PDA

View Full Version : SIMBHU - Little Super Star



Pages : 1 2 3 4 [5] 6

interz
7th November 2013, 03:59 PM
Simbu is trying too much at one time. He is in his best age, and he doesnt get anything finished at all.

It has been about a year since poda podi released. He is gonna end up like an actor with potential but never fullfilled it.

balaajee
20th November 2013, 12:36 AM
Gautham Menon Returns With A Bang

Gautham Menon has finally opened up on his next movie. The filmmaker, who kept himself out of media glare after his project with Surya was shelved, has revealed about his forthcoming flicks. The Vinnaithaandi Varuvaayaa creator commenced the shooting of his forthcoming movie with Silambarasan recently. He has also opened up on his next movie with Ajith Kumar.

Gautham Menon Returns With A Bang On his Twitter account, the director wrote, "(I'm) very happy to be back at shoot after almost a year of waiting. (Shooting with) STR (Simbu) now and looking forward to (working with) Ajith sir from Feb 15." Currently, Gautham Menon is busy with Simbu's movie. The untitled flick is made on Gautham's home production Photon Kathas. The other cast has to be finalised and talks for the same are on. It has to be noted that the flick is not a sequel to Vinnaithaandi Varuvaayaa. On the other end, Gautham Menon's movie with Ajith Kumar will be produced by AM Rathnam. The makers of the movie want to rope in an A-list actress and the hunt for the same is on. More details on the same is expected to be out in the coming days

interz
20th November 2013, 01:17 AM
http://chalodesi.com/simbu-nayanthara-together-vallavan/

Interesting project. I never thought Pandiraj would work with Simbu. WIll it be a commfercial flick? Action movie? Romantic movie (I hope not)? Thriller? Light comedy?

balaajee
20th November 2013, 01:18 AM
எல்லாரும் அப்பவே சொன்னாங்க... நான்தான் உஷாரா இல்லாம போயிட்டேன்! - ஹன்சிகா
கிட்டத்தட்ட லிவ் இன் பார்ட்னர்கள் போல இருந்து பின்னர் பிரிந்துபோன சிம்புவையும் நயன்தாராவையும் ஜோடி போட வைத்ததன் மூலம் படத்துக்கு ஏக பப்ளிசிட்டி பைசா செலவில்லாமல் கிடைத்துவிட்டதாக இயக்குநர் பாண்டிராஜ் தெம்பாக இருக்க, மகா எரிச்சலில் புலம்பித் தள்ள ஆரம்பித்துவிட்டாராம் இப்போதைய காதலியான ஹன்சிகா.
எல்லாரும் அப்பவே சொன்னாங்க... நான்தான் உஷாரா இல்லாம போயிட்டேன் என்பதுதான் இப்போது அவர் அடிக்கடி தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லும் வசனமாம்!
http://tamil.oneindia.in/img/2013/11/19-hansika-stil-600.jpg

பிரபுதேவாவை விட்டு நயன்தாரா விலகிவிட்டார் என்று தெரிந்ததிலிருந்தே, சிம்புவுக்கு நயன்தாராவை ஜோடியாக்க முயற்சி நடந்து வந்தது.
வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நயன்தாராவுடன் ஜோடியாக நடிப்பேன் என்று அவரும் சொல்லிவிட்டார். நயன்தாராவும் நடிக்க மறுப்பு தெரிவிக்கவில்லை.
இந்க நிலையில் நயன்தாரா பிறந்த நாளன்று சிம்பு அவருக்கு வாழ்த்துச் சொன்னதோடு, இந்த வாய்ப்பையும் சொல்லி வைக்க, அவரும் சந்தோஷமாக ஒப்புக் கொண்டு கதையையும் கேட்டு முடித்துவிட்டார்.
ஏற்கெனவே சிம்புவை வைத்து ஒரு ஷெட்யூல் முடித்துவிட்டார் பாண்டிராஜ். இப்போது நயன் - சிம்பு பகுதிகளை இயக்குகிறார்.

விஷயம் கேள்விப்பட்டதிலிருந்து கலவரமாகிப் போயிருக்கும் ஹன்சிகா, 'எல்லாரும் அப்பவே உஷாரா இருக்கச் சொன்னாங்க... அவங்க சொன்ன மாதிரியே ஆகிடுச்சே,' என புலம்பி வருகிறாராம்.
தோழிகளின் சமாதானம் எதுவும் எடுபடவில்லையாம்!
சரி விடுங்க... பிரபு தேவா படத்துல கமிட் ஆனா கவலை குறைஞ்சிடப் போகுது!

balaajee
20th November 2013, 01:22 PM
சிம்பு படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு ஒன்றேகால் கோடி சிங்கிள் பேமெண்ட்!
சிம்பு படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் ஒன்றேகால் கோடி என்றும், அதையும் ஒரே தவணையில் கொடுக்க ஒப்புக் கொண்டதாலேயே அவர் நடிக்க சம்மதித்ததாகவும் தெரிய வந்துள்ளது.

பாண்டிராஜ் படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக் கொண்டுள்ளதாக பாண்டிராஜ் அறிவித்ததிலிருந்து பல்வேறு செய்திகள் றெக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்துள்ளன.

http://www.mayyam.com/img/2013/11/20-nayantara-ima-600.jpg

ஆனால் இந்தப் படத்தை நயன்தாரா ஒப்புக் கொண்டதற்கு முக்கிய காரணம், குறைந்த தேதிகள் மற்றும் அதிகபட்ச சம்பளம். கூடவே இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு கிடைக்கப் போகும் பரபரப்பு பப்ளிசிட்டி போன்றவைதானாம்.
இந்தப் படத்துக்கு அவர் குறைந்த நாட்கள் கால்ஷீட் தந்தாலே போதும் என்று பாண்டிராஜ் உறுதியளித்திருக்கிறார். காரணம் சிம்பு தொடர்பான காட்சிகள் ஏற்கெனவே ஷூட் செய்யப்பட்டுவிட்டன.
இதைத் தவிர, ஒன்றேகால் கோடி ரூபாயை ஒரே பேமெண்டாகத் தர தயாரிப்பாளரான சிம்புவும் ஒப்புக் கொண்டாராம்.

http://www.mayyam.com/img/2013/11/20-nayanara-11-600.jpg (http://gallery.oneindia.in/celebs/nayantara-13176.html) நயன்தாரா (http://gallery.oneindia.in/celebs/nayantara-13176.html)


பிரஸ் மீட் வைக்கவில்லை, ஒரு விளம்பரம் வெளியிடவில்லை. ஆனால் கடந்த சில தினங்களாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள விளம்பரம், இன்னும் பெயர் கூட வைக்கப்படாத இந்தப் படத்துக்குக் கிடைத்து வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் சிம்பு - நயன்தாரா ஜோடிதான். எனவே படத்துக்கு இது பெரிய பலம், இன்னும் சில ஆண்டுகள் கூடுதலாக பீல்டில் நிற்க உதவும் என்பதையெல்லாம் மனதில் வைத்தே இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்கிறாராம்.

balaajee
9th December 2013, 03:35 PM
அஜித்துடன் இணையும் சிம்பு! - vikatan
http://cinema.vikatan.com/uploaded/ajith%20smbu1234.jpgகௌதம் மேனன் சிம்பு, பல்லவி நடிப்பில் புதிய படத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறார். 'சட்டென்று மாறுது வானிலை' என்று முதலில் டைட்டில் வைத்தார்கள்.

இப்போது அந்த டைட்டில் இல்லை. ஏற்கனவே ரவிராஜ் என்பவர் அதே டைட்டிலில் படம் இயக்கி முடித்து 'யு' சான்றிதழ் பெற்றுள்ளார்.
இதனால் வேறு டைட்டில் வைக்கலாம் என்று தீவிர யோசனையில் இருக்கிறார் இயக்குநர் கௌதம்.

இதற்கிடையில், பிப்ரவரியில் தொடங்க இருக்கும் புதிய படம் குறித்து அஜித்திடம் பேச கௌதம் சென்றிருக்கிறார்.
'சிம்புவும் இந்தப் படத்தில் நடிக்கட்டுமே' என்று அஜித்தே முன்வந்து கேட்டதோடு, உடனே சிம்புவுக்குப் போன் போட்டு பேசினாராம்.

சிம்பு, அஜித்துடன் நடிக்க உடனே ஓ.கே.சொல்லிவிட்டாராம். இப்போது சிம்புவுக்கான போர்ஷனை மெருகேற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறார் கௌதம்.

சிம்பு தல பேசிய உற்சாகத்தில் ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறார் . ஆர்யா, விதார்த்தைத் தொடர்ந்து இப்போது சிம்புவும் அஜித் படத்தில் நடிக்கிறார்.

rachel
9th December 2013, 04:03 PM
:shock: is it true?

balaajee
9th December 2013, 04:18 PM
:shock: is it true? As GVM & STR involved......none can confirm untill movie goes to floor.....

