!
AM SURE SUCH FILMS SHOULD RECEIVE THIS WARM WELCOME.
ELLORUME KONDAADUGINDRANAR PAAVA MANIPPU THARUM NADIGAR THILAGAM NADIPPAI !
REGARDS
RKS
திருச்சியில் வரலாறு காணாத வசூல் சாதனை படைத்து விட்டார் திரையுலக மன்மதன் சின்ன ஜமீன்.
கடந்த 10 வருட வரலாற்றில் திருச்சி கெயிட்டியில் ஞாயிறு மாலை காட்சி ஹவுஸ்புல் ஆன ஒரே படம் வசந்த மாளிகை
இன்று மாலை காட்சியில் வெகு நாட்களுக்கு பிறகு ரசிகர்களே 150 க்கும் அதிகமாக வருகை புரிந்தது விசேஷமாக இருந்தது. ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தால் திரை அரங்கு திணறியது.
வெள்ளி சனி ஞாயிறு மூன்று நாட்களில் மட்டும் வினியோகஸ்தர் லாபமாக ரூபாய் 8000 ஐ தாண்டியது ம்கப்பெரிய சாதனையாகும்.
படத்தை வெளியிட்ட ஏ வி எம் நிறுவனத்திற்கு மிக்க சந்தோஷம். எல்லோருக்கும் கைகொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
மேலும் வேர்ல்டு கப் மற்றும் ipl சீசன் ஆரம்பித்து அதிக லாபம் அடைந்த படமே இது ஒன்றே. இதற்கும் ஏற்கனவே ராமக்ரிஷ்ணாவில் திரையிட்டு 10 மாத இடைவெளியில் தற்போது கெயிட்டியில் வெளியாகி சாதனை படைத்து விட்டது வசந்த மாளிகை.
இன்று மாலை காட்சி சரியாக 6.45 க்கு ஹவுஸ்புல் ஆகி தியேட்டரில் ஹவுஸ்புல் போர்டு இல்லாமல் நமது ரசிகர்களே போர்டில் எழுதி வெளியில் விட்டார்கள்
தியேட்டரில் எடுக்கப்பட்ட அலங்கார பதிவுகள் நாளை பதிவிடப்படும்
திலக சங்கமம் *
Sivaji Ganesan - Definition of Style 19
பாவை விளக்கு
http://i1110.photobucket.com/albums/...laar/PV1-1.jpg
படிக்காத மேதை வெற்றியைத் தொடர்ந்து திரை இசைத்திலகம் கே.வி.எம். நடிகர் திலகத்துடன் இணைந்து வெளிவந்த அடுத்த படமாக பாவை விளக்கு அமைந்தது. சொல்லப் போனால் நடிகர் திலகத்திற்குள் இருந்த பாடகரை மிகப் பிரபலமாக அடையாளம் காட்டியவர் திரை இசைத்திலகம் கே.வி.எம். அவர்கள். தமிழ்நாட்டில் மட்டுமின்றி புவியெங்கும் தமிழர் வாழும் பகுதிகளனைத்திலும் தவறாமல் சென்று சேர்ந்து உச்சாணிக் கொம்பில் சென்று அமர்ந்து கொண்ட பாடல் வண்ணத்தமிழ்ப் பெண்ணொருத்தி பாடலாகும். வித்தியாசமான பாணியில் நடிகர் திலகத்தின் கவிதைக் குரலில் இசைச்சித்தரின் பாட்டு ஒலிக்க எஸ்.ஜானகியின் ஹம்மிங்குடன் இணைந்து கேட்போரைப் பரவசப்படுத்தியது வண்ணத்தமிழ்ப் பெண்ணொருத்தி பாடல். அன்று தொடங்கி இன்று வரையிலும் இன்னும் பல ஆண்டுகளுக்கும் ரசிகர்களின் நெஞ்சில் இப்பாடலுக்கு சிறப்பான இடம் உண்டு. இதே பாவை விளக்கு திரைப்படத்துடன் அதே நாளில் வெளியான பெற்ற மனம் திரைப்படத்திலும் நடிகர் திலகத்தின் குரல் ஒலிக்கும் பாடல் மிகச் சிறப்பாக இருக்கும். ஆனால் படம் சரியாக மக்களை சென்றடையாத காரணத்தால் அப்பாடல் அதிகம் அறியப்படவில்லை.
