-
uravu solla oruvan
வாசு சார்
வருக வருக இன்றைய உங்களின் சிறப்பு மதுர கானம் மறக்க முடியாத ஒரு பாடல் .
மகராணி நான் மகராசி நான்
மகராணி நான் மகராசி நான்
இந்த வரிகளை பாடும் போது சுசீலாவின் குரல் அலைகளை கவனித்தீர்கள் என்றால் தான் ஒரு மகாராணி என்று ஒரு தோரணை வெளிப்படும்
இந்த படத்தின் தயாரிப்பு பிலிமலாயா என்ற பத்திரிகை ஒன்று 1970-80 கால கட்டங்களில் வந்து கொண்டு இருந்ததது .அதன் நிறுவனர் ராமசந்தரன் என்று நினவு. பத்திரிகை ஆசிரியர் வல்லபன் இவர் தை பொங்கல் படத்தின் டைரக்டர் . யாரவது உறுதி செய்தால் நன்று
இந்த படத்தை பற்றி 75 கால கட்டத்தில் ஒரு விரிவான கட்டுரை ஒன்று
பிலிமலாயா பத்திரிகையில் படித்த நினவு
இந்த படத்தில் சுஜாதாவும் உண்டு என்று நினவு இவருக்கு அந்த ஆண்டின் சிறந்த நடிகை விருது இந்த படத்தில் நடிதததர்கக பிலிம் fare பத்திரிகை வழங்கி கௌரவித்தது என்றும் நினவு உண்டு
இதன் இயக்குனர் தேவராஜ் மோகன் பற்றி
http://www.cinemaexpress.com/cinemae...Name=News&SEO=
இந்த டைரக்டர் மோகன் நடிகர் கார்த்திக்கின் மாமா (முத்துராமன் மனைவி தம்பி )
-
டியர் கோபால்,
தங்களின் ராகங்களைப் பற்றிய விளக்கபதிவுகள் மிக மிக அருமையான, பயனுள்ள பதிவுகளாக உள்ளன. ஒவ்வொரு ராகத்தையும் நீங்கள் விளக்கும் விதமும் அவற்றை ஆதாரமாகக் கொண்டு அமைந்த பாடல்கள் பற்றிய விவரங்களும், அதே ராகத்தில் அமைந்த மற்ற பாடல்களின் பட்டியலும் என ஒரு முழுமையான ராக ஆலாபனையாக அமைந்து உவகையூட்டுகின்றன. ராகங்களைப்பற்றி அறிந்திராத என்னைப்போன்ற மண்டூகங்களுக்கும் ஏதோ புரியத்தொடங்குகிறது.
அதுமட்டுமல்லாது, பாடல்களைப்பற்றிய இந்த திரிக்கு தேவையான மகுடமாகவும் தங்களின் இந்தப்பதிவுகள் விளங்குகின்றன. .
தாங்கள் குறிப்பிட்ட கவிஞர் மாயவநாதனின் 'தண்ணிலவு தேனிறைக்க' பாடலைப்பற்றி ஒன்றைச்சொல்லியாக வேண்டும். நம் ஆட்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. கடிவாளம் கட்டிய குதிரையாக, யாராவது ஒன்றைசசொன்னால் அதையே டிட்டோவாக காலாகாலத்துக்கும் சொல்லிக்கொண்டிருப்பது. 'தாழையாம் பூ முடிச்சு' பாடலில் நான்கே வாத்தியங்களை மட்டுமே மெல்லிசை மன்னர்கள் பயன்படுத்தியிருந்தனர் என்பதை ஒருவர் சொல்லப்போக அதையே பல்வேறு கட்டுரைகளிலும், மேடைகளிலும் எழுதி / முழங்கி 'இவ்வளவு குறைவான வாத்தியங்கள் யாரேனும் பயன்படுத்தியுள்ளனரா?' என்று சவாலெல்லாம் விடுவார்களே தவிர அதைவிடவும் குறைந்த வாத்தியங்களை அதே மெல்லிசை சக்ரவர்த்திகள் பயன்படுத்தியிருப்பதை தேட மாட்டார்கள்.