Parthyy
9th December 2013, 05:04 PM
Hope its not true ....entirely may be some good role

uruzalari
9th December 2013, 08:33 PM
STR in Ajith Project - Baseless Rumour

http://www.indiaglitz.com/channels/tamil/article/100891.html

balaajee
23rd December 2013, 01:23 PM
Simbu @ Iplay Entertainment Zone The Magic House Stills 281628172818

balaajee
3rd January 2014, 02:55 PM
சிம்புவுக்கு டேக்கா கொடுக்கும் ஹன்சிகா படப்பிடிப்புகளுக்கு வந்து தனக்கு சிம்பு தொந்தரவு கொடுப்பதை ஹன்சிகா விரும்பவில்லையாம்.சிம்பு நயன்தாராவை காதலித்த காலத்தில் அவர் நடிக்கும் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீர் விசிட் அடித்து இன்ப அதிர்ச்சி கொடுப்பார். நயன் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்தாலும் சிம்பு பறந்துவிடுவார். இந்நிலையில் ஹன்சிகா விஷயத்தில் இது சாத்தியமில்லாமல் போய்விட்டது.ஹன்சிகா சிம்புவுக்கு ஹன்சிகாவை தினமும் பார்க்க ஆசையாம். ஆனால் ஹன்சியோ அவரை தினமும் சந்திப்பதில் ஆர்வம் காட்டவில்லையாம். சிம்பு தனது பிசியான படப்பிடிப்புகளுக்கு வருவதை ஹன்சிகா விரும்பவில்லை போன்று. அதனால் உள்ளூரில் படப்பிடிப்பு நடந்தால் அம்மணி போனை சுவிட்ச் ஆப் செய்து விடுகிறாராம். வெளியூரில் படப்பிடிப்பு நடந்தால் எங்கு நடக்கிறது என்பதை சிம்புவுக்கு தெரிவிக்காமல் எஸ்கேப் ஆகிவிடுகிறாராம்.இப்படி ஹன்சிகா தான் இருக்கும் இடத்தின் விவரங்களை கூறாமல் இருப்பதால் சிம்பு அவர் நடிக்கும் பட நிறுவனங்களை அணுகி விவரங்களை வாங்கிச் சென்று ஹன்சிகாவை சந்திக்கிறாராம்.ஹன்சிகா புத்தாண்டை அமெரிக்காவில் கொண்டாடினார். ஹன்சிக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்ல சிம்பு அமெரிக்கா பறந்ததாகக் கூறப்படுகிறது.

balaajee
9th January 2014, 06:22 PM
7 ஆண்டுகள் கழித்து இன்று நயன்தாராவை சந்தித்த சிம்பு (http://tamil.oneindia.in/movies/news/simbu-meets-nayan-after-seven-years-191031.html)

balaajee
10th January 2014, 01:49 PM
நல்லாருக்குடா தம்பி உன் இசை... குறளரசனுக்கு 'குடோஸ் 'சொன்ன சிம்பு! சென்னை: பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன் ஜோடி சேரும் படத்திற்கு சிம்புவின் தம்பியும், விஜய டி.ராஜேந்தரின் இளைய மகனுமான குறளரசன் தான் இசை என்பது ஏற்கனவே நாமறிந்த - நாடறிந்த விஷயம் தான்.
பெயரிடப் படாத அப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தற்போது, இப்படத்தின் ஒலிப்பதிவு வேலைகள் நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://tamil.oneindia.in/img/2013/12/16-kuralarasan-photos-simbu-60.jpg

இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் தம்பி குறளரசின் இசை மிகவும் அருமையாக அமைந்துள்ளதாகவும், பாண்டிராஜ் படத்தின் முதல் பாடல் பதிவு நடைபெற்று வருவதாகவும், இதனால் தான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் சிம்பு.
அதேபோல், பாண்டிராஜூம் தனது பங்கிற்கு குறளரசைப் பாராட்டியுள்ளார். அதில், நிச்சயமாக மிகவும் அருமையான பாடல். ரொம்ப சந்தோஷம். நன்றி குறள். பிரகாசமான எதிர்காலம் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது' என வாழ்த்தியுள்ளார்.
பிறகென்ன, அப்பாவை வச்சு ஒரு பட்டையைக் கிளப்பும் பாாட்டையும் போட்டு்ட்டா.. இன்னும் பிரமாதமா இருக்கும்ய்யா...!

balaajee
21st January 2014, 03:57 PM
சிரித்துப் பேசினால் சிம்புவுடன் காதலா: நயன் நர நர (http://tamil.oneindia.in/movies/heroines/love-rumours-upset-nayanthara-191798.html)

balaajee
24th January 2014, 06:10 PM
எங்களை முதலில் லவ் பண்ண விடுங்க: குமுறும் நடிகை
நடிகை தங்களை முதலில் காதலிக்க விடுமாறு பத்திரிக்கையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.புஸு புஸு நடிகை விரல் வித்தை நடிகரை காதலிப்பதாக அறிவித்தார். மேலும் தான் நடிப்பில் கவனம் செலுத்த விரும்புவதால் தற்போதைக்கு திருமணம் இல்லை என்றும் தெரிவித்தார்.இந்நிலையில் அவர்களின் காதல் முறிந்துவிட்டது என்று செய்திகள் வந்தன. ஆனால் தாங்கள் காதலர்களாக இருப்பதாக நடிகை தெரிவித்தார். காதலித்தாலும் அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதும் இல்லை, சந்தித்துக் கொள்வதும் இல்லை. இதனால் அவர்களின் காதல் இருக்கு ஆனால் இல்லை என்றது போன்று உள்ளது.இந்நிலையில் நடிகை கூறுகையில்,முதலில் எங்களை காதலிக்க விடுங்கள். மீடியாக்கள் அமைதியாக இருக்கட்டும் என்று தான் நாங்களும் அமைதியாக இருக்கிறோம். எங்கள் காதல் எதில் முடிய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? நேரம் வருகையில் இது குறித்து நிச்சயம் மீடியாவுக்கு தெரிவிப்போம் என்றார்.

balaajee
24th January 2014, 09:16 PM
நயன்தாரா வேண்டாம், ஆண்ட்ரியா வேண்டாம், ஹன்சிகா மட்டும் பதும் - சிம்பு செய்யும் வம்பு!
http://cinema.vikatan.com/uploaded/simbu%20colllllfbb.jpg
பாண்டிராஜ் இயக்கும் புதியபடத்தில் சிம்புவும், நயன்தாராவும் நடிக்கிறார்கள். தன் பழைய காதலியான நயனை ஜோடியாக்க வேண்டும் என்று சிம்பு துடித்ததாக சொன்னதும், ஹன்சிகா உடைந்து போனார்.
மீண்டும் நயனும், சிம்புவும் சந்தித்தால் என்னென்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்துகொண்டவராக, சிம்புவின் காதல் பாதையில் இருந்து தானாக விலகிக் கொண்டார்.

ஆனாலும் சிம்புவால் ஹன்சிகாவை மறக்க முடியவில்லை. காதலை புதுப்பிக்க ஹன்சிகாவை தேடிச் சென்றார். படப்பிடிப்புகள் எங்கு நடக்கிறது என்று விசாரித்து அறிந்து வெளிநாட்டுக்கே சென்றார். ஆனால் சிம்புவை சந்திக்க ஹன்சிகா மறுத்து விட்டார்.

இதற்குள் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நயன் - சிம்பு சேர்ந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.
அந்த ஸ்டில்களைப் பார்த்த ரசிகர்கள் மீண்டும் நயனைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டார் சிம்பு. அதனால் தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் சினேகமாக சிரிக்கிறார்கள், கை குலுக்கிக் கொள்கிறார்கள் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் எழுத ஆரம்பித்துவிட்டனர்.

ஆனால், சிம்புவின் மனதில் ஹன்சிகாதான் இருக்கிறார். எப்படியாவது ஹன்சிகாவுடன் மீண்டும் இணைய வேண்டும் என்று முயற்சிக்கிறார். தற்போது நடித்து முடித்து இருக்கும் 'வாலு' படத்தின் ஒரு பாடலில் தன் காதலை பகிரங்கமாக வெளிப்படுத்தி இருக்கிறார் சிம்பு.

தன் நிஜ வாழ்க்கையில் கடந்து போன சில பெண்களின் பெயர்களை பயன்படுத்தி அந்த பாட்டை இசையமைப்பாளர் தமன் அவர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளார்.அதில் நயன்தாரா வேண்டாம், ஆண்ட்ரியா வேண்டாம், ஹன்சிகா மட்டும் போதும் என்பது போல் வரிகள் வந்துள்ளன.

இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகாதான் நடிக்கிறார். இந்தப் பாடலை கேட்ட பிறகாவது ஹன்சிகா தன்னைத் தேடி வருவார் என்று நம்பிக் கொண்டிருக்கிறார் சிம்பு.

balaajee
28th January 2014, 01:02 PM
டி ராஜேந்தர் மகள் இலக்கியா திருமணம்- ஹைதராபாத் மாப்பிள்ளையை மணக்கிறார்! (http://tamil.oneindia.in/movies/news/t-rajendar-s-daughter-marriage-on-feb-10-192236.html)

balaajee
28th January 2014, 04:33 PM
நயன்தாரா.. செளகரியமும், அசெளகரியமும்: சொல்கிறார் சிம்பு (http://tamil.oneindia.in/movies/heroes/simbu-feels-at-ease-with-nayanthara-192258.html)

balaajee
3rd February 2014, 04:55 PM
நள்ளிரவில் ஹன்சிகாவோடு கேக் வெட்டி பர்த்டே கொண்டாடிய சிம்பு (http://tamil.oneindia.in/movies/news/it-s-simbu-s-day-hansika-dhanush-wish-him-very-happy-b-day-192747.html)

Russellyhd
4th February 2014, 12:56 PM
http://www.tamilcinema24.com/photo-galleries/simbu-with-anirudh-special-images/images/simbu-with-anirudh-special-images01.jpg

Russellyhd
7th February 2014, 01:40 PM
I js lik to share which movies I watched in which theaters for Simbu movies..

