PDA

View Full Version : KOLANGAL - unkal paakam



Pages : 1 2 3 4 [5]

R.Latha
25th February 2009, 12:52 PM
ஆதி சொன்னபடி கிரி அந்த லேடியை கெஸ்ட் ஹவுஸில் தங்க வைப்பதற்கு கிரி காரில் அழைத்து போய் விட்டான்.
ராஜேஷ் அந்த ப்ராடு வீட்டில் தள்ளாடிகிட்டே பேசுகிறான். என்னை கடனாளி ஆக்கிவிட்டான் உன் அண்ணன். அந்த பெண் எனக்கும் நிறைய கடன் இருப்பதாக சொல்ல நான் பணம் எடுத்து வருவதாக சொல்லி விட்டு போய் விடுகிறான். ப்ராடு புருஷன் வந்ததும் இவனே ஒன்றும் இல்லாதவன் இவனிடம் பணம் கேட்க சொல்லி அனுப்பி விட்டேன் என்று சொல்ல, அந்த ப்ராடு புருஷன், நமக்கு பணம் வேண்டும் ஆதி சொல்வதை கேட்டால் பணம் கிடைக்கும் என்று சொல்லி விடுகிறான்.

மேனகா இன்ட்ரஸ்டாக ஏர்போனில் பாட்டு கேட்டு கொண்டிருக்கும் போது, அப்பா மேனகாவிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறார். மேம் கல்யாணம் செய்ய வேண்டும் . மேம் கல்யாணம் செய்தால் என் சுதந்திரம்போய் விடும் என்கிறார்.எனக்கு அப்படி ஒரு ஆசை வந்தால் சொல்கிறேன் . ஆதி வருகிறான் மேம் அப்பாயின்ட் படி. நாளை ஒரு மீட்டிங் இருக்கு அங்கு நீங்கள் எதுவும் பேச வேண்டாம். ஆதி உளருகிறான்.
அடுத்து ஆதி அலுவலகம் ,
ஆதி கிரியிடம் மேமை காணும் என்று கேட்க கிரி உடனே மேம் போன் பன்ன மேம் Pஅண்ணுகிறார் அவர் ஆபீஸ் வந்து விட்டதாக சொல்ல ஆதி வெளியே வந்து பார்க்கிறன். மேம் அங்கு ஒருவர் ப்யானோ வாசித்து கொண்டிருக்க அதில் லயித்து போகிரார் அவர் மீனவ குப்பத்திற்கு உதவி செய்வதற்காக ணிதி திரட்டுகிறார் அவர் பெரிய பணக்காரர். ப்யானொ குய் நான் ஆட்டொ க்ராப் போடுகிரேன் பட் ஆட்டொ க்ராப் ஒன்றுக்கு 100 ரூபாய் என்று சொல்ல நிரைய பேர் வாங்குகிரார் அவரையே மேம் பார்க்க ஆதி இழுக்காத குறையாக அழைத்து செல்கிறாம்
ஆர்த்தி வீடு,
ஆர்த்தி திடீரென்று வாந்தி எடுக்க எல்லோர்க்கும் ஆர்த்தி மாசமாக இருப்பது தெரிந்து விடுகிறது. கலாவுக்கு பேச கத்து குடுக்கனுமா. வாய்க்கு வந்த படி திட்டுகிறார்ஆர்த்தி எப்போதும் போல் அழ, கலாவின் தங்கை ஆர்த்தியிடம் வயிற்றில் குழந்தை இருக்கும் போது அழக்கூடாது தைரியமாக இரு என்று சொல்லி விட்டு போய் விடுகிறார்.
அபி வீடு,
அபி வீட்டில் எல்லோரும் ஆர்த்திக்கு பணம் கொடுக்காததற்கு திட்டுகிறார். அபியை பேச விடாமல் எல்லாம் திட்டுகின்றனர்.அபி தனியே போய் அழுகிறார்.
இரண்டு நாள் கதை. கதை சுருக்கம்

R.Latha
26th February 2009, 12:02 PM
ஆர்த்தி டாக்டரிடம் போய் செக் பண்ணி குழந்தை-யை அபார்ஷன் பண்ணும் படி கேட்டு டாக்டரையும் சம்மதிக்க வைத்து விடுகிறது. அவரும் மருந்திலேயே குழந்தை அழிந்து விடும் என்கிறார். மருந்தை வாங்கி வரும் வழியில் குழந்தை போட்டோ ஒன்று அங்கிருப்பதை பார்த்து அழுகிறது.
மேனகா வீட்டில் அவர் அப்பாவிடம் ப்யானோ வாசித்ததை பெருமையாக சொல்ல மேம் அப்பா கல்யாணத்தை பற்றி பேசினால் பேசு என்று போய் விடுகிறார் சாரதா மேடம் எழுதினால் அவருடய கருத்தும் இயக்கமும் ஒன்றாக வரும். Any way this is short paragraph.

aanaa
26th February 2009, 09:40 PM
ஆர்த்தி டாக்டரிடம் போய் செக் பண்ணி குழந்தை-யை அபார்ஷன் பண்ணும் படி கேட்டு டாக்டரையும் சம்மதிக்க வைத்து விடுகிறது. அவரும் மருந்திலேயே குழந்தை அழிந்து விடும் என்கிறார். மருந்தை வாங்கி வரும் வழியில் குழந்தை போட்டோ ஒன்று அங்கிருப்பதை பார்த்து அழுகிறது.
மேனகா வீட்டில் அவர் அப்பாவிடம் ப்யானோ வாசித்ததை பெருமையாக சொல்ல மேம் அப்பா கல்யாணத்தை பற்றி பேசினால் பேசு என்று போய் விடுகிறார் சாரதா மேடம் எழுதினால் அவருடய கருத்தும் இயக்கமும் ஒன்றாக வரும். Any way this is short paragraph.

நன்றி லதா

சித்திரமும் கைப் பழக்கம்...

aanaa
26th February 2009, 09:41 PM
. கலாவுக்கு பேச கத்து குடுக்கனுமா. வாய்க்கு வந்த படி திட்டுகிறார்ஆர்த்தி

கதை சுருக்கம்


:ty:

gta129
2nd March 2009, 12:23 AM
We watch Kolangal by renting them on DVD, because we have Tamil One which airs only Kalaignar TV serials. This time on the DVD after the serial ended there was a Kolangal serial special. I'm guessing it was for the independence day, because of the flags they were holding. Anyway they were interviewing Devayani , Deepa Venkat and Thols on how the serial has been running for six years. Deepa Venkat also sang a very nicely. When Devayani was speaking I noticed her voice was very different from the voice on serial. So does she just use a different voice when acting or do they have someone else dub the voice? The voice on serial is also the voice heard on Devayani's movies. I'm just curious to know.

R.Latha
4th March 2009, 12:57 PM
மேனகா மிடில்க்ளாஸ் பெண் போல் புடவை அணிந்து யாருக்கும் தெரியாமல் அந்த ப்யானே மேன் வீட்டுக்கு போகிறார். அங்கு ஏழை குழந்தைகளுக்கு கீபோர்ட் சொல்லி தருவதை மெய் மறந்து கேட்டு தன் சிறுவயதில் கடலின் அருகில் நின்று கொண்டு , தண்ணீரின் அலை சத்தத்தை கேட்டு சந்தோஷபடும் அந்தபருவத்தை , கண்ணை மூடிகொண்டு தன் சிந்தனையை அலை பாய விட்டு , மீண்டும் நினைவுக்கு வருகிறார்.
பிறகு ப்யானோ மேன் இவரை பார்த்து என்னை பற்றி எப்படி தெரியும் என்று கேட்கிறார். மேம் ஏதோ உளறி ஒரு வழியாக அவரின் போன் நம்பரை கேட்டு வாங்கி விடுகிறார்.தன் பெயர் மீனா என்றும் தான் மிடில் க்ளாஸ் என்று சொல்லி சேல்ஸ் கேர்ள் ஊது பத்தி விற்கிற பெண் என்று அவரிடமே சொல்லி நானும் மீனவ பெண்தான் என்று ஊது பத்தியை நூறு ரூபாய்க்கு விற்று ஆட்டோவில் வீடு திரும்புகிறார். வீட்டிற்குள் பார்த்தால் போலிஸ் ஆதி மேம் அப்பா எல்லாம் இவரை காணும் என்று வந்திருக்கிறார்கள். எல்லோரிடமும் தனக்கு ஒரு ப்ராஜெக்ட் வந்திருப்பதாகவும் தானே மாறு வேடத்தில் போய் தெரிந்து கொள்வதற்காக போனதாகவும், தான் யாரையும் நம்பவில்லை என்றும் காரணம் சொல்கிறார். மேம் அப்பா நம்ப வில்லை. எல்லோரையும் சமாளித்து விடுகிறார்.போலிஸ் எச்சரித்து போய் விடுகிறது. எல்லோரும் போய் விடுகிறார்கள். ஆதி யோசிக்கிறான். பட் தெரியவில்லை.

ஹாஸ்பிடலில் பாஸ்கர் மண்ணெண்ணெயை ஊற்றி கொண்டு ஹாஸ்பிடலில் வாழை இலையில் மூடி ஐசியூவில்வைத்து விடுகின்றனர் அபிதான் காப்பாற்றி விடுகிறார். ஹாஸ்பிடலில் வந்து மனைவி என்ற முறையில் கையெழுத்து போட்டு விட்டு குழதெய்வம் கோவிலுக்கு போய் விடுகிறார். இதை பாஸ்கரின் அம்மா அவனிடம் சொல்கிறது.அதை கேட்டு பாஸ்கர் ப்ளாஷ் பேக் நியாபகம் வருகிறது அபியை ஒரு சமயம் பாஸ்கரையே மறுமணம் செய்ய குடும்பம் நினைத்தபோது, அபி அதற்கு சம்மதிக்காமல் பாஸ்கரை ஒரு மன நோயாளி கூட கட்டி கொள்ள மாட்டாள் என்று சொல்வது நியாபகம் வருகிறது. மனதிற்குள் சிரிக்கிறான். (மனதில் பழிவாங்கும் நோக்கத்தோடுதான் இந்த தீக்குளிப்பு நாடகமும்)

R.Latha
6th March 2009, 01:15 PM
தோழர் தொல்காப்பியனிடம் நீண்ட உரையாடல் நடக்கிறது. மக்களை காப்பாற்றுவதற்காக தம் உயிர் போனாலும் பரவாயில்லை தன் மக்கள் நன்றாக இருக்க இந்த தியாகம் செய்ய உயிரையே துச்சமாக நினைக்கிறேன் என்று உணர்ச்சிவசத்தோடு பேசுகிறார். தொல்ஸ் கேட்டு கொண்டு இருக்கிறார். நீண்ட உரையாடல்.

அபி மகேஷ் வீட்டில் ஏன் தன்னையே கல்யாணம் பண்ண விரும்புவதாக சொல்கிறீர்கள் என்று கேட்கிறார். மகேஷ் தன் அக்காவை ஒருவருக்கு கல்யாணம் பண்ணி கொடுத்து அவர் கணவர் அவரை ரொம்ப கொடுமை படுத்தி பைத்தியமாக்கி தன் வீட்டிற்கு அனுப்பி வைத்து , கொஞ்ச நாள் கழித்து அதை நினைத்தே தற்கொலை பண்ணி கொண்டார். யாராவது வாழ்க்கை தர முன் வந்திருந்தால் அவர் இறந்திருக்க மாட்டார். அதனால்தான் இது போல் வாழ்க்கையில் தோல்வியுற்ற ஒருவருக்கு வாழ்க்கை கொடுத்து வாழவைக்க விரும்புவதாக சொல்கிறார் மகேஷ்.

அதற்கு அபி ஒரு வேண்டுகோள் விடுக்கிறார். நீங்கள் எங்கள் வீட்டு மாப்பிள்ளையாக வர நாங்களும் விரும்புகிறோம். உங்களை நன்றாக புரிந்து கொண்டேன்.அவர்கள் ரகசியமாக ஏதோ பேச வாய் அசைவு மட்டும் நமக்கு தெரிகிறது.

மகேஷ் நீங்கள் சொல்வது போல் நடந்து கொள்கிறேன். எனக்கு சந்தோஷம் என்கிறார். இதிலிருந்து நமக்கு புரிவது என்னவென்றால் தன் சித்தி பெண் வாழ்க்கையில் தோற்றவர். அவரை ஒருவன் ஏமாற்றிய கதையை சொல்லி அவருக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்று மகேஷிடம் கூறியிருப்பது சற்று நமக்கு புரிகிறது.

(இது எதிர்காலத்தில் நடக்கும்.)
அநேகமாக தாலி கட்டும் சமயத்தில் பெண்ணை அழைத்து வாருங்கள் என்று அய்யர் சொல்லும் போது, தன் சித்தி பெண்ணை மணவறையில் உட்கார வைப்பார் அபி. எல்லோரும் ஷாக் ஆகிவிடுவார்கள். அப்போது மகேஷ் தியாகியாகி எல்லாம் எனக்கு தெரியும். எனக்கு அவருக்கு வாழ்க்கை கொடுக்க பரிபூரண சம்மதம் என்று சொல்லி விடுவார்.சாரதாவிற்கு சந்தோஷம் .பட் கற்பகத்திற்கு அபியும் மகேஷும் தியாகி.

aanaa
6th March 2009, 10:50 PM
(இது எதிர்காலத்தில் நடக்கும்.)
அநேகமாக தாலி கட்டும் சமயத்தில் பெண்ணை அழைத்து வாருங்கள் என்று அய்யர் சொல்லும் போது, ...
:ty:

இயக்குனர்கள் மாற்றியதை அறிவிப்பவர்கள்
கதாசியர்கள் மாறியதையும் அறிவிக்கணும். :D

aanaa
17th March 2009, 02:41 AM
saradha .... dock dock ??

R.Latha
17th March 2009, 01:52 PM
கோலங்கள் மூன்று நாள்

ஆதி ஒரு பெண்ணை மும்பையிலிருந்து வரவழைத்து தோழர் பாலகிருஷ்ணனை கொல்வதற்கு அழைத்து வருகிறான். தோழர் ஒரு மீட்டிங் போடுகிறார். மேனகாவையும் ஆதியையும் அவர்களின் அராஜகம் பற்றி பேசுகிறார்கள். அதற்காக தன்னை பற்றி அவதூறாக பேசகூடாது என்பதற்காக.

அந்த பெண் அங்கே போய் ஆட்டோவில் இறங்கி துப்பாக்கியை எடுத்து குறி வைக்கும் போது யாராவது குறுக்கே நிற்கிறார்கள்.தோழர் திருவேங்கடத்தின் அராஜகத்தை பற்றி பேசிக்கொண்டே இருக்கிறார்.ஒரு எபி சோட் முழுவதும். அந்த லேடி குறி பார்த்து சுடும்போது தோழரின் நண்பர் உடம்பில் பட்டு அந்த இடத்திலேயே இறந்து விடுகிறார்.
உடனே எல்லோரும் ஆவேசம் கொண்டு இது ஆதியின் வேலைதான் அவனை பழி வாங்க வேண்டும் என்று அனைவரும் சொல்ல தோழர் காவல் துறையிடம் தான் போய் தவறு செய்தவரை தண்டிக்க வேண்டும் நாம் பண்ண கூடாது என்று அறிவுரை கூறி காவல் துறையிடம் போய் எல்லாவற்றையும் கூறுகிறார். காவல் துறையினரோ ஆதி மேல் ஆக்ஷன் எடுக்க ஆதாரம் இருந்தால் உடனே கைதி பண்ணி விடுவேன் என்று கூறுகிறார். ஏற்கனவே அந்த துறை ஆதி மேல் கடும் கோபத்தில் இருக்கிறது.பிறகு தோழரும் ஆனந்தியும் வரும் வழியில் யாரோ ஒருவர் உங்களை காண ஒருவர் ஆவலாக உள்ளார் என்றும் தன்னுடன் வரும்படியும் அழைக்க இவர்களும் போனால் ஒரு காட்டில் போய் கொண்டே இருக்கிறார்கள். ஒரு இடத்தில் உள்ளே போனால் சங்கர பாண்டி உடல் நிலை சரியில்லாமல் படுத்திருக்கிறார். உடனே ப்ளாஷ் பேக் வருகிறது அதில் ஆதியுடன்செய்த வில்லங்கமெல்லாம் காண்பிக்க படுகிறது. பிறகு சங்கரபாண்டியாக இவருக்கு பதில் என்று ஒருவரை காண்பிக்கிறார்கள். அவர் மெட்டி ஒலி லக்ஷ்மணன் மாமா (கோபியின் அக்கா புருஷன்) மேகலா வில் பேச்சி முத்து.

எனக்கு உடல் நலம் சரியில்லை. நான் நல்லாஇருந்தப்ப எல்லாரும் என்னை பாத்து பயந்தாங்க, அதனால் நாம் என்ன வேணும்னாலும் செய்யலாம்னு பணத்தை மீட்டர் வட்டிக்கு கொடுத்து நல்ல பணக்காரணாகி அரசியலில் அந்த பணத்தை வைத்து எம் எல் ஏ ஆனேன் தாதா வேலையெல்லாம் செய்தேன்.ஆதிக்கு என்னென்ன ஊழல் பண்ணியதையெல்லாம் ஆனந்தியிடம் சொல்லி விட்டு , இப்போது கேஷையெல்லாம் திசை திருப்பி விட்டு போலீசிடம் சங்கரபாண்டியன் நான் தான் எல்லாம் பண்ணிய மாதிரி பண்ணி விட்டான் போலீசும் என்னை தேடுது. நான் போலிசிடம் போனால் ஜெயில்லயே என்னை ஆள் வச்சி அந்த ஆதி கொன்னுடுவான். நான் முடிஞ்சி போன கதை. ஆனால் அந்த ஆதி பண்ணுன தப்புக்கெல்லாம் தண்டனை அனுபவிக்கனும். உங்கள் இருவரையும் பற்றியும் எனக்கு நன்றாக தெரியும். அதனால்தான் உங்கள் இருவரையும் அழைத்தேன்.அவனுடைய
பழைய fஇலெச் எல்லாம் தூசி தட்டி அவனுடைய தப்பையெல்லாம் கண்டு புடிங்க நான் எல்லாத்துக்கும் சாட்சியாக இருப்பேன். பிறகு நான் நீதிமன்றத்தில் சரணடைகிறேன். ஆனந்தி நீங்க மாறிட்டிங்கன்னா என்ன பண்றது. சத்தியமா மாற மாட்டேன்.இருமிகிட்டே இருக்கிறார் சங்கர பாண்டியன்.
ஆனந்தி தோழர் இருவரும் விடை பெறுகிறார்கள்.

பிறகு அந்த பெண் (தோழர் நண்பரை சுட்ட அந்த லேடி) ஆதியை பார்க்க வருகிறார். அவன் கன்னா பின்னா வென்று திட்டுகிறான் . அந்த லேடி இன்னொரு முறை சான்ஸ் கொடுங்க செய்கிறேன் என்கிறது. அதற்கு அவன் நீ மும்பை போறதுக்கு ப்ளைட் டிக்கெட் எடுத்துட்டேன் என்னோட கிளம்பு என்கிறான். யாரும் என்னை பார்க்க வில்லை என்கிறது அந்த லேடி ஏன் பயப்படுறீங்க என்கிறது. உடனே ஆதி பயமா எனக்கா நீதான் பயப்படுற என்று சொல்கிறான். உடனே காரில் செல்கிறார்கள் இருவரும் அப்போது போலீஸ் கார் ஆதி காருக்கு எதிரே நிற்கிறது ஆதி பயப்படுகிறான். பட் போலீஸ் வந்து பார்க்கிறது இவ்வளவு வேகமாக போக கூடாது என்று எச்சரித்து சொல்கிறது. உடனே ஆதி மனதுக்குள் முட்டாள் கொலை செய்தவள் பக்கத்தில் இருக்கிறாள் இதை கண்டுபிடிக்க முடியலை என்று திட்டுகிறான்
பாஸ்கர் வீடு
அலமு அபி வீட்டுக்கு சென்று அபி யை ஆறுதலுக்காக பாஸ்கரை பார்க்க அனுமதிக்குமாறு கேட்க எல்லோரும் வீட்டில் இருக்கிறார்கள் எல்லோரும் விரட்டாத குறையாக சொல்ல
அபியெல்லாம் வர முடியாது கல்யாணம் நெறுங்கி விட்டது அதனால் வரமாட்டாள் என்று சொல்கின்றனர்.ஆனால் அபியோ போனால் என்ன தப்புஎன்று கேட்கிறார் அபி நீ ஒன்றும் பேசாதே என்று கற்பகம் சொல்கிறார். அலமுவிடம் கற்பகம் சொல்கிறார் நீங்க பார்த்தாலே அந்த காரியம் உருப்படாது நிங்க கை வச்சா காரியமே விளங்காது என்று தலையில் அடித்தது போல் சொல்கிறார். உண்மைதானே ஒருகாலத்தில் பில்லி சூனியம் வைத்தவர்தானே அலமு.
பாஸ்கரிடம் அலமு அபி வரமாட்டேனுட்டாடா. கல்யாணத்துக்கு நாள் நெருக்குதாம் அதனால் வரமாட்டா என்று அபி அம்மா சொல்லிட்டாங்கடா என்று. அவனின் தங்கையோ ஆமான்னா அவங்களை தொந்தரவு செய்யாதே அவங்க பாவம் இப்பதான் ஒரு நல்ல காரியம் நடக்க போவுது எனசொல்கிறார். அதற்கு பாஸ்கரோ நான் ப் ரெண்டாகத்தானே நினைக்கிறேன். இதற்கும் அபி கல் யாணத்துக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்டு மாடிக்கி போகிறான்.
அங்கே சங்கீதா போட்டோ பார்க்கிறான். என்னடி சிரிக்கிறே உன்னை கொல்றதுக்கு நான் எடுத்துகிட்ட நேரம் ஒரு மணி நேரம்தான் ஆனால் ஒண்ணை நம்ப வைக்கிறதுக்கு நான் எடுத்துகிட்ட நேரம்தான் அதிகம்.அபி நீ என்னை பாக்க வரகூடாதுன்னு ஒங்கம்மா சொன்னதுல நீ வராம இருக்கலாம். பட் அந்த பிரிவை நீ நினைத்தே என் மேல் உனக்கு பிரியம் அதிகமாகிவிடும். பிறகு உன்னை கல்யாணம் பண்ணி இங்கு ஒரு அடிமையை போல் உன்னை ஆட்டி வைப்பேன் என்று சிரித்து கொள்கிறான். பிறகு சங்கீதாவிடம் அபியை மணந்து அவள் கையாலயே உனக்கு பூ போட சொல்கிறேன்.இப்படி சொல்லி சிரிக்கிறான்.

R.Latha
18th March 2009, 01:26 PM
[tscii:edd1e9138d]IndiaGlitz [Tuesday, March 17, 2009]

After small screen directors Thirumurugan and Roshan have turned to tinsel vile, it is Kolangal director Thiruchelvan’s turn! The director, whose Kolangal remains to be one of the top rated serials on TV, will be launching his first movie in May. The film has been titled ‘Devadhai Sonna Kadhai’.

While it has been confirmed that Jayaraman and Devayani are playing important roles in the film, the hunt is still on for the title character, sources reveal. Devayani owes a lot to this director, for giving her a new lease of life following marriage, through his serial Kolangal, in which she plays Abi.

Even as the hunt for the next heroine of the film is on, speculations are rife that the mega serial that Thirumurugan has been directing, will come to a close by may, when he takes on his big screen dream.

http://www.indiaglitz.com/channels/tamil/article/45628.html[/tscii:edd1e9138d]

aanaa
19th March 2009, 02:33 AM
கோலங்கள் மூன்று நாள்்.

:ty: Latha

aanaa
19th March 2009, 02:35 AM
[tscii:2f702761e4]IndiaGlitz [Tuesday, March 17, 2009]

After small screen directors Thirumurugan and Roshan have turned to tinsel vile, it is Kolangal director Thiruchelvan’s turn!

http://www.indiaglitz.com/channels/tamil/article/45628.html[/tscii:2f702761e4]

so Kolankal still going dragging on
:roll:

R.Latha
19th March 2009, 10:34 AM
i think kolangal is going to finish soon.i mean may or june it will be finish.this is not sure. my openion.May be it may happen or not. Any way it will finish with in this year. This One may be sure.

