https://scontent-sin.xx.fbcdn.net/hp...47&oe=55AAABA7
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
Printable View
https://scontent-sin.xx.fbcdn.net/hp...47&oe=55AAABA7
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
https://scontent-sin.xx.fbcdn.net/hp...3c&oe=5598B8E0
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...869fb7166af61f
திரும்பத் திரும்பத் திரையில் வெவ்வேறு வயதுகளில் தோன்றினாலும், இந்திய ரசிகர்கள் பத்மினியை மட்டும் மனத்துக்குள் பாசப்பதியம் போட்டு வைத்துக்கொண்டார்கள். அவரது பாதச் சதங்கைகளின் ரீங்காரம் இன்னமும் சின்னத்திரைகளில் இந்தியா முழுதும் கேட்கிறது. மற்ற எந்த நடிகைக்கும் கிடைக்காத வரவேற்பு பத்மினிக்கு மாத்திரம் நிலைத்து நின்றது. பத்மினியின் நடிப்பு உயரத்தை அவ்வளவு எளிதில் வேறு யாரும் தொட்டுவிட முடியாது
வண்ணத்திரையில் பத்மினியின் ஒட்டுமொத்த சாதனைகளுக்கும் இந்தியர்கள் நன்றி சொல்ல வேண்டியது இருவருக்கு மட்டுமே. முதலாமவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். இரண்டாமவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கலைவாணர் வற்புறுத்தி பத்மினியை நாயகியாக்கியவர். கணேசனோ, பத்மினியின் பரவசமூட்டும் நடிப்புக்குப் பாதை வகுத்துத் தந்தவர்.
85 ஆண்டு காலத் தமிழ் சினிமா சரித்திரத்தில், இட்லியும் சாம்பாருமாக இணை சேர்ந்த ஒப்பற்ற ஜோடி அவர்கள். நிஜ வாழ்வில் (1960-களில்) தாலி கட்டி முடித்ததும், கால் கட்டு போட்டதும், தமிழர்களின் கல்யாணங்களில் சிவாஜி - பத்மினிபோல் சேர்ந்து வாழ திருமண வீட்டார் வாழ்த்தியது காலத்தின் கல்வெட்டு.
பத்மினியின் பெயரில் தன் புது சினிமா கம்பெனியை ஆரம்பித்தார் பி.ஆர்.பந்தலு. அதில் முதல் தயாரிப்பு காமெடியாக வளர்ந்தது. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்கிற டைட்டிலில் 100 நாள்கள் ஓடியது. ஆரம்ப நாள்களில், கணேசனைவிட பத்மினிக்கு ஊதியம் மிகவும் கூடுதல். உச்ச நட்சத்திரம் அல்லவா.
தூக்குதூக்கியும் கூண்டுக்கிளியும், 22 ஆகஸ்டு 1954-ல் ஒரே நாளில் வெளியாகின. முதலும் கடைசியுமாக சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த கூண்டுக்கிளியை, வசூலில் தூர வீசி எறிந்த மகத்தான வெற்றிச்சித்திரம் தூக்குதூக்கி. திருவிதாங்கூர் சகோதரிகள் மூவரும் சேர்ந்து நடித்த முதல் படம். சிவாஜி - பத்மினி ஜோடியின் நகைச்சுவை நடிப்பும், இனிய பாடல்களுமாகச் சிகரம் தொட்டது. கூண்டுக்கிளியின் தோல்விக்கான காரணங்களில் முக்கியமானது, பத்மினி அதில் நாயகி இல்லை என்பது.
தங்கப்பதுமையும், தெய்வப்பிறவியும் சிவாஜி - பத்மினி சேர்ந்து நடித்ததில் எவராலும் மறக்க முடியாத கலைப் பொக்கிஷங்கள். நிஜத்தில், பத்மினியின் குரல் ஆண்மையோடு ஒலிக்கும். தொலைபேசியில் அவர் பேசினால், புதிதாகக் கேட்பவர்களுக்குப் பேசுவது பத்மினியா, அவரது அண்ணன் தம்பி யாராவதா என்ற குழப்பம் நிச்சயம் வரும். ஆணின் குரலை வைத்துக்கொண்டா மலையாளத்து பத்மினி, அருந்தமிழில் அத்தனை அற்புதமாகப் பெண்மையின் இயல்புகளை, சிறப்பை வெளிப்படுத்தினார் என்கிற திகைப்பு தோன்றும்.
