PDA

View Full Version : new serials/programs



Pages : 1 2 3 4 5 [6] 7

aanaa
8th December 2012, 11:57 PM
சின்னத்திரைக்கு வரவிருக்கும் பிரகாஷ் ராஜ்




தனியார் தொலைகாட்சி நடத்தும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி சீசன் 2 வை நடிகர் பிரகாஷ்ராஜ் தொகுத்து வழங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


சினிமாவில் வில்லனாக நடித்து தனக்கென ரசிகர் வட்டத்தை பெற்றுள்ளவர் பிரகாஷ்ராஜ். சின்னத்திரை இவருக்கு புதிது அல்ல. சினிமாவில் அதிகமாக வாய்ப்பு கிடைக்கும் முன்பாக பாலச்சந்தரின் ‘கையளவு மனசு' தொடர்மூலம் நடித்து பிரபலமானார். பின்னர் விளம்பரங்களில் நடித்து சின்னத்திரையில் நடித்தவர். இப்போது மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் அடிஎடுத்து வைக்கப்போகிறாராம்.


தனியார் டிவியின் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி சீசன் 2' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகிறார் பிரகாஷ் ராஜ் என்று சின்னத்திரை வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.


‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' சீசன் 1 தொகுத்து வழங்கிய சூர்யாதான் 2வது சீசனை தொகுத்து வழங்கப்போவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. மாற்றான் படத்திற்குப் பிறகு சிங்கம்-2 படத்தில் பிஸியாகிவிட்டார் சூர்யா. ஆனாலும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்திற்காக அவருடன் பேசியுள்ளனர் தனியார் டிவி குழுவினர். நீங்களும் ஆனால் அதற்கு சூர்யா மறுத்துவிட்டாராம். தவிர்க்க முடியாத சில காரணங்களால் சூர்யா வேண்டாம் என்று கூறிவிட்டதால் தென்னிந்திய மொழிகளில் பாப்புலரான பிரகாஷ்ராஜை தேர்ந்தெடுத்துள்ளது தனியார் தொலைக்காட்சி.



நன்றி: தினகரன்

aanaa
14th December 2012, 07:42 PM
அத்திப்பூக்கள்
5 வருடத்தின் பின் முடிவுற்றது.

http://s17.postimage.org/wca2klba7/athip201.jpg






சன் டி.வி.யில் புதிய தொடர் வள்ளி




சென்னை : சன் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் ‘அத்திப்பூக்கள்’. வரும் 14,ம் தேதியுடன் இது முடிவடைகிறது.
இதையடுத்து அதே நேரத்தில் 17,ம் தேதி முதல் ‘வள்ளி’ என்ற தொடர் ஒளிபரப்பாகிறது. ஆர்.பி.மருது இயக்குகிறார். சரிகம இந்தியா நிறுவனம் தயாரிக்கிறது. உமா, ராம்ஜி, இந்திரஜா உட்பட பலர் நடிக்கின்றனர். பிழைக்க வந்த இடத்தில் வாழ்க்கையை தொலைத்துவிட்டு சொந்த ஊர் திரும்பும் சுப்பிரமணியும், வாழ்வின் இன்னல்களில் இருந்து விடுபட்டு அதே ஊருக்குச் செல்லும் வள்ளியும் பேருந்து பயணத்தில் சந்திக்கிறார்கள். இந்த சந்திப்பு இரண்டு பேர் வாழ்க்கையையும் புரட்டிப் போடுகிறது. எப்படி என்பது இதன் திரைக்கதை.

aanaa
24th December 2012, 05:44 AM
நாட்டிய கொண்டாட்டம்


ஜெயா டிவியில் ஞாயிறு தோறும் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நாட்டிய நிகழ்ச்சி, தக திமி தா. இந்தியாவின் சாஸ்திரிய நடன கலைக்கு தொலைக்காட்சியில் மிகப்பெரிய அங்கீகாரத்தை தேடித்தந்த தக திமி தா நிகழ்ச்சி, இனி வரும் வாரங்களில் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள சாஸ்திரிய நடனங்களை கொண்டாடுகிறது. கதகளி, மோகினியாட்டம், ஓடிசி, சிம்ம நந்தினி, குச்சிப்புடி போன்ற பல்வேறு வித்தியாசமான நாட்டிய விருந்தை வரும் வாரங்களில் ருசிக்கலாம். 450 வாரங்களை கடந்து தொடரும் இந்த நிகழ்ச்சி ராப்பா விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதது. இந்தியாவில் வெவ்வேறு நாட்டியக்கலைகளில் புகழ்பெற்ற நடனக் கலைஞர்கள் இதில் பங்கேற்கிறார்கள். தக திமிதா நாட்டிய கொண்டாட்டத்தை ஸ்ரீசித்ரா தொகுத்து வழங்குகிறார். கருத்து - வடிவமைப்பு மற்றும் இயக்கம்: ராதிகா சூரஜித். ஒருங்கிணைப்பு மற்றும் இணை இயக்கம்: சர்ச்சில் பாண்டியன்.

நன்றி: தினதந்தி

aanaa
24th December 2012, 05:48 AM
கார்த்திகைப் பெண்கள்


சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை பெண்கள் தொடர் சென்டிமென்ட், மர்மம், நகைச்சுவை என எல்லாத் தளங்களிலும் சரிவிகிதக் கலவையாய் அமைந்து விறுவிறுப்பின் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது. சொந்த தகப்பன் மற்றும் சகோதரனின் ஜாதிவெறிக்கு தன் கணவனை பறிகொடுத்த ஆர்த்திக்கு மீண்டும் சாருவே அடைக்கலம் தருகிறாள். மூர்த்தி பெரியவருக்கு ஆதரவாக மாறிவிடுகிறான். சாருவும் ஆர்த்தியும் கோர்ட்டில் வந்து சாட்சி சொல்வதை தடுப்பதற்காக அவர்களை கொல்ல பெரியவர் தனது ஆட்களை ஏவி விடுகிறார். சாருவும் ஆர்த்தியும் உயிர் பிழைப்பார்களா?


அம்மாவின் வற்புறுத்தலுக்காக சாருவின் ஹாஸ்டலை விட்டு வெளியேறிய செண்பகா, தன் மாமா வீட்டிலும் இருக்க முடியாமல் புது ஹாஸ்டலில் சேருகிறாள். அங்கு அவள் வாழ்க்கையை மாற்றப் போகும் ஒரு புதிய நபரை சந்திக்கிறாள். அது யார்? செண்பகாவும் பிரேமும் பழகுவதைக் கண்டு பொறாமைப்படும் பியூலா, அடுத்து என்ன செய்யப் போகிறாள்? பியூலாவை போனில் தொந்தரவு செய்யும் மர்ம மனிதன் யார்? கேள்விகள் அத்தனைக்கும் கார்த்திகைப் பெண்கள் தொடரின் அடுத்தடுத்த அத்தியாயங்களில் பதில் கிடைக்கும் என்கிறார், தொடரின் கிரியேட்டிவ் ஹெட் எம்.திருமுருகன். தொடருக்கான கதையை வடிவமைத்ததோடு, தொடரின்தயாரிப்பும் இவரே. திரைக்கதை வசனம்: பாஸ்கர் சக்தி. ஒளிப்பதிவு: சரத்சந்தர். படத்தொகுப்பு: பிரேம். இசை:சஞ்சீவ் ரத்தன். இயக்கம்: கவிதாபாரதி. தொடரின் கதை மாந்தர்களாக பானுச்சந்தர், ‘கல்கி’ சுருதி, ராஜேந்திரன், ஷீபா, செல்வராஜ், ஆனந்தி, நிமா, சுவேதா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
நன்றி: தினதந்தி

aanaa
24th December 2012, 05:49 AM
பாங்காக்கில் துளசி


ஜீ தமிழ் சேனலில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் துளசி தொடரின் படப்பிடிப்புக் குழு கதைக்காக பாங்காக் பறந்திருக்கிறது. பாங்காக்கின் கண்கவர் இடங்களில் படப்பிடிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. தன் ஆசைப்படி துளசியை திருமணம் செய்து கொண்ட பிரசன்னாவிற்கு மேலும் பல சோதனைகள் தொடர்கிறது. தான் விரும்பிய துளசி தன்னை விரும்பவில்லை என்பதே இதற்கு காரணம். தன்னைவிட அன்பையும், பாசத்தையும் செல்வாவிடமும், வக்கீல் வினோத்தின் குழந்தையிடமும் துளசி பாசமாக இருப்பது பிரசன்னாவிற்கு பிடிக்கவில்லை. தன் மீது மட்டுமே துளசி அன்பு காட்டவேண்டும் என்று நினைக்கிறான். தன் அக்காவின் சொற்படி துளசியை மற்றவர்களிடமிருந்து பிரித்து தனிமைப்படுத்த நினைக்கிறான். அதற்காக துளசி மறுத்தும் அவளை சம்மதிக்க வைத்து அவளை பாங்காக்கிற்கு அழைத்துச் செல்கிறான். காதல் கனவில் செல்லும் பிரசன்னாவிற்கு அவர்கள் போவதற்கு முன்பே அங்கு ஒரு பெரிய ஆபத்து காத்திருக்கிறது. துளசியை கூலிப்படையினர் மூலம் கொலை செய்ய கலைவாணியின் தந்தை திட்டமிடுகிறார்.


அதற்கு காரணம் பிரசன்னாவை விரும்பும் தன் மகள் கலைவாணியின் விருப்பத்தை நிறைவேற்ற இப்படி ஒரு கொலை முயற்சியில் ஈடுபடுகிறார். துளசி தன்னை புரிந்து கொண்டு தனிமையில் தன் காதலை உணர்ந்து இனி தன்னோடு சந்தோஷமாக வாழ்வாள் என்ற கனவோடு செல்லும் பிரசன்னாவை மேலும் பல அதிர்ச்சிகள் தொடர்கிறது. துளசி கடத்தப்படுகிறாள். இந்த உண்மை அறிந்து செல்வாவும் பாங்காக் செல்கிறான். துளசி இறந்து விட்டால் பிரசன்னா தனக்கு தான் என்ற சந்தோஷத்தோடு கலைவாணியும் பிரசன்னாவைத் தேடி பாங்காக் புறப்படுகிறான். துளசியை தேடிச்செல்லும் தன் கணவன் துளசியிடம் நெருக்கமாக இருந்து விடுவானோ என்ற பயத்தில் தாமரையும் பாங்காக் சென்று விடுகிறாள். கடத்தப்பட்ட துளசி இறந்து விட்டாள் என்ற செய்தி பிரசன்னாவிற்கு கிடைக்க, அவன் துடித்துப் போகிறான். காதலுக்காக வெளிநாடு சென்றவன், துளசியை இழந்த சோகத்தில் அழுகிறான். துளசியைப் போன்று பிரசன்னாவும் கடத்தப்படுகிறான்.


பிரசன்னாவின் நிலை என்ன? கலைவாணியின் எண்ணம் நிறைவேறியதா? துளசியை தேடிச்சென்ற செல்வா என்ன ஆனான்? அதிர்ச்சியான சம்பவங்களுடன் பாங்காக்கில் தொடர் தொடர்கிறது. ராஜ்பிரபுவின் திரைக்கதைக்கு பாபா கென்னடி வசனம் எழுத, இயக்கம்: பாலாஜி யாதவ்.
நன்றி: தினதந்தி

aanaa
24th December 2012, 05:54 AM
சன் டிவி, இளவரசி தொடரின் கதையில் புதிய திருப்பங்கள்


சன் டிவியில் ஒளிபரப்பாகும் இளவரசி தொடரின் கதையில் புதிய திருப்பங்கள் வரப்போவதாக தொடர் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ராடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இளவரசி தொடர் சன் தொலைக்காட்சியில் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. பல்வேறு சிக்கல்களை கடந்து 750 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகிவருகிறது. கணவன் மனைவியான நாயகன் சுப்பிரமணி, நாயகி இளவரசி வாழ்க்கையில் திருமணம் நடைபெற்றதில் இருந்தே பல சிக்கல்கள் உருவாகி வருகிறத. இப்போது குழந்தை பிறந்த பின்னரும் சிக்கல் நீடிக்கிறது. குழந்தையை யார் கடத்தியது என்பது தொடர்பாக கணவன் மனைவி இடையே பிரச்சினை உருவாகிறது. இப்போது இந்த தொடர் புதிய திருப்பங்களை சந்திக்க உள்ளதாம்.


கணவன் சுப்ரமணிதான் குழந்தையை கடத்தியது என்று தவறாக நினைக்கும் இளவரசி கணவனை விட்டுப் பிரிந்து தோழியின் வீட்டில் தஞ்சம் அடைகிறாள். தோழியின் கணவன் கார்த்திக் திட்டம் போட்டு இளவரசியை சுப்ரமணியிடம் இருந்து அவளை நிரந்தரமாக பிரித்துவிடுகிறான்.


கார்திக்கின் நாடகம் இளவரசிக்கு தெரியவருகிறது. இதனை கார்த்திக் மனைவி அபியும் தெரிந்து கொள்கிறாள். இதனையடுத்து இளவரசியின் நன்மையை கருதி அபி எடுக்கும் முடிவு அவளுக்கே பாதகமாக அமைகிறது.


இதனிடையே நண்பனின் உதவியோடு ஆட்டோ ஓட்டும் சுப்ரமணிக்கு கோடீஸ்வர பெண் ரம்யாவின் நட்பு கிடைக்கிறது. அவள் இளவரசிக்கும் சுப்ரமணிக்கும் இடையே குறுக்கிடுகிறாளா? அவளது பயணம் எதை நோக்கியது என்று திடுக்கிடும் திருப்பங்களுடன் இனி வரப்போகும் எபிசோடுகளில் காணலாம். இதில் இளவரசியாக சந்தோஷியும், சுப்ரமணியாக ஸ்ரீகர் நடித்திருக்கின்றனர். இயக்கம் எம்.கே. அருந்தவராஜா, கிரியேட்டிவ் ஹெட் ராதிகா சரத்குமார்.
நன்றி: தினகரன்

aanaa
29th December 2012, 05:56 AM
புகுந்த வீடு




திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புகுந்த வீடு தொடர் பரபரப்பான திருப்பங்களில் வேகம் பிடிக்கிறது.


தொடரின் கதைச்சுருக்கம் வருமாறு.


விசு காட்டிய போலி பத்திரத்தை நம்பி அவனை திருமணம் செய்து கொண்ட கொள்ளைக்காரி அனுஷா, விசுவின் நிரந்தர மனைவியாக விரும்பி ராதாவுக்கு பல இன்னல்களை விளைவிக்கிறாள். அதற்காக ராதாவின் புகுந்த வீட்டினரைக் கவர திட்டமிடுகிறாள். அதன் முதல் படியாக ராதாவின் குழந்தை ஸ்வேதாவை கவர நினைத்து தோற்கிறாள். இதனால் வெறி கொண்ட புலியாக அலையும் அனுஷா, விசுவின் அம்மா ராஜேஸ்வரியை திரும்ப அவளின் வீட்டிற்கே உளவாளியாக அனுப்புகிறாள். இந்நிலையில் அனுஷாவின் உளவாளியாக ராதாவின் அப்பளக் கம்பெனியில் சேரும் பெண், அங்கு முக்கிய பொறுப்பில் இருக்கும் முருகனைக் கவர்ந்து அதன் மூலம் ராதாவை பலமிழக்கச் செய்ய திட்டமிடுகிறாள்.


இதற்கிடையே வீடு திரும்பிய ராஜேஸ்வரியை யாரும் ஏற்க மறுத்து உதாசீனப்படுத்துகின்றனர். இருப்பினும் ராஜேஸ்வரி தன் காரியத்தில் குறியாக இருக்கிறாள். விசுவும் அனுஷாவின் அம்மா, அப்பா ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்று நினைத்து, அவர்களிடம் செய்த சபதத்தை முடிக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபடுகிறான். இவை அனைத்தையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தும் ஜெய்குமாரின் எண்ணம் நிறைவேறியதா...? அப்பளக் கம்பெனியில் வேலைக்குச் சேரும் அனுஷாவின் உளவாளிப்பெண், முருகனின் மனதைக் கவர்ந்தாளா? ராஜேஸ்வரியின் கபடம் வெளிப்பட்டதா? பரபரப்பான வினாக்களுடன் தொடர்கிறது ‘புகுந்த வீடு தொடர்.
நன்றி: தினதந்தி

aanaa
29th December 2012, 05:58 AM
நட்சத்திரங்கள் மோதும் புத்தாண்டு சிறப்பு ஜாக்பாட்




ஜெயா டிவியில் ஞாயிறுதோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘ஜாக்பாட் நிகழ்ச்சி, புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ஜாக்பாட்டாக களை கட்டுகிறது. நாளை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சிறப்பு ஜாக்பாட் நிகழ்ச்சியில், சின்னத்திரை நட்சத்திரங்கள் இரு அணிகளாக மோதுகிறார்கள். ஒரு அணியில் சதிஷ், மகாலட்சுமி. பாரதி மற்றும் விக்னேஷ் மற்றொரு அணியில் சாக்ஷி சிவா, காவ்யா, உதய் மற்றும் வெற்றிவேலன் பங்கேற்கிறார்கள். நடிகை சிம்ரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். இந்த சிறப்பு நிகழ்ச்சியில் எந்த அணி ஜாக்பாட்டை வெல்லப் போகிறது என்பது அன்றே தெரிந்து விடும்.
நன்றி: தினதந்தி

aanaa
29th December 2012, 05:59 AM
‘இனி ஒரு விதி செய்வோம்’


வசந்த் தொலைக்காட்சியில் விரைவில் ஒளி பரப்பாகவிருக்கும் ‘இனி ஒரு விதி செய்வோம்’ நிகழ்ச்சியை நடிகை கஸ்தூரி தொகுத்து வழங்குகிறார். பள்ளிக்கூட மாணவர்களின் ஆடல், பாடல், நடிப்பு, பேச்சு போன்ற தனி திறமைகளையும் பொது அறிவு, சமூகம், மற்றும் கல்விசூழல் தொடர்பான விழிப்புணர்வையும் வெளிப்படுத்தும் களமே இந்த நிகழ்ச்சி. பல்வேறு திறமைகளை உள்ளடக்கிய மாணவர்களைக் கொண்ட பள்ளிக் கூடங்களுக்கு நிகழ்ச்சி குழுவினர் நேரடியாக சென்று மாணவர்களை தேர்வு செய்கிறார்கள். நான்கு சுற்றுகளாக நடக்கும் இந்த நிகழ்ச்சியில் இறுதிச் சுற்றான விவாத மேடையில் மாணவர்களோடு பெற்றோர்களும், ஆசிரியர்களும் பங்கு கொள்கிறார்கள் கலகலப்பும் விறுவிறுப்பும் நிறைந்த இந்த நிகழ்ச்சியை நடிகை கஸ்தூரி வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக திரைத்துறை, கல்வித்துறை, அறிவியல் தொழில் நுட்பத்துறை போன்றவற்றில் பிரபலமானவர்கள் மற்றும் வெற்றியாளர்கள் பங்கு கொள்கிறார்கள். மாணவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தரும் இந்த நிகழ்ச்சியை கி.முத்துகுமார் இயக்குகிறார்.
நன்றி: தினதந்தி

aanaa
29th December 2012, 06:02 AM
சன் குடும்பம் விருதுகள் வழங்கும் விழா

http://cinema.dinakaran.com/cinema/gallery/Television-new-118.jpg


சென்னை : இந்த ஆண்டுக்கான சன் குடும்பம் விருதுகள் வழங்கும் விழா, சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில், நேற்று முன்தினம் மிகப் பிரமாண்டமான முறையில் நடந்தது. இது முழுக்க, முழுக்க பெண்களை கவுரவிக்கும் விழாவாக நடத்தப்பட்டது. சன் டி.வியில் நாள்தோறும் காலை முதல் இரவு வரை ஒளிபரப்பாகி வரும் தொடர்கள், மக்கள் மத்தியில் அமோக வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளன. இத்தொடர்களில் நடித்த சிறந்த கலைஞர்கள் மற்றும் பணியாற்றிய சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்து, அவர்களை கவுரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், சன் டி.வியுடன் நீண்ட நாட்களாகப் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.


அதன் விவரம் வருமாறு: வாழ்நாள் சாதனையாளர் விருது: டெல்லி குமார். நீண்ட நாட்களாக சன் குடும்பத்தில் இருந்ததற்கான விருது: ராதிகா சரத்குமார்.
மற்றும் விகடன் டெலிவிஸ்டாஸ் பா.சீனிவாசன், விஷன் டைம்ஸ் ராமமூர்த்தி, அபிநயா கிரியேஷன்ஸ் ஜி.கிருஷ்ணமுர்த்தி, சினி டைம்ஸ் சவுந்தர்ராஜன், ஷான் மீடியா கபிலன், சரிகம பி.ஆர்.விஜயலட்சுமி, ஹோம் மீடியா சுஜாதா விஜயகுமார், யுடிவி சந்தோஷ் நாயர், திரு பிக்சர்ஸ் திருமுருகன், நிம்பஸ் குமார்.


நீண்ட நாட்களாக டி.வி தொடரின் நேரத்தை தக்கவைத்துக் கொண்டதற்கான விருது: ராதிகா சரத்குமார்.
சிறந்த நடிகை சிறப்பு விருது: ரம்யா கிருஷ்ணன் (தங்கம்).
கதாநாயகன்: திருமுருகன் (நாதஸ்வரம்).
கதாநாயகி: அபிதா (திருமதி செல்வம்).
இயக்குனர்: எஸ்.குமரன் (தென்றல்).
தொடர்: ‘திருமதி செல்வம்’.
மாமனார், மாமியார்: மகாநதி சங்கர் (நாதஸ்வரம்), வடிவுக்கரசி (திருமதி செல்வம்).
மருமகன், மருமகள்: சதீஷ் (அத்திப்பூக்கள்), ஸ்ரித்திகா (நாதஸ்வரம்).
பொருத்தமான ஜோடி: தீபக், ஸ்ருதி (தென்றல்).
ஒளிப்பதிவாளர்: வசீகரன் (செல்லமே).
எடிட்டர்: கணேஷ் (செல்லமே).
டப்பிங் கலைஞர்கள்: சங்கர் (செல்லமே), ஜெயவித்யா (தங்கம்).
பெண்மையை உயர்த்தும் கவுரவ விருது: தேவயானி (முத்தாரம்).
சகோதரர், சகோதரி: ராதாரவி (செல்லமே), அனுராதா (தங்கம்).
தாய், தந்தை: விஜி சந்திரசேகர் (அழகி), மவுலி (நாதஸ்வரம்).
பின்னணி இசை: கிரண் (உதிரிப்பூக்கள்).
திரைக்கதை: அமிர்தராஜ், அமல்ராஜ் (திருமதி செல்வம்).
வசனகர்த்தா: வாசு பாரதி (நாதஸ்வரம்).
நகைச்சுவை நடிகர், நடிகை: முனீஸ்ராஜ் (நாதஸ்வரம்), காவேரி (தங்கம்).
வில்லன், வில்லி: பாலாசிங் (முத்தாரம்), ராணி (அத்திப்பூக்கள்).
துணை நடிகர், நடிகை: பொள்ளாச்சி பாபு (தங்கம்), சந்தியா (அத்திப்பூக்கள்).

விழாவில் நடிகைகள் லட்சுமி ராய், ஆண்ட்ரியா, ஓவியா, பிரணீதா, மதுஷாலினி, பிந்து மாதவி, அனுயா ஆகியோருடன் டி.வி நடிகர்கள் ஸ்ரீ, சஞ்சீவ், தேவ், வெங்கட் ஆகியோர் இணைந்து ஆடினர்.
நிகழ்ச்சிகளை தீபக், ஐஸ்வர்யா, மனோபாலா, தேவதர்ஷினி ஆகியோர் தொகுத்து வழங்கினர். இடையிடையே மதுரை முத்து, இமான் அண்ணாச்சி தோன்றி காமெடி நிகழ்ச்சி நடத்தினர்.
தமிழ்த் திரையுலக நட்சத்திரங்கள், இயக்கு னர்கள், டி.வி கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் பெருமளவில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
நன்றி: தினகரன்

aanaa
5th January 2013, 09:10 PM
மகள் கலைவாணியைத் தேடித்தவிக்கும் தாமரை

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் ... ஒளிபரப்பாகி வரும் வெள்ளைத்தாமரை தொடர், 225 எபிசோடுகளை கடந்து, பரபரப்பான திருப்புமுனை காட்சிகளுடன் தொடர்கிறது. தாமரை தனது மூத்த குழந்தை இறந்து விட்டதாகத்தான் நினைத்துக் கொண்டிருந்தாள். அவள் அப்பா சூரியமூர்த்தி அந்த அளவுக்கு தனது நடிப்பால் மகளை நம்ப வைத்துக் கொண்டிருந்தார். ஆனால் இப்போது தனது மகள் உயிரோடு தான் இருக்கிறாள் என்ற உண்மை தெரிய வர, அதிர்ந்தே போகிறாள். தன்னை உயிருக்குயிராய் நேசித்த ரவி, தன்னை ஏமாற்றி விட்டுப் போய்விட்டதாகத் தான் தந்தை மூலம் அவள் நம்ப வைக்கப்பட்டிருந்தாள். ஆனால் தன் காதல் கணவன் கொலை செய்யப்பட்ட தகவலும் இப்போது அவளை வந்து சேர, அதிர்ச்சியின் உச்சியில் இப்போது தாமரை.


அப்படியானால் ரவியை கொலை செய்தது யார்? தனது மகள் எங்கே இருக்கிறாள்? கண்டு பிடிக்கத் துடிக்கிறாள்.


தாமரை தேடும் மகள் கலைவாணியோ தனது அப்பா ரவியின் பெற்றோருடன் இருந்து வருகிறாள். கலைவாணியை ஏற்கனவே தாமரை அறிவாள். ஆனால் அவள் தான், தான் இன்னமும் தேடிக்கொண்டிருக்கும் தனது மகள் என்று இதுவரை அவள் அறிந்திருக்கவில்லை. தன் மகள் தாமரையை விரும்பிய ஒரே காரணத்துக்காக ரவியை கொலை செய்த தாமரையின் அப்பா சூரியமூர்த்திக்கு, ரவி மூலம் தன் மகளுக்குப் பிறந்த பெண் இன்னும் உயிரோடு இருப்பது தெரிய வருகிறது. துப்பறிந்து கலைவாணி தான் அந்தப் பெண் என்பதை கண்டுபிடித்து விட்டாரானால் அவரது அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?


சென்னையில் கணேசன் வைத்திருக்கும் ஸ்வீட் ஸ்டாலில் நல்லபடியாக வியாபாரம் நடக்கிறது. அவன் இத்தனை பரபரப்பிலும் ரவி கொலையில் சம்பந்தப்பட்ட 4 பேரை தனது கஸ்டடியில் மறைத்து வைத்து விசாரித்து வருகிறான். சூரிய மூர்த்தியின் அண்ணன் மகனான இவன் தான் ரவி கொலையை நேரில் பார்த்தவன். அப்போது சிறுவன் கதிராக இருந்து கொலையை பார்த்த பயத்தில் ஓடிஒளிந்த கதிர் தான், இப்போது கணேசன். சூரியமூர்த்தியை உரிய ஆதாரங்களுடன் போலீசில் சிக்க வைக்க வேண்டும். அதன்பிறகே பெற்றோர் முன் தன்னை இன்னார் என்று வெளிப்படுத்த வேண்டும் என்பது அவன் லட்சியம்.


உண்மையான கதிர் இப்படி கணேசன் வேஷத்தில் ஒளிந்து கொண்டிருக்க, அதைப் பயன்படுத்தி நான்தான் கதிர் என்று கதிரின் பெற்றோர் தங்கராஜ்-கமலாவை நம்ப வைக்கிறான், ஒரு இளைஞன். அவன் போலி என்று தெரியவரும்போது கதிரின் பெற்றோர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்?


இன்ஸ்பெக்டர் அன்புமணி காணாமல் போன தன் அம்மாவை தேடி கண்டு பிடிக்கிறார். அதன்பிறகே தன் அப்பாவை பற்றிய அதிர்ச்சி உண்மை வெளிவருகிறது. இப்போது அவர் எடுக்கும் நடவடிக்கை என்னவாக இருக்கும்?


எதிர்பாராத திருப்பங்களில் பயணிக்கும் இந்த தொடரின் நட்சத்திரங்கள் வருமாறு: அபிஷேக், புஷ்பலதா, நெப்போலியன், தர்ஷினி, நித்யா ரவீந்தர், சங்கீதா, ஷோபனா, தனுஷ்.


இசை: சத்யா. கேமிரா: பார்த்திபன். கதை, திரைக்கதை: ஜே.கே. வசனம்: ஆர்.எஸ்.பாலமுருகன். இயக்கம்: மணிபாரதி. தயாரிப்பு: அபிநயா கிரியேஷன்ஸ் சார்பில் ராதா கிருஷ்ணசாமி.
நன்றி: தினதந்தி

aanaa
5th January 2013, 09:15 PM
வையாபுரி நடிப்பில் வாரம் ஒரு கதை


வசந்த் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் இரவு 7.30 மணிக்கு வையாபுரி நடிக்கும் காமெடி நாடகங்கள் ஒளிபரப்பாகின்றன. வாரம் ஒரு கதையான இந்த நாடகத்தில் நாளை ஒளிப்பாகவிருக்கும் நாடகம், என் கவுண்டர் ஏகாம்பரம். காமெடி பின்னணியோடு கலகலப்பாக போகும் இந்த நாடகம், சமூக விழிப்புணர்வையும் உள்ளடக்கியது. தொடர்ந்து வரும் வாரங்களில் எமதர்மன் எம்.பி.பி.எஸ், அல்வா ஆறுமுகம், மாண்புமிகு மாமியார் என வையாபுரியின் காமெடி நாடகங்கள் தொடர்கின்றன. எழுத்து, இயக்கம்: ஜெயமணி. நடிகர் வையாபுரி வசந்த் தொலைக்காட்சி சார்பில் சின்னத்திரை நேயர்களின் வீடுகளுக்கும் மாறுவேடத்தில் திடீர் விஜயம் செய்கிறார். தன்னை சட்டென அடையாளம் கண்டு கொள்கிறவர்களுக்கு பரிசும் வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிகளும் வசந்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றன.
நன்றி: தினதந்தி

aanaa
5th January 2013, 09:16 PM
பொங்கல் கொண்டாட்டம்


250 வாரங்களைக்கடந்து ஞாயிறு தோறும் கலைஞர் தொலைக்காட்சியில் இரவு 7.45-க்கு ஒளிபரப்பாகி வரும் “மானாட மயிலாட” நிகழ்ச்சி. பொங்கல் திருநாளன்று நவரச நடன நிகழ்ச்சி ஒன்றினை வடிவமைத்துள்ளது. செட்டிநாட்டு கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வண்ண உடையணிந்து செட்டிநாட்டு பணியாரம் முதல் வெண்பொங்கல் வரை சமைத்து ஆடிப்பாடி பொங்கலைக் கொண்டாடுவதாக உள்ளது இந்த நிகழ்ச்சி. நடிகை குஷ்பு, நடிகர் பிரசாந்த் நடுவர்களாகப் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியை கலைஞர் தொலைக்காட்சிக்காக நடன இயக்குனர் கலா இயக்கி தயாரித்து வழங்குகிறார்.
நன்றி: தினதந்தி

aanaa
15th January 2013, 06:05 AM
சன் குடும்பம் விருதுகள் 2012 (http://www.usertube.com/sun-kudumbam-virudhugal-2012/sun-kudumbam-virudhugal-2012-13-01-2013-video_1e79c6d26.html)

aanaa
19th January 2013, 06:48 AM
January 21- 2013




http://www.youtube.com/watch?feature=player_embedded&v=stHp5eeS8mI




http://www.youtube.com/watch?feature=player_embedded&v=K2bduOHoL8c





Twin sister’s Vani and Rani get married to an elder and younger brother of the same family respectively.(Radhika Sarathkumar)


Twin sister’s Vani and Rani get married to an elder and younger brother of the same family respectively.(Radhika Sarathkumar)


Vani the elder one is a well read attorney and the younger one Rani is a failure in education with not even going beyond 10th class. Though both have extreme ideologies of life Rani is a favorite among neighbors with her uncanny innocent approach.
Vani is a roaring lion at the court room who is looked up as a role model to so many upcoming lawyers for her advocating abilities, whereas Rani is a well versed home maker.
Not only with the sisters remain with this extremity but even their respective husbands share the same dose of luck….yes vani’s husband is a successful Granite businessman and Rani’s husband tried his hands on so many fields and has burnt his fingers with many a losses.


Vani is a mother of 2 children and Rani has three children who are in their teens. Volcanoes of persistent problem erupts now and then between the children too since each of them pertaining to different thought process indulge in living together under one roof as a nuclear family. Their comes a stage when it becomes so difficult to keep the family values intact between the varied problems which keeps cropping making the situation even more complex.


In the meantime Vani looses a case at the court for the very first time to a debutant advocate Sneha who has always admired and adored Vani for her abilities and aspired to be like her.


Not able to bear the loss Vani comes with a sinister plan to make sneha her daughter in law and by which means she can get her share of revenge .When asked if she would get married to Vani’s son Sneha considers this as a golden opportunity get in to the family of her idol and she nods by saying yes thinking that she can grow much higher professionally.


Sneha is shattered when Vani asks for a vow….. Yes the Lioness of court room orders Sneha not to ever wear that black coat and enter court house.
As time moves on Sneha initiates her husband to take up law and encourages him to become a professional in the law arena and to bring him against her idol Vani. The cold War between the two Vani and Sneha also intensifies the existing problems inside and outside the family.


Will Peace ever come back in this family ?
Will anyone give up their Ego for the betterment of the family ?
Can time play a role and turn events in favor of them ?

aanaa
19th January 2013, 07:13 AM
14-Sep-2009 ---- Jan 18, 2013


http://img690.imageshack.us/img690/751/chellame201.jpg (http://imageshack.us/photo/my-images/690/chellame201.jpg/)

aanaa
22nd January 2013, 12:16 AM
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=zP18Jkwx6LU



சன் டி.வி.யில் புதிய தொடர் : வாணி ராணி

சென்னை: புதிய மெகா தொடரான ‘வாணி ராணி’ சன் டி.வி.யில் இன்று இரவு முதல் ஒளிபரப்பாகிறது. ராதிகா சரத்குமார் நடித்து வெளிவந்த ‘செல்லமே’ தொடர் கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது. இதையடுத்து அந்தத் தொடர் ஒளிபரப்பான இரவு 9.30 மணிக்கு ‘வாணி ராணி’ என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை ஒளிபரப்பாகும் இத்தொடரில் ராதிகா சரத்குமார் வாணியாகவும் ராணியாகவும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். மற்றும் வேணு அரவிந்த், பப்லு, ரவிகுமார், புவனா, அருண், பேபி நேஹா உட்பட பலர் நடிக்கின்றனர். அன்றாடம் பல வீடுகளில் நடக்கும் யதார்த்தமான குடும்ப சண்டைகளும் சுவாரஸ்யங்களுமே இத்தொடரின் கதைகளம். வசனம், பா.ராகவன். திரைக்கதை, குமரேசன், ஒளிப்பதிவு காசிநாதன், இயக்கம், ஓ.என்.ரத்னம்.



வாணி ராணி மெகா தொடரில் ராதிகாவுக்கு ஜோடியானார் சின்னத் திரை நடிகர் பப்லு. ராதிகா சரத்குமார் தனது ராடான் மீடியா ஒர்க்ஸ் சார்பில் தயாரிக்கும் புதிய மெகா தொடர் வாணி ராணி. திறமையான வக்கீல் வாணி, அப்பாவி தங்கை ராணி என இரட்டை வேடங்களில் நடிக்கிறார் ராதிகா. வாணியும் ராணியும் பூமிநாதன், சாமிநாதன் என இரட்டையர்களுக்கு வாழ்க்கைப்படுகிறார்கள். இவர்களில் வாணி மிகவும் புத்திசாலி, நன்கு படித்தவள், ராணியோ படிக்காதவள் என்றாலும் குடும்பத்தை நிர்வகிப்பதில் படு கெட்டிக்காரி. ஒற்றுமையாக இருக்கும் இந்த கூட்டுக்குடும்பம் ஒரு நாள் உடைகிறது. ஏன் இந்த விரிசல், எப்படி ஒற்றுமையானார்கள்? என்பதுதான் வாணி ராணியின் கதைச் சுருக்கம். ராதிகாவுக்கு ஜோடியாக வேணு அர்விந்த், பப்லு நடிக்கின்றனர். ரவிகுமார், புவனா, அருண் என ராதிகாவின் வழக்கமான ஆர்டிஸ்ட்களும் உண்டு. ஓ என் ரத்னம் இயக்குகிறார். தொடரின் கிரியேட்டிவ் ஹெட்டாக ராதிகா பணியாற்றுகிறார். சன் டிவியில்



திங்கள் முதல்வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் வாணிராணி. நடிகை ராதிகா இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த தொடரில் வேணு அரவிந்த், பப்லு, ரவிகுமார், புவனா, அருண், விக்கி, சதீப், நிகிலா ராவ், பேபி நேஹா ஆகியோர் சக நட்சத்திரங்கள். அன்றாடம் பல வீடுகளில் நடக்கும் யதார்த்தமான குடும்பச்சண்டைகளும், சுவாரஸ்யங்களுமே தொடரின் கதைக்களம். சாமிநாதன்-பூமிநாதன் இருவரும் அண்ணன் தம்பிகள். இவர்கள் அக்கா-தங்கையான வாணி- ராணியை மணந்து கொள்கிறார்கள். சகோதரிகள் இருவருக்கும் புகுந்த வீட்டில் நிகழும் சிக்கலே கதை. ஒளிப்பதிவு: காசிநாதன். கதை: ராடன் மீடியா. திரைக்கதை: குமரேசன். வசனம்:பா.ராகவன். இயக்கம்: ஓ.என்.ரத்னம். ஆக்கத்தலைமை: ராதிகா சரத்குமார்.




வாணி ராணியில் கலக்கும் ராதிகா




சன் தொலைக்காட்சியில் ‘வாணி ராணி' புதிய தொடர் ஆரம்பமாகியுள்ளது. இதுவரை 6 எபிசோடுகள் முடிந்துள்ளன. சீரியல் நல்லா இருக்கே. இப்பதான் பழைய ராதிகாவை பாக்க முடியுது என்ற பேச்சு எழுந்துள்ளது. இந்த தொடரில் இரட்டை வேடத்தில் அக்கா தங்கையாக நடித்துள்ளார் ராதிகா. போல்டான கேரக்டரில் வாணியாகவும், வெகுளியான கதாபாத்திரத்தில் ராணியாகவும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்துகிறார். ராதிகாவின் வெகுளித்தனமான நடிப்பு ஒரு சில ரசிகர்களுக்கு பிடிக்கும் என்றால் அவரின் போல்டான கேரக்டர் பெருவாரியான ரசிகர்களுக்கு பிடிக்கும். இந்த தொடரில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் சீரியலை கொண்டு செல்கிறார்.


வேணு அரவிந்த், பப்லு அண்ணன் தம்பிகள். அவர்களின் மனைவிகளாக வாணி, ராணி. வாணிக்கு இரண்டு பையன்கள். தங்கை ராணிக்கு இரண்டு பெண் ஒரு பையன். கூட்டுக்குடும்ப வாழ்க்கையை அழகாக எடுத்துக்காட்டும் தொடர். இதில் அக்கா தங்கை பாசத்தை மையப்படுத்தியிருக்கிறார் ராதிகா. அண்ணன் வேணு அரவிந்துக்கு தம்பி பப்லு மீது அவ்வளவாக பிடிப்பு இல்லைதான் என்றாலும் அக்கா தங்கைகளின் பாசத்தில் ஒரு ஒட்டுதல் இருக்கிறது.


அக்கா தங்கச்சிங்க அண்ணன் தம்பிகளை கட்டிக்கிட்டா கூட்டு குடும்பமாகத்தான் இருக்கணுமா என்று மகள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லும் ராணி, தனியாக இருக்கும் பொரியலை விட கூட்டாக குழைந்து இருக்கும் காய்க்குதான் ருசி அதிகம் என்று கூறி அப்ளாஸ் வாங்குகிறார்.


கூட்டுக்குடும்பத்தில் நடக்கும் சின்னச் சின்ன பிரச்சினைகள், இதிலும் உண்டு. அதையும் சமாளித்து சந்தோசமாக குடும்பத்தை நடத்தும் இல்லத்தரசியாக ராணி மிளிர்கிறார்.


வழக்கறிஞராக வரும் வாணி, தன் குடும்பத்தில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் எப்படி இருக்கவேண்டும் என்பதை கம்பீரமாக உணர்த்துகிறார். தவறு செய்வது கணவனாகவே இருந்தாலும் அதை தட்டிக் கேட்கத் தயங்குவதில்லை.

aanaa
22nd January 2013, 03:25 AM
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் டி-20 வின்னர் யார்?

விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் டி-20 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி வரும் திங்கட்கிழமை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சீனியர் முதல் ஜூனியர் வரை அனைவரும் சேர்ந்து போட்டியிட்டனர். மொத்தம் ஆறு டீம்கள் போட்டியிட்டனர். இறுதிப் போட்டியில் களம் காணப்போவது பூஜாவின் ஹார்மொனி ஹார்ட் பிரேக்கர்ஸ், சாய்சரணின் சிம்பொனி சூப்பர் கிங்ஸ் டீம். பூஜாவின் டீமில் ஷ்ரவன், தீபக், அகிலேஷ், ஸ்ரீகாந்த், மது.ஆர், ஸ்ரீஷா இடம் பெற்றுள்ளனர். சாய்சரண் டீமில் மாளவிகா, நித்யஸ்ரீ, பிரவீன், சுகன்யா, சந்தோஷ் பாலாஜி, ஜூனியர் மதுமிதா இடம் பெற்றுள்ளனர். இறுதிச்சுற்று டைம் டிராவல் சுற்றாகும். போட்டியாளர்கள் 1960-ம் ஆண்டில் இருந்து தற்போதுள்ள பாடல்கள் வரை தேர்வு செய்து பாட வேண்டும். இதில் எந்த டீம் வெற்றி பெறப்போகிறது என்பதை தீர்மானிக்க தமிழ் திரையுலகின் இசைத்துறையிலிருந்து நவரத்தினங்கள் நடுவர்களாக வரவிருக்கின்றனர்.
நன்றி: தினதந்தி

aanaa
22nd January 2013, 03:30 AM
இறுதிப் போட்டியில் லிட்டில் மாஸ்டர்ஸ்-சீசன்-4




ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் லிட்டில் மாஸ்டர்ஸ் நிகழ்ச்சி, தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக குருகுலம் முறையை பயன்படுத்திய பெருமைக்குரியது. நிகழ்ச்சியில் ஆறு மாதங்களாக பல வியப்பூட்டும் நடனங் களால் கொள்ளை கொண்ட குழந்தைகளில், ‘லிட்டில் மாஸ்டர்ஸ்’ பட்டத்தை யார் வெல்லப் போகிறார்கள்? சுப்பன்ராஜ், நவீன் ஆதித்யா, கரன், ஐஸ்வர்யா, தேஜஸ், சயேத் கபீர் என்று ஆறு குழந்தைகள் போட்டியிடப்போகும் இறுதிப் போட்டி இன்று சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் அரங்கத்தில் நடக்க இருக்கிறது. பிரபல நடன இயக்குனர் ரகுராம், மற்றும் நடிகை மும்தாஜ் முன்னிலையில் பட்டம் வெல்லப் போவது யார்? ஜெயா டிவியில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி, போட்டியாளர்களிடையே மட்டுமின்றி, பார்வையாளர்களுக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நன்றி: தினதந்தி

aanaa
22nd January 2013, 03:31 AM
மகனைக் காப்பாற்ற தாயின் போராட்டம்!


சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அழகி தொடர், பரபரப்பான கதைத்திருப்பங்களில் வேகம் பிடிக்கிறது. நடிகை விஜி துடிப்பான அம்மா சுந்தரியாக வரும் இந்த தொடரின் கதையும் காட்சியமைப்பும் இதயத்துடிப்பை நாடி பிடித்துப் பார்த்து விடுகிறது. கணவனை இழந்தாலும் தைரிய புருஷியாக இருந்து வீட்டு வேலை செய்தபடி தன் 3 பிள்ளைகளையும் வளர்க்கிறாள் சுந்தரி. கணவரின் தம்பி இப்போது இவர்கள் குடும்பத்துக்கே வில்லன். அண்ணனின் தொழிலை ஆக்கிரமித்துக் கொள்வதோடு, லட்சக்கணக்கான அவர்கள் சொத்தையும் அவர்கள் அனுபவிக்க முடியாதபடி செக் வைக்கிறான். எப்படியும் அண்ணி தன் பிள்ளைகளுடன் நம்மிடம் தானே சரணாகதி அடைந்தாக வேண்டும். நாமாக பார்த்து பிச்சை போடுகிற மாதிரி எதையாவது செய்தால் போயிற்று என்பது அவன் எண்ணம். ஆனால் அண்ணி சுந்தரியோ பிடிவாதமாய் கொழுந்தனின் நரிக்கோட்டைக்குள் வர மறுக்க, அடுத்தடுத்த சோதனைகள் கொழுந்தன் மூலம் ஆரம்பம். இப்போதைய சோதனை, தன் மகன் நடராஜ் நடத்தும் கம்பெனியில் வேலை பார்த்த ஒரு பையன் தீவிபத்தில் செத்துப்போக, 5 லட்சம் இருந்தால் பிரச்சினை முடியும். ஆனால் 5 லட்சத்துக்கு சுந்தரி எங்கே போவாள்? எப்படியும் தன்னிடம் தான் வர வேண்டும் என்று கொழுந்தன் எண்ணுகிறான். அதற் காக திட்டமிட்டு இந்த விபத்தை ஏற்படுத்தியதே அவன் தானே! ஆனால் சுந்தரியோ எப்படியாவது பணம் புரட்டி மகனை மீட்க போராடுகிறாள். அவளால் பணம் புரட்ட முடிந்ததா? மகனை அந்த சிக்கலில் இருந்து மீட்டாளா என்பது அடுத்து வரும் பரபர காட்சிகள். சுந்தரியாக விஜியும், கொடுமைக்கார கொழுந்தனாக இளவரசனும் நடிக்கிறார்கள்.
நன்றி: தினதந்தி

aanaa
22nd January 2013, 03:37 AM
நாளுக்கு நாள் மெருகேறும் பொம்மலாட்டம்




பொம்மலாட்டம் தொடர் தற்போது போகும் பாதையைப் பார்க்கும்போது கே.பாலச்சந்தர் படத்தைப் பார்ப்பது போல இருக்கிறது - அந்த அளவுக்கு அழுத்தமான, ஆழமான வசனங்கள், அழகான காட்சிகள் ஈர்க்க வைத்து வருகின்றன.


சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பொம்மலாட்டம். ஆரம்பத்தில் இந்த தொடர் ஒளிபரப்பானபோது முகம் சுளிக்க வகையிலான காட்சிகள் அதிகம் இருப்பதாகவும், ரொமான்ஸ் அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது சீரியல் வித்தியாசமான டிராக்கில் மாறிப் பயணிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக கதிர் -பாரதியின் காதல் எபிசோட்.. எவ்வளவு அழகான வசனங்கள், சின்னச் சின்ன காட்சியமைப்புகள்.. பார்க்கவே படு ப்யூட்டியாக இருக்கிறது இந்தக் காட்சிகள். கதிர் வேடத்தில் வரும் அப்சரின் நடிப்பு படு க்யூட்... தனது அனுபவத்தை அப்படியே கொட்டி அழகாக நடித்து வருகிறார் அப்சர். அவர் பேசும் வசனங்களை ஆழமாக நேசித்து ரசி்க்க முடிகிறது. காதலை அவர் வெளிப்படுத்தும் விதம், காதலி தன் மீது காட்டும் பரிவு பாசம் காதலை அவர் ரசிக்கும் விதம், காதலிக்கு தேவையான அறிவுரைகளைக் கூறும்போது காட்டும் பக்குவம், பொறுப்பான பேச்சு, தெளிவான செயல்பாடுகள்.. சூப்பர்ப் அப்சர்.


பாரதி மட்டும் சும்மாவா என்ன.. தனது காதலனை எப்படியெல்லாம் தைரியமூட்ட முடியுமோ, எப்படியெல்லாம் நம்பிக்கை தர முடியுமோ.. அதையெல்லாம் செய்து இப்படி ஒரு காதலி நமக்குக் கிடைக்க மாட்டாளா என்ற ஏக்கத்தை ஏற்படுத்தி விட்டார். பண்பட்ட நடிப்பைக் கொட்டி வருகிறார். தனது நடிப்பால். பொறுப்பான ஒரு காதலி மற்றும் குடும்பத்தைத் தாங்கி நிற்கும் தூண், அழகான சிரிப்பு, காதலன் மீது வைத்துள்ள பாசத்தை, நேசத்தை வெளிப்படுத்தும் பாங்கு, வெட்கப் புன்னகை... சான்ஸே இல்லை பாரதி. பொம்மலாட்டம் வர வர அழகான கவிதை போல மாறி வருகிறது.. குறிப்பாக கதிர், பாரதியின் காதல் காட்சிகள்!.
நன்றி: தினகரன்

aanaa
24th January 2013, 09:30 AM
''சன் சிங்கர்'' என்ற குழந்தைகளுக்கான புதிய இசை நிகழ்ச்சி வரும் ஞாயிறு முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதனை பிரபல இசை அமைப்பாளர் கங்கை அமரன் தொகுத்து வழங்குகிறார்.
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் இசை நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களிடம் தனி வரவேற்பு உண்டு. இதனை உணர்ந்து கொண்ட சேனல்கள் பெரும்பாலும் இசை, நடனம் சார்ந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர். இந்த வரிசையில் சன்டிவியும் இணைந்துள்ளது. சன் டிவியில் வரும் ஞாயிறு முதல் காலை 10மணிக்கு ''சன் சிங்கர்'' என்ற குழந்தைகளுக்கான பிரமாண்டமான புதிய இசை நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் 6 முதல் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மட்டும் பங்கு பெறுகின்றனர். இதற்கான குரல் தேர்வு தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் நடைபெற்றுள்ளது. அதில் தேர்வான குழந்தைகள் சன் சிங்கரில் பங்கேற்று பாட உள்ளனர். இந்த நிகழ்ச்சியை பிரபல இசை அமைப்பாளர் கங்கை அமரன் தொகுத்து வழங்குகிறார்.

aanaa
24th January 2013, 09:31 AM
ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் ராஜகுமாரி… புத்தம் புது சீரியல்



சன் டிவியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் ராஜகுமாரி சீரியல் விரைவில் தொடங்க உள்ளது
. சன் டிவியில் ‘தங்கம்' மெகா தொடர் தினசரி இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. கலெக்டர் கங்காவாக நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன்,
அவரது கணவரும் இதில் கலெக்டர்தான்.

ஆனால் பல ஆண்டுகளாக ஒரு மாவட்டத்திலேயே நிரந்தரமாக குடியேறிவிட்ட கலெக்டர் அவர். அவருக்கு உதவியாக மனைவி ரம்யா கிருஷ்ணன் இருந்து வருகிறார். அவர்களின் குடும்பத்தைச் சுற்றி வரும் கதைதான். இரண்டு மனைவிகளைக் கொண்ட ஐயா விஜயகுமார். அவரது தங்கை முத்தரசியின் கணவர் குலசேகரன் தன்னுடைய ஜென்ம விரோதியாக ஜென்ம விரோதியாக கருதுகிறார். அதற்காக அவர் செய்யும் வில்லத்தனங்கள்தான் கொஞ்சம் அதிகப்படியானதுதான்.
அதேபோல் ஐயாவின் பங்காளி குடும்பத்தினர் சாந்தி வில்லியம்ஸ், அவரின் மகன்கள், மகள் ஆகியோர் செய்யும் வில்லத்தனங்கள் என கதை எங்கெங்கோ சுற்றி குழப்பி கும்மியடித்தார்கள்
. இடையில் குழந்தையில்லாத ரம்யா விற்கு உதவி செய்வதற்காக காயத்ரி கதாபாத்திரம் வேறு வந்தது.
ஆனாலும் கதையின் போக்கை எப்படி நகர்த்துவது என்று தெரியாமல் முடிக்கலாம் என்று ஒருவழியாக முடிவு செய்துவிட்டார்கள் போல.
இன்னும் சில தினங்களில் தங்கம் தொடருக்கு மங்களம் பாடிவிட்டு அதே நேரத்தில் புதிய தொடரான ராஜகுமாரியை ஒளிபரப்ப ஆரம்பித்துவிடுவார்கள்.

புதிய தொடர் முன்னோட்டம் போட ஆரம்பித்துவிட்டனர்.
இந்த தொடருக்காக காசி எல்லாம் போயிருப்பார்கள் போல. முதல் தொடரில் கங்கா என்று பெயர் வைத்திருந்த ரம்யா கிருஷ்ணன் சென்டிமென்ட் ஆக இந்த தொடரை கங்கை நதிக்கரையில் தொடங்குகிறார் போல.
அவருடன் சரத்பாபு, கிட்டி உள்ளிட்ட பிரபல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் விரைவில் இந்த புதிய தொடரை சன் டிவியில் எதிர்பார்க்கலாம்.

aanaa
24th January 2013, 09:34 AM
ஒய்.ஜி.மகேந்திரனின் ‘வீட்டுக்கு வீடு வியட்நாம் வீடு’





நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நாடகமாகவும் திரைப்படமாகவும் நடித்து சூப்பர் ஹிட் ஆன ‘வியட்நாம் வீடு' தொலைக்காட்சி சீரியலாக வடிவமெடுக்கிறது
. இதில் கதாநாயகனாக ஒய்.ஜி. மகேந்திரன் நடிக்கிறார். ஜெயா டிவியில் ‘வீட்டுக்கு வீடு வியட்நாம் வீடு' என்ற பெயரில் ஒளிபரப்பாகும் இந்த தொடரின் கதை, திரைக்கதையை வியட்நாம் வீடு சுந்தரம் எழுதுகிறார்.
ரிஷி இயக்கும் இந்த தொடரில் ஒய்.ஜி. மகேந்திரனுடன் சுலக்சனா, கவிதாலயா கிருஷ்ணன், வியட்நாம் வீடு சுந்தரம் ஆகியோர் நடிக்கின்றனர்.

வியட்நாம் வீடு கதையை ஏற்கனவே மேடை நாடகமாக பலமுறை அரங்கேற்றியுள்ளார் ஒய்.ஜி. மகேந்திரன்.
இது ரசிகர்களிடையே அதிக அளவு வரவேற்பினை பெற்றதை அடுத்து அதை சீரியலாக எடுத்துள்ளனர்.
இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும்.


ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் புதிய தொடர் வீட்டுக்கு வீடு வியட்நாம் வீடு. மது எண்டர்பிரைசின் தயாரிப்பான இந்த தொடரின் கதை வருமாறு:-

ஹரிதாஸ் ஒரு நிறைவான, கலகலப்பான குடும்ப தலைவர். அவர் வாழும் வீடு பாரம்பரியமான வீடு. அங்கு குடித்தனம் இருக்கக்கூடிய அந்த குடும்பங்களை தன் குடும்பமாக நினைப்பவர். அவருக்கு நான்கு பெண்கள், இரண்டு மகன்கள். எல்லாருமே வங்கியில் பணிபுரிபவர்கள். ஹரிதாஸ் விஷ்ணு பக்தர். சீனிவாச பெருமாளை குடும்பத்தின் மூத்தவராக கருதுபவர். வாழ்க்கையின் முதல் பகுதியை கஷ்டப்பட்டு போராடி, நேர்மையோடு ஜெயித்து விட்டதால், தன்னுடைய வாழ்க்கையின் இரண்டாவது பாதியை நிம்மதியாக மனைவியோடு கிராமத்திலும், கோவில் தரிசனங்களிலும் கழிக்கவேண்டும் என்று ஆசைப்படுபவர். அவருடைய வாழ்க்கையின் சுகங்களும், சோகங்களும் மறக்க முடியாத சம்பவங்களாகின்றன. அவர் வீட்டில் குடித்தனம் இருக்கும் குடும்பங்களிலும் சுவையான திருப்பம் நிறைந்த பல சம்பவங்கள் நடக்கின்றன. ஹரிதாஸ் விருப்ப ஓய்வு விடுப்பு விண்ணப்பித்து தன்னுடைய ஓய்வுக்கால வாழ்க்கையை மகிழ்ச்சியாக துவங்க முயற்சித்தபோது, சற்றும் எதிர்பாராத ஒரு உண்மையை புரிந்து கொண்டார். அது என்ன என்பது கதையின் சுவாரசிய பின்னணி. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள இந்தத் தொடருக்கு கதை, திரைக்கதை: வியட்நாம் வீடு சுந்தரம். வசனம்: சித்ராலயா ஸ்ரீராம். இயக்கம்: ரிஷி. மேற்பார்வை: ஒய்.ஜி.மகேந்திரன். ஒளிப்பதிவு: நாக சரவணன்; முகப்பு பாடல்: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

aanaa
24th January 2013, 09:36 AM
ரூ.500 கோடிக்கு அக்ரிமென்ட்: சல்மான்கானை வளைத்த டிவி நிறுவனம்



மும்பை: சல்மான் கானின் பிரபலம் அவரை 500 கோடிக்கு அக்ரிமென்ட் போட வைத்துள்ளது. சல்மான் கானின் திரைப்படங்களை 5 ஆண்டுகளுக்கு ஒளிபரப்புவதற்காக பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று கோடி கோடியாய் கொட்டி கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வயசானாலும் அழகும் புகழும் மாறவே இல்லை என்ற வார்த்தை சல்மான் கானுக்கு மட்டுமே பொருந்தும். மெய்னே ப்யார் க்யாவில் சாக்லேட் பாய் தோற்றத்தில் அறிமுகமான சல்மான்கானை விழுந்து விழுந்து ரசித்தார்கள் இளைஞிகள்.


துடிப்போடு நடிக்கவும் செய்த சல்மான்கானுக்கு படங்கள் வரிசையாக கிடைத்தன புகழும் உயர்ந்தது.
ஷாருக்கான் வருகைக்குப் பின்னர் சல்மான்கான் புகழ் சற்றே குறையத்தொடங்கியது.
காதல் பிரச்சினை, கார் விபத்து, மான்வேட்டை போன்ற சர்ச்சைகளில் சிக்கி சில காலம் காணாமல் போனார்

aanaa
25th January 2013, 07:32 PM
குடியரசு தினத்திற்கு டிவி சேனல்களில் விஸ்வரூபம்…



குடியரசு தினத்தை முன்னிட்டு சன் டிவி, விஜய் டிவி, பாலிமர் டிவி, என தமிழ் சேனல்களில் பல சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர். அனைத்து பிரபல சேனல்களிலும் விஸ்வரூபம் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. சன்டிவியில் சிறப்புத்திரைப்படங்களாக காலை நேரத்தில் அந்நியன் திரைப்படமும் மாலையில் முகமூடி திரைப்படமும் ஒளிபரப்புகின்றனர். விஜய் டிவியில் தாண்டவம் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. விஜய் டிவியின் பிரசித்தி பெற்ற கேம் ஷோக்களான ‘அது இது எது' காலை 11 மணிக்கும், ‘ஹோம் ஸ்வீட் ஹோம்' காலை 12 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

aanaa
26th January 2013, 01:08 AM
28-01-2013


http://www.dailymotion.com/video/xwymm4_rajakumari-promo-3_shortfilms#.UQLfHB0t2So



http://www.dailymotion.com/video/xx0hr3_rajakumarii-promo-25-jan-13-part-3_shortfilms?start=3#.UQLfWh0t2So

aanaa
26th January 2013, 10:01 PM
நேரம் மாறிய சிவம்




விஜய் டிவியில் இதுவரை மாலை வேளையில் ஒளிபரப்பாகி வந்த சிவம் தொடர், இனி திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் முற்பகல் 11.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்தத் தொடர், இந்தியிலும் நம்பர் ஒன் தொடராக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தக்ஷராஜனின் மகளான சதி தன்னையும் அறியாமல் சிவனிடம் மனதை பறிகொடுக்கிறாள். தீவிர விஷ்ணு பக்தரான தக்ஷன் தன் மகள் சிவனை விரும்புவதை அறவே வெறுக்கிறார். அதனால் மகளுக்கு வேறொருவருடன் திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார். அகோர முகமுடைய ஒரு வாலிபனை மகளுக்கு மணாளனாக தீர்மானிக்கிறார். சதியின் தாய் பிரசுதி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, அந்த வாலிபனை அழகாக மாற்றுவதற்காக ஜித்தன் என்ற கலை நிபுணரை அரண்மனைக்கு அழைத்து வருகிறார். சிவன் ஜித்தன் ரூபத்தில் வந்து சதியை அந்த திருமணத்தில் இருந்து மீட்கிறார். சிவனை அவள் மணம் புரிந்தபின் தக்ஷராஜன் மேற்கொள்ளும் அதிரடி முயற்சிகள் என்ன என்பதை வரும் வாரங்களில் காணலாம்.

aanaa
26th January 2013, 10:04 PM
கடல் பட ஜோடியின் கலக்கல் அனுபவங்கள்


பொங்கல் படங்களில் நகைச்சுவை விருந்தாக வந்திருப்பது கண்ணா லட்டு தின்னஆசையா! இந்தப் படத்தில் நடித்த நாயகன்-நாயகி இருவரும் இந்தக்கதைக்குள் தங்களை இணைத்துக் கொண்டவிதம் பற்றி மனம் திறக்கிறார்கள். இன்று குடியரசு தின ஸ்பெஷலாக பெப்பர்ஸ் டிவியில் இவர்கள் ரசிகர்களை சந்திக்கிறார்கள். மணிரத்னத்தின் கடல் படத்தில் நாயகியாக நடித்த துளசி, முன்னாள் நடிகை ராதாவின் இளைய மகள். இவர் தனது கடல் பட அனுபவங்களை அலைகள் ஓய்வதில்லை என்ற தலைப்பில் பகிர்ந்து கொள்கிறார். இவரைத் தொடர்ந்து அக்னி நட்சத்திரம் என்ற தலைப்பில் கடல் படத்தின் நாயகன் கவுதம் தனது அனுபவங்களை சுவாரசியமாக பட்டியலிடுகிறார். இவர் நடிகர் கார்த்திக்கின் மகன். கார்த்திக்-ராதா ஜோடி முதன்முதலில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகமானது போல், அவர்களின் வாரிசுகள் கடல் படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பின்னணி பாடகி ஹரிணியின் இசை அனுபவங்கள் இடம் பிடிக்கின்றன. அதைத்தொடர்ந்து மகாத்மா காந்தி பற்றிய டாகுமென்டரி படம் வாழ்க நீ எம்மான் என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி பெப்பர்ஸ் டிவியின் குடியரசு தின கொண்டாட்டத்தை நிறைவு செய்கிறது.

aanaa
9th February 2013, 04:01 AM
அட்டகாசம்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புதிய கேம் ஷோ, அட்டகாசம். பெரிய திரை, சின்னத்திரை பிரபலங்கள் மட்டும் பங்குபெறும் இந்த நிகழ்ச்சி, காதலர் தினத்தை முன்னிட்டு நட்சத்திர ஜோடிகளின் காதல் அனுபவங்களுடன் மலர்கிறது. சின்னத்திரை காதல் ஜோடிகள் ராஜ்கமல்-லதாராவ், அசார்-லக்ஷா கலந்து கொண்டு தங்கள் இனிய காதல் நாட்களை நினைவு கூர்கிறார்கள். நிகழ்ச்சியில் பாண்டு, பயில்வான் ரங்கநாதன், வையாபுரி, வெங்கட், சந்தானபாரதி, தேவிகிருபா என கலைப்பிரபலங்களும் பங்கேற்கிறார்கள். நான்கு சுற்றுக்களை கொண்ட இந்த கேம்ஷோவை பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்ட மனோ தொகுத்து வழங்குகிறார்.
நன்றி: தினதந்தி

aanaa
9th February 2013, 04:03 AM
சரவணன்-மீனாட்சி தொடர்
அப்பாவி கணவன் அடப்பாவி கணவன் ஆனால்...


விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சரவணன்-மீனாட்சி தொடர்,
இளம் ஜோடிகளுக்கிடையேயான மோதலால் அனல் பறக்கிறது. திருமணத்திற்குப் பிறகு சின்னச் சின்ன ஊடல் கூடல்களில் வாழ்க்கையை சுவாரசியமாக்கிக் கொண்டிருந்த சரவணன்-மீனாட்சி தம்பதிகளிடையே இப்போது புதிய பிரச்சினை.

சரவணனுடன்அலுவலகத்தில் வேலை செய்யும் அழகுசக்தி, தனது சிநேகிதி மேகியின் பிறந்த நாளை சரவணனின் இல்லத்தில் கொண்டாட விரும்புகிறான். அதற்கேற்ப மேகியின் பிறந்த தினத்தில் ஒரு திருமணத்திற்காக மீனாட்சி வெளியே சென்று விட, அழகு சக்தி தன் சிநேகிதி மேகியுடன் சரவணன் வீட்டுக்கு வருகிறான். கூடவே நடனப்பெண்ணான மல்லிகாவையும் அழைத்துக் கொண்டு வந்ததில் தான் சிக்கல் சிறகு விரித்துக் கொண்டது. பார்ட்டியின் உச்சக்கட்டத்தில் டான்சர் மல்லிகா நடனமாட, அவள் விரும்பி கேட்டுக் கொண்டாள் என்பதற்காக அவளுடன் கைகோர்த்து சரவணனும் ஆட, அந்த நேரம் பார்த்தா திருமண நிகழ்ச்சிக்குப் போன மீனாட்சி வீடு வந்து சேர வேண்டும்?

அப்பப்ப சண்டை போட்டாலும் அப்பாவிக் கணவன் என்று எண்ணிக் கொண்டிருந்த மீனாட்சிக்குள், இதைப் பார்த்த மாத்திரத்தில் வெடிக்கிறது ஆத்திரம். இனி என்ன சமாதானம் சொன்னாலும் உன் மூஞ்சியில் முழிக்க மாட்டேன் என்று குமுறி விட்டு அப்போதே சூட்கேசும் கையுமாய் பிறந்தகம் போய் விடுகிறாள் மீனாட்சி. தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்வார்களா? அல்லது இந்த மோதல் ஈகோ பின்னணியில் பிரச்சினை இன்னும் சூடாகுமா? பரபரப்பான திருப்பங்களில் ரசிக்க வைக்கிறது தொடர். இயக்கம்: அழகர்.
நன்றி: தினதந்தி

aanaa
9th February 2013, 04:05 AM
கேளடி பெண்ணே! பொதிகையில் புதிய தொடர்


திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 8.15 மணிக்கு பொதிகையில் ஏ.கே. கம்யூனிகேஷன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் புதிய தொடர், ‘கேளடி பெண்ணே..!’ பெண்களுக்கான மருத்துவ கல்வி விழிப்புணர்வு தொடரான இது, உயிர் யாரிடம், உங்கள் நினைவிற்கு, கேளுங்கள் சொல்கிறேன் என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒளிபரப்பாகிறது.


உயிர் யாரிடம்..?


கணவன் மனைவிக்குள் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள், எதிர்ப்புகள், எதிர்பார்ப்புகளை அலசுவது. இதோடு முக்கியமாக இன்றைக்கு பல பெண்கள் படிப்பு, வேலை, வாழ்க்கையில் வசதியாக காலூன்றும் லட்சியம் ஆகிய காரணங்களால் திருமணத்தையும், திருமணத்திற்கு பிறகு குழந்தையைப் பெற்றுக்கொள்வதையும் தள்ளிப் போடுகிறார்கள்? இது நல்லதா? தவறா? இதனைப் பற்றி முழுமையாகவும், முழுவதுமாகவும் அலசும் பகுதி.


உங்கள் நினைவிற்கு...


இதில் மருத்துவ துணுக்குகள், ஆண் பெண் இருவருக்கும் அன்றாடம் நிகழும் மருத்துவ நிகழ்வுகளை மீண்டும் அவர்களுக்கே நினைவுபடுத்தும் பகுதி.


கேளுங்கள் சொல்கிறேன்...


45 ஆண்டுகளுக்கும் மேலாக மகப்பேறு மருத்துவத்தில் ஆராய்ச்சி, அனுபவம் கொண்டு தான் நேரிடையாக சந்தித்த, சாதித்த மருத்துவ நிகழ்வுகளை நேயர்கள் கேட்கும் வினாக்களுக்கு ஆலோசனையாக வழங்குகிறார், பேராசிரியரும் மருத்துவருமான ஜெயம் கண்ணன். பெண்களின் நலன்களை பெண்களே பேணி காத்துக் கொள்ள வேண்டும் என்பதே இத்தொடரின் முக்கிய நோக்கம் என்கிறார், தொடரின் தயாரிப்பாளர் அரசு கிருத்திகா.
நன்றி: தினதந்தி

aanaa
9th February 2013, 04:05 AM
பார்த்த ஞாபகம் இல்லையோ-200


கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த பார்த்த ஞாபகம் இல்லையோ தொடர், இப்போது நேரம் மாற்றப்பட்டு 8.30 மணிக்கே ஒளிபரப்பாகிறது. தற்போது 200-வது எபிசோடை நெருங்கும் இந்த தொடரை தயாரிப்பதோடு கதை எழுதி நாயகியாகவும் நடிக்கிறார், குஷ்பு சுந்தர். கார்த்திக் உருவத்தில் இருந்த ரகுநாத், கார்த்திக்கை கடத்தி அவனை போதைக்கு அடிமையாக வைத்திருக்கிறான். அதேநேரம் கார்த்தி வீட்டில் அவன் மாதிரியே நடித்து அவர்களை நம்ப வைத்து நினைத்ததை சாதித்துக் கொண்டிருக்கிறான். இதற்கிடையில் கார்த்திக்கை விட்டே அவன்மனைவி ஓவியாவை கொலை செய்ய அனுப்புகிறான் ரகுநாத். ஆனால் கொல்ல வந்த கணவனிடம் இருந்து உயிர் தப்பிய ஓவியா, கணவன் போதைக்கு அடிமையாகி விட்டதை தெரிந்து அதிர்கிறாள். கணவன் கார்த்திக்கை வில்லன் ரகுநாத்திடம் இருந்து மீட்டு அவனை குணமாக்கவும், ரகுநாத்தை போலீசில் பிடித்துக் கொடுக்கவும் முயற்சி மேற்கொள்கிறாள்.


ஆனால் அதற்குள் ரகுநாத் தப்பி விடுகிறான். தலைமறைவாக இருந்து கொண்டே ஓவியாவுக்கும், அவளது குடும்பத்துக்கும் சிக்கலுக்கு மேல் சிக்கலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறான். அந்த சிக்கல்களை முறியடிக்க ஓவியா போராடிக் கொண்டிருக்கிறாள். இந்த போராட்டத்தில் ரகுநாத்தை ஓவியா வென்றாளா என்பது அடுத்தடுத்த திரில் காட்சிகள். ஓவியாவாக குஷ்பு சுந்தர் நடிக்க, கார்த்திக்-ரகுநாத் என இரண்டு வேடங்களில் சீனு நடிக்கிறார். மற்றும் டெல்லிகுமார், ராஜலட்சுமி, டி.ஆர்.லதா, ஷோபனா, சோனியா, சுருதி ரெட்டி, சங்கீதா, ஆதித்யா, தனுஷ், விஜேஷ் நடிக்கிறார்கள். திரைக்கதை வசனம்: எஸ்.அசோக்குமார். ஒளிப்பதிவு: பொன்ஸ் சந்திரா. இயக்கம்: பிரியன். தயாரிப்பு: அவ்னி டெலிமீடியா.
நன்றி: தினதந்தி

aanaa
9th February 2013, 04:12 AM
நெருங்கும் சித்தி... விலகும் பிரியா...


திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பரபரப்புத் தொடர், மறுமணம். தன் மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ராஜேஷை மறுமணம் செய்து கொண்ட ஆர்த்தி, தன் மகன் அருணை மட்டுமின்றி தன் கணவனின் இரண்டு மகள்களையும் தன் மகள்களாகவே பார்த்துக் கொள்கிறாள். இருப்பினும் ராஜேஷின் மகள் பிரியா தனது சித்தி ஆர்த்தியிடம் ஒட்டாமலேயே இருக்கிறாள். பிரியாவிடம் அவள் மீதான தன் பாசத்தை நிரூபிக்கும் முயற்சியில் தொடர் தோல்விகளைத் தழுவும் ஆர்த்தி, அவள் மனதில் இடம் பெற போராடிக்கொண்டிருக்கிறாள். தன் அம்மா இறந்த பின் யாரிடமும் ஒட்டாத பிரியாவால் தன் சக பள்ளித்தோழியர்களிடம் கூட நட்பு பாராட்ட முடியவில்லை. இந்நிலையில் பள்ளியில் பேச்சுப் போட்டி அறிவிக்கப் பட, ஆர்த்தியின் மகன் அருண் உட்பட அனைவரும் உத்வேகத்துடன் தங்களை தயார் செய்து கொள்ளத் துவங்குகின்றனர்.


பிரியாவின் பிரச்சினையை அறிந்த ஆர்த்தி, அவளை பேச்சுப் போட்டியில் வெற்றிபெற வைக்க முன் வருகிறாள். அதன் மூலமாவது அவளிடமான தனது அன்பை நிரூபிக்கலாமே என்பது அவள் எண்ணம். ஆனால் அப்படியெல்லாம் நல்ல விஷயம் நடக்க விடாமல், ஆர்த்தியின் எதிரியான ராஜேஷின் விதவை அத்தை குழந்தை பிரியாவின் மனதில் விஷத்தை விதைக்கிறாள். இதனால் பிரியா ஆர்த்தியிடம் இருந்து இன்னும் விலகிப் போகிறாள். இதற்கிடையில் ராஜேஷ் அருணுக்கு பேச்சுப்போட்டிக்காக எழுதிக் கொடுக்க, ராஜேஷின் விதவை அத்தை அருணின் பையிலிருந்து அதை எடுத்து விட்டு, மாறாக தவறான பேப்பரை பையில் வைத்து விடுகிறாள். பள்ளியில் பேச்சுப் போட்டி துவங்குகிறது. பேச்சுப் போட்டியில் வென்றது யார்...? ஆர்த்தி தன் முயற்சியில் வென்றாளா...? ராஜேஷின் விதவை அத்தையின் பழிவாங்கும் படலம் அரங்கேறியதா...? பரபரப்பான கேள்விகளுடன் தொடர்கிறது தொடர்.
நன்றி: தினதந்தி

aanaa
9th February 2013, 04:19 AM
நாளுக்கு நாள் மெருகேறும் பொம்மலாட்டம்




பொம்மலாட்டம் தொடர் தற்போது போகும் பாதையைப் பார்க்கும்போது கே.பாலச்சந்தர் படத்தைப் பார்ப்பது போல இருக்கிறது - அந்த அளவுக்கு அழுத்தமான, ஆழமான வசனங்கள், அழகான காட்சிகள் ஈர்க்க வைத்து வருகின்றன.


சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பொம்மலாட்டம். ஆரம்பத்தில் இந்த தொடர் ஒளிபரப்பானபோது முகம் சுளிக்க வகையிலான காட்சிகள் அதிகம் இருப்பதாகவும், ரொமான்ஸ் அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது சீரியல் வித்தியாசமான டிராக்கில் மாறிப் பயணிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக கதிர் -பாரதியின் காதல் எபிசோட்.. எவ்வளவு அழகான வசனங்கள், சின்னச் சின்ன காட்சியமைப்புகள்.. பார்க்கவே படு ப்யூட்டியாக இருக்கிறது இந்தக் காட்சிகள். கதிர் வேடத்தில் வரும் அப்சரின் நடிப்பு படு க்யூட்... தனது அனுபவத்தை அப்படியே கொட்டி அழகாக நடித்து வருகிறார் அப்சர். அவர் பேசும் வசனங்களை ஆழமாக நேசித்து ரசி்க்க முடிகிறது. காதலை அவர் வெளிப்படுத்தும் விதம், காதலி தன் மீது காட்டும் பரிவு பாசம் காதலை அவர் ரசிக்கும் விதம், காதலிக்கு தேவையான அறிவுரைகளைக் கூறும்போது காட்டும் பக்குவம், பொறுப்பான பேச்சு, தெளிவான செயல்பாடுகள்.. சூப்பர்ப் அப்சர்.


பாரதி மட்டும் சும்மாவா என்ன.. தனது காதலனை எப்படியெல்லாம் தைரியமூட்ட முடியுமோ, எப்படியெல்லாம் நம்பிக்கை தர முடியுமோ.. அதையெல்லாம் செய்து இப்படி ஒரு காதலி நமக்குக் கிடைக்க மாட்டாளா என்ற ஏக்கத்தை ஏற்படுத்தி விட்டார். பண்பட்ட நடிப்பைக் கொட்டி வருகிறார். தனது நடிப்பால். பொறுப்பான ஒரு காதலி மற்றும் குடும்பத்தைத் தாங்கி நிற்கும் தூண், அழகான சிரிப்பு, காதலன் மீது வைத்துள்ள பாசத்தை, நேசத்தை வெளிப்படுத்தும் பாங்கு, வெட்கப் புன்னகை... சான்ஸே இல்லை பாரதி. பொம்மலாட்டம் வர வர அழகான கவிதை போல மாறி வருகிறது.. குறிப்பாக கதிர், பாரதியின் காதல் காட்சிகள்!.

aanaa
10th February 2013, 06:14 AM
vani rani




http://www.dailymotion.com/video/xxeeyz_cut-to-cut-special-part-1_shortfilms?start=665#.URbtwx0t2Sp



http://www.dailymotion.com/video/xxef5v_cut-to-cut-special-part-2_shortfilms#.URbsrR0t2So

aanaa
14th February 2013, 01:57 AM
மகாபாரதம்

http://www.mayyam.com/talk/showthread.php?10270-Mahabharatham

எத்தனை முறை, எப்படி வந்தாலும் பார்க்கத் தூண்டும் காவியம் ....

aanaa
16th February 2013, 06:46 AM
முதல் மூவர் விருது



ஆண்டு தோறும் வெளியாகும் திரைப்படங்களில் இருந்து சிறந்த அறிமுகக் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கவிருக்கிறது, ராஜ் டிவி. 2012-ம் ஆண்டு அறிமுகக் கலைஞர்கள் பட்டியலில் இருந்து ராஜ் டிவி ரசிகர்கள் முதல் சுற்றில் தேர்ந்தெடுத்துள்ள கலைஞர்களின் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன. நடிகர்கள்: சிவகார்த்திகேயன், விஷ்வா, உதயநிதி ஸ்டாலின், தினேஷ், விஜய் ஆண்டனி, விக்ரம் பிரபு, விஷ்ணு பிரியன்.


நடிகைகள்: ஸ்வாதி, நந்திதா, லட்சுமிமேனன், வரலட்சுமி, மனிஷா, ராதிகாஆப்தே, காயத்ரி.


இயக்குநர்கள்: ஐஸ்வர்யா தனுஷ், ரஞ்சித், பிரபாகரன், எம்.அன்பழகன், கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி தரணீதரன், ஜீவா சங்கர்.


இசையமைப்பாளர்கள்: அனிருத், கார்த்திக், சந்தோஷ் நாராயணன், டேனியல், பிரசன்னா, கிரிஷ்.


நகைச்சுவை நட்சத்திரங்கள்: அர்ஜூன், பகவதி, கர்ணா, செந்தில், வித்யு, மதுமிதா.


ஒவ்வொரு பட்டியலில் இருந்தும் முதல் மூவரை தங்கள் வாக்குப் பதிவின் மூலம் ரசிகர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அதற்கு வசதியாக வாக்குப் பெட்டியுடன் ‘முதல் மூவர் சிறப்பு வேன்‘ இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் வலம் வரவிருக்கிறது. ரசிகர்கள் தேர்வுக்குப் பின்னர் விருதுக்குரிய அறிமுகக் கலைஞர்களை கே.பாக்யராஜ் தலைமையிலான நடுவர் குழு தேர்ந்தெடுக்கிறது. நடிகர்கள் பார்த்திபன், தம்பி ராமையா, இயக்குனர் சீனு ராமசாமி, தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், கதிரேசன், கமீலா நாசர் நடுவர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். வரும் 23-ந் தேதி அன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் பரிசளிப்பு விழாவுக்கு தலைமையேற்பவர் இயக்குனர் பாரதிராஜா. தேர்வுக்குழுவினரின் இறுதிப் பட்டியலோடு ஒத்துப்போகிற மூன்று ரசிகர்களுக்கு ராஜ் டிவியின் பரிசாக தலா ஒரு லட்சம் ரூபாய், ஐம்பதாயிரம் ரூபாய், இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் என 3 பரிசுகள் வழங்கப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சரியான விடையை எழுதியிருந்தால் இருக்கவே இருக்கிறது, குலுக்கல் முறை.

aanaa
16th February 2013, 06:47 AM
ஒரு கோடி இப்போது பிரகாஷ்ராஜ் கையில்
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_130213102328000000.jpg


விஜய் டிவியில் சூர்யா நடத்தி வந்த "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சியின் இரண்டாவது பாகத்தை தொகுத்து வழங்கப்போகிறார் பிரகாஷ்ராஜ். இதுவரை தொலைக்காட்சி நிகழ்ச்சி எதனையும் தொகுத்து வழங்காத பிரகாஷ்ராஜ் முதன் முறையாக களத்தில் இறங்கி இருக்கிறார். இதன் படப்பிடிப்புகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. வருகிற மார்ச் மாதம் முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.


இந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாள மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார், மலையாள "சால்ட் அண்ட் பெப்பர்" படத்தை தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்து இயக்குகிறார், ராதாமோகன் இயக்கத்தில் "கவுரவம்" படத்தை தயரிக்கிறார். இத்தனை பிசியான ஷெட்யூலுக்கும் இடையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். காரணம் நிகழ்ச்சியில் பங்கேற்கும் நேயர்களுக்கு கோடி கிடைக்கிறதோ இல்லையோ, பிரகாஷ்ராஜுக்கு கிடைத்து விடுகிறது சில கோடி. இனி விஜய் டிவியில் அடிக்கடி செல்லத்தை பார்க்கலாம்.

aanaa
16th February 2013, 06:48 AM
ராஜ் டி.வி. வழங்கும் முதல் மூவர் விருதுகள்...!



திரையுலகில் அறிமுகமாகும் புதுமுகங்களை வரவேற்பதில் முதலிடத்தில் இருக்கும் ராஜ் டி.வி., இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் வெளியாகும் திரைப்படங்களிலிருந்து சிறந்த அறிமுக கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுள் முதல் மூன்று திறமைசாலிகளை தேர்வு செய்து விருது வழங்கி கவுரவிக்க இருக்கிறது!


2012-ம் ஆண்டின் அறிமுக கலைஞர்க*ள் பட்டியலில் இருந்து ராஜ் டி.வி. ரசிகர்கள் முதல்சுற்றில் தேர்ந்தெடுத்துள்ள திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களின் பெயர்களை சமீபத்தில் வெளியிட்டுள்ள ராஜ் டி.வி. நிறுவனம், அதிலிருந்து 3 சிறந்த அறிமுக நடிகர்கள், 3 சிறந்த அறிமுக நாயகிகள், 3 சிறந்த அறிமுக இயக்குனர்கள், 3 சிறந்த அறிமுக இசையமைப்பாளர்கள், 3 சிறந்த அறிமுக காமெடி நட்சத்திரங்கள், 3 சிறந்த அறிமுக தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பையும் ராஜ். டி.வி ரசிகர்களுக்கே வழங்கியுள்ளதுடன், இது சம்பந்தமான விளம்பரங்கள், ஓட்டுப்பெட்டி மற்றும் ஓட்டுச்சீட்டுகள் அடங்கிய மெகா சைஸ் வாகனம் ஒன்றையும் தமிழகம் முழுவதும் அனுப்பி வைத்து, சுமார் 2 லட்சம் ராஜ் டி.வி. நேயர்களிடம் ஓட்டுபதிவுகளையும் பெற்று, அதிலிருந்து மேற்கண்ட ஒவ்வொரு தலைப்பிலும் முதல் மூன்று சிறந்த அறிமுக கலைஞர்களை *தேர்ந்தெடுக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.


மெரீனா, எப்படி மனசுக்குள் வந்தாய், ஒரு கல் ஒரு கண்ணாடி, அட்டக்கத்தி, நான், கும்கி, மை, ராட்டினம், சுந்தரபாண்டியன், போடா போடி, தோனி, 3, சாட்டை, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், மதுபானக்கடை, உடும்பன், காதலில் சொதப்புவது எப்படி, கலகலப்பு என்று 2012ம் ஆண்டில் வெளிவந்த சுமார் 42 தமிழ்த் திரைப்படங்களில் இருந்து அறிமுக கலைஞர்கள், இந்த போட்டியில் பங்கு பெற்றிருப்பதும், அவர்களில் மேற்படி தலைப்புகளில் ஒவ்வொன்றிலும் சிறந்த மூவரை ராஜ் டி.வி. நேயர்கள் தேர்ந்தெடுக்க இருப்பதும், ரசிகர்கள் தேர்வுக்கு பின்னர் விருதுக்குரிய அறிமுக கலைஞர்களை கே.பாக்யராஜ் தலைமையிலான நடுவர் குழுவினர் தேர்ந்தெடுக்க இருப்பதும், இந்த விருது விழாவிற்கு "முதல் மூவர்" பரிசளிப்பு விழா என்று ராஜ் டி.வி பெயர்சூட்டி வரும் பிப்ரவரி-23ம் தேதி சென்னை நந்தம்பாக்கம் டிரேட் செண்டரில் மிகப்பிரமாண்டமாக இவ்விழாவினை நடத்த இருப்பதும் கோலிவுட் புதுமுகங்கள் - அறிமுகங்கள் இடையே உற்சாகத்தையும், ஊக்கத்தையும் தந்துள்ளது!


சிறந்த அறிமுக கலைஞர்களை தேர்ந்தெடுக்கும் ராஜ் டி.வி ரசிகர்களுக்கும் ஒரு லட்சம், ஐம்பதாயிரம், இருபதைந்த*ாயிரம் என்று மூன்று பரிசுகள் வழங்கப்பட இருக்கும் இந்த முதல்மூவர் விழாவிற்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா தலைமை ஏற்பது ஹைலைட்!

aanaa
17th February 2013, 06:39 AM
Polimer TV, which is trying its best like most of its contemporary regional television channels to stay afloat amid stiff competition, is
all set to broadcast the Tamil dubbed version of the popular Hindi television serial Madhubala from 18th February onwards.


Of late, many Hindi serials are increasingly being dubbed into Tamil and are aired on various regional channels. The richness of costumes of the artistes and the overall ‘majestic’ look these dubbed tele-serials have around them are unmistakable. Polimer TV is now bringing on air from next Monday the dubbed version of the hugely popular Hindi teleserial Madhubala.

Starring the amazingly beautiful Drasthi Dhami in the title role, the serial’s script revolves around the life of a girl born on the sets of a film’s shoot. The serial went on air in its Hindi version on Colors TV last year to commemorate the 100-odd years of the rich and varied tradition of India films. The serial’s TRP ratings have hardly come down all these months and it is one of the most-liked soaps among the Hindi-speaking populace.

Madhubala, despite being born in filmy backdrop, is neither interested in films nor willing to becoming an actress. In fact, she is apprehensive of the tinsel town as she wants to pursue her dreams in an entirely different field other than films. However, she faces a
compulsion wherein she is forced to take to films. The script analyzes in detail the dreams and aspirations of a middle-class Indian
girl and the hurdles she faces in realizing the same.


Watch it for pretty Dhami and her awesome expressions if not for anything else!

aanaa
23rd February 2013, 07:58 PM
விடைபெறும் திருமதி செல்வம்


சன் டிவியில் குமரன் இயக்கத்தில் 2007-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் திருமதி செல்வம் தொடர் விரைவில் சுபம் போட இருக்கிறது. மறுபடியும் திருமதியிடம் சேரப்போகிறான் செல்வம். தன்னை நேசித்த பெண் தன்னை வீசி பிடித்தது வஞ்சக வலையால் என்பதை புரிந்த பிறகு, மனைவி தானே புகலிடம். செல்வமும் அதைத்தான் கிளைமாக்சில் செய்யப் போகிறான். தொடரில் சஞ்சீவ்-அபிதா ஜோடி நிஜத் தம்பதிகள் போல் அத்தனை கச்சிதம் என்பதே இந்தத் தொடருக்கான முதல் வெற்றி. இந்த தொடரைத் தொடர்ந்து குமரன் இயக்கும் தெய்வத்திருமகள் என்ற புதிய தொடர் வரவிருக்கிறது.

aanaa
23rd February 2013, 08:00 PM
பேசும் படம்



ஜெயா டிவியில் பேசும் படம் என்ற புதிய நிகழ்ச்சி இன்று முதல் ஒளிபரப்பாகிறது. திரையரங்குகளில் படம் பார்த்தபடியே விமர்சனம் செய்வது போல் வடிவமைக்கப் பட்டிருக்கிறது இந்த நிகழ்ச்சி. திரைக்கு வரும் புதிய தமிழ்ப் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, இந்திப் படங்கள், அதோடு ஹாலிவுட் படங்களும் இந்த நிகழ்ச்சியில் விமர்சனம் செய்யப்படுகின்றன என்பது சிறப்பு. விமர்சிக்கப்படும் படங்களில் நடித்திருக்கும் நடிகர்-நடிகைகளும், இயக்குனர்களும் இந்த விமர்சன நேரத்தில் அரங்கில் இடம் பெறுகிறார்கள். நடிகர்அபிஷேக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

aanaa
23rd February 2013, 08:02 PM
ஸ்வர்ண சங்கீதம் சீசன்-2

ராஜ் டிவியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘ஸ்வர்ண சங்கீதம் சீசன்-2’ நிகழ்ச்சி, பிரமாண்ட மேடையில் பரபரப்பான போட்டிகளால் இன்னும் சூடு பிடித்திருக்கிறது. நிகழ்ச்சியை பிரபல நடிகை அனுஜா ஐயர் தொகுத்து வழங்குகிறார். பிரபல கர்நாடக இசைப்பாடகர்கள் பாபநாசம் அசோக் ரமணி, சவும்யா நடுவர்களாக இருந்து நிகழ்ச்சியின் ரசனையை இன்னும் அதிகரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு சுற்றிலும் சிறப்பு நடுவர்களாக சுதா ரகுநாதன், நித்யஸ்ரீ, உன்னி கிருஷ்ணன், ரஞ்சனி காயத்ரி, மஹதி, சின்ன பொண்ணு, அபிஷேக் ரகுராம், பிரியா சகோதரிகள், சிக்கில் குருசரண், ஓ.எஸ்.அருண் ஆகியோர் மெருகூட்ட, இறுதி சுற்றுக்கு இசை உலக ஜாம்பவான் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா வருகிறார். போட்டிக்காக கோயம்புத்தூர், சேலம், ஓசூர், மதுரை, திருச்சி, சென்னை, பெங்களூர் என்று எல்லா நகரிலும் குரல் தேர்வில் நூற்றுக்கணக்கான இளம் ஆண்கள், பெண்கள் பங்கேற்றனர். அதிலிருந்து சிறந்த 12 குரல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. போட்டியில் பாடகர்கள் தேர்வு பெற்ற நிகழ்ச்சியை வரும் வாரங்களில் காணலாம்.

aanaa
23rd February 2013, 08:04 PM
விஜய் டி.வியில் என் தேசம் என் மக்கள்! 7



விஜய் டி.வி.யில் ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு ஒளிப்பரப்பாகும் புத்தம் புதிய புதுமையா நிகழ்ச்சிதான் என் தேசம் என் மக்கள். அன்றாடம் நாம் சந்திக்கும் பிரச்னைகளை வேடிக்கை மட்டும் பார்க்காமல், அவற்றை *எதிர்த்து கேள்வி *கேட்கும் பக்குவத்தை நாம் அ*டைந்துவிட்டால் அந்த பிரச்னை நாளடைவில் காணாமல் போகும் வாய்ப்புள்ளது. நமக்கிருக்கும் பிரச்னை நம் குடும்பத்தினுடையது. நம் குடும்பத்தின் பிரச்னை நம் சமுதாயத்தினுடையது, இந்த சமுதாயத்தின் பிரச்னை நம் நாட்டினுடையது. நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று நாமே ஏற்றுக் கொள்கிறது பத்து முக்கியமான பிரச்னைகளுக்கு நாமே நேரடியாக ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்போகிற நிகழ்ச்சிதான் என் தேசம் என் மக்கள்.


ஒவ்வொரு ஞாயிறும் காலை 10 மணிக்கு விஜய் டி.வியில் முக்கிய சமுதாய பிரச்னைகளுக்கு தீர்வு காணப்போகும் புதுமையான நிகழ்ச்சிதான் என் தேசம் என் மக்கள். நீயா நானா கோபினாத் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

aanaa
2nd March 2013, 05:36 AM
மலேசியாவில் நாதஸ்வரம்

சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நாதஸ்வரம் தொடர், மலேசிய கதைக் களத்தில் பயணிக்கவிருக்கிறது. இதற்காக தொடரின் இயக்குனர் திருமுருகன் உள்ளிட்ட குழுவினர் மலேசியாவில் காட்சிகளை படமாக்கி வருகின்றனர். கதைப்படி நாதஸ்வரம் வாசிக்க வந்த அழைப்பை சொக்கலிங்கம் குடும்பம் ஏற்கிறது. அதற்காக சொக்கலிங்கமும் கோபியும் மலேசியாவுக்கு தங்கள் குழுவினருடன் பயணப்பட வேண்டும். இந்த பயணத்தில் தன்மனைவி மலரை எப்படியாவது அழைத்துப் போய் விடலாம் என கோபி முயற்சி மேற்கொள்கிறான். ஆனால் அந்த முயற்சியை தன் சாமர்த்தியத்தால் தடுத்து விடுகிறாள் கோபியின் தாயார். மலேசியாவுக்கு போனபிறகு தான் அம்மாவின் இந்த திட்டமிட்ட தடுப்புக்குப் பின்னான விஷயம் கோபிக்கு தெரிய வருகிறது. அதாவது அம்மாவுக்கு மலேசியாவுக்கு வர வேண்டும் என்ற ஆசை உள்ளூர இருந்திருக்கிறது. இதனால் அம்மாவின் அந்த உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோபி தன் அம்மா மலேசியா வர எற்பாடு செய்கிறான்.

மலேசியாவில் தான் கோபியின் குடும்பத்திற்குள் அதுவரை நிகழாத ஒரு திருப்பம் ஏற்படுகிறது. காணாமல் போன கோபியின் அண்ணனை கோபி அங்கே தான் சந்திக்கிறான். இதில் முக்கியமான விஷயம், கோபிக்கு அவர் தான் தன் அண்ணன் என்பது தெரியாது. அண்ணனுக்கும் அதே நிலை தான். யாரென்று தெரியாமலே அவர்கள் நட்பு பாராட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் இருவரும் அண்ணன்-தம்பி என்பது தொடரை பார்க்கும் நேயர்களுக்குத் தெரியும். திருப்பமான இந்த காட்சியில் அடுத்தடுத்து சந்திப்பு தொடரும்போதாவது அவர்கள் அண்ணன்-தம்பி தான் என்பதை தெரிந்து கொண்டார்களா? அதற்கான வாய்ப்பு அமைந்ததா? கோபியின் அண்ணன் வருகைக்குப் பிறகு தொடர் இன்னொரு கோணத்தில் விறுவிறுப்பை தக்க வைத்துக் கொண்டு தொடர்கிறது என்கிறார், தொடரின் இயக்குனர் திருமுருகன். இந்த தொடரில் கோபி வேடத்தையும் இயக்குனரே செய்வது சிறப்பு.
நன்றி: தினதந்தி

aanaa
2nd March 2013, 05:39 AM
காற்றினிலே வரும் கீதம்


ரெட்சன் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜே.கே.ஆனந்த் தயாரிக்கும் புதிய சின்னத்திரை தொடர், காற்றினிலே வரும் கீதம். இந்த தொடரை சுந்தர் கே.விஜயன் இயக்குகிறார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான கேள்வியின் நாயகனே, என் பெயர் ரங்கநாயகி, அலைகள், செல்வி போன்ற மெகா தொடர்களை இயக்கியவர். அன்னக்கிளி, கிழக்கே போகும் ரெயில், முதல் மரியாதை, அலைபாயுதே உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களுக்கு கதை, வசனம் எழுதிய ஆர்.செல்வராஜ், இந்த தொடருக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார். எங்கேயும் எப்போதும் படத்தின் இசையமைப்பாளர் சத்யா இந்த தொடருக்கு இசையமைக்கிறார். காதல்மதி எழுதிய முகப்பு பாடலுக்கு பாடியவர் காயத்ரி. ஒளிப்பதிவு: ராஜா நடிகை வாணி விஸ்வநாத் முதன்முதலாக நடிக்கும் சின்னத்திரை தொடர் இது. அவருடன் சுனில், திவ்யா, ரவி நடிக்கிறார்கள். தொடருக்கான தொடக்க விழாவில் தயாரிப்பாளர் ராதா கிருஷ்ணசாமி குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். இயக்குனர்கள் மணிபாரதி, வீறாப்பு பத்ரி, சில்லுன்னு ஒரு காதல் கிருஷ்ணா மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள் கலந்து கொண்டார்கள். விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாக விருக்கிறது, இந்த தொடர்.
நன்றி: தினதந்தி

aanaa
2nd March 2013, 06:05 AM
காதம்பரியில் இரட்டை வேடத்தில் கலக்கும் மிதுனா




கருத்தம்மா படத்தில் நடித்த ராஜஸ்ரீயின் தங்கை மிதுனா சின்னத்திரையில் காதம்பரி என்ற நெடுந்தொடரில் அறிமுகமாகியுள்ளார்.
இதில் அவருக்கு இரட்டை வேடம் முன் ஜென்மம், மறு ஜென்மம் என இரண்டு கதாபாத்திரத்திலும் கலக்கியிருக்கிறாராம் மிதுனா. நடிகை மிதுனா மாமதுரை' படத்தில் அறிமுகமானவர்.
தமிழிலும், தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்தவர் இப்போது சின்னத்திரையிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். சாப்ரன் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் காதம்பரி' மெகா தொடரில் இவர்தான் கதையின் நாயகி. பிரபு சங்கர் கதை எழுதி இயக்கும் இந்த தொடரின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த மணிமங்கலம் பகுதியில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடர் குறித்து மிதுனாவிடம் பேச்சுக்கொடுத்ததில் அவருடைய கதாபாத்திரம் பற்றி கிலாகித்து கூறினார். காதம்பரி தொடர் முன்ஜென்மத்தையும், மறு ஜென்மத்தையும் இணைக்கும் தொடர். 200 ஆண்டுகளுக்கு பிறகு மறுஜென்மம் எடுத்து சந்திக்கும் காதம்பரியின் வாழ்க்கை சம்பவம் கொஞ்சம் மிரட்டலாகத்தான் இருக்கிறது.
முன் ஜென்ம வேடத்திற்காக ஜாக்கெட் அணியாமல் சேலை கட்டி, கொண்டை போட்டு, அந்த கால நகைகளை மாட்டிக்கொண்டு நடிப்பது புது அனுபவமாக இருக்கிறதாம் மிதுனாவிற்கு. இந்த தொடருக்கு பிறகு என்னை காதம்பரி என்றே அழைப்பார்கள் என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார். இதில் காதம்பரிக்கு எதிராக மிரட்டலான பாத்திரத்தில் சுதா சந்திரன் நடித்திருக்கிறார் என்றார் மிதுனா. இவருடன் லஷ்மிராஜ், காயத்ரி, பாலாஜி, செம்புலி ஜெகன், சுந்தரி, சூரி, தேசிங்கு உட்பட பலர் நடித்துள்ளனர்.

aanaa
2nd March 2013, 06:12 AM
சன் டிவியில் மதுரை முத்து-தேவதர்ஷினியின் புதிய காமெடி நிகழ்ச்சி


விஜய் டிவி யின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொடங்கி சில வருடங்கள் சன் டிவியின் அசத்தப்போவது நிகழ்ச்சியில் அசத்திய நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து. திடீர் விபத்தினால் சில மாதங்கள் ஓய்வில் இருந்த முத்து சன் டிவியில் புதிய நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் களம் இறங்கியுள்ளார்.
மதுரை முத்து உடன் இணைந்து காமெடியில் கலக்குபவர் தேவதர்ஷினி.
ஞாயிறுதோறும் காலையில் ஒளிபரப்பாகும் இந்த காமெடி நிகழ்ச்சியில் போலீஸ் கான்ஸ்டபில் வேடத்தில் தேவதர்ஷினியும், திருடனாக மதுரை முத்துவும் சேர்ந்து காமெடி செய்ய முயற்சி செய்தனர்.
இதேபோல நிகழ்ச்சி சில பல வருடங்களுக்கு முன்பு நம்மநேரம் என்ற பெயரில் ஒளிபரப்பானது போல நினைவுக்கு வருகிறது. எது எப்படியோ காலை நேரத்தில் நிகழ்ச்சிக்குப் பஞ்சம் வந்தால் என்ன செய்வது பழைய நிகழ்ச்சியின் கருவை எடுத்து புதிய நடிகர்களை நடிக்க வைத்து தூசு தட்டி புதுசு போல ரெடி செய்து ஒளிபரப்பவேண்டியதுதானே.


சினிமாவிலேயே பழைய திரைப்படங்களை ரீமேக் செய்யும்போது தொலைக்காட்சியில் பழைய நிகழ்ச்சிகளை ரீமேக் செய்யக்கூடாதா என்ன? என்று யாரோ கேட்பது காதில் விழுகிறது. ஞாயிறுக்கிழமை காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த கலக்கல் காமெடி நகைச்சுவை பிரியர்களுக்கு ஏற்ற நிகழ்ச்சி என்கின்றனர் இதனை பார்த்து ரசித்த காமெடி பிரியர்கள்.

aanaa
9th March 2013, 12:48 AM
அத்திப்பூக்கள் ‘அஞ்சலி’ ‘இந்திரசேனா’ ஆகிறார்


சரிகம இண்டியா நிறுவனம் தயாரிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பான, “அத்திப்பூக்கள்” மெகா தொடரில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து தனி முத்திரை பதித்தவர் ராணி. தற்போது இதே நிறுவனம் தயாரிக்கும் புதிய மெகா தொடரான ‘வள்ளி’ சன் டிவியில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. புதிய தொடர் பற்றி சரிகம இண்டியா நிறுவனத்தின் தென்மண்டல ஜெனரல் மேனஜர் பொறுப்பேற்றிருக்கும் பி.ஆர்.விஜயலட்சுமி கூறியதாவது:


கிராமத்து பெண்ணான வள்ளி தனக்கு பிடிக்காத திருமணத்தால் ஊரை விட்டு ஓடி விடுகிறாள். விவாகரத்து பெற்று தன் நான்கு வயது மகனுடன் வாழும் சுப்ரமணி வள்ளிக்கு அடைக்கலம் கொடுக்கிறான். இதனால் பலவித சிக்கல்கள் எழுகின்றன. வேறு வழியில்லாமல் வள்ளியும், சுப்புவும் கணவன் மனைவியாக நடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் வள்ளியைத் தேடி வரும் அவள் தாய்மாமன் கோட்டைச்சாமியால் சுப்புவின் குடும்பம் துன்பத்துக்கு ஆளாகிறது. இதனால் வள்ளி அங்கிருந்து வெளியேறி சென்னை வருகிறாள். சென்னையின் கொடூர முகம் தெரியாத வள்ளி, ஒரு விபசார கும்பலிடம் சிக்குகிறாள். அங்கிருந்து தப்பிக்கும் போது அந்த கும்பல் துரத்துகிறது.


அப்போது இந்திரசேனா அங்கே வர, அவளைப் பார்த்ததுமே ரவுடி கும்பல் பயந்து ஓடி விடுகிறது. காரணம் இந்திர சேனா ஒரு லேடி டான். சென்னையின் நிழல் உலக தாதாக்களில் அவளும் ஒருத்தி. வள்ளிக்கு இது தெரியாது. ஆனால் அவளை சந்தித்த பிறகு வள்ளியின் வாழ்க்கையில் பல அதிரடி மாற்றங்கள் நடக்கின்றன. இந்திரசேனா ஏன் தாதாவாக மாறினாள்? அவள் பின்னணியில் புதைந்திருக்கும் மர்மங்கள் என்ன? பரபரப்பை தக்கவைத்தபடி தொடர்கிறது, தொடர். அத்திப்பூக்களில் அஞ்சலி என்ற பெயரில் வில்லத்தனமான நடிப்பில் கலக்கிய ராணி, வள்ளியில் இந்திரசேனா என்ற அதிரடி கேரக்டரில் களமிறங்குகிறார். இவர் கதைக்குள் வந்ததும் எதிர்பாராத அதிர்ச்சிகளும் ஆச்சரியங்களும் காத்திருக்கின்றன, நேயர்களுக்கு. தொடரில் ராம்ஜி, உமா, இந்திரஜா, வி.எஸ்.ராகவன், வாசுகி, சிவன் சீனிவாசன், ப்ரியா, மாஸ்டர் பாஷா நடிக்கிறார்கள்.
நன்றி: தினதந்தி

RAGHAVENDRA
9th March 2013, 09:49 AM
http://cdn2.supergoodmovies.com/FilesFive/sivaji-ganesan-s-karnan-movie-stills--a6547319.jpg

வாரம் தோறும் சனிக்கிழமை இரவு 7.05 மணிக்கு சென்னை தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியில் திரைப்படத்துறையில் தொழில்நுட்பத்தைப் பற்றிய நிகழ்ச்சி, திரைக்கலையில் ஒரு நுண்கலை என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகிறது. இன்றைய நிகழ்ச்சியில், 09.03.2013, புரொஜக்டர் முறையிலிருந்து க்யூப் சிஸ்டத்திற்கு மாற்றித் திரையிடுவதில் வெற்றிகரமான முன்னோடியாகத் திகழும் கர்ணன் திரைப்படத்தை வழங்கிய திவ்யா பிலிம்ஸ் திரு சொக்கலிங்கம் அவர்களின் பேட்டி இடம் பெறுகிறது. மேலும் சில வாரங்களுக்குத் தொடரக் கூடும். இதில் க்யூப் சிஸ்டம் என்றால் என்ன, எம்முறையில் படங்களின் திரையீடு திரையரங்குகளில் நடைபெறுகிறது போன்ற தொழில் நுட்ப தகவல்கள் இடம் பெறக் கூடும். அனைவரும் தவறாமல் காண வேண்டிய நிகழ்ச்சி.

மறக்காதீர்கள், 09.03.2013, சனிக்கிழமை, இரவு 7.05 மணி, தூர்தர்ஷன் சென்னை, பொதிகை தொலைக்காட்சி.

aanaa
16th March 2013, 08:47 PM
அமுதா ஓர் ஆச்சரியக்குறி!


கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் “அமுதா ஓர் ஆச்சரியக்குறி” தொடர், 150 எபிசோடுகளைக் கடந்து தொடர்கிறது. கவிதாலயா தயாரிப்பு நிறுவனம் சார்பில் டைரக்டர் கே.பாலச்சந்தர் இயக்கி வரும் இந்த தொடரில், கதையின் நாயகியாக ரேணுகாவும், நாயகனாக ‘கவிதாலயா‘ கிருஷ்ணனும், கதாநாயகியின் மனம் கவர்ந்த நண்பனாக சாக்ஷி சிவாவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மற்றும் சோனியா, காவியா, அப்சர் என்று சின்னத்திரை பிரபலங்களும் உண்டு. பிரிந்து வாழும் கணவனா? அல்லது மனம் கவர்ந்த நண்பனா? என்ற போராட்டத்தில் அடுத்த கட்ட முடிவுக்கு வராமல் தடுமாறிக் கொண்டிருக்கும் இளம்பெண்ணின் மனஉணர்வுப் போராட்டத்தை தனக்கே உரிய பாணியில் கையாண்டு கே.பாலச்சந்தர் இயக்கி வருகிறார்.
நன்றி: தினதந்தி

aanaa
16th March 2013, 08:48 PM
தந்தி கருவூலம்


தந்தி தொலைக்காட்சியில் தினந்தோறும் ஒளிபரப்பாகும் வெவ்வேறு நிகழ்ச்சிகளிடையே அவ்வப்போது நம்மை ஆழமாக கவனிக்க வைக்கும் நிகழ்ச்சி, ‘தந்தி கருவூலம்‘. மற்ற தொலைக்காட்சிகளில் காணமுடியாத அறிவுபூர்வமான, பயனுள்ள நிகழ்ச்சியும் கூட. ஒரு நிமிடத்தில் உலக வரலாற்றை நேர்த்தியாக சொல்லும் இந்த நிகழ்ச்சி. சூரியனுக்கு கீழே உள்ள அத்தனை விஷயங்களையும் மக்களிடம் சேர்க்கும் நேர்மையான முயற்சி. ராமாயணத்திலிருந்து கும்பமேளா வரை, பித்தோவனிலிருந்து பீட்சா வரை நேற்றைய, இன்றைய வரலாறு ஒவ்வொன்றையும் சுருக்கமாக ஒரே நிமிடத்தில் சொல்லும் போது, அதற்குண்டான காட்சிகளும் அழகாக திரையில் விரியும். கருவூலத்தின் இன்னொரு சிறப்பம்சம், அந்த எளிய தமிழ்! பழைய வரலாற்றை சொல்லும்போது பார்ப்பவர்களை கவரும் யதார்த்த நடையில் அனைவரும் ரசிக்கும் வண்ணம் வர்ணனை அமைந்துள்ளது சிறப்பு. ‘தந்தி கருவூலம்’ தலைமுறை கடந்து பெரிய கருத்துப்பெட்டகமாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
நன்றி: தினதந்தி

aanaa
16th March 2013, 08:49 PM
காவல் நிலையத்தில் காதல் ஜோடிகள்


சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் உதிரிப்பூக்கள் தொடர், எதிர்பாராத திருப்பங்களில் விறுவிறுப்பை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. மகன் லட்சுமிபதி, சக்தியை காதல் திருமணம் செய்து கொண்டதே அலமேலுக்கு உள்ளூற உறுத்தலாக இருந்து கொண்டிருந்தது. என்றாலும் பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் மகள் கர்ணா திடீரென்று ஒரு இளைஞனுடன் காதலான கதை தெரிந்தபோதே கிட்டத்தட்ட அவள் எரிமலையாகி விட்டாள். இந்தக்காதலுக்கு உடந்தையாக இருந்தவள் தன் மருமகள் சக்தி என அலுமேவுக்கு தெரிந்ததும் பொங்கி விட்டாள். காதலனுடன் மகள் கர்ணாவை அவ்வப்போது போனில் பேச வைத்து காதல் வளர்த்ததே சக்தி தான் என்பது தெரிந்ததும், அலமேலு ஆவேசமாகிறாள். மருமகள் சக்தியை வீட்டை விட்டு துரத்துகிறாள்.


இதற்கிடையே காதல் ஜோடிகள் போலீஸ் நிலையத்திற்கு அபயம் தேடி வர, அங்கே வரவழைக்கப்பட்ட அலமேலுவோ மனதைக் கல்லாக்கிக் கொள்கிறாள். காலில் விழுந்த மகளிடம் என்னை மீறி உங்க கல்யாணம் நடந்தா அது என் பிணத்து மேல தான் நடக்கும் என்கிறாள். இதனால் பஞ்சாயத்து பண்ண இருந்த போலீஸ் குழம்புகிறது. இப்போது இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையாய் தவிக்கும் காதல் ஜோடிகளை போலீஸ் சேர்த்து வைத்ததா? அல்லது அலமேலுவின் பிடிவாதம் வென்றதா? இதற்கிடையே வீட்டைவிட்டு துரத்தப்பட்ட சக்தி தன் வளர்ப்பு அப்பா சிவநேசனை சந்திக்க விரும்பாமல் கால் போன போக்கில் போகிறாள். வளர்ப்புத் தந்தைக்கு தன் விஷயம் தெரிந்தால் துடித்துப்போவார் என்பதால் இந்தமுடிவு. இப்படி தன்னை மறந்து அவள் போய்க் கொண்டிருக்கும் போது அவள் சாலை விபத்தில் சிக்குகிறாள். அவள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த நேரத்திலும், அவள்அணிந்திருந்த நகைகளை மட்டும் கழற்றி எடுத்துக் கொண்டு அவளை அம்போ என விட்டு விட்டுப் போய்விடுகிறது, அங்கே வந்த கூட்டம்.


இந்நிலையில் சக்தி சாலை விபத்தில் இறந்து விட்டாள் என்ற தகவல் அலமேலு குடும்பத்துக்கு கிடைக்கிறது. அப்போது அலமேலு எடுக்கும் முடிவு என்ன? சிவநேசன் வீட்டுக்கு இப்போது மகள் என்ற பெயரில் இளம்பெண் ஒருத்தி வந்திருக்கிறாள். அந்தப்பெண்ணின் பின்னணி என்ன என்பது இன்னொரு சுவாரசியம். தொடரின் நட்சத்திரங்கள்: சேத்தன், வடிவுக்கரசி, மானசா, எல்.ராஜா, ஸ்ரீலேகா, மகாலட்சுமி, ஸ்ரீதர், ரேவதிப்பிரியா. திரைக்கதை: முத்துச்செல்வன். வசனம்: சம்யுக்தா ஆனந்த். ஒளிப்பதிவு: சாகித்யா சீனு. இயக்கம்: விக்ரமாதித்தன். ஹோம் மீடியா மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பு: சுஜாதா விஜயகுமார்.
நன்றி: தினதந்தி

aanaa
16th March 2013, 08:51 PM
மாயா-100


ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் மாயா தொடர் 100-வது பகுதியை எட்டியுள்ளது. தன் மகள் மாயாவைக் காப்பாற்றிய பிரதாப்புக்கு நன்றி சொல்ல சந்திரசேகர் மருத்துவமனைக்கு செல்லும்போது அவர் பரமேஸ்வரியை சந்திக்க நேர்கிறது. அவளுடைய குத்தலான பேச்சுக்கள் சந்திரசேகரை சங்கடப்படுத்த, சீக்கிரமே மாயாவின் திருமணத்தை நடத்தப் போவதாக சந்திரசேகர், பரமேஸ்வரியிடம் சவால் விடுகிறார். தன் நண்பன் பாலு மூலமாக மாயா அரவிந்தன் இருவரின் சம்மதத்தையும் பெற்று அவர்களுக்கு திருமணம் செய்ய சந்திரசேகர் தேதி குறிக்கிறார். இரண்டு முறை தடைபட்ட மாயாவின் நிச்சயதார்த்தம், கல்யாணம் இந்த முறை நடக்குமா? இந்த கட்டத்தில் சில திகைக்க வைக்கும் எதிர்பாராத திருப்பங்கள். மாயாவின் திருமணத்திற்கு யார் தடை என்ற உண்மை வெளிப்பட தொடர் புதிய கோணத்தில் பயணத்தை தொடர்கிறது. தயாரிப்பு: சத்யஜோதி பிலிம்ஸ். இயக்கம்: பி.நித்யானந்தம், கதை: இந்திரா சவுந்தர்ராஜன். நட்சத்திரங்கள்: ஈஸ்வரிராவ், அபிஷேக், வாணி, மோகன்ராம், ஜெகதீஷ் ராமன்.
நன்றி: தினதந்தி

aanaa
19th March 2013, 06:20 AM
தெய்வ மகள்
http://05.wir.skyrock.net/wir/v1/resize/?c=isi&im=%2F4236%2F85614236%2Fpics%2F3142919954_1_10_Osg b86wb.jpg&w=600

http://05.wir.skyrock.net/wir/v1/resize/?c=isi&im=%2F4236%2F85614236%2Fpics%2F3142919954_1_8_wOvl QunD.jpg&w=600

http://www.youtube.com/watch?v=A3HXoZpVMvA&feature=player_embedded

aanaa
24th March 2013, 05:40 AM
மறக்க முடியாத திருமதி செல்வம்




சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த திருமதி செல்வம் தொடர் விடைபெற்றுக் கொள்வதைத் தொடர்ந்து அதே நேரத்தில் அதே குழுவினரின் தெய்வமகள் சீரியல் தொடங்குகிறது. திருமதி செல்வத்தை இயக்கிய குமரனே இந்த தொடரையும் இயக்குகிறார். இதற் கான படப்பிடிப்பு தொடங்கி வேகமாக நடந்து வருகிறது. செல்வம் மாதிரியான சபல கணவனின் தான்தோன்றித்தனமான செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், மீண்டும் கணவன் திருந்தி வந்து அழைக்கும்போது அவனுடன் சேர்ந்து வாழலாமா? வேண்டாமா? இந்த கேள்விக்கு கிளைமாக்சில் இன்றைய தலைமுறையில் பாதிக்கப்பட்டிருக்கும் அர்ச்சனா மாதிரியான பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை அலாரமே அடித்து பாடம் நடத்தியிருக்கிறாள், இந்த திருமதி செல்வம். தொடரில் செல்வமாக சஞ்சீவ், அர்ச்சனாவாக அபிதா, நந்தினியாக ரிந்தியா, அம்மாவாக வடிவுக்கரசி, வில்லியாக வந்த கவுதமி, குடிகாரராக வந்த ஜெயமணி இப்படி அத்தனை கேரக்டர்களும் இன்னும் பல ஆண்டுகளுக்கு மனதில் நிற்பார்கள்.
நன்றி: தினதந்தி

aanaa
24th March 2013, 05:41 AM
பார்த்த ஞாபகம் இல்லையோ?


கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை, தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் “பார்த்த ஞாபகம் இல்லையோ?”தொடர், 200 எபிசோடுகளைக் கடந்து பயணிக்கிறது. இதில் கதாநாயகி ஓவியாவாக நடிக்கும் குஷ்பு கூறுகையில், இனி வரும் வாரங்களில், புதுப் பொலிவுடன் சுவாரஸ்ய கதைப் போக்குடன் தொடர் மிளிர உள்ளது” என்றார். குஷ்புவின் அவ்னி டெலிமீடியா தொடரை தயாரிக்கிறது. தொடரில் கார்த்திக்-ரகுநாத் என இரட்டை வேடத்தில் சீனு நடிக்கிறார். மேலும் மாமனார் வேடத்தில் டெல்லி குமார், மாமியாராக டி.ஆர்.லதா நடிக்கிறார்கள். மாமியார் வேடத்தில் இதுவரை நடித்துவந்த நடிகை பானுமதி சமீபத்தில் காலமானதைத் தொடர்ந்து, டி.ஆர். லதா, மாமியார் வேடமேற்றுள்ளார்.
நன்றி: தினதந்தி

aanaa
24th March 2013, 05:41 AM
சிந்து பைரவி-700


ராஜ் டி.வியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘சிந்து பைரவி’ தொடர், 700-வது எபிசோடை எட்டவிருக்கிறது. சிந்துவும் வீருவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு இணைந்து வீடு வந்து சேருகிறார்கள். அவர்களை பெற்றோர் பாசத்தோடு வரவேற்கிறார்கள். குறிப்பாக தாய்மையடைந்த சிந்துவை பாசத்துடனும், பரிவுடனும் பார்க்கிறார்கள். சிந்துவுடன் வந்த குழந்தையை (பைரவிக்கும் ராத்தோடுக்கும் பிறந்த குழந்தை) தத்தெடுக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அது பைரவியின் குழந்தை என்று அவர்களுக்கு தெரியாது. இதற்கிடையே சிந்துவுக்கும் வீருவுக்கும் இடையே சிறுசிறு ஊடல்களும் காதல் பரிமாணங்களும் தொடருகின்றன. வீருவின் தாய் மட்டும் சிந்துவிடம் உள்ள குழந்தை யாருடையது என்பதை கண்டுபிடிக்க முயற்சிக்கிறாள். கண்டுபிடித்தாளா? பரபரப்பை தக்கவைத்துக் கொண்டு தொடர்கிறது, தொடர்
நன்றி: தினதந்தி

aanaa
24th March 2013, 05:42 AM
துளசி-300


திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் துளசி தொடர் 300-வது எபிசோடை நிறைவு செய்திருக்கிறது. துளசியை பிரசன்னா கடத்தி வைத்திருக்கிறான். அதற்கு காரணம் துளசி மீது அவன் வைத்திருக்கும் காதல். அவள் மேல் கொண்ட அதீத அன்பால் பிரசன்னா சைக்கோவாக மாறுகிறான். துளசி எங்கும் தப்பித்து போய் விடாமலிருக்க அவளின் காலை உடைத்து அறையில் அடைத்து வைக்கிறான். துளசி அடைபட்டுக் கிடக்கும் உண்மையறிந்து செல்வா அன்று இரவே அவளைக் காப்பாற்றச் செல்கிறான். துளசியை காப்பாற்றும் வேளையில் செல்வாவை பிரசன்னா துப்பாக்கியால் சுடுகிறான். காலில் சுடப்பட்ட செல்வா மயங்கி விழுகிறான். பிரசன்னாவே அவனை மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்றுகிறான். அவனிடம் இனி என் விஷயத்தில் தலையிட்டால் உனக்கும் அவளுக்கும் தொடர்பு இருக்கிறது என்று கூறி உன் வாழ்வில் நிம்மதி இல்லாமல் செய்து விடுவேன். அதோடு உன் மனைவி தாமரையும் விதவை ஆகி விடுவாள் என்று மிரட்டுகிறான்.


