PDA

View Full Version : Balakumaran Anmika Katturaikal



devapriya
3rd September 2007, 04:09 PM
நான் இணயத்திலிருந்து முன்பே இறக்கியவைகளில் சில தருகிறேன்.


கோனேரி ராஜபுரம்


அந்த சிற்பி, ஆறாவது முறையாக நடராஜப் பெருமாள் திருவுருவத்திற்கு அச்சு செய்து பஞ்ச உலோகங்களை தனியே காய்ச்சி வார்த்துக் கொண்டிருந்தான். பெரியதிருவாசியை தனியே வார்த்தாகி விட்டது. சிவனுக்குரிய சடையை, அந்த சடையில் இருக்கும் நாகத்தை கங்கை உருவத்தை வார்த்தாகிவிட்டது.



சிவகாமிக்கும், நடராஜருக்கும் தனித்தனியே பீடம் செய்து முடித்தாகி விட்டது. இப்போது நடராஜரையும், சிவகாமியையும் வார்க்க வேண்டும். மழு தொலைவே கொதித்துக் கொண்டிருக்கிறது. அவன் அடுப்பைத் துருத்தியால் வேகமான ஊதி உலையின் தீவிரத்தை அதிகப்படுத்தி மழுவைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தான். மழு தயார் நிலையில் இருந்தது. திரும்பி மனைவியைப் பார்த்து துவங்கி விடட்டுமா? என்று கேட்டான். மனைவி சரி யென்று தலையசைத்தாள்.

படுக்க வைக்கப்பட்ட பெரிய களிமண் அச்சுக்கு முன் கைகூப்பி நின்றhன். இது ஆறாவது முறை. என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு பின்னம் நடந்து கொண்டிருக்கிறது. முதன் முறை மூக்கில்லை. இரண்டாம் முறை விரல்களெல்லாம் மொத்தமாகி விட்டது. மூன்றhம் முறை இடுப்பு பக்கம் மிகப் பெரிய பள்ளம் விழுந்துவிட்டது, நான்காம் முறை காதுகள் காணமால் போய்விட்டன. ஐந்தாம் முறை பாதம் பாதியில் நின்றுவிட்டது. முழுவதும் மழு போகவில்லை.

இது ஆறாவது முறை, உன்னை நான் உருவமாகச் செய்கிறேன் என்ற கர்வம் எனக்கில்லே. ஈசனே, நீயே வந்து குடி கொண்டாலொழிய உன் உருவத்தை ஒரு நாளும் செய்ய முடியாது.

நீ, இவ்விதம் இருக்கிறாய் என்பது என்னுடைய கலைக்கற்பனை, மனிதருள் சிறந்தனவாய் இறைவன் காட்சியளிப்பான், என்பது என் எண்ணம், அவன் ஆடல் கலையிலும், பாடல் கலையிலும், போரிலும், பேச்சிலும், வேதப் பயிற்சியிலும், விவேகத்திலும் மிகச்சிறந்தவனாக இருப்பான், என்பது என் எண்ணம், எங்களுள் சிறந்தவனாக இருக்கின்ற ஒருவனின் முகச்சாயலை மனதுக்குள் கொண்டு வந்து அது நீ என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

இது ஒரு குழந்தை விளையாட்டு. ஆனால், நீ எல்லா வற்றிலும் மேன்மையானவன், எல்லோரிலும் மேன்மையானவன், உனக்கு உருவமில்லை, நீ எங்கும் நிறைந்தவன், எப்படியும் இருப்பவன், உன்னை எந்த உருவத்திலும் அடக்க முடியாது என்று எனக்குத் தெரியும். ஆனால், எனக்கு புரிவதற்காக என் மனம் நிறைவதற்காக என் கண்கள் நிறைவதற்காக, என் புத்தியின் அமைதிக்காக, என் மக்களின் நன்மைக்காக உன்னை நான் உருவமாக்கிறன்.

நீயே வந்து இதற்குள் உட்கார்ந்தாலொழிய உன்னை நான் உருவமாக்க முடியாது, எங்கேனும் ஒரு கர்வத்தில் நான் இருப்பின் தயவுசெய்து என்னை தண்டித்துவிடு. இந்த உருவத்திற்குள் வராமல் போகாதே என்று வேண்டினார்.

அந்தப்பகுதி, அரசனுடையகுரல் அவன் காதில் விழுந்தது.
வேண்டுமென்றே தவறு செய்கிறாய் சிற்பியே, என்னிடம் காசு வாங்குவதற்காகவே நீயாக ஏதேனும் தவறு செய்துவிட்டு, பின்னமாகிவிட்டது குறையாகிவிட்டது, என்று வருத்தப்படுகிறாய், கடந்த நான்கு வருடங்களாக நடராஜர் சிலையை செய்வதாக கூறி என்னுடைய சம்பளத்திலே தின்றுகொழுத்து செய்துவருகிறாய், இதுவே கடைசி முறை இன்னும் இரண்டு நாட்களில் நடராஜர் சிலையை செய்யவில்லையெனில் நீ இங்கிருந்து புண்ணியமில்லை உன்னை சிற்பி என்று நாங்கள் அழைத்து லாபமில்லை எனவே உன் கதையை என் வாளால் முடிப்பேன்
என்று சீறினான் அரசன்.

அந்த அரசன் நான்கு வருடங்கள் பொறுமையாக இருந்ததே பெரிய விஷயம். அவன் பொறுமை மீறும் படியாக என்ன ஏற்பட்டது. தெரியவில்லை, அரசனிடம் இருந்து நடராஜர் சிலை செய்ய உத்தரவு சிற்பிக்கு வந்ததுமே அற்புதமான ஒரு நடராஜர் ஆயிரமாயிரம் காலத்திற்கு நிற்கவேண்டிய நடராஜர் செய்ய வேண்டும் என்ற வேகம் வந்தது. அந்த வேகத்தோடு கர்வம் வந்ததோ, என்னவோ தெரியவில்லை. ஐந்து சிலைகள் செய்தும் சரியாக வரவில்லை. இது ஆறாவது சிலை.


நான்கு வருடமாக சிலை செய்து கொண்டிருக்கிறாய், ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு விஷயம் பின்னமாகி கொண்டிருக்கிறது. அப்படி என்றhல் நீ வேலையை சரியாகச் செய்யவில்லை என்று அர்த்தம்.

உனக்கு சிலை செய்கின்ற எண்ணமே இல்லை என்று அர்த்தம். சும்மா கண் துடைப்புக்காக ஏதோ செய்து விட்டு பின்னமாகி விட்டது என்று என்னை ஏமாற்றுகிறாய்
என்று அரசன் உரத்த குரலில் அவரை அதட்டியது, ஊர் மக்கள் முன்னால் தன்னை அவமானப்படுத்தியது ஞாபகம் வந்தது.


இப்பொழுது சொல்கிறேன் கேள் சிற்பியே. இன்னும் இரண்டு நாட்க்களுக்குள் நீ இந்த சிலையை செய்து முடிக்கவில்லை என்றால். உன் உயிர் உன்னிடம் இருக்காது.
என்று பயமுறுத்தி விட்டுபோயிருக்கிறார்.

இந்த சிற்பி முன்றாவது முறை சிலை தவறாக வந்தவுடனேயே தற்கொலை செய்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்திலிருந்தான். ஆனால், அவன் மனைவி தான் காப்பாற்றினாள்.
ஏதோ ஒரு காரணத்திற்காக தான் இந்த விதமாய் பிழைகள் ஏற்படுகின்றன. மிக அற்புதமான சிலை நீங்கள செய்ய வேண்டுமென்ற எண்ணத்தை கொண்டிருக்கிற ஈசன், உங்களை சோதிப்பதற்காக இந்த நாடகங்களை நடத்திக்கொணடிருக்கிறhர். எனவே எத்தனை முறை பழுது பட்டாலும் நீங்கள் மனம் தளரக்கூடாது. மறுபடி, மறுபடியும் நீங்கள் முயற்ச்சிக்க வேண்டும். இறையருள் உங்களில் பொங்கியெழுந்து நிற்கும் போது இந்த சிலையும், அற்புதமாக நிற்கும். இது உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற சோதனை.

உங்களை இறைவன் கொதிக்க வைத்து கொண்டிருக்கிறhன். எனவே சற்றும் மனம் தளராதீர்கள். நன்கு கொதியுங்கள், நீர்த்த மழுவாய் மாறுங்கள். எல்லா இடமம் பரவுங்கள், ஒளியோடு பரவுங்கள் என்று அவள் அவனை உற்சாகப்படுத்தினாள். அவன் புரிந்து கொண்டான். ஆனால், அரசன் பயமுறுத்தல் அவனை அதிகம் நடுங்க வைத்தது.

அவன் சாவதற்கு பயப்படவில்லை. தண்டனை பெற்று சாகவேண்டுமா என்கிற வேதனையைத் தான் அவன் முதலில் அடைந்தான்.

ஒரு சிறு தவறும் நேராதவாறு எல்லா விஷயங்களையும் ஒரு முறைக்கு இரு முறை சோதித்து மெழுகால் சிலை செய்து பிறகு அதன் மீது கள்மண் பூசி சரியான இடத்தில் ஒட்டைகள் வைத்து காற்றுப் போக வழிகள் செய்து அவன் மழுவைக் காய்ச்சி இறைவனை வழிபடத் தொடங்கினான்.

மழு உச்ச நிலையில் கொதித்துக் கொண்டிருக்க, என்னுடைய வாழ்க்கை உயர்வதும், தாழ்வதும் இப்பொழுது உன்கையில் இருக்கிறது. உனக்கு விருப்பம் இருப்பின் இதற்குள் வந்து உட்கார்ந்து கொள் இல்லையெனில் என்னை சாக விடு என்று சொல்லிவிட்டு முழுமனதோடு மழுவை கிளரத் தொடங்கினான்.

உலையின் அனல் உடம்பு முழுவதும் அடித்தது. இருட்டில் யாரோ தொலைவிலிருந்து வருவது தெரிந்தது. வந்தவர்கள் ஆணும், பெண்ணும்மான வயதான அந்தணர்கள்.


அப்பா திருநல்லம் என்கிற ஊர் எது ஏனப்பா மிகப்பெரிய ஊர் என்று சொல்கிறார்கள், ஏன் இப்படி வயல்களுக்கு நடுவே இருக்கிறது. இதை தேடிக் கண்டுபிடித்து வருவதற்குள் போதும் போதும் என்றhகிவிட்டது. ஐயா, சிற்பியே, தயவுசெய்து குடிப்பதற்கு ஒரு குவளை நீர் கொடு என்று கேட்டார்.

சிற்பி திரும்பி ஆச்சரியத்தோடு அந்தணர்களைப் பார்த்தான், என்ன இந்த அந்தணர் தன்னைப் போய் நீர் கேடகிறாரே, என்று ஆச்சரியப்பட்டான்.
அய்யா, நான் சிற்பி, கருமார் இனத்தை சேர்ந்தவன், அந்தணர்கள் வசிக்கும் பகுதி கோயிலக்கு பின்புறம் இருக்கிறது. நீங்கள் பார்ப்பதற்கு அந்தணர்கள் போல் இருக்கிறிர்கள், எனவே, கோயிலுக்க பின்புறம் போய் அந்தணர் வீட்டில் குடிக்க நீர் கேளுங்கள், தருவார்கள் என்று சொன்னான்.

மறுபடியும் வேலையில் முழ்கினான். வந்தவன் கைதட்டி அழைத்து எனக்கு தாகமாக இருக்கிறது ஐயா, அக்ரஹாரம் போகிறவரையில் என்னால் தாங்க இயலாது சுரண்டு விடுவேன் என்று தோன்றுகிறது எனவே உன் கையால் ஒரு குவளை நீர் கொடு
என்றhன்.


நான் இங்கு வேலை செய்து கொண்டிருப்பது உன் கண்ணில் படவில்லையா, ஒரு சிலை வடிப்பது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்கு தெரியாது ? கவலையோடு நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். குடிக்க தண்ணீர் கொடு என்று என் உயிரை ஏன் வாங்கிறீர்கள். என்னிடம் தண்ணீர் இல்லை, இந்த மழு தான் இருக்கிறது வேண்டுமானல் இதை குடியுங்கள்
என்று பதட்டத்தோடு சொல்ல.

