-
அன்பு ராஜேஷ்,
மதுர கானங்கள் திரியின் மூன்றாம் பாகம் துவக்கிய உங்களுக்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துகள். தாமதத்திற்கு மன்னிக்க! என்றென்றும் நமது இசையரசியின் புகழ் பாட வாழ்த்துகள்!
இரண்டாம் பாகத்தை துவக்கி குறுகிய காலத்தில் அதை சிறப்புற செய்த அருமை நண்பர் கிருஷ்ணாஜி அவர்களுக்கு பாராட்டுக்கள்!.
ஒரு பணியை ஏற்றுக் கொண்டால் அதற்காக உழைப்பதில் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தரும் அருமை நண்பர் வாசுவிற்கும் பாராட்டுக்கள்.
பொங்கும் பூம்புனல் ராகவேந்தர் சார், நடமாடும் பாடல் களஞ்சியம் மதுஜி [சென்னையில் இருக்கிறீர்களா மதுஜி? அதே அலைபேசி எண்தானா? சில வருடங்களாக ஏப்ரல் 6 அன்று அந்த எண்னை விளித்து விளித்து லைன் கிடைக்கவில்லை. மாதத்தில் ஒரு முறை நடைபெறும் நமது NT FAnS screening-ற்கு வரலாமே!), பழைய விளம்பரங்கள், புகைப்படங்கள் மற்றும் சில பத்திரிக்கை செய்திகள் போன்றவற்றை பதிவிடும் வினோத் சார், அருமை நண்பர் சுந்தரபாண்டியன் (sss), மூத்த சகோதரர் ராஜ்ராஜ் அவர்கள் ஆகிய அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்!
எத்தனை பேர் இருந்தாலும் அங்கே தனியாக தன் எழுத்துக்களால் நிற்கும் கார்த்திக் அவர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்!
Last but not the least - இந்த ஹப்பிலேயே ஒரு தனித்துவ (unique) எழுத்து நடை கொண்ட பல்வேறு வித இசை வடிவங்களை எல்லாம் கரைத்துக் குடித்த அருமை நண்பர் old turk கோபாலுக்கும் வாழ்த்துகள்!
பெயர் விடுப்பட்டுப் போன பங்களிப்பாளர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்!
அன்புடன்
-
மாலை மதுரம்.
'அமரகவி'.
இதுவும் 1953-ல் வெளிவந்த பாகவதரின் படம். ஆனால் எதிர்பாரா வகையில் தோல்வி அடைந்தது பல்வேறு காரணங்களினால். பாகவதருக்கு 'வண்ணக்கிளி' பி.எஸ்.சரோஜா இணை இப்பாடலில்.
செடி மறைவிலே ஒரு பூங்கொடி
மறைந்தே மாயம் செய்வதேன்
செடி மறைவிலே ஒரு பூங்கொடி
மறைந்தே மாயம் செய்வதேன்
பிடிக்க வந்தாலே ஓடிடுவேனே
நிஜமே இது எனையே தொட முடியாதும்மாலே
அபூர்வமான இனிமை கொஞ்சும் பாடல். பாடலைத் தரவேற்றிய அன்பருக்கு நன்றி!
https://www.youtube.com/watch?v=APkS...yer_detailpage
-
மிக்க நன்றி முரளி சார். எவ்வளவு நாட்களாயிற்று? நலம்தானே! தங்கள் பங்களிப்புகள் அவசியம் இப்பாகத்திலாவது அதிகம் இடம் பெற வேண்டும் என்பதே என் ஆசை. எங்கள் அனைவரின் ஆசை கூட.
-
வாசு ஜி..
குலேபகாவலி பாட்டு பிரமாதம். ரொம்ப நாளாச்சு. இந்தப் பாட்டிலேயே ஹிந்தி, மலையாளம், தெலுங்கு எல்லாம் வருமே..
இதைக் கேளுங்க..
http://youtu.be/S-eOSgnZdjU
-
என்னுடைய சிறு பங்களிப்பை பாராட்டிய இனிய நண்பர் திரு முரளி ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு நன்றி ..
-
எல்.ஆர்.ஈஸ்வரி பெயரைப் படித்ததும் இந்தப் பாட்டு நினைவுக்கு வந்தது. ரொம்ப நாளாச்சு பார்த்து கேட்டு..
துடித்ததென்னவோ...வ்வ்வ்வ்...கவனிங்க..
படம் :ஒளிவிளக்கு
http://youtu.be/wTGoS8drHbI
-
நன்றி! ஆமாம் மதுஜி. அருமை. பாடலின் நீளம் அதிகமாய் இருப்பதால் 'நாகலிங்க நாகப்பாம்பு' போர்ஷனை மட்டும் எடுத்துக் கொண்டேன். :)
'என்ன வேணும் துரையே
இஷ்டம் போலே கேள் இனியே'
வித விதமாக மாற்றி மாற்றிப் பாடுகிறார்!
'பியாரி ஆவோ ஹமாரா லட்டு'
'பந்தமுள்ள சுந்தராங்கி பகட களிக்கான் வந்நு'
'நாடு விட்டு நாடு வந்நு நசிச்சிப் போகாதே ராஜா'
வார்ர்ரே வா!
-
மதுஜி!
இன்னொன்று தெரியுமா? நீங்கள் பதித்துள்ள 'யய்யய்ய... நான் கண்ட கனவினில் நீ இருந்தாய்' பாடலைப் பற்றி என் நண்பருடன் நேற்று மாலை பேசி மகிழ்ந்திருந்தேன். கூடவே 'ருக்குமணியே'வும். இன்று நீங்கள் சொல்லி வைத்தாற் போல் பதிந்து விட்டீர்கள்.
அதுவும் 'லுலுலுலுலுலு' அட்ட்டகாசம். 'ஜின்ஜன ஜன ஜின்ஜன ஜின்ஜன' ஆரம்பம் கேட்கவே வேண்டாம்.
'பந்து போல எனை எடுத்து தன் பக்கம் வைத்தா னோ' ('னோ' தனியாக கேட்குமே! அதுதான் ராட்சஸி)
இசை சாம்ராஜ்யம் கொடி நாட்டுகிறது.
-
பொங்கும் பூம்புனல்
இது ஒரு அபூர்வ பாடல். இனிமை சற்று மிஸ்ஸிங் தான். நாடோடிகளைப் பற்றிய பாடல் என்றாலும் இசைக்கருவிகள் பாடலின் கருத்தோடு ஒன்றவில்லை. ஒரு வேளை படத்தில் காட்சியமைப்பு எப்படியோ..
எஸ்.டி.சேகர் இசையில் ஊருக்கு ஒரு ராஜா படத்திற்காக வாணி ஜெயராம் பாடிய பாடல்.
http://play.raaga.com/tamil/browse/m...-Raja-T0002266
-
பொங்கும் பூம்புனல்
சுராங்கனி பாட்டு தமிழ் சினிமாவை அந்நாட்களில் ஒரு வழி படுத்தி விட்டுத் தான் போனது. விஜய பாஸ்கர் மட்டும் விதி விலக்கா..
இதோ பல்லவியை மட்டும் அந்த மெட்டில் போட்டு அவருக்கே உரிய மெட்டில் ஒரு குத்துப் பாட்டு...
ராஜாவுக்கேத்த ராணி படத்திற்காக எஸ்.பி.பாலா மற்றும் எஸ்.ஜானகி குரல்களில்...
ராஜா வந்தார் ராணி வந்தார்
http://play.raaga.com/tamil/browse/m...-Rani-T0002334