பிரசன்னாவின் சுயரூபம் தெரிந்து கொண்ட செல்வா, துளசியின் பெற்றோரிடம் விஷயம் சொல்ல, பதறித் துடித்த அவர்கள் துளசியைப் பார்க்க, பிரசன்னா வீட்டிற்குச் செல்கின்றனர். செல்வா கூறிய விபரங்கள் அனைத்தும் உண்மைதான் என்று உணர்ந்து கொண்டவர்கள் துளசியை பிரசன்னாவிடமிருந்து காப்பாற்ற போலீசில் புகார் செய்கிறார்கள். போலீஸ் விசாரணையில் பிரசன்னா குற்றவாளி என்பது தெளிவாகிறது. வன்கொடுமை சட்டத்தின் கீழ் பிரசன்னா கைது செய்யப்பட்டு கோர்ட்டுக்கு அழைத்து வரப்படுகிறான். பிரசன்னாவிற்கு தண்டனை கிடைத்ததா?.. துளசி வாழ்வில் நிம்மதியடைந்தாளா...? அவளின் வயிற்றில் வளரும் குழந்தையின் நிலை என்னவாயிற்று? அதிரடி திருப்பங்களுடன் தொடர்கிறது, தொடர். திரைக்கதை: ராஜ்பிரபு, வசனம்: பாபா கென்னடி, இயக்கம்: பாலாஜி யாதவ்..
நன்றி: தினதந்தி

aanaa
31st March 2013, 06:45 AM
இலக்கணம் மாறுதோ


ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இலக்கணம் மாறுதோ தொடர் நூறாவது எபிசோடை நிறைவு செய்தபடி தொடர்கிறது. கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் வழங்கும் தொடர் இது. வித்யாவின் வாழ்க்கையில் திலீப் என்ற இளைஞன் அறிமுகமாகிறான். அவனது நடவடிக்கைகள் இறந்த தனது காதலன் பிரகாஷை நினைவுபடுத்தும் வகையில் உள்ளன. யார் இந்த திலீப்? இறந்து போன பிரகாஷக்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம்? இது போன்ற சுவாரசியமான முடிச்சுகளுடன் தொடர் பயணிக்கிறது. சுரபி மீதான சந்தேகம் ஒருவாறு தெளிந்து அவளை மகளிர் விடுதியிலிருந்து கூட்டிட்டுப் போக வரும் சிவாவை, கவுதமின் மனைவி அபர்ணா சந்தித்து மீண்டும் அவன் மனதில் நஞ்சை கலக்கிறாள். அபர்ணாவின் நோக்கம் தான் என்ன? சுரபி, ஸ்ரேயா இருவரும் பெற்றோர் பார்த்து வைத்த மணமகனை தாங்களாகவே மாற்றிக்கொண்டு திருமணமும் செய்து கொண்டார்கள். ஆனால் இந்த திருமணத்துக்கு முன்பே ஒரு தம்பதி எல்லை மீறிய உறவுக்குள் பயணித்தவர்கள் என்ற உண்மை எத்தகைய சூழலை உருவாக்கும்? சம்பந்தப்பட்ட நால்வரின் மனநிலையில் எத்தகைய சூறாவளி வீசும்? தொடரில் சஹானா புகழ் காவ்யா, ஐஸ்வர்யா, பிரமோதினி, விஜய், விக்கி, விஜய் ஆனந்த், கவிதாலயா கிருஷ்ணன், ஸ்ரீவித்யா, மாஸ்டர் சரண் மற்றும் பலர் நடிக்கின்றனர். முக்கியமான கதாபாத்திரத்தில் அப்சர் மற்றும் கவிதா சோலைராஜா நடிக்கின்றனர். தயாரிப்பு: புஷ்பா கந்தசுவாமி. கதை, திரைக்கதை, இயக்கம்: வெங்கட்.
நன்றி: தினதந்தி

aanaa
31st March 2013, 06:48 AM
பொம்மலாட்டம்-100

சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 11.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பொம்மலாட்டம் தொடர், நூறாவது எபிசோடை கடந்து தொடர்கிறது. உயிரக்கு உயிராய் காதலித்த காதலன் கதிரை சூழ்நிலையால் விலக்கி, சந்தோஷை மணந்து சிதம்பரம் வீட்டிற்குள் நுழையும் பாரதி, சந்தோஷை திருத்த எடுக்கும் முயற்சிகள் தோல்வியடைகின்றன. இதற்கிடையே தேவியின் முன்கோபத்தை குறைப்பதற்காக பாரதி எடுக்கும் முயற்சிகள் சிறிது பலனளிக்கிறது. தேவியை பெண் பார்க்க வந்தவன் ஒரு நடிகன் என்பதையும் பாரதியின் ஏற்பாட்டின் பேரில் தான் அவன் தன் வீட்டிற்கே வந்தான் என்பதையும் கண்டுபிடித்த சந்தோஷம் நடராஜனும் சிதம்பரத்திடம் சென்று முறையிடுகிறார்கள். அது எனக்கு ஏற்கனவே தெரியும் என்று சொல்கிறார் சிதம்பரம். இதே விஷயத்தை தேவியிடமும் சொல்கிறான் சந்தோஷ். கோபத்தை குறைக்க யோகா வகுப்புக்கு செல்லும் தேவி, கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாரதியை தேடிச் சென்று கண்டபடி திட்டுகிறாள். என்னோடு சுமூகமாக வாழ மறுத்தால் உங்கள் பெண்ணை விவாகரத்து செய்ய நேரிடும் என்று பாரதியின் அம்மா கோகிலாவிடம் சந்தோஷ் சொல்லிவிட்டு வந்ததால், பாரதியை தேடி கோகிலா வருகிறாள். கோகிலாவை சமாதானப்படுத்தி அனுப்பும் பாரதி, என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறாள்.


ராஜேஷையும், மாலதியையும் பார்க்கில் பார்த்து விடும் பத்ரி, அதை பாரதியிடம் சொல்ல, பாரதி தங்கை மாலதியை அழைத்து கண்டிக்கிறாள். மாலதியோ பாரதியை எடுத்தெறிந்து பேசிவிட்டு செல்கிறாள். கதிர் எடுக்கும் படத்தில் முதல் நாளே படத்தின் ஹீரோவுக்கும் அவனுக்கும் தகராறு ஏற்பட்டு படப்பிடிப்பு ரத்தாகிறது. இதனால் கதிர் அதிர்ந்து போகிறான். கதிரின் இயக்குனர் கனவு நனவாகுமா? தேவி திருமணம் செய்து கொண்டாளா? ராஜேஷ், மாலதியின் காதலை ஏற்றுக் கொண்டானா? நடராஜனின் சதித்திட்டம் அம்பலமானதா? பாரதி சந்தோஷை திருத்தினாளா? பல கேள்விகளுடன் விறுவிறுப்பு மயமாய் தொடர்கிறது, பொம்மலாட்டம் தொடர். தொடரில் டெல்லிகுமார், சிரிஜா, ஸ்ரீகுமார், அப்சர், ப்ரீத்தி, சாய்ராம், காத்தாடி ராமமூர்த்தி, விஜய கிருஷ்ணராஜ், கணேஷ்கர், பரத், சசி, ஷீலா, மகிமா, கவுரிலட்சுமி, வித்யா, சுரேந்தர், நிஷா, முரளி ஆகியோர் நடிக்கின்றனர். கதை: அரவிந்தன். திரைக்கதை: செல்வம். வசனம்: ஸ்ரீதர். பாடல்: கவிப்பேரரசு வைரமுத்து. இசை: தினா. பாடல் பாடியவர்: ஹரிசரண். ஒளிப்பதிவு: சங்கர். தயாரிப்பு: சான் மீடியா லிமிடெட். இயக்கம்: ஷிவா கே.
நன்றி: தினதந்தி

aanaa
6th April 2013, 06:55 PM
வள்ளி ஏற்படுத்திய புதிய உறவு


சன் டி.வியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் சரிகம இண்டியாவின் தயாரிப்பான வள்ளி தொடரில், பல அதிரடி திருப்பங்கள் காத்திருக்கிறது. விதையாய் இருக்கும் வரை அதன் வீரியம் வெளியே தெரிவது இல்லை. அது மண்ணுக்குள் விழுந்து மரமாய் வளர்ந்து நிற்கும் போதுதான் அதற்குள் ஒளிந்திருக்கும் விஸ்வரூபம் புரிகிறது. அதைப் போல தன் பலம் அறியாத வள்ளி பலரால் பந்தாடப்படுகிறாள், துரத்தப்படுகிறாள். வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடிய வள்ளி, ஒரு கட்டத்தில் தீர்க்கமான முடிவுக்கு வருகிறாள். அது யாரும் எதிர்பாராதது, ஏற்றுக் கொள்ள முடியாதது. தன்னை காப்பாற்றி அடைக்கலம் கொடுத்த சுப்ரமணியின் குழந்தைக்கு தாயாகிறாள். தாலி கட்டிக் கொள்ளாமலே மனைவி என்ற ஸ்தானத்தை பெறாமலே, இதைச் செய்கிறாள். இந்த உறவுக்கு பெயர் என்ன? ஊரும் உலகமும் இதைப் பற்றி கேலி பேசுமே! வள்ளி எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. சின்னஞ் சிறு குழந்தை தாயன்புக்கு ஏங்குவதை கண்டு, தன் வாழ்க்கையையே தியாகம் செய்ய முடிவெடுத்து விட்டாள். ஒருபுறம் சுப்புவின் மனைவி குழந்தையை கேட்டு கோர்ட் படியேறுகிறாள், மறுபுறம் தன் கற்பை காப்பாற்றிய இந்திர சேனாவுக்கு எதிராக வள்ளி சாட்சி சொல்ல வேண்டிய நிலை. இதையெல்லாம் வள்ளி எப்படி சமாளிக்கிறாள்? ஒரு பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு வள்ளியும், எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு மதுவும் உதாரணமாக இருக்கிறார்கள். இதுவே வள்ளி தொடரின் மைய கதைக்களம் என்கிறார் சரிகம இண்டியா நிறுவனத்தின் தென்மண்டல பொது மேலாளர் பி.ஆர்.விஜயலட்சுமி. கதை: பி.ஆர். விஜயலட்சுமி. வசனம்: மனோகர். ஒளிப்பதிவு: உதயசங்கர். திரைக்கதை, இயக்கம்: கே.சண்முகம்.
நன்றி: தினதந்தி

aanaa
6th April 2013, 06:58 PM
திருப்பங்களுடன் ‘கார்த்திகைப் பெண்கள்’




திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 10 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகைப் பெண்கள் தொடரில் மேலும் பரபரப்பு கூடியிருக்கிறது. சாருவின் மகள் நிவேதிதாவின் வாழ்க்கையில் குறுக்கிட்டு அவளை மிரட்டிக் கொண்டிருக்கும் அரவிந்த் யார்? அவனால் நிவேதிதா அடையப்போகும் வேதனைகள் என்ன? வழக்கத்துக்கு மாறாக சாரு அரவிந்திடம் பணிந்து போவது ஏன்? ஆர்த்தியையும், சாருவையும் வழிவாங்கத் துடிக்கும் பெரியவரின் அடுத்த முயற்சி என்ன? தனது சொந்த பிரச்சினைகளிடையே சாரு பெரியவரின் அராஜகங்களை எப்படி முறியடிக்கப் போகிறாள்? சிங்கப்பூர் சண்முகத்தின் மனைவியும், மகளும் வந்து இறங்கியதால் தண்டபாணி-ருக்குவின் குடும்பத்தில் என்னென்ன காமெடி கலாட்டாக்கள் அரங்கேறப் போகின்றன? ப்யூலாவை மறக்க முடியாமல் தவிக்கும் சூர்யா அடுத்து என்ன செய்யப்போகிறான்? இதனால் சாருவுக்கு என்னென்ன சிக்கல்கள் வரப்போகின்றன? சாருவின் பங்காளிகளோடு சேர்ந்து கொண்டு மூர்த்தி சாருவுக்கு எந்தெந்த வகையில் துரோகம் இழைக்கப்போகிறார்? கதையில் இனி வரப்போகும் திடுக்கிட வைக்கும் மர்மங்கள் என்ன? அதற்கு காரணங்கள் யார் யார்...? தொடரும் சுவாரஸ்யமான சம்பவங்கள் இனி வரும் வாரங்களில் தொடரை இன்னும் பரபரப்பாக்கும் என்கிறார், கார்த்திகைப் பெண்கள் தொடரின் தயாரிப்பாளரும், கிரியேட்டிவ் ஹெட்டுமான இயக்குனர் திருமுருகன். திரைக்கதை, வசனம்: பாஸ்கர் சக்தி. இயக்கம்: கவிதாபாரதி. கதை, தயாரிப்பு, கிரியேட்டிவ் ஹெட்: எம்.திருமுருகன்.
நன்றி: தினதந்தி

aanaa
6th April 2013, 06:58 PM
மண்வாசனை


திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 7.45 மணிக்கு ராஜ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மண்வாசனை தொடர், பரபரப்பான காட்சியமைப்பில் நேயர்களை கவர்ந்த தொடராகி இருக்கிறது. ஜெகதீஷ் மனைவி ஆனந்தி ஞாபகமறதியால் அவதிப்படுகிறாள். மூதாட்டி கல்யாணியின் அடாவடி பேச்சால் ஆனந்தியின் பெற்றோர் வேதனைப்படுகிறார்கள். பைரவ் வீட்டிற்கு விதவையான கனகமணி வந்து சேருகிறாள். இவர் பைரவ்வின் பால்ய சிநேகிதியாகும். கனகமணி பைரவ்வை திருமணம் செய்து கொள்ள தனது மனதில் நப்பாசையை வளர்த்துக் கொள்கிறாள். ஏற்கனவே, பைரவ், குடும்ப சூழ்நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், கனகமணியின் இந்த செயல் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது? மேலும் ஆனந்தியின் ஞாபகமறதி குணமாகிறதா? கனகமணியின் ஆசை நிறைவேறுகிறதா? தொடரும் காட்சிகளில் விடை கிடைக்கும்.
நன்றி: தினதந்தி

aanaa
6th April 2013, 06:59 PM
ஈழம்


மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, ஈழம். இலங்கை மண்ணில் பன்னெடுங்காலமாக வாழ்ந்த தமிழ்ச் சொந்தங்களின் வீரம் செறிந்த வரலாற்று நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. வீரத்தின் அடையாளமாக வாழ்ந்த தமிழ் இனம் அடையாளம் தெரியாமல் சிதைக்கப்பட்ட அவலத்தினையும், அதற்குக் காரணமான இலங்கை அரசின் போர்க்குற்ற செயல்பாடுகளையும் உணர்வு பூர்வமாக தரும் நிகழ்ச்சி இது.
நன்றி: தினதந்தி

aanaa
16th April 2013, 08:47 PM
பொக்கிஷம்-200


கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பொக்கிஷம் தொடர், 200-வது எபிசோடை தாண்டியபடி தொடர்கிறது. விறுவிறுப்பான திருப்பங்களுடன் விரையும் இந்த தொடரின் கதைப்பின்னணி வருமாறு. வசந்தன்-கண்மணிக்கிடையேயான கருத்து வேறுபாட்டில் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு போய் விடுகிறாள், கண்மணி. இந்த சூழலில் அவன் மாயாவை சந்திக்கிறான். ஒரு இக்கட்டான சூழலில் அவளுக்கு அவன் உதவி செய்ய, அந்த உதவிக்கு எதிர்வினையாக பிரச்சினை மாயா-வசந்தனை சுற்ற, அது எந்த அளவுக்கு வசந்தனின் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது?


வசந்தன்-கண்மணி பிரிவுக்குப் பின்னணியில் தெரிந்தோ தெரியாமலோ இருப்பவள் வழக்கறிஞர் அஸ்வதி. இவள் திருமணத்துக்கு முன்பே தன் காதலனுடன் நெருங்கிப் பழகியதில் தாய்மையடைகிறாள். ஆனால் வசந்தனின் தோழி என்ற முறையில் கண்மணியின் குடும்பம் வசந்தனை சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறது. குழந்தைக்கு அப்பாவே அவன் தான் என்று ஒருகட்டத்தில் முடிவே செய்கிறது. இதனால் வசந்தனை நிரந்தரமாக பிரிந்து விடும் நோக்கில் அவன் மீது விவாகரத்து வழக்கு தொடுக்கிறாள், கண்மணி. இந்த வழக்கில் கண்மணிக்கு ஆதரவாக அஸ்வதியின் தாயார் சத்யபாமா ஆஜராகிறாள். வசந்தனுக்காக அஸ்வதி வாதாடுகிறாள். தன் மீதான குற்றச்சாட்டு அபத்தமானது என்று சொல்லும் வசந்தன், விவாகரத்துக்கு மறுத்து விடுகிறான். இதையும் தாண்டி வழக்கின் முடிவு என்னாகும்? இன்னொரு புறம் வசந்தனின் தம்பி ஆனந்தன் இந்த சூழலை பயன்படுத்தி குடும்ப சொத்துக்களை அபகரித்துக் கொள்கிறான். இதனால் திருமணத்துக்கு தயாராக இருக்கும் வசந்தனின் 2 தங்கைகளின்எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இதைக்கண்டு மனம் பொறாத வசந்தனின் சித்தப்பா, ஆனந்தன் மீது வழக்கு தொடுக்கிறார். இதனால் வெகுண்ட ஆனந்தன், ஒரு விபரீத முடிவெடுக்கிறான். அதனால் வசந்தனின் குடும்பம் எந்த மாதிரியான பாதிப்புகளை சந்தித்தது?


சத்யபாமாவின் மகன் ரஞ்சன் ஜெயிலில் இருந்த வெளியே வந்ததும் வசந்தனை பழிவாங்கத் துடிக்கிறான். அதற்காக அவன் வைத்த குறி, வசந்தனின் தங்கை சுகுணா. அவன் விரித்த வஞ்சக வலையில் சுகுணாவும் விழுந்து விடுகிறாள். அவனது அன்பு போலியானது என்பதை புரிந்து கொண்டபோது அவளால் தப்ப முடிந்ததா? தொடரை இயக்கி தயாரிப்பதோடு வசந்தன் கேரக்டரிலும் நடிக்கிறார், திருச்செல்வம். நட்சத்திரங்கள்: திருச்செல்வம், மீரா, ஸ்ரீவித்யா, பாவனா, நளினி, சத்யபிரியா, விஜய்கிருஷ்ணா, பவானி, கற்பகம், வித்யா, பவ்யகலா, பாரதிகண்ணன், அப்பல்லோ ரவி, விஸ்வநாத், துரை, நந்தினி, ரமேஷ், ஆதவன், ஆடிட்டர் ஸ்ரீதர், சிவா. பிரகாஷ். ஒளிப்பதிவு: தியாகராஜன். வசனம்: திருச்செல்வம்- பிரியா. கதை, திரைக்கதை, இயக்கம்: திருச்செல்வம். தயாரிப்பு: திருச்செல்வம் தியேட்டர்ஸ்.
நன்றி: தினதந்தி

aanaa
16th April 2013, 08:48 PM
ஆல்பம்


ஜெயா டிவியில் ஞாயிறுதோறும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘ஆல்பம்’. நம் வீட்டு ஆல்பத்தில் உள்ள போட்டோக்களை பார்க்கிறபோது அந்தந்த காலகட்டங்கள் நினைவில் வந்து மோதும். அப்போது நடந்த பசுமையான நினைவுகள் மனதில் எட்டிப்பார்க்கும். அதை பகிர்ந்துகொள்ளும்போது அளவில்லாத மகிழ்ச்சி கிடைக்கும். இதேபோல் பிரபலங்கள் தம்முடைய ஆல்பத்தையும் அதன் பின்னணியையும் கூறும்போது இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படும். மேலும், இந்நிகழ்ச்சியில் பிரபலங்களை நெகிழ்ச்சியூட்டும் வகையில் அவர்கள் சந்தித்த, மறக்க முடியாத நபர் ஒருவர் நிகழ்ச்சியில் கொஞ்சமும் எதிர்பாராத வகையில் கலந்து கொள்வது தனிச் சிறப்பு. தமிழ் புத்தாண்டையட்டி ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக நடிகர் பிரபு பங்கு பெறுகிறார். இதில் அவரது தந்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றியும், அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் பற்றியும், அதில் இடம் பெற்ற குடும்ப நண்பர்கள் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார். அதோடு கலைப்பயணத்தில் தன்னோடு பயணித்த நண்பர்கள் பற்றி அவர்களுடன் இருக்கும் புகைப்படங்களை காட்டி மனம் விட்டு பகிர்ந்து கொள்கிறார். பெப்சி உமா இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
நன்றி: தினதந்தி

aanaa
16th April 2013, 08:51 PM
தெய்வமகளின் துவக்கமே தூள் தான்


வழக்கமா சீரியல்கள் என்றால் அழுகாச்சியாகத் தான் ஆரம்பம் ஆகும். ஆனால் அழகு பதுமைகளாக வலம் பெண்கள் சந்தோஷத்தை மட்டுமே அனுபவிப்பது இல்லை என்றும், குடும்பத்தில் சிக்கல் என்றால் அதை தீர்க்க சரியான முடிவெடுப்பார்கள் என்றும் உணர்த்தும் வகையில் புதிய தொடர் ஒன்று சன் தொலைக்காட்சியில் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பல நாட்களாக ஓடிக் கொண்டிருந்த திருமதி செல்வம் தொடர் நிறைவடைந்தது. இதனையடுத்து தற்போது அதற்கு பதில் இரவு 8 மணிக்கு ‘தெய்வமகள்' ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது. குளுகுளு லொகேசன்ஸ், புதிய முகங்கள் என ஆரம்பமே அமர்களம்தான். எல்லாரும் பொண்ணு பொறந்துட்டா... செலவு வந்து பொறந்துடுச்சுனு நினைப்பாங்க. நான் அப்படி இல்லீங்க... மகாலட்சுமியே மகளா வந்து பொறந்தானு நினைச்சேன்...'' என்ற முன்னோட்ட வசனம் இல்லத்தரசிகள் அனைவரும் கவர்ந்திழுத்திருக்கிறது. வழக்கம் போல் சீரியல்கள் அழுசாச்சியாக இல்லாமல் இது கலகலப்பாகவும் தொடங்கி இருப்பது இல்லத்தரசிகளை சந்தோஷப்படுத்துவதாகவும் இருக்கிறது.
நன்றி: தினகரன்

aanaa
16th April 2013, 09:01 PM
வசந்த் டிவியில் பொண்ணு பார்க்கப் போறோம்!


வசந்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய தொடர் பொண்ணு பார்க்கப்போறோம். பெண் பார்ப்பது என்பது இன்றைய தினத்தில் ஒரு சடங்கு மாதிரியாகி விட்டது. மாப்பிள்ளை வீட்டார் கும்பலாக பெண் வீட்டுக்குப் போய் பஜ்ஜி, சொஜ்ஜி என்று வெட்டி விட்டு, கிளம்பும்போது போய் தகவல் செல்கிறோம் என்கிற செலவுகளுடன் கூடிய சம்பிரதாயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது, இந்த தொடர். இதில் நீங்கள் பார்க்கும் பெண் வீட்டார் ரொம்பவே வித்தியாசம். ஒவ்வொரு மாப்பிள்ளை வீட்டாரும் இவர்கள் வீட்டில் பெண் பார்க்கப் போய் அங்கே அவர்களுக்கு கிடைக்கும் அனுபவங்கள் அத்தனையையும் கலகல கலாட்டா ரகம். நகைச்சுவை நடிகர் பாண்டு மணப்பெண்ணின் தந்தையாக நடிக்க, சுருளிமனோகர், ரம்பாஸ்ரீ, அகிலா, ஈஸ்வரி, கவிதா உள்ளிட்டோர் இடம்பெறுகிறார்கள். சின்னத்திரை இயக்குனர் ஜெயமணி இந்த தொடரை இயக்குகிறார்.
நன்றி: தினமலர்

aanaa
21st April 2013, 07:08 AM
உதிரிப்பூக்கள் என்னாகும் சக்தியின் எதிர்காலம்?


சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் உதிரிப்பூக்கள் தொடர் எதிர்பாராத திருப்புமுனை காட்சிகளுடன் பயணிக்கிறது. சக்தி இறந்து விட்டாள் என்று வந்த எபிசோடைத் தொடர்ந்து பலரும் இயக்குனர் விக்ரமாதித்தனை தொடர்பு கொண்டு, சக்தி நிஜமாகவே இறந்து விட்டாளா? என்று கேட்டு தங்கள் அதிர்ச்சியை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் சக்தி இறக்கவில்லை. இறந்தது வேறு பெண் என்று சொன்னால் கதையின் வீரியம் போய்விடும் என்று யோசித்து சக்தி தொடர்பான ரசிகர்கள் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் ‘சமாளிபிகேஷன்’ பதிலை சொல்லி தப்பியிருக்கிறார், இயக்குனர். அப்படியானால் சக்திக்கு நேர்ந்தது தான் என்ன? வீட்டை விட்டுப்போன சக்தி எங்கே எப்படி இருக் கிறாள்? இயக்குனரை படப்பிடிப்புதளத்தில் நமது கேள்விக்கணை களால் வளைத்துக் கொண்டபோது, அவர் கூறியதாவது: “சக்தி, சிவநேசன் சம்பந்தப்பட்ட குடும்பத்தின் பொறுப்பில் இருக்கிறாள். அங்கே தான் தன் வளர்ப்புத் தந்தை சிவநேசனுக்கு மேகா என்ற ஒரு பெண் இருப்பதை அறிகிறாள். ஆனால் சிவநேசனுக்கு தன் மகள் உயிரோடு இருக்கிறாள் என்பது அதுவரை தெரியாது. இப்போது சக்தியின் மூலம் சொல்லப்பட்டால் அப்படியே பூரித்துப் போய்விட மாட்டானா? இந்த தகவலை எப்படியாவது அவனிடம் கொண்டு சேர்க்க, சக்தி கடும் முயற்சி மேற்கொள்கிறாள். இந்த தகவலை தருகிற அவசரத்தில் எந்த விதத்திலாவது சக்தி உயிரோடு இருப்பது தெரிய வந்துவிட்டால், அல்லது அவர்களே கண்டு பிடித்து விட்டால் தேவையில்லாத சிக்கல் தான் வந்து கும்மியடிக்கும். இதனால் தன்னை யாரென்று கண்டு பிடிக்கமுடியாத அளவுக்கு அந்த தகவலை சிவநேசனுக்கு அனுப்பி வைக்கிறாள் சக்தி.


இத்தனைக்கும் சிவநேசனுக்கு சக்தி மூலம் வந்து சேரும் இந்த தகவலுக்கு முன்பே அவன் தனது மகளை பார்த்திருக்கிறான். ஆட்டோ ஓட்டும்போது அவனிடம் வம்புச்சண்டை இழுத்து சண்டை போட்டவள் தான் இந்த மேகா. கோபத்தில் சிவநேசன் தன்னை அடித்ததும், தானே ஒரு பெண்ணை செட்டப் செய்து அவன் நகை திருடியதாக பழி போட்டு அவனை ஜெயிலுக்கும் அனுப்பி வைத்திருக்கிறாள். மேகா தான் மகள் என்பதை சிவநேசன் தெரிந்து கொள்வானா? தெரிந்து கொண்டால் அவனது ரியாக்ஷன்? இதற்கிடையே சக்தி இறந்து விட்டதாக கருதிய அவள் கணவன் லட்சுமிபதி குடும்பம், லட்சுமிபதிக்கு வேறு திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறது. இந்த திருமணம் தொடர்பான காரியங்களில் சிவநேசனும் துணையாக இருக்கிறான். திருமண விஷயம் சக்திக்கு தெரிந்தால் அவள் என்ன முடிவெடுப்பாள்? அவள் உயிரோடு இருப்பதை நிரூபித்து அந்தக் குடும்பத்திற்கு வந்தால் மீண்டும் அவளை ஏற்பார்களா? சிக்கலை அள்ளி அணைத்தபடி ஜெட் வேகத்தில் பறக்கிறது கதை.” நட்சத்திரங்கள்: சேத்தன், வடிவுக்கரசி, மானசா, ரவிராஜ், நித்யா, எல்.ராஜா, சுரேகா, மகாலட்சுமி, சர்வந்த், ரூபஸ்ரீ. கர்ணா, ரேவதிப்பிரியா, ஸ்ரீலேகா, ஸ்ரீதர், அகிலா, ஹரி. திரைக்கதை: முத்துச்செல்வன். வசனம்: சம்யுக்தா ஆனந்த். இசை:கிரண். ஒளிப்பதிவு: சாகித்யா சீனு. இயக்கம்: விக்ரமாதித்தன். தயாரிப்பு: ஹோம் மூவிமேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார்.
நன்றி: தினதந்தி

aanaa
21st April 2013, 07:29 AM
சூர்ய புத்திரியின் முன்ஜென்மங்கள்




கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது, சூர்ய புத்திரி தொடர். கிருஷ்ணாவாக நடிக்கும் லாவண்யாவுக்கு எதனால் ராம் (நிழல்கள் ரவி) குடும்பத்தினரின் மீது பகை என்பதையும், கிருஷ்ணா தான் சூர்யபுத்திரி என்பதையும், மிக வித்தியாசமான முறையில் தயாரித்து சின்னத்திரையில் ஒளிபரப்பப் போகிறார்கள். பல ஜென்மங்களுக்கு முன் சூர்யபுத்திரி எப்படியெல்லாம் ராம் குடும்பத்தினரால் பாதிக்கப்பட்டாள் என்பதையும், பிரமாண்டமான முறையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். முன்ஜென்ம கதையை கையில் எடுத்திருப்பதால் அதுதொடர்பான பல காட்சிகள் சின்னத்திரை ரசிகர்களை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்லும் என்கிறார், தொடரின் தயாரிப்பாளர் குட்டிபத்மினி. நட்சத்திரங்கள்: நிழல்கள் ரவி, ஏ.ஆர்.எஸ், குட்டிபத்மினி, லாவண்யா, ஸபர்ணா, ராஜா, ராஜ்குமார், ஆர்யா, நேபால், குமரேசன், ஸ்ரீதேவி, ஸ்ரீவித்யா, நேஹா, ஸ்வேதா, தீபா, சுஜாதா, டிவி.ராமானுஜம். எபிசோட் இயக்கம்: ஆர்.எல். சுதர்சன், வசனம்: ராதாகிருஷ்ணன், திரைக்கதை: உதயம், தயாரிப்பு: வைஷ்ணவி மீடியா ஒர்க்ஸ் லிமிடெட் சார்பில் குட்டிபத்மினி. இயக்கம்: தமிழ் பாரதி.
நன்றி: தினதந்தி

aanaa
21st April 2013, 07:30 AM
ஏற்காட்டில் இளவரசி


திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பகல் 130 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இளவரசி தொடரில், அடுத்து வரும் காட்சிகள் அனைத்தும் முழுக்க முழுக்க இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காடு மலைப்பகுதியில் படமாக்கப்பட்டிருக்கின்றன. கொலைப்பழியை ஏற்று ஜெயிலுக்கு சென்றஇளவரசி, அங்கு அடுக்கடுக்கான பிரச்சினைகளை எதிர்கொள்கிறாள். இநத பிரச்சினைகளில இருந்து அவளை விடுவிக்கப் போவது யார்? மகா-சுப்பிரமணி இடையே உள்ள உறவு திருமணத்தில் கொண்டு விடுமா? இல்லையெனில் பிரச்சினையில் கொண்டு விடுமா? இப்போது பரம எதிரிகளாக களம் இறங்கியிருக்கும் மோகன்சர்மா-தமிழரசி தம்பதிகள் பிரிந்ததற்கான உண்மைக் காரணம் என்ன? நட்சத்திரங்கள்: சந்தோஷ், ஸ்ரீகர், வசந்த், மகாலட்சுமி, அர்ச்சனா, ரேவதிபிரியா, அனுராதா கிருஷ்ணமூர்த்தி, மதுமோகன், சுபலேக சுதாகர். ஒளிப்பதிவு: விக்ரமன். திரைக்கதை: குரு சம்பத்குமார். வசனம்: பிரசன்னா. இயக்கம்: எம்.கே.அருந்தவராஜா. ஆக்கத்தலைமை: ஆர்.ராதிகா சரத்குமார்.
நன்றி: தினதந்தி

aanaa
21st April 2013, 07:44 AM
வல்லமை தாராயோ பெயர் மாறியது! இப்போது சக்தி போல யாருமில்லை




சீரியல்களில் எப்போதாவது நட்சத்திரங்களை மாற்றுவார்கள். ஒரு சீரியல் ஏழெட்டு வருடங்கள் தொடரும்போது இது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. ஆனால் என்னதான் மொக்கையாக இருந்தாலும் சீரியலின் தலைப்பை மட்டும் எதற்காகவும் மாற்ற மாட்டார்கள். ஆனால் இதிலும் இப்போது மாற்றம். பாலிமர் தொலைக் காட்சியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த வல்லமை தாராயோ தொடர், இப்போது சக்தி போல யாருமில்லை என்று பெயர் மாற்றம் கண்டிருக்கிறது. நட்சத்திரங்கள், டெக்னீஷியன்கள் யாரும் மாற்றமில்லை. பாங்காக்கில் ஷியாமின் பொருட்கள் கஸ்டம்சில் மாட்டிக் கொள்கிறது. ஷியாம் இருக்குமிடம் தேடி போலீஸ் விரைகிறது. ஷியாமை சிக்கலில் இருந்து விடுவிக்க சக்தி வாதாடுகிறாள். அவளால் ஷியாமை சட்டத்தின் பிடியில் இருந்து மீட்க முடிந்ததா? என்பது அடுத்து வரும் பரபரப்பு காட்சிகள்.
நன்றி: தினதந்தி

aanaa
23rd April 2013, 10:49 PM
காற்றினிலே வரும் கீதம்

சுந்தர் கே.விஜயன் இயக்கத்தில் "காற்றினிலே வரும் கீதம்' என்ற நெடுந்தொடர் விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. ரெட்சன் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜே.கே.ஆனந்த் இத்தொடரை தயாரிக்கிறார். "அன்னக்கிளி', "கிழக்கே போகும் ரயில்', "முதல் மரியாதை', "அலைபாயுதே' உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களுக்கு கதை, வசனம் எழுதிய ஆர்.செல்வராஜ், இந்த தொடருக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார். "எங்கேயும் எப்போதும்' படத்தின் இசையமைப்பாளர் சத்யா இசையமைக்கிறார். நடிகை வாணி விஸ்வநாத் முதன்முதலாக நடிக்கும் சின்னத்திரை தொடரான இதில், சுனில், திவ்யா, ரவி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

aanaa
27th April 2013, 03:09 AM
முத்தாரம்-400


சன் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகும் முத்தாரம் தொடர் விறுவிறுப்பான 400-வது எபிசோடை எட்டியிருக்கிறது. கதாநாயகி ரஞ்சனி (தேவயானி) 7 வருடங்கள் கழித்து கர்ப்பமாகி இருக்கிறாள். ஆனால் அந்த சந்தோஷத்தை கூட அனுபவிக்க விடாமல் அவளது கணவன் முரளி செய்யும் அழிச்சாட்டியங்கள் ஏராளம். தான் சேர்த்துக் கொண்ட இன்னொரு பெண்ணான சாண்டியின் (சந்தியா) வயிற்றில் வளரும் குழந்தைதான் தன்னுடைய குழந்தை என்று முரளி சொல்வது ரஞ்சனியின் வாழ்வில் மாபெரும் புயலாக உருவெடுக்கிறது. தன் வாழ்வின் சிக்கல்களை சரிசெய்யக்கூட முடியாத பெரும் நெருக்கடியில் ரஞ்சனி தவிக்கையில் அவள் அக்கா சிவரஞ்சனிக்கு சிறையில் கொலை அபாயம் கூடியிருக்கிறது. சிவரஞ்சனியை கொல்வதற்காக ஊட்டியில் இருந்து கிளம்பி வந்திருக்கும் பெண் தாதா காந்தா அவளை கொன்றாளா? அல்லது சிறைக்கு வெளியே இருக்கும் ரஞ்சனி, தன் அக்காவை கொலையில் இருந்து காப்பாற்றினாளா?


இன்னொரு பக்கம் ரஞ்சனியையே அழித்து விட நினைக்கும் அவளது அப்பா சும்மா இருப்பாரா? ரஞ்சனியை அவமானப் படுத்தி சந்தோஷப்படுவதே தன் வாழ்வின் லட்சியம் என்று இருக்கும் அவளது சீனியர் ஆபீசர் மங்கா (மஞ்சரி) தான் சும்மா இருப்பாளா? தன்னை காப்பாற்றி கொள்வதா, அக்காவை காப்பாற்றுவதா அல்லது சிக்கலுக்கு மேல் சிக்கலாகி கொண்டிருக்கும் தன் மகனை போன்ற சூர்யாவின் வாழ்க்கையை சரி செய்வதா, வீட்டுக்குள்ளேயே வைத்து இருக்கும் வெடிகுண்டு போல் எப்போதும் வெடிக்க தயாராக காத்திருக்கும் கார்த்திகாவை தான் சரி செய்வதா? எதை முதலில் எடுப்பது, தீர்ப்பது என்று யோசித்து கொண்டிருக்கும் ரஞ்சனிக்கு எதிர்பாராத ஒரு மாபெரும் பேரதிர்ச்சி இனி வரும் கதையில் காத்து இருக்கிறது. அவளை மட்டுமல்ல... அவள் குடும்பத்தை மட்டுமல்ல.. அவளை சார்ந்த அத்தனை பேரின் வாழ்வையுமே புரட்டிப் போடவிருக்கும் அந்த கிரைம் சுனாமியில் இருந்து ரஞ்சனி தன்னையும் தன் குடும்பத்தையும் எப்படி மீட்கப்போகிறாள்? ராஜ் பிரபுவின் திரைக்கதைக்கு பா.ராகவன் வசனம் எழுத, சுந்தர் கே.விஜயன் இயக்குகிறார். சினி டைம்ஸ் சார்பில் மெட்டி ஒலி சித்திக் தயாரிக்கிறார்.
நன்றி: தினதந்தி

aanaa
10th May 2013, 11:55 PM
திருப்பங்களுடன் வாணிராணி


திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வாணிராணி தொடர் திருப்பங்களுடன் விரைகிறது. வாணியும், ராணியும் ஒரே குடும்பத்தில் அண்ணன்-தம்பிக்கு வாழ்க்கைப் பட்டு குடும்பமாய் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தாலும், இப்போது வாணியின் கணவன் பூமிநாதனுக்கும் அவனின் தம்பி சாமிநாதனுக்கும் பிரச்சினை. இந்த பிரச்சினையின் முடிவில் சாமிநாதன் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்? அண்ணனும் தம்பியும் ஒரே அப்பாவுக்கு பிறந்திருந்தாலும், அவர்கள் வேறு வேறு தாய்க்கு பிறந்தவர்கள் என்ற உண்மையை பூமிநாதன் தம்பியிடம் தெரிவித்தது போல, குடும்பத்து பிள்ளைகளிடமும் போட்டு உடைப்பாரா? இதற்கிடையே ராணியின் மகள் செல்வி ராஜேஷை காதலிப்பது இருவர் வீட்டிற்கும் தெரிய வருமா? நட்சத்திரங்கள்: ராதிகா சரத்குமார், வேணு அரவிந்த், பப்லு, ரவிகுமார், ஜோக்கர்துளசி, ஜோதிரெட்டி, சாந்தி வில்லியம்ஸ், வீணா வெங்கடேஷ், அரண், விக்கி, சுதீப், நிகிலா ராவ், ராஜ்குமார், பேபி நேஹா. கதை, தயாரிப்பு: ராடான் மீடியா. வசனம்: பாராகவன். திரைக்கதை: எஸ்.குமரேசன். ஒளிப்பதிவு: காசிநாதன். இயக்கம்: ஓ.என்.ரத்னம். ஆக்கத் தலைமை: ராதிகா சரத்குமார்.
நன்றி: தினதந்தி

aanaa
11th May 2013, 12:00 AM
பொக்கிஷம்-200


கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பொக்கிஷம் தொடர், 200-வது எபிசோடை தாண்டியபடி தொடர்கிறது. விறுவிறுப்பான திருப்பங்களுடன் விரையும் இந்த தொடரின் கதைப்பின்னணி வருமாறு. வசந்தன்-கண்மணிக்கிடையேயான கருத்து வேறுபாட்டில் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு போய் விடுகிறாள், கண்மணி. இந்த சூழலில் அவன் மாயாவை சந்திக்கிறான். ஒரு இக்கட்டான சூழலில் அவளுக்கு அவன் உதவி செய்ய, அந்த உதவிக்கு எதிர்வினையாக பிரச்சினை மாயா-வசந்தனை சுற்ற, அது எந்த அளவுக்கு வசந்தனின் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது?


வசந்தன்-கண்மணி பிரிவுக்குப் பின்னணியில் தெரிந்தோ தெரியாமலோ இருப்பவள் வழக்கறிஞர் அஸ்வதி. இவள் திருமணத்துக்கு முன்பே தன் காதலனுடன் நெருங்கிப் பழகியதில் தாய்மையடைகிறாள். ஆனால் வசந்தனின் தோழி என்ற முறையில் கண்மணியின் குடும்பம் வசந்தனை சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறது. குழந்தைக்கு அப்பாவே அவன் தான் என்று ஒருகட்டத்தில் முடிவே செய்கிறது. இதனால் வசந்தனை நிரந்தரமாக பிரிந்து விடும் நோக்கில் அவன் மீது விவாகரத்து வழக்கு தொடுக்கிறாள், கண்மணி. இந்த வழக்கில் கண்மணிக்கு ஆதரவாக அஸ்வதியின் தாயார் சத்யபாமா ஆஜராகிறாள். வசந்தனுக்காக அஸ்வதி வாதாடுகிறாள். தன் மீதான குற்றச்சாட்டு அபத்தமானது என்று சொல்லும் வசந்தன், விவாகரத்துக்கு மறுத்து விடுகிறான். இதையும் தாண்டி வழக்கின் முடிவு என்னாகும்? இன்னொரு புறம் வசந்தனின் தம்பி ஆனந்தன் இந்த சூழலை பயன்படுத்தி குடும்ப சொத்துக்களை அபகரித்துக் கொள்கிறான். இதனால் திருமணத்துக்கு தயாராக இருக்கும் வசந்தனின் 2 தங்கைகளின்எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இதைக்கண்டு மனம் பொறாத வசந்தனின் சித்தப்பா, ஆனந்தன் மீது வழக்கு தொடுக்கிறார். இதனால் வெகுண்ட ஆனந்தன், ஒரு விபரீத முடிவெடுக்கிறான். அதனால் வசந்தனின் குடும்பம் எந்த மாதிரியான பாதிப்புகளை சந்தித்தது?


சத்யபாமாவின் மகன் ரஞ்சன் ஜெயிலில் இருந்த வெளியே வந்ததும் வசந்தனை பழிவாங்கத் துடிக்கிறான். அதற்காக அவன் வைத்த குறி, வசந்தனின் தங்கை சுகுணா. அவன் விரித்த வஞ்சக வலையில் சுகுணாவும் விழுந்து விடுகிறாள். அவனது அன்பு போலியானது என்பதை புரிந்து கொண்டபோது அவளால் தப்ப முடிந்ததா? தொடரை இயக்கி தயாரிப்பதோடு வசந்தன் கேரக்டரிலும் நடிக்கிறார், திருச்செல்வம். நட்சத்திரங்கள்: திருச்செல்வம், மீரா, ஸ்ரீவித்யா, பாவனா, நளினி, சத்யபிரியா, விஜய்கிருஷ்ணா, பவானி, கற்பகம், வித்யா, பவ்யகலா, பாரதிகண்ணன், அப்பல்லோ ரவி, விஸ்வநாத், துரை, நந்தினி, ரமேஷ், ஆதவன், ஆடிட்டர் ஸ்ரீதர், சிவா. பிரகாஷ். ஒளிப்பதிவு: தியாகராஜன். வசனம்: திருச்செல்வம்- பிரியா. கதை, திரைக்கதை, இயக்கம்: திருச்செல்வம். தயாரிப்பு: திருச்செல்வம் தியேட்டர்ஸ்.
நன்றி: தினதந்தி

aanaa
18th May 2013, 07:01 AM
வாணி–ராணியில் மகாலட்சுமி


திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘வாணி ராணி’ தொடரில் அதிரடி திருப்பமாக பூங்கொடி என்கிற இளம் பெண் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த கேரக்டரில் நடிகை மகாலட்சுமி நடிக்கிறார்.


மனோ–ஜோதி தம்பதியரின் செல்ல மகள் பூங்கொடி. எல்லா விஷயத்திற்கும் பந்தயம் கட்டுவது இவளின் தனி குணம். பூங்கொடி இப்போது வாணி, ராணி வீட்டில் அடியெடுத்து வைக்கப் போகிறாள். அவளின் வருகை அந்த வீட்டில் ஒரு பூகம்பத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது தொடரின் பரபரப்பான திருப்பம்.
நன்றி: தினதந்தி

aanaa
18th May 2013, 07:06 AM
புதுப்புது திருப்பங்களுடன் கார்த்திகை பெண்கள்




சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு கார்த்திகை பெண்கள் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் காணாமல் போன சாருவை பரபரப்பாக தேடி வருகின்றனர். சாருவைக் கடத்தியது அரவிந்தா? அல்லது பெரியவரின் ஆட்களா? என்று ஹாஸ்டலில் உள்ள அத்தனை பேரும் தவித்து வருகின்றனர். கார்த்திகைப் பெண்கள் விரைவில் 200-வது எபிசோடை எட்ட உள்ளது. தினம் தினம் புதுபுது திருப்பங்களுடன் போய்க்கொண்டிருக்கிறது என்கிறார், கார்த்திகைப் பெண்கள் தொடரின் கதாசிரியரும் தயாரிப்பாளரும்மான எம்.திருமுருகன்.

aanaa
26th May 2013, 03:44 PM
பிரசாத்தின் வருகை ஏற்படுத்தும் அதிரடி மாற்றம்


சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நாதஸ்வரம் தொடரில் இடம் பெறும் உணர்வுபூர்வமான பரபரப்பு காட்சிகள் தொடரை சுவாரசியமாக்குகின்றன. மலேசியாவில் கோபி குடும்பத்துக்கு அறிமுகமான பிரசாத், வேலைக்காக காரைக்குடி வருகிறான். அவன் வருகையைத் தொடர்ந்து கதையில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள் கதையை இன்னொரு விறுவிறுப்புக் கோணத்தில் கொண்டு போகிறது. பிரசாத்தின் வருகையினால் ஏற்படும் பல கேள்விகள் தவிர்க்க முடியாதவை. அவன் யார்? காரைக்குடியில் காணாமல் போன சொக்குவின் மூத்த மகனா? அல்லது மகாவை திருமணம் செய்து கொள்ளப்போகிறவனா? கோபியின் அண்ணன் என்றால், சொக்குவின் வீட்டில் தான் வாழப்போகிறானா? அதனால் ஏற்படும் மாற்றங்கள், குழப்பங்கள் என்னென்ன?


பிரசாத் இங்கே வந்து விட்டதால் அவனது பெற்றோரின் தற்போதைய நிலை என்ன? ஒருவேளை பிரசாத், சொக்குவின் வீட்டு வாரிசு என்பது உறுதிப்பட்டால் அதுவரை அவனை வளர்த்து உருவாக்கிய பெற்றோர் விட்டுக் கொடுப்பார்களா? கோபி-பிரசாத் நட்பு நீடிக்குமா?
இது ஒருபக்கம் போய்க் கொண்டிருக்க, இங்கே நீலாவதியிடம் ஏற்பட்ட மனமாற்றம் போல் மகேசிடமும் மனமாற்றம் ஏற்படுமா? காணாமல் போன பரமு-ரமேஷ் திரும்பக் கிடைப்பார்களா? காமு, பரமு பிரசவம் நல்லமுறையில் நடைபெறுமா? மகா, பிரசாத்தை ஏற்றுக் கொள்வாளா?
மயில், தெய்வானை, மீனாட்சி மகேசுடன் இணைவார்களா? ரோகிணியின் தாய் மாமன் மகன் திருமணம் தடையின்றி நடைபெறுமா? ரோகிணியின் திருமணத்தால் ஒதுங்கிச் சென்ற ராஜேஷ் மீண்டும் வருவானா? ராகினியின் வாழ்வில் அடுத்த கட்டம் என்ன? பிரசாத் வருகையால் கோபி-மலர் உறவில் விரிசல் ஏற்படுமா? தொடரும் காட்சிகள் இத்தனை பரபரப்புக் கேள்விகளுக்கும் விடை சொல்லும் என்கிறார், தொடரின்இயக்குனரும் தயாரிப்பாளருமான திருமுருகன்.
நன்றி: தினதந்தி

aanaa
3rd June 2013, 06:41 AM
மேகாவை மருமகளாக்கத் துடிக்கும் அலமேலு!


சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் உதிரிப்பூக்கள் தொடர், ஷக்தியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியபடி தொடர்கிறது. வீட்டை விட்டுப்போன பிறகு தான் தன் வளர்ப்புத் தந்தை சிவநேசனுக்கு ஒரு பெண் இருக்கிறாள் என்ற உண்மை தெரிய வருகிறது ஷக்திக்கு. அவளை எப்படியாவது கண்டுபிடித்து சிவநேசனிடம் சேர்க்க சைலண்டாக ஏற்பாடு செய்து வருகிறாள். ஏற்கனவே ஷக்தி தேடிக்கொண்டிருக்கும் மேகா என்ற அந்தப் பெண் இப்போது இருப்பது சென்னையில். சிவநேசன் தான் தன் தந்தை என்று தெரியாமல் அவனிடமே இரண்டொரு தடவை மோதிக் கொண்டிருக்கிறாள். ஆரம்பத்தில் வார்த்தைகளில் வெளிப்பட்ட கோபம் பிறகு பழிவாங்கலாக மாறி, ஒருகட்டத்தில் சிவநேசனை போலீஸ் ஸ்டேஷன் வரை கொண்டு சேர்த்தது. ஆனால் அடுத்தடுத்து நடந்த சில நெகிழ்வு சம்பவங்களால் இப்போது மேகா சிவநேசனிடம் நட்பு பாராட்டுகிறாள். இந்த நேரத்தில் தான் சிறுவயதில் காணாமல் போன தன் குழந்தை உயிரோடு இருக்கிறாள் என்ற தகவல் சிவநேசனை எட்ட, அதை தன் மகள் என்று தெரியாமல் மேகாவிடமே சொல்லி பரவசப்படுகிறான். இந்த தகவல் மேகாவையும் மகிழ்ச்சிப்படுத்த, அப்போதே அந்தக் குழந்தையை தேடிப்போகிறார்கள். அந்த குழந்தை பிறந்ததும் அதற்கு பிரசவம் பார்த்த நர்சிடமே அந்தக் குழந்தை தங்கி விட்டதாக அவர்கள் அறிகிறார்கள். உடனே நர்ஸ் வேலை பார்த்த ஆஸ்பத்திரிக்கே வந்து விசாரித்தபோது தான், நர்ஸ் பணியில் இருந்து ஓய்வு பெற்ற விஷயம் தெரிய வருகிறது. ஒருவழியாக பென்ஷன் ஆபீசில் அந்த நர்சை கண்டு பிடிக்கிறார்கள். ஆனால் நர்சோ அந்தக் குழந்தையை தன் தம்பி வளர்க்க ஆசைப்பட்டான் என்பதால், குழந்தையை அவனிடம் கொடுத்து விட்டேன் என்று சொல்லி அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார். இதற்கிடையே ஷக்தியின் கணவன் லட்சுமிபதி தன் வீட்டில் இருக்க வெறுப்புற்று அங்கிருந்து சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறுகிறான். மேகா இருக்கும் வீட்டில் ஒரு போர்ஷன் காலியாய் இருக்க...அங்கே தங்குகிறான். மேகா ஆரம்பத்தில் சிவநேசனை சிக்கலில் மாட்டிவிட வேண்டும் என்பதற்காக ஒரு ரவுடியிடம் பேரம் பேசிய காலகட்டத்தில், மேகாவின் அழகில் போதையாகும் அவன், அவளை வேட்டையாட முயலுகிறான். அந்த நேரத்தில் லட்சுமிபதி மேகாவை காப்பாற்றி ரவுடியை போலீசில் ஒப்படைக்க, ஜாமீனில் வெளிவரும் ரவுடி லட்சுமிபதியை கண்மூடித்தனமாக தாக்குகிறான். இந்த தாக்குதலில் லட்சுமிபதியின் கிட்னியில் பாதிப்பு நேர, மாற்று சிறுநீரகம் கிடைத்தால் தான் அவனை காப்பாற்ற முடியும் என்ற நிலை. லட்சுமிபதிக்கு சிறுநீரகம் தர அவன் குடும்பத்தில் யாரும் தயாரில்லை. ஆளுக்கொரு சாக்குப்போக்குசொல்லி நழுவிக் கொள்கிறார்கள். வீட்டை எதிர்த்து ரவியை கல்யாணம் பண்ணிக் கொண்ட அலமேலுவின் இளைய மகள் கருணாம்பிகையும் அவள் தன் காதல் கணவனும் வந்து தங்கள் கிட்னியை தரத் தயாராகிறார்கள். இந்த உதவும் பட்டியலில் மேகாவும் முன்னிற்க, ஆச்சரியமாய் அவள் கிட்னிதான் பொருந்துகிறது. ஆபரேஷனும் வெற்றிகரமாய் நடக்கிறது.


அலமேலு அம்மாள் இப்போது தான் சுயநலம் கொண்ட தன் மகள்களையும் மருமகன்களையும் புரிந்து கொள்கிறாள். இப்போது மேகாவை அவள் மிகவும் மரியாதையுடன் பார்க்கத் தொடங்குகிறாள்.அவளே தன் மருமகளாக வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறாள். அலமேலுவின் பிடிவாதம் ஜெயித்து மேகா-லட்சுமிபதி திருமணம் நடக்குமா? அப்படி நடந்தால் உயிரோடு இருக்கும் ஷக்தியின் எதிர்காலம்? தட்சிணாமூர்த்தியின் இளைய மகள் நிலா காதலிக்கும் இளைஞன் நல்லவனில்லை. அதுதெரியாமல் அவள் தந்தை தட்சிணாமூர்த்தி அவர்கள் திருமணத்துக்கு ஓ.கே. சொல்லி விடுகிறார். ஆனால் அவன்நல்லவன் இல்லை என்று தெரிந்து கொள்ளும் வளர்ப்புத் தந்தை சிவநேசன் என்ன பண்ணப் போகிறான் என்பது இன்னொரு அதிரடித் திருப்பம் என்கிறார், தொடரை இயக்கும் விக்ரமாதித்தன்.
நன்றி: தினதந்தி

aanaa
3rd June 2013, 06:45 AM
புகுந்த வீடு


திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தொடர், 'புகுந்த வீடு'. ராதாவை டார்ச்சர் செய்து கொண்டிருந்த அனுஷா, ஜமீன் குடும்ப வாரிசு பிரச்சினையில் சிக்கித் தவிக்கின்றாள். அனுஷாவின் உண்மையான பின்னணியை அறிந்து கொண்ட ராதா, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவளின் முகத்திரையை கிழிக்க முடிவு செய்கிறாள். நிம்மதி இழந்து தவிக்கும் அனுஷா இந்த ரகசியம் விசுவநாதனுக்கு தெரிய வந்தால் என்னாகுமோ என்று அஞ்சுகிறாள். ராதாவை இனி சமாளிக்க முடியாது என்ற முடிவுக்கு வரும் அனுஷா, மீண்டும் வைஜெயந்தியை மிரட்டுகிறாள். அதே சமயம் எதேச்சையாக விசுவநாதனின் தங்கை தேவியின் உண்மையான ஜாதகம் ராதாவின் டேபிளுக்கு வருகிறது. ராதாவின் கண்களில் இந்த ஜாதகம் அகப்பட்டதா? தொடரும் காட்சிகளில் விடை கிடைக்கும்.
நன்றி: தினதந்தி

aanaa
4th June 2013, 03:15 AM
வம்சம்


http://www.youtube.com/watch?v=44NgusF4FOg




http://www.youtube.com/watch?v=MRtyi8bn4OU

aanaa
7th June 2013, 12:01 AM
லட்சுமிபதி உயிர்பிழைப்பானா?.... உதிரிப்பூக்கள் தொடரில் திருப்பம்!




சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் உதிரிப்பூக்கள் தொடர் நாயகன் லட்சுமிபதி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறான். இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடும் அவனுக்கு சிறுநீரகம் கிடைக்குமா? என்ற கேள்வியோடு தொடர் நகர்கிறது. உதிரிப்பூக்கள் தொடரின் நாயகி சக்திக்கு தான் தன் வளர்ப்புத் தந்தை சிவநேசனுக்கு ஒரு பெண் இருக்கிறாள் என்ற உண்மை தெரிய வருகிறது அவளை எப்படியாவது கண்டுபிடித்து சிவநேசனிடம் சேர்க்க ஏற்பாடு செய்து வருகிறாள். ஷக்தி தேடிக்கொண்டிருக்கும் என்ற அந்தப் பெண்ணின் பெயர் மேகா. இப்போது இருப்பது சென்னையில். சிவநேசன் தான் தன் தந்தை என்று தெரியாமல் அவனிடமே இரண்டொரு தடவை சண்டைபோட்டிருக்கிறாள். ஆரம்பத்தில் வார்த்தைகளில் வெளிப்பட்ட கோபம் பிறகு பழிவாங்கலாக மாறி, ஒருகட்டத்தில் சிவநேசனை போலீஸ் ஸ்டேஷன் வரை கொண்டு சேர்த்தது. ஆனால் அடுத்தடுத்து நடந்த சில நெகிழ்வு சம்பவங்களால் இப்போது மேகா சிவநேசனிடம் நட்பு பாராட்டுகிறாள்.
................

aanaa
23rd June 2013, 09:04 PM
சொன்னது நீதானே!


ஜெயா டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர், ‘சொன்னது நீதானே’


பரபரப்பான மும்பையில் தங்களுடைய மூன்று குழந்தைகளோடு வசித்து வரும் பிரதீப்–மோனா தம்பதிகள் தங்களின் 12 வருட வாழ்க்கையில் நிறைய ஏற்ற, இறக்கங்களை சந்திக்கின்றனர். பிரதீப் தன்னுடைய தந்தையின் கட்டுப்பாட்டிலிருந்து பிரிந்து சுதந்திரமாக வாழ ஆசைப்படுகிறான். அதற்காக நகரத்தில் ஒரு வீட்டை வாங்கி தன் குடும்பத்தோடு குடியேறுகிறான். மோனா தன்னுடைய நிர்வாகத் திறமையால் வீட்டையும் குழந்தையையும் அன்புடன் கவனித்துக்கொள்கிறாள்.


இங்கு தான் சிக்கலே. குழந்தைகளிடம் மோனா எடுத்துக்கொள்ளும் அதிகபட்ச நேரம் பிரதீப்பை பாதிக்கிறது. குழந்தையின் மீதான மனைவியின் அதிகபட்ச கவனம் தன்னுடைய உணர்வுகளை புறக்கணிப்பதாக அவனை எண்ண வைக்கிறது. இதனால் தம்பதிகளுக்கிடையே விரிசல் ஆரம்பிக்கிறது. இந்த நேரத்தில் பிரதீப் பணி புரியும் நிறுவனத்தில் முதலாளியாக அவனது முன்னாள் காதலி அனுஷ்கா நுழைகிறாள். கல்லூரி நாட்களில் பிரதீப்பின் காதலை ஏற்க மறுத்தவள் இவள். ஆனால், அந்த அனுஷ்கா இப்போது பிரதீப்பிடம் எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் அவனது சட்ட பூர்வமற்ற காதலை ஏற்கிறாள். இதனால் அவள் மீதான மோகத்தில் வீட்டை விட்டு வெளியேறும் பிரதீப், மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்புகிறான். இந்த சூழ்நிலையில் மோனா குழந்தைகளை வைத்துக் கொண்டு என்ன செய்யப்போகிறாள்? விறுவிறுப்பான கோணத்தில் செல்கிறது தொடர்.
நன்றி: தினதந்தி

aanaa
23rd June 2013, 09:06 PM
ரஞ்சனியின் புதிய அவதாரம்!




சன் டி.வியில் திங்கள் முதல் வெள்ளி வரை நாள்தோறும் பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘முத்தாரம்’. 400 எபிசோடுகளை தாண்டி வெற்றிநடைபோடும் இந்த தொடரின் புதிய கதாநாயகியாக நடிகை விஜயலட்சுமி இணைந்து கொண்டிருக்கிறார். திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் தனது அசாத்தியமான நடிப்பால் ரசிகர்களின் இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்து நிரந்தர இடம் பிடித்தவர் ‘ப்ரண்ட்ஸ்’ விஜயலட்சுமி.


தொடரில் காவல் துறை அதிகாரியாகவும் பொறுப்புள்ள குடும்பத் தலைவியாகவும் ரஞ்சனி இத்தனை காலம் பட்ட பாடுகளும், சந்தித்த துன்பங்களும் அடுத்தக் கட்டத்தை அடைந்து புதிய பரிமாணம் எடுத்திருக்கும் வேளையில், ரஞ்சனி கதாபாத்திரத்தில் மேலும் அழுத்தம் சேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது, விஜயலட்சுமியின் வரவு.


மனித மிருகங்களை வேட்டையாடி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ரஞ்சனிக்கு காவல் துறைக்குள்ளே ஏகப்பட்ட சிக்கல்கள். அது மட்டுமல்லாமல் அவளது தனிப்பட்ட வாழ்க்கையில் கணவன் முரளியால் ஏற்படும் இன்னல்களிலும் அவதிப்படுகிறாள். இப்போது அவளது கணவன் ரஞ்சனியை விவாகரத்து செய்யும் அதே நேரம் பணியில் அவளுக்கு சஸ்பென்ஷன் ஆர்டர் நீட்டப்படுகிறது. மத்தளம்போல் இருபுறமும் அடிபடும் ரஞ்சனி எடுக்கும் முடிவு, அவள் வேலை பார்க்கும் இடத்திலும் சரி, அவளது குடும்பத்திலும் சரி, நம்பமுடியாத பல வியப்பூட்டும் விளைவுகளை ஏற்படுத்துகிறது.