சரி அதையே குடித்துக் கொள்கிறேன் என்று அருகே வந்த கிழவர், உஞ்சவர்த்தி பிராமணர் போல ஒரு சொம்பை இடுப்பில் கட்டி தொங்கவிட்டிருந்தார். அந்தச் சொம்பை விட்டு மழுவை மொண்டார், கொதிக்கின்ற நெருப்பு ஒளியோடு வீசுகின்ற மழுவை எடுத்து உயர்த்திக் குடித்தார். மழு வாய்க்குள் போயிற்று, மழுவை அவர் குடித்துக் கொண்டிருக்கும் போது சற்றுத் தொலைவில் நின்றிருந்த அவரது மனைவி வாய்விட்டுச் சிரித்தாள்.

சுற்றியுள்ள உதவியாட்களும், சிற்பியும் பயந்து போய் ஒ வென்று கூவ, வந்தவரையும் காணோம், வந்தவர் மனைவியும் காணோம்.


ஐயா, கொதி நிலைக்கு வந்தவிட்டது
என்று உதவியாளர் கூவ, எல்லாரும் கொதிக்கும் பாத்திரத்தின் அடிப்பக்க குழாயைத் திறந்து விட்டார்கள். மழு தரைவழிந்து பள்ளத்தில் வழியே சிற்பத்திற்குள் நதிபோல் ஒடி புகுந்து கொண்டது. சரியாய் எண்பது நொடிகளில் எல்லா உருக்கு உலோகமும் சிலைக்குள் போய் தங்கிவிட்டது.

அடுத்தது பார்வதியும் அவ்விதமே திறந்து ஊற்ற, அதுவும் சிலைக்குள் போய் அமர்ந்து மெழுகை வெளியே அனுப்பியது, மெழுழு உருகி வெளியேறும் புகையில் அடுத்தவர் முகம் தெரியவில்லை.

கிழவரையும,; கிழவியையும் யாரும் தேடவில்லை. உருக்கு மொத்தமும் வழிந்ததும் அவரவர் ஒரம் போய் திண்ணைகளில் சாய்ந்தார்கள். தலைக்கு துணிவைத்துக் கொண்டு மயக்கத்தில் ஆழ்ந்தவர்கள் போல் தூங்கினார்கள், விடிந்து என்ன நடந்தது என்று யோசித்தார்கள், வந்தது சிவபெருமானே என்று முடிவு செய்தார்கள்.

ஒடிப்போய் களிமண்ணில் நீர் ஊற்றி மெல்ல மெல்ல பிரித்து சிலையைப் பார்த்தார்கள். சிலை ஆறடி உயரத்திற்கு மேலாய் அற்புதமாய் வந்திருந்தது.

குமிழ் சிரிப்பும், கொவ்வைச் செவ்வாயும், அகலமான கண்களும், தீர்க்கமான நாசியும் அற்புதமான கோணத்தில் நடனமாடும் சிவனுருவம் மிகச் சிறப்பாக வந்திருந்தது.


நிமிர்த்தி பீடத்தில் நிற்க வைத்தார்கள், சடையையும், திருவாசியையும் மாட்டினார்கள். சிவகாமியையும் நிமிர்த்தி பீடத்தோடு பொருத்தினார்கள். ஊர்கூடிப் பார்த்து வியந்தது, கன்னத்தில் போட்டு கொண்டது. மன்னனுக்கு ஒடிப்போய் மந்திரிகள் செய்தி சொல்ல, மன்னனும் விரைந்து வந்துப் பார்த்தான்.


உங்களுக்கெல்லாம் கத்தி எடுத்தால் தானடாகாரியம் செய்ய முடிகிறது. தலையை கொய்து விடுவேன், என்று நான் ஆணையிட்டதனால் தானே உன்னால் இரண்டு நாளில் இத்தனை அற்புதமான ஒரு சிற்பத்தைச் செய்து முடித்தாய், இதுவரை நீ ஏமாற்றிக் கொண்டிருந்தது உண்மை என்று இப்போது தெள்ளத் *தெளிவாக புரிந்து விட்டது பார் என்று சிரிப்போடும் கடுப்போடும்
மன்னன் பேசினான்.

சிற்பி இல்லை என்று தலையாட்டினார், என்ன சொல்ல வருகிறாய் மன்னன் மறுபடியும் சீறினான்.

இது சிவானல் செய்ய பட்ட சிலை, இப்படி அந்தணர் உருவத்தில் சிவன் வந்து நின்றார். மனைவியுடன் வந்து என்னிடம் பேசினார், தண்ணீர் கேட்டார் மறுத்தேன், இது தான் இருக்கிறது என்று மழுவை காண்பித்தேன், மழுவை எந்திக் குடித்தார் மறைந்தார், என்று சொல்ல இந்த கதையெல்லாம் என்னிடம் விடாதே என்று மறுபடியும் சீறினான்.

இல்லை அரசே இது சிவன் இருக்கிற சிலை, சிவன் மழுவுக்குள் கரைந்த சிலை. எனவே இதனுள் இறைவன் இருக்கிறhன். இது என்னால் செய்யப்பட்ட சிலை அல்ல, என்று பணிவாக சொல்ல, அரசன் கொக்கலித்து சிரித்தான். உளியை சிற்பியிடமிருந்து பிடுங்கி, இது சிவன் உருவம் சிவன் இருக்கிற உருவம் என்றhல் இதை குத்தினால் ரத்தம் வருமோ என்று காலில் ஒரு காயத்தை ஏற்படுத்தினான், பளிச்சென்று ரத்தம் பீச்சி அடித்தது, தரை நனைத்தது. மக்கள் பயந்தார்கள், அரசன் திகைத்த போனான். பயத்தில் சுருண்டு விழுந்தான்.

இறைவனை சோதித்த அரசனின் உடம்பு முழுவதும் தொழுநோய் பரவியது. அவன் சிற்பியிடமும், இறைவனிடமும் கைகூப்பி மன்றாடிக் மன்னிப்பு கேட்டான் என்பது கோனேரி ராஜபுரத்தின் கதை.

எங்கே இருக்கிறது இந்த கோனேரிராஜபுரம், கும்பகோணம் காரைக்கால் பேருந்து பாதையில் புதூர் என்ற ஊரை அடைந்து, அங்கேயிருந்து வலதுபுறமாக போகும் சாலையில் விசாரித்துக் கொண்டு போக வேண்டும், வயல் வெளிகளுக்கு நடுவே ஒரு பெரிய கிராமம் அமைதியாக உட்கார்ந்திருக்கிறது.

கோனேரி ராஜபுரத்திற்கு முற்காலப் பெயர் திருநல்லம். இந்த கோனேரி ராஜபுரத்திற்கு சோழமன்னன் கண்டராதித்தனும் அவன் மனைவி செம்பியன் மாதேவியும் பல நிவந்தங்கள் விட்டிருக்கிறார்கள்.

ஊர் மிகச் செழிப்பான ஊர். நடராஜர் விக்ரகத்தை பார்க்க வேண்டுமானல் அதை கோனேரி ராஜபுரத்தில் தான் பார்க்க வேண்டும். உலகத்திலே மிகப் பெரிய நடராஜர் சிலை இந்த ஊரில் தான் இருக்கிறது. அழகு என்றால் அழகு அப்படியொரு கொள்ளையழகு. சிற்ப கலை தெரிந்தவர்கள் மட்டுமல்லா, சிற்பக் கலைப்பற்றி தெரியதவர்கள் கூட அருகே போய் நின்றhர்கள் என்றhல் அப்படியே பரவசமாகிவிடுவார்கள்.

சிற்பக் கலை தெரிந்தவர்கள் மயக்கமாகிவிடுவார்கள். கைரேகை, அக்குள் பக்க கருப்பு, அங்கு வழக்கமாய் எல்லா ஆண்களுக்கும் இருக்கின்ற கொழுப்புக் கட்டி, புறங்கை தேமல் என்று பல்வேறு விஷயங்கள் அற்புதமாக அந்த சிற்பி செய்திருக்கிறhன். அரசன் உளியால் செதுக

devapriya
8th September 2007, 05:00 PM
சிற்பக் கலை தெரிந்தவர்கள் மயக்கமாகிவிடுவார்கள். கைரேகை, அக்குள் பக்க கருப்பு, அங்கு வழக்கமாய் எல்லா ஆண்களுக்கும் இருக்கின்ற கொழுப்புக் கட்டி, புறங்கை தேமல் என்று பல்வேறு விஷயங்கள் அற்புதமாக அந்த சிற்பி செய்திருக்கிறhன். அரசன் உளியால் செதுக்கிய இடமும் பாதத்திற்கு மேல் அப்படியே இருக்கிறது. கோயில் ஆயிரம் வருடத்து கோயில் , ராஜராஜனும், ராnஜந்திரனம், குந்தவையும் இரண்டாம் ராஜராஜனும், குலோத்துங்கனும் வந்து போயிருக்கிற விஷயம், கல்வெட்டுகளால் தெரிந்து கொள்ளலாம்.

சுற்றுப்பிரகார சுவர் முழுவதும் அரசர்கள் தங்கள் வருகையை பதிவு செய்துவிட்டுப் போயிருக்கிறhர்கள். இந்த நடராஜர் முன்பு கைகூப்பி நின்றுவிட்டு போயிருக்கிறhர்கள். கோனேரி ராஜபுரம் சுவாமியின் பெயர் உமாமகேஸ்வரர் அல்லது பூமீஸ்வரர், தோட்டமும் துறவுமாய் பூமி பாக்கியம் வேண்டும் என்று விரும்புபவர்கள் இவரை வணங்கினால் நிச்சயம் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. நான் செழிப்பாக இருக்க நல்ல பூமியை கொடு என்று இந்த இறைவனிடம் வேண்டிக் கொண்டு உழைத்தால் நிச்சயம் அவன் கையகல பூமிக்காவது சொந்தக்காரனாவான் என்று நம்பப்படுகிறது.

தவிர அங்கு வைத்தியநாதன் சன்னதி இருக்கிறது, அந்த வைத்திய நாத சன்னதியில் ஜபம் செய்தால். வேறு யாருக்கேனும் உடம்பு சரியில்லை என்று நாம் இறைவன் பெயரை திரும்பத் திரும்பத் சொன்னால் சம்மந்தப்பட்டபவருக்கு நோய் குணமாவதாகவும் அன்பர்கள் சொல்கிறhர்கள்.

இறைவி பெயர் தேகசௌந்தரி, ஸ்தலமரம் அரசு, தீர்த்தம் பிரம்ம தீர்த்தம், திருஞான சம்மந்தரும், அப்பரும் பாடியிருக்கிறhர்கள். கோயிலுக்குள் போன உடனேயே கோயிலுக்கு எதிரே பெரிய குளம் இருக்கும், குளம் தாண்டி சுற்றிக் கொண்டு போனால், கோயில் வாசல் சாதாரணமாக இருக்கும், உள்ளுக்குள்ளே அற்புதமான கோயில் தௌpவாக பார்க்கலாம். இந்த நடராஜச் சிலை மட்டுமல்ல, கல்யாண சுந்தரர் சிலை, திருமஞ்சனத்திற்கான நடராஜனர் சிலை, ஆருத்ர தரிசனத்திற்காக தனியே ஒரு சிலை என்று பல்வேறு சிலைகளை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் கல்யாணசுந்தரருக்கு வடையில் தேன் தோய்த்து நைய்வேத்தியம் செய்தால் திருமணமாகிறது என்று நம்பப்படுகிறது.

கும்பகோணம் போகிறவர்கள் அரை நாள் கோனேரிராஜபுரத்திற்கு ஒதுக்கிவைத்துவிடவேண்டும். நிதானமாக பார்த்துவிட்டு வரவேண்டும் குறிப்பாக அந்த வைத்தியநாத சன்னதி மண்டபத்தில் உட்கார்ந்து ஜபம் செய்துவிட்டு அல்லது கண்மூடி இறைவன் பெயரைச் சொல்லிவிட்டு வருதல் மிக அவசியம் எல்லாவற்றையும் விட உங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்த நடராஜனை பார்த்து கைகூப்பிவிட்டு வாருங்கள் கை நிறைய வில்வம் குடந்தையிலேயே வாங்கி கொண்டு போய் அவன் கால் அடியில் சொரிந்துவிட்டு வாருங்கள்.