தன் கணவனுடைய கண்கள் குருடாகிவிட்டன எனத் தெரிந்ததும், தங்கப்பதுமையில் 'உங்கள் கண்கள் எங்கே அத்தான்...’ என வீறிட்டு அலறுவாரே. அப்போது கல் நெஞ்சங்களும் கரையும். ஏதோ நிஜமான புருஷனுக்காகக் கூச்சலிடும் மனைவியின் அடிவயிற்றுக் கதறலாக நினைத்து, நிசப்தத்தின் அரங்குகள் கண்ணீரில் நீச்சல் அடிக்கும். 1959 பொங்கலுக்கு தங்கப்பதுமை ரிலீசானபோது, ஏனோ பிரமாதமாக ஓடாமல் போனது. மறு வெளியீடுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. எடுத்த எடுப்பில் வெற்றி பெறாவிட்டாலும், தங்கப்பதுமையில் சிவாஜி - பத்மினி நடிப்பு, ஏவி.எம். செட்டியாரின் திட்டத்தைக் கிடப்பில் போட்டது.
தங்கமாக பத்மினியும் மாதவனாக சிவாஜியும் தெய்வப்பிறவியில் நடித்ததாகச் சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். நிஜமாக வாழ்ந்தார்கள். சந்தேகச் சுவர்களுக்குள், குழப்பத்தின் கால்களில் சதிராடும் தம்பதிகள். கணவர் சிவாஜியை அடிக்கப் பாயும் தம்பி எஸ்.எஸ்.ஆரை, அக்கா பத்மினி குடையால் பிளக்கும் காட்சியில், மீண்டும் நிஜமாகவே பிய்த்து உதறிவிட்டார்! குடையை அல்ல ராஜேந்திரனை. அந்த ஒரு காட்சிக்காகவே தியேட்டர்களில் மீண்டும் மீண்டும் ரசிகர்கள் குவிந்தனர்.
உணர்ச்சிக் காவியம் என்று சொன்னால், உடனே அடையாளம் காட்டப்பட்ட அன்றைய உன்னதம் தெய்வப்பிறவி. கருப்பு வெள்ளைக் காலத்தில் வந்த மிகச் சிறந்த 10 படங்களில் தெய்வப்பிறவி ஒன்று! மிக முக்கியமானது.
பதிவு: தினமணி நாளிதழ்..கட்டுரை தொகுப்பு..
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
ஏப்ரல் 19: சைக்கிள் தினம் இன்று.
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் நீரும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்
நிலை மாறினால் குணம் மாறுவார் - பொய்
நீதியும் நேர்மையும் தேடுவார் - தினம்
ஜாதியும் பேதமும் கூறுவார் - அது
வேதன் விதியென்றோதுவார்
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்
பறவையைக்கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினைக்கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக்கண்டான் பணம்தனைப் படைத்தான்
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்
இன்பமும் காதலும் இயற்கையின் நீதி
ஏற்றதாழ்வுகள் மனிதனின் ஜாதி
பாரில் இயற்கை படைத்ததையெல்லாம்
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்
பாவமன்னிப்பு
டி.எம்.சௌந்தரராஜன்
கண்ணதாசன்
விஸ்வநாதன் ...ராமமூர்த்தி
https://youtu.be/Yhrp0_XgjdQ?t=72
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
கொடுத்தானே கொடுத்தானே பழரசம் ஆண்டவன் கொடுத்தானே
பிரித்தானே பிரித்தானே மனதையும் கவலையும் பிரித்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
குரங்காய் இருந்த மனிதன் மனதில் குழப்பம் ஏதுமில்லை
குடும்பம் மனைவி அண்ணன் தம்பி கூட்டம் சிறிதுமில்லை
ஆசை பாசம் காதலில் விழுந்தான் அமைதியைக் காணவில்லை
அலைந்தான் தவித்தான் துடித்தான் மடிந்தான் யாருக்கும் லாபமில்லை
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
தன்னந்தனியே பிறந்தவன் நெஞ்சில் சஞ்சலம் இல்லையடா
இன்னொரு உயிரை தன்னுடன் சேர்த்தால் என்றும் தொல்லையடா
இத்தனை சிறிய மனிதனின் தலையில் எத்தனை சுமைகளடா
இருபதில் தொடங்கி எழுபது வரைக்கும் என்றும் மயக்கமடா
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
மனதினில் கவலையை வளர்த்தானே
ம்...ம்ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்ம்..ம் ம்ம்ம்ம்.