ஒரு நல்ல மனைவி எப்படி இருப்பாள் என்பதை வாழ்ந்து காட்டும் ரஞ்சனி, அத்தனை கணவன் மார்களுக்கும் ஒரு வாழும் பாடநூலாகவே இருக்கிறாள். இப்படி ஒரு மனைவி நமக்கு அமைவாளா என ஒவ்வொரு ஆணும் ஏங்கும் விதத்தில் அவளது நடவடிக்கைகள் அமைகின்றன. இப்படி ஒரு மருமகள் கிடைக்க நான் என்ன தவம் செய்திருப்பேன் என்று ரஞ்சனியின் மாமியார் அடையும் நெகிழ்ச்சி, நாட்டிலுள்ள அத்தனை மாமியார்களுக்குள்ளும் ஏக்கப் பெருமூச்சை உண்டாக்கும்.


தனது தனிப்பட்ட வாழ்விலும் பணி வாழ்விலும் வந்துபோகும் சூறாவளிச் சிக்கல்களை தனியொரு பெண்ணாக ரஞ்சனி எதிர்கொள்ளும் விறுவிறுப்பான கட்டத்தில், புதிய ரஞ்சனியாக இப்போது விஜயலட்சுமி வந்திருப்பது முத்தாரத்துக்கே ஒரு மணிமகுடம். சினி டைம்ஸ் சார்பில் ‘‘மெட்டி ஒலி’’ எஸ்.சித்திக் தயாரிக்கும் இத்தொடரின் திரைக்கதையை ராஜ் பிரபு எழுத, ராகவன் வசனம் எழுதுகிறார். இயக்கம்: சுந்தர் கே.விஜயன்.
நன்றி: தினதந்தி

aanaa
23rd June 2013, 09:07 PM
மருமகள்களை திருத்த வரும் மாமியார்




ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘மாமியார் தேவை’ தொடர், 50–வது எபிசோடை எட்டியிருக்கிறது.


இளம் வயதில் மனைவியை இழந்த கங்காதரன் மிகப்பெரிய தொழில் அதிபர். இவருக்கு பிரேம்குமார், வசந்த்குமார், தீபக்குமார் என்று மூன்று மகன்கள். மூன்று பேருக்கும் திருமணம் நடந்து விட்டது. பிரேம்குமார் மனைவி நீலவேணியும், வசந்த்குமார் மனைவி கிரிஜாவும் தனிக்குடித்தனம் போக துடிக்கிறார்கள். அதற்காக தங்கள் கணவன்களையும் உருட்டி மிரட்டி பணிய வைத்து விடுகிறார்கள்.


அந்த விவரம் மூன்றாவது மகன் தீபக்குமாருக்கும் அவன் மனைவி மீராவுக்கும் தெரிய வரும்போது துடித்துப் போகிறார்கள். அண்ணன்கள் குடும்பத்தில் சமாதானம் பேசி தோற்றுப் போகிறார்கள். வீடு விரிசல் விழும் நிலைக்கு வரும்போது கங்காதரன் துடிதுடித்துப் போகிறார். ‘இந்த நேரத்தில் குடும்பம் பிரிந்து போகாமல் தடுக்கும் விதமாக மனைவி இல்லாமல் போனாளே’ என்று வருத்தப்படுகிறார். மாமனார் மன ஓட்டத்தை புரிந்து கொண்ட இளைய மருமகள் மீரா, மாமனாருக்கு திருமணம் செய்து வைக்க பொருத்தமான மாமியாரை தேடுகிறாள்.


அந்த வகையில் மீரா கண்டெடுக்கும் மாமியார் துர்கா, துர்காதேவியை போன்று நீதிக்காக போராடும் போர்க்குணம் கொண்டவள். அத்தகைய துர்கா, கங்காதரனை மணந்து கொண்டு பெரிய குடும்பத்தில் மருமகளாக, மூன்று பெண்களுக்கு மாமியாராக வருகிறாள். வந்த வேகத்தில் பிரிய நினைக்கும் மகன்களைமருமகள்களை கட்டுப்படுத்தி ஒரே குடும்பமாக வாழ வைக்க அவளால் முடிகிறதா என்பதே தொடரின் கதை.


நட்சத்திரங்கள்: சுபலேகா சுதாகர், யுவராணி– குமரேசன், சுக்ரன்– சோனியா, விஸ்வநாத்– வந்தனா, ரவி கவுடா– ‘‘நாதஸ்வரம்’ ஸ்ருதிகா, அழகு, ஜி.கே., ஈ.ராம்தாஸ் இவர்களுடன் பிரபல பட அதிபர் அழகன் தமிழ்மணியும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். டி.ஐ.பிலிம் கார்ப்பரேசன் சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரிக்க, துணை தயாரிப்பு: போரூர் கே.எம்.கண்ணன், தனுஷ் அஜய்கிருஷ்ணா, ஐஸ்வர்யா அஜய்கிருஷ்ணா. திரைக்கதை: பாபா கென்னடி. வசனம்: கிருஷ்ணாபுரம் கிருஷ்ணசாமி. ஒளிப்பதிவு: மணிகண்டன். எடிட்டிங்: ராமசாமி, இசை: குணா, பாடல்: பிறைசூடன். இயக்கம்: கே.ஜே.தங்கபாண்டியன்.
நன்றி: தினதந்தி

aanaa
23rd June 2013, 09:10 PM
அனந்தபத்மநாப நாடார் சரித்திரம்




வசந்த் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு ‘மண் பேசும் சரித்திரம்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ் மண்ணில் மறைக்கப்பட்ட மற்றும் மறுக்கப்பட்ட சரித்திரப் பின்னணிகளை ஆதாரங்களோடு இந்நிகழ்ச்சி அலசுகிறது. அந்த வகையில் இன்று அனந்தபத்மநாப நாடார் என்கிற மாவீரனின் சரித்திரம் இடம் பெறுகிறது.


18–ம் நூற்றாண்டில் திருவிதாங்கூரை ஆண்ட மார்த்தாண்ட வர்மாவின் உற்ற தோழனாகவும் தளபதியாகவும் விளங்கிய அனந்த பத்மநாப நாடாரின் சரித்திரம் பற்றி பல தகவல்கள் இடம் பெறுகின்றன. குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள தச்சன்விளை என்ற ஊரில் அனந்தபத்மநாப நாடார் வாழ்ந்த 64 அறைகள் கொண்ட மாளிகை இருந்த இடம், அவர் வெடிபொருட்கள் தயாரிக்க பயன்படுத்திய இரும்பு தாதுப்பொருட்கள், அவருக்கு அரசனால் கொடுக்கப்பட்ட செப்புப்பட்டயம் போன்றவையும் இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்றிருக்கிறது. அனந்தபத்மநாபரின் சமாதியும் இங்கே காணக் கிடைக்கிறது.


அது மட்டுமல்லாமல் அனந்தபத்மநாப நாடாரின் வரலாற்றை தெரிந்து கொள்ள உதவும் ஓட்டக்காரனின் சமாதியையும் மார்த்தாண்ட வர்மாவால் கொல்லப்பட்ட தம்பிமார்கள் புதைக்கப்பட்ட இடத்தையும் ‘மணி பேசும் சரித்திரம்’ நிகழ்ச்சிக் குழுவினர் தேடித்திரிந்து கண்டறிந்திருக்கிறார்கள். இதில் தம்பிமார்களின் சமாதி மேல் வைக்கப்பட்ட நடுகற்களை அப்பகுதி மக்கள் மாடசாமி என்ற பெயரில் வழிபட்டு வருவதும் தெரிய வந்திருக்கிறது.


அனந்தபத்மநாப நாடார் பற்றி இதுவரை வெளிச்சத்திற்கு வராத பல தகவல்களை எழுத்தாளர் பொன்னீலன், ஆய்வாளர் இமானுவேல், அனந்தபத்மநாபரின் வாரிசு வரதராஜன் போன்றோர் மூலமும் இந்நிகழ்ச்சி வெளிப்படுத்துகிறது. நிகழ்ச்சி இயக்கம்: கி.முத்துக்குமார்.
நன்றி: தினதந்தி

aanaa
30th June 2013, 04:19 AM
ஜெட் வேகத்தில் கார்த்திகைப் பெண்கள்


சன் தொலைக்காட்சியில் திங்கள்முதல் வெள்ளி வரை தினமும்இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘கார்த்திகைப் பெண்கள்’ தொடர் ஒரு திரில்லர் திரைக்கதைக்கே உரிய வேகத்துடன் விறுவிறுப்போடு போய்க்கொண்டிருக்கிறது. சாருவையும், ஆர்த்தியையும் கொல்ல வந்த பெரியவரின் மகன் முத்துவை சாருவும், ஹாஸ்டல் பெண்களும் பிடித்து இன்ஸ்பெக்டர் கணபதியிடம் ஒப்படைத்தது கதையில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஒரு புறம் ஆஸ்பத்திரியில் போலீஸ் காவலில் இருக்கும் முத்து.


அதே ஆஸ்பத்திரியில் முத்துவால் குத்தப்பட்ட சுமித்ரா.


தன் மனைவியைக் குத்தியதால் முத்து மேல் வெறியாக உள்ள இன்ஸ்பெக்டர் கணபதி.


முத்துவைப் பழி வாங்கத் திட்டமிடும் சாரு, ஆர்த்தி.


ஆர்த்தியையும், சாருவையும் கொன்றுவிட்டு முத்துவை மீட்கத் துடிக்கும் பெரியவர்.


தன் கணவனின் மனமாற்றத்தைப் புரிந்து கொள்ளாமல் அவனிடமிருந்து விவாகரத்து வாங்கியே தீருவது என்னும் பிடிவாதத்தோடு இருக்கும் சுமித்ரா.


நிலைமை புரியாமல் குழப்பத்தை ஏற்படுத்தி சாருவை சிக்கலுக்குள்ளாக்கும் மூர்த்தி.


கொலை நடக்க வாய்ப்புள்ள சூழலில் மாமியாரிடம் கோபித்துக்கொண்டு சாருவுக்கு சுமையாக வந்து விட்ட நிவி.


தங்களைப் பலி கொடுத்தாவது சாருவுக்கு உதவத் துடிக்கும் வானதி, செண்பகா, ப்யூலா, செல்வி.


கதையில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களும் தொடரை ஜெட் வேகத்தில் கொண்டு செல்ல உதவுகின்றனர்.


தயாரிப்பு: திரு பிக்சர்ஸ். கிரியேட்டிவ் ஹெட், கதை: எம்.திருமுருகன். திரைக்கதை, வசனம்: பாஸ்கர் சக்தி. இசை: சஞ்சீவ் ரத்தன். இயக்கம்: கவிதாபாரதி.
நன்றி: தினதந்தி

aanaa
30th June 2013, 04:21 AM
சூர்யபுத்ரி


கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சூர்யபுத்ரி தொடர், சுவாரசிய கதைப்பின்னணி, எதிர்பாராத திருப்பங்களில் 250–வது எபிசோடைக் கடந்தபடி தொடர்கிறது. வைஷ்ணவி மீடியா ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனம் சார்பில் குட்டிபத்மினி இந்த தொடரை தயாரிப்பதோடு, தொடரில் பாரதி என்ற புதுமைப்பெண் கேரக்டரிலும் நடித்து வருகிறார்.


பாரதியின் குடும்பத்தை அழிப்பேன் என்று சபதம் செய்து அந்த வீட்டின் மருமகளாகிறாள், கிருஷ்ணா. வந்த வேகத்தில் எல்லாரது மனங்களையும் தன் சாதுர்யத்தால் கவர்ந்து விடுகிறாள். ஜெயிலில் இருக்கும் பாரதியின் கணவன் வெளியே வந்து விடக்கூடாது என்பதில் தனிஅக்கறை காட்டுகிறாள்.அதேநேரம் பாரதியின் கணவன் வழக்கில் பாரதியையே ஆஜராகவும் வைக்கிறாள். இந்த இரட்டைவேட கபட நாடகத்தை மற்றவர்கள் தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு சாமர்த்தியமாக செய்து வருகிறாள்கிருஷ்ணா.


பாரதி தன் வாதத்திறமையால் கணவனை வெளியே கொண்டு வந்தாளா? அல்லது கிருஷ்ணாவின்சூழ்ச்சி ஜெயித்ததா? திருப்புமுனைகளுடன் தொடர்கிறது, தொடர்.


நட்சத்திரங்கள்: நிழல்கள் ரவி, ஏ.ஆர்.எஸ்.,குட்டிபத்மினி, ஸ்வேதா, மும்தாஜ், டி.வி.ராமானுஜம், ராஜா, ராஜ்குமார், சாய்பிரஷாந்த், ராஜ்கமல், குமரேசன், ஸ்ரீவித்யா, ஆர்யா, நேகா.


தயாரிப்பு: குட்டிபத்மினி. இயக்கம்: தமிழ்பாரதி.



நன்றி: தினதந்தி

aanaa
30th June 2013, 04:22 AM
புகுந்த வீடு–300




திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘புகுந்த வீடு’ தொடர், 300–வது எபிசோடை எட்டியிருக்கிறது.


ராதா தன் கணவன் விசுவநாதன் எவ்வளவு தவறுகள் இழைப்பினும் தன் மகள் ஸ்வேதாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காது மவுனம் சாதிக்கிறாள். ஆனால் விசுவநாதனின் ஆசைநாயகியான அனுஷாவோ, விசுவை எந்த விதத்திலேயும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. மாறாக விசு தன்னை விட்டு ஓடினால் அவனை கொல்லவும் தயாராக இருப்பதாக ராதாவிடம் சூளுரைக்கின்றாள்.


ராதாவின் மாமனார் தாமோதரன், வரதராஜனுக்கு ராதாவை திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிகிறது. ஒரு பாவமும் அறியாத வரதராஜனை தவறாக எண்ணும் ராதா, அவருடனான தொழில் ரீதியான உறவை துண்டித்துக் கொள்ள முடிவு செய்கிறாள். இதனால் மனமுடைகிறார் வரதராஜன். இதனை மனதிற்கொண்டு தாமோதரன் ஒரு முடிவுக்கு வருகிறார்.


இதற்கிடையில் தாமோதரன்–ராதா உரையாடலை ஒட்டுக் கேட்கும் விசுவநாதனின் மனதில் ராதாவைப் பற்றிய நல்ல எண்ணம் உருவாக, இதை உணரும் அனுஷா இடிந்து போகிறாள். இந்த மாற்றம் ஏற்படுத்தப் போகும் விளைவு என்ன? தொடர்கிறது, தொடர்



நன்றி: தினதந்தி

aanaa
30th June 2013, 04:23 AM
தேவதை


சன் டி.வியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் அபிநயா கிரியேஷன்ஸின் ‘வெள்ளத்தாமரை’ மெகா தொடர் நிறைவடைந்து, அதே நிறுவனத்தின் ‘தேவதை’ என்ற புதிய தொடரும் ஒளிபரப்பாகத் தொடங்கி விட்டது. முற்றிலும் மாறுபட்ட கதையம்சமும், நகைச்சுவை திரைக்கதை அமைப்பும் இத்தொடரின் சிறப்பம்சங்கள்.


கதையின் நாயகி பூரணிக்கு மூன்று முகங்கள். மலிவு விலையில் மெஸ் நடத்தும் அன்னபூரணியாக அவளை அந்த வட்டாரத்தில் அத்தனை பேருக்கும் தெரியும். அந்த மெஸ்சில் நிர்ணயித்த குறைந்த கட்டணத்தைக் கூடக்கொடுக்க முடியாமல் ஓசியில் சாப்பிட்டுப் போகும் ரெகுலர் கஸ்டமர்கள் அவளுக்கு நிறையப் பேர் உண்டு. ஆனாலும் பூரணி முகம் சுளிக்க மாட்டாள். பசித்தவருக்கு உணவளிப்பது அவளது பிறவிக்குணம்.


பூரணிக்கு இன்னொரு முகம் உண்டு. அது தனது ஏரியாவில் வசிக்கும் வயசுப் பெண்களுக்கும் விடலைப் பையன்களுக்கும் மட்டுமே தெரிந்த முகம். வீடு ஒப்புக்கொள்ளாத பல காதல் திருமணங்களை அவள் நிச்சயித்து நடத்தி வைத்திருக்கிறாள். எத்தனை தடைகள், எப்பேர்ப்பட்ட வில்லன்கள் வந்தாலும் பூரணி தலையிட்டு விட்டால் அந்த திருமணம் நடந்தே தீரும். இந்த ஒரே காரணத்துக்காகவே பகுதிவாழ் இளைய தலைமுறை அவளைத் தலைமேல் வைத்துக் கூத்தாடும். அக்கா, அக்கா என்று நாய்க்குட்டி போல் அவள் பின்னால் சுற்றுவார்கள்.


பூரணியின் மூன்றாவது முகம் அவனது வீட்டாருக்கு மட்டுமே உரியது. அங்கே அவள் ஒரு அன்பான மகள். 27 வயதாகியும் இன்னும் கல்யாணமாகவில்லையே என்று பெற்றோர் பரிதவிக்க, அவளுக்கு வரும் மாப்பிள்ளைகள் தட்டிப் போய்க்கொண்டே இருக்கிறது.


அவளுக்குத் திருமணம் நடந்தால்தான் அவளது சகோதரர்கள் மூன்று பேருக்கு ஒரு வழி பிறக்கும். ஆனால் அது மட்டும் ஏன் நடக்கவே மாட்டேனென்கிறது? காதலிக்கும் அனைவருக்கும் அவள்தான் கடைசி சரணாலயம். ஆனால் அவள் வாழ்வில் ஏன் கல்யாணம் என்ற ஒன்று வர மறுக்கிறது? தூக்கிவாரிப்போடச் செய்யும் ஒரு பகீர் பின்னணியில் மையம் கொண்டிருக்கிறது இந்த பூரணிப் புயல்!


எங்கிருந்து வந்தாள், இந்த தேவதை!


கதை, திரைக்கதை: பா.ராகவன். வசனம்: கார்க்கி. இசை:பாலபாரதி. ஒளிப்பதிவு: ராஜீஸ். நடிகர், நடிகைகள்: சுபத்ரா, டி.துரைராஜ், ஷோபனா, வி.கே.ஆர்.ரகுநாத், நேசன். இயக்கம்: பி.நீராவிப்பாண்டியன்..



நன்றி: தினதந்தி

aanaa
14th July 2013, 05:35 AM
தேன் நிலவு


திரு பிக்சர்ஸ் தயாரிப்பில் சன் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை பெண்கள்’ தொடர் இம்மாதம் நிறைவு பெறுகிறது. இதே நேரத்தில் திரு பிக்சர்சின் புதிய படைப்பான தேன்நிலவு தொடர் ஒளிபரப்பாகிறது.


தேன்நிலவுக்கு போகும் புதுமணத் தம்பதி பற்றிய கதை என்பதால், ஜிலுஜிலு மலைப்பிரதேசங்களில் காட்சிகளை படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.



நன்றி: தினதந்தி

aanaa
14th July 2013, 05:37 AM
கதைக்களங்கள்


ஒரு புள்ளியிலிருந்துதான் அழகான ஓவியம் உருவாகிறது. உளியின் ஒரு அடியிலிருந்து தான் அற்புதமான சிற்பம் படைக்கப்படுகிறது. அதுபோல ஒவ்வொரு பிரேமாக செதுக்கப்பட்டு ஒவ்வொரு காட்சியாக கோர்க்கப்பட்டு படைக்கப்படுவதே பிரமாண்டமான திரைப்படங்கள்.


ஒருவரது கற்பனை, பல பேருடைய உழைப்பு, பல லட்சம் மக்கள் கண்டு ரசிக்க பல கோடி முதலீடு என்று உருவாகும் திரைப்படங்களுக்குப் பின்னால்தான் என்னென்ன கனவுகள்? எத்தனை சிரமங்கள், எவ்வளவு தடைகள்? அப்படி உருவாக்கப்படும் தங்களின் கனவு காவியங்களைப் பற்றி, அந்தப் படங்கள் உருவான கதைகள் பற்றி பல தகவல்களை, அந்தப் படங்களின் இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் ஆகியோர் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் சுவாரசிய நிகழ்ச்சியே இமயம் டி.வியில் ஒளிபரப்பாகும் ‘கதைக்களங்கள்’.


இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் படைப்பாளிகள், தங்கள் படங்களின் கதைகள், காட்சிகள் உருவான விதங்களையும், நகைச்சுவை மற்றும் பாடல் களில் உள்ள சிறப்புகளையும், வெறும் பொழுதுபோக்குப்படமா அல்லது பொழுதுபோக்கோடு நல்ல விஷயங்களையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லும் படமா போன்ற பல தகவல்களையும் இந்நிகழ்ச்சியின் மூலம் விளக்குகின்றார்கள்.


இயக்கம், நடிப்பு, பாடல், ஒளிப்பதிவு, அரங்கமைப்பு, ஒப்பனை, படத்தொகுப்பு என பல கலைகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு கலை அரசாக விளங்கும் திரைப்படங்களின் சுவாரசியமான முன்னோட்டமாக விளங்கும் இந்த நிகழ்ச்சி, இமயம் டி.வியில் வெள்ளிதோறும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினதந்தி

aanaa
14th July 2013, 05:39 AM
தாயுமானவன்


திங்கள் முதல் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் புதிய தொடர், தாயுமானவன். தாயில்லாத தனது 5 பெண்களை பாசத்துடன் வளர்க்கும் ஒரு தந்தையின் கதை இது.


மதியழகன், மகேஸ்வரி, கல்யாணி, ஜெனிபர், மதுவில்லா, சுஜித்ரா, அன்வர், கமல், குயிலி, ராஜசேகர் நடிக்கிறார்கள். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகும்.


தெய்வம் தந்த வீடு: திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகவிருக்கும் இன்னொரு புதிய தொடர் ‘தெய்வம் தந்த வீடு’. இரண்டு பெண்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் ‘சுவாரஸ்யக் கதை இது.
நன்றி: தினதந்தி

aanaa
17th July 2013, 01:16 AM
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=FXp9TiMexrc

Does anyone has the title song for this serial ( Deivam thantha veedu)

aanaa
20th July 2013, 03:14 AM
நாதஸ்வரம்


சன் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7–30 மணிக்கு ஒளிபரப்பாகும் நாதஸ்வரம் தொடர் எதிர்பாராத திருப்புமுனைகளில் பரபரப்பு கூட்டுகிறது. இந்த தொடர் தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. கோபியின் அண்ணன் பிரசாத், சொக்கு–மீனாட்சி தம்பதியரின் மூத்த மகன் என தெரியவருகிறது. இதனால் ஏற்படும் விளைவுகள் வரப்போகும் எபிசோடுகளில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தவிருக்கிறது. இதனால் வளர்ப்பு பெற்றோருக்கும், உண்மையான பெற்றோருக்கும் ஏற்படும் மோதல், அதில் பிரசாத்தின் தடுமாற்றம், மகா–பிரசாத் திருமணம் நடைபெறுமா? என்ற கேள்வி, பிரசாத் யாருடன் வாழப்போகிறான்? கோபி, பிரசாத் நட்பில் விரிசல் ஏற்படுமா? இது போன்ற பல கேள்விகள் பிரசாத், கோபியின் அண்ணன் என தெரிய வருவதால் எழுகின்றன.


பரமுவின் கணவன் ரமேஷ் குடிகாரன். இவர்கள் எவ்வாறு நெல்லி வீட்டிற்கு வரப்போகிறார்கள், குடிகார ரமேஷால் சொக்கு குடும்பத்திற்கும் மற்றும் மயில் குடும்பத்திற்கும் ஏற்படப்போகும் பிரச்சினைகள் அதிகம். காமு, பரமுவின் பிரசவங்கள், மலரின் தங்கை ரோகிணியின் திருமணமும், நெல்லியாண்டவர் மகள் வனிதாவின் திருமணமும் நடக்கவிருக்கின்றது.


மலரின் தாய்மாமனால் கோபிக்கு ஏற்படப்போகும் தலைகுனிவுகள், இதனால் ஜெகநாதனுக்கும், கோபிக்கும் ஏற்படும் விரிசல், கேள்விக்குறியாக இருக்கும் மகா, ராகினியின் வாழ்க்கைக்கு வரப்போகும் பகுதிகளில் கிடைக்கப்போகும் பதில் என எல்லாமே காட்சிகளில் அழுத்தம் ஏற்படுத்தி விறுவிறுப்பை அதிகரிக்கச் செய்பவை.


பிரசாத் கோபியின் அண்ணன் என்பது தெரியவரும் இடம் இன்னொரு சுவாரஸ்யக்களம். எழுத்து, இயக்கம், தயாரிப்பு: எம்.திருமுருகன்.



நன்றி: தினதந்தி

aanaa
28th July 2013, 03:59 AM
பொம்மலாட்டம் –200


சன் டி.வியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் முற்பகல் 11.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் ‘‘பொம்மலாட்டம்’’ தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தக்க வைத்துக் கொண்டு 200–வது பகுதியை எட்டுகிறது.


தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த தொடர், இப்போது மலையாளத்திலும் சூர்யா சேனலில் ஒளிபரப்பாகி வருவது தொடருக்கான வெகுஜன மரியாதை.


தொடரின் இயக்குனர் சிவா.கே. ஒரு காட்சியை படமாக்கி அடுத்த காட்சிக்கான இடைவெளி நேரத்தில் நம்மிடம் பேசியபோது...


‘‘அண்ணன் சிதம்பரத்திற்கு தெரியாமல் தம்பி நடராஜன் விசாகப்பட்டினத்தில் வாங்கிய பங்களாவில் ஒரு கொலை நடந்து இருந்தது. அந்தக் கொலை பற்றிய செய்தி நடராஜன் படத்துடன் தெலுங்கு நாளிதழில் வெளியாகிறது. அந்த செய்தி தனது குடும்பத்தாருக்கு தெரிந்து விடுமோ என்று பயம் கொள்கிறார் நடராஜன். இதனை அறிந்த பாரதி அதை பற்றி தெரிந்து கொள்ள முயற்சி எடுக்கையில் மேலும் திடுக்கிடும்படியான செய்திகள் காதுக்கு வருகிறது.


தற்போது திருந்தி வாழும் நாயகன் சந்தோஷின் கண்ணில் படுகிறாள் அவனுடைய பழைய தோழி சகுந்தலா. அவளுடைய பிரச்சினைக்கு நல்ல எண்ணத்துடன் உதவப்போக, தேவையற்ற பிரச்சினைகளில் மாட்டிக் கொள்கிறான், சந்தோஷ். இந்த விஷயம் சந்தோஷ் குடும்பத்தாருக்கு தெரிய வருகிறது. சந்தோஷ் தனக்கு துரோகம் இழைத்து விட்டதாக எண்ணிய பாரதி, சந்தோஷை உதறித் தள்ளி விட்டு செல்கிறாள்.


இந்நிலையில் சொத்துக்காக கதிரை அக்ரிமெண்ட் போட்டு பொய் திருமணம் செய்து கொண்ட தேவி. கதிரை தன் வீட்டிற்கு அழைத்து வர முயற்சி எடுக்கிறாள். தன் பழைய காதலி பாரதி இருக்கும் வீட்டிற்கு வர மறுக்கிறான் கதிர். இதனை அறியாத தேவி, கதிரின் வீட்டிலேயே தங்கி விடுகிறாள்.


சொகுசாக வாழ்ந்த தேவி, கதிர் வீட்டில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன? ஒரே வீட்டிலேயே தங்கியதால் இருவருக்கும் ஏற்படும் தனிமை சந்தர்ப்பங்கள் கதிரின் மீது தேவிக்கு காதல் ஏற்படுத்துகிறதா? கதிர் அவளின் காதலை ஏற்கின்றானா? நடராஜன் செய்த மோசடிகளை எப்படி பாரதி வெளிக்கொண்டு வருகிறாள்? பிரிந்து சென்ற பாரதி மீண்டும் சந்தோஷூடன் சேர்ந்தாளா?


கேள்விகளுக்கு பதில் சுவாரசியமான அடுத்தடுத்த எபிசோடுகளில் கிடைக்கும்’’ என்கிறார், இயக்குனர்.


தொடரின் நட்சத்திரங்கள்: டெல்லிகுமார், சிரிஜா, ஸ்ரீகுமார், அப்சர், ப்ரீத்தி, சாய்ராம், காத்தாடி ராமமூர்த்தி, விஜய கிருஷ்ணராஜ், கணேஷ்கர், பரத், சசி, ஷீலா, மகிமா, கவுரிலட்சுமி, வித்யா, சுரேந்தர், நித்யா, பிரபாகர், நிஷா, ஈ.எம்.எஸ்.முரளி, ஆளவந்தான், பொன்.ராமச்சந்திரன்.


ஒளிப்பதிவு: சங்கர். கதை: அரவிந்தன். திரைக்கதை: செல்வம் மற்றும் சிவகுமார். வசனம்: நந்தன் ஸ்ரீதரன். பாடல்: கவிப்பேரரசு வைரமுத்து. இசை: தினா. பாடல் பாடியவர்: ஹரிசரண்.இயக்கம்: சிவா.கே.


தயாரிப்பு: சான் மீடியா லிமிடெட்.



நன்றி: தினதந்தி

aanaa
28th July 2013, 04:00 AM
குறிஞ்சிமலர்


திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் குறிஞ்சிமலர். தொடரின் கதைப்பின்னணி வருமாறு:


கல்பனா தொழிலதிபர். கணேஷ் தொழிலதிபர். இவர்கள் இருவருக்கும் இடையே அறிந்தோ அறியாமலோ சிக்கிக் கொண்ட பெண் சிநேகா.


சிநேகாவின் தந்தை தேவராஜ் ஊருக்கே உபதேசம் செய்பவர். பெரிய மனிதர். அவர்தான் சிநேகாவிற்கு எல்லாம்.


கல்பனாவின் கணவர் மிகப்பெரிய கிரிமினல் வழக்கறிஞர். வீட்டில் மனைவிக்கு கட்டுப்பட்டவர். கல்பனாவின் மகன் அருண் மிகப்பிரபலமான டாக்டர். எல்லாரிடமும் நன்றாகப் பழகுவான். இலவசமாக மருத்துவம் செய்வான். ஆனால் உள்ளுக்குள்..?


கல்பனாவின் மகள் அம்மா–அப்பா எல்லாரையும் மதிப்பாள். ஆனால் அவள் விஷயத்தில் யாராவது தலையிட்டால் முகத்தில் அடித்தமாதிரி பேசுவாள். இதில் யார் யார் எப்படி மாறப்போகிறார்கள் என்பதே பரபரப்பாக தொடங்கியிருக்கும் குறிஞ்சிமலரின் கதை.


தொடரின் நட்சத்திரங்கள்: ஐஸ்வரியா, சாய்லதா, ராஜசேகர், விஜய்பாபு, சுமங்கலி, நேசன், பிரகாஷ்ராஜ். ஒளிப்பதிவு: தனபால். கிரியேட்டிவ் ஹெட்: குயில்மொழி. தயாரிப்பு: குயில் கலைக்கூடம். வசனம், இயக்கம்: விடுதலை.



நன்றி: தினதந்தி

aanaa
28th July 2013, 04:06 AM
திருப்பங்களுடன் ‘கருத்தம்மா’


ராஜ் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கருத்தம்மா தொடர் 400 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.


ராஜாம்பாவிற்கு பல எதிரிகள் இருந்தாலும் சந்தியாவிற்கு தனது அத்தை ராஜாம்பாவே முதல் எதிரியாக உள்ளார். ஒரு பக்கம் ராஜாம்பாவின் குடும்பத்தை அழிக்கத் துடிக்கும் எதிரிகள்... மறுபக்கம் சந்தியாவின் கருவை கலைக்கத் துடிக்கும் அத்தை... தான் ஒரு பெண் என்று பாராமல் ஊர்மக்களிடம் சந்தியாவின் கருவில் இருக்கும் குழந்தை பெண் என்று பொய் சொல்லி பழிவாங்கத் துடிக்கிறார்.


அத்தனை போராட்டங்களையும் தனது கணவனின் ஆதரவோடு போராடி வெல்கிறாள் சந்தியா. அவளது வயிற்றில் இருக்கும் கருவை கலைக்கிறார்களா, அல்லது எதிரிகளால் ராஜாம்பாவின் குடும்பம் வீழ்கிறதா என்பது அடுத்து வரும் பரபரப்பு எபிசோடுகள்.



நன்றி: தினதந்தி

aanaa
28th July 2013, 04:07 AM
காற்றுக்கென்ன வேலி


திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 10.30 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘காற்றுக்கென்ன வேலி’ தொடர் நூறாவது எபிசோடை எட்டவிருக்கிறது.


வைஷாலி, ரத்னா இருவரும் இணை பிரியா சகோதரிகள். முதலில் மாறுபட்ட எண்ணங்களுடன் இருந்த இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நட்பு பாராட்டுகின்றனர். வைஷாலி தன் உறவுக்கார பையனான மகேஷை காதலிக்கிறாள். மகேஷுக்கோ ஜானு என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.


மகேஷ், வைஷாலி இருவரின் காதலை அறிந்த ரத்னாவின் அம்மா, ‘இனி தான் சொல்லும் வரை ஒருவரை ஒருவர் பார்க்கவோ, பேசவோ கூடாது’ என்று சத்தியம் வாங்குகிறார். இதனால் மகேஷ், வைஷாலி இருவரும் தங்கள் எதிர்காலத்தை நினைத்து கவலை கொள்கின்றனர். மகேஷ், வைஷாலியைக் காதலிப்பது பற்றி பெற்றோரிடம் பேசினானா? அல்லது மகேஷின் திருமணம் ஜானுவுடன் நிச்சயிக்கப்பட்டதா...? தொடர்கிறது, தொடர்.



நன்றி: தினதந்தி

aanaa
29th July 2013, 09:15 PM
Mahabharatam directed by Suresh Krishna on Sun TV\

Suresh Krishna, the man who gave superstar Rajinikanth some of his greatest hits in the form of Baadsha, Annamalai and Veera, hasn’t been making many movies nowadays. His last two directorial ventures flopped miserably; after those debacles, the director is now taking refuge on small-screen and has taken up the onerous task of making a tele-serial on the great Hindu eipc Mahabharatam which would go on air soon.


Mahabharat, which was made in a grand manner in Hindi by B.R. Chopra more than two decades ago, is now planned to be made in a similar manner but in Tamil with mostly Tamil artistes essaying major roles. Popular author Prabhanjan has penned the screen-play and the dialogues in a realistic manner.





Instead of focusing on the usual prominent characters like the Pandavas and Draupadi, Suresh would be showing elaborately the characters such as Bheeshma and Ganga Devi. Actors, actresses and junior artistes numbering more than 700 are working at huge sets
erected for the purpose. Suresh is leaving no stone unturned in ensuring that arrangements the make-up, costumes, ornaments, weapons and chariots, etc. befitting the period in which the story takes place, are made appropriately and with lots of care.


‘Thenisaithendral’ Deva is scoring the music for this grand mega-serial and is the first time that he is associating himself with a television soap. Title song has been penned py Paa Vijay and has been sung in Shankar Mahadevan’s magical voice. Ashok Raj is the dance choreographer while ‘Ghilli’ Sekar is the stunt choreographer. ‘Poovilangu’ Mohan, Ilavarasan, Manohar, OKA Sounder, Devipriya, Pooja and Ishwarya are part of the cast.


Produced by Cinevistas, the serial is likely to go on air from 17th February onwards and would be an hour-long episode from 10:00 am to 11:00 a.m.

aanaa
12th August 2013, 05:23 AM
காதல் ஜோடிகளை சேர்த்து வைக்கும் தேவதை!


சன் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தேவதை தொடர், விறுவிறு திருப்பங்களில் வேகம் பிடித்த அழகு தேவதை.


மெஸ் நடத்தும் இளம்பெண் பூரணி, தன் பகுதி நேர வேலையாக காதலர்களை சேர்த்து வைக்கும் பணியிலும் ஈடுபடுகிறாள். இதனால் பல பெற்றோர்களின் எதிர்ப்பை சந்திக்கிறாள். சமாளிக்கிறாள்.


இந்த காதல் ஜோடிகள் சேர்ப்பு முயற்சி தெரிந்த அசிஸ்டென்ட் கமிஷனர் மகள் ஒருத்தியும் பூரணியைத் தேடி வருகிறாள். பூரணி தான் மனச்சாட்சியைத் தவிர வேறு யாருக்கும் பயப்படாதவளாயிற்றே.. அதனால் தைரியமாக அசிஸ்டென்ட் கமிஷனர் மகளை அவள் காதலனோடு சேர்த்து வைக்கிறாள். திருமணத்திற்குப் பின்னரே உண்மை தெரிந்து பதறியடித்தபடி வரும் அசிஸ்டென்ட் கமிஷனர், இத்தனைக்கும் காரணம் பூரணி என்பதை தெரிந்து கொண்டு அவளிடம் மோத முனைகிறார். இந்த மோதலின் முடிவு என்னாகிறது? பூரணி அதை எப்படி எதிர்கொள்கிறாள் என்பது வரவிருக்கும் பரபரப்பு எபிசோடுகள்.


இதற்கிடையே 28 வயதாகியும் இன்னும் திருமணமாகாத பூரணிக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டது என்ற குண்டைத் தூக்கிப் போடுகிறார், ஜோதிடர் ஒருவர். வைத்தீஸ்வரன்கோவிலில் ஓலைச்சுவடியை புரட்டிப்பார்த்தபடி அந்த ஜோதிடர் சொன்ன தகவல் உண்மையா என்பது அடுத்த கட்ட அதிர்ச்சித் திருப்பம்.


பூரணியாக சுபத்ரா நடிக்கிறார். கதை, திரைக்கதை: பா.ராகவன். இயக்கம்: பி.நீராவிப்பாண்டியன். அபிநாயா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பு: ராதா கிருஷ்ணசாமி.



நன்றி: தினதந்தி

aanaa
12th August 2013, 05:26 AM
தெய்வமகள் தொடரில்...


நாத்தனாரின் சூதுவாதற்ற மகளை அவள் கெட்டுப் போக வேண்டும் என்பதற்காகவே பக்கத்து மளிகைக்கடைக்கு சாமான் வாங்க அனுப்பி வைக்கிறாள். அந்த அப்பாவிப் பெண் கெட்டுப் போனால் தயவுதாட்சண்யமின்றி நாத்தனார் குடும்பத்தை அங்கிருந்து துரத்தி விடலாம் என்பது அவள் திட்டம். அதை தன் தோழியிடம் அவளே தன் வாயால் வேறு சொல்கிறாள். அவள் எதிர்பார்த்தபடியே அந்தப்பெண் டிபார்ட்மென்டல் ஸ்டோரில் வேலை பார்க்கும் கடைப்பையன்கள் கொடுத்த மயக்க மருந்து கலந்த கூல் டிரிங்க்சை குடித்துவிட்டு அவளிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள போராடுகிறாள்.


நகரின் மையத்தில் உள்ள ஒரு மளிகைக்கடையில் இப்படி ஒரு சம்பவம் நடக்கிறது என்றால் இதைப் பார்த்த குடும்பத்தலைவிகள் எப்படி எதை நம்பி தங்கள் வீட்டுப் பெண்களை கடைக்கு அனுப்புவார்கள்? கற்பனை தான் விரசம் என்றால், தேர்ந்தெடுத்த களமோ அதை விட அபத்தம். இந்தக்காட்சியை பார்த்தபோது நெஞ்சே பதறிவிட்டது.



நன்றி: தினதந்தி

aanaa
18th August 2013, 07:15 PM
புகுந்த வீடு




திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் இரவு 7 மணிக்கு ‘ஜீ’ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘புகுந்த வீடு’ தொடர் பரபரப்பு திருப்பங்களில் விரைகிறது.


ராதாவின் மைத்துனி தேவி குழந்தை பெரும் பாக்கியத்தை இழந்து தவிக்கின்றாள். இதற்கு காரணமான ஜெய்குமார் தான் எதுவும் செய்ய வில்லை என்று ஒரேயடியாக சாதிக்கின்றான். தேவி இனி எப்போதுமே கர்ப்பம் தரிக்க மாட்டாள் என்ற செய்தி அறிந்து பதறும் அவளின் அம்மா ராஜேஸ்வரி, ராதாவை கண்டபடி திட்ட, ராதா தலைகுனிகிறாள். இதையே சாக்காக வைத்து தேவியின் மாமியார் தன் மகன் சம்பத்திற்கு வேறு மணமகளைத் தேட ஆரம்பித்து விடுகிறார். இதை அறிந்து தேவி இடிந்து போகிறாள்.


இதற்கிடையில் ராதா தன் மைத்துனன் ரகுவின் திருமணத்தை நடத்த போராடுகிறாள். ஆனால் ஜமீன் வாரிசான வைஜெயந்தியின் தந்தை ராவணன் தன் கவுரவத்தை மனதிற்கொண்டு ரகு–வைஜெயந்தி இருவரையும் பிரிக்கத் திட்டமிடுகிறார். இதற்கு ராதாவின் பரம எதிரியான அனுஷாவும் உதவுகிறாள். ஒருவரை ஒருவர் பிரிய முடியாத ரகு, வைஜெயந்தி இருவரும் ஜமீன் ராவணனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர்.


தேவியின் கணவன் சம்பத்திற்கு மறுமணம் நடந்ததா...? ரகு, வைஜெயந்தி இருவரின் திருமணக் கனவு பலித்ததா...? அனைத்தையும் தவிடு பொடியாக்க எண்ணும் அனுஷாவின் எண்ணம் நிறைவேறியதா...?
நன்றி: தினதந்தி

aanaa
18th August 2013, 07:16 PM
கொட்டித் தீர்த்துவிடு தோழி


பதிவு செய்த நாள் : Aug 17 | 01:54 am
மனிதர்களில் அனைவருமே ஏதோ ஒரு வகையில் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வது இயல்பு தான். என்றாலும் அவைகளிலிருந்து எத்தனை பேர் வெளியே வந்துள்ளனர் என்றால் மூன்றில் ஒரு பங்கு கூட இருக்காது எனலாம்.


காரணம், எதையும் பகிர்ந்து கொள்ள இயலாத நிலை, கருத்துகளையும் ஆலோசனைகளையும் அறிய முடியாத நிலை என சூழ்நிலைக் கைதியாக அடைப்பட்டுக் கிடக்கின்றான் மனிதன்.


ஏராளமான மனநோய்களால் ஆட்கொள்ளப்படுகின்றனர். அலுவலகத்தில் பிரச்சினை, வீட்டில் சண்டை, சச்சரவு, நண்பர்களுடன் இயல்பாக பேச இயலாமை என எதுவாக இருந்தாலும், பெண்களுக்கு உற்ற தோழியாய் இருந்து, தகுந்த ஆலோசனைகளை உரிய உளவியல் வல்லுனர் மூலமாக ‘கொட்டித் தீர்த்துவிடு தோழி’ என்று நிகழ்ச்சியின் வாயிலாக தருகிறது, மக்கள் தொலைக்காட்சி.


வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் மூலமாக பெண்களுக்குரிய பிரச்சினைகள் குறித்து மருத்துவர் ஷாலினி ஆலோசனைகளை வழங்குகிறார். தொகுப்பாளினி ப்ரியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
நன்றி: தினதந்தி

aanaa
25th August 2013, 09:18 PM
மகாபாரதம்


தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக தமிழிலேயே, தமிழ் நடிகர்களைக் கொண்டு, மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட புராண காவியமான மகாபாரதம், ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு சன் டி.வியில் ஒளிபரப்பாகி வருகிறது.


இத்தொடர், ஆதிபர்வத்தில் தொடங்கி, வியத்தகு பல புதிய தகவல்கள் அடங்கிய தொடராக வந்து கொண்டிருக்கிறது. இதுவரை 25 எபிசோடுகளை தாண்டி தொடரும் இந்த தொடரில், பாண்டவர்கள், கவுரவர்கள், கர்ணன் ஆகியோர் அறிமுகமாகிறார்கள். கூடவே அவர்கள் செய்யும் சாகசப்பகுதியும் ஒளிபரப்பாக உள்ளது. இதைத் தொடர்ந்து வரும் காட்சிகள் அனைத்தும் சூடும் சுவையுமானவை.


தொடரை சினிவிஷ்டா நிறுவனம் சார்பில் சுனில்மேத்தா தயாரிக்கிறார். எபிசோட் டைரக்டர்: செங்கோட்டை சி.வி.சசிகுமார், கதை ஆக்கம்: பிரபஞ்சன். திரைக்கதை: கண்ணன். வசனம்: வேட்டை பெருமாள். இசை: தேவா. திரைக்கதை, டைரக்ஷன் மேற்பார்வை: சுரேஷ்கிருஷ்ணா.
நன்றி: தினதந்தி

aanaa
25th August 2013, 09:19 PM
திருமுருகனின் புதிய தொடர் தேன்நிலவு




திரு பிக்சர்ஸ் திருமுருகனின் தயாரிப்பு இயக்கத்தில் சன் டி.வி.யில் வரும் திங்கள் இரவு 10 மணிக்கு தொடங்கவிருக்கும் புதிய தொடர் ‘தேன்நிலவு’


வாழ்க்கையில் திருமணம் என்பது மறக்க முடியாத ஒரு நிகழ்வு. திருமணத்தை தொடர்ந்து வரும் சில மாதங்கள் கணவன் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு தங்களது துணையின் ரசனைகளையும் விருப்பங்களையும் அறிந்து கொள்ளும் காலம். ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணத்தை அடுத்து வருகின்ற சில மாதங்கள் வாழ்நாள் முழுவதும் எண்ணி மகிழும் அனுபவங்களையும், எல்லையற்ற சந்தோஷத்தையும் தருகின்ற ஒரு காலகட்டமாகும். பிரச்சினைகளோ சங்கடங்களோ இன்றி முழுக்க முழுக்க மகிழ்ச்சி மட்டுமே நிரம்பியது இந்த தேன் நிலவு காலகட்டம்.


இப்படிப்பட்ட தேன் நிலவை கொண்டாட மலை வாசஸ்தலமே ஏற்றது என்று அங்கே தங்களது தேன்நிலவைக் கொண்டாட நான்கு ஜோடிகள் கிளம்பி வருகின்றனர். ராம்– ரேவதி, கல்யாண்– மீனா, சுரேஷ்– வினோதினி ஆகிய ஜோடிகளுடன் வித்தியாசமான இன்னொரு ஜோடியும் கிளம்பி வருகின்றனர். அனைவரது மனதிலும் கனவுகளும் எதிர்பார்ப்பும் சந்தோஷமும் நிரம்பி வழிகின்றன.


ஆனால் தேன் நிலவு வந்த இடத்தில் நிகழும் சம்பவங்கள் அவர்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக இருக்கின்றன. அந்த தம்பதிகள் எதிர்கொள்கிற பிரச்சினைகள், ஏற்படுகிற வித்தியாசமான அனுபவங்கள் ஆகியவற்றை நகைச்சுவை, மர்மம் மற்றும் சென்டிமென்ட் கலந்து விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சித்தரிக்கும் தொடரே தேன்நிலவு.


தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் டெல்லிகணேஷ் நடிக்கிறார்.


திரைக்கதை, வசனம்: பாஸ்கர்சக்தி. ஒளிப்பதிவு: சரத்சந்தர். இசை: சஞ்சீவ் ரத்தன். பாடல்: யுகபாரதி. படத்தொகுப்பு: பிரேம். கதை, தயாரிப்பு: திருமுருகன். இயக்கம். ஈ. விக்ரமாதித்தன்.
நன்றி: தினதந்தி

aanaa
25th August 2013, 09:20 PM
துர்கா எடுக்கும் துணிச்சலான முடிவு?




திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 8 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மாமியார் தேவை தொடர், அடுத்தடுத்த திருப்புமுனைக் காட்சிகளில் வேகம் பிடிக்கிறது.


இளம் வயதில் மனைவியை இழந்த பணக்காரர் கங்காதரனுக்கு பிரேம்குமார், வசந்தகுமார், தீபக்குமார் என 3 மகன்கள். மூவருமே திருமணம்ஆனவர்கள்.


முதல் இரண்டு மகன்களும், மருமகள்களும் தனிக்குடித்தனம் போவ விரும்ப, மூன்றாவது மகன் தீபக்குமாரும் அவன்மனைவி மீராவும் மாமனாருடன் இருப்பதை விரும்புகின்றனர். முதல் இரு மகன்களின் முடிவால் குடும்பம் பிரிந்து விடுமோ என்று கங்காதரன் கலக்கம் கொள்ள– புத்திசாலியான இளைய மருமகள் மீரா குடும்பம் சிதறாமல் இருக்க கண்டிப்பான ஒரு மாமியார் தேவை என்ற முடிவுக்கு வருகிறாள். நேர்மையும்துடிப்பும் வேகமும் கொண்ட துர்கா என்னும் துணிச்சல் மிகுந்த பெண்ணை மாமனாருக்கு மனைவியாக– தங்களுக்கு மாமியாராக கொண்டு வருகிறாள்.


நடுத்தர வயதில் மூன்று மருமகள்களுக்கு மாமியாராக வந்த துர்கா– ஆரம்ப நாளில் இருந்தே அதிரடி ஆட்டத்தை ஆரம்பிக்கிறாள். ‘ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சமையல் கிடையாது. ஒரே மாதிரி உணவு இருந்தால்தான் ஒரே மாதிரி உணர்வு இருக்கும். என்று தனித்தனி சமையலுக்கு தடை போடுகிறாள். மாமியார் உத்தரவால் குடும்பம் மொத்தமும் முணுமுணுக்க ஆரம்பிக்கிறது.


வாய்த்துடுக்கு கொண்ட இரண்டாவது மருமகள் கிரிஜா மாமியாராக வந்த துர்காவிடம் சண்டை போட்டுவிட்டு தன்தாய் வீட்டுக்குப் போகிறாள். கூடவே அவள் கணவனும் போகிறான். ‘புதிதாக வந்த துர்காவை விரட்டத் துப்பில்லாமல் என் கூடவே ஓடி வந்த நீங்க வேஸ்ட்’ என்று கணவனை வார்த்தைகளில் வறுத்தெடுக்கிறாள், கிரிஜா. இதனால் வேறு வழி இன்றி தங்கள் வீட்டுக்கே அவன் திரும்புகிறான்.


இதற்கிடையில் தொழில் போட்டி காரணமாக கங்காதரன், முனியன் என்ற ரவுடியின் பகையை சம்பாதித்து கொள்கிறார். கங்காதரனிடம் தொடர்ந்து தோற்ற முனியன், கங்காதரன் மகன் பிரேம்குமாரை கடத்தி கொலை செய்ய முயற்சிக்கிறான்.


என் மனைவியை நான் பிரிந்து நிற்பதற்கும், என் அண்ணன் உயிருக்கு போராட்டமான சூழ்நிலையில் நிற்பதற்கும் புதிதாக வந்து நிற்கும் துர்காவே காரணம் என்று வசந்த் பழி சுமத்த, பயந்து போன அவன் அண்ணன் மனைவி நீலவேணி தனது மாங்கல்யம் நிலைக்க கோவிலில் தஞ்சம் புகுகிறாள்.


இதற்குப்பிறகு தன் மேல் விழுந்த பழிச்சொல்லை மாற்ற துர்கா துணிச்சலாக சில முடிவுகளை எடுக்கிறாள். அந்த முடிவால் பிரிந்து நிற்கும் கிரிஜா திரும்பவும் கணவன் உடன் இணைந்தாளா? மரணத்தின் விளிம்பில் இருக்கும் பிரேம்குமார் மீட்கப்பட்டானா? நீலவேணியின் மாங்கல்யம் தப்பித்ததா?


அடுத்துவரும் பரபரப்பு எபிசோடுகளில் இதற்கான விடை கிடைக்கும்.


தொடரின் நட்சத்திரங்கள்: சுபலேகா சுதாகர், அழகன் தமிழ்மணி, யுவராணி, குமரேசன், சுக்ரன், மகாலட்சுமி, சோனியா, வந்தனா, பத்மினி, விஸ்வநாத், ரவி, அழகு, ஜி.கே., மித்ரன், கலாதர். திரைக்கதை வசனம்: பாபா கென்னடி. ஒளிப்பதிவு: ராக்கு. பாடல்: பிறைசூடன். இசை: தினா. இணை தயாரிப்பு: துர்கா அழகன், தமிழ்மணி, போரூர் கே.எம். கண்ணன். தயாரிப்பு: தனுஷ் அஜய் கிருஷ்ணா, ஐஸ்வர்யா அஜய் கிருஷ்ணா.


இயக்கம்: சுலைமான் கே.பாபு.
நன்றி: தினதந்தி

aanaa
25th August 2013, 09:22 PM
காற்றாய் வருவேன்


மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘காற்றாய் வருவேன்’ தொடர், முற்றிலும் எதிர்பாராத கதைக்கோணத்தில் வேகம் பிடிக்கிறது.


வித்தியாசமான, அதேநேரம் ஊகிக்கவே முடியாத கதையமைப்பு இந்த தொடரின் ஸ்பெஷல். தொடர்கள் ஒளிபரப்புவதை முடிந்தவரை தவிர்க்கும் மக்கள் தொலைக்காட்சி, இந்த தொடரை ஒளிபரப்ப முன்வந்ததன் பின்னணியிலும் தொடரின் பாசிட்டிவான கதைக்களம் தான் இடம் பிடித்திருக்கிறது.


நட்சத்திரங்கள்: வினோதினி, சதீஷ், மேனகா, பேபி ரித்திகா. இவர்களில் பேபி ரித்திகா குட்டி பத்மினியின் கலைவாரிசு என்பது குறிப்பிடத்தக்கது..


தயாரிப்பு: குட்டி பத்மினி.
நன்றி: தினதந்தி

aanaa
26th August 2013, 06:47 AM
http://www.youtube.com/watch?v=rA05tkgFOhY

aanaa
4th September 2013, 06:30 AM
என்னை எனக்கே தெரியாமல்...


கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது ‘குறிஞ்சிமலர்’ தொடர்.


கல்பனா திறமையானவள், தைரியமானவள். ஆனால் கனவு வாழ்க்கையில் வாழ்பவள். சிநேகா, இயல்பானவள். அப்பாவுக்கும் அவள் நேசிக்கும் அம்மாவுக்கும் கட்டுப்படுபவள். கவிதா, கனவும் இல்லாமல், இயல்பும் இல்லாமல் வேறு ஒரு தனித்தன்மையுடன் வாழ்பவள். இந்த மூவருக்கும் ஒரு விஷயம் தெரியாது; இவர்கள் யார் என்று!


தேவராஜ், ஊருக்கு உபதேசம் செய்பவர். ஆனால் அவருக்கு அவர் யார் என்று புரியாது. சத்யமூர்த்தி வழக்கறிஞர், அவரின் தனிப்பட்ட வாழ்க்கையின் வழக்கு புதிரானது. இத்தனை பேர்களின் வாழ்க்கை தான் குறிஞ்சி மலர்.


நடிகர்கள்: ஐஸ்வர்யா, புஷ்பலதா, லதாராவ், ராஜசேகர், சுமங்கலி, நேசன்.


ஒளிப்பதிவு: தனபால். கதை, திரைக்கதை: தேவிபாலா. ஆக்கத்தலைமை: குயில்மொழி. தயாரிப்பு: குயில் கலைக்கூடம். உரையாடல், இயக்கம்: விடுதலை.
நன்றி: தினதந்தி

aanaa
4th September 2013, 06:31 AM
வம்சம்...




திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ‘வம்சம்’ தொடர், தொடக்கம் முதலே வேகம் பிடிக்கத் தொடங்கி விட்டது.


கோடிகோடியாக செல்வமிருந்தும் சொந்தபந்தம் இல்லாத காரணத்தால் இளம்பெண் சக்தியின் திருமண பேச்சு தடைபடுகிறது. அதற்காக ஒரு சராசரி பெண்ணாக அழுது புலம்பாமல், தனது உறவுகளைத் தேடி கிராமத்திற்கு புறப்படுகிறாள் சக்தி.


முப்பது வருட பகையை ஒரே நாளில் தணிப்பது சாத்தியமில்லை என்பதை உணர்ந்த சக்தி.. தாய்மாமா போலீஸ் கமிஷனர் வெற்றிவேல் அண்ணாச்சி (விஜயகுமார்) வீட்டிற்குள் நுழைகிறாள்... மருமகள் சக்தியாக அல்ல... சாதாரண சமையல்காரி சக்தியாக!


இயல்பாகவே நல்லவரான அண்ணாச்சி மனதைக் கவர முடிந்த சக்தியால், அவளது அப்பா வழி அத்தை நாகவல்லியின் (வடிவக்கரசி) நல்லெண்ணத்தை சம்பாதிப்பது அத்தனை சுலபமாக இல்லை. காரணம் அண்ணாச்சியும் நாகவல்லியும் பரம வைரிகள். பக்கத்தில் வந்தால் தான் பற்றிக்கொள்ளும் பஞ்சு நெருப்பு பகை அல்ல– தூரத்தில் இருந்து பார்த்தாலே பற்றி எரியும் பாஸ்பரஸ் பகை.


காட்டுத்தீ பகையை, பக்கெட் தண்ணீரால் அணைக்க முடியாது என்பது சக்தியை உணர்த்தியது. அழகுதுரை கொலை! மகனை இழந்த நாகவல்லி, பதிலுக்கு அண்ணாச்சி மகள் உத்ராவையே தனது வீட்டில் சிறைப்பிடித்து விடுகிறாள். அண்ணாச்சியை வெறுத்து நாகவல்லி வீட்டில் தஞ்சம் புகுந்திருக்கும் உத்ராவை எப்படி காப்பாற்றுவது என சக்தி திட்டமிடுகையில், அடுத்த இலக்காக நாகவல்லி குறி வைத்திருப்பது அண்ணாச்சி மகன் டாக்டர் ஜெயவேலுவுக்கு என்பது தெரிய வருகிறது.


நாகவல்லியின் ‘ஆக்டோபஸ் பிடி’யிலிருந்து ஜெயவேலுவை சக்தி காப்பாற்றுவாளா? சக்திக்கு அவசர நிச்சயதார்த்தம் நடந்தது அறியாமல் அவளையே சுற்றி சுற்றி வரும் நாகவல்லி மகன் துரைப்பாண்டியனின் காதல் என்னவாகும்? அழகு துரையை கொலை செய்தவனை போலீஸ் நெருங்கி வருகையில், கொலைகாரன் உத்ராவை சந்திக்க வருவதன் மர்மம் என்ன? இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடைகள், வரும் வாரங்களில்..


தொடரின் நட்சத்திரங்கள்: ரம்யா கிருஷ்ணன், விஜயகுமார், வடிவுக்கரசி, சீமா, காவேரி, தருண் மாஸ்டர், ‘கருத்தம்மா’ ராஜஸ்ரீ, ஷ்யாம் கணேஷ், சத்யப்ரியா, ஸ்ரீலேகா, சதீஷ், ‘ஊர்வம்பு’ லட்சுமி. திரைக்கதை: சித்திக் ஜஷ்வர்யன். ஒளிப்பதிவு: விஜய். இயக்கம்: சி.ஜே.பாஸ்கர்
நன்றி: தினதந்தி

aanaa
7th September 2013, 06:28 AM
சரவணன் – மீனாட்சி


விஜய் டிவியின் ‘சரவணன் மீனாட்சி’தொடர் ஐநூறாவது எபிசோடை எட்டவிருக்கிறது.


சரவணன் சென்னையின் ரேடியோ ஜாக்கியாகவும், மீனாட்சி திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சியின் பள்ளி ஆசிரியையாகவும் கதை ஆரம்பமானது. சரவணனுக்கு பெண் தேடும் படலம் ஆரம்பிக்க அவர்கள் கல்லிடைக்குறிச்சிக்கு செல்கின்றனர்.


பெண் பார்க்கும் படலத்திற்கு முன்னதாகவே அந்தப் பெண்ணைப் பார்த்து விடும் ஆவலில் அவள்வேலை பார்க்கும் பள்ளிக்கே போய் விடுகிறான், சரவணன். பார்த்த மாத்திரத்தில் மீனாட்சியின்அழகுஅவனை கட்டிப்போட்டு விடுகிறது. ஆனால் பள்ளி முடிந்ததும் அவள் வேறொரு ஆணுடன் பைக்கில் செல்ல, அது அவளது காதலன் என்று ஒருவர் சொல்ல, சரவணன் கோபமாகிறான். அதனால் பெண் பார்க்கும் படலம் அவனால் ரகளைக் களமாகிறது.


ஆனால் மீனாட்சி, தான் பைக்கில் சென்றது உண்மை என்றும், சரவணன் சண்டையிட்டதில் உண்மை இருக்கிறது என்றும் கூற, அத்தனை பேர் முன்னிலையிலும் அவள் உண்மையைக் கூறியதைக் கண்டு மனம் மாறுகிறான். மீனாட்சியுடன் திருமணமும் ஆனது.