R.Latha
1st April 2009, 12:00 PM
சீரியல் தயாரிக்கிறார் தேவயானி. இன்னும் கணவர் நடித்த திரைப்படம் முடியாததால், இந்த சீரியல் லாபத்தினால் படத்தை வெளிக்கொண்டு வர ஐடியா. ( இதற்கும் ஆல் த பெஸ்ட்)

R.Latha
1st April 2009, 12:01 PM
கல்யாண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அபி அன்ட் ஆனந்தி கற்பகம் கல்யாணத்திற்கு பிறகு எல்லோரும் கூட்டுக்குடும்பமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். மகேஷ் ஓகே சொல்கிறார். பட் கார்த்திக் கல்யாணத்திற்கு பிறகு தனிக்குடித்தனம் போக வேண்டும் என்கிறான்.
வீட்டிலேயே ஆபீசும் வைக்க விரும்புவதால் இந்த தனிக்குடித்த்டன யோசனை நாள் கிழமைக்கு ஒன்று சேர்வோம் அதுதான் நல்லது என்கிறான்.எல்லோரும் அவர் யோசனைக்கு ஓகே சொல்கின்றனர்.அனைவரும் ஹாப்பி. எப்போதும் போல் அபி நான் ஆபீசுக்கு போகிறேன் என்கிறது.

aanaa
7th April 2009, 05:43 PM
may be dragged till 2010 May.

sudha india
8th April 2009, 11:08 AM
nija kalyanam kooda ivlo naal nadakkaadhu. sema izhuvai.

R.Latha
8th April 2009, 04:41 PM
உஷா தொல்ஸ் கிரி இன்னொருவர் என்னெத்தெ கன்னையா ( வடிவேலு படத்தில் வரும் டைலாக் வரும் ஆனா வராது) இவர்களையே திருச்செல்வம் காண்பிக்கிறார். நாளை திருமணம் என்று சொல்லி ஒரு வாரம் ஆகுது.

aanaa
8th April 2009, 05:43 PM
[quote=aanaa]
:roll: march mudinju april-e vandhuduche :huh:
March = இல்லையின்னா
6 வருடங்கள் இழு ஊஊஊஊஊஊஊக்க முடியுமா ...

aanaa
17th April 2009, 02:30 AM
saradha ;dock!!!!!!

Madhu Sree
17th April 2009, 10:06 AM
Update on marriage:

திருமணம் அன்று காலை:

அபி-மகேஷ், கார்திக் - ஆனந்தி... மாலையும் கழுத்துமாக மேடையில் அலங்காரத்துடன் இருக்கின்றனர்...

ஒரு திருமணத்துக்கு தேவையான அத்தனை பூஜை புனஸ்காரங்களை இரு ஜோடிகளும் செய்கின்றனர்...

தாலி கட்டும் வேலையில் இந்த அதிகப்பிரசங்கி அபி திடீரென எழுந்து மாலையை சாராதாவின் மகள் சுமதியின் கழுத்தில் போட்டு உட்காரவைக்கிறாள்...

அனைவருக்கும் அதிர்ச்சி... சாராதாவுக்கும் அதிரிச்சி, இது யாருமே எதிப்பார்காத ஒன்று, ஆனால் அபி சுமதியை முன்பே சம்மதிக்க வைத்திருக்கிறாள்...

அபி மகேஷிடம் சிறிது நாட்களுக்கு முன்பு பேசியதை ஊமை படமாய் காண்பித்தனர்... அது வேறு ஒன்றும் இல்லை... மகேஷ் தான் ஒரு வாழக்கையை இழந்த ஒரு பெண்ணுக்கு வாழ்வு குடுக்கவே தயாராக இருப்பதாக கூறுகிறார்... ஆதலால் அபி, வாழக்கையை இழந்த சுமதியை பற்றி கூற, மகேஷும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்...

கற்பகம்(சத்யப்ரியா) ஏற்பட்ட அவமானம் அதிர்ச்சி அனைத்தயும் மிகவும் அற்புதமாக வெளிக்காடினார்... நடிப்பின் உச்சிக்கே போய்விட்டார்... :2thumbsup: அபி இனி தன் மகள் இல்லை என்று கூறிவிட்டு ஆனந்தி-கார்திக்குடன் மண்டபத்தை விட்டே வெளியேருகின்றனர்... அபி எவ்வளவோ சொல்லி பார்கிறாள்... ஆனால் கற்பகம் மனம் ஏற்கவில்லை...

துப்பாக்கியுடன் வந்த பாஸ்கர் இதையெல்லாம் பர்த்துவிட்டு, கொஞ்சம் அதிர்ச்சி இருந்தாலும் மிகவும் சந்தோஷமாய் வீடு திரும்புகிறான்... இனி அபி அவனுக்கு தான் என்ற தீர்மானத்துடன்...

அடுத்து அபி பாஸ்கரை மணப்பாளா??? :banghead:

(ஏன் அபி பாத்திரத்தை இவ்வளவு அதிகப்பிரசங்கித் தனமாய் காண்பிக்கின்றனர்... யார் உலகில் இப்படி இருக்கின்றனர்... got fedup after seeing this episode... :| )

R.Latha
17th April 2009, 01:12 PM
madhu are u living in singapore. because i watched this episode yester day. Thats why iam asking. Any way thanks for updating.(':shock:')

Madhu Sree
17th April 2009, 01:34 PM
:D illa am in chennai only... I watched this last week, yaarum update pannaadhadhaala atleast marriage paththi update pannuvomenu thonichu :D...

aanaa
18th April 2009, 02:30 AM
Update on marriage:

திருமணம் அன்று காலை:
்... got fedup after seeing this episode... :| )
:ty: MADHU SREE

aanaa
18th April 2009, 06:06 PM
சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் கோலங்கள் தொடர் 7-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. கடந்த மாதம் கதையை முடிப்பதுபோல் கொண்டு வந்து கடைசி நேர டிவிஸ்ட்டில் இதெல்லாம் கனவு என்று அதிர்ச்சி ஏற்படுத்தினார், இயக்குனர் திருச்செல்வம். இதனால் தொடர் இப்போதைக்கு முடிகிற வாய்ப்பு இல்லை என்று தோன்றியது.

"கோலங்கள் தொடர் எப்போது முடியும்?'' இயக்குனரைக் கேட்டால், "வரும் மே அல்லது ஜுனில் முடியும்'' என்கிறார்.

நன்றி: தினதந்தி

aanaa
18th April 2009, 06:07 PM
சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் கோலங்கள் தொடர் 7-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. கடந்த மாதம் கதையை முடிப்பதுபோல் கொண்டு வந்து கடைசி நேர டிவிஸ்ட்டில் இதெல்லாம் கனவு என்று அதிர்ச்சி ஏற்படுத்தினார், இயக்குனர் திருச்செல்வம். இதனால் தொடர் இப்போதைக்கு முடிகிற வாய்ப்பு இல்லை என்று தோன்றியது.

"கோலங்கள் தொடர் எப்போது முடியும்?'' இயக்குனரைக் கேட்டால், "வரும் மே அல்லது ஜுனில் முடியும்'' என்கிறார்.

நன்றி: தினதந்தி

காதுல பூக் கூடை :-)

MEDIA ASIA
23rd April 2009, 12:47 AM
In todays episode (22/4-09) Tholkapien tells about what Eelam Tamils are undergoing in Sri Lanka's genocide of Tamils in Sri Lanka!

Very nice of him in Kolangal serial!! Thx

aanaa
23rd April 2009, 02:34 AM
In todays episode (22/4-09) Tholkapien tells about what Eelam Tamils are undergoing in Sri Lanka's genocide of Tamils in Sri Lanka!

Very nice of him in Kolangal serial!! Thx

:clap:

Madhu Sree
5th May 2009, 12:43 PM
சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் கோலங்கள் தொடர் 7-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. கடந்த மாதம் கதையை முடிப்பதுபோல் கொண்டு வந்து கடைசி நேர டிவிஸ்ட்டில் இதெல்லாம் கனவு என்று அதிர்ச்சி ஏற்படுத்தினார், இயக்குனர் திருச்செல்வம். இதனால் தொடர் இப்போதைக்கு முடிகிற வாய்ப்பு இல்லை என்று தோன்றியது.

"கோலங்கள் தொடர் எப்போது முடியும்?'' இயக்குனரைக் கேட்டால், "வரும் மே அல்லது ஜுனில் முடியும்'' என்கிறார்.

நன்றி: தினதந்தி

காதுல பூக் கூடை :-)

:rotfl3: கண்டிப்பா பூக்கூடை தான்...
மறுபடியும் இன்ஸ்பெக்டர் தில்லா வந்துட்டான்... :x
அவன் சாகலையாம், எல்லாம் செட்-அப்பாம் :banghead:
இதெல்லாம் கோலங்கள்-ல தான் சாத்தியம்... :hammer:

R.Latha
11th May 2009, 11:04 AM
nice dialigue

thank you Madhu shri

sarna_blr
11th May 2009, 11:31 AM
wr is Saradha Madam ????? avanga illaama indha thread'E kalaiyizhandhu pOyirukku :cry:

gta129
13th May 2009, 08:18 PM
wr is Saradha Madam ????? avanga illaama indha thread'E kalaiyizhandhu pOyirukku :cry:

I agree. :(

aanaa
13th May 2009, 11:21 PM
wr is Saradha Madam ????? avanga illaama indha thread'E kalaiyizhandhu pOyirukku :cry:

:yes:

aanaa
31st May 2009, 07:03 AM
முரசொலி மாறன் மறைந்த தினம் 23.11.2003, அன்று முதல் தான் 'கோலங்கள்' மெகா தொடர் சன் தொலைக்காட்சியில் ஆரம்பமானது.

aanaa
31st May 2009, 07:04 AM
hello Saradha

where r u???

gta129
15th June 2009, 09:34 AM
I loved the scene where Abi slapped Aarthi repeatedly at the meeting. That was one the best moment for Abi. Now if she can only to that to Mano, Abhi and his mother.

aanaa
16th June 2009, 05:14 AM
I loved the scene where Abi slapped Aarthi repeatedly at the meeting. That was one the best moment for Abi. Now if she can only to that to Mano, Abhi and his mother.

Could you update the story pl

gta129
17th June 2009, 08:20 AM
So far the story has been going back to the way it was few years ago. Usha, Abi and Thols are friends again and working in the office again. This of course enrage Abi's entire family, especially Aarthi. Aarthi is still living with Ananthi and her new husband. Aarthi is working as a senior manager in Adhi's company. Adhi also gave Aarthi and her husband a loan to start a new business. However Aarthi's husband gave the money to his mistress and her brother/husband who is threatening to put a video tape of him on the internet. Aarthi goes into the Builder Association on behalf of Adhi. While there she starts to talk badly about Thols and Abi. This causes Abi to get mad and repeatedly slap Aarthi.

Anathi's new marriage isn't going as hopen. Her husband is very aggressive now and constantly fights with her. Abi's mother and uncle also live with Anathi and her husband. Anathi's husband also yells at her uncle. Abi asked தொலர் to take over Anathi's newspaper press so she can focus on her marriage. Anathi agrees to this without knowing Abi is behind this. பரதி also comes back to visit Anathi and this causes Anathi's husband to become angry and suspicious.

Adhi is also plotting to take over Abi Constructions just like few years ago. He manages to convince Arthis into giving him her share of Abi Constructions using the recent "slapping." He also manipulates Mano into giving his share of the constructions. When Abi finds out about Adhi's plan she goes to get her mother's share of the company. But Aarthi already lied and got her mother to sign a document which gives Adhi those shares as well.

Usha's step-father's daughter comes to live with them. She is a drug addict and her father wants nothing to do with her. Usha is determined to cure her from the addiction.

Madhu Sree
17th June 2009, 12:27 PM
Abi asked தொலர் to take over Aarthi's newspaper press so she can focus on her marriage. Aarthi agrees to this without knowing Abi is behind this. பரதி also comes back to visit Aarthi and this causes Aarthi's husband to become angry and suspicious.


Aarthi illai, aanandhi... guess thts a typo... :D

Roshan
17th June 2009, 07:17 PM
So far the story has been going back to the way it was few years ago. Usha, Abi and Thols are friends again and working in the office again. This of course enrage Abi's entire family, especially Aarthi. Aarthi is still living with Ananthi and her new husband. Aarthi is working as a senior manager in Adhi's company. Adhi also gave Aarthi and her husband a loan to start a new business. However Aarthi's husband gave the money to his mistress and her brother/husband who is threatening to put a video tape of him on the internet. Aarthi goes into the Builder Association on behalf of Adhi. While there she starts to talk badly about Thols and Abi. This causes Abi to get mad and repeatedly slap Aarthi.

Anathi's new marriage isn't going as hopen. Her husband is very aggressive now and constantly fights with her. Abi's mother and uncle also live with Anathi and her husband. Anathi's husband also yells at her uncle. Abi asked தொலர் to take over Aarthi's newspaper press so she can focus on her marriage. Aarthi agrees to this without knowing Abi is behind this. பரதி also comes back to visit Aarthi and this causes Aarthi's husband to become angry and suspicious.

Adhi is also plotting to take over Abi Constructions just like few years ago. He manages to convince Arthis into giving him her share of Abi Constructions using the recent "slapping." He also manipulates Mano into giving his share of the constructions. When Abi finds out about Adhi's plan she goes to get her mother's share of the company. But Aarthi already lied and got her mother to sign a document which gives Adhi those shares as well.

Usha's step-father's daughter comes to live with them. She is a drug addict and her father wants nothing to do with her. Usha is determined to cure her from the addiction.

I was keen to read this post after seeing Sridhar's digs elsewhere at TV serials. And I am reminded of Vivek's scene in thiruttu payalE where he secretly captures a TV serial shooting scene with a video camera thinking that it's some 'kaLLa thodarpu' case, so that he can black mail the couple and get some money. Later when the director and assistant directors try to tell him the entire story of the serial he faints half way. The story is almost similar to what is mentioned above.

Vivek: ennangadA idhu.. thala suthuthudA. His expressions when they explain every scene.. :rotfl: and I felt almost the same while reading this :banghead:

Madhu Sree
17th June 2009, 07:20 PM
Rose, :rotfl3: :thumbsup: true.... :lol2:

gta129
17th June 2009, 10:37 PM
Abi asked தொலர் to take over Aarthi's newspaper press so she can focus on her marriage. Aarthi agrees to this without knowing Abi is behind this. பரதி also comes back to visit Aarthi and this causes Aarthi's husband to become angry and suspicious.


Aarthi illai, aanandhi... guess thts a typo... :D

Thank you. It was a type. :lol2:
I edited the names now.

aanaa
18th June 2009, 05:45 AM
:ty: gta
keep post

Sanguine Sridhar
18th June 2009, 01:11 PM
Roshan,

:lol:

Indha serial-la paatheengana unggalukku relationships mela ulla nambikaye poidum.

gta129
19th June 2009, 01:29 AM
:ty: gta
keep post

I will try to update them on weekly basics since we watch them on DVD rentals every weekend.

HonestRaj
19th June 2009, 06:29 PM
Roshan,

:lol:

Indha serial-la paatheengana unggalukku relationships mela ulla nambikaye poidum.

I think, this serial crossed 5 yrs........ nan vettiya irukkumpodhu aarambicha serial.. ippo enakku 5 yrs experience aagiduchu (officially :P )

saradhaa_sn
19th June 2009, 06:56 PM
ஆர்த்தி, மனோ, மற்றும் அவங்க அம்மா ஆகியோருக்கு அபி கன்ஸ்ட்ரக்ஷன்ஸிலிருந்த ஷேர்களை தந்திரமாக ஆதி எழுதி வாங்கியதை அறிந்து அபி கொதிக்கிறாள் (நாம் கொதிக்கவில்லை... உனக்கு வேணும்டி தாயே). ஆர்த்தியின் மோசடிக்கு அம்மாவும் பலியானதை அறிந்து விஸ்வநாதன் முதல்முறையாக சத்தம்போட்டு கண்டிக்கிறார்.

இந்த சிக்கலிலில் இருந்து விடுபட, ஆதித்யாவின் கைகளுக்குப்போன ஷேர்களை எப்படி மீட்பது என்று யோசனையில் அபி, விஸ்வநாதன், தொல்காப்பியன் ஆகியோர் ஆழ்ந்துபோக, அபி திடீரென ஒரு யோசனையை அறிவிக்கிறாள். மற்ற இருவரும் இது சரியாக வருமா என்று கேட்க, சற்று துணிச்சலாகத்தான் இறங்கவேண்டும் என்று அபி கூறுகிறாள்.

டிஜிட்டல் வேல்லி ப்ராஜக்ட் கையெழுத்தாகப்போகும் அன்று காலை, தான் மேஜர் ஷேர்களோடும் வக்கீலோடும் வந்து, வெளிநாட்டுக்காரர்கள் முன்னிலையில் அபியை அவமானப்படுத்தி கம்பெனியை விட்டு வெளியேற்றுவேன் என்றும், அதற்கு முன்னதாக இரண்டு 'கறுப்பு ஆடுகளும்' (ஆர்த்தியையும் மனோவையும் அப்பாவி ஆடுகளோடு ஒப்பிட்டு ஆடுகளை அவமானப்படுத்த வேண்டுமா?. 'கறுப்பு நரிகள்' என்று வைத்துக்கொள்வோமா?) இருவரும் அபி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் அலுவலகம் சென்று நடப்பதை அவ்வப்போது தனக்கு தெரிவிக்க வேண்டும் என்று சொல்லி ஆதி அனுப்பி வைக்கிறான்.

கிரியுடன் ஆதி புறப்படும் நேரம் செல்போனில் ஆதிக்கு ஆப்பு வருகிறது. ஆதித்யா பில்டர்ஸ் ஸ்டாஃப் ஒருவன், ஆதியின் ஆஃபீஸுக்கு இன்கம்டாக்ஸ் ரெய்டு வந்திருப்பதாகவும் ஆதியின் வீட்டுக்கும் அவங்க வரக்கூடும் என்று சொல்ல, அவன் சொல்லி முடிக்கும் முன் ஒரு பறக்கும் படை வந்து ஆதியின் வீட்டை உள்பக்கம் பூட்டி, சோதனையில் ஈடுபடுகிறது. ஆதியால் எங்கும் நகர முடியவில்லை. இதனிடையே அவன் கிரியிடம், தனக்கு தெரிந்த இன்கம்டாக்ஸ் ஆஃபீஸருக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லுமாறு கூற கிரி பாத்ரூம் போவதாகச்சொல்லி, உள்ளே போய் அவருக்கு போன் செய்கிறான்.

அதே நேரத்தில் ஆதியின் கெஸ்ட் அவுஸிலும் சோதனை. கெஸ்ட் அவுஸுக்கு வெளியே காரில் தொல்காப்பியனும், அபியும். ஆம் இதெல்லாம் அபியின் திட்டம்தான். ஏன் எல்லா இடத்திலும் சோதனை போட வேண்டும் என்று தொல்ஸ் கேட்க, அப்போதுதான் ஆதிக்கு சந்தேகம் வராது என்றும் அதைவிட முக்கியமாக, தங்கள் ஆட்கள் சோதனை போட்டு, ஷேர்களின் ஃபைலகளைக் கைப்பற்றும் வரை, ஆதியை ஒரே இடத்தில் முடக்கி வைக்க வேண்டும் என்று அபி கூறுகிறாள். கெஸ்ட் அவுஸில் ஃபைலகள் கிடைக்கின்றன. அதே சமயம் ஆதியின் வீட்டில், வந்திருப்பவர்கள் போலி ஆப்ஃபீஸர்கள் என்ற தகவலை கிரி சொல்ல, ஆதி கொதிக்கிறான். வீட்டில் சோதனை போட்டுக்கொண்டிருந்தவர்களைப் பிடிக்க முயல, அவர்கள் தப்பி ஓடிவிடுகின்றனர். ஆதி, தில்லாவுக்கு போன் செய்து உடனே கெஸ்ட் அவுஸுக்குப்போய் அபியையும் தொல்ஸையும் மடக்கி ஃப்லைகளைக் கைப்பற்றும்படி சொல்ல, அவன் பறக்கிறான். அதற்குள் அபியும் தொல்ஸும் ஃபைல்களுடன் காரில் ஏறிச்செல்ல, துரத்தும் தில்லா ஒரு சிக்னலில் கார் நிற்கும்போது, அபியிடமிருந்து அவற்றைப்பிடுங்கிக்கொண்டு காரில் பறக்க, இவர்கள் பின்தொடர்ந்து துரத்துகின்றனர். ஒரு இடத்தில் தில்லாவின் கார் பள்ளத்தில் மாட்டிக்கொள்ள, இறங்கி ஓடும் அவனை அபியும் தொல்ஸும் உருட்டுக்கட்டையால் தாக்கி, பைலைக்கைப்பற்றிக்கொண்டு ஆஃபீஸ் விரைகின்றனர்.

இதையறியாத ஆதி, தில்லா எப்படியும் வெற்றியுடன் திரும்புவான் என்ற எண்ணத்தில், தான் இன்னும் சற்று நேரத்தில் அபியின் அலுவலகம் வந்து அவள் முகத்திரையை கிழிக்கப்போவதாக ஆர்த்தியிடம் போனில் கொக்கரிக்கிறான்.

வெளிநாட்டுக்காரர்களெல்லாம் வந்து வெகுநேரமாகியும் இன்னும் அபி வராததை அறிந்து விஸ்வநாதன் தவித்துக்கொண்டிருக்க, அவரது தவிப்பை 'கறுப்பு நரிகள்' ரசித்து சிரிக்கின்றன. ஆனால் அந்த சிரிப்பில் மண்ணை அள்ளிப்போடும் விதமாக அபியும், தொல்ஸும் ஃபைலுடன் உள்ளே நுழைகின்றனர். வெளிநாட்டுக்காரர்களுடன் எல்லா விவரமும் பேசி, ஒப்பந்தமும் கையெழுத்தாகிறது. விருந்தினர்களை ஓட்டலில் விட்டு வருவதாக விஸ்வநாதன் அழைத்துப்போகிறார். சரியான சமயத்தில் வந்து கிழிக்கப்போகிறேன் என்று சொன்ன ஆதியண்ணாவை இன்னும் காணோமே என்று அவனுக்கு ஆர்த்தி போன் செய்யப்போகும் நேரம், அபி 'யாருக்கு போன் பண்றே, ஆதிக்கா?. அவன் வர மாட்டான். ஏன்னா, நீங்க ரெண்டு பேரும் எழுதிக்கொடுத்த ஷேர்களின் ஃபைல் இதோ என்கிட்டே இருக்கு' என்று அபி காட்ட, இருவரின் தலையிலும் பேரிடி. அதுமட்டுமல்ல, இனிமேல் கம்பெனியில் தானும், தொல்காப்பியனும், உஷாவும்தான் பார்ட்னர்கள் என்று சொல்லி அதிர்ச்சிக்குண்டை வீச, துரோகத்தின் மொத்த உருவமான ஆர்த்தி, அக்கா தனக்கு துரோகம் செய்துவிட்டதாக பேச்சை திசை திருப்ப.....

அபி வழக்கம்போல சென்டிமெண்டுக்கு ஆட்பட்டு, தங்கை, பாசம், கத்தரிக்காய், முருங்கைக்காய் என்றெல்லாம் பேசி கண்ணீர் விட்டு, சீரியல் பார்த்துக்கொண்டிருக்கும் ஆடியன்ஸை வெறுப்பேற்ற, நல்லவேளையாக இடையில் புகும் உஷா, ஆர்த்தியையும் மனோவையும் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி வாயடைக்க வைக்கிறாள். உஷாவின் ஏ,கே.47 தாக்குதலுக்கு உள்ளான 'நரிகள்' ரெண்டும் வெளியேற... அடுத்து டிஜிட்டல் வேல்லி ப்ராஜக்டில்தான் தங்கள் முழு கவனமும் இருக்க வேண்டும் என்று அபி கூற... FREEZ

Madhu Sree
19th June 2009, 08:04 PM
// :redjump: Welcome Back saradha madam... :thumbsup:

eppadi irukkeeenga... all were missing ur review including myself... :D

Howzzz ur health ??? :) //

aanaa
20th June 2009, 02:13 AM
welcome back Saradhaa

missing you for LONG time

gta129
24th July 2009, 07:12 AM
I haven't watched the serial in weeks, does anyone have any quick updates?

sudha india
24th July 2009, 10:10 AM
Naanumthaan....

aanaa
26th July 2009, 06:49 AM
another 5 years to go
so donot expect much here....


in brief:

Anthoni - tried to kill Menak on the way to airport.and he got shot by Menaka'a security. Thols also came to know thru Krishnan that Anthoni stayed with him as a produer. so he also on the shooting scene. Police also was guarding the Menaka's car to the airport with Athi..

Before Anthoni dies he pulled Thols in this drama and shouted "" escape Thols" in the crowd/police. So Thols in run now.

Abi came to know this news thru TV.

as usual Athi - shouting with Inspector ...

Thols some or other entered into Menaka's house and Menaka also missing now.

Mano and Anu try leave the house and Athi again made some scene.

.....

aanaa
26th July 2009, 07:20 AM
No body has very crooked thinking வக்கிர புத்தி- like Thols.