1. Enga Veetu Velan :oops: - Chintamani theater, Madurai

2. Sonnal Thaan Kathala :mrgreen: - Ambiga theater, Madurai

3. Kovil - Cinepriya complex, Madurai

4. Manmadhan - Cinepriya complex, Madurai

5. Thotti Jaya - Annamalai (Kalpana) theater, Madurai

6. Saravana - Annamalai (Kalpana) theater, Madurai

7. Vinnaithaandi Varuvaayaa - PVR Cinemas, Delhi (During Delhi tour :)

8. Osthi - Fame Cinemas, Surat

9. Podaa Podi - Ambigai theater, Madurai

10. Kanna Laddu Thinna Aasaiya - PVR Cinemas, Surat

balaajee
11th February 2014, 11:28 AM
STR sister Marriage 311131123113

Russellyhd
11th February 2014, 12:53 PM
http://www.tamilcinema24.com/photo-galleries/simbu-team-images/images/simbu-team-images01.jpg

Russellyhd
11th February 2014, 01:01 PM
http://www.tamilcinema24.com/photo-galleries/simbu-sister-ilakkiya-wedding/images/simbu-sister-ilakkiya-wedding05.jpg

balaajee
11th February 2014, 02:53 PM
சிம்பு தங்கை திருமண வரவேற்பில் கருணாநிதி, ரஜினி, விஜய் பங்கேற்பு (http://tamil.oneindia.in/movies/news/celebs-attend-t-rajendar-s-daughter-ilakiya-s-wedding-reception-193294.html)

balaajee
18th February 2014, 11:00 AM
காதலர் தினத்தன்று சிம்புவை 'கை கழுவிய' ஹன்சிகா? (http://tamil.oneindia.in/movies/heroines/hansika-is-single-now-193666.html)

balaajee
21st February 2014, 11:19 AM
என் அம்மா ஆலோசனைப்படி திருமணம் செய்து கொள்வேன் - ஹன்சிகா (http://tamil.oneindia.in/movies/heroines/hansika-speaks-on-her-marriage-but-not-with-simbu-193969.html)

Russellyhd
27th February 2014, 10:51 AM
http://www.dailythanthi.com/2014-02-26-Actor-Silambarasan-Media-Interview

எங்கள் காதல் முறிந்தது ‘‘நானும், ஹன்சிகாவும் பிரிந்து விட்டோம்’’ நடிகர் சிலம்பரசன் பரபரப்பு பேட்டி

‘‘நானும், ஹன்சிகாவும் பிரிந்து விட்டோம். எங்கள் காதல் முறிந்து விட்டது’’ என்று நடிகர் சிலம்பரசன் அறிவித்து இருக்கிறார்.

காதல்

நடிகர் சிலம்பரசனுக்கு முதலில் நடிகை நயன்தாராவுடன் காதல் இருந்தது. இருவரும் ‘வல்லவன்’ படத்தில் ஜோடியாக நடித்தபோது காதல் மலர்ந்தது. பின்னர் அந்த காதல் சில காரணங்களால் முறிந்து போனது. நயன்தாராவுக்கு பிரபுதேவாவுடன் காதல் ஏற்பட்டது. அந்த காதலும் சில பிரச்சினைகளால் தோல்வி அடைந்தது.

சிலம்பரசனுக்கு நடிகை ஹன்சிகாவுடன் காதல் துளிர்த்தது. இருவரும் ‘வாலு,’ ‘வேட்டை மன்னன்’ ஆகிய 2 படங்களில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது இரண்டு பேர் இடையேயும் காதல் மலர்ந்தது. இந்த காதலுக்கு ஹன்சிகா தரப்பில் கடும் எதிர்ப்பு உருவானது.

நெருக்கம்

அந்த எதிர்ப்பையும் மீறி இருவரும் அடிக்கடி சந்தித்து தங்கள் காதலை வளர்த்துக் கொண்டார்கள். சிலம்பரசன் பிறந்தநாளுக்கு ஹன்சிகாவும், ஹன்சிகா பிறந்தநாளுக்கு சிலம்பரசனும் வாழ்த்துக்களையும், பரிசு பொருட்களையும் பரிமாறி கொண்டார்கள்.

அதைத்தொடர்ந்து ஹன்சிகாவுடன் காதல் இருப்பது உண்மைதான் என்றும், அவரையே அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் சிலம்பரசன் அறிவித்தார். ஹன்சிகாவும் அதை ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக ஹன்சிகா அளித்த பேட்டியில், ‘‘சிலம்பரசனை காதலிப்பது உண்மைதான். ஆனால் 5 வருடங்கள் கழித்துதான் திருமணம் செய்து கொள்வேன்’’ என்று கூறினார்.

கருத்து வேறுபாடு

அதில் இருந்து இரண்டு பேருக்கு இடையேயும் முதன்முதலாக கருத்து வேறுபாடு உருவானது. சிலம்பரசனுடனான காதலை ஹன்சிகா குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளாததுடன், அவரிடம் இருந்து ஹன்சிகாவை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஹன்சிகாவை திடீரென்று அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார்கள். அமெரிக்கா சென்று வந்தபின், ஹன்சிகாவின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. இதற்கிடையில், ‘இது நம்ம ஆளு’ என்ற படத்தில் சிலம்பரசனும், நயன்தாராவும் மீண்டும் ஜோடி சேர்ந்தார்கள். இது, ஹன்சிகாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

சிலம்பரசன் அறிக்கை

இந்த நிலையில், ஹன்சிகாவுடனான காதல் முறிந்து போனது என்று சிலம்பரசன் நேற்று அறிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

‘‘ஹன்சிகாவுடனான என்னுடைய உறவு முறிந்து விட்டது. இந்த உறவில் நான் போதும் என்ற அளவுக்கு அனுபவப்பட்டு விட்டேன். நன்றாக சிந்தித்த பிறகே இந்த முடிவுக்கு வந்து உள்ளேன். இனிமேல் ஹன்சிகாவுக்கும், எனக்கும் எதுவும் இல்லை.

நான் கடந்ததை பற்றி வருந்தவோ, அல்லது இந்த முடிவை பற்றி பேசவோ தயாராக இல்லை. இந்த அறிவிப்பு கூட என்னுடைய நண்பர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும், ரசிகர்களுக்கும் என் மீது கொண்டுள்ள அன்பினால் கேட்கும் கேள்விகளுக்கும் நான் தரும் விளக்க உரைதான். இப்போதைக்கு நான் என்னுடைய தொழில் மீது கவனம் செலுத்தப்போகிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்.’’

இவ்வாறு அந்த அறிக்கையில் சிலம்பரசன் கூறியிருக்கிறார்.

பேட்டி

இதுதொடர்பாக, ‘தினத்தந்தி’ நிருபரிடம் சிலம்பரசன் மேலும் கூறியதாவது:–

‘‘எனக்கும், ஹன்சிகாவுக்குமான காதலில் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது. எங்கள் காதலை இனிமேல் தொடர முடியாது. எங்களுக்குள் ஒத்து வராது. அதனால் இரண்டு பேரும் கலந்து பேசி, பிரிந்து விட்டோம்.

ஆனால், எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை. எங்கள் காதல் முறிந்து போனாலும், ஹன்சிகாவுடன் நடிப்பதில் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. நாங்கள் சேர்ந்து நடிப்போம். இப்போது கூட, ஐதராபாத்தில் ‘வாலு’ படப்பிடிப்பில் இருவரும் சேர்ந்து நடித்துக்கொண்டுதான் இருக்கிறோம். மறுபடியும் ஹன்சிகாவுடன் இணைய வாய்ப்பு இருக்கிறதா? என்று எனக்கு தெரியாது.’’

மேற்கண்டவாறு சிலம்பரசன் கூறினார்.

சிலம்பரசனின் இந்த பேட்டி தொடர்பாக ஹன்சிகாவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் கருத்து சொல்ல மறுத்து விட்டார்.

balaajee
27th February 2014, 01:50 PM
http://www.dailythanthi.com/2014-02-26-Actor-Silambarasan-Media-Interview

எங்கள் காதல் முறிந்தது ‘‘நானும், ஹன்சிகாவும் பிரிந்து விட்டோம்’’ நடிகர் சிலம்பரசன் பரபரப்பு பேட்டி

‘‘நானும், ஹன்சிகாவும் பிரிந்து விட்டோம். எங்கள் காதல் முறிந்து விட்டது’’ என்று நடிகர் சிலம்பரசன் அறிவித்து இருக்கிறார்.

காதல்

நடிகர் சிலம்பரசனுக்கு முதலில் நடிகை நயன்தாராவுடன் காதல் இருந்தது. இருவரும் ‘வல்லவன்’ படத்தில் ஜோடியாக நடித்தபோது காதல் மலர்ந்தது. பின்னர் அந்த காதல் சில காரணங்களால் முறிந்து போனது. நயன்தாராவுக்கு பிரபுதேவாவுடன் காதல் ஏற்பட்டது. அந்த காதலும் சில பிரச்சினைகளால் தோல்வி அடைந்தது.

சிலம்பரசனுக்கு நடிகை ஹன்சிகாவுடன் காதல் துளிர்த்தது. இருவரும் ‘வாலு,’ ‘வேட்டை மன்னன்’ ஆகிய 2 படங்களில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது இரண்டு பேர் இடையேயும் காதல் மலர்ந்தது. இந்த காதலுக்கு ஹன்சிகா தரப்பில் கடும் எதிர்ப்பு உருவானது.

நெருக்கம்

அந்த எதிர்ப்பையும் மீறி இருவரும் அடிக்கடி சந்தித்து தங்கள் காதலை வளர்த்துக் கொண்டார்கள். சிலம்பரசன் பிறந்தநாளுக்கு ஹன்சிகாவும், ஹன்சிகா பிறந்தநாளுக்கு சிலம்பரசனும் வாழ்த்துக்களையும், பரிசு பொருட்களையும் பரிமாறி கொண்டார்கள்.

அதைத்தொடர்ந்து ஹன்சிகாவுடன் காதல் இருப்பது உண்மைதான் என்றும், அவரையே அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் சிலம்பரசன் அறிவித்தார். ஹன்சிகாவும் அதை ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக ஹன்சிகா அளித்த பேட்டியில், ‘‘சிலம்பரசனை காதலிப்பது உண்மைதான். ஆனால் 5 வருடங்கள் கழித்துதான் திருமணம் செய்து கொள்வேன்’’ என்று கூறினார்.

