PDA

View Full Version : Gemini Ganesan - Romance King of Tamil Films



Pages : 1 2 3 [4] 5 6 7 8 9 10 11 12

Gopal.s
15th June 2015, 03:35 AM
வாசு,

உனது பதிவு வரும் என்று தெரியும். ராமுவிற்கு நான் பதிவு போடும் போது நினைவிலிருந்த இருவர் நீயும், சிவாஜி செந்திலும்.

நீ ஜெமினியை பற்றி சொன்னது முழுக்க சரி. ஆனால் அவர் சில வரிகளை முழுங்கும் விதம் அவர் நடிப்பை மேலும் மெருகேற்றும்.

அதை விட நான் ஜெமினியிடம் ரசிப்பது. அவர் தங்கவேலுவின் கல்யாண பரிசு காமெடி யில் தோதாக எடுத்து கொடுக்கும் விதம். one liners ,ஆமோதிப்பு,கிண்டல் என்று. கிழிப்பார்.

நீ சொன்ன கடைசி வரி புரிந்தது.

சிவாஜி செந்தில்- நன்றி.நாங்களெல்லாம் ஜெமினியின் ரசிகர்களும் கூட.

eehaiupehazij
15th June 2015, 09:46 AM
அன்புள்ள கோபால்
உங்களிடம் எல்லோரும் மகிழத் தக்க அளவில் நிறைய மாற்றங்கள்
உங்களைப் போன்ற வாசுவைப் போன்ற எழுத்து விற்பன்னர்கள், சின்னக்கண்ணன் போன்ற எழுத்துக் கலைவாணர்கள், முரளி, ராகவேந்தர் போன்ற ஜாம்பவான்களை ரோல் மாடல்களாகக் கொண்டேஎங்களைப் போன்ற ஆரம்பகட்ட பதிவர்களும் எங்கள் முயற்சிகளை தொடர்கிறோம்.
செஞ்சோற்றுக்கடன் போல நடிப்பு கர்ணனின் பல படங்களில் தனது மனமுவந்த பங்களிப்பை நல்கிய காதல் மன்னருக்கும் நம்மால் முடிந்த மன அஞ்சலி செலுத்தும் நோக்கில்தான் என்னுடைய பதிவின் குறிக்கோள் இருந்தது.
இப்போது ஒப்பிடமுடியாத தரத்தில் நீங்கள் இருவரும் வந்த பிறகு இந்தத் திரி இனி தொய்வடையாது என்ற நம்பிக்கை வித்தை ஊன்றியமைக்கு இருவருக்கும் நானும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்!! உங்கள் எழுத்து வன்மையை ரசித்துக்கொண்டே எனக்குத் தெரிந்த பாணியில் தொடர்கிறேன்

செந்தில்

தனிமையிலே இனிமை காண முடியுமா ?

https://www.youtube.com/watch?v=wzLxlNeWVPs

rajeshkrv
15th June 2015, 10:08 AM
ஜெமினி- சரோஜாதேவி ஜோடி தான் எனக்கு பிடித்த ஜோடி
சாவித்திரி அவர் மனைவியாகவே இருந்தாலும் இந்த ஜோடியில் ஒரு குறும்பு கொப்பளிக்கும்

eehaiupehazij
15th June 2015, 02:22 PM
Dear Rajesh Sir.

கன்னடத்துப் பைங்கிளி என்ற புகழாரத்துடன் தமிழ் திரையுலகத்தில் நுழைந்து ஒரு நிரந்தரமான இடத்தைத் தனது பன்முக நடிப்பாற்றலால் தககவைத்துக் கொண்ட அழகும் திறமையும் மிக்க நடிகை அபிநய சரஸ்வதி என்றும் அறியப்பட்ட என்றுமே ஸ்லிம் சரோஜாதேவி அவர்கள்!!
வெறும் பொழுதுபோக்குப் பட கிளாமர் கேர்ல் ஆக முடிந்துவிடாமல் புத்திசாலித்தனமான முடிவின் மூலம் நடிகர்திலகம் மற்றும் காதல் மன்னரின் திரைப்படங்களில் கதாநாயகருக்கு இணையான குணசித்திர கதாநாயகியாகவும் பரிமளிக்க முடிந்தது!
கல்யாண பரிசு அவரது நிரந்தரமான அடையாளம் !
பாலும் பழமும், பாகப் பிரிவினை, புதிய பறவை, ஆலய மணி, இருவர் உள்ளம், பணமா பாசமா, தாமரை நெஞ்சம், ஆடிப்பெருக்கு ....அவரது மேலான நடிப்புத்திறனின் சாட்சிகள்! காதல் மன்னருடன் இணைந்து நடித்த எல்லாப் படங்களிலும் கிளாமர் தவிர்த்து நெஞ்சங்களை வசீகரிக்கும் குடும்பப் பாங்கான நடிப்பில் மிளிர்ந்தவர் !!

கல்யாண பரிசு திரைப்படத்தில் காதல் மன்னருடன் அபிநயம் புரியும் சரஸ்வதி !


ஜெமினி- சரோஜாதேவி ஜோடி தான் எனக்கு பிடித்த ஜோடி
சாவித்திரி அவர் மனைவியாகவே இருந்தாலும் இந்த ஜோடியில் ஒரு குறும்பு கொப்பளிக்கும்
by Rajesh

https://www.youtube.com/watch?v=xOt5e6nbYI8

vasudevan31355
15th June 2015, 02:57 PM
செந்தில் சார், ஜி

http://i.ytimg.com/vi/lyavIBHZ-Xc/maxresdefault.jpg

எனக்குப் பிடித்த சரோ ஜெமினி இணைவுப் பாடல்களில் முதன்மையானது 'கல்யாணப் பரிசி'ல் வரும்

'ஆசையினாலே மனம்
அஞ்சுது கெஞ்சுது தினம்
அன்பு மீறி போனதாலே
அபிநயம் குறையுது முகம்'

வெகு அழகான பாடல்! பாடல் மட்டுமா! ஜெமினி அழகு என்றால் சரோ அன்று பூத்த ரோஜா மலர் போல மென்மை சிந்தும் அழகு.

யதார்த்த காதலர்களின் தத்ரூப, எல்லை மீறாத, கொள்ளை கொண்ட காதல் விளையாட்டுக்கள். கூண்டை விட்டு அவிழ்த்து விட்ட சிட்டுக்குருவிகளாய் தனிமையாய் சிறகடித்துப் பறக்கும் இளஞ் சிட்டுக்கள்.

பின்னால் நேரப் போகும் துன்பம் அறியாது துள்ளிக் குதித்து இளமை கொப்பளிக்க இருவரும் கொஞ்சும் அழகே அழகுதான்.

http://i.ytimg.com/vi/NaL6SFp18H4/sddefault.jpg

ஒரு இடம் கூட நில்லாமல் சரோ அங்கும் இங்கும் சுழன்று சுற்றியபடியே சுறுசுறுப்பு காட்டுவார். சுசீலா முடிக்கும் ஒவ்வொரு வரிக்கும் ராஜா 'ஆஹா, ஓஹோ, ஐ சி, ரியலி, ஸாரி' என்றெல்லாம் பதிலுரைப்பது பாயசத்தோடு சேர்ந்த பாதாம்.

சரோ கண்களாலும் கைகளாலும் வெட்டும் விதம் இருக்கிறதே! ஜெமினி வீழ்ந்தாரோ இல்லையோ நாம் வீழ்ந்தோம்.:) ஜெமினி அவருக்கே உரித்தான பாலோ -அப் பில் சரோவைத் தொடர்வது, தொடுவது, தொங்குவது :)என்று ரகளைதான்.

'தேரில்லாத கொடிதனில்
வாலில்லாத ஒரு அணில்'

எனும் போது சரோ கொடிக்குத் தன்னையும், வாலில்லாத அணிலுக்கு வாலிப ஜெமினியையும் சுட்டிக் காட்டும் சுட்டித்தனம் சுவையோ சுவை. குறும்பும், குறுநகையும், 'குறுகுறு' பார்வையும் அப்படியே குந்திக் கொள்ளும் நம் இதயங்களில்.

காதல் வேகத்தில் தன் கையைப் பிடிக்க வரும் ஜெமினியிடமிருந்து சற்று விலகி,

'ஆளிலாத நேரம் பார்த்து தாவிப் பிடிக்குது கையில்'

என்று சரோ மென்மையாய் பொய்க் கண்டிப்பு காட்டி சுட்டிக் காட்டுகையில் ஜெமினி சரோவின் கையை விரல்களால் தொட்டு 'ஸாரி' என்று சிரிப்பதை யார் ரசிக்காமல் இருக்க முடியும்?

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355036/Aasayinale%20Manam%20From%20Movie%20Kalyana%20Pari su%20-%20YouTube.mp4_20150615_144252.335.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355036/Aasayinale%20Manam%20From%20Movie%20Kalyana%20Pari su%20-%20YouTube.mp4_20150615_144252.335.jpg.html)

சரோ பின்னழகுக்கு மிகவும் புகழ் பெற்றவர் என்பது சகலரும் உணர்ந்ததே. அவரது பின்னழகு நடை பார்த்து பித்துப் பிடித்தவர் பல பேர். இந்தப் பாடலில் இன்னும் பிரமாதம். வழக்கமான நடை இல்லாமல்

'மாலை என்ற நேரம் ஒன்று
ஆளை மீறுதே'

என்று பாடியவாறு பின் பக்கம் நின்று ஒரு அபிநய போஸ் ஒன்று தருவார். அப்போது புரியும் இவர் ஏன் 'அபிநய சரஸ்வதி' என்று பட்டம் வாங்கியிருக்கிறார் என்று. இடது காலை பாதி மடக்கியவாறு இரு கைகளையும் மேலே தூக்கி, இடுப்பொடித்து, பின் பக்கமாக இவர் காட்டும் உடல் பாவம்....அடடா! அப்போதைய இளைஞர்கள் பாவம்.:) அற்புதமான போஸ் அது.

அது மட்டுமா? பாஸ்கர் வசந்தி இவர்களுடைய இரண்டு சைக்கிள்களும் கூட எவ்வளவு அழகாக ஜோடி போட்டு இவர்களைப் போலவே காதல் களிநடம் புரிகின்றன! பாருங்கள்.

உல்லாசபுரியில் உச்சக் காதலில் தனை மறந்து காதலர்கள் குறும்பு பேசும் கவிதை கானம்.

இளமை பொங்க இயக்கிய ஸ்ரீதருக்கு இதயம் நிறைந்த பாராட்டுக்கள்.

சர்க்கரைப் பாகைக் காதில் கரைத்து ஊற்றிய சுசீலாவிற்கும், ராஜாவுக்கும், காதுகளிலேயே தங்கி விட்ட இனிமையான இசைக்கும், வைர வரிகளுக்கும்

இன்னும் பாராட்டுக்கள்.

கிண்டி விட்ட 'ஜி'க்கும் தான்.:)


https://youtu.be/NaL6SFp18H4

vasudevan31355
15th June 2015, 02:59 PM
https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/5/5c/Kalyana_Parisu_poster.jpg/220px-Kalyana_Parisu_poster.jpg

செந்தில் சார்,

என்ன ஒற்றுமை! கடந்த இரண்டு மணி நேரமாக 'ஆசையினாலே மனம்' பதிவு ரெடி செய்து கொண்டிருந்தேன். முடித்து விட்டு சப்மிட் கொடுத்துப் பார்த்தால் அதே பாடல் தங்கள் பதிவாக வந்திருக்கிறது. உள்ளங்கள் ஒன்று பட்டால் ரசனையும் ஒன்று படுவது இயற்கைதான் என்றாலும் இன்னும் மீள முடியாத ஆச்சர்யமே!

RAGHAVENDRA
15th June 2015, 03:21 PM
ராஜேஷ்
அருமையான கோணத்தில் தங்கள் கருத்து இத்திரியைப் பயணிக்க வைத்துள்ளது
ஜெமினி கணேசன் சரோஜா தேவி இணையில் வெளிவந்த படங்கள் எல்லாமே மறக்க முடியாதவை, குறிப்பாக பாடல்கள் காலத்தைக் கடந்து நிற்கும் வகையில் அமைந்து இன்றும் நம் நெஞ்சில் தனி ஈர்ப்பை உண்டாக்குகின்றன.
இவர்கள் இணையில் வெளிவந்த சில பாடல்களைப் பார்ப்போமே..

இவர்கள் இணையில் எனக்கு மிக மிக பிடித்தவற்றில் கைராசி, எல்லோரும் இந்நாட்டு மன்னர், ஆடிப்பெருக்கு, வாழவைத்த தெய்வம் என பல படங்களில் பாடல்கள் அமைந்துள்ளன.

ஏனோ ஜெமினி சரோஜாதேவி என்றால் கல்யாண பரிசை தாண்டி யாரும் செல்வதில்லை. உண்மையிலேயே சொல்லப் போனால் அதற்கு சற்றும் குறையாத வகையில் அமைந்த படம் கைராசி. ஒவ்வொரு காட்சியும் அற்புதமாக செதுக்கப் பட்டிருக்கும். கோவர்த்தன் அவர்களின் பெயரை காலமெல்லாம் சொல்லும் படம் கைராசி.

அதுவும் குறிப்பாக காத்திருந்தேன் காத்திருந்தேன் பாடல், இசையரசியின் ஈடு இணையில்லா குரலில் நம்மை அப்படியே கட்டிப் போட்டு விடும்.

https://www.youtube.com/watch?v=Y3PQeusAmP4

RAGHAVENDRA
15th June 2015, 03:23 PM
இதே போல் இன்னோர் சூப்பர் ஹிட் பாடல்...

இதுவும் இசையரசியின் குரலே.. திரை இசைத் திலகத்தின் இசையில்..

காதை தீட்டிக் கொள்ளுங்கள்.. காதல் கதை பேச வருகிறார் ... கேட்கக் கேட்க ஆனந்தமே..

வாழ வைத்த தெய்வம் படத்திலிருந்து..

https://www.youtube.com/watch?v=YjRfRxT2hCY

RAGHAVENDRA
15th June 2015, 03:27 PM
திரை இசைத் திலகத்தின் இசையில் அமைந்த சில வேகத் தாளக்கட்டுப் பாடல்களே இன்று குத்துப் பாடல்களுக்கெல்லாம் முன்னோடியாய் விளங்குகின்றன. இதோ பாருங்கள். இந்த குட்டியை ஜெமினி கணேசன் கலாய்ப்பதை..

வாழ வைத்த தெய்வம் படத்தில் சின்னாளப் பட்டி சேலையைக் கட்டி வந்தாளே ஒரு குட்டி..

பாடகர் திலகத்தின் குரல்... ஜெமினிக்கு மட்டும் பொருந்தாமல் போய் விடுமா என்ன..

https://www.youtube.com/watch?v=SVv8ykcGf54

RAGHAVENDRA
15th June 2015, 03:34 PM
இந்த மாதிரி ஏகாந்தமான வேளையில் காதலர்களுக்கு ஆசை ஏன் மேவாது...

மனம் எனும் வானிலே மழை மேகமாகவே இவர்களுக்கு ஆசைகள் மேவிடுதாம்...

எல்லோரும் இந்நாட்டு மன்னர் படத்திலிருந்து ஏ.எம்.ராஜா இசையரசி குரல்களில் டி.ஜி.லிங்கப்பா இசையில்

https://www.youtube.com/watch?v=6hvmh7P7MoA

eehaiupehazij
15th June 2015, 03:49 PM
செந்தில் சார்,

என்ன ஒற்றுமை! கடந்த இரண்டு மணி நேரமாக 'ஆசையினாலே மனம்' பதிவு ரெடி செய்து கொண்டிருந்தேன். முடித்து விட்டு சப்மிட் கொடுத்துப் பார்த்தால் அதே பாடல் தங்கள் பதிவாக வந்திருக்கிறது. உள்ளங்கள் ஒன்று பட்டால் ரசனையும் ஒன்று படுவது இயற்கைதான் என்றாலும் இன்னும் மீள முடியாத ஆச்சர்யமே!

வாசு சார்
என் பதிவில் நான் சரோவை (சி.க!) முன்னிலைப்படுத்துவற்தகாகவே டக்கென்று என் மனதில் தோன்றிய அந்த பாடலை இணைத்தேன்!
ஆனால் உங்களது வண்ணத்தோகை விரித்தாடும் மயில் பதிவு அந்தப் பாடல் காட்சிக்கே புது அர்த்தங்களையும் அழகையும் தந்து விட்டதே !!
வாசு என்னும் பரத நாட்டிய தாரகை மோகனாம்பாளின் முன் நான் ஒரு தில்லாலங்கடி டப்பாங்குத்து ஆட்டமாடும் ஜில்ஜில் ரமாமணியாகவே உணர்கிறேன் !!
உங்கள் வார்த்தை சுரங்கள் நீங்கள் வார்த்தை சுந்தரர் என்பதை எப்போதும்போல நிரூபிக்கின்றன!!
இனி கோபால் வேறு சிக்கலாராக மாறி அவர் கோணத்தில் இதே பாடல் காட்சியமைப்பை உங்களுக்கு போட்டியாக வாசித்தால் நலந்தானே!!!
இந்த இடத்தை அடைய நீங்களிருவரும் எத்தனை படிகள் ஏறி சென்றிருக்கிறீர்கள் என்று அண்ணாந்து பார்த்து வியப்பில் வாயடைக்க வைக்கிறீர்கள்
பெருமைக்குரிய நண்பர்களே !!

chinnakkannan
15th June 2015, 04:02 PM
எல்லாரும் இங்கிட்டு வந்தாக்க நான் எங்கிட்டு ப் போறது..அதான் வந்துட்டோம்ல

அதுல பாருங்கோ ஆணுக்கும் இடை இருக்கு பொண்ணுக்கும் இருக்கு

ஆணோட வெய்ஸ்ட அவனே கண்டுக்காம தொப்பை போட்டுருவான்..ஆனா பொண்ணுங்களுக்கு மட்டும் அந்த இடைப் பிரதேசம் ஒல்லியா இருக்கணுமாம்.

அதே மாதிரிப் பாத்தீங்கன்னாக்க அந்தக்காலத்துல அழகான் ராட்சஸிகள்ளாம் தனது காதலனையோ கணவனையோ மயக்குதற்கு அணியும் அணிகலன் மேகலை எனப்படும் ஒட்டியாணம்..

வேகமாய் ஒடியாமல் வெட்கமுடன் நிற்கத்தான்
மேகலை சாதிக்கு மே..

இடையழகைக் கூட்ட இடையிலே இஃதே
தடையை மெலச்சொலும் தான்..

அப்படியா..

ராகவேந்தர் ஜி..கைராசில அன்புள்ள அத்தான்ல இப்படித் தான் சர்ரூ..

இவ்வளவு சொல்லியும் நான் வராவிட்டால்ங்கறா மாதிரி ஜெ சொல்ல

பொன்மணி மேகலை பூமியில் வீழும்
புலம்பும் சிலம்பிரண்டும் எனை விட்டு ஓடும்
கைவளை சோர்ந்துவிழும் கண்களும் மூடும்
காண்பவர் உங்களைத்தான் பழிசொல்ல நேரும்

அதாவது ஜெமினி இல்லாமல் சர்ரூ இளைச்சுடுவாங்களாம் (கற்பனைதான்.. நிஜத்துல நடக்கிற காரியமா என்ன)
அவர் நினைப்பினிலேயே மோட்டு வளையைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு சிறுமூச்சு விட்டு
பால் பழம் பணியாரம்னு எதுவுமே சாப்பிடாம சீ போன்னு இருந்தா என்ன ஆகுமாம்

இடையும் மெலிஞ்சு மேகலை கீழே விழுந்துடுமாம்

மெல்லிசா இளம் வாழைத் தண்டாட்டம் வெளிர் மஞ்சள் நிறத்துல கண்ணைக் கொத்தும் இளங்கன்னியின் கால்களாகப்பட்டது
இன்னும் இளைத்து க் குச்சியா இளைக்க சிலம்பு கழண்டு ஓஓஒடுமாம்

கைவளையும் சோர்ந்துவிடும் .. கண்ணுக்குக் கீழ ஹாய் அப்படின்னு கவலை வந்து கண்மை மாதிரி கருவளையம் போட்டுடுமாம்..

ஏண்டாப்பா ஜெமினி..இப்படி சர்ரூவப் பண்ணிட்டியேடான்னு பார்க்கறவால்லாம் பாட்டி மாதிரி ஜெமினிகிட்டயே குசலம் விசாரிப்பாங்களாம்.. நான் சொல்லலை சர்ரூ சொல்றாங்க :)

அன்புள்ள அத்தான் வணக்கம்

https://youtu.be/sH4wqRdL5bM

சர்ரூவோட நர்ஸ் டிரஸ்ஸப் பத்தி சொல்லவே இல்லையே ராகவேந்த்ராசார் :)

chinnakkannan
15th June 2015, 04:10 PM
எல்லாப் படங்களிலும் கிளாமர் தவிர்த்து நெஞ்சங்களை வசீகரிக்கும் குடும்பப் பாங்கான நடிப்பில் மிளிர்ந்தவர் !!//ஏதாவது படத்துல கிளாமரா நடிச்சுருக்காரா என்ன..

//இப்போது ஒப்பிடமுடியாத தரத்தில் நீங்கள் இருவரும் வந்த பிறகு இந்தத் திரி இனி தொய்வடையாது என்ற நம்பிக்கை வித்தை ஊன்றியமைக்கு இருவருக்கும் நானும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்!! // அடப்பாவி சி.செ..இப்படியா சொல்றது..ம்ம் அடுத்த பாகத்தை ஆரம்பிக்க என்னைக் கூப்பிடுவீர்னு நெனச்சேன்.. சரி சரி .. நான் மம கா போறேன்..:)

eehaiupehazij
15th June 2015, 04:10 PM
ராகவேந்திரா சார்
இன்றும் நேற்றும் ஒரே ஆனந்த அதிர்ச்சியலைகள் ஜெமினி திரியில்!!
உங்கள் அதிரடி வரவுப்பதிவுகள் காதல் மன்னரின் புகழ் மகுடத்தில் நடிகர்திலகம் பதித்திட்ட வைர கற்களே!!
களை மண்டிவிடுமோ என்று அஞ்சிய திரியில் களை கட்டிவிட்டதே !! நன்றிகள்!!
அன்புடன் மகிழ்வுடன் செந்தில்

chinnakkannan
15th June 2015, 04:14 PM
அடுத்து பார்த்தால் பார்க்கும் சிரித்தால் சிரிக்கும் பாட திரு வாசுவை அழைக்கிறேன்.. :)

eehaiupehazij
15th June 2015, 04:20 PM
எல்லாப் படங்களிலும் கிளாமர் தவிர்த்து நெஞ்சங்களை வசீகரிக்கும் குடும்பப் பாங்கான நடிப்பில் மிளிர்ந்தவர் !!//ஏதாவது படத்துல கிளாமரா நடிச்சுருக்காரா என்ன..

//இப்போது ஒப்பிடமுடியாத தரத்தில் நீங்கள் இருவரும் வந்த பிறகு இந்தத் திரி இனி தொய்வடையாது என்ற நம்பிக்கை வித்தை ஊன்றியமைக்கு இருவருக்கும் நானும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்!! // அடப்பாவி சி.செ..இப்படியா சொல்றது..ம்ம் அடுத்த பாகத்தை ஆரம்பிக்க என்னைக் கூப்பிடுவீர்னு நெனச்சேன்.. சரி சரி .. நான் மம கா போறேன்..:)

சின்னக் கண்ணன் சார் !!
உங்கள் ராக் அண்டு ரோல் இல்லாமல் இந்தத் திரி உருளுமா ?!
மகிழ்விக்க எல்லா ஜாம்பவான்களும் கூடி விட்டீர்கள் ! இனி (ர)களைதான்!!

RAGHAVENDRA
15th June 2015, 04:32 PM
சி.க. சார்
சரோ - நர்ஸ் ... இரண்டு படங்கள் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வந்தவை .. பாலும் பழமும், கை ராசி - இரண்டுமே மறக்க முடியாதவை.. பாத்திரம் ஒன்றானாலும் பண்டம் வேறாயிற்றே...சரோவைப் பொறுத்த மட்டில் மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பாலும் பழமும் படத்தில் முந்துகிறார்.

RAGHAVENDRA
15th June 2015, 04:33 PM
சி.செ. சார்
ராமு படத்தைப் பற்றிய கோபாலின் பதிவே இந்த வேகத்திற்குக் காரணம் என்றாலும் ராஜேஷும் ஒரு காரணம்.. ஜெமினிக்கு சிறந்த ஜோடியான சரோவை ... சினிமாவில் தான்... பற்றி துவக்கி விட்டாரே..

RAGHAVENDRA
15th June 2015, 04:37 PM
எங்கள் ஆஸ்தான கதாநாயகி தேவிகா வுடன் எங்கள் தலைவர் நடித்திருக்க வேண்டும் என நான் விரும்பிய சில பாடல்கள், ஜெமினிக்கு சென்று விட்டன. அதில் குறிப்பிடத்தக்கது வாழ்க்கைப் படகு. தலைவர் நடித்திருந்தால் அதன் பரிமாணமே முற்றிலும் வேறு மாதிரியிருந்திருக்கும். சிலர் கூறலாம், ஜெமினிக்கு சிறந்த வகையில் பேர் தந்தது என்று.. இல்லையென சொல்ல வில்லை. இருந்தாலும் வாழ்க்கைப் படகு படம் நடிகர் திலகம் நடித்திருந்தால் இன்னும் நம் நெஞ்சில் ஆழமாக ஊடுருவியிருக்கும்.

இதே போல் நான் மிகவும் விரும்பிய இன்னோர் பாடல் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பாடல்.. இந்தப் பாடல் நம் ஆஸ்தான ஜோடிக்கு கிடைக்கவில்லையே என பல முறை வருந்தியிருக்கிறேன்.

https://www.youtube.com/watch?v=2fnEp2K9gUs

இப்பாடல் வரிகள் சாகாவரம் பெற்றவை. காதலின் மகிமையை உணர்த்திய மிகச் சிறந்த பாடல்..

adiram
15th June 2015, 07:09 PM
டியர் சின்னக்கண்ணன் சார்.

அத்தி பூத்தாற்போல எப்போதாவது தனித்து இசையமைக்கக் கூடிய ஆர்.கோவர்த்தனம் அவர்களின் கைவண்ணத்தில் உருவான "அன்புள்ள்ள அத்தான் வணக்கம்" பாடல் வரிகளைத்தந்து பரவசத்தில் ஆழ்த்தி விட்டீர்கள்.

ராமச்சந்திர பத்தரின் திருமணப் பந்தலில்தான் இப்பாடலை முதன்முதல் கேட்டேன் கேட்டதும் (தேங்காய் சீனிவாசன் பாணியில்) 'பச்ச்ச்சக்'கென்று மனதில் ஒட்டிக்கொண்டது. இசைத்தட்டின் மறுபக்கம் 'காதலெனும் ஆற்றினிலே கன்னியராம் ஓடத்திலே' திருத்துறை பூண்டி பஸ் ஸ்டாண்டில் டீக்கடையில் கேட்டது. 'காத்திருந்தேன் காத்திருந்தேன்' பாடல் நண்பர்களோடு ஆற்றில் குளிக்கப் போகும்போது யார் வீட்டு ஜன்னல் வழியாகவோ வானொலியில் கசிந்தது. ஜெமினி - சரோ நல்ல ஜோடிதான்.

adiram
15th June 2015, 07:19 PM
டியர் ராகவேந்தர் சார்,

வாழ்க்கைப்படகு படத்தின் இன்னொரு அழகான வளைகாப்புப் பாடல் "தங்கமகள் வயிற்றில் பிஞ்சு மகள் உருவம் தளிராய் வளருதடி" . கேட்கும்போதே மனதை குதூகலிக்க வைக்கும்.

ஐடியா,.... யாரவது மதுர கானம் திரியில் 'வளைகாப்புப் பாடல்கள்' என்ற தொடரை துவங்கலாமே. (நான் துவங்கலாம்தான். ஆனால் வீடியோ இணைக்கும் வித்தையெல்லாம் தெரியாத பஞ்சத்துக்கு ஆண்டி நான்).

eehaiupehazij
16th June 2015, 12:37 PM
வாழ்க்கைப் படகு (1965) சீரான கதையமைப்புடன் இனிமையான பாடல்களுடன் பொருத்தமான நடிகர்களுடன் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம்

காதல் மன்னரைப் பொறுத்தவரை 'நேற்றுவரை நீ யாரோ....'' மற்றும் '' சின்ன சின்ன கண்ணனுக்கு....'' பாடல்கள் பி பி ஸ்ரீனிவாசின் குழைவில்முத்திரைப் பாடல்களாக அமைந்தன!!

இப்பாடல்களின் விவரிப்பு என் எல்லைக்கு அப்பாற்பட்டது நண்பர்கள் வாசு, கோபால்,ராகவேந்தர் மற்றும் சின்னக்கண்ணன் அலசல்கள் சுவை கூட்டட்டும் !!

சுமைதாங்கி, வாழ்க்கைப்படகு படங்கள் ஜெமினிக்கு தேவிகாவும் பாந்தமான ஜோடியே என்பதை உணர்த்தின !

உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே .......வரிகள் அதன் காட்சியமைப்பு மனதுக்கு இதமான வருடலே!

https://www.youtube.com/watch?v=hJVHq886BOE

காதல் மன்னர் கால்களை மடக்கி பாலகனை குதிரையேற்றி கொஞ்சும் காட்சி என்றும் மனதில் பசுமரத்தாணியே!
Dedicated to our Chinnak Kannan!!

https://www.youtube.com/watch?v=5p4AUtrmVVU

இதயத்தில் நீ திரைப்படத்திலும் ஒடிவது போல் இடை இருக்கும் பாடல் காட்சியில் ஜெமினி-தேவிகா கெமிஸ்ட்ரி நன்றே!

https://www.youtube.com/watch?v=0a1Yr4UcxWg

eehaiupehazij
17th June 2015, 09:52 PM
Gap filler : vaazhkai vazhvadharke starring GG!


வாழ்க்கை வாழ்வதற்கே என்பது ஓர் மறுக்க இயலாத வாழ்வியல் அடிப்படை !
காதல் மன்னரின் சரோ / சர்ரூவுடனான திரை வாழ்க்கையில் 10 + 1 = 11 அவ்வளவே!!

https://www.youtube.com/watch?v=qC_IXGS9SFY

ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி.......கவன ஈர்ப்பு !

https://www.youtube.com/watch?v=Ik38lU80tMg

eehaiupehazij
18th June 2015, 01:30 PM
காதல் மன்னரின் விசிலாவர்தனம் !!

GG's song sequences with whistle interludes!!

https://www.youtube.com/watch?v=0qV8W1z6ZZo

https://www.youtube.com/watch?v=eprrnrKgYnU

eehaiupehazij
18th June 2015, 02:35 PM
பாலசந்தரின் சீரிய இயக்கத்தில் ஜெமினியின் பண்பட்ட நடிப்பில் வெளிவந்த சிறந்த கதையமைப்பு கொண்ட திரைக்காவியம் புன்னகை.
எதிர்கால வாழ்க்கை இலட்சியத்துக்கு நம்பிக்கையூட்டும் வரிகளை உள்ளடக்கிய பாடல் !

https://www.youtube.com/watch?v=TwiWbFoDyEY

eehaiupehazij
18th June 2015, 08:17 PM
இயக்குனர் ஸ்ரீதரின் பிரதிபலிப்பான இயக்குனர் சி வி ராஜேந்திரன் அவர்களுக்கு காதல் மன்னரின் திரி சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
அவர் இயக்கிய உனக்காக நான் (1976) திரைப்படத்தில் நடிகர்திலகத்துடன் இணை கதாநாயகராக ஜெமினி சிறப்பான பங்களிப்பை நல்கியிருந்தார் !!

https://www.youtube.com/watch?v=f_EQYsvrL1I

eehaiupehazij
20th June 2015, 12:24 AM
காதல் மன்னரின் அடிப்படைக் கேள்விகள் காதல் வேள்விகளே !! GG's FAQ Basics!!
(நடிகர்திலகம் திரி கான்செப்டின் இணைப்பதிவு)

மனிதன் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறையும்வரை வாழ்க்கை என்பது என்னவென்று அறிந்திட காதல் வாழ்வின் அர்த்தம் புரிந்திட அவனுள் உறையும் அடிப்படைக் கேள்விகள் யார் ), என்ன? (What?), ஏன்?எதனால்? ( Why?), எங்கே (Where?), எப்படி ( How?), எது (which), எதற்காக (What for?), யாருக்காக (for whom?).........

இதற்கெல்லாம் நமது காதல் குரு கேட்கும் கேள்விகளுக்கு விடையளித்தாலே போதுமே !?
பகுதி 1 : யார்? (Who?) யாரை யாருக்காக

யார் சிரித்தால் என்ன?

https://www.youtube.com/watch?v=zUQurTWUJuM

யார் யார் யாரவள் யாரோ ?

https://www.youtube.com/watch?v=6e_llk_6_7g

நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ ..?

https://www.youtube.com/watch?v=PBE9CNqHnbM

....எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ ....

https://www.youtube.com/watch?v=9ZghfWkD8gA

Gopal.s
20th June 2015, 06:47 AM
ஒரு குழப்பமான மன நிலையை ஜெமினி அளவு இயல்பாக சித்திரித்த நடிகர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். பார்த்தால் பசி தீரும் படத்தில் சாவித்திரி உயிரோடிருக்கும் உண்மை உணர்ந்து ,அவர் நடிக்கும் காட்சிகள். பிரமை பிடித்தது போல ,தன்னிலை மறந்து ,Incoherent ஆக,காமிரா பிரக்ஞை இல்லாமல் ,அவர் காட்டும் நடிப்பு, எக்கால நடிகர்களுக்கும் காமிரா உணர்வு இல்லாமல் நடிப்பது எப்படி என்ற பாடம்.இப்போது அப்படி நடிக்கும் ஒரே நடிகர் மோகன்லால் மட்டுமே.

Gopal.s
20th June 2015, 06:48 AM
அடுத்து ,என் மனதுக்கு பிரியமான மிஸ்ஸியம்மா.

eehaiupehazij
20th June 2015, 11:51 AM
ஒரு குழப்பமான மன நிலையை ஜெமினி அளவு இயல்பாக சித்திரித்த நடிகர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். பார்த்தால் பசி தீரும் படத்தில் சாவித்திரி உயிரோடிருக்கும் உண்மை உணர்ந்து ,அவர் நடிக்கும் காட்சிகள். பிரமை பிடித்தது போல ,தன்னிலை மறந்து ,Incoherent ஆக,காமிரா பிரக்ஞை இல்லாமல் ,அவர் காட்டும் நடிப்பு, எக்கால நடிகர்களுக்கும் காமிரா உணர்வு இல்லாமல் நடிப்பது எப்படி என்ற பாடம்.இப்போது அப்படி நடிக்கும் ஒரே நடிகர் மோகன்லால் மட்டுமே.

கோபால் உங்கள் தனித்துவ வர்ணனைக்குப் பொருந்தும் நடிகர்திலகம் பாடும் காணொளி இதுதான் என்று எண்ணுகின்றேன்!
சௌகார் காபி கொண்டுவரும்போது ஒரு சலிப்பான வேதனையில் அடிபட்டு சுருங்கிய முகபாவம் காட்டுவார் ஜெமினி !!

https://www.youtube.com/watch?v=Mkfh6CIBLE4

மோகன்லாலின் திருஷ்யம் உங்களை மிகவும் கவர்ந்துவிட்டது என்று எண்ணுகிறேன் !

https://www.youtube.com/watch?v=eMASubc1y_k

Gopal.s
20th June 2015, 12:05 PM
கோபால் உங்கள் தனித்துவ வர்ணனைக்குப் பொருந்தும் நடிகர்திலகம் பாடும் காணொளி இதுதான் என்று எண்ணுகின்றேன்!
சௌகார் காபி கொண்டுவரும்போது ஒரு சலிப்பான வேதனையில் அடிபட்டு சுருங்கிய முகபாவம் காட்டுவார் ஜெமினி !!



இது மட்டுமல்ல. முன்-பின் உள்ள சிலகாட்சிகளிலும்.

adiram
20th June 2015, 03:52 PM
கோபால் சார்,

பார்த்தால் பசி தீரும் படத்தில் இறந்துபோனதாக கருதப்பட்ட முதல் மனைவி உயிருடன் இருப்பதை அறிந்தது முதல் அவர் ஒருமாதிரியான மனநிலையிலேயே இருப்பார். அதனால்தான் சௌகார் கேட்கும் கேள்வி ஒன்றுக்கு, (பார்வையற்ற சாவித்திரியை நினைத்தவாறே) "டாக்டரிடம் காட்டினால் கண் பார்வை சரியாயிடும்னு சொன்னாங்களே" என்பார்.

இதே போல ஒரு சிச்சுவேஷன் 'இருகோடுகள்' படத்திலும் வரும். இறந்துபோனதாக கருதப்பட்ட முதல் மனைவி உயிருடன் இருப்பதை அறிந்தது முதல் அவர் ஒருமாதிரியான மனநிலையிலேயே இருப்பார். ஆனால் இரண்டுக்கும்தான் எத்தனை வேறுபாடு.

இரண்டு பெண்கள் டாமினேட் செய்த அப்படத்தில் அமைதியாக ஸ்கோர் அடிப்பார். ஜெமினி இப்படியென்றால், சௌகாரின் நடவடிக்கைகளை எல்லாம் ஜெயந்தி அலட்டிக்காமல் 'ஜஸ்ட் லைக் தட்' பாஸ் பண்ணி போய்க்கொண்டே இருப்பார்.

Russellrqe
20th June 2015, 05:14 PM
''கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது.''
மக்கள் திலகம் எம்ஜிஆர் .

அனந்தராமன் என்கிற திரு ஆதிராம் அவர்களே
உங்கள் விளக்கத்தை படித்தேன் . கடந்த 8 ஆண்டுகளாக எல்லா திரிகளையும் படித்தவன் என்ற முறையில்
எனக்குள் எழுந்த சில கேள்விகளுக்கு பதில் இது வரை கிடைக்கவில்லை .இருந்தாலும் உங்களுடைய பதிவை மேற்கோள் காட்டி என்னுடைய பதிவினை உங்கள் முன் வைக்கிறேன் .

''என்னுடைய பதிவுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாதபோது' - ஆதிராம் 1
என் பதிவு .1
நீங்கள் அப்படியென்ன உலகத்தில் யாரும் கேட்காத சட்ட கேள்விகள் கேட்டு விட்டீர்கள் உங்களுக்கு பயந்து மற்றவர்கள் தப்பிக்க உபாயம் தேடுவதற்கு.

''இதற்கு கல்நாயக் போன்ற சிலர் விளக்கம் அளித்திருக்கிறார்கள்'' - ஆதிராம் -2
என் பதிவு -2
நீங்கள் சொல்பவரே நீங்கள்தான் என்று சொல்கிறார்கள். அதுவும் நான் சொல்லல அய்யா!அதுவும் உங்கள் திரியிலேயே பலர் சொல்லி நான் படித்திருக்கிறேன். அது உண்மையாய் இருந்தால் உங்களுக்கு நீங்களே விளக்கம் கொடுத்துக் கொள்வது போல ஆகி விடுமே! அது உண்மையில்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பமும் இல்லை இல்லை உங்கள் விருப்பமும். ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.

நீங்களே ஒரு பெயரில் பதிவிட்டு ஒரு கால் மணி நேரமோ அரை மணி நேரமோ சென்றபின் நீங்களே உங்களுக்குண்டான வேறு பெயரில் (பெயர்களில்) உங்களுக்கு லைக்குகள் போட்டுக் கொள்கிறீர்களாமே! சிரிக்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.

ஆனால் நான் கூட பல சமயங்கள் பார்த்திருக்கிறேன். who is online பார்க்கும் போது நீங்கள் குறிப்பிட்ட அந்த வேறு ஒருவரும் பச்சை விளக்கில் இருக்கிறார் அடுத்த வினாடி உங்கள் பெயர் லாகின் ஆகி பச்சை விளக்கில் மின்னுகிறது. உடன் நாயகர் லாக்-ஆப் ஆகி பச்சை விளக்கு அணைகிறது. அப்புறம் உங்களுடையது அணைந்து பரணி சாம்ராஜ்யம் என்று லாகின் ஆகி விளக்கு எரிகிறது.
இதுமட்டுமல்லாமல் 'ஊர்வசி', கிரிஜா என்று பொம்பளைகள் பெயரில் அடிக்கடி வேறு உங்கள் பின்னாலேயே விளக்குகளாய் லாகின் ஆகி மாறி மாறி மின்னி மின்னி அணைகின்றன. நண்பர்கள் தங்கள் 'எண்ணங்கள் எழுத்துக்களை' சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை சார். நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.

எழுத்தாளர் சுஜாதா ஆண் என்று அனைவருக்கும் தெரியும்.ஆனால் பெண் பெயரில் எழுதுவார். ஆனால் அவர் பெண்ணாக மாற முடியுமா? ஜீன்ஸ் பேன்ட் போட்டு அத்தை மகனுடனோ சித்தி பையனுடனோ பின்னாடி பைக்கில் கால் தூக்கிப் போட்டு எறி குஜாலாக படம் பார்க்க போக முடியுமா? குளித்துக் கொண்டிருக்கம் போது ரவிச்சந்திரன் மேட்டர் வந்தால் அப்படியே வர முடியுமா? பெண் புனைப் பெயர்தானே .ஆனால் அவர் ஆண்தானே! ஆனா ஆணே இங்கு பெண்ணாக மாறி விட்ட அதிசயமெல்லாம் நடந்துது என்று நான் சொல்லி சிரிக்கல சார். சொல்றாங்க. ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான். பெண் இல்ல.

