STR's emotional speech
https://www.youtube.com/watch?v=U4ububYgoo4
Printable View
STR's emotional speech
https://www.youtube.com/watch?v=U4ububYgoo4
மீண்டும் சிம்பு படத்தில் திருப்பம்...ஹீரோயினாக மஞ்சிமா மோகன்
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘அச்சம் என்பது மடமையடா' படத்தின் நாயகியாக மலையாள நடிகை மஞ்சிமா மோகன் நடிக்க இருக்கிறார். இதற்கு முன்பு பல்லவி சுபாஷ் தேர்வு செய்யப்படிருந்தார். மேலும் அவரது கால்ஷீட் பிசி காரணமாக அவருக்கு பதில் சமந்தா நடிப்பார் என கூறப்பட்டது.
சமந்தாவும் தொடர்ச்சியாக ’விஐபி 2’, ‘24’,’விஜய் 59’ என பிசியாக இருப்பதால் கால்ஷீட் கிடைக்கவில்லை என்பதால் தற்போது மஞ்சிமா மோகன் தேர்வாகியுள்ளார். சமீபத்தில் வெளியான மலையாள படமான ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ படத்தில் இவரது நடிப்பை பார்த்து கௌதம் மேனன் இவரைத் தேர்வு செய்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மஞ்சிமா மோகன் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்தவர். மேலும் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான மாநில விருதும் பெற்றவர். இந்நிலையில் தெலுங்கில் உருவாக உள்ள ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் ஹீரோ நாக சைதன்யா என்பது உறுதியான நிலையில் இரு மொழி படங்களையும் ஒரே நேரத்தில் எடுக்க இருக்கும் கௌதம் மேனன் தெலுங்கிலும் மஞ்சிமாவையே நடிக்க வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதியம் வந்தால் போதும்- கௌதம் படத்தில் சிம்புவுக்குச் சலுகை.
கௌதம் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அச்சம்என்பதுமடமையடா படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக நடந்துகொண்டிருக்கிறதாம். தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் ஒரேநேரத்தில் தயாராகும் இந்தப்படத்தில் தமிழில் நாயகனாக சிம்புவும் தெலுங்கில் நாயகனாக நாகசைதன்யாவும் நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
தற்பொழுது இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்துகொண்டிருக்கிறது. தமிழில் எடுத்துவிட்டு அப்புறம் தெலுங்கு என்றில்லாமல் தினமும் இரண்டுமொழிகளுக்கும் சேர்த்தே படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள். இதனால் தெலுங்கு நாயகன் நாகசைதன்யா சென்னை வந்திருக்கிறாராம். அவருக்குத் தினமும் அரைநாள்தான் படப்பிடிப்பு.
காலையில் அவர் சம்பந்தப்பட்ட தெலுங்குப்படத்தின் காட்சிகளைப் படமாக்குகிறாராம் கௌதம். மதியத்துக்கு மேல் சிம்பு நடிக்கிறாராம். அவர் தூங்கி எழுந்து தயாராகிப் படப்பிடிப்புக்கு வர மதியமாகிவிடும் என்று வழக்கமாகச் சொல்லப்படும். அதனாலேயே அவருக்கு மதியத்துக்கு மேல் படப்பிடிப்பு வைத்துவிட்டார் போலும். சிம்பு வந்ததும், தமிழ்ப்படத்துக்கான காட்சிகள் படமாக்கப்படுகின்றனவாம்.
நாயகியாக நடிக்கும் மஞ்சிமாமோகனுக்குத்தான் ஓய்வில்லை. இரண்டு மொழிகளிலும் அவர்தான் நாயகி என்பதால் முழுநாளும் படப்பிடிப்பில் இருக்கவேண்டும். ஒரு நடிகை முழுநாள் படப்பிடிப்பில் இருப்பதிலொன்றும் சிக்கலில்லை, மலையாளப்பெண்ணான அவர், காலையில் தெலுங்கு பேசுவதுபோல் வாயசைக்கவேண்டும் மாலையில் தமிழ்பேசுவதுபோல வாயசைக்கவேண்டும் என்பதுதான் கஷ்டம்.