https://scontent-sin.xx.fbcdn.net/hp...ac&oe=55DE3613
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது
பக்கம் வருகின்றது வெட்கம் தடுக்கின்றது
காதல் கனிகின்றது கையில் விழுகின்றது
வண்டு வருகின்றது மலரில் அமர்கின்றது
வண்டு வருகின்றது மலரில் அமர்கின்றது
உண்டு சுவைக்கின்றது உறங்கி விழுகின்றது
உண்டு சுவைக்கின்றது உறங்கி விழுகின்றது
வானம் பொழிகின்றது பூமி நனைகின்றது
வானம் பொழிகின்றது பூமி நனைகின்றது
மேனி குளிர்கின்றது வெள்ளம் வடிகின்றது
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது
இரவு விடிகின்றது இளமை எழுகின்றது
இரவு விடிகின்றது இளமை எழுகின்றது
குளித்து வருகின்றது கூந்தல் முடிக்கின்றது
குளித்து வருகின்றது கூந்தல் முடிக்கின்றது
அருகில் அமர்கின்றது அத்தான் என்கின்றது
அருகில் அமர்கின்றது அத்தான் என்கின்றது
ஆர்வம் பிறக்கின்றது அன்பு அழைக்கின்றது
ஆர்வம் பிறக்கின்றது அன்பு அழைக்கின்றது
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது
திரைப்படம்: இருவர் உள்ளம்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1963
https://youtu.be/BK6zanXsUmQ
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி,
எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத் தங்கமே;
இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி,
எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத் தங்கமே;
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே;
இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி,
எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத் தங்கமே;
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே;
உன்னையே நினைத்திருப்பான்
உண்மையைத் தான் உரைப்பான்,
ஊருக்குப் பகையாவான்
ஞானத் தங்கமே... ஏ...
உன்னையே நினைத்திருப்பான்
உண்மையைத் தான் உரைப்பான்,
ஊருக்குப் பகையாவான்
ஞானத் தங்கமே;
அவன் ஊழ் வினை என்ன சொல்வேன்,
ஞானத் தங்கமே;
ஞானத் தங்கமே;
இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி,
எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத் தங்கமே;
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே;
நஞ்சினை நெஞ்சில் வைத்து
நாவினில் அன்பு வைத்து;
நஞ்சினை நெஞ்சில் வைத்து
நாவினில் அன்பு வைத்து,
நல்லவன் போல் நடிப்பான்
ஞானத் தங்கமே;
நஞ்சினை நெஞ்சில் வைத்து
நாவினில் அன்பு வைத்து,
நல்லவன் போல் நடிப்பான்
ஞானத் தங்கமே;
அவன் நாடகம் என்ன சொல்வேன்,
ஞானத் தங்கமே;
ஞானத் தங்கமே;
இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி,
எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத் தங்கமே;
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே;
தொண்டுக்கென்றே அலைவான்
கேலிக்கு ஆளாவான்,
கண்டு கொள்வாய் அவனை
ஞானத் தங்கமே... ஏ.