அது எப்படி உங்கள் பெயர் வரும் போது மட்டும் இவர்கள் பின்னாலேயே உங்களைத் தொடர்ந்து வருகிறார்கள் என்பது மட்டும் புரியாத புதிராகவே உள்ளது. ஒருவேளை உங்களுக்கும் மிஞ்சிய ஒற்று வேலை பார்ப்பவர்கள் போல் இருக்கிறது. நீங்கள் எப்போது ஹப்பில் அமர்வீர்கள் என்று வேலை வெட்டி இல்லாமல் இவர்கள் பார்த்துக் கொண்டு நீங்கள் வந்ததும் உங்கள் பின்னாடியே ஓடி வந்து விடுகிறார்களே! அப்படி என்று சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.


நாயகர் பதிவிடும் போது ஆதிராமும் லாகினில் இருக்கிறார். ஆனால் உஷாராக பதிவு போடாமல் இருக்கிறார். அப்புறம் சந்தேகம் கொண்டு யாராவது கேட்டால் அரை மணி நேரத்தில் ஆதிராம் ஓடி வந்து நாயகருக்கு லைக் போட்டு விட்டு தற்காப்பு நாடகம் நடத்தி ஓடி விடுகிறார்..அப்போது நாயகர் லாக்-ஆப் ஆகி விடுவார். ஏனென்றால் நாயகருக்கு நான் லைக் போட்டேன் என்று சொல்லி நாங்கள் இருவரும் வெவேறு நபர்கள் என்று தப்பித்துக் கொள்ளலாம் அல்லவா! அப்படின்னு சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை சார். நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.

''இந்த குற்றச்சாட்டு வந்த துவக்கத்திலேயே மாடரேட்டர்கள் தீர ஆராய்ந்து, புகாரில் உண்மையில்லை என்று கண்டறிந்து என்னை தொடர அனுமதித்துள்ளனர்'' - ஆதிராம் -3
என் பதிவு -3
ஓஹோ! இந்தக் குற்றச்சாட்டு துவக்கத்திலேயே வந்து விட்டதா? நான் ஒரு மாங்கா. இப்பத்தான் உங்களை மாதிரி துப்பு துலக்கி கண்டு பிடிச்சுட்டேன்னு பெருமைபட்டா மக்கா ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து விட்டார்களா? சதிகாரர்கள். இவர்களை சும்மா விடக் கூடாது நாயகரே சாரி ஆதிராம் . சாரி அனந்த ராமன்

அது சரி.எந்த மாடரேட்டர்கள் ஆராய்ந்து சொன்னார்கள் என்று சொல்ல முடியுமா? ஆதாரம் இருந்தால் கொடுங்கள். நான் உங்களை குறை சொல்பவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுகிறேன். ஒரு மனுஷரை இப்படியா சந்தேகப்படுவது? இருந்தாலும் மாடரேட்டர்கள் உங்களையேவா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் ஆதிராம் ஒருவர்தான் வேறு பெயரில் வரவில்லை என்று எங்காவது அறிவித்திருக்கிறார்களா? அப்படி என்று நான் கேட்கவில்லை. கேட்கிறார்கள். சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.

''முத்துராமன் என்ற பெயரில் ஒருவர் இந்த சந்தேகத்தை கொளுத்திப்போட்டார்'' -ஆதிராம் 4
என் பதிவு 4
முத்துராமன் மட்டுமா கொளுத்திப் போட்டார். அதற்கு முன்னும் பின்னும் பலர் கண்டு பிடித்து விட்டார்களே. உங்களுக்கும் பாரிஸ்டர் என்று அப்போது இருந்த ஒருவருக்கும் இது சம்பந்தமாக பக்கம் பக்கமாக வாக்குவாதம் நடந்ததே. சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை சார். நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.

''இந்த ஆராய்ச்சி இன்றோடு முடியட்டுமே'' -ஆதிராம் -5
என் பதிவு - 5
ஏன் பயப்படுகிறீர்கள் சார். நீங்கள்தான் மற்றவர்கள் இல்லையே. யாராவது ஏதாவது ஆராய்ச்சி பண்ணிவிட்டுப் போகட்டுமே. நீங்கள்தான் யோக்கியர் ஆயிற்றே. அப்புறம் ஏன் இந்த நடுக்கம். பயப்படாதீர்கள். நாங்கல்லாம் இருக்கோம். விட்டுத் தள்ளுங்கள். நீங்கள் இப்படி பயப்பட்டால் நீங்கள் செய்வது எல்லாம் உண்மை என்று ஆகிவிடும். இன்னும் வகையாக மற்றவர்கள் பேச நீங்களே வழி செய்து கொடுத்தது போல் ஆகி விடும்.

உங்கள் தலைவர் நடித்த ராஜா ராஜ சோழன் படத்தில் ஒற்று வேலை பார்க்க நம்பியார் சிவாஜியின் நம்பிக்கைக்கு பாத்திரமாவது போல் நடிப்பார். ஆனால் மனோரமாவை வைத்து நம்பியாரையே ஒற்றும், வேவும் பார்த்து அவரை கையும் களவுமாக பிடிப்பார் சிவாஜி. அது மாதிரி நீங்க எங்க மக்கள் திலகம் எம்ஜிஆர திரியில் வந்து ஒற்று வேலை பார்க்கும் போது உங்களைப் பற்றி எங்க திரியிலே இருந்து வந்து ஒற்று வேலை செஞ்சி எங்க ஆளுங்க கண்டு பிடிச்சதுதான் இவ்வளவு விஷயமும். என்ன தைரியம் இருந்தா அந்த ஆளு இங்கே வந்து ஒற்று வேலை பார்த்திருப்பாரு அப்படின்னு இங்க உள்ளவங்க கேக்குறாங்க. ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.

''என் உண்மைப்பெயர் கூட ஆதிராம் இல்லை. அனந்தராமன்'' - ஆதிராம் -6
என் பதிவு -6
ஓ...இருக்கிற பேரெல்லாம் போதாது என்று இன்னொரு பேரா. தாங்கல ஆதி ! இப்போ மத்தவங்க சொல்றத நான் நம்பித்தான் ஆகணும் போல இருக்கு. என் பெயரே எனக்கு மறந்துடும் போல் இருக்கு. அஞ்சாறு பெயர்ல நீங்க எப்படித்தான் கில்லாடித்தனமா இவ்வளவு நாள் சாமர்த்தியமா குப்பை கொட்டுறீங்களோ தெரியல. ஒற்றர் வேவு வேலை பார்த்து எங்க திரியை உங்க திரி போல வேகமாக பாகம் கடக்க வச்சதுக்கும், இன்னும் கொஞ்ச நாள்ல உங்களையும் மிஞ்சி நாங்க அடுத்த பாகம் போக உதவி செஞ்சதுக்கும் உங்களுக்கு நன்றி.

ஆமா! நாயகரை ரொம்ப ரெண்டு மூணு நாளா காணோமே. ரொம்ப அப்செட்டோ. நீங்க மட்டுமே வரீங்க. சரி இப்பதான் சொல்லிட்டோமில்ல. அவரும் நீங்களும் இப்போ ஒண்ணா வந்து நாங்க ரெண்டு பெரும் வேற வேற ஆள்னு நம்ப வச்சுடுவீங்க. நவராத்திரி வேஷம் கட்டினவரே உங்களிடம் தோத்துப் போகணும். உங்களையெல்லாம் ரசிகரா வச்சிருந்தாரே..அவரை சொல்லணும்.

சரி வருத்தப்படாதீங்க. சுவிட்சை மாத்தி மாத்தி போடுங்க.

ஆதிராம்
என்னோட பொது வாழ்க்கையில் உங்களை போன்று பன்முக ஆற்றல் கொண்ட ஒருவரை இப்போதுதான் பார்கிறேன் .

வேண்டுகோள்
உங்கள் அழகு திருமுகத்தை திரியில் பதிவிடுங்களேன் . எல்லோருடைய குழப்பமும் தீரும் .பதிவீர்களா ?
கல் நாயக் சென்னையில் இருப்பதால் அவரை நேரில் சந்திக்கிறேன் .
கடைசியாக மக்கள் திலகத்தின் பொன்னந்தி மாலை - பாடலை பதிவிட்ட திரு கார்த்திக் எங்கே ?
ஆயிரத்தில் ஒருவனை - மிக நேர்த்தியாக விமர்சனம் செய்த சாரதா பல வருடங்களாக காண வில்லையே ?
ஒரே ஒருவரின் சாமர்த்தியம் - பலரை எப்படி அலை கழிக்கிறது ?
மாடரேட்டர்கள் ஏமாறலாம் . பதிவாளர்கள் ஏமாறலாம் . பார்வையாளர்கள் ஏமாறலாம் .
பைபிள் - பகவத் கீதை - குரான் மீது நம்பிக்கை கொண்டவன் நான் .
சிரித்து வாழ வேண்டும் படத்தில் மக்கள் திலகம் பாடுவார்

''யாரும் அறியாமல் செய்யும் தவறென்று
ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள்
ஒன்றில் ஒன்றாய் எங்கும் நின்றான்
ஒருவன் அறிவான் எல்லாம்
காலம் பார்த்து நேரம் பார்த்து
அவனே தீர்ப்பு சொல்வான் !
அஸ்ஸலாமு அலைக்கும் !

eehaiupehazij
21st June 2015, 05:50 PM
ராஜ ராஜஸ்ரீ ராஜன் வந்தார் ....ராஜபோகம் பெற வந்தார்!!


ராஜா ராணி டைப் படங்களிலும் அந்தக்கால ஜெமினிகணேசன் சிக்கென்ற உடல்கட்டோடு அழகும் கம்பீரமும் வீரமும் வெளிப்படுத்தினார் !

ராஜா மகள் ரோஜாவுடன் வரவேற்பதில் வியப்பென்ன ? .

https://www.youtube.com/watch?v=zkHlWFI8sac

நாகராணியும் காதல் மன்னரின் மகுடிக்கு தலையாட்டுவது இயற்கையே.

https://www.youtube.com/watch?v=01a25aWERI8

தேவலோக மங்கையும் காதல் மன்னரின் குழலிசைக்கு அடிமையாகி இறங்கி வருவதும் விந்தையே !

https://www.youtube.com/watch?v=8a91oS0B_B4

In Parthiban Kanavu...

வைஜயந்திமாலா ஜெமினிக்கு சரோ சாவியை விட பொருத்தமான ஜோடியே !

https://www.youtube.com/watch?v=m3Ud6w3XtGE

Russellzlc
21st June 2015, 08:11 PM
அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ...


திரு.சிவாஜி செந்தில் சார், வணக்கம்.

800 பதிவுகளுக்காக தாங்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி. மக்கள் திலகம் திரியிலேயே உங்களுக்கு நன்றி தெரிவித்திருந்தேன். நீங்கள் கவனித்தீர்களா என்று தெரியவில்லை. வாழ்த்துக்களுக்கு மீண்டும் நன்றி.

‘நடிப்பறிஞரின் அடிப்படைக் கேள்விகள்’ பதிவுகளை ரசித்தேன். ஒரே பாடலைத்தான் எல்லாரும் பார்க்கிறோம் என்றாலும், உங்களுக்கு எப்படி விதவிதமாக தோன்றுகிறது? பாராட்டுக்கள்.

இன்று ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் படத்தில் காதல் மன்னர் பாடி நடிக்கும் ‘இளமை கொலுவிருக்கும்..’ பாடல் பற்றிய பதிவை மதுரகானம் திரியில் பதிவிட்டேன். பல மணி நேரம் கழித்துத்தான், ‘ அடடா, இது நடிப்பு செல்வத்தின் பாட்டாயிற்றே? இங்கு பதிவிடலாமே?’ என்று தோன்றியது. உடனே தோன்றாமல் போனதற்கு மன்னிக்கவும். நன்றி.

-------------------

ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் படத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல். பி.பி.எஸ். தேன்குரலில் திரு.ஜெமினி கணேசன் அவர்கள் பாடும் ‘இளமை கொலுவிருக்கும்...’ பாடல். (சுசீலா அவர்களின் குரலில் சாவித்திரி அவர்கள் பாடும் காட்சியை பெண்கள் தினத்தில் சின்னக்கண்ணன் பதிவிட்டதாக நினைவு. நான் சொல்வது பி.பி.எஸ் பாடுவது) மனதை மயக்கும் பாடல். மெல்லிசை மன்னர்களின் இசையில் நாமே நீச்சல் குளத்தில் நீந்துவது போன்ற உணர்வு. கவிஞரின் அர்த்தமுள்ள சிந்திக்க வைக்கும் வரிகள்.


இந்தக் காட்சியில் திரு.ஜெமினி கணேசன் அவர்கள், காதல் மன்னர் என்பதை நிரூபித்திருப்பார். நீச்சல் குளத்தில் அவரது ஜலக்ரீடை தாங்க முடியாது. கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் குளத்தில் மேலேயிருந்து குதிக்கும்போது பின்னால் திரும்பி நின்றபடி டைவ் அடிப்பார்.


இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும் பருவத்திலே
பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே...


பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா
ஒரு பூவைக்கு மாலையிடும் மனம் வருமா?


...எவ்வளவுதான் பொன் நகையும் பொருட்களும் இருந்தென்ன?
அவையெல்லாம் இனிய மொழி பேசுமா? பூவைக்குத்தான் அவை மாலையிடப் போகிறதா?


இன்று தேடி வரும் நாளை ஓடி விடும்
செல்வம் சிரித்தபடி அமுதிடுமா?


...செல்வம் நிலையற்றது என்பதை எத்தனை அழகாக சொல்லியிருக்கிறார் கவிஞர். அதை அனுபவபூர்வமாய் உணர்ந்தவர் கவிஞர். அப்போதெல்லாம் இந்தியாவில் ஜனாதிபதிக்குத்தான் அதிக சம்பளம். இப்போது போல இல்லை. அதனால்தான் கவிஞர் ஒருமுறை தன் நிலைபற்றி இப்படிக் குறிப்பிட்டார். ....‘இந்திய ஜனாதிபதியை போல சம்பளம் வாங்குகிறேன். இந்தியாவைப் போல கடன்பட்டிருக்கிறேன்’’ என்று தனது நிலையைக் கூட கவித்துவமாய் குறிப்பிட்டார்.

அப்படிப்பட்ட நிலையற்ற செல்வம் சிரித்தபடி அமுதிடுமா? என்று கேட்கிறார். அமுது நமக்கு எப்படி கிடைக்கப் போகிறது? நாம் என்ன தேவர்களா? சோறுதான். ஆனால், இன்முகத்துடன் சிரித்தபடி மனைவி அந்த சோற்றை பரிமாறினாலே அது அமுதாம். நயமான உவமை.


இயற்கையின் சீதனப் பரிசாய் விளங்கும் பெண்களின் பல சிறப்புகளை கவிஞர் குறிப்பிட்டிருந்தாலும் அவற்றுக்கெல்லாம் மகுடமாக விளங்கும் வார்த்தைகள்.


‘அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ’


பெண்களுக்கு ஆயிரம் சிறப்புகள் இருந்தாலும் தாய்மை என்பதுதான் பெண்மையின் உயர்ந்த சிறப்பு. அந்த தாயன்புக்கு அடிமையாகாதவர்கள் யாருமே இல்லையே.


உலகையே நடுங்க வைத்த ஹிட்லர் கூட தான் மிகவும் நேசித்த காதலி (கடைசி நேரத்தில் மணந்து கொண்டார்) இவா பிரானுடன் தற்கொலை செய்து கொண்டபோது (தற்கொலை செய்யவில்லை என்று இப்போது சர்ச்சை கிளம்பியிருக்கிறது) மார்போடு ஒரு புகைப்படத்தை அணைத்தபடி இறந்திருந்தார். அது இவா பிரான் படமல்ல. அவரது தாயின் படம். இது ஒன்றே போதுமே, கல்லுக்குள்ளும் ஈரம் வைக்கும் தாயின் சிறப்பை விளக்க.

நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

eehaiupehazij
21st June 2015, 10:57 PM
[quote=kalaiventhan;1233267]அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ...


திரு.சிவாஜி செந்தில் சார், வணக்கம்.

800 பதிவுகளுக்காக தாங்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி. மக்கள் திலகம் திரியிலேயே உங்களுக்கு நன்றி தெரிவித்திருந்தேன். நீங்கள் கவனித்தீர்களா என்று தெரியவில்லை. வாழ்த்துக்களுக்கு மீண்டும் நன்றி.

‘நடிப்பறிஞரின் அடிப்படைக் கேள்விகள்’ பதிவுகளை ரசித்தேன். ஒரே பாடலைத்தான் எல்லாரும் பார்க்கிறோம் என்றாலும், உங்களுக்கு எப்படி விதவிதமாக தோன்றுகிறது? பாராட்டுக்கள்.

இன்று ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் படத்தில் காதல் மன்னர் பாடி நடிக்கும் ‘இளமை கொலுவிருக்கும்..’ பாடல் பற்றிய பதிவை மதுரகானம் திரியில் பதிவிட்டேன். பல மணி நேரம் கழித்துத்தான், ‘ அடடா, இது நடிப்பு செல்வத்தின் பாட்டாயிற்றே? இங்கு பதிவிடலாமே?’ என்று தோன்றியது. உடனே தோன்றாமல் போனதற்கு மன்னிக்கவும். நன்றி.

-------------------


To enhance the happiness upon reading your excellent essay I append the songs video so that each and every line you have carved will be simultaneously engraved in our hearts and minds! Kudos Kalaivendhan Sir!!

https://www.youtube.com/watch?v=IbS6KHTlhsM

https://www.youtube.com/watch?v=F0wMgigPG1Y

அதே இளமை துள்ளிய காதல் மன்னர் அதே நீச்சல் குள சிச்வேஷனில் பின்னாளில் எப்படி மாறிவிட்டார் பாருங்களேன்!!
அவளுக்கென்று ஒரு மனம் திரைப்படத்தில்.....

https://www.youtube.com/watch?v=b-ZNNHnNlRQ


[COLOR="#4B0082"]தங்கள் வரவு நல்வரவாகட்டும் மதிப்புக்குரிய மக்கள் திலகப் புகழார்வலர் கலைவேந்தன் சார் !
ஜெமினிக்காக தாங்கள் பதிந்துள்ளவை எதிர்பாராத மகிழ்ச்சியலைகளை முகிழச்செய்து விட்டது
இத்திரியின் ஜாம்பவான்கள் ராகவேந்தர் வாசு கோபால் மற்றும் சின்னக் கண்ணன் அணியில் உங்களின் அற்புதமான எழுத்துநடையில் அமைந்த இக் கட்டுரையும் ஒரு கல்வெட்டுப் பதிவாக எக்காலமும் காதல் மன்னருக்கு பெருமை சேர்க்கட்டும்!
தமிழ்த்திரை மூவேந்தர் புகழார்வலப் பணியில் நானும் ஒரு அணிலாக உங்கள் அணியின் அடியொற்றி என் கடமையை தொடருகிறேன் நன்றிகள்

வணக்கத்துடன் செந்தில்

eehaiupehazij
22nd June 2015, 09:15 PM
Gap filler/Monotony breaker : Pandha Paasam : Idhazh mottu virindhida song

https://www.youtube.com/watch?v=r5JxvtpwRfs

eehaiupehazij
23rd June 2015, 12:46 PM
Page filler / Monotony breaker!

Enjoy part of Kairaasi movie starring GG!

https://www.youtube.com/watch?v=zxN8F64LKJE

eehaiupehazij
23rd June 2015, 12:50 PM
Gap filler song from Kairasi!

https://www.youtube.com/watch?v=TSrZokr2Zag

eehaiupehazij
23rd June 2015, 12:54 PM
Another song from Kairasi!

https://www.youtube.com/watch?v=L3fJ34yJU1g

https://www.youtube.com/watch?v=TIVPKqfqDXo

eehaiupehazij
23rd June 2015, 01:01 PM
Recap from my earlier postings

ஜெமினிகணேசனின் நினைவலைகள் : A bird's eye view of NT-GG combo movies part 4


பாசமலர் (1961) : காலங்கள் மாறலாம் கற்கண்டும் கசக்கலாம் பாலையும் சோலையாகலாம் தென்றலும் புயலாகலாம் கடலும் வற்றலாம் புவி சுழல்வதுகூட நிற்கலாம்.....காலத்தையும் வென்று அன்றும் இன்றும் என்றும்....அண்ணன் தங்கை பாசத்தின் உருவகம்..இலக்கணம்..இலக்கியம்..இதிகாசம் இத்திரை ஓவியமே!
நடிகர்திலகத்தின் தனி ஆவர்த்தனம் ஆனாலும் ஜெமினி-சாவித்திரி யின் முத்திரையும் பதிக்கப்பட்ட சித்திரம்.

The titile credits and beginning parts:

https://www.youtube.com/watch?v=ABh6FtaGc-A

https://www.youtube.com/watch?v=YY9KOvxXmRs

https://www.youtube.com/watch?v=LQGQgK_3Xpc

eehaiupehazij
23rd June 2015, 08:24 PM
Boologa rambai telugu version


https://www.youtube.com/watch?v=aV9gvu2KmkU

https://www.youtube.com/watch?v=t3dSXhrekjY

https://www.youtube.com/watch?v=rhSb_JYjLXw

https://www.youtube.com/watch?v=UgcaUtTVhYg

https://www.youtube.com/watch?v=rYEjlOX_47E

Russellisf
25th June 2015, 04:23 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsemakvhxs.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsemakvhxs.jpg.html)

eehaiupehazij
25th June 2015, 06:48 PM
புல்லையா இயக்கத்தில் வெளிவந்த பெண்ணின் பெருமை (1956) திரைப்படத்தில் நடிகர்திலகத்திற்கு சற்றே மாறுபட்ட எதிர்மறையான தம்பி பாத்திரம் !
சாதுவான அண்ணனாக ஜெமினி நடித்திருப்பார் நல்ல வெற்றி கண்ட திரைப்படம். எந்த இமேஜ் வட்டத்துக்குள்ளும் தான் சிக்கிக் கொள்ளாமல் அளிக்கப்பட பாத்திரத்தின் குணாதிசயத்தை மட்டுமே வெளிப்படுத்துவதில் வெற்றி காண்பவர் நடிகர்திலகம்.
ஜெமினியின் விருப்பத்திற்கிணங்க முரடனான தம்பி பாத்திரத்தை ஏற்றுக் கொண்டு ஜெமினியின் கதாபாத்திரம் நன்றாக வர விட்டுக்கொடுத்து நடித்தார் நடிகர் திலகம் !

https://www.youtube.com/watch?v=Coy5kMNW2zE

https://www.youtube.com/watch?v=ZWg9hbyIRuM

https://www.youtube.com/watch?v=pXh5UVW1HKA

vasudevan31355
28th June 2015, 08:00 AM
'காதல் மன்னன்' மிக அழகாக தனியாகவும், பின் வைஜெயந்தியுடனும் இருக்கும் போஸ்கள் என்ன படம் என்று ஊகிக்க முடிகிறதா?

http://i57.tinypic.com/i74cck.jpg

http://i62.tinypic.com/xpddhi.jpg

eehaiupehazij
28th June 2015, 08:21 AM
காதல் மன்னன்' மிக அழகாக தனியாகவும், பின் வைஜெயந்தியுடனும் இருக்கும் போஸ்கள் என்ன படம் என்று ஊகிக்க முடிகிறதா?
Nazrana Hindi version of Kalyana Parisu? in the role of ANR?

Character map of Kalyana Parisu and its remakes[edit]
Kalyana Parisu (Tamil)
(1959) Pelli Kanuka (Telugu)
(1960) Nazrana (Hindi)
(1961) Devatha (Telugu)
(1982) Tohfa (Hindi)
(1984)
Bhaskar (Gemini Ganesan) Bhaskar (Akkineni Nageswara Rao) Rajesh (Raj Kapoor) (Sobhan Babu) Ramu (Jeetendra)
Vasanthi (B. Saroja Devi) Vasanthi (B. Saroja Devi) Vasanthi (Vyjayanthimala) (Sridevi) Lalita (Sridevi)
Geetha (Vijayakumari) Geetha (Krishna Kumari) Geetha (Usha Kiran) (Jaya Prada) Janki (Jaya Prada)
Raghu (Akkineni Nageswara Rao) Raghu (Kongara Jaggayya) Shyam (Gemini Ganesan) Ramudu (Mohan Babu)

Courtesy : Wiki

https://www.youtube.com/watch?v=O2oSRqaNZBY

https://www.youtube.com/watch?v=XupZjuPB_fU

eehaiupehazij
28th June 2015, 09:54 AM
Some more songs from Nazraana (1961) Hindi version of GG's Kalyaana Parisu!

https://www.youtube.com/watch?v=V9Cr2RpVxxw

https://www.youtube.com/watch?v=kAA4Lro2aBU

eehaiupehazij
28th June 2015, 09:55 AM
Kaadhalile tholviyutral...in Hindi atmosphere!

https://www.youtube.com/watch?v=MhRstJUQ-TI

vasudevan31355
28th June 2015, 10:50 AM
காதல் மன்னன்' மிக அழகாக தனியாகவும், பின் வைஜெயந்தியுடனும் இருக்கும் போஸ்கள் என்ன படம் என்று ஊகிக்க முடிகிறதா?
Nazrana Hindi version of Kalyana Parisu? in the role of ANR?



http://www.clker.com/cliparts/7/y/R/Y/J/T/correct-mark-hi.png

eehaiupehazij
28th June 2015, 06:11 PM
நிலவுப் பாடல்களும் துடுப்புப் போடல்களும் Moon Raker GG!!


தண்ணிலவை ரசித்துக் கொண்டே தண்ணீரிலே படகு நகர துடுப்பு வலிக்கும் அனுபவம் ரம்மியமானதே !
குளிர்நிலவின் பின்னணியில் அமைந்த இனிமையான பாடல்களுக்கும் படகில் துடுப்புப் போடல்களுக்கும் வேறு எந்த சமகாலத்திய கதாநாயகரையும் விட சாதனையாளர் காதல்மன்னரே !!

பகுதி 1 : நிலவும் நீரும் குளிரூட்டும் காதல் கானங்களில் ஜெமினி!

நம்பர் ஒன் நிலவுப் பாடல் : மிஸ்ஸியம்மாவுடன்!!
காலத்தால் கரையாத தேனிசைத் தென்றல் காதல் மன்னரின் குளிர் நடிப்பில் !!

மனதில் காதல் வெள்ளம் நிறைந்த போது !!

https://www.youtube.com/watch?v=6vBTldCHK6M

மனதில் காதல் வறண்ட போது ?!

https://www.youtube.com/watch?v=F0xW0-EfOrQ

தண்ணிலவில் துடுப்புப் போடும் தேன் நிலவு !!

https://www.youtube.com/watch?v=3Z1AmqECfDY

https://www.youtube.com/watch?v=OG05jhdLy3M

https://www.youtube.com/watch?v=-sO95LBM1sw

காதலியின் மடியில் துன்பம் மறக்கும் போது!

https://www.youtube.com/watch?v=D2YsvbhzLCk

eehaiupehazij
28th June 2015, 06:29 PM
பகுதி 2
நிலவில்லாத பகலில் படகு வலிப்பதே பாதுகாப்பானதோ ?!
குளிரூட்ட காதலி அருகில் இருக்கையிலே !

https://www.youtube.com/watch?v=6e_llk_6_7g

https://www.youtube.com/watch?v=6TYndPjBkxo

https://www.youtube.com/watch?v=MRQXO_oIpug

eehaiupehazij
28th June 2015, 06:34 PM
Part 3 : நீருமில்லை படகுமில்லை ..நிலவு மட்டுமே உண்டு!

https://www.youtube.com/watch?v=UamHWAa6xGk

https://www.youtube.com/watch?v=lyN5063Umtg

eehaiupehazij
1st July 2015, 12:24 AM
தலைக் கவசம் உயிர்க் கவசம் !அன்றே உணர்த்தினார் GG !! Helmet is compulsory for both two wheeler rider and the pillion riders from today 01.07.2015 : GG's depictions on Helmet's indispensability and inevitability during wars!!

https://www.youtube.com/watch?v=a861UAQfX0w

eehaiupehazij
1st July 2015, 12:29 AM
It is always pleasing to watch the friendship between GG and NT!!
Movie : Padhi Pakthi!

https://www.youtube.com/watch?v=lFeX0J2CUkY

https://www.youtube.com/watch?v=XOgQ3DnCHYE

Russellrqe
1st July 2015, 02:33 PM
http://i59.tinypic.com/20jsccz.jpg

eehaiupehazij
2nd July 2015, 03:11 AM
Gap filler to relax!

From Poova Thalaiya a GG-Jai starrer!

https://www.youtube.com/watch?v=ThVnnFW_ADw

eehaiupehazij
2nd July 2015, 03:16 AM
Another Page filler from Poova Thalaiya starring GG!

https://www.youtube.com/watch?v=xzVrKBTpQ9E

eehaiupehazij
2nd July 2015, 03:18 AM
The most memorable song for GG's presence in love scenes!
Monotony breaker from Poovaa Thalaiyaa!

https://www.youtube.com/watch?v=WGqOzDnetDE

eehaiupehazij
2nd July 2015, 05:47 PM
Nostalgia on one of the sensible movies of GG!! Vellivizhaa proved beyond doubt that after NT it was GG who could don elderly roles with a sugar coating!!

https://www.youtube.com/watch?v=xYD5qqBqjKw

https://www.youtube.com/watch?v=H2MVMOYJp3I

https://www.youtube.com/watch?v=0mnfdli34Gw

https://www.youtube.com/watch?v=KJJkMnAYICU

The most impressive solo song sequence in line with NT...the matured GG shines in his life time song environ!!

https://www.youtube.com/watch?v=gcdZb_WIvYM


I do not intend to give any explanations on these songs/scenes...as I feel thespians like Vasu sir or Gopal sir or Chinnakkannan sir ...can elaborate in a more impressive way in their unique and inimitable mould of narrations,as and when they find time to spare..

eehaiupehazij
5th July 2015, 08:06 PM
Scintillating scenes from KSG's silver jubilee bonanza the GG starrer Panama Pasama!!



https://www.youtube.com/watch?v=jCvepZPp8Wo


https://www.youtube.com/watch?v=nYFBHilMJ04

eehaiupehazij
5th July 2015, 08:10 PM
Panama Pasama contd.,

https://www.youtube.com/watch?v=rC39Pfx4eN4

https://www.youtube.com/watch?v=33GA-k6lyBI

eehaiupehazij
5th July 2015, 08:11 PM
Though a bit matured in looks again GG-Saro combo wins the hearts !!

https://www.youtube.com/watch?v=1J0ixlJPt5U

eehaiupehazij
6th July 2015, 11:14 PM
குளிர் நிலவும் குமுறும் எரிமலையாகுமே ...காதல் பாதையில் இடையூறு வரின்!
பாசமலரில் காதல் மன்னர் வழக்கத்துக்கு மாறாக குமுறும் சீன்கள் அதிகமே !

https://www.youtube.com/watch?v=i4EVchjQSno

https://www.youtube.com/watch?v=aG3_B-OJdz0

https://www.youtube.com/watch?v=6SbQ7eAGHHc

eehaiupehazij
9th July 2015, 11:58 AM
மெல்லிசை மன்னர் பூரண குணமடைந்து இசைப்பணி தொடர்ந்திட இறைவனை வேண்டுகிறோம்

https://www.youtube.com/watch?v=gcdZb_WIvYM

eehaiupehazij
9th July 2015, 09:51 PM
போலீஸ் கா(த)வலர் ஜெமினி !!


காதல் மன்னர் போலிஸ் காவலர் உடையில் தோன்றிய படங்கள் அபூர்வமே! அவருக்கு உடை பொருந்தினாலும் அந்த பதவிக்கேற்ற பயப்படுத்தும் கம்பீரம் மிடுக்கு கெத்து சற்றுக் குறைந்து அதையும் மீறிய மிரட்டத் தெரியாத இனிமையான காவலாராகவே தோற்றமளிப்பார்!! பதிபக்தி, பாவ மன்னிப்பு, பத்தாம்பசலி படங்களில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உடையிலும் , ராமு, பார்த்தால் பசி தீரும் படங்களில் ராணுவ வீரர் உடையிலும் ஹேண்ட்சமாகத் தோன்றுவார் !!

https://www.youtube.com/watch?v=lFeX0J2CUkY

https://www.youtube.com/watch?v=pUWbwBQOZcc

https://www.youtube.com/watch?v=ZmXvG_f2j-8

https://www.youtube.com/watch?v=gdRrMSFcJRU&list=PL6eYJImIZdQ7hox7f52D4KfAth7BigIVA&index=1

eehaiupehazij
9th July 2015, 11:38 PM
GG is DD!! Gemini Ganesan is Director's Delight! If NT is hailed as PP (Producers' Paradise!)


நூற்றுக்கு நூறு திரைப்படம் மாதா பிதாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் வைத்துப் போற்றி வணங்கப்படும் நடமாடும் தெய்வங்களான ஆசிரியப் பெருந்தகைகளை ஏற்றி வைத்து மரியாதை செய்த திரைப்பாடம் !

பாலச்சந்தரின் மேன்மையான இயக்கத்தில் மக்கள் கலைஞருக்குள் பொதிந்திருந்த நடிப்புத் திறமையை வெளிக்கொணர்ந்தது. ஆனாலும் கல்லூரி முதல்வராக கௌரவத் தோற்றத்தில் காதல் மன்னர் மின்னினார்!

ஆசிரியர்கள் இமயத்தையும் விட உயர்ந்தவர்கள் என்று உயர்வாகப் புகழும் காட்சியில் ரசிகர்களின் மனத்தைக் கொள்ளையடித்தார் ஜெமினி !! இப்படத்தில் ஜெமினியின் முதிர்ச்சி மேலிட்ட இனிமை நிறைந்த தோற்றப் பொலிவு கல்லூரி முதல்வர்களின் உருவகப் பதிவே ! Directors' Delight (DD) என்று காதல் மன்னர் GG புகழப்படுவது நமக்கும் மனநிறைவே!!



https://www.youtube.com/watch?v=9LwQc7YhcME

eehaiupehazij
10th July 2015, 03:43 AM
No egoist GG!


https://www.youtube.com/watch?v=9b2R52J8zT0

eehaiupehazij
10th July 2015, 03:44 AM
Brilliant cameo portrayal by GG in 100/100 !

https://www.youtube.com/watch?v=p825QLtOrP4

eehaiupehazij
10th July 2015, 03:59 AM
The definitive College Principal GG!!

https://www.youtube.com/watch?v=Qmq9Fglh7Lo

eehaiupehazij
10th July 2015, 04:00 AM
Gentleman GG!

https://www.youtube.com/watch?v=8CtrTgIDMhk

eehaiupehazij
10th July 2015, 04:04 AM
Important scenes in 100/100

https://www.youtube.com/watch?v=b5-T9xtc-08

vasudevan31355
10th July 2015, 11:41 AM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

http://2.bp.blogspot.com/-HRNJSnA1-84/TenskpB9duI/AAAAAAAAAuY/mP0R6cDrGMY/s320/spb.jpg

(நெடுந்தொடர்)

16

'மங்கையரில் மகராணி'

ஜெமினிக்கான பாலாவின் மாணிக்க மகுடப் பாடல்.

http://i.ytimg.com/vi/5huvLv-R-Lg/maxresdefault.jpg

ஒன்று சொல்வார்கள்.

'நீ இறப்பதற்கு முன் இந்த 100 தமிழ்த் திரைப்பாடல்களைக் கேட்டுவிட்டு கண்மூடு. (100 tamil films songs to hear before you die) அப்போதுதான் உன் பிறப்பின் பயன் முழுமையாகச் சேரும்'

உண்மைதான். இசைக்கு அவ்வளவு மகத்துவம் உண்டு. அதுவும் தமிழிசைக்குத் தனி மகத்துவம். பொற்காலப் பாடல்கள் சொல்லொணா விசேஷங்கள் உடையது.

அப்படி தமிழ்த் திரைப்பாடல்களில் நம் வாழ்நாள் முழுதும் கேட்டுக் கொண்டே மகிழ சில பாடல்களை இசைச் சக்கரவர்த்திகளும், பாடகர்களும் நமக்கு அளித்திருக்கிறார்கள். அவை நம் வாழ்வோடு கலந்தவை

http://mrpopat.in/admin/upload/video/2014050213990286291780205176.jpg

அந்த மாதிரிப் பாடல்களில் கட்டாயம் இடம் பெற்ற பாடல்தான் இது. இந்தப் பாடல் இல்லாமல் தமிழ்த் திரைப்படப் பாடல்களே இல்லை. தமிழ்த் திரைப் பாடல்களின் சரித்திரம் பின்னால் எழுதப்படும்போது இந்தப் பாடல் முன்னிலை வரிசையில் நிற்கும் என்பது அனைவரும் ஒத்துக் கொண்ட ஒன்றுதான்.

பிடிக்கும்... பிடிக்காது என்ற இருவேறு கருத்துக்களுக்கு கொஞ்சமும் இடம் அளிக்காத பாடல் இது. நூற்றுக்கு நூறு அனைவரையும் கட்டிப் போட்ட பாடல்.

இப்பாடலை யார் எங்கு கேட்டாலும் அதே இடத்தில் மெய் மறந்து அந்த சில நிமிடங்கள் உறைந்து விடுவார்கள். அப்படி வசியம் செய்யும் சக்தி மிகுந்த பாடல் இது.

புது மணம் புரிந்த இளம் தம்பதியினர் ஒருவரை ஒருவர் புகழ்ந்து, வாழ்த்தி அன்புப் பரிமாற்றம் செய்து கொள்ளும் பாடல். கணவன் மனைவி உறவுக்கே இலக்கணமாய் அமைந்த பாடல். இலக்கியத் தரம் வாய்ந்த பாடல்.

தன் எண்ணம் போல் தனக்கு வாய்த்த மனைவியை கணவன் எப்படி பெருமைப் படுத்துகிறான்!

'மங்கையரில் அவள் மகராணியாம்'

இந்த ஒற்றை வரியிலேயே அவள் பெருமை முழுதும் அனைவருக்கும் புரிய வைத்து விட்டான் கணவன்.

மேல்கொண்டு என்ன சொல்கிறான் என்பதைக் கீழ்க்காணும் பாடல் வரிகளில் தெரிந்து கொள்ளுங்கள்.

'மகராணி' விடுவாளா?

'ஆடவரின் தலைவன் நீ' என்று அம்சமாக எசப்பாட்டு பாடி விட்டாளே! இதைவிடவும் அந்தக் கணவனுக்கு என்ன பெருமை இருக்க முடியும்?

இதிலிருந்தே இவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்ட ஆதர்ஷ தம்பதிகள் என்று புரியவில்லையா?

'அவளுக்கென்று ஓர் மனம்' என்ற ஸ்ரீதரின் அற்புதமான படத்தின் அள்ளிக் கொள்ள வேண்டிய பாடல். படமாக்கலிலும், பாடல் காட்சிகளிலும், காமெராக் கோணங்களிலும் ஸ்ரீதர் மன்னர். அவருக்குப் பிடித்த ஜெமினியும், அவரின் ஆஸ்தான நாயகியான காஞ்சனாவும் ஜோடியாகச் சேர்ந்து விட்டால்?!

மனிதர் பின்னி எடுத்து விட்டார் 'மெல்லிசை மன்ன'ரையும், 'கவிஞ'ரையும் துணை சேர்த்துக் கொண்டு.

கவிஞரின் எண்ணங்களை 'மன்னன்' மனதை வருடும் மெல்லிசையாய் வடிவமைத்துக் கொடுக்க, அதை வண்ணக் குழைவு செய்து ஸ்ரீதர் நம் எல்லோருடைய நெஞ்சங்களிலும் ஆழப் புதைத்து விட்டார்.

நாம் மண்ணில் புதைந்தாலும் நம் மனதில் புதைந்த இப்பாடல் அழியாது.

http://www.kyazoonga.com/MerchandisePages/images/large/VTAF0603.jpg

மிக அழகான அன்றைய சாத்தனூர் டேம். பொங்கி வழியும் நீரூற்றுகள், வண்ணப் பூக்களைத் தாங்கிய பூங்கொடிகள், செடிகள், காகிதப்பூ மரங்கள், 'ஜூஸ்பர்ரி' பிஸ்கட் என்று சொல்வார்கள் (பிறைச்சந்திரன் போன்ற வடிவு) அதைப் போல வடிவமைக்கப்பட்ட பெரிய பிறை நிலா, அழகான பூங்காக்கள், சின்ன சின்னதாய் செதுக்கிய சிற்ப சிலைகள், தண்ணீர் வழிந்தோடும் அணைக்கட்டு, விசிறி வாழைகள், பாக்கு மரங்கள், சிறிய அழகான் நடைப் பாலங்கள், கைகளில் எதையோ பிடித்து நிற்கும் அந்த கட்டழகு பெண் சிலை, வண்ணக்குடை கோபுரங்கள், அசோகா மரங்கள், புல் பாதைகள், நீர் வழிந்தோடும் படிக்கட்டுகள், பிரவுன் நிற குரோட்டன்ஸ் செடிகள், பஞ்சு மிட்டாய் கவிழ்த்து வைத்தது போன்ற புஷ்க்கள் என்று சாத்தனூரை இவ்வளவு அழகாக காட்டியது இளமை இயக்குனர் ஒருவராகத்தான் இருக்க முடியும். அணையின் மீது கற்களால் படுக்கைவாக்கில் பொறிக்கப்பட்டிருக்கும் 'சாத்தனூர் டேம்' என்னும் ஆங்கில எழுத்துக்கள் பிரம்மாண்டமாகத் தெரிவதை பாடலில் தெளிவாகப் பார்க்கலாம்.