Reka always wants to stay with Athi but not with his husband Arjun.
.....

gta129
18th August 2009, 04:44 AM
I moved to a new house and the video store next to is under renovation. So I haven't watched Kolangal in a long time. Any new updates?

aanaa
18th August 2009, 07:35 AM
1. Narayanan - a worst charector, who utilised Abhi's sympathy to save his son and family.
2. Ranjani - konja naal aadiya aattaam enna?.
3. Ubendra - Finally he did his part well
4. Sivadoss's wife - just come & go
5. Manjula - a foolish charector (she knows there is poison in food, is it necessary she must eat it and prove?)
6. Rudhra - a pitiable charector, died in Cochin episode. just came as a lightning.
7. Maddy - the black mailer of Anjali
8. Arthy's father-in-law (K.Kannan) : not shown as dead, but actually died.
9. Sangeetha's dad: murdered by the cruel and greedy son-in-law Basker,
10. Saroja: killed by her brothers
11. Saroja's brother - killed by Dhilla
12. Saroja's brother- killed by Dhilla
13. Saroja's brother - died in hospital
14. Kanchana's mom - Adhi's grand mom, who knows the secrets apart from Eswaran, Maragatham & Thiruvengadam.
any more missing...???.


15. In kollimalai kaadu - an adiyal shot by the thalaivan
16. Inspector Pirabu
17. another guy together with the Inspector
18 : Anandhi's Mother-in-law
19: and Father-in-Law in accedent
donot know whether their daughter and husband also in the accident -
if so 20 and 21



22. The guy that Saroja's brother shot in the godown...
23 ..... and Saroja's periyappa - killed by Adi's henchmen



24. Santhi
25/26: மேனகாவின் பாதுகாவலர் 2
27 : பொதுமகன்
28/29 : காவல்துறையினர் 2
30. வேலைக்காரன்
31. சங்கீதா
32. அந்தோனி
32. அர்ஜுன் -

Thanks - Karthik

sudha india
18th August 2009, 10:46 AM
Indha KOLAIGAL serial vara vara the most irritating.

Kolai mela kolai pannitte irupanga ana investigate pannave mattanga.

The seial can have 2 endings :

Adhi or baskar kills every body and leaves only Abi (as she is the heroine) so that the story cannot move further and thus have a sad ending.

OR

After killing few more, and Abi always escaping, puts down Adhi in business.

Then Adhi thirundhi .....Akka- nu kooptadhum Abi sandhoshappattu, bakki irukkara rendu moonu perudan, + Baksarudan - living happily ever after.

Waste of time....... No more talking on this.

mr_karthik
18th August 2009, 04:12 PM
Indha KOLAIGAL serial vara vara the most irritating.

Kolai mela kolai pannitte irupanga ana investigate pannave mattanga.

Waste of time....... No more talking on this.

Well said Sudha mam,
This is the most irritating and worst serial telecasting nowadays (next may be Arasi). It doesnt mean that other serails are too good. It is worst among all bad. (in this week 'lollu saba', tv serials were nakkalised and kindalised)

I am not regular watcher, but will see when there is no any other programmes. Yesterday episode was too horrible. In the hospital that lady kanchana is blaming Abhi even for the murder of Arjun, and as usual Abi keeps mum. nonsence.

for each and every drama of Adhi, all family members are signing in blank documents and giving to him. another nonsence.

aanaa,

in your dead list, before Arjun name, you missed Anthony (who tried to kill Menaka). But the first man to be killed is Eswaran (father of abi & Adhi) and next should be Usha. these charecters are always giving advice to Adhi face to face, evethough they know the result will be a big zero.

sudha india
18th August 2009, 04:40 PM
Thiruselvam aka Thols number kidaicha nallarukkum.

I want to ask him, why he hates TV Serial watchers ?

Serial pakkaravangala serialale pazhi vaangar. Novel idea.

Atlease police dept-ku kovam vandhu indha seriala niruthina nalla irukkum.

gta129
18th August 2009, 11:33 PM
I agree. Serials have gone downhill. It wasn't too long ago serials like Chitthi and Krishna Dasi broke the stereotype of the usual sob story serials. But now a days serials are really bad. They almost always have the same annoying story line and same characters. If I see another lead female character who is willing to forgive every bad things her enemies did o her I'm just going to stop watching TV all together. Abi's character is the worst. She keeps forgiving everyone and keep making the same mistakes. Arasi and Selvi are no better either.

In one serial the same story repeats over and over again. Abi forgives everyone, but they all turn against her again weather it's her mom, sister, brother or Baskar. Same thing with Arasi. She forgives her children only to be hated by them again. Same thing with Selvi. It's like every six months they recycle the storyline. If they can't come up with good, original and unique storyline, they should just end the serial rather then dragging it on and on for years. They should really take some lessons from Krishna Dasi and Sahana.

saradhaa_sn
26th August 2009, 08:04 PM
I agree. Serials have gone downhill. It wasn't too long ago serials like Chitthi and Krishna Dasi broke the stereotype of the usual sob story serials. But now a days serials are really bad. They almost always have the same annoying story line and same characters. If I see another lead female character who is willing to forgive every bad things her enemies did o her I'm just going to stop watching TV all together. Abi's character is the worst. She keeps forgiving everyone and keep making the same mistakes. Arasi and Selvi are no better either.

In one serial the same story repeats over and over again. Abi forgives everyone, but they all turn against her again weather it's her mom, sister, brother or Baskar. Same thing with Arasi. She forgives her children only to be hated by them again. Same thing with Selvi. It's like every six months they recycle the storyline. If they can't come up with good, original and unique storyline, they should just end the serial rather then dragging it on and on for years.
கீதா...

சீரியல்னாலே நமக்கு தெரிந்ததுதானே. யார் வேண்டுமானாலும் சீரியலுக்கு கதை எழுதி விடலாம். சீரியலின் மையமாக ஒரு கதாநாயகி இருப்பாள். கதை அவளைச்சுற்றியே நகரும். (பெரும்பாலும் திரைப்படங்களில் மார்க்கெட்டை இழந்து ஓடி வந்தவர்களாகத்தான் இருக்கும். ஒவ்வொரு கதையிலும் ஒரு நாயகி ஒன்றில் ராதிகா என்றால் இன்னொன்றில் தேவயானி, அடுத்த ஒன்றில் கௌசல்யா, இன்னொன்றில் மீனா, இன்னொன்றில் சங்கவி, மற்ற ஒன்றில் பானுபிரியா, பிரியா ராமன், மீனாகுமாரி, ரம்யாகிருஷ்ணன் இப்படி). அவளைச்சுற்றி ஒரு குடும்பம். குடும்ப மொத்த பாரத்தையும் அவள்தான் சுமப்பாள். பேருக்கு ஒரு உதவாக்கறை அப்பன், தொட்டதுக்கெல்லாம் அழுது குவிக்கும் அம்மா, காலேஜுக்குப்போகும் ஒரு தங்கை, படித்துவிட்டு (அல்லது படிக்காமல்) ஊர் சுற்றும் ஒரு தம்பி.

மகாராணி குடும்பத்தைக்காப்பாற்றுவது மட்டுமல்லாமல், தம்பியால் வரும் போலீஸ் பிரச்சினைகள், தங்கையின் காதல், அப்பாவின் அடாவடித்தனம் எல்லாவற்றுக்கும் அவள்தான் ஈடுகொடுப்பாள். ஆனால் அவளுக்கு கோபமே வராது. எல்லாரையும் மன்னிப்பாள். பெருந்தன்மையின் பிறப்பிடமாக இருப்பாள். அவளுக்கு யார் என்ன தீங்கு செய்தாலும் அதை மன்னித்துக்கொண்டே இருப்பாள். கதையில் வரும் போலீஸ்காரர்களில் நல்ல போலீஸே இருக்க மாட்டான். அத்தனை பேருமே வில்லனிடம் பணம் பெற்றுக்கொண்டு அவனுக்கு அடிமை சேவகம் செய்பவனாகவே இருப்பான். ஆனால் நாயகி மட்டும் அத்தனை போலீஸ் அராஜகத்துக்கும் ஈடு கொடுப்பாள்.

.....அடிப்படையை புரிஞ்சிக்கிட்டீங்களா?. இப்ப நீங்க கூட சீரியலுக்கு கதை எழுதலாம். உங்க இஷ்டத்துக்கு கற்பனையை காடுமேடெல்லாம் இழுத்துச்செல்லலாம். யாரும் கேட்கப்போவதில்லை. ஆனால் அடிப்படையை மட்டும் மறந்துவிடாதீர்கள். அதாவது நாயகி யாரையும் தண்டித்துவிடக்கூடாது, மன்னித்துக்கொண்டே இருக்க வேண்டும், என்ன க்ஷ்ட்டம் வந்தாலும் அவள் மட்டுமே சுமக்க வேண்டும்.

என்ன ரெடியா...?

sudha india
27th August 2009, 01:49 PM
Sarada......... நச் என்று வார்தைகள். :clap:

நானும் இந்த அடிப்படையில் சீரியலுக்கு கதை எழுதலாம்னு நினைக்கிறேன். :lol:

Chumma thanga sonnen. yarum sereala sorry seriousa eduthuka vendam. :lol:

I stopped watching this KOLAIGAL serial. Nimmadhiya irukku. :D

Sarna
27th August 2009, 02:02 PM
I stopped watching this KOLAIGAL serial. Nimmadhiya irukku. :D

tholgaappiyar kooda romba feel panni sonnaar :(

saradhaa_sn
8th September 2009, 03:04 PM
நேற்று கொலை செய்யப்பட்ட சங்கரபாண்டியனுடன் சேர்த்து இறந்தவர்களின் எண்ணிக்கை.... 34

அர்ஜுன் கொல்லப்பட்டு ரத்தம் காய்வதற்குள், ஆதியால் அடுத்த கொலை 'சங்கரபாண்டியன்'.

உண்ணாவிரதமிருக்கும் அப்பா சங்கரபாண்டியனுக்கு மகள் ரேகா ஜூஸ் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைக்கிறாள். பக்கத்தில் போலீஸும் நிற்கிறது. ஜூஸ் குடித்த சில வினாடிகளில் மயங்கி விழுகிறார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட, அங்கு இறந்துபோகிறார். மீடியா மீட்டிங்குக்கு ஏற்பாடு செய்திருந்த அபிக்கும் தோழருக்கும் அதிர்ச்சி. ஜூஸில் விஷம் கலந்த ஆதிக்கு மகிழ்ச்சி. ஆனால் அதை மறைத்துக்கொண்டு, அபியும் தோழரும்தான் சங்கரபாண்டியனைக் கொன்றுவிட்டதாக கத்துகிறான்.

"ஏண்டா நாயே, இத்தனை நாளாக போலீஸுக்குக்கூட தெரியாமல் சங்கரபாண்டியன் எங்கள் கஸ்டடியில்தானேடா இருந்தார். நாங்கள் கொலவதென்றால் அப்போதே கொன்று யாருக்கும் தெரியாமல் எரித்திருக்க மாட்டோமா?. இப்படி பப்ளிக்காக மீடியா முன்னால் நிறுத்தியா கொல்ல வேண்டும்?. அதுமட்டுமல்லாமல் அவர் உயிரோடு இருந்தால் ஆபத்து உனக்கா அல்லது எங்களுக்கா?"

என்று கேட்க முடியாமல் அபி வாயில் பெரிய கொழுக்கட்டை. தோழர் வாயில் அதை விட பெரிய கொழுக்கட்டை. தேவையில்லாமல் வேறு எதையோ இருவரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். (டென்ஷன் படுத்துறாங்கப்பா).

நல்லவேளை, அடுத்த செக்மெண்ட்டில் இன்ஸ்பெக்டர் வந்து, 'போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்படி நீங்க கொடுத்த ஜூஸ்லதான் விஷம் கலந்திருக்கு. ஸோ, ரேகா.. யூ ஆர் அண்டர் அரெஸ்ட்' என்று சொல்ல கொஞ்சம் நிம்மதி. (ஆனால் ரேகாவுக்குத் தெரியாமல் ஆதிதான் விஷம் கலந்திருக்கிறான்).

இந்தக்கதையில் வரும் போலீஸ் மாதிரி தமிழ்நாடு போலீஸும் இருந்தால் யார் வேண்டுமானாலும் எத்தனை கொலைகளும் செய்துவிட்டு 'ஜம்'மென்று உலாவரலாம். ஆனால் நிஜ போலீஸ் புடிச்சிடறாங்களே.

ஆதிக்கு எதிரான ஆதாரங்களை வெளியிடப்போவதாக சங்கரபாண்டியனை வைத்து அபி & கோ, இத்தனை நாட்களாக கொடுத்துவந்த பில்ட்-அப் அனைத்தும் 'சப்'பென்று முடிந்துவிட்டது.

Sarna
8th September 2009, 03:11 PM
நேற்று கொலை செய்யப்பட்ட சங்கரபாண்டியனுடன் சேர்த்து இறந்தவர்களின் எண்ணிக்கை.... 34

captain vijayakanth maadhiri periya pulli vivaram list edhirpaaththEn :P


மீடியா மீட்டிங்குக்கு ஏற்பாடு செய்திருந்த அபிக்கும் தோழருக்கும் அதிர்ச்சி.
ஜூஸில் விஷம் கலந்த ஆதிக்கு மகிழ்ச்சி.

அதிர்ச்சி.
மகிழ்ச்சி.
எழுதியிருக்கீங்க ரசிச்சி :happydance:

Arthi
8th September 2009, 03:23 PM
i stopped it long time back :X

Saradha madam: neenga oru karma yogi dhan :clap:

saradhaa_sn
8th September 2009, 05:11 PM
ஆர்த்தி...

நானும் தொடந்து பார்ப்பதெல்லாம் இல்லை. எப்போதாவது பார்ப்பதுதான். என்னவோ, நேற்று பார்த்ததும் எழுதணும்னு தோணிச்சு எழுதினேன். அவ்வளவுதான்.

இந்த தொடர் போரடிக்க முக்கிய காரணமே அபி கேரக்டர்தான்.

அதோடு இந்த மாதிரி தொடர்களால், பார்ப்பவர்களுக்கு இதய நோய் வருகிறது என்று டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.

"திருமதி செல்வம்" என்ற தொடர் பார்த்துக்கொண்டிருந்த ஒரு 36 வயது பெண்ணுக்கு HEART-ATTACK வந்த விஷயம் உங்களுக்கு தெரியும்தானே?.

P_R
8th September 2009, 05:23 PM
இறந்தவர்களின் எண்ணிக்கை.... 34 :rotfl: :rotfl:

Statistics on casualties among viewers is not available :lol2:

saradhaa_sn
8th September 2009, 05:41 PM
பிரபு...

அது வேறொண்ணுமில்லீங்க. அதே பக்கத்தில் போஸ்ட்டுக்கு மேலே, இறந்தவர்கள் 33 பேரை 'aanaa' லிஸ்ட் போட்டிருந்தார். அதோடு ஒன்று சேர்த்துக்கொண்டேன். அவ்வளவுதான்.

மற்றபடி, நீங்க கேட்ட மாதிரி... பார்த்தவர்களில் எத்தனை பேர் போய்ச்சேர்ந்தார்கள் என்பது தெரியவில்லை. நாம் இன்னும் கொஞ்ச நாள் இருக்க விரும்பினால், இம்மாதிரி தொடர்களை தவிர்ப்பது நலம் என்று தோணுகிறது.

aanaa
12th September 2009, 11:12 PM
1. Narayanan - a worst charector, who utilised Abhi's sympathy to save his son and family.
2. Ranjani - konja naal aadiya aattaam enna?.
3. Ubendra - Finally he did his part well
4. Sivadoss's wife - just come & go
5. Manjula - a foolish charector (she knows there is poison in food, is it necessary she must eat it and prove?)
6. Rudhra - a pitiable charector, died in Cochin episode. just came as a lightning.
7. Maddy - the black mailer of Anjali
8. Arthy's father-in-law (K.Kannan) : not shown as dead, but actually died.
9. Sangeetha's dad: murdered by the cruel and greedy son-in-law Basker,
10. Saroja: killed by her brothers
11. Saroja's brother - killed by Dhilla
12. Saroja's brother- killed by Dhilla
13. Saroja's brother - died in hospital
14. Kanchana's mom - Adhi's grand mom, who knows the secrets apart from Eswaran, Maragatham & Thiruvengadam.
15. In kollimalai kaadu - an adiyal shot by the thalaivan
16. Inspector Pirabu
17. another guy together with the Inspector
18 : Anandhi's Mother-in-law
19: and Father-in-Law in accedent
donot know whether their daughter and husband also in the accident -
if so 20 and 21
22. The guy that Saroja's brother shot in the godown...
23 ..... and Saroja's periyappa - killed by Adi's henchmen
24. Santhi
25/26: மேனகாவின் பாதுகாவலர் 2
27 : பொதுமகன்
28/29 : காவல்துறையினர் 2
30. வேலைக்காரன்
31. சங்கீதா
32. அந்தோனி
32. அர்ஜுன்
33. சங்கரபாண்டியன் (34??)
34/35 2 people by Dilla in flashack
36/37 : 2 officers by Dilla in flashack

Thanks - "mr_karthik" , "ts" ,"saradhaa_sn"



38: ரேகா
40. தோழர் பாலகிருஸ்ணன்
41. மேனகா????

kolai kolai kolai .... kolaikaLE thaan

saradhaa_sn
15th September 2009, 07:19 PM
ஆதியின் அடுத்த கட்ட நடவடிக்கையாக, தில்லா கூட்டத்தால் தோழர் கடத்தப்பட்டு கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சித்திரவதை செய்யப்படுகிறார். அவரிடம் இருக்கும் வீடியோ ஆதாரத்தையும், சங்கரபாண்டியனால் கொடுக்கப்பட்ட ஆதாரங்களையும் கேட்டு முதலில் ஆசை வார்த்தை காட்டப்படுகிறார். அதற்கு மசியாமல், கை கால் கட்டப்பட்டு, சுற்றிலும் உருக்கட்டைகளுடன் அடியாட்கள் நிற்கும் நிலையிலும் சாமர்த்தியமாகப்பேசி தப்பிக்க எண்ணாமல், அந்நிலையிலும் வீர வசனம் பேசி அடி வாங்குகிறார். அவரது வசனங்கள் கதையோடு சம்மந்தப்பட்டதாக இல்லை. இலங்கைப்போராளிகளுக்கு ஆதரவான பொதுவான வசனங்கள். தில்லாவினால் துப்பாக்கியால் அடிக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடக்கிறார்.

தோழர் கடத்தல் பற்றி வேறொரு போலீஸ் ஸ்டேஷனில் அபி புகார் செய்ய அவர்கள் வழக்கம்போல பாராமுகம் காட்டுகின்றனர். மொத்த போலீஸ் டிபார்ட்மெண்ட்டுமே ஆதிக்கு ஏவல் செய்வதாக காட்டுவது ரொம்பவே நெருகிறது.

அபியின் கம்பெனியைப்பற்றிய அவதூறு செய்தி இன்னொரு புதிய பத்திரிகையில் வர, கொதிப்படைந்த அபியும் விஸ்வநாதனும் அந்தப்பத்திரிகை அலுவலகத்துக்குப்போய் விளக்கம் கேட்க, அந்த செய்தியைத்தந்த துணையாசிரியரை ஆசிரியர் அறிமுகப்படுத்த, அந்த துணையாசிரியை வேறு யாருமல்ல, அபியின் தங்கை ஆனந்திதான். அபிக்கும் ஆனந்திக்கும் வாக்குவாதம் முற்றுகிறது. ஆனந்தி, தான் கொடுத்த செய்தி உண்மைதான் என்று சாதிக்க, அபியின் நிலை சங்கடம்.

கதையை நீட்டிக்க அதே பழைய அரைத்தமாவு சம்பவங்களே, புதுப்பிக்கப்பட்டு அரங்கேற்றப்படுகின்றன. இந்தப்பத்திரிகை விவகாரம் இன்னும் கொஞ்ச நாள் ஓடும். அதற்குள் வேறு ஐடியாக்களை யோசித்துக்கொள்ளலாம்.

Sarna
15th September 2009, 07:47 PM
மொத்த போலீஸ் டிபார்ட்மெண்ட்டுமே ஆதிக்கு ஏவல் செய்வதாக காட்டுவது ரொம்பவே நெருகிறது.

சரியான சொல்தானா ? அல்லது இந்தத் தொடர் தங்களுள் ஏர்ப்படுத்திய பாதிப்பின் விளைவா ?

saradhaa_sn
16th September 2009, 03:12 PM
கதையை இழுப்பதற்கு கார்த்திக்-ஆனந்தி வாக்குவாதமும் உதவுகிறது. இடையிடையே இவர்கள் வாதங்கள் பெரும்பகுதியை ஆக்ரமித்துக்கொள்கின்றன (கொல்கின்றன..?). கார்த்திக் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறான். (ஏன் ஆனந்தியை வெறுக்கிறான் என்பதற்கான காரணம் மட்டும் வலுவாக இல்லை. சந்தேகம் மட்டுமா அல்லது ஈகோவா?)

மேனகாவின் வளர்ப்புத்தந்தை ஆதியைப்பார்க்க வருகிறார். மேனகாவின் தலைமறைவு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் நிறைய ஐயங்களைத் தோற்றுவித்திருப்பதாகச் சொல்ல, தான் அதையெல்லாம் சரி செய்வதாக ஆதி சொல்வதுடன், நாளை கமிஷனரை சந்திக்கப்போகும்போது அவரையும் அழைத்துப்போவதாக சொல்கிறான்.

தனக்கு முன் ஜாமீன் வாங்கிக்கொடுத்த வழக்கறிஞரை அபியும் விஸ்வநாதனும் சந்திக்கின்றனர். தோழரையும் அவரிடம் உள்ள ஆதாரங்களையும் காப்பாற்ற வேண்டும் என அபி கூற, இது விஷயமாக கமிஷனரை சந்திப்போம் என்று வக்கீல் சொல்கிறார். அபிக்கு அதில் உடன்பாடில்லை. மொத்த போலீஸ் டிபார்ட்மெண்ட்டுமே ஒன்று பணத்துக்கோ அல்லது அச்சுறுத்தலுக்கோ விலைபோவதாகச்சொல்ல, அப்படியானால் இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை கோருவோம் என்று வக்கீல் சொல்கிறார். அபிக்கும் விஸ்வநாதனுக்கும் முகத்தில் நம்பிக்கை ஒளி. அதற்கு முதற்கட்டமாக முதல்வருடன் அவர்களுடைய சந்திப்புக்கு அப்பாயிண்மெண்டுக்கு ஏற்பாடு செய்வதாக வக்கீல் சொல்லி அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துகிறார்.

சங்கரபாண்டியன் கொலையிலாவது அட்லீஸ்ட் அவரது மகள் ரேகாவை சிறையில் வைத்துள்ளனர். ஆனால் அர்ஜுன் கொலை 'அம்போ'வாகிவிட்டது. தோழரையும் போட்டுத்தள்ளிவிடலாமா என்று தில்லா கேட்க, அவரிடம் இருக்கும் ஆதாரங்களைக்கைப்பற்றும் வரையில் அவரை கொல்லவேண்டாமென்றும், அதிகபட்சம் சித்ரவதை செய்யுமாறும் ஆதி கட்டளையிடுகிறான்.

sudha india
17th September 2009, 10:40 AM
இந்த கொலைகள் சீரியலை பார்பதில்லை என்று முடிவெடுத்தபின் எனக்கு இங்கு என்ன வேலை என்று நினைப்பவர்களே, மன்னிக்கவும். எப்படியும் 3, 4 நாளைக்குள் 1,2 காட்சிகள் பார்க்கும் கட்டாயம் வருகிறது. (Courtesy : Guests)

Let this serial go on and on and on... While we cannot do anything to make the serial interesting, we can atleast make this thread interesting by having a contest.

Guess the end :

If the readers of this thread agree, we can run this contest here. Everyone can tap their imagination or guess how Thols would like to take the serial seriously and predict the ending.

Thereby, we will have some fun with creative, unimaginable, funny, interesting posts.

Secondly, if Thols happens to visit this thread, he can also have some ideas to finish the serial and save the viewers.

Alternative would be, you can give different ending to different characters......
For eg :
Thozhar : Will be killed by Dhilla
Adhi : Will become mental
etc.. etc...

This is only my suggestion. If you feel that this is not right and we should have only the reviews, it is fine.

However, request Saradha to continue her write up with punch comments which is more interesting to read, than watching the serial itself.

saradhaa_sn
17th September 2009, 02:49 PM
டியர் சுதா...

உண்மையில் மிக அருமையான யோசனையத் தந்துள்ளீர்கள். இந்த திரியை கொஞ்சமாவது சுவாரஸ்யமாகக்கொண்டு செல்ல உங்கள் யோசனையும், அதைத்தொடர்ந்து வாசகர்கள் தரப்போகும் முடிவுகளும் அமையக்கூடும்.