கருத்து வேறுபாடு

அதில் இருந்து இரண்டு பேருக்கு இடையேயும் முதன்முதலாக கருத்து வேறுபாடு உருவானது. சிலம்பரசனுடனான காதலை ஹன்சிகா குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளாததுடன், அவரிடம் இருந்து ஹன்சிகாவை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஹன்சிகாவை திடீரென்று அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார்கள். அமெரிக்கா சென்று வந்தபின், ஹன்சிகாவின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. இதற்கிடையில், ‘இது நம்ம ஆளு’ என்ற படத்தில் சிலம்பரசனும், நயன்தாராவும் மீண்டும் ஜோடி சேர்ந்தார்கள். இது, ஹன்சிகாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

சிலம்பரசன் அறிக்கை

இந்த நிலையில், ஹன்சிகாவுடனான காதல் முறிந்து போனது என்று சிலம்பரசன் நேற்று அறிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

‘‘ஹன்சிகாவுடனான என்னுடைய உறவு முறிந்து விட்டது. இந்த உறவில் நான் போதும் என்ற அளவுக்கு அனுபவப்பட்டு விட்டேன். நன்றாக சிந்தித்த பிறகே இந்த முடிவுக்கு வந்து உள்ளேன். இனிமேல் ஹன்சிகாவுக்கும், எனக்கும் எதுவும் இல்லை.

நான் கடந்ததை பற்றி வருந்தவோ, அல்லது இந்த முடிவை பற்றி பேசவோ தயாராக இல்லை. இந்த அறிவிப்பு கூட என்னுடைய நண்பர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும், ரசிகர்களுக்கும் என் மீது கொண்டுள்ள அன்பினால் கேட்கும் கேள்விகளுக்கும் நான் தரும் விளக்க உரைதான். இப்போதைக்கு நான் என்னுடைய தொழில் மீது கவனம் செலுத்தப்போகிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்.’’

இவ்வாறு அந்த அறிக்கையில் சிலம்பரசன் கூறியிருக்கிறார்.

பேட்டி

இதுதொடர்பாக, ‘தினத்தந்தி’ நிருபரிடம் சிலம்பரசன் மேலும் கூறியதாவது:–

‘‘எனக்கும், ஹன்சிகாவுக்குமான காதலில் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது. எங்கள் காதலை இனிமேல் தொடர முடியாது. எங்களுக்குள் ஒத்து வராது. அதனால் இரண்டு பேரும் கலந்து பேசி, பிரிந்து விட்டோம்.

ஆனால், எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை. எங்கள் காதல் முறிந்து போனாலும், ஹன்சிகாவுடன் நடிப்பதில் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. நாங்கள் சேர்ந்து நடிப்போம். இப்போது கூட, ஐதராபாத்தில் ‘வாலு’ படப்பிடிப்பில் இருவரும் சேர்ந்து நடித்துக்கொண்டுதான் இருக்கிறோம். மறுபடியும் ஹன்சிகாவுடன் இணைய வாய்ப்பு இருக்கிறதா? என்று எனக்கு தெரியாது.’’

மேற்கண்டவாறு சிலம்பரசன் கூறினார்.

சிலம்பரசனின் இந்த பேட்டி தொடர்பாக ஹன்சிகாவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் கருத்து சொல்ல மறுத்து விட்டார்.

3 beakups @ age 30.........

Russellyhd
27th February 2014, 01:55 PM
3 beakups @ age 30.........

ha ha.. Aish,Nayan,Hansika.. :banghead:

balaajee
27th February 2014, 06:28 PM
IBNLIVE..........Is Nayantara the reason behind Simbu and
Hansika Motwani's breakup? (http://www.mayyam.com/photogallery/15378.html)

Russellyhd
4th March 2014, 10:57 AM
Pandiraj

STR will listen my START CAMERA ACTION CUT n reel life @ shooting. In no way am responsible for real life, START UPs & CUTs..mean BREAK UPs :lol:

rachel
4th March 2014, 11:44 AM
Pandiraj

STR will listen my START CAMERA ACTION CUT n reel life @ shooting. In no way am responsible for real life, START UPs & CUTs..mean BREAK UPs :lol:

as long as those relationships don't make you bitter and sad, it's fine. i think simbu is having great time with those girls...maybe more to come :rolleyes:

balaajee
6th March 2014, 03:51 PM
வாலு படத்துக்காக மீண்டும் சேர்ந்து நடிக்கும் சிம்பு- ஹன்சிகா (http://tamil.oneindia.in/movies/heroes/simbu-hansika-join-together-vaalu-194960.html)

balaajee
6th March 2014, 03:52 PM
செல்வராகவன் புதிய படம்: சிம்பு - த்ரிஷா ஜோடி (http://tamil.oneindia.in/movies/news/simbu-trisha-selvaraghavan-movie-195003.html)

interz
6th March 2014, 04:31 PM
While Simbu is on a signing spree, the fans are asking: Eppo Simbu treatu?

Still waiting for Vaalu...

balaajee
6th March 2014, 04:47 PM
While Simbu is on a signing spree, the fans are asking: Eppo Simbu treatu?

Still waiting for Vaalu ... A love born & broke up but movie is not yet for the audience......

Death Note
7th March 2014, 08:11 AM
Simbhu and Trisha for Selva's movie. Good combination IMO. Yuvan music

Russellyhd
7th March 2014, 05:32 PM
Kaushik LM ‏@lmkmoviemaniac 7m
#Simbu #Selvaragavan film - the first schedule is slated to commence in Ramoji Rao film City, Hyderabad

Death Note
8th March 2014, 09:53 AM
ha ha.. Aish,Nayan,Hansika.. :banghead:

Who is Aish??

ajaybaskar
8th March 2014, 10:40 AM
D/o Rajnikanth

Death Note
9th March 2014, 05:39 AM
D/o Rajnikanth

Dhanush's wife?? Didn't know Simbhu and her dated.

Russellyhd
15th March 2014, 02:06 PM
Ennaachu simbu'vukku :confused2:

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%A F%81-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%A F%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%A F%8D%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%A F%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%A F%81/article5787673.ece

எனக்கு இப்பல்லாம் படம் நடிக்கவே பிடிக்கல : நடிகர் சிம்பு

இப்போ எனக்கு படம் பண்ணவே பிடிக்கல. அதான் உண்மை. வேறு ஏதாவது பண்ணலாம்னு தோணிகிட்டு இருக்கு என்று நடிகர் சிம்பு கூறியுள்ளார்.

புதுயுகம் சேனலில் 'நட்சத்திர ஜன்னல்' என்ற நிகழ்ச்சியை நடிகை சங்கீதா தொகுத்து வழங்கி வருகிறார். இதில் சிறப்பு விருந்தினராக சிம்பு கலந்து கொண்ட நிகழ்ச்சி சமீபத்தில் ஒளிபரப்பப்பட்டது.

அந்நிகழ்ச்சியில் சிம்பு பேசியதில் சில துளிகள், "சினிமாவில் எல்லா நிலைகளிலும் ஈடுபட்டு கொண்டு தான் இருக்கிறேன். தானாவே எனக்கு அமைஞ்சுடுச்சு. ஒரு சில படப்பிடிப்புகளில் இருக்கும் போது, நமக்கு சினிமாவே தெரிஞ்சுருக்க கூடாதோனு தோணும்.

சினிமா பற்றி எனக்கு ஏற்கனவே தெரியும் அப்படிங்கிறதுனால, அங்கு நடக்குற காமெடி, தப்புகள் எல்லாமே முன்கூட்டியே தெரியும். சரி என்ன பண்றது, அப்படியே பழகிடுச்சு.

இப்போ எனக்கு படம் பண்ணவே பிடிக்கல. அதான் உண்மை. வேறு ஏதாவது பண்ணலாம்னு தோணிகிட்டு இருக்கு. சின்ன வயசுல ரஜினி சார் மாதிரி வரணும் அப்படினு எல்லாம் எண்ணம் இருக்கும் இல்ல. நிறைய படங்கள் பண்ணனும் அப்படினு தோணுச்சு. 29க்கு அப்புறம் எல்லாம் வாழ்க்கையே வேறமாதிரி இருக்கு. எல்லாமே பாத்ததுக்கு அப்புறம் சினிமாவைத் தாண்டி ஏதாவது பண்ணனும்னு தோணுது.

சினிமா அப்படிங்குற வட்டத்துக்குல என்னை நான் போட்டு வச்சுருக்கேன். எனக்கு அது பிடிக்கல. நான் வெளியே வர நினைக்கிறேன். உலகத்துக்கு சினிமாவைத் தாண்டி ஏதாவது பண்ணனும்னு நினைக்கிறேன். எனக்கு பணமே பிடிக்க மாட்டேங்குது. பணத்தினால் மனிதாபிமானமே போயிடுச்சுனு நினைக்கிறேன். காசு வேணும்ங்கிறதுனால நல்லவங்க கூட கெட்டவங்களா மாறிட்டு வர்றாங்க. சமூகம் சீர்கெட்டு கொண்டிருக்கிறது. உண்மைத்தன்மை போய்விட்டது. பொறாமை அதிகமாகிவிட்டது. இதுக்கு எல்லாமே காரணம் காசு தான். உலகத்துல பணமே இருக்கக்கூடாதுனு நினைக்கிறேன்.

'வாலு' முக்கிய காட்சிகள் முடிஞ்சுடுச்சு. பாடல்கள் பாக்கியிருக்கு. அப்புறம் பாண்டிராஜ் சார் படம், வேட்டை மன்னன் ரெடியா இருக்கு, கெளதம் மேனன் சார் படம், செல்வராகவன் படம் இப்படி வரிசையா இருக்கு.

இப்போ என்னோட பெஸ்ட் ப்ரெண்ட் அனிருத் தான். ஏன்னா நான் என்ன சொன்னாலும் கேட்டுட்டு இருப்பான். பிரேம்ஜியும் கேட்பான் புரியாம கேட்பான். ஏதாவது டிஸ்கஸ் பண்ணனும்ன்னா த்ரிஷாவுக்கு போன் பண்ணி பேசுவேன். இப்போ எனக்கு தனிமையா இருக்குது கஷ்டமாக தான் இருக்கு.