மிக சிம்பிளான ஒயிட் பேன்ட், ஷர்ட்டில் (ஆரஞ் அண்ட் எல்லோ கலர் மிக்ஸிங் ஸ்மால் செக்டு) 'மாப்பிளை' ஜெமினி, கல்யாணமான மங்களகரமான மனைவி கோலத்தில் மூக்குத்தியும், காதருகே செருகிய பூவும், வாணிஸ்ரீ கொண்டை 'விக்'கும், கைநிறைய வளையல்கள், கழுத்தில் வெண்முத்து மாலையுமாக 'கலையழகி' காஞ்சனா. 'காதல் மன்ன'னுக்கு செம ஜோடிப் பொருத்தம். ராசியான ராசி. 'இயற்கையென்னும் இளைய கன்னி' முடித்து 'மங்கையரில் மகராணி'யில் மீண்டும் இணைந்து மனதில் பிணைந்தது.

http://i.ytimg.com/vi/xdOm3lQCA2Q/hqdefault.jpg

சாத்தனூர் அணைக்கட்டையே இருவரும் ஒரு ரவுண்டு வந்து விடுவார்கள். ஜெமினி பின்னாட்களில் விடாமல் எல்லா பாடல்களிலும் ஒரு ஸ்டைலைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தார். இடுப்பில் கை வைத்துக் கொண்டு ஒரு காலைத் தூக்கி, சற்றே உடம்பை ஆட்டியபடி நிற்பார். இல்லையென்றால் கால் முட்டியில் கைகளைக் குவித்து வைத்துக் கொள்வார்.:)

காதல் காட்சிகளில் ஜெமினி மிக நெருக்கம் காட்டுவார் காஞ்சனாவிடம். 'எல்லையில்லாக் கலைவாணி'யிடம் சில சமயம் எல்லை மீற முயல்கிறாரோ 'காதல் மன்னன்' என்று கூட நினைக்கத் தோன்றும். ('கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும்' உதடுகள் பட்டே விடும்.):)

'வெள்ளிச் சங்குகள் துள்ளி எழுந்தன
நெஞ்சில் விளையாட'

வரிகளில் ஜெமினி பின்னி எடுத்து விடுவார். இயற்கையான ஸ்டைல் செய்து ஜமாய்த்து விடுவார் மனிதர், கைகளை உயர்த்தி காஞ்சனாவை நோக்கி ஸ்டைலாக, மெதுவாக நடந்து வருவது ஜோர். கைகளை ஒன்றாக இணைத்து காஞ்சனாவின் கழுத்தில் மாலையாய்க் கோர்ப்பதும் அழகு.

காஞ்சனாவும் நல்ல ஈடு கொடுத்திருப்பார்.

தோழிக்காக தன் வாழ்வை முத்துராமனிடம் முழுமையாக, அடிமையாக அர்ப்பணிக்கும் பாரதி 'ஆ...ஆ' என்று பாடலின் நடுவே சுசீலா குரலில் விசும்புவார். இவரும் முத்துராமனும் விட்டேர்த்தியாக 'தேமே' என்று சுரத்தில்லாமல் நிற்பார்கள். ஆனால் கதையின் சூழ்நிலை, பாடலின் இடை சூழ்நிலை அப்படித்தான். அதனால் பொருத்தமாகவே இருக்கும்.

சுசீலா ஆனந்த அராஜகம் பண்ணுவார். மகிழ்ச்சி, இடையே சோகம் என்று காஞ்சனாவிற்கும், பாரதிக்கும் இரட்டை நாயன வாசிப்பு. பிரமாதப்படுத்துவார்.

பாலா தொட்டிலிட்டு அமர்ந்து கொள்வார் நம் மனங்களில். குரல் வித்தைகள் விதவிதமாய் இன்பத் தாக்குதல்கள் கொடுக்கும்.

'மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள்
கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும்'

இந்த வார்த்தைகளில் 'மையோடு கொஞ்சம்' என்று கொஞ்சுவாரே! அது ஒன்றே போதும். குரல் இன்னும் மேம்பட்டு மெருகேறி சர்க்கரை, தேன், பாகு இவையெல்லாம் மீறிய சுகத்தைக் கொடுக்கும். பாலாவுக்கு புகழை வண்டிவண்டியாக அள்ளித் தந்த பாடல். மேடைகளில் ஒலிக்காமல் இதுவரை இருந்ததில்லை.

கண்ணதாசனுக்கு கரும்பு சாப்பிடுவது போல இது போன்ற பாடல் வரிகள்.

'மெல்லிசை மன்னர்' தான் இப்பாடலின் நிஜ ஹீரோ. அப்புறம்தான் மற்றவர்கள் பாலா உட்பட. என்ன ஒரு இசை ஆளுமை! இசைக் கருவிகள் ஒவ்வொன்றின் ஆதிக்கமும் சொல்லி மாளாதவை. வயலின், ஆர்கன், வீணை, கிடார், தபலா, பாங்கோ என்று அள்ளித் தெளித்து ஆட்சி செய்வார்.

மொத்தத்தில் என்றென்றும் இளமை மாறாத காயகல்பப் பாடல்.

http://i.ytimg.com/vi/sV1RWJQYD6U/maxresdefault.jpg

மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லாக் கலைவாணி
என்னுயிரே யுவராணி

மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லாக் கலைவாணி
என்னுயிரே யுவராணி

கோடையிலே மழை போல் நீ
கோவிலிலே சிலை போல் நீ
ஆடவரில் தலைவன் நீ
அடிமை நான் உன் ராணி

கோடையிலே மழை போல் நீ
கோவிலிலே சிலை போல் நீ
ஆடவரில் தலைவன் நீ
அடிமை நான் உன் ராணி

மங்கையரில் மகராணி

ஆ..............ஆ

மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள்
கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும்
மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள்
கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும்

தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு
தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு
நான் பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு
நான் பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு

வெள்ளிச் சங்குகள் துள்ளி எழுந்தன
நெஞ்சில் விளையாட

அங்கங்கள் எங்கெங்கோ
நானும் மெல்ல தடை போட

மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லாக் கலைவாணி
என்னுயிரே யுவராணி

மங்கையரில் மகராணி

ஆ..............ஆ

மாணிக்கத் தேரின் காணிக்கையாக
முத்தங்கள் நூறு தித்திக்க வேண்டும்

தீராத ஆசை கோடானு கோடி
தேனாக ஓடும் தானாகத் தீரும்

தங்கத் தாமரை மொட்டு விரிந்தது
மஞ்சள் நீராட

சொல்லுங்கள் அங்கங்கே

நானும் கொஞ்சம் கவி பாட

மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லாக் கலைவாணி
என்னுயிரே யுவராணி

மங்கையரில் மகராணி


https://youtu.be/sV1RWJQYD6U

eehaiupehazij
10th July 2015, 12:34 PM
நன்றிகள் நவில நா எழவில்லையே நாவலர் வாசு சார் !
எப்படி உங்களுக்கு சமயம் கிட்டுகிறது இப்படியெல்லாம் கிண்டிக் கிழங்கெடுக்க ?!
வழக்கம் போல உங்கள் Hands up commandக்கு இசை ஔரங்கசீப்பாகிய நான் surrender!!

நான் நிறைய பயிற்சிகள் மேற்கொள்ள வைக்கிறீர்கள்.
எந்தத் திரியிலும் உங்கள் பதிவு காரிருள் நீக்கும் சூரிய சந்திரக் கிரணங்களே!!
மனம் நிறைந்த மகிழ்வுடன்
செந்தில்

eehaiupehazij
10th July 2015, 09:12 PM
நாம் பிறந்த மண் (1977) நடிகர்திலகத்துடன் காதல்மன்னர் இணைந்து நடித்த கடைசிப் படம் வின்சென்ட் இயக்கத்தில் தேச பக்தியை மையப்படுத்தி எடுக்கப் பட்டது.

மிக அபூர்வமாக சிவாஜி ஜெமினி சண்டைக் காட்சி அமைந்த படம் (Watch from 00 : 20:00) கமல் நடிகர்திலகத்தின் மகனாக நடித்திருப்பார்!

கண்பார்வை இழந்த நிலையில் உலுக்கியெடுக்கும் ஜெமினியின் உன்னதமான உணர்ச்சி மிக்க தேர்ந்த நடிப்பு கண்களைக் குளமாக்கும்.

Watch climax from 2:00:00 to perceive the tear jerking acting calibre of GG on par and in tandem with NT!
ஜெமினி சிவாஜி இணைவில் என்றென்றும் மறக்க இயலாத நெகிழ்ச்சி தரும் நடிப்பின் முத்திரையை இருவருமே பதித்திட்ட காட்சி !

https://www.youtube.com/watch?v=zjjEq4Iy7sU

vasudevan31355
12th July 2015, 02:53 PM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

http://2.bp.blogspot.com/-HRNJSnA1-84/TenskpB9duI/AAAAAAAAAuY/mP0R6cDrGMY/s320/spb.jpg

(நெடுந்தொடர்)

17

'ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு '

http://tamildada.com/wp-content/uploads/2013/08/Avalukendru_Oru_Manam.jpg

http://i.ytimg.com/vi/_ukBdTZTQgM/hqdefault.jpg

உற்சாகம்...உற்சாகம்... உற்சாகம்

அப்படி ஒரு உற்சாகம்... கரை கடந்த உற்சாகம்

அணை உடைத்த வெள்ளமாய் பொங்கி வரும் உற்சாகம்.

கட்டவிழ்ந்த காட்டாறாய் கரை புரண்ட உற்சாகம்

அதுதான் பாலாவின் இந்தப் பாடல். உற்சாகம் அன்றி வேறு எதுவுமே இல்லை.

http://i.ytimg.com/vi/FX1BdEvGwW0/hqdefault.jpg

மழைக்கு மரத்தோரம் ஒதுங்கும் ஜெமினி. அதே மழையில் நனைந்து அதே மரத்தோரம் காஞ்சனா ஒதுங்க, ஜெமினி தன் வேலையைத் தொடங்க, கரெக்டாக அந்தக் கால தப்பாத சினிமா பார்முலாவின்படி ஒரு பெரிய இடி இடித்து வைக்க, நாயகி மிரண்டு நாயகனை பயத்தில் கட்டிப் பிடித்து அவன் மார்பில் சாய்ந்து கொள்ள, நாயகன் இன்ப சுகம் அனுபவிக்க, சட்டென்று நாயகி சுதாரித்து விலகி வெட்கத்தில் ஓடிவிட, நாயகன் மனதில் 'ஆயிரம் நினைவும் ஆயிரம் கனவும்' வருவது நிஜம்தானே!

மனம் மகிழ்ச்சி எல்லை மீறி துள்ளிக் குதித்து பாட ஆரம்பிக்கிறான் காதலன் கொட்டும் மழையிலே. அந்த பூங்காவைச் சுற்றி ஓடி ஆடி தன்னுள் பொங்கும் ஆனந்தத்தையெல்லாம் அள்ளித் தெளிக்கிறான் அங்கு பெய்யும் மழையை விடவும் வேகமாக .

காதலனாக ஜெமினி. முழுக்க முழுக்க மழையிலே (செயற்கை) எடுக்கப்பட்ட பாடல். ஜெமினி துள்ளாட்டம் போட்டிருப்பார். ஜெமினிக்கு இந்தப் பாடலில் 'இது தேவையா?' என்று பாதியும், "ஏன் நன்றாகத்தானே இருக்கிறது? அதுக்கென்ன?" என்று மீதியுமாக விமர்சனங்கள் அப்போது எழும்ப நான் அதில் இரண்டாவது கட்சி.

மனதை வருடும் மென்மையான பாடல்களிலேயே நாம் பார்த்துப் போன ஜெமினி இதில் எம்.ஜி.ஆர் ரேஞ்சுக்கு அங்குமிங்கும் ஓடி ஆடி, கை கால்களைத் தூக்கி ஆடிப் பாடுவதும் ரசிக்கத் தகுந்ததே.

மழைக் காட்சிகளை மெனக்கெட்டுப் படமாக்கியிருப்பார் ஸ்ரீதர். ஆனாலும் சில இடங்களில் கன்டின்யூட்டியில் கோட்டை விட்டுவிட்டதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

'பூவை அள்ளித் தந்தாள் அந்தப் பூந்தென்றல் அன்னம்
போதை கொண்டு ஆடும் எந்தன் மனமென்னும் கிண்ணம்'

சரண வரிகளை முதல் முறை ஜெமினி பாடும்போது முழுக்க தொப்பரையாக நனைந்திருப்பார். பேன்ட் ஷர்ட் முழுக்க நனைந்திருக்கும். அதே வரிகள் திரும்ப வரும்போது பார்க்கில் உள்ள நீர்த்தேக்கக் கட்டையில் அமர்வார். அப்போது பேன்ட் காய்ந்து இருக்கும். பிறகு மழை நீர் பட்டு மீண்டும் நனைய ஆரம்பிக்கும். எப்படி?:)

அதே போல நல்ல வெயில் அடித்துக் கொண்டிருக்கும். வரிசையாக நடப்பட்டிருக்கும் அசோகா மரங்களின் இடைவெளிகளில் நிழலும், வெயிலும் மாறி மாறி நன்றாகவே தெரியும். ஆனால் ஜெமினி முழுக்க பூவாளி பக்கெட்டுகளின் மழைச் சாரலில் நனைந்து கொண்டிருப்பார்.

சரி! வெயில் அடிக்கும்போது அதே சமயம் மழை பெய்யக் கூடாதா? அது என்ன அதிசயமா? என்று ஜெமினி ரசிகர்கள் சண்டைக்கு வந்து விட வேண்டாம். காக்கைக்கும் நரிக்கும் கல்யாணம் என்றே நினைத்துக் கொள்கிறேன். போதுமா?:)

ஜெமினிக்கு முன்னால் மட்டுமல்ல... அவருக்குப் பின்னாலேயும் நீண்ட தூரம் மழை பெய்ய வைத்து காட்சியின் மழை சூழ்நிலைக்கு மெனக்கெட்டிருப்பார்கள். அதைப் பாராட்டியே தீர வேண்டும். ஸ்ரீதர் ஸ்ரீதர்தான்.

பாடலின் நடுவில் காட்சி தரும் வானவில் அழகுக் கோர்வை. ஆனால் வானவில் வானத்தில் இல்லாமல் பூஞ்செடிகளின் மேல், பூங்காவின் தரையில் எல்லாம் ஊடுருவிப் பாயும். இதையும் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.

http://i.ytimg.com/vi/ZcRkwPfJPBM/hqdefault.jpg

ஜெமினியின் சில போஸ்கள் ரசிக்கத்தகுந்தவை. பாடலின் முதல் சரணம் முடிந்து இடையிசை துவங்கும் போது ஜெமினி வைக்கும் ஸ்டெப்ஸ் அப்படியே 'காலங்களில் அவள் வசந்தம்' பாடலைக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும். (ஒரு டர்ன் திரும்பி ரவுண்ட் அடிப்பார்) பின் இருபக்கமும் அசோகா மரங்களுக்கு இடையில் உள்ள பாதையில் காமெராவின் டாப் ஆங்கிளில் இருந்து பின்பக்கமாக நடந்து செல்வது செம டக்கராக இருக்கும்.

பொல்லாத கவிஞன் எழுதிய,

'கை கொள்ளாத வண்ணம் அவள் சுகம் கொடுத்தாளோ'

வரிகளை நல்லவேளை ஜெமினி தன்னை அணைத்துக் கொள்வது போல பாவம் காட்டி நம் வயிற்றில் பால் வார்த்தாரோ!:) நாம் தப்பினோமோ!

கொஞ்சம் ஏமாந்தால் போதும்டா சாமி! கண்ணதாசன் நம்மை மண்ணைக் கவ்வ வச்சுடுவார். புரிஞ்சவங்க மத்தியில் சங்கடத்திலும் நெளிய வச்சுடுவார்.

இப்பாடலின் இசை பற்றி என்ன சொல்ல! எப்படி எழுத!?

ஒவ்வொரு வாத்தியமும் வசியம் செய்கிறது. முதல் சரணம் தொடங்குமுன் வரும் அந்த ஷெனாயின் அற்புதத்தை வார்த்தைகளில் விவரித்து விட இயலுமா என்ன? அதற்கப்புறம் பொங்கிப் பிரவாகமெடுக்கும் அந்த இசை. யம்மாடி! இசை மழை என்பார்களே! இசை வெள்ளம் என்பார்களே! அது இந்தப் பாடலுக்குத்தான் பொருந்தும். மழைப் பாடலுக்குத் தக்கபடி மகத்தான இசை. சின்ன சின்ன புல்லாங்குழல் கலக்கல்களை மறக்கவே முடியாது.

'என் கண்ணோடு பெண்மை ஒரு கதை படித்தாளோ' என்று பாலா முடித்தவுடன் அப்படியே அந்த டியூனையே மன்னர் இசையாகக் கொடுக்கும் அழகு கோடி பெறும். அதே போலத்தான் 'கை கொள்ளாத வண்ணம் அவள் சுகம் கொடுத்தாளோ' வரிகள் முடிந்ததும்.

'மெல்லிசை மன்னர்' விஸ்வரூப இசை அமைத்து நமக்களித்த பாடல் இது. படத்தின் டைட்டில் இசை மறக்கவே முடியாத ஒன்று. (டைட்டில் இசையில் 'கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா' பாடலின் கிடார் இசை டியூனை மிக அழகாக கொஞ்சமாக தெரியாத வண்ணம் கலந்து கொடுத்திருப்பார் 'மெல்லிசை மன்னர்')

பாலா பாடல் காட்சியை நன்கு மனதில் உள்வாங்கி குதூகலித்திருப்பார்.
நம்மையும் குதூகலிக்க வைப்பார்.

அந்த முதல்

'லா...ஹஹஹா ஹோஹஹோ
ஹஹஹா ஹஹஹா ஹா'

ஹம்மிங்கிலேயே கதாநாயகனின் சந்தோஷ மனநிலையை மிக அருமையாக பாலா தன் குரலில் கொண்டு வந்து விடுவார். என்னவோ லாட்டரியில் கோடி ரூபாய் விழுந்த உற்சாக மனநிலை நமக்கு ஏற்பட்டுவிடும்.

இந்தப் பாடல் விரும்பிகள் யாராக இருந்தாலும் மேற்சொன்ன அந்த ஹம்மிங்கை முணுமுணுக்காமல் இருக்கவே மாட்டார்கள். (யாருக்கும் தெரியாமல்)

இந்த உற்சாகம் கொப்புளிக்கும் பாலாவின் பாடலுக்குப் பின்னால்தான் மற்ற பாலாவின் பாடல்கள் எல்லாம்.

'நாள் போகப் போக ஆசை உள்ளம் எங்கே போகுமோ? என்ன ஆகுமோ?
எங்கே போகுமோ?'

என்று எதிர்கால சந்தோஷ நினைவுகளை நினைத்து 'என்ன ஆகுமோ...இது எங்கு போய் முடியுமோ' என்று காதலன் இன்பக் கவலை ஒன்றை மட்டுமே படும்படி வார்த்தைகளில் கண்ணதாசன் விளையாடும் விளையாட்டே விளையாட்டு.

கேட்க, கேட்க, பார்க்க பார்க்க பரவசம் ஒன்றையே பரிசாகத் தரும் பாலாவின் பாடல் ஒன்று உண்டென்றால் அது இதுதான்.

http://i.ytimg.com/vi/irmgxxYkhkw/maxresdefault.jpg

ஓ...ஓ...ஒஹஹஹோ ஹஹஹா
ஒஹஹஹோ ஹஹஹா ஹா

லா...ஹஹஹா ஹோஹஹோ
ஹஹஹா ஹஹஹா ஹா

ஓ...ஓ...ஒஹஹஹோ ஹஹஹா
ஒஹஹஹோ ஹஹஹா ஹா

ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு
காணுது மனது ஹோ ஹோ
பெண்ணைத் தொட்ட உள்ளம்
எங்கும் இன்ப வெள்ளம்
எங்கே அந்த சொர்க்கம் ஹா(ங்)
எங்கே அந்த சொர்க்கம்

லா...ஹஹஹா ஹோஹஹோ
ஹஹஹா ஹஹஹா ஹா

ஓ...ஓ...ஒஹஹஹோ ஹஹஹா
ஒஹஹஹோ ஹஹஹா ஹா

ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு
காணுது மனது ஹோ ஹோ
பெண்ணைத் தொட்ட உள்ளம்
எங்கும் இன்ப வெள்ளம்
எங்கே அந்த சொர்க்கம் ஹா(ங்)
எங்கே அந்த சொர்க்கம்

பூவை அள்ளித் தந்தாள் அந்தப் பூந்தென்றல் அன்னம்
போதை கொண்டு ஆடும் எந்தன் மனமென்னும் கிண்ணம்
பூவை அள்ளித் தந்தாள் அந்தப் பூந்தென்றல் அன்னம்
போதை கொண்டு ஆடும் எந்தன் மனமென்னும் கிண்ணம்
என் கண்ணோடு பெண்மை ஒரு கதை படித்தாளோ
நான் காணாமல் நெஞ்சை அவள் படம் பிடித்தாளோ
நாள் போகப் போக ஆசை உள்ளம் எங்கே போகுமோ என்ன ஆகுமோ
எங்கே போகுமோ

ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு
காணுது மனது ஹோ ஹோ
பெண்ணைத் தொட்ட உள்ளம்
எங்கும் இன்ப வெள்ளம்
எங்கே அந்த சொர்க்கம் ஹா(ங்)
எங்கே அந்த சொர்க்கம்

மூடி வைத்த தட்டில் இன்று மோகச் சின்னங்கள்
ஆடுதொட்டில் போடும் எந்தன் காதல் எண்ணங்கள்
மூடி வைத்த தட்டில் இன்று மோகச் சின்னங்கள்
ஆடுதொட்டில் போடும் எந்தன் காதல் எண்ணங்கள்

கை கொள்ளாத வண்ணம் அவள் சுகம் கொடுத்தாளோ
நான் சொல்லாத சொல்லில் அவள் சுவை வளரத்தாளோ
நாள் போகப் போக ஆசை உள்ளம் எங்கே போகுமோ என்ன ஆகுமோ
எங்கே போகுமோ

ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு
காணுது மனது ஹோ ஹோ
பெண்ணைத் தொட்ட உள்ளம்
எங்கும் இன்ப வெள்ளம் எங்கே அந்த சொர்க்கம் ஹா(ங்)
எங்கே அந்த சொர்க்கம்

லா...ஹஹஹா ஹோஹஹோ
ஹஹஹா ஹஹஹா ஹா

ஓ...ஒஹஹஹோ ஹஹஹா
ஒஹஹஹோ ஹஹஹா ஹா


https://youtu.be/_ukBdTZTQgM

eehaiupehazij
12th July 2015, 05:45 PM
Gap filler

மருமகள் திரைப்படத்தில் ஓர் இனிமையான பாடல் !

https://www.youtube.com/watch?v=KkkbjDfCiJc

eehaiupehazij
12th July 2015, 06:00 PM
ஜெமினியின் சில போஸ்கள் ரசிக்கத்தகுந்தவை. பாடலின் முதல் சரணம் முடிந்து இடையிசை துவங்கும் போது ஜெமினி வைக்கும் ஸ்டெப்ஸ் அப்படியே 'காலங்களில் அவள் வசந்தம்' பாடலைக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும். (ஒரு டர்ன் திரும்பி ரவுண்ட் அடிப்பார்) பின் இருபக்கமும் அசோகா மரங்களுக்கு இடையில் உள்ள பாதையில் காமெராவின் டாப் ஆங்கிளில் இருந்து பின்பக்கமாக நடந்து செல்வது செம டக்கராக இருக்கும்.


வாசு சார்

ஆயிரம் வளைவு ஆயிரம் நெளிவுசுளிவுடன் உங்கள் வர்ணனை மழையில் நனைய வைத்தமைக்கு நன்றித் தூறல்கள்!!


இப்பாடல் காட்சிக்கு இன்ஸ்பிரேஷன் மழை நனைவுப் பாடல்களின் இலக்கண இலக்கியக் காட்சியமைப்பைக் கொண்ட Singing in the Rain (1952) திரைப்படமே! இப்புவியின் நம்பர் ஒன் நடன நாயகரான ஜீன் கெல்லியின் காலமழை கரைக்க முடியாத குடை டான்ஸ்!!

கதாநாயகியின் தீண்டுதலால் மகிழ்வு தூண்டப்பட்ட நாயகன் மழையில் நனைந்து ஓடி ஆடி பாடி தாண்டி ஆடுவதே தீம் !!

குடைநடனம் காதல்மன்னரின் நடன வரையறைக்கு அப்பாற்பட்டதால் ஸ்ரீதர் அவரது மென்மையான தன்மைக்கு ஏற்ப ஜெமினியை குடை பிடிக்காமல் மழையில் நனைய விட்டு விட்டார் !!


https://www.youtube.com/watch?v=w40ushYAaYA

eehaiupehazij
12th July 2015, 06:09 PM
Coming Up : The negative characterizations of GG!!



https://www.youtube.com/watch?v=NK-9e0YrdE8

eehaiupehazij
14th July 2015, 07:33 AM
மனதிற்கினிய அமரத்துவம் வாய்ந்த மதுர கானங்களை அள்ளித் தந்து நமது இதயங்களைக் கொள்ளை கொண்ட மெல்லிசை மன்னருக்கு காதல் மன்னரின் திரி சார்ந்த அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்

https://www.youtube.com/watch?v=KiYCD6Nldqg

https://www.youtube.com/watch?v=vHVwDiEr64Q

eehaiupehazij
15th July 2015, 06:09 AM
Recap on GG nostalgia

Gap filler from Movie Adhisaya Thirudan (1958) GG starrer, a quite entertaining film!

Watch the popular song முருகா என்றதும் உருகாதா மனம்

தனது காதல் நாயகி சாவித்திரிக்கு மலர் விற்பனையில் உதவிக்கரம் நீட்டிட ஒரு பள்ளிக்குழந்தை மேடை நடனத்தில் காட்டிடும் குதூகலத்துடன் ஏ அம்மாடி இந்த அரக்குப்பச்சை பாடலில் என்னமாய் வளைந்து நெளிந்து டப்பாங்குத்து குத்துகிறார் காதல்மன்னர்!!

https://www.youtube.com/watch?v=r7SQrGGVbw4

eehaiupehazij
15th July 2015, 06:14 AM
Recap on GG's nostalgia

Glimpses of Gemini Ganesan!

கொஞ்சும் சலங்கை கண்களுக்குப் படைத்திட்ட வண்ண விருந்து! காதுகளுக்குள் ரீங்காரமிடும் தேனிசை மழை!! மனதுக்குள் வருடிடும் மலையமாருதம் !!!

http://upload.wikimedia.org/wikipedia/en/8/83/Konjum_Salangai_VCD_Cover.jpg

Konjum Salangai : Produced and directed by M. V. Raman it is a 1962 musical Tamil film starring Gemini Ganesan and Savithri in the lead roles, with R. S. Manohar and Kumari Kamala playing supporting roles. It was released outside India with the original having subtitles in more than 22 languages by a British company. It was also dubbed into other languages and received a fair amount of notice from critics.The music was created by S. M. Subbaiah Naidu.


The film marked a record for being the first Tamil film to be exhibited in Poland with a dubbed version.

A forerunner to Thillaanaa Mohanambal as far Nadhaswaram (Kaarukuruchi Arunaachalam) is concerned.

Also, a homage to Kaarukkurichchi Arunaachalam for his mellifluous nadhaswaram flow in Singaara velane song!
Karukurichi Arunachalam

http://4.bp.blogspot.com/-4bLDQqdh1tg/Ujwv4ORCaWI/AAAAAAAADxQ/rvrAwQsixio/s1600/karukurichi.jpg
Who’s Who in Classical Music

By V Ramnarayan


When Karukurichi Arunachalam passed away in 1964 at the age of 43—survived by his wife, seven daughters and four sons—the world of Carnatic music, the nagaswaram fraternity in particular, mourned his loss as that of the worthiest successor of TN Rajaratnam. A potentially spectacular career was cut short prematurely, though Arunachalam had achieved quite a bit in his relatively short career.

Karukurichi Arunachalam did not hail from a traditional nagaswaram family. His father Balavesam was so fascinated and impressed by the artistry and prestige of Koorainadu Natesa Pillai that he attempted to learn to play the instrument and become a performing artist. Unfortunately he did not quite make it as a musician, but found solace in his son Arunachalam’s talent for the instrument. Arunachalam learnt nagaswaram from Kattumalli Subbiah Kambar and vocal music from Kalakkad Subbiah Bhagavatar and his son Ramanarayana Bhagavatar. (Some accounts have it that he learnt vocal music from Kallidaikurichi Ramalinga Bhagavatar). A great fan of nagaswaram wizard Rajaratnam, Karukurichi constantly dreamt of training under him. Through a fortuitous opportunity to accompany him on stage when TNR’s aide Kakkayi Natarajasundaram Pillai fell ill before a concert at Karukurichi, he did fulfil his dream.

Arunachalam did gurukulavasam shadowing TNR at home and concerts and learning the nuances of his music largely by osmosis. Soon he assimilated the best facets of Rajaratnam’s music in abundance, and became renowned in equal measure for the beauty of his handling of ragas and compositions.

At the height of his fame, Arunachalam had a large fan following, hugely enhanced by his nagaswaram contribution to the film Konjum Salangai, in which he played pure classical music as well as raga-based songs composed for the movie. The song Singaravelane deva in which the playback singer S Janaki sang in tandem with his nagaswaram playing repeating every phrase of his became a runaway hit, still remembered and enjoyed by audiences fifty years later. Once he became well settled in his music career he left Karukurichi in Tirunelveli district where he was born and settled down at Kovilpatti town in the same district.

A tribute in the Indian Express on 7 April 1964 said, “Sri Arunachalam’s renderings of ragas, kritis and pallavis were noted for their tonal purity and melodic beauty.” Natabhairavi, Kharaharapriya, Pantuvarali, Shanmukhapriya, Nata and Gowla were described as his favourite ragas, while rare ragas like Chandrajyoti and Takka were his forte, too. According to a charming story, Rajaratnam, who was a fan of his disciple’s music, once sat down on the road in T’Nagar to listen to Arunachalam’s Huseni raga alapana in a temple procession, refusing to move even though he was causing a disruption of the traffic.

Karukurichi Arunachalam’s death at the Palayamkottai Government Headquarters Hospital on 6 April 1964 marked the end of a distinct era in nagaswaram music of the Rajaratnam school. It would not be unrealistic to speculate that he would have reached great heights in music, even achieved the Sangita Kalanidhi title at the Music Academy where he often electrified audiences.
by courtsy to You Tube, Wiki and...
(Posted by Sruti Magazine at Friday, September 20, 2013 )

https://www.youtube.com/watch?v=kPKtm5zLgbo&list=PL0Z3CV6zKg_tNs6R7QCZlphDiSfHjByzO&index=1

https://www.youtube.com/watch?v=n3KI43QJBi4&list=PL0Z3CV6zKg_tNs6R7QCZlphDiSfHjByzO&index=5

eehaiupehazij
15th July 2015, 06:17 AM
Recap

Clash of the Titans
Confrontations, convinces and compromises: GG Vs NT Pandha Paasam

When misunderstanding dominates,human relations,even between brothers, go berserk!

https://www.youtube.com/watch?v=NrGzGq4YTNQ

https://www.youtube.com/watch?v=w-96zBXLR7A

https://www.youtube.com/watch?v=hSj6zMUKTuw

eehaiupehazij
17th July 2015, 06:38 PM
recap


GG's acting prowess compared to his contemporary Hollywood/Bollywood actors

Part 2 :Gemini Ganesan Vs Cary Grant

கிரிகரி பெக்கை அடுத்து ஜெமினியின் அமைதியான நடிப்பும் வசனம் பேசும் விதமும் உடையலங்காரமும் கேரி க்ராண்ட் போலவே இருக்கும்

https://www.youtube.com/watch?v=AIZPw6eIlJw

https://www.youtube.com/watch?v=DahmBNGR8Dk

Cary Grant (born Archibald Alexander Leach; January 18, 1904 – November 29, 1986) was an English stage and Hollywood film actor who became an American citizen in 1942. Known for his transatlantic accent, debonair demeanor and "dashing good looks", Grant is considered one of classic Hollywood's definitive leading men.


Grant was named the second Greatest Male Star of All Time (after Humphrey Bogart) by the American Film Institute. He was known for comedic and dramatic roles; his best-known films include Bringing Up Baby (1938), The Philadelphia Story (1940), His Girl Friday(1940), Arsenic and Old Lace (1944), Notorious (1946), An Affair to Remember (1957), North by Northwest (1959), and Charade(1963).
Grant was continually passed over for film industry and critics awards; he was nominated twice for the Academy Award for Best Actor (Penny Serenade and None But the Lonely Heart) and five times for a Golden Globe Award for Best Actor. In 1970, he was presented an Honorary Oscar at the 42nd Academy Awards by Frank Sinatra "for his unique mastery of the art of screen acting with the respect and affection of his colleagues

Grant appeared as a leading man opposite Marlene Dietrich in Blonde Venus (1932), and his stardom was given a further boost by Mae West when she chose him for her leading man in two of her most successful films, She Done Him Wrong and I'm No Angel (both 1933). I'm No Angel was a tremendous financial success and, along with She Done Him Wrong, which was nominated for an Academy Award for Best Picture, saved Paramount from bankruptcy. Paramount put Grant in a series of unsuccessful films until 1936, when he signed with Columbia Pictures. His first major comedy hit was when he was loaned to Hal Roach's studio for the 1937 Topper (which was distributed by MGM).



Cary Grant in The Philadelphia Story (1940)

The Awful Truth began what The Atlantic later called "the most spectacular run ever for an actor in American pictures". During the next four years, Grant appeared in several classic romantic comedies and screwball comedies, including Holiday (1938) and Bringing Up Baby(1938), both opposite Katharine Hepburn; The Philadelphia Story (1940) with Hepburn and James Stewart; His Girl Friday (1940) with Rosalind Russell; and My Favorite Wife (1940), which reunited him with Irene Dunne, his co-star in The Awful Truth. During this time, he also made the adventure films Gunga Din (1939) with Douglas Fairbanks, Jr. and Only Angels Have Wings (1939) with Jean Arthur and Rita Hayworth and dramas Penny Serenade (1941), also with Dunne, and Suspicion (1941), the first of Grant's four collaborations with Alfred Hitchcock.



With Eva Marie Saint in Hitchcock'sNorth by Northwest (1959)


https://www.youtube.com/watch?v=Qu6UY5It9lE


Grant was a favorite of Hitchcock, who called him "the only actor I ever loved in my whole life". Besides Suspicion, Grant appeared in the Hitchcock classics Notorious (1946), To Catch a Thief (1955), and North by Northwest (1959).

Producers Albert R. Broccoli and Harry Saltzman originally sought Cary Grant for the role of James Bond in Dr. No (1962), but discarded the idea as Grant would be committed to only one feature film and the producers decided to go after Sean Connery who could be part of the franchise. In 1963, he appeared opposite Audrey Hepburn in Charade directed by Stanley Donen.


With Audrey Hepburn in Charade(1963)

Grant was nominated for two Academy Awards, for Penny Serenade (1941) and None But the Lonely Heart (1944), but never won a competitive Oscar; he received a special Academy Award for Lifetime Achievement in 1970. Accepting the Best Original ScreenplayOscar on April 5, 1965 at the 37th Academy Awards Father Goose co-writer Peter Stone had quipped, "My thanks to Cary Grant, who keeps winning these things for other people." In 1981, Grant was accorded the Kennedy Center Honors.
Grant remained one of Hollywood's top box-office attractions for almost 30 years.Howard Hawks said that Grant was "so far the best that there isn't anybody to be compared to him". Film critic David Thomson called him "the best and most important actor in the history of the cinema".

eehaiupehazij
17th July 2015, 07:42 PM
சந்தேகச் சேற்றில் மலர்ந்த அன்பு செந்தாமரைகள் :
புதிய குறுந்தொடர் : Illusions and Hallucinations of Love with the King of Romance!!
பகுதி 1 : இதயத்தில் நீ !


கண்ணை மறைக்கும் காதல்.....கண் மூடினாலும் காதல் மன்னரே முன்னால்!! காதல் பைத்தியம் தீர என்ன வைத்தியப் பத்தியம்?!
ஜெமினியின் வசீகர வசிய சிரிப்பு மருந்து மாயத்தில் மந்திரித்து விட்ட கோழியாக அல்லலுறும் தேவிகா !!

கோபம் உள்ள இடத்தில்தானே குணமும் இருக்கும் சந்தேகத்தின் பிறப்பிடமும் என் அன்பு இதயம் முழுவதும் நீ இருப்பதாலேயே...என் காதல் மன்னவனே!
உறவு என்றொரு சொல்லிருந்தால் பிரிவு என்று ஒரு பொருளிருக்கும் ..

https://www.youtube.com/watch?v=uIpswezWfAM

eehaiupehazij
17th July 2015, 07:59 PM
சந்தேகச் சேற்றில் மலர்ந்த அன்பு செந்தாமரைகள் :
புதிய குறுந்தொடர் : Illusions and Hallucinations of Love with the King of Romance!!
பகுதி 2 : பாதகாணிக்கை !


எட்டடுக்கு காதல் மாளிகையில் ஏற்றி வைத்த மன்னவரே விட்டுவிட்டு விலகி செல்லலாமா?! சந்தேக வட்டத்துக்குள்ளும் அன்பின் விளிம்பில் அலைமோதும் சாவித்திரி!!

https://www.youtube.com/watch?v=YpS9AkgHCo0

eehaiupehazij
17th July 2015, 08:04 PM
சந்தேகச் சேற்றில் மலர்ந்த அன்பு செந்தாமரைகள் :
புதிய குறுந்தொடர் : Illusions and Hallucinations of Love with the King of Romance!!
பகுதி 3 : ஆடிப்பெருக்கு !

காவேரி ஓரம் கவி சொன்ன காதல் வெறும் கதைதானோ என்று பதை பதைக்கும் சி க வின் சரோ !

https://www.youtube.com/watch?v=F5qzLK10Gnk

eehaiupehazij
17th July 2015, 08:15 PM
சந்தேகச் சேற்றில் மலர்ந்த அன்பு செந்தாமரைகள் :
புதிய குறுந்தொடர் : Illusions and Hallucinations of Love with the King of Romance!!
பகுதி 4 :பாக்கியலட்சுமி !


பால்ய விவாகத்தில் இதயத்தில் நுழைந்து வாலிப வயதில் தன்னை மறந்து விட்ட கணவன் தன்னை இனம் கண்டுகொள்ள மாட்டாரோ என்ற பரிதவிப்பும் தங்கைபால் ஈர்க்கப் பட்டுவிடுவாரோ என்ற சந்தேகமும் ஒருசேர ஆட்டிவைக்கும் அபலையாக சௌகார் ஜானகி !

https://www.youtube.com/watch?v=qKjzzxsZSvE

eehaiupehazij
17th July 2015, 08:23 PM
சந்தேகச் சேற்றில் மலர்ந்த அன்பு செந்தாமரைகள் :
புதிய குறுந்தொடர் : Illusions and Hallucinations of Love with the King of Romance!!
பகுதி 5 :ராமு


உயிரையே உன்னிடம் அர்பணித்த பின்னும் மறைந்த முதல் மனைவியின் ஞாபகத்திலேயே தன்னை ஒதுக்கி விடுவாரோ என்ற சந்தேகத்தில் தடுமாறும் விஜயா

https://www.youtube.com/watch?v=rfKI9IhA-0k

eehaiupehazij
18th July 2015, 04:54 AM
சந்தேகச் சேற்றில் மலர்ந்த அன்பு செந்தாமரைகள் :
புதிய குறுந்தொடர் : Illusions and Hallucinations of Love with the King of Romance!!
பகுதி 6 :தேன் நிலவு

மோதலில் ஆரம்பித்து காதலில் முடியும் வரை கண்ணற்ற காதலுக்கு எந்த சந்தேக முடிச்சும் விழவில்லை
வேறு ஒரு பெண்ணுடன் (vasanthi) காதலனைக் காண நேரும் போது இதயத்தில் தேங்கும் சந்தேகச் சேற்றில் அன்புத் தாமரை எப்படி மலரும் ?
மலரே மலரே தெரியாதா......மனதின் நிலைமை புரியாதோ .....வைஜயந்தியையும் அலையவிடும் காதல் மன்னர்!

https://www.youtube.com/watch?v=5adqzc2GRPU

eehaiupehazij
18th July 2015, 06:35 AM
சந்தேகச் சேற்றில் மலர்ந்த அன்பு செந்தாமரைகள் :
புதிய குறுந்தொடர் : Illusions and Hallucinations of Love with the King of Romance!!
பகுதி 7 :இரு கோடுகள்


முதல் மனைவி தவறி விட்டதாக தவறாக எண்ணித் தவறாமல் இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார் புன்னகை மன்னர் பூவிழிக் கண்ணர் காதல் மன்னர்! இரண்டு மனைவிகளும் சந்திக்க நேரும் போது....யாருக்குமே No Peace of Mind! GG feels between a deep sea and a devil!!