அந்த வணக்கம் சிலை செய்யசொன்ன அரசனுக்கா, செய்த சிற்பிக்கா, அல்லது இவர்கள் எல்லாவற்றையும் இயக்கி தன்னை உள்ளடக்கிக் கொண்டியிருக்கிற சிவனுக்கா யோசியுங்கள் திருநல்லம் ஒரு முறை போய்ப்பாருங்கள்.

---------------------------------------------------------

devapriya
10th September 2007, 03:08 PM
[tscii:6b12bd479d]¦ºý¨ÉôÀðÊÉò¾¢ý ¦¾¡ý¨Á¨Âî ¦º¡øÖ¸¢ýÈ ¾¢Õò¾Äí¸û þÃñÎ. ´ýÚ Á¢ġôâ÷. þý¦É¡ýÚ ¾¢ÕÅøĢ째½¢.

Á¢ø¸û ¬÷ìÌõ °÷ Á¢ġôâ÷ ±ýÚõ; «øÄ¢ ÁÄ÷¸û ¿¢¨Èó¾ §¸½¢ ¾¢ÕÅøĢ째½¢ ±ýÚõ «¨Æì¸ôÀð¼É. þó¾ þÃñÎ °÷¸¨Çî §º÷ò§¾ ÀÆí¸¡Äò¾¢ø Á¢¨Äò ¾¢ÕÅøĢ째½¢ ¸¢Ã¡Áí¸û ±ýÚ «¨ÆôÀ¡÷¸û. þó¾ò ¾¢ÕÅøĢ째½¢ Óü¸¡Äò¾¢ø ±ôÀÊ þÕó¾Ð ¦¾Ã¢ÔÁ¡?

þÃŢ¢ý ¸¾¢÷¸û ¯ðÒ¸ÓÊ¡¾ «¼÷ó¾ §º¡¨Ä¸û ¯ûÇ °Ã¡¸ þÕó¾Ð. «ÐÁðÎÁ¡? ´ôÀ¢øÄ¡¾ Á¡¾÷¸û Å¡Øõ Á¡¼ Á¡Á¢¨Äò ¾¢ÕÅøĢ째½¢Â¡¸ þÕó¾Ð. «¾¡ÅÐ «Æ¸¢Â ¦Àñ¸û Å¡ú¸¢ýÈ Á¡¼í¸û ¿¢¨Èó¾ Á¢ġôâ÷ò ¾¢ÕÅøĢ째½¢Â¡¸ þÕó¾Ð.

Á¢ġôââý º¢ÈôÒ, ¸À¡Ä£ŠÅÃ÷ §¸¡Å¢ø. ¾¢ÕÅøĢ째½¢Â¢ý º¢ÈôÒ, À¡÷ò¾º¡Ã¾¢ ŠÅ¡Á¢ §¸¡Å¢ø.

ÍÁ¾¢ ±ý¸¢È ÁýÉý ¾¢Õ§Åí¸¼Ó¨¼Â¡¨É ¾Ã¢ºÉõ ¦ºöÐ Åó¾¡ý. À¡Ã¾ô §À¡Ã¢ø ÀïºÀ¡ñ¼Å÷¸¨Ç ÅÆ¢¿¼ò¾¢Â ŠÃ£ ¸¢Õ‰½÷ Á£Ð «ÅÛìÌ Á¢Ìó¾ À¢§Ã¨Á. ŠÃ£ ¸¢Õ‰½Ã¢ý ¾Ã¢ºÉõ §ÅñΦÁýÚ þ¨Èïº¢ì §¸ðÎì ¦¸¡ñ¼¡ý.

ŠÃ£ ¸¢Õ‰½÷ Å¡úó¾ þ¼òÐìÌô §À¡¸ §ÅñΦÁýÈ¡ø ż째 ¦Å̦¾¡¨Ä× Á¨Ä¸¨ÇÔõ, ¸¡Î¸¨ÇÔõ ¬Ú¸¨ÇÔõ ¾¡ñÊô §À¡¸§ÅñΧÁ ±ýÚ ¸Å¨ÄôÀð¼¡ý.

ÍÁ¾¢ ÁýÉý ¸ÉÅ¢ø §Åí¸¼Åý §¾¡ýÈ¢, ¾ý¨É ¾Ã¢º¢ì¸ «ùÅÇ× ¦¾¡¨Ä× §À¡¸ §Åñʾ¢ø¨Ä. þí§¸ À¢Õó¾¡ÃñÂõ ±ÉôÀθ¢ýÈ (À¢Õó¾¡ _ ÐǺ¢; ¬ÃñÂõ _ ¸¡Î.) ¾¢ÕÅøĢ째½¢Â¢ø ¾¡ý ŠÃ£ ¸¢Õ‰½É¡¸ ±Øó¾ÕǢ¢ÕôÀ¾¡ö Å¢ÅÃõ ¦º¡øÄ, ÍÁ¾¢ ÁýÉý þíÌ ÅóÐ À¡Ã¾ô §À¡Ã¢ø «÷ƒ¤ÉÛìÌ º¡Ã¾¢Â¡ö þÕó¾ ŠÃ£ ¸¢Õ‰½¨É ¸ñ ÌǢà ¾Ã¢ºÉõ ¦ºö¾¡ý. §¸¡Å¢Öõ ±ØôÀ¢É¡ý. ¾¢ÕÅøĢ째½¢ì¸Õ§¸ ÐǺ¢ ÅÉò¾¢üÌ ¿Î§Å ŠÃ£ ¸¢Õ‰½÷ ÌÎõÀ º§Á¾Ã¡¸ì ¸¡ðº¢ ¾Õ¸¢È¡÷.

¾¢Ãñ¼ Òƒí¸§Ç¡Î ÅÄÐ ¨¸Â¢ø ºí¸õ ²ó¾¢, þ¼Ð ¨¸ À¡¾ò¨¾î ÍðÊ측ð¼, ¯ÂÃÁ¡ö «¸ÄÁ¡ö, ¸õÀ£ÃÉ¡ö ¦ÀÕõ ŢƢ¸§Ç¡Î Ó¸ò¾¢ø ¦Åû¨Ç Á£¨º§Â¡Î þÎôÀ¢ø ¸ò¾¢§Â¡Î º¡Ç츢áÁ Á¡¨Ä½¢óÐ ¬¾¢§º„ý ¾¨Ä¢ø ¿¢ýÈÅ¡Ú ¸¡ðº¢ÂǢ츢ȡ÷. §Åí¸¼Å÷ ÍðÊì ¸¡ðÊ ¸¢Õ‰½÷ ±ýÀ¾¡ø, §Åí¸¼¸¢Õ‰½ý ±ýÚ ¦ÀÂ÷. §Åí¸¼¸¢Õ‰½ÛìÌ «Õ§¸ «§¾ ¸õÀ£Ãò§¾¡Î, Ü÷¨ÁÂ¡É ¿¡º¢Ôõ Òýº¢Ã¢ôÒ ¾ÅØõ ¯¾Îõ ÅÄÐ ¨¸Â¢ø ÌÓ¾ ÁÄÕõ ¦¸¡ñÎ ÕìÁ½¢ §¾Å¢ þÕ츢ȡ÷. ÕìÁ½¢ §¾Å¢Â¢ý ÅÄôÀì¸ò¾¢ø ¯Ø ¸Äô¨À§Â¡Î ÀÄáÁ÷ ¸¡ðº¢ ¾Õ¸¢È¡÷. §Åí¸¼¸¢Õ‰½Ã¢ý þ¼ôÀì¸õ ¾õÀ¢ º¡ò¸¢Ôõ, «ÅÕìÌ «Õ§¸ ¦¾üÌ §¿¡ì¸¢ Á¸ý À¢ÃòÔõÉÛõ, §ÀÃý «¿¢Õò¾Ûõ ¸¡ðº¢ ¾Õ¸¢È¡÷¸û. ºýɾ¢ìÌ «Õ§¸ ¿¢ýÚ ¨¸ÜôÀ, ÁÉõ ¸¢ÃíÌõ.

º¡ò¸¢ìÌ §¿¦Ã¾¢§ÃÔûÇ ´Õ ¬ºÉò¾¢ø ŠÃ£§¾Å¢ ⧾Ţ º§Á¾Ã¡¸ ¯üºÅ÷ ±Øó¾ÕǢ¢Õ츢ȡ÷. þó¾ ¯üºÅÕìÌò¾¡ý À¡÷ò¾º¡Ã¾¢ ±ýÚ ¦ÀÂ÷.

¬¾¢¸¡Äò¾¢ø, ãýÚÓ¨È þó¾ À¡÷ò¾º¡Ã¾¢ ŠÅ¡Á¢¨Â ¯§Ä¡¸ò¾¢ø Å¡÷òÐõ, Ó¸õ ÁðÎõ ÀÕì¸û ¿¢¨ÈóÐ ¸¡½ôÀð¼Ð.

±ýÉ þôÀÊ ¬¸¢Å¢ð¼§¾ ±ýÚ º¢üÀ¢ ¸Å¨ÄôÀ¼, ‘À¡Ã¾ô §À¡Ã¢ø ±ý Ó¸õ «õÀ¡ø ¸¡ÂôÀð¼Ð. «¨¾ ¿¢¨É×ÚòÐõ Åñ½Á¡¸§Å þó¾ þ¼ò¾¢ø ¿¡ý þôÀÊ ±Øó¾ÕǢ¢Õ츢§Èý’ ±ýÚ º¢üÀ¢ìÌ, §Åí¸¼¸¢Õ‰½ý ¸ÉÅ¢ø ¬Ú¾ø ¦º¡ýɾ¡¸ ¦ºÅ¢ÅÆ¢î ¦ºö¾¢ ¯ñÎ.

´Â¢ø ¿¢¨Èó¾ þó¾ À¡÷ò¾º¡Ã¾¢ º¢¨Ä¢ø ÁüÈ «í¸í¸û Á¢¸ Íò¾Á¡¸ þÕì¸, Ó¸ò¾¢ø ÁðÎõ ¾ØõÒ¸û þÕôÀ¨¾ì ¸¡½Ä¡õ. «Ð ÁðÎÁøÄ¡Ð þ¼Ð¸¡ø ¦ÀÕÅ¢ÃÖìÌ «Îò¾ Å¢ÃÄ¢ø ¿¸õ þÕ측Ð. À¡Ã¾ô §À¡Ã¢ø À£‰Á÷ ºÃ½¡¸¾¢ì¸¡¸ «õÒÅ¢¼, «ó¾ «õÒ ¸¢Õ‰½Ã¢ý «ó¾ Å¢Ãø ¿¸ò¨¾ì ¸£È¢ÂÐ ±ýÚõ ¦º¡ø¸¢È¡÷¸û. À¡÷ò¾º¡Ã¾¢Â¢ý þÎôÀ¢ø §º¡¨¾Â¡ø ¸Â¢Ú ¸ð¼ôÀð¼ ¾ØõÒ þÕ츢Ȧ¾ýÚõ ÜÚ¸¢È¡÷¸û. Á¢¸Á¢¸ò ¦¾¡ý¨ÁÂ¡É þó¾î º¢¨ÄìÌì ¸Åºõ âðÊ ¸ñÏõ ¸ÕòÐÁ¡ö ¸¡ôÀ¡üÚ¸¢È¡÷¸û.

ºüÚ ¦¾¡¨ÄÅ¢ø ¾¢ÕÅ¡ö¦Á¡Æ¢ Áñ¼Àò¾¢Ä¢ÕóÐ À¡÷ì¸, ´Õ ¦ºùŸ Å¡ºø ÓØŨ¾Ôõ «¨¼òÐì ¦¸¡ñÎ, ¸Õ¨½ ¦À¡íÌõ ¦ÀÕõ ŢƢ¸Ùõ ¦Åû¨Ç Á£¨ºÔÁ¡ö ãÄÅÃ¡É §Åí¸¼ ¸¢Õ‰½¨Éì ¸ñÌÇ¢Ãì ¸¡½Ä¡õ. ¯üÚô À¡÷ì¸, «ó¾ì ¸ñ¸û þýÛõ «Õ§¸ Å¡ ±ýȨÆìÌõ.