அதுமட்டுமின்றி, நீங்கள் சொன்னதுபோல ஒருவேளை தொல்ஸ் (என்கிற திருச்செல்வம்) இவற்றைக்காண நேர்ந்தால், அவரது சின்ன மூளையைக்கசக்கி இத்தனை நாள் யோசித்து வந்ததற்குப்பதிலாக.... 'அடடா, கதையை மேலும் இழுத்துச்செல்ல இப்படியும் வழிகள் இருக்கின்றனவோ' என்று எண்ணி மேலும் சில ஆண்டுகளுக்கு இழுக்கும் ஐடியாவை மேற்கொள்ளக்கூடும்.

இப்பவே மக்கள் மத்தியில், 'கோலங்கள்' சீரியல் என்றாலே, 'ஓ.... 25 நிமிஷம் விளம்பரமும் 5 நிமிஷம் கதையும் போடுவார்களே அந்த சீரியல்தானே' என்று கேட்கின்றனர். அந்த அளவுக்கு டி.ஆர்.பி.ரேட்டிங்கில் எகிறிப்போய் நிற்கிறது. ராடான் நிறுவனம், ஏ.வி.எம் எல்லாம் முயற்சித்தும்கூட இந்த ரேட்டை எட்ட முடியவில்லை. இந்த சீரியல் விகடன் ஒளித்திரைக்கு பெரிய பிளஸ் பாயிண்ட்டாகிவிட்டதால், திருச்செல்வம் என்ன சொன்னாலும் அந்நிறுவனத்துக்கு வேத வாக்கு. சன் தொலைக்காட்சி இருக்கும் வரை இந்த சீரியலும் ஓடுமோ என்ற ஐயமும் (அச்சமும்..?) மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ('தினத்தந்தி' பத்திரிகை இருக்கும்வரை 'கன்னித்தீவு' படக்கதையும் வரும் என்பதுபோல).

இந்த கோலங்கள் சீரியலின் தனிச்சிறப்பு, நீங்கள் எத்தனை நாட்கள் பார்க்காமல் விட்டு விட்டு, மீண்டும் பார்த்தாலும் கதையை (அப்படி ஒன்று இருந்தால்) புரிந்துகொள்ள முடியும். காரணம், செக்குமாடு மாதிரி அங்கேயேதான் சுற்றிக்கொண்டு நிற்கும்.

இந்த மாதிரி 'நீ............ண்ட' நாட்களாக (மாதங்களாக, வருடங்களாக) ஓடும் சீரியல்களின் மிகப்பெரிய குறை, ஏகப்பட்ட பாத்திரங்களை அறிமுகப்படுத்தி, அவர்களைக்கொண்டு கதையில் ஏகப்பட்ட முடிச்சுகளைப்போட்டு விடுவார்கள். அந்த முடிச்சுகளையெல்லாம் எப்படி அவிழ்க்கப்போகிறார்கள் என்று ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தால், எதற்கும் தெளிவான விடை சொல்லாமல் ஒருநாள் 'பொசுக்'கென்று முடித்து 'சுபம்' போட்டுவிடுவார்கள். இதுவரை முடிந்த எல்லா சீரியல்களுமே அப்படித்தான் முடிந்துள்ளன.

'கோலங்கள்' முடிவு (ஒருவேளை முடிந்தால்) என்னவாக இருக்கக்கூடும்..?.

1) அபியின் எல்லா பிஸினஸ்களையும் ஆதி முடக்கி விட்டு, அவன் வெற்றியின் எக்களிப்பில் இருக்கும்நேரம், அபி, விரக்தியின் எல்லைக்குப்போய் கையில் துப்பாக்கி எடுத்து அவனைச்சுட்டுத்தள்ளுவதும், அதைப்பார்த்து காஞ்சனா அபியைத்திட்டும்போது, 'உன் புள்ளை, எல்லோரையும் கொன்றபோது உனக்கு இனிச்சதில்லையா?. இப்போ மட்டும் ஏண்டி கத்துறே' என்று அவளையும் போட்டுத்தளுவதுமாக இருக்குமோ.

2) எண்ணத்தாலும், செயலாலும் அபியின் உயர்வையே குறிக்கோளாகக்கொண்ட தொல்காப்பியன், ஆதியச்சுட்டுத்தள்ளிவிட்டு, சிறைக்குப்போவதாக இருக்குமோ?.

3) தன் மூத்த குடும்பத்துக்கு எதுவுமே செய்யவில்லையே என்ற ஆதங்கத்தில் இருக்கும் ஈஸ்வரன், ஆதியையும் காஞ்சனாவையும் போட்டுத்தள்ளிவிட்டு தியாகியாக மாறுவாரோ?

முடிகிறமாதிரி இருந்தால்தானே முடிவெல்லாம் தேவைப்படும். இந்த சீரியலுக்கு எதற்கு என்கிறீர்களா?.... அதுவும் சரிதான்.

aanaa
17th September 2009, 07:10 PM
டியர் சுதா...
இந்த கோலங்கள் சீரியலின் முடிகிறமாதிரி இருந்தால்தானே .

:lol:

may be Thiruchelvam as director- end up in as insane/ :evil:

sudha india
18th September 2009, 11:04 AM
Aanaa.......... Thiruselvam romba clever. Nammalathan insane akkuvaar......

Thanks Sarada.........for accepting my suggestion and giving some climax options.

I will write later.... Konjam busy

Aanaa : Thread tilte : Kolangal - Guess the end : nu mathina innum neraiya per post panna koodum... Views mattum erudhu. But no one posts here. Andha alavukku hubbers veruthu poirukanga pola :lol:

sudha india
18th September 2009, 01:55 PM
My thoughts :

1) Adhi Abikku melum thollai kuduthu, again Abi courtil nikka, uyir kappan thozhan endru Thols Menakavudan aajaraagi Abiya kappathalam. Menakavum Thols than annan endru solli flash backs oda vittu prove pannalam. Idharkidayil Thols Menakavaiyum aval loveraiyum sethu vaikkalam.

2) Adhiyai CM moolamaga CBI - l matti vittu avan escape aga mudiamal oru mental stage agalam. Idhai pathu Kanchana heart break agai kaN moodalam. Azhumooji Karpagam, ini ellarume en kuzhandhaigalnu solli anandha kanneer vadikkalam.

3) Rekha, Menaka, Chittappa endru ellarum Aadhikku edhiraaga maari avan seidha NALLA seyalgalai ambalapadutha, court, jail, thooku - ku bayandhu Athi thannai thaane suttukkollalam. Kanchana also following him.

Idhellam oru pakkam irundhalum Baskar track thaniyaga odanum......avanadhu kolaigalai Abi therinju avanai thookuku anuppi, etc etc....

Apram irukkave irukku Anandhi, Mano, Aarthi-yin vazhkai...... adha vechu ellarum thirundha koranjadhu 2 varusham agalam :evil:

Ezhudhave ithanai neram agudhu. Idhai ellam serialil katta innum 4 - 5 years wait pannalam. :roll:

So edhukkum indha serial pakkaravanga adhutha thalaimuraikku "idhuvarai nadandhadhu"nu....... kadhai sonnal adutha thalai murai continuousa pakkum bothu TRP rating problem varama pathukalam. :lol:

//Yosikka yosikka egappata mudivugal varudhu. i think I can also write story for serial...
(Enna Saradha solreenga ? :lol:) //

sudha india
18th September 2009, 01:59 PM
Solla marandhutten .......

idharkidayil Aanaa Kolaigal list - ai innum valarthukondeeeeee pogalam.

Saradha review ezhudha pidikkaamal indha thread pakkame varaamal pogalam....

:yessir:

Thirumaran
18th September 2009, 03:01 PM
innum intha serial paarthuttu thaan irukeengalaa :banghead:

saradhaa_sn
18th September 2009, 04:31 PM
Solla marandhutten .......

idharkidayil Aanaa Kolaigal list - ai innum valarthukondeeeeee pogalam.

Saradha review ezhudha pidikkaamal indha thread pakkame varaamal pogalam....

:yessir:
அல்லது ஆதியின் மகன் ஆகாஷ் வளர்ந்து பெரியவனாகி, அப்பா வழியில் அபி அத்தைக்கு தொல்லைகள் தரலாம்...

அல்லது அவனாவது நல்லவனாக வளர்ந்து அப்பா செய்த கொடுமைகளை அறிந்து, தன் தாத்தா ஈஸ்வரனை அப்பா உதாசீனப்படுத்தியது போல தந்தை ஆதியை நடத்தலாம்.

அப்போது aanaa-வின் மகளும், சாரதாவின் மகளும் இந்த சீரியல் பற்றி எழுதிக்கொண்டிருக்க, கோவை சுதாவின் மகள், கோலங்கள் சீரியலின் முடிவு பற்றி வேறு பல யோசனைகளைத்தரலாம்.

aanaa
18th September 2009, 05:58 PM
அப்போது aanaa-வின் மகளும், சாரதாவின் மகளும் இந்த சீரியல் பற்றி எழுதிக்கொண்டிருக்க, கோவை சுதாவின் மகள், கோலங்கள் சீரியலின் முடிவு பற்றி வேறு பல யோசனைகளைத்தரலாம்.

:rotfl:

saradhaa_sn
20th September 2009, 03:22 PM
தில்லாவிடம் அடைபட்டிருக்கும் தோழர், இப்போது வெளிப்படையாக இலங்கைத்தமிழர் ஆதரவு வசனங்களைப்பேசத் துவங்கிவிட்டார். கப்பல்களில் அனுப்பப்பட்ட உணவுப்பொருட்களும், மருந்துகளும் அவதிப்படும் தமிழர்களுக்குப்போய்ச் சேரவில்லை. மூன்று லட்சம் பேர் அவதிக்கு உள்ளாகியிருக்கின்றனர் என்கிற ரீதியில் பேசிக்கொண்டே போகிறார். (அவருக்கு தில்லாவைப்பார்த்தால் மகேந்திர ராஜபக்ஷே போலத்தெரிகிறதா, அல்லது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்,எம்,கிருஷ்ணாவாகத்தெரிகிறதா?. நமக்குத்தெரியவில்லை). ஆனால் இதுபோன்ற வசனங்களைப்பேசும்போது ரொம்பவே உணர்ச்சிப்பிழம்பாக ஆகிவிடுகிறார் தோழர்.

ஆதியைச்சந்திக்க அவனுடைய அலுவலகத்துக்கு அபி வந்திருக்கிறார் என்று கிரி சொன்னதும் ஆதிக்கு மட்டுமல்ல, நமக்கும் ஆச்சரியம். இம்முறை அபியைசந்திக்கும்போது ஆதியிடம் பெரும் மாற்றம். வழக்கம்போல கத்தல், கூச்சல் இல்லை. ரொம்ப பாந்தமாகப்பேசுகிறான். வழக்கம்போல அபியை டீஸ் பண்ணும் வசனங்கள்தான். ஆனால் அதையே இம்முறை அமைதியாகப்பேசும்போது, இன்னும் அழகாக இருக்கிறது, அதுவும் அபிக்காகப்பரிதாபப்படும்போது அஜய் ரொம்பவே அசத்துகிறார். வழக்கமாக காஞ்சனாவிடம் பேசும்போது மட்டும்தான் ஆதியிடம் இந்த சாந்தமான முகம் தென்படும். எல்லாவற்றையும் கேட்டுக்கொள்ளும் அபி, கடைசியாக தான் இதுவரை தற்காப்பு நடவடிக்கை மட்டுமே மேற்கொண்டதாகவும், இனிமேல் சத்தியம், நேர்மை, நியாயம் எல்லாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டு, அவன் வழியிலேயே அவனைச்சந்திக்கப்போவதாகவும் இனிமேல் அடி பலமாக இருக்குமென்றும் எச்சரித்து விட்டுப்போகிறாள். (ஆச்சரியம், நேற்று அபியின் பேச்சிலும் இலங்கைப்பிரச்சினை தலைதூக்குகிறது). அப்போதும் கூட ஆதியிடம் பழைய ஆவேசம் இல்லை. மாறாக அதிர்ச்சியுடன் கூடிய யோசனையே காணப்படுகிறது. சுருக்கமாகச்சொன்னால், இத்தனை நாள் பிரகாஷ்ராஜ் ஆக இருந்தவன், நேற்று ரகுவரனாகிவிட்டான்....

கணவன் தொட்டதெற்கெல்லாம் சந்தேகப்படுகிறான் என்பது தெரிகிறது. குறிப்பாக தன்னையும் பாரதியையும் இணைத்துபார்த்தாலே அவன் குதர்க்கமாக பேசுகிறான் என்பதும் தெரிகிறது. அப்படியிருந்தும் கணவன் கார்த்திக் இல்லாத நேரத்தில், சட்டையில் சேறு பூசிக்கொண்டு தன் வீட்டுக்கு வரும் பாரதியை, அவன் மறுக்க மறுக்க ஆனந்தி வீட்டுக்குள் அழைப்பாளாம். அவன்சட்டை பேண்ட்டை தான் துவைத்துத் தருவதாகக்கூறி, கணவனின் லுங்கியை அவனைக்கட்டச்சொல்லி வற்புறுத்துவாளாம், பாரதியும் லுங்கியைக் கட்டிக்கொள்ள, சரியாக அந்த நேரம் பார்த்து கார்த்திக் வந்து அவர்களை இணைத்து வழக்கம்போல பேசுவானாம். என்னங்கடி இது கூத்து?. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பார்கள். ஆனந்தி நல்ல மாடா அல்லது சண்டி மாடா...?.

sudha india
22nd September 2009, 09:17 AM
செக்கு மாடு : சுத்தி வரலாம் ஊர் போய் சேராது.

K ஓலங்கள் எப்போதும் தொடற்கதைதான் முடிவே இல்லாதது

Sarna
22nd September 2009, 09:19 AM
செக்கு மாடு : சுத்தி வரலாம் ஊர் போய் சேராது.

K ஓலங்கள் எப்போதும் தொடற்கதைதான் முடிவே இல்லாதது

:lol:

saradhaa_sn
26th September 2009, 02:13 PM
பார்வையாளர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைதாண்டி கோலங்கள் த்ரெட் சாதனை

லோக்கல் போலீஸால் எந்தப்பயனும் இல்லையென்பதையும், எல்லோரையும் பணத்தை வீசி ஆதி வளைத்துவிடுவான் என்பதையும் அறிந்த அபியின் வக்கீலின் யோசனைப்படி, சி.பி.ஐ. விசாரணை கோரி அபி முதலமைச்சரை சந்தித்து, தன் நிலையை விளக்கி அவரிடம் உதவி கோர, முதல்வரும் அபியின் கோரிக்கையில் நியாயம் இருக்கும் பட்சத்தில் அவளுடைய கோரிக்கை பர்சீலிக்கப்படும் என்று உறுதியளிக்கிறார்.

ஆதி, இன்ஸ்பெக்டர், ஆனாரூனா, திருவேங்கடம், கிரி என அனைவரும் டி.வி.யில் நியூஸ் பார்த்துக் கொண்டிருக்கும்போது, 'மேனகா கடத்தப்பட்ட வழக்கில் சி.பி.ஐ.விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்' என்ற செய்தி சொல்லப்பட ஆதி அதிர்ச்சியடைகிறான். அபியின் கதையை முடித்து மங்களம் பாடிவிடலாம் என்றிருக்கும் நேரத்தில் இதென்ன புதிய அணுகுண்டு என்று திக்குமுக்காடிப்போகிறான். இருந்தாலும், வரக்கூடிய ஆஃபீஸரை பணம் கொண்டு சமாளிக்கலாம் என்று திருவேங்கடமும் ஆனாரூனாவும் சமாதானப்படுத்துகின்றனர்.

கதை சூடுபிடிக்கும் நேரத்தில் (இப்படி எத்தனையோ தடவை சூடுபிடித்து, சூடுபிடித்து ஆறிப்போகிறது). இப்போதும் ஆறவைக்கும் விதமாக, மீண்டும் பாஸ்கர் அலமேலு வகையறாக்கள் வந்து அறுக்கின்றனர்.

சி.பி.ஐ. அதிகாரி திறமையாக விசாரணையைத் துவங்குகிறார். போலீஸ் இன்ஸ்பெக்டரை விசாரிக்கும் விதத்தில், இன்ஸ்பெக்டர் ஆடிப்போகிறார். மீண்டும் தடைக்கல்லாக ஆர்த்தியின் வீட்டுக்கு மறுபடியும் கலாவும், குடும்பத்தாரும் வந்து குடியேறுவதைக்காட்டி, சோதிக்கின்றனர்.

appachelam
28th September 2009, 10:35 AM
This serial already drag for many years...ehmm may be they need another 4 to 5 yrs to finished it

saradhaa_sn
28th September 2009, 05:07 PM
This serial already drag for many years...ehmm may be they need another 4 to 5 yrs to finished it
ஒரு திரைப்படத்தில் வடிவேலு சும்மாவே இருப்பதாக எல்லோரும் சொல்ல, அதற்கு அவர் "சும்மா இருப்பது என்ன லேசான விஷயமா?. யாராவது என்னைப்போல சும்மா இருந்து பாருங்களேன்" என்று சவால் விடுவார்.

அதுபோல கோலங்கள்-காரர்களும் "இழுக்கிறோம் இழுக்கிறோம்னு சொல்றீங்களே. வருடக்கணக்கில் இழுப்பது எவ்வளவு கஷ்ட்டம் தெரியுமா?. வேண்டுமானால் வேறு சீரியல்காரர்களை எங்களைப்போல் இழுக்கச்சொல்லுங்களேன் பார்ப்போம்" என்று சவால் விடக்கூடும்.

saradhaa_sn
8th October 2009, 06:40 PM
மேனகா கடத்தப்பட்டது பற்றி, அபியின் வேண்டுகோளின்படி, முதல்வர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து நியமிக்கப்பட்ட சி.பி.ஐ.ஆஃபீஸர், போலீஸ் இன்ஸ்பெக்டரைக் கிண்டி கிழங்கெடுத்ததைத் தொடர்ந்து, அபியையும் விசாரிக்கிறார். தேவைக்கதிகமாகப் பேசமுற்படும் கிருஷ்னனை, 'கேட்டதற்கு மட்டும் பதில் சொல்லுங்க' என்று அடக்குபவர், அபியிடம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முற்படும் விஸ்வநாதனை, 'நான் உங்க கிட்டே கேட்கலையே' என்று வெட்டி விடுகிறார். மேனகாவின் வளர்த்த தந்தையிடம் விசாரிக்கும்போது, குறுக்கிட்டுப் பேசும் ஆதியை அங்கிருந்து வெளியேற்றுகிறார். இதனிடையே சிறையில் இருக்கும் ரேகாவையும் விசாரிக்கிறார். விசாரணை சூடாகத்தான் இருக்கிறது. ஆனால் தன் உதவியாளர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அங்கங்கே சினிமா பாடல்களை எடுத்துவிடுவது அவருடைய டிக்னிட்டியை குறைக்கிறது.

ஆர்த்தி தன் அம்மா என்ற ஒரே ஆளை சேர்த்துக்கொண்டதற்காக ராஜேஷ் போய் அவனுடைய மொத்தக் குடும்பத்தையே கூட்டிக் கொண்டு வைத்துக்கொள்கிறான். அவன் துணையிருக்கும் தைரியத்தில், கலா மீண்டும் ஆட்டம் போடுகிறாள். நாக்கையே கொடுக்காகக்கொண்டு கொட்டிக்கொண்டேயிருக்கிறாள். கற்பகமோ ஆர்த்தி தன் கணவனோடு இருக்க வேண்டும் என்ற ஒரே சொத்தைக் காரணத்துக்காக விளக்குமாறு, புதுச்செருப்பு, பழைய செருப்பு என்று எதைக்கொண்டு கலா அடித்தாலும் தாங்கிக்கொள்ளச்சொல்லி மகளைக் கட்டுப்படுத்துகிறாள். ஆர்த்திக்கு நிறைமாதமாம். வயிற்றைப்பிடித்து தாங்கித்தாங்கி நடக்கிறாள்.

ராஜேஷின் குடும்பம் போதாதென்று, கலாவின் சொந்தக்காரர்கள் என்று ஒரு பெரிய கூட்டம், ஆர்த்தி ஆஸ்பத்திரிக்குப் போய் திரும்புவதற்குள் ஆர்த்தியின் வீட்டில் வந்து முகாமிட்டுள்ளது (ஒவ்வொருத்தனும் ஆட்டுத்தொட்டியில் கடா வெட்டுகிறவன் மாதிரி இருக்கான்). இருக்கின்ற உணவையெல்லாம் தின்று தீர்க்கின்றனர். வீடு முழுவதும் ஆக்ரமித்துக்கொண்டு படுத்துக்கொள்கின்றனர். (ஆர்த்தியின் பெட்ரூமையும் விட்டுவைக்கவில்லை). அவர்களின் மத்தியில் கலா, ஆர்த்தியை எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ படுத்துகிறாள். ('கொஞ்சம் பொறுமையா இரு ஆர்த்தி' இது கற்பகத்தின் அட்வைஸ். கொடுமைடா சாமி... இதெல்லாம் அனுசுயா, நளாயினி காலத்தில் வாழ்ந்து அப்போதே செத்திருக்க வேண்டிய கேரக்டர்கள். இப்போதும் இருந்து, பார்ப்பவர்களை படுத்துகிறது).

காலையில் ஆர்த்திக்கும் ராஜேஷுக்கும் வாதம் முற்றுகிறது. (கற்பகம்: 'கொஞ்சம் பொறுமையா இரு ஆர்த்தி'). சுந்தரி ராஜேஷுக்குக் கொடுத்த பணத்தையெல்லாம் ஆர்த்திதான் செட்டில் பண்ணனும்னு வீட்டில் டேரா போட்டிருக்கும் கூட்டம் சொல்கிறது. (கற்பகம்: 'கொஞ்சம் பொறுமையா இரு ஆர்த்தி'), அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே ராஜேஷ் ஆர்த்தியை அடிக்க கையை ஓங்குகிறான். (கற்பகம்: 'கொஞ்சம் பொறுமையா இரு ஆர்த்தி'). அந்நேரம் அங்கு நுழையும் ஈஸ்வரன், ராஜேஷைத்திட்டி விட்டு மனைவியையும், மகளையும் இழுத்துக்கொண்டு வெளியே போகிறார். (அது ஆர்த்திக்காக 'ஆதியண்ணா' வாங்கிக்கொடுத்த வீடு அல்லவா. வந்தவங்களை விரட்டாமல் இவங்க ஏன் வெளியெ போறாங்க).

ஈஸ்வரனின் இம்சை தாங்க முடியாமல், இருவரும் வேண்டா வெறுப்பாக அபியின் வீட்டுக்கு வருகின்றனர். அபியின் வரவேற்பை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வெறுப்படைகின்றனர். முகம் கொடுத்துப்பேச மறுக்கின்றனர். (இருந்தாலும் ஆர்த்தியின் கணவன் சம்பாதித்து வாங்கிக்கொட்டிய சொத்துக்களையெல்லாம் அபி திருட்டுத்தனமாக எடுத்துக்கொண்டு ஆர்த்தியை இப்படி தெருவில் விட்டிருக்கக்கூடாதுதான்). வேண்டாவெறுப்பாக அங்கு தங்க முற்படும் வேளையில் இன்னொரு இடியாக, அலமேலுவும் தன் பேரனுடன் அங்குதான் தங்கியிருக்கிறாள் என்று அறியும் கற்பகம், அங்கிருந்தும் வெளியேற முற்படுகிறாள். ஈஸ்வரன் அவளை மிரட்டிப் பணிய வைக்கிறார் (என்ன புடலங்காய் மிரட்டல்.. "நீ போயிட்டா என்னை உயிரோடு பார்க்க முடியாது" என்ற 1950 காலத்து வசனம்தான்)

என்னமோ போகுது போங்க...

saradhaa_sn
8th October 2009, 07:47 PM
சன் டிவி சேனல்களில் அப்படி என்னதான் ஓடிக்கொண்டிருக்கிறது பார்ப்போமே என்று ரவுண்டு சுற்றியதில்.....

தங்கம்: கங்கா என்ற பெண்ணுக்கு கலெக்டருடன் திருமணம் நிச்சயமாகிவிட்டதாம். அதைக்கெடுக்க அவள் அண்ணி இள்வஞ்சியே தன் அண்னனைத் தூண்டிவிட்டு இடைஞ்சல் பண்ணுகிறாளாம். அண்ணனுக்கு நினைப்பு, கங்காவை தான்தான் கல்யாணம் பண்ணிக்கொள்ளப்போகிறோம் என்று. ஆனால் அவன் தங்கையின் எண்ணமோ, கங்காவின் திருமணத்தை தன் அண்ணனைக்கொண்டு நிறுத்தி விட வேண்டுமாம். பிறகு அண்ணனும் அவளை மணக்காமல் கங்காவை நடுத்தெருவில் விட வேண்டுமாம். (மனிதனின் அதிகபட்ச வாழ்நாளே எண்பது வருடங்கள்தான் எனும்போது, (அதுவே அதிகம்தான்), இப்படியெல்லாம் அடுத்தவர் வாழ்வில் மண்ணைப்போட்டு ஆயிரம் வ்ருடமா வாழ்ந்துவிடப் போகிறோம் என்ற எண்ணம் அவளுக்கு இல்லை). கதாசிரியர்களின் கற்பனைதான் எவ்வளவு கொடுமையானது பாருங்கள்.