மனங்கள் கடுகடுத்தாலும் தன்னை விட்டுக் கணவர் பிரிந்து விடுவாரோ என்ற பயத்தோடு அன்புப் பெருக்கில் ஜெயந்தி Vs சௌகார் !!


https://www.youtube.com/watch?v=VzKWWPMiSmI

eehaiupehazij
18th July 2015, 07:31 PM
மடிந்து விட்ட மனசாட்சி ......
நடிகர்திலகத்தின் மாண்பு அறியாத பேதைமை.....
அமரனே !! எம் இதயத்தில் பதிந்த உன் பொற்பாதங்களை எம் கண்ணீரால் நனைப்பதே எம்மால் இயன்ற மனமண்டப அஞ்சலி!!

http://mlife.mtsindia.in/nd/?pid=420190&rgn=tn

உலகப் பொதுமறை திருக்குறள்
உலக நடிப்பிலக்கணம் நடிகர்திலகமே ! தமிழ் மண்ணின் பெருமை உலகெங்கும் பரப்பிய செம்மலுக்கு தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கற்றுத் தந்த ஆசானுக்கு தமிழகத்தில் சொந்த மண்ணில் மணி மண்டப அஞ்சலி மறுக்கப்படுவது .....ஆறாத ரணமே!

eehaiupehazij
18th July 2015, 10:15 PM
சந்தேகச் சேற்றில் மலர்ந்த அன்பு செந்தாமரைகள் :
புதிய குறுந்தொடர் : Illusions and Hallucinations of Love with the King of Romance!!
பகுதி 8 :அவளுக்கென்று ஒரு மனம் : பாரதி Vs காஞ்சனா



மாமாவையே உயிருக்குயிராக நேசிக்கிறார் பாரதி. ஆனால் ஜெமினி மாமனோ அவரை சிறுவயது முதல் குழந்தைப் பெண் என்ற கண்ணோட்டத்திலேயே பாசம் செலுத்துகிறார். மாமா விலக விலக சந்தேக சேற்றில் சிக்கி காஞ்சனா தொடர்பு மனதை அரிக்க நிம்மதி இழக்கிறார். மாமாவின் உண்மை நிலை தெரிந்ததும் வெறுக்கவும் முடியாமல் அன்பை விளக்கவும் முடியாமல் தவித்து மதுவுக்கும் அடிமையாகிறார். சந்தர்ப்ப சூழலில் முத்துராமனின் கைப்பாவையாகிறார்.....

கலைந்த கனவும் தெளிந்த நினைவும்

https://www.youtube.com/watch?v=vHVwDiEr64Q

https://www.youtube.com/watch?v=AcZIhu9xXWg

eehaiupehazij
20th July 2015, 12:17 PM
21/07

நினைவில் நிலைத்த நடிகர்திலகம் ....
அவரது நினைவு நாள் மன அஞ்சலி ...



https://www.youtube.com/watch?v=MmYciykHXMM

https://www.youtube.com/watch?v=ydHGXXpVGdE

https://www.youtube.com/watch?v=SriIJv8p47Q

நடிகர்திலகத்தின் நினைவஞ்சலியை ஒட்டி எனது GG திரி பதிவுகளை 22.07 முதல் தொடர்கின்றேன்.
செந்தில்

ScottAlise
21st July 2015, 07:42 PM
Dear Sivaji senthil Sir,

Pl share your views about Manalane Mangayin Bhagyam movie

rajeshkrv
21st July 2015, 08:43 PM
Manalane mangayin bakkiyam.. Suvarna sundari in telugu & hindi
a very entertaining movie with great songs . handsome gemini with cute anjali devi.

eehaiupehazij
21st July 2015, 11:43 PM
For Rajesh!

மணாளனே மங்கையின் பாக்கியம் GG!

https://www.youtube.com/watch?v=XHa71KRLXqY

Telugu

https://www.youtube.com/watch?v=O5ajXn9j1bM

Hindi

https://www.youtube.com/watch?v=_uzYiB3uddg

eehaiupehazij
22nd July 2015, 07:03 AM
Dear Sivaji senthil Sir,

Pl share your views about Manalane Mangayin Bhagyam movie

What Raghul...you have forgotten all of us? Kindly come back and make your rocking presence. I concentrate on GG after I complete my pending postings on Hollywood songs and music in our Madhura Kaanankal thread.

regards, senthil

vasudevan31355
23rd July 2015, 11:22 AM
செந்தில் சார்.

நான் மிக மிக ரசித்த காட்சி ஒன்றை சொல்கிறேன். காவியப்படமான 'காவியத் தலைவி' யிலிருந்து தான்.

தன் கணவர் எம்.ஆர்.ஆர்.வாசுவுக்குப் பயந்து ஹாஸ்டலில் தன் குழந்தையைத் தங்க வைத்துப் படிக்க வைப்பார் நடன மாது சௌகார்.

http://i60.tinypic.com/bg5kzc.jpg

குழந்தைக்காக துணி எடுக்க சௌகார்துணிக்கடை சென்றிருப்பார். அப்போது பார்த்தால் தான் முன்னால் காதலித்துப் பிரிந்த காதல் மன்னன் அங்கு இருப்பார். இருவரும் ஒருவரையொருவர் பார்த்து அதிர்ச்சி அடைவார்கள். (காதல் மன்னன் இப்போது பெரிய வழக்கறிஞர். வழக்குகளில் வெற்றி பெற்றவருக்கு வாழ்க்கையில் தோல்வி. அதுவும் காதல் மன்னனுக்கே காதல் தோல்வி) இப்போது சௌகார் நேராக ஜெமினியிடம் வருவார். ஜெமினி பழைய நினைவுகளைச் சொல்லி கண் கலங்குவார்.

யாருக்கும் தெரியா வண்ணம் முகம் பார்த்தும், முகம் பார்க்காமலும், கோட்டை தனக்கு அந்த சமயம் துணையாகப் பிடித்து சௌகாரிடம் 'உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?' என்று தாழ்குரலில் கேட்பார் வேதனையோடு. அதற்கு சௌகார் ஜெமினியிடம் நேரிடையாக பதில் சொல்லாமல் மிக புத்திசாலித்தனமாக துணி எடுத்துக் கொடுக்கும் பையனிடம்,

"ஏம்பா! இந்தத் துணியில ஒரு கோட்டும், ஒரு பேண்ட்டும் தைக்கணும்னா எவ்வளவு துணி வேணும்?"

என்பார்.

உடனே கடைக்காரப் பையன் 'வீட்டுக்காரருக்கு சூட்டா?' என்று சௌகாரிடம் கேட்க, சௌகார் புரிய வைத்துவிட்ட தோரணையில் இப்போது ஜெமினியைப் பார்ப்பார். ஜெமினி அவர்களின் சம்பாஷணையிலிருந்து சௌகாருக்குக் கல்யாணம் ஆகி விட்டது என்று புரிந்து கொள்வார்.

http://i60.tinypic.com/11llesj.jpg

'ஓ'..என்று அதிர்ந்து அதிர்ச்சி முகபாவம் காட்டுவார். சௌகாரும் மிக பாவமாக நடித்திருப்பார்.

உடனே கடைப்பையன்,

'இந்தத் துணியைத்தானே கேட்டீங்கம்மா'

என்று துணியை எடுத்துப் போட,

சௌகார்,

'இல்லே! அவர் கேட்டதையேதான் நானும் கேக்கிறேன்' என்று இருபொருள் படக் கூறுவார்.

அதாவது ஜெமினி கேட்ட துணியை கேட்பது போல் ஜெமினி இவரிடம் கேட்ட 'கல்யாணம் ஆயிடுச்சா? என்ற அதே கேள்வியை பூடகமாகக் கேட்பார். கேட்டு ஜெமினியின் பதிலை ஆவலுடன் அவர் முகத்தில் எதிர்பார்ப்பார்.

கடைப்பையன்,

'ஏன் சார் நீங்களும் இதைத்தான் கேட்டீங்களா?'

என்று ஜெமினியிடம் கேட்டவுடன்,

'முதலில் லேடீஸை கவனிப்பா. இந்தத் தனிக்கட்டையைப் பத்தி என்ன? வீட்ல என்ன பெண்டாட்டியா பிள்ளையா? (குரலில் விரக்தி) என்று விரக்தியுடன் கூறி தனக்குக்கு இன்னும் திருமணம் ஆகாததை சௌகாரின் அந்தப் பாணியிலேயே சொல்லி பதிலை உணர்த்துவார். ஜெமினி இன்னும் தன் நினைப்பில் திருமணமே செய்து கொள்ளவில்லை என்று தெரிந்ததும் சௌகார் கண்கலங்குவார் வேதனையோடு.

கடைக்காரப் பையன் 'துணி கிழிக்கட்டுமா?' என்று கேட்டவுடன்

'வேண்டாம்பா! அந்த அதிர்ஷ்டம் எனக்கில்லே!'

என்று சௌகார் கண் கலங்குவார். ஜெமினி இன்னும் குழம்பி அதிர்வார். 'கல்யாணம் ஆகி விட்டது என்று சொல்கிறாள்....ஆனால் துணி வாங்க அதிர்ஷ்டம் இல்லையென்று சொல்கிறாளே... ஒருவேளை புருஷனை இழந்து விதவை ஆகி விட்டாளோ' என்று ஒருகணம் குழம்புவார்.

இருவரும் அப்போது பிரிந்து மீண்டும் கடையில் உடனே சந்திப்பார்கள்.

'நீ ஏன் அப்படி சொன்னே?'

என்று ஜெமினி விடாமல் சௌகாரிடம் கேட்க,

சௌகாரோ பேச்சை மாற்றுவார். ஜெமினி புகழ் பெற்ற பாரிஸ்டர் என்பதை பத்திரிகைகளில் பார்ப்பதாக, படித்ததாக சொல்வார்.

அதற்கு ஜெமினியின் பதில்,

'நினைவுகளை மறக்க நீதிமன்றத்துக்குப் போறேன்'

'துணியெல்லாம் பேக் பண்ணியாச்சு'

என்று பையன் வந்து சொல்ல, அப்போது ஜெமினி சௌகாரிடம்,

'நீ எப்படி? வசதியாக இருக்கியா?'

என்று அடுத்த கேள்வி கேட்பார்.

அதற்கும் சௌகார் நேரிடையாக பதில் சொல்லாமல் பையனிடம்,

'ஏம்பா ஆயிரம் ரூபாய்க்கு துணி வாங்கியிருக்கேன். கொஞ்சம் குறைச்சி போடக் கூடாதா?' என்று கேட்பார்.

அதிலிருந்து சௌகார் வசதியாக இருக்கிறார் என்று ஜெமினி புரிந்து கொள்வார். (பின்னே! அப்பெல்லாம் ஆயிரம் ரூபாய்க்கு துணி வாங்கினா சும்மாவா?)

'நீங்க எப்படி இருக்கீங்க?'

என்று சௌகார் ஜெமினியிடம் திரும்பக் கேட்பார்.

'நான் நெனச்சபடி வாழ்க்கையை நடத்த முடியல்ல. வழக்குகள் நடத்திகிட்டு இருக்கேன்'

என்று ஜெமினி சலிப்போடு சொல்லிவிட்டு,

'உன் கணவருக்கு இந்த ஊருதானா?'

என்று சௌகாரிடம் எப்படியாவது அவர் கணவரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவலாய்க் கேட்க,

அதற்கு சௌகாரோ,

'நான் மெட்ராஸில தான் இருக்கேன்'

என்பார் கணவரைப் பற்றி மறந்தும் கூட குறிப்பிடாமல். (எம்.ஆர்.ஆர். வாசு சொல்லக் கூடிய கணவன் வகை இல்லையே)

ஜெமினி வெறுத்து,

'உன் கணவரைப் பத்தி நான் எதுவுமே தெரிஞ்சிக்கக் கூடாதா?'

என்றதும்..

சௌகார்,

'இப்போ எந்த வழக்குல குறுக்கு விசாரணை செய்றீங்க?'

என்பார் அழுகையுடன்.

'எந்த வழக்குல நான் தோத்துப் போய்ட்டேனோ அந்த வழக்குலதான்'

என்று ஜெமினி பதில் சொல்லி வேதனைப்படுவார்.

உடனே சௌகார் அவசரமாகக் கிளம்பி விடுவார்.

என்ன மாதிரி வசனங்கள்! உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள். டைரக்டோரியல் டச். பாலச்சந்தர் பாலச்சந்தர்தான்

http://i61.tinypic.com/oj457b.jpg

காதல் தோல்வியையும், பிரிந்த காதலர்களின் தற்போதைய நிலைமையையும் பார்வையாளர்கள் ரசனையுடன் புரிந்து கொள்ளுமாறு காட்சி அமைப்புகள். ஜெமினியின் பிரிவு வேதனை நெஞ்சை நெருடும். சௌகார் கிழடு தட்டிப் போய் பார்க்க சகிக்கா விட்டாலும் நடிப்பில் முதிர்ச்சி தெரியும். அளவான முகபாவங்கள்.

வசனங்களுக்காகவே நான் மிக மிக ரசித்த காட்சி இது.

vasudevan31355
25th July 2015, 07:32 AM
ஜெமினியின் 'குழந்தை உள்ளம்' (1969)

ஜெமினி சொல்ல சொல்லக் கேட்காமல் சாவித்திரி சொந்தப் படம் எடுக்க வேண்டும் என்று பிடிவாதம் செய்ய, அந்த பிடிவாதத்தின் விளைவாக 'குழந்தை உள்ளம்' வந்து விழுந்தது. ஜெமினியின் வாக்கு மெய் ஆனது. சாவித்திரியின் நம்பிக்கை சரிந்து விழுந்தது.

தமிழ், தெலுங்கு இரண்டிலும் கோலோச்சிய, அதுவும் 'நடிகையர் திலகம்' என்று பட்டம் வாங்கிய நடிகை நன்றாக யோசித்து முடிவெடுத்திருக்கலாம். விதி, ஆசை இரண்டும் யாரை விட்டது?

சரி! ஸ்ரீசாவித்திரி புரொடக்ஷன்ஸ் தயாரித்த, அதிகம் பேருக்குத் தெரியாத, 'குழந்தை உள்ளம்' படத்தின் கதையை அனைவரும் தெரிந்து கொள்ளும் வண்ணம் சுருக்கமாக இங்கு அளிக்கிறேன். பிற்பாடு தொடருக்கு வருகிறேன்.

https://antrukandamugam.files.wordpress.com/2013/07/gemini-vanisree-kuzhanthai-ullam-1969-1.jpg?w=593https://antrukandamugam.files.wordpress.com/2013/07/vanisree-manokar-kuzhanthai-ullam-1969.jpg?w=528&h=394https://antrukandamugam.files.wordpress.com/2013/07/vanisree-gemini-kuzhanthai-ullam-1969.jpg?w=593

காட்டுக்குள்ளே திரிந்து ஓவியங்கள் தீட்டிக் கொண்டிருக்கும் ஜெமினி அங்கு வேறு என்ன செய்வார்? நிச்சயம் அங்கு ஒரு பெண்ணைப் பார்ப்பார் இல்லையா? காட்டுவாசிப் பெண்ணான வாணிஸ்ரீயை சொன்னபடி பார்த்து லவ்ஸ் விடுகிறார். அவ்விடமும் சம்மதமே. ஆனால் வாணிஸ்ரீயின் முறைமாமன் முரட்டு வில்லன் மனோகர் 'வாணிஸ்ரீயை கட்டிக் கொண்டே தீருவேன்' என்று உறுதியாய் இருக்கிறார். வாணிஸ்ரீ இதற்கு ஒத்துக் கொள்வாரோ? இல்லை. அப்புறம் ஜெமனி வாணிஸ்ரீயை யாருக்கும் தெரியாமல் காட்டிலேயே கல்யாணம் செய்து அங்குள்ள ஒரு வீட்டில் குடித்தனமும் செய்கிறார்.

ஊரிலிருந்து வேலைக்காரப் பெரியவர் ரங்காராவ் ஜெமினியைத் தேடிக் காட்டுக்கு வருகிறார். 'ஜெமினியின் அம்மா சாந்தகுமாரிக்கு உடல்நிலை மோசமாகி விட்டது... உடனே புறப்பட வேண்டும்... அம்மா ஜெமினிக்கு உடனே திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்'... என்று ரங்காராவ் கூற, ஜெமினி தனக்கு வாணிஸ்ரீயுடன் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது ரங்காராவிடம் சொல்கிறார். ரங்காராவ் வாணிஸ்ரீயை 'இப்போது அழைத்து வர வேண்டாம்' என்று சொல்லி ஜெமினியைத் தனியே ஊருக்கு அழைத்துப் போகிறார்.

ஜெமினி அம்மாவிடம் தனக்கு வாணியுடன் நடந்த திருமணத்தைப் பற்றி சொல்ல, முதலில் அதை ஏற்க மறுக்கும் சாந்தகுமாரி பின் மனம் மாறி, ஜெமினியிடம் காட்டுக்குச் சென்று வாணிஸ்ரீயை அழைத்து வரச் சொல்கிறார். ஜெமினியும் சந்தோஷமாக வாணிஸ்ரீயை அழைத்து வர காட்டிற்குப் போக, அங்கு அவருக்கு பேரதிர்ச்சி. காட்டில் வெள்ளம் வந்து காட்டையே அழித்துவிட்டதாகவும், அதில் வாணிஸ்ரீ இறந்து விட்டதாகவும் அங்கிருப்பவர் சொல்ல மனம் உடைந்து ஊர் திரும்புகிறார் ஜெமினி.

பின் அம்மாவின் வற்புறுத்தலால் சௌகார் ஜானகியை திருமணம் செய்து கொள்கிறார். முதல் இரவில் தன்னுடைய துயர காதல் கதையை சௌகாரிடம் மறைக்காமல் சொல்லியும் விடுகிறார். எல்லா கதையும் தெரிந்த சௌகார் ஜெமினியிடம் வாணிஸ்ரீயை மறந்து விடுமாறு கேட்டுக் கொள்கிறார். வாணிஸ்ரீயை மறக்க முடியாமல் தவிக்கிறார் ஜெமினி.

இதற்கிடையில் வாணிஸ்ரீ காட்டில் உயிருடன் தப்பித்து ஜெமினியின் குழந்தைக்குத் (ரோஜாரமணிக்கு பையன் ரோல்) தாயாகிறார். தாய்மாமன் வில்லன் மனோகர் இப்போது மனம் திருந்தி அண்ணனாய் இருந்து வாணிஸ்ரீயை கவனித்துக் கொள்கிறார்.

இங்கோ காதல் மன்னனின் இன்னொரு முயற்சியால் சௌகாருக்கு பெண் குழந்தை பிறக்கிறது. காட்டில் வாணிஸ்ரீயும், நாட்டில் சௌகாரும் ஒரே சமயத்தில் குழந்தைகளை தாலாட்டி 'உத்தமபுத்திரன்' பட ரேஞ்சுக்கு ஒரு பாடலில் வளர்க்கிறார்கள். '(பூ மரத்து நிழலமுண்டு')

ஜெமினி தன்னைத் தேடி வராதது கண்டு கவலை கொள்கிறார் வாணிஸ்ரீ. தன் பையன் ரோஜாரமணி, மாமன் மனோகர் சகிதம் பட்டணம் புறப்பட்டு ஜெமினையைத் தேடுகிறார். ஒருவழியாக ஜெமினியின் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்துப் போனால் அங்கு சௌகார் தான் ஜெமினியின் மனைவி என்று காட்டிக் கொள்ளாமல் வாணிஸ்ரீயைத் தெரிந்து கொண்டு, சென்டிமென்ட் டயலாக் சொல்லி, 'ஜெமினிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது...அவர் மனைவி சந்தோஷமாக இருப்பதை தடை செய்ய வேண்டாம்' என்று சொல்லி வாணிஸ்ரீயை திருப்பி அனுப்பி விடுகிறார். வாணிஸ்ரீயும் சௌகாருக்காகத் தன் வாழ்வைத் தியாகம் செய்து, இறுதியில் ஜெமினியின் நினைவால் தன் உயிரையும் தியாகம் செய்து விடுகிறார். மனோகர் இப்போது பையனை வளர்க்கிறார். ரோஜாரமணியை படிக்க வைத்துப் பெரிய ஆளாக்க வேண்டும் என்று துடிக்கிறார்.

https://antrukandamugam.files.wordpress.com/2014/09/baby-rojaramani-vanisree-kuzhanthai-ullam-1969.jpg?w=593https://antrukandamugam.files.wordpress.com/2015/01/baby-shakila-rojaramani-kuzhanthai-ullam-1969.jpg?w=511&h=384https://antrukandamugam.files.wordpress.com/2013/07/r-s-manokar-kuzhanthai-ullam-1969-2.jpg?w=593

ஜெமினியின் இரு குழந்தைகளும் ஒன்றையொன்று தற்செயலாகச் சந்தித்து இணைபிரியா நண்பர்கள் ஆகின்றனர். அண்ணன் தங்கையாகவே பழகுகின்றன. எல்லா விஷயமும் தெரிந்த ரங்காராவ் நைஸாக வாணிஸ்ரீயின் பையன் ரோஜாரமணியை ஜெமினி வீட்டிற்கு அடிக்கடி கூட்டி வருகிறார். இரு குழந்தைகளின் நட்பும் இறுகுகிறது. சௌகாரின் கோப குணத்தால் தனக்குத் தெரிந்த எதையும் சொல்ல முடியாமல், தெரிந்தால் ஜெமினியின் நிம்மதி கெடும் என்று வாய் பேசாமல் ஊமையாய் இருக்கிறார் ரங்காராவ்.

காட்டுவாசிப் பையன் ரோஜாரமணி என்பதால் 'அவனுடன் பழகக் கூடாது' என்று சௌகார் தன் மகள் ஷகீலாவைத் தடுக்கிறார். ரொம்ப காலமாக அந்த வீட்டை சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு நல்ல பாம்பு யாரையும் ஒன்றும் செய்வதில்லை. ஆனால் அந்த பாம்பை பிடித்துக் கொல்ல சௌகார் ஒரு பாம்புப் பிடாரனை அழைத்துவர ரங்காராவிடம் சொல்ல, ரங்காராவ் பாம்பு பிடிக்கும் பிடாரன் மனோகரைக் கூட்டி வருகிறார். மனோகர் பாம்பைப் பிடிக்கும் போது அது கொத்தி உயிரை விடுகிறார். உயிர் விடும்போது வாணிஸ்ரீயின் பையன் அதாவது தன் மருமகனை ஜெமினி கையில் ஒப்படைத்து விட்டு இறந்து போகிறார் ஜெமினிதான் அக்குழந்தையின் தகப்பன் என்று தெரியாமலேயே.

இப்போது ஜெமினி ரோஜாரமணி தன் பிள்ளை என்று தெரியாமலேயே வீட்டில் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் மனோகருக்குக் கொடுத்த வாக்கின்படி வளர்க்கிறார். ரோஜாரமணி சௌகார் மற்றும் அவர் குடும்பத்தினரால் கொடுமைப்படுத்தப்பட, ரங்காராவ் ரோஜாரமணியைத் தன் தோட்டத்து வீட்டில் கொண்டு போய் வளர்க்கிறார். ஜெமினி மனோகர் ஆசைப்படி அவனை கான்வென்ட்டில் சேர்த்து படிக்க வைக்க ஏற்பாடு செய்கிறார்.

ரோஜாரமணியால் ஜெமினிக்கும், சௌகாருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகளும், சண்டையும், சச்சரவும் ஏற்படுகிறது.

இதை உணர்ந்த ரோஜாரமணி தன்னால்தானே இவ்வளவு பிரச்னையும் என்று வீட்டைவிட்டுக் கிளம்ப, அதைக் கண்ட தங்கை ஷகீலா பின் தொடர்ந்து ஓடிவர, அந்த நேரத்தில் அங்கிருக்கும் பாம்பு ஷகீலாவைக் கொத்திவிட, காட்டுவாசி சிறுவன் ரோஜாரமணி தங்கையின் உடலில் கலந்த விஷத்தை உறிஞ்சி அவளைக் காப்ற்ற, விஷத்தை உறிஞ்சியதால் தான் உயிருக்குத் தவிக்க, முடிவில் தயாரிப்பாளர் சாவித்திரி டாக்டராக வந்து ரோஜாரமணியைக் காப்பாற்றி படத்தைக் காப்பாற்ற முடியாமல் போக, ரங்காராவும் ஜெமினியிடம் எல்லா விவரங்களையும் கூறி ரோஜாரமணி அவருடைய மகன் என்ற உண்மையை சொல்லி விட, இறுதியில் சௌகார் தவறு உணர்ந்து தன் மகளைக் காப்பற்றிய ரோஜாரமணியைத் தன் இன்னொரு குழந்தையாக ஜெமினி மனம் மகிழும்படி ஏற்றுக் கொள்ள, முடிவு ஒரு வழியாக சுபம்..

அப்பாடா! ஒரு வழியாக எப்படியோ கதை எழுதி முடித்துவிட்டேன். தலை சுற்றுகிறது. என்ன கதையோ! என்ன படமோ!

அப்புறம் ஏன் எழுதினாய் என்று நீங்கள் குமுறுவது புரிகிறது. எல்லாவற்றையும்தான் தெரிந்து கொள்ள வேண்டும். 'குழந்தை உள்ளம்' பற்றி பல பேர் பலவிதமாக நினைத்திருப்பார்கள். அதுவும் சாவித்திரியின் சொந்தப்படம் வேறு. இப்போது தெளிவாகி விடுமல்லவா.

https://antrukandamugam.files.wordpress.com/2013/08/rama-prabha-kuzhanthai-ullam-1969.jpg?w=593https://antrukandamugam.files.wordpress.com/2013/08/rama-prabha-thenkai-kuzhanthai-ullam-1969.jpg?w=593

ஜெமினி, வாணிஸ்ரீ, சௌகார் தவிர வி.கே.ஆர், தேங்காய், ரங்காராவ், சுருளிராஜன் மனோகர், வீரப்பன், ரமாப்ரபா, சாந்தகுகுமாரி, , சி.கே சரஸ்வதி, சுந்தரிபாய், கௌரவ நடிகையாக 'நடிகையர் திலகம்' என்று நட்சத்திரக் கும்பல். அத்தனையும் வேஸ்ட்.

படத்தின் மெயின் கதையைவிட நகைச்சுவைக் காட்சிகள் என்ற பெயரில் அனைவரும் செம பிளேடு போடுகின்றனர். ஜெமினிக்கும், சௌகாருக்கும் பழகிப் புளித்துப் போன ரோல். நமக்கும் இதுமாதிரிப் பார்த்து சலித்துப் போன படங்கள் ஏராளம்.

எத்தனை படத்தில்தான் ஜெமினி இரண்டு மனைவிகளுக்குக் கணவனாக வருவாரோ! எங்காவது காடு மலை என்று சுற்றி அங்கு ஒன்றை செட் அப் செய்து குழந்தையைக் கொடுத்துவிட்டு வந்து விட வேண்டியது. அப்புறம் இன்னொரு திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டியது. அப்புறம் முதல் சம்சாரம் திரும்ப குழந்தையுடன் உயிரோடு வரும். அப்புறம் இரண்டு சம்சாரங்களுக்கிடையில் சிக்கி நிம்மதி இல்லாமல் தவிக்க வேண்டியது. சம்சாரங்களையும் தவிக்க விடவேண்டியது. மனிதருக்கு இதே வேலைதானா நிஜ வாழ்க்கையைப் போன்றே?

https://antrukandamugam.files.wordpress.com/2013/07/vanisree-kuzhanthai-ullam-1969.jpg?w=593

வாணிஸ்ரீ காட்டுவாசிப் பெண். வயிறு இவருக்கு அடங்காது. சௌகார் எரிச்சல். இதிலும் முதல் இரவுக் காட்சில் அழுவார். இவர் தரும் சித்ரவதை சொல்லி மாளாது. ரங்காராவின் கடைசி காலம். அவரால் முடியாது. சிரமப்படுவார். இவருக்கு பொருத்தமே இல்லாமல் டி.எம்.எஸ்.பாட்டு வேறு.

காட்டுவாசிகள் என்று ஆந்திர வாடை அதிகம். வாணிஸ்ரீ காட்டுவாசிப் பெண். அழகாகவே இருக்கிறார். மனோகர் மேல் உடம்பு காட்டி, டார்ஜான் போல காட்டுவாசி டான்ஸ் ஒன்று போடுவது கொஞ்சம் புதுமை. ஜெமினியுடன் 'திருவாரூர்' தாஸ் புண்ணியத்தில் ஒரு ஃபைட்டும் உண்டு. கொடும் வில்லன் திடுமென்று அநியாயத்துக்கு நல்லவராக ஆகி விடுவார்.

நகைச்சுவை நடிகர்கள் படத்தை சர்வ நாசம் செய்வார்கள். தேங்காய் ஹிப்பி ரேஞ்சுக்கு செம அறுவை. வி.கே.ஆர் முதற்கொண்டு வீரப்பன் வரை அநியாயத்துக்கு நம் பொறுமை சோதிப்பார்கள்.

ஒரே ஒரு நல்ல விஷயம். சில நல்ல பாடல்கள்.

'பூமரத்து நிழலுமுண்டு...பொன்னி நதி பாட்டுமுண்டு'

'அங்கும் இங்கும் ஒன்றே ரத்தம்'

முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு (பாலாவின் அமர்க்களமான ஆரம்பகாலப் பாடல்)

என்று அருமையான பாடல்கள்.

'ஓ...தர்மத்தின் தலைவனே' (சுமார்தான்)

இசை தெலுங்கின் கோதண்டபாணி. நம் தொடர் நாயகர் பாலாவை நமக்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர். (இவருடைய இனிஷியலும் எஸ்.பி.தான்) அருமையான மூன்று முத்தான பாடல்களைத் தந்திருப்பார். ஒளிப்பதிவு சேகர் சிங் அபாரம். தயாரிப்பு திரைக்கதை, டைரெக்ஷன் சாவித்திரி.

http://i61.tinypic.com/2hoflgn.jpg

சாவித்திரி ஹீரோயின் ரோல் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் டாக்டராக சிறிது நேரம் வருவார். ஆனால் சற்று உடல் இளைத்து மிக அழகாக அருமையாக இருப்பார். இயக்கத்தில் கவனம் செலுத்தியதால் நடிக்க அவாய்ட் செய்து விட்ட மாதிரி தெரிகிறது. தவிரவும் இந்த மாதிரி ரோல்களை சாவித்திரி நிறைய செய்தும் விட்டார். தன் கணவருடன் இணைந்தே. 'பார்த்தால் பசி தீரும்' ஒன்று போதாதா?

புகழ் பெற்ற நடிகைகளாய் இருந்தாலும் நடிகைகள் படமெடுக்கக் கூடாது....இயக்கமும் செய்யக் கூடாது (சில விதிவிலக்காக இருக்கலாம்) என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்தப்படம். 'நினைத்தது ஒன்று... நடந்தது ஒன்று' தான் நினைவுக்கு வருகிறது. வெற்றி பெற்ற கதைகளை திரும்பத் திரும்ப எடுத்தால் அது தோல்வியில்தான் முடியும் என்று சாவித்திரிக்கு ஏன் தெரியாமல் போனது? வேறு புதுக் கதை ஒன்றைக் கையில் எடுத்திருக்கலாம்.

கொஞ்சம் அபூர்வமான இந்தப் படத்தைப் பற்றித் தங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

நன்றி!

eehaiupehazij
26th July 2015, 09:34 AM
வாசு சார்
உங்கள் இடைவெளியற்ற தேடுதல் குணமே உங்களை விண்ணளாவிய பதிவர் திலகமாக உயர்த்தியிருக்கிறது !
நடிகர்திலகம் என்ற புயலின் மையத்தில் இருந்து கொண்டே பல்வேறு கரைகளைக் கடந்து பதிவு மழை பொழியும் உங்கள் நிகரற்ற ஆற்றல் விடாமுயற்சி எதையும் முறைப்படுத்தி செய்வன திருந்தச் செய்தல் சுவை மதிப்பூட்டல் ...எங்களுக்கு எட்டாக் கனியே!
இளைய தலைமுறையினரின் இதயக் கனியே !!

https://www.youtube.com/watch?v=lcSF8OVHyUY

https://www.youtube.com/watch?v=NyxTVJ_gpTY

https://www.youtube.com/watch?v=dM1YcW_JDmQ

https://www.youtube.com/watch?v=kqWn1qHn_iA

eehaiupehazij
27th July 2015, 09:01 PM
இளைஞர்களின் கனவுகள் விதைப்பாளர் மக்கள் ஜனாதிபதி ஏவுகணை முன்னோடி விஞ்ஞானி பாரத ரத்னா apj அப்துல் கலாம் அவர்களின் மறைவுக்கு மதுர கானங்கள் / ஜெமினி திரி சார்ந்த கண்ணீர் அஞ்சலி

eehaiupehazij
28th July 2015, 01:02 PM
ஆயிரம் ரூபாய் திரைப்படத்திலிருந்து ஜெமினி சாவித்திரி நினைவலைகள்


பொதுவாகவே படிப்பறிவற்ற ஏழைப் பெண்கள் வாயில்லா ஜீவன்களே !
தெருவில் ஆடிப்பாடிப் பிழைக்கும் கழைக்கூத்தாடிப் பெண் சாவித்திரிக்கு தெருவில் கிடைக்கும் ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டு அவரை திருடியாகவே இச்சமுதாயம் அவநம்பிக்கை கண்ணோட்டம் தொடுப்பது இப்படக் கதையில் ஒரு மெல்லிய இழை !!
காதல் மன்னரும் விழியிழந்த தனது தம்பிக்காக வாழ்கிறார். ஒரு சூழலில் வெள்ளப் பெருக்கின்போது மயங்கிச் சரியும் ஜெமினியை சாவித்திரி மீட்டு
காதல் வயப்படுகிறார் !
இருவரின் கதைப் பாதையையும் இணைக்கும் பாலமாக ராகினி ஒரு சர்கஸ் கலைஞராக அசோகன் மற்றும் எம் ஆர் ராதா பிடியில் ..ஒருதலைக் காதலை தியாகம் செய்து ஜெமினி சாவித்திரியை இணைக்கிறார் !!
வழக்கமான கதைப் போக்கே எனினும் சில காட்சிகளில் ஜெமினி தனது ராமுத்தனமான நடிப்புத் திறமையை உருக்கமாக வெளிப்படுத்துகிறார்
பொருந்தாத உடல் வாகாக இருப்பினும் நடிப்பினால் சரி செய்கிறார் சாவித்திரி
அவரது தங்கையாக வந்து உருக்கம் காட்டும் சிறுபெண் ஒரு ஆடல் பாடல் காட்சியில் பின்னுகிறார் !!

https://www.youtube.com/watch?v=x4yWkdjpA-A&list=PLviYSX9LX22YQ6FZueQ7YdQHNqiOo80WR

eehaiupehazij
28th July 2015, 09:12 PM
Nostalgia on GG songs !!

ஒன்பதாம் மேக அடுக்குப் பாடல்களும் கடந்து செல்லும் மேகத்தூறல் பாடல்களும்

(காதல் மன்னருக்கான நடிகர்திலகம் திரியின் இணைப்பதிவு !)

Cloud 9 songs of GG Vs Passing Cloud songs of GG!

பொதுவாகவே காதல் மன்னரின் படங்களில் ஏ எம் ராஜா அல்லது பி பி ஸ்ரீனிவாசின் காதல் குழைவுப் பாடல்கள் இன்றும் சிரஞ்சீவித்தனத்துடன் காணொளி வடிவில்
சேட்டிலைட் சேனல்களில் ரசிகர்களை ஈர்க்கின்றன ! அவ்வப்போது சங்கமம் போன்ற படங்களில் டி எம் எஸ்....சாந்தி நிலையம், அவளுக்கென்று ஒரு மனம்
போன்ற படங்களில் எஸ் பி பி ...மனமகிழ்வே!
இருப்பினும் ஒரு ஜெமினி படத்தில் எல்லாப் பாடல்களும் Cloud 9 இனிமையின் உச்சமாக இருப்பதில்லை! ..ஓரிரு பாடல்கள் நமது எதிர்பார்ப்புக்கு ஏற்றாற் போல அமையாது கடந்து செல்லும் மேகமாகி விடுவதும் உண்டு!!

பகுதி 1 : ஸ்ரீதரின் தேன் நிலவு (1959) பாடல்கள்!!

ஜெமினி கணேசனின் காதல் மன்னர் பட்டத்தை அசைக்க முடியாத அளவு நங்கூரமடித்த படம் ஸ்ரீதரின் இயக்கத்தில் ராஜாவின் இசையில் அன்றும் இன்றும் என்றும்
மனதை வசீகரிக்கும் தேனிசைப் பாடல்களைக் கொண்ட தேனிலவு திரைப்படம் !!
பாட்டுப் பாடவா ஓஹோ எந்தன் பேபி, காலையும் நீயே, சின்ன சின்னக் கண்ணிலே, நிலவும் மலரும்....
மனமகிழ்வின் உச்சத்தில் நம்மை கிறங்கடித்த
Cloud 9 மதுர கானங்கள்!

https://www.youtube.com/watch?v=BqI5RwlhUPs


....ஆனால் ஊரெங்கும் தேடினேன் பாடல் கடந்து சென்ற மேகமே!

https://www.youtube.com/watch?v=bB-VhpsVGUw

eehaiupehazij
30th July 2015, 08:41 AM
The last rites for our honorable simpleton People's erstwhile President of India Dr. APJ Abdhul Kalaam are on the anvil.
May his soul rest in peace even as his vision for having prompted our younger generation to 'dream' to become the cream of our national development would remain a mission under his eternal guidance

rajeshkrv
30th July 2015, 08:42 AM
my fav then nilavu. nilavum malarum paaduthu .. what a song

eehaiupehazij
2nd August 2015, 11:28 PM
Gap fillers from GG-Padmini starrer Aasai

'ஆசை'யை தரவேற்றி நிறைவேற்றியமைக்கு ஓசையான கரவொலி நன்றிகள் வாசு சார்

https://www.youtube.com/watch?v=_nGxow4L2cY

https://www.youtube.com/watch?v=MUrvoTRszPc

https://www.youtube.com/watch?v=AX0L9J-GlHM

https://www.youtube.com/watch?v=WzMt7hmD0W4

https://www.youtube.com/watch?v=wbNRK_DchYE

https://www.youtube.com/watch?v=L9pV0dpVmnw

chinnakkannan
3rd August 2015, 12:24 AM
https://youtu.be/UhKMqafjLas

ஈ படம் பற்றி டீடெய்ல்ஸ் பறஞ்சுருக்கோ சி.செ :)

சிரித்தாலும் கண்ணீர் வரும்..
அழுதாலும் கண்ணீர் வரும்
உறவினிலே சிரிப்பு வரும்
பிரிவினிலே அழுகை வரும்
அழுதாலும் சிரித்தாலும்
சுகமாக அமைதி வரும்.

குழந்தை உள்ளம்.. கனிந்த எண்ணம்
கொண்டு பார்த்தால் புன்னகை
காதல் பாதி கவலை பாதி
கலந்து பார்த்தால் சஞ்சலம்

இன்பம் என்ன துன்பம் என்ன
மனதுதானே காரணம்..
மனது பாடும் பாட்டுக்கெல்லாம்
கண்கள்தானே காரணம்..
கண்கள் பார்க்கும் பார்வைக்கெல்லாம்
பெண்கள்தானே காரணம்..
பெண்கள் வாழும் வாழ்வுக்கெல்லாம்..
தெய்வம்தானே காரணம்..

லிரிக்ஸ் வாலியா கண்ணதாசனா..

eehaiupehazij
3rd August 2015, 05:59 PM
சி க !

பெண் என்றால் பெண்

விரிவாக பிறகு எழுதுகிறேன் !!

eehaiupehazij
6th August 2015, 07:11 PM
தேன் சொட்டும் வானமும் தேள் கொட்டும் வனமும்


கற்பனை வளம் மிகுந்த பாடல் வரிகள் பொருத்தமான இசைகோர்ப்பில் வளமான குரல் குழைவில் வண்ண மயமான நடனம் கலந்த காட்சியமைப்பில் திறமையான நடிகர்களின் மெருகேற்றலில் வரும்போது அது தேன் சொட்டும் வானமே!!
ஏனோதானோ என்று நாராசமான கற்பனை வறட்சி நிறைந்த சொதப்பலான காட்சியமைப்பில் அதுவே தேள் கொட்டும் வனமாகிவிடும் வாய்ப்பும் உண்டே !!

பகுதி 1 : நடிகர்திலகத்தின் வீரபாண்டிய கட்டபொம்மன்

இன்பம் பொங்கும் வெண்ணிலா Vs ஆத்துக்குள்ளே ஊத்தை வெட்டி...

