நாடெங்கிலும் நடிகர் திலகத்தை போற்றும் வண்ணம் பல விழாக்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன, பல தரப்பட்ட குழுக்களால் இது தொடர்ந்து வருகிறது, இப்படியான விழாக்கள் வேறு எந்த தலைவர்களுக்கும் நடப்பதாக தெரியவில்லை,
முத்தாய்ப்பாக சென்ற மாதம் NTFans மூலம் சென்னையில் ரஷ்யன் கல்ச்சுரல் மையத்தில் நடந்த " உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதிலே" என்ற தலைப்புடன் நடிகர் திலகத்தின் அட்டகாசமான பாடல் காட்சிகள் திரையிடப்பட்டது, ஒவ்வொரு பாடலும் சிறப்பான தேர்வு, ஒவ்வொரு பாடல் காட்சி பற்...றியும் அதன் தொடர்பான செய்தியை திரு முரளி ஸ்ரீநிவாஸ் அவர்கள் கூறிய போது பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது, குறிப்பாக இளையராஜா அறிமுகம் ஆன புதிதில் புதியவர் என பாராமல் தீபம் படத்தில் சான்ஸ் கொடுத்தது " குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டு பட வேண்டும்" என்ற பழ மொழிக்கு ஏற்ப நடிகர் திலகத்தின் வாழ்த்தை இசைஞானி இளையராஜா பெற்றதனால் புகழின் உச்சத்தை அடைந்தார் என்ற செய்தி, திரு ராகவேந்திரா அவர்கள் மெல்லிசை மன்னர் பற்றிய அறிய செய்தியை பரிமாறிக் கொண்டார்,
நிகழ்ச்சியில் தளபதி அண்ணன் ராம்குமார் அவர்கள் யாரும் எதிர்பாராத வண்ணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நினைவுப் பரிசை வழங்கி சிறப்பு செய்தார்,
நான் அறிந்த வரை நடிகர் திலகத்தின் திரைப்படங்களுக்கு இசை அமைத்தவர்கள் என ஏழு முதல் எட்டு இசையமைப்பாளர்கள் என மட்டுமே என்னி இருந்தேன் , ஆனால் அன்று சுமார் 20 இசையமைப்பாளர்கள் வரை பட்டியல் நீண்டது,
துளிவிஷம், மரகதம் போன்ற படங்களில் இருந்து அறிய பாடல்களை பார்த்து ரசிக்க முடிந்ததை மறக்க இயலாத ஒன்று.
Thanks for NTFans,
http://oi66.tinypic.com/n3lt86.jpg
..
http://oi68.tinypic.com/5bw879.jpg
..
http://oi64.tinypic.com/opa3d0.jpg
நன்றி சேகர் பரசுராம்