திருமணத்துக்குப்பின் சரவணனுக்கும் மீனாட்சிக்கும் என்னவாயிற்று? அவர்கள் இதுவரை போட்ட சண்டையில் காதலும், ஊடலும் இருந்தது. ஆனால் இப்போதைய சண்டை அப்படியல்ல. சரவணன் மனதளவில் மிகுந்த பாதிப்படைந்து மீனாட்சி மேல் வெறுப்பில் இருக்கிறான். இது இவர்கள் வாழ்க்கையின் முடிவா தொடக்கமா...? கிளைமாக்சை நெருங்கும் தொடரில், ஐந்து வாரங்களில் இந்த கேள்விக்கு விடை கிடைக்கலாம்.
நன்றி: தினதந்தி

aanaa
7th September 2013, 06:29 AM
பாமா விஜயம்


ராஜ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘‘பாமா விஜயம் தொடர், 100 எபிசோடுகளை கடந்து தொடர்கிறது.


பாமா–விஜயா இருவரும் மாமியார்–மருமகள். இருவரும் செய்யும் லூட்டிகளும், காமெடிகளும் இத்தொடரை கலகலப்பாக வைத்திருக்கிறது. அத்தை நான் தான் அறிவாளி என்க, மருமகளோ உங்களை விட நான் தான் அறிவாளி என்று மல்லுக்கு வர, முட்டி மோதிக்கொள்கிறார்கள். தினமும் ஒரு சம்பவத்தை மையமாக வைத்துக்கொண்டு நகைச்சுவை மிளிர தொடர்கிறது, இந்த தொடர்.
நன்றி: தினதந்தி

aanaa
7th September 2013, 06:29 AM
சிரித்து சிரித்து...




சன் டிவியில் புதிய வரவான தேனிலவு தொடரில் எடுத்த எடுப்பிலேயே கொடைக்கானல் ஜில்லிப்பை உணர முடிகிறது. மூன்று புதுமணத்தம்பதிகள் தேனிலவு கொண்டாட(!) கொடைக்கானல் வர, அங்கே நடக்கும் அதிரடிச் சம்பவங்களை பரபரவென்று காட்சிப்படுத்துகிற விதத்தில் கூடவே திகிலும் சேர்ந்து கொள்வது தொடரின் பிளஸ். குளுகுளு கொடைக் கானலில் தேனிலவுத் தம்பதியரில் ஒருவராக வந்து பத்தினிப் பெண்ணின் சாபத்தில் மாட்டிக் கொண்டு திருமுருகன் விழிக்கிற இடத்தில் சிரித்து சிரித்து பல் சுளுக்கிக் கொள்கிறது.
நன்றி: தினதந்தி

aanaa
7th September 2013, 06:31 AM
உறவுகள் ஒரு தொடர்கதை


மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை நாள்தோறும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் ‘‘உறவுகள் ஒரு தொடர்கதை.’’


இரு சகோதரிகளின் வாழ்க்கைப் போராட்டத்தை அன்றாட நடைமுறை சூழலைக் கொண்டு நெகிழ்ச்சியுடன் விவரிக்கிறது, தொடர்.


சேத்தன், தேவதர்ஷினி, உமா பத்மநாபன், ஓ.ஏ.கே.சுந்தர், சாருஹாசன், சபீதாஆனந்த் நடிக்கிறார்கள். வரும் திங்கள் முதல் தொடங்கவிருக்கும் இந்த தொடரை பிரியா இயக்குகிறார்.
நன்றி: தினதந்தி

aanaa
15th September 2013, 08:30 PM
நட்சத்திரக் கூட்டம் நிறைந்த ‘ரெங்கவிலாஸ்’




ஜெயா டி.வியில் ரெங்கவிலாஸ், வைதேகி, அவள் அப்படித்தான் என 3 புதிய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. சின்னத்திரையில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக நட்சத்திரங்கள் நடிக்கும் தொடர் என்ற பெருமை ‘ரெங்கவிலாசுக்கு’ கிடைத்திருக்கிறது. டைரக்டர் மணிபாரதி இயக்கி வரும் இந்த தொடரில் ஜெயசித்ரா, ராதாரவி, வடிவுக்கரசி, டெல்லி குமார், பூவிலங்கு மோகன், அனுராதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட எக்கச்சக்க நட்சத்திரங்கள்.

‘சின்னத்திரையில் ஒரு சினிமா’ என்ற அடைமொழியுடன் தொடரும் இந்த தொடரின் கதை ஸ்ரீரங்கத்தில் நிகழ்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் படப்பிடிப்பும் அங்கேயே நடந்தது. ‘ரெங்கவிலாஸ்’ என்ற பெயரில் உள்ள அந்த பிரமாண்ட வீட்டில் வாழும் கூட்டுக்குடும்பம், அவர்களின் அனுதின ஆசாபாசங்கள் தொடரின் கதைக்களம். ரியல் எஸ்டேட் நடத்திவரும் ஒருவருக்கு அந்த வீடு கண்ணில் பட, தகிடுதத்தம் செய்து அந்த வீட்டை அபகரிக்க முயல்கிறார். முடிவு என்னாகிறது என்பது திருப்புமுனைகளுடன் கூடிய திரைக்களம்.

பஷீர் இயக்கும் ‘வைதேகி’ தொடர் குழந்தைகளின் மெல்லிய உணர்வையும், குழந்தை இல்லாத தம்பதிகளின் வலிய உணர்வுகளையும் சொல்கிறது. ஆண் நடிகர் ஒருவரின் வாழ்வை மையமாகக் கொண்ட இந்த தொடரில் நடிகராக அப்பாஸ் நடிக்கிறார், மீனா கார்த்திகா அவரது ஜோடி, வைதேகியாக திரைவலம் வருவது குழந்தை நட்சத்திரம் ஜெனோ.

இளமைக் கனவுகளுடன் திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கும் தமிழ்ச் செல்வியை விதி சிறைப்பறவை ஆக்குகிறது. தன் வாழ்க்கையில் ஏற்பட்ட துரதிருஷ்டத்திற்கும், துன்பத்திற்கும் அடிபணியாமல் தோல்விகளையும், வேதனைகளையும் ஏணியாக்கி தன் உன்னத லட்சியங்களை வென்றெடுக்கும் ஒரு பெண்ணின் கதையே ‘அவள் அப்படித்தான்’ தொடர்.

தொடரில் தமிழ்ச்செல்வியாக ஈஸ்வரிராவ் நடிக்கிறார். எழுத்து, இயக்கம்:ஆர்.இளவரசன்.
நன்றி: தினதந்தி

aanaa
15th September 2013, 08:31 PM
ஒரு குடும்பத்தின் கதையிது!


மாமனார் திடீர் உடல்நலக் குறைவால் தரையில் விழுந்து கிடக்கிறார். இது தெரியாத மருமகள் பக்கத்து அறையில் இருக்கிறாள். அந்த நேரத்தில் ஷாப்பிங் போயிருந்த மனைவியும் மகளும் வருகிறார்கள். பார்த்ததும் பதறியடித்து டாக்டரை வரவழைக்கிறார்கள். அப்போது தான் மருமகளுக்கே மாமனார் மயங்கி விழுந்த விஷயம் தெரிகிறது.

இதனால் மாமனாரை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என்று மருமகள் மேல் வார்த்தை அம்புகள் பாய்கின்றன. இந்த இடத்தில் பணக்கார வீட்டுப்பெண் நடுத்தர குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டதால் நேர்ந்த அலட்சியம் என்ற கோணத்தில் வார்த்தைகள் உரசிக் கொண்டதில் ‘நீ தேவையில்லை. உன் வீட்டுக்கே போய் விடு’ என்று கணவன் சொல்ல...அந்த பெண்ணை முந்திக் கொண்டு மாமனாரே மருமகளுக்காக பேசி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் இடத்தில் ஒரு குடும்ப சூறாவளி அப்போதைக்கு சேதாரம் இன்றி முடிந்த அற்புதத்தை உணர முடிந்தது. பாலிமரில் வரும் ‘உள்ளம் கொள்ளை போகுதே’ சீரியல் அல்ல..வாழ்க்கை!
நன்றி: தினதந்தி

aanaa
22nd September 2013, 08:23 PM
இவர் குடிப்பது போலே நடிப்பார்!


குடிக்கு அடிமையான ஒரு இளைஞனை ‘நாதஸ்வரம்’ தொடரில் அப்படியே பிரதிபலிக்கிறார், சாய் ஷக்தி. அன்பான பெற்றோர், நல்ல மனைவி அமைந்தும் குடியின் ஆளுமைக்குள் சிக்கிக்கொண்டு குடித்தே ஆக வேண்டும் என்ற தாகத்தில் கட்டிய மனைவியை அடித்துப்போட்டு விட்டு, வீட்டில் இருந்த சாமி உண்டியலை உடைத்து பணத்தை பொறுக்கிக் கொண்டு பாருக்கு ஓடும் காட்சியில், அந்த மது அடிமை கேரக்டரில் நடிப்பில் அதகளப்படுத்தியிருந்தார், இவர்.


அவரை ‘நாதஸ்வரம்’ படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தபோது, ‘‘குடிகார நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறீர்களே, உங்களுக்கும் அந்தப்பழக்கம் உண்டா?’’ என்று ஆரம்பித்தோம். ‘‘நடிப்பு என்பது கேரக்டர்களின் பிரதிபலிப்பு தானே. குடிக்கும் வழக்கம் கொண்ட நண்பர் ஒருவரின் மேனரிசங்களை ஸ்டெடி பண்ணியதில் அந்த கேரக்டர் அற்புதமாக அமைந்து விட்டது. என் மீது நம்பிக்கை வைத்து இந்த கேரக்டரை எனக்குத் தந்த டைரக்டர் திருமுருகனைத்தான் இந்த பாராட்டு போய்ச் சேர வேண்டும்’’ என்கிறார், அவையடக்கத்துடன்.


வெங்கட் இயக்கத்தில் மழலைப்பட்டாளம் தொடரில் அறிமுகமாகி, தொடர்ந்து வள்ளி, சொந்தபந்தம், நாதஸ்வரம், சரவணன்–மீனாட்சி என தொடர்பவர், இப்போது ‘சன் குடும்பம்’ நடன நிகழ்ச்சியிலும் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். என்றாலும் ‘நாதஸ்வரம்’ தொடர் கொடுத்த பிரேக், பிரமிப்பின் உச்சம் என்கிறார்.


சாய் ஷக்திக்கு நாளை திருமணம். உறவுப்பெண்ணை மணக்கிறார். ‘‘வருங்கால மனைவிக்கு உங்கள் நடிப்பு பிடிக்குமா?’’ கேட்டால், ‘‘ரொம்பவே பிடிக்கும். அதிலும் என் குடிகார நடிப்புக்கு அவங்க முதல் ரசிகை’’ என்கிறார்.
நன்றி: தினதந்தி

aanaa
29th September 2013, 07:30 PM
கிளைமாக்சை நெருங்கும் உதிரிப்பூக்கள்


சன் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் உதிரிப்பூக்கள் தொடர், கிளைமாக்சை எட்டி விறுவிறுப்பின் உச்சம் தொட்டிருக்கிறது.


உச்சபட்ச ஆத்திரத்தில் எடுக்கப்படும் எல்லா அவசர முடிவுகளுமே விபரீதத்துக்கு நாம் விரும்பிக் கொடுக்கிற விலையாகத்தான் அமையும். அநியாயத்தை தட்டிக் கேட்ட ஒரே காரணத்துக்காக தன் குடும்பத்தை பழி வாங்கி, மனைவியும் மகளும் சாக காரணமாக இருந்த தட்சிணாமூர்த்தியை பழிவாங்கும் நோக்கில், அவரது 3 குழந்தைகளை கடத்தி விடுகிறான் சிவநேசன். அந்தக் குழந்தைகளை தன் சொந்தக்குழந்தைகள் போல் பாராட்டி சீராட்டி வளர்க்கிறான்.


ஒருகட்டத்தில் சிவநேசன் வளர்க்கும் குழந்தைகளுக்கு அவர் தங்கள் ஒரிஜினல் அப்பா இல்லை என்ற உண்மை தெரிய வர, அடுத்த கட்ட உறவு, உரிமைப் போராட்டம். மழலைப்பருவத்தில் பறிகொடுத்த பிள்ளைகளை, வளர்ந்த நிலையில் பார்க்கும் தட்சிணாமூர்த்தியின் மனைவி மேற்கொள்ளும் பாசப்போராட்டம் தாய்ப்பாசத்தின் உச்சம்.


இதற்கிடையே இந்த மூன்று பிள்ளைகளின் எதிர்காலம், அவர்களுக்கான மணவாழ்க்கை எல்லாவற்றிலும் சிவநேசனின் பங்கு இருக்கவே செய்கிறது. லட்சுமிபதிக்கு மனைவியாகி மூத்தமகள் ஷக்தி படும் துயரம் அவன் நெஞ்சில் ஆணியறைகிறது.


இந்த நேரத்தில் மனைவியுடன் சேர்ந்து எந்த மகள் இறந்து விட்டாள் என்று எண்ணினானோ, அந்த மகள் மேகா இப்போது வளர்ந்து மலர்ந்து பூத்துக் குலுங்கும் பருவத்தில். ‘அங்கிள்’ என்று அன்புடன் அழைக்கும் அவள், தன் ரத்தத்தின் ரத்தம் என்பது அவனுக்கும் தெரியாது. லட்சுமிபதிக்கு இரண்டாவது தாரமாக அவளை மணம் பேசியிருக்கும் நிலையில், மேகா தன் மகள் என்ற உண்மை சந்தோஷ சூறாவளியாய் அவனை தாக்குகிறது.


அடுத்தகட்டமாய் ஷக்தி உயிருடன் தானிருக்கிறான் என்பது சிவநேசனுக்குத் தெரிய வர, இந்த திருமண விஷயத்தில் அவன் எடுக்கும் முடிவு என்ன? ஷக்தியை மீண்டும் லட்சுமிபதியின் அம்மா அலமேலு மருமகளாக ஏற்றுக் கொள்வாளா? சிவநேசனுக்கு மேகா தன் மகள் என்பது தெரிய வந்த மாதிரி மேகாவுக்கு சிவநேசன் தான் தன் அப்பா என்பது தெரிய வருமா? ஷக்தியின் தங்கை நிலாவின் வாழ்வில் கணவன் என்ற பெயரில் புயல் ஏற்படுத்திய ‘பெண்கள் கடத்தல் புகழ்’ சத்யா தண்டிக்கப்படுவானா?


பணமும் கோபமும் ஒருசேர அமையப் பெற்ற தட்சிணாமூர்த்தி இனி என்னாவார்? உதிரிப்பூக்களாய் சிதறிய குடும்பம் மீண்டும் மாலையாய் சேருமா?


இத்தனை கேள்விகளுக்கும் அடுத்தடுத்த எபிசோடுகளில் பரபரப்பான பதில்கள் கிடைக்கும் என்கிறார், தொடரின் இயக்குனர் விக்ரமாதித்தன். தயாரிப்பு: ஹோம் மீடியா மூவிமேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார்.
நன்றி: தினதந்தி

aanaa
29th September 2013, 07:31 PM
மெல்லிய உணர்வுகளை காட்சிப்படுத்தும் ‘வைதேகி’


ஜெயா தொலைக் காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் வைதேகி தொடர், குழந்தைகளின் மெல்லிய உணர்வுகளையும், குழந்தை இல்லாத தம்பதிகளின் வலிய உணர்வுகளையும் கதைக் களமாக கொண்டது.


நடிகர் அப்பாஸ் முதன்முதலாக சின்னத்திரையில் நடிக்கும் இந்த தொடரில், மீனு கார்த்திகா என்ற புதுமுகம் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். வைதேகி என்னும் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருப்பது குழந்தை நட்சத்திரம் ஜெனோ. நடிகை சுதா சந்திரன், ஸ்ரீதர், அர்ச்சனா, ஷப்னா, ஸ்ரீலதா, அழகு என சின்னத்திரையின் மாறுபட்ட முகங்கள் பலரும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.


தொடரின் தயாரிப்பாளர்கள் ‘சாதகப் பறவைகள்’ சங்கர் மற்றும் பரணி இருவரும் தொடர் பற்றிக் கூறும்போது, ‘‘அப்பாஸின் கதாபாத்திரமும் மீனு கார்த்திகாவின் கதாபாத்திரமும் தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களின் பாதையில் ஒரு அழுத்தமான தடயத்தை உருவாக்கும்’’ என்கிறார்கள்.


பாபு யோகேஸ்வரனின் ஆக்க மேற்பார்வையில், இயக்குனர் ஜெரால்டின் குழுவில் பணியாற்றிய பஷீர் இத்தொடரை இயக்குகிறார். விஷூவல் டிசைனர்: மகேஷ்வரன். ஒளிப்பதிவாளர்: பிரகாஷ். தலைப்புப் பாடல் இசை ‘சாதகப் பறவைகள்’ சங்கர். பாடலாசிரியர் நா.முத்துக்குமார்.
நன்றி: தினதந்தி

aanaa
29th September 2013, 07:32 PM
சிந்துவின் மகன் மீட்புப் போராட்டம்!


ராஜ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘‘சிந்து பைரவி’’ தொடர், எதிர்பாராத திருப்பங்களுடன் விரைகிறது.


சிந்துவின் மகன் யுவராஜ் அவினாஷால் கடத்தப்படுகிறான். ஏற்கனவே அவினாஷின் உறவினர் மகன் கண்ணன் சிந்துவிடம் தத்துப்பிள்ளையாக வளர்கிறான். கண்ணனுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளதால், சிந்துவிடம் மிரட்டலை தொடர்கிறான். ‘உனது மகன் யுவராஜ் வேண்டுமானால் கண்ணனை என்னிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையேல், கொன்று விடுவேன்’ என மிரட்டுகின்றான்.


இந்த மிரட்டலை தனது குடும்பத்தாரிடம் தெரியப்படுத்தாத சிந்து, தன்னந்தனியாக மகனை மீட்கும் முயற்சியில் தோல்வி அடைகிறாள். தன்னிடம் தத்துப்பிள்ளையாக வளர்த்த கண்ணனை விட்டுப்பிரிய அவளுக்கு மனமில்லாததே இந்த முயற்சி பிசுபிசுத்துப் போனதற்கு காரணம்.


ஏற்கனவே, ராத்தோர் தனது மனைவி பைரவியை காணவில்லை என்று தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், தனது வளர்ப்பு மகன் யுவராஜ் கடத்தப்பட்டதும் மிகவும் மன உறுத்தலோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.


சிந்து, இந்த சம்பவத்தை பைரவியின் கணவர் ராத்தோரிடம் சொல்லும்போது கணவர் வீர் கேட்டு விடுகிறார். இதனால் சிந்துவுக்கும், வீருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்படுகிறது.’’


யுவராஜை மீட்க வீர் தனது வளர்ப்பு மகன் கண்ணனை தாரை வார்க்கிறாரா? அல்லது சிந்துவே தன்னந்தனியாக போராடி மகன் யுவராஜை மீட்கிறாளா? வரும் பரபரப்பு காட்சிகள் பதில் சொல்லும்.
நன்றி: தினதந்தி

aanaa
29th September 2013, 07:33 PM
புதுக்கவிதை


விஜய் டி.வியில் வரும் திங்கட்கிழமை ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர், ‘புதுக்கவிதை.’


இது ஒரு மாறுபட்ட கதைக்களத்தில் ராமேஸ்வரத்தை சுற்றி பயணிக்கிறது, இந்த காதல் தொடர்.


காவ்யா அழகானவள். அன்பானவள். எதிலும் ஆழமான பார்வை கொண்டவள். புத்திசாலியான இவள் எடுக்கும் முடிவுகள் இவள் வாழ்க்கையை மட்டுமல்ல, சமூகத்தையும் மாற்றுகிறது.


காவ்யா சந்திக்கும் இளைஞன் அர்ஜூன் அவளுக்கு எதிர்மாறான குணம் கொண்டவன். புதுக்கவிதையாய் இவள். மரபுக்கவிதையாய் அவன். இவர்கள் தங்களுக்கிடையே காதலையும், வாழ்க்கையையும் பகிர்ந்து கொள்ள நேர்ந்தால் என்னவாகும்? அதுதான் இந்த தொடரின் கதைக்களம்.


திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது, புதுக் கவிதை.
நன்றி: தினதந்தி

aanaa
6th October 2013, 10:39 PM
மகாபாரதம்


விஜய் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய புராணத் தொடர், மகாபாரதம்.


இதுவரை பல மகாபாரத கதைகளை கேட்டிருந்தாலும், நாம் அறிந்திராத பல கிளைக்கதைகளை யும் எடுத்துச் சொல்கிறது, புதிய படைப்பாக உருவாகி வரும் இந்த மகாபாரதம் தொடர். சத்யவதி, சாந்தனு வாழ்க்கையிலிருந்து தொடங்கி, பீஷ்மரின் தியாகம் பற்றிய அறிமுகத்தோடு பயணிக்கிறது கதை.


மகாபாரதம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது குருஷேத்திரத்தில் நடைபெறும் யுத்தமும் அது தொடர்பான நிகழ்வுகளுமே. ஆனால் அவையனைத்தையும் தாண்டி பல வரலாற்று சிறப்புமிக்க நுணுக்கமான கதையையும் இந்த தொடரில் காணலாம்.


இந்த பிரம்மாண்ட தொடருக்காக தமிழ்நாடு முழுவதும் பிரத்தியேக மகாபாரத வாகனங்கள் சுற்றி வருகின்றன. வாகனங்களில் வரும் நிபுணர் குழு நடத்தும் கேள்வி–பதில் போட்டியில் கலந்துகொண்டு சரியான விடை சொல்லி மகாபாரதம் தொடர்பான பரிசுகளை அள்ளிச் செல்லலாம்.
நன்றி: தினதந்தி

aanaa
6th October 2013, 10:40 PM
புகுந்த வீடு




ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக் கிழமை வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புகுந்த வீடு தொடர், நம்பிக்கைத் துரோகத்தை மையப்படுத்தி காட்சிகளில் வேகம் பிடிக்கும் தொடர்.


அனுஷாவின் அழகில் மயங்கிக் கிடந்த விசுவுக்கு பேரிடியாக அமைகிறது, அனுஷாவின் அண்ணன் ஜெயகுமார் செய்த காரியம். ஜெயகுமார் சிபாரிசு செய்த ஒரு மோசடிக் கும்பலுக்கு 15 கோடி ரூபாய் கடன் கொடுத்த பிறகே அவர்கள் மோசடிப் பேர்வழிகள் என்று அறிகிறான், விசு. அந்த அதிர்ச்சியில் நிலைகுலைந்து போகிறான். எதேச்சையாக தன் மகள் ஸ்வேதாவுடன் கோவிலுக்கு வரும் ராதா, விசு கோவிலில் அமர்ந்திருக்கும் நிலையைக் கண்டு பெரிதும் வருந்துகிறாள்.


இதற்கிடையே குடிபோதையில் தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருக்கும் விசுவின் பையில் இருந்து வங்கியின் சாவிகளை ஜெயக்குமார் எடுக்கிறான். அதை காப்பி எடுத்தவன், பெரிய திட்டம் ஒன்றை தீட்டுகிறான். அதாவது ஜெயகுமாரை இந்த வழக்கில் மொத்தமாக மாட்டி வைத்து விட்டு தன் காதலியுடன் வடஇந்தியாவில் செட்டிலாகி விடுவது அவன் திட்டம்.


அவன் திட்டம் நிறைவேறியதா? விசுவின் வேலை, கவுரவம் காப்பாற்றப்படுமா? கேள்விகளுக்கான பரபரப்பான விடைகள், தொடரும் காட்சிகளில் கிடைக்கும்.
நன்றி: தினதந்தி

aanaa
6th October 2013, 10:55 PM
ராஜி செத்துப்போயிருவாளா? … சோகத்தில் தவிக்கும் கார்த்திக்!



விஜய் டிவியில் ஆபிஸ் சீரியல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. திருமண நிச்சயம் முடிந்தும் கார்த்திக்கை மறக்க முடியாமல் தவிக்கும் ராஜி. சூசனின் காதலை மறுக்க முடியாமல் தவிக்கும் கார்த்திக் என கடந்த 10 எபிசோடுகளாவே ஒரே சோகமயம்தான். ஆரம்பத்தில் ஜாலியாக ஆரம்பித்த ஆபிஸ் காதல், கல்யாணம், உயரதிகாரிகளின் உள்குத்து என போக ஆரம்பித்தது. ராஜி - கார்த்திக் இடையே காதல் இருந்தாலும் அதை மறைக்கும் ராஜி அப்பாவின் விருப்பத்திற்கு சம்மதித்து அமெரிக்க மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறாள். இதனால் வெறுத்துப் போன கார்த்திக் சூசனிடம் ஐலவ்யூ சொல்ல அதை உண்மை என நினைத்து சந்தோசமடைகிறாள் சூசன்.

aanaa
6th October 2013, 10:56 PM
சன் டிவியில் நாதஸ்வரம் தொடர் 900 மாவது
எபிசோடுகளைக் நோக்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. நாதஸ்வரம் தொடரில் ஆரம்பம் முதலே பெண் மறுமணத்திற்கு ஆதரவான காட்சிகளே அமைக்கப்பட்டு வருகிறது. மலர் வாழ்க்கை சரியில்லாமல் போகவே கணவனை விட்டு பிரிகிறாள். காதலித்த பெண்ணிற்கு வாழ்க்கைத் தருகிறான் கோபி. மலரின் தங்கை ரோகிணியை அவளது தாய்மாமன் மகனுக்கு இரண்டாவதாக திருமணம் செய்து தர உள்ளனர். அதேபோல் அத்தை மகள் மகாவை திருமணம் செய்த பாண்டி கொலை செய்யப்படவே மகாவின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது.

aanaa
20th October 2013, 10:07 PM
குழந்தைக்காக ஒரு போராட்டம்!




திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ராஜ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மண்வாசனை தொடர், 600–வது எபிசோடை எட்டவிருக்கிறது. பால்ய விவாகத்தை பின்புலமாக கொண்டது இந்த தொடர்.


குழந்தையை கருவாக சுமந்து கொண்டிருக்கும் நேரத்தில் கணவரை இழக்கும் சுகுணா, அதன்பிறகு ஷியாம் என்பவருக்கு மனைவி ஆகிறாள். ஷியாமின் பெற்றோர் அந்த குழந்தையை ஏற்றுக்கொள்ளும் நிலையில், ஷியாமின் பெரியப்பா மட்டும் அந்தக் குழந்தையை ஏற்க மறுக்கிறார். காரணம் அவருக்கு வாரிசு கிடையாது. வேறொருவனுக்குப் பிறந்த குழந்தை தங்கள் குடும்ப சொத்தை சொந்தம் கொண்டாட ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று எண்ணும் அவர், அந்தக் குழந்தையை கொல்ல முடிவெடுக்கிறார். அவர் செய்த சதியால் மாடியில் இருந்து தவறி விழுந்த அந்த குழந்தை ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறது.


இதையறிந்த சுகுணாவின் முதல் கணவரின் பெற்றோர், ஷியாமின் குடும்பத்தாரோடு தங்கள் வாரிசைக்கேட்டு மோதுகிறார்கள். விஷயம் போலீசுக்குப் போக, இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் போலீசார், பிரச்சினையை நீதிமன்றத்தில் தீர்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்துகிறார்கள்.குழந்தை பிழைத்ததா? அப்படிப் பிழைத்தால் அந்தக் குழந்தை யாருக்கு சொந்தம்? பரபரப்பை தக்கவைத்தபடி விரைகிறது தொடர்.
நன்றி: தினதந்தி

aanaa
20th October 2013, 10:08 PM
வேகம் பிடிக்கும் தேன் நிலவு!


சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தேன் நிலவு தொடர், நகைச்சுவை பின்னணியில் உருவான திகில் தொடர். இயக்குனர் திருமுருகன் தயாரிக்கும் இந்த தொடரில் அவரும் முக்கிய கேரக்டரை ஏற்றிருக்கிறார்.


தேனிலவு கொண்டாட கொடைக்கானல் வந்த நான்கு புதுமணத் தம்பதிகளுக்கு நேர்ந்த திகிலான அனுபவங்களும், அதன் பாதிப்பில் இருந்து அவர்கள் மீள முடிகிறதா என்பதை தொடரின்ஆரம்ப காட்சிகள் மிரட்சியுடனே சொல்லிப்போயின. கூடவே நகைச்சுவை காட்சிகளும் அடுத்தடுத்து காட்சிகளானதில் நேயர்களின் இனிப்புச் சுரங்கமாகி விட்டது, இந்த தேனிலவு.


‘‘தொடரில் அடுத்த அதிரடி என்ன?’’


தொடரை இயக்கும் விக்ரமாதித்தனிடம் கேட்டபோது, ‘‘தேனிலவுத் தம்பதிகள் தங்கள் உல்லாச டூரை முடித்துக் கொண்டு ஊருக்கு கிளம்பும் நேரத்தில் ஒரு கொலை விழுகிறது. கொல்லப்பட்டது யார்? கொலையாளி யார்? என்ற பரபரப்பு கேள்வியுடன் தொடர் இன்னும் வேகம் பிடிக்கத் தொடங்கி விடும். கொஞ்சமும் ஊகிக்க முடியாத ஒரு நபர் தான் கொலையாளி என்னும்போது நேயர்களின் இதயத்துடிப்பு ஒரு நிமிடம் ஏறி இறங்கும் என்பது மட்டும் நிச்சயம்’’ என்கிறார்.


தொடரில் திருமுருகன்–செண்பகா, குமார்–சங்கீதா, அண்ணாமலை–சிவரஞ்சனி தவிர, டெல்லிகணேஷ்–சுதா ஜோடியும் இருக்கிறார்கள். கலகலப்பு ஏரியாவை திருமுருகன் கவனிக்க, திகிலுக்கு மற்றவர்கள். இயக்கம் விக்ரமாதித்தன்.
நன்றி: தினதந்தி

aanaa
26th October 2013, 11:16 PM
தந்தி டி.வி.யில் 63 நாயன்மார்கள்




சைவத்தையும் தமிழில் பக்தி இலக்கியத்தையும் வளர்த்தெடுத்ததில் சைவ சமய குரவர்களுக்கு பெரும் பங்குண்டு. சைவசமயத் திருத்தொண்டர்கள் பெருமையை சேக்கிழார் பெரிய புராணமாக வடித்தார். இது தந்தி டி.வி.யின் சீரிய முயற்சியில் திரைவடிவம் பெறுகிறது.


நாயன்மார்கள் அறுபத்து மூவர். இவர்களது வாழ்க்கையையும், சைவ சமய மற்றும் தமிழ்த் தொண்டையும் தந்தி டி.வி விரைவில் மிகப்பெரும் பொருட்செலவில் ஒரு புராணத் தொடராக வழங்க இருக்கிறது.


நாயன்மார்கள் வாழ்க்கையை தத்ரூபமாக படம் பிடிக்கும் இந்த தொடர், எல்லோர் மனதிலும் தமிழ் சுவையை கூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவக்கிரக தலங்கள் அமைந்துள்ள தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களிலும் நாயன்மார்கள் வாழ்க்கை வரலாறு செய்திகள் படமாக்கப்பட்டு வருகிறது. கி.பி 400–ல் வாழ்ந்திருந்த சிவனடியார்கள் பற்றிய சுவையான செய்திகளை, மிக நேர்த்தியுடன் தயாரித்து வருகிறார்கள்.


நாயன்மார்கள் வாழ்ந்த காலகட்டங்களுக்கே நம்மை கூட்டிச்செல்லும் இந்த வரலாற்று சிறப்புமிக்க தொடர், எல்லோராலும் போற்றப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பக்திக்கு இலக்கணமாக திகழ்ந்த நாயன்மார்கள் தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டுகள் குறித்தும் சிறப்பாக தொகுக்கப்பட்டு வருகிறது. நாயன்மார்கள் வாழ்ந்த இடங்களுக்கே சென்று, படப்பிடிப்பு செய்யும் வேலையும் நடந்து வருகிறது.


சுவாரஸ்யமான நாயன்மார்கள் பற்றிய காவியத்தை மிக விரைவில் தந்தி டி.வி ஒளிபரப்புவதில் பெருமைப்படுகிறது.


தொடரில் சஞ்சய்– சுந்தரமூர்த்தி சுவாமிகளாகவும், லாவண்யா– பறவை நாச்சியாராகவும், ரஞ்சிதா– சங்கிலி நாச்சியாராகவும், சுபத்ரா எழுத்தாளர் சிவானியாகவும் வருகிறார்கள். ரவிசங்கர், சித்ரா, கிருஷ்ணா, மணிகண்டன், ஷியாம், சாஜன் ஆகியோர் ஏனைய நட்சத்திரங்கள்.


உரையாடல்: கே.பி.அறிவானந்தம். இசை: ரவிராகவ். ஒளிப்பதிவு: பார்த்திபன். திரைக்கதை, இயக்கம்: ஜி.தனுஷ். தயாரிப்பு: திருமதி.குட்டிபத்மினி



நன்றி: தினதந்தி

aanaa
26th October 2013, 11:17 PM
சிரிக்க வைக்கும் மாதவன்!




திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 10 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதிய தொடரான ‘மடிப்பாக்கம் மாதவன்’ எடுத்த எடுப்பிலேயே நகைச்சுவைக்களத்தில் வேகம் பிடிக்கத் தொடங்கி விட்டது.


டிடெக்டிவ் ஏஜென்சி வைத்திருக்கும் மாதவனுக்கு ஒரு அம்மா. ஒரு தங்கை. ஒரே ஒரு மனைவி. புத்திசாலித்தனமாக ஏதாவது பண்ணுகிறேன் என்று மாட்டிக்கொண்டு கடைசியில் சந்தர்ப்ப சூழ்நிலையால் தப்பித்து விடுவான், இந்த மாதவன்.


மாதவனின் அம்மா பண்டரிபாய் லேடீஸ் கிளப் தலைவி. அவளாலே மற்றவர்களுக்கு தலைவலி. மாதவனின் மனைவி கவுசல்யா. மாமியாரை மட்டம் தட்டுவதே அவள் வேலை.


மாதவன் தங்கை பிரியா யாரைப்பார்த்தாலும் காதலிப்பவள்.


இவர்களுக்கு மத்தியில் மாதவனின் மாமனார் வாசுதேவன் பயங்கர பந்தா பார்ட்டி. யாரையாவது ஏமாற்றி பணம் சம்பாதிப் பதையே கொள்கையாக வைத்திருப்பவர். இப்படி ஏமாற்றி சம்பாதிப்பது அவரது குடும்பத்துக்காகவா? இல்லவே இல்லை, ஆசைநாயகி காஞ்சனாவுக்காக.


அந்த காஞ்சனாவுக்கும் ஒரு தங்கை, ஒரு தம்பி. எப்படியாவது தங்கையை மாதவனுக்கு இரண்டாம் தாரமாகவும், தம்பியை பிரியாவுக்கும் திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று காய் நகர்த்துகிறாள், காஞ்சனா. இதற் காக திட்டமிட்டு மாதவன் வீட்டின் அருகிலேயே குடியிருக்கிறாள்.


இவர்களுக்கு இடையில் மாதவன் படும் அவஸ்தைதான் கதையின் சுவாரஸ்ய முடிச்சு.


நட்சத்திரங்கள்: ராம்ஜி, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ மதுமிதா, நளினி, இயக்குனர் பாரதி கண்ணன், சுமங்கலி, நாகலட்சுமி, சிவகுமார்.


கதை, திரைக்கதை: எஸ்.வி.ரமணி; வசனம்: எம்.ரவிக்குமார்; ஒளிப்பதிவு: ஆர்.வெங்கடேஷ். இயக்கம்: எஸ்.மோகன்; தயாரிப்பு நிர்வாகம்: அனில் சுந்தர்; கிரியேட்டிவ் ஹெட்: ஈ.ராமதாஸ்.


தயாரிப்பு: சினி ஸ்டார் மீடியா (பி) லிமிடெட்..
நன்றி: தினதந்தி

aanaa
3rd November 2013, 08:36 AM
மீண்டும் அர்ச்சனா! சின்னத்திரை தொடரில் நடிக்கிறார்


நடிகை அர்ச்சனா டைரக்டர் பாலுமகேந்திராவின் கண்டுபிடிப்பு. சிறந்த நடிப்புக்காக தேசிய அளவிலான ‘ஊர்வசி’ விருது பெற்றவர். சினிமாவில் நடிப்பதை நிறுத்தியவரை 6 வருடங்களுக்குப் பிறகு சின்னத்திரைக்கு அழைத்து வருகிறார், டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா.


‘புதுயுகம்’ தொலைக் காட்சியில் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் வரும் திங்கட்கிழமை முதல் தொடங்கவிருக்கும் ‘உணர்வுகள்’ தொடரில் தான் நாயகியாக சின்னத்திரையில் அடியெடுத்து வைக்கிறார் அர்ச்சனா.


‘‘ஒவ்வொருவர் வாழ்விலும் அவர்கள் சிரித்த தருணங்கள், கண்ணீர் சிந்திய நிகழ்வுகள், இணைந்த உறவுகள், பிரிந்த உறவுகள், புதிய அர்த்தம் உணர்த்திய நிமிடங்கள் எல்லாம் கலந்ததே இந்த ‘உணர்வுகள்’ தொடர். இது வெள்ளித்திரையில் திரைப்படம் பார்த்த உணர்வை ஏற்படுத்தும்’’ என்கிறார் டைரக்டர் சுரேஷ்கிருஷ்ணா.


இசை: தேவா. ஒளிப்பதிவு: சஞ்சய் பி.லோக்நாத். திரைக்கதை: எல்.சேக்கிழார். வசனம்: ஜான்மகேந்திரன்.


திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது ‘உணர்வுகள்’ தொடர்.
நன்றி: தினதந்தி

aanaa
3rd November 2013, 08:40 AM
சின்னத்திரையில் ஒரு ‘பாசமலர்’


சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர், ‘பாசமலர்.’ அண்ணன்–தங்கை பாசத்தை மையப்படுத்திய இந்த தொடரில், சொந்த பந்தங்களுக்கிடையேயான பாசப்போராட்டமும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது சிறப்பு.


தங்கையின் மணவாழ்வு சிறப்புற அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கிறான், அண்ணன். மாப்பிள்ளை முடிவாகி திருமணம் உறுதியான நிலையில் அந்த சம்பந்தம் முறிந்து போகிறது. இதனால் அதிர்ச்சியாகும் அண்ணன் திருமண முயற்சி தடை பட்ட பின்னணியை விசாரிக்கப் போக, கிடைத்த தகவல் அவனை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. தங்கை திருமண விஷயத்தில் அண்ணன் அடுத்து என்ன முடிவெடுத்தான் என்பது தொடர்ந்து வரும் பரபரப்பு எபிசோடுகள்.


அண்ணனாக ஸ்டாலின், தங்கையாக பிருத்திகா நடிக்கிறார்கள். மற்றும் லட்சுமி, கங்கா, சவுந்தர், அழகு, கே.நட்ராஜ் ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் இருக்கிறார்கள். ‘மதுரை டூ தேனி’ படத்தில் நாயகனாக நடித்த குருஅரவிந்த் இந்த தொடரில் இன்னொரு நாயகன்.


கதை, திரைக்கதை: அமல்ராஜ். வசனம்: தர்மலிங்கம். பாடல்: யுகபாரதி. இசை: ராஜ்குமார் ராஜமாணிக்கம். ஒளிப்பதிவு: கோபால். இயக்கம்: அழகர். தயாரிப்பு: ஹோம் மூவி மேக்கர்ஸ்.


‘‘இந்த தொடரில் வரும் ‘என்ன தவம் செய்தேனோ, தாய் நீ தானோ’ என்ற டைட்டில் பாடல் சின்னத்திரை நேயர்கள் வட்டாரத்தில் பிரபலமாகி விட்டது. சினிமாவில் சிவாஜி–சாவித்திரி அண்ணன்–தங்கையாக நடித்து இன்றளவும் பேசப்படும் பாசமலரைப் போல், சின்னத்திரையில் இந்தப் பாசமலரும் நேயர்கள் மனதில் வாசம் வீசும்’’ என்கிறார், தொடரின் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார்.


இந்தப்பாடல்காட்சியை எடிட் செய்து கொடுத்தது பிரபல சினிமா எடிட்டர் ஆண்டனி என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: தினதந்தி

aanaa
9th November 2013, 08:32 PM
வாணி ராணி -200




சன் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘வாணி ராணி’ தொடர் 200 எபிசோடை எட்டியிருக்கிறது. விறுவிறுப்பான சம்பவங்களுடன் வீறுநடை போடும் இத்தொடரில், இப்போது மேலும் பல திருப்பு முனைகள் தொடரை எதிர்பார்க்க வைக்கின்றன.


ஊரே மெச்சும்படி ஒற்றுமையாக வாழ்ந்த வாணி–ராணியின் குடும்பம், பூமிநாதன் மற்றும் அங்கயற்கண்ணியின் சதியால் பிரிந்து விடுகிறது. தனியே பிரிந்து சென்ற சாமிநாதனின் குடும்பம் விதி என்ற சூறைக்காற்றில் சிக்கி சிதறிப்போகிறது. யாருக்கும் தீங்கு நினைக்காத ராணியின் நல்ல உள்ளத்தினால் பூமிநாதனின் சதித்திட்டம் எல்லோருக்கும் தெரிய வருகிறது. பிரிந்த சாமிநாதனின் குடும்பமும் ஒன்று சேருகிறது.


குடும்பத்தை காப்பாற்ற தன் நிலையில் இருந்து கீழே இறங்கி வந்த சாமிநாதன் சுக்கு காபி வியாபாரத்தை ஆரம்பித்து நேர்மையாக சம்பாதிக்க முயல, கல்லூரியில் முதல் மாணவனாக வலம் வரும் அவரின் மகன் சரவணனோ தன் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு அடிதடி வழக்குகளில் இறங்கி, சட்டத்திற்கு புறம்பாக பணம் சம்பாதிக்க முயல்கிறான். இந்த உண்மை அவனின் குடும்பத்திற்கு தெரிய வருமா? அப்படி தெரிய வரும்போது ராணியின் குடும்பம் அதை எப்படி எதிர் கொள்ளப்போகிறது? ராணி எப்படி தாங்கப் போகிறாள்?


தன் மாமனின் துணையோடு எப்படியும் ராஜேசை கைப்பற்ற நினைக்கும் செண்பகத்திற்கு காளி ஜெயிலில் அடைக்கப்பட்டான் என்ற செய்தி பேரிடியாக அமைகிறது. எப்படியும் உயிரைக் கொடுத்தாவது, ராஜேசை அடைந்தே தீருவது என்ற தீவிர போராட்டத்தில் இறங்குகிறாள். அதைப்போன்றே தன் கணவனை தன் கைப்பிடியில் வைத்திருக்க செல்வியும் போராடுகிறாள். இறுதியில் வெற்றியடைய போவது யார்?


கேள்விகளுக்கான விடை கிடைப்பது அடுத்தடுத்த பரபரப்பான எபிசோடுகளில்..


நட்சத்திரங்கள்: ராதிகா சரத்குமார், வேணு அரவிந்த், பப்லு, ரவிக்குமார், சாந்தி வில்லியம்ஸ், மனோ, அருண், விக்கி, மானஸ், நிகிலா, மகாலட்சுமி, ஸ்ரீதேவி, நேஹா. ஒளிப்பதிவு: மீனாட்சிபட்டி காசிநாதன், திரைக்கதை: எஸ்.குமரேசன், வசனம்: பா.ராகவன், இயக்கம்: ஓ.என்.ரத்னம். ஆக்கத் தலைமை: ஆர்.ராதிகா சரத்குமார். தயாரிப்பு ராடன் மீடியா ஒர்க்ஸ்.
நன்றி: தினதந்தி

aanaa
16th November 2013, 08:18 PM
கருத்தம்மா -500


ராஜ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.01 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘கருத்தம்மா’ தொடர், 500–வது எபிசோடை எட்டவிருக்கிறது.


பாட்டி ராஜம்மாவின் பேத்திகளான தியா, ஜானவி (ராகவ்–சந்தியாவின் பிள்ளைகள்) தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் வளர்ந்து வந்தாலும், சகோதரிகள் என்று தெரியாமலேயே ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்கள்.


இந்த நிலைமையில், தனது பேரன் ஆதித்யா, இந்திய வம்சாவளி பெண்ணை விரும்புவதை பாட்டி ராஜம்மாள் அறிகிறார். இது நமது கலாசாரத்திற்கு ஒத்துவராது என்று எச்சரிக்கிறார்.


இதைகேட்க மறுக்கும் ஆதித்யா, தன் வெளிநாட்டு காதலியையே திருமணம் செய்ய முடிவு செய்கிறான். ஆனால் அந்த வெளிநாட்டுப் பெண்ணோ பார், ரெஸ்டாராண்ட் என்று உல்லாசமாக உலா வருகிறாள். இதை அறிந்த ராஜம்மாள், நமது குடும்பத்திற்கு மிகவும் அவமானச் செயல் என்று பேரன் ஆதித்யாவிடம் அறிவுறுத்துகிறார்.


இதற்கிடையே, பேத்தி தியா மீதும் பாட்டியின் கவனம் திரும்புகிறது. கல்லூரியில் படிக்கும் தனது சகதோழி ஜானவியை (சகோதரி) சந்திக்கவோ, பேசவோ கூடாது என்கிறார், பாட்டி. மீறி சந்தித்தால் கல்லூரி படிப்பை நிறுத்திவிடுவதாக குடும்பத்தினர் அனைவரின் முன்பும் மிரட்டுகிறார்.


இந்த நிலையில் கல்லூரியில் நடைபெற்ற போட்டி ஒன்றில் முதல் மாணவியாக தேர்வு செய்யப்பட்டு பதக்கம் பெறுகிறாள் தியா. இதனால் சந்தோஷமடைந்த குடும்பத்தினர் ஒட்டு மொத்தமாக தியாவை பாராட்ட, பாட்டி ராஜம்மாள் மட்டும் ‘இதெல்லாம் சாதனையா என்ன?’ என்கிற ரேஞ்சுக்கு ஏளனம் காட்டுகிறார்.


பாட்டியின் இம்மாதிரியான அனுதின டார்ச்சரில் நொந்து போகும் தியாவுக்கு ஆறுதலாக அமைகிறது, இளைஞன் ஒருவனின் நட்பு. ரேடியோ நிகழ்ச்சித் தொகுப்பாளரான அவனுடன் தியாவின் நட்பு இறுகி ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. காதல் தந்த தைரியத்தில் காதலனுடன் தைரியமாக ஊர் சுற்றுகிறாள் தியா.


இந்தக்காதல் தியாவின் வீட்டுக்குத் தெரியவரும்போது அவளது கல்லூரிப் படிப்பு நிறுத்தப்படுமா? அல்லது காதலை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்களா? ஆதித்யாவின் காதல் திருமணம் நடைபெறுமா? வரும் எபிசோடுகளில் விடை கிடைக்கும்.



நன்றி: தினதந்தி

aanaa
24th November 2013, 12:34 AM
சிங்காரம் தெரு


விஜய் டி.வி.யில் நாளை முதல் ‘‘சிங்காரம் தெரு’’ என்ற புதிய நகைச்சுவை தொடர் ஆரம்பமாகிறது. ‘லொள்ளு சபா’ மூலம் பிரபலமான இயக்குனர் ராம்பாலா இயக்கும் இத்தொடர், ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.


ஒரு காலனியில் வசிக்கும் வெவ்வேறு விதமான மனிதர்கள் செய்யும் சிறு தவறுகளுக்குக்கூட அவர்கள் அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்வது, அங்குள்ள காவலர்களிடம் மல்லுக்கட்டுவது தொடரில் நகைச்சுவையுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த காலனியில் வசிக்கும் ஐந்து குடும்பங்களில் உள்ளவர்கள் அடிக்கும் லூட்டிகளும் நகைச்சுவையுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
நன்றி: தினதந்தி

aanaa
24th November 2013, 12:37 AM
சூரியபுத்திரி – 350




கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும், ‘சூரிய புத்திரி’ தொடர், விறுவிறுப்பான திருப்பங்களில் 350–வது எபிசோடை எட்டியிருக்கிறது.


அர்ஜீன், ஜோதியின் காதலை முறித்து பிரியாவிற்கே அர்ஜீனை சொந்தமாக்குவதாக வாக்கு கொடுத்த கிருஷ்ணா, தன் சதி திட்டத்தால் பிரியாவின் திருமணத்தை நிறுத்தி தான் ஒரு அதிகாரி என்பதை நிரூபித்து விட்டாள். தன்னை மிரட்டி கொண்டு இருந்த அஷ்வினை, குற்றவாளியாக மாற்றி செயல் இழக்க செய்துவிட்டாள்.


கணவனை பிரிந்து வாழும், பாரதிக்கு தன் மகன் அர்ஜூனின் திருமணம் நின்றுபோனது, பெரும் அதிர்ச்சியையும், அவமானத்தையும் ஏற்படுத்தி விட்டது. பாரதியின் குடும்பத்தை அழிக்க வேண்டும் என்ற கிருஷ்ணாவின் ஆக்ரோஷத்தில் இருந்து யார் அவர்களை காப்பாற்றப் போகுகிறார்கள்? பாதிக்கப்பட்ட பிரியாவும் அஸ்வினும் கிருஷ்ணாவை பழி வாங்குவார்களா? கிருஷ்ணா என்னும் தீய சக்திக்கு எதிராக போராடப்போவது யார்? கேள்விக்கான விடைகள், அடுத்தடுத்த பரபரப்பு அத்தியாயங்களில் கிடைக்கும்.


கதை: பாலா. வசனம்: தனுஷ். ஒளிப்பதிவு: பார்த்திபன், ரவிச்சந்திரன். இயக்கம்: தமிழ்பாரதி, ஆசைத்தம்பி. தயாரிப்பு நிர்வாகம்: ஸ்டார் லைட்ஸ் ஒர்க்ஸ். தயாரிப்பு: குட்டிபத்மினி.
நன்றி: தினதந்தி

aanaa
24th November 2013, 12:39 AM
சிந்து பைரவி


ராஜ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘சிந்து பைரவி’ தொடர், 870 எபிசோடுகளைக் கடந்து விறுவிறுப்புமயமாய் தொடர்ந்து கொண்டிருக்கிறது.


சிந்துவின் மகள் மகதியும், பைரவியின் மகள் முக்தாவும் ஒரே கல்லூரியில் படித்து வருகிறார்கள். இந்த நிலையில், அவினாஸ் தாக்கியதில் தனது பழைய நினைவுகளை இழந்த சிந்துவின் கணவர் வீர் நீண்ட நாள் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்புகிறார். அப்போது, ‘‘உன் மனைவி சிந்து வேறொருவருடன் ஓடிவிட்டாள்’’ என்று கூறி அவருக்கு மற்றொரு பெண்ணை திருமணம் செய்து வைக்கிறார், அவரது தாயார்.


குடும்ப விவகாரத்தால், தாய் சிந்துவின் பாசத்தை இழந்து குடி, கும்மாளம் என தவறான பாதையில் சென்று கொண்டிருக்கும் தனது மகன் யுவராஜை, வீர் கண்டிக்கிறார். ஆனால் அவருக்கு கடந்த கால நினைவுகள் சிந்தைக்கு எட்டாத நிலையில் அவற்றை தெரிந்து கொள்ள துடிக்கிறார்.


இதற்கிடையே யுவராஜ், பைரவியின் மகள் முக்தாவை ஒருதலைப்பட்சமாக காதலிக்க... அவளோ தனது கல்லூரியின் மூத்த மாணவர் ஒருவரை விரும்புகிறார். இது தெரியாமல் அந்த மாணவரையே மகதியும் காதலிக்கிறார்.


யுவராஜின் ஒருதலைக் காதல் வெற்றி பெறுமா? வீருக்கு பழைய நினைவுகள் திரும்பி தனது உயிர் காதல் மனைவி சிந்துவை மீட்பாரா? வரும் தொடர்களில் விடை கிடைக்கும்
நன்றி: தினதந்தி

aanaa
24th November 2013, 12:42 AM
பார்த்த ஞாபகம் இல்லையோ 350

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ தொடர், 350–வது எபிசோடை எட்டியிருக்கிறது. கண்ணகி வழக்கில் கலியபெருமாளின் எச்சரிக்கையும் தன் அத்தையின் அதிருப்தியையும் மீறி ஓவியா தீவிரமாக ஈடுபட, அதன் விளைவாக கலியபெருமாளின் மறைமுக தாக்குதலுக்கு ஓவியா குடும்பம் உள்ளாகிறது. உச்சக்கட்டமாக ஓவியாவை கொலை செய்ய கலியபெருமாள் தீட்டிய திட்டத்தில் ரமேஷ் உயிருக்கு போராடும் விபரீதம் நேர்ந்து விடுகிறது. அந்த நிலையிலும் ஓவியா கண்ணகிக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்ற உறுதியுடன் கோர்ட்டுக்கு வந்து வாதாடுகிறாள்.


கலியபெருமாளுக்காக கோர்ட்டில் ஆஜரான சிந்தாமணி, கண்ணகியின் நடத்தையை தவறாக விமர்சித்து வழக்கை திசைதிருப்பும் நேரத்தில், கண்ணகி தான் சிந்தாமணியின் மகள் என தெரிய வருகிறது. தன் மகளை இந்த நிலைக்கு கொண்டு வந்ததற்காக சிந்தாமணி ஓவியா மீது ஆத்திரங்கொண்டு அவளை பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்குகிறாள். அந்த சூழ் நிலையில் கார்த்திக், கருணாகரன் கொலை வழக்கில் மாட்டி சிறை செல்ல, அவனை வெளியே கொண்டு வர போராடிய ஓவியாவை சிந்தாமணி தன் சதியால் பார் கவுன்சிலிங்லிருந்து அப்புறப்படுத்துகிறாள். கணவனை வெளியே கொண்டு வர முடியாத ஓவியா, குடும்பத்தினர்களின் கோபத்துக்கு உள்ளாகி அனைவருக்கும் வேண்டாதவளாகிறாள்.


இந்த நிலையை மாற்ற ஓவியா மேற்கொள்ளும் முயற்சிகளும் வெங்கட்டின் உதவியுடன் கார்த்திக்கை வெளியே கொண்டு வர சந்திக்கும் போராட்டங்களும் இனி வரவிருக்கும் உணர்ச்சி பூர்வ எபிசோடுகள்.


மற்றொரு புறம் நந்தினி ஆஸ்பத்திரியில் சுயநினைவு இல்லாதிருக்கும் நிலையில் செந்திலை பழிவாங்க மதுபாலா திட்டம் போடுகிறான். நந்தினியின் குழந்தையை வைத்து செந்திலின் மனதில் இடம் பிடிக்க முயற்சி செய்கிறாள். ஒரு கட்டத்தில் செந்தில் மனது மதுபாலாவை ஏற்றுக் கொள்ளும் நிலையில் நந்தினிக்கு சுயநினைவு வருகிறது. அதன்பின் நடக்கும் சம்பவங்கள் திகுதிகு திருப்பம்.


சாந்தினியின் தங்கை வினோதினி விமலை விரும்ப... வினோதினி காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சாந்தினி ஆதரவு தெரிவித்து திருமணப்பேச்சுக்கு முன் வருகிறாள். அப்போது தன்னை பழிவாங்கிய அபிராமியின் தம்பி தான் விமல் என தெரிய வருகிறது. அது போதாதா சாந்தினி, வினோதினியின் திருமணத்திற்கு மறுப்பு சொல்ல! வினோதினி, சாந்தினிக்கு எதிராக திரும்ப, அக்கா– தங்கை தங்களுக்குள் முட்டி மோதிக் கொள்கிறார்கள். வினோதினியை மீட்டுக் கொண்டு வருவதற்கான சாந்தினியின் போராட்டங்கள் அடுத்த கட்ட பரபரப்பு.


தொடரின் நட்சத்திரங்கள்: குஷ்பு, சீனு, ஸ்ருதி, பரத் கல்யாண், விச்சு, நடராஜ், விஜேஷ். கிரியேட்டிவ் ஹெட்: குஷ்பு சுந்தர். திரைக்கதை வசனம்: கே.என்.நடராஜ். ஒளிப்பதிவு: பொன்ஸ் சந்திரா. இயக்கம்: என்.ப்ரியன். தயாரிப்பு: அவ்னி டெலிமீடியா...
நன்றி: தினதந்தி

aanaa
30th November 2013, 01:00 AM
சித்திரம் பேசுதடி


கோலங்கள், மாதவி, பொக்கிஷம் தொடர்கள் மூலம் சின்னத்திரை நேயர்களின் மனத்தில் இடம் பிடித்த இயக்குனர் திருச்செல்வம் இயக்கும் புதுமையான குடும்பத்தொடர் ‘சித்திரம் சுதடி’. ஜெயா டி.வியில் ஒளிபரப்பாகவிருக்கும் இந்த தொடர், பெண்களையும் குடும்ப உறவுகளையும் மையப்படுத்தி வந்துகொண்டிருக்கும் தொலைக்காட்சி தொடர்களுக்கு மத்தியில், இன்னொரு கோணத்தில் ரசிகர்களை ஈர்க்கும்விதத்தில் உருவாகி வருகிறது.


ஆணாதிக்கமும் பொருளாதாரமும் அடக்கி ஒடுக்கும் பெண்ணின் மனச்சித்திரம் பேசத் தொடங்கினால் அதில் எத்தனையோ கண்ணீர் சுவடுகள் இருக்கலாம். எண்ண முடியாத சிரிப்பலைகள் பரவலாம். அதன் அடிப்படையில் ‘‘சித்திரம் பேசுதடி’’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய தொடரில், திருமணத்திற்கு முன்பாக ஒரு பெண் தனிப்பட்ட சுதந்திரம், ரசனை, லட்சியம் என இருக்க, திருமணத்திற்கு பிறகு அவள் அவளாக இருக்கிறாளா? இருக்க முடிந்ததா? என்பதைப் பற்றிய சுவாரஸ்யமான கதைக்களமே இந்தத் தொடர்.


குந்தவை, தமயந்தி, தேன்மொழி, மணிமேகலை, கயல்விழி இவர்கள் ஐவரும் தாயை இழந்த ஐந்து சகோதரிகள். இவர்களின் தந்தை ஓய்வு பெற்ற தமிழாசிரியர் தமிழ்வாணன். திருமணத்திற்கு முன்பாக இந்த பெண்களிடம் இருக்கும் கனவுகள், தேடல்கள் எல்லாமே திருமணத்திற்கு பின்பாகவும் உயிர்ப்போடு இருக்கிறதா, அதை அடைகிறார்களா அல்லது மறைந்து போகிறதா? இன்றைய இளம்பெண்களின் வாழ்க்கை தட பதிவுகளை மிக யதார்த்தமாக பேச வருகிறது, இந்த தொடர்.


‘சொல்ல மறந்த கதை’ திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ரதி கதையின் நாயகி தேன்மொழி கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். இவருடன் சத்யப்பிரியா, விஜயகிருஷ்ணராஜ், பாரதி, மோகன் வைத்யா, ஷ்ரவன், ரம்யா, பூஜா, பிரகாஷ்ராஜன், ஸ்ரீதேவி, பவ்யகலா, ஹர்ஷிதா, சங்கரன்கோவில் கணேசன், ருத்ராஸ்ரீ, மாஸ்டர் ரோகன் ஆகியோர் நடிக்கிறார்கள்.


இசை நவநீத் சுந்தர். பாடல் கவிஞர் தாமரை.


ஜெயா டி.விக்காக திருச்செல்வம் தியேட்டர்ஸ் நிறுவனம் ‘‘சித்திரம் பேசுதடி’’ தொடரை தயாரித்து வழங்குகிறார்கள்.
நன்றி: தினதந்தி

aanaa
14th December 2013, 06:39 AM
பொம்மலாட்டம்-300


சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் முற்பகல் 11.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘‘பொம்மலாட்டம்’’ தொடர் உணர்ச்சிபூர்வமாகவும், உணவுகளின் போராட்டத்துடனும் விறுவிறுப்புடன் 300 பகுதிகளை தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கிறது.


சந்தோஷ், பாரதி இருவரும் பிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் தேவியின் வாழ்க்கையில் புயல் வீசுகிறது. மனந்திருந்தி வாழும் தன்னை மதன் ஏற்றுக்கொள்வான் என எதிர்பார்த்து ஏமாறும் தேவி, தனது வீட்டிற்கு திரும்பி ஒரு அறையில் தன்னைத்தானே சிறைப்படுத்திக் கொள்கிறாள். மதன் நினைவில் கொஞ்சம் கொஞ்சமாக உயிரை விடத் துணிகிறாள்.


தனது தங்கை தேவிக்கும், மதனுக்கும் நடந்த கல்யாணம் ஒரு அக்ரிமெண்ட் கல்யாணம் என்பதை சித்தப்பா நடராஜன் மூலமாக தெரிந்து அதிர்ச்சி அடைகிறான், சந்தோஷ். இரண்டு கோடிக்கு ஆசைப்பட்ட மதனுக்கு 500 கோடி சொத்து கிடைத்து விட்டது. அதனால் தேவியை துரத்தி விட்டான் என நடராஜன் தூண்டி விட, சந்தோஷ் ஆவேசம் அடைந்து மதனை அடித்து நொறுக்குகிறான்.


கதிர் என்கிற மதன் தனது நண்பன் ராமிடம், ‘பாரதியின் வாழ்க்கை பிரச்சினை இல்லாமல் நன்றாக இருக்கவேண்டும் என்றால் தன்னால் தேவியை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்கிறான்.