தேன் சிந்தும் வானமான இனிமை பொங்கி வழியும் காட்சியமைப்பு !
https://www.youtube.com/watch?v=DjbFwPJgDTE

விழிபிதுங்கி வெளியே ஓட வைக்கும் வனத் தேள்கடி !!
https://www.youtube.com/watch?v=e6Wjfzdm2Hg

Russellisf
7th August 2015, 04:49 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsnz7ajk3i.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsnz7ajk3i.jpg.html)

eehaiupehazij
7th August 2015, 09:17 PM
'கலர்' காஞ்சனாவின் கான மதுரங்கள் : வானவில் பார்வை VIBGYOR view!

வானத்தில் விமான நங்கையாக பறந்து கொண்டிருந்த காஞ்சனாவை கனவுத் தொழிற்சாலை அதிபர் ஸ்ரீதர் பூமியில் இறங்கிவந்து கால் பதித்த நட்சத்திரமாக்கினார்!
சிவந்த மெலிந்த அழகிய உடலமைப்புடன் வசீகரமான முகத் தோற்றத்துடன் காதலிக்க நேரமில்லைக்குப் பிறகு அதிக அளவு வண்ணப் படங்கள் அமைந்து கலர் கதாநாயகி பட்டம் வென்று அனைத்து கதாநாயகர்களாலும் விரும்பப்பட்ட கனவுக் கன்னியாக ரசிக நெஞ்சங்களில் கொடிகட்டிப் பறந்தார்!

KANCHANA VIBGYOR VIEW 1

சாந்தி நிலையம்(1969)

வானவில்லின் முதல் வண்ண அடுக்கின் உச்சியில் சிவப்பு (RED)!

எந்த வண்ணத்தையும் விட பளீரிடுவது சிவப்பு வண்ணமே !

அவ்வண்ணமே கலர் காஞ்சனாவின் எழில் தோற்றம் 'பச்'சென்று மனதில் இறங்கியது காதல் மன்னரின் இணைவில் சாந்தி நிலையம் திரைக் காவியத்திலேயே !

மார்கஸ் பர்ட்லெ என்னும் ஒளி ஓவிய சக்கரவர்த்தியின் பசுமைக் குளுமையான படப் பதிவில் ஜெமினி கணேசன் மிக இயற்கையான ஆண்மையழகில் ஏ எம் ராஜா பி பி ஸ்ரீனிவாசுக்கு எவ்வகையிலும் குறைந்திடாத பாடும் நிலா பாலுவின் பொருத்தமான குரல் குழைவில் மின்னினார் காதலின் மன்னராக !!
அவருக்கு மிகவும் பொருந்திய ஜோடியாக காஞ்சனா அழகின் அஜந்தா எல்லோரா சிற்பமாக இனிமை சேர்த்து இயற்கையின் இளைய கன்னியாக உருவகப் படுத்தப் பட்ட இப்பாடலே வானவில்லின் உச்ச அடுக்கு சிவப்பு எக்காலத்திலும் !!

https://www.youtube.com/watch?v=LC5-vQtAQx4

சாந்தி நிலையம் காஞ்சனா புயல் மையம் கொண்ட வண்ணத் திரை மதுர கான மழைப் பொழிவே! இப்புயல் கடந்த கரைகள்!!

https://www.youtube.com/watch?v=uVH9o1_kyXE

https://www.youtube.com/watch?v=hp5b-ZmgQJ8

https://www.youtube.com/watch?v=WbitNDIYlXk

https://www.youtube.com/watch?v=XChwaujC198

eehaiupehazij
12th August 2015, 11:16 PM
In the Hollywood musical extravaganza the Sound of Music (1965) Christopher Plummer donned the role of the care taker for the 7 children of his brother, later this role was elaborted in the celebrated version in tamil Shanthi Nilaiyam GG reprised this role magnificiently. Kanchana substitued for Julie Andrews!

https://www.youtube.com/watch?v=LJTRZI2HThU

https://www.youtube.com/watch?v=qUfWRBGQkz0

eehaiupehazij
13th August 2015, 02:47 PM
ஒட்டப் செட்டப் கெட்டப் கெட்டிக்காரர்களின் மாறுவேட மதுர கீதங்கள் / fancy super songs!

கான்செப்ட் நோக்கம் : ஜெகதலபிரதாபனாக கஜகர்ணம் அடித்தாவது காதலியின் உள்ளம் கவர்வதே!

கெட்டப் கெட்டிக்காரர் : காதல் மன்னர் ஜெமினி கணேசன் மாறுவேட மதுரம் 3 : நான் அவனில்லை



பொதுவாக காதல் மன்னரின் படங்களில் மாறுவேடக் காட்சிகள் அதிகமாக இருக்காது
நடிகர்திலகமும் மக்கள்திலகமும் ஏராளமான படங்களில் மாறுவேடக் காட்சிகளில் ரசிகர்களைக் குஷிப் படுத்தினார்கள் !
வட்டியும் முதலுமாக நான் அவனில்லை திரைப்படத்தில் படம் நெடுக ஒட்டப் செட்டப் கெட்டப்களில் பின்னி எடுத்தார் ஜெமினி !!
ஒரு மூளைக்காரன் அபலைப் பெண்களை எப்படி மூளைச்சலவை செய்து பணத்தையும் பொருளையும் கற்பையும் அபகரித்து மாட்டிக் கொண்டவுடன் நான் அவனில்லை என்ற பல்லவியையே திரும்பத் திரும்பப் பாடி சட்டத்தையும் நம்மையும் ஏமாற்றுவதை தனது வாழ்நாள் உச்சகட்ட சிறப்பு சாதனை நடிப்பாக வெளிப்படுத்தி ரசிக நெஞ்சங்களில் இன்றளவும் நிலைக்கிறார் காதல் மன்னர் !!

https://www.youtube.com/watch?v=NK-9e0YrdE8

https://www.youtube.com/watch?v=WSx2dyIT46A

https://www.youtube.com/watch?v=frDep4j1uas

eehaiupehazij
13th August 2015, 09:15 PM
இன்று ஆகஸ்ட் 13 ஆல்பிரட் ஹிட்ச்காக் என்னும் உலகத்திரை மேதை தனது தனிப்பட்ட அடையாளமான திக்திக் சஸ்பென்ஸ் திரில்லர்கள் மூலம் ரசிக நெஞ்சங்களின் லப்டப்பை ஏற்றி மெய்சிலிர்க்க வைத்தவரின் பிறந்த நாள்!
ஹிட்ச்காக்கின் தாக்கத்தில் தமிழில் முயற்சி செய்யப்பட்ட திரைப்படங்களில் முதன்மையானது நடிகர்திலகத்தின் புதிய பறவை...அடுத்த இடத்தில் ரவியின் அதே கண்கள் ...பிறகு மீண்டும் நடிகர்திலகத்தின் வெள்ளை ரோஜா!!
ஹிட்ச்காக்கின் மறக்க முடியாத திகில் படங்களில் முதன்மையானது சைக்கோ !

பிரசித்தி பெற்ற காவியங்கள் கேரி கிராண்டின் நடிப்பில் நார்த் பை நார்த் வெஸ்ட் , ஜேம்ஸ் ஸ்டூவர்ட் நடிப்பில் வெளியான வெர்டிகோ, ரியர் விண்டோ, தி மேன் ஹூ நியூ டூமச் , மற்றும் டயல் எம் பார் மர்டர்......எண்ணற்றவை!
அவரது படங்களில் கதாநாயகியரின் ஒப்பனை அற்புதமாக இருக்கும் !!

உலகையே மகிழ்வித்துப் பரவசப்படுத்தி மெய்சிலிர்க்க வைத்த மேதைக்கு நடிகர்திலகம் / காதல் மன்னர் / மதுர கானங்கள் திரி சார்ந்த நன்றியுடன் நினைவு கூர்தல் சமர்ப்பிக்கிறேன்!

https://www.youtube.com/watch?v=fVoVdKOLP04

eehaiupehazij
13th August 2015, 11:08 PM
இன்று உலக இடதுகையாளர்கள் தினம்
காதல் மன்னரின் மிஸ்ஸியம்மா சாவித்திரி அவர்கள் இடது கைப் பழக்கம் உள்ளவர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்

eehaiupehazij
15th August 2015, 12:21 AM
காதல் மன்னரின்/நடிகர்திலகத்தின் சு(த)ந்(தி)தர தேசத்தி(ரியி)னரின் இதயம் இனித்திட மனம் கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !

eehaiupehazij
19th August 2015, 12:37 PM
Gap filler

From GG starrer Manikka Thottil

https://www.youtube.com/watch?v=QWXsYwS2AHc

eehaiupehazij
19th August 2015, 12:41 PM
Monotony breaker

Raajaaththi petreduppal rajakumaran!


https://www.youtube.com/watch?v=WAu6dFeymNg

eehaiupehazij
19th August 2015, 12:49 PM
https://www.youtube.com/watch?v=JZTzPAY-K_Y

eehaiupehazij
20th August 2015, 08:07 AM
தமிழகம் தந்திட்ட தரணியின் விண்ணளாவிய பிரபஞ்சத்தின் வாழ்நாள் பெருமை நடிகர்திலகத்தின் தனி உடைமை வீர பாண்டிய கட்டபொம்மன் வந்துவிட்டார் பராக் பராக் !


வரும் வாரங்கள் பரபரப்பானவை! பலருக்கு மலரும் மனோகர நினைவுகள்!! தீப்பொறி கிளப்பும் தேசபக்தி தோய்ந்த கூர் வசனங்கள் நடிப்பின் பிரம்மனால் உயிரூட்டப்பட்டு மீண்டும் ஓர் ஆழிப் பேரலையை ஊழித்தீயை ஆர்ப்பரித்து எழ வைக்கும் தருணங்கள் !!நமது மனதையும் எண்ணங்களையும் ஒருமுகப்படுத்தி பரவச மயக்கநிலைக்கு நாம் தள்ளப்படும் அதிசயம் நிகழப் போகிறதே! இந்தத் தலைமுறை சிறார்களும் இனி கட்டபொம்மன் வேடம் தரித்து அவர் பெருமைப் படுத்திய வசனங்களை மழலையால் மிழற்றப் போகும் பொற்காலம் திரும்புகிறது!!!

என்றென்றும் நமது நினைவில் வாழும் நடிகர்திலகம் கர்ஜிக்கும் வண்ணத்திரைகள் / கண்ணுறும் விழித்திரைகள் புண்ணியம் செய்தவையே !

இந்த வெள்ளிவிழாக் காவியத்தில் நமது 'உனக்கென்ன குறைச்சல்' வெள்ளிவிழாக் கதாநாயகர் பங்கும் சிறப்பானதே !காலத்தால் நிலைத்திட்ட கவின்மிகு காவியம் நிகரற்ற வெற்றியை எட்டிட நடிகர்திலகம் / காதல் மன்னர் / மதுரகானங்கள் திரிகள் சார்ந்த வரவேற்பும் வாழ்த்துக்களும் !!

Generations' Celebrity Warrior General VPKB's Grand Gala Brand Power epitomized in epic proportions by the 'One and the Only One' Thesaurus of Acting Nadigar Thilagam Sivaji Ganesan!

Exploding on the screens from tomorrow!

https://www.youtube.com/watch?v=fXL2WsxKvw4

https://www.youtube.com/watch?v=DjbFwPJgDTE

eehaiupehazij
22nd August 2015, 06:33 PM
நடிகர்திலகத்தின் கோட்டையில் காதல் மன்னரின் இனிமைப் பங்களிப்பு !

வீரபாண்டிய கட்டபொம்மன் ஒட்டுமொத்தமாக நடிகர்திலகத்தின் நடிப்பின் காப்புரிமை எனினும் வழக்கம்போல காதல் மன்னரும் தனது தனிப்பட்ட பாணியில் அமைதியாக இனிமை சேர்க்கிறார் ..நாட்டியப் பேரொளியின் இணைவில்...!!

https://www.youtube.com/watch?v=2ruIa32-07c

https://www.youtube.com/watch?v=Uqw4qR4z9F8

https://www.youtube.com/watch?v=qAtzGQDnS0s

eehaiupehazij
23rd August 2015, 08:11 PM
Shower Stars !

நட்சத்திரக் கு(வி)ளியல் பாடல்களும் 'பாத்ரூம் சிங்கர்'களுக்கான மதுர கானங்களே!


வேலை முடிந்து அலுப்புத் தீர வீட்டுக்கு வந்ததும் நமக்குத் தோன்றுவது ஒரு குளியல் போட்டால் புத்துணர்ச்சி மீளுமே என்பதுதான் !
என்ன.......குளியல் அ(மு)றைதான் நமது வசதி வாய்ப்புக்களுக்குத் தகுந்த மாதிரி மாறிக் கொண்டே இருக்கும்!!

கிணற்றடியில் தண்ணீர் சேந்தி ஆனந்தக் குளியல் போடலாம் ....வீட்டுக்குப் பக்கத்தில் பின்புறத்தில் ஆறோடினால் நீராடலாம்......நீச்சல் குளமிருந்தால் உலக நீச்சல் நடன தாரகை எஸ்தர் வில்லியம்ஸ் போல ஒரு டைவ் அடித்து மீனாய் நெளிந்து நீந்தலாம்......

பட்ஜெட்டில் பாத்டப் இருந்தால் முங்கலாம் ....எல்லாவற்றையும் விட சிறந்தது ஷவரை திறந்து விட்டு பாடிக்கொண்டே மேனி நனைப்பதே!!

ஷவர் குளியல் நமது சிந்தனைகளை ஒருமுகப் படுத்தும் அற்புதமான உடற்பயிற்சியும் கூட!! வேண்டுமென்றால் கீசரை போட்டுக்கொண்டு இதமான வெப்ப நீர்த் திவலைகளிலும் கவலைகளை வடித்துத் துரத்தலாம் !


அந்தக்காலப் படங்களில் எப்படியெல்லாம் குளியல் போட்டார்கள் என்பதை நாமும் 'மஞ்சக் குளித்து'ப் பார்ப்போமா !

ஷவர் ஸ்டார் 1 : ஜெமினி கணேசன் (தனிக்குளியல் எங்கே போட விட்டார்கள்!)
வஞ்சிக்கோட்டை வாலிபனில் அடிமைப் பையன் ஜெமினியை ராஜா மகள் ரோஜா மலர் அல்லிராணி வைஜயந்தி மாலா ஒரு ஊடலுக்குப் பின் கூடலில் டூயட் பாடவேண்டி பொற்றாமரைக் குளத்தில் பத்துக்கும் மேற்பட்ட பதுமையரை விட்டு அழுக்குத் தேய்த்துக் குளிப்பாட்டுவார் ...அப்புறம்..வெள்ளித்திரையில்....

Watch from 1 :06 : 00.....quite interesting segment!

https://www.youtube.com/watch?v=4Hf0zQDtAGg

சிலீரென்று குளித்துவிட்டுப் பளீரென்று நகைநட்டுடன் புன்னகை பூக்கும் காதல் மன்னருக்கான வைஜயந்தியின் அதிரடி ஆட்ட பாட்டம்!

[url]https://www.youtube.com/watch?v=zkHlWFI8sac

இளமை கொலுவிருக்கும் இனிமை குவிந்திருக்கும் குமரிகளுடன் குளித்துக் கும்மாளமிடும் மிஸ்டர் ஜமீன்தார் ஜெமினி !!

[url]https://www.youtube.com/watch?v=IbS6KHTlhsM

நீச்சல் குளமென்ன ....ஆற்றோட்டத்திலும் பத்மினி குளிப்பதால் சுடும் தண்ணீரும் ஜெமினிக்குப் பன்னீரே! தண்ணீர் சுடுவதென்ன?

[url]https://www.youtube.com/watch?v=EPWTU1WuC10

கொடுத்து வைத்த காதல் மன்னர் ரோஜர் மூரின் James Bond பனிச்சறுக்கு ரேஞ்சுக்கு வைஜயந்தியுடன் தேன் நிலவு காஷ்மீர் ஏரியில் நீர்ச் சறுக்கு விளையாட்டில் நிபுணராக சாகசம் செய்கிறாரே!

https://www.youtube.com/watch?v=WekowqRIO1E

Never Before Never Again feat by Esther (the one and the only) Williams!

போனஸ்: மாற்றார் தோட்ட நீச்சல் நடன மதுர கீதம்
எஸ்தர் வில்லியம்ஸ் ....இப்பூவுலகின் ஈடுஇணையற்ற நீச்சல் சாதனை நாயகி.....

https://www.youtube.com/watch?v=rd1-dysPP9g

eehaiupehazij
27th August 2015, 05:35 PM
ஆசை ஆசை ! ஆசை ஆசை !!

ஆசையே துன்பத்தின் ஆணிவேர் என்பது புத்தரின் அருளோசை !
ஆடையில்லாதவன் அரை மனிதன் அதுபோலவே ஆசையில்லாதவர் அரைகுறை மனிதரே !!

ஆக்கபூர்வமான ஆசைகளே நாட்டின் வீட்டின் முன்னேற்றத்துக்கு அடித்தளம்!
பற்றற்றவரால் இப்பூமிக்கு எந்த பிரயோஜனமுமில்லை ஆசைகளே முன்னேற்றத்தின் படிக்கட்டுக்கள் !! பேராசையே பெருநஷ்டம்!!

தேடலே ஆசையின் விளைவு ! தேடல்களால்தான் நடிகர்திலகமும் காதல் மன்னரும் மக்கள்திலகமும் புகழுச்சியில் கோலோச்சி நமக்கெல்லாம் வழிகாட்டிகளாக நிலைக்க முடிந்தது ! காடு வாவா என்றாலும் ஆசை நம்மை நீங்குவதில்லை!! பிறப்பு முதல் இறப்பு வரை ரகம்ரகமாக எத்தனை ஆசைகள் நமது கனவுகளில் விதைக்கப்பட்ட கவிதைகளாக உலா வருகின்றன !!

பஞ்சுமிட்டாய்க்கு ஆசைப்படும் பிஞ்சுப் பருவம் ! கண்டதெல்லாம் கடலையான விடலைப் பருவம்!காதலை ஆராதிக்கும் வாலிபப் பருவம் !! குடும்பத்தை நேசிக்கும் சுமைதாங்கி வாழ்க்கைப் பருவம்! மனைவியை காதலிக்கும் வயோதிகப் பருவம்! கடவுளின் காலடி தேடும் உயிருதிர் பருவம்!!

மண்ணில் வந்து மண்ணில் வாழ்ந்து மண்ணையே சேரும்வரை ஆசைகள்தான் எப்பேர்பட்ட வண்ணக்கலவைகளான எண்ணச் சிதறல்கள்!!

காதல் மன்னரின் ஆசைப் பாடல்கள் !

ஆசையினாலே மனம்! ...அஞ்சுது கெஞ்சுது தினம்

https://www.youtube.com/watch?v=aKeGYz325cA

ஆசைப்பட்டது நானல்ல ...

https://www.youtube.com/watch?v=5JEw7WM2_1c

eehaiupehazij
27th August 2015, 09:51 PM
காதல் மன்னர் ஜெமினி கணேசனின் தமிழ்த் திரைப் பங்களிப்பு சமகாலத்தியவரான நடிப்பின் முதல் மரியாதைப் பெருமைக்குரிய நடிகர்திலகம் மற்றும் பொழுதுபோக்குத் திரையம்சங்களின் சக்கரவர்த்தியாகவும் உலகுக்கே வழிகாட்டிய அரசியல் விற்பன்னராகவும் வெற்றிகரமாக வலம்வந்த மக்கள்திலகம் ஆகியோரின் பங்களிப்பு சாதனைகளுக்குக் குறைந்ததல்ல ! திரையில் கண்ணியமான காதலை அவர் உருவகப்படுத்திய விதமே எக்காலத்திலும் யாராலும் நெருங்கமுடியாத காதல் சக்கரவர்த்தியாக இனிமையான பாடல் காட்சியமைப்புக்களில் இதமான காதலுணர்வுகளை ரசிக்கும் வண்ணம் உயிரூட்டிய காதல் மன்னராகவும் ரசிகர் வட்டமில்லாத போதும் அரசியல் பின்புலத்திற்கு ஆசைப்படாத போதும் அவர்களுக்கிணை யான மூவேந்தர்களில் ஒருவராக ஆலவட்டம் சூட்டியது!!

இயற்கையிலேயே நல்ல உடலமைப்பும் முகப் பொலிவும் வியப்பளிக்கும் சிகை நேர்த்தியும் படிப்பும் பதவியும் தந்த அறிவுத் தோற்றமும் மலர்ந்த வதனத்தில் ஒரு வகையான குறும்பு மின்னலும் இயல்பான நகைச்சுவையுணர்வும் நாடகபாணி தவிர்த்த வாழ்வியல் குணாதிசய வெளிப்பாடுகளும் ஜெமினி கணேசன்
அவர்களை தனித்தன்மை வாய்ந்தவராக அடையாள வித்தியாசம் காட்டிற்று!

பழகுவதற்கு இனியவராக ஈகோ அற்றவராக சக நாயகர்களுடன் இணை ந்து நடித்து படங்களுக்குப் பெருமை சேர்த்திட்ட பண்பாளர்! ஸ்ரீதர், பாலசந்தர் போன்ற புதுமை இயக்குனர்களின் முதல் தேர்வாக விளங்கியவர் Directors Delight என்று விரும்பப் பட்டவர்!

I feel previleged to write elaborately on his filmography, his acting calibre, his acting comparisons with the global galaxy of actors of his similar calibre like Gregory Peck, Omar Shariff, Christopher Plummer, Rock Hudson, Rex Harrison, James Cagney, Richard Burton...
in the segments yet to come!!

Senthil

eehaiupehazij
28th August 2015, 08:36 AM
ഓണാസംസകൾ
Hearty ONAM Greetings to one and all!!

அனைத்து திரி நண்பர்களுக்கும் இதயம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துக்கள்!

https://www.youtube.com/watch?v=PnEV1CYEpy8

raagadevan
28th August 2015, 09:27 AM
Gemini Ganesan & Padmini dancing in the Malayalam movie KUMAARASAMBHAVAM (1969):

https://www.youtube.com/watch?v=AkOEA8576vs

chinnakkannan
28th August 2015, 01:29 PM
ஹாய் சி.செ ராகதேவன் ஓணம் நல் வாழ்த்துக்கள்..

ராகினி ஜெமினியாம்ல..ஏழைப் பங்காளன்ல..

https://youtu.be/uC5xvfp2TvM

eehaiupehazij
28th August 2015, 02:08 PM
Gap filler / Monotony breaker!

GG starrer வாழ்க்கை வாழ்வதற்கே திரைப்படத்திலிருந்து தெய்வக் குழந்தைகளின் பாடல் ...கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தே!

https://www.youtube.com/watch?v=Ik38lU80tMg

Same repeated with grown ups GG and Saroja!

https://www.youtube.com/watch?v=l0zQBYfbyp8

eehaiupehazij
29th August 2015, 12:32 AM
காதல் மன்னர் ரசித்து மகிழ்ந்த மொட்டை மாடி மதுர கீதங்கள் !!


காற்றோட்டமான மொட்டை மாடிகள் இரவு நேரங்களிலும் மாலைப் பொழுதுகளிலும் மேகங்கள் நட்சத்திரங்கள் குளிர் நிலவு தென்றல் காற்று பின்னணியில் ரம்மியமான சூழலை உருவாக்கி மனதின் ரணங்களை ஆற்றும் ஆற்றல் படைத்தது!!

இப்பின்னணியில் காதல்நாயகியரின் மனதை வருடும் மயிலிறகான பாடல்களை ரசித்து மகிழ்ந்திடும் காதல் மன்னர் மச்சக்காரரே !!

மொட்டை மாடி 1 : மாலைப் பொழுதின் மயக்கத்தில்....

https://www.youtube.com/watch?v=qKjzzxsZSvE

2 : கண்களை அயர வைக்கும் கான இரவு!!

https://www.youtube.com/watch?v=XupZjuPB_fU

மொட்டைமாடி 3:

தனிமையிலே இனிமை காண முடியுமா தங்கச்சிலை அருகிலிருக்கையில் மொட்டைமாடியும் ஒன்பதாம் மேக அடுக்கே !

https://www.youtube.com/watch?v=T5MraWlvo84

eehaiupehazij
29th August 2015, 09:49 PM
அன்பிற்கினிய மதிப்புக்குரிய மதுரகான திரி நண்பர்கள் வாசு /மது / ராகவேந்தர் / சின்னக்கண்ணன் / ரவி / ராஜ்ராஜ் / ராகதேவன் / கல்நாயக் / ராஜேஷ் மற்றும்
நெல்லை கோபு ,mgr திரியிலிருந்து எஸ்வீ / செல்வகுமார்/கலைவேந்தன் /வரதகுமார்/ சைலேஷ் / ரவிசந்திரன் / யுகேஷ் /முத்தையன் அம்மு./சுகாராம்....
நடிகர்திலகம் திரியின் நண்பர்கள் முரளி / ரவிகிரண்/ கோபால் / ஜோ /சுப்பிரமணியம் ராமஜெயம்/ j ராதாக்ருஷ்ணன்/சிவா / ஆதிராம் / திருச்சி ராம் / s. வாசுதேவன்/sss/ vcs / ஹரீஷ்/ராகுல் /பட்டாக்கத்தியர் / அரிமாசெந்தில்/ சுந்தராஜன்/ பாஸ்கர் /ஆதவன்ரவி/ சார்ஸ்! அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்......

திரிப் பதிவுகளுக்குத் தற்காலிக இடைவெளி தரவேண்டிய சூழல்! எனது மொத்த லாபமே வேற்றுமையிலும் ஒற்றுமையாக மலர்ந்திட்ட இனிய நண்பர்களான நீங்கள் அனைவருமே!!


வருகிற செப்டம்பர் 30 எனது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண்மைப் பொறியியல் பேராசிரியப் பணியிலிருந்து 60 வயது முதிர்வில் 37 வருடங்கள்.கல்விப்பணி...மூவாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள், முன்னூறுக்கும் அதிகமான ஆராய்ச்சி கட்டுரைகள், இருபத்தைந்து முதுநிலை/ பதினைந்து முனைவர் பட்ட ஆய்வு வழிகாட்டியாக....பசுமையான நினைவுகளுடன் மனநிறைவுடன் ஓய்வு பெறுகிறேன்!!
பென்ஷன் பார்மாலிடிஸ் ...அடுத்த கௌரவ பேராசிரியர் பணியில் சேர்வு....கொஞ்சம் கான்சென்ட்ரேஷன் தேவைப்படுவதால் சிறு இடைவெளி!!

திரைப்படங்கள் மேலும் நம்மை மகிழ்வித்த நடிகர்திலகம் மக்கள் திலகம் காதல் மன்னர் .....அனைவர் மீதும் நன்றிகலந்த மரியாதை நிமித்தம் நண்பர்களான உங்களுடன் இணை ந்து மகிழ்ந்த நினைவுகளுடன்....விடை பெறுகிறேன்!!

மீண்டும் வருவேன் சில கடமைகள் நிறைவு பெற்ற பின்னர் ...நிச்சயமாக அன்பு நெஞ்சங்களே!!

என்றும் உங்கள் நண்பன் செந்தில்

vasudevan31355
4th September 2015, 03:16 PM
'நாளை நாம் ஒரு ராஜாங்கம் அமைப்போம்'

'புன்னகை'

http://padamhosting.me/out.php/i27837_punnagai-10.pnghttp://padamhosting.me/out.php/i27845_punnagai-02.png



இது பட்டப்படிப்பு பெற்ற 5 நண்பர்கள் பட்டம் பெற்ற சந்தோஷத்தைக் கொண்டாடிக் குதூகலிக்கும் பாடல். காந்தி சிலைக்குமுன் 'உண்மை வழி நடப்போம்' என்று உறுதி எடுத்து 5 நண்பர்களும் உற்சாகமாக அந்த நாளைக் கொண்டாடுகின்றனர்.

ஜெமினி, நாகேஷ், முத்துராமன், எம்.ஆர்.ஆர்.வாசு, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இவர்கள்தான் அந்த 5 நண்பர்கள்.

அமுதம் பிக்சர்ஸ் 'புன்னகை' படத்திலிருந்து இந்தப் பாடல். திரைக்கதை, வசனம், இயக்கம் கே.பாலச்சந்தர்.

காரில் மதராஸை வலம் வந்தபடி, பீச்சில் ஜாலியாய் சுற்றியபடி, ஐவரும் செம கலாட்டா. ஜெமினியைப் பார்த்தால் படத்தில் நடிக்க வந்தவர் போலவே இல்லை. கூலிங் கிளாசெல்லாம் போட்டுக்கொண்டு நிஜமாகவே நண்பர்களுடன் ஊர் சுற்றுவதைப் போலவே அவ்வளவு இயல்பு. மற்ற எல்லோருமே பாடலுக்குத்தான் நடிக்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் நிஜ நண்பரகளாய் அரட்டை அடித்து என்ஜாய் செய்வது அமர்க்களம்.

ஜெமினி மெயின் என்பதால் அவருக்கு டி.எம்.எஸ்.அவர்களின் கணீர்க் குரல். மனிதர் என்னமாய் உணர்ந்து பாடுகிறார்! முத்துராமனுக்கு தொடரின் நாயகர் பாலாவின் குரல். நாகேஷுக்கு மிகப் பொருத்தமாக சாய்பாபாவின் குரல். கே.எஸ்.கோபாலகிருஷனுக்கு பாடல் இல்லை என்பதால் பின்னணி இல்லை. (கோரஸில் அட்ஜஸ்ட் செய்து கொள்வார்.) ஆக ஒவ்வொருத்தருக்கும் குரல் பொருத்த தேர்வு ஆஹா! ஓஹோ!

அதுவும் வாசுவிற்கு வீரமணியின் குரல் நன்றாகவே பொருந்துகிறது. அனுபவித்துப் பாடியிருக்கிறார். வீரமணி பாடிய சினிமாப் பாடல்கள் மிகக் குறைவு.

எதிர்கால இளைஞர்களின் கனவுகளை அதுவும் தனியாக வாசுவின் கனவை, அவருடைய கேரக்டருக்குத் தக்கபடி அவர் எதிர்பார்ப்பை பாடலில் உணர்த்தியிருப்பது சிறப்பு.

எம்.ஆர்.ஆர்.வாசு,

'மழையை வெயிலென்றும் மகனைத் தந்தை
என்றும் சொன்னாலென்ன?
மனது சொன்னபடி கால்கள் போனபடி
போனாலென்ன'?

என்று தன் இஷ்டத்திற்கு வாழ்க்கையை வளைக்க நினைத்து மாறுதல் வேண்டிப் பாடுவதும்,

அதற்கு ஜெமினி 'ஊரோடு ஒத்துப் போவதுதான் வாழக்கை...உன் இஷ்டத்திற்கு எதையும் மாற்றிக் கொள்ள முடியாது' என்று பொருள்பட,

'நீயும் ஊரோடு சேராமல் முடியாது
காலம் உனக்காகத் தானாக நடக்காது'

என்று உபதேசித்துப் பதில் சொல்லிப் பாடுவதும் டாப்.

பாடலின் முடிவில் நண்பர்கள் காரில் வேகமாக வளைவுகளைக் கடக்கும் போது காரின் பிரேக் சப்தம் ஒலிப்பதை பாடலில் காட்டியிருப்பது இன்னொரு புதுமை. அது பாடல் முடிந்தவுடன் நடக்கும் விபத்தை முன் கூட்டியே அறிவிப்பதாகவும் அமைந்து விடுகிறது.

படு கேஷுவலான நடிப்புடன் கூடிய கருத்துக்கள் மிகுந்த களை கட்டும் பாடல். கடல் அலைகளில் வாசுவுடன் ஜெமினி சில ஷாட்களில் அமர்க்களம் பண்ணுவார். குறிப்பாக சாய்பாபா பாடும்

'சோறு படைக்கும் சொர்க்கங்கள்
பூமியில் உள்ள இன்பங்கள்
தேடி நடந்து செல்லுங்கள்'

வரிகளில் நாகேஷுடன்.

முத்துராமனையும், கோபாலகிருஷ்ணனையும் தனியே காண்பிக்கும் போது 'நெஞ்சிருக்கும் வரை' ஞாபகத்திற்கு வராமல் போகாது. அந்த நாயகரும் நினைவுக்கு வாராமல் இருக்க மாட்டார்.

http://sim03.in.com/2/1d0c9b3254632f98a81bef186b48bc70_ls_t.jpg

'நாளை நாம் ஒரு ராஜாங்கம் அமைப்போம்
ஆண்டு பாருங்கள் தோழர்களே

என்று தொடங்கும் வரிகள்'.

நான்கு அருமையான பாடகர்கள் பாடுவதால் அனைவருக்கும் சம வாய்ப்பு. பாலாவும் தன் பங்கிற்கு மிக அழகாகப் பாடியிருப்பார். ஆனால் 'பாடகர் திலகம்' கம்பீரத்தாலும், பாவத்தாலும் வழக்கம் போல முன்னை இடத்தைத் தக்க வைத்துக் கொள்வார்.

இசை 'மெல்லிசை மன்னர்'. கோவர்த்தன், ஜோசப் கிருஷ்ணா இருவரும் உதவியாளர்கள். இந்த மாதிரிப் பாடல்களென்றால் விச்சுவிடம் உற்சாகம் பீறிட்டு எழுமே! மனிதர் விளையாடி விடுவார். முதல் சரணத்திற்கு முன் ஒலிக்கும் அந்த சாக்ஸ் இசை பிரமாதம். பாடல் முழுவதுமே உற்சாக இசை கொப்பளிக்கும். புல்லாங்குழல்களின் சின்ன சின்ன பிட்கள் அம்சம். பாங்கோஸ் உருட்டல்களும், ஆர்கன் வித்தைகளும் அமர்க்களம். நண்பர்கள் கடற்கரையில் ஓடி வரும் போது பின்னிப் பெடலெடுக்கும் இசைக்கருவிகளின் ஆதிக்கங்களை உன்னிப்பாகக் கேட்க மறந்து விடாதீர்கள்.

1978-ல் வெளிவந்த அமிதாப் நடித்து சூப்பர் ஹிட்டான 'Muqaddar Ka Sikandar' படத்தின் புகழ் பெற்ற பாடலான 'Rote Hue Aate Hain Sab' பாடலில் வரும் இசையை இந்தப் 'புன்னகை' படப் பாடலில் 'மெல்லிசை மன்னர்' கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு முன்னமேயே அப்படியே தந்து அசத்தியிருப்பார். இந்தப் பாடலில் வரும் பல சங்கதிகளை கல்யாண்ஜி ஆனந்த்ஜி 'Rote Hue Aate Hain Sab' பாடலில் பயன்படுத்திக் கொண்டிருப்பது மிக நன்றாகத் தெரியும்.

மிக மிக அற்புதமான அனுபவித்துக் கேட்க வேண்டிய முத்தான பாடல். பலவகையிலும் சிறப்புப் பெற்றது.

டி.எம்.எஸ்

நாளை நாம் ஒரு ராஜாங்கம் அமைப்போம்
ஆண்டு பாருங்கள் தோழர்களே!
நாளை நாம் ஒரு ராஜாங்கம் அமைப்போம்
ஆண்டு பாருங்கள் தோழர்களே!
நாளை எண்ணி எண்ணி நடத்துங்கள் வாழ்க்கை

பாலா

நாளை எண்ணி எண்ணி நடத்துங்கள் வாழ்க்கை
காலம் உங்களின் கைகளின் மேலே

கோரஸ்

காலம் உங்களின் கைகளின் மேலே

பாலா

நாளை நாம் ஒரு ராஜாங்கம் அமைப்போம்
ஆண்டு பாருங்கள் தோழர்களே!

சாய்பாபா

ராமன் ஆளட்டும்... சோமன் ஆளட்டும்
ஆண்டாலென்ன?
காட்டு மான்கள் போல் நாமும் வாழுவோம்
வாழ்ந்தாலென்ன?

பாலா

அந்த ஆறோடு நீரோடும் நிலம் காக்க
நாம் அறிவோடு வாழ்வதும் குலம் காக்க

டி.எம்.எஸ்

அந்த ஆறோடு நீரோடும் நிலம் காக்க
நாம் அறிவோடு வாழ்வதும் குலம் காக்க

பாலா

தாமரை கொண்ட தண்ணீர்

டி.எம்.எஸ்

தன்னறிவற்ற உன் வாழ்(வு)

பாலா

நிம்மதி கொள்ள முடியாது

ஓஹோ ஹோஹோ ஹோஹோ...ஹோ

டி.எம்.எஸ்

நாளை எண்ணி எண்ணி நடத்துங்கள் வாழ்க்கை
காலம் உங்களின் கைகளின் மேலே

கோரஸ்

காலம் உங்களின் கைகளின் மேலே

வீரமணி

மழையை வெயிலென்றும் மகனைத் தந்தை
என்றும் சொன்னாலென்ன?
மனது சொன்னபடி கால்கள் போனபடி
போனாலென்ன?

டி.எம்.எஸ்

நீயும் ஊரோடு சேராமல் முடியாது
காலம் உனக்காகத் தனியாக நடக்காது

சாய்பாபா

சோறு படைக்கும் சொர்க்கங்கள்
பூமியில் உள்ள இன்பங்கள்
தேடி நடந்து செல்லுங்கள்

ஓஹோ ஹோஹோ ஹோஹோ...ஹோ

பாலா

நாளை நாம் ஒரு ராஜாங்கம் அமைப்போம்
ஆண்டு பாருங்கள் தோழர்களே

டி.எம்.எஸ்

மனிதன் பாவங்களை மனிதன் கேட்பதில்லை
ஆனாலென்ன
பொறுத்துப் பார்த்த பின்பு இறைவன்
கேட்பதுண்டு
கேட்டாலென்ன

வீரமணி

எவர் கேட்டாலும் நான் கேட்க முடியாது
எந்தன் பாவங்கள் தேவனுக்குத் தெரியாது

பாலா

ஆடுவதென்று நீ ஆடு
பாடுவதேன்று நீ பாடு
ஓடுவதென்று நீ ஓடு

ஓஹோ ஹோஹோ ஹோஹோ...ஹோ

டி.எம்.எஸ்

நாளை எண்ணி எண்ணி நடத்துங்கள் வாழ்க்கை
காலம் உங்களின் கைகளின் மேலே

கோரஸ்

காலம் உங்களின் கைகளின் மேலே

நாளை நாம் ஒரு ராஜாங்கம் அமைப்போம்
ஆண்டு பாருங்கள் தோழர்களே!


https://youtu.be/TwiWbFoDyEY

eehaiupehazij
4th September 2015, 05:21 PM
Thanks a lot Vasu Sir!Really a neat and streamlined write up in your inimitable style!!
This has been one of the remarkable movies starring GG whose adventitious roots of acting were properly linked by Director KB who always considered GG as a Directors' Delight!
Though this serious movie with a good theme on the tests of truth could not enjoy a popular run it is considered as one of the best performances of GG ever!
thank you again for prompting me to get into the GG nostalgia!!
senthil

eehaiupehazij
7th September 2015, 08:23 PM
(காந்திஜியை ஜெமினி நினைத்துப் பார்த்த அளவிற்கு வேறு யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே. சின்னஞ்சிறு உலகம், புன்னகை, ஏழைபங்காளன் என்று காந்தியை மறக்கவே மாட்டார்).

Thanks a lot Vasu Sir

சுமைதாங்கியையும் சேர்த்துக் கொள்ளலாம் ....மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.....

https://www.youtube.com/watch?v=1LoJDdeO3lQ

eehaiupehazij
8th September 2015, 08:00 AM
புதியன காணலும் பழையன பேணலும்

புதுமைகள் பல்கிப் பெருகி வரும் யுகத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பழைமையும் போற்றிப் பாதுகாத்திடல் அவசியமே!

காணற்கரிய பழைமைச் சிறப்பு மிக்க பொருட்களின் பின்னணியில் பொங்கிப் பெருகிய மதுர கானங்கள்

காதலுக்கும் கல்யாணங்களுக்கும் பஞ்சமில்லாத காதல் மன்னர் படங்களில் போற்றப்பட்ட பழமை சிறப்புக்கள்

பகுதி 1 கல்யாண ஊர்வல பெட்ரோமாக்ஸ் லைட்கள்!

பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும் !

பெட்ரோமாக்ஸ் ஒளியில் சிதறும் மதுர கானக் கீற்றுகள்


ஒளிரும் விளக்குகள்தான் எத்தனை வகை !!

அகல்விளக்கு, சிம்னிவிளக்கு, குத்துவிளக்கு, லாந்தர்விளக்கு, டார்ச் லைட் ...பெட்ரோமாக்ஸ் லைட்.....சீரியல் லைட், எமர்ஜன்சி லைட்....கலங்கரைவிளக்கு......மெழுகுவர்த்தி விளக்குகள்......விட்டு விட்டு எரியும் மெர்குரி விளக்கு..... எல்லாமே ஒளிவிளக்கே!

இருந்தாலும் பண்டிகை திருமண விழா ஊர்வலங்களில் மனிதரால் தோளில் சுமந்து செல்லப்படும் பெட்ரோமாக்ஸ் விளக்கின் பெருமையே தனிதான்!
இன்று ஜெனரேட்டர் வழி ஒளியுமிழும் விளக்குகள் பிரபலமடைவதற்கு முன் பெட்ரோமாக்ஸ் விளக்குகளே நமது தேவையை ஈடு செய்தன!!