இப்போ என்கிட்ட சூப்பரா ஸ்டாரா ஆகணுமானு கேட்டாங்கன்னா. எனக்கு அந்த ஆசையே இல்ல. எனக்கு இன்னும் நிறைய படங்கள் பண்ணனும், பெரிய ஸ்டாரா ஆகணும் அப்படிங்குற எண்ணம் எல்லாம் போயிடுச்சு. நமக்குனு சில கடமைகள் இருக்கும்ல, அதே மாதிரி தான் படம் பண்ணிட்டு இருக்கேன். போட்டி, பொறாமை, கோபம் இப்படி எதுவுமே இல்லை. படம் ஹிட்டானாலும், ப்ளாப் ஆனாலும் இனிமேல் என்னை பாதிக்கவே செய்யாது.

இப்போ ஏன் தனுஷோட ப்ரெண்ட்டாக இருக்க முடியுதுன்னா, போட்டி, பொறாமை, கோபம் எதுவுமே இல்லை அப்படிங்குறதுனால நான் அவரை போட்டியா பார்க்கவே இல்லை. இப்போ நான் தனுஷை, சினிமா துறையில தன்னோட வேலையை நல்லபடியா பண்ணிட்டு இருக்குற ஒருத்தரா தான் பாக்குறேன்.

நான் சூப்பரா ஸ்டாரா ஆகணும், ரஜினியா ஆகணும், கலைஞரா ஆகணும், மைக்கேல் ஜாக்சனா ஆகணும்னு சொல்லிட்டு இருக்காங்க இல்லயா.. அதே மாதிரி ஒரு கட்டத்தில் நான் சிம்புவா ஆகணும்னு சொல்லணும். அது தான் என்னோட ஆசை. என்னோட வாழ்க்கைல அது ஒண்ணு தான் ஆசை. அதை நோக்கி தான், இப்போ போயிட்டு இருக்கேன்.

நான் இந்த மாதிரி ஒரு குடும்பத்துல பிறந்திருப்பது மிகப்பெரிய பரிசா நினைக்கிறேன். வேறொரு குடும்பத்துல பிறந்து இருந்தேன்னா ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பேன். என்னோட வாழ்க்கைல என்ன நடந்தாலும் புரிஞ்சுக்கிட்டு என்கூடவே நிப்பாங்க.

எனக்கு கல்யாணம் நடக்குமா இல்லையா என்பது எனக்கே தெரியல. நிறைய விஷயங்களில் சரியான முடிவு தான் எடுப்பேன். எல்லா விஷயத்திலும் சரியான முடிவு எடுத்துட்டா கடவுள் ஆச்சே. காதலைத் தவிர மற்ற விஷயங்களில் சரியான முடிவு எடுத்துவிடுவேன். ஏன்னா, காதலில் மூளை வேலை செய்யாதே, இதயம் மட்டும் தானே வேலை செய்யும்.

என்னைப் பார்த்த தப்பா தான் தெரியும். அதுக்காக நான் எதுவுமே பண்ணாம உட்காந்து இருக்க முடியாது. என்னை யாராலும் கன்ட்ரோல் பண்ண முடியாது. கடவுளைத் தவிர வேறு யார் சொன்னாலும் கேட்க மாட்டேன். என்னை வைத்து டீல் பண்ணத் தெரிஞ்சா ரொம்ப ஈஸி. என்கிட்ட அன்பா இருந்தாங்கன்னா, அவங்க என்ன சொன்னாலும் கேட்பேன்.

நிறைய தடவை தனிமையா இருந்திருக்கேன். 30 வயது ஆயிடுச்சு இதுவரை நாம தனிமையா இருக்கோம், கல்யாணம் ஆகலையேனு நினைச்சதே கிடையாது. ஏன்னா, எனக்கு என் தங்கச்சி வீட்டில இருந்தாங்க. மனைவியா ஒரு பொண்ணு எனக்கு வீட்டுல தேவைபட்டது இல்ல. இலக்கியா கல்யாணம் ஆகி, காரில் ஹைதராபாத்திற்கு கிளம்பின உடனே அன்றைக்கு முழுநாளும் அழுதுகிட்டே இருந்தேன். அழுது, அழுது மூஞ்சு எல்லாம் வீங்கி அன்றைக்கு ஷூட்டிங் எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டாங்க.

எனக்கு வர்ற போற பொண்ணு, பொண்ணு மாதிரி இருந்தா போதும். இப்பெல்லாம் பொண்ணுங்க, பசங்க மாதிரி ஆயிட்டாங்க. எனக்கு பொண்ணு அந்த மாதிரி இருக்கணும், இந்த மாதிரி இருக்கணும் அப்படிங்கிறது எல்லாம் கிடையாது. நான் தான் வேணும் அப்படினு சொல்ற பொண்ணு தான் எனக்கு வேணும். என்ன நடந்தாலும் சரி, நான் தான் அப்படினு நின்னா எனக்கு போதும்.

நிறைய விஷயங்கள்ல என்னைப் பத்தி தப்பு தப்பா நிறைய எழுதிட்டாங்க. அதான் நான் ஓப்பனா சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. என்னால, கூட இருக்குறவங்களுக்கும் பாதிக்கப்படுறாங்க. ஆண்டரியா கூட ஒரே ஒரு நாள் நடிச்சேன். உடனே நான் ஆண்ட்ரியா கூட போயிட்டேன்னு எழுதிட்டாங்க.

திருப்பியும் நயன்தாரா கூட நடிக்கிற அப்போ எனக்கு ஒண்ணுமே தோணல. ஏன்னா, சம்பந்தமே இல்லாம நிறைய எழுதுவாங்களேனு பயந்தேன். திருப்பியும் ரெண்டு பேர் நடிக்கிற அப்போ எப்படி எடுத்துகுவாங்க. என்ன நினைப்பாங்க. ப்ளஸ்ஸா, மைனஸா அப்படினு யோசிச்சேன். இயக்குநர் வேணும்னு கேட்டார், நான் ஒ.கே சொன்னேன், அவங்களும் ஒ.கே சொன்னாங்க. நடிச்சிட்டு இருக்கோம். யாராவது ஒருத்தர் குறை சொல்லிகிட்டே இருக்காங்க. ட்விட்டர திறந்தா யாரையாவது குறை சொல்லிட்டு இருக்காங்க. அவங்களுக்கு எல்லாம் வேற வேலையே கிடையாதானு எனக்கு தெரியல.

எனக்கும் சரி, தனுஷிற்கும் சரி, எங்களை அங்கீகரிக்க தெரிஞ்சது. அதனால தான் இந்த இடத்திற்கு வந்திருக்கோம். இப்போ உள்ள நடிகர்களுக்கு அது தெரியல. அவங்களை வேற ஏதோ நினைச்சுகிறாங்க. எதனால மக்கள் அவங்கள பாக்குறாங்க அப்படிங்குறதை அவங்க புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க. இப்போ இருக்குறவங்கள்ல எனக்கு விஜய் சேதுபதி ரொம்ப பிடிச்சிருக்கு. ரொம்ப SENSIBLEஆ இருக்காரு. தலை கால் புரியாம எல்லாம் இல்ல. அவருக்கு பெரிய எதிர்காலம் இருக்குனு நினைக்கிறேன்.

என்னை பிடிக்காதவங்க தேவையில்லாம பேசி பேசி நேரத்தை வீணடிக்காதீங்க. அதை எல்லாம் விட்டுட்டு வேறு ஏதாவது வேலை இருந்தா பண்ணுங்க. என்னோட அப்பா, அம்மா தவிர என்னோட மிகப்பெரிய சொத்து என்னோட ரசிகர்கள் தான். கிட்டதட்ட 2 வருஷமா என்னோட படங்கள் எதுவுமே வரல அப்படின்னாலும், என்னை பிடிச்சுகிட்டே இருக்காங்க. அவங்களையும் நான் ரொம்ப காயப்படுத்திட்டேன்னு நினைக்கிறேன். அதுவும் கூடிய சீக்கிரத்தில் சரி பண்ணிடுவேன். " என்று கூறியுள்ளார்.

balaajee
30th March 2014, 12:59 PM
He is really affected by break-up


http://www.youtube.com/watch?v=J7WIHQUlIrc

http://www.youtube.com/watch?v=pLM8vHDHxjs

A.ANAND
30th March 2014, 02:43 PM
thambikku love ellam saripattu varathu pola,pesama 2,3 vayasu kooda ulla nalla ponna paatu kalyama panni kitta nalla irukum life-fu!!! [sontha anubavam]annan sollaren keluppa thambi simpu..

balaajee
9th April 2014, 02:10 PM
ஏப்ரல் 25ம் தேதி இணையும் திரிஷா-சிம்பு (http://tamil.oneindia.in/movies/news/simbu-trisha-together-from-april-25-197663.html)

balaajee
10th April 2014, 11:46 AM
நடிகை மகளின் காதல் முறிவை விருந்து வைத்து கொண்டாடிய அம்மா (http://tamil.oneindia.in/movies/gossip/actress-s-mom-celebrates-daughter-love-failure-197769.html)

balaajee
9th May 2014, 01:59 PM
மீண்டும் இரவு விருந்துகளில் நயன்தாரா - சிம்பு ஜோடி (http://tamil.oneindia.in/movies/news/simbu-nayanthara-pair-up-real-life-too-200497.html)

Russellyhd
12th May 2014, 01:45 PM
http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/simbu-and-nayanthara-seen-together-in-trisha-birthday-party-114051000011_1.html

மீண்டும் சிம்பு, நயன்தாரா நெருக்கம்

http://media.webdunia.com/_media/ta/img/article/2014-05/10/full/1399707935-2715.jpg

balaajee
15th May 2014, 05:22 PM
தொடங்குமா சிம்பு - செல்வராகவன் படம்?