சிதம்பரம், பத்ரி இருவரும் பாரதி நினைத்தால் மட்டுமே மதன் மனதை மாற்றி தேவியை ஏற்றுக்கொள்ள வைக்க முடியும் என முடிவு செய்கின்றனர். இருவரும் மதன் மீது தீராத வெறுப்புடன் இருக்கும் பாரதியிடம் பாரதி மீது கதிர் வைத்திருநத உண்மையான காதல் பற்றியும், பாரதியின் அம்மா ஆபரேஷனுக்காக கதிர் பணம் கேட்டதில் ஆரம்பித்து, சந்தோஷை திருமணம் செய்ய பாரதியை சம்மதிக்க வைத்து, இருவரையும் ஒன்று சேர்த்து வாழவைக்க நாடகமாடியது வரையிலுமாக அனைத்து உண்மைகளையும் சொல்கின்றனர். கதிரின் தியாகத்தை நினைத்து பாரதி அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறாள். கதிரை உடனடியாக நேரில் சந்தித்து பேசவேண்டும் என பாரதி முடிவு எடுக்கிறாள்.


பாரதி, மதனை சந்தித்து அவன் தியாகத்தை பாராட்டி தேவியை ஏற்றுக் கொள்ள வைத்தாளா?


மதன் மனம் மாறி தேவியை ஏற்றுக் கொள்ளும் முடிவுக்கு வந்தானா?


உணவு, தண்ணீர் இல்லாமல் அறையில் அடைந்து கிடக்கும் தேவி என்னவானாள்?


கதிர், பாரதி இருவரும் முன்னாள் காதலர்கள் என்ற உண்மை சந்தோஷிற்கு தெரிய வந்ததா? அவன் எடுத்த முடிவு என்ன? இந்த கேள்விக்கான பதிலுடன் பொம்மலாட்டத்தின் அடுத்தடுத்த பகுதிகள் தொடரவிருக்கின்றன.


தொடரின் நட்சத்திரங்கள்: டெல்லிகுமார், சிரிஜா, ஸ்ரீகுமார், அப்சர், பிரீத்தி, சாய்ராம், காத்தாடி ராமமூர்த்தி, விஜயகிருஷ்ணராஜ், கணேஷ்கர், பரத், சசி, ஷீலா, மகிமா, கவுரிலட்சுமி, வித்யா, சுரேந்தர், நிஷா, முரளி.


ஒளிப்பதிவு: எஸ்.சங்கர்; கதை: எழுச்சூர் அரவிந்தன்; திரைக்கதை: எஸ்.செல்வம், டி.சிவக்குமார்; வசனம்: நந்தன் ஸ்ரீதரன்; பாடல்: வைரமுத்து; இசை: தினா; பாடியவர்: ஹரிசரண்; இயக்கம்: சிவா; தயாரிப்பு: சான் மீடியா லிமிடெட்.



நன்றி: தினதந்தி

aanaa
14th December 2013, 06:40 AM
ரோமாபுரிப்பாண்டியன்


டாக்டர் கலைஞர் எழுதி பிரபல வாரஇதழில் தொடராக வெளிவந்த வரலாற்று நவீனமான ‘ரோமாபுரிப்பாண்டியன்’ சின்னத்திரையில் தொடராகிறது. அன்றைய தமிழ்நாட்டு மக்களின் அகம்–புறம் இரண்டையும் முழுமையாக காட்டுகின்ற நெடுந்தொடராக உருவாகி வரும் இந்த தொடருக்கான படப்பிடிப்பு ராஜஸ்தான், ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


விரைவில் கலைஞர் தொலைக்காட்சியில் இந்த தொடரை காணலாம்.
நன்றி: தினதந்தி

geno
16th December 2013, 12:01 AM
ரோமாபுரிப்பாண்டியன்


டாக்டர் கலைஞர் எழுதி பிரபல வாரஇதழில் தொடராக வெளிவந்த வரலாற்று நவீனமான ‘ரோமாபுரிப்பாண்டியன்’ சின்னத்திரையில் தொடராகிறது. அன்றைய தமிழ்நாட்டு மக்களின் அகம்–புறம் இரண்டையும் முழுமையாக காட்டுகின்ற நெடுந்தொடராக உருவாகி வரும் இந்த தொடருக்கான படப்பிடிப்பு ராஜஸ்தான், ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


விரைவில் கலைஞர் தொலைக்காட்சியில் இந்த தொடரை காணலாம்.

கலைஞர் தொல்லைக்காட்சியவே மூடப் போறதா கேள்விப்பட்டேன்!

தமிழர்களின் "அகம் புறம்"! அதான் எல்லாதையும் குளோஸ் பண்ணியாச்சே!

aanaa
22nd December 2013, 05:33 AM
இளவரசி-1000




சன் டி.வியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘இளவரசி’ தொடர், 1000வது எபிசோடை எட்டவிருக்கிறது.


சுப்பிரமணியை அடைவதற்கு எதையும் செய்ய தயாராக இருக்கிறாள் மகா. இதனால் வெகுண்டெழுந்த இளவரசி சுப்பிரமணியிடம் சண்டை போட, சுப்பிரமணியோ மகாவை விட்டுக் கொடுப்பதாக இல்லை. இதனால் இளவரசி சுப்பிரமணியை பிரிந்து தன் குழந்தையுடன் தனியே வாழ முற்படுகிறாள். இந்நிலையில் மகாவின் உண்மை நிலவரம் இளவரசிக்கு தெரிய வருகிறது. பகைவனுக்கும் உதவும் இளகிய மனம் கொண்ட இளவரசி அடுத்து செய்யப் போவது என்ன?


தன் மருமகள் பூஜாவை சொந்த பெண்ணாகவே நடத்தும் தமிழரசி, பூஜாவுக்கு மறுமணம் செய்ய முயற்சி மேற்கொள்கிறாள். ஆனால் பூஜாவோ, இறந்த தன் கணவனின் நினைப்பிலேயே காலம் தள்ள நினைக்கிறாள். இந்த இரு தியாக உள்ளங்களின் போராட்டத்தில் ஜெயிக்கப் போவது யார்?


போலீஸ் அதிகாரி சண்முகம் தன் மனைவிக்கு இனி குழந்தை பெற வாய்ப்பு இல்லை என்பதை அறிந்து, ஏற்கனவே வாடகைத் தாயாக இருந்த காயத்ரியை அமர்த்துகிறான். காயத்ரியின் முதல் ஒப்பந்தத்தில் பிறந்த குழந்தையை அந்த தம்பதியினர் வாங்கிக் கொள்ள மறுக்க, அவள் அந்த குழந்தையை வளர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறாள். சண்முகம், ஜெயந்தியின் குழந்தை காயத்ரியின் வயிற்றில் வளர்ந்து வரும் இந்த நேரத்தில், அந்த முதல் குழந்தையின் பெற்றோர் உரிமை கேட்டு வர, குழந்தையை விட்டுக் கொடுக்க மனதில்லாத காயத்ரி ஒரு விபரீத முடிவை எடுக்கிறாள். அந்த முடிவு என்ன? சண்முகம் ஜெயந்தி தம்பதியினருக்கு குழந்தை கிடைத்ததா?


நட்சத்திரங்கள்: சந்தோஷி, ஸ்ரீகர், ரச்சனா, அர்ச்சனா, வசந்த், ராஜஸ்ரீ, ஸ்ரீவித்யா, சுபலேக சுதாகர், அனுராதா கிருஷ்ணமூர்த்தி, பத்ரகாளி ராஜசேகர், சித்ரா.


வசனம்: பிரசன்னா. திரைக்கதை: குரு சம்பத்குமார். இயக்கம்:எம்.கே.அருந்தவ ராஜா. ஹெட் ஆப் கிரியேடிவ்ஸ்: ராதிகா சரத்குமார். தயாரிப்பு: ராடன் மீடியா ஒர்க்ஸ்.
நன்றி: தினதந்தி

aanaa
22nd December 2013, 05:41 AM
கால பைரவன்


ஜெயா டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் மாலை 6.30 ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் ‘காலபைரவன்’.


தமிழ்நாட்டில் உள்ள ஒரு அழகிய கிராமம் ‘பைரவபுரம்’ அந்த கிராமத்தில் உள்ள காலபைரவன் கோவிலை பல நூற்றாண்டுகளாக அதே கிராமத்தின் பூர்வ குடிகளான ஐந்து குடும்பங்கள் பராமரித்து வந்தன. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் அந்த ஐந்து குடும்பத்தில் உள்ள இரண்டு குடும்பத்துக்குள் ஏற்பட்ட தகராறில் கால பைரவர் கோவிலின் அனைத்து பூஜை புனஸ்காரங்களும் தடைப்பட்டு போனது. அதில் ஒரு குடும்பம் அந்த கிராமத்தை விட்டு வெளியேறி பக்கத்து கிராமத்தில் குடியேறியது.


இப்போது அந்த ஐந்து குடும்பங்களின் வாரிசு என்று இருப்பவர்கள், கலியபெருமாள், கணேசன், தர்மலிங்கம், காத்தவராயன் மற்றும் ஆர்யபாஷ்யம். இதில் கணேசனும், காத்தவராயனும் இன்றும் அதே பைரவபுரத்திலேயே தங்கள் குடும்பத்தோடு வசிக்கிறார்கள். முன்பே பக்கத்து கிராமத்தில் குடியேறிய குடும்பத்தின் வாரிசு தான் தர்மலிங்கம். கலியபெருமாளும், ஆர்யபாஷ்யமும் தங்கள் குடும்பத்தோடு சென்னையில் வசிக்கிறார்கள்.


காலபைரவர் கோவிலில் மீண்டும் பூஜைகள் நடக்க வேண்டும் என்று கலியபெருமாளும், ஆர்யபாஷ்யமும் எடுத்த முயற்சியின் பலனாக ஐந்து வாரிசுகளும் ஒன்று கூடி கோவில் திருப்பணியை தொடங்க முடிவு செய்கிறார்கள். பூஜை நடத்தி கோவிலுக்குள் சென்று பார்க்கும் போது, காலபைரவர் விக்ரகம் காணாமல் போயிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார்கள். மீண்டும் அவர்களுக்குள் தகராறு வந்து பிரிகிறார்கள்.


கலியபெருமாளின் மூத்த மகள் அருந்ததி சென்னை மாநகர துணை கமிஷனர். வேகத்தோடு செயல்படும் ஒரு துணிச்சல் மிக்க அதிகாரி. விவேகானந்தன் பிரபல பத்திரிகையாளர். கல்லூரி நாட்களில் விவேகானந்தனும், அருந்ததியும் காதலர்களாக இருந்து ஈகோவினால் பிரிந்து, இப்போது சமயம் கிடைக்கும் போது ஒருவரை ஒருவர் பழிவாங்கிக் கொண்டிருப்பவர்கள்.


விவேகானந்தனுக்கு திடீரென ஒரு அனாமதேய தொலைபேசி அழைப்பு வருகிறது. நடக்கப் போகும் ஒரு பெரிய விபத்தைப் பற்றி சொல்லி, முடிந்தால் அதை தடுத்துப்பார் என்று பேசுபவர் கூறுகிறார். விவேகானந்தன் அதை வதந்தி என்று எண்ணி உதாசீனப்படுத்துகிறான். ஆனால் மறுநாளே அதே போன்ற ஒரு சம்பவம் நடக்க அதிர்ச்சி அடைகிறான். தொடர்ந்து அவனுக்கு இதே போன்று அனாமதேய தொலைபேசி அழைப்பு வருகிறது. அதில் பேசுபவன் கூறும்படியே சம்பவங்கள் நடக்கிறது.


விவேகானந்தன் இதுபற்றி கமிஷனர் ரஞ்சனிடம் புகார் கூறுகிறான். கமிஷனர் இதைப்பற்றி விசாரணை நடத்தும் பொறுப்பை துணை கமிஷனர் அருந்ததியிடம் ஒப்படைக்கிறார்.


விவேகானந்தனும், அருந்ததியும் அந்த நபர் யார் என்பதை கண்டுபிடித்தார்களா? மீண்டும் இருவரும் காதலர்களாக மாறி வாழ்க்கையில் இணைந்தார்களா?


தடைபட்ட காலபைரவர் கோவில் திருப்பணி மீண்டும் தொடங்கியதா?


அடுத்து வரும் விறுவிறு திருப்பங்களில் விடை கிடைக்கும்.


நடிகை சங்கவி இந்த தொடரின் மூலம் சின்னத்திரையில் அழுத்தமாக தடம் பதிக்கிறார். ராகவன், ரூபஸ்ரீ, கமலக்கண்ணன், தியாகராஜன் ஏனைய நட்சத்திரங்கள்.


எழுத்து, இயக்கம்: ராஜீவ் பிரியன். ஜேஸ்மின் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பு: கே.ஏ.கே.ஆசாத்.
நன்றி: தினதந்தி

aanaa
22nd December 2013, 05:49 AM
நான் ரொம்ப பிஸி... தங்க மீனாட்சியின் காதல் கதை..


.சரவணன் மீனாட்சி பார்ட் 2 தொடரின் நாயகி தங்க மீனாட்சிதான் சின்னத்திரையின் க்யூட் கதாநாயகி. பிரிவோம் சந்திப்போம் தொடரில் கறுப்பு மேக் அப் போட்டபோதே களையாக தெரிந்த நாயகி, இளவரசி தொடரில் மகாலட்சுமியாக வந்து அசத்தினார். இடையில் கொஞ்சநாளாய் சீரியலில் ஆளைக் காணோமே என்று தேடினால் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி பார்ட் 2வில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். காதலித்த தினேசை திருமணம் செய்து கொண்டு ஒருமாதம்தான் ஆகிறது ஆனாலும் பிரேக் கூட விடாமல் நடித்துக் கொண்டிருக்கிறார். சின்னத்திரை பயணம்,காதல் திருமண வாழ்க்கை இரண்டுமே பேலன்ஸ் ஆக போய்க்கொண்டிருக்கிறது என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார் தங்க மீனாட்சி.
........

aanaa
29th December 2013, 01:09 AM
சொந்தபந்தம்-400


திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் காலை 11 மணிக்கு சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ‘சொந்த பந்தம்’ தொடர், 400வது எபிசோடை எட்டவிருக்கிறது. எதிர்பாராத திருப்பங்களுடன்கூடிய திரைக்கதை இந்த தொடரின் பலம்.


தன் மனைவி சக்தி இறந்து போய் விட்டாள் என்று நினைத்திருந்த பிரேம், தன் முறைப்பெண்ணான ரேஷ்மியை திருமணம் செய்ய முடிவு செய்கிறான். சக்தி இறந்து விட்டதாக அவள் குடும்பமே நம்பிக்கொண்டிருக்க, சக்தியின் தாய் மகாலட்சுமி மட்டும் சக்தி இறக்கவில்லை என்று நம்புகிறாள்.


அனைவராலும் இறந்து விட்டதாக சொல்லப் பட்ட சக்தி பழைய நினைவுகளை இழந்த நிலையில் ரமேஷ் என்பவரிடம் மாட்டிக் கொண்டு வெளியே வரமுடியாமல் தடுமாறுகிறாள். சக்தி யால் தான் ரமேஷ் ஜெயில் தண்டனையை அனு பவித்து விட்டு வெளியே வந்திருக்கிறான்.

சக்தி, தான் சம்பந்தப்பட்ட அனைவரையும் ஒவ்வொரு கட்டத்திலும் சந்திக்கிறாள். ஆனால் அவர்கள் பார்க்கத் தவறி விடுகின்றனர். ஒரு கட்டத்தில் சக்திக்கு ரமேஷ் மீது சந்தேகம் வருகிறது. சக்தி எப்படியாவது ரமேஷின் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று முடிவு செய்கிறாள்.


இதற்கிடையில் சக்தி உயிருடன் இருக்கிறாள் என்ற விஷயம் போலீசுக்கு தெரிய வர, அவர்கள் தங்களின் தேடுதல் வேட்டையை வேகப்படுத்துகிறார்கள். சக்தி இப்போது வெளியே வந்தால் போலீசாரிடம் எப்படியும் மாட்டிக் கொள்வாள் என்ற சூழ்நிலை ஏற்படுகிறது.


பிரேம் திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக தன் கணவன் கல்கியை வேண்டுமென்றே விவாகரத்து செய்த ரேஷ்மி, பிரேமுடன் நடக்க இருந்த கல்யாணத்தை துரிதப்படுத்தும் நேரத்தில், மிகப்பெரிய பிரச்சினை ஒன்று உருவாகிறது. ரோட்டில் நடந்து சென்ற ரேஷ்மியை குமார் என்ற ரவுடி கத்தியால் குத்தப் போக, அங்கு வந்த கல்கி ரேஷ்மியை காப்பாற்ற போராடுகிறான். அதில் கல்கிக்கு கத்திக்குத்து விழ, உயிருக்கு போராடும் நிலையில் ரேஷ்மியால்ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறான்.விவாகரத்தான கணவனுக்கு ரேஷ்மி பணிவிடை செய்கிற சூழ்நிலை ஏற்படுகிறது.


அதே நேரம் ரமேஷ் வீட்டிலிருந்து சக்தி வெளியேறுகிறாள். அவள் பழைய நினைவுகளோடு இருக்கும் சமயத்தில் அவளை பார்த்தவர்கள் எல்லாம் இப்போது அவளை பார்க்க, அவர்களிடம் சக்தி தான் யார் என்பதை விசாரிக்கிறாள். அதேசமயம் சக்தியை ரமேஷும் தேடுகிறான். சக்தி போலீசிடம் மாட்டப்போகிறாளா? அல்லது ரமேஷிடம் திரும்ப சிக்கப் போகிறாளா? இல்லையெனில் தன் குடும்பத்தினர் கண்களில் படப் போகிறாளா? கேள்விகளுடன் தொடர்கிறது, தொடர்.


தொடரின் நட்சத்திரங்கள் ப்ரதீப், பாரதி, சுபஸ்ரீ, அன்னபூர்ணா, கோபி, நித்தீஷ், கிருஷ்ணவேணி, மகேஷ், அஸ்ரிதா, கர்ணா, ரஞ்சனி, ஜீடா, விமிதா, விஸ்வநாத், விஜிகெட்டி மற்றும் பேபிஸ்ரீஜா.


திரைக்கதை: சுனில் தாகூர். வசனம்: ஜகன்மோகன். ஒளிப்பதிவு: சூர்யன். இயக்கம்: சுதர்ஸன்.


தொடரை வைகாரி நிறுவனம் தயாரிக்கிறது.
நன்றி: தினதந்தி

aanaa
29th December 2013, 01:10 AM
காதலனை தேனிலவு தளத்துக்கு வரவழைத்த புதுப்பெண்!


திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.01 மணிக்கு ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘கருத்தம்மா’ தொடர், காட்சிகளின் வீரியத்தில் ஈர்க்கிறது.


ராஜம்பாவின் பேரன் ஆதித்யா வெளிநாட்டு வாழ் இந்திய காதலியை மணமேடையில் ஒதுக்கி விட்டு, அங்கிருந்து செல்வந்தர் வீட்டு பெண் ராகினியை திருமணம் செய்துகொள்கிறான். ராகினிக்கோ ஏற்கனவே சேகர் என்பவருடன் காதல் இருந்து வந்தது.


புதுமண தம்பதிகள் தேனிலவுக்கு செல்கிறார்கள். அங்கே தன் காதலன் சேகரை போன் செய்து வரவழைக்கிறாள் ராகினி. இதற்கிடையே, சமையல் ஒப்பந்ததாரரின் பெண் காஜல், ஆதித்யாவின் தம்பி ராஜகுமாரனால் உயிரிழக்கிறாள். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த தியா, தனது தோழி ஜானவிக்கு நடந்ததை கூற, அவளோ தன் வளர்ப்புத் தாய் அம்பாவிடம் சொல்ல... அம்பாவோ கதறியபடி போலீசில் புகார் அளிக்கிறார்.


புகாரை வாங்க மறுக்கும் போலீசோ ராஜம்பாவிற்கு ஆதரவாக செயல்பட, அதிர்ந்து போகிறாள், அம்பா. இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு செல்ல, ராஜம்பா, ராஜகுமாரன், ஜானவி, தியா உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் கோர்ட்டில் சந்திக்கிறார்கள்.


அப்போது சாட்சிதாரராக ஆஜராகும் தியாவை கொல்ல திட்டமிடுகிறாள் பாட்டி ராஜம்பா. ஆனால் தியா தப்பி விடுகிறாள். மாறாக ஜானவியின் வளர்ப்புத்தாய் அம்பா கொல்லப்படுகிறாள். நீதிமன்றத்தில் ஆஜராகும் தியா நீதிபதியிடம் இந்த கொலை பற்றி எடுத்துரைக்கிறாள். இதனால், தியா மீது ராஜகுமாரனின் தாய் கோபம் கொள்கிறாள். அதே சமயம் ஜானவியை விஷம் வைத்து கொல்லவும் முயற்சிக்கிறாள்.


ராஜகுமாருக்கு நீதிமன்றம் என்ன தண்டனை விதிக்கும்? விஷம் கலந்த பாயாசத்தை குடித்த ஜானவி உயிர் பிழைப்பாளா? ராஜகுமாரனுக்கு எதிராக சாட்சி சொன்ன தியா வீட்டைவிட்டு வெளியேற்றப்படுவாளா? தேனிலவுக்கு மனைவியுடன் சென்றிருந்த ஆதித்யா என்னவானான்? கேள்விகளுக்கு விடை, வரும் எபிசோடுகளில் கிடைக்கும்.
நன்றி: தினதந்தி

aanaa
12th January 2014, 11:06 PM
10 மணி கதைகள்


சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘10 மணி கதைகள்’ தொடரில் முதல் கதையாக இடம் பெற்று ஒளிபரப்பாகி வருகிறது, ‘எதிர் வீட்டுப் பையன்’. வி.சி.ரவி இந்த தொடரை இயக்குகிறார்.


மாதம் ஒரு கதைத்தொடர் என்ற வரிசையில் ஒரு தொடர் அந்த மாதத்துடன் நிறைவு பெற்று விடும். இதனால் ஒரு திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை இந்த தொடர் ஏற்படுத்தும் என்பது நிச்சயம். அந்த வகையில் இந்த தொடர், ஜனவரி மாதம் 18 எபிசோடுடன் முடிவுக்கு வந்து விடும். பிப்ரவரி மாதம் அஸ்வின் பாஸ்கர் இயக்கும் 18 எபிசோடுகள் கொண்ட புதிய தொடர் இடம் பெறுகிறது.


தொடர்ந்து மாதம் ஒரு இயக்குனரின் படைப்பு சின்னத்திரையை அலங்கரிக்கும். சின்னத்திரையில் இது புதுமுயற்சி என்ற விதத்தில், தொடர்கள் மீதான எதிர்பார்ப்பும் நேயர்களிடையே அதிகரித்திருக்கிறது.


தொடர்களுக்கு பாடல்: யுகபாரதி. இசை: சஞ்சீவ் ரத்தன். தயாரிப்பு: ‘திரு பிக்சர்ஸ்’ திருமுருகன்.
நன்றி: தினதந்தி

aanaa
12th January 2014, 11:08 PM
உறவுகள் சங்கமம்


ராஜ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர், உறவுகள் சங்கமம்.


தொடரின் கதை பின்னணி வருமாறு:–


அத்தை மகள் கங்காவிடம் தனிமையில் பேச, தசரதன் வர, ராம் குறுக்கிட்டு வழிமறிக்கிறான்.


மகள் ஜனனியிடம் எப்போதும் கண்டிப்பாக நடந்து கொள்ளும் தன்ராஜ், அவள் செல்போனில் வாலிபன் ஒருவனுடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து போனை பறிக்கிறான். அவளை கண்டித்துக் கொண்டிருக்கும்போது வழக்கம்போல் அவளது அம்மா, தன் கணவன் தன்ராஜிடம் ‘மகளை ஏன் திட்டுகிறீர்கள்?’ என்று குறுக்கிடுகிறாள்.


கவுதம் தன் காதலை சொன்னதில் இருந்து கலக்கத்துடன் காணப்படும் புவனா, தனது மனக் குமுறலை ஆசிரமத்தில் இருக்கும் கதிர் என்பவரிடம் கொட்டுகிறாள்.


தசரதனின் நண்பன் ராஜாராமிடம், அவனது மாமியார்? ஏன் இன்னும் உங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை? என்று காரணம் கேட்க, மனம் நொந்த அவனை, மனைவி மாலதி ஆறுதல் சொல்லி தேற்றுகிறாள்.


ராஜாராமுக்கு குழந்தை பிறந்ததா? கவுதமின் காதலை புவனா ஏற்பாளா? அத்தை மகள் கங்காவை அடைய வேண்டும் என்ற தசரதனின் எண்ணம் நிறைவேறுமா? எதிர்பார்ப்பை தக்கவைத்தபடி தொடர்கிறது, தொடர்.
நன்றி: தினதந்தி

aanaa
12th January 2014, 11:09 PM
விழித்தெழு தமிழா!


மக்கள் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புதிய நிகழ்ச்சி ‘‘விழித்தெழு தமிழா.’’


இந்நிகழ்ச்சி வாரம் ஒரு தலைப்பைக்கொண்டு மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை சுட்டிக்காட்டியும், அதற்கான தீர்வுகளையும் காட்சிப்படுத்துகிறது, நிகழ்ச்சி.


எதையும் மேலோட்டமாக எடுத்துக்கொள்ளாமல், பிரச்சினைகளுக்கான காரணிகளை அலசி ஆராய்வதோடு, துறை சார்ந்த வல்லுனர்களே இந்நிகழ்ச்சியின் வாயிலாக விளக்கமளிக்கின்றனர். நிகழ்ச்சியை விஜய் ஆனந்த் தொகுத்து வழங்குகிறார்.
நன்றி: தினதந்தி

aanaa
12th January 2014, 11:11 PM
மடிப்பாக்கம் மாதவன்–50


கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘மடிப்பாக்கம் மாதவன்’ நகைச்சுவைத் தொடர் ஐம்பதாவது எபிசோடை எட்டியிருக்கிறது. ராம்ஜி, நளினி, மதுமிதா ஆகியோரின் கலக்கல் காமெடி, சிரிப்பில் வீடுகளை குலுக்குகிறது.


வெளிநாட்டு மந்திரவாதியால் ஒரே குடும்பத்தின் மாதவன், பண்டரிபாய், கவுசல்யா, ஆகிய மூவரும் சுண்டு விரல் அளவு தோற்றம் கொண்ட மனிதர்கள் ஆகி விடுகின்றனர். இம் மூவரும் மிகப்பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் மாட்டிக் கொள்கின்றனர். அவர்கள் எப்படி அங்கிருந்து மீண்டார்கள் என்பது அடுத்தடுத்த காமெடி.


கதை திரைக்கதை தயாரிப்பு: சினி ஸ்டார் மீடியா பிரைவேட் லிமிடெட். வசனம்: எம்.ரவிக்குமார். ஒளிப்பதிவு: ஆர்.வெங்கடேஷ். இசை:மனீஷ். கிரியேடிவ் டைரக்டர்: ஈ.ராம்தாஸ். நிர்வாகத் தயாரிப்பு: அனில் சுந்தர். இயக்கம்: எஸ்.மோகன். இவர் மாமா மாப்ளே, சூப்பர் சுந்தரி போன்ற வெற்றித் தொடர்களை இயக்கியவர்.


நட்சத்திரங்கள்: காத்தாடி ராமமூர்த்தி, சாந்தி ஆனந்தராஜ், தீபாஸ்ரீ, ஸ்ரீஜீத், முல்லை, டெலிபோன் மணி, மங்கீ ரவி, சிவராஜ், ஸ்ரீமதி அம்மாள், கலாதர், ரங்கம்மா பாட்டி, கண்ணாயிரம்./quote]
நன்றி: தினதந்தி

aanaa
28th January 2014, 05:07 AM
மரகத வீணை

SUN TV Serial - Jan 27, 2014



http://www.youtube.com/watch?v=E95NVfCdUY8

RAGHAVENDRA
6th February 2014, 12:58 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/pavamannippupromo01fw_zps216cf810.jpg

aanaa
17th February 2014, 07:55 AM
சன் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மாதம் ஒரு தொடர் வரிசையில் இந்த மாதம் இடம் பெற்றிருக்கும் தொடர், ‘தெரியாமல் ஒரு கொலை.’


ஒரு மனிதன் பழி உணர்ச்சியை தீர்க்க கொலை செய்வது உண்டு. உணர்ச்சி வசப்பட்ட நிலையில் கொலை செய்வது உண்டு. ஆனால் இந்தக் கதையின் நாயகன் சந்துரு தெரியாமல் ஒரு கொலை செய்கிறான். அவன் கொல்ல நினைத்தது ஒருத்தியை. கொன்றது வேறொருத்தியை. தவறை உணர்ந்து வருந்தும் சந்துருவை சரணடைய விடாமல் தடுக்கிறது காதல்.


அதேநேரத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவன் கதிர் தன் மனைவியை கொன்றவனை கண்டுபிடித்து பழி தீர்க்கப் புறப்படுகிறான்.


சந்துரு சட்டத்தால் தண்டிக்கப்பட்டானா? அல்லது கதிரால் பழி வாங்கப்பட்டானா? பரபரப்பான திருப்பங்களுடன் இந்த மாதத்தை ‘திக்...திக்’ என திகிலாக வைத்திருக்கப் போகிறது, தொடர்.


தொடரின் நட்சத்திரங்கள்: அரவிந்த், ஸ்ருதி, ரித்திஸ் வர்தன்.


கதை: எழுச்சூர் அரவிந்தன். திரைக்கதை: எழுச்சூர் அரவிந்தன்–ஜோதிஅருணாசலம். இயக்கம்: அஸ்வின் பாஸ்கர். தயாரிப்பு: ‘திரு’ பிக்சர்ஸ் எம்.திருமுருகன்.

aanaa
7th June 2014, 07:40 PM
தென்கொரியாவில் தயாராகும் சீரியல் மற்றும் சினிமாக்கள் உலகப்புகழ் பெற்று விளங்குகின்றன. கதையம்சம் மற்றும் தொழில்நுட்பத்தில் புதுமையும் இளமையும் கலந்திருப்பதால், இந்த நாட்டின் சீரியல்களுக்கு உலகெங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் முதல்முறையாக புதுயுகம் தொலைக்காட்சியில், ‘கே சீரிஸ்' வரிசையில் புகழ்பெற்ற கொரியன் படைப்புகள் வெளிவர உள்ளன. 'பாய்ஸ் ஓவர் ஃப்ளவர்ஸ்', ‘ஐரிஸ்', ‘பிளேஃபுல் கிஸ்', ‘கிரேட்டஸ்ட் லவ்', பாஸ்தா' போன்ற உலகப்புகழ் பெற்ற சீரியல்கள் புதுயுகம் தொலைக்காட்சியில் வரிசையாக தமிழில் ஒளிபரப்பாக உள்ளன. பாய்ஸ் ஓவர் ஃப்ளவர்ஸ் மே 12-ம் தேதி முதல் நம்பர் ஒன் தென்கொரிய படைப்பான ‘பாய்ஸ் ஓவர் ஃப்ளவர்ஸ்' மெகா தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு தமிழில் ஒளிபரப்பாகிறது. பள்ளி பருவ காதல் ஒரு பள்ளியில் நடக்கும் காதல், பிரிவு, நட்பு, மோதல்களை உணர்வுபூர்வமாக நகைச்சுவையுடன் சொல்லும் இந்தத் தொடர் கார்ட்டூன் வடிவத்திலும் வெளியாகி வெற்றிபெற்றுள்ளது பேரனுக்காக பள்ளி இந்தத் தொடரில், தென்கொரியாவின் மிகப்பெரும் கோடீஸ்வரர், தன்னுடைய பேரன் படிப்பதற்காக ஷின்க்வா ஹைஸ்கூலை பிரமாண்டமாக தொடங்குகிறார். நான்கு பையன்கள் பெரும் பணக்காரர்கள் மட்டுமே படிக்கக்கூடிய அந்தப் பள்ளியில் ‘எஃப் 4' கும்பலைச் சேர்ந்த நான்கு பையன்கள் ஏகப்பிரபலம். அவர்களிடம் நட்பு கொள்வதற்கு அத்தனை பெண்களும் ஏங்குகிறார்கள். குரூர தண்டனை அதேநேரம் இந்த கும்பலை எதிர்ப்பவர்களுக்கு மிக குரூரமான தண்டனை கிடைக்கிறது. அதனால் இவர்களிடம் அனைவரும் விலகியே இருக்கிறார்கள். ஏழை சிறுமி இந்த சூழலில் லாண்டரி கடை நடத்தும் ஏழைப் சிறுமி ஜான்ஸிக்கு இந்தப் பள்ளியில் படிப்பதற்கு ஸ்காலர்ஷிப்பில் இடம் கிடைக்கிறது. அழகும் துணிச்சலும் நிறைந்த ஜான்ஸி நட்புக்காக எதையும் செய்யக்கூடியவள். தனியாக போராடும் கதாநாயகி தன்னுடைய தோழிக்கு ஏற்படும் பிரச்னைக்காக ‘எஃப் 4' கும்பல் மாணவர்களை எதிர்த்து நிற்கிறாள். மாபெரும் பணக்கார மாணவர்களை எதிர்த்து தன்னந்தனியாக போராடுகிறாள் ஏழை ஜான்ஸி. மோதலில் தொடங்கி காதல் மோதலில் தொடங்கும் இந்தப் போராட்டம் ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. அதன்பிறகு ஜான்ஸியின் காதலைப் பிரிப்பதற்கான போராட்டத்தை நாயகனின் பெற்றோர் தொடங்குகிறார்கள். நகைச்சுவையும் காதலும் பள்ளியில் தொடங்கும் இந்தப் போராட்டம், அவர்கள் கல்லூரியில் நுழைந்தபிறகு உச்சகட்ட மோதலை சந்திக்கிறது. மாணவர்களின் உலகத்தைக் காட்டும் இளமை துள்ளலுடன் சொல்லும் இந்தத் தொடரில் காதலும் நகைச்சுவையும் நிரம்பி வழிகிறது. ஹாலிவுட் கதாநாயகி ஹாலிவுட் படங்களிலும் ஏராளமான தொடர்களிலும் நடித்திருக்கும் நடிகை கூ கை சன், இந்தத் தொடரின் நாயகியாக நடித்திருக்கிறார். விருது பெற்ற சீரியல் ஆசியன் டெலிவிஷன் அவார்டு உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும், ‘பாய்ஸ் ஓவர் ஃப்ளவர்ஸ்' தொடரை தினமும் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. டப்பிங் சீரியல்கள் இதுவரை இந்தி தொடர்கள்தான் டப்பிங் செய்யப்பட்டு வரிசை கட்டி தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகி வருகிறது. முதன்முறையாக கொரியன் தொடர்கள் புதுயுகம் தொலைக்காட்சியில் தமிழ் பேச வரப்போகிறது. இனி வரிசையாக ஹாலிவுட் சீரியல்கள் தமிழ் பேசினாலும் ஆச்சரியமில்லை.





நன்றி: oneindia

aanaa
14th August 2014, 07:19 PM
தமிழ் தொலைக்காட்சியில் புத்தம் புது முயற்சியாக மருத்துவத்தின் முக்கியத்துவத்தை மையப்படுத்தி புத்தம் புது தொடராக வரவிருக்கும் தொடர்தான் 'உயிர்மெய்'.
மாறுபட்ட தொடர்களை தருவதில் எப்போதும் முதன்மையாக இருக்கும் ஜீ தமிழ் தொலைக்காட்சி மேலும் அடுத்த கட்ட புது முயற்சியாக ஒரு மாபெரும் மருத்துமனையை கதைக்களமாக கொண்டு உருவாகும் மருத்துவத் தொடரே இந்த உயிர்மெய் தொடர்.


மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த சினிமா நட்சத்திரம் நடிகை அமலா, இக்கதையின் முக்கிய கதாபாத்திரமான டாக்டர்.கவிதா சந்தீப் நடிக்கிறார். மேலும், இந்த தொடரில் நடிக்க வந்தது பற்றி அவர் கூறும்போது, சின்னத்திரையில் நடிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இருந்த நான், உயிர்மெய் தொடரின் கதையைக் கேட்டபிறகு இப்படிப்பட்ட ஒரு மாறுபட்ட தொடரில் நடிப்பதில் பெருமை கொள்கிறேன் என்றார். இது போன்ற கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது சந்தோஷமாக இருப்பதாக கூறினார்.


மேலும் தான் நடிக்கும் இத்தொடர் சராசரியான தொடர்போல் இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட ஒரு தொடராக அமைந்திருப்பதாகவும், மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் இத்தொடரில் ஒவ்வொரு எபிசோடும் மருத்துவத்தின் முக்கியத்துவம், அதைக்கையாளும் மருத்துவர்களின் சேவை, அவர்களின் உணர்வுகளையும், தியாகங்களையும் திரைக்கதையாக பிரதிபலிப்பதாக தெரிவத்தார். இது மக்களுக்கான தொடர். ஒவ்வொருவரும் குடும்பத்துடன் காணவேண்டிய ஒரு தொடர் தான் உயிர் மெய் என அமலா கூறினார்.


உயிர் மெய் தொடரில் ஒரு முக்கிய பிரம்மாண்டமும் இருக்கிறது. அது கதையின் களமான ஒரு மிகப்பெரிய மருத்துவமனையை மாபெரும் கலை இயக்குனர் தோட்டாதரணி அவர்களால் 20 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்டமான மருத்துவமனை செட் அமைத்து, படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இது தமிழ் தொலைக்காட்சியில் ஒரு பிரம்மாண்ட படைப்பாகும்.


இந்த உயரிய படைப்பான உயிர்மெய்த்தொடரை பூஷன் மற்றும் ப்ரியா இயக்க, ஒளிப்பதிவு DOP யை அருண்மொழி ஏற்க, கதை திரைக்கதையை ராதிகா எழுத, இவர்கள் கூட்டணியில் இந்த பிரம்மாண்ட தொடர் உருவாகிவருகிறது. இத்தொடரின் அழகுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக, இதன் தலைப்பு பாடலுக்கான இசையை, இயைமைப்பாளர் தரண் அமைக்க, பாடலை சினேகன் எழுத, ஹரிச்சரண் பாடலைப்பாடினார்.


குளோபல் ஒன் ஸ்டுயோ இத்தொடரை தயாரித்து வழங்க, வரும் ஆகஸ்ட் மாதம் 18 ம் தேதி முதல் வாரம்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 8 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.



நன்றி: தினமலர்

aanaa
24th August 2014, 05:35 AM
Jaya TV

https://www.youtube.com/watch?v=KNTrfLr25uU&index=5&list=UUK-VqZSMAUhgkMnZADVBGaA

aanaa
8th September 2014, 05:32 AM
ஆண்டாள் அழகரில் இளையராஜா இசை!


செப் 8-ம் தேதி முதல் விஜய் டி.வியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் ஆண்டாள் அழகர். இது மண்மனக்கும் கிராமிய தொடர். காரைக்குடி பகுதியில் உள்ள செட்டிநாட்டு கிராமிய கலாச்சாரத்தோடு சொல்லப்படுகிற காதல், செண்மெண்ட் கதை. கல்யாணி, பாலா, ரம்யா, ஸ்டாலின் நடிக்கிறார்கள். கதிரவன் இயக்குகிறார்


"இந்த தொடர் பாரதிராஜா சார் பாணியில் சொல்லப்படும் அழகான கிராமத்து காதல் கதை. மண்மனம் மாறாத கிராமத்து கலாச்சாரத்தின் பதிவாக இருக்கும்" என்றார் இயக்குனர் கதிரவன்.
இந்த தொடரின் புரமோஷன் பாடலாக இளையராஜாவின் "அம்மன் கோவில் கிழக்காலே அன்ன வயல் மேற்காலோ..." என்ற பாடல் பயன்படுத்ததப்படுகிறது. அதேபோல படத்தின் முக்கியமான காட்சிகளில் புகழ்பெற்ற இளையராஜாவின் பின்னணி இசையை பயன்படுத்துகிறார்கள்.



நன்றி: தினமலர்

aanaa
9th September 2014, 03:23 AM
ஜீ தமிழ் டிவியில் அமலா நடிக்கும் ‘உயிர் மெய்’ மெகா தொடர்…



தமிழ் தொலைக்காட்சிகளில் புத்தம் புது முயற்சியாக மருத்துவத்தின் முக்கியத்துவத்தை மையப்படுத்தி புத்தம் புது தொடராக வரவிருக்கும் தொடர்தான் ‘உயிர் மெய்’.


மாறுபட்ட தொடர்களை தருவதில் எப்போதும் முதன்மையாக இருக்கும் ஜீ தமிழ் தொலைக்காட்சி மேலும் அடுத்த கட்ட புது முயற்சியாக ஒரு மாபெரும் மருத்துவமனையை கதைக் களமாகக் கொண்டு உருவாக்கியுள்ள மருத்துவத் தொடரே இந்த ‘உயிர் மெய்’ தொடர்.


தயானந்த் இண்டஸ்ட்ரீஸின் நிறுவனரான தயானந்தின் வாழ்க்கைக் கனவுதான் இம் மருத்துவமனை. உலகத் தரத்துடன் நிர்மாணிக்கப்பட்ட இம்மருத்துவமனையில் அனைத்து மருத்துவ பிரிவுகளும் இருந்தாலும், இதன் அவசர சிகிச்சைப் பிரிவு மற்ற மருத்துவமனைகள் பார்த்து பொறாமைப்படும் விதத்தில் போற்றத்தக்கதாக அமைந்துள்ளது.


அவசர சிகிச்சைப் பிரிவின் தலைமை மருத்துவர் டாக்டர்.கவிதா சந்தீப். இவருக்கு கீழே பணியாற்றும் டாக்டர்.புவனா நடராஜன், குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர். கரண் பெல்லா, அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்.மனோ அருண்மணி, அமெரிக்காவில் மருத்துவம் படித்துவிட்டு அறுவை சிகிச்சையில் பயிற்சி எடுக்க வந்திருக்கும் டாக்டர்.தமிழ்ச் செல்வன், அவசர சிகிச்சை பிரிவு நர்ஸ்.ஜென்னி, ஆகியோரே இத் தொடரின் முக்கியமான கதாபாத்திரங்கள். இவர்களைத் தவிர முன் அலுவலகத்தில் பணி புரியும் ஏழுமலை, பன்னீர் செல்வம் மற்றும் இதர நர்ஸுகள் சரளா, வித்யா, சுமதி, இப்படி அனைவருமே நமது சமுதாயத்தின் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களை நினைவூட்டுவர்.


மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த சினிமா நட்சத்திரமான நடிகை அமலா இக்கதையின் முக்கிய கதாபாத்திரமான டாக்டர்.கவிதா சந்தீப் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும், இந்த தொடரில் நடிக்க வந்தது பற்றி அவர் கூறும்போது,


“சின்னத்திரையில் நடிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இருந்த நான், ‘உயிர் மெய்’ தொடரின் கதையைக் கேட்ட பிறகு இப்படிப்பட்ட ஒரு மாறுபட்ட தொடரில் நடிப்பதில் பெருமை கொள்கிறேன்.
இது போன்ற கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது சந்தோஷமாக இருப்பதாகக் கூறுகிறார். மேலும் தான் நடிக்கும் இத்தொடர் சராசரியான தொடர் போல் இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட ஒரு தொடராக அமைந்திருப்பதாகவும், மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் இத்தொடரில் ஒவ்வொரு எபிசோடும் மருத்துவத்தின் முக்கியத்துவம், அதைக் கையாளும் மருத்துவர்களின் சேவை, அவர்களின் உணர்வுகளையும், தியாகங்களையும் திரைக்கதையாக பிரதிபலிப்பதாகச் சொல்கிறார். இது மக்களுக்கான தொடர். ஒவ்வொருவரும் குடும்பத்துடன் காணவேண்டிய ஒரு தொடர் தான் ‘உயிர் மெய்’,” என அமலா கூறுகிறார்.


டாக்டர் கதாபாத்திரத்தில் நடிப்பதைப் பற்றி அவர் பற்றி கூறும் போது, “பொதுவாக ஒரு மருத்துவமனையில், ஒரு நோயாளியை கவனிக்கும் டாக்டர், அவர் கையாளும் மருத்துவத்தை விட, அவரது கருணையும், ஆதரவும், நம்பிக்கை வார்த்தையுமே அந்த நோயாளியை பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடையச் செய்யும் என மருத்துவர்களின் மகத்துவத்தை உயர்வாகக் கூறுபவர், அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதே பெருமையென்கிறார்.


‘உயிர் மெய்’ தொடரில் ஒரு முக்கிய பிரம்மாண்டமும் இருக்கிறது. அது கதையின் களமான ஒரு மிகப்பெரிய மருத்துவ மனையை மாபெரும் கலை இயக்குனர் தோட்டாதரணி அவர்களால் 20 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்டமான மருத்துவமனை செட் அமைத்து, படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இது தமிழ் தொலைக்காட்சிகளில் ஒரு பிரம்மாண்ட படைப்பாகும்.


இந்த உயரிய படைப்பான ‘உயிர் மெய்’தொடரை பூஷன் மற்றும் ப்ரியா இயக்க, ஒளிப்பதிவை அருண் மொழி ஏற்க, கதை, திரைக்கதையை ராதிகா எழுத, இவர்கள் கூட்டணியில் இந்த பிரம்மாண்ட தொடர் உருவாகிவருகிறது. இத்தொடர் பற்றி இவர்கள் கூறும் போது, “இது கண்டிப்பாக பார்ப்பவர்கள் மனதில் புதிய உணர்வை உருக்கத்தை ஏற்படுத்தும். வழக்கமான தொடர் போல் அல்லாமல், நேயர்களுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்கு படைப்பாகவும், ஒவ்வொரு காட்சியும் அழகு பட பார்ப்பவர் மனதை வசீகரிக்கும் விதத்தில் உருவாக்கி வருகிறோம் எனக் கூறுகின்றனர்.


இத்தொடரின் அழகுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக, இதன் தலைப்பு பாடலுக்கான இசையை, இயைமைப்பாளர் தரண் அமைக்க, பாடலை சினேகன் எழுத, ஹரிச்சரண் பாடியுள்ளார்.
முற்றிலும் மாறுபட்ட இப்படியொரு புதுமையான தொடரை படைப்பது பற்றி ஜீ தமிழ் தொலைக்காட்சி பிசினஸ் ஹெட் என்.எஸ். ஈஸ்வரன் கூறும்போது, ‘உயிர் மெய்’ தொடர் கட்டாயமாக மக்கள் குடும்பத்தோடு, பார்த்து ரசித்து, அவர்கள் கொண்டாடும் ஒரு தொடராக இருக்கப் போகிறது. ஒவ்வொரு மனிதனின் உணர்வை சொல்லும் இத்தொடர் பார்ப்பவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியத் தொடராக அமையப்போவது உறுதி, எனக் கூறுகிறார்.


குளோபல் ஒன் ஸ்டுயோ இத்தொடரை தயாரித்து வழங்க, வரும் ஆகஸ்ட் 18 ம் தேதி முதல் வாரம் தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 8 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

aanaa
13th September 2014, 10:48 PM
தமிழில் டப் ஆகிறது சிம்ரனின் தெலுங்கு சீரியல்


2010ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை சிம்ரன் தெலுங்கில் நடித்து ஒளிபரப்பான சீரியல் சுந்தரகாண்டம். இதில் சிம்ரனுடன் சுஜிதா, ரிஷி, சத்யசாய், நடித்திருந்தனர். இது முற்றிலும் வெளிநாட்டில் படமாக்கப்பட்ட பிரமாண்ட சீரியல். அமெரிக்காவில் உள்ள நியூயார்க், நியூஜெர்சி, புரூக்ளின் நகரங்களில் கதை நடக்கிறது. இந்தியாவிலிருந்து திருமணமாகி செல்லும் சுஜிதாவின் கணவன் ரிஷி அமெரிக்காவில் தவறான பிசினஸ் செய்கிறான். அது பிடிக்காத அவளை கொடுமைப்படுத்துகிறான். அவனிடம் இருந்து தப்பிக்க நினைக்கும் சுஜிதா சந்திக்கும் பிரச்னைகள்தான் கதை. அந்த பெண்ணுக்கு உதவும் பெண்ணாக சிம்ரன் நடிக்கிறார். இந்த தொடர் அசோகவனம் என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு நாளை (செப் 15) முதல் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.



நன்றி: தினமலர்

aanaa
20th September 2014, 01:25 AM
ஏவிஎம் வழங்கும் புதிய தொடர் மோகினி


புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம், தற்போது தென்னிந்திய மொழிகளில் தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து வருகிறது. அவள் ஒரு மின்சாரம், மனதில் உறுதி வேண்டும், வைராக்கியம், உறவுக்கு கை கொடுப்போம், சம்சாரம், சவாலே சமாளி, வைர நெஞ்சம் சீரியல்களுக்கு பிறகு இப்போது புதிதாக தயாரிக்கும் சீரியல் மோகினி.
இதில் ராஜா, பெரோஸ்கான், சரத்குமார், சஞ்சய் குமார், சிவரஞ்சனி, ஸ்ரீப்ரியா, சுஜாதா, யமுனா நடிக்கிறார்கள். வைரமுத்து டைட்டில் பாடலை எழுதியுள்ளார், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். ரமணி பரத்வாஜ் இசை அமைக்கிறார். ஆர்.கே.பி. இயக்குகிறார். ஏவிஎம் நிறுவனத்தின் சார்பில் ஏ.வி.எம்.சரவணன், எம்.எஸ்.குகன் தயாரிக்கிறார்கள்.
"இது வழக்கமான நெடுந்தொடர்களிலிருந்து வித்தியாசமானது. அழுது வடியும் கேரக்டர்கள் இல்லாமல் கதைக்கும் காமெடிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பெற்றவர்களின் விருப்பத்துக்காக காதலித்தவனை கைவிட்டுவிட்டு அவனது நண்பனை மணந்து கொள்ளும் மோகினி முதலிரவில் ஒரு அதிர்ச்சியை எதிர்கொள்கிறாள். அதன் பிறகு அவள் சந்திக்கும் பிரச்சினைகள்தான் கதை. முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது" என்று ஏவிஎம் நிறுவனத்தின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.



நன்றி: தினமலர்

aanaa
2nd October 2014, 07:13 PM
நீலாம்பரி.

தனியொரு பெண்ணாக இருந்து, தன்னுடைய மூன்று மகன்களையும் நல்ல நிலைக்குக் கொண்டு வருகிறார் நீலாம்பரி.

தன்னுடைய மருமகள்களும் தனக்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும் என்று நினைப்பவர், முதல் இரண்டு மருமகள்களையும் அவ்வாறே அடக்கி ஆள்கிறார்.

ஆனால், மூன்றாவதாக வந்த மருமகள் மட்டும் நீலாம்பரிக்குப் போட்டியாக இருக்கிறார். இருந்தாலும், எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்தாமல், தனது தேவைகளை சாதித்துக் கொள்வதோடு, மாமியாரின் தவறுகளையும் சுட்டிக் காட்டுகிறார்.

மாமியார் - மருமகள் இடையிலான உறவினை அழகிய கதையாக காட்சிப்படுத்தும் "நீலாம்பரி' தொடர், மக்கள் தொலைக்காட்சியில்
திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

aanaa
2nd October 2014, 07:14 PM
ஒரு கை ஓசை
கணவன் பாலு விட்டுச்சென்ற பிறகு நிறைய கஷ்டங்களை அனுபவிக்கிறார் வசந்தி.

ஆனால், பாலுவோ மாயா என்ற பெண்ணுடன் ஊட்டியில் இன்பமாக வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில், வசந்தியின் மூத்த மகள் நிகிதா பெரியவளாக, அதற்குரிய சடங்குகளைக் கூட வசந்தியால் முறையாக நடத்த முடியவில்லை. சாத்தப்பனின் அறிவுரைக்கிணங்க, தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு பாலுவிடம் வற்புறுத்துகிறார் மாயா.

அதைத் தட்டிக் கழிக்க முடியாமல், திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறார் பாலு. "ஒரு கை ஓசை' தொடர்கதையை எழுதுவது யார் என்று தெரிந்துகொண்ட இன்ஸ்பெக்டர் விக்ரம், அதைச் சொல்வதற்காக வசந்திக்குப் போன் செய்ய, வசந்தியோ விக்ரமிடம் பேசாமல் தவிர்க்கிறார்.

பாலு - மாயா திருமணம் நடந்ததா? கதையை எழுதுவது யார் என்று வசந்தி அறிந்து கொண்டாரா? பாலு எடுத்த அதிரடி முடிவு என்ன? என்பதை அடுத்தடுத்த வாரங்களில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணலாம்.

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு "ஒரு கை ஓசை' தொடர் ஒளிபரப்பாகிறது.

aanaa
2nd October 2014, 07:16 PM
இந்திய சினிமாவில் தமிழ் சினிமாவின் பங்கு, முக்கியமான திரைப்படங்கள், திரையுலக பிரச்னைகள், சாதனைகள், சந்திக்கும் சோதனைகள் என சினிமா பற்றிய அனைத்து விஷயங்களையும் அலசி ஆராயும் நிகழ்ச்சி "சினிமா 360 டிகிரி'.

முன்னணி நட்சத்திரங்கள் மட்டுமின்றி, சாதிக்கக் காத்திருக்கும் புது வரவுகள், புதிய படங்களின் கலைஞர்கள் என அனைத்து தரப்பினரும் பங்குபெறும் சிறப்பு நேர்காணலும் இடம்பெறுகிறது.

இந்த நிகழ்ச்சியை பாலாஜி தொகுத்து வழங்குகிறார். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியைக் கண்டு ரசிக்கலாம்.

aanaa
6th October 2014, 08:47 PM
சன் தொலைக் காட்சியில்
சந்திரலேகா
இன்று முதல் ( 06 -10 - 2014)


https://www.youtube.com/watch?v=tR1OOdIjq-0



https://www.youtube.com/watch?v=HoFCk1mMqfk



https://www.youtube.com/watch?v=JJVydMC8llI



https://www.youtube.com/watch?v=8goD7jzs45I



https://www.youtube.com/watch?v=lBNOhSNFtW0


https://www.youtube.com/watch?v=NR-UJNai1as



Actress Shwetha Rao talks about the brand new serial Chandralekha which is to be aired on Sun TV from Oct 6, 2014. Chandralekha is about two girls who have different characters & status. Who manages to achieve their goal after crossing paths with each other is the rest of the story. Cast: Shwetha Rao, Nagasri, Meenakumari, Bhuvaneshwari, Surekha, Rishi, Sakshi Siva, Suresh Krishnamoorthy, Dubbing Janaki, Thyagarajan Lyricist: V Saravana Raja Dialogues: Bala Thangam Story: R Selvapandi Music: X Paulraj Screenplay: KS Udhaya Sankar Director: Nimesh Producer: Saregama

aanaa
12th October 2014, 08:50 PM
அமெரிக்காவில் படமான ‘அசோக வனம்’ தொடர்…


‘புது யுகம்’ தொலைக்காட்சியில் வரும் அக்டோபர் 6ம் தேதி, திங்கள் முதல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய தொடர் ‘அசோகவனம்’.


ஜி3 மீடியா ஒர்க்ஸ் சார்பாக மங்களம் தியாகராஜன் இத் தொடரை தயாரிக்கிறார். சிம்ரன், சுஜிதா, ரிஷி, சத்யசாய், பவானி மற்றும் பலர் இத் தொடரில் நடிக்கிறார்கள்.


நியூயார்க், நியூ ஜெர்ஸி, புரூக்ளின் போன்ற அமெரிக்க நகரங்களில் இத் தொடர் படமாக்கப்பட்டுள்ளதால் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சித் தொடர்களில் நிச்சயம் ஒரு புதுப்பொலிவைத் தரும்.


இந்தியாவிலிருந்து அமெரிக்க பிசினஸ்மேனான ரிஷிக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறார் சுஜிதா. அங்கு சென்ற பிறகுதான் தான் நினைத்து வந்த கணவராக ரிஷி இல்லை என்பது சுஜிதாவிற்குத் தெரிய வருகிறது. அதோடு மட்டுமல்லாது அவருடைய மாமனார் குடும்பத்தைச் சேர்ந்தர்வகளுடைய நடவடிக்கைகளும் சுஜிதாவுக்கு அதிர்ச்சியாக அமைகிறது. அவரை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அவர்கள் கொடுமைப்படுத்த ஆரம்பிக்கிறார்கள். எதுவுமே தெரியாத ஒரு புதிய இடத்தில் சிக்கிக் கொள்ளம் சுஜிதா அங்கிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறார்.


அப்போதுதான் சிம்ரன் ரூபத்தில் சுஜிதாவுக்கு உதவி கிடைக்கிறது. அவரின் உதவியால் அங்கிருந்து இந்தியாவிற்கு திரும்ப வரும் சுஜிதாவின் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் ‘அசோக வனம்’ படத்தின் கதை.


இத் தொடரை புது யுகம் டிவியில் வரும் திங்கள் முதல் இரவு 8 மணிக்கு காணத் தவறாதீர்கள்…

aanaa
15th October 2014, 08:22 AM
SIIMA 2013


http://www.dailymotion.com/video/k132Qr7zi9bcP594DkI?start=9


http://www.dailymotion.com/video/k6ynOpXQEL3X0a94DzM?start=12


http://www.dailymotion.com/video/k18JL43pnrNXA194DTy?start=5


http://www.dailymotion.com/video/k5xmnjsdJqDCmI94E9y?start=24


http://www.dailymotion.com/video/k4guf126s9Moat94EGb?start=32

aanaa
2nd November 2014, 06:25 AM
சன் தொலைக் காட்சியில்
தாமரை
03 -11 - 2014 முதல்


http://www.youtube.com/watch?v=GHkJSU-2m7I



http://www.youtube.com/watch?v=h4lCfmsKtoI


http://www.youtube.com/watch?v=-rGCEqQXe34


http://www.youtube.com/watch?v=w3jBlJ_x2mA


http://www.youtube.com/watch?v=UIjeRLe7VA4

aanaa
5th November 2014, 07:25 PM
எக்ஸ்பிரஸ் சேனல்

* புது யுகம் தொலைக்காட்சியில் காலை 6 மணி முதல் 7 மணி வரை "ஆன்மிக விடியல்' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதமும், அஷ்டலட்சுமி ஸ்தோத்திரமும் தெய்வீக மணம் பரப்புகிறது. நம் மண்ணின் பாரம்பரிய இசையான நாதஸ்வரமும் புல்லாங்குழலும் இசைக்கோலம் போடுவதோடு, வயலின் மற்றும் சாக்ஸபோன் இசையிலும் தெய்வீகப் பாடல்கள் ஒலிக்கின்றன. அத்துடன், தெய்வீகத் திருத்தலங்களில் நடைபெறும் திருவிழாக்கள், சிறப்பு வழிபாடுகள் பற்றிய தகவல்களும் தெரிவிக்கப்படுகின்றன.

aanaa
5th November 2014, 07:28 PM
பெற்றோரின் அன்பு வார்த்தைக்காக, தான் காதலித்தவனை விட்டுவிட்டு, காதலனின் நண்பனைத் திருமணம் செய்கிறாள் மோகினி. திருமணம் முடிந்தபிறகு முதலிரவில் எதிர்பாராத நிகழ்வு ஒன்று நடக்கிறது. அதன்பிறகு மோகினியின் புகுந்த வீட்டில் என்னென்ன மாற்றங்கள் நடக்கின்றன என்பதுதான் "மோகினி' நெடுந்தொடரின் கதையம்சம். தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் வழக்கமான நெடுந்தொடராக இல்லாமல், நெகட்டிவ் கதாபாத்திரங்கள் இல்லாமல், மாமியார் - மருமகள் சண்டை இல்லாமல், அழுது வடியும் கதாபாத்திரங்கள் இல்லாமல், நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்தத் தொடர் எடுக்கப்பட்டுள்ளது. ஏவி.எம். நிறுவனம் தயாரித்துள்ள இந்தத் தொடர், விரைவில் கலைஞர் தொலைக்காட்சியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

aanaa
5th November 2014, 07:40 PM
தொலைக்காட்சி மேலும் அடுத்த கட்ட புது முயற்சியாக ஒரு மாபெரும் மருத்துவமனையை கதைக் களமாகக் கொண்டு உருவாக்கியுள்ள மருத்துவத் தொடரே இந்த ‘உயிர் மெய்’ தொடர்.

தயானந்த் இண்டஸ்ட்ரீஸின் நிறுவனரான தயானந்தின் வாழ்க்கைக் கனவுதான் இம் மருத்துவமனை. உலகத் தரத்துடன் நிர்மாணிக்கப்பட்ட இம்மருத்துவமனையில் அனைத்து மருத்துவ பிரிவுகளும் இருந்தாலும், இதன் அவசர சிகிச்சைப் பிரிவு மற்ற மருத்துவமனைகள் பார்த்து பொறாமைப்படும் விதத்தில் போற்றத்தக்கதாக அமைந்துள்ளது.