வைதேகி காத்திருந்தாள் படத்தில் கவுண்டமணி செந்தில் காமெடி மூலம் பெட்ரோமாக்ஸ் லைட்டுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது !
இன்றும் பழமையை விட்டுத்தராது பாரம்பரிய முறைகளே மேல் என்று வாதிடுவோரெல்லாம் பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேண்டும்'' ரக மனிதராகவே வகைப்படுத்தப் படுகிறார்கள் !

முதலில் பெட்ரோமாக்ஸ் லைட் எப்படியிருக்கும் என்று தெரிந்து கொள்ள ...

https://www.youtube.com/watch?v=VtnSkahpsGo

பாதகாணிக்கையில்
https://www.youtube.com/watch?v=YpS9AkgHCo0

eehaiupehazij
8th September 2015, 01:20 PM
School Master (Tamil) starring GG and Sowkaar!

முதுமையில் தேவை ஒரு பற்றுக்கோல்

முதிர்ந்த வயதில் உண்மையான அன்பை மனைவி மட்டுமே தர இயலும்! முதுமையின் பரிதவிப்பையும் பாசத்துக்கு ஏங்குவதையும் நடிகர் திலகத்துக்கு இணையாக உருக வைப்பதில் காதல் மன்னரும் சளைத்தவரல்ல !
தமிழில் ஸ்கூல் மாஸ்டர் திரைப்படத்தில் பந்துலு கன்னடத்தில் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் மின்னுகிறார் ஜெமினி சௌகார் இணைவில் வியட்நாம்
வீடு சிவாஜி பத்மினி நினைவுபடுத்தும் வண்ணம் !!

https://www.youtube.com/watch?v=dvIQFMz771Q

https://www.youtube.com/watch?v=AVqMnklPmS4

eehaiupehazij
10th September 2015, 02:44 AM
அன்பார்ந்த திரி நண்பர்களே
நிறைந்த மனதுடன் பெறும் வாழ்த்துக்கள் உடனே பலித்து விடும் என்பது எவ்வளவு உண்மை ....!
என் ஆராய்ச்சி மாணவர்கள் எனக்குப் பெருமை சேர்ப்பார்கள் என்று அன்புள்ளத்தோடு எனக்கு கல்விப்பணி ஓய்வு வாழ்த்துக்களைத் தெரிவித்தீர்கள் ...
இப்போது எனது வழிநடத்துதலில் பி எச் டி முடித்த இரு மாணவர்கள் :
முனைவர் பட்டம் சார்ந்த ஒரு ஆய்வுக்கட்டுரையை சிகாகோவில் செயல்படும் உலக நீர்சூழல் அமைப்புக்கு சமர்பித்து சிறந்த ஆய்வுக்கான பரிசினை தட்டி வந்து எனக்கும் எனது பல்கலைக்கழகத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்கள்!. மகிழ்ச்சியை உங்களனைவருடனும் பகிர்வதில் பெருமை கொள்கிறேன் !!
செந்தில்


FOR IMMEDIATE RELEASE 20 August 2015

Indian Scientists to Receive Prestigious Water Quality Award

ALEXANDRIA, Va. – Indian Scientists Dr. Manoj P. Samuel (Principal Scientist, Indian Council of Agricultural Research- National Academy of Agricultural Research Management, Hyderabad), Dr. S. Senthilvel (Professor(Agricultural Engineering)), Tamil Nadu Agricultural University, Coimbatore and Dr. A.C. Mathew (Principal Scientist, Indian Council of Agricultural Research-Central Plantation Crops Research Institute, Kasaragod, Kerala) will receive the prestigious McKee Groundwater Protection, Restoration, or Sustainable Use Award- 2015 from the Water Environment Federation (WEF), an international not-for-profit technical and educational water quality organization. The award will be presented during a ceremony at the organization’s 88th Annual Technical Exhibition and Conference this fall in Chicago, Ill. www.weftec.org.
This award is considered to be one of the most prestigious awards in the area of water resources and environmental engineering and being conferred to Indian scientists for the first time.

eehaiupehazij
10th September 2015, 10:42 PM
Scene Stealer GG!
காட்சிக் கள்வர் ஜெமினி கணேசன் !!

இருகோடுகள் இயக்குனர் கே பாலசந்தரின் திறமையான இயக்கத்தில் காதல் மன்னருடன் சௌகாரும் ஜெயந்தியும் இனைந்து நடித்த ஹை வோல்டேஜ் பேமிலி டிராமா !!

என்னதான் கதாநாயகியரின் உரசல்களும் கோபங்களும் சண்டைகளும் படத்தின் கருவை ஆக்கிரமித்தாலும் கதையோட்ட்டத்தில் ஒரே ஒரு காட்சிக் கோர்வையில் சௌகாரின் மிக அதிகமாக சிலாகிக்கப்பட்ட கலெக்டர் கம்பீர நடிப்பை காதல் மன்னர் வெகு இயல்பான உருக்கமான நம்மை அறியாமல் கண்களில் நீர்த் தாரையிடும் நடிப்பசைவுகளால் ஊதித் தள்ளி நெஞ்சில் நிறைவார் !! நடுத்தர குடும்பத் தலைவர் வேடத்தில் படு பாந்தமாக ரசிக நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டு தனது அமைதியான நடிப்பாளுமையை நிரூபித்திருப்பார் !

அலுவலகத்தில் நேர்மை தவறாத அலுவலராக கலெக்டரின் கீழ் பணியாற்றும்போது ஒரு அவதூறான லஞ்சப் புகாரில் சிக்கி சஸ்பென்ஷன் ஆகிறார் ஜெமினி
கலெக்டருடன் ஆதங்கமான வாக்குவாதத்தில் அவர் கலெக்டர் என்பதை ஒருகணம் மறந்து 'நான் தவறு செய்வேன் என்று என் மனைவி ஒரு போதும் நம்ப மாட்டாள்...(ஜெயந்தியை குறித்து) சொல்லி விட்டு தன்னை மறந்து முதல் மனைவி என்ற முறையில் 'நீ நம்பி விட்டாயே ஜானகி' என்று பொருமும் போது அந்த அலுவலகம் மட்டுமன்றி நாமும் அதிர்ச்சியில் உறைந்து நம்மை அறியாமல் கண்ணீர் சிந்த வைத்து கதாநாயகியரை வெகு இலகுவாக பின் தள்ளி படம் முடிந்தாலும் நம் நெஞ்சமெங்கும் இக்காட்சியை ஆழமாக பதிப்பதில் வெல்கிறார் காதல் மன்னர்!!

Watch from 5:00

https://www.youtube.com/watch?v=yu0QEBaQCVQ

eehaiupehazij
11th September 2015, 06:56 PM
The sound of MUSIC is a CATALYST!
இசையின் நாதம் ஒரு கிரியா ஊக்கியே !!


இசை கேட்டால் புவி அசைந்தாடும்... இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்தேன்... இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை அருஞ்சாதனை ......
நல்ல இசையின்பத்தை அனுபவிக்கும் குழந்தைகள் சீரான மனப் பக்குவம் பெறுவர் !
இனிய இசைப் பரவல் பயிர்களின் விளைச்சலைப் பெருக்கும் பசுக்களின் பாலையும் பெருக்கும் !
இப்படியெல்லாம் ஒரு கிரியா ஊக்கியான இசையைக் கருவிலேயே குழந்தை கேட்டால்தான் அது ஜனன உருவிலே மாசுமருவின்றி உதிக்கும் என்பதை உணர்ந்ததாலேயே கர்ப்பிணிப் பெண்டிருக்கு சீமந்தம்/வளைகாப்பு என்ற சடங்கை நமது முன்னோர் நடைமுறைப் படுத்தினர்!! வளையோசை குலுங்கும் போது கருக்குழந்தையின் செவிகூராகிறது... பாடல்களையும் இசையையும் செவி மடுக்கும் போது மூளை சீராகி மனமும் நேராகிறது!!

https://www.youtube.com/watch?v=jTri6dPZkWQ

https://www.youtube.com/watch?v=gCx-8SwvAe8

My quota limited to two videos only!! I am self disciplined!!!

ஆடுமடி தொட்டில் இன்னும் ஐந்து திங்கள் போனால்
[url]https://www.youtube.com/watch?v=hhRiJ_8AkJI

eehaiupehazij
11th September 2015, 09:11 PM
நகமும் சதையும் எதிரும் புதிரும் ஆகும்போது ?! When Water becomes thicker than Blood!


மனித மனம் ஒரு விசித்திரமான உளவியல் கலவையே ! Sigmund Freud or Hitchcock only could sort out the inherent variants of mind!!

ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்பாயினும் உயிருக்கு உயிரான நண்பரேயாயினும் டைட்ரேஷன் பிராசெஸ்சில் இறுதியில் கலர் மாறுவது போல ஏதோ ஒரு தருணத்தில் புரிதலின்மையால் எலியும் பூனையுமாக கீரியும் பாம்புமாக மாறுவது இயல்பே !!
சரியான புரிதல் மனதில் உறைக்கும் போது பிரிந்தவர் கூடுவதும் இயல்பே ...

https://www.youtube.com/watch?v=9ZghfWkD8gA

eehaiupehazij
11th September 2015, 10:21 PM
கல் / Stone
உங்க மனசென்ன கல்லா ?
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ...
சொல்லாலடிப்பதை விட கல்லாலடிப்பதே மேல் !
கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது !
கல்லுக்குள் உறையும் தேரை !
ஒரேகல்லில் ரெண்டு மாங்காய் !
இப்படிக் கல்லின் மகாத்மியம் சொல்லிக்கொண்டே போகலாம் !
திரைப்பாடல்களில் .....?! கல்லின் பயன்பாடு!
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா ?.....நடிகர்திலகத்தின் பார்வையில்...
https://www.youtube.com/watch?v=gLiZFaAbWb8
கடவுள் ஏன் கல்லானார் ?.....மக்கள்திலகத்தின் கணிப்பில்
https://www.youtube.com/watch?v=DrtNhx9XcKM
கல்லுக்கு நீதி சொல்ல முடியாது ...காதல் மன்னரின் தீர்ப்பில்
https://www.youtube.com/watch?v=yfx1kel88PE

கல்லிலே கலைவண்ணம் கண்டான் ...
[url]https://www.youtube.com/watch?v=CtaUn2jlpYY
கல்லும் கனியாகும் ...
[url]https://www.youtube.com/watch?v=wLcddb8O4M4

eehaiupehazij
12th September 2015, 11:35 AM
காதல் வாகன மோகன கானங்கள் !


எத்தனை முறைதான் பூங்காக்களிலும் அணைக்கட்டுப் பகுதிகளிலும் மலைக்காடுகளிலும் வயல்வெளிகளிலும் மரங்களைச் சுற்றி சுற்றி காதலர்கள் வேர்த்து விறுவிறுத்து பாடி ஆட முடியும் ?
சைக்கிளில் ஆரம்பித்து ஸ்கூட்டர் பைக் கார் ...எத்தனை வகை காதல் வாகனங்கள் மோகன கீதங்கள்!
சைக்கிளை நிறைய அக்குவேறு ஆணிவேறாக கல்யாணபரிசு, பாசம், பாவமன்னிப்பு, சித்தி.....அலசிவிட்டோம்! ஸ்கூட்டரில் ஆரம்பிப்போம்!
அந்தக் கால சமூக திரைப்படங்கள் நல்ல நல்ல குடும்பக் கதைகளை பின்னி எடுத்தாலும் காதல் தேன் சுவை இல்லையெனில் படங்களை ரசிப்பது கடினமே !
அந்த வகையில் ஸ்கூட்டரை காதல் வாகனமாக்கி நாயக நாயகியர் ஆடாமல் ஓடாமல் ஸ்கூட்டரை மட்டும் ஆட்டி ஓட்டி காதல் புரிந்த கண்கொள்ளா காட்சிகள் !!
அப்போதெல்லாம் காதலி பின்சீட்டில் பில்லியன் ரைடராக அமர்ந்து காதலனைக் கட்டிக்கொண்டு கிளுகிளுப்பேற்ற சேலை உடை வழி செய்யாததால்
ஸ்கூட்டரில் ஒரு பக்கத்து கூண்டு இருக்கை சேர்க்கப்பட்டிருக்கும்! Tandem seat என்று அழைக்கப்படும். ஸ்கூட்டர்கள் / spaghetti இத்தாலியை மூலமாகக் கொண்டவை.! ரோமன் ஹாலிடே, கம் செப்டம்பர் படங்களில் இணைப்பில்லாத ஸ்கூட்டர்களும் போரை அடிப்படியாகக் கொண்ட பல படங்களில் இணைப்புடன் கூடிய ஸ்கூட்டர்கள் பைக்குகளையும் காணலாம்! இப்போதெல்லாம் சூரிதாருக்கு மாறி விட்டதால் இரண்டுபக்கமும் கால்களைப் போட்டுக் கொண்டு குண்டுகுழிகளில் வேண்டுமென்றே காதலன் ஏற்றி இறக்கும்போது பயப்படுவது போல பாவலா பண்ணி கட்டிப்பிடித்து கிளுகிளுப்பேற்றும் பார்ப்பவர்க்கு கடுப்பேற்றும் காதலியரே அதிகம்!!

தமிழில் ஸ்கூட்டரைப் பிரபலமாக்கியவர் காதல் மன்னரே ! பிறகு டி ஆர் ராமச்சந்திரன்...தொடர்கதை..!! பழைய லேம்ப்ரட்டா, பஜாஜ் வகை ஸ்கூட்டர்கள் பிரபலம்!

ஹலோ மிஸ்டர் ஜமீன்தாரில் ஜெமினி சாவித்திரி இதமான காதல் ஜோடி ! (இது ஸ்கூட்டரா பைக்கா?)!

https://www.youtube.com/watch?v=Xo0jvOT0kbA

பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு ...TRR-CID சகுந்தலா!

https://www.youtube.com/watch?v=yZ3Y2HCj2zs

ஷோலேயில் தர்மேந்தர் அமிதாப் , இந்தியானா ஜோன்ஸில் ஹாரிசன் போர்டு ஷான் கானரி......நிறைய இருக்கின்றன!

From Roman Holiday and Come September...

https://www.youtube.com/watch?v=nXgnl6qMh0c

https://www.youtube.com/watch?v=9j3vxhzM8MY

eehaiupehazij
12th September 2015, 11:42 AM
ஜெமினி சாவித்திரி இருவருமே காரோட்டுவதில் வல்லவர்கள்! ! இருவருக்குமே பேக் ப்ரொஜெக்ஷன் தேவைப்படாது
பாசமலரில் ஜெமினியும் காத்திருந்த கண்களில் சாவித்திரியும் தேரோட்டுவது போல காரோட்டும் அழகு !

https://www.youtube.com/watch?v=6e_llk_6_7g

https://www.youtube.com/watch?v=epP_PlwbiWE

eehaiupehazij
12th September 2015, 11:48 AM
காதலியரை அருகமர்த்தி படகு வலிப்பதிலும் கட்டை வண்டி ஓட்டுவதிலும் காதல் மன்னர் திறமைசாலியே !

https://www.youtube.com/watch?v=sHb4MQO8dYI

eehaiupehazij
12th September 2015, 02:00 PM
ஜெமினி கணேசனுக்கான எனது மலரும் நினைவலைகள் !


ஒரு சிவாஜி ரசிகன் ஜெமினிக்காக தனி ஒருவன் ஆன கதை !

1973ல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் கோவையில் கிராமப்புற மாணவனாக வேளாண்மைப் பொறியியல் பட்டப் படிப்புக்காக அடியெடுத்து வைத்த மறக்க முடியாத தருணம் !

ராகிங் என்று சொல்ல முடியாது ஆனால் திகில் பாண்டிகளான சீனியர்களின் பிடியில் நண்பர்கள் கும்பலோடு நானும் சிக்கிக் கொண்ட அனுபவம் !!

வழக்கமான கேள்விகளுக்குப் பிறகு முக்கியமான கேள்வி நீ யார் ரசிகன் என்பதே !
அப்போதைய காலகட்டத்தில் கேம்பஸில் இரண்டு குரூப் ரசிகர்கள்தான் : நடிகர்திலகம் மக்கள்திலகம் !

வார இறுதியில் சனிக்கிழமை இரவு கீரைஸ் குவார்டர் சிக்கன் சாப்பிட்டு விட்டு ஆடிடோரியம் சென்றால் கொஞ்சம் திகிலாகவே இருக்கும்... அந்த அளவு சிவாஜி எம்ஜீயார் மோதல்கள் !

எனக்கு அடிப்படையில் நடிகர்திலகம் ரசிகன் என்றாலும் ஜெமினியையும் ஜேம்ஸ் பாண்ட் சீன்கானரியையும் ரொம்பவே பிடிக்கும்! மேலும் பள்ளியிலும் பியூசி படிக்கும் போது கல்லூரியிலும் எனது குரல் சற்று ஏ எம் ராஜாவையும் பிபி சீனிவாசையும் ஒத்திருந்ததால் ஜெமினி பாடல்களை நிறையப் பாடியிருக்கிறேன்! (nambunga boss!) பாட்டுப் பாடவா...என் பேவரிட் சாங் ! அப்புறம் நிலவுக்கு என்மேல்.....

தர்மசங்கடமான சூழ்நிலையில் தப்பிக்க எண்ணி நான் ஜெமினி ரசிகன் என்று சொல்லிவிட்டேன்! ...ஆரம்பித்தது எனக்கு 7.5 (சட்னி சாம்பார் )அர்ச்சனை அபிஷேகங்கள்...

சிவாஜி எம்ஜீயார் ரசிகர்கள் இந்த விஷயத்தில் ஒற்றுமையாகக் கைகோர்த்து எனக்கு டின் கட்டிவிட முடிவு செய்து விட்டார்கள் !

தொடரும் ...

chinnakkannan
12th September 2015, 04:21 PM
தொடருங்கள்..சுவாரஸ்யம் தான். கீ ரைஸ்.. ஹாஸ்டல்லயா..எப்படி.. அது சரி.. பி.பி. ஸ்ரீனிவாசின் நெஞசம் அலை மோதவே பாடுவீர்களா..அதோட ஹாப்பி சாங்க் இங்க கிடைக்கலை.. ஸேட் சாங்க் தான் அவெய்லபிள் ஆன் தெ நெட்..

eehaiupehazij
12th September 2015, 10:17 PM
My favourite GG song that catapulted me to campus fame as the echo of AMRaaja/GG though still I feel I am not upto the magic of Raajaa!! Just a mimic or imitator only at a bathroom singer level without any basic knowledge on music!

https://www.youtube.com/watch?v=0qV8W1z6ZZo

Even at this stage of retirement date approaching soon, my students and colleagues fondly remember me singing this song on stage without any fear!

eehaiupehazij
12th September 2015, 10:52 PM
ஜெமினி கணேசனுக்கான எனது மலரும் நினைவலைகள் !


ஒரு சிவாஜி ரசிகன் ஜெமினிக்காக தனி ஒருவன் ஆன கதை !

part 2



இதில் என்ன பிரச்சினைன்னா கேள்வி கேட்கும் குரூப் சிவாஜியா எம்ஜியாரான்னு தெரியாது எந்தப் பக்கம் சாய்ஞ்சாலும் மற்ற குரூப் வேட்டையாடி விளையாண்டு விடும்!!

இப்ப நான் போட்ட போட்டிலே வாழ்நாள் வைரிகளான ரெண்டு க்ரூப்பும் ஒண்ணா சேர்ந்ததுதான் சாதனை எனக்கு சோதனை தலை வேதனை !!

எனக்கும் சாம்பார் என்றே செல்லப் பெயரை டிக்ளேர் பண்ணி படுத்தியெடுத்து விட்டார்கள்! சாம்பாரில் எத்தனைவகை என்று ஆரம்பித்து.....
ஏன் சிவாஜி எம்ஜியார் பிடிக்கவில்லை ...
ஒருவழியாக நான் மூர்ச்சையாகும் நிலை வந்ததும்தான் க்ளைமாக்ஸ்..அவளுக்கென்று ஒரு மனம் படத்தில் காஞ்சனா தொட்டதற்கே உங்க ஆள் மழையிலே குதியாட்டம் போட்டாரே .இப்ப நீ அதேமாதிரி ஆடணும்னு எனக்கு ஜெமினி மீசை மாதிரி பென்சில் மீசை போட்டுவிட்டார்கள்!

பேண்ட் ஷர்ட் இல்லாமே ஜட்டியோடு ஹாஸ்டல் போர்டிகோ பக்கத்தில் நிற்க வைத்து பூவாளிகளில் நீர் நிரப்பி என்மேல் மழையாக தெளித்து ஆட விட்டார்கள்
கையை இடுப்பிலே வைடா.... அந்தப் பூவைப் பறித்து சுண்டி விடுடா ...கமேண்டுகளோடு ஒருவழியாக நானும் குதித்து குளித்து முடித்தேன்!

ஆனாலும் எமகாதகர்களுக்கு என் மேல் அவ நம்பிக்கையே ! கள்ளனை நம்பினாலும் உன் மாதிரி குள்ளனை நம்ப முடியாதுடா... ஜெமினி மாதிரி பாடு என்று அடுத்த லெவல் டெஸ்டுக்கு தள்ளினார்கள் ...பாட்டுப் பாடவா பாடலை ஸ்கூல் மணம் மாறாமல் அட்டென்ஷனில் கைகட்டிக்கொண்டு ஜெமினியை நினைத்துக் கொண்டு பிசிறில்லாமல் பாடியதை நம்ப முடியாமல் வைத்த கண் வாங்காமல் பார்த்து ரசித்து என் முதுகில் வீங்குமளவுக்கு தட்டியெடுத்து விட்டார்கள் ! அப்புறம்தான் தெரிந்தது காலேஜ் ஆர்கெஸ்ட்ராவுக்கு ஆள் பொறுக்க இந்த முறையைப் பின்பற்றுகிறார்கள் என்று!
அப்புறமென்ன ...நீங்க நினைக்கிறமாதிரி என்னை உடனே ரிலீஸ் செய்யாமல் விடியவிடிய சாம்பார் வைக்க வைத்துவிட்டார்கள்! தொண்டை கட்டிக் கொண்டாலும் அடுத்த நாள் முதல் ஆர்கெஸ்ட்ரா பிராக்டிஸ்தான் ஓரியண்டேஷன் டே வரை! ஜெமினிதான் மறுபடியும் உடம்பு வீங்காமல் என்னைக் காப்பாற்றினார் ! அடுத்த ஐந்து வருடமும் ஐயாதான் கேம்பசின் சாம்பார் பாடகர்!!

அடுத்த சோதனை எனக்கு ஆடிட்டோரியத்தில் ஜெமினி படக் கிளிப்பிங்குகள் இடைவேளையில் போடும்போது வந்தது ...

தொடரும்

eehaiupehazij
13th September 2015, 08:59 AM
Nostalgia / Gap filler / Monotony breaker!


The song sequence that catapulted GG to the status of the unreigned King of Romance in Indian films!! Missiammaa's moonlight melody with his lucky charm pair Saaviththiri! This film always remains a crowd puller for its neat story line, enchanting music and captivating songs, subtle acting of all charachters making us feel that we also move with them in the screen proceedings, GG's handsome personality....

https://www.youtube.com/watch?v=oRrnQg4SboQ

eehaiupehazij
14th September 2015, 12:22 PM
ஜெமினி கணேசனுக்கான எனது மலரும் நினைவலைகள் !


ஒரு சிவாஜி ரசிகன் ஜெமினிக்காக தனி ஒருவன் ஆன கதை !


Part 3

எங்கள் பலகலைக் கழகத்தின் அறிஞர் அண்ணா ஆடிடோரியம் நகரிலேயே அனைத்துக் கல்லூரிகளின் அரங்கங்களை விட சிறப்பாக ப்ரொஜெக்டர் வசதியுடன் ஒரு மினி தியேட்டரைப் போலவே வடிவமைக்கப் பட்டதாகும். எங்கள் பலகலைகழக நாடக மன்றத்தின் சார்பில் ஒவ்வொரு வாரமும் (தேர்வுகாலங்கள் நீங்கலாக) கோவை திரைப்பட விநியோகஸ்தர்களுடன் பேசி நல்ல திரைப்படங்களை மாணவர்களுக்கான குறைந்த ரேட்டில் பெற்று திரையிடுவோம். பெரும்பாலும் சிவாஜி எம்ஜியார் படங்கள் பிறகு அத்தி பூத்தாற்போல ஜெமினி ஜெய் ரவி பிற இயக்குனர்கள் படங்கள் நல்ல இந்தி ஆங்கில திரைப்படங்களும் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு திரையிடப்படும் ! இடைவேளையில் Enjoy the Trailers/songs என்று பிற படங்களின் தேர்வு செய்யப்பட்ட காட்சிகளும் பாடல்களும் ஒரு அரைமணி நேரம் திரையிடப்ப்படும்போதுதான் ரசிககண் மணிகளின் குத்தாட்ட அலப்பறைகள் அதிரவைக்கும்!! (அந்த காலகட்டத்தில் கோ எஜுகேஷன் கிடையாது என்பது கொஞ்சம் ஆதங்கமான விஷயமே!!) சனிக்கிழமை மட்டுமே விளையாட்டு மைதானத்தில், ஜிம்மில் சாயந்திரம் கூட்டம் அலைமோதும்....நல்ல பசியெடுத்து கீரைஸ் சிக்கன் ஆனியன் பச்சடியுடன் சிப்ஸ் சேர்த்து ஒரு கட்டு கட்டுவார்கள்!
அந்த எனர்ஜி எல்லாம் ஆடிடோரியத்தில் ஆட்டபாட்டத்தில் கரைக்கத்தான் !!
பெரும்பாலும் நடிகதிலகத்தின் பாடல் காட்சிகளும் மக்கள்திலகத்தின் பாடல் காட்சிகளும் போட்டிபோட்டு ஆட்ட பாட்டத்துடன் ரசிக்கப்படும். ஜெமினி பாடல் காட்சிகளில் அரங்கம் அமைதியாகி விடும்! இருந்தாலும் சீனியர் நண்பர்கள் புன்னகையுடன் என் ரியாக்ஷனை கவனிப்பார்கள்!! திடீரென்று நாடகமன்ற செயலர் ஒரு சிலைடு போட்டார்....இந்தப் பல்கலைக் கழகத்தின் ஒரே ஒரு ஜெமினி ரசிகனுக்காக...என்று..மறுபடியும் எனக்கு 7.5 ஆரம்பித்தது!'

இனிய அதிர்ச்சியாக சாந்திநிலையம் படத்தின் இயற்கை என்னும் இளைய கன்னி பாடல் ஓட்டப்பட்டது! அப்போது அமைதிதான்!! அடுத்தது அவளுக்கென்று ஓர் மனம் ஜெமினி மழையில் நனையும் ஆயிரம் நினவு பாடல் போட்டவுடன் ஒரு கும்பல் கடுப்பாகி டக்கென்று என்னை தூக்கி திரையின் மேடையில் இறக்கி விட்டு கானா மூனாவென்று ஆட வைத்துவிட்டார்கள் !! கொஞ்சநேரம் களேபரம்தான்....அதற்கடுத்த வாரம் ஓரிஎண்டேஷன் டே ! வழக்கமாக இந்த நாளில் சீனியர் ஜூனியர் எல்லோரும் ராகிங் முடிந்து விட்டதை அறிவிக்க கலந்து நிறைய ஆடல் பாடல் நாடக நிகழ்ச்சிகளைத் தருவார்கள்!! எனக்கும் ஆர்கெஸ்ட்ராவில் "பாட்டு பாடவா''ஒரு பாடல் மட்டும் வாய்ப்பளித்தார்கள்!!

contd.,

eehaiupehazij
14th September 2015, 12:49 PM
அவளுக்கென்று ஓர் மனம் படத்தில் முக்கோணக்காதலின் முத்திரை!
https://www.youtube.com/watch?v=Q5S_nWqjXi4

eehaiupehazij
14th September 2015, 07:46 PM
ஜெமினி கணேசனுக்கான எனது மலரும் நினைவலைகள் !


ஒரு சிவாஜி ரசிகன் ஜெமினிக்காக தனி ஒருவன் ஆன கதை !


Part 4

இந்த ஓரிஎண்டெஷன்டே வரும் வரை ஒவ்வொரு இரவும் சுடுகாட்டில் விட்டலாச்சாரியாரின் வெள்ளை லெக்கிங்க்ஸ் போட்ட அடுப்புக்குள் கால் வைத்து விறகாக எரிக்கும் ஜெகன்மோகினி பேய்களுக்கு நடுவில் கும்மியடிப்பது போலத்தான்!

ராகிங் கடமையில் கொஞ்சம் கண்ணியமும் கட்டுப்பாடும் உண்டு!! எப்படி என்றால் இரண்டாமாண்டு மாணவர்கள் உச்ச கட்ட வெறியில் எங்களைப் பந்தாடும்போது மூன்றாமாண்டு சீனியர் அந்த வழியே வந்தால் இரண்டாமாண்டு மாணவர் எழுந்து நின்று தனது மரியாதையை தெரிவிப்பார். அது கட்டுப்பாடாம்! மூன்றாமாண்டு பெருசு உடனே எங்களைப் பரிதாபமாக ஒரு லுக் விட்டுவிட்டு 'ம்ம் நடத்துடா மாப்பிள்ளே'என்று விடை பெற்றுக் கொள்வார். அதுதான் கண்ணியமாம் !! இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்ப் போல இப்போதைய பாலா படங்களின் கேரக்டர்களின் மேக்கப்பில்தான் மீசையில்லாமல் அறை குறைக் கரண்டல் கிராப்புடன் ஷர்ட் இன் பண்ணாமல் ஷூ போடாமல் வெறும் பாத்ரூம் செப்பலுடன் ஒரு மார்க்கமான அடையாளத்துடன் திரிந்து கொண்டிருந்தோம்! விடியல் வந்தது!! எங்கள் வாழ்விலும் விடிவெள்ளி முளைத்தது ஒரிஎண்டேஷன்டே வடிவில்!!
பெண்வாசமே இல்லாத கேம்பஸ் ! அதனால் நிகழ்ச்சிகளின் மங்களம் கருதி ஒல்லிப்பிச்சான் வெண்ணை தேக முதலாமாண்டு மாணவர்களுக்கு டிராமாவுக்கு ஆளேடுக்கிறோம் என்ற சாக்கில் பெண்ணாக அரிதாரம் பூசி விடுவார்கள்!! இந்தநாள் எங்கள் கல்லூரி வளாக வாழ்க்கையில் மறக்க முடியாத 'நாங்கள் வயசுக்கு வந்த' டே ! ஆடிடோரியத்தில் விழா ஆரம்பிக்கும் முன்னர் கெட் டுகெதர் Buffet பீஸ்ட் புல்வெளியில்!!

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு என் ஆசிரியப் பெருந்தகைகளும் எனக்கு ஜெமினி முத்திரை குத்தி அடுத்த நான்கு வருடங்களிலும் முக்கியமான கலை நிகழ்ச்சிகளில் ஏ எம் ராஜா / பிபி ஸ்ரீனிவாஸ் பாடல்களை பாடச்சொல்லி .........ஒரே அன்புத் தொல்லைதான் போங்கள்!!

இன்னொரு நிகழ்ச்சியில் எனது சக நண்பர் ராமசாமி டிஎமெஸ் வாய்சில் என்னுடன் அவள் பறந்து போனாளே பாடும்போது ...ஒரே பேப்பர் அம்பாகப் பறந்து வந்து விழுந்து மேடை நிறைந்தது குப்பையால் .தனிக்கதை! எப்படியோ இந்தக் குட்டித் தீவு வாழ்க்கையில் நான் ஜெமினி வாய்ஸாக செட்டாகி விட்டேன் !!

1977ல் எங்கள் பல்கலைக்கழகத்தில் முத்தமிழ் விழாவில் காதல் மன்னர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விவசாயம் பற்றி அசத்தியடித்த
கதை ..அவருக்கே நான் பாட்டுப்பாடவா பாடிக் காண்பித்தது....வரும் பகுதிகளில்...

eehaiupehazij
15th September 2015, 07:39 AM
Silhouettes and Shadows too can sing and dance!!
நிழலும் நிழல் படிவங்களும் கூட நடிக்க முடியும் மதுர கீதங்களில் !!


இயக்குனரின் கண்ணான ஒளிப்பதிவாளர் கற்பனைத் திறன் மிக்கவரென்றால் நிழலும் நிழல் படிவங்களும் கூட ஒரு நடிகரின் நடிப்புப் திறமையை வெளிப்படுத்தும்.

ஸ்ரீதர் பாலசந்தர் போன்ற முன்னோடி புதுமை இயக்குனர்கள் பாடல் காட்சியின் கருத்தாழத்திற்கேற்ப ஒளிப்பதிவாளரின் லைட்டிங் சென்ஸ் சரியான முறையில் பயன்படுத்தி ரசிகர்களின் கண்களுக்கு புதுமையான கோணங்களில் விருந்தளித்தனர் !

நிழல்படிவ / நிழல் பாடல் 1
மயக்கமா கலக்கமா...சுமைதாங்கியில் அற்புதமான கோணங்களில் ஜெமினியின் உருக்கையும் உருக வைக்கும் உச்ச நடிப்பு!

https://www.youtube.com/watch?v=gFcOsnk8DM0

பாடல் 2
பாதகாணிக்கை பூஜைக்கு வந்த மலரே வா !

https://www.youtube.com/watch?v=lyN5063Umtg

பாடல் 3 :
நூற்றுக்கு நூறு / நித்தம் நித்தம் ஒரு புத்தம் புதிய சுகம்

https://www.youtube.com/watch?v=tlk8SJAjgn4

eehaiupehazij
15th September 2015, 08:31 AM
Gap fillers

நித்தம் நித்தம் பாடல்கள்

https://www.youtube.com/watch?v=Lls3IwzcaiI

https://www.youtube.com/watch?v=J_EhAijFz8U

RAGHAVENDRA
15th September 2015, 08:42 AM
https://www.youtube.com/watch?v=e-Yw5yA9YJE

eehaiupehazij
15th September 2015, 11:22 AM
Gap fillers

https://www.youtube.com/watch?v=9oX5PSgH-cI

eehaiupehazij
15th September 2015, 11:26 AM
ஜெமினி கணேசனுக்கான எனது மலரும் நினைவலைகள் !


ஒரு சிவாஜி ரசிகன் ஜெமினிக்காக தனி ஒருவன் ஆன கதை !


Part 5


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் BSc வேளாண்மை/தோட்டக்கலை BE வேளாண்மைப் பொறியியல்...என்று
பல்வேறு பிரிவுகளில் நாங்கள் சேர்ந்திருந்தாலும் ஹாஸ்டலில் அறைகளில் கலந்தே இடம் போடுவார்கள் ... மாணவர்கள் ஒற்றுமை வேண்டி!

பிராக்டிகல் வகுப்புக்கள் காலை 7 மணிக்கே ஆரம்பித்துவிடும்! எல்லாப் பிரிவினருக்கும் முதலாண்டு பாடப்பிரிவுகள் பொதுவானவையே! நாங்களும் பாடனி ஜுவாலஜி எல்லாம் படிக்க வேண்டியிருந்தது எங்களுக்கும் 5 சென்ட் நிலத்தில் பல்வேறு பயிர்களை வளர்த்துக்காட்டும் பயிற்ச்சிகளும் பூச்சி பிடித்தலும் உண்டு முதலாமாண்டில் நாங்கள் அனைவருமே சீனியர்களின் நிலங்களில் பாடுபட்டு உழைத்து அவர்களுக்கு உதவுவோம் யாரால் நாங்கள் அவதிக்குள்ளானோமோ அதே சீனியர்கள்தான் அடுத்த நான்கு வருடங்களுக்கும் நல்ல வழிகாட்டிகளாக இருந்து புரபெஷனல் மேன்னர்ஸ் எல்லாம் கற்றுக்கொடுத்தனர்! இன்றுவரை அந்த நல்லுறவு தொடரவே செய்கிறது !! இந்தவிதமாக கலகலப்பாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்க்கைசக்கரம் ஓடிக்கொண்டிருந்தது!

ஒவ்வொரு வருடமும் நாடகமன்றத்தின் சார்பாக மூன்று நாட்கள் இயல் இசை நாடக முத்தமிழ் விழா நடத்தப் படும். 1977ல் இறுதியாண்டு பயில்கையில் நானும் மாணவர் மன்ற இணை செயலராக இஞ்சினியரிங் சார்பாக தேர்ந்தெடுக்கப் பட்டேன், நாடகவிழாவுக்கு பெரும்பாலும் புகழ் பெற்ற திரைநட்சத்திரங்கள் தலைமை தாங்க அழைக்கப்பட்டு அவர்களது கலையுலக அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள் அந்த வகையில் எனது சிறுமுயற்சியால் அந்தமுறை காதல்மன்னரையும் சாவித்திரியம்மாவையும் அழைக்க முடிவுசெய்யப்பட்டது ! சென்னையில் சென்று சந்தித்தபோது மிகமிக மகிழ்வுடன் ஒப்புக்கொண்டார் ஜெமினி!! சாவித்திரியால் வர இயலவில்லை!!

ஏர்போர்ட்டிலிருந்து எங்கள் பல்கலைக்கழகக் காரில் ஜம்மென்று கோட்சூட்டில் நிஜ ஹீரோவாக பளீரென்ற புன்னகையுடன் வந்திறங்கியவரை வளாக விருந்தினரில்லத்துக்கு அழைத்துச் சென்றோம் ! எப்பேர்ப்பட்ட கனவானுடன் உரையாடுகிறோம் என்பதை அறிவுபூர்வமாக அவர் அளவளாவியதிலிருந்து உணர்ந்து கொண்டோம்!!

கொஞ்சநேர இடைவெளியில் அவரது ரசிகன் என்ற முறையில் அவரது நடிப்பு பாடல்கள் பற்றி உரையாடினோம் ! அவரது பாட்டுப்பாடவா நான் இரண்டு ஸ்டான்சா பாடியதும் அவரும் மகிழ்வுடன் கலந்துகொண்டார் !! வந்த இடத்தில் அவரது திரைக் குரலில் ஒருவர் பாடியதைக் கேட்ட மகிழ்வை அவரால் மறைக்க இயலவில்லை.... மலரும் நினைவுகளில் கொஞ்சம் மூழ்கினார் !! ஜென்டில்மேன் ஜெமினி....என்னவொரு பொருத்தமான அடைமொழி!!

நிகழ்ச்சி ஆரம்பித்தது ....அங்கொன்றும் இங்கொன்றுமாக எப்போதும்போல சில அவலக்கூப்பாடுகள் அவரை சாம்பார் என்று விளித்தன! மனமுதிர்ச்சியும் கல்விப் பண்பும் கொண்ட ஜெமினி புன்னகையுடன் கேட்டுக் கொண்டார் ..பிறகு நடந்தது ....மாயாஜாலம்!! அவர் எப்பேர்ப்பட்ட அறிவுஜீவி என்பதை ஆணியடித்தாற்போல ஒரு லெக்சர் அதிரடியாகப் போட்டுத்தாக்கினார்!! கூக்குரல்கள் வலுவிழந்து அவர் பேச்சுக்கு அடிமையாகி கூட்டமே மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகமாக அதிர்ச்சியில் உறைந்து அவர் பேச்சை ஆரவாரத்துடன் ரசிக்க ஆரம்பித்த விந்தை !! எந்தவிதமான குறிப்புக்களுமின்றி ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக வேளாண்மை தோட்டக்கலை பொறியியல் நுட்பங்களைக் கோடிட்டு அவர் ஆற்றிய உரை அவர் ஒரு தேர்ந்த விரிவுரையாளர் என்பதை அறுதி செய்தது !

இடையிடையே அவரது படங்களிலிருந்து மோனோ ஆக்டிங்கில் கலக்கினார் ! ஆங்கிலத்திலும் தமிழிலும் தங்குதடையற அவர் ஆற்றிய சிறப்புரை பல்கலைக் கழக மனமகிழ் மன்ற வரலாற்றிலேயே வேறு எந்த ஒரு திரைக்கலைஞரும் நெருங்கமுடியாவண்ணம் அவ்வளவு வரவேற்பைப் பெற்றதாகும்! எம்ஜியார் சிவாஜியை மட்டுமே முன்னிறுத்தி வந்த எங்கள் வளாகத்தில் அனைத்துத் தரப்பினரையும் இந்த நிகழ்ச்சி மூலம் மனம் கவர்ந்து இதயங்களில் நிறைந்தார் காதல் மன்னர் ! அடுத்த நாள் ஆசிரியர் மாணவர் பணியாளர் அனைத்துத் தரப்பிலிருந்தும் எனக்கு நன்றிகலந்த வாழ்த்துகள் வந்தன !
ஒரு நல்ல திரைக்கலைஞருக்கு என்னால் முடிந்த மரியாதையை செலுத்தும் பேறு பெற்றமைக்காக மகிழ்ந்தேன் !!

தொடர் நிறைவு பெற்றது

eehaiupehazij
16th September 2015, 10:26 AM
Top 10 songs in a Juke Box for GG

https://www.youtube.com/watch?v=6ZSQIbEpCeg

eehaiupehazij
17th September 2015, 07:38 AM
முழு முதற்கடவுள் கணேசரின் சதுர்த்தி சிறப்புற நடைபெற காதல் மன்னரின் திரி சார்ந்த வேண்டுதல்களும் நல்வாழ்த்துக்களும்!!

https://www.youtube.com/watch?v=xyT5UBcOLnk

eehaiupehazij
17th September 2015, 08:04 AM
கொழுக்கட்டை ரெசிபி !

https://www.youtube.com/watch?v=WhSLpSK-dcA

eehaiupehazij
17th September 2015, 01:21 PM
Gap filler

https://www.youtube.com/watch?v=2mgBe1Z4-D8

eehaiupehazij
17th September 2015, 03:07 PM
As I am suffering from fever ...songs!!