º¡Ã¾¢ ±ýÈ¡ø ¡÷? §¾§Ã¡ðÎÀÅý ÁðÎÁ¡? þø¨Ä. þíÌ, ¸ñ½ý ÅÆ¢¸¡ðÊ. ¿õ¨Áô §À¡ýÈ ÌÎõÀ¢¸ÙìÌ À¢Ãî¨É§Â, þÉ¢ «ÎòÐ ±ýÉ ¦ºöÅÐ ±ýÀо¡ý. «ÎòÐ ±ýÉ ¦ºöÅÐ ±ýÚ ÅÆ¢¸¡ðÎÀÅý, À¡÷ò¾º¡Ã¾¢.

¿øÄÒÕ„ý §ÅñΦÁý¸¢È ¦ÀñÏìÌ; ¿øÄ Á¨ÉÅ¢ §ÅñΦÁý¸¢È ¬ÏìÌ; ¿øÄ ÌÎõÀõ «¨Á §ÅñΦÁý¸¢È ¾¡ÀÓûÇ ÌÎõÀ¢ìÌ ŠÃ£À¡÷ò¾º¡Ã¾¢§Â ÅÆ¢¸¡ðÊ. «§¾§À¡Ä Òò¾¢ìÌ ÅÆ¢¸¡ðÊ. À¡÷ò¾º¡Ã¾¢ìÌ §¿÷ À¢ý§É §ÁüÌ §¿¡ì¸¢ ±Øó¾ÕǢ¢ÕìÌõ §Â¡¸ ¿Ãº¢õÁ÷, Òò¾¢Â¢ø º¢ì¸ø ²üÀð¼¡ø ¦¾Ç¢×ÀÎò¾ ÅÆ¢¸¡ðÎÅ¡÷. »¡Éô À¡¨¾ìÌ «¨ÆòÐî ¦ºøÅ¡÷. ¿¡ìÌ þøÄ¡¾ «Äí¸¡Ã Á½¢¸û ¦¸¡ñ¼ ¸¾Å¢¨É ¯¨¼Â Å¡ºø. ¿¢‰¨¼Â¢ø «Á÷ó¾¢ÕìÌõ ¿Ãº¢õÁÕìÌ ±¾¢§Ã ¾É¢ ¦¸¡ÊÁÃÓõ ÀÄ¢À£¼Óõ þÕ츢ýÈÉ. þó¾ ¿Ãº¢õÁ¨Ã, þíÌûÇ ¨Å½Å÷¸û, ¦ÀâÂÅ÷ ±ýÚõ, ¾¡ò¾¡ ±ýÚõ «¨Æ츢ȡ÷¸û. þó¾ ¿Ãº¢õÁÕìÌ Ó¾ø ⨃, Ó¾ø §¸¡‰Ê ¬ÉÀ¢ÈÌ ŠÃ£ À¡÷ò¾º¡Ã¾¢ìÌ â¨ƒÔõ §¸¡‰ÊÔõ ¬Ìõ. Á¢¸ ¯ì¸¢ÃÁ¡¸ þÕó¾ þó¾ ºýɾ¢, ¸¡Äô §À¡ì¸¢ø Àø§ÅÚ »¡É¢¸Ç¡ø ¯ì¸¢Ãõ ̨Èì¸ôÀðÎ, º¡ó¾ ŠÅåÀ¢Â¡¸ «ï§ºø ±ýÚ «ÀÂõ «Ç¢ôÀÅḠ¾¢Õ‰Ê §¾¡„õ ¿£ìÌÀÅḠ¸¡ðº¢ÂǢ츢ȡ÷. þí§¸ Ó¸ò¾¢ø «Êì¸ôÀÎõ ºíÌ ¾£÷ò¾ò¾¡ø, Àø§ÅÚ ÀÂí¸û, §¾¡„í¸û ¿£í̸¢ýÈÉ.

´Õ °÷ º¢ÈôÀ¡ÅÐ «ó¾ °Ã¢ý §¸¡Å¢Ä¡ø. «ó¾ì §¸¡Å¢ø º¢ÈôÀ¡ÅÐ «ó¾ °÷ Áì¸Ç¡ø. ¾¢ÕÅøĢ째½¢ À¡÷ò¾º¡Ã¾¢ º§Á¾ §Åí¸¼ ¸¢Õ‰½¨É ¾¢ÕÅøĢ째½¢ ¨Å½Å÷¸û ÁÉÁ¡Ãì ¦¸¡ñ¼¡Î¸¢È¡÷¸û. ¿¡û ¾ÅÈ¡Ð §¸¡‰Ê¡ö «Á÷óÐ ¿¡Ä¡Â¢Ã ¾¢ùÂÀ¢ÃÀó¾Âò¨¾ µÐ¸¢È¡÷¸û. ÅÕ¼ò¾¢üÌ ³óÐÓ¨È ¿¡Ä¡Â¢Ãõ À¡¼ø¸¨ÇÔõ ÓØÅÐÁ¡ö ÌØÅ¡ö «Á÷óÐ ¦º¡øÖ¸¢ýÈ ´Õ ÅÆì¸õ þíÌ ÁðΧÁ ¦ÅÌ ¸ñÊôÀ¡ö À¢ýÀüÈôÀθ¢ÈÐ. ¦¸ïº¢ì Üò¾¡Ê§Â¡, ¸¡Í ¦¸¡Îò§¾¡ À¢ÃÀó¾õ µÐÀÅ÷¸¨Çì ¦¸¡ñÎÅçÅñÊ «Åº¢ÂÁ¢ø¨Ä. °Ã¢ÖûÇ ¨Å½Å÷¸§Ç ÀÃõÀ¨Ã ÀÃõÀ¨Ã¡¸ Á¢Ìó¾ ¬÷Åò§¾¡Î þíÌ À¢ÃÀó¾õ µÐ¾¨Äì ̨ÈÅ¢ýÈ¢ ¦ºö¸¢È¡÷¸û. þó¾ ´Õ ¦ÀÕÁ¡û ÁðÎõ¾¡ý ¸¡ÐÌÇ¢Ãì §¸ðÀ¾üÌñ¼¡É ÅÃò¨¾ Å¡í¸¢ì ¦¸¡ñÎ Åó¾¢Õ츢ȡ÷ ±ýÚ, ¾¢ÕÅøĢ째½¢ ¨Å½Å÷¸û ¸õÀ£ÃÁ¡öî ¦º¡øÖ¸¢È¡÷¸û. Á¢Ìó¾ ¸ðÎôÀ¡ð§¼¡Îõ, ¸ÅÉò§¾¡Îõ, áüÚìÌõ §ÁüÀ𼠨ŽÅ÷¸û «Á÷óÐ ¾Á¢ú §Å¾õ ±ýÚ «¨Æì¸ôÀÎõ «ó¾ ¿¡Ä¡Â¢Ã ¾¢ùÂÀ¢ÃÀó¾õ µÐ¾¨Ä ÁÉ ¿¢¨È§Å¡Î ¦ºö¸¢È¡÷¸û.

¦ÀÕÁ¡ÙìÌ ¨¿§Åò¾¢Âò¾¢ø Á¢Ç¸¡ö §º÷ôÀ¾¢ø¨Ä. Á¢Ç̾¡ý ¯À§Â¡¸õ. ±ñ¦½öô Àñ¼í¸û þø¨Ä, ¦¿ö¾¡ý ¬¾¡Ãõ.

§¸¡Å¢ø Á¢¸ô ÀƨÁ¡ÉÐ ±ýÀ¾üÌ, ¬Â¢ÃòÐ þÕáÚ ÅÕ¼í¸ÙìÌ Óó¨¾Â ¸ø¦Å𦼡ýÚ º¡ðº¢Â¡¸ þÕ츢ÈÐ.

«íÌûÇ ¿¢Ä츢ơ÷¸û §¸¡Å¢ÖìÌî ¦º¡ó¾Á¡É ¸ÕÁ¡Ã¢î §ºÃ¢ô ÒÄò¨¾ «¼Ì ¨Åò¾ÀÊ¡ø «í¸¢ÕóÐ ÅÕõ ¦¿ø, ŠÅ¡Á¢ìÌ §À¡ƒÉò¾¢üÌ þøÄ¡Áø §À¡Â¢üÚ. «¨¾ Å¢ƒÂý «¨ÃÂý ±ý¸¢È Àì¾ý ´ÕÅý ¸¡Í ¦¸¡ÎòÐ Á£ðÎ, ºðÊ …÷Áý, þ¨Ç ºðÊ …÷Áý ±ýÈ þÃñÎ «ó¾½÷¸Ç¢¼õ ¦¸¡ÎòÐ, ŠÅ¡Á¢ìÌ ¿¡û ¾ÅÈ¡Áø ¾¢ÕÅÓÐ À¨¼ìÌõÀÊ¡ö ¸ð¼¨Ç¢ðÎ, «Å÷¸û «ùÅ¢¾õ ¦ºöžüÌ ¯À§Â¡¸Á¡ö ¯§Ä¡¸ôÀ¡¨É ´ýÚõ ¾¡ÉÁ¡¸ì ¦¸¡Îò¾¡ý ±ýÚ «ó¾ì ¸ø¦ÅðÎ ¦º¡ø¸¢ÈÐ. þôÀÊ ¦ÀÕÁ¡ÙìÌò ¾ÅÈ¡Ð ¾¢ÕÅÓÐ ¦ºöÐ ÅÕõ ¨¸í¸÷Âò¨¾ ±Å÷ ¦¾¡¼÷ó¾¡Öõ «ÅÕ¨¼Â À¡¾ò¾¢ø ±ý º¢Ã…§ ±ýÚ «ó¾ì ÌÚ¿¢Ä ÁýÉý §ÅñÊì ¦¸¡ñÊÕ츢ȡý.

«ÐÁðÎÁøÄ. Á¢¸î ºÁ£Àò¾¢ø ¬Â¢ÃòÐò ¦¾¡ûǡ¢ÃòÐ ÓôÀò¾¡È¢ø §¸¡Å¢ø Å¢Á¡ÉòÐìÌ ¾í¸ ÓÄ¡õ ⺠§ÅñΦÁýÚ ¾¡Á¢Ãò ¾¸Î Å¡í¸, ¾í¸õ §º¸Ã¢òÐ ÀÄ÷ ÓÂüº¢ ¦ºö¾¢Õ츢ȡ÷¸û. ¬É¡ø, ¾í¸õ ÓØÅÐÁ¡¸ Å¡í¸ ÓÊÂÅ¢ø¨Ä.

Å¢Á¡Éò¾¢ý þÃñÎ Àì¸õ ÁðΧÁ ¾í¸ÓÄ¡õ âºìÜÊ «Ç×ìÌ ¾í¸õ ¸¢¨¼ò¾Ð. þýÛõ þÃñ¼¡Â¢Ãõ §¾¡Ä¡ ¾í¸õ ¸¢¨¼ò¾¡ø Å¢Á¡Éõ ÓØÅÐõ ¾í¸ ÓÄ¡õ ⺢Ţ¼Ä¡õ. ¬¸§Å þó¾ þÃñ¼¡Â¢Ãõ §¾¡Ä¡ ¦¸¡ÎôÀÅ÷¸û ±Åá¢Ûõ «Å÷ À¡¾ò¾¢ý Á£Ð ±í¸û º¢Ã…§ ±ýÚ ¦¾Öí¸¢§Ä ´Õ ¸ø¦ÅðÎ þÕ츢ÈÐ. (´Õ §¾¡Ä¡ ±ýÀÐ ÀýÉ¢ÃñÎ ¸¢Ã¡õ. þÃñ¼¡Â¢Ãõ §¾¡Ä¡ ±ýÀР㚢Ãõ ºÅÃý).

¦ºý¨É ¿¸Ã Áì¸û ¿¢¨Éò¾¡ø þÃñ¼¡Â¢Ãõ §¾¡Ä¡ ¾í¸ò¨¾ ´§Ã ÅÕ¼ò¾¢ø À¡÷ò¾º¡Ã¾¢ ¦ÀÕÁ¡ÙìÌ «ýÀÇ¢ôÀ¡¸ì ¦¸¡ÎòРŢ¼ ÓÊÔõ. «ÚÀòÐ ±ðÎ ÅÕ¼ ¾Åõ â÷ò¾¢Â¡Ìõ. «ýÚ ÀÄ ¦ÀâÂÅ÷¸û ÓÂýÚ ÓÊ¡¾ «ì¨¸í¸÷Âõ ±Ç¢¾¡¸ ¿¢¨È§ÅÚõ. «ôÀÊ Å¢Á¡Éõ ÓØÐõ ¾í¸ ÓÄ¡õ âºô¦ÀüÈ¡ø ¦ºý¨É ¿¸Ãõ §Áý§ÁÖõ ÅÇÁ¡Ìõ ±ý¸¢È ¿õÀ¢ì¨¸ þÕ츢ÈÐ.