'இரண்டாம் உலகம்' பட பிரச்சினையால் ஏப்ரலில் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த சிம்பு - செல்வராகவன் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. 'இரண்டாம் உலகம்' படத்திற்கு பிறகு சிம்பு நடிக்கவிருக்கும் படத்தினை இயக்க திட்டமிட்டார் இயக்குநர் செல்வராகவன். ஏப்ரலில் படப்பிடிப்பு துவங்க திட்டமிட்டார்கள். த்ரிஷா நாயகி, யுவன் இசை, மது அம்பாட் ஒளிப்பதிவு என படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.
தற்போது இப்படம் தொடங்குவதற்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. 'இரண்டாம் உலகம்' தோல்வியால், செல்வராகவன் - பி.வி.பி சினிமாஸ் நிறுவனத்திற்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. அப்பிரச்சினை இன்னும் முடியாததால், இப்படம் தொடங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
சிம்பு - செல்வராகவன் படத்தினை தயாரிக்க திட்டமிட்ட வருண்மணியன், "செல்வராகவன் - பி.வி.பி சினிமாஸ் இடையேயான பிரச்சினைகளை முடித்தவுடன் தான், சிம்பு படத்தினை தொடங்க முடியும்" என்று தெரிவித்திருக்கிறார்.
தற்போது 'வாலு' படத்திற்காக வெளிநாட்டில் இருக்கும் சிம்பு, சென்னை திரும்பியவுடன் பாண்டிராஜ் இயக்கத்தில் நயன்தாராவோடு நடித்து வரும் 'இது நம்ம ஆளு' படப்பிடிப்பில் கலந்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறார்.

VinodKumar's
26th May 2014, 11:26 PM
Kottallam azhichitu thirumba first la irundhu aarambikrranga :shaking:. Simbhu's latest instagram picture.

https://www.facebook.com/photo.php?fbid=10203771945083958&set=gm.716350161754493&type=1

selvakumar
27th May 2014, 08:14 AM
Eagerly waiting for Vaalu. Release cheyyandi


Sent from my iPhone using Tapatalk

balaajee
27th May 2014, 01:19 PM
நயன்தாரா - சிம்புவின் இது நம்ம ஆளு.. மீண்டும் தொடங்கியது! (http://tamil.oneindia.in/movies/news/simbu-nayan-s-idhu-namma-aalu-shoot-resumes-202038.html)

paranitharan
29th May 2014, 09:51 AM
Waiting for thalaivar's next movie.

balaajee
4th June 2014, 04:22 PM
கவுதம் மேனன் படம் கைவிடப்படவில்லை! - சிம்பு (http://tamil.oneindia.in/movies/heroes/simbu-clarifies-on-goutham-menon-movie-202734.html)

balaajee
9th June 2014, 12:34 PM
பாடாத சிம்பு நிறுத்திடு... கோச்சடையான் கிராஃபிக்சை விமர்சித்ததற்கு சவுந்தர்யா பதிலடி (http://tamil.oneindia.in/movies/news/simbu-please-don-t-sing-soundarya-rajinikanth-203016.html)

VinodKumar's
9th June 2014, 12:37 PM
thatstamil kaaranunga maari oru yechakala paper kaaaranunga yevanum irukaa maatanunga "banghead:.

Russellyhd
9th June 2014, 12:40 PM
vinod :lol:

balaajee
9th June 2014, 05:06 PM
செளந்தர்யா பற்றி கருத்து: ரசிகர்களுக்கு சிம்பு அறிவுரை - hindu

இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் தன்னைப் பற்றி கூறிய கருத்துகளுக்கு, திட்டித் தீர்த்த ரசிகர்களுக்கு சிம்பு அறிவுரை கூறியுள்ளார். 'கோச்சடையான்' படத்தினை விளம்பரப்படுத்தும் விதமாக படம் உருவான விதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விஜய் டி.வியின் 'காபி வித் டி.டி' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் பகிர்ந்து கொண்டார்.

அப்போது இந்த திரையுலகினரிடம் என்ன கேள்வி கேட்பீர்கள் என்று டி.டி கேட்டுவிட்டு, ஒவ்வொரு நடிகர் பெயராக குறிப்பிட்டுக் கொண்டே வந்தார். அதில் சிம்புவின் பெயரை குறிப்பிடும் போது செளந்தயா "பாடாதே சிம்பு நிறுத்திடு. ப்ளீஸ்" என்று குறிப்பிட்டார்.

அந்த நிகழ்ச்சி நேற்றிரவு விஜய் டி.வியில் ஒளிபரப்பான உடன், செளந்தர்யாவின் ட்விட்டர் தளத்தில் சிம்பு ரசிகர்கள் திட்டி தீர்த்தார்கள்.

இச்செயல் குறித்து சிம்பு, "அனைவருக்குமே மற்றொருவரின் செயல் குறித்து விமர்சிக்க உரிமையுண்டு. ஆகையால், எனது ரசிகர்கள் இவ்வாறு செய்வது மிகவும் தவறு. மற்றவர்களையும் என்னை மதிப்பது போல மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு மற்றும் மரியாதை ஆகியவற்றை நீங்கள் மற்றவரிகளிடமும் காட்ட வேண்டும், நன்றி. என்று தனது ட்விட்டர் தளத்தில் கூறினார்.

சிம்புவை பற்றி கூறிய கருத்து குறித்து செளந்தர்யா, " சிறுவயதில் இருந்தே எனக்கு சிம்பு நண்பர் தான். நான் விளையாட்டாக தான் கூறினேன். எங்களுக்குள் எவ்வித சண்டையும் இல்லை என்று கூறியுள்ளார்.

balaajee
9th June 2014, 05:07 PM
https://www.youtube.com/watch?v=zZwCItx2mQ8

BM
27th July 2014, 10:57 PM
:lol: Attagaasathin uchchikke poreengada.


STR crowns the new 'Young Super Star' ...
http://behindwoods.com/tamil-movies-cinema-news-14/due-to-shortage-of-prefixes-another-young-star-from-the-industry-has-taken-up-the-now-free-young-super-star.html

Earlier, we reported about STR shedding off his prefix 'Young Super Star'. He said, “I have decided to shed off these extra packages that inflates ego. Being a socially conscious person myself, I fully understand the impact these 'not so important' tags' have over the image of a growing individual. I am confident that my fans who had been very supportive to me all through my career will understand and endorse this stand of mine too.”

However, due to shortage of such fancy tags, another young star from the industry has taken up the now free 'Young Super Star' tag – none other than Premgi Amaren!

He said, “My thalaivar STR has given me his Young Super Star name. So I am Young Super Star Premgi from today.”

Best Wishes Young Super Star Premgi Amaren!

BM
27th July 2014, 11:00 PM
Premgi amaren @Premgiamaren
My thalaivar STR has given me his young super star name https://abs.twimg.com/emoji/v1/72x72/1f601.pnghttps://abs.twimg.com/emoji/v1/72x72/1f601.pnghttps://abs.twimg.com/emoji/v1/72x72/1f601.png so I am young super star premgi from today https://abs.twimg.com/emoji/v1/72x72/1f602.pnghttps://abs.twimg.com/emoji/v1/72x72/1f602.pnghttps://abs.twimg.com/emoji/v1/72x72/1f602.png @iam_strhttps://abs.twimg.com/emoji/v1/72x72/1f64f.png

Mr.GreyShirt
27th July 2014, 11:04 PM
Lol funny guy. I wish him success as the new Young Super Star!

balaajee
18th August 2014, 05:36 PM
எல்லோருக்கும் 40-45 வயதில் நடக்க வேண்டியது எனக்கு 29ல் நடந்துவிட்டது: சிம்பு (http://tamil.oneindia.in/movies/heroes/simbu-s-open-talk-about-movies-politics-208647.html)

balaajee
22nd September 2014, 02:00 PM
சர்ச்சை வீடியோவில் இருப்பது நான் இல்லை: சிம்பு

சமீபத்தில் வெளியான சர்ச்சை வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றும், அது முழுக்க முழுக்க போலியான வீடியோ என்றும் நடிகர் சிம்பு பதிலளித்துள்ளார்.
ஓர் ஓட்டல் அறைக்கு வெளியே நின்று, ஒரு இளைஞரும் யுவதியும் நெருக்கமாக முத்தமிட்டுக் கொள்ளும் வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவியது. அதில் இருப்பது கன்னட நடிகை ஹர்ஷிகாவும், சிம்புவும் தான் என்று இணையத்தில் பகிரப்பட்டது. அண்மையில் மலேசியாவில் நடந்த சைமா விருது வழங்கும் விழாவில் இருவரும் சந்தித்ததாகவும், அப்போதைய பரிச்சியத்தின் விளைவே ஹோட்டல் லாபியில் இருவரும் முத்தமிடும் வரை வந்துள்ளது என்றும் தகவல்கள் பரவின. இது குறித்து, இதுவரை சிம்புவோ, ஹர்ஷிகாவோ ஊடகங்களில் பேசவில்லை.

தற்போது, சிம்புவிடம் இதுபற்றி கேட்டபோது, அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றும், அது முழுக்க முழுக்க போலியான வீடியோ என்றும் அவர் தெரிவித்தார். மேலும், போலியான ஒரு வீடியோவிற்காக நான் ஏன் பதற வேண்டும் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

elsaen11
22nd September 2014, 02:58 PM
:lol2:

paranitharan
22nd September 2014, 05:22 PM
pal ullavan pagoda saapdraan
pal illathOr pugaichalil

PARAMASHIVAN
22nd September 2014, 06:06 PM
Narayana

Intha kosu tholla thaanga mudiyala ! Ithu satharana kosu illa, ithu ratchasa kosu, Ranguski!

ajaybaskar
22nd September 2014, 06:13 PM
Yaara Param solreenga?

paranitharan
22nd September 2014, 07:17 PM
Narayana

Intha kosu tholla thaanga mudiyala ! Ithu satharana kosu illa, ithu ratchasa kosu, Ranguski!

Premji amaran silarai kalaachitrunthapla. Avar tweets read panni tune aagi irunthen so unga post ellaam verai maathiri read panni vilunthu vilunthu sirichen.