காய்ச்சலிலும் காதல் பாய்ச்சல் கீத மருந்துகள் !!


கடிதம் எழுதுவதென்பது யாருக்கும் கைவந்த கலையாவதற்கு கடினமான எழுத்துப் பயிற்சி மனம்தளராத முயற்சி தேவையே !!
உலகில் பிறந்த எந்தவொரு மனிதருக்கும் கடித அரிச்சுவடி லீவ் லெட்டரும் லவ் லெட்டரும்தானே !!
லீவ் லெட்டர் என்றாலே பஞ்ச் டயலாக் போல இளம் மனதில் பசுமரத்தாணியாகப் பதிந்த வரிகள் :
As I am suffering from fever I may please be granted one day leave .....என்பதே! ஸ்கூலிலிருந்து ஆரம்பித்து ரிடையராகும்வரை மாற்றமில்லாதது இதுவே!

இதை எழுதிஅனுப்பிவிட்டு ஓய்வில் நமது காதல் மன்னர் என்ன செய்கிறாரென்றால் ......பார்ப்போமே!!

சி க double ஹேப்பி அண்ணாச்சிகளே !
https://www.youtube.com/watch?v=XupZjuPB_fU

எஸ் எஸ் ஆருக்கு டபுள் தமாக்கா !!ஒரு கப்சா சரடு !!


காதல்மன்னர் இப்படி என்ஜாய் பண்ணுவதைக் கேள்விப்பட்டு அவரது கிளாஸ் நண்பரான எஸ் எஸ் ஆரும் இந்த லீவ் லெட்டரை அப்படியே ஈயடிச்சான் காப்பியாக எழுதி அனுப்பிவிட்டு தானும் காய்ச்சலாகி படுத்துக் கொள்கிறார் ! பொறுக்க முடியாமல் ஜெமினியிடமிருந்து எஸ்ஸாகி விஜயகுமாரி எஸ்எஸ்ஆரைக் கவனிக்க ஓடி வருகிறார் !

ஜெமினியின் காதலி சரோஜாதேவிக்கு இதைப் பார்த்து மனம் கொதித்து சொல்லாமல் கொள்ளாமல் போட்டிக்கு நானும் எஸ்எஸ்ஆரைத் தூங்கவைக்கிறேன் என்று கிளம்பிவிடுகிறார் !

https://www.youtube.com/watch?v=J-N6xTuQb88


ஜெமினி என்ன செய்வார்?!
கல்யாணப் பரிசு சைக்கிளை எடுத்துக் கொண்டு சாவித்திரியின் காருக்குப் பின்னே காதல் துரத்தலுக்குப் போய் விடுகிறார்>>>>அப்புறம் கனவுக் கற்பனை க(ழு)தை எங்கெங்கோ காகிதம் மேயப் போய்விடுகிறது...எனக்கும் யாரோ தண்ணீர் தெளித்து கனவை சிதைத்துக் காப்பாற்றி விடுகிறார்கள் !!

https://www.youtube.com/watch?v=epP_PlwbiWE

கப்சாக்கதை முற்றும்.

eehaiupehazij
17th September 2015, 09:16 PM
மனத்தைக் கவரும் மதுரகானங்கள் பாகம் 5 மதுஜி துவக்கத்தில் இனிதே வளர்ந்திட
காதல்மன்னரின் மேன்மைத்திரி சார்பில் தன்னந்தனியாக ஒரு ரோஜா மலருடன் வந்து வாழ்த்துகிறேன்!

https://www.youtube.com/watch?v=8sYjmMv5YfI

ஆனால் தனிமையிலே இனிமை காண முடியாதே !

https://www.youtube.com/watch?v=aBgwFy4ejd8

எனவே பாகம் 5ல் நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம்!

https://www.youtube.com/watch?v=TwiWbFoDyEY

eehaiupehazij
21st September 2015, 12:29 PM
மருத்துவப் பணியில் நமது கதாநாயகியர் /கதாநாயகர்கள்!!


இப்போதும் சரி அப்போதும் சரி திரைப்படங்களை பொருத்தவரை மருத்துவர் என்றாலே வெள்ளைக்கோட்டு கழுத்தில் தொங்கும் ஸ்டெதாஸ்கோப் கையோடு எப்போதும் கொண்டுசெல்லும் மெடிகல்கிட் ....நர்ஸ் என்றாலே வெள்ளுடை தேவதைகளாய் நைடிங்கேல் தெரசா ரேஞ்சில் அன்பின் உருவமாக உருவகப்படுத்தியிருக்கிறார்கள் !!
ஆனால் இப்போதைய டாக்டர்களும் நர்சுகளும் இந்த வளையத்திலிருந்து கொஞ்சம் வெளியே வந்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது!!
எம் ஆர் ராதா பாலும்பழமும் படத்தில் பஞ்ச் அடிப்பார் ...இஞ்சினியர்னா சித்தாளத்தான் கட்டிக்கணும்...டாக்டர்னா நர்சைத்தான் கட்டிக்கணும்...என்று.....டாக்டர் ரவியாக வரும் நடிகர்திலகம் அலட்டிக் கொள்ளாமல் மெலிதான புன்முறுவலுடன் ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பார்!!
சினிமாவைப் பொருத்தவரை ஒரு சென்சேஷனுக்காக டாக்டர் டாக்டரம்மாவைக் காதலிப்பதாகக் காட்டுவதை விட டாக்டர் நர்சிடம் காதலில் விழுவதைத்தான் அதிகளவில் காட்டியிருக்கிறார்கள்

பாலும் பழமும் நடிகர்திலகம் கைராசி மற்றும் அன்னை வேளாங்கண்ணியில் ஜெமினி.......

https://www.youtube.com/watch?v=M0h1dk1avrY

https://www.youtube.com/watch?v=wqPpmyVDvwo

eehaiupehazij
22nd September 2015, 11:37 AM
காதல் மன்னரின் மறக்க முடியாத கிளைமாக்ஸ் மதுர கீத காட்சிகள் !

பகுதி 1 கல்யாண பரிசு / ரோமன் ஹாலிடே


ஒரு படத்தைப் பார்க்கிறோம் கதையமைப்பின்படி நகரும் காட்சிக்கோர்வையை ரசிக்கிறோம் இனிய இசையமைப்பிலும் பாடல்காட்சிகளிலும் லயிக்கிறோம்!
பெரும்பாலும் ஒரு படத்தின் வெற்றி இடையிடையே வரும் காட்சிகளை விட அதன் கிளைமாக்ஸ் அமைப்பில்தான் உறுதி செய்யப்படுகிறது என்பது எனது தாழ்மையான கருத்து ! சிறந்த உதாரணங்கள் நடிகர் திலகத்தின் கர்ணன், புதிய பறவை, அந்த நாள், கௌரவம்...பாசமலர், வீரபாண்டிய கட்டபொம்மன்...காதல் மன்னரின் கல்யாணபரிசு, சுமை தாங்கி, சாந்தி நிலையம்.....ரவிச்சந்திரனின்
அதே கண்கள்....ஜெய்யின் நூற்றுக்கு நூறு.....ஹிட்ச்காக்கின் திகில் படங்கள்...முக்கியமாக சைக்கோ , வெர்டிகோ.... ஜேம்ஸ் பாண்ட் படங்கள்....கிரிகரி பெக்கின் ரோமன் ஹாலிடே........வெற்றிக் கோட்டையில் கொடிநாட்டிய காவியங்கள்!

கிளைமாக்ஸில் சொதப்பிய படங்கள் பெரும்பாலும் வெற்றியைக் கோட்டைவிடுகின்றன !

அந்தவகையில் கல்யாணப் பரிசு திரைப்படத்தில் விரக்தியோடு இலக்கின்றி போகும் திசையறியாது மனமும் உடலும் தள்ளாட காதலிலே தோல்வியுற்ற காதலனின் மொத்த உருவகமாக ஜெமினி ஒரு லாங்க்ஷாட்டில் சில்லவுட்டாக முதுகாட்டி நடந்து செல்லும் மகோன்னதமான காட்சி என் மனத்தைக் கவர்ந்த கிளைமாக்ஸ் ஆகும் !!

https://www.youtube.com/watch?v=NKfebNrglqY

ஆனால் ஸ்ரீதர் இந்தக் காட்சியை ரோமன் ஹாலிடே படத்தின் கிளைமாக்சில் கிரிகரிபெக் காதல் நழுவிய துக்கம் தொண்டையடைக்க நம்மை நோக்கி விரக்தியுடன் நடந்து வரும் ஷாட்டைத்தான் இன்ஸ்பிரேஷனாக கொண்டிருக்க முடியும்!!

https://www.youtube.com/watch?v=kIxNV9DSEwA

eehaiupehazij
22nd September 2015, 11:56 AM
In line with Raghavendhra Sir
My Heartfelt birthday wishes to the lotus feet of immortal PBS!

https://www.youtube.com/watch?v=F0xW0-EfOrQ

eehaiupehazij
23rd September 2015, 09:33 AM
காதல்மன்னரின் கிளைமாக்ஸ் காந்தப் புலம் !
பகுதி 2 நான் அவனில்லை!


ஒரு படத்தில் இறுதியில் ஒரு கிளைமாக்ஸ் ஓகே!

படம்பூராவுமே மாறிமாறி கிளைமாக்ஸ் ஆன்டிகிளைமாக்ஸ் என்றால் ,,,, அது ஜெமினியின் வாழ்நாள் நடிப்புச் சாதனைப் படமான நான் அவனில்லைதான்!!

நடிகர் திலகத்தைப் போலவே ஜெமினியும் தனது வரையறைகளுக்குள் பல பரிமாணங்களில் தனது நடிப்புத் திறமையை ரசிக நெஞ்சங்களில் பதித்தவர்தான் !!

ஆனால் இந்தப்படத்தில் அசத்தலான பன்முனை நடிப்பில் அவர் பதித்த முத்திரை நின்று நிலைத்திடும் சாதனையே !!
மிகவும் உருக்கமான கிளைமாக்சில் எதிர்மறை நாயகன் மீதும் ஈர்ப்பையும் அனுதாபத்தையும் அள்ளித்தெளித்திட வைத்தது ஜெமினிக்கு வெற்றியே!!

https://www.youtube.com/watch?v=ij9bR4B_11c

அண்ணன் அசோகனால் கத்திக் குத்துப் பட்டு முகத்தில் மரணபயம் கலந்த வேதனையில் ஒரு சினிமா டிரைலர் போல தனது கடந்தகால வாழ்க்கைநிகழ்வுகள் மனக்கண் முன்னே ஓட அவர் காட்டும் பதற வைக்கும் நடிப்புப் பாவனைகள் திரைப்படக் கல்லூரியில் மாணவர்களுக்கு பாடங்களாகபோதிக்க அடிப்படை நடிப்புக் கல்வியே!! எந்த ஒரு முத்திரை குத்தப்பட்ட ரசிகராயினும் நம்மையும் அறியாமல் விழியோரங்களில் துளிர்க்கும் கண்ணீர்த் துளிகளே இந்த மாபெரும் நடிப்புச்செல்வத்துக்கு நமது இதயபூர்வ அஞ்சலி!!

eehaiupehazij
24th September 2015, 11:43 PM
Half Ticket / Half Saree songs!
தாவணி லாவணியும் அரை நிஜார் பேஜாரும் !!


குழந்தைப் பருவத்தில் என்ன டிரஸ் போட்டாலும் (போடாவிட்டாலும்!) ஆணோ பெண்ணோ அழகுதான் !
அதே ரெண்டுங்கெட்டான் பருவத்தில் ஆடையமைப்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் முறையே அரை டிரவுசராகவும் தாவணியாகவும் மாறும்போது பெண்ணுக்கு அழகு ஏறுகிறது .....பையனுக்கு ?!

நிச்சயதாம்பூலம் படத்தில் நடிகர்திலகம் ஜமுனாவின் இளமைப் பருவத்தை மனதில் கொணர்ந்து பாடும் பாவாடை தாவணியில் பார்த்த உருவமா ....முதல்..
அட்டகத்தியில் வரும் ஆடி போனா ஆவணி....
தாவணி வரை பருவப் பெண்டிரின் உடையழகு வர்ணிக்கப்படுகிறது..என்ன செய்ய...?!
கால நாகரிக மாற்றங்கள் பாவாடை தாவணியை முற்றிலும் ஒழித்து சூரிதார் பக்கம் திரும்பியதும் ஒரு பாதுகாப்பு வசதி நன்மை கருதியே !

அரை டிக்கட்டுகளின் அரை டிரவுசரும் மாற்றங்களை அடைந்து அறுபது வயது பெருசுகளும் வெளிநாட்டுக்காரர் போல ஸ்டைலாக போடுமளவு இருக்கிறது நாகரிக முன்னேற்றம் !!

ராமன் எத்தனை ராமனடி, தங்கப் பதக்கம், வசந்த மாளிகை படங்களில் நடிகர்திலகம் துணிந்து அரை டிரவுசர் போட்டு வருவார் !! காதல் மன்னரும் தனது
பங்குக்கு தேன் நிலவு, ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் படங்களில் களத்தூர் கண்ணம்மா கமலஹாசன் ரேஞ்சில் அரைடிரவுசர் போட்டு கலக்குவார்!!

Part 1 : Half Trouser songs!!

காதல் மன்னர் Vs காதல் இளவரசர் !

காதல் மன்னரின் lake water surfing சாகசம் எழில் கொஞ்சும் மச்சகன்னி வைஜயந்தியுடன்!
https://www.youtube.com/watch?v=TgwgZyIe58k

காதல் இளவரசரின் அரைடிக்கட் பாலபருவம் !
https://www.youtube.com/watch?v=Axcrmw8OD4A

eehaiupehazij
25th September 2015, 03:10 AM
24.09.2015 மாலை 5 மணிமுதல் 7 30 வரை என் வாழ்க்கைப் பயணத்தில் மதுரமான நிமிடங்கள்!!


திரிகளின் இரும்புக்கை எழுத்து மாயாவி திரைப்பாடல்களின் அக்குவேறு ஆணிவேரிஸ்ட் திரித்துவத்தின் வாஸ்து வாசு சாருடன் (அவரது தம்பியுடன்)அவர் வருகையால் குளிர்ந்த கோவை மாநகரில் எழுத்துக்களின் இளம்துருக்கியர் அரிமா செந்தில்வேல் மற்றும் நடிகர்திலகத்தின் பற்றுமிகு மருத்துவர் கனவான் டாக்டர் ரமேஷ் பாபுவுடன் அளவளாவிய இனிய பொன்மாலைப் பொழுது!!

உள்ளங்களையும் குளிர்வித்து நடிகர் திலகம் புகழ் பாடும் உணர்வுகளையும் ஒளிர்வித்தமைக்கு நன்றிகள் நன்றிகள்....நண்பர் வாசுஜி! Unforgetable moment with ever lingering memories!!

with regards,

senthil

இப்போது இப்படிப் பாடத் தோன்றுகிறது !

https://www.youtube.com/watch?v=CFj4Tb9KEYw

இன்னும் பத்து வருடங்கள் கழித்து இப்படிப் பாடுவோமோ?!

https://www.youtube.com/watch?v=VtrnHY21zZw

eehaiupehazij
25th September 2015, 08:46 AM
Monotony breakers! / Gap fillers!!

திறந்திடு சி செ! மூடிடு சி செ ! இருவரிக் கப்சாக் கதைகள்!!

க க 1 : களத்தூர் கண்ணம்மா / வசந்த மாளிகை / ஒளிவிளக்கு !

மது/ரம் சீசா கானங்கள்!!

சி க சி செ விடம் விரும்பிக் கேட்டவை !( கப்சா!!)

காதலிப்பது சுகானுபவமே! ஆனால்..... காதலியே மனைவியாகி விட்டால் சிலருக்கு அது நரகமே ! அவர் சீசாவைத் திறக்கிறார்! கா(த)லி பண்ணுகிறார்!! தள்ளாடுகிறார்!!

https://www.youtube.com/watch?v=SToylWoPsSc


இந்தப் பாடம் கற்றுக்கொள்ளாததால் இவர் காதலிக்காக வேண்டி சீசாவை மூடி விட்டு இரண்டு மனமாக காதலியை நினைக்கலாமா அல்லது தொண்டையை நனைக்கலாமா என்று மதில்மேல் பூனையாகத் திண்டாடுகிறார்!

https://www.youtube.com/watch?v=Z2VHhYADomI

இவர்கள் ரெண்டுபேரும் காதல் விவகாரத்தால் நொந்து நெஸ்லே நூடுல்ஸ் ஆனதைக் கண்ணுற்று நமக்கு இந்த பாதை சரிப்படாது என்று தனி ஒருவனாக விலகி வேடிக்கை பார்க்கிறார் மக்கள்திலகம் ! களவும் கற்று மற என்ற வாக்கியத்தை பிடித்துக்கொண்டு இந்த மதுவில் என்னதான் இருக்கிறது என்று சீசா மூடியைத் திறந்து நுகர்ந்து பார்த்து அதிலேயே மட்டையாகி சீசாவை உருட்டிவிடுகிறார் ! உடனே அவரது மனசாட்சி விழித்துக்கொண்டு நால்வகை வேதங்களின் உருவங்களாய் வடிவெடுத்து அவரைத் தனித்தனி ஒருவ்ன்களாய் தனிஒருவனாக்கி வறுத்தெடுக்கிரார்கள் !! சந்தடிசாக்கில் தம்பிகளான ஜெமினிக்கும் சிவாஜிக்கும் குடியின் தீமையை முஷ்டி உயர்த்தி ஒரு வாத்தியாராக விளக்கப் பாடம் சொல்லித்தருகிறார் !!

https://www.youtube.com/watch?v=GscOC7aw97k

eehaiupehazij
26th September 2015, 12:42 AM
OMG (Oh My God) Melodies and Melancholies!!

கடவுளுக்கே கேள்விக் கணைகளான மானுட கீதங்கள்!!


மனித மனம் ஒரு விசித்திரமான உணர்வுகளின் கலவைக் களமே !
அதில் கடவுள் நம்பிக்கையும் அவநம்பிக்கையும் சம விகிதத்தில் கலந்தே தெளிக்கப் பட்டிருக்கிறது !

எந்தக் கவலையுமின்றி எல்லா வளங்களும் நிறைந்து இன்புற்றிருக்கும் சமயங்களில் நாம் நாத்திகராகி நமது கண்களுக்கு இறைவன் தெரிவதில்லை !
துன்பச் சூழலில் சிக்கிச் சீரழியும் போது ஆத்திகராக மாறி கடவுள் நமது கண்களுக்குத் தெரிய வேண்டும் நமது பிரார்த்தனைகள் அவர் செவிகளுக்குச் சென்றடைய வேண்டும் என்று கடவுளின் பாதார விந்தங்களில் பணிகிறோம் !!

பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு கண்களுக்குப் புலப்படாமல் எங்கும் நிறைந்த பரம்பொருளை நமது இஷ்டத்துக்கு வளைத்து நாம் வாசிப்பதற்கேற்ப அவர் ஆட வேண்டும் என்று எண்ணுவது பேதமையே !!

OMG Melancholy 1 / Gemini Circus!!

பாசவலைக்குள் நாம் கட்டுண்டு கிடக்கும்போது நம்மைச் சார்ந்தவர்கள் நம்மால் நேசிக்கப் படுபவர்கள் அல்லலுறும்போது காணச் சகிக்காமல் கடவுளே உனக்குக் கண்ணில்லையா இறைவனே உனக்கு இதயமில்லையா என்றெல்லாம் பிதற்றுவது மனிதத்தின் வாடிக்கையே !
ஒரு கூட்டுப் புழுக்களாக ஜீவிதம் காணும் தொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தால் சுரண்டப் பட்டு நெஞ்சொடிந்து மடியும் தருவாயில் நண்பரின் கோபம் இறைவன் மேல் திரும்புவது வேடிக்கையான வாடிக்கையே !



மனதை நெகிழச் செய்யும் நடிப்புப் பரிமாணங்களை இதயங்களில் நுழைந்து ஈர விழிகளிலே வெளிவரும் குறளி வித்தைக்காரர் ஜெமினியே !!

https://www.youtube.com/watch?v=f_EQYsvrL1I

எங்கெங்கும் நீக்கமற நிறைந்தவன் இறைவனே !
ஈசனடியாரான நடிகர்திலகத்துக்கே இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடுதல் வேண்டாம் என்று எடுத்துரைக்கிறார் மானுட ரூபத்தில் வந்து
பாட்டால் பாடாய்ப் படுத்தி எடுக்கும் ஜெமினி சிவன் !!

https://www.youtube.com/watch?v=MOTgW8glTHk

eehaiupehazij
26th September 2015, 01:13 AM
OMG Melodies and Melancholies Part 2


ஆனானப் பட்ட ஈசனுக்கும் சனி பகவான் பிடியிலிருந்து விடுபட முடியாமல் பிரம்மஹத்தியால் பிச்சையெடுத்து பாவம் தீர்க்க வேண்டிய சூழல் !


https://www.youtube.com/watch?v=9l1NsHpGUsE

eehaiupehazij
26th September 2015, 08:53 AM
Gap filler from GG starrer Thenmazhai!

'Cho' Ramaswamy comedy with Nakesh and GG!

https://www.youtube.com/watch?v=kohJzpbHd-0

an enchanting solo song!

https://www.youtube.com/watch?v=VK4-okqTIx4

eehaiupehazij
26th September 2015, 10:19 PM
நடிகர்திலகத்தின் பிறந்தநாள் நினைவஞ்சலி

சிவாஜி / ஜெமினி கணேசன்களின் இணைவின் முன்னோட்ட நினைவலைகள் !


சம அந்தஸ்தில் மக்களின் வரவேற்பைப் பெற்று புகழ் வெளிச்சத்தில் மின்னி ஒளிர்ந்த இரு நடிப்புச் செம்மல்கள் நடிகர்திலகமும் காதல் மன்னரும்!
அகில உலக அளவிலும் ஒரு நல்ல புரிதலுடன் கதைக் களத்தின் வெற்றிகரமான நடிப்பு உருவகத்தை மட்டுமே மனதில் இருத்தி எந்த வித ஈகோவுக்கும் இடம் தராது பதினைந்து படங்கள் இணைந்து இரு கதாநாயகர்கள் கலக்கியது பெருமையுடன் நினைவுகூரத் தக்க சாதனையே !!
வீரபாண்டிய கட்டபொம்மன்,கப்பலோட்டியதமிழன், பாசமலர், பாவமன்னிப்பு,பதிபக்தி, பந்தபாசம், நாம் பிறந்த மண், சரசுவதி சபதம், திருவருட் செல்வர், கந்தன் கருணை போன்ற படங்களில் நடிகர்திலகத்துடன் கதை முக்கியத்துவம் கருத்தில் கொண்டு அளவாக அடக்கி வாசித்திருப்பார் காதல் மன்னர் !
சாவித்திரியை தனது பாசமலர் தங்கையாகவும் ஜெமினியை மாப்பிள்ளை என்றுமே நிஜ வாழ்விலும் மதித்தவர் நடிகர்திலகம்! குலமகள் ராதை படத்தில்உலகம் இதிலே அடங்குது என்னும் பாடல் காட்சியில் சினிமாக்காரங்க படத்தைப் போட்டா பத்திரிகைகள் கடைகளில் விரைவில் தீர்ந்துவிடும் என்ற கருத்துப்பட வரும் காட்சியில் நடிகர்திலகம் தன்னை முன்னிலைப் படுத்தாது ஜெமினி சாவித்திரி படங்களைக் காட்டி தனது கர்ணன் காலத்துத் தொடர்ச்சியான நன்றியறிதலையும் (கட்டபொம்மனில் எஸ் எஸ் ராஜேந்திரன் அவர்கள் நடிக்க இயலாத இக்கட்டான சூழலில் நடிகர்திலகத்தின் பாசமலர் வழி வேண்டுதலை ஏற்று எந்த ஈகோவுமின்றி உடனே வந்து நடித்துக் கொடுத்து படத்திற்கே இனிமையும் பெருமையும் சேர்த்தவர் ஜென்டில்மேன் ஜெமினி) மரியாதையையும் வெளிப்படுத்தி அவர்களைப் பெருமைப்படுத்தியிருப்பார் !!
பெண்ணின் பெருமை, பார்த்தால் பசி தீரும், உனக்காக நான் திரைப்படங்களில் இன்னும் ஒருபடி மேலே போய் ஜெமினிகணேசனின் பாத்திரப்படைப்பை கதையின் நாயகனாக முன்னிலைப் படுத்தும் வண்ணம் தனது விட்டுகொடுக்கும் மனப்பாங்கை வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர்திலகம் !!

https://www.youtube.com/watch?v=3qMekkGIgLg

https://www.youtube.com/watch?v=9ZghfWkD8gA

eehaiupehazij
26th September 2015, 11:14 PM
Monotony breaker !


சூரக்கோட்டை சிங்கக்குட்டியாக பிரபு உருவகப்படுத்தப் பட்டபோது சிவாஜிக்குப் பதிலாக பிரபுவின் தந்தையாக நடித்தார் ஜெமினி.

வயதின் முதிர்ச்சி முகத்தில் அப்பிக் கொண்டாலும் வழக்கத்துக்கு மாறாக 'விக்'கேல்லாம் வைத்துக் கொண்டு வழக்கம்போல விஜயகுமாரி ஒரு பக்கம்
பிரமீளா இன்னொரு பக்கம் என்று காதல் மன்னன் இமேஜை போட்டியில்லாத நிரந்தர நிலையிலும் தக்கவைத்துக் கொள்கிறார் ஜெமினி !

https://www.youtube.com/watch?v=pRMwQmoWDj8

https://www.youtube.com/watch?v=JV4fNy6zeIA

eehaiupehazij
28th September 2015, 07:56 PM
சிரித்தாலும் கண்ணீர் வரும் ...அழுதாலும் கண்ணீர் வரும்......
சிரிக்காமலும் அழுகாமலும் கண்ணீர் வருமா... ? வருமே...
வெங்காயம் உரித்தாலும் ! பதுக்கி வைத்த வெங்காயம் அழுகும் போதும் ...வெங்காயத்தின் விலை பட்டம்போல ஏறிப் பறக்கும் போதும்....!

GG starrer பெண் என்றால் பெண் திரைப்படத்தில் ..

https://www.youtube.com/watch?v=UhKMqafjLas

eehaiupehazij
28th September 2015, 10:17 PM
நடிகர்திலகத்தின் பிறந்தநாள் நினைவலைகள்

பார்ட் 3 நடிகர்திலகத்தின் கம்பீர உச்சரிப்பால் பெருமை பெற்ற ஆங்கில வார்த்தைகள் !!

Never ...I don't care....No peace of Mind....To be or Not to be ..You too Brutus ....Twinkle Twinkle Little Star .....I am a little tea pot ....Get Out!!

முறையான பள்ளிவழி ஆங்கிலக் கல்வி கற்றவறல்ல என்றாலும் தனது உச்சரிப்புத் தனித் தன்மையாலும் அபார ஞாபகசக்தி திறனாலும் பகுத்தறியும் தன்மையாலும் ஆங்கிலத்தையும் ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்தவர் நடிகர் திலகம் !

https://www.youtube.com/watch?v=eNvjPjKqd6k


கௌரவம் திரைப்படத்தில் ஒரு MGM சிங்கம் போல அவர் கர்ஜிக்கும் NEVER என்னும் வார்த்தையும், சாந்தி திரைப்படத்தில் தனது தர்ம சங்கடமான சூழலில் அந்தக் கால ராமராஜனான எஸ் எஸ் ஆர் திரும்பி வந்து தன்னுடன் வாக்குவாதம் முற்றும் பொது உறுமும் I don't care வார்த்தைகளின் ஏற்ற இறக்க Modulation ...ஞான ஒளி திரைப்படத்தில் போலீஸ் நண்பனால் இம்சிக்கப் படும் போது மனம் வெறுத்து பாடும் No peace of Mind..... உதட்டசைவு...பிரஸ்டிஜ் பத்மநாபனின் மணிப் பிரவாள ஆங்கில வசன நடை ...புதிய பறவையின் Pleasure is mine சௌகாரிடம் வெளிப்படுத்தும் மிடுக்கு......தங்கப் பதக்கத்தின் Twinkle Twinkle Little Star........என்னைப் போல ஒருவனில் I am a Little Tea Pot....ராஜபார்ட் ரங்கதுரையின் To be or Not to be.....சொர்க்கம் திரைப் படத்தில் இறுதிக் கட்ட ஜூலியஸ் சீசரின் You too Brutus.....

இதற்கெல்லாம் சிகரம் பாசமலரில் பல்லைக் கடித்துக் கொண்டு ஆத்திரத்தையும் கோபத்தையும் பென்சில் சீவுவதில் வெளிப்படுத்தி காதல் மன்னரை Get Out என்று விரல் சுட்டி விழியால் வெளியே வழிகாட்டும் காட்சியே !
(காதல் மன்னரின் Each for all and All for Each முறையான மேற்கத்திய பாணி ஆங்கில உச்சரிப்பு அவரது பள்ளிவழி ஆங்கில போதனையாலும் பின்னாளில் அவரது கல்லூரி விரிவுரையாளர் பணி மூலமும் இயற்கையாக அமைந்ததே !)


https://www.youtube.com/watch?v=wnFPEPEGCvc

என்னதான் மேஜர் சுந்தரராஜனும் வி எஸ் ராகவனும் ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி பீட்டரடித்தாலும் நடிகர்திலகத்தின் தனித் தன்மையான ஆங்கில உச்சரிப்பு பாராட்டுதலுக்குரியதே!!

மறக்க முடியாத நினைவலைகள் தலைவா!! RIP (Rest in Peace but Return If Possible)

செந்தில்

eehaiupehazij
29th September 2015, 11:41 AM
Gap filler

From Lalitha ....GG starrer with Sujatha and kamalhaasan!

https://www.youtube.com/watch?v=-4HJ5D7fs-Y

eehaiupehazij
1st October 2015, 06:16 PM
Rudhraveena movie scenes (unnaal mudiyum thambi with kamal) with chiranjeevi!

https://www.youtube.com/watch?v=bOY7VV8yn8M

eehaiupehazij
1st October 2015, 06:17 PM
https://www.youtube.com/watch?v=7VbTNHqs8uk

eehaiupehazij
1st October 2015, 06:18 PM
https://www.youtube.com/watch?v=m5mkeGhQbMQ

eehaiupehazij
1st October 2015, 06:19 PM
an emotional outbreak!

https://www.youtube.com/watch?v=mXNc0Z0HQpU

eehaiupehazij
1st October 2015, 06:19 PM
What a cool portrayal with a fire brand dialogue delivery from this unforgettable thespian of subtle acting!!

https://www.youtube.com/watch?v=-8ETVWtvoSg

eehaiupehazij
1st October 2015, 06:20 PM
https://www.youtube.com/watch?v=jSQnb4apW2M

eehaiupehazij
1st October 2015, 06:23 PM
https://www.youtube.com/watch?v=giXNhS51DP0

eehaiupehazij
1st October 2015, 06:24 PM
https://www.youtube.com/watch?v=QYRBZJnp1ps

eehaiupehazij
1st October 2015, 09:04 PM
காந்தியடிகள் பிறந்தநாள் நினைவுகூரல்!

https://www.youtube.com/watch?v=duZm6OytAns

https://www.youtube.com/watch?v=ciTmDDFjFvk

on behalf of GG thread...

https://www.youtube.com/watch?v=TwiWbFoDyEY

eehaiupehazij
2nd October 2015, 08:43 AM
காந்தி ஜெயந்தி நினைவலைகள் !

https://www.youtube.com/watch?v=Zt_MmVBUv84

https://www.youtube.com/watch?v=_SakitCoNYc


மனிதனும் தெய்வமாகலாம் !

https://www.youtube.com/watch?v=6Eg20JQwGYY

eehaiupehazij
2nd October 2015, 04:37 PM
in commemoration to world senior citizens' protection day...though belated!

https://www.youtube.com/watch?v=AVqMnklPmS4

eehaiupehazij
2nd October 2015, 04:39 PM
https://www.youtube.com/watch?v=dvIQFMz771Q

eehaiupehazij
2nd October 2015, 04:40 PM
NT's rare clipping in the kannada original school master at the request of Pantulu!

https://www.youtube.com/watch?v=q8vxKpQy2RM

eehaiupehazij
2nd October 2015, 04:46 PM
self confident senior citizen!

https://www.youtube.com/watch?v=gcdZb_WIvYM

eehaiupehazij
2nd October 2015, 04:48 PM
How sweet is this gentleman Gemini in making the environ so sweet stealing the show!

https://www.youtube.com/watch?v=rEEJkehsdTo

eehaiupehazij
2nd October 2015, 04:54 PM
Guest performance outshining others! that is this magician GG and his Midas touch!!

https://www.youtube.com/watch?v=Qmq9Fglh7Lo

eehaiupehazij
2nd October 2015, 09:51 PM
The indisputable King of Romance GG's PBS songs and Karaoke!!

ஜெமினியின் குரலார் பி பி ஸ்ரீநிவாஸ்

1. காலங்களில் அவள் வசந்தம் ..../ பாவமன்னிப்பு


ஜெமினிக்கான பி பி ஸ்ரீனிவாசின் இனிமைக்குரல் குழைவில் காலங்களையும் கடந்து ரசிக நெஞ்சங்களில் வசந்த அலைகளை தென்றலாக தவழ விடும் சிரஞ்சீவித்துவம் பெற்ற மதுர கீதம் !


பாடலின் மெல்லிசைக் கோர்ப்பும் கற்பனை வளம் மிக்க வரிகளும் பாடல் படமாக்கப் பட்டுள்ள விதமும் காதல் மன்னரின் இயல்பான மேன்மை நிறைந்த உடல் மொழியும் மென்மையான பாடல் வரிகளுக்கேற்ற அசைவுகளும் உடையலங்காரமும் என்றும் பசுமையே !


https://www.youtube.com/watch?v=52kDVborPjQ

https://www.youtube.com/watch?v=bZYcTwSDYG0

https://www.youtube.com/watch?v=vbn4CT3gXtw

https://www.youtube.com/watch?v=w6f_WJFYH-Y

eehaiupehazij
2nd October 2015, 10:23 PM
The indisputable King of Romance GG's PBS songs and Karaoke!!


ஜெமினியின் குரலார் பி பி ஸ்ரீநிவாஸ்

பாடல் 2 இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுது.....வீரபாண்டிய கட்டபொம்மன்


ஏ எம் ராஜாவின் மாற்றுக் குரலாக பின்னாளில் ஜெமினியின் குரலாகவே மாறிப் போன பி பி சீனிவாசராவ் முதன் முதலில் ஜெமினிக்குப் பாடியது !
வெள்ளிவிழாக் கண்ட வெற்றிச் சித்திரத்தில் வெள்ளித்தட்டில் பாலன்னமாக சுவை சேர்த்த என்றும் இனிக்கும் தேனமுதப் பாடல் ஜெமினி பத்மினி இணைவில் !நடிகர்திலகமும் காட்சியளித்து பெருமை சேர்ப்பார் பாடலின் இறுதிவரி காட்சியமைப்பில் ...


https://www.youtube.com/watch?v=DjbFwPJgDTE

https://www.youtube.com/watch?v=jQyQjsgwFBs

https://www.youtube.com/watch?v=BBmQp0ZlSaU

eehaiupehazij
2nd October 2015, 10:49 PM
The indisputable King of Romance GG's PBS songs and Karaoke!!

ஜெமினியின் குரலார் பி பி ஸ்ரீநிவாஸ்

பாடல் 3
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா ....சுமைதாங்கி


வாழ்க்கையில் எப்போதேல்ல்லாம் நாம் சரிவை சந்திக்கிறோமோ அப்போதெல்லாம் வழுக்கி விடாமல் வீழ்ச்சியையும் எழுச்சியாக மாற்றிட நம்மை ஆக்கிரமிக்கும் நமது மனசாட்சியின் மன தைரியமூட்டும் நம்பிக்கையின் தும்பிக்கை எக்காலத்திலும் இப்பாடலே!

குறும்புத்தனமெல்லாம் அடங்கி ஒடுங்கி யதார்த்த வாழ்வின் சிக்கல்கள் சிலந்தி வலையாய் தன்னை சுற்றும் போது மனம் வெறுத்து ஜெமினி என்னும் உன்னதமான நடிப்புப் கலைஞர் இப்பாடல் காட்சிக் கோர்ப்பில் காட்டியிருக்கும் உடல்மொழி முகபாவங்கள் நமது மனங்களில் அதிர்வலைகளை உண்டு பண்ணி நெஞ்சத்தை நெகிழச் செய்து கன்னங்களில் கண்ணீர்க் கோடுகளை வரைந்திடும் ஒரு வித்தியாசமான உணர்வு நம்மை விட்டு என்றுமே அகலாத அற்புதமான ஜெமினி முத்திரை !

https://www.youtube.com/watch?v=gFcOsnk8DM0

https://www.youtube.com/watch?v=qd3kEym6ULU

https://www.youtube.com/watch?v=i2DaIx1BDDk

eehaiupehazij
3rd October 2015, 07:41 AM
The indisputable King of Romance GG's PBS songs and Karaoke!!

ஜெமினியின் குரலார் பி பி ஸ்ரீநிவாஸ்


பாடல் 4 / ராமு

நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே நீ மயங்கும் வகையில் நான் இல்லை.....


ஓய்வு பெற்ற ராணுவ வீரராக கச்சிதமான தோற்றப் பொலிவில் ஜெமினி தனது நடிப்பாற்றலை பறைசாற்றிய மறக்க முடியாத காவியம் ராமு !
போர்வீரனின் நிஜ வாழ்க்கைப் போராட்டங்கள். மனைவியைப் பறிகொடுத்து மகனும் அதிர்ச்சியில் ஊமையாகிவிட்ட பாலை வாழ்வில் அவர்
பாதையில் குறுக்கிடும் பாலைவனச் சோலையாக காதலை உணர்த்தும் பருவப் பெண் விஜயா!
அவள் நினைப்பே தவறு என்று கண்ணியமான மறுப்பை சோகக் கனிவுடன் மனதில் என்றும் ரீங்கரிக்கும் அமர அமுத மதுரமாக ஜெமினியின் குரல் பிரதிபலிப்பாக இழைக்கிறார் பி பி ஸ்ரீனிவாஸ் !

https://www.youtube.com/watch?v=F0xW0-EfOrQ

https://www.youtube.com/watch?v=GymE4x-QRb8

https://www.youtube.com/watch?v=SE56rBItOO4

eehaiupehazij
3rd October 2015, 08:16 AM
The indisputable King of Romance GG's PBS songs and Karaoke!!

ஜெமினியின் குரலார் பி பி ஸ்ரீநிவாஸ்

பாடல் 5 பாதகாணிக்கை

பூஜைக்கு வந்த மலரே வா......... பூமிக்கு வந்த நிலவே வா


முக்கோணக் காதலின் பிராண்ட் அம்பாசடராக காதல் மன்னர் வலம் வந்த தமிழ்த் திரைக் காதலின் பொற்காலம் !
வித்தியாசமான கதைக் களமாக இருந்தாலும் ஜெமினியின் இனிமை நிறைந்த காதல் காட்சிகளுக்குப் பஞ்சமில்லை !
மனதை அள்ளும் இசையில் நிலைத்து நிற்கும் மதுர கானம் விஜயகுமாரியின் இணைவில் நேர்த்தியான ஒளிப்பதிவில் இன்றளவும் ரசிக்கப் படுகிறது !

பாடலின் ஆரம்ப இசைக்கோர்ப்பு அபாரம் !

https://www.youtube.com/watch?v=wt9lkVLJB6U

https://www.youtube.com/watch?v=M_EmXesLIGI

https://www.youtube.com/watch?v=8ylJjTyc4FA

eehaiupehazij
3rd October 2015, 08:25 AM
Gap filler / Monotony breaker from the movie Poojaikku Vandha Malar!

https://www.youtube.com/watch?v=2Wu3TLhStGc

https://www.youtube.com/watch?v=TXUVGqxjPd0

https://www.youtube.com/watch?v=k3qrYh0oFUI

eehaiupehazij
3rd October 2015, 08:39 AM
The indisputable King of Romance GG's PBS songs and Karaoke!!

ஜெமினியின் குரலார் பி பி ஸ்ரீநிவாஸ்


பாடல் 6
வாழ்க்கைப் படகு

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ ...

உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே ,,,
விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே ..


காதல் மன்னரின் கண்ணியமான காதல் காட்சிகள் எத்தகைய இதமான சுவடுகளை நமது மனங்களில் பதிக்கின்றன என்பதற்கும் நிகரற்ற காதல் நடிப்பின்
நிலையான காதல் சக்கரவர்த்தி அவரே என்பதற்கும் இப்பாடலே சாட்சி ! தேவிகாவின் இணைவில்....
அந்தக்கால இசைக்குழுக்களின் ஆதர்ச கீதம் !!

https://www.youtube.com/watch?v=hJVHq886BOE

https://www.youtube.com/watch?v=5z91QaHxzDI

https://www.youtube.com/watch?v=EmnxtbnKrwo

eehaiupehazij
3rd October 2015, 11:12 PM
The indisputable King of Romance GG's PBS songs and Karaoke!!