தொண்டுக்கென்றே அலைவான்
கேலிக்கு ஆளாவான்,
கண்டு கொள்வாய் அவனை
ஞானத் தங்கமே;
அவன் கடவுளில் பாதியடி,
ஞானத் தங்கமே;
ஞானத் தங்கமே;
இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி,
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே;
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே;
பிள்ளையைக் கிள்ளி விட்டு
தொட்டிலை ஆட்டி விட்டு;
பிள்ளையைக் கிள்ளி விட்டு
தொட்டிலை ஆட்டி விட்டு;
தள்ளி நின்றே சிரிப்பான்
ஞானத் தங்கமே:
பிள்ளையைக் கிள்ளி விட்டு
தொட்டிலை ஆட்டி விட்டு;
தள்ளி நின்றே சிரிப்பான்
ஞானத் தங்கமே;
அவன் தான் தரணியைப் படைத்தான்டி,
ஞானத் தங்கமே;
ஞானத் தங்கமே;
இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி,
எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத் தங்கமே;
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே..
(https://youtu.be/pbte64aTKPA)
திரைப்படம் : திருவருட்செல்வர்,
பாடல் : கண்ணதாசன் அவர்கள்,
இசை : கே.வி.மஹாதேவன் அவர்கள்,
பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்,
இயக்கம் : ஏ.பி.நாகராஜன் அவர்கள்,
வெளியான ஆண்டு : 1967.
https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...decebe4c5a41f9
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
ஆழியிலே பிறவாத அலைமகளோ? ஆஆ..ஆஅ...ஆ...
ஏழிசையைப் பயிலாத கலைமகளோ?
ஊழி நடம் புரியாத மலைமகளோ?
உலகத்தாய் பெற்றெடுத்த தலைமகளோ? ஆ..ஆ..ஆ..ஆஆஆ...
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ?
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ? - நான்
அன்புக் கவிதை சொல்லச் சொல்ல அடி எடுத்துக் கொடுத்ததோ?
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ? - நான்
அன்புக் கவிதை சொல்லச் சொல்ல அடி எடுத்துக் கொடுத்ததோ?
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ?
ஆ...ஆ..ஆ...ஆ..
இளனீரை சுமந்திருக்கும் தென்னை மரம் அல்ல
மழை மேகம் குடை பிடிக்கும் குளிர் நிலவும் அல்ல ஆஆ...ஆஅ..
இளனீரை சுமந்திருக்கும் தென்னை மரம் அல்ல
மழை மேகம் குடை பிடிக்கும் குளிர் நிலவும் அல்ல
இங்கும் அங்கும் மீன் பாயும் நீரோடை அல்ல
இங்கும் அங்கும் மீன் பாயும் நீரோடை அல்ல
இதற்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல
ஆ...ஆ..ஆ...ஆ.
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ? - நான்
அன்புக் கவிதை சொல்லச் சொல்ல அடி எடுத்துக் கொடுத்ததோ?
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ?
ஆஅ..ஆ..ஆ.ஆஅ..
தத்தி வரும் தளர் நடையில் பிறந்ததுதான் தாளமோ?
தாவி வரும் கையசைவில் விளைந்ததுதான் பாவமோ?
தெய்வ மகள் வாய் மலர்ந்து மொழிந்ததுதான் ராகமோ? ஆஆஆஆ..
இத்தனையும் சேர்ந்ததுதான் இயல் இசை நாடகமோ?
ஆஆஆஆ..
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ? - நான்
அன்புக் கவிதை சொல்லச் சொல்ல அடி எடுத்துக் கொடுத்ததோ?
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ?
திரைப்படம்: பேசும் தெய்வம்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா ா
இயற்றியவர்: வாலி
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1967
https://youtu.be/i1bZlls-czE
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
Dear gopal sir
please accept my belated condolence and regrets.
http://i1065.photobucket.com/albums/...pscgiyseta.jpg
விக்கிமாதித்தனின் சிம்மாசனத்தில்
அமர
பின்னாளில்
ஒரு
போஜராஜன்
வந்தான்
ஆனால்
உங்களுக்கான
சிம்மாசனம்
அது
என்றும்
வெற்றிடமே!