செல்லமே: மணியரசு என்பவனுக்கு பெண் பார்க்கப்போகிறார்களாம். அவனுக்கு பெண்ணைப்பிடித்து விடுகிறதாம். அதே நேரம் அவனை யாருக்கும் தெரியாமல் ஒருதலையாய்க் காதலித்த முறைப்பெண் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயல்கிறாளாம். (விஷம அருந்திய பெண்ணுக்காவது தான் இன்னாரைத்தான் விரும்பினோம் என்று தெரியுமா?. அல்லது கடவுளுக்கு மட்டும்தான் தெரியுமா?). வழக்கம்போல எல்லாவற்றையும் தன் தலையில் இழுத்துப்போட்டுக்கொள்ளும் நாயகி (செல்லம்மா), அவளை அவனோடு சேர்த்துவைக்கவும் உறுதியளிக்கிறாளாம். அதாவது இன்னொரு பெண்ணைபார்த்து சம்மதம் சொன்ன பையனுக்கு...

திருமதி செல்வம்: இதில் வரும் காவ்யா என்ற பெண்ணுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது... நடக்கிறது... நடக்கிறது... நடக்கிறது... நடக்கிறது... நடக்கிறது... நடக்கிறது... நடந்துகொண்டேயிருக்கிறது. ஐந்தாண்டு திட்டம் போலும். (சீரியலில் திருமண ஏற்பாடு துவங்கிய அன்று நிஜவாழ்க்கையில் ஏற்பாடான திருமணத்தில் இந்நேரம் மணப்பெண்ணுக்கு குழந்தை பிறந்திருக்கும்). அங்கும் ஒரு அண்ணி இடஞ்சலுக்கு. அவளுக்கும் கூட ஆயிரம் வருடம் வாழப்போகிறோம் என்ற எண்ணம்.

இந்த மாதிரி சீரியல்களில், திருமண ஏற்பாடு, பெண்பார்ப்பது, துணியெடுப்பது, நகை வாங்குவது, சம்பந்திகள் முறுக்கல், அண்ணிகளின் சதிகள்.... இவைகளை விட்டால் வேறு விஷயங்களே இல்லையா?. திரும்ப.. திரும்ப.. திரும்ப.. திரும்ப.. திரும்ப.. திரும்ப.. திரும்ப.. திரும்ப.. திரும்ப.. திரும்ப.. திரும்ப.. திரும்ப.. திரும்ப.. திரும்ப..

இவைகளைவிட ஆதியின் கத்தல், தோழரின் செந்தமிழ், கற்பகத்தின் அழுகை, அலமேலுவின் அலட்டல் இவைகள் எவ்வளவோ தேவலாமோ என்று எண்ணத்தோன்றுகிறது.

aanaa
9th October 2009, 05:03 AM
கிண்டி கிழங்கெடுத்ததைத் தொடர்ந்து,
..

:clap:





சன் டிவி சேனல்களில் அப்படி என்னதான் ஓடிக்கொண்டிருக்கிறது பார்ப்போமே என்று ரவுண்டு சுற்றியதில்.......

:roll:




ஐந்தாண்டு திட்டம் போலும். (சீரியலில் திருமண ஏற்பாடு துவங்கிய அன்று நிஜவாழ்க்கையில் ஏற்பாடான திருமணத்தில் இந்நேரம் மணப்பெண்ணுக்கு குழந்தை பிறந்திருக்கும்). .. :lol:



.. இவைகளை விட்டால் வேறு விஷயங்களே இல்லையா?. திரும்ப.. திரும்ப.. திரும்ப.. திரும்ப.. திரும்ப.. திரும்ப.. திரும்ப.. திரும்ப.. திரும்ப.. திரும்ப.. திரும்ப.. திரும்ப.. திரும்ப.. திரும்ப.. ..

:notworthy:


இவைகளைவிட ஆதியின் கத்தல், தோழரின் செந்தமிழ், கற்பகத்தின் அழுகை, அலமேலுவின் அலட்டல் இவைகள் எவ்வளவோ தேவலாமோ என்று எண்ணத்தோன்றுகிறது.

:hammer: :bangcomp:

saradhaa_sn
9th October 2009, 12:25 PM
:hammer: :bangcomp:

aanaa,

இது எனக்கா..??... :lol:

saradhaa_sn
9th October 2009, 12:35 PM
போச்சுடா...., ஆதியின் அடுத்த குறி ரேகா.

சிறையிலிருக்கும் ரேகா சி.பி.ஐ. அதிகாரி வெற்றிமாறனின் விசாரணையின்போது அவரிடம் 'உண்மைகளை' (?) சொல்லிவிடக்கூடாது என்பதற்காக ரேகாவையும் சிறையிலேயே வைத்து தீர்த்துக் கட்டிவிட வேண்டுமாம். தில்லா எதையுமே உருப்படியாக செய்ய மாட்டான், சொதப்பிவிடுவான் என்று தெரிந்தும் அவனிடமே இந்த வேலையையும் ஆதி ஒப்படைக்கிறான். இதனிடையே சி.பி.ஐ.குழுமமும் ரேகாவை தங்கள் கஸ்ட்டடியில் எடுத்து விசாரிக்கலாம் என்று முடிவெடுக்கிறது.

ஆனந்தி வீட்டுக்கு வரும் பாரதி, பழைய பாரதியாக இல்லை. நிறைய கள்ளத்தனம் குடிகொண்டுள்ளது. ஆனந்தி பார்க்காத சமயங்களில் அவள் மேனி முழுக்க பார்வையை மேய விடுகிறான். காஃபி கொண்டுவருவதாக கிச்சனுக்குப்போகும் ஆனந்தியுடன் அவனும் கிச்சன் வருகிறான். அவளை தேவையின்றி தொட்டுப்பேசுகிறான். அவள் முதுகில் கைவைத்துவிட்டு, பூச்சியை தட்டி விட்டதாக பொய்சொல்லுகிறான். பின்பக்கமாக வந்து நெருக்கமாக நிற்கிறான். தலையைப் பிடித்து அழுத்துகிறான். அவனை கூடத்தில் வெய்ட் பண்ணும்படி அனுப்பிவைக்கிறாள். காஃபிகொடுக்கும்போது அவளது கையை வேண்டுமென்றே தொடுகிறான். திடுக்கிடும் ஆனந்தியின் மனதில் குழப்பம் குடிகொள்கிறது. ('சரிதான், எப்படியும் கார்த்திக்கும் ஆனந்தியும் டைவர்ஸ் ஆகப்போகிறார்கள், இன்னொருவன் வருவதற்குள் தான் முந்திக்கொள்ளலாம்' என்று பார்க்கிறானோ என்னவோ?). இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது வழக்கம்போல கார்த்திக் வருகிறான். இம்முறை அதிகம் குத்தல் பேச்சு இல்லை. கார்த்திக்கைக் கண்டதும் பாரதி நழுவுகிறான். ஆனந்தி குழப்பத்தில் ஆழ்கிறாள், 'இது என்னடா புதுப்பிரச்சினை?'

sudha india
9th October 2009, 12:50 PM
"" Anandhi thannai veruthu Karthikai melum virumbi avargal pallandu vazha vazhthum Barathi..........""

endru cinema Paaniyil Hyder kalathu trick ?

En serialil pengal mattum than tyagi agalama ?

Indha Oolangalil egappatta tyagis irukurangooooooooo :lol:

saradhaa_sn
9th October 2009, 02:35 PM
சுதா.....

கோலங்கள் பார்ப்பவர்களையும் 'தியாகிகள்' பட்டியலில் சேர்த்து விடலாமா...?.

எத்தனை தியாகிகள் வந்தாலும், தியாகத்தில் 'அபி'க்கு அடுத்துதான் மகாத்மா காந்தியே வருவார் போலிருக்கு...

sudha india
9th October 2009, 02:42 PM
Saradha...

பார்ப்பவர்களையும் 'தியாகிகள்' னு சொல்வதைவிட 'யோகிகள்' என்றுதான் சொல்லணும்.

எவ்வளவு அடிச்சாலும் தாங்கராங்க...இவங்க ரொம்ப நல்லவங்க.........

19thmay
9th October 2009, 02:55 PM
Yesterday I watched this serial after a very long gap. Still the story steers in the same direction, Thiruselvam summa sirpi maadhri sedhukuraaru! :lol2:

And this lady Aby has allowed her ex-mil in the home! Such a pathetic characterization!! Such a fool should always lose :devil:

saradhaa_sn
9th October 2009, 04:59 PM
Yesterday I watched this serial after a very long gap. Still the story steers in the same direction, Thiruselvam summa sirpi maadhri sedhukuraaru! :lol2:
இதென்ன பிரமாதம்?. ஒரு வருடம் கழித்து, அடுத்த வருடம் வந்து பாருங்கள். அதற்குள் எவ்வளவோ சம்பவங்கள் நடந்திருக்கும். ஆனால் கதை அங்கேயேதான் நிற்கும். இம்மியும் நகர்ந்திருக்காது. அதுதான் கோலங்களின் விசேஷம்.

பண்க்கார வீடுகளில் ஃபேமிலி டாக்டர் இருப்பார். வருடக்கணக்கில் வைத்தியம் பார்த்துக்கொண்டிருப்பார். ஆனால் எந்த முன்னேற்றமும் இருக்காது. நோயை முற்றிலும் குணப்படுத்தவும் மாட்டார். நோயாளியை சாக விடவும் மாட்டார். ஒரு பக்கம் வைத்தியமும் பார்த்துக்கொண்டு, மறுபக்கம் நோயையும் தூண்டி விட்டுக்கொண்டு பணம் கறக்கும் வித்தகராக இருப்பார். இயக்குனர் திருச்செல்வமும் அந்த ஃபேமிலி டாக்டர் வகையைச் சேர்ந்தவர்தான்.


And this lady Aby has allowed her ex-mil in the home! Such a pathetic characterization!! Such a fool should always lose :devil:
தற்போது உலகமெங்கும் பெருந்தன்மை, மன்னிக்கும் மனப்பான்மை எல்லாம் முற்றிலும் குறைந்து போனதற்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க?. அவையெல்லாவற்றையும் கடவுளிடம் இருந்து அபி மொத்தக்குத்தகைக்கு எடுத்துக் கொண்டதுதான்

saradhaa_sn
13th October 2009, 12:58 PM
நினைத்தது போலவே ஆதி, ரேகாவைக் கொல்ல குறிவைத்து விட்டான். அதற்கு முன் வழக்கம்போல அவனது இடத்தில் ஆதி, கோமாளி பி.ஏ.வான கிரி, கோமாளி அரசியல்வாதி திருவேங்கடம், அவரது கோமாளி மருமகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் கூடுகின்றனர். கூடி என்ன செய்தனர்..?. ஒண்ணுமேயில்லை.

'வழக்கம்போல' திருவேங்கடம் கோமாளி அரசியலை எடுத்து விடுகிறார். 'வழக்கம்போல' மருமகன் ஜால்ரா அடிக்கிறான். 'வழக்கம்போல' கிரி கவுண்ட்ட்ர் கமெண்ட் கொடுக்கிறான். அவர்கள் இம்சை தாங்காமல் 'வழக்கம்போல' ஆதி கத்துகிறான். விசாரணை தன் கையைவிட்டுப் போய்விட்டதாகவும், இனி சி.பி.ஐ.விஷயத்தில் தான் ஒன்றும் செய்யமுடியாதென்று இன்ஸ்பெக்டர் சொல்ல, 'வழக்கம்போல' யாருடைய உதவியும் இன்றி தானே கவனித்துக்கொள்வதாகவும் ஆதி சொல்ல.... அட'வழக்கம்போல' விளம்பரங்களும் வந்துவிட்டனவே.

'வழக்கம்போல' ஆனந்தி ஒரு பொதுப்பிரச்சினக்காக கிராமத்துக்குப்போகிறாள். சாயப்பட்டறை தொழிற்சாலை துவங்குவதற்காக விளை நிலங்களை ஆக்கிரமித்து, திட்டம் போடுவதாகவும், அதனால் தங்கள் பிழைப்பு பாதிக்கும் என்று 'வழக்கம்போல' கிராம மக்கள் முறையிட, ஆனந்தியும் 'வழக்கம்போல' அதைப்பற்றி தான் பத்திரிக்கையில் ஃபோட்டோக்களோடு செய்தி வெளியிடுவதாக உறுதியளிக்கிறாள். (பச்சைப்பசேல் என்ற விளைநிலங்கள் கண்ணைக் கவருகின்றன. இம்மாதிரி விளைநிலங்களை ஒழித்துக்கட்டி தொழிற்சாலைகள் அமைத்து என்ன சாதிக்கப்போகிறாங்களாம்). திரும்பி வரும் வழியில் பாரதி, வழக்கமான பாதையைவிட்டு வேறு பாதையில் ஓட்டிவருவதை ஆனந்தி கவனிக்கிறாள். போதாக்குறைக்கு வழியில் கார் ரிப்பேர் ஆகி நின்றுவிடுகிறது.

ஆதி ஒரு பெண்போலீஸ் இன்ஸ்பெக்டரை அழைத்து, ரேகாவை தீர்த்துக்கட்டும் பொறுப்பை ஒப்படைக்கிறான். அவளும், ரேகா விசாரணைக்கு வரும் வழியில் போட்டுத்தள்ளுவதாக உறுதியளிக்கிறாள். இத்திட்டம் தோல்விடைந்தால் மட்டுமே, கதை மேற்கொண்டு சுவாரஸ்யமாக நகரும். சி.பி.ஐ. அதிகாரி வெற்றிமாறன், ரேகாவை துருவி, துருவி விசாரிக்கும் பட்சத்தில் ஆதிக்கும் அர்ஜுனுக்கும் நடந்த சொத்துத் தகராறு, அதைத்தொடர்ந்த மனக்கசப்புகள் போன்றவை வெளிவரும். அதன்மூலம் அர்ஜுன் கொலைக்கும், சங்கரபாண்டியன் கொலைக்கும் யார் காரணம் என்று தெரியவரும். அதைவிடுத்து, முன்பு சரோஜாவை விசாரணைக்கு முன் போட்டுத்தள்ளியது போல ரேகாவின் கதையையும் முடித்தால், சஸ்பென்ஸுக்கு பதிலாக மீண்டும் 'சப்'பென்ஸ்தான்.

aanaa-வின் 'இறந்தோர் பட்டியல்' இன்னும் நீளமாகும்.

P_R
13th October 2009, 01:06 PM
தற்போது உலகமெங்கும் பெருந்தன்மை, மன்னிக்கும் மனப்பான்மை எல்லாம் முற்றிலும் குறைந்து போனதற்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க?. அவையெல்லாவற்றையும் கடவுளிடம் இருந்து அபி மொத்தக்குத்தகைக்கு எடுத்துக் கொண்டதுதான் :lol:

saradhaa_sn
16th October 2009, 01:23 PM
தில்லாவிடம் அடைபட்டிருக்கும் தோழரிடமிருந்து, ஆதாரங்கள் எங்கேயிருக்கின்றன என்ற உண்மையை வரவழைக்க தில்லா எவ்வளவோ கேட்டும் பலனில்லை. (தில்லாவின் முயற்சிகளும் பேச்சும், அவற்றுக்கு தோழரின் பதில்களும் எரிச்சலூட்டுகின்றன). ஒரு சமயம், ஆதியிடமிருந்து போன வர, தில்லா எழுந்துபோகிறான். அவர்களுடைய உரையாடல்களை மறைந்திருந்து கேட்கும் தோழருக்கு, ஆதி ரேகாவை தீர்த்துக்கட்டப்போகும் விவரம் தெரிகிறது. ரேகாவைக் காப்பாற்றி உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்ற உந்துதலில், நள்ளிரவில் காவல் இருக்கும் இருவரை ஏமாற்றி, அங்கிருந்து தப்பிக்கிறார். போகும்போது, அங்கே தூங்கிக்கொண்டிருக்கும் ஒரு தடியனுடைய செல்போனையும் யாருக்கும் தெரியாமல் எடுத்துக்கொண்டு ஓடுகிறார் (எப்படியாவது அபிக்கு விவரத்தைச்சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில்). அவர் தப்பித்த விவரம் அறிந்தவுடன் தில்லாவின் கூட்டம் அவரைத்துரத்த, புதர்களுக்குள்ளும் இடிபாடுகள் நிறைந்த மண்டபங்களிலும் புகுந்து மறைந்து அவர்கள் கண்களில் படாமல் இதுவரை சுற்றியலைகிறார். அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து தப்பித்துவிட்டாரே தவிர, முற்றிலும் கடல் சூழ்ந்த அந்த தீவிலிருந்து தப்பிக்க முடியாமல், அங்கேயே மறைந்து சுற்றிக்கொண்டிருக்கிறார்.

இதனிடையே, தன்னைச்சுற்றிலும் தில்லாவின் ஆட்கள் தேடியலையும் நிலையிலும், புதர்களுக்குள் மறைந்து கொண்டு அபிக்கு போன செய்கிறார். ஆனால் அங்கே...?.

தோழரைத்தேடி அவருடைய அம்மா வந்திருக்கிறார் என்றறிந்து அவரைப்பார்க்க அபி, விஸ்வநாதன், உஷா, கிருஷ்ணன் ஆகியோ வருகின்றனர். காரிலிருந்து இறங்கும் போது அபியின் செல்போன் கார் சீட்டிலேயே தங்கி விடுகிறது. டிரைவரும் இறங்கி வெளியே நிற்க, தோழர் பலமுறை போன் செய்து எடுக்க ஆள் இல்லை.

(தான் ஒரு பெரிய பிஸினஸ் உமன் என்றும், எந்த விஷயத்தையும் சமாளிப்பவள் என்றும் தன்னைப்பற்றி பீற்றிக்கொள்ளும் அபி, ஒரு சாதாரண விஷயத்துக்குக்கூட லாயக்கில்லாதவள் என்று அடிக்கடி நிரூபித்து வருகிறாள். (அதாவது இயக்குனர் அந்தக் கதாபாத்திரத்தை அவ்வளவு பலவீனமாக படைத்திருக்கிறார்). இந்தக்காலத்து பிஸினஸ் மேன்/பிஸினஸ் உமனுக்கு கையில் ரேகைகூட இல்லாமல் இருக்கலாம், ஆனால் கையில் செல்போன் இல்லாமல் இருக்க முடியாது என்றிருக்கும் நிலையில், தொல்காப்பியனையும் காணோம், தோழரையும் காணோம், மேனகாவும் என்ன ஆனாள் என்பது தெரியவில்லை, தன்னைச்சுற்றிலும் கோர்ட் கேஸ், விசாரணை என்று நடந்துகொண்டிருக்கிறது, எந்த நேரத்திலும், எந்தப்பக்கமிருந்தும், எந்த தகவலும் வரக்கூடும் என்றிருக்கும் நிலையில், அபி, தன்பாட்டுக்கு செல்போனை காரில் மறந்துவிட்டுப் போகிறாளாம். இதுபோன்ற விஷயங்களில் தான், ஆதித்யாவின் காலில் அல்ல, அவன் செருப்பில் ஒட்டியிருக்கும் தூசிக்குக்கூட சமமில்லை என்பதை அபி அவ்வப்போது நிரூபணம் செய்கிறாள்).

தோழரின் அம்மா, தன் மகன் என்ன ஆனானோ என்று புலம்பி அழுதுகொண்டிருக்க, தான் அவரைக் கண்டுபிடித்து ஒப்படைப்பதாக அபி சொல்கிறாள் (கிழிச்சே...., நீ எதைத்தான் உருப்படியா பண்ணினே. தொல்காப்பியன், தோழர், விஸ்வநாதன், பாதிரியார், வழக்கறிஞர் போன்றவர்களின் உதவியால் உனது பிரச்சினைகள் களையப்படும் நேரங்களில் ஆதியிடம் சொடுக்குப்போட்டு, நீ கிழிச்சதாய் சவால் விடுவாய். மற்ற நேரங்களில் அம்மாவின் வாரிசாக அழுது தொலைப்பாய். இதுதானே ஆறு வருஷமாய் நடக்கிறது?).

ஒரு கட்டத்தில், காரில் இருக்கும் செல்போன் அடித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கும் டிரைவர், அதை அபியிடம் கொண்டு வந்து கொடுக்க, அந்நேரம் தோழரின் அம்மா ஏதோ சொல்ல, அபி ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்து விடுகிறாள். அங்கே உயிரைப் பணயம் வைத்து போன் செய்யும் தோழருக்கு போன் இணைப்பு கிடைக்காதது மனச்சோர்வை அளிக்கிறது. (நான் சொன்னது சரியா போச்சா?. அதாங்க... அபி-ஆதி- செருப்பு-தூசி).

தில்லா கூட்டம் தோழரைத் தேடியலைவதையும், தோழர் அவர்களிடமிருந்து மறைந்து ஓடுவதையும் சாக்காக வைத்து, ஒரு அழகான கடற்கரை கிராமம் நம் கண்ணுக்கு விருந்தாக காண்பிக்கப்படுகிறது. முன்பு மேனகாவின் தாய் செல்லம்மா எபிசோட்டில் வந்தது போன்ற, பழைய கோட்டைகள், இடிபாடுகள், சிதிலமைந்த கட்டிடங்கள், அழகான கடற்கரை இவற்றோடு கூடிய அழகான இடம் (தமிழில் :லொக்கேஷன்)

ரேகாவை தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க, ஜெயிலில் இருந்து கோர்ட்டுக்கு கொண்டு செல்ல சி.பி.ஐ.குழு வருகிறது. போலீஸ் தரப்பில் (ஆதியின் கையாள்) இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, உடன் செல்வதாக ஏற்பாடு. ஜெயந்தியின் முதல் பேச்சிலேயே, சி.பி.ஐ. வெற்றிமாறனுக்கு அவள் மீது சந்தேகப் பார்வை விழுந்து விடுகிறது. அதனால், கோர்ட்டுக்குப்போகும் வழக்கமான வழியை விட்டு வேறு வழியில் போக சி.பி.ஐ.முடிவெடுக்கக்கூடும்... (என் யூகம்தான்).

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Irene Hastings
16th October 2009, 04:21 PM
சாரதா மேடம்,

உங்கள் வர்ணனை மற்றும் நகைசுவை கலந்த எழுத்து அற்புதம். தீபாவளி வாழ்த்துக்கள். நான் உங்கள் ரசிகன்.

saradhaa_sn
16th October 2009, 05:13 PM
சாரதா மேடம்,

உங்கள் வர்ணனை மற்றும் நகைசுவை கலந்த எழுத்து அற்புதம். தீபாவளி வாழ்த்துக்கள். நான் உங்கள் ரசிகன்.

ரொம்ப நன்றி Irene... :ty:

Hub-ல உங்க போஸ்ட் பார்த்து ரொம்ப நாளாச்சு.
உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

aanaa
16th October 2009, 07:56 PM
... (என் யூகம்தான்).

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

:ty:

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

saradhaa_sn
20th October 2009, 12:23 PM
'ரேகாவும் அவுட்'

காவல்துறையை இந்த சீரியலில் இழிவுபடுத்திய அளவுக்கு வேறெந்த சீரியலிலோ, சினிமாவிலோ பண்ணியிருக்க மாட்டார்கள். நிஜ வாழ்க்கையில் காவல்துறையில் லஞ்சம் வாங்குபவர்கள், ஊழல் பேர்வழிகள் இருக்கிறார்கள் என்ற உண்மையை மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த அளவுக்கு ஒரு ஒட்டுமொத்த காவல்துறையே ஒரு கெட்டவனின் ஏவல்துறையாக செயல்படுவதாகக்காட்டுவது ஜீரணிக்க முடியாத விஷயம். எங்கோ நடக்கின்ற கொலைகளையெல்லாம் கண்டுபிடிக்கக்கூடியவர்களாக காவல்துறையிருக்க, இந்த சீரியலிலோ முக்கால்வாசி கொலைகள் காவல்துறையின் கஸ்டட்டியிலிருக்கும்போதுதான் நடக்கின்றன.