துவங்கியது சிம்பு - செல்வராகவன் படம் !
http://img.vikatan.com/album/2015/05...umb/104583.jpg http://img.vikatan.com/album/2015/05...umb/104584.jpg http://img.vikatan.com/album/2015/05...umb/104585.jpg
திருட்டுக் கல்யாணம் - சிம்பு பாடும் ஆச மேல ஆச பாடல் மேக்கிங் வீடியோ!
https://www.youtube.com/watch?v=bkLaNARkqLI
சிம்பு நடித்த படங்கள் வெளியாகாமல் இருந்தாலும் புதியபடங்களில் அவரை ஒப்பந்தம் செய்யப் பலரும் ஆர்வம் காட்டிவருவது வியப்பான செய்திதான். அவர் இப்போது கௌதம்மேனனின் அச்சம்என்பதுமடமையடா, செல்வராகவனின் படம் ஆகியனவற்றில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்தப்படங்களைத் தொடர்ந்து, உதயநிதியின் மனைவி கிருத்திகாஉதயநிதியின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. திரைக்கதை எழுதும் வேலைகளை முழுமையாக முடித்துவிட்டுப் படப்பிடிப்பைத் தொடங்கத் தயாராகிவிட்டாராம் இயக்குநர் கிருத்திகாஉதயநிதி. இந்நிலையில் அந்தப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் சிக்கல் ஏற்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
இதனால் எப்போது படப்பிடிப்பு என்று திட்டமிடுவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறதாம். இந்நிலையில் இந்தச்சிக்கலை அறிந்த உதயநிதி அதில் தலையிட்டுச் சிக்கலைத் தீர்த்துவைத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால் கௌதம்மேனன் மற்றும் செல்வராகவனின் படப்பிடிப்புகள் முடிவடைகிற நேரத்தில் கிருத்திகா இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்று சொல்கிறார்கள்.
இந்த மூன்றுபடங்களையும் முடித்துவிட்டுத்தான் அடுத்த படங்களை ஒப்புக்கொள்வது என்று உறுதியாகச் சொல்லியிருக்கிறாராம் சிம்பு. அது மட்டுமின்றி முதலில் வாலு, அடுத்து இதுநம்மஆளு ஆகிய படங்களை வெளியிடுவதும் வேகமாக நடக்கவேண்டும் என்பதிலும் கவனமாக இருக்கிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்
செல்வராகவன், சிம்பு இணையும் படத்தின் பெயர் கான்
இரண்டாம் உலகம் தோல்விக்குப் பிறகு செல்வராகவன் சிம்புவை வைத்து படம் இயக்குகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
இந்தப் படத்தில் தாப்ஸி, கேத்ரின் தெரேசா ஆகியோர் நடிக்கின்றனர். ஆக்ஷன் த்ரில்லராக படம் தயாராகிறது. யுவன் இசையமைக்க, அர்விந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த முக்கூட்டணி பல வருடங்களுக்குப் பிறகு இணைந்துள்ளது.
இந்தப் படத்துக்கு கான் என்று பெயர் வைத்துள்ளனர். கான் என்றால் தமிழில் காடு என்று அர்த்தம். இதில் சிம்பு முருக பக்தராகவும், தாப்ஸி போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கின்றனர்
எனக்கு என் ரசிகர்கள் இருக்கிறார்கள்.. சிம்பு அதிரடி
’வாலு’ படம் பல போராட்டங்களை கடந்து ஜூன் மாதம் 12ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது, ஒரு படத்திற்கு இத்தனை முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போடப்பட்ட படம் சிம்புவின் ‘வாலு’ படமாகத்தான் இருக்கும்.'விஸ்வரூபம்’, ‘மாஸ்’ , ’என்னை அறிந்தால்’ போன்ற படங்கள் கூட இரண்டாவது , மூன்றாவது அறிவிப்பில் ரிலீஸ் உறுதியானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ”ஒரே நேரத்தில், பாண்டிராஜுடன் ‘இது நம்ம ஆளு’, கௌதம் மேனனின் ‘அச்சம் என்பது மடமையடா’, செல்வராகவனின் புதிய படமென தொடர் ஷூட்டிங்கில் இருக்கிறேன்’. வித்தியாசமான அனுபவம், ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமான ரோல்” என சிம்பு ட்வீட் செய்துள்ளார்.
இது தவிர்த்து ”என் ரசிகர்கள் என்னுடன் இருக்கிறார்கள், மற்ற நடிகர்களின் ரசிகர்கள் எனக்குத் தேவையில்லை, என் ரசிகர்களின் , அன்பும் ஆதரவாலும் நான் நெகிழ்ந்து போயுள்ளேன். உங்கள் அன்புக்கு நன்றி” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சிம்பு.
இந்நிலையில், பாண்டிராஜ் தனது ட்விட்டரில் , எனது சினிமா வாழ்வில் 'இது நம்ம ஆளு’ படம் மிக முக்கியமான படம். எந்த நிலையிலும் அப்படத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ரிலீஸ் செய்வேன். சிம்பு உங்களை நான் வேறு பரிமாணத்தில் சந்திப்பேன்” என ட்வீட் செய்துள்ளார்.
https://pbs.twimg.com/profile_images...vRt_normal.jpg STR @iam_str · May 26
Bin a great experience :) After @pandiraj3 then @menongautham and @selvaraghavan..Totally different kinds of roles ..Hope I deliver my best
346 retweets 614 favorites
அதெல்லாம் கடவுள் பாத்துப்பாரு.. பீலாகும் சிம்பு!
சென்னை: அடுத்தடுத்து இரு காதல்கள் தோல்வியில் முடிந்ததால் நொந்து போயிருந்த சிம்பு தற்போது எனது திருமணம் கடவுளின் விருப்பபடி நடக்கும் என்று பீலிங்க்ஸ் காட்டியுள்ளார். தமிழ்த் திரையுலகின் இளம் நடிகரான சிம்பு முதலில் நயன்தாராவை வல்லவன் படத்தின் போது உருகி உருகி காதலித்தார், பிரேக் அப் ஆனது தான் மிச்சம். மீண்டும் நடிகை ஹன்சிகாவை வாலு திரைப்படத்தின் போது காதலித்தார் , என் வாழ்க்கையே உன்னோடுதான் என்று இருந்த இருவருக்கும் இடையில் என்ன நடந்ததோ முதல் வாரம் காதலிக்கிறேன் என்று மீடியாவைக் கூப்பிட்டு சொன்னவர்கள் மறுவாரம் பிரிந்து விட்டோம் என்று அதே மீடியாவின் வாயிலாக அறிவித்துப் பிரிந்தார்கள். My Marriage is God Plan – Actor Simbu எந்த நல்ல நேரத்தில் வாலுவுக்கு பூஜை போட்டார்களோ படம் இன்னும் வெளிவராமல் இதோ அதோ என்று பல ரிலீஸ் தேதிகளைப் பார்த்து விட்டது, இன்னும் வெளியானபாடில்லை. இந்தியாவிலேயே முதல்முறையாக பல ரிலீஸ் தேதிகளைப் பார்த்த படம் என்று பட்டம் கொடுக்கும் அளவிற்கு வாலு ஆளாகி விட்டது. காதலி திரையுலகின் நம்பர் ஒன் நாயகியாக வலம்வர நாயகன் படம் வெளியாவதே பெரும்பாடாக உள்ளது, இந்நிலையில் சிம்பு சமூக வலைதளமொன்றில் அவரின் ரசிகர்கள் கேள்வி கேட்டதற்கு கடவுளின் விருப்பப்படி எனது திருமணம் நடைபெறும் என்று தற்போது கூறியிருக்கிறார். நடக்குமா நடக்காதா... !?!