*கிறிஸ்தவ மதமும் மக்களும்!*
எம்.ஜி.ஆர் தன் படங்களில்
சிலுவையில் அறைந்த இயேசு
கிறிஸ்துவைப் பல காட்சிகளில்
காட்டியிருக்கிறார். எங்கள் தங்கம்
படத்தில் அவர் ஒரு கம்பை குறுக்கே
பிடித்துக்கொண்டு நிற்பது கூட நிழல் காட்சியாக சிலுவை இயேசு போல காட்டப்படும்.
ரிக் ஷாக்காரன்
படத்தில் அங்கே சிரிப்பவர்கள்
சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு
என்ற பாட்டில் அவர் சிலுவை இயேசு சிலையைக் கட்டிப்
பிடித்து நிற்கும் காட்சி வரும்.
எம்.ஜி.ஆர் தான் நடித்த ஜெனோவா
படத்தில் சிப்ரஸ் நாடு மன்னனாக
நடித்திருப்பார். அந்தப் படத்தில் மட்டும் அவர் முழங்காலிட்டு பைபிள் வாசிப்பது போன்ற காட்சி உண்டு.
பரமபிதா என்ற பெயரில் அவரை
இயேசுவாக நடிக்கவைத்து ஒரு படம் எடுக்க திட்டமிட்டனர். ஆனால், அவரை
சவுக்கால் அடித்து அவர் தலையில்
முள்கிரீடம் வைத்து அழுத்துவதை
ரசிகர்கள் காணப் பொறுக்க
மாட்டார்கள். திரையைக் கிழித்து
விடுவர் என்று திரையரங்க
உரிமையாளர்கள் தெரிவித்ததால் படம் எடுக்கும் முயற்சி கை விடப்பட்டது.
ஷூட்டில் எடுக்கப்பட்ட
எம்.ஜி.ஆர் இயேசுவாக தோற்றம் தரும்
படம் கேரளாவில் பலர் வீடுகளில்
மாட்டப்பட்டிருந்தது. இதைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் ‘என்னப்பா
உயிரோடு இருக்கும்போதே என் படத்துக்கு பத்தி
கொளுத்துகிறார்களா’ என்று
சிரித்தாராம்.
எம்.ஜி.ஆர் சினிமாவில் ஏழ்மையான
சூழ்நிலையில் இருக்கும் தன் வீட்டை காட்டும் போது அந்த வீட்டில்
திருவள்ளுவர் பாரதியார் அறிஞர்
அண்ணா ஆகியோர் படங்களோடு
இயேசு கிறிஸ்து படத்தையும்
மாட்டியிருப்பார். இதனால்
கிறிஸ்தவர்கள் அவரை சீக்ரெட்
கிறிஸ்ட்டியன் என்றே சொல்ல
ஆரம்பித்துவிட்டனர்.
அவர் தனிக் கட்சி
ஆரம்பித்ததும் கிறிஸ்தவர்கள் பலரும் அவரது ஆதரவாளர்கள் ஆகிவிட்டனர்.
எம்.ஜி.ஆர் முதல்வரானதும்
அமெரிக்கன கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர் நோவா அவரைப்
பார்த்து சிறைகளில் ஊழியம் செய்ய
அனுமதி கேட்டார். எம்.ஜி.ஆரும்
சம்மதித்தார்.
அப்போது நோவா
அவர்கள் சிறைகளில் கழிப்பறை வசதி
தேவை என்று கேட்டதும் எம்.ஜி.ஆர்
உடனே செய்து தருவதாக
ஒப்புக்கொண்டார்.
எம்.ஜி.ஆர்
காலத்தில்தான் சிறை கைதிகளின்
அறைகளுக்குக் கழிப்பறை வசதி
கிடைத்தது. அதுவரை அறையில்
வைக்கப்பட்ட சட்டிகளில்தான் அவர்கள்
இரவில் சிறுநீர் மலம் கழித்தனர்.
மறுநாள் அதை கொண்டு போய்
கொட்டிவிட்டு சுத்தம் செய்து
கொண்டு வந்து வைத்துக் கொண்டனர்.
எம்.ஜி.ஆர் டிசம்பர் 24 நாளன்று இரவில்
ஒரு மணி வரை உயிரோடு
இருந்ததாக சில செய்திகள் வந்த
போது கிறிஸ்தவர்கள் பலர் அவர்
கிறிஸ்துமஸ் அன்று மறைந்ததாகவே
கருதினர்.
எம்.ஜி.ஆர் மீதிருந்த
நன்மதிப்பு காரணமாக அவர்
கிறிஸ்தவர் அதிகமாக வாழும்
சாத்தான் குளம் தொகுதியில்
நீலமேகம் என்ற இந்துவை
நிறுத்தியபோதும் அங்கு வாழ்ந்த
கிறிஸ்தவர்கள் இரட்டை இலைக்கு
வாக்களித்து அவரை வெற்றி பெறச்
செய்தனர்.
- வரலாறு இன்னும் வலம் வரும்...!
- S. S. S......... Thanks...