அவசர சிகிச்சைப் பிரிவின் தலைமை மருத்துவர் டாக்டர்.கவிதா சந்தீப்.
இவருக்கு கீழே பணியாற்றும் டாக்டர்.புவனா நடராஜன், குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர். கரண் பெல்லா, அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்.மனோ அருண்மணி, அமெரிக்காவில் மருத்துவம் படித்துவிட்டு அறுவை சிகிச்சையில் பயிற்சி எடுக்க வந்திருக்கும் டாக்டர்.தமிழ்ச் செல்வன், அவசர சிகிச்சை பிரிவு நர்ஸ்.ஜென்னி, ஆகியோரே இத் தொடரின் முக்கியமான கதாபாத்திரங்கள்.

இவர்களைத் தவிர முன் அலுவலகத்தில் பணி புரியும் ஏழுமலை, பன்னீர் செல்வம் மற்றும் இதர நர்ஸுகள் சரளா, வித்யா, சுமதி, இப்படி அனைவருமே நமது சமுதாயத்தின் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களை நினைவூட்டுவர்.

மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த சினிமா நட்சத்திரமான நடிகை அமலா இக்கதையின் முக்கிய கதாபாத்திரமான டாக்டர்.கவிதா சந்தீப் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும், இந்த தொடரில் நடிக்க வந்தது பற்றி அவர் கூறும்போது,
“சின்னத்திரையில் நடிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இருந்த நான், ‘உயிர் மெய்’ தொடரின் கதையைக் கேட்ட பிறகு இப்படிப்பட்ட ஒரு மாறுபட்ட தொடரில் நடிப்பதில் பெருமை கொள்கிறேன்.

இது போன்ற கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது சந்தோஷமாக இருப்பதாகக் கூறுகிறார்.
மேலும் தான் நடிக்கும் இத்தொடர் சராசரியான தொடர் போல் இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட ஒரு தொடராக அமைந்திருப்பதாகவும், மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் இத்தொடரில் ஒவ்வொரு எபிசோடும் மருத்துவத்தின் முக்கியத்துவம், அதைக் கையாளும் மருத்துவர்களின் சேவை, அவர்களின் உணர்வுகளையும், தியாகங்களையும் திரைக்கதையாக பிரதிபலிப்பதாகச் சொல்கிறார்.

இது மக்களுக்கான தொடர். ஒவ்வொருவரும் குடும்பத்துடன் காணவேண்டிய ஒரு தொடர் தான் ‘உயிர் மெய்’,” என அமலா கூறுகிறார்.
டாக்டர் கதாபாத்திரத்தில் நடிப்பதைப் பற்றி அவர் பற்றி கூறும் போது, “பொதுவாக ஒரு மருத்துவமனையில், ஒரு நோயாளியை கவனிக்கும் டாக்டர், அவர் கையாளும் மருத்துவத்தை விட, அவரது கருணையும், ஆதரவும், நம்பிக்கை வார்த்தையுமே அந்த நோயாளியை பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடையச் செய்யும் என மருத்துவர்களின் மகத்துவத்தை உயர்வாகக் கூறுபவர், அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதே பெருமையென்கிறார்.

‘உயிர் மெய்’ தொடரில் ஒரு முக்கிய பிரம்மாண்டமும் இருக்கிறது.
அது கதையின் களமான ஒரு மிகப்பெரிய மருத்துவ மனையை மாபெரும் கலை இயக்குனர் தோட்டாதரணி அவர்களால் 20 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்டமான மருத்துவமனை செட் அமைத்து, படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இது தமிழ் தொலைக்காட்சிகளில் ஒரு பிரம்மாண்ட படைப்பாகும்.

இந்த உயரிய படைப்பான ‘உயிர் மெய்’தொடரை பூஷன் மற்றும் ப்ரியா இயக்க, ஒளிப்பதிவை அருண் மொழி ஏற்க, கதை, திரைக்கதையை ராதிகா எழுத, இவர்கள் கூட்டணியில் இந்த பிரம்மாண்ட தொடர் உருவாகிவருகிறது.

இத்தொடர் பற்றி இவர்கள் கூறும் போது, “இது கண்டிப்பாக பார்ப்பவர்கள் மனதில் புதிய உணர்வை உருக்கத்தை ஏற்படுத்தும். வழக்கமான தொடர் போல் அல்லாமல், நேயர்களுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்கு படைப்பாகவும், ஒவ்வொரு காட்சியும் அழகு பட பார்ப்பவர் மனதை வசீகரிக்கும் விதத்தில் உருவாக்கி வருகிறோம் எனக் கூறுகின்றனர்.

இத்தொடரின் அழகுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக, இதன் தலைப்பு பாடலுக்கான இசையை, இயைமைப்பாளர் தரண் அமைக்க, பாடலை சினேகன் எழுத, ஹரிச்சரண் பாடியுள்ளார்.

முற்றிலும் மாறுபட்ட இப்படியொரு புதுமையான தொடரை படைப்பது பற்றி ஜீ தமிழ் தொலைக்காட்சி பிசினஸ் ஹெட் என்.எஸ். ஈஸ்வரன் கூறும்போது, ‘உயிர் மெய்’ தொடர் கட்டாயமாக மக்கள் குடும்பத்தோடு, பார்த்து ரசித்து, அவர்கள் கொண்டாடும் ஒரு தொடராக இருக்கப் போகிறது.

ஒவ்வொரு மனிதனின் உணர்வை சொல்லும் இத்தொடர் பார்ப்பவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியத் தொடராக அமையப்போவது உறுதி, எனக் கூறுகிறார்.
குளோபல் ஒன் ஸ்டுயோ இத்தொடரை தயாரித்து வழங்க, வரும் ஆகஸ்ட் 18 ம் தேதி முதல் வாரம் தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 8 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது

aanaa
15th November 2014, 04:56 AM
சன் டிவியில் சின்ன பாப்பாபெரிய பாப்பாஸ் நளினி, நிரோஷா நடிக்கிறார்கள்


சென்னை:: ராடன் மீடியா ஒர்க்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் சார்பில் ராதிகா சரத்குமார் தயாரிக்கும் புதிய நகைச்சுவைத் தொடர், ‘சின்னபாப்பா& பெரிய பாப்பாஸ்’. இதில் எதிரும் புதிருமான கதாபாத்திரத்தில் நடிகைகள் நளினியும் நிரோஷாவும் நடிக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான மோதல்கள்தான் கதை. குடும்ப பின்னணியில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இத்தொடர் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்தொடரை எஸ்.என்.சக்திவேல் இயக்குகிறார். திரைக்கதை, வசனத்தை ஜி.கே.கோபிநாத் எழுதுகிறார். ஒளிப்பதிவு தர்மா. கிரியேட்டிவ் ஹெட், ராதிகா சரத்குமார்.இந்தத் தொடர், சன் தொலைக்காட்சியில் வரும் 15&ம் தேதியில் இருந்து ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.



நன்றி: தினமலர்

aanaa
15th November 2014, 04:58 AM
18 தொடர்களில் இருந்து விருதுகள்


சென்னை: சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் 18 தொடர்களில் இருந்து சன் குடும்பம் விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன.சன் டி.வி.யில் தினமும் காலையில் இருந்து இரவு வரை ஒளிப்பரப்பாகும் தொடர்களில் இருந்து சிறந்த கலைஞர்களை கவுரவிக்கும் பொருட்டு சன் குடும்ப விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதில், சொந்த பந்தம், பொம்மலாட்டம், தேவதை, மரகத வீணை, பொன்னூஞ்சல், இளவரசி, வள்ளி, கல்யாணப்பரிசு, பிள்ளை நிலா, முந்தானை முடிச்சு, பாசமலர், நாதஸ்வரம், தெய்வ மகள், வம்சம், தென்றல், வாணி ராணி, சக்தி, அழகி ஆகிய பதினெட்டு தொடர்கள் இடம்பெற்றுள்ளன. மக்களின் வரவேற்பை பெற்றுள்ள இந்தத் தொடர்களில் இருந்தே விருதுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.





26 பிரிவுகளில்...

சென்னை: ‘சன் குடும்பம் விருதுகள்’ வழங்கும் விழாவில் இந்த வருடம் 26 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட இருக்கிறது.சன் டி.வி.யின், ‘சன் குடும்பம் விருதுகள்’ வழங்கும் விழா, இந்த வருடம் வரும் 11&ம் தேதி மாமல்லபுரத்தில் நடக்கிறது. இந்த விழாவில் மொத்தம் 26 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன. சிறந்த கதாநாயகன், கதாநாயகி, அப்பா, அம்மா, மாமியார், மருமகள், அண்ணன், தங்கை, வில்லன், வில்லி, நகைச்சுவை நடிகர், நடிகை, இயக்குனர், ஒளிப்பதிவாளர், வசனகர்த்தா, திரைக்கதை, இசை உட்பட 26 பிரிவுகளில் விருது வழங்கப்பட இருக்கிறது. இவ்வளவு பிரிவுகளில் விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறை. ‘சினிமா படங்களுக்கு ஏகப்பட்ட விருது விழா இருக்கிறது. சின்னத்திரை கலைஞர்களுக்கு இந்த விருது விழா மட்டுமே இருப்பதால் எங்களுக்கு உற்சாகமாக இருக்கிறது’ என்று டி.வி.தொடர் தயாரிப்பாளர் ஒருவர் சொன்னார்.







நன்றி: தினமலர்

aanaa
17th December 2014, 10:04 PM
விஜய் டிவியின் பெருமையாய் விளங்கிய, நேயர்களின் நெஞ்சங்களைக் கவர்ந்த ‘மகாபாரதம்’ தொடர் நேயர்களின் விருப்பத்திற்கிணங்க மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது.


இந்த இதிகாசத் தொடரை நேயர்கள் இதுவரை கண்டிருக்காத வகையில் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்தது.


இதுவரை நாம் பல மகாபாரதக் கதைகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால், நாம் அறிந்திராத பல கதாபாத்திரங்களை நமக்கு எடுத்துக் காட்டியது விஜய் டிவியின் மகாபாரதம்தான்.


இத் தொடரின் முதுல் பாகங்களை சில நேயர்கள் காணத் தவறியிருக்கக் கூடும. அவர்களுக்காகவே விஜய் டிவி எண்ணற்ற நேயர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் மீண்டும் ‘மகாபாரதம்’ தொடரை மறுஒளிபரப்பு செய்ய முடிவெடுத்தது.


சத்யவதி – சாந்தனு வாழ்க்கை வரலாற்றில் தொடங்கும் இந்த ‘மகாபாரதம்’, பீஷ்மர், திருதிராஷ்டிர்ர், பாண்டு, குந்தி, திரௌபதி, பாண்டவர்கள், கௌரவர்கள், சகுனி, கர்ணன், வாசுதேவ கிருஷ்ணன் ஆகியோரது கதாபாத்திரங்களை அழகாக சித்தரித்துக் காட்டுகிறது.


வரும் டிசம்பர் 8ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு விஜய் டிவியில் மட்டும் ஒளிபரப்பாகும் ‘மகாபாரதம்’ தொடரை காணத் தவறாதீர்கள்.

aanaa
17th December 2014, 10:06 PM
வேந்தர் டி.வி.யில் ஞாயிறு தோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘நினைத்தாலே இனிக்கும்’ நிகழ்ச்சி, நேயர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


பிரம்மாண்டமான, அழகு மிகு அரங்கத்தில் நடிகை குஷ்பு, திரைப்படப் பிரபலங்களுடன் கலந்துரையாடுகிறார். இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் குஷ்பு தோன்றுவது இதுதான் முதல்முறை,


இன்று திரையில் பிரபலமாக இருக்கும் முன்னணி கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகள், மனந் திறந்து குஷ்புவுடன் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். மேலும், ‘படம் பேசும்’, ‘கலாட்டா கெட்-அப்’, ‘வேந்தர் ஷாப்பிங்’ போன்ற சுவையான பகுதிகளும் இதில் இடம்பெறுகின்றன.


‘படம் பேசும்’ பகுதியில், பிரபலங்களின் புகைப்படங்கள் காண்பிக்கப்படுகின்றன. அந்த புகைப்படங்களைப் பற்றிய சுவையான நினைவுகளை பிரபலங்கள் பகிர்ந்து கொள்வர். ‘கலாட்டா கெட்-அப்’ பகுதியில், பிரபலங்கள் தேர்வு செய்யும் தோற்றம், அவர்களுக்கு மேக்கப்பாக போடப்படும். ‘வேந்தர் ஷாப்பிங்’ பகுதியில், பிரபலங்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை இலவசமாக ஷாப்பிங் செய்து கொள்ளலாம்.


ஞாயிறு தோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, அன்று மாலையே 6.30 மணிக்கு மறு ஒளிபரப்பாகிறது.

aanaa
12th January 2015, 06:21 AM
தமிழ் சேனல்களில் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது இதிகாசம் மற்றும் புராணத் தொடர்கள் அதிக அளவில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியில் தயாரான பிரமாண்ட தொடர்களான மகாபாரதம், ராமாயணம் போன்றவை தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு சமூக தொடர்கள் பெண்களை வீட்டிலேயே கட்டிப்போட்டது


இப்போது சமூக தொடர்களை விட புராணம் மற்றும் இதிகாச தொடர்களுக்கே அதிக மவுசு ஏற்பட்டிருக்கிறது. திரைப்படங்களுக்கு நிகராக பிரமாண்டமாக இந்த தொடர்கள் தயாரிக்கப்படுவதால் மக்கள் அதனை விரும்பி பார்க்கிறார்கள். இதனால் வாரம் ஒரு நாள், இரண்டுநாள் ஒளிபரப்பாகி வந்த தொடர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்தின் 5 நாட்கள் ஒளிபரப்பாகிறது


விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பிய மகாபாரதம் தொடருக்கு கிடைத்த மகத்தான வரவேற்பால் அது இப்போது மீண்டும் ப்ரைம் டைமில் மறு ஒளிபரப்பாகிறது. இன்னொரு தொலைக்காட்சியும் மகாபாரதத்தை தமிழில் நேரடியாக தயாரித்து ஒளிபரப்புகிறது.
இதுதவிர ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஓம் நமச்சிவாயா மற்றும் ராமாயணம் தொடர்கள் ஒளிபரப்பாகிறது. புதுயுகம் தொலைக்காட்சியில் முதன் முறையாக சனீஸ்வர பகவானின் பெருமையை சொல்லும் ஸ்ரீசனீஸ்வரமகிமை என்ற தொடர் ஒளிபரப்பாகிறது.


பொதிகை தொலைக்காட்சில் புராண கதைகளில் சொல்லப்படும் தத்துவங்கள், நீதிகளை மையமாக கொண்டு தர்மத்தின் குரல் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. முன்னணி செய்தி சேனல் ஒன்றில் 63 நாயன்மார்களின் வரலாற்றையும் ஒளிபரப்பி வருகிறார்கள். இதுதவிர தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான அம்மன் திருத்தலங்களின் வரலாறுகளைச் சொல்லும் அம்மன் மகிமை என்ற தொடர் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாக இருக்கிறது.


புராணம், இதிகாச தொடர்களை தயாரிப்பது அதிக பட்ஜெட் பிடிக்கும் வேலை என்றாலும் ஸ்பான்சர்களும், விளம்பரதாரர்களும் இந்த தொடர்களில் ஆர்வம் காட்டுவதால் மினிமம் கியாரண்டி தொடர் என்று இதனை சின்னத்திரை விளம்பர வட்டாரத்தில் குறிப்பிடுகிறார்கள்



நன்றி: தினமலர்

aanaa
12th January 2015, 06:36 AM
தொடரும் சக்தி!


அருணவ், மனீஷா சட்டர்ஜி நாயகன், நாயகியாக நடிக்கும் சக்தி தொடர் 2014 டிசம்பருடன் முடிவுக்கு வருவதாக இருந்தது. ஆனால் தொடருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பையும், உயர்ந்திருக்கும் டி.ஆர்.பி ரேட்டையும் கருத்தில் கொண்டு தொடரை தொடர முடிவு செய்து விட்டார்கள் தயாரிப்பாளர்கள். இதனால் தொடரில் நடித்துக் கொண்டிருப்பவர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.


தொடரை நீடிக்க வசதியாக கதையில் சில மாற்றங்களையும் செய்துள்ளனர். ரொமான்ஸ் மற்றும் பிசியாலஜிக்கல் த்ரில்லர் வகையான ஷக்தி பல திருப்பங்கள் நிறைந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை சுற்றி நடக்கிற கதை.


இதில் ஹீரோயினாக நடிக்கும் மனீஷா சட்டர்ஜிக்கு சினிமா வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கிறது. மனீஷா ஷக்தியாகவும், அருணவ் ஆர்யாவாகவும், அனுராதா கிருஷ்ணமூர்த்தி லோகேஸ்வரியாகவும் நடிக்கிறார்கள். தொடரை சதாசிவம் பெருமாள் இயக்குகிறார், கிரன் இசை அமைக்கிறார்.



நன்றி: தினமலர்

aanaa
20th January 2015, 09:02 AM
சன் தொலைக் காட்சியில் 19 -01 - 2015 முதல்
பிரியமானவள்


https://www.youtube.com/watch?v=-1TDKiIsWPk



https://www.youtube.com/watch?v=ukKbfBTGDXk

aanaa
27th January 2015, 07:30 PM
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் ‘சிவ ரகசியம்’.



சித்தர்கள் காக்கும் பூமிகாத்தான்பட்டி கிராமத்தை கதைக் களமாகக் கொண்டு அறியப்படாத, அறிந்திட முடியாத சிவனின் ரகசியங்களை சொல்லும் தொடராக தொடர்கிறது.


இக்கதையில் ராமரத்தினத்தின் மகன் விஜய், சித்தர்களுக்கு எதிராக அவர்களின் சூட்சமங்களை அறிய முற்படுகிறான். தொல்லியல் ஆய்வாளர் விக்ரமன், கல்வெட்டுகளில் குறிப்பிட்டிருக்கும் ரகசியக் குறிப்புகளைத் தேடி சித்தவனம் செல்கிறார். மேலும் இக்கதையில் தேனீக்கள் ரூபத்தில் இருக்கும் சப்தகன்னிகள் ஏழுபேர் பறந்து, சுற்றி வந்து சிவலிங்கத்தை பூஜிப்பதை பார்க்கச் செய்தால் பிருந்தா முழுவதும் குணமாவாள் என்று ராஜியின் கனவில் தோன்றி காக சித்தர் கூற, அதன்படி ராஜி தன் மகளை அழைத்துக்கொண்டு திரு கிழாக்குடி செல்ல, அங்கு அவர்கள் ஒரு ஆபத்தில் சிக்கிக்கொள்கின்றனர்.


யட்சினி மூலம் சித்தவனத்தில் முருகேசன் உயிரோடு இருப்பதை தெரிந்துகொண்ட நம்பூதிரி, அவன் உதவியோடு வனத்தில் இருக்கும் தைலக் கிணறு பற்றித் தெரிந்து கொள்ள ஆசை கொண்டு வைத்தியரிடம் அவர் மருமகன் உயிருடன் இருப்பதை நான் காட்டுவதாகக் கூறி அவரை அழைத்துக்கொண்டு சித்தவனம் போக …அங்கு முருகேசனை நம்பூதிரி வைத்தியருக்கு காட்டினாரா, அவர் ஆசைப்பட்டபடி தைலக் கிணறு பற்றிய தகவல் அவருக்கு கிடைத்ததா?, சித்தர்களுக்கு எதிராகச் செயல்படும் விஜய்யின் நிலமை என்ன ஆனது? கல்வெட்டின் குறிப்புகளைத் தேடிச்சென்ற விக்ரமன் சந்திக்க இருக்கும் சவால்கள் என பல்வேறு திருப்பங்களுடன் கதை தொடர்கிறது.


இத் தொடரின் கதை, திரைக்கதையை இந்திரா சௌந்தரராஜன் எழுத, நித்தியானந்தம் இயக்க, அபிராமி புரடக்க்ஷன்ஸ் சார்பில் அபிராமிராமநாதன், அபிராமி நல்லம்மை ராமநாதன் தயாரிக்கின்றனர்.


திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘சிவ ரகசியம்’ ஒளிபரப்பாகிறது.

aanaa
27th January 2015, 07:30 PM
ஜீ தமிழ் – திருப்பங்களுடன் ‘திருமாங்கல்யம்’ தொடர்…





ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரைஇரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘திருமாங்கல்யம்’ தொடர் வெற்றிகரமான 50 வது பகுதியை நெருங்கியுள்ளது.


தனது ஒரே மகளான சந்தியாவை போலீஸ்காரனுக்கு மட்டும் திருமணம் செய்து கொடுப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கும் அஸிஸ்டென்ட் கமிஷனரின் மனைவியான ஷோபா, பல்வேறு இடங்களில் வரன் தேடிய பிறகு, போலீஸ் உத்தியோகம் பார்ப்பவன் என்பதை அறியாமலேயே, கான்ஸ்டபிளான திருமுருகனை தன் வீட்டு மாப்பிள்ளையாக்கிக் கொள்ள முடிவு செய்கிறாள். திருமுருகனை சிறுவயதிலிருந்தே காதலித்து வந்த ஹவுஸ் ஓனர் மகள் மகா, திரு தனக்கு இல்லை என்பதை அறிந்து மனமுடைந்து போகிறாள். சந்தியா வீட்டார் திருமண வேலைகளில் தீவிரமாக இறங்குகின்றனர்.


ஆனால், பணக்கார குடும்பத்தில் பிறந்த சந்தியா தன் வீட்டிற்கு திருமணம் செய்து கொண்டு வருவதில் திருவின் அண்ணியான கோகிலாவிற்கு விருப்பமில்லை. அவள் தனக்கு அடங்கி நடக்கும் மகாவை திருவிற்கு மனைவியாக்கும் திட்டத்தில் இறங்குகிறாள். அதனால், திரு – சந்தியா திருமணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்திட முயற்சிக்கிறாள்.


திரு கட்டும் ‘திருமாங்கல்யம்’ மகாவிற்கா? சந்தியாவிற்கா? என மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘திருமாங்கல்யம்’ தொடரை, ஜீ தமிழ்த் தொலைக்காட்சி குழுமத்தின் ஓர்அங்கமான எஸ்ஸெல் விஷன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.

aanaa
3rd February 2015, 12:10 AM
முன்னணி சேனலில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகி வரும் மகாபாரதம் தொடரை சினிவிஸ்டாஸ் நிறுவனம் தயாரித்து ஒளிபரப்பி வருகிறது. இந்த தொடர் தற்போது 100 வது எபிசோடை தொட்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து பல புதுமைகளை அதில் செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள்.


இதுபற்றி தொடரின் இயக்குனர் சி.வி.சசிகுமார் கூறியதாவது: எங்கள் தொடரில் மகாபாரத கதை மைய இழையாக இருந்தபோதும் அது தொடர்பாக இதுவரை பலரும் அறிந்திராத பல புதுமையான, சுவையான சம்பவங்களை காட்சிப்படுத்தியிருக்கிறோம்.
இதற்காக தமிழில் கம்பராமாயணம் போல் தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி, குஜராத்தி, பெங்காலி, ராஜஸ்தானி, இந்தோனேஷிய மொழிகளில் வெளிவந்திருக்கும் மகாபாரத நூல்களை படித்து நமக்குத் தெரியாத பல சம்பங்களை அறிந்து அதனை மகாபாரதத்தின் இடையில் சேர்க்கிறோம்


இதுவரை யாரும் செய்யாத ஒரு புதுமையை செய்ய இருக்கிறோம். அது தமிழ்நாட்டின் தொன்மை கலைகளான பொய்கால் குதிரை, நடன கதைகள், கிராமிய கூத்து, பஞ்சராத்ர தூது வாத்யம், போன்ற கலைகளை பொருத்தமான இடங்களில் சேர்க்க இருக்கிறோம். இது ரசிகர்களுக்கு புதுமையாக இருக்கும்.


இதுதவிர தொடருக்காக பெங்களூரில் 1 கோடி ரூபாய் செலவில் அரண்மனை செட் போட்டிருக்கிறோம். தமிழ் தொலைக்காட்சி தொடர் ஒன்றுக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் செட் போட்டிருப்பது இதுவே முதல் முறை. என்றார் இயக்குனர் சி.வி.சசிகுமார்.



நன்றி: தினமலர்

aanaa
3rd February 2015, 12:16 AM
சினிமா ஹீரோவானார் சந்த்ரு


சின்னத்திரையின் ஆட்ட நாயகன் என்று அழைக்கப்படுகிறவர் சந்த்ரு. சின்னத்திரையின் அனைத்து நடன நிகழ்ச்சியிலும் ஆஜர் கொடுத்து விடுவார். ஜோடி நம்பர் ஒண், உங்களில் அடுத்த பிரபுதேவா யார் நிகழ்ச்சிகளில் சில புள்ளிகள் வித்தியாசத்தில் வின்னரை பட்டத்தை தவறவிட்டு ரன்னர் ஆனவர். இப்போது சினிமாவில் ஹீரோவாகிவிட்டார்.


இயக்குனர் கே.பாக்யராஜின் உதவியாளர் ஜி.ஏ.சோமசந்திரா இயக்கும் காதல் காலம் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நித்யா, சார்மி என்ற இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். விஜி ஒளிப்பதிவு செய்கிறார், ஜெய் ஆனந்த் இசை அமைக்கிறார். கோபி செட்டிபாளையும், கர்நாடகா பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. விரைவில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடக்கிறது. இதில் சந்துரு முறைப்படி அறிமுகப்படுத்தப்படுகிறார்.



நன்றி: தினமலர்

aanaa
18th February 2015, 10:13 PM
ஜீ தமிழில் புதிய தொடர் மாப்பிள்ளை


ஜீ தமிழ் தொலைக்காட்சி இந்தியில் ஹிட்டான சீரியல்களை டப் செய்து ஒளிபரப்பி வருகிறது. அந்த வரிசையில் அடுத்து வருகிறது மாப்பிள்ளை என்ற சீரியல். இது பேமிலி டிராமா. ரஜினி நடித்த மாப்பிள்ளை படத்தில் வரும் மாமியாருடன் மோதும் மருமகன் கதைதான் இதுவும்.
பெரிய கோடீஸ்வரி துர்காவின் ஒரே மகள் ரோஷினி. மகளுக்கு கோடீஸ்வரனை திருமணம் செய்து வைத்து அழகு பார்க்க நினைக்கிறார் துர்காதேவி. ஆனால் மகளோ எளிமையான வாழ்க்கையை நேசிக்கிறார். ஒரு ஏழையை காதலித்து திருமணம் செய்ய விரும்புகிறாள். மற்றொரு கோடீவரரின் மகனான சித்தார்த்துக்கு ரோஷினி மீது காதல். அதற்காக ஏழையாக நடித்து ரோஷினியை காதலிக்கிறார். சித்தார்த்தை ஏழை என்று நினைத்து துர்காதேவி டார்ச்சர் கொடுக்கிறார். இறுதியில் வென்றது ஏழ்மையா, பணக்காரத்தனமாக என்பது மாதிரி கதை போகும். வருகிற 16ந் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.



நன்றி: தினமலர்

aanaa
23rd February 2015, 07:39 AM
கொரியன் டிராமாக்களில் யூ ஆர் பியூட்டிபுலுக்கு அடுத்த புகழ்பெற்ற தொடர் தி ஹேர்ஸ். கொரியன் டிராமக்களின் நம்பர் ஒண் நடிகர் லீ மின் ஹோவும், நம்பர் ஒண் நடிகை பார்க் கின் இயும் இணைந்து நடித்த டிராமா. உலகம் முழுவதும் அதிகம்பேரால் பார்க்கப்பட்ட தொடர் இது. அதோடு அமெரிக்க நிறுவனம் தயாரித்த முதல் கொரியன் தொடரும் இதுதான்.
தற்போது இந்தத் தொடர் தமிழில் டப் செய்யப்பட்டு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. வருகிற 23ந் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது,
கொரியாவைச் சேர்ந்த பெரிய கோடீஸ்வரன் மகன் ஜேசன் அமெரிக்காவில் படிக்கிறார். அவருக்கு இன்னொரு கோடீஸ்வரரின் மகளை திருமணம் பேசி முடிக்கிறார்கள். இந்த நிலையில் ஜேசன் தன்னுடன் படிக்கும் ஏழை மாணவி ஜெனியை காதலிக்கிறார். படித்து முடித்து விட்டு இருவரும் நாடு திரும்பிய பிறகுதான் தெரிகிறது. ஜேனி சேசன் வீட்டு வேலைக்காரரின் மகள் என்பது. இவர்கள் காதலை பிரிக்க கோடீஸ்வர குடும்பம் சதி செய்வதும். அதனை முறியடித்து இருவரும் காதலில் வெற்றி பெறுவதும்தான் கதை.



நன்றி: தினமலர்

aanaa
23rd February 2015, 07:41 AM
எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்2 தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் நிகழ்ச்சி.


எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்2 தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்யும் வகையில் புதிய தலைமுறை சேனலில் கற்க கடற என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுதேர்வில் எதிர்பார்க்கப்படும் கேள்விகள், பதட்டமில்லாமல் தேர்வை அணுகுவது எப்படி என்பது பற்றி நிபுணர்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள். பாடம் சார்ந்த அணுகுமுறை, உளவியல் ரீதியான அணுகுமுறையை கற்றுக் கொடுக்கிறார்கள்.


இவைகள் தவிர நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வுக்கான தயார்படுத்தலையும் நிகழ்ச்சி மூலம் வழங்குகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபல கல்வியாளர்கள் இதில் கலந்து கொண்டு பேசி வருகிறார்கள். தினமும் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை அபிநயா தொகுத்து வழங்குகிறார்.



நன்றி: தினமலர்

aanaa
23rd February 2015, 07:44 AM
6 ஹீரோயின்கள் நடிக்கும், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வருகிற 23ந் தேதி முதல் ஒளிரப்பாகும் புதிய தொடர், 'அன்னக்கொடியும் ஐந்து பெண்களும். இதில் திரைப்பட குணசித்திர நடிகை லட்சுமி உள்பட 6 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். அசோக்குமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார். செய்யாறு ரவி இயக்குகிறார். சத்யஜோதி தியாகராஜன் தயாரிக்கிறார்.


கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழாவில் தான் காதலித்து மணந்த கணவனுடன் சந்தோஷமாக வாழ்கிறார் அன்னக்கொடி. திடீரென்று ஒரு நாள் கணவன் கடத்தப்படுகிறான். அவனைத் தேடி தன் ஐந்து மகள்களுடன் தமிழ்நாட்டுக்கு வருகிறார். அப்போதுதான் கணவன் தென்காசியை சேர்ந்தவன் என்றும் பெரிய ஜமீன் குடுபத்து வாரிசு என்றும் தெரிய வருகிறது. ஊர் மக்களும், ஜமீன் குடும்பமும் அன்னக்கொடியையும் அவளது மகள்களையும் துரத்தி அடிக்கிறது. அதையும் மீறி அன்னக்கொடி கணவனை எப்படி மீட்கிறார் என்கிற கதை. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_150220123818000000.jpg



நன்றி: தினமலர்

aanaa
5th March 2015, 07:55 PM
மீண்டும் கேம் ஷோ நடத்துகிறார் ரிஷி


நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை நடத்திய ரிஷி அந்த நிகழ்ச்சி முடிந்ததும் சின்ன பிரேக் விட்டார். இப்போது மீண்டும் கேம் ஷோ மூலம் திரும்பியிருக்கிறார். சூப்பர் சேலன்ஞ் என்ற கேம் ஷோவை கவிதாவுடன் இணைந்து தொகுத்து வழங்குகிறார். இது சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கான நிகழ்ச்சி. அவர்களை மூன்று பேர் கொண்ட அணியாக பிரித்து பல போட்டிகளை நடத்துகிறார்.
திரைப்பட நடிகர், நடிகைகளின் சிறுவயது போட்டாவை காட்டி அவர் யார் என்று கேட்பது, ஒரு ஹிட் சினிமா பாட்டை கேட்டு அதனை மற்றவர்களை கண்டுபிடிக்க வைப்பது, ஒரு தலைப்பைச் சொல்லி அதற்கு படம் வரைய சொல்வது, ஒருவரின் எடையை சரியாக கணிக்கச் சொல்வது என விதவிதமான போட்டிகளை நடத்துகிறார். வெற்றி பெறும் அணிகளுக்கு கணிசமான தொகை பரிசாக வழங்கப்படுகிறது.



நன்றி: தினமலர்

aanaa
10th March 2015, 09:48 PM
விஜய் தொலைக்காட்சியில்
புதிய தொடர் ‘ரெட்டை வால் குருவி’


https://www.youtube.com/watch?v=SRrGd_AA6Bw




https://www.youtube.com/watch?v=iAWJdfz4j5k

aanaa
22nd March 2015, 04:17 AM
குட்டி பத்மினி இயக்கும் ராமானுஜர் - கருணாநிதி வசனம் எழுதுகிறார்


நடிகை குட்டிபத்மினி தற்போது 63 நாயன்மார்கள் தொடரை தயாரித்து ஒளிபரப்பி வருகிறார். அது நிறைவு பகுதியை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் அடுத்து ராமானுஜர் என்ற ஆன்மீக தொடரை இயக்க இருக்கிறார். இது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. தி.மு.கழக தலைவர் கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதுகிறார். குட்டி பத்மினியின் வைஷ்ணவி மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சீரியல் இயக்குனராக குட்டி பத்மினி பணியாற்றுகிறார். ஆர்.பார்த்திபன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதுபற்றி குட்டி பத்மினி கூறியதாவது: வைணவ தர்மத்தை பாமர மக்களுக்கு எடுத்துரைத்த மகத்தான மகான் ராமானுஜர், திராவிட தமிழ் வேதமான திவ்யபிரபந்தத்தை மக்களின் மனதில் ஆழப் பதியச் செய்து மதத்தில் பல புரட்சிகளை செய்த மாசற்ற மகான் ராமானுஜர், அவர் பிறந்து ஆயிரமாண்டுகளாகும் இந்த நேரத்தில் இந்த தொடரை ஒளிபரப்புவதில் பெருமை கொள்கிறோம். ராமானுஜர் மதத்தில் புரட்சி செய்த மகான் என்ற தலைப்பில் அவரின் வாழ்க்கை நிகழ்வுகளை தத்ரூபமாக படம் பிடித்து நெடுந் தொடராக நேயர்களுக்கு வழங்க இருக்கிறோம். கருணாநிதியின் கைவண்ணத்தில் இது உருவாவது இன்னும் சிறப்பு என்கிறார் குட்டி பத்மினி



நன்றி: தினமலர்

aanaa
31st March 2015, 06:38 AM
சன் தொலைக் காட்சியில் 30 -03 - 2015 முதல்
ஆதிரா



https://www.youtube.com/watch?v=ZnoEEbtS9pY

aanaa
7th April 2015, 07:29 PM
சன் தொலைக் காட்சியில் 30 -03 - 2015 முதல்

கேளடி கண்மணி



சன் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் மாலை 6 மணிக்கு கேளடி கண்மணி என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. சினி டைம்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த தொடரில் சாதனா, அர்னவ், ராமச்சந்திரன், சுஜாதா, கிருத்திகா, பிரியங்கா, புவி, கீதா, ரவிசங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, முத்துச்செல்வன். வசனம், எழில்வரதன்.


ஒளிப்பதிவு, மீனாட்சிபட்டி பி.காசிநாதன். இசை, கிரண். பாடல், யுகபாரதி. கிரியேட்டிவ் டைரக்டர், மதுமோகன். இயக்கம், ஓ.என்.ரத்தினம். கிரியேட்டிவ் ஹெட், தயாரிப்பு, ‘மெட்டிஒலி’ சித்திக். ‘தாயின் பாசம் தாகம் தீர்க்கும் தண்ணீர் போன்றது. குழந்தையின் சிரிப்பு, வெயில் நேர காற்று போன்றது. காற்றுக்கு காற்றாகவும் தாகம் தீர்க்கும் தண்ணீராகவும், மாயாவுக்கு அன்னையாகவும் இருப்பவள் பவானி. அவளின் ஆசைகளை, மாயா நிறைவேற்றுகிறாளா என்பது கதை’ என்றார் இயக்குனர்.

https://www.youtube.com/watch?v=NjWB3nmMjnE

raagadevan
18th April 2015, 06:31 PM
Manoj (Night) Shyamalan's 10-episode psychological thriller “Wayward Pines”
premieres on FOX tv (USA and Canada) on May 14, 2015.

http://screenrant.com/wayward-pines-tv-show-trailer/

https://www.youtube.com/watch?v=RsQ9Fl0VCkk

https://www.youtube.com/watch?v=2WHLpPvo3ZE#t=11

aanaa
25th April 2015, 06:53 PM
சின்னத்திரையில், பாண்டியராஜன் நடிக்கும் என் தங்கை


மங்கை தொடரை இயக்கிய அரிராஜன் அதன் பிறகு சினிமா இயக்கச் சென்று விட்டார். சில படங்களை இயக்கி விட்டு தற்போது மீண்டும் தொடரை இயக்க வந்துவிட்டார். அவர் இயக்கும் புதிய தொடர் என் தங்கை. இதில் பாண்டியராஜன் கதையின் நாயகனாக நடிக்கிறார்


ஒக்கேனக்கல் பரிசல் துறையில் பரிசல் காண்டிராக்டராக இருக்கும் பாண்டியராஜன் தன் தங்கைகள் 4 பேருக்கும் அரசு உத்யோகம் பார்க்கும் மாப்பிள்ளையாக பார்த்து திருமணம் செய்து கொடுக்க போராடுகிறார். திருமண வயதை தாண்டிய அண்ணனுக்கு ஒரு நல்ல பெண்ணை பார்த்து கட்டிவைக்க தங்கைகள் போராடுகிறார்கள். இந்த இரண்டுக்கும் இடையிலான உணர்ச்சி போராட்டமாக உருவாகிறது என் தங்கை. பெரும்பாலான படப்பிடிப்புகள் ஒக்கேனக்கலை சுற்றி நடந்து வருகிறது. பாண்டியராஜன் தங்கைகளுக்காக மாப்பிள்ளை தேடி பல ஊர்களுக்கு செல்லும்போது அந்தந்த ஊர்களுக்கு கதை செல்லும் விதமாக திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள்.


காமெடியும், செண்டிமெண்டும் கலந்த உருவாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனி வரை மாலை 6.30 மணிக்கு ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகிறது.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_150425122452000000.jpg



நன்றி: தினமலர்

aanaa
25th April 2015, 06:55 PM
விஜய் அவார்ட்ஸ் விழாவில், பிரபுதேவா-ஸ்ருதிஹாசன் நடனம்


ஆண்டுதோறும் நடந்து வரும் மிகப்பெரிய திரைப்பட விருது வழங்கும் விழாவான விஜய் அவார்ட்ஸ் விழா நாளை (ஏப் 25) மாலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.


நாளை நடக்கும் நிகழ்ச்சியில் பிரபுதேவா பல வருடங்களுக்கு பிறகு மேடையில் நடனம் ஆடுகிறார். அவர் "மை லைஃப் மை வே" (என் வாழ்க்கை என் வழி) என்ற தீம் பாடலுக்கு நடனம் அமைத்து ஆடுகிறார். அதனுடன் "சிக்குபுக்கு சிக்குபுக்கு ரெயிலே" பாடலுக்கும், "போக்கிரி பொங்கல்" பாடலுக்கும் நடனம் ஆடுகிறார்.


ஸ்ருதிஹாசன் தன் தந்தை கமலஹாசனின் புகழ்பெற்ற பாடல்களுக்கு நடனம் ஆடுகிறார். லட்சுமி மேனன் திகில், காதல் மற்றும் பேய் பாடல்களுக்கு ஆடுகிறார். இவர்கள் தவிர பிந்து மாதவி, ராய் லட்சுமி, இனியா, நந்திதா உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடனமாட இருக்கிறார்கள். பிரபுதேவா நடனங்கள் தவிர மற்ற நடனங்களுக்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். இந்த ஆண்டு சிறுபட்ஜெட் படங்கள்தான் அதிகமான விருதுகளை பெற இருப்பதாக ஜூரி வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.



நன்றி: தினமலர்

aanaa
25th April 2015, 06:57 PM
திருச்செல்வத்தின் புதிய தொடர் கைராசி குடும்பம்: நாளை முதல் ஒளிபரப்பு


கோலங்கள் தொடர் மூலம் புகழ்பெற்ற திருச்செல்வம் தற்போது இயக்கும் தொடர் கைராசி குடும்பம். இதன் படப்பிடிப்புகள் கடந்த 2 மாதத்துக்கு முன்பே தொடங்கிவிட்டது. பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. ஊர் உலகத்தில் கைராசி குடும்பம் என்று பெயர் எடுத்த ஓரு கூட்டுக் குடும்பம். ஒரே ஒரு பெண்ணின் வருகையால் கைராசி என்ற எடுத்த பெயரை இழந்து விடுகிறது. பின்பு பெரும் போராட்டத்துக்கு பிறகு மீண்டும் தன் கைராசி குடும்ப பெயரை எப்படி தக்க வைத்துக் கொள்கிறது என்கிற கதை


ஜெயா தொலைக்காட்சியில் நாளை (ஏப் 22) தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடர் கோலங்கள் போன்றே பெரும் வரவேற்பை பெறும் என்ற சேனல் தரப்பும், திருச்செல்வமும நம்புகிறார்கள். முதல் கட்டமாக 200 எபிசோட்களுக்கு திட்டமிட்டிருக்கிறார்கள். வரவேற்பை பொறுத்து எபிசோட்கள் அதிகரிக்கப்படும். ப்ரைம் டைமில் தொடங்கும் தொடர் அதனை தக்க வைக்குமா என்பது போக போகத் தெரியும்.



நன்றி: தினமலர்

aanaa
28th April 2015, 06:57 PM
ராஜ் டி.வியில் புதிய டப்பிங் தொடர்


தமிழ் சேனல்கள் டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பகூடாது, அது இங்குள்ள கலைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கிறது என்று சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வரும் சூழ்நிலையில் ராஜ் டி.வி. வருகிற மே 4ந் தேதி முதல் அழகிய லைலா என்ற புதிய டப்பிங் சீரியலை ஒளிபரப்ப இருக்கிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.


பார்வதியும், ருத்ராவும் பால்ய பருவத்திலிருந்தே நண்பர்கள், இருவரும் வளர்ந்து பெரியவர்களானதும் ருத்ரா ராணுவ தளபதியாகிறான். பார்வதி, ருத்ராவை காதலிக்கிறாள். ஆனால் ருத்ரா நாடுதான் முக்கியம் என்று சொல்லி காதல், பாசம், சென்டிமென்ட்டுக்கு அப்பாற்பட்டு வாழ்கிறான். ருத்ராவின் காதலை பெற பார்வதி தொடர்ந்து போராடுவதுதான் சீரியலின் கதை.


சீரியல் ராஜஸ்தானில் படமாக்கப்பட்டுள்ளது.- பிரமாண்ட ராஜஸ்தான் அரண்மனைகள், கொடுமையான பாலைவனம் ஆகியவற்றில் கதை நடக்கிறது. இந்தியில் பிரமாண்டமான முறையில் தயாரான தொடர் இது. இதில் பார்வதியாக பிரபல இந்தி நடிகை சனியா இரானி நடித்துள்ளார். ருத்ராவாக ஆஷிஷ் சர்மா நடித்துள்ளார்.



நன்றி: தினமலர்

aanaa
28th April 2015, 07:02 PM
விஜய் டி.வி விருது விழா: சிறந்த படம் வேலையில்லா பட்டதாரி, நடிகர் தனுஷ்


விஜய் டி.வி. ஆண்டுதோறும் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 2014ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நேற்று (ஏப் 25) நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடந்தது. இதில் வேலையில்லா பட்டதாரிக்கு சிறந்த படம், நடிகர், நடிகை என மூன்று விருதுகள் கிடைத்தது. விருது பட்டியல் வருமாறு:
சிறந்த படம்: வேலையில்லா பட்டதாரி
சிறந்த நடிகர்: தனுஷ் (வேலையில்லா பட்டதாரி)
சிறந்த நடிகை: அமலா பால் (வேலையில்லா பட்டதாரி)
சிறந்த இயக்குனர்: கார்த்திக் சுப்புராஜ் (ஜிகர்தண்டா)
சிறந்த இசை அமைப்பாளர்: அனிருத் (பல படங்கள்)
சிறந்த ஒளிப்பதிவாளர்: கெவ்மிக் (ஜிகர்தண்டா)
சிறந்த பாடகர்: பிரதீப் குமார் (ஆகாயம் தீப்பிடிச்சா)
சிறந்த கலை இயக்குனர்: சாபுசிரில் (லிங்கா)
சிறந்த நடன இயக்குனர்: ஷோபி (ஜீவா)
சிறந்த ஆடை வடிவமைப்பாளர்: பெருமாள், நிரஞ்சனா (காவியத் தலைவன்)
சிறந்த பின்னணி இசை: சந்தோஷ் நாராயணன் (ஜிகர்தண்டா)
சிறப்பு விருது: சதுரங்க வேட்டை
சிறந்த சண்டை இயக்குனர்: சுந்தர் (கோலிசோடா)
சிறந்த துணை நடிகர்: கலையரசன் (மெட்ராஸ்)
சிறந்த துணை நடிகை: சீதா (கோலிசோடா)
சிறந்த புதுமுக நடிகை: மாளவிகா நாயர் (குக்கூ)
சிறந்த திரைக்கதை ஆசிரியர்: விஜய் மில்டன் (கோலி சோடா)
சிறந்த பாடலாசிரியர்: கபிலன் (யான்)
சிறந்த வசனகர்த்தா: பார்த்திபன் (கதை திரைக்கதை வசனம் இயக்கம்
)சிறந்த காமெடியன்: தம்பி ராமையா (கதை திரைக்கதை வசனம் இயக்கம்)
ரசிகர்களின் விருப்ப படம்: கத்தி
ரசிகர்களின் விருப்ப நடிகை: ஹன்சிகா மோத்வானி
ரசிகர்களின் விருப்ப இயக்குனர்: ஏ.ஆர்.முருகதாஸ்
சிறப்பு இயக்குனர் விருது: கே.எஸ்.ரவிகுமார்
சிறப்பு ஜூரி விருது: மெட்ராஸ்
சிறந்த அறிமுக இயக்குனர்: ராஜூ முருகன் (குக்கூ)
சிறந்த குழந்தை நட்சத்திரம்: சாரா (சைவம்)
விழாவில் ஏவிஎம் சரவணனுக்கு சினிமாவுக்கான சிறந்த பங்களிப்பு விருது வழங்கப்பட்டது.
இதனை கமலஹாசன் வழங்கினார்.
பிரபு தேவா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட நடிகர் நடிகைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.



நன்றி: தினமலர்

aanaa
29th April 2015, 06:55 PM
விஜய் பிளஸ்: வருகிறது புதிய சேனல்


விஜய் டி.வியை ஸ்டார் நிறுவனம் வாங்கிய பிறகு பல புதிய நிகழ்ச்சிகள், குறிப்பாக தொடர்கள், லைவ் ஷோக்கள் மூலம் முதல் இடத்தை நோக்கி முன்னேறியிருக்கிறது. புதிய படங்களை திரையிடுவதிலும் மற்ற சேனல்களை முந்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் விஜய் டி.வியிலிருந்து, விஜய் பிளஸ் என்ற புதிய சேனல் விரைவில் வர இருக்கிறது.


புதிய சேனலின் பணிகள் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் பிளஸ் ஒளிபரப்பை துவங்குவதாக இருந்தது. ஆனால் புதிய சேனலுக்கு லைசென்ஸ் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படுவதால் ஒளிபரப்பும் தள்ளிப்போகிறது. வருகிற தீபாவளிக்கு முன்னதாக விஜய் பிளஸ்சை கொண்டு வர நிர்வாகம் பணிகளை முடுக்கி விட்டுள்ளது


"விஜய் பிளஸ் முழுக்க முழுக்க பொழுபோக்கை மையமாக கொண்டிருக்கும், குறிப்பாக இளைஞர்களை கவரும் அம்சங்கள் நிறைய இருக்கும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாகும் முக்கிய விளையாட்டு போட்டிகள் தமிழ் வர்ணனையுடன் விஜய் பிளஸ்சில் இடம் பெறும். உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை விஜய் டி.வி நேரடி ஒளிபரப்பு செய்தபோது அதன் வழக்கமான நிகழ்ச்சிகள் வெகுவாக பாதிக்கப்பட்டது. ஸ்டார் பிளஸ் தொடங்கப்பட்டால் இதுபோன்ற நேரடி நிகழ்ச்சிகள் அதில் ஒளிபரப்பாகும், அடுத்த ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தையும் ஸ்டார் குரூப் வாங்க இருக்கிறது. அப்போது விஜய் பிளஸ்சில் அது நேரடியாக ஒளிபரப்பும். என்கிறது விஜய் பிளஸ் வட்டாரம்.



நன்றி: தினமலர்

aanaa
7th May 2015, 07:29 PM
கைராசி குடும்பத்திற்கு வில்லி ஸ்ரீவித்யா


ஜெயா டி.வியில் ஒளிபரப்பாகி வரும் கைராசி குடும்பம் தொடரை திருச்செல்வம் இயக்கி வருகிறார். நிறைய நட்சத்திரங்கள் தொடரில் இருந்தாலும் தனது வில்லத்தனமான கேரக்டரில் நடித்து பெயரை தட்டிக் கொண்டிருக்கிறார் ஸ்ரீவித்யா.


கடைசியாக நடித்த சித்திரம் பேசுதடி சீரியலிலும் வில்லியாகத்தான் நடித்திருந்தார். இதிலும் வில்லி கேரக்டர்தான். தென்றல், பொன்னூஞ்சல் போன்று கைராசி குடும்பமும் ஸ்ரீவித்யாவின் பெயர் சொல்லும் குடும்பமாக இருக்கும் என்று நம்புகிறார்.


"கூட்டுக் குடும்பங்களில் அன்றன்றைய மனநிலையே வில்லத்தனமாக அமையும். அது மாதிரி அடிக்கடி வில்லத்தனம் செய்யும் கேரக்டர் என்னுடையது. எனது பார்வையில் சரி என்று படுகிற விஷயங்கள் மற்றவர்களுக்கு வில்லத்தனமாக தெரியும். ஆடியன்சிடம் திட்டு வாங்கினாலும் அவர்கள் மனதில் பதிவது வில்லி வேடங்கள்தான்" என்கிறார் ஸ்ரீவித்யா.



நன்றி: தினமலர்

aanaa
7th May 2015, 07:30 PM
கேரள தேசத்திலிருந்து தமிழ் சினிமாவின் ஹீரோயினாக வந்தவர் ஸ்ருதிராஜ், ராமகிருஷ்ணா, ஜெர்ரி உள்பட பல படங்களில் நடித்தார். ஆனால் ஹீரோயினாக அவரால் ஜெயிக்க முடியவில்லை. அதனால் கேரளாவுக்கே திரும்பிச் சென்று விடாமல் சின்னத்திரை நடிகையானர். இன்று சின்னத்திரை நடிகைகளில் முதல் 5 இடத்துக்குள் இருக்கிறார் ஸ்ருதி.


தென்றல் சீரியல்தான் ஸ்ருதிக்கு பெரிய பெயரை பெற்றுக் கொடுத்தது. 5 ஆண்டுகள் தென்றல் தொடரில் நடித்தார். அது முடிந்ததும் கேரளாவிலேயே செட்டிலாகி மலையாள சீரியல்களில் நடிப்பது என்றுதான் முடிவு செய்திருந்தார். ஆனால் தென்றல் படப்பிடிப்புகள் முடிந்த மறு மாதமே அவருக்கு அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் தொடரில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதனால் தன் முடிவை மாற்றிக் கொண்டுவிட்டார்.


அன்னக்கொடி தொடரில் ஐந்து பெண்களில் மூத்த பெண் கவுரியாக நடித்து வருகிறார். இவரது கேரக்டருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனால் உற்சாகமாக நடித்து வருகிறார். "கூட்டுக் குடும்பத்தின் கதை. படப்பிடிப்பு தளமும் கூட்டுக் குடும்ப கலகலப்புடன் இருக்கிறது. தென்றல் தொடருக்கு பிறகு சொந்தங்கள் விட்டுபோனமாதிரி கவலையில் இருந்தேன். ஆனால் அன்னக்கொடி என் கவலையை போக்கி விட்டாள்" என்கிறார் ஸ்ருதி.



நன்றி: தினமலர்

aanaa
12th May 2015, 05:02 AM
சன் தொலைக் காட்சியில் 11 -05 - 2015 முதல்
குலதெய்வம்
https://www.youtube.com/watch?v=h8ZhrCcvcEw



http://www.dailymotion.com/video/k4cwW23afahHnZb7oI1



https://www.youtube.com/watch?v=ZLEru-xDGnw

aanaa
17th May 2015, 05:30 AM
படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்தவர் நடிகையானார்


திருமுருகன் தற்போது குலதெய்வம் என்ற தொடரை இயக்கி வருகிறார். இதில் திருமுருகன் இதற்கு முன் இயக்கிய நாதஸ்வரம் தொடரில் நடித்த பலர் நடிக்கிறார்கள். சில புதுமுகங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். அவர்களில் முக்கியமானவர் ஐஸ்வர்யா. இவர் நாதஸ்வரம் ஷூட்டிங் பார்க்க வந்து அதன் மூலம் நடிகையானவர்.


நாதஸ்வரம் தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்த கீதாஞ்சலி ஐஸ்வர்யாவின் அக்கா. அவர் நடிப்பதை சனி, ஞாயிறு பள்ளி விடுமுறையில் பார்க்க வந்துவிடுவார் ஐஸ்வர்யா. அப்போது யூனிட்டில் உள்ள எல்லோருக்குமே அறிமுகமானார். ஐஸ்வர்யாவின் சுறுசுறுப்பும், அழகும் பிடித்துப்போன இயக்குனர் திருமுருகன் அடுத்த தொடரில் உன்னை நடிக்க வைக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதன்படி குலதெய்வம் தொடரில் மவுலியின் பேத்தியாக நடிக்கிறார். கதையில் 8ம் வகுப்பு மாணவியாக நடிக்கும் ஐஸ்வர்யா நிஜத்தில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். படித்துக் கொண்டே தொடர்ந்து நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார்
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_150516123545000000.jpg

நன்றி: தினமலர்

aanaa
17th May 2015, 05:33 AM
சினிமா வாய்ப்புகளை மறுக்கும் வந்திதா மோகன்.


புதுயுகம் தொலைக்காட்சியில் நடிகை அபிராமி தொகுத்து வழங்கி வந்த ஸ்டார் ஜங்ஷன் நிகழ்ச்சியை இப்போது தொகுத்து வழங்கிக் கொண்டிருப்பவர் வந்திதா மோகன். முறைப்படி பரதநாட்டியம் கற்றுள்ள வந்திதா, நடன பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். அடிப்படையில் ஒரு பல் மருத்துவர் என்பதால் அந்த பணியையும் தனியாக செய்து வருகிறார்


ஸ்டார் ஜங்ஷன் நிகழ்ச்சியில் சினிமா நட்சத்திரங்கள், இயக்குனர்கள் பங்கேற்பதால் நிகழ்ச்சி முடிந்து திரும்பும்போது அனைவருமே "நீங்க அழகா இருக்கீங்க நடிக்கலாமே" என்று சொல்ல ஆரம்பித்தனர். கவுதமி இவரது நிகழ்ச்சியை பார்த்து விட்டு பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடிக்க அழைத்தபோது அன்பாக மறுத்துவிட்டார். ஈராஸ் நிறுவனம் பொன்னியின் செல்வன் நாடகத்தை தயாரித்து அதனை யூ டியூப்பில் வெளியிடும் புராஜக்டில் முக்கிய கேரக்டரில் நடிக்க வந்திதாவுக்கு அழைப்பு விடுத்தது அதையும் தவிர்த்து விட்டார்
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_150515131112000000.jpg
வந்திதாவின் ஆசையெல்லாம் நடனத்திலும், மருத்துவத்திலும் சாதிக்க வேண்டும் என்பதுதான். அடுத்ததாக டூரிஸம் பெஸ்டிவெல் நிகழ்ச்சிக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடு முழுக்க நடைபெற இருக்கும் டான்ஸ் பெஸ்டிவெல் இது. ஸ்டார் ஜங்ஷன் நிகழ்ச்சியை முதலில் நடத்திய அபிராமி சினிமாவில் நடிப்பதற்காக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். வந்திதா சினிமா வாய்ப்புகள் வந்தும் மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி: தினமலர்

aanaa
8th June 2015, 05:27 AM
திண்டுக்கல் சரவணனின் பழைய சோறு Vs பர்ஹர்!


கடந்த இரண்டரை ஆண்டுகளாக டாடி எனக்கு ஒரு டவுட்டு என்ற நிகழ்ச்சியில் டாடியாக திண்டுக்கல் சரவணனும், மகனாக செந்திலும் நடித்து வருகின்றனர். டாடி பழமொழி அல்லது தத்துவம் சொல்வது. அதைக்கேட்கும் மகன், அதை கலாய்ப்பதோடு, சந்தேகம் கேட்பது போன்ற இந்நிகழ்ச்சி டிவி நேயர்களிடையே பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது. இருப்பினும் இந்த நிகழ்ச்சி இந்த மாதத்தோடு நிறைவு பெறுகிறதாம்.


அதனால் ஜூலை மாதத்தில் இருந்து, பழைய சோறு Vs பர்ஹர் என்றொரு புதிய நிகழ்ச்சியை வழங்குகிறார் திண்டுக்கல் சரவணன். இந்த நிகழ்ச்சியில் டாடி எனக்கு ஒரு டவுட்டு நிகழ்ச்சியில் அவருடன் இணைந்து நடித்த செந்திலுக்கு பதிலாக வினோத்பாபு என்றொரு டான்சர் இணைந்து கலக்கப்போகிறாராம்.


இந்த புதிய நிகழ்ச்சியைப்பற்றி திண்டுக்கல் சரவணன் கூறும்போது, இதில் கிராமம்-நகரத்து பழக்க வழக்கங்களை ஒப்பிடுவது. என்னதான் நாகரீகம் மாறிவிட்டபோதிலும் இப்போது நமது பழைய வாழ்க்கைமுறைகளை நவீன காலத்து மக்கள் எப்படி பயன்படுத்தி வருகிறார்கள் என்பதை காமெடி கலந்து சொல்லப்போகிறேன்.
மேலும், டாடி எனக்கு ஒரு டவுட்டு நிகழ்ச்சியில் டயலாக்காக விசயங்களை கூறினேன். ஆனால் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு விசயத்தையும் விசுவலாகவே நடித்துக் காட்டப்போகிறேன். அதனால் இது இன்னும் புதுமையாக இருக்கும். அதோடு, இன்றைக்கு கிராமத்தில் உள்ள ஒருவர் சைக்கிளில் அலுவலகம் சென்று வருகிறேன் என்று சொன்னால், சைக்கிளில்தான் போய் வருகிறீர்களா? என்று கேட்பார்கள்.


ஆனால் இன்றைக்கு நகரத்தில் வாழ்பவர்கள், வீட்டில் இருந்து காரில் போய் பீச்சில் இறங்கி அங்கே ஒரு சைக்கிளை எடுத்து ஓட்டுகிறார்கள். அந்த சைக்கிள் விலையே 5 ஆயிரம்தான். ஆனால் இங்கே மாத சைக்கிள் வாடகை 12 ஆயிரம் கொடுக்கிறார்கள். இதுபோன்ற இன்றைய வாழ்க்கை முறைகளை காமெடியாக சொல்லப்போகிறேன். அதேசமயம் இவை சிந்திக்கும்படியாகவும் இருக்கும் என்கிறார் திண்டுக்கல் சரவணன்.



நன்றி: தினமலர்

aanaa
8th June 2015, 05:32 AM
7 ஊர்களில் நடக்கும் திகில் கதை ஏழாம் உயிர்


சரவணன் மீனாட்சி தொடரின் முதல் பகுதி, காஞ்சனா, காத்து கருப்பு தொடர்களை இயக்கிய அழகர் தற்போது ஏழாம் உயிர் என்ற தொடரை இயக்கி வருகிறார். இது வேந்தர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. திரைப்படங்களில் வரும் பேய், திகில் படம் மாதிரி இதுவும் மர்மம் கலந்த ஒரு தொடராக ஒளிபரப்பாகி வருகிறது.


பாசமலர் ஹீரோயின் லட்சுமி, வில்லி நடிகை சூசன், ரவி, ஸ்டாலின் உள்பட பலர் நடிக்கிறார்கள். 7 ஊர்களில் வாழும் 7 பெண்களுக்கு ஒரு தீய சக்தியால் ஆபத்து வருகிறது. அந்த தீய சக்தியை அழித்து நல்ல சக்தி அவர்களை எப்படி காப்பாற்றுகிறது என்பதுதான் கதை. தென்காசி, நாகர்கோவில், கன்னியாகுமரி, காசி உள்ளிட்ட 7 ஊர்களில் 7 பெண்களின் வாழ்க்கை கதை படமாக்கப்பட்டு வருகிறது. தற்போது தென்மாவட்ட ஊர்களில் குறிப்பாக குற்றாலத்தைச் சுற்றி படப்பிடிப்பு நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட 7 ஊர்களும் கதையில் ஒரு கேரக்டராக வருவதால் அந்த ஊரைப் பற்றிய பல சிறப்பு தகவல்களும் காட்சி வழியாக வெளிப்படுத்தப்படுவது இதன் சிறப்பு அம்சமாகும்.