இப்போது சொல்கிறேன், 'தண்ணிலவு தேனிறைக்க தாழை மரம் நீர்தெளிக்க' பாடலில் சுசீலாவின் குரலைத்தவிர இரண்டே இரண்டு... ஆமாங்க... இரண்டே இரண்டு வாத்தியங்கள் மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். . ஒரு தபேலா ஒரு புல்லாங்குழல். இவ்விரண்டைத் தவிர வேறு எந்த இசைக்கருவியையும் பயன்படுத்தவில்லை. இப்பாடலுக்கு.
பல கீபோர்டுகளைப் பயன்படுத்தி, போன மாதம் போடப்பட்ட பாடல்கள் நம் சிந்தையில் தாங்காமல் போக, 52 ஆண்டுகளுக்கு முன் இரண்டே இசைக்கருவிகளுடன் இசைக்கப்பட்ட பாடலை (இத்தனைக்கும் கண்ணதாசனின் பங்கும் இப்பாடலில் இல்லை) இன்னும் புதுப்பொலிவோடு கேட்டு மகிழ்கிறோமே, அதுதான் மெல்லிசை மன்னர்களின் சாதனை.
-
"மாற்றான் தொட்டது மல்லிகையும் மணக்கும்"
திரைப்பட பாடல்களை கேட்டு மகிழ்கிறோம். ஒரு சில பாடல்கள் , சில பேருக்கு வாழ்க்கைக்கு சம்பத்தபட்ததாக அமையும். அப்படி ஒரு பாடல் இதோ :
திரைபடத்தை தயாரித்தவர் : ராம அரங்கண்ணல்
இயக்கியவர் : கே பி (நம் கே பி தான்)
நடிகர் : கமல், சரிதா
இசை : நம் எம். ஸ். வி
பாடியவர் : சுசீலா
இப்படி எல்லாமே நமக்கு தெரிந்த முகங்களே. படம் என்னோவே தெலுங்கு.
பாடல் இடையில் தமிழ் வார்த்தைகளும் வரும்.
இந்த படமும், பாடலும் , கதையும், சில காட்சிகளும் (என்) வாழ்க்கைக்கு சம்பதபட்ட்தே. பல ஒற்றுமை.
அதில் சில :
1) நாயகனின் பெயரும் என் பெயரும் ஒன்றே.
2) நாயகனும், நாயகியும் வேறு வேறு மொழி பேசுபவர்கள்.
3) நாயகனும் நாயகியும் ஒரு வருடம் ஒருவரை ஒருவர் பார்க்காமல் , பேசாமல் பிரித்து இருப்பார்கள்.
இப்படி பல .
படம் சோகத்தில் முடியும். நிஜ வாழ்க்கையில் சுபம் (பல தடங்கலுக்கு பிறகு).
மிகவும் பிடித்த பாடல். படம் : மரோ சரித்திரா.
அருமையான இசை, இனிமையான சுசிலாவின் குரல், இளமை கமல், கே பி யின் visual படைப்பு. வேறு என்ன சொல்ல. அற்புதம்
http://www.youtube.com/watch?v=KhAFn8oCYNU
(குறிப்பு : If iam correct இந்த பாடலின் இசையை MSV, VKR தயாரித்த ருத்ர தாண்டவம் படத்தில் உபயயோக படுத்திருப்பார்).
-
டியர் பாலா சார், டியர் கிருஷ்ணா சார்,
பாடல் பதிவுகளை மழையாகப் பொழிந்து தள்ளி விட்டதால் எதைக்குறிப்பிட்டு பாராட்டுவதென்றே தெரியவில்லை.