PARAMASHIVAN
22nd September 2014, 08:38 PM
Yaara Param solreenga?

ada namma Osthi da mass pathi than ! lol

balaajee
23rd September 2014, 01:23 AM
#Simbu (https://www.facebook.com/hashtag/simbu) saved this small boys life, sponsoring his emergency medical expenses

3575
SIMBU in IRON MAN getup

balaajee
23rd September 2014, 04:02 PM
ஏழைச் சிறுவனின் சிகிச்சைக்கு நடிகர் சிம்பு நிதியுதவி: தந்தையின் நெகிழ்ச்சிப் பேட்டி - hindu

"என் மகன் அசுவத்தாமன் தற்போது நன்றாக இருக்கிறான் என்றால், அதற்கு காரணம் சிம்பு சார்தான்" என்று திருவண்ணாமலையைச் சேர்ந்த சண்முகம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். கடந்த சில நாட்களாக ராமச்சந்திரா மருத்துவமனையில் உள்ள ஒரு சிறுவனின் மருத்துவச் செலவை நடிகர் சிம்பு ஏற்றுக் கொண்டுள்ளார். தற்போது அச்சிறுவன் நன்றாக இருப்பதாக தகவல்கள், புகைப்படத்தோடு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தன.
இதை உறுதி செய்யும் விதமாக, சிம்புவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வந்த ஒரு நிலைத்தகவலை ரீ-ட்விட் செய்தார். சிம்புவின் இந்த நல்லெண்ண நடவடிக்கை, அவரது ரசிகர்கள் மத்தியில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.
உண்மையில் என்ன தான் நடந்தது, என்பதை அறிய அசுவத்தாமனின் தந்தை சண்முகத்தினைத் தொடர்பு கொண்டு பேசினேன். தனது மகனுக்கு சிம்பு செய்த உதவியை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
"எனது பெயர் சண்முகம். திருவண்ணாமலையில் உள்ள கோயிலில் தற்காலிகமாக பணியாற்றி வருகிறேன். எனது மகன் அசுவத்தாமனுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தோள்பட்டையில் பயங்கர வலி ஏற்பட்டது. திருவண்ணாமலையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தோம். ஆனால், வலி குறையவில்லை என்றவுடன் திருவண்ணாமலையில் பெரிய மருத்துவமனையை அணுகினோம்.
சிறுவயதில் விளையாடும் போது கீழே விழுந்ததில், நோய்த்தொற்று ஏற்பட்டு ரத்தம், நுரையீரல் மற்றும் எலும்பு ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று அதிர்ச்சியளித்தார்கள். உடனே சென்னைக்கு கொண்டு செல்லுங்கள் என்றவுடன் சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்த்தோம்.
ராமச்சந்திரா மருத்துவமனையில் உள்ள இலவச பிரிவில் சிகிச்சை எடுத்து வந்தோம். நுரையீரல் பாதிப்பு இருந்தாலும், செயற்கை சுவாசம் கொடுத்தாக வேண்டும் என்று கூறி, உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்க வேண்டும் என்றார்கள். ஒரு நாளைக்கு ரூ.25,000 ஆகும் என்றவுடன், எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. என்னுடைய நண்பர்கள்தான் பண உதவிகள் செய்து வந்தார்கள். ஆனால், பணம் அதிகம் தேவைப்பட்டது.
எனக்கு திருவண்ணாமலை கோயிலுக்கு வரும்போது நடிகர் சிம்புவோடு பரிச்சயம் ஏற்பட்டது. அவருடைய நண்பர் தீபனுக்கு இரவு 11:30 மணிக்கு போன் செய்து எனது மகன் பற்றிய விவரங்களை கூறினேன். 12:30 மணிக்கு என்னை சிம்பு அழைத்தார். ஒன்றும் கவலைப்பட வேண்டாம். நானே மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறிவிட்டார். மிகவும் சந்தோஷப்பட்டேன்.
சிம்புவே ராமச்சந்திரா மருத்துவமனையில் தெரிந்த மருத்துவர்களுக்கு போன்செய்து, அவரே பேசி அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டார். இப்போது சிகிச்சை முடிந்து, எனது மகன் நன்றாக இருக்கிறான். அவனை பார்க்கும்போது எல்லாம் சிம்பு செய்த உதவி தான் ஞாபகம் வருகிறது. இன்றைக்கு எனது மகன் நன்றாக இருக்கிறான் என்றால் அதற்கு காரணம் சிம்பு சார் தான்.
சந்தானம் சாரும் கொஞ்சம் உதவிகள் செய்தார். எனது மகனுக்கு அதிகமான உதவிகள் செய்தது சிம்பு சார் தான். அவருக்கு நன்றி என்று ஒரு வார்த்தையில் எல்லாம் சொல்லிவிட முடியாது.
மருத்துமனையில் இருந்து சிம்பு சாரைப் பார்க்க எனது மகனை அழைத்து சென்றேன். அப்போது எனது மகனுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தார். குழந்தையை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள், வேறு ஏதாவது உதவி என்றால் தயங்காமல் கேளுங்கள் என்றார். அவர் பேசியவுடன் கண்கள் குளமாக நின்றுக் கொண்டிருந்தேன்" என்றார்.

balaajee
17th October 2014, 11:51 AM
யாருடன் வேண்டுமானாலும் நடப்பது கல்யாணம் அல்ல: சிம்பு பேட்டி - hindu

உங்களுக்கு வரப்போற மனைவி ஹன்சிகா மாதிரி இருக்கணுமா, நயன்தாரா மாதிரி இருக்கணுமா? என்ற கேள்விக்கு, ‘‘என் மனைவி மாதிரி இருக்கணும். ஹன்சிகா, நயன்தாரா மாதிரியெல்லாம் எனக்கு மனைவி எதுக்கு?’’ என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறார் சிம்பு. சர்ச்சையான கேள்வியாக இருந்தால் வேண்டாம் என்னும் நடிகர்கள் மத்தியில், எந்தக் கேள்வி என்றாலும் பளிச்சென்று பதில் சொல்லிவிடுவார் சிம்பு. அவருடன் பேசியதிலிருந்து..
‘வாலு’, ‘இது நம்ம ஆளு’ படங்கள் எப்போ ரிலீஸ்?
‘வாலு’ படத்தில் ஒரு பாட்டு மட்டும் பாக்கி இருக்கு. நீங்க எப்போ கூப்பிட்டாலும் நடித்துக் கொடுக்கிறேன் என்று சொல்லிட்டேன். தேதி முடிவு பண்ணிட்டுச் சொல்றேன் என்று கூறியிருக்கிறார் தயாரிப்பாளர். ‘இது நம்ம ஆளு’ முக்கியக் காட்சிகள் எல்லாம் எடுத்து முடிச்சாச்சு. இன்னும் மூணு பாட்டு மட்டும் பாக்கி. ஒரு மாதத்தில் இசை தயாராகிவிடும்.

உங்களோட படங்கள் வருதோ இல்லயோ, ஆனா சர்ச்சைகள் மட்டும் வந்துகிட்டே இருக்கே. உதாரணமா அந்த வீடியோ?
வேறு யாருக்காவது இந்த மாதிரி வந்திருந்தால் அவர் க்ளோஸ். ஆனா, நமக்கு வீடியோ வந்தா அது மாஸ். நான் எதற்கு பீல் பண்ணிட்டு இருக்கணும்? நான் எதுவுமே பண்ணவில்லை என்றாலும், வாராவாரம் என்னைப் பற்றி எழுதிக்கொண்டேதான் இருக்கிறார்கள். வாராவாரம் எழுதிட்டு, அதுக்குப் பதில் சொல்லுங்க, இதுக்குப் பதில் சொல்லுங்க என்று சொன்னால், நான் என்ன சொல்லணும்னு நினைக்கிறீங்க? திடீரென்று பாம் வெடிச்சா பதற்றம் இருக்கும். தினமும் பாம் வெடித்துக்கொண்டேதான் இருக்கிறது. அப்புறம் எதுக்குப் பயப்படணும்.
வீடியோ வந்த அன்றைக்கு, என்னிடம் பதற்றமாகக் கேட்டர்கள். “அப்படியா.. வீடியோவில் நான் என்ன பண்றேன்” என்று கேட்டேன். நீங்க ஒரு பொண்ணை கிஸ் பண்றீங்க என்றார்கள். யாரையாவது கத்தி எடுத்துக் குத்திட்டேனா... கிஸ்தானே பண்ணினேன். எல்லாரும் பண்ணினதுதானே. அடுத்த தடவை நல்ல லைட் எஃபெக்ட் எல்லாம் பண்ணி வீடியோ எடுத்துப் போடலாம் என்று இருக்கிறேன். ஆனா அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை.

உதவி செய்யும் விஷயத்திலும் அஜித்தை பாலோ பண்ணுகிறீர்கள் போல?
உதவி பண்ண வேண்டும் என்று தோன்றியது பண்ணினேன். எனக்கு உதவி செஞ்சா போட்டோ எடுத்துக்கிறது எல்லாம் பிடிக்கவே பிடிக்காது. அரசியல் ஆசை இருந்தால், உதவிகள் பண்ணும்போது போட்டோ எடுத்து விளம்பரம் பண்ணிக்கொள்ளலாம். எனக்கு அரசியல் ஆசையும் கிடையாது. அஜித் சாரை இந்த விஷயத்திலும் பின்பற்றுகிறேன் என்று இல்லை. எப்போதுமே உதவி பண்ணியிருக்கேன். அதைப் பற்றி எல்லாம் சொல்லணும், பேசணும் என்று அவசியமில்லை.