பாவம் ரேகா, யாரையோ பழிவாங்குவதாக நினைத்து அயோக்கியனின் கைப்பாவையாகி கடைசியில் அவன் கையாலேயே முடிவைத்தேடிக்கொண்டாள். நிச்சயம் நாம் எதிர்பார்க்காத ஒன்று. 'எந்த ஆதியை மலைபோல நம்பியிருந்தாளோ அந்த ஆதிதான் தன் தந்தையையும், கணவனையும் கொன்றவன் என்று அறிந்து, அவன் முகத்தில் காறித்துப்புவாள்' என்று நம்பியிருந்த வேளையில் ரொம்ப சர்வ சாதாரணமாக சுட்டுத்தள்ளப்பட்டுவிட்டாள்.

நாம் எதிர்பார்த்தது போலவே, கோர்ட்டுக்கு கொண்டு செல்லும் வழியை சி.பி.ஐ. அதிகாரி மாற்றிவிட, அவர் புதிய பாதையை விளக்கிச்சொல்லும்போது, இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தன் செல்போனில் ஆதியில் நம்பருக்கு டயல் செய்து ஓப்பனில் வைத்திருக்க, சி.பி.ஐ.அழைத்துச்செல்லும் பாதை ஆதிக்கு தெளிவாகத் தெரிந்துபோகிறது. காவல்துறை வண்டிகள் செல்லும் பாதையில் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு கலாட்டா நடந்துகொண்டிருக்க, அதை அடக்க ஜெயந்தியும், வெற்றிமாறனும் தங்கள் தங்கள் வண்டியிலிருந்து இறங்கிப்போக, போகும்போது வெற்றிமாறன் தன் துணை அதிகாரிகளிடம் ஜாக்கிரதையாக கவனித்துக்கொள்ளும்படி சொல்ல, ஒன்றுக்கும் ஆகாத அந்த இரண்டு தடியன்களும் போலீஸ் வேனின் ஒரே பக்கத்தில் நின்றுகொண்டிருக்க, மறுபக்கம் பைக்கில் வந்த அந்த மர்ம மனிதன் ஜன்னல் வழியாக சர்வசாதாரணமாக ரேகாவின் நெற்றிப்பொட்டில் சுட்டுத்தள்ளிவிட்டுப்போகிறான். இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வந்து ரேகாவின் கையைப்பிடித்துப் பார்த்துவிட்டு 'ஸ்பாட் அவுட்' என்கிறாள். வெற்றிமாறன் குழு திடுக்கிடுகிறது.

'பைக்'கில் வந்து சுட்டுவிட்டுப்போன அந்த மர்ம மனிதன், ஒரு காட்டுபகுதிக்குள் சென்று முகமூடியைக் களைகிறான். அது வேறு யாருமல்ல, ஆதியேதான். ஆம், இம்முறை அவன் தில்லாவையோ, தேவராஜ் பாண்டியனையோ நம்பவில்லை. தானே காரியத்தில் இறங்கி, எந்த சொதப்பலும் இல்லாமல் அழகாகச் செய்து முடித்துவிட்டான்.

ஆனால் அவன் அபியை சுட்டுத்தள்ளப்போவதுதான், அவன் செய்யப்போகிற அழகான, பயனுள்ள, பாராட்டத்தக்க கொலையாக இருக்கும் என்று எதிர்பார்த்துக்காத்திருந்தால், அது நடக்காது போலிருக்கிறதே.

Irene Hastings
20th October 2009, 12:41 PM
அதுவும் அந்த வெற்றிமாறனின் ஆட்கள் பார்க்கும் ஒரு வெட்டுப்பார்வை இருக்கிறதே ! நான் அவர்களை மிகவும் நம்பினேன்
வெற்றிமாரனின் முழியும் நன்றாகவே இல்லை. அது ஏன் ஆதியை ஒரு பவர்ரேஞ்ஜர் அளவுக்கு பில்ட் அப் குடுக்குறாங்களோ ?

Irene Hastings
20th October 2009, 12:43 PM
நம் தோழர் என்னவோ உசைன் போல்ட் கூட தோற்கும் அளவுக்கு ஓடுகிறார் ! இந்திய ஒலிம்பிக்ஸ் சங்கம் இந்த தொடரை பார்க்கவேண்டும்.

saradhaa_sn
20th October 2009, 01:13 PM
விஷயம் எதுமில்லாமல், சீரியல் முழுக்க வெட்டி பந்தா பண்ணிக்கொண்டு அலையும் அபி, நேற்றும் (வழக்கம்போல) தன்னுடைய சொதப்பல் வேலையை கச்சிதமாகச்செய்துவிட்டாள்.

ரேகாவின் கொலையைத்தவிர்க்க தோழர் உயிரைப்பணயம் வைத்து போன் செய்தபோதெல்லாம், போனைக்காரில் மறந்து வைத்தும், ஆஃப்செய்து வைத்தும் எரிச்சலூட்டிய 'அலட்டல் மன்னி' அபி, பின்னர் ஏதோ போதிமரத்தடியில் அமர்ந்து ஞானோதயம் பெற்றவளைப்போல, தன் செல்போனுக்கு வந்த நம்பருக்கு பலமுறை டயல் செய்கிறாள். எப்போது...?. தோழர் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிக்கொண்டிருக்கும்போது.

தோழரின் போனில் மணியடிக்கிறது.... தோழர் எடுக்க சற்று தாமதமானதும் கட் பண்ணுகிறாள்... தோழர் எடுத்துப்பார்க்கும்போது ப்ளாங்க்.

தோழரின் போனில் மணியடிக்கிறது.... தோழர் எடுக்க சற்று தாமதமானதும் கட் பண்ணுகிறாள்... தோழர் எடுத்துப்பார்க்கும்போது ப்ளாங்க்.

தோழரின் போனில் மணியடிக்கிறது.... தோழர் எடுக்க சற்று தாமதமானதும் கட் பண்ணுகிறாள்... தோழர் எடுத்துப்பார்க்கும்போது ப்ளாங்க்.

தோழரின் போனில் மணியடிக்கிறது.... தோழர் எடுக்க சற்று தாமதமானதும் கட் பண்ணுகிறாள்... தோழர் எடுத்துப்பார்க்கும்போது ப்ளாங்க்.

கடைசியாக, தோழர் மறைந்திருக்கும் இடம் வரை தில்லாவும் அவனது ஆட்களும் வந்து பார்த்துவிட்டு, அவர் அங்கு இல்லை என்று முடிவு செய்து திரும்பும் நேரம், சரியாக அபியின் போன் அடிக்க அந்த சத்தம்கேட்டு சுற்றி வந்து பார்க்கும் தில்லா தோழரைக்கண்டுபிடித்து, ஆட்கள் மூலமாக அவரைக் கட்டி இழுத்துப்போகிறான். ஆம் தனக்கு நல்லது செய்ய நினைத்த தோழருக்கு அபி அளித்த பரிசு, அவரை மீண்டும் தில்லாவிடம் மாட்டிவிட்டது. நான் சொன்னது சரியா போச்சா?.

வழக்கமாக நல்லவர்கள் வெற்றி பெறுவதாகவும், கெட்டவர்கள் தோற்பதாகவும் கதைகளை முடிப்பார்கள். கோலங்களில் ஒரு மாற்றமாக, ஆதித்யாவை வெற்றிபெறவைத்து (சீரியல் துவங்கியதிலிருந்து அவன்தான் வென்று கொண்டு இருக்கிறான் என்பது வேறு விஷயம்) அபி தோற்பதாக கதையை முடிப்பதன்மூலம், 'ஒரு திறமையாளன்' ஜெயிப்பதாகவும் 'ஒரு சோப்ளாங்கி' தோற்பதாகவும் முடித்தால் என்ன?. சரி, முடிவைப்பற்றி இப்போது பேச வேண்டாம். இன்னும் நிறையப்பேர்களைக் கொல்ல வேண்டியிருக்கிறது.

சரி, 'கோலங்கள்' பார்ப்பவர்களையும் கொல்லும் திட்டம் ஏதும் உள்ளதா?. இருந்தால் முன்னாடியே சொல்லிடுங்கப்பா. (அதான் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் கொல்றாங்களே, தனியாக வேறு கொல்ல வேண்டுமா அப்படீன்னு கேக்கறீங்களா?. அதுவும் சரிதான்).

sudha india
20th October 2009, 01:58 PM
Saradha...

பார்ப்பவர்களையும் 'தியாகிகள்' னு சொல்வதைவிட 'யோகிகள்' என்றுதான் சொல்லணும்.

எவ்வளவு அடிச்சாலும் தாங்கராங்க...இவங்க ரொம்ப நல்லவங்க.........

Its boring to type again. ....
i dont know how many times I will have to quote this.

Anyway, I had on my own changed the title of this serial to KOLAIGAL long back.
Naan vecha peyarai Director kaappathikkonde irukkiraar... :lol:

Thodarattum Kolaigal....... :oops:
Apdiyaavadhu serial mudiyattum. :sigh2:

saradhaa_sn
20th October 2009, 07:15 PM
நீங்க சொல்ல வந்ததன் அர்த்தம் ரொம்ப தெளிவாகவே புரிகிறது சுதா. :lol:

என்ன செய்வது, எதுவுமே நம்ம கையில் இல்லே. :shock:

aanaa
20th October 2009, 11:02 PM
:sigh2:

your avatar:
அழகான தீப ஆவளி விளக்கு

aanaa
21st October 2009, 02:28 AM
'ரேகாவும் அவுட்'
.

1 more here
http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=1907177#1907177

R.Latha
21st October 2009, 02:04 PM
தோழரையும் ஒரு நாள் தில்லா போட்டு தள்ளுவான். பிறகு ஆதி தில்லாவையும் போட்டு தள்ளுவான். என்ன செய்வது எல்லாம் தொல்காப்பியன் ஆட்டுவிக்கிறார்.தோழருக்கு திறமையிருந்தும் அவர் ஆடுகிறார். ஆடிய ஆட்டமென்ன... இழுத்த இழுவையென்ன இப்படியே பாடிக்கொண்டு போய் கொண்டே இருக்கலாம். ம்... கோலம் போடும் போது எவ்வளவு புள்ளி வைத்தும் போடலாம். முடிக்க பட்ட கோலங்களையே புள்ளி எவ்வளவு வேண்டுமானாலும் சேர்த்து கொண்டே போகலாம். அதற்கு பெயர்தான் கோலம். அதனால்தான் திருச்செல்வம் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்துள்ளாரோ.1000 எபிசோடுகளுக்கு மேலேயும்.... கதை இருக்கிறதோ இல்லையோ பார்வையாளர்கள் நம்மை போல் வெகு பேர் இருக்கையில் திருச்செல்வத்திற்கு என்ன கவலை இருக்கப்போகிறது. வருமானம் ரேட்டிங் மற்றும் திரைபடமும் யோசித்து கொண்டு இருக்கிறார். அசிஸ்டெண்ட் டைரக்டர் இயக்குகிறார் போலும். தோழர் தமிழிலேயே பேசி பேசி அந்த தொடரில் தெலுங்கு பேடியவன் கூட தமிழையே கற்று விடுகிறான்.என்ன கொடுமை (சீரியல் பார்க்கும்) ஆனா, சாரதா, சுதா நாம் அப்படி என்ன கேட்டு விட்டோம். ஒன்று நல்ல கதைப்போக்கு அல்லது புது சீரியல். வேறு என்ன கேட்க போகிறோம். இந்த தமிழ் போதுமா?

sudha india
22nd October 2009, 10:11 AM
போதும் லதா போதும். :lol:

தோழருக்கு போட்டி நீங்கதான் :D

உங்க கோவமெல்லாம் கொட்டி விட்டீங்கபோல. :thumbsup:

நடுவில் திருச்செல்வத்தை தெரிந்தோ தெரியாமலோ திருச்செவம்-னு திட்டிவிட்டீங்க :lol:

கதைப்போக்கு வேணும்னு கேட்டீங்க - OK
புது சீரியல் - கண்டிப்பா தேவையா? :shaking:

sudha india
22nd October 2009, 10:13 AM
Thanks aanaa. But time to change the avtar !!

Irene Hastings
22nd October 2009, 11:50 AM
Saradha Madam. pls update with any further murder stories ?

saradhaa_sn
22nd October 2009, 12:45 PM
:hammer: :banghead: :yessir:

aanaa
22nd October 2009, 09:48 PM
. அப்படீன்னா முதல் நாள் நடந்த கொலை...??. உங்களை யாருங்க அதையெல்லாம் ஞாபகம் வச்சுக்க சொன்னாங்க?. :yessir:

:rotfl2:
:rotfl2:
:rotfl2: :rotfl2:

Plum
23rd October 2009, 12:16 PM
sarada, nInga ezhudharadha padikkarachEyE, sirippodu sErndhu BP-yum Erudhu -
(sirippu for your description and writing, BP for the stupidity of the serial - unga writingkAga thaan indha thread padikkaradhu :lol:)

padaikkradhukkE ipdinnA, paarkaravanga nelamaiya yosichu paartha...

R.Latha
23rd October 2009, 12:20 PM
thank u saradha madam.

kameshratnam
29th October 2009, 11:27 AM
Kolangal will be over this week..

Irene Hastings
29th October 2009, 12:23 PM
http://kolangaltv.blogspot.com/

கோலங்கள் இணையதளம். இந்த தொடரை பார்த்து யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டால் நான் பொறுப்பல்ல

aanaa
30th October 2009, 03:54 AM
Kolangal will be over this week..

:rotfl:

aanaa
30th October 2009, 06:48 AM
http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=1907177#1907177


one more murder

joe
31st October 2009, 01:57 PM
இயக்குநர் திருச்செல்வத்துக்கு நன்றி!
http://www.narsim.in/2009/10/blog-post_31.html

saradhaa_sn
31st October 2009, 05:59 PM
:huh: :hammer: :bangcomp:

aanaa
31st October 2009, 06:50 PM
தோழரும் மாண்டார்

. என்னதான் தோழரின் சாவின் மூலம் 'வேறு ஏதோ' உள்ளர்த்தத்தைச் சொல்ல திருச்செல்வம் முயன்றாலும்,

(தோழரின் இறுதி ஊர்வலமும், அவருடைய தாயாரின் அழுகையும் நம் இதயத்தைப் பிசைந்தன. அந்த அம்மா நடிப்பதாகவே தெரியவில்லை. அப்படியே ஒன்றிவிட்டார்).

:clap:

R.Latha
2nd November 2009, 12:42 PM
so this serial is going to finish within three months .is it right?

sudha india
2nd November 2009, 03:32 PM
Thilla thirundhi vittaaname ????

Approver agum munbu killed listla serama irundha sari......

Saradha pala murai sonnadhu pol, TN police-i idha vida kevalamaga yaarum kaatta mudiyadhu. :banghead:

Murder panradhu kadalai mittaai sapduvadhai pol aagivittadhu. :shoot: - Indha emoticon Kolaigal serialukku romba poruthamaaga irukku. :shoot:

sudha india
4th November 2009, 02:05 PM
Menaka also out ????? 2 mins paathen..... en magan potta sathathil channel change....

Adutha killinga ? Adhiyin velaiya ?

Waterloo
4th November 2009, 03:59 PM
Sarada madam

Enge unga update ? Mounamaga padikkiren ungal posting here. Great sense of humour you have ! Cheers

P_R
4th November 2009, 04:08 PM
தோழரும் மாண்டார்
Oh ! :clap:

Survivor maadhiri aayiruchu. :lol2:

saradhaa_sn
4th November 2009, 07:44 PM
:hammer:

Roshan
4th November 2009, 11:07 PM
மேனகா தன் அண்ணனை அடையாளம் கண்டு, அவனோடு கடலோரக் கிராமத்துக்குப் போய் வாழப்போகிறாள் என்று நாம் எண்ணியிருந்தது வீணா?. அப்படீன்னா, அவளுடைய காதலன் என்ன ஆனான்?.

அதைவிட முக்கியமான கவலை... இன்னைக்கு யாரைக்கொல்ல போறாங்க...? என்பதுதான்.

:lol:

aanaa
5th November 2009, 07:22 AM
'மேனகாவும் அவுட்....?????????'

என்ன இது?. ஒரு எபிசோடுக்கு ஒரு கொலை வீதமல்லவா நடக்கத் துவங்கிவிட்டது. தோழர் இறந்த சுவடு இன்னும் ஆறவில்லை. அதற்குள்...?

அதைவிட முக்கியமான கவலை... இன்னைக்கு யாரைக்கொல்ல போறாங்க...? என்பதுதான்.

தொல்ஸ் - மனநிலையற்றவனாக - ஆதியின் ஆட்களால் தாக்கப்பட்டு.....
இன்னும் .................................





அதைவிட முக்கியமான கவலை... இன்னைக்கு யாரைக்கொல்ல போறாங்க...? என்பதுதான்.

:lol:

:rotfl:

R.Latha
5th November 2009, 10:35 AM
hey menaka is not died. because they didnt show her full face. his father just said. she put red nighty . thats all.when thols meet abi then he will tell full story for one week. i think menaka will be safe.thiru selvam makkalai baya muruththugirar.

Plum
6th November 2009, 04:27 PM
அதைவிட முக்கியமான கவலை... இன்னைக்கு யாரைக்கொல்ல போறாங்க...? என்பதுதான்.
:lol:

Waterloo
6th November 2009, 04:36 PM
அதைவிட முக்கியமான கவலை... இன்னைக்கு யாரைக்கொல்ல போறாங்க...? என்பதுதான்.
:lol:

Actually more than watching the serial, I read Sarada Madam's post intensely . Hilarious :lol: Great going :D

jovemac
6th November 2009, 10:25 PM
தொல்காப்பியனுக்கு நினைவு தப்பிவிட்டதா... இருக்கற ஆபத்து தெரியாம... காதலிக்கும் பிரபா.. - இவங்க ஒரு புதிய கேரக்டர்.

கிரியின் பேச்சை நம்பி தொல்ஸை தேடி வந்திருக்கும் ஆதியின் அவசர ஆர்பாட்டம்.. உண்மையில் மேனகா இறந்துவிட்டாரா?

அபியும் தொல்ஸும் அருகருகில்.. ஆனாலும் இருவரும் சந்திக்கவில்லை. கார் ஓட்டுனரின் அறிமுக முயற்ச்சி வெற்றி பெருமா?

மூன்று விளம்பர இடைவேளைகள் இருந்த காலம் மாறி இப்பொழுது இரண்டிலேயே கதை முடிந்துவிடுகிறது...

saradhaa_sn
7th November 2009, 05:48 PM
:hammer:

jovemac
7th November 2009, 09:10 PM
உடனே என் பையன் சொன்னான் "இல்லேம்மா, நிஜமாவே நம்ம வீட்டுக்கு வெளியே மழை பெய்யுது".

வாய்பே இல்லங்க.... கலக்கறீங்க....

aanaa
12th November 2009, 05:28 AM
இம்முறை
தொல்ஸ், அபி
சுடப்பட்டார்கள் :-)

ஆஹா ஆஹா :huh:

aanaa
18th November 2009, 05:28 AM
அடப் பாவிங்களா



தாங்க முடியலா

இப்ப கிரியும் போயிட்டான்

(அலங்) கோலங்கள் - அல்லது - கொலைக்களம்
நல்ல பெயராக இருந்திருக்கும்

jovemac
18th November 2009, 09:25 AM
கோலங்கள் கோலங்கள் - அழகான கொலைகள்...

இதுவரை இறந்தவர் பட்டியல்...

1. Narayanan - a worst charector, who utilised Abhi's sympathy to save his son and family.
2. Ranjani - konja naal aadiya aattaam enna?.
3. Ubendra - Finally he did his part well
4. Sivadoss's wife - just come & go
5. Manjula - a foolish charector (she knows there is poison in food, is it necessary she must eat it and prove?)
6. Rudhra - a pitiable charector, died in Cochin episode. just came as a lightning.
7. Maddy - the black mailer of Anjali
8. Arthy's father-in-law (K.Kannan) : not shown as dead, but actually died.
9. Sangeetha's dad: murdered by the cruel and greedy son-in-law Basker,
10. Saroja: killed by her brothers
11. Saroja's brother - killed by Dhilla
12. Saroja's brother- killed by Dhilla
13. Saroja's brother - died in hospital
14. Kanchana's mom - Adhi's grand mom, who knows the secrets apart from Eswaran, Maragatham & Thiruvengadam.
15. In kollimalai kaadu - an adiyal shot by the thalaivan
16. Inspector Pirabu
17. another guy together with the Inspector
18 : Anandhi's Mother-in-law
19: and Father-in-Law in accedent
donot know whether their daughter and husband also in the accident -
if so 20 and 21
22. The guy that Saroja's brother shot in the godown...
23 ..... and Saroja's periyappa - killed by Adi's henchmen
24. Santhi
25/26: மேனகாவின் பாதுகாவலர் 2
27 : பொதுமகன்
28/29 : காவல்துறையினர் 2
30. வேலைக்காரன்
31. சங்கீதா
32. அந்தோனி
32. அர்ஜுன்
33. சங்கரபாண்டியன் (34??)
34/35 2 people by Dilla in flashack
36/37 : 2 officers by Dilla in flashack
38: ரேகா
40. தோழர் பாலகிருஷ்ணன்
41. கிரி

mr_karthik
18th November 2009, 01:01 PM
I think Thiruselvam already crossed 'half century' in dead list.

DEAD LIST CONTINUES....

41, 42, 43, 44, 45, 46, 47 - Whole Family of Anthony shot dead by his dad 'Dhasaiyah' in Anthony's flash back.

48 - Chellamma (mom of Thols & Menaka)
49 - that Malayalee, killed by Chellamma
50 - VeLLaiyan (dad of Thols & Menaka)
51 - that dead lady in beach, who was identified as Menaka.

Poor Giri's death (murder) is really un-digestable. He did not act against his boss, but always support for him. He only told about Thols and Abi, who were in hill station. Hereafter we will miss him a lot. We cant imagine Adhitya minus Giri.

Next murder who ?... may be ThiruvEngadam (because he also knows Adhi's secrets, and Inspector also, and Dhilla also.

But Abhi's whole family is alive without damage.

aanaa
18th November 2009, 10:47 PM
I think Thiruselvam already crossed 'half century' in dead list.

DEAD LIST CONTINUES....

41, 42, 43, 44, 45, 46, 47 - Whole Family of Anthony shot dead by his dad 'Dhasaiyah' in Anthony's flash back.
.

41 கிரி
may be 42 , 43, 44, 45, 46, 47, 48...


கொலை முயற்சி ( அதே தண்டனை )

aanaa
24th November 2009, 04:22 AM
coming to END atlast.

Arthi
24th November 2009, 05:28 PM
உடனே என் பையன் சொன்னான் "இல்லேம்மா, நிஜமாவே நம்ம வீட்டுக்கு வெளியே மழை பெய்யுது".

வாய்பே இல்லங்க.... கலக்கறீங்க....

Saradha madam,
unga sense of humour superb :rotfl:

ofcourse,reading abt kolangal is really interesting than watching it.

i guess TRP is maintained only bcoz of ur writings :D

saradhaa_sn
24th November 2009, 06:07 PM
:ty: ஆர்த்தி...

19thmay
24th November 2009, 06:29 PM
நன்றி ஆர்த்தி...

ஆதித்யா என்ற நல்லவன்....


திருச்செல்வத்தை எதற்காகப்பாராட்டாவிட்டாலும் ஒன்றுக்காக கண்டிப்பாக பாராட்ட வேண்டும். கதையின் முதுகெலும்பான பாத்திரத்துக்கு அஜய்கபூர் என்ற அற்புத நடிகனைப் போட்டதற்காக. என்ன நடிப்பு?. என்ன வேகம்?. என்ன கொக்கரிப்பு?. பணக்காரனுக்கே உரிய திமிர். ஆணாதிக்க வாதிக்கே உரிய எகத்தாளம். நினைத்ததை சாதிப்பதில் இறுமாப்பு. யாரையும் வசப்படுத்துவதில் வல்லமை. தேவை முடிந்தபின் தூக்கியெறியும் அலட்சியம். உலகமே எதிர்த்தாலும் கலங்காத திடம். தோழரைக் கொன்று தள்ளியபோது, அண்டை நாட்டு அதிபரைக் கண்முன் கொண்டுவந்த லாவகம். ஆனால் பெற்ற தாயிடம் மட்டும் பெட்டிப் பாம்பாய் அடங்கும் பாசம். இவனுக்குத்தான் எத்தனை முகங்கள்......!!!!.

நேற்றைய எபிசோட்டில்தான் என்ன ஒரு நடிப்பு. தொல்காப்பியனிடமும், மேனகாவிடமும் பேசும்போது.... இல்லையில்லை... வெற்றி பெற்றுவிட்டதாக கொக்கரிக்கும்போது... வாவ்... இப்படி ஒருவனை இனி எப்போது பார்க்கப்போகிறோம் என்ற பிரமிப்பே நமக்கு (ஸாரி... எனக்கு) தோன்றியது.


Only savior of this serial is Ajay Kapoor. His performance is :notworthy: outstanding. I admire his body language and characterization!

