Originally Posted by J.Radhakrishnan
மகேஷ்,
படங்களின் வெற்றி தோல்வியில் பெரும்பங்கு வகிக்கும் பொது மக்கள் அந்த நடிகரின் அரசியல் நிலைப்பாடுகளை வைத்து படம் பார்ப்பதில்லை என்பது உண்மை என்றாலும் கூட, எல்லா நேரங்களிலும் அது சரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அன்பே ஆருயிரே, Dr .சிவா, வைர நெஞ்சம் போன்றவற்றிற்கு அது பொருந்தும். ஆனால் பாட்டும் பரதமும் மற்றும் உனக்காக நான் படங்கள் வெற்றி பெறாமல் போனதற்கு அரசியல் சூழ்நிலை ஒரு பெரிய காரணம். நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர்களே அந்தக் காலக்கட்டத்தில் அவர் படங்களை சரியாக ஆதரிக்கவில்லை என்பது நான் நேரில் கண்ட உண்மை. அவர்களெல்லாம் மீண்டும் திரையரங்கிற்கு வர ஆரம்பித்ததே தீபம் படத்திலிருந்துதான்.
சுவாமி சார்,
உங்கள் கருத்தில் மாறுபடுகிறேன்! தீபம் படத்திற்கு முன் வந்த கிரகப்ரவேசம், சத்யம் 100 நாட்கள் ஓடியதே? எல்லாவற்றிக்கும் மேலாக உத்தமன் படம் சில்வர் ஜூப்ளி படமாக ஓடியதற்கும் ரசிகர்கள் தானே காரணம்?
நீங்கள்தான் பதில் சொல்லவேண்டும்