ஆம் என்கிறாள் நெஞ்சழுத்தமாய்
எடுத்தாயா பணத்தை என்றதற்கு
சட்டைப் பையில் எடுத்தது முன்பு
வங்கியில் ஏடிஎம்மில் பிற்பாடு
வீட்டிலிருந்தே எண்ணை அழுத்தி
இணைய சந்தையில் வாங்க இன்று
Printable View
ஆம் என்கிறாள் நெஞ்சழுத்தமாய்
எடுத்தாயா பணத்தை என்றதற்கு
சட்டைப் பையில் எடுத்தது முன்பு
வங்கியில் ஏடிஎம்மில் பிற்பாடு
வீட்டிலிருந்தே எண்ணை அழுத்தி
இணைய சந்தையில் வாங்க இன்று
இன்றிருக்கும் ஆனந்தங்கள் எப்பொழுதும் இல்லையென
பின்வந்த பிஞ்சுகள் சொன்னாலும் - எண்ணத்துள்
ஆமென்று சொல்வதற்கு ஆசைதான் ஆனாலும்
நாமென்ன சொல்வ திருக்கு..
சொல்வதிருக்கு ஆயிரம் உண்மைகள்
சொல்லாமல் விளங்கும் அதிசயங்கள்
மௌனமாய் உணர்த்தும் அர்த்தங்கள்
சொல்லொணா இனிய அனுபவங்கள்
அனுபவங்கள் பற்றித்தான் சொல்வ தற்கு
...அசந்திடவே மாட்டாளே செல்லாப் பாட்டி
அனுஅம்மா உங்களுக்குத் தருவ தற்கு
..அவஸ்தைபல நான்பட்டேன் அறிவீர் நீவிர்..
துணுக்குறவே வைத்திடவே கேட்போம் நாங்கள்
..தோராயம் எட்டுபெற்ற காரணம் என்ன?!
முணுக்கென்றே நாணமுடன் கோபம் கொண்டு
..முனகித்தான் சென்றிடுவாள் கொல்லைப் பக்கம்!!
கொல்லைப் பக்கம் வழியுண்டு
நுழைந்திடுவர் பசை கொண்டு
தகைமை இல்லா பேராசையே
நாட்டை உலுக்கும் பைசாசமே
பைசாசமே பூதமே
பேயே என்றெல்லாம்
திட்டு வாங்கினாலும்
தயங்காமல்
நாற்காலியைப் போட்டு
உயர ஏறி
கோலமாவு டப்பாவைத் தரையிலும்
தலையிலும் தள்ளி
பே என்று சொல்லிச்
சிரிக்கிறது
குட்டிப் பிசாசு..
பிசாசு உலாவுமோ பனங்காட்டு இருட்டில்
சலசலக்கும் ஓலைகளும் அதன் ஓலமோ
சிறு நரிகளுக்கு பழகிவிட்டது பயமில்லை
சட்டத்தின் வெத்து சத்தமும் அப்படியே
அப்படியே நில்லென்றால் நிற்க மாட்டாய்
..அழகாக வக்கணைகள் முகத்தில் காட்டித்
துப்புவதாய் வாய்கோணி இருக்கும் போது
..தொடர்ந்துவரும் படமெடுக்கும் கருவி ஒலியில்
குப்பென்றே சிரித்துவிட்டு எடுத்துப் பார்த்து
..கோணலான படமப்பா என்றே எள்வாய்
இப்போதோ மணவறையில் தலையைச் சாய்த்து
..இருக்கின்ற உனைப்பார்த்தோ எனக்கேன் கண்ணீர்..!
கண்ணீர் கரைக்கும் பாவத்தை
மறந்துவிடும் பயங்கர குற்றம்
தண்ணீர் கரைக்கும் உப்பை
மறைந்துவிடும் நீர் தன்மை
தன்மை ஒருமை தன்மை முன்னிலை
என்பது
நான் நீ நாமாக
இருந்த போது எனக்குத் தெரிந்தது
இப்போது
தெரிகிறது படர்க்கை
நேரமாகிவிட்டது
அவரும் குழந்தையும்
காத்திருப்பார்கள் என நீ
கிளம்பியதில் இருந்து..