Thiruselvam is indeed a good director, he made people to watch this serial for more than 5 years [Right?]. He could have given a better product if the number of years has been truncated.

Abi is a very weak,emotionally fool, dim, irritating,unbelievably pathetic character. :evil:

:redjump: Anyway before my parents follow another mokka serial I need to grab the remote.

saradhaa_sn
25th November 2009, 11:01 AM
Only savior of this serial is Ajay Kapoor. His performance is :notworthy: outstanding. I admire his body language and characterization!
:yes:

saradhaa_sn
25th November 2009, 11:54 AM
:ty:

R.Latha
25th November 2009, 12:47 PM
aathi saaga maataan veandumaanal paithiyam pidikkalam. because of usha.so next week kolangal will finish.

Sanjeevi
25th November 2009, 01:09 PM
sssssshh apppaa, eppovo kanna kattiruchu

oru vazhiya mudikka porangala :)

Saradha :thumbsup:

aanaa
26th November 2009, 06:11 AM
சிங்கம் சிங்கிளாகத் தப்பி செல்கிறது".




கோலங்கள் கோலங்கள் - அழகான கொலைகள்...

இதுவரை இறந்தவர் பட்டியல்...

1. Narayanan - a worst charector, who utilised Abhi's sympathy to save his son and family.
2. Ranjani - konja naal aadiya aattaam enna?.
3. Ubendra - Finally he did his part well
4. Sivadoss's wife - just come & go
5. Manjula - a foolish charector (she knows there is poison in food, is it necessary she must eat it and prove?)
6. Rudhra - a pitiable charector, died in Cochin episode. just came as a lightning.
7. Maddy - the black mailer of Anjali
8. Arthy's father-in-law (K.Kannan) : not shown as dead, but actually died.
9. Sangeetha's dad: murdered by the cruel and greedy son-in-law Basker,
10. Saroja: killed by her brothers
11. Saroja's brother - killed by Dhilla
12. Saroja's brother- killed by Dhilla
13. Saroja's brother - died in hospital
14. Kanchana's mom - Adhi's grand mom, who knows the secrets apart from Eswaran, Maragatham & Thiruvengadam.
15. In kollimalai kaadu - an adiyal shot by the thalaivan
16. Inspector Pirabu
17. another guy together with the Inspector
18 : Anandhi's Mother-in-law
19: and Father-in-Law in accedent
donot know whether their daughter and husband also in the accident -
if so 20 and 21
22. The guy that Saroja's brother shot in the godown...
23 ..... and Saroja's periyappa - killed by Adi's henchmen
24. Santhi
25/26: மேனகாவின் பாதுகாவலர் 2
27 : பொதுமகன்
28/29 : காவல்துறையினர் 2
30. வேலைக்காரன்
31. சங்கீதா
32. அந்தோனி
32. அர்ஜுன்
33. சங்கரபாண்டியன் (34??)
34/35 2 people by Dilla in flashack
36/37 : 2 officers by Dilla in flashack
38: ரேகா
40. தோழர் பாலகிருஷ்ணன்
41. கிரி


I think Thiruselvam already crossed 'half century' in dead list.

DEAD LIST CONTINUES....

41, 42, 43, 44, 45, 46, 47 - Whole Family of Anthony shot dead by his dad 'Dhasaiyah' in Anthony's flash back.

48 - Chellamma (mom of Thols & Menaka)
49 - that Malayalee, killed by Chellamma
50 - VeLLaiyan (dad of Thols & Menaka)
51 - that dead lady in beach, who was identified as Menaka.

Poor Giri's death (murder) is really un-digestable. He did not act against his boss, but always support for him. He only told about Thols and Abi, who were in hill station. Hereafter we will miss him a lot. We cant imagine Adhitya minus Giri.

Next murder who ?... may be ThiruvEngadam (because he also knows Adhi's secrets, and Inspector also, and Dhilla also.

But Abhi's whole family is alive without damage.

ஆதியின் அகோரப் பசிக்கு அவனது தாயின் உயிரும் பலி.

:-(

sudha india
26th November 2009, 01:20 PM
Ajay kappor rasigar mandra thalaivi Saradhaa avargale.... (Kochukaadheenga... Chumma on the lighter side only)

Miga arumaiyaaga ezhudhi irukeenga... Abi character mel ulla unga nyayamaana kobam purigiradhu.

Adhi veriyudan Abiku phone panni avaladhu kudumbathai kolai seiiya povadhaga sonnadhum, aval CBI ku solranga. Adhi poi avargalai miratti, Kanchana vandhu pala pakkam dialogue solli, gundu adi pattu sethu, Adhi azhudhu pulambi, Abi dialoge pesi avan thappi odum varai yaarum varavillai. Enna oru direction...........kaadhile poo maalai.

BTW, indha Adhiyin chase-la, Baskar endra maaperum kolaiyaali-i suthamaaga marandhu Thols serialai mudippara alladhu Adhi - Baskar combinationla innum sila pala vaarangal thodaruma nu theriyalai.

Thiruvengadam enna aanaar ?

Innum sila characters..apdiye andharathil irukkiraargal.

saradhaa_sn
26th November 2009, 03:21 PM
நேற்று மதியம்தான் ஆதியை சிங்கமென்று சொன்னேன். அதை நேற்றிரவே நிரூபித்துவிட்டான். முன்னதாக, தன்னை இருபது துப்பாக்கிகள் சுற்ரி வளைத்தபோதிலும், அவன் பார்வையைப்பாருங்கள். எந்த சூழ்நிலையிலும் நிலைகுலையாத தீர்க்கமான பார்வை. எல்லாம் முடிந்துவிட்டது என்ற நம்பிக்கையிழந்த பார்வையல்ல, எப்படி தப்பிப்பது என்ற தீர்மானப்பார்வை. எல்லோரும் தங்கள் முயற்சியால் அவனைப்பிடித்தபிறகு, அம்மணி வர்ராங்க, வழக்கம்போல என்னென்னமோ பேசுறாங்க. ஒரே வித்தியாசம் ஆதிக்கு ஆதரவாக ஒருத்தரும் இல்லை. இருந்த அடியாட்களும் போலீஸால் மடக்கப்பட்டுள்ளனர்.

அபிமேடம் திடீரென மந்திரவாதியாக மாறி, சில அதிசயங்கள் செய்றாங்க. நேற்றுவரை ஒரு அரசியல் கட்சியில் இருந்து தலைவரின் ஊழலுகெல்லாம் துணையிருந்துவிட்டு, அங்கிருந்து நீக்கப்பட்டவுடன் திடீரென தலைவரின் பல வருட ஊழல்களை வெட்கமின்றி அம்பலப்படுத்தும் அரசியல் வாதிபோல, பல கொலைகளை மனச்சாட்சியின்றி செய்துவிட்டு, நல்லவனாக மாறிய (???) தில்லாவை அழைக்கிறாங்க. அடுத்த மந்திர வேலையாக இறந்துபோனதாக கருதப்பட்ட கிரியை அழைக்கிறாங்க. அவனும் வருகிறான். (தொல்ஸ் காப்பாற்றினாராம்). நமக்கு பயம் தொற்றிக்கொள்கிறது. ஏது கொஞ்சம் விட்டால் அர்ஜுனை அழைப்பாரோ, சங்கரபாண்டியனை அழைப்பாரோ, தோழரை அழைப்பாரோ, ரேகாவையும் கூட அழைப்பாரோ என்று நினைத்திருக்கும் நேரம்... (ஆடியன்ஸை முட்டாளாக்கியது போதும் என்று நினைத்ததாலோ என்னவோ) சித்துவேலைகளை நிறுத்திக்கொள்கிறார். திடீரென அப்போதுதான் ஆதி தோழரைக் கொன்றது நினைவு வந்தது போல, தொல்காப்பியன் ஆதியை திடீரென உருட்டுக்கட்டையால் தாக்குகிறான். 'சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்ள வேண்டாம்' என்று சி.பி.ஐ. வெற்றிமாறன் தடுக்கிறார். (சட்டத்தை எங்கே கையில் எடுத்தார்?. உருட்டுக் கட்டையைத்தானே எடுத்தார்?).

நீதிமன்றம்.......

தில்லா, கிரி, போலீஸ் இன்ஸ்பெக்டர், மேனகா, உஷா, தொல்காப்பியன் என்று எல்லோரும் விசாரிக்கப்படுகிறார்கள். பெரும்பாலோரின் விசாரணைகள் மௌனமாகக்காட்டப்படுகின்றன. அவ்வப்போது ஆதியின் முகத்தையும் காட்டுகின்றனர். எந்த வித சலனமுமில்லாத தீர்க்கமான பார்வை. அம்மணி அபிமேடம் சாட்சிக்கூண்டில் ஏறுகிறார். எமோஷனலாகி நம்மைப்படுத்துகிறார். ஆதியால் அதிகம் பாதிக்கப்பட்டவள் தான்தான் என்கிறாள் (முழுப்பொய். அபி குடும்பத்தின் மொத்த உறுப்பினர்களும் குத்துக்கல்லு மாதிரி நல்லாத்தான் இருக்காங்க. பாவம் காஞ்சனாதான் தன் மகனையும் மருமக்ளையும் இழந்துவிட்டாள்). நீதிமன்றம் ஆதியை விடக்கூடாது என்று வழக்கம்போல அழுகையும், எமோஷனலுமாகச் சொல்லி முடிக்கிறாங்க. (நமக்கு அப்பாடா என்றிருக்கிறது).

'உங்கள் மீது சுமத்தப்ப்ட்ட குற்றங்களை நீங்க ஒத்துக்கிறீங்களா?' என்று நீதிபதி பலமுறை கேட்டும் ஆதியிடமிருந்து மௌனம். அவன் பார்வை ஒரே இடத்தில் நிலைகுத்தியிருக்கிறது. 'இல்லை'ன்னு மறுக்கப்போகிறான் என்று நாம் நினைத்திருக்கும் நேரம், சிங்கம் சிலிர்த்தெழுகிறது. மயங்கியதுபோல விழுந்தவன், சட்டென பக்கத்திலிருந்த இன்ஸ்பெக்டரின் துப்பாக்கியைப்பிடுங்கி, ஒரே தாவாகத்தாவி, நீதிபதியின் நெற்றிப்பொட்டில் வைத்து மிரட்டியபடியே, தனக்கு எதிராக மாறிய தில்லாவையும், கிரியையும் சுட்டுத்தள்ளுகிறான். அத்தனையும் சில வினாடி நேரத்தில் நடக்கிறது. (ஆதி சிலநேரம் இப்படித்தான் சொதப்புவான். யார் யாரையோ சுட்டவன், துப்பாக்கியை கொஞ்சம் திருப்பி அபி மேடத்தை சுட்டிருந்தால், நேற்றே "முற்றும்" போட்டுவிட்டு இன்னைக்கு 9 மணிக்கு வேறு சீரியல் ஆரம்பித்திருக்கலாம்).

நீதிபதியையே பிணையாக வைத்து, அவரையும் அழைத்துக்கொண்டு காரில் தப்பிச் செல்கிறான். அவன் மிரட்டலுக்கு பணிந்து போலீசும், சி.பி.ஐ.யும் துப்பாக்கிகளை கீழே போடுகிறது. மாட்டியிருப்பது நீதிபதியாச்சே. யாருடைய உதவியும் இல்லாமல், தானே.... தானே.... தானே... தப்பிச்செல்கிறான். தற்போதைய திரைப்பட வசனங்களில் சொல்வதானால்... "ப..........கள் கூட்டமாகப் பார்த்துக்கொண்டிருக்க சிங்கம் சிங்கிளாகத் தப்பி செல்கிறது".

sudha india
26th November 2009, 03:33 PM
:rotfl: Saradha ..... :thumbsup:

Apram enna...... Idho thandhom.... Pidiyungal pattathai.

Ajay kapoor rasigar mandra thalaivi Saradhaa Vazhga Vazhga....

(Gosham kekkudha ???)

Arthi
26th November 2009, 04:10 PM
wat a pathetic direction from Thols....

azhiga abi (enga Appa vEcha pEru :P) kadaisi varayum azhudhundE dhan irukka pOra.... :banghead:

aanaa
27th November 2009, 05:25 AM
[
ராமு : ஒற்றுமை... ரெண்டு பேருமே கொலைகாரங்க.
வேற்றுமை... ஆதி அதுல வர்ர கேரக்டர்களை ஒவ்வொருத்தரா கொலை பண்ணுவான். 'மாண்புமிகு டாக்டர் அபி மேடம்' சீரியலை பார்த்துக்கிட்டு இருக்கிறவங்களை ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கிலே கொல்லுவாங்க.

ஆசிரியர் : சபாஷ்... சரியான விடை. உனக்கு முழு மதிப்பெண் தந்தேன். :notworthy:

:rotfl:

sudha india
27th November 2009, 09:23 AM
இந்த தொடர் எனக்கு ஒரு காமெடி தொடர் மாதிரி இருக்கு.

I was actually thinking about Saradha when seeing Aadhi's climax. Anyway, that was foreseen.

Hospital vasalil Digital valley project Abi yidam kodukkum podhu naan nenacha dialogue :
(palarum edhir parthiruppargal !!)

Abi :
இந்த ப்ரொஜெட்காகதானே என் தம்பி ஒரு கொலைகாரனாக மாறி, எப்படி இருந்த ஆதி இப்படி ஆகிவிட்டான் ? எனக்கும் இனி இது வேண்டாம். ......

நல்ல வேளை இப்படி பேசாமல், என் டிவி உடயாமல் காப்பாத்திட்டார். :banghead:

Nice comedy !!

sudha india
27th November 2009, 09:27 AM
Kolangal thodar..... Inimel .... (oru paattu than nyabagam varudhu....)

நெனச்சபடி நெனச்சபடி
பாஸ்கர் வந்தானடி
கோலங்கள் தொடருமா
கொலைகளும் தொடருமா ......

Plum
27th November 2009, 06:42 PM
[
ராமு : ஒற்றுமை... ரெண்டு பேருமே கொலைகாரங்க.
வேற்றுமை... ஆதி அதுல வர்ர கேரக்டர்களை ஒவ்வொருத்தரா கொலை பண்ணுவான். 'மாண்புமிகு டாக்டர் அபி மேடம்' சீரியலை பார்த்துக்கிட்டு இருக்கிறவங்களை ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கிலே கொல்லுவாங்க.

ஆசிரியர் : சபாஷ்... சரியான விடை. உனக்கு முழு மதிப்பெண் தந்தேன். :notworthy:

:rotfl:
:rotfl3:

Arthi
27th November 2009, 08:28 PM
இந்த தொடர் எனக்கு ஒரு காமெடி தொடர் மாதிரி இருக்கு.

I was actually thinking about Saradha when seeing Aadhi's climax. Anyway, that was foreseen.

Hospital vasalil Digital valley project Abi yidam kodukkum podhu naan nenacha dialogue :
(palarum edhir parthiruppargal !!)

Abi :
இந்த ப்ரொஜெட்காகதானே என் தம்பி ஒரு கொலைகாரனாக மாறி, எப்படி இருந்த ஆதி இப்படி ஆகிவிட்டான் ? எனக்கும் இனி இது வேண்டாம். ......

நல்ல வேளை இப்படி பேசாமல், என் டிவி உடயாமல் காப்பாத்திட்டார். :banghead:

Nice comedy !!

Oh yeah, I was also thinking the same.... thank God nothing had happened like that.
thols ku aayiram :ty:

aanaa
28th November 2009, 09:31 PM
முடிவுக்கு வரும் கோலங்கள்



தேவயானி நடிப்பில் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கோலங்கள் தொடர் அடுத்தமாதம் 4-ம்தேதியுடன் முடிவடைகிறது. கோலங்கள் தொடரை இயக்கிய திருச்செல்வம், தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கும் புதிய தொடரை இயக்குகிறார்.

இந்த தொடரில் தேவயானி நடிப்பாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

saradhaa_sn
1st December 2009, 02:16 PM
உண்மையில் ஆதியின் முடிவு, சற்று அதிர்ச்சியாகவும், ஏமாற்றமளிப்பதாகவும் இருந்தது. இதை விட அவன் மேலுள்ள குற்றங்களை விசாரித்து தூக்கில் இட்டிருக்கலாம். தான் யார் என்பதே அறியாமல், நிலை குத்திய பார்வையுடன் சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் ஆதியைப்பார்க்க பரிதாபமாகவே இருந்தது. அவனை ஒரு குழந்தையைப்போல பார்த்துக்கொள்வதாக உஷா ஏற்றுக்கொண்டதும், 'அப்பா, என்னோடு பேசுங்கப்பா' என்று ஆகாஷ் கேட்டதும் மனதைத்தொட்டன.

அவ்வளவு பெரிய டிஜிட்டல் வேல்லி அதிகாரிகள், ஏதோ கைமாற்றுக்கு பணம் கொடுப்பது போல ஆஸ்பத்திரி வாசலில் வந்து தங்கள் ப்ராஜக்டை ஒப்படைப்பது, தமாஷாக இருந்தது.

அகங்காரி அலமேலுவும், அறிவுகெட்ட கற்பகமும் அபியிடம் மீண்டும் பாஸ்கரை ஏற்றுக்கொள்ளும்படி கேட்பது பைத்தியக்காரத்தனம் என்றால், பாஸ்கர் அபியின் காலில் விழுந்தது உலகமகா கோமாளித்தனம். அதைவிட, அபி இல்லாவிட்டால் தன்னால் வாழமுடியாது என்று அவன் புலம்புவது சுத்த கேணத்தனம்.

அது சரி, பாஸ்கர் தன் மாமனாரை மலையிலிருந்து தள்ளி கொடூரமாகக்கொன்றதற்கும், தன்னை நம்பிய மனைவி சங்கீதாவை ஓடும் காரிலிருந்து தள்ளி அநியாயமாக்கக்கொன்றதற்கும் விசாரணை, தண்டனை எதுவும் கிடையாதா?. அல்லது, ஒருவேளை அபியும் மனம் மாறி அவனை ஏற்றுக்கொள்ளப் போகும் நேரம், "பாஸ்கர், யூ ஆர் அண்டர் அரெஸ்ட்" என்ற போலீஸின் குரல் கேட்குமா?. (கேட்க வேண்டும். அப்படி அரெஸ்ட் ஆகும்போது, பாஸ்கரை விடுங்கள்... அந்த அலமேலு மூஞ்சைப் பார்க்க வேண்டும். ஒரு சான்ஸ் கொடுங்க திருசெல்வம் சார்).

பாஸ்கரை அபி ஏற்றுக்கொண்டாளா இல்லையா என்ற விடை கிடைக்கும் முன்பாகவே, அபியின் எல்லா கட்டிட வேளைகளும் முடிகின்றன. உயர உயரமான கட்டிடங்கள் காண்பிக்கப்படுகின்றன. (இவை கட்டிமுடிக்க குறைந்தது சில வருடங்களாவது வேண்டும்). அப்படியும் அபி பாஸ்கர் விஷயத்துக்கு இன்னும் ஒரு முடிவு தெரியவில்லையாம்..... காது குத்துறாங்கப்பா.

sudha india
2nd December 2009, 09:13 AM
ஆஸ்பத்திரி வாசலில் வந்து தங்கள் ப்ராஜக்டை ஒப்படைப்பது, தமாஷாக இருந்தது.

From the beginning this project is a comedy.


அகங்காரி அலமேலுவும், அறிவுகெட்ட கற்பகமும்
Naruk.....


அந்த அலமேலு மூஞ்சைப் பார்க்க வேண்டும். ஒரு சான்ஸ் கொடுங்க திருசெல்வம் சார்
nalla ekkam than.


காது குத்துறாங்கப்பா
Multiple times in lakhs of viewers' ears.


பாஸ்கரின் ஷூவைத்துடைத்து, அவன் துணிகளைத் துவைத்துப்போடும் "மேலான வாழ்க்கை" அபிக்குக் கிடைக்குமாம்

idhu allavo vazhkaiyin ultimate ....


எத்தனையோ நல்லவர்களைக்கொன்று விட்டு, கொல்ல வேண்டிய கற்பகத்தைக் கொல்லாமல் விட்ட ஆதித்யா ஒழிகRasigar mandra thalaiviyin kobam nyayamanadhe !!

sudha india
2nd December 2009, 09:15 AM
Dear Saradha...

Innum oru moodru naatkal ungal adhiradi vimarsanathai ezhudhungal. Idhai padithaavadhu nam hub makkal arudhal adaiyattum.

saradhaa_sn
3rd December 2009, 03:12 PM
:ty: Sudha

sudha india
3rd December 2009, 03:40 PM
(விஸ்வநாதன் சார், பத்திரத்தை இன்னும் நல்லா படிச்சுப்பாருங்க. 'கோலங்கள்' தொடரை தொடர்ச்சியாக பார்த்தவங்களுக்கு ஆளுக்கு ஒரு ஏக்கர் நிலம், அதைப்பற்றி கமெண்ட் எழுதினவங்களுக்கு ஒரு வீடு என்று எதுவும் எழுதி வச்சிருக்கப்போறாங்க).

Very deserving gift.

Adhu sari.....Pana balam illadha Abikku ivvalavu Kodigal engirundhu vandhadhu ?

thols-ai thorathi vittadhu amma thannu therinjum adhai pathi kekkaamal accept pannadhu nerududhu.

Koodave irundha Thols-ku settlement onnum illaya ? Friendship-ai settle panni anupitaangala ?

Eppadiyum Friday Thols vandhu seruvaar.. Marupadi ungal kangal neer thirai idum.

Plum
3rd December 2009, 06:19 PM
ஆஸ்பத்திரி வாசலில் வந்து தங்கள் ப்ராஜக்டை ஒப்படைப்பது, தமாஷாக இருந்தது.
:rotfl3:


விஸ்வநாதன் சார், பத்திரத்தை இன்னும் நல்லா படிச்சுப்பாருங்க. 'கோலங்கள்' தொடரை தொடர்ச்சியாக பார்த்தவங்களுக்கு ஆளுக்கு ஒரு ஏக்கர் நிலம், அதைப்பற்றி கமெண்ட் எழுதினவங்களுக்கு ஒரு வீடு என்று எதுவும் எழுதி வச்சிருக்கப்போறாங்க).

:rotfl:

jovemac
3rd December 2009, 06:33 PM
(விஸ்வநாதன் சார், பத்திரத்தை இன்னும் நல்லா படிச்சுப்பாருங்க. 'கோலங்கள்' தொடரை தொடர்ச்சியாக பார்த்தவங்களுக்கு ஆளுக்கு ஒரு ஏக்கர் நிலம், அதைப்பற்றி கமெண்ட் எழுதினவங்களுக்கு ஒரு வீடு என்று எதுவும் எழுதி வச்சிருக்கப்போறாங்க).

இத்தொடரினை பற்றிய Special Commentry கொடுத்த சாரதா மேடம்கு தனியா 1 Ground அபி எழுதிவைக்கலனா... நாமே வாங்கி கொடுதிடலாம்....

Common TEAM!

saradhaa_sn
4th December 2009, 11:27 AM
:ty: சுதா,
:ty: Plum
:ty: Jovemac.......

அகங்காரி அலமேலுவும், அறிவுகெட்ட கற்பகமும் அபியிடம் மீண்டும் பாஸ்கரை ஏற்றுக்கொள்ளும்படி கேட்பது பைத்தியக்காரத்தனம் என்றால், பாஸ்கர் அபியின் காலில் விழுந்தது உலகமகா கோமாளித்தனம். அதைவிட, அபி இல்லாவிட்டால் தன்னால் வாழமுடியாது என்று அவன் புலம்புவது சுத்த கேணத்தனம்.

அது சரி, பாஸ்கர் தன் மாமனாரை மலையிலிருந்து தள்ளி கொடூரமாகக்கொன்றதற்கும், தன்னை நம்பிய மனைவி சங்கீதாவை ஓடும் காரிலிருந்து தள்ளி அநியாயமாக்கக்கொன்றதற்கும் விசாரணை, தண்டனை எதுவும் கிடையாதா?. அல்லது, ஒருவேளை அபியும் மனம் மாறி அவனை ஏற்றுக்கொள்ளப் போகும் நேரம், "பாஸ்கர், யூ ஆர் அண்டர் அரெஸ்ட்" என்ற போலீஸின் குரல் கேட்குமா?. (கேட்க வேண்டும். அப்படி அரெஸ்ட் ஆகும்போது, பாஸ்கரை விடுங்கள்... அந்த அலமேலு மூஞ்சைப் பார்க்க வேண்டும். ஒரு சான்ஸ் கொடுங்க திருசெல்வம் சார்).

பாஸ்கரை அபி ஏற்றுக்கொண்டாளா இல்லையா என்ற விடை கிடைக்கும் முன்பாகவே, அபியின் எல்லா கட்டிட வேளைகளும் முடிகின்றன. உயர உயரமான கட்டிடங்கள் காண்பிக்கப்படுகின்றன. (இவை கட்டிமுடிக்க குறைந்தது சில வருடங்களாவது வேண்டும்). அப்படியும் அபி பாஸ்கர் விஷயத்துக்கு இன்னும் ஒரு முடிவு தெரியவில்லையாம்..... காது குத்துறாங்கப்பா.