º¢È¢Ðõ þøÄ¡Ð ¦ÀâÐõ þøÄ¡¾ §¸¡Å¢ø. Àø§ÅÚ ¸¡Ä¸ð¼í¸Ç¢ø Àø§ÅÚÅ¢¾ Áñ¼Àí¸û ¸ð¼ôÀðÊÕ츢ýÈÉ. ¦¸¡ÊÁÃòÐì¸Õ§¸ÔûÇ ´Õ Áñ¼Àõ, ´Õ §¾ÅÃÊ¡÷ ¾ýÛ¨¼Â ¦º¡ó¾ì ¸¡º¢Ä¢ÕóÐ ¸ðʾ¡ö ¦º¡øÄôÀθ¢ÈÐ. «ó¾ Áñ¼Àò àñ¸Ç¢ÖûÇ Ò¨¼ôÒî º¢üÀí¸û Á¢¸ §¿÷ò¾¢Â¡É¨Å.

†¢Ãñ嬃 ¿Ãº¢õÁ÷ ¿¢ýÈš츢§Ä «Åý þÃñÎ ¸¡ø¸¨ÇÔõ ¾¨ÄÁ¢¨ÃÔõ þÃñÎ ¨¸¸Ç¡ø ÀüÈ¢ ÓÆí¸¡¨Ä ¯Â÷ò¾¢ «Åý ÓЦ¸Öõ¨À ¯¨¼òÐô §À¡Îž¡ö ´Õ §Å¸ÓûÇ º¢üÀõ þÕ츢ÈÐ. «ÐÁðÎÁøÄ¡Ð À¡÷ò¾º¡Ã¾¢ ºýɾ¢ì¸Õ§¸ ŠÃ£Áó¿¡¾÷ ±ý¸¢È ¦À§áΠ«Éó¾ºÂÉô ¦ÀÕÁ¡Ç¢ý ºýɾ¢ þÕ츢ÈÐ. ºÐ÷Òƒí¸§Ç¡Î ¬¾¢§º„ýÁ£Ð ¿¡Ã¡Â½ý ºÂÉ¢ò¾¢Õ츢ȡ÷.

´Õ ¨¸ À¡õÀ¨½ Á£Ðõ, ´Õ ¨¸ Óò¾¢¨Ã¡¸×õ, þý¦É¡Õ ¨¸ ¦¾¡¨¼ Á£Ðõ þÕì¸, ¿¡ý¸¡ÅÐ ¨¸ ¯Â÷óÐ ´Õ Å¢Ã¨Ä Å¨ÇòÐ, «Õ§¸ Å¡ ±ýÚ «¨ÆôÀÐ §À¡Ä ¸¡ðº¢ÂǢ츢ÈÐ. ŠÃ£§¾Å¢Ôõ ⧾ŢÔõ «Õ§¸ þÕì¸, ¿¡À¢Â¢Ä¢ÕóÐ ¾¡Á¨Ã ÁÄ÷óÐ «¾ý §Á§Ä À¢ÃõÁ§¾Åý «Á÷ó¾¢Õ츢ȡ÷. «ó¾ «Éó¾ ºÂÉô ¦ÀÕÁ¡Ùì¸Õ§¸, ¯û§Ç Á¨ÈÅ¡¸, º¢Ã¢ò¾ÀÊ ¿Ãº¢õÁÕõ º¢ó¾¨É Á¢ì¸ Åá¸Õõ «Á÷ó¾¢Õ츢ȡ÷¸û.

«Éó¾ ºÂÉô ¦ÀÕÁ¡ÙìÌ «Õ§¸ ŠÃ£ áÁÕ¨¼Â ºýɾ¢ þÕ츢ÈÐ. º£¨¾, ÄðÍÁ½§Ã¡Î ÁðÎÁøÄ¡Áø, Àþ§Ã¡Îõ ºòÕìɧáÎõ ŠÃ£Ã¡Á÷ ¸¡ðº¢ÂǢ츢ȡ÷. «ÅÕìÌ §¿¦Ã¾¢§Ã †ÛÁ¡ý ÜôÀ¢Â ¸Ãí¸§Ç¡Î ¿¢ü¸¢È¡÷.

¾¡Â¡Ã¢ý ¦ÀÂ÷ ŠÃ£ §Å¾ÅøÄ¢. ¾É¢ ºýɾ¢Ôõ «ÅÕì¸Õ§¸ ŠÃ£ ¸§ƒó¾¢Ã Åþâý ºýɾ¢Ôõ þÕ츢ýÈÉ.

¸£¨¾ ÀÊòÐ ¸ñ½¨É ¬úóÐ §¿º¢ì¸¢È «ò¾¨É §ÀÕõ þó¾ þ¼ò¾¢üÌ ÅóÐ ¸ñÌǢà §Åí¸¼¸¢Õ‰½¨ÉÔõ À¡÷ò¾º¡Ã¾¢¨ÂÔõ À¡÷òÐ Å½í¸ §ÅñÎõ.

ÌÎõÀõ ÍÓ¸Á¡¸ þÕì¸ ¸ñ½¨É ÅÆ¢À¼ §ÅñÎõ. ÁÉõ «¨Á¾¢Â¡¸ þÕì¸ §Â¡¸ ¿Ãº¢õÁ÷ Óý ¨¸¸ðÊ ¿¢ü¸ §ÅñÎõ. Å£ðÊø ¿¢õÁ¾¢Ôõ, Áɺ¢ø «¨Á¾¢Ôõ þÕó¾¡ø «¨¾Å¢¼î º¢ÈôÀ¡É Å¡ú쨸 §Å¦ÈýÉ ¯ñÎ?

¯ý¨É º¸Ä ÐýÀí¸Ç¢Ä¢ÕóÐõ ¸¡ôÀ¡üÈ ¿¡ý þÕ츢§Èý ±ýÚ ŠÃ£ À¡÷ò¾º¡Ã¾¢Â¡É §Åí¸¼¸¢Õ‰½ý ¯ÂÃÁ¡ö «¸ÄÁ¡ö ¦ÀÕõ ŢƢ¸§Ç¡Îõ, º¢Ã¢ò¾ Ó¸ò§¾¡Îõ, ¿øÄ Å£ÃÁ¡É Á£¨º§Â¡Îõ, ¸õÀ£Ãò§¾¡Îõ, Å¡ Å¡ ±ýÚ ¸Õ¨½§Â¡Î ¯í¸¨Ç «Õ§¸ «¨Æ츢ȡý. ±ðÊ Å¢Ä¸¢ ¿¢ýÚ À¡÷ìÌõ§À¡§¾ «Åý «Õ§¸ §À¡¸ §ÅñΦÁý¸¢È ¬ÅÖõ, ²ì¸Óõ ¿¢îºÂõ ²üÀÎõ. þ¨¼ÂÈ¡Ð «ó¾ì ¸ñ¸¨Çô À¡÷òÐì ¦¸¡ñ§¼Â¢Õó¾¡ø ¯ûÙìÌû Á¡üÈí¸û ¿¢îºÂõ ¿¢¸Øõ. §ÅñÎÅÉ ¸¢¨¼ìÌõ. //

DEVAPRIYA
[/tscii:6b12bd479d]

devapriya
25th October 2007, 08:08 PM
[tscii:4659330190]ராமேஸ்வரம்

தேவர்கள் அக்னி வடிவமானவர்கள். அவர்களுக்கு உபசாரம் செய்வது அக்னி மூலமாகத்தான்.

அவர்களுக்கு உணவான நைவேத்யம் வழங்குவது அக்னியின் மூலமாகத்தான். பித்ருக்கள் அதாவது இறந்துபோன நம் முன்னோர்கள் இருப்பது ஜல ரூபமாக. அந்த ஜலக்கரையில் ஆவிகளாக அலையும் பித்ருக்களுக்கு ஜலம் வழியேதான் அர்க்யம் விட வேண்டும். அந்த ஜலம்தான் அவர்களுக்கு உணவு.

மனிதர்கள் மண் வடிவானவர்கள். மண்ணில் விளைந்தவைகள்தான் மனிதர்களுக்கு உணவு, உபசாரம். ஜல வடிவிலான பித்ருக்களை திருப்திபடுத்த நல்லதொரு ஜலக்கரைக்குச் சென்று அங்கு அவர்களை வணங்குதல் உயர்வு தரும். தேவர்களின் ஆசிர்வாதத்தைவிட, கடவுளின் அனுக்கிரகத்தை விட, பித்ருக்களின் அனுக்கிரகம் உடனடியான பலன் தரும். நம்முடைய முன்னோர்கள், நம்மீது மாறாத காதலுடையவர்கள். அந்த சூட்சுமரூபம் பெற்றபிறகு நம்மீது அதிகமான அக்கறையும், அன்பும், நம் வளர்ச்சியின் மீது கவனமும் கொண்டவர்கள். பதிலுக்கு நம்மிடமிருந்தும் ஒரு கை ஜலத்தைதான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இது இந்துமத சம்பிரதாயம் சொல்கின்ற வழி.

எந்த தீர்த்தக்கரையில் பித்ருக்களுக்கு நீர் வார்க்கலாம் என்றால், தமிழ்நாட்டிலுள்ள மிக அற்புதமான இடம் ராமேஸ்வரம்.

கடலால் சூழப்பட்ட தீவு போன்ற இடம். அந்த இடத்தில்தான் ராமபிரான் தன்னுடைய கைகளால் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டார். அந்த இடத்தில்தான் ராவணனைக் கொன்ற பாபம் போவதற்காக தீர்த்தத்தில் மூழ்கி தன்னுடைய சடையை கழுவிக் கொண்டார். ராவணனைக் கொல்வதற்கு முன்பு ஆலோசித்த இடமான கந்தமான பர்வதம், இன்று ராமேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது. ராமரின் பாதம் பட்டதால் புனிதமான அந்த இடம், ராமர், சிவனை வழிபட்டதால் வைஷ்ணவ_சிவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது.

பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை ஒரு கூரைக் கொட்டகையாக இருந்த அந்த இடம், மெல்ல மெல்ல பல்வேறு மன்னர்களால் கோவிலாக உருவெடுத்தது. உலகப் புகழ் பெற்ற இரண்டாம் பிராகாரத்தையும், மூன்றாம் பிராகாரத்தையும் சேதுபதி பரம்பரையில் வந்த மன்னர்கள் சிறப்பாகக் கட்டிக்கொடுத்திருக்கிறார்க஼br />். ராமனின் பாதம்பட்ட இடமல்லவா... என்று அந்த பூமியை மிக நேசத்தோடு வலம் வந்திருக் கிறார்கள். கோவிலின் பிரமாண்டம் நம்மை அயரவைக்கிறது.

ராமனால் மட்டும் சிறப்படைகிறதா ராமேஸ்வரம்?

இல்லை. சீதையாலும் சிறப்புற்றது. ராவணனை ஜெயித்தபிறகு மீட்டுவந்த சீதையை ‘நீ அக்னிப் பிரவேசம் செய்ய வேண்டும்’ என்று ராமன் கட்டளையிட்டபோது, சீதை மயங்கி நிற்க, வானுலகில் நின்ற தசரதர், சீதையை ‘நீ தாராளமாக தீக்குள் இறங்கு’ என்று ஆசிர்வதிக்க, சீதை யானையை நோக்கிப் பாய்ந்த சிங்கத்தைப்போல, மானை நோக்கிப் பாய்ந்த புலியைப்போல, தீ நோக்கிப் பாய்ந்தாள் என்று காவியங்கள் வர்ணிக்கின்றன. தீக்குள் சீதை இறங்கியதும், அக்னிபகவான் அலறினான். சீதையின் கற்பு தன்னை சுட்டெரிப்பதாகவும், தன்னால் தாங்க முடியவில்லை என்றும் வேதனையில் துடித்தான்.