நன்றி: தினமலர்

aanaa
18th June 2015, 09:24 PM
டிஷ்கவரி சேனலில் யோகாவின் கதை -

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_150617105133000000.jpg


பாரத பிரதமர் நரேந்திர மோடி யோகாவின் பெருமையை பரப்பும் முயற்சியில் இருக்கிறார். அதையொட்டி வெளிநாட்டு சேனலான டிஷ்கவரி சேனல், ";ஸ்டோரி ஆஃப் யோகா" என்ற நிகழ்ச்சியை தயாரித்து ஒளிபரப்புகிறது. இமயமலையில் தொடங்கி கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் முடிகிறது இந்த தொடர். இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற யோகா பயிற்சி நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், ஆசிரமங்களில் படமாக்கப்பட்டுள்ளது. பிரபல யோக முனிவர்களின் வாழ்க்கை வரலாறும், யோகா மூலம் அவர்கள் இறைவனை தரிசித்த கதையையும் காட்டுகிறார்கள்.


யோகாகுரு ராம்தேவ், ஆர்ட் ஆப் லிவ்விங் ரவிஷங்கர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் யோகா பற்றி பேசுவதோடு செயல் விளக்கமும் அளிக்கிறார்கள். பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தின் யோகா மரபுகள் காட்டப்படுகிறது. இந்தியாவில் யோகா உருவான விதம், வளர்ந்த விதம் தற்போதுள்ள நிலவரம் போன்றவவை நிகழ்ச்சியில் முக்கியத்துவம் பெறுகிறது. யோகாவின் மிக நுணுக்கமான விஷயங்கள் கற்றுத் தரப்படுகிறது.


யோகாவை கடைபிடிக்கும் பாலிவுட், கோலிவுட் நட்சத்திரங்கள் யோகா பற்றி பேசுவதோடு செய்தும் காட்டுகிறார்கள். தமிழ், இந்தி, ஆங்கிலம், பெங்காலி மொழிகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. டிஷ்கவரி தமிழில் வருகிற 21ந் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.



நன்றி: தினமலர்

aanaa
18th June 2015, 09:32 PM
இராமானுஜர் சீரியல் யூனிட்டை ஆச்சர்யப்பட வைக்கும் கருணாநிதி!"


1947ல் ராஜகுமாரி என்ற படத்திற்கு வசனம் எழுதத் தொடங்கியவர் கருணாநிதி. அதைத் தொடர்ந்து மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, பராசக்தி, மனோகரா, பாசப்பறவைகள், மண்ணின் மைந்தன், நியாய தராசு, பெண் சிங்கம், பொன்னர் சங்கர் உள்பட பல படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார்.


அப்படி அவர் எழுதிய வசனங்கள் காலத்தால் அழியாமல் இன்றுவரை ஒலித்துக்கொண்டிருக்கிறது. அதோடு பல படங்களில் பாடல்களும் எழுதியிருக்கிறார் கருணாநிதி. இந்த நிலையில், சமீபகாலமாக சின்னத்திரையிலும் அவரது பேனா இடம் பெற்று வருகிறது. அந்த வகையில், தென்பாண்டி சிங்கம் உள்பட பல சீரியல்களுக்கு ஏற்கனவே கதை வசனம் எழுதியுள்ள கருணாநிதி, தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இராமானுஜர், ரோமாபுரி பாண்டியன் ஆகிய தொடர்களுக்கும் கதை வசனம் எழுதி வருகிறார்.


இதில் இராமானுஜர் என்ற இந்து மார்க்கத்தின் தொடருக்கு முதன்முதலாக தனது பேனாவை பயன்படுத்தி வருகிறார் கருணாநிதி. குறிப்பாக இந்த சீரியலின் கதை வசனங்கள் அவரது ஆலோசனையின் பேரில்தான் எழுதப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்த பிறகும், கடைசியில் மொத்த ஸ்கிரிப்டையும் படிக்கும் கருணாநிதி, ராமானுஜர் பற்றிய தான் அறிந்த பல விசயங்களையும் இணைத்து அனுப்புகிறாராம்.


92 வயதிலும் கருணாநிதிக்கு இருக்கிற ஞாபகசக்தி மற்றும் எழுத்து மீது கொண்ட ஆர்வத்தினை இராமானுஜர் சீரியல் யூனிட்டில் உள்ளவர்கள் ஆச்சர்யத்துடன் பேசிக்கொள்கிறார்கள்.



நன்றி: தினமலர்

aanaa
27th June 2015, 07:09 PM
மவுலிவாக்கம் கட்டிட விபத்து பின்னணியில் உருவாகும் எங்க வீட்டுப் பெண்


கடந்த ஆண்டு மவுலிவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட பலமாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானதில் ஏராளமானோர் உயிரிழந்தனர், பலர் வீடுகளை இழந்தனர். இந்த சம்பவத்தை பின்னணியாக கொண்டு உருவாகி ஒளிபரப்பாகும் தொடர் எங்க வீட்டுப்பெண். வாழ்க்கையை கனவுகளோடு எதிர் நோக்கிக் கொண்டிருப்பவர் சுமித்ரா. அவருக்கு திருமணம் நிச்சயமாகியிருக்கிறது. தந்தை கலெக்டர். திடீரென அவர் கட்டுப்பாட்டில் உள்ள அபார்ட்மெண்ட் கட்டிவரும் ஒரு பலமாடி கட்டிடம் இடிந்து விழுகிறது. கலெக்டர் பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறைக்குச் செல்கிறார். சுமித்ராவின் திருமணம் நின்று போகிறது. நன்றாக இருந்த குடும்பம் ஒரே நாளில் நடுத்தெருவிற்கு வருகிறது.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_150624123536000000.jpg
அதன் பிறகு சுமித்ரா போராடி தன் குடும்பத்தையும், தந்தையையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. சுமித்ராவாக ஹரிசித்ரா நடிக்கிறார் அவரது தந்தை கலெக்டராக ஒய்.ஜி.மகேந்திரன் நடிக்கிறார். தாயாக யுவஸ்ரீ நடிக்கிறார். இவர்கள் தவிர சரத்பாபு, கவிதாலயா கிருஷ்ணன், பாத்திமா பாபு, ராம்மோகன், ஜூனியர் பாலையா ஆகியோரும் நடிக்கிறார்கள். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.



நன்றி: தினமலர்

aanaa
1st July 2015, 08:27 PM
மகாபாரதம் தொடருக்காக பிரமாண்ட குருஷேத்திர போர்




சென்னை: சன் டி.வி.யில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒளிப்பரப்பாகும் தொடர் ‘மகாபாரதம்’. தமிழ் நடிகர்களைக் கொண்டு தமிழில் சினிவிஷ்டாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் பிரமாண்ட தொடர் பற்றி இயக்குனர் ‘செங்கோட்டை’ சி.வி.சசிகுமார் கூறியதாவது:


தமிழில், தமிழுக்காக மட்டும் தயாரிக்கப்பட்ட எந்தவொரு சரித்திர தொடரும் 50 எபிசோடுகளை கடந்தது இல்லை. நாங்கள் கடந்த மூன்று வருடங்களாக இத்தொடரை ஒளிபரப்பாகி வருகிறோம். 120 எபிசோடுகளை கடந்துள்ளோம். தமிழுக்காகவே தயாரிக்கப்பட்ட இந்த தொடரில் மற்றவர்கள் சொல்லாத நுட்பமான கருத்துக்களைச் சொல்கிறோம். பிரமாண்டமும், கருத்தும் ஒருசேர இருப்பதே இதன் சிறப்பு. நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய நூல்களில் இருந்து தேர்ந்தெடுத்து, அவற்றைத் தொகுத்து வழங்கி வருகிறோம். கற்பனையான பிரம்மாண்டத்தை விட உண்மை யான கருத்துக்கே, இந்த மகாபாரதம் முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கிறது.


நாளை ஒளிபரப்பாகும் தொடரில், பாண்டவர்கள் சார்பாக கிருஷ்ணன் சமாதான தூது வந்து, துரியோதனின் செயல் கண்டு வருந்தியது, தன் சமயோஜித புத்தியால் விதுரனின் விஷ்ணு தனுசை உடைக்கச் செய்தது, தான் யார் என்று விஸ்வரூபம் காட்டி குருஷேத்திர போர் பிரகடனம் செய்ததும் போன்ற முக்கியமான நிகழ்வுகள் ஒளிபரப்பாக உள்ளன. அதைத் தொடர்ந்து குருஷேத்திர போர் பிரமாண்டமாக ஒளிபரப்பாக உள்ளது. அதை எட்டு கேமரா படமாக்குகிறது. 50க்கும் மேற்பட்ட நடிகர்கள், 40க்கு மேற்பட்ட தேர்கள், 100 குதிரைகள் என பெரிய அளவில் எடுக்க இருக்கிறோம். இது சின்னத் திரையில் புதிய வரலாறு. இவ்வாறு கூறினார்.




நன்றி: தினகரன்

aanaa
12th July 2015, 06:32 AM
கோவை சரளாவின் செல்லமே செல்லம் பாகம் 2 தயாராகிறது -


காமெடி மற்றும் குணசித்திர நடிகை கோவை சரளா செல்லமே செல்லம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இது இமான் அண்ணாச்சி நடத்தும் குட்டி சுட்டி நிகழ்ச்சி போன்றது அதில் குழந்தைகள் மட்டும் கலந்து கொள்வார்கள். இதில் குழந்தைகளும் பெற்றோர்களும் கலந்து கொள்வார்கள். கோவை சரளா காமெடியாகவும், ஜாலியாகவும் நிகழ்ச்சியை நடத்துவார்


இந்த நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து செல்லமே செல்லம் நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியை தயாரிக்கிறது சரிகம நிறுவனம். இதன் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடந்து வருகிறது. "சரிகம நல்ல தரமான நிகழ்ச்சிகளை மட்டுமே ரசிகர்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில் செல்லமே செல்லம் குழந்தைகளையும் பெரியவர்களையும் ஒரு சேர கவர்ந்துள்ள நிகழ்ச்சி. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் இரண்டாம் பகுதியை தயாரிக்கிறோம்" என்றார் சரிகம நிறுவனத்தின் துணை தலைவர் பி.ஆர்.விஜயலட்சுமி.



நன்றி: தினமலர்

aanaa
12th July 2015, 06:35 AM
பூவிழி வாசலிலே: குழந்தையை மையமாக கொண்ட புதிய தொடர் - New serial in Raj tv


பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழந்தையை மையமாக கொண்டு பூவிழி வாசலிலே என்ற திரைப்படம் வந்தது. அதே போன்று தற்போது ராஜ் டி.வியில் வருகிற 13ந் தேதி முதல் பூவிழி வாசலிலே என்ற தொடர் ஒளிபரப்பாகிறது.


தேன்மொழி என்ற குழந்தையை சுற்றி நடக்கிற கதை. வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த தேன்மொழியின் பாட்டி திடீரென இறந்த விடுகிறார். அவரது இறுதி சடங்கு நிறைவேற்ற பணம் இல்லாமல் தவிக்கும் தந்தை உள்ளூர் ஜமீன்தாரிடம் மகள் தேன்மொழியை அடமானமாக வைத்து பணம் வாங்கி இறுதி சடங்கை நிறைவேற்றுகிறார். சில வருடங்களில் கடனை அடைக்கமுடியாமல் தந்தை இறந்து போகிறார். இதனால் தேன்மொழியை தாயிடமிருந்து பிரித்து தன்னுடன் வைத்துக் கொள்கிறார் ஜமீன்தார்.


ஒரு கட்டத்தில் மனம் மாறும் ஜமீன்தார், தேன்மொழியை அவள் தாயிடம் ஒப்படைக்கிறார். ஈஸ்வரன் என்கிற நல்ல மனிதர் தேன்மொழியை படிக்க வைக்க நினைக்கிறார். ஒரு கொலை வழக்கில் அவரும் ஜெயிலுக்கு போய்விடுகிறார். அதன் பிறகும் தேன்மொழி வாழ்க்கையில் எப்படி ஜெயிக்கிறாள் என்பதுதான் கதை. திங்கள் முதல் சனி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_150708150220000000.jpg

நன்றி: தினமலர்

aanaa
12th July 2015, 06:40 AM
ரேஸில் முந்தும் லட்சுமி


பிரபல திரைப்பட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தயாரித்து ஒளிபரப்பி வரும் லட்சுமி வந்தாச்சு சீரியல் மற்ற சீரியல்களை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறது. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் முன்னேறுகிறது. வாணி போஜன், அனு பிரகாஷ், நாதன், ஹரிப்ரியா நடிக்கிறார்கள்.


>கூட்டுக் குடும்பமாக இருக்கும் நாட்டாமை நாச்சிமுத்து குடும்பத்துக்கு மூத்த மருமகளாக வருகிறாள் தேன்மோழி. தன் கணவன் தங்கவேலுவை கைக்குள் போட்டுக் கொண்டு குடும்பத்து நிர்வாகத்தை தன் கைக்குள் கொண்டு வர திட்டமிடுகிறாள். ஆரம்பத்தில் மருமகளின் செயலால் வெறுப்படையும் நாச்சிமுத்து பின்பு அவள் செய்வதுதான் சரி என்று வழிக்கு வருகிறார். இதைப் பயன்படுத்தி நாச்சிமுத்துவின் இரண்டாவது மகன் வெற்றிவேலுவை வீட்டைவிட்டு வெளியேற்ற திட்டமிடுகிறாள். இந்த நிலையில் வீட்டுக்கு இரண்டாவது மருகளாக வருகிறார் லட்சுமி. தேன்மொழியின் திட்டங்களை முறியடித்து லட்சுமி குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறாள் என்பது கதை. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_150629150206000000.jpg

நன்றி: தினமலர்

aanaa
18th July 2015, 06:39 AM
ஆயிரம் எபிஷோடுடன் சரவணன் மீனாட்சி தொடர் நிறைவு பெறுகிறது!


கடந்த 2011 நவம்பர் 7-ந்தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் சரவணன் மீனாட்சி. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் இந்த தொடரின் சீசன் 1-ல் மிர்ச்சி செந்தில்-ஸ்ரீஜா ஜோடி சேர்ந்து நடித்தனர். அவர்களுக்கிடையே நடிப்பில் நல்லதொரு கெமிஸ்ட்ரி உருவாகி அந்த தொடர் நேயர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்று வந்தது. மதுரையை கதைக்களமாகக் கொண்ட இந்த தொடரில் மதுரையைச் சேர்ந்த நடிகர் நடிகைகளும் சிலர் நடித்தனர். மேலும், அந்த தொடரில் உருகி உருகி இயல்பாக ரொமான்ஸ் செய்து நடித்த மிர்ச்சி செந்தில்-ஸ்ரீஜா ஜோடிக்கிடையே நிஜத்திலும் காதல் உருவானதை அடுத்து அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இப்போதும் செந்தில் நடித்தபோதும், ஸ்ரீஜா நடிப்பை நிறுத்தி விட முழுநேர இல்லத்தரசியாகி விட்டார்.


இந்நிலையில், அடுத்தபடியாக அந்த தொடரின் சீசன் 2ல் புதிய ஜோடிகளாக ரசித்ரா-கவின் களமிறங்கினர். அவர்களது ரொமான்சையும் நேயர்கள் ரசித்தபோதும், பெரிய அளவில் இல்லை. அதனால் தற்போது 950 எபிசோடுகளை கடந்து விட்ட சரவணன் மீனாட்சி தொடரை 1000 எபிசோடுடன் முடித்துக் கொள்ளப்போகிறார்களாம். அதன் இறுதிகட்ட படப்பிடிப்புகள் இப்போது நடந்து வரும நிலையில், இன்னும் 2 மாதங்கள் மட்டுமே சரவணன் மீனாட்சியை விஜய் டிவியில் கண்டுகளிக்க முடியும் என்கிறார்கள.


>அதனால் அந்த தொடரில் வருடக்கணக்கில் நடித்து வந்த நடிகர் நடிகைகள் வேறு சீரியல்களில் நடிப்பதற்கு வாய்ப்புத்தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.



நன்றி: தினமலர்

aanaa
30th July 2015, 11:18 PM
மை லவ் பிரஃம் அனதர் ஸ்டார்: ஜூலை 30 முதல் புதிய கொரியன் தொடர்


புதுயுகம் தொலைக்காட்சி கே வரிசையில் உலக புகழ்பெற்ற கொரியன் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வரிசையில் அடுத்து வருகிறது மை லப் ப்ஃரம் அனதர் ஸ்டார் என்ற தொடர் வருகிற 30ந் தேதி முதல் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த தொடரை ஜான் டீ யா இயக்கி உள்ளார். கிம் சோ ஹயூன், ஜுன் ஜி ஹியுன் நடித்துள்ளனர். 21 எபிசோட்களை கொண்ட இந்த தொடர் உலக புகழ்பெற்றதாகும்.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_150726142846000000.jpg
வேற்று கிரகத்தில் இருந்து ஒரு இளைஞன் பூமியை ஆராய்ச்சி செய்வதற்காக வருகிறான். வந்த இடத்தில் ஒரு பெண்ணை ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறான். அதன் பிறகு 400 வருடங்கள் பூமியில் தங்கி ஆராய்ச்சி செய்துவிட்டு கிளம்பும்போது, தான் வந்தபோது காப்பாற்றிய பெண்ணின் தோற்றத்தில் ஒரு பெண்ணை சந்திக்கிறான். அந்த பெண்ணை காதலிக்கிறான். அவள் ஒரு பிரபலமான நடிகை. அவர்கள் காதல் நிறைவேறியதா? இளைஞன் பூமியிலிருந்து திரும்பிச் சென்றானா என்பது கதை.





நன்றி: தினமலர்

aanaa
8th August 2015, 12:34 AM
அபூர்வ ராகங்கள் Aug 10, 2015
அபூர்வ ராகங்கள் தொடரில் தென்றல் துளசி!


தென்றல் சீரியல் மூலம் பிரபலமானவர் ஸ்ருதிராஜ்.
அந்த தொடரில் அவர் நடித்த துளசி என்கிற கதாபாத்திரம் அவருக்கு பெண்கள் மத்தியில் பெரிய பெயரை வாங்கிக்கொடுத்தது. அதையடுத்து ஆபீஸ் என்ற தொடரில் நடித்த ராஜீ கேரக்டரும் ஸ்ருதிராஜை பேச வைத்தது. இப்போது அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் என்ற தொடரில் நடித்துக்கொண்டிருக்கிறார்.


இதையடுத்து, அபூர்வ ராகங்கள் என்றொரு தொடரில் டைட்டில் வேடத்தில் நடிக்கிறார் ஸ்ருதிராஜ். ஒரு பிரபல சேனலில் ஒளிபரப்பாக இருக்கும் அந்த தொடரின் படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த தொடரில் இதற்கு முன்பு நடித்த சீரியல்களை விடவும் வெயிட்டான வேடத்தில் நடிக்கிறாராம் அவர்.


குறிப்பாக, குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சாதுர்யமாக சமாளிப்பது மட்டுமின்றி, ஒரு போர்க்குணம் கொண்ட பெண்ணாகவும் நடிக்கிறாராம் ஸ்ருதிராஜ். அதேசமயம், அவருக்கென்று பெண் ரசிகைகள் அதிகமாக இருப்பதால், சென்டிமென்ட் காட்சிகளும் இந்த தொடரில் அதிகமாக உள்ளதாம்.
அதனால், இந்த அபூர்வ ராகங்கள் தனக்கு சீரியல் உலகில் முன்னணி நடிகை என்கிற அங்கீகாரத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறார் ஸ்ருதிராஜ்.



நன்றி: தினமலர்

aanaa
8th August 2015, 12:38 AM
விஜய் சித்திரத்தில் ஒளிபரப்பாக இருக்கும் 7 கதைகள்


விஜய் தொலைக்காட்சி, விஜய் சித்திரம் என்ற நிகழ்ச்சியை நாளை முதல் ஒளிபரப்புகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 3 மணிக்கு இது ஒளிபரப்பாகும். பிரபல எழுத்தாளர்களின் சிறுகதை அல்லது நாவலை ஒரு திரைப்படத்தின் தரத்தில் படம்பிடித்து இரண்டு மணிநேர திரைப்படமாகவே ஒளிபரப்புகிறார்கள். நாளை முதல் அடுத்த 7 வாரங்களில் ஒளிபரப்பாக இருக்கும் கதைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


அது வருமாறு:
1. .பாயம்மா: மதத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட ஒரு முஸ்லிம் பெண், தன் மகள் இன்னொரு மதத்தவரை காதலித்து அவரைத்தான் திருமணம் செய்வேன் என்று பிடிவாதமாக இருக்கும்போது அவர் என்ன செய்கிறார் என்கிற கதை.


2. இரண்டாம் ஆதாம்: ஒரு நடுத்தர வயது பெண் தனது கணவரையும் இந்த சமூகத்தையும் எப்படி எதிர்கொள்கிறாள் என்கிற கதை.


3. மாரி: அநாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்த ஒரு இளம் பெண் இந்த சமூகத்தை எப்படி எதிர்கொண்டு ஜெயிக்கிறாள் என்கிற கதை.


4. தவளைக் கண்ணன்: பள்ளி பருவத்திலிருந்தே நண்பர்களாக இருப்பவர்களில் ஒருவன் அரசியல்வாதியாகிறான். இன்னொருவன் அவனது செயலாளர் ஆகிறான். அதன் பிறகு அவர்கள் நட்பு எப்படி இருக்கிறது என்கிற கதை.


5. கணேஷ் வசந்த்: எழுத்தாளர் சுஜாதாவின் கதை மாந்தர்களான கணேசும், வசந்தும் ஒரு முக்கிய வழக்கில் எப்படி துப்பறிகிறார்கள் என்கிற கதை.


6. அந்த ஒரு நிமிடம்: இதுவும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை.


7. பஞ்சாபகேசன் தேவசகாயம்: ஊட்டியில் உள்ள காப்பி எஸ்டேட்டில் நடக்கும் ஒரு கொலையை துப்பறியும் கதை



நன்றி: தினமலர்

aanaa
5th October 2015, 10:57 PM
ஒரே தொடரில் இரண்டு கதைகள்
பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிழல் தொடர் மற்ற தனியார் தொலைக்காட்சி தொடர்களுக்கு நிகரான வரவேற்புடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கே.ஏ.ராஜபாண்டியன் எழுதிய கதையை சையத் ரஃபிக் பாஷா இயக்குகிறார்.


முதியவர்கள், குழந்தைகள் அடைக்கலமாகி இருக்கும் அன்பு இல்லம் தான் கதை களம். இங்கு நடக்கும் சுவாரஸ்யமான, நெகிழ்ச்சியான, திடுக்கிடும் சம்பவங்களை கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. காதல் கணவனால் ஏமாற்றப்பட்ட கலா தன் குழந்தையுடன் அன்பு இல்லத்தில் போராட்டம் நிறைந்த வாழ்க்கையை வாழ்வது ஒரு கதை.
பார்வை இழந்த ஆனந்தன் அநாதையாக அன்பு இல்லத்தில் தஞ்சம் அடைகிறான். அங்கு அவனுக்கு ரஞ்சனி என்ற பெண்ணின் அன்பும், காதலும் கிடைக்கிறது. அந்த காதலுக்கு ஏற்படும் பிரச்சினைகள், அதை எதிர்த்து காதலர்கள் போராடுவது தனிக் கதை. இப்படி
ஒரே இடத்தில் நடக்கும் இரண்டு கதைகளுடன் தொடர்கிறது நிழல்கள் தொடர். தற்போது இது 100 வது எபிசோடை கடந்திருக்கிறது. பொதிகை டி.வியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.



நன்றி: தினமலர்

aanaa
5th October 2015, 11:03 PM
சின்னத்திரையின் பேய் சூசன்.


இப்போதெல்லாம் சின்னத்திரையாக இருந்தாலும் சரி, பெரிய திரையாக இருந்தாலும் சரி நடிகைகளுக்கு பேயாக நடிப்பதற்கு பிடித்திருக்கிறது. பெரிய திரையில் ஹன்சிகா, த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா போன்ற பெரிய நடிகைகளே பேயாக நடிக்கிறார்கள். சின்னத்திரையில் அப்படி ஒரு வாய்ப்பு சூசனுக்கு கிடைத்திருக்கிறது.


வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஏழாம் உயிர் தொடரில் அவர்தான் பேயாக நடிக்கிறார். ஏழு பெண்களின் உயிரைக் குடிக்க வேண்டும் என்பது சூசன் பேயின் திட்டம். இதுவரை மூன்று பெண்களை கொன்று உயிரை குடித்துவிட்டார் அடுத் எபிசோடிலிருந்து 4வது உயிரை குடிக்க திட்டம் போடுகிறார். அவரது பட்டியிலில் சீரியலின் நாயகி லட்சுமி விஸ்வநாத்தும் ஒருவர். அவரையும் கொல்கிறாரா. இல்லை அவர் இவரை அழிக்கிறாரா என்பதுதான் சீரியலின் கிளைமாக்ஸ்.


"பெரிய திரையில் பேயாக நடிப்பது ரொம்ப சிம்பிள் 2 மணி நேரம் பயமுறுத்தினால் போதும் சின்னத்திரையில் அப்படியில்லை. தினமும் 30 நிமிடம் பயமுறுத்த வேண்டும். அதனால் இது சவாலான விஷயம்தான்" என்கிறார் சூசன்.



நன்றி: தினமலர்

aanaa
5th October 2015, 11:06 PM
வில்லி வேடம் கேட்கும் தேவிப்பிரியா!


ஒரு காலத்தில் சின்னத்திரை சீரியல்களை கலக்கி வந்தவர் தேவிப்பிரியா. நாயகி, வில்லி என பலதரப்பட்ட வேடங்களில் நடித்தார். அதோடு, சினிமாவிலும் சில படங்களில் முக்கிய வேடங்களில் தோன்றினார். என்றாலும் அவரது கவனம் சீரியல்களிலேயே அதிகமாக இருந்ததால் சினிமாவில் பெரிய அளவில் வளர முடியவில்லை. ஆனால் இப்போது அவர் சீரியல்களிலும் வில்லி வேடங்களில் நடித்துக்கொண்டிருந்தபோதும், சினிமா வாய்ப்புகளையும் அதிகமாக வரவேற்கிறார். காரணம், என்னதான் சீரியல்களில் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்தாலும் சினிமா நடிகை என்கிறபோதுதான் மரியாதையும், சம்பளமும் சின்னத்திரை உலகில் அதிகமாக கிடைக்கிறதாம்.


அதன்காரணமாக, கத்துக்குட்டி படத்தில் ஒரு நடிகை கதாபாத்திரத்தில் நடித்த தேவிப்பிரியா தற்போது மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார். அதேசமயம் சீரியல்களைப் பொறுத்தவரை, வில்லி வேடங்களுக்கே அவர் முதலிடம் கொடுக்கிறாராம்.
என்னைக்கேட்டால், சீரியல்களில் வில்லிதான் கதாநாயகியே. கதையை நகர்த்தி செல்லும் மொத்த பொறுப்பும் வில்லியிடமே இருப்பதால் அதில்தான் நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும். அதனால்தான் நான் வில்லி வேடத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்று கூறும் தேவிப்பிரியா, சினிமாவில் வில்லி வேடம் கிடைத்தாலும் நடிப்பதற்கு தயாராக இருக்கிறாராம். அந்த வகையில், சினிமா-சின்னத்திரை இரண்டு மீடியாக்களிலும் மெகா வில்லியாக ஒரு பெரிய ரவுண்டு வரவேண்டும் என்பதுதான் தேவிப்ரியாவின் ஆசையாக உள்ளதாம்.



நன்றி: தினமலர்

aanaa
5th October 2015, 11:09 PM
புதிய சரித்திர தொடர் வீர மார்த்தாண்டன்


திரைப்படங்களைப்போல சின்னத்திரையிலும் சரித்திர தொடர்களுக்கு தனி மவுசு இருக்கிறது. எல்லா சேனல்களுமே சரித்திர தொடர்களை ஒளிபரப்ப ஆர்வம் காட்டுகிறது. ஆனால் அதனை தயாரிப்பதற்கு பெரிய பட்ஜெட் ஆகும் என்பதால் டப்பிங் சீரியல்களை வாங்கி ஒளிபரப்புகிறார்கள்.


ஜீ மராட்டி டி.வியில் ஒளிபரப்பான ஜெய் மல்ஹார் என்ற தொடரை ஜீ தமிழ் வீர மார்த்தாண்டன் என்ற பெயரில் டப் செய்து ஒளிபரப்புகிறது. தேவத்த நாகே, சுரபி ஹண்டா, இஷா கேஷ்கர் நடித்துள்ளனர். கார்த்திக் கெண்டே இயக்கி உள்ளார்.


வீர மார்த்தாண்டன் மாபெரும் வீரன் மற்றும் சிவபக்தன். சிவனின் ஆசியோடும், அருளோடும் அவன் மக்களுக்கு ஆற்றும் சேவை எதிரிகளை வெல்லும் போர் என ஆன்மீகமும், சரித்திரமும் கலந்த கற்பனை கதை. திங்கள் முதல் வெள்ளி வரை ஜீ தமீழ் சேனலில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது

நன்றி: தினமலர்

aanaa
9th October 2015, 12:10 AM
https://www.youtube.com/watch?v=txNihqJ2FvY

aanaa
9th October 2015, 12:11 AM
https://www.youtube.com/watch?v=FJbmj3siw-w

aanaa
9th October 2015, 12:11 AM
https://www.youtube.com/watch?v=Kkdno6vgtn4

aanaa
9th October 2015, 12:11 AM
https://www.youtube.com/watch?v=A7Gkv1DhjtQ

aanaa
5th November 2015, 12:42 AM
மெல்ல திறந்தது கதவு: ஜீ தமிழில் புதிய தொடர்


மோகன் நடித்த பிரபலமான படம் மெல்ல திறந்தது கதவு. அந்த படத்தின் பெயரில் ஜீ தமிழ் சேனல் புதிய தொடர் ஒன்றை கடந்த 2ம் தேதி முதல் ஒளிபரப்புகிறது. வாரம்தோறும் திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 8 மணிக்கு இது ஒளிபரப்பாகிறது.


சீரியல்களின் வரலாற்றில் இந்த தொடர் ஒரு முக்கியமானதாக இருக்கும். காரணம் முழுக்க முழுக்க காதல் கதை என்பதோடு. பார்வைதிறன் இல்லாத சந்தோஷ், செல்வி என்ற இரண்டு இளம் ஜோடிகளின் காதல் கதை. இதில் சந்தோஷ் கோடீஸ்வர வீட்டு மகன் பல கோடி சொத்துக்களுக்கு அதிபதி அதை விட அவன் நேசிப்பது செல்வியை. செல்வி சாதாரண குடும்பத்து பெண். சந்தோஷ் கோடீஸ்வரன் என்பது தெரியாமலேயே காதலிப்பவள். இந்த காதலர்களுக்கு வரும் பிரச்னையும், அதன் தீர்வுகளும்தான் கதை.
புதுமுகங்கள் நடிக்கிறார்கள். என்.கண்ணன் இசை அமைக்கிறார். வி.சங்கர்ராமன் ஒளிப்பதிவு செய்கிறார், திவ்யா விஷ்வநாதன் தயாரிக்கிறார், பிரம்மா ஜி.தேவ் இயக்குகிறார். பலத்த எதிர்பார்ப்புகளுடன் தொடங்கியிருக்கிறது மெல்ல திறந்தது கதவு



நன்றி: தினமலர்

aanaa
5th November 2015, 12:45 AM
விஜய் டி.வியின் புதிய தொடர் களத்து வீடு!

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_151102173604000000.jpg
திரைப்படங்களின் தரத்துக்கு நிகராக வித்தியாசமான தொடர்களை ஒளிபரப்புவது விஜய் டி.வியின் வழக்கம். அந்த வரிசையில் அடுத்து வரும் தொடர் களத்து வீடு.


திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் இது.


சங்கரபாண்டியன், தேவிப்ரியா, சிவன் ஸ்ரீனிவாசன், அனிலா, மாணிக்கம், ராஜேஷ், காயத்ரி, ஹேமா, மனோகரன், பாலன், ஜீத்து, ரீமா, சம்பத், ஜெயபிரகாஷ் பிரபு கண்ணன் நடிக்கிறார்கள். அருள் அரசன் இயக்குகிறார், சாய் ஸ்ரீனிவாஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.


மதுரை அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் கதை. அந்த கிராமத்தில் களத்து வீடு, காரை வீடு, கம்மா வீடு என்கிற மூன்ற பெரிய வீடுகள் இருக்கிறது. அதில் மூன்று பெரிய குடும்பங்கள் வசிக்கிறது. அதில் களத்து வீட்டு செல்வாக்கை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று கார வீட்டுக்காரர்களும், கம்மா வீட்டு காரர்களும் முயற்சிக்கிறார்கள். அதை களத்து வீட்டுக்காரர்கள் எப்படி முறியடிக்கிறார்கள் என்பது கதை.



நன்றி: தினமலர்

aanaa
5th November 2015, 12:49 AM
கலைஞர் டிவியில் இன்று (நவம்பர் 2-ந்தேதி) முதல் புதிய மெகா தொடர் கண்ணம்மா வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இந்த தொடர் பழிவாங்கும் கதையில் உருவாகிறது.
அதாவது, தனது கம்பெனியில் வேலை செய்யும் ஸ்ரீனிவாஸ் என்பவன் பண மோசடி செய்ததாக அவனை வேலையில் இருந்து நீக்குகிறார் தொழிலதிபர் சங்கர நாராயணன். இதையடுத்து அவரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவரது மகள் கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்யும் ஸ்ரீனிவாஸ், நான்கு பிள்ளைகள் பிறந்த பிறகு கண்ணம்மாவை தவிக்க விட்டு பழிதீர்க்கிறான்.


இதையடுத்து கண்ணம்மா என்னென்ன நடவடிக்கை எடுக்கிறாள் என்பதுதான் இந்த தொடரின் கதையோட்டம். முற்றிலும் குடும்ப பின்னணியில் உருவாகும் இந்த கண்ணம்மா தொடரில் சோனியா லீடு ரோலில் நடிக்கிறார். அவருடன் பொள்ளாச்சி பாபு, கிருத்திகா, ராஜசேகர், சுமங்கலி, அழகு உள்பட பலர் நடிக்கின்றனர். என்.கிருஷ்ணசாமி கதை திரைக்கதை வசனம் எழுத, மூலக்கதை எழுதி இயக்குகிறார் வேதபுரி மோகன். என்.எஸ்.பாலசுப்ரமணியன் ஒளிப்பதிவு செய்ய, மரியா மனோகர் இசையமைக்கிறார்.

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_151102125626000000.jpg


வேல் மீடியா தங்கவேல் தயாரித்துள்ள கண்ணம்மா தொடரின் டைட்டீல் பாடலை பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் பாடியுள்ளார்.யில் புதிய தொடர் கண்ணம்மா!



நன்றி: தினமலர்

aanaa
7th January 2016, 08:37 PM
விஜய் டி.வியின் புதிய தொடர் சீதையின் ராமன்




ராமாயாணத்தை எந்த கோணத்தில் சொன்னாலும், எந்த பகுதியை சொன்னாலும் அழகுதான். ராமாயணத்தை விதவிதமாக காட்டி வந்த விஜய் டி.வி. அடுத்து சீதையின் ராமன் என்ற புதிய தொடரை ஒளிபரப்புகிறது.ஸ்டார் பிளஸ் சேனலில் சீதா கி ராம் என்ற பெயரில் ஒளிபரப்பான இந்தி தொடரின் தமிழாக்கம் இது. ஜனவரி 4ந் தேதியிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு இது ஒளிபரப்பாகிறது.


வால்மீகி எழுதிய ராமாயணத்தின் அடிப்பபடையிலான கதை. சீதையின் பார்வையில் ராமர் எப்படி இருந்தார் என்பதுதான் மற்ற கதைகளில் இருந்து வித்தியாசப்படும் பகுதி. ராமனுக்கும், சீதைக்கும் இடையிலான அன்பு, உறவில் ஏற்பட்ட விரிசல் பின்பு இணைதல் உள்ளிட்ட விஷயங்களை பேசும் கதை. இந்தியின் முன்னணி டி.வி.நடிகர் ஆஷிஷ் சர்மா ராமராகவும், மத்திரிகாஷி முண்டே சீதையாகவும் நடித்துள்ளனர்.



நன்றி: தினமலர்

aanaa
9th March 2016, 12:12 AM
EMI - தவணை முறை வாழ்க்கை
SUN TV 07 - 03 2016


https://www.youtube.com/watch?v=m0xwHNJb2J0



https://www.youtube.com/watch?v=THndkdbtuGE



https://www.youtube.com/watch?v=NjEC0I-g27A



https://youtu.be/BbTylacSSic

aanaa
1st April 2016, 07:28 PM
குலதெய்வம்: வட இந்தியாவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி இல்லை
நாதஸ்வரம் தொடருக்கு பின் திருமுருகன் இயக்கி வரும் தொடர் குலதெய்வம். தற்போது சீரியலை வெளியூரில் எடுப்பது டிரண்ட் என்பதால் தனது நாதஸ்வரம் தொடரை காரைக்குடியில் எடுத்தார். குலதெய்வம் தொடர் சென்னை, குற்றாலம், தஞ்சாவூர் பகுதிகளில் நடந்து வந்தது. கதை எந்த பகுதியில் நடக்கிறதோ அங்கேயே சென்று படப்பிடிப்பு நடத்துவதையே வழக்கமாக வைத்திருந்தார்.
தற்போது கதை வடநாட்டில் நடக்கிறது. இதனால் ராஜஸ்தான், டில்லி, பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அங்கு அனுமதி கிடைக்கவில்லை. வட நாடுகளில் ஹோலி பண்டிகை உள்ளிட்ட பல பண்டிகைகள் தொடர்ச்சியாக வருவதால் அங்கு படப்பிடிப்பு நடத்துவது தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்கும் என்ற கூறி அனுமதி தர மறுத்துவிட்டனர்.
இதனால் கதையை அண்டை மாநிலங்களில் நடப்பதாக மாற்றி தற்போது மைசூரில் படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். அங்குள்ள நஞ்சுண்டபுரம் கோவில், அரண்மனை, பிருந்தாவன் ஆகிய பகுதிகளில் நடப்பிடிப்புகள் நடந்து வருகிறது.





நன்றி: தினமலர்

aanaa
1st April 2016, 07:31 PM
விஜய் டிவியில் தெறி ஆடியோ விழா!
விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் தயாராகியுள்ள படம் தெறி. ராஜாராணி அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை எஸ்.தாணு தயாரித்துள்ளார். இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீடு கடந்த மார்ச்-20 ந்தேதி சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி அனைத்தும் வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று விஜய் டிவியில் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_160401142612000000.jpg

மேலும், சமீபகாலமாக முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்களின் சேனல் ரைட்ஸை வாங்குவதில் ஆர்வம் காட்டி வரும் விஜய் டிவி, தெறி படத்தையும் வாங்குவதற்கு முயற்சித்து வருகிறதாம். ஏற்கனவே பல முன்னணி சேனல்கள் தெறி படத்தை கைப்பற்றும் போட்டியில் இறங்கியிருக்கிறது விஜய் டிவி.





நன்றி: தினமலர்

aanaa
5th April 2016, 07:24 PM
என்வாழ்க்கை என் பயணம்: பாலிமரில் புதிய தொடர்
பாலிமர் சேனனில் வருகிற 4ந் தேதி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் என் வாழ்க்கை என் பயணம். இந்தியில் ஒளிபரப்பான இந்த தொடர் தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகிறது
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் முதல் சினிமா தொடர்புடைய தொடர். நடுத்தர குடும்பத்து பெண்ணான பூஜாவுக்கு சினிமா இயக்குனராக வேண்டும் என்பது வாழ்நாள் கனவு. அதற்காக பெற்றவர்கள் எதிர்ப்பையும் மீறி திரைப்படக்கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார். கோல்ட் மெடலிஸ்டாக வெளியே வருகிறார். அவர் இயக்குகிற குறும்படங்கள் பரபரப்பாக பேசப்படுகிறது. அப்படி இருந்தும் அவர் சினிமாவில் இயக்குனராக போராட வேண்டியது இருக்கிறது. அந்த போராட்டமே தொடரின் கதை. அதில் அவர் வெற்றி பெற்றாரா என்பது முடிவு. பூஜாவாக இந்தி நடிகை ஷமா சிக்கந்தர் நடித்துள்ளார்.



நன்றி: தினமலர்

aanaa
25th May 2016, 06:44 PM
பாலகுமாரன் நாவல் டி.வி.சீரியலாகிறது
பிரபல எழுத்தாளர்களின் நாவல்கள் திரைப்படமாகி இருக்கிறது. முதன் முறையாக ஒரு நாவல், சின்னத்திரை சீரியலாகிறது. பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய தலையணை பூக்கள் நாவல் எந்த மாற்றமும் இன்றி அப்படியே தொடராக எடுக்கப்படுகிறது.
பாலகுமாரன் தமிழ் இலக்கிய உலகின் பிரபலமான எழுத்தாளர். 150க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். இவர் எழுதிய 14 நாவல்கள் திரைப்படமாகி உள்ளது. பல படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார்
அவர் எழுதிய குடும்ப நாவல்தான் தலையணை பூக்கள். கிராமத்தில் விசாயம் பொய்த்து விட்டதால் அங்கிருந்து நகரத்து தனது நான்கு மகன்களுடன் பிழைப்பு தேடி சென்னை வரும் விவசாயி இங்கு தன் மனைவி பெயரில் லட்சுமி அண்ட் கோ என்ற பாத்திர கடை தொடங்குகிறார். மகன்களின் உழைப்பால் அது பெரிய நிறுவனமாக வளர்கிறது. அந்த வீட்டுக்கு மருமகள்கள் வரும்போது என்ன மாற்றங்கள் நடக்கிறது. என்பதுதான் கதை. தனித்தனியாக பிரியும் சகோதரர்கள், போட்டி நிறுவனங்கள் தொடங்குவது. ஒருரை வீழ்த்து ஒருவர் நினைப்பது என பணம் வந்த பிறகு பாசம் பறந்து போன கதையாக விரியும்.
இதில் குடும்ப தலைவராக டெல்லி குமார் நடிக்கிறர். மகன்களாக ஸ்ரீ, ஸ்ரீகர் நடிக்கிறார்கள். முதல் மருமகளாக நிஷா நடிக்கிறார். வருகிற 23ந் தேதி முதல் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_160521143746000000.jpg



நன்றி: தினமலர்

aanaa
30th May 2016, 06:47 PM
நிஜ காதல் ஜோடிகளான சீரியல் ஜோடிகள்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'ஆண்டாள் அழகர்' தொடர் தற்போது 'பகல் நிலவு' என்ற பெயரில் அதன் இரண்டாம் பாகமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இளம் தலைமுறை காதலர்களாக நடிப்பவர்கள் அன்வரும், சமீராவும். சீரியலில் சீரியசாக காதலிக்கும் இவர்கள் இருவரும் நிஜத்திலும் காதலர்களாகி விட்டார்கள்.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_160528130731000000.jpg


தெலுங்கு சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த சமீரா பகல் நிலவு மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார், அன்வர் தமிழில் ஏராளமான சீரியலில் நடித்தவர். “நான் நடிகர் என்றாலும் சமீராவின் நடிப்புக்கு நான் ரசிகன். ஒரு ஷாப்பிங் மாலில்தான் முதல் முதலில் சந்தித்தோம். பிறகு நண்பர்களானோம் பின்பு அதுவே காதலானது என்கிறார் அன்வர். நிஜ காதலர்களே சீரியல் காதலர்களாக இருப்பதால் காதல் காட்சிகளில் தனி கவனம் செலுத்துகிறது சீரியல் கதை இலாக்கா.



நன்றி: தினமலர்

aanaa
30th May 2016, 06:52 PM
வேந்தர் டிவியில் சிறுவர்களுக்கான ரெட்டை வால் நிகழ்ச்சி!
வேந்தர் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய நிகழ்ச்சி ரெட்டை வால். முற்றிலும் 11 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகளே பங்கேற்றும் இந்த நேரடி நிகழ்ச்சியில், பள்ளியில் நடந்த சுவராஸ்யமான நிகழ்வுகள் மற்றும் கதை சொல்வது, பாட்டு பாடுவது என்று சிறுவர்கள் தங்களுக்கு பிடித்தமான விசயங்களை பகிர்ந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் அம்ரிதா தொலைபேசியில் உரையாடுகிறாராம்.
>அதுமட்டுமின்றி, சிறுவர்கள் தங்கள் சார்பில் சொல்ல வந்ததை சொல்லி முடித்ததும். அவர்களுக்கு பிடித்தமான ஹீரோ மற்றும் பிடித்த பாடலை கேட்டு அதையும் ஒளிபரப்புகிறார்களாம். மேலும், இப்படி தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் சிறுவர் சிறுமியர்களுக்கு தானும் அவ்வப்போது சின்னச்சின்ன குட்டிக்கதைகளை சொல்லி அவர்களை சந்தோசப்படுத்தப்போகிறாராம் தொகுப்பாளினி அம்ரிதா.



நன்றி: தினமலர்

aanaa
30th May 2016, 08:57 PM
SUN TV

June - 05 - 2016


https://www.youtube.com/watch?v=L6najpuN5SQ



https://www.youtube.com/watch?v=B30AOH40ogc



https://www.youtube.com/watch?v=EAcTHPvt0-8

aanaa
7th June 2016, 07:24 PM
ராஜ் டி.வியில் புதிய தொடர் ;கங்கா யமுனா
ராஜ் தொலைக்காட்சியில் ஒளிப்பரபாக இருக்கும் புதிய தொடரின் பெயர் கங்கா யமுனா. புகழ்பெற்ற இந்தி சீரியலின் டப்பிங் இது. பரபரப்பு நிறைந்த கோல்கட்டா நகரில் வாழும் கங்கா, யமுனா என்ற இரு இளம் பெண்களின் வாழ்க்கை கதை. இருதுருவங்களாக இருக்கும் இவர்கள் கடந்த கால கனவுகன் துறந்து, எதிர்கால சாதனைகளை எப்படி படைக்கிறார்கள் என்பதை சொல்லப்போகும் தொடர்.

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20160603122512921499.jpg
>கதை களம் கோல்கட்டாவில் நடந்ததாலும் கோல்கட்டாவின் வாழ்க்கை முறை தமிழ்நாட்டு வாழ்க்கை முறையை ஒத்திருப்பதால் நம் கதை போலவே இருக்கும். வருகிற 6ந் தேதி ஒளிபரப்பு துவங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. ஏற்னெவே ;கங்கா யமுனா சரஸ்வதி என்ற பெயரில் ஒரு தொடர் ஒளிபரப்பாகி புகழ்பெற்றது குறிப்பிடத்தக்து.



நன்றி: தினமலர்

aanaa
25th June 2016, 08:11 AM
சன் தொலைக் காட்சியில்
நாகினி
27-06-2016 முதல்



http://www.tamilserialtoday.org/2016/06/nagini-promo-27-06-2016-to-02-04-2016-this-week-sun-tv-serial-online/

aanaa
28th June 2016, 08:47 PM
தமிழில் டப் ஆகிறது சுதா சந்திரனின் இந்தி சீரியல்


சுதா சந்திரன் நடித்த இந்தி சீரியல் நாகின். கலர்ஸ் டி.வியில் கடந்த ஆண்டு ஒளிப்பரப்பான இந்த தொடர் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாக இருக்கிறது. இந்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த தொடரை சத்ரம் வர்மா, சாந்தினி, நீரஜ், லலித் மரத்தா, ராகேஷ் சவுத்ரி ஆகியோர் இயக்கி இருந்தனர். சுதாசந்திரனுடன் அர்ஜுன் பிஜ்லானி, மவுனிராய், அதா கான் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். ஷோபா கபூர், ஏக்தா கபூர் தயாரித்திருந்தார்கள்


இது நினைத்த உருவத்தை எடுக்கும் இச்சாதாரி பாம்பின் கதை. சிவன்யா, சோஹா என்ற இரண்டு பாம்புகளில் ஒன்று நல்லது செய்யக்கூடியது. இன்னொன்று கொடுமையானது. இந்த இரண்டு பாம்புகளும் ஒரு குடும்பத்திற்குள் புகுந்து கொண்டு ஆடும் ஆட்டமே கதை. செண்டிமெண்ட் மாயாஜாலம், அதிரடி திருப்பம், பிரமாண்ட அரங்க அமைப்பு என ஒரு சினிமாவுக்கான அனைத்து அம்சங்களும் கொண்ட தொடர்.


ஏற்கெனவே ஜீ தமிழ் சேனலில் ஒரு பாம்பு கதையை மையமாக கொண்ட 'நாகராணி' தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவும் இந்தி டப்பிங் சீரியல்தான். அதற்கு போட்டியாக நாகின் தொடரை மற்றொரு முன்னணி சேனல் ஒளிப்பரப்ப இருக்கிறது.



நன்றி: தினமலர்

aanaa
10th July 2016, 05:01 AM
பாசம் டிவி தொடரில் நாயகியாக நடிக்கும் சங்கவி!

தமிழில் அஜித் நடித்த முதல் படமான அமராவதியில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் சங்கவி. அந்த வகையில், அஜித்-சங்கவி இருவரும் ஒரே படத்தில் அறிமுகமானவர்கள். அதைத் தொடர்ந்து விஜய்யுடன் ரசிகன், விஷ்ணு போன்ற படங்களில் நடித்த சங்கவி, பின்னர் தொடர்ச்சியாக தென்னிந்திய படங்கள் மற்றும் இந்தி படங்களிலும் நடித்தார். அதோடு, கோகுலத்தில் சீதை, சாவித்ரி, கால பைரவா போன்ற சீரியல்களிலும் நடித்தார்.


இந்நிலையில், 2016 பிப்ரவரியில் வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட சங்கவி, தற்போது கொளஞ்சி என்ற படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், ஜெயா டிவிக்காக தயாரிக்கப்பட்டு வரும் பாசம் என்ற தொடரில் நாயகியாக நடித்து வருகிறார் சங்கவி. இதில் அவருக்கு இன்ஸ்பெக்டர் வேடம். பெண்களுக்கு சமூகத்தில் இழைக்கப்பட்டு வரும் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் அதிரடியான கதாபாத்திரத்தில் நடிக்கும் அவர், சீரியல் முழுக்க காக்கி சட்டை அணிந்து மிடுக்காக நடிக்கிறாராம். கடந்த 15 நாட்களாக பாசம் தொடரின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. விரைவில் இந்த தொடர் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது.


நன்றி: தினமலர்

aanaa
10th July 2016, 05:07 AM
Annakodiyum Aindhu Pengalum serial, telecasting Monday to Friday at 7 pm, in Zee Tamil Tv, to touch the 350th episode mark on 11th July.

The story goes as this – Thangadurai and Kanchana are determined to take revenge on Gauri, the lead character of the story, for the legal notice served against them.In collusion with Gauri’s mother-in-law Uma Maheshwari, they push Siddarth to send divorce notice to Gauri.Moreover, they plan to marry Siddarth to Kavitha, who is his personal secretary. According to their plan it happens that both Siddarth and Kavitha begin liking each other.Meanwhile, Anna Kodi goes against the family and gets Gauri’s sister Sankari married to Dass, a trickster who wins the trust of Anna Kodi and Sankari.Kanchana is determined to have a child following the insult she receives after she fondly cuddles Thangadurai’s kid. In the meantime, Gauri gets deeply shocked knowing the growing intimacy between Siddarth and Kavitha.In the upcoming episodes Annakodiyum Ainthu Pengalum TV soap travels finding answers to quizzes such as…..Will Siddarth divorce Gauri as planned by Thangadurai, Kanchana and Uma Maheshwari ?,Will he marry Kavitha?, What Gauri understands about Kavitha ?,

Do Anna Kodi and Sankari come to know about the intentions of Dass ?,
Does Kanchana succeed in having a child ?….etc.,To know about all of these watch Zee Tamil Tv, Monday to Friday at 7pm,

aanaa
10th July 2016, 05:08 AM
New mega-serial ‘Thalayanai Pookkal’ will be the latest addition to the recent revamped list of daily soaps on Zee Tamil keeping in line with its emphasis on quality offerings fit for family viewing.
The mega-serial is based on a novel penned by famed Tamil writer Bala Kumaran.
Ramanathan, a good natured widower who lost his wife 15 years ago lives with his three sons in Chennai and runs a chain of consumer durables store called ‘Lakshmi & Co’.
Ramanathan strongly believes that Vedavalli, the elder daughter of his childhood friend Parameswaran is the right person to be his daughter-in-law and uphold the family values after his wife. Ramanathan has already sought Parameswaran family’s consent regarding his wish even when Vedavalli was a child.
Right moment approaches and arrangements for the wedding are initiated to get Vedavalli married to Ramanathan’s eldest son Sundar. However, this upsets Kalpana, an ambitious and scheming girl working in Lakshmi & Co., vying for Sundar’s attention. She manages to break the alliance between Sundar and Vedavalli.
Has Kalpana achieved in her pursuit ?. Has Ramanathan’s dream of getting Vedavalli married to Sundar came true ?. Do Ramanathan’s other two sons lead a better life ?, Get answers to all these and more on Bala Kumaran’s Thalayanai Pookal from May 23rd every Mon to Fri at 9 pm.
Cast includes seasoned artists like Delhi Kumar, Vizhuthugal Santhanam, Srighar, Nisha, Sree and Sandra.

aanaa
10th July 2016, 05:23 AM
Come April 25th Zee Tamil is all set to offer one of its popular ‘Nagin’ serial in Hindi to its Tamil viewers and it will go by the name of Naga Rani.


The serial is based on a tale of an Ichchhadhari a female snake who can change form at will. She transforms herself into a woman called Amrita to take revenge on the Rudra’s family, which had killed her parents (King and Queen of the Naaglokam or snake community) to get the valuable Naagamani (snake gem).


While dying, the queen instructs her daughter Amrita to revenge the killers and get back the Naagmani to their community so that she can give back life to her parents. In order to fulfill the wish of her dying mother, the snake transforms herself into a human being to take revenge.


And then she gets married into the same family whose members have killed her parents. But the dilemma is that her duty as a wife and her love towards her human husband Arjun comes in the way of her revenge. After a lot of turmoil in her life, Amrita gets pregnant.
However, in protecting Amrita and the unborn babies, her husband Arjun dies. All the family members die, except for Arjun’s grandmother Triveni. Amrita gives birth to identical twins. Triveni and Surmaya come and kill Amrita with the deadly poison. However, another ichhadhari snake, Kanishka, helps Amrita who wants to live for her daughters. He aavises her to become a ghostly spirit so she can watch over her children.


However, she will not be able to touch them and they will not be able to see her. Amrita agrees. Amrita’s two daughters are about seven years old and they will look exactly like Amrita when they grow up. One daughter is with Triveni, who treats her miserably, and the other daughter is with a village woman, who soon dies.


Triveni goes to the sorcerer Bhairavnath who helps her in trying to bring Amrita to the human world so she can be finished off forever. Season 1 ends with Amrita’s ghost being captured.
Watch out for Naga Rani from April 25th every Mon-Fri at 6.00 pm. Don’t miss it.

aanaa
10th July 2016, 05:24 AM
Known consistently for its creative offerings and having gained the trust and respect of the audience the world over, Zee Tamil will now be adding to its telecast Iniya Iru Malargal, a popular mega-soap, from Apr 11th onwards.


The successful mega-serial known as Kumkum Bhagya in Hindi and a popular soap to its tamil audiences will occupy the prime-time slot in Zee Tamil.


For the uninitiated, the story revolves around Sarla Arora, an entrepreneur who runs a marriage hall single-handedly and is a mother to two lovely daughters Pragya and Bulbul.


Like any doting mother Sarla wants the only the best for her daughters and has gone through a lot to ensure their well-being and secure their future.


While elder daughter Pragya is hardworking and practical and supportive of her mother’s efforts, the younger one Bulbul, in contrast is a complete dreamer and not rooted to the realities of life.
Viewers who have followed the lives of the two sisters along with that of their mother, their hopes, dreams and aspirations over the last one year can now tune in to Zee Tamil.


Get set to watch the twists and turns that take place in their lives in Iniya Iru Malargal every Mon-Fri at 7:30 pm from April 11th.

aanaa
10th July 2016, 05:26 AM
விதிவசத்தால் சோதனை மேல் சோதனைகளை எதிர்கொள்ளும் இளம்பெண் தாமரையின் கதையே, ‘பட்டுச்சேலை’ .


புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘பட்டுச்சேலை’ தொடர், வரும் வாரத்தில் இருந்து மேலும் சூடு பிடிக்கிறது.




காஞ்சனாவின் கடையில் பட்டுச்சேலை வாங்கி, கிராமத்தில் விற்பனை செய்பவள் தாமரை. காஞ்சனாவின் மகனை காதலித்தாலும், சந்தர்ப்பவசத்தால் மனநலம் பாதிக்கப்பட்ட அருணை திருமணம் செய்யவேண்டிய கட்டாயத்துக்கு தாமரை ஆளாகிறாள்.
காஞ்சனாவின் மகனை திருமணம் செய்துகொண்ட வீணாவும், அவளது அம்மாவும் சேர்ந்துகொண்டு தாமரையையும் அவளது கணவனையும் தினம்தினம் கொடுமைப்படுத்துகிறார்கள். காஞ்சனாவின் கடையில் இருந்து புடவை வாங்கமுடியாத சூழலுக்கு தள்ளப்படுகிறாள் தாமரை.




இந்த நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் தாமரையின் கணவன் அருண் கடத்தப்படுகிறான்.அருணை கொலைசெய்து, அந்த பழியை தாமரையின் மீது சுமத்த ஒரு கும்பல் திட்டமிடுகிறது. யார் அவர்கள்? அவர்களின் திட்டத்தை தாமரையால் முறியடிக்க முடியுமா? என்பது போன்ற கிடுகிடு திருப்பங்களுடன் பயணிக்கிறது பட்டுச்சேலை தொடர்.
தாமரையாக ஷாதிகா, காஞ்சனாவாக பிரபல நடிகை மீனாகுமாரி, அஜய்யாக ரிச்சர்ட் நடிக்க, இவர்களுடன் மேலும் பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாத, ‘பட்டுச்சேலை’ குடும்பத்தொடர் புதுயுகம்


தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.00 மணிக்கும், மறுநாள் மதியம் 1:00 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

aanaa
20th July 2016, 09:00 PM
சரவணன் மீனாட்சி 3வது சீசன்


விஜய் டி.வியின் புகழ்பெற்ற இளமை காதல் தொடர் சரவணன் மீனாட்சி. முதல் சீசனில் மிர்சி செந்திலும், ஸ்ரீஜாவும் நடித்தனர். இவர்களே நிஜ வாழ்க்கையிலும் காதலர்களாகி திருமணம் செய்து கொண்டனர். தற்போது ஸ்ரீஜா வேறு தொடர்களில் நடித்து வருகிறார். செந்தில் சினிமா நடிகர் ஆகிவிட்டார். 2வது சீசனில் கவினும், ரக்ஷிதாவும் நடித்தார்கள்.


தற்போது 3வது சீசன் நேற்று முதல் தொடங்கியது. இதில் மீனாட்சியாக ரக்ஷிதாவே நடிக்கிறார். சரவணனாக மியூசிக் சேனல் தொகுப்பாளராக இருந்த ரியோ நடிக்கிறார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு இது ஒளிப்பாகிறது. புதிய சரவணன் மீனாட்சியில் இளமை ததும்பும் காதல் காட்சிகள் இருக்கும், இன்றைய இளைஞர்களின் காதலை பிரதிபலிப்பதாக இருக்கும் என்கிறது சேனல் தரப்பு.





நன்றி: தினமலர்

aanaa
20th July 2016, 09:02 PM
500 எபிசோடை கடந்தது தாமரை


ரேடான் மீடியா சார்பில் ராதிகா சரத்குமார் தயாரித்து ஒளிபரப்பும் நெடுந்தொடரான 'தாமரை' 500 எபிசோட்களை கடந்துள்ளது. ராதிகாவின் கதைக்கு பிரசன்னா வசனம் எழுதியுள்ளார், தேவிபாலா திரைக்கதை அமைத்துள்ளார். எம்.கே.அருந்தவராஜா, குருவிதுரை, கே.எல்.தங்கபாண்டியன், ஏ.ராமச்சந்திரன் ஆகியோர் இயக்கி வருகிறார்கள்.


நீலிமா ராணி, நிரோஷா, அஸ்வின், சலிதா, எல்.ராஜா, வரதராஜன் உள்பட பலர் நடித்து வருகிறார்கள். 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஒளிபரப்பை தொடங்கிய இந்த தொடரின் 514வது எபிசோட் கடந்த 16ந் தேதி ஒளிபரப்பானது. ராதிகாவின் தொடர்கள் அனைத்துமே 500 எபிசோட்களை கடந்துவிடும். அதுபோல 'தாமரை'யும் கடந்துள்ளது. நடுத்தர மக்களின் பொருளாதார பிரச்சினை, உறவுகள், பாசப்போராட்டம் போன்றவை கதை களமாக இருப்பதால் பெண்களிடம் "தாமரை";க்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.



நன்றி: தினமலர்