பாவை விளக்கு திரைப்படத்தைப் பொறுத்த வரையில் அகிலனின் நாவல் முழுமையான திரைவடிவம் பெறவில்லை என்று ஓர் விமர்சனம் இருந்ததுண்டு என்றாலும் அதையெல்லாம் புறந்தள்ளி இன்றளவிலும் இத்திரைப்படம் மிகவும் ரசிக்கக் கூடிய வகையில் இருப்பது மகிழ்வூட்டக்கூடியதாகும்.
குறிப்பாக இயல்பு நடிப்பு என்ன வெனத் தெரியாதவர்கள் இப்படத்தைப் பார்த்து அதனைக் கற்றுக் கொள்ள வேண்டும். Casual என்றால் அப்படி ஒரு Casual நடிப்பினை வழங்கியிருப்பார். சுமார் ஒரு நிமிடம் ஓடக் கூடிய மங்கியதோர் நிலவினிலே பாடலில் சௌகார் ஜானகியைப் பார்த்து நடிகர் திலகம் பாடுவதாக வரும் காட்சியில் அவருடைய மந்தகாசப் புன்னகை ஆஹா.. பார்த்துக்கொண்டே இருக்கலாம். கே.வி.எம். அவர்கள் மிக இனிமையான மெட்டில் பாட்டை அமைத்திருப்பார்.
வண்ணத்தமிழ்ப் பெண்ணொருத்தி பாடல் காட்சியில் கதாநாயகியின் பெயரையே பாடலில் பயன்படுத்தி வரியை முடித்திருப்பார் மருதகாசி அவர்கள். கமலம் செங்கமலம் என குமாரி கமலா அவர்களை வைத்து எழுதியிருப்பார்.
இப்பாடல் காட்சியில் குறிப்பாக கவனிக்க வேண்டிய வரிகள்...
அன்னம் கூட அவளிடத்தில் வந்து நடை பயிலும்
ஆடல் கலை இலக்கணத்தை அறியவரும் மயிலும்
இன்னிசையைப் பாடம் கேட்க எண்ணி வரும் குயிலும்
இயற்கையெல்லாம் அவள் குரலின் இனிமையிலே துயிலும்
இந்த சரணத்தின் போது இன்னிசையைப் பாடம் கேட்க பாடிய பின் ஜானகியின் ஹம்மிங் ஒலிக்கும் போது நடிகர் திலகத்தின் நடை இருக்கிறதே... ஆஹா...கடவுள் நமக்கு கண் படைத்ததற்காக மனம் கோடிக்கணக்கில் நன்றியைக் கொட்டும்...இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.. அந்தப் புன்னகையைப் பாருங்கள்..
இயற்கையெல்லாம் அவள் குரலின் இனிமையிலே துயிலும் வரிகளின் போது ஒரு சின்ன சீண்டல், துடுக்கு ... இளமையின் பிரதிபலிப்பை எவ்வளவு அழகாக சித்தரிக்கின்றனர் இவர்கள்...
அது மட்டுமா...
கமலம் செங்கமலம் எனப் பாடி முடித்தவுடன் புரண்டு வருவார் பாருங்கள்... அழகு என்றால் அவ்வளவு அழகாகப் புரண்டு வருவார்..
மனுஷன் புரண்டு வருவதில் கூட ஒரு ரசனையைத் தருகிறார்...
இவரைப் போய் மிகை நடிப்பு என்று கூறுகின்றார்களே.. அந்த ஈனபுத்திக் காரர்களையெல்லாம் என்ன செய்ய...
இயற்கை நடிப்பிற்கும் இலக்கணம் வகுத்த அவதாரமல்லவா நடிகர் திலகம்...
இனியென்ன பாருங்கள் காட்சியை... உணருங்கள் அந்த அற்புத அனுபவத்தை...
https://www.youtube.com/watch?v=7Vs3tTDYAyY