அவள் தூய்மையிலும் தூய்மையானவள் என்று தன் கரங்களால் ஏந்தி, சீதையை அக்னி குண்டத்திற்கு வெளியே இறக்கி வைத்தான்.

ராமர் அந்த சாட்சியத்தை ஏற்றுக்கொண்டார். அக்னிதேவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். அக்னியைப் பார்த்த ராமர், ‘நீ இந்த சமுத்திரத்தில் மூழ்கி உன்னுடைய வேதனையைக் குறைத்துக்கொள்’ என்று கட்டளையிட, அக்னிபகவான் அந்தப் பகுதி சமுத்திரத்தில் மூழ்கினார். அவர் மூழ்கிய இடத்தை அக்னி தீர்த்தம் என்று அழைப்பார்கள். இதில் மூழ்குகிறவர்களுக்கு சகல பாபங்களும் தீரும். இங்கு அமர்ந்து பித்ருக்களுக்கு நீர் வார்ப்பவர்களுக்கு, பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்; அந்த பித்ருக்களின் தாகம் தணியும் என்று ராமர் ஆசிர்வதித்ததாக புராணக் கதைகள் சொல்கின்றன.

ஊருக்கு சற்று விலகி நிற்கும் லக்ஷ்மண தீர்த்தத்தில், அமைதியான குளக்கரையில் போய் சங்கல்பம் செய்துகொண்டு பிறகு அங்கிருந்து நடந்து, அக்னி தீர்த்தத்திற்கு வந்து அலைகளற்ற, ஆழமற்ற அந்த இடத்தில் மூழ்கிக் குளிக்க வேண்டும். நாற்பத்தைந்து முறை மூழ்கி எழுந்திருக்க வேண்டுமென்று புரோகிதர்கள் சொல்கிறார்கள். அக்னி தீர்த்தம் என்ற அந்த சேது சமுத்திரத்தில் மூழ்கிக் குளித்தபிறகு கோவிலுக்குப் போய், கோவிலைச் சுற்றியுள்ள இருபத்தியிரண்டு தீர்த்தங்களிலும் நீர் மொண்டு தலையில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

இதற்கென்று ஆட்கள் இருக்கிறார்கள்.ஊருணியின் பெயரைச் சொல்லியும் அங்கு குளிப்பதால் ஏற்படும் பலனைச் சொல்லியும் நிதானமாகத் தண்ணீர் ஊற்றுகிறார்கள். பிறகு உடைகள் மாற்றிக்கொண்டு ஓர் அந்தணர் உதவியுடன் அங்கு தர்ப்பணங்கள் செய்ய வேண்டும். வேறு எங்குமில்லாதபடி ராமேஸ்வரத்தில் விதம் விதமாக தர்ப்பணங்கள் செய்யலாம். தாய்க்கும், தகப்பனுக்கும் மட்டுமல்லாது சிற்றப்பனுக்கும், மாமனுக்கு மாமனாருக்கு, மாமியாருக்குமற்றும் எல்லாவிதமான உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், பகைவர்களுக்கும், வீட்டுச் செல்லப் பிராணிகளான பசுவுக்கும், குதிரைக்கும், நாய்க்கும் கூட நாம் தர்ப்பணம் செய்து கொள்ளலாம். நமக்கு யாரேனும் உதவி செய்திருந்து அவர் மரணமடைந்திருந்தால், அவருடைய ஆன்மா குளிரும் பொருட்டும் தர்ப்பணம் செய்யலாம். இந்த சேது நதிக்கரையில், யாரும் தர்ப்பணம் செய்வதற்கு இல்லாமல் அனாதையாய் அலைந்து கொண்டிருக்கின்ற ஆன்மாக்களுக்கும் தர்ப்பணம் செய்யலாம்.

இவ்விஷயங்களை காசு கொடுத்து அர்த்தத்தோடு கேட்டால் இந்துமதம் எவ்வளவு பெரிய கருணாஸாகரம் என்பது புரிந்துவிடும்.

இந்தக் கோவிலின் பரம்பரை அர்ச்சகர்களாக சரபோஜி காலத்தில் நியமிக்கப்பட்ட மகாராஷ்டிரத்து அந்தணர்கள் இருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு சிருங்கேரி மடத்தாரால் கொடுக்கப்பட்ட ஸ்படிக லிங்கத்திற்கு, விடிகாலை பூஜை நடக்கிறது. கருவறை வெகுதூரம் உள்ளடங்கி இருக்கிறது. தீபங்களின் மங்கலான ஒளியில் வெகு தொலைவில் சிவலிங்கத்தை தரிசிக்க வேண்டியிருக்கிறது.

ஆடி மாதம், ஆஷாட மாதம் என்று சொல்லிக்கொண்டு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வட இந்தியர்கள் வருகிறார்கள். சித்திரை மாதம், நேபாளத்திலிருந்து ஜனங்கள் வருகிறார்கள்.

ஐயப்பன் சீஸனின் போதும், பொங்கல் பண்டிகையின் போதும், அமாவசைகளின் போதும், தமிழர் கூட்டம் இருக்கிறது. எனவே, ராமேஸ்வரம் எல்லா நாளும் கூட்டம் மிகுந்த நாளாகத்தான் காணப்படுகிறது.

அத்தி மரத்தால் செய்யப்பட்ட ஆஞ்சநேயரின் சன்னதி ஒன்று அழகுற அமைந்திருக்கிறது. அதர்வண வேதப் பிரயோகங்களைச் செய்கிறவர்கள், அத்திக் குச்சியை கையில் வைத்துக்கொண்டுதான் செய்வார்கள். நரசிம்மர், இரண்ய கசிபுவை வயிறு கிழித்துக் கொன்றபோது அவன் வயிற்றிலிருந்த அமிலம் நரசிம்மரின் விரல்களை எரிக்கவே, அதைக் குளுமை செய்வதற்காக லக்ஷ்மிதேவி, அத்திப் பழங்களை செருகினாள் என்று தகவல் தரும் புராணக் கதைகள் உண்டு. எனவே, மரத்தில் சிறந்த அத்தி மரத்தில் ஆஞ்சநேயர் உருவச்சிலையை செய்திருக்கிறார்கள். உயரே நன்கு கைதூக்கி ஆசிர்வதிக்கின்ற அந்த ஆஞ்சநேயர் சிலை அபூர்வமானதாய், நல்ல அதிர்வுகள் கொண்டதாய் இருக்கிறது.

ஸ்ரீராமர் பாதம் என்ற இடமும், திருப்புல்லாணி என்று தர்ப்பாசனத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீராமருடைய கோவிலும் தனித்தனியே அமைந்திருக்கின்றன.

ராமர் நின்று இலங்கையைப் பார்த்ததாகச் சொல்லப்படுகின்ற ராமர் பாதம் என்ற கோவிலும் இருக்கிறது. மிகப்பெரிய நடராஜர் சிலை உற்சவமூர்த்தியாக இருக்கின்ற சன்னதியை விசேஷமாகச் சொல்கிறார்கள். ஒரு பாதியில் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. மறுபாதி அடைக்கப்பட்டிருக்கிறது. அது பதஞ்சலியின் சமாதி என்றும் சொல்கிறார்கள்.

விதம் விதமான கதைகளைக் கொண்ட இந்தக் கோயில், பார்க்கப் பார்க்க பரவசம் கொடுக்கிறது.

பர்வதவர்த்தினி முன்னால் ஸ்ரீசக்கர பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. பித்ருக்களின் தாகம் தீர்க்க வந்திருக்கிறோம் என்ற நினைப்பில் சங்கல்பம் செய்து கொண்டு சமுத்திர ஸ்நானம் செய்து, எல்லா தீர்த்தங்களிலும் நீராடி, இறைவனை தரிசித்து, பிறகு அமைதியாக உட்கார்ந்து, கடலை வெறித்து, முன்னோரை நினைத்துக்கொள்ள, மனதில் புதுவிதமான அமைதியும் சந்துஷ்டியும் கிடைப்பது திண்ணம்.

கடலும், கோவிலும் தவிர வேறு இல்லை. குவிகின்ற யாத்ரிகர்கள் தவிர வேறு எவரும் இல்லை. ஆனாலும், அத்தனை பேரையும் மீறி ஓர் அமைதி அந்த ஸ்தலத்தில் நிச்சயம் இருக்கிறது.

பித்ருக்களை வணங்கி அந்த அமைதியை அனுபவித்துவிட்டுதான் வாருங்களேன்.[/tscii:4659330190]

devapriya
31st October 2007, 06:57 AM
4. ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில்

குடந்தையிலிருந்து ஒரு தாண்டு தாண்டி, ஸ்ரீரங்கம் என்கிற nக்ஷத்திரத்தைப் பற்றி உங்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். குடந்தையிலேகூட நல்ல வைணவ தலங்கள் இருக்கின்றன. இருப்பினும் இந்தப் பகுதியின் வசீகரம் கருதி உங்களையெல்லாம் நெருக்கமாக ஈர்ப்பதற்காக ஸ்ரீரங்கத்தை சொல்வதற்கு ஆவலாக இருக்கிறேன். வாழ்க்கையில் ஒருமுறையேனும் இந்த ஸ்ரீரங்கம் கோயிலை நிதானமாக, மறுபடி சொல்கிறேன் நிதானமாக தாpசித்துவிட்டு வாருங்கள்.

இந்தக் கோயில் எப்பொழுது தோன்றியது என்று எவராலும் சொல்ல முடியவில்லை. சோழர்கள், பாண்டியர்கள், நாயக்க மன்னர்கள், சரபோஜpகள் என்று பலபேர் திருப்பணி செய்த அற்புதமான இடம் இந்த ஸ்ரீரங்கம்.

இந்த கோயிலில் மஹhவிஷ்ணு ரங்கநாதர் என்று பெயர்தாpத்து பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கிறhர். அவர் மட்டுமே தனியாக சாய்ந்தபடி படுத்து ஆதிசேஷன் மீது உறங்கி கொண்டிருக்கிறhர்.

அது என்ன பாம்பின் மீது படுக்கை? ஏன் கடவுள் பாம்பின் மீது படுக்க வேண்டும்?

சேஷம் என்றhல் எஞ்சியது என்று பொருள். எல்லாவற்றையும் ஒதுக்கி கடைசியில் என்ன மிஞ்சுகிறது என்று பார்த்தால் அந்த இடத்திலே இருப்பவர்தான் இறைவன் என்பதே இதன் பொருள்.

உங்களுக்குப் புhpயவில்லையா? மறுபடி சொல்கிறேன். நீங்கள் உங்கள் குணம், உங்கள் தொழில், உங்கள் பெயர், உங்கள் குடும்பம், உங்கள் உடம்பு என்பதெல்லம் தள்ளி தான் யார் என்று மனதுக்குள் தேடி, இனி தேட ஒன்றுமில்லை. தேட எதுவுமில்லை என்று சுருண்டு கிடக்கிற மனோபாவம் வந்து, அந்த சுருண்டு கிடக்கிற சக்தியிலே மனம் லயிக்கும்போது அந்த சுருண்டு கிடக்கும் சக்தியின் நடுவே இருக்கின்ற ஒரு சக்தியின் பெயர்தான் இறைவன். இதைக் குறிப்பால் உணர்த்தும்படியாக உவமையாய் சொல்லும்படியாக இந்த திருவுருவம் அமைக்கப்பட்டிருக்கிறது.

பொன்வேய்ந்த அழகிய விமானத்தின் கீழ் காயத்hp மண்டபத்துக்கு முன்பு கருவறையில் நெய் தீபங்களுக்கு நடுவே அரங்கன் பள்ளி கொண்டிருக்கிறhன். அங்கே இறைவன் உறங்குவது போல காட்சி தருகிறhன்.

ஆனால் அது தூக்கமல்ல. அது ஒரு யோக நிலை. அரங்கன் அமைதியாக இருக்கிறhன். உங்கள் எல்லோரையும் ஆழ்ந்து கவனித்துக் கொண்டு இருக்கிறhன். என்ன நடக்கிறது என்று புன்னகை தவழும் முகத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறhன்.