ஜெமினியின் குரலார் பி பி ஸ்ரீநிவாஸ்


பாடல் 7

காதல் நிலவே கண்மணி ராதா / ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்!


பாந்தமான ஜெமினி சாவித்திரி ஜோடிக்கு ஜாடிக்கேற்ற மூடியாக அமைந்த குதூகலமான பாடல்கள் நிறைந்த படம் !
இந்தப்பாடலும் காதல் மன்னரின் துள்ளலான காதல் வெளிப்பாட்டுக்கு சான்றானது !

https://www.youtube.com/watch?v=ABpS4vB7wUs

https://www.youtube.com/watch?v=na7YNbq3mGE

https://www.youtube.com/watch?v=6CFA6QRA1oc

eehaiupehazij
3rd October 2015, 11:27 PM
he indisputable King of Romance GG's PBS songs and Karaoke!!

ஜெமினியின் குரலார் பி பி ஸ்ரீநிவாஸ்


பாடல் 8

சின்ன சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ / வாழ்க்கை படகு


பிள்ளையாகவே இருந்து விட்டால் தொல்லையே இல்லையே !!
குழந்தைகளுடன் நடிக்கும்போது ஜெமினியின் இனிமை ததும்பும் பாசம் வழியும் பார்வையும் நெஞ்சில் பொங்கும் அன்பும் ரசனையே !

https://www.youtube.com/watch?v=c8UIq19_dY4

https://www.youtube.com/watch?v=yldm_s_eW_s

https://www.youtube.com/watch?v=fiyEflS7NjU

https://www.youtube.com/watch?v=3ko_TkEHPIs

eehaiupehazij
4th October 2015, 07:27 AM
The indisputable King of Romance GG's PBS songs and Karaoke!!

ஜெமினியின் குரலார் பி பி ஸ்ரீநிவாஸ்

பாடல் 9

கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளியே வரலாமா
உன் கட்டழகான மேனியில் ஊரார் .....காத்திருந்த கண்கள்

ஒரு பெரிய கார் ஒரு சிறிய சைக்கிளிடம் கவிழ்ந்த கதை பாடலாக !


காரோட்டும் சாவித்திரியின் பின்னாலேயே சைக்கிளை எடுத்துக் கொண்டு துரத்தி துரத்தி கூடை ஐஸை அவர் தலையில் கோன் ஐஸாகக் கவிழ்த்து பிகர் மடிக்கிறார் காதல் மன்னர் !
அந்த லூசுப் பொண்ணும் கார் கண்ணாடி வழியே பெருமையாக லுக் விட்டுக் கொண்டே மன்னரின் காதல்வலையில் சிக்கிக் கொள்கிறார் !



https://www.youtube.com/watch?v=T9LIXZIZ--Q

https://www.youtube.com/watch?v=WV5d-q9NO9M

அட நம்ம ரஜினிகூட காதல் மன்னரின் இப்பாடலுக்கு ரீமிக்ஸ் அடிக்கிறாரே! என்ன படமோ?!

https://www.youtube.com/watch?v=JsQ8D-g6PSs

eehaiupehazij
4th October 2015, 07:58 AM
The indisputable King of Romance GG's PBS songs and Karaoke!!

ஜெமினியின் குரலார் பி பி ஸ்ரீநிவாஸ்

பாடல் 10
ஆஹா ஒடிவது போல் இடையிருக்கும் ...இருக்கட்டுமே! / இதயத்தில் நீ

தேவிகாவின் இணைவில் காதல் மன்னருக்கு அவரது பிடி இடை கூட கொடி இடையாமே !
காதலுக்குத்தான் கண்ணில்லையே ..!

https://www.youtube.com/watch?v=0a1Yr4UcxWg

extra!

கண்கள் திறந்து கொண்டதும் ஜெமினியின் மைண்ட் வாய்ஸ் !
யார் சிரித்தால் என்ன இங்கு யார் அழுதால் என்ன ..!

ஆறு மனமே ஆறு ஜெமினி ஸ்டைல் !
https://www.youtube.com/watch?v=zUQurTWUJuM

https://www.youtube.com/watch?v=znk1Bb7Xbuc

eehaiupehazij
4th October 2015, 09:30 AM
Gap filler

Ghost Beauties ! / அழகுப் பேய்கள் ..கற்பகம் விஜயா முதல் மாயா நயன்தாரா வரை !


பேயாக வந்தாலும் பெண்ணென்றால் அழகுப் பேயே !
பெண்ணென்றால் பேயும் இரங்குமாமே அந்தப் பெண்ணே பேயாகி மேகங்கள் மேலே ஏறி இறங்கி வருவதெல்லாம் நமக்குத்தான் சாத்தியம் !

ஒரு வசதிக்காக காதல் மன்னர் இறந்து போன மனைவி பேயாக வெள்ளாடையில் வந்து தன்னை இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொள்ள வற்புறுத்தியதாக கதை பண்ணி சாவித்திரியை இரண்டாம் கல்யாணம் பண்ணினாலும் பண்ணினார் ....
அவரையே ரோல் மாடலாக வைத்துக் கொண்டு ரவியும் அசோகனும் பெண் பேய்களுடன் குலாவும் கற்பனை வளம் மிக்க காட்சிகளும் ...

https://www.youtube.com/watch?v=1nn_QDc8hsI

Ravi in the clutches of same Vijaya ghost!

https://www.youtube.com/watch?v=6ZByhP1ebCQ

Asokan enjoys two ghost company!!

https://www.youtube.com/watch?v=scDfbr5pAA0

eehaiupehazij
4th October 2015, 07:52 PM
The indisputable King of Romance GG's PBS songs and Karaoke!!

ஜெமினியின் குரலார் பி பி ஸ்ரீநிவாஸ்

பாடல் 11
வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா ...காத்திருந்த கண்கள்

கணவன் மனைவியின் அன்புப் பாலம் குழந்தையே !
ஊடல்கொண்ட மனைவி கூடல் நாடி ஓடுவது குழந்தைக்காகவே !
என்னவொரு ஸ்டைலாக சிகரெட்டை சுண்டிவிட்டு பாடலை ஆரம்பிக்கிறார் காதல் வடிவமைப்பாளர் !!

https://www.youtube.com/watch?v=hyskryhfsqQ

https://www.youtube.com/watch?v=bWda7mcUyUA

https://www.youtube.com/watch?v=sGZkPspbq9c

eehaiupehazij
4th October 2015, 08:05 PM
Gap filler

காத்திருந்த கண்கள்

https://www.youtube.com/watch?v=6TYndPjBkxo

eehaiupehazij
4th October 2015, 08:07 PM
Gap filler

காத்திருந்த கண்கள்

https://www.youtube.com/watch?v=uYu4tJlwj_A

eehaiupehazij
4th October 2015, 08:21 PM
The indisputable King of Romance GG's PBS songs and Karaoke!!

ஜெமினியின் குரலார் பி பி ஸ்ரீநிவாஸ்

பாடல் 12

யார் யார் யாரவள் யாரோ ....பாசமலர்


வழக்கம்போலவே சுழன்றடிக்கும் நடிகர்த்திலகப் புயலிலும் கலங்காது தன்னம்பிக்கையுடன் தனது பாணியில் இனிமை சேர்த்து தனது நடிப்புப் படகை பத்திரமாக கரை சேர்க்கிறார் காதல் மன்னர் சாவித்திரி இணைவில் !
ஜெமினியின் இனிமை பாடல் விருந்தில் இப்பாடலும் சீனிவாசின் ஜெமினிக்குரல் அடையாள முத்திரையே !

https://www.youtube.com/watch?v=6e_llk_6_7g

https://www.youtube.com/watch?v=v11Mn9NOyGA

eehaiupehazij
4th October 2015, 11:02 PM
The indisputable King of Romance GG's PBS songs and Karaoke!!

ஜெமினியின் குரலார் பி பி ஸ்ரீநிவாஸ்

பாடல் 13
இளமை கொலுவிருக்கும் ....ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்!


ஜெமினி கணேசன் வெறும் காதல் மன்னராக மட்டுமில்லாது நடிகர்திலகத்துக்கு இணையாக குதிரை சவாரி நீச்சல் போன்ற சாகசங்களிலும் தேர்ந்தவர். தேன் நிலவு திரைப்படத்தில் காஷ்மீர் ஏரியில் பலகை மேல் பேலன்ஸ் செய்து வாடர் சர்பிங்க் அனாயசமாக டூப் போடாமல் அசத்தியிருப்பார்!
அதேபோல இப்படத்திலும் சுவிம்மிங் பூலில் சோமர்சால்ட் பேக் டைவிங் பிரமாதப் படுத்தியிருப்பார் !!

கூச்சநாச்சமில்லாமல் பெண்களுக்கிடையே நீந்தினாலும் ஒரு கண்ணியத்தை காதல் உணர்வுகளில் இயல்பாக வெளிப்படுத்தி நீரோடு சேர்ந்து நமது மனங்களையும் குளிர்வித்திருப்பார் !!


https://www.youtube.com/watch?v=IbS6KHTlhsM

https://www.youtube.com/watch?v=Xjb82NpwW-A

https://www.youtube.com/watch?v=GcIL96oo7rI

The lyrics of this song!

https://www.youtube.com/watch?v=b4VHZSIbeq0

uvausan
5th October 2015, 06:16 AM
அனைவருக்கும் காலை வணக்கம் !!

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/MAAYAM_zpsqo0sh6h6.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/MAAYAM_zpsqo0sh6h6.jpg.html)

uvausan
5th October 2015, 06:19 AM
பழமொழிகளும் அவைகளின் உண்மை வடிவமும் :

கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் இருந்து தோன்றிய பல பழமொழிகள் இன்னும் நம் புழக்கத்தில் உள்ளன . ஆனால் அவைகளில் பல உண்மை வடிவத்தை இழந்து வேறு வகையில் திரிக்கப்பட்டு இன்று நம் உபயோகத்தில் உள்ளன . சில பழமொழிகள் திரிக்கப்பட்டதால் , பலரின் வாழ்க்கையிலும் மீலாத துன்பங்களையும் விதைத்திருக்கின்றன . இங்கு சில பழமொழிகளை ஒரு சிறிய அலசலக்காக எடுத்துக்கொண்டுள்ளேன் .

பதிவு 1

"ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்."

இது ஒரு பழமொழி என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் இது ஒரு மருத்துவக் குறிப்பு. இதனின் ௨ட்பொருள் ஆனையைப் பிாித்தால் ஆ + நெய். அதாவது ' ஆ ' என்பதற்கு பசு என்று பொருள் ௨ண்டு. அதாவது பசுவின் நெய் என்று பொருள் கொள்ள வேண்டும். பசு நெய்யை நாற்பது வயது வரை தாராளமாக ௨ணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாற்பது வயதுக்குமேல் பசுவின் நெய்யை படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டும். நெய்யை குறைக்காமல் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு சத்து ௨டலில் சேர்ந்து மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் உள்ளது.


பூனைக்கு என்பதை பூ + நெய் என்று பிாித்துப் பார்க்கும்போது, பூவில் இருந்து எடுக்கக்கூடிய தேனுக்கும் ஒரு காலம் வரும். அதாவது நாற்பது வயதுக்குமேல் நெய்யை சுருக்கி தேனை ௯டுதலாக சாப்பிட வேண்டும் என்பதன் பொருளாகும். தேன் எளிதில் ஜீரணமாகும் ௨ணவு மற்றும் மருத்துவ குணம் நிறைந்ததாகும்.


பழமொழியின் பொருள் நாற்பது வயது வரை பசும் நெய்யையும், நாற்பது வயதுக்குமேல் தேனையும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம். ஆயுளும் வளரும்

https://www.youtube.com/watch?v=uPJC_T-iEAA

eehaiupehazij
5th October 2015, 07:50 AM
ரவிஜி
வருக வருக....ஜெமினித்தீவுக்கு நல்வரவு!
செந்தில்

eehaiupehazij
5th October 2015, 06:29 PM
The indisputable King of Romance GG's PBS songs with karaoke!


பாடல் 14
காற்று வெளியிடை கண்ணம்மா உந்தன் காதலை எண்ணிக் களிக்கிறேன் ! / கப்பலோட்டிய தமிழன்


இதுவும் நடிகர்திலகத்தின் ஒன் மேன் ஷோதான் எனினும் இனிமைக் காரணி இடைச்செருகலாயினும் ஜெமினி சாவித்திரி ஜோடியே !
பாரதியாரின் பாடலுக்கு சீனிவாசின் ஜெமினிக் குழைவு காலங்களைக் கடந்து பெருமை சேர்க்கிறதே !!

இந்தப் பாடல் காட்சி படமாக்கப் பட்டபோது ஜெமினிக்கு கொஞ்சம் ஹிப் ஜாயிண்ட் வலி இருந்ததால் அடிக்கடி இடுப்பில் கைவைத்து சமன் செய்து கொள்ளப் போக ரசிகர்கள் அதையே அவரது காதல் பாடல்களின் ஸ்டைலாக்கி முத்திரை குத்தி விட்டனராம் !!

(சிலசமயம் மறந்துபோய் கதாநாயகியின் இடுப்பிலும் கைவைத்து சமாளித்துக் கொள்வார் எல்லாம் ஒரு பேலன்சிங்தான் !!)
https://www.youtube.com/watch?v=rNNDekY5QnY

https://www.youtube.com/watch?v=Rl0Ce_4Ruww

eehaiupehazij
5th October 2015, 07:03 PM
The indisputable King of Romance GG's PBS songs with karaoke!


பாடல் 15
எந்தன் பருவத்தின் / பார்வையின் கேள்விக்கு பதிலென்ன சொல்லடி ராதா ....சுமைதாங்கி

சாத்தனூர் டேம் ? or Malampuzhaa?
மிக மிக இனிமையான தேனிசைப் பாடல் !
பாலாஜி நடிகர்திலகத்தை வைத்து எடுத்த எல்லாப் படங்களிலும் நாயகன் நாயகி பெயர்கள் ராஜா ராதா என்பது இப்பாடலின் இன்ஸ்பிரேஷனோ ?!

https://www.youtube.com/watch?v=eprrnrKgYnU

https://www.youtube.com/watch?v=NpG1XUnF4jo

https://www.youtube.com/watch?v=2B-mzh-nLBE

eehaiupehazij
5th October 2015, 08:51 PM
RaviG
Expecting GG postings in your style!
senthil

eehaiupehazij
5th October 2015, 10:22 PM
The indisputable King of Romance GG's PBS songs with karaoke!


பாடல் 16
கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு காரியம் நடக்கட்டும் துணிந்து விடு / பந்தபாசம்


ஜெமினிகணேசன் சிவாஜிகணேசனை விட எட்டு வயது மூத்தவர் ! பெண்ணின் பெருமை / பாவ மன்னிப்பில் காதல்மன்னர் நடிகர்திலகத்தின் அண்ணனாக நடித்திருப்பார் !

பந்தபாசத்தில் தம்பியாகவும் வீரபாண்டிய கட்டபொம்மன்/ கப்பலோட்டிய தமிழன் / நாம் பிறந்த மண் படங்களில் சிவாஜிக்கு இளையவராக
நடித்திருப்பார்! பிற படங்களில் சம வயதினராக நடித்திருப்பார்!

அண்ணன் என்னடா தம்பி என்னடா என்று மாற்று டைட்டில் வைத்திருக்க வேண்டிய அளவு சகோதர மனஸ்தாபம் புரிதலின்மை வெளிப்படுத்தப் பட்ட படம்!
இனிய கானங்கள் நிறைந்தது !

https://www.youtube.com/watch?v=9ZghfWkD8gA

eehaiupehazij
6th October 2015, 11:21 PM
Gap filler / Monotony breaker!

https://www.youtube.com/watch?v=kHW0TvlOgnk

eehaiupehazij
6th October 2015, 11:23 PM
Gap filler / Monotony breaker!

https://www.youtube.com/watch?v=f2hoKR5rdfE

eehaiupehazij
7th October 2015, 06:35 PM
Gap filler

https://www.youtube.com/watch?v=2Wu3TLhStGc

eehaiupehazij
7th October 2015, 06:35 PM
Gap filler

https://www.youtube.com/watch?v=TXUVGqxjPd0

eehaiupehazij
7th October 2015, 06:38 PM
Gap filler

https://www.youtube.com/watch?v=k3qrYh0oFUI

eehaiupehazij
7th October 2015, 07:00 PM
ஜெமினியின் மாற்றுக் குரலார் சிங்காரச் சோலை ஏ எல் ராகவன்

ஏ எம் ராஜாவும் பிபி ஸ்ரீநிவாசும் பிற நடிகர்களுக்கும் பின்னணி பாடினாலும் கண்களை மூடிக் கேட்கும்போது அந்த நடிகர்கள் மறைந்து ஜெமினிதான் ஞாபகத்துக்கு வருவார் ! இந்தக் காலகட்டத்திலும் ஒரு தற்காலிக மாற்றாக ஏ எல் ராகவனும் ஜெமினி குரலுக்கு முயற்சித்திருக்கிறார்!


கல்யாண்குமாருக்காக அவர் பாடிய எங்கிருந்தாலும் வாழ்க அவரை புகழேணியில் ஏற்றியது ! நாகேஷுக்கு பொருத்தமான குரலாயினும் பார்த்தால் பசி தீரும் படத்தில் ஜெமினிக்கும் பாடல் சூழலுக்கு ஏற்ப பொருந்தினார்! பாக்யலக்ஷ்மியிலும் சிங்கார சோலையே...பொருத்தம்தான்...எனினும் ஜெமினிக்கு அதிகமானபாடல்கள் பாடும் வாய்ப்புகள் கூடி வரவில்லை !

https://www.youtube.com/watch?v=x_3gJNkxBFk

https://www.youtube.com/watch?v=KYAkCv1UYLo

https://www.youtube.com/watch?v=uMvoZZqJCFA&list=PLcGEZegrX5rbTu_RKH6Sl4wjKjHugM80d

eehaiupehazij
7th October 2015, 09:31 PM
Monotony breaker!

மேலைப் பேய்கள் ! பேயோட்டுபவர்கள்! Exorcists!! Dracula!!


இந்த பேய் பற்றிய பய உணர்வு எப்படித்தான் மனிதரின் ரத்தத்தில் கலந்தது என்றே புரியவில்லையே !
எத்தனை கதைகள் பேயைப் பற்றி !!
தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றமடைந்த மேலை நாடுகளும் இந்த பேய் பயத்துக்கு விதிவிலக்கல்ல !
நமது ஊரில் பூசாரி பேயோட்டுவார்! மேலை நாடுகளில் Exorcists பேயோட்டுவர்!
பேய்க்கு கால் இல்லை என்பது நமது ஐதீகம் !
ஆனால் சவப்பெட்டிக்குள் பகலெல்லாம் தூங்கி இரவில் ரத்தக் காட்டேரிகளாய் வெளியே வேட்டைக்கு வரும் டிராகுலா பேய்களுக்கு கூர்மையான பற்களோடு கால்களும் உண்டாமே!!

நம்ம ஊரு பேயோட்டிகள் !

https://www.youtube.com/watch?v=uL7loyuzg_4
Nakesh reprises this role in NT's Navaraaththiri villager episode!

மேலைநாட்டு பேயோட்டிகள் !!
https://www.youtube.com/watch?v=_c4intAvdrI

Christopher Lee has always been the definitive Dracula!

https://www.youtube.com/watch?v=NBHmS8pg2pc

ஜெமினியின் சாந்திநிலையம் படத்திலும் பாப்பம்மா என்னும் வேலைக்காரப் பெண்மணி பாத்திரத்தை அறிமுகப் படுத்தும்போது பேய் எபக்டில் காட்டியிருப்பார்கள்

chinnakkannan
7th October 2015, 10:02 PM
ஹாய் சி.செ.. ஆக்சுவலா இந்த சிங்காரச் சோலையே உல்லாச வேளையே.. வை ஒரு காலத்தில 4 டு 4.30 சிலோன் இசைக்களஞ்சியத்தில முதல் பாட்டா கேட்டிருக்கேன்..ஆனால் அதுல லிரிக்ஸ் என்ன தெரியுமா.. கல்லூரி ராணிகாள் உல்லாசத் தேனிகாள் பொன்னான இந்தமாலை நேரமே... ந்னு வரும்.. எனிவே என் மனம் கவர்ந்த சுறுசுறுப்பான பாட்கு தாங்க்ஸ்..

ஜெமினிகிட்ட எந்தப் பேய ஜம்பமும் ஒண்ணும் செய்யாது..!

eehaiupehazij
8th October 2015, 06:49 PM
gap filler / Nostalgia towards November 17 GG's B'day!

பார்த்தால் பசி தீரும் திரைப்படத்தில் சிவாஜி ஜெமினி கணேசன்களின் நட்புறவை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்த காட்சிக் கோர்வை !


ஏம்ப்பா தமிழ்நாட்டுக் காதல் மன்னா ..இந்தக் காட்டிலே வந்து விழுந்தும் உன் புத்தி போகலையே...கலாய்க்கும் நடிகர்திலகம்...அசடு வழியும் காதல் மன்னர் !!

https://www.youtube.com/watch?v=_rNYXE2197c

eehaiupehazij
8th October 2015, 08:36 PM
Nostalgia towards November 17 GG's B'day!

GG's Balajee connection! 1

நடிகர் பாலாஜிக்கு அவர் வளர்ந்து வந்த நேரத்தில் காதல் மன்னர் சில காரணங்களால் தான் நடிக்க இயலாமல் போன போலீஸ்காரன் மகள் மற்றும் பலே பாண்டியா
படித்தால் மட்டும் போதுமா போன்ற படங்களில் தனக்குப் பதிலாக பாலாஜியை நடிக்க வைக்க சிபாரிசு செய்திருக்கிறார். நன்றி மறவாத பாலாஜி தானே ஒரு தயாரிப்பாளரானதும் முதல் படமான அண்ணாவின் ஆசையில் ஜெமினியை நாயகனாக்கினார்! படம் கையைக் கடிக்கவில்லை!!
ஆனால் பிறகு பாலாஜியின் தயாரிப்பாளர் அந்தஸ்து நடிகர்திலகத்தால் மளமளவென்று உயர்ந்து உச்சம் தொட்டது உள்ளங்கை நெல்லிக்கனி!
மீண்டும் பலவருடங்கள் கழித்து உனக்காக நான் திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிகர்திலகத்துடன் இணைந்து நடிக்க வைத்தார் !

https://www.youtube.com/watch?v=24qJFGfyoKI

https://www.youtube.com/watch?v=7fYwm78AoJM

eehaiupehazij
8th October 2015, 08:47 PM
Gap filler from GG starrer Paniththirai!

https://www.youtube.com/watch?v=Wd2A_M6kgLo

https://www.youtube.com/watch?v=qJO5UrrKkhE

https://www.youtube.com/watch?v=GpIXH1Md3_0

eehaiupehazij
9th October 2015, 12:10 AM
Gap filler from GG starrer Panamaa Paasamaa a super duper hit movie by KSG!

https://www.youtube.com/watch?v=1J0ixlJPt5U

eehaiupehazij
9th October 2015, 12:14 AM
Nostalgia towards November 17 GG's B'day!

பணமா பாசமா திரைபடத்திலிருந்து ஜெமினி மின்னும் காட்சிகள் !

https://www.youtube.com/watch?v=-L9U2_KPrQc

https://www.youtube.com/watch?v=33GA-k6lyBI

https://www.youtube.com/watch?v=nYFBHilMJ04

eehaiupehazij
9th October 2015, 12:18 AM
Gap filler from Kalathoor Kannamma!

https://www.youtube.com/watch?v=3vFw2qwKYCU

eehaiupehazij
9th October 2015, 12:22 AM
Monotony breaker!

ஜெமினியின் சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் வைஜயந்தியாமே !!

https://www.youtube.com/watch?v=c6w7JmD59Es

eehaiupehazij
9th October 2015, 05:52 PM
நவம்பர்17 ஜெமினியின் 95 வது பிறந்த நாள் நினைவலைகள்!!

காதல் மன்னரின் குரல் மன்னர் ஏ எம் ராஜா ! Songs/karaoke/instrumental 1

சிறுவயதில் நான் முதல் முதலில் செவி மடுத்த திரைப்பாடல் தேன்மதுரக் குரல் ஏ எம் ராஜா ஜெமினிக்கு வழங்கிய பணிக் குழைவான மிஸ்ஸியம்மா கானம் வாராயோ வெண்ணிலாவே !
அந்த சிறுவயதிலேயே காதல் மன்னரின் டிப்டாப்பான உடையலங்காரம் நெற்றி நிறைய சுருண்டு தவழும் அடர்த்தியான கேசம் அவர் கண்களில் கொப்பளிக்கும்
குறும்பு மனதை வசீகரிக்கும் மேனர்ஸ் நிறைந்த பேச்சு எல்லாமே அவர்பால் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தது! இந்தப் படத்தில் இனிமையான இப்பாடல்
காட்சியமைப்பு மனதை இதமாக வருடி ரசனையில் மூழ்கடிக்கும் இந்தக் காலம் வரை ஜெமினி என்றதும் மனதில் தோன்றும் ராஜாவின் குரலும் இப்பாடலும் சாகாவரம் பெற்றவையே ! சாவித்திரிய்ன் கோபதாபங்களும் முறுவலிக்க வைக்கும்!

https://www.youtube.com/watch?v=oRrnQg4SboQ

https://www.youtube.com/watch?v=mxRs8Uasa3Q

https://www.youtube.com/watch?v=Ad5ny2WQr8s

eehaiupehazij
10th October 2015, 08:41 AM
காதல்மன்னரின் பிறந்தநாள் நினைவோட்டம் !
மிஸ்ஸியம்மா மதுர கான நினைவலைகள் !


ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படமே இக்கணம் வரை மிகச்சிறந்த தமிழ் நகைச்சுவைப் படமாகக் கொண்டாடப் படுகிறது !
அருமையான வண்ணக் குழைவில் அற்புதமான விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை இணைவில் தேனினும் இனிய பாடல்களோடு இளமை பொங்கும் நாயக நாயகியர் நகைச்சுவை ஜாம்பவான்கள் பாலையா நாகேஷ்! ...சிவாஜி எம்ஜியார் ஜெமினி மூவேந்தர் திரையாண்ட காலகட்டத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்து வெள்ளிவிழா கண்டது சாதைனையே!

இருந்தாலும் அதற்க்கு முன்னரே கருப்புவெள்ளை காலகட்டத்தில் வழவழ கொழகொழ வசன இழுவைகளும் தடுக்கி விழுந்தால் பாடல்களும் இல்லாமல் யதார்த்தமான மெல்லிய நகைச்சுவை இழையோடும் கதையமைப்பில் சிரிப்பு விருந்தாக வெளிவந்து இன்றும் தியேட்டர்களுக்கு குடும்பங்களை ஈர்க்கும் தரமான நகைச்சுவை காவியம் மிஸ்ஸியம்மா !

பணி நிமித்தம் வெவ்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் ஜெமினி கிறித்துவப் பெண்ணான சாவித்திரி தங்க இடமின்றி கணவன் மனைவியாக நடித்து ரங்காராவ் வீட்டில் வாடகைக்கு ஒன்றாகத் தங்க நேர்ந்த சூழலில் நடக்கும் சிரிப்புக் கூத்துகளும் கூத்திலே கோமாளியாக இரண்டுங்கெட்டான் ஜமுனா இடைசெறுகலாக அடிக்கும் லூட்டிகளும் துப்பறியும் தங்கவேலு வேடிக்கை வில்லனாக.. நம்பியார்..... டைமிங் காமெடியில் அந்தக் கால தம்பி ராமையா மைண்ட் வாய்ஸ் சாரங்கபாணி ....தமிழின் மிகச் சிறந்த ஆபாசஅருவருப்பில்லாத மனதை லேசாக்கும் நகைச்சுவைக் காவியத்தில் இசையும் பாடல்களும் அபாரமான வரவேற்பு கண்டன !

https://www.youtube.com/watch?v=KvR9I7Jvzos

என்னவொரு பொசசிவ் காதலி சாவித்திரி !
இரண்டுங்கெட்டான் ஜமுனாவை ஜெமினி வலையில் விழாமல் ஒதுக்கி தனது மன்னரைத் தக்கவைக்க எப்படியெல்லாம் ஜமுனாவுக்கு எச்சரிக்கை மணியடிக்கிறார் !!

https://www.youtube.com/watch?v=h7nBY1PLC14

ஜெமினி ஏ எம் ராஜாவின் தேன்குரலில் பாடலைத் தொடங்கும்போது அவர்மேல் கொண்ட கோபம் கதிரவனைக் கண்ட பனிபோல மறைந்து என்னவொரு பெருமிதமான ஆழ்மனக் காதல் லுக் விடுகிறார் நடிகையர்திலகம் !

https://www.youtube.com/watch?v=Em1dcjlhnt4

RAGHAVENDRA
10th October 2015, 08:57 AM
My favourite songs from Gemini Ganesan starrer films:

Ezhai Pangalan - Manadil enna mayakkam

https://www.youtube.com/watch?v=pjsqk0R8YDc

ராகினியை அந்தக் கால ஜோதிகா எனச் சொல்லலாமா..

RAGHAVENDRA
10th October 2015, 08:59 AM
மறக்க முடியாத பாடல்..

அதே ஏழை பங்காளன் படத்திலிருந்து...

https://www.youtube.com/watch?v=RVxB_C1b12U

RAGHAVENDRA
10th October 2015, 09:00 AM
கே.வி.எம். ஜெமினி இணை சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்ததாக்கும்...
ஏழை பங்காளன் பாடல்களுக்காகவே அமைந்த படம்.

இதோ இதுவும் லேசுப்பட்டதா என்ன

https://www.youtube.com/watch?v=plbSfT87Ppk

RAGHAVENDRA
10th October 2015, 09:04 AM
https://www.youtube.com/watch?v=yfx1kel88PE

இந்த பாட்டு மட்டும் வேறு யாருக்காவது கிடைத்திருந்தால் தினமும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் ஒலிபரப்பப் பட்டு வந்திருக்கும்.

RAGHAVENDRA
10th October 2015, 09:06 AM
https://www.youtube.com/watch?v=IIzIetyExbU

அருமையான பாடல்.

eehaiupehazij
10th October 2015, 09:08 AM
காதல் மன்னரின் பெருமை போற்றும் நினவோட்டத்தில் பங்களித்துக் கொண்டிருக்கும் நடிகர்திலக ரசிகமணி ராகவேந்தர் சாருக்கு அமரர் ஜெமினியின் திரைச் சாதனைகளின் திரி சார்ந்த நல்வரவும் நன்றிகளும்!!
செந்தில்

RAGHAVENDRA
10th October 2015, 09:11 AM
https://www.youtube.com/watch?v=LR2r6I87Zbk

இந்தப் பாட்டில் சாவித்திரியின் நடிப்பு சாம்ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறக்கும். பெண் சிவாஜி என்றும் நடிகையர் திலகம் என்றும் அவர் போற்றப்படுவதற்கான காரணங்கள் அனைத்தும் இந்தப் படத்தில் உண்டு. இந்தப் பாடல் காட்சி ஓர் உதாரணம்.

பாடலின் துவக்கம் முதல் முடிவு வரை சாவித்திரியின் ஒவ்வொரு உடல் மொழியிலும் நடிகர் திலகத்தைக் காணலாம். நின்ற இடத்திலேயே கையை மட்டும் அபிநயம் பிடித்து புன்னகை பூக்கும் போது ... அப்படியே தலைவரை நினைவூட்டிவிடுவார்.

சாவித்திரிக்காக மட்டுமே கூட எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

RAGHAVENDRA
10th October 2015, 09:15 AM
https://www.youtube.com/watch?v=cC94-otnv7k

ஏ.எம்.ராஜாவின் மெய் மறக்க வைக்கும் குரலில் அற்புதமான பாடல்

பாசமும் நேசமும் படத்திலிருந்து..

RAGHAVENDRA
10th October 2015, 09:25 AM
https://www.youtube.com/watch?v=zFv-ecnQnYc

ஜெமினி பற்பொடி வியாபாரம் செய்கிறாரே.. செந்தில் சார் ஒரு பாக்கெட் வாங்கிப் போடறது.. ஒரு மாறுதலுக்கு பேஸ்ட்டை விட்டு விட்டு பற்பொடி உபயோகிக்கிறது..

என்ன நான் சொல்றது..

chinnakkannan
10th October 2015, 10:02 AM
ஜெமினியைப் பற்றி நீர் சொல்லாததையா நாஙக்ள் சொல்லிவிடப் போகிறோம் சி.செ..

பார்வை வசீகரித்து பாவையர் தேடிவர
ஆர்வமாய்ச் ஆதரித்த நாவலர் - தேர்விலே
சோடையெதும் போகாத கோபியர்கள் சொக்கிவிடும்
ஓடையென நின்றவர்தான் ஆம்..

(சரியா வந்திருககா)

ஹல்லோ மிஸ்டர் ஜமீந்தார் சாந்தியில் பழைய படமாகப் பார்த்தது.. ஓஹோ ஹோ எனச் சிரிப்பு வரும் எனப் போஸ்டரில் போட்டிருக்கப் போனாலும் அவவளவு சிரிப்புவந்தது போல் தெரியவில்லை.. இருந்தாலும் காதல் நிலவே கண்மணி ராதா.. மறக்க முடியமா.எனச் சொல்லும் போதே பார்த்தாய் பார்த்தேன் பாட் வந்து முந்திக் கொண்டு விட்டது..! இன்னும் ஒரு வரி டைப்படித்தால் குறைந்த பட்சம் இருபது பாடல்களாவது யோசிக்காமலேயே வரும்.. என்ன அழகான பாடல்களுக்கு நடித்திருக்கிறார் அவர்.. முதலில் பார்த்தால் பார்த்தேன் பார்ப்போமா.ஹச்சோ.. ராகவேந்திரர் போட்டுவிட்டாரே..


https://youtu.be/ABpS4vB7wUs

eehaiupehazij
10th October 2015, 01:08 PM
ஜெமினியைப் பற்றி நீர் சொல்லாததையா நாஙக்ள் சொல்லிவிடப் போகிறோம் சி.செ..

பார்வை வசீகரித்து பாவையர் தேடிவர
ஆர்வமாய்ச் ஆதரித்த நாவலர் - தேர்விலே
சோடையெதும் போகாத கோபியர்கள் சொக்கிவிடும்
ஓடையென நின்றவர்தான் ஆம்..

(சரியா வந்திருககா) by Chinna Kannan

ஜெமினியைப் பற்றி நான் எழுதுவதெல்லாம் ஆகாயத்தில் பறக்கும் பறவையின் பார்வைக் கோணமே !
அவர் பங்களித்த சிறந்த திரைப்படங்கள் மதுர கீத பாடல் காட்சிகள் காதலின் கண்ணியம் மிக்க திரை வெளிப்பாடுகள் அவரது குணசித்திர வரையறைகள் இதெல்லாம் ஒரு அகக்கண்ணோட்டத்தில் சீர்பட சிறப்பாக வெளிக்கொணரும் திறமை நல்ல புரிதலும் திறனாய்வுத் திறனும் நேர்த்தியான கற்பனை வளம் மிக்க வர்ணிப்புப் பின்புலமும் கொண்ட நீங்கள் ராகவேந்திராஜி வாசுஜி மதுஜி ராஜ்ராஜ்ஜி கோபால்ஜி ரவிஜி ..மாத்திரமே சாத்தியம்!

அவரவர் பார்வையில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் ஜெமினிக்கும் புகழ் சேர்த்துப் பெருமைப்படுத்தட்டுமே !!

chinnakkannan
10th October 2015, 04:29 PM
//இதெல்லாம் ஒரு அகக்கண்ணோட்டத்தில் சீர்பட சிறப்பாக வெளிக்கொணரும் திறமை நல்ல புரிதலும் திறனாய்வுத் திறனும் நேர்த்தியான கற்பனை வளம் மிக்க வர்ணிப்புப் பின்புலமும் கொண்ட // இது உமக்கும் பொருந்தும் ஓய்.. :)

ஜெமினியோட நடிப்பில் என்னை மிகவும் கவர்ந்ததுன்னு பார்த்தீர்னா..திருவருட்செல்வர்ல திருக்குறிப்புத் தொண்டருக்கு ட்ரபுள் கொடுக்கற சிவனடியாரா வந்து...பின் சுந்தர மூர்த்தி நாயனார்க்கும் தொல்லை கொடுக்கும் சிவனாக நடித்தது தான்..

ரொமான்ஸ்ல என் வழி தனிவழி என இருந்தவர் தான் ஜெமினி..அதை இன்னும் விரிவாகவே எழுதலாம்..பார்க்கலாம்..

eehaiupehazij
10th October 2015, 06:14 PM
Walking Stick Heroism!/ Rabologists.


வாக்கிங் ஸ்டிக் கான மதுரங்கள் !

வயதுள்ள போதும் வயதான பின்பும் கண்ணற்ற நிலையிலும் வாக்கிங் ஸ்டிக் நமக்கு பயனுள்ள தோழனே!
மலை முகடுகளில் செங்குத்தான பாறைகளில் வழித்தடங்களில் சறுக்கி விழாதிருக்கவும் வயதானவர்கள் நடக்கும் போது நிலை தடுமாறாமல் பேலன்ஸ்
பண்ணவும் விழியற்றோர் தடங்கலறிந்து நடைப்பயணம் மேற்கொள்ளவும் வாக்கிங் ஸ்டிக் வெகுவாக பயன்படுத்தப் படுகிறது !


ஏ வி எம் ஸ்டூடியோ படத்தயாரிப்புக்களில் பாடல் காட்சிகளில் வாக்கிங் ஸ்டிக் ஒரு செட் ப்ராபெர்டியாகவே மாறியிருந்தது! உயர்ந்த மனிதன், அதே கண்கள் போன்ற படங்களில் பாடல் காட்சிகளில் நடிகர்திலகமும் ரவிச்சந்திரனும் இளம் வயதிலேயே வாக்கிங் ஸ்டிக்கை ஸ்டைலாக பயன் படுத்துவார்கள்!

வயதான கெட்டப்பில் அந்தநாள் ஞாபகம் பாடலில் நடிகர்திலகம் அசால்டாக உள்ளங்கையில் வாக்கிங் ஸ்டிக்கை பேலன்ஸ் பண்ணுவதையும்,
அதேகண்களில் அசோகன் வாக்கிங் ஸ்டிக்குக்குள் கத்தியை சொருகி வைத்திருப்பதையும்...நெஞ்சம் மறப்பதில்லை..அது நினைவை இழக்கவுமில்லை!
வெள்ளிவிழா திரைப்படத்தில் காதல் மன்னரும் வாக்கிங் ஸ்டிக் ஸ்டைலில் பின்னுவார் ....

https://www.youtube.com/watch?v=gcdZb_WIvYM

https://www.youtube.com/watch?v=VtrnHY21zZw

https://www.youtube.com/watch?v=NQv_NSIkGiU


More information on Walking Sticks!!


A walking stick is a device used by many people to facilitate walking, for fashion, or for defensive reasons.
Walking sticks come in many shapes and sizes, and can be sought by collectors. Some kinds of walking stick may be used by people with disabilities as a crutch. The walking stick has also historically been known to be used as a defensive or offensive weapon, and may conceal a knife or sword as in a swordstick.
Walking sticks, also known as trekking poles, pilgrim's staffs, hiking poles or hiking sticks, are used by hikers for a wide variety of purposes: to clearspider webs, or part thick bushes or grass obscuring the trail; as a support when going uphill or a brake when going downhill; as a balance point when crossing streams, swamps or other rough terrain; to feel for obstacles in the path; to test mud and puddles for depth; and as a defence against wild animals. Also known as an alpenstock, from its origins in mountaineering in the Alps, such a walking stick is equipped with a steel point and a hook or pick on top, as famously used by Sherlock Holmes in his trek in "The Final Problem". A walking stick can be improvised from nearby felled wood. More ornate sticks are made for avid hikers, and are often adorned with small trinkets or medallions depicting "conquered" territory. Wood walking sticks are used for outdoor sports, healthy upper body exercise and even club, department and family memorials. They can be individually handcrafted from a number of woods, and may be personalised in many ways for the owner.
A collector of walking sticks is termed a rabologist.
Courtsy : Net / Wiki

eehaiupehazij
11th October 2015, 09:13 AM
மனோரமா அவர்களின் ஈடு செய்ய முடியாத இழப்புக்கு எங்கள் நினைவஞ்சலியை இறைவன் பாதங்களுக்கு சமர்ப்பிக்கிறோம்

உன்னால் முடியும் தம்பியில் ஜெமினிகணேசன் அவர்களுடன்

https://www.youtube.com/watch?v=ejgrwT5TigQ

RAGHAVENDRA
11th October 2015, 03:58 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/12109071_990720070978665_6554725036824651507_n.jpg ?oh=042c8477014e68bb82d7d163ab39e5d7&oe=568A34F4

Happy to post this to mark the 100th page of GG thread and for Shri Sivaji Senthil

eehaiupehazij
11th October 2015, 08:10 PM
Happy to post this to mark the 100th page of GG thread and for Shri Sivaji Senthil
by Raghavendhar Sir

Sir, Immensely pleased for your timely contribution that is a manifestation of your memory power and observation stability as regards the contemporary happenings during NT-GG combo revolution in T cinema!
with regards
senthil