நயன்தாராவுடன் காதல் பிரிவுக்குப் பிறகு நடிக்கிறீங்க. இப்போ பார்ட்டி போற அளவுக்கு நெருக்கமாகிவிட்டீர்களே?
முதல் விஷயம், நாங்க இரண்டு பேருமே சண்டை எல்லாம் போட்டுக்கொள்ளவில்லை. அந்த நேரத்தில் ஒத்துப்போகவில்லை, பிரிந்துவிட்டோம். அவ்வளவுதான். எங்கள் இருவரது மனதிலும், இப்போது எதுவுமே இல்லை. அவங்க வேலையை அவங்க பாக்குறாங்க, என் வேலையை நான் பாக்குறேன். அதனால்தான் எங்களால் இணைந்து நடிக்க முடியுது. நான், தனுஷ், நயன்தாரா, அனிருத் எல்லாருமே நட்பா இருக்கோம். அன்றைக்கு எல்லாருமே ப்ரீயா இருந்தோம். வெளியே போனோம். அவ்வளவுதான்.

இந்திப் படங்கள், தயாரிப்பு நிறுவனம் எனப் போய்க்கொண்டிருக்கும் உங்களது நண்பர் தனுஷ் வளர்ச்சியைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?
ரொம்ப சந்தோஷப்படுறேன். தமிழ் சினிமாவில் இருந்து இந்தி சினிமாவிற்குப் போனது கொஞ்ச ஆட்கள்தான். அவரது முதல் படம், அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திருக்கு. இப்போ அங்கேயும் தொடர்ச்சியா படங்கள் பண்றார். வேறொரு மொழி பேசும் திரையுலகுக்குப் போய் ஒரு நடிகர் நடிச்சு, பெயர் வாங்குறது பெரிய விஷயம். அந்த விஷயத்தில் தனுஷ் மீது எனக்குத் தனி மரியாதை உண்டு.

தங்கச்சி கல்யாணம் முடிந்தவுடன் எனது கல்யாண அறிவிப்பு இருக்கும் என்றீர்கள்?
அப்போ ஒரு பெண்ணைக் காதலித்தேன். இப்போதான் இல்லையே. வீட்டில சொன்னா உடனே கல்யாணம் வைப்பாங்க. யாரை வேண்டுமானாலும் பண்ணுவது கல்யாணம் இல்லயே. என்னைப் புரிஞ்சுக்கிட்டு வர்ற ஒரு பெண் வர்ற வரைக்கும் எனக்குக் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா கிடையாது.

இயக்குநர் சிம்பு என்ன ஆனார்?
அடுத்த வருஷம் ஒரு படம் இயக்க இருக்கிறேன். வரும் நாட்களில் நான் எந்த மாதிரி இருப்பேன், படங்கள் பண்ணுவேனா என்பதெல்லாம் சந்தேகமே. சினிமா ஈடுபாடு வரும் காலங்களில் எப்படியிருக்கும் என்பது தெரியாததால், அடுத்த வருஷம் நானே இயக்கி, நடிக்கலாம் என்று முடிவு பண்ணியிருக்கேன்.

ஆன்மிகப் பாதையில் இருந்துகொண்டே பார்ட்டிக்குப் போவது நியாயமா?
ஆன்மிகத்தில் நிறைய வழிகள் இருக்கின்றன. நான் ஆன்மிகத்திற்குள் போனதுக்குப் பிறகுதான் நிறைய பார்ட்டிகளுக்குப் போக ஆரம்பித்தேன். முதல்ல நான் யாருக்காக வாழ்கிறேன்? நான் முதல்ல என்னைச் சந்தோஷமா வைச்சுக்கணும். நான் சந்தோஷமா இருந்தால்தான், என்னைச் சுற்றி இருக்கிறவங்க சந்தோஷமா இருக்க முடியும். ஆன்மிகத்திற்குள் போன பிறகுதான், நான் வெளியே போக ஆரம்பித்தேன்.

காதலித்துத் தோல்வியடையாமல் இருக்க என்ன பண்ணணும்?
காதல் அப்படின்னாலே இரண்டு பேர் கிடையாது. காதலிக்க ஆரம்பித்த உடனே நீங்க ஒருத்தர்தான் அப்படின்னு ரெண்டு பேருமே உணரணும். ஒருத்தருக்கு அது புரியல, புரிய வைக்க முடியலன்னாலும் அது வேலைக்கு ஆவாது. எல்லா விஷயத்தையும் நாம கட்டாயப்படுத்த முடியாது. ஒரு சில விஷயங்களில் விட்டுக் கொடுத்துதான் ஆகணும்.

உங்களுடைய காதல் கதையை ஒரு படமாக எடுத்தால் என்ன?
என்னோட காதல் கதையைப் படமா எடுத்தால், பலருக்கு நெஞ்சு வலிதான் வரும். நிறைய சர்ச்சைகள் இருக்கும், சோகங்கள் இருக்கும். என்னோட சோகம் எல்லாம் என்னோடயே இருக்கட்டுமே.

ஹன்சிகா, நயன்தாரா திரும்பவும் உங்ககிட்ட வந்து காதலிக்கிறேன்னு சொன்னா ஏற்றுக்கொள்வீர்களா?
யாரா வேண்டுமானாலும் இருக்கட்டும். ஒரு பொண்ணு வந்து, எனக்கு உன்னை மட்டும்தான் பிடிக்கும். உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னா பண்ணிப்பேன். 100% எனக்குப் பிடிக்கணும். அதுதான் விஷயம்.

balaajee
11th November 2014, 01:32 PM
கேப்டன் மகனுக்காக பாடல் பாடிய சிம்பு !
அ (javascript:;) அ (javascript:;)
விஜயகாந்தின் ’வல்லரசு’, ’நரசிம்மா’, ’தென்னவன்’, ’சுதேசி’, ’அரசாங்கம்’, ’விருதகிரி’ போன்ற வெற்றி படங்களை தயாரித்த திரு.எல்.கே.சுதீஷ் இப்போது விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் ’சகாப்தம்’ படத்தை மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமாக தயாரிக்கிறார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களான ஆளியார் டேம், வால்பாறை, ஆனைமலை போன்ற பகுதிகளில் 25 நாட்களும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கும்பகோணத்திலும் 20 நாட்கள் நடைபெற்றுள்ளது.

தற்போது இதன் மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு வெளிநாடு சென்றுள்ளார்கள். மலேசியாவில் உள்ள கோலாலம்பூர், லங்காவி மற்றும் பேங்காக்கிலும் 35 நாட்கள் படமெடுத்து படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதில் நாயகிகளாக மிஸ்-இந்தியா பட்டம் வென்ற நேகாவும், மிஸ் பெங்களூர் பட்டம் வென்ற சுப்ரா ஐயப்பாவும் அறிமுகமாகிறார்கள். இவர்களோடு சிங்கம்புலி, ஜெகன், பவர்ஸ்டார் டாக்டர்.சீனிவாசன், தேவயாணி, ரஞ்சித், ராஜேந்திரநாத், சண்முகராஜன், பன்னீர் புஷ்பங்கள் சுரேஷ், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்காக சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார். இதில் சிறப்பு தோற்றத்தில் விஜய்காந்த் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

balaajee
10th December 2014, 05:48 PM
Yearender 2014: Most shocking celebrity splits this year - IBN

Hansika Motwani and Simbu: Hansika Motwani called it quits with Simbu in February. The reason behind their breakup was the entry of another woman in Simbu's life.(???)


http://ibnlive.in.com/photogallery/17415.html

nickraman
15th December 2014, 07:44 AM
Yearender 2014: Most shocking celebrity splits this year - IBN

Hansika Motwani and Simbu: Hansika Motwani called it quits with Simbu in February. The reason behind their breakup was the entry of another woman in Simbu's life.(???)


http://ibnlive.in.com/photogallery/17415.html

Nayantara re-entry :P

balaajee
23rd January 2015, 02:07 PM
எனக்கும் ரசிகர்களுக்கும் இடையே உள்ள பந்தத்தை பலப்படுத்துவேன் - சிம்பு! பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு , நயன்தாரா, ஆண்ட்ரியா சூரி நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘இது நம்ம ஆளு’. படம் கோடைகால விடுமுறை சிறப்பாக வெளியாக உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்தின் டீஸர் கடந்த ஜனவரி 15ம் தேதி பொங்கல் தினத்தில் வெளியானது. இதுவரை படத்தின் டீஸரை 15 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.டீஸரில் சூரியின் கவுண்டர் டயலாக்குகளும், காதல், பெண்கள் குறித்து சிம்பு பேசும் வசனங்களும் இளைஞர்களை சற்றே கவர்ந்திழுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனக்களித்த ஆதரவால் மகிழ்ச்சியடைந்துள்ளார் சிம்பு. இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, 'என் படத்துக்கு ரசிகர்கள் இடையே கிடைத்து உள்ள இந்த வரவேற்பு மகத்தானது. என் ரசிகர்களுக்கு மட்டுமின்றி எல்லோருக்கும் பிடித்த வகையில் இருப்பது எனக்கு மிக்கவும் மகிழ்ச்சி.இடைவெளிக்கு பிறகும் எனக்கும் என் படங்களுக்கும் இந்த அளவுக்கு வரவேற்ப்பு கொடுத்து இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. எனக்கும் அவர்களுக்கும் உள்ள பந்தத்தை பலப்படுத்தி அவர்களுக்காகவே மேலும் நல்ல படங்கள் தர வேண்டும் என உறுதியாக இருக்கிறேன்' என்று தன்னம்பிக்கை கண்ணில் மிளிர கூறினார் எஸ் டி ஆர்.

balaajee
1st February 2015, 10:49 PM
Photoshoot
39443945

balaajee
3rd February 2015, 08:39 PM
STR ‏@iam_str (https://twitter.com/iam_str) 5m5 minutes ago (https://twitter.com/iam_str/status/562626053399519234) It's bin 30 years in cinema and all my success and credit goes to 1 man who trusted on me when I was 9 months old ... My guru my dad #TR (https://twitter.com/hashtag/TR?src=hash)

balaajee
3rd February 2015, 08:40 PM
STR ‏@iam_str (https://twitter.com/iam_str) 10m10 minutes ago (https://twitter.com/iam_str/status/562625385267867650) Thank to all media and press for ur support ..din