ஸ்ரீரங்கம் சாதாரண மடமல்ல. அது கோவிலும், கோவில் சார்ந்த பகுதிகளும் கொண்ட கட்டுமஸ்தான மிகப்பொpய ஒரு நகரம். கோட்டை சுவர்களுக்கு நடுவேயும், உள்ளேயும் சித்திர வீதி, உத்தர வீதி என்று சதுரம் சதுரமாக நகரம் அமைந்திருக்க, இந்த நகருக்கு நடுவே கோயில் இருக்கிறது. சுற்றிலும் வீதிகள், நகரம், நடுவே கோயில் என்று ஸ்ரீரங்கம் மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது.

கோயிலுக்குள் நுழைந்ததும் தடதடவென்று உள்ளே ஓடி விடவேண்டாம். கோயிலுக்குள் நுழைய, மண்டபத்தின் இடப்பக்கம் அழகிய கிருஷ்ணர் கோயில் இருக்கிறது. இது சமீபத்தியது. ஆனால் அதிலுள்ள சிற்பங்கள் மிக மிக அற்புதமானவை. உங்கள் கேமராவுக்கு விருந்து படைக்கும் தன்மை உடையவை. அந்த கிருஷ்ணர் கோயிலுக்கு அருகே ஒரு மாடிப்படி இருக்கிறது. அந்த மாடிப்படியில் ஏறிப் போனால் நீங்கள் ஒரு சமதளத்திற்கு வருவீர்கள். அந்த சமதளத்திலிருந்து பார்த்தால், நாலுபக்க கோபுரங்களும், மிகப்பொpய கோயிலின் மேற்பரப்பும், பொன்வேய்ந்த விமானமும் Nhpயவெளிச்சத்தில் தகதகத்து காட்சிதரும்.

மாடியிலிருந்து கீழே இறங்கினால் இடதுபக்கம் சக்கரத்தாழ்வார் சந்நிதி. வலது பக்கம் ராமானுஜருடைய சந்நிதி. சக்கரத்தாழ்வார் இறைவனின் ஆயுதம். தீய சக்திகள் இங்கு உள்ளே நுழைய முடியாது. சக்கரத்தாழ்வாரை வணங்கி நிற்க, நமக்கு தீவினை செய்தவர்கள் அழிந்து போவார்கள். ஏவல், பில்லி Nனியங்கள் விலகிப்போய்விடும் என்று இங்குள்ள மக்கள் நம்புகிறhர்கள்.

வலதுபக்கம் உள்ள ராமானுஜர் சந்நிதி மிக அற்புதமானது. இங்கே ஒரு சுதை உருவம் நகங்களோடும், கண் புருவங்களோடும், இமைகளோடும், நாசித்துவாரங்களோடும், வடிந்த உதடுகளோடும் அமர்ந்திருக்கிறது. ராமானுஜர் உள்ளே உலோகச் சிலையாய் தன் உடம்பை மாற்றிக்; கொண்டு அமர்ந்துவிட அதன் மீது குங்குமப்பூவால் சாந்து எழுப்பி அவரை பந்தனம் செய்திருக்கிறhர்கள் என்று சொல்லப்பட்டாலும், அதை இல்லையென்று மறுக்கிறவர்களும் இருக்கிறhர்கள்.

சிலை எப்படி இருப்பினும் ஸ்ரீராமானுஜர் மிகப்பொpய மாpயதைக்குhpயவர். இந்து மதத்தின் புரட்சிக்காரர். ஈரமான மனம் உடையவர். இந்துக்களில் எல்லா ஜhதியினரும் வைணவரே என்று ஜhதி, மதபேதமற்று. தான் அறிந்த ஙநமோ நாராயணாங என்ற மந்திரத்தை கோபுரத்தில் ஏறி சகலருக்கும் சொன்ன வள்ளல். ஸ்ரீரங்கம் கோயில் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று எழுதிவைத்த அற்புதமான ஒரு மகான்.

இவருடைய சாpத்திரம் மிக சுவாரஸ்யமானது. இவருடைய சீடர்களின் சாpத்திரம் மிக அற்புதமானது. குருபக்திக்கு ஸ்ரீராமானுஜருடைய சீடர்களின் சாpத்திரம் நல்ல உதாரணம்.

இந்த இரண்டு சந்நிதிகளையும் தாpசித்து உள்ளே போனால் அற்புதமான கருடமண்டபம் இருக்கிறது. மிக உயரமான கருடர் சிலை இருக்கிறது. அந்த சிலை சுதையால் ஆனது. பொpய விழிகளும், கூர்மையான மூக்கும், கூப்பிய கைகளும், படபடக்கும் இறக்கையும் கொண்டது. இந்தச் சிலையை உற்றுப் பார்க்க லேசாய் ஒரு பயம் வருவது இயல்பு. இந்த இடத்தில் தத்தை முனி என்பவர் சமாதி கொண்டிருக்கிறhர் என்று சொல்லப்படுவதும் உண்டு. அந்த மண்டபம் முழுவதும் அரசர்களின் சிலைகளும், சேனாதிபதிகளின் சிலைகளும் நிறைந்திருக்கும். அங்கிருக்கும் அரசர்களுடைய உருவங்களையும், உடைகளையும், தொப்பிகளையும் வியப்போடு பார்த்தவண்ணம் நீங்கள் இன்னும் உள்ளே நுழையலாம்.

உள்ளே நுழைய வலது பக்கம் பத்து படிக்கட்டுகளுக்கு மேல் ஒரு சிறிய ஆஞ்சநேயர் சிலை அமர்ந்து கைகூப்பிய நிலையில் இருக்கிறது. அந்த ஆஞ்சநேயர் மிகப்பொpய வரம். எது கேட்டாலும் தருகின்ற சக்தி உடையவர். படிகள் ஏறி அந்த ஆஞ்சநேயரை வலம் வந்து, நமஸ்காpத்து, உங்களுடைய வேண்டுதல்களை அவாpடம் நீங்கள் தொpவித்துவிட்டு வரலாம்.

கொடிமரம் தாண்டி இடது பக்கம் திரும்பினால் அங்கே கருப்புசாமி சிலை இருக்கும். கருப்புசாமி சிலை மரத்தாலானது. நான்கு மனைவியரோடு பீச்சாங்குழல் கையில் தாங்கி, அவர்களோடு நீர் அடித்து விளையாடுகின்ற இந்தச் சிலை சற்று பின்னப்பட்டிருந்தாலும் அந்த இடத்தின் அதிர்வுகள் மிக அற்புதமானது. அங்கே ஒரு கணம் நின்று கருப்புசாமியை தாpசித்துவிட்டு திரும்ப கோவிலுக்குள் புகுந்து, மண்டபத்தைச் சுற்றிக்கொண்டு வாpசைவழியே நகர்ந்து ரங்கநாதரை தாpசிக்க உள்ளே போனால் காயத்hp மண்டபம்.

காயத்hp மண்டபம் தாண்டி ரங்கநாதர் இருக்கின்ற அழகிய கருவறை. ரங்கநாதர் பாதம் முதல் உச்சந்தலை வரை அமைதியாய் தாpசித்துவிட்டு ரங்கா, ரங்கா, ரங்கா, என்று இடையறhது சொல்லி விட்டு பிரகாரத்தை வலம் வந்து கிளி மண்டபத்தில் சற்று நேரம் உட்கார்ந்துவிட்டு, அந்த கிளிமண்டபத்திலிருந்து தொpகின்ற விமான ரங்கநாதரையும் பார்த்துவிட்டு வெளியே வந்து வெளிச்சுற்று பிரகாரம் வழியாக தாயார் சந்நிதிக்கு நடந்துபோக வேண்டும்.

தாயார் சந்நிதிக்கு நடந்து போகிற வழியில்தான் மிகப்பொpய யுத்தங்கள் நடந்திருக்கின்றன. அந்நியர்கள் உள்ளே புகுந்து, எவர் எதிர்பட்டாலும் வெட்டிக் கொன்று ரத்தக்களாpயான இடம் அது. அந்த இடத்தைத் தாண்டி போகும்போது வழியில் தன்வந்திhpயின் சந்நிதி இருக்கிறது.

தன்வந்திhp இந்துமதத்தின் வைத்தியசாஸ்திர நிபுணர். தேவ வைத்தியர். அவரை நமஸ்காpக்கும்போது உங்கள் உடற்குறை அறவே தீருகிறது. அவரை நமஸ்காpத்து உங்கள் உடல்பிணியை அவருக்கு எதிரே சொல்லி நோய் தீர்க்க வேண்டிக் கொள்ளலாம் அந்த தன்வந்திhpயின் வலதுகையில் ஒரு அட்டைப்பூச்சியின் உருவம் இருக்கும். அந்தக் காலத்தில் ரத்தத்தைச் சுத்தம் செய்ய அட்டையை உடம்பில்விட்டு கடிக்கச்செய்து ரத்தத்தை வெளியேற்றுவார்கள். அப்படி கெட்ட ரத்தம் வெளியேற்றுகிறபோது உள்ளே புது இரத்தம் ஊறி உங்கள் உடம்பு சௌக்கியமாவது நிதர்சனம். ஆகவேதான் தன்வந்திhp கையில் மருந்தோடு அட்டையும் வைத்திருக்கிறhர்.

தன்வந்திhpயின் சந்நிதி தாண்டி உள்ளே போனால் மிக அழகான பொpய மண்டபம். அங்கே நிறைய பேர் பூ விற்றுக் கொண்டிருப்பார்கள். உள்ளே நுழைந்தால் தாயாhpன் சந்நிதி எதிர்ப்படும்.

தாயார் ரங்கநாயகி பொலிவும் அழகும் மிக்கவள். சுடற்தொpக்கும் ஆபரணங்கள் கொண்டவள். பின்னப்பட்ட பழைய சிலை பின்னால் இருக்க, முன்னே ஒரு சிலை இருக்கும். அதைத் தாண்டி உற்சவருக்குத்தான் கற்பூர ஆரத்தி காண்பிப்பார்கள். உற்சவரை வணங்கி செல்வம் நிறைய வேண்டுமென்று வணங்கிக் கொண்டு வெளியேவந்தால், சிறிய மண்டபம் ஒன்று இருக்கும். உலகத்தினுடைய அற்புதமான காப்பியமான கம்பராமாயணம் அங்குதான் அரங்கேற்றப்பட்டது. கம்ப நாட்டாழ்வார் அங்கு நின்று, தன் பாட்டை உரக்கச் சொல்லி விளக்கியிருப்பார் என்று நினைக்கிற போது அந்த இடத்தை விழுந்து வணங்க உங்களுக்குத் தோன்றும்.

அங்கிருந்து வலமாகச் சுற்றி சந்தன புஷ்கரணி தாண்டிப் போனால் ஈசான்ய மூலையில் ராமருடைய சந்நிதி இருக்கிறது. மிக அழகிய வர்ணங்களால் அந்த சந்நிதியை அலங்காpத்திருக்கிறhர்கள். அங்கே எப்பொழுதும் இடையறhது வேதபாராயணம் நடந்து கொண்டிருக்கிறது. சந்நிதியின் உள்ளுக்குள்ளே வாpசையாக பத்து அவதாரங்களையும் சிலைகளாக வைத்திருக்கிறhர்கள். எல்லா அவதாரங்களிலும் ஆதிசேஷன் குடைபிடித்துக் கொண்டு இருக்கிறhன். மூர்த்திகள் மிக ரம்மியமாக, பார்ப்பதற்கு பரவசத்தை ஏற்படுத்தும் வண்ணம் இருக்கும்.

இந்த ராமர் சந்நிதி மிக முக்கியமான இடம். கோவிலில் வேறு எங்கு தியானம் செய்ய முடியுமோ, முடியாதோ இந்த இடத்திலே நீங்கள் அமைதியாக உட்கார்ந்து நிச்சயம் தியானம் செய்ய முடியும். அருகில் ஒரு தனி அறையும் இருக்கிறது. நீங்கள் கூடுதலாக ஆழ்ந்து தியானம் செய்ய வேண்டுமென்றhல் அந்த அறையைத் திறந்து விடுகிறhர்கள். இல்லையெனில் வேத பாராயணம் செய்யும் இடத்தில்கூட நீங்கள் அமர்ந்து தியானம் செய்யலாம். அடிக்கடி வேள்விகள் நடக்கும் இடமென்றபடியால், தினமும் வேத பாராயணம் செய்கின்ற இடமென்றபடியால் அந்த இடத்தில் கூடுதலாக ஆழ்ந்து தியானம் செய்து உங்களால் ஒரு நல்லநிலைக்குப் போகமுடியும்.