முத்தான முத்தல்லவோ
நீ ஒரு மகாராணி
ஒரு கோடியில் இருமலர்கள்
பாக்தாத் பேரழகி
இரவும் பகலும்
பொண்ணுக்கு தங்க மனசு (கவிஞருடன் ராஜாவின் முதல் அனுபவம்)
அனைத்தும் சுவையோ சுவை.
தொய்வில்லாமல் தொடர்வதற்கு பாராட்டுக்கள்.
-
டியர் வாசு சார்,
இன்றைய ஸ்பெஷலாக நீங்கள் தந்த உறவு சொல்ல ஒருவன் படத்தில் இடம்பெற்ற 'பனிமலர் நீரில் ஆடும் அழகை' பாடல் ஆய்வு ஏ.ஒன. கருப்பு வெள்ளையில் ஒரு அழகுப்பாடல்.
பத்மப்ரியா நடித்த படங்கள் கொஞ்சமே என்றாலும் ஒன்றிரண்டு தவிர அனைத்துப் படங்களையும் பார்த்திருக்கிறேன். அழகான நடிகைகளை விட்டு விட்டு ஸ்ரீபிரியா போன்ற மொக்கைகளை நாயகியராகக் கொண்டாடும் திரையுலகில் இவரெல்லாம் அதிகப் படங்களில் தோன்ற முடியாமல் போனதில் விந்தையில்லை.
ஒரு அழகுப்பதுமையின் அழகான பாடலை எடுத்து அலசி (சி.க.கொடுத்த ரின் பாகெட்டைக்கொண்டா?) காணொளியாகவும் தந்து மகிழ்வித்ததற்கு மிக்க நன்றி.
இன்றைய ஸ்பெஷல் சிறப்பாக அமைய சிரத்தையெடுத்து வண்ணமயமாக அழகு படுத்துவது நன்றாக உள்ளது. அதற்காக மண்டை சைஸ் எழுத்துக்களில் போட்டுவிடாதீர்கள். அதை 'வேறு' திரியாளர்களுக்கு விட்டு விடுங்கள். இங்கு நம்மில் யாருக்கும் வெள்ளெழுத்து இல்லை.
-
பாலா சார்
நீங்கள் சொல்வது 100 சதவிகிதம் உண்மை
ருத்ரதாண்டவம் திரை படத்தில்
"புது மஞ்சள் மேனி சிட்டு புடவைக்குள் ஊஞ்சல் இட்டு "
என்ற பாடல் விஜயகுமார் சுமித்ரா ஜோடி இதே மியூசிக் இதே துன்
http://music.cooltoad.com/music/song...5fd4d31e5a084f
-
அன்பு கார்த்திக் சார்
உங்கள் வாழ்த்துகள் மிகவும் ஊக்கத்தை தருகிறது
மிக்க நன்றி
மேலும் நீங்கள் சொன்னது போல் நம் தமிழ் சினிமா நிறைய மொக்கை நடிகைகளை மட்டும் அல்ல மொக்கை நடிகர்களையும் கொண்டாடி கொண்டுள்ளது இன்னும் கொண்டாடி கொண்டு இருக்கின்றது
"வாங்கி விட்டீர்களா இந்த வாரம் குமுதம் பக்கத்திற்கு பக்கம் வித்தியாசம் "
-
கிருஷ்ணா சார்,
கண்ணனின் சன்னதியில்
எந்தன் கண்மணி புன்னகையில்
இனிமேல் காலங்கள் உள்ளவரை
எந்தன் பொன்மனிக்கென்ன குறை
பாடலைப் பற்றி எழுதி உள்ளீர்கள். இப்படத்தின் டிவிடிக்கள் இன்னும் வரவில்லை என்று நினைக்கிறேன்.
இப்பாடலைக் கேட்கும் போது ஒரு கொடியில் இரு மலர்கள் (காஞ்சித்தலைவன்) பாடலும் நம் கூடவே நினைவுக்கு வரும்.
-
-