-
engalil yaarathu?
எங்களில் யாரது?
அப்போதெல்லாம் எங்களுக்கு
மீசை அரும்பும் வயசு
ஆசை அடங்காத மனசு.
கண்களில் காதல் நிரப்பிக்
கொண்டு சில தேவதைகளின்
தரிசனத்திற்காக எங்கள்
வீதிவலம் விளக்கு வைக்கும் வரை
தொடர்ந்திருக்கும்.
வாசல் தெளிப்பவளாய்...
செடிக்கு நீர் வார்ப்பவளாய்...
எங்கோ செல்வதற்கு
வெளிவருபவளாய்
எப்படியோ எங்கள்
தேவதைகள் முகம் காட்டும் - அந்த
ஓரக்கண் பார்வையும்
வாயோர புன்னகையும் எங்களில்
யாரைப் பார்த்து என்பது மட்டும்
தெரியவில்லை இந்த நாள் வரை.
வெறிச்சோடி போன அதே தெருக்களில்
எங்கள் தேவதைகளை தேடி
பார்க்கின்றேன் இன்று.
எங்கேனும் குழந்தையோடும்
கணவனோடும் தென்படும்போது
அன்றைய
ஒரக்கண் பார்வையும்
வாயோர புன்னகையும் மனதை
வாட்டும் ஒரு பெருமூச்சோடு.
-------
அரவிந்த்
-
-
Arpudham Aravind... kalakiteenga...
Regards
Kanmani....
-
-
-
eh well.... took me back to my teenage days.
:)
sila kavithaigaL manathai pisaiyum.
urs can be counted as one of those.
LOVELY.