அங்கிருந்து தாண்டி, அந்த இடத்தைச் சுற்றி வருகின்ற இடத்தில் படைப்பள்ளி இருக்கிறது. படைப்பள்ளியில் சிறிதளவு சர்க்கரைப் பொங்கலும், புளியோதரையும் வாங்கி உண்டுவிட்டு நீங்கள் கோவிலைவிட்டு வெளியே வந்துவிடலாம்.

ஸ்ரீரங்கத்தை வாழ்வில் ஒருமுறை சுற்றி வந்தால்போதும். நீங்கள் இந்துவாகப் பிறந்ததற்கு அர்த்தம் ஏற்பட்டுவிடும். கொள்ளிடமும். காவிhpயும் இரண்டாகப் பிளந்த இடத்தில், சிறிய தீவாக மலர்ந்த அற்புதமான nக்ஷத்திரமான இந்த ஸ்ரீரங்கம் உற்சாகமூட்டும் ஒரு இடம். சற்று அமைதியாக, அவசரமில்லாமல் தூண் தூணாக பார்த்துக் கொண்டு போகும்படியாய் உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

ராமர் சந்நிதியிலிருந்து வெளியே வரும்போது இடப்பக்கம் ஒரு பொpய மண்டபம் இருக்கிறது. அங்குள்ள சிற்பங்கள் மிக மிக அழகானவை. அந்த சிற்பங்களை பார்த்துவிட்டு நீங்கள் பரவசப்படுவீர்கள். பிறகு அடிக்கடி இந்த கோயிலையும், சிற்பங்களையும் மனதில் நினைத்துக் கொள்வீர்கள்.

ஸ்ரீரங்கத்தைச் சுற்றி மிகப்பொpய வரலாற்றுக் கதைகள் இருக்கின்றன. அவைகளை இங்கு சொன்னால் இன்னும் விhpயும் என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். நண்பர்களே, ஒருமுறை ஸ்ரீரங்கம் போய்வாருங்கள்.

devapriya
15th December 2007, 09:11 AM
[tscii:47b7eef2ad]சுருட்டப் பள்ளி-அனந்த சயனத்தில் சிவன்

இந்துமதத்தின் நுழைவு வாயில், கோயில்கள்.

கோயில் வழியே புகுந்து, அனுஷ்டானங்கள் என்ற தேர் ஏறி, வேதசாரம் என்கிற பாதையின் வழியாக கடவுள் இருக்கும் கோட்டைக்குள் நுழைய வேண்டும்.

எல்லா மதங்களும் விதிமுறைகளை அடுக்கி வைத்திருப்பவைதான். ஆனால், இந்துமதம் விதிமுறைகளைச் சொல்வதோடு மட்டுமல்லாமல், தனிமையில் இருப்பதை, தன்னை உணர்வதை, தன்னை அறிவதன் மூலம் கடவுளை அறிவதை மிகமிக விளக்கமாகச் சொல்கிறது. இப்படித் தன்னை உணர்ந்த மனம், எவ்விதம் இருக்கும்? அந்த மனிதர் எப்படி இருப்பார்? அந்த மனிதர் எவ்விதம் வாழ்வார்? என்பதையெல்லாம், புராணக்கதைகள் மூலம் நமக்கு விளக்கிச் சொல்கிறது. அதுமட்டுமல்ல, நல்லதும், கெட்டதும் இணைபிரியாதவை. எப்போது நல்லது நடக்கிறதோ அப்போது அதில் ஒரு கெட்டதும் இருக்கும். எப்போது கெட்டது நடந்தாலும், அதில் ஒரு நல்லது நிச்சயம் தோன்றும் என்பதை உறுதிப்படுத்துவதுபோல, பாற்கடல் கடையப்பட்டபோது, நல்லதாக அமிர்தமும் கெடுதலாக ஆலகால விஷமும் வந்தன. நல்லதும் கெட்டதும் நாணயத்தின் இரு பக்கங்கள். ஒன்றின் மறுபாதியாய் நிற்பவைகள். உலகத்தைக் காப்பதற்காக அமிர்தம் வந்தபோது, உலகத்தை அழிப்பதற்காக ஆலகாலம் என்ற விஷமும் வந்தது. ஆனால், கடவுள் என்கிற கருணாமூர்த்தி, தானற்று ஜொலிக்கின்ற அந்த ஜோதி, இந்தப் பிரபஞ்சம் நெல்முனையளவும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக, அந்த ஆலகால விஷம் முழுவதையும் தான் வாங்கிக் கொண்டது. பெற்ற தாயினுக்குண்டான பரிவோடு இந்த விஷயம் செய்தது. என் குழந்தைக்கு விஷஜுரம். உயிர் பிழைத்தல் அரிது என்று சொன்னபோது, அந்த ஜுரம் எனக்கு வரட்டும். என் மகனுக்கு உயிர்ப்பிச்சை கொடு என்று இறைவனை நோக்கி வேண்டி, தான் பலியாகி தன் குழந்தையை பிழைக்க வைத்த தகப்பன்மார்கள் உலகத்தில் உண்டு. அதே விஷயம்தான், புராணக்கதையாய் சிவனின் லீலையாய் இங்கு சொல்லப்படுகிறது.

ஆலகாலம் உண்டு சிவன் படுத்துக் கொண்டிருக்கின்ற இடம், சுருட்டைப்பள்ளி என்று பாமர மக்கள் சொல்கிறார்கள். அனந்த சயனத்தில் சிவன் இருக்க, அருகே சர்வமங்களா என்கிற பார்வதி இருக்க, சுற்றிலும் தேவர்கள் நாரதர் உட்பட்டோர் குழுமியிருக்க, அந்த இடத்தில், அமைதியான கிராமத்தில் கோயில் எழும்பியிருக்கிறது. அதுதான், சுருட்டப்பள்ளி.

‘‘இது சுருட்டைப்பள்ளியும் அல்ல, சுருண்ட பள்ளியும் அல்ல. இது, சுரர் பள்ளி. அசுரர் என்றால், அரக்கர்கள். சுரர் என்றால், தேவர்கள். தேவர்கள் குழுமியிருக்கின்ற இடம்’’ என்று, இந்தக் கோவிலின் அர்ச்சகர் கார்த்திகேசன் விளக்கினார்.

இது, வால்மீகிக்கு சிவதரிசனம் கிடைத்த இடம் என்பதால், இங்குள்ள சிவனுக்கு வால்மீகீஸ்வரர் என்ற பெயர் இருக்கிறது. கருவறையின் வாசலில் சங்கநிதியும், பதுமநிதியும் தத்தம் மனைவியரான வசுந்தரா, வசந்தாவோடு எழுந்தருளியிருக்கிறார்கள். அம்பாளுக்கு, மரகத நாயகி என்று பெயர். அம்பாள் கருவறை வாசலில் கற்பக விருட்சமும், காமதேனுவும் இருக்கின்றன. நிரந்தரமான செல்வம் உடையவள் இந்த உமையம்மை என்பதை எடுத்துக்காட்டுவதுபோல, கேட்ட வரமெல்லாம் தருவாள் என்று சொல்வதுபோல, அங்கு கற்பக விருட்சம் இருக்கிறது.

இந்தக் கருவறையின் பக்கத்தில், சாஸ்தா, பூர்ண, புஷ்கலா என்கிற, தன் இரண்டு மனைவியரோடு எழுந்தருளியிருக்கிறார். கோவிலைச் சுற்றி வலம் வரும்போதும், வால்மீகியின் சிலையும் பைரவர் சிலையும் இருக்கின்றன. அங்கே, அற்புதமாக ஒரு தட்சிணாமூர்த்தி சிலை இருக்கிறது. தட்சிணாமூர்த்தி ரிஷபத்தின் மீது மிக கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். தட்சணாமூர்த்தியின் காலின் கீழ், முயலகன் இருக்கிறான்.

தட்சணாமூர்த்தியின் தோளை _ புஜத்தைப் பற்றியவாறு உமையம்மை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். இந்த உமைக்கு, கௌரி என்று பெயராம். புருஷனோடு இருக்கிற சந்தோஷம், அவள் முகத்தில் தெரிகிறது. பின்னால் மனைவி உறுதுணையாக இருக்கிறாள் என்கிற கம்பீரம், சிவன் முகத்தில் தெரிகிறது. மனமொத்த தம்பதியாக, இன்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம் என்கிற சிற்ப வடிவமாக, சிவன் அங்கு எழுந்தருளியிருக்கிறார். எந்த விதமான மனவேற்றுமையும் ஏற்படாமல் இருக்கவேண்டுமென்று, தம்பதிகள் வேண்டிக் கொள்ளும் இடமாக இந்த தட்சணாமூர்த்தியின் சன்னதி இருக்கிறது.

குழந்தை வேண்டும் என்ற வேண்டுதலை, ஆலம் உண்டு படுத்திருக்கிற சிவனுடைய சன்னதியில் வேண்டிக் கொள்வார்களாம். செல்வம் வேண்டும்; படிப்பு வேண்டும்; ஞானம் வேண்டும் என்றெல்லாம், மரகதநாயகியிடம் கேட்டுப் பெறலாமாம்.

மிகப்பெரிய ஆலமரமும். அதற்கு இணையாய் ஓர் அரசமரமும் கோவிலில் பெரும் நிழல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. சிறிய விமானங்களும், சுமாரான கோபுரங்களும் கொண்ட அற்புதமான கோயிலாக இந்த சுருட்டப்பள்ளி சிவன் கோவில் விளங்குகிறது.

சென்னையிலிருந்து ஊத்துக்கோட்டை வழியாக திருப்பதிக்குப் போகிற யாத்ரிகர்களும் இங்கே இறங்கி சுவாமி தரிசனம் செய்து கொண்டுதான் போகிறார்கள்.

ஆந்திர அரசாங்கத்தின் நிர்வாகத்தில் இருக்கின்ற கோயில். ஆனாலும், தமிழ்நாட்டிலிருந்துதான் அதிகம்பேர் வருகிறார்கள். இந்தக் கோவிலுக்கு, முன்பெல்லாம் மஹா பெரியவர் வந்து அடிக்கடி முகாமிடுவாராம்.

நல்ல குழந்தைகள் வேண்டுமென்பவரும், நல்ல யுவதியை திருமணம் செய்ய வேண்டுமென்பவரும், நல்ல கணவன் வேண்டுமென்று கோரிக்கை வைக்கின்ற யுவதிகளும், இந்த சுருட்டப்பள்ளிக்குப் போய் சிவ தரிசனம் செய்து வந்து, தொடர்ந்து பல பிரதோஷங்கள் வருவதாக வேண்டிக் கொண்டால் போதும், கேட்டவை நிச்சயம் நிறைவேறும் என்று, போய் வந்தோர் சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டின் எல்லையில் மிகச் சிறப்பாக இருக்கின்ற ஓர் அழகிய விஜயநகர சாம்ராஜ்யத்துக் கோவில், சுருட்டப்பள்ளி. ஒருமுறை போய்வாருங்கள்.

சென்னையிலிருந்து சுமார் 80 கிலோ மீட்டரிலுள்ள ஊத்துக் கோட்டையிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது, சுருட்டப் பள்ளி. [/tscii:47b7eef2ad]

pudhiyavan
29th December 2007, 01:27 AM
[tscii:4ac7fee76d]Hi, Devapriya,

Very interesting katturaikal from Balakumaran - especially on Rameswaram and Koneri Rajapuram.
Evvalvu kadhaikal pudhaindhu kidakkindrana indha punidha sthalangalukkulle ! I enjoy reading Balakumaran - especially his aanmika katturaikal (like Kaadhalaahi kanindhu´´ that came in Kumudam Bhakti. Yogi Ramsuratkumar avarkalai patri niraiya therindhukolla mudinthathu)

Lets share such interesting , revealing pieces of information from writers...[/tscii:4ac7fee76d]

Shakthiprabha.
28th February 2008, 10:52 AM
Devapriya, nice thread.

Anyone interested in his phisophy works, can read

"THOZHAN" novel.

The novel is based on sadhashivabrahmendraar biography.

It transports us to a diff plane.