இதனிடையே அபியின் கனவு இல்லமும் உருவாகி விட்டது. நாளை மறுநாள் புதுமனை புகுவிழாவாம். அதற்கு முன் கற்பகமும், ஆர்த்தியும் தொல்ஸைச் சந்தித்து பாவமன்னிப்பு பெறுகின்றனர். கூடவே ஒரு கோரிக்கையும் வைக்கின்றனர். தெரிந்ததுதான். தொல்ஸின் அருகாமையில் இருக்கும்வரை அபி தனக்கென ஒரு வாழ்க்கை அமைத்துக்கொள்ள மாட்டாளாம். அவன் அவளை விட்டு விலகிப்போனால் மட்டுமே, பாஸ்கரின் ஷூவைத்துடைத்து, அவன் துணிகளைத் துவைத்துப்போடும் "மேலான வாழ்க்கை" அபிக்குக் கிடைக்குமாம். (எத்தனையோ நல்லவர்களைக்கொன்று விட்டு, கொல்ல வேண்டிய கற்பகத்தைக் கொல்லாமல் விட்ட ஆதித்யா ஒழிக).

தொல்காப்பியனும் அவர்கள் கோரிக்கையை ஏற்று, அபியை விட்டு விலகிப்போக சம்மதிப்பதுடன், அவர்கள் கேட்டுக்கொண்டபடி தான் விலகிப்போக அபியின் குடும்பத்தினர்தான் காரணம் என்ற உண்மையை அவளிடம் சொல்ல மாட்டேன் என்ற வாக்குறுதியையும் கொடுக்கிறான். என்ன பயன்?. செடிக்குப்பின்னால் நின்று அபிதான் அனைத்தையும் கேட்டுவிட்டாளே.

இதற்கு முன் தன்னுடன் யு.எஸ். வந்துவிடும்படி அழைத்த தங்கை மேனகாவின் கோரிக்கையை தொல்ஸ் நிராகரித்துவிட்டார். ஸோ, அங்கே போக சான்ஸ் இல்லை. தன் கடைசி காலத்தில் ராமேஸ்வரம் கடற்கரைக்கு வந்து அங்கேயே தங்கி விடுவேன் என்று ஏற்கெனவே தன் நண்பர் அன்வர்பாய் இடம் தொல்ஸ் சொல்லியிருக்கிறார். இன்னும் ரெண்டு நாள்தானே.... பார்ப்போம்.

R.Latha
4th December 2009, 12:44 PM
athu tholkaapiyanagakuuda irukkalaam.mudivil thils abi usha moovarum thozargalaga valam varuvathodu kolangal riraivu perum. appadi naan ninaikkirean.abi thols iruvarumea andha kaapagathil sevai seithukonde abi construction-iyum kavanikkalam. abi thols natpukku utharanamaaga enrendrum makkal manathil nirkalam.vaalga valarga. puthu serial sujatha vijaya kumar kaaga thiruselvam direct panrar. eppoluthu endru theriyavillai .but suntv-kendru ninaikkirean. subam....

jaaze
4th December 2009, 12:45 PM
mudiya poguthu! :redjump:

Irene Hastings
4th December 2009, 01:17 PM
சாரதா மேடம். அற்புதமான பதிவுகள். சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.

saradhaa_sn
4th December 2009, 02:07 PM
:ty: Irene Hastings.

:ty: லதா....

sudha india
4th December 2009, 02:13 PM
That Rajendran is missing in the crowd. May be he brings thols or Anandhi.

Thols illamal subam poda mudiyadhe !!

The trio should join again in friendship and business. appathan oru niraivu irukkum.

Thols directing another serial ????....
"Adutha 7 varudangal ".... nu title vekkalam. :lol:

aanaa
4th December 2009, 10:47 PM
நன்றி சுதா, Plum மற்றும் Jovemac.......

உங்கள் அன்பு இதயங்களில் இடம் பெற்றிருக்கிறேனே, அது ஆயிரம் கிரவுண்டுகளுக்கு சமமாயிற்றே. (இப்படி சொல்வதால் நான் வந்தவாசி, திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தல்களில் வேட்புமனு தாக்கல் செய்திருப்பேனோ என்று நினைக்க வேண்டாம்).
.
:notworthy:
:notworthy:

aanaa
4th December 2009, 10:53 PM
நன்றி

. இந்த தொடரின் விளம்பரங்கள் மூலம் விகடன் ஒளித்திரையும், சன் தொலைக்காட்சியும் கொஞ்சமாகவா சம்பாதித்தனர்..?.

இதுவரை - நீங்களும் தொடர்ந்து எழுதிவந்தமைக்கும் உங்கள் கை வண்ணத்திற்கும் :notworthy: :ty:


first post on: Fri Jan 28, 2005 12:33 am Post subject: KOLANGAL -

saradhaa_sn
5th December 2009, 11:06 AM
:ty: aanaa.

aanaa
5th December 2009, 10:55 PM
'கோலங்கள்' நிறைவடைந்தது......
........்.

நான் பெரிதும் மதிக்கும் எஸ்.சத்யா அவர்களால் துவங்கப்பட்ட இந்த கோலங்கள் திரி, பலராலும் தொடரப்பட்டு வெற்றிகரமாக முடிவை எட்டியுள்ளது. வடம் பிடித்து வழிநடத்திய அத்தனை அன்பு இதயங்களுக்கும் நன்றி.

ஆம்.... கோலங்கள் நிறைந்து விட்டது...

தொடக்கத்தில் வந்துபோன பொன்வண்ணன் ,விஜி சந்திரசேகர்,- பாஸ்கரின் சகோதரி - ..

gta129
10th December 2009, 10:15 PM
The serial is finally over. We haven't watched it in months, but surprised to learn they actually ended.

aanaa
11th December 2009, 01:51 AM
அடுத்து புதிதாக 'தென்றல்' என்ற ஒரு தொடருக்கான விளம்பரம் சன் தொலைக்காட்சியில் காண்பிக்கப்படுகிறது. நீங்கள் சொன்ன (திருச்செல்வம் இயக்கும்) தொடர் அதுதானா? அல்லது அது வேறா..?.
?.


மாதவி



[html:ea61093f71]<div align="center"><object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/XjkQYf-EOao&rel=0&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en_US&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/XjkQYf-EOao&rel=0&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en_US&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object></div>[/html:ea61093f71]


The serial is finally over. We haven't watched it in months, but surprised to learn they actually ended.

everything has to comes to END one day

saradhaa_sn
12th December 2009, 06:15 PM
ஆறு வருடங்கள் கதை காடு மேடெல்லாம் சுற்றியலைந்தும் கூட, கடைசிக் காட்சிக்கு, தொடரின் முதல் காட்சியான அபியின் கனவு இல்லம் புகுவிழாவை கொண்டு வந்து இணைத்திருப்பது ஒரு நிறைவாக இருக்கிண்றது.

ஆறு வருடங்களுக்கு மேல் இழுக்கப்பட்ட தொடருக்கு, கிடு கிடுவென முடிவு நெருங்கிக்கொண்டு இருக்கிறது. எதையும் நம்ம்ம்ம்ம்ம்பி அனுமானிக்க முடியவில்லை. எதிர்பாராத முடிவுகளாக வந்து தாக்குகின்றன. அதற்கு உதாரணம் பாஸ்கரின் முடிவு. அவனை டென்ஷனின் உச்சிக்குக் கொண்டுபோய் அவன் வாயாலேயே அவன் செய்த கொலைகளைச்சொல்ல வைத்தது மட்டுமல்லாமல், போலீஸ், கோர்ட், கேஸ் என்று போனால் கொலைக்கான ஆதாரங்கள் எதுமின்றி கேஸ் நிற்காது என்பதாலோ என்னவோ, பாஸ்கரே தற்கொலை செய்துகொள்வதாகக் காட்டி அவன் சேப்டரை முடித்துவிட்டார் இயக்குனர். (ஆனால், தன் மாமனாரையும், மனைவி சங்கீதாவையும் தான் தான் கொன்றதாக பாஸ்கர் சொன்ன அரைக்கால் நொடியில் அலமேலு மனம் மாறி, தன் மகனைச் சாடுவது இன்னொரு தமாஷ்).

தொல்காப்பியன் அபியை விட்டு போயே போய்விட்டார். அபியின் திருமண வாழ்க்கையைக் காரணம் காட்டி, பழமைவாதியான கற்பகத்தால் ஒரு புனிதமான நட்பு முறித்து வீசப்பட்டு விட்டது. அவரும் ஏதோ ரயில், ரயில்வே ஸ்டேஷன் உதாரணங்களையெல்லாம் காரணம் சொல்லி விலகிப்போய் விட்டார். கடற்கரையில் நின்று பிரியாவிடை கொடுக்கும் அபியின் கன்னங்களில் வழிந்தது அவருடைய கண்ணீர் மட்டுமல்ல, பார்த்துக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கானோரின் கண்ணீரும்தான். அன்றைக்கு நாம் பார்த்தது ஒரு 'அண்ணாமலைக்கும் அன்வருக்குமான' புனித நட்பு, இன்றைக்கு 'அபினயாவுக்கும் தொல்காப்பியனுக்குமான' தெய்வீக நட்பு. ஆம், என்றைக்கும் மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப்தான்.

அபியின் புதுவீடு குடிபுகும் விழா, அசல் விழாவைத்தோற்கடிக்கும் விதமாக நடக்கிறது. மந்திரங்கள் எல்லாம் அப்படியே சொல்கிறார்களே. எல்லோரும் இருக்கிறார்கள், ஆனந்தியைத்தவிர. எப்படியும் வந்து குதித்துவிடுவார் என்று எதிர்பார்த்தோம். வரவில்லை. கற்பகத்தின் முகத்தில் முகம் கொள்ளாத சந்தோஷம். காரணம் அவர் குடும்பத்தில் ஒரு கரப்பான் பூச்சி கூட சாகடிக்கப்படவில்லை. ஆனால் மனைவி காஞ்சனா, மகன்கள் ஆதித்யா, அர்ஜுன், மருமகள் ரேகா என்று எல்லோரையும் பறிகொடுத்த ஈஸ்வரனும் பூஜையில் சந்தோஷமாக உட்கார்ந்திருக்கிறார். (எல்லோரையும் கொன்றது ஆதிதான் என்றபோதிலும்).

பூஜைமுடிந்து ஆர்த்தியும், மனோவும் ஒரு பிரச்சினையைக்கிளப்பி புறப்படத்தயாராகிறார்கள். அதாவது எல்லோரோடும் ஒன்றாக அதே வீட்டில் இன்னும் 'பூம் பூம் மாடாக' இருக்க மாட்டார்களாம். அவர்களுக்கென்று அபியக்கா தனியாக எதும் செய்யவில்லையாம். அதைப்பற்றி பின்னர் தனியாகப்பேசலாம் என்று அபியும் விஸ்வநாதனும் சொல்லியும் கேட்காமல் புறப்படத் தயாரானதால், அபி விஸ்வநாதனை அழைத்து அவள் செய்துவைத்திருக்கும் செட்டில்மெண்ட்டைப் படிக்கச்சொல்கிறாள். ஆர்த்திக்கென்று தனியாக ரூ.50 கோடியில் ஒரு நிறுவனம், மனோவுக்கு ரூ.60 கோடியில் 'கற்பகம் ஏஜன்ஸீஸ்', ஆனந்திக்கு ரூ.70 கோடியில் ஒரு டிஜிட்டல் பிரிண்ட்டர்ஸ், புதிய வீடு கற்பகம் பெயருக்கு. (அவருக்குப்பின் அது ஆர்த்திக்கும் மனோவுக்கும் சேர வேண்டுமாம்), விஸ்வநாதனுக்கும், கிருஷ்ணனுக்கும் மெட்டீரியல் சப்ளை நிறுவனம், தங்களையே நம்பியிருந்த ராஜேந்திரனுக்கு சைதாப்பேட்டை பழைய வீடும், ஒரு டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோரும், அபிக்கு 'அபி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' நிறுவனமும், அதில் வரும் மாதம் இருபதாயிரம் வருமானமும் மட்டும் (அதுகூட அனாதை இல்லக்குழந்தைகளுக்காக) எல்லாவற்றையும் படிக்க படிக்க எல்லோருக்கும் ஆச்சரியம், சந்தோஷம், நெகிழ்ச்சி.

(விஸ்வநாதன் சார், பத்திரத்தை இன்னும் நல்லா படிச்சுப்பாருங்க. 'கோலங்கள்' தொடரை தொடர்ச்சியாக பார்த்தவங்களுக்கு ஆளுக்கு ஒரு ஏக்கர் நிலம், அதைப்பற்றி கமெண்ட் எழுதினவங்களுக்கு ஒரு வீடு என்று எதுவும் எழுதி வச்சிருக்கப்போறாங்க).

ஏனோ தெரியவில்லை. விஸ்வநாதன் பத்திரத்தைப் படிக்க படிக்க, திரையில் நடந்து கொண்டிருந்த காட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக என் கண்ணை விட்டு மறைந்து போக, அதற்கு மாறாக, தோளில் பேக்'கைப்போட்டுக்கொண்டு, கடற்கரையில் அபியை விட்டு விலகி தூர தூரமாகப் போய்க்கொண்டேயிருந்த தொல்காப்பியன்தான் என் மனத்திரை முழுக்க நிறைந்திருந்தார், என் கண்கள் நீர்த்திரையிட்டு மறைத்த பின்னும்.

aanaa
12th December 2009, 10:22 PM
அதனால்தான் Sticky-யிலிருந்தும் திரியைக் கழட்டி விட்டாச்சு. :rotfl: :rotfl: :rotfl: :rotfl:

:banghead:

mr_karthik
21st December 2009, 03:52 PM
mudinjiruchA?

sollavE illai?

eppadi mudichAnga? (what way they ended the story?)
eppadi mudichAnga? (how they decided to end the serial?)

saradhaa_sn
24th December 2009, 06:49 PM
'கோலங்கள்' நிறைவடைந்தது......

என்ன ஒரு கவித்துவமான, கவிதை நயமான முடிவு. எதிர்பார்த்த அதே சமயம் எதிர்பாராத முடிவு.

அபி ஒவ்வொருமுறையும் தன் உறவுகள் தன்னைக் காயப்படுத்தும் போதெல்லாம் மன்னித்துக்கொண்டே இருக்கிறாள் என்று எண்ணினோம். ஆனால் உள்ளுக்குள் உடைந்துகொண்டே இருந்திருக்கிறாள். இன்னொருமுறை மனம் உடைந்தால் தாங்காது என்பது மட்டுமல்ல, எதிர்பார்ப்புக்களோடு வாழும் தன் உறவுகள் தன்னை எந்த நாளும் புரிந்துகொள்ளப் போவதில்லை என்ற விரக்தி, வேதனை, இவற்றால் உறுத்தப்பட்டவளாய் தான் நேசித்த, நேசிக்கும் வாழ்க்கை இதுவல்ல என்பதை உணர்ந்தவளாய் புறப்பட்டுவிட்டாள்.

இம்முறை தாயின் ஆறாகப்பெருகிய கண்ணீரும், தந்தையின் பாசம் நிறைந்த புலம்பல்களும் அவளது பயணத்தைத் தடை போட முடியவில்லை. தம்பி, தங்கையின் கெஞ்சலும், சித்தப்பாவின் வேண்டுகோளும் அவளை நிறுத்த முடியவில்லை. லட்சங்களை எண்ணி வாழும் உங்கள் வாழ்க்கை வேறு, லட்சியங்களைச்சுமந்த என் வாழ்க்கை வேறு என்று உணர்த்தியவளாய் புயலென புறப்பட்டுவிட்டாள். கார்களில் ஏறமாட்டாள் என்பது நாம் எதிர்பார்த்ததுதான். குறைந்த பட்சம் ஒரு ஆட்டோவில் ஏறிப்போவாள் என்று நினைத்தோம். ஆனால், நடையாக நடந்தாள். பின்னாலேயே விரட்டி வந்த உறவுகள், ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்டத்தில் நின்று விட்டனர், இனி அவளைத் தடுக்க முடியாது என்ற காரணத்தால்.

கடற்கரைக்கு வருகிறாள். எல்லாமே முடிந்துவிட்டது போன்ற ஒரு விரக்தி நிலை. தன் செருப்பில் ஒட்டியிருக்கும் தூசி கூட தனக்குச் சொந்தமில்லை என்பது போன்ற சூன்யம். நடந்து நடந்து ஒரு படகின் முனையில் சாய்ந்து அமர்ந்துவிட்டாள். கண்களில் ஆறாகப்பெருக்கெடுத்த கண்ணீர். நிச்சயம் அது தனது தூய நண்பனை நினைத்துத்தான் என்பது நமக்குப்புரிகிறது. கேமரா அப்படியே பின்னோக்கிப்போகிறது. 'வணக்கம்' போட்டுவிடுவார்களோ என்று நமக்குள் ஒரு பதைபதைப்பு. கேமரா மறுபக்கம் திரும்ப, அதே படகுமுனையின் மறுபக்கத்தில் அமர்ந்து தன் தோழியைப்பற்றி டைரி எழுதிக்கொண்டிருக்கும் தொல்காப்பியன்.....!!!!!.

எங்கோ தன் உறவுகளோடு இருப்பதாக தான் நினைத்துக்கொண்டிருக்கும் அபியை எண்ணியவாறு தொல்காப்பியன் எழ, தன்னைவிட்டு எங்கோ போய்விட்டதாக தான் எண்ணி ஏங்கும் தன் தோழனை நினைத்தவாறு அபியும் எழ, இதோ... இதோ... சந்திக்கப்போகிறார்கள் என்று நாம் கண்கள் இமைப்பதை மறந்து பார்த்துக்கொண்டிருக்க.....

ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் அந்தப்பார்வையில்தான் எத்தனை ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப்பறக்கின்றன...!!!. தன் செருப்பிலுள்ள தூசி கூட தனக்குச்சொந்தமில்லை என்று சற்றுமுன்தானே நினைத்தேன்... இல்லை... இல்லை... இப்போது இந்த உலகம் முழுவதும் எனக்குச்சொந்தம் என்ற பூரிப்பு முகமெல்லாம் பொங்க, தோழியின் முகத்தில் தெரியும் அந்தப்பூரிப்பு தொல்காப்பியனையும் தொற்றிக்கொள்ள.... அவர்களின் அந்த தூய நட்பின் ஆழத்தை நாம் ஆயிரம் வார்த்தைகளாலும் சொல்ல முடியாது.

காட்சி மாற்றம்.... மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளோடு, வளர்ந்த இந்த இரண்டு குழந்தைகளும் சேர்ந்துகொள்ள, தன்னலத்தைத்தூக்கியெறிந்த எங்கள் உலகம் வேறு என்று அவர்கள் மலர்ந்த முகங்கள் பறைசாற்ற....... நிறைவு.

கடந்த ஆறாண்டுகளுக்கும் மேலாக, விடுமுறை நாட்கள் தவிர மற்ற எல்லா நட்களும் சரியாக இரவு 9 மணிக்கு நம் வீட்டின் நடுக்கூடத்துக்கு வந்து நம்மோடு ஒட்டி உறவாடிய அபியும், தொல்காப்பியனும், ஆதித்யாவும், உஷாவும் மற்றுமுள்ளோரும் இனிமேல் வரமாட்டார்கள் என்பதே, நம் மனதில் ஒரு வெற்றிடத்தை உண்டாக்குகிறது. இந்த ஆறாண்டுகளில்தான் நம் வாழ்க்கையில் எத்தனை நிகழ்வுகள் நடந்தேறிவிட்டன..!. யார் யாரையெல்லாம் இழந்துவிட்டோம்..!. அத்தனையையும் மீறி, இரவு 9 மணியானால் 'அது கோலங்கள் நேரம்' என்று தமிழ் நாட்டில் மட்டுமல்ல, எங்கெல்லாம் சன் தொலைக்காட்சி பார்க்கப்படுகிறதோ அங்கெல்லாம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய தொடர், இனிமேல் இல்லை. திரையுலகிலிருந்து வந்து தொலைக்காட்சியில் தான் ஒரு புது அவதாரம் எடுத்திருப்பதை உணர்த்தும் வகையில் ஒலித்த "பெண்ணே எனது புது கோலம் எழுது" என்ற பாடல் இனி தொலைக்காட்சியில் ஒலிக்காது. எப்போது முடியும் என்று எண்ணியவர்களுக்கும், எப்படி முடியும் என்று எதிர்பார்த்தவர்களுக்கும் விடை சொல்லி, தொடர் விடைபெற்றுவிட்டது.....

அபினயாவாக வாழ்ந்த தேவயானி,
தொல்காப்பியனாக வாழ்ந்த (இயக்குனர்) திருச்செல்வம்
கற்பகமாக வாழ்ந்த சத்யபிரியா
ஈஸ்வரனாக வாழ்ந்த மோகன் சர்மா
ஆனந்தியாக வாழ்ந்த மஞ்சரி
ஆர்த்தியாக வாழ்ந்த ஷ்ரீவித்யா
ஆதித்யாவாக வாழ்ந்த அஜய்கபூர்
மனோவாக வாழ்ந்த ஷ்ரீதர்
தோழர் பாலகிருஷ்ணனாக ஒரு இனத்தின் பிரதிநிதியாக முழங்கிய ஆதவன்
திருவேங்கடமாக வாழ்ந்த ராமச்சந்திரன்
சாரதாக்களாக வாழ்ந்த வனிதா மற்றும் குயிலி
அலமேலுவாகவே அவதாரம் எடுத்த நளினி
பாஸ்கராக வாழ்ந்துகாட்டிய அபிஷேக்
கார்த்திக் ஆக வாழ்ந்த விஷ்வா
பாரதியாக வாழ்ந்த விஜயசாரதி
மேனகா மற்றும் செல்லம்மாவாக வாழ்ந்த பூர்ணிமா இந்திரஜித்
ரேகாவாக வாழ்ந்த நீலிமா
உஷாவாக சுடர்விட்ட தீபா வெங்கட்

மற்றும் ராஜேந்திரன், ராஜேஷ், கலா, ராஜாமணி, ரஞ்சன், முரளி, அனு, அஞ்சலி(கள்), காஞ்சனா, அர்ஜுன், கிரி, தில்லா, சங்கர பாண்டியன்(கள்), தேவராஜ் பாண்டியன், கிருஷ்ணன், விஸ்வநாதன் (ஆடிட்டர்), கங்கா, ராமச்சந்திரன், பரிமளாச்சாரி, சாந்தி, சிவதாஸ், பாதிரியார் (ராகவேந்தர்), தாரகை, உபேந்திரா, அன்வர்பாய், அந்தோனி (நட்ராஜ்), தாசய்யா (கோவி மணிசேகரன்), வெற்றிமாறன், குலோத்துங்க சோழன், சித்ரா...... இன்னும் சொல்ல மறந்த எத்தனை எத்தனை கதாபாத்திரங்கள் நம் வீட்டுக்குள் (அது பணக்காரர்களின் பளிங்கு மண்டபமோ அல்லது ஏழைகளின் குடிசையோ) சுற்றியலைந்தார்கள்.

மூன்று மணி நேரம் திரைப்படம் பார்த்தாலே அதன் தாக்கம் நம் மனதில் நிழலாடும்போது, ஒரு மணியல்ல, ஒரு நாளல்ல, ஒரு மாதமல்ல, ஒரு வருடமல்ல, ஆறு வருடங்கள் நம்முடன் வளைய வந்தவர்கள், திடீரென விடைபெற்றுப்போனது போல ஒரு வெறுமை, வெற்றிடம். நாளை முதல் வேறு தொடர் துவங்கலாம். இருந்தாலும் கோலங்கள் விட்டுச்சென்ற இடம் வெற்றிடமாகவே இருக்கும். அந்தப் பாத்திரங்கள் நம் மனதில் நீண்ட நாட்கள் நின்றிருப்பார்கள்.

நான் பெரிதும் மதிக்கும் எஸ்.சத்யா அவர்களால் துவங்கப்பட்ட இந்த கோலங்கள் திரி, பலராலும் தொடரப்பட்டு வெற்றிகரமாக முடிவை எட்டியுள்ளது. வடம் பிடித்து வழிநடத்திய அத்தனை அன்பு இதயங்களுக்கும் நன்றி.

ஆம்.... கோலங்கள் நிறைந்து விட்டது...

mr_karthik
11th September 2010, 03:40 PM
KOLANGAL thread acheived with 336831 viewers till now :D .

Surprise is, when the serial ended, the number of viewers were 225000+ only. After the end, more than 110000+ viewers have gome through it.

Did this serial end in TTN channel at Europe...??.