ராகவேந்தர் சார்,
தங்கள் கேள்விக்கு இப்படி பதில் சொல்லலாம்.
நீங்கள் அளித்துள்ள தகவல்கள் மிகப்பலருக்கு, குறிப்பாக அமெரிக்க, கனடா வாழ் தமிழர்களுக்கு மிகப்பயனுள்ள தகவல்.
'ஒன்றிரண்டு பேருக்கு' பயனற்ற தகவல்.
ராகவேந்தர் சார்,
தங்கள் கேள்விக்கு இப்படி பதில் சொல்லலாம்.
நீங்கள் அளித்துள்ள தகவல்கள் மிகப்பலருக்கு, குறிப்பாக அமெரிக்க, கனடா வாழ் தமிழர்களுக்கு மிகப்பயனுள்ள தகவல்.
'ஒன்றிரண்டு பேருக்கு' பயனற்ற தகவல்.
அன்புள்ள பம்மலார் சார்,
'திருவிளையாடல்' மறு வெளியீடு விளம்பரமும், 'தெனாலிராமன்' கல்கி விமர்சனமும் சூப்பர். அவர் நடிக்க வந்து சில வருடங்களிலேயே அப்படம் வந்ததால் கல்கிக்கு சந்தேகம் வந்திருக்கக்கூடும். தான் எப்பேற்பட்ட கலைஞன் என்பதை தன் முதல்படத்திலேயே நிரூபித்தபின்னும் 'கல்கி' விமர்சகர் சந்தேகப்பட்டிருக்கத் தேவையில்லை. ஆனால் தன் சந்தேகத்தை நடிகர்திலகம் நிவர்த்தி செய்ததை அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.
'அலையே வா' பாடலைப்போட்டு என்னை ஒரு வழியாக்கிவிட்டீர்கள். கருப்பு வெள்ளையில் என்ன ஒரு அற்புதமான ஒளிப்பதிவு..!. நம் விமர்சகர்கள் அக்காலத்தில் டெக்னிக்கல் விஷயங்களை தங்கள் விமர்சனங்களில் குறிப்பிடுவதில் குறை வைத்திருந்தனர் என்பதைச்சொல்லியே ஆக வேண்டும். ஆனால் இந்தியன் மூவி நியூஸ் விமர்சனத்தில் ஒளிப்பதிவை எவ்வளவு நேர்த்தியாகப் பாராட்டியிருக்கின்றனர். இன்றைக்கு நாம் பழைய பாடல்களைக் கேட்டுக்கேட்டு மகிழ்கிறோமே, ஆனால் அந்தப்பாடல்கள் வெளிவந்த காலங்களில் மெல்லிசை மன்னரைப்பற்றி விமர்சனங்களில் ஒரு வார்த்தைகூட இருக்காது தெரியுமா?.
லேட்டஸ்ட் 'கர்ணன்' போஸ்ட்டர்கள் அட்டகாசம். அடுத்த டிஜிட்டல் படத்தை வெளியிடும்போது, கர்ணன் வெற்றிக்கு பாதகம் ஏற்படாமல் யோசித்து நிதானித்து வெளியிட வேண்டும். அவசரம் கூடாது என்பதை விநியோகஸ்தர்கள் உணர வேண்டும்.
ஆவணப்பதிவுகளில் தொடர்ந்து ஜமாயுங்கள். வாழ்த்துக்கள்.
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் உயர்வான பாராட்டுப் பதிவுக்கு எனது உளங்கனிந்த நன்றிகள்..!
'சினிமா எக்ஸ்பிரஸ்' 1-15 நவம்பர் 2011 இதழில், நடிகர் திலகம் பற்றி நடிகை ஜமுனா கூறியிருந்த கருத்துரையை, நமது திரியில் இடுகை செய்தமைக்கு பாராட்டுக்கள்..!
சிறக்கட்டும் தங்களின் சீரிய சேவை..!
அன்புடன்,
பம்மலார்.
டியர் கார்த்திக்,
தங்கள் விளக்கம் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. மிக்க நன்றி.
டியர் வாசுதேவன் சார்,
இரண்டு கைகள் நான்கானால் இருவருக்கே தான் எதிர்காலம் ....
திரிசூலம் படத்தில் இந்த வரிகள் இடம் பெற்றாலும் தங்களுக்கும் பம்மலாருக்கும் என்னமாய்ப் பொருந்துகின்றன...
சூப்பர்...
நடிகர் திலகத்தின் ஒப்பற்ற சாதனைக் காவியமான கர்ணன் திரைப்படத்தின் மறு வெளியீட்டு 125வது நாள் வெற்றி விழா வரும் ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெறுகிறது. சென்னை தேனாம்பேட்டை அண்ணாசாலை காமராஜ் அரங்கில் மாலை 4.30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள், பாராட்டுப் பெறும் கலைஞர்கள் என விழா நடைபெற உள்ளது. இளைய திலகம் பிரபு அவர்கள், ராதிகா சரத்குமார் அவர்கள், இயக்குநர் பி.வாசு அவர்கள், நடிகர் திலகத்தைப் பற்றி சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யும் திரு மருதுமோகன் அவர்கள், பங்கேற்க உள்ளனர். விரைவில் விரிவான தகவல்கள் ...
அன்புடன்
சாதனைக் காவியமான கர்ணன் வெற்றி விழாவை யொட்டி இரு சிறப்பு மலர்கள் வர உள்ளன. ஒன்று பிரபல மாலை பத்திரிகை வெளியிடுகிறது. மற்றொன்றினை நமது நண்பரும் நடிகர் திலகத்தின் வெற்றி வரலாற்றைப் புதினங்களாகப் படைத்தவருமான, வந்தியத்தேவன் என்கிற திரு எஸ்.கே. விஜயன் அவர்கள் வெளியிட இருக்கிறார். திரு விஜயன் அவர்களின் மலரில் முழுதும் ரசிகர்கள் பங்கேற்பு மட்டுமே இடம் பெற உள்ளது. விருப்பமுள்ள ரசிகர்கள் விளம்பரம் தரலாம். திரு விஜயன் அவர்களுடைய கைப்பேசி எண் விரைவில் தரப்படும் . அதில் அவருடன் தொடர்பு கொண்டு மேலதிக விவரங்களைப் பெறலாம்.
டியர் ராகவேந்திரன் சார்,
கனடா மற்றும் அமெரிக்காவில் டிஜிட்டல் "கர்ணன்" வெளியாகும் திரையரங்குகளின் பட்டியல் அருமையோ அருமை..!
எப்பேர்ப்பட்ட விவரங்களை வழங்கியுள்ளீர்கள், உளமார்ந்த பாராட்டுக்கள்..!
இன்றைய செய்திகள்-தகவல்கள்-புள்ளிவிவரங்கள் நாளைய வரலாற்று ஆவணங்கள்..!
தொடர்ந்து தூள் கிளப்புங்கள் சார்..!
அன்புடன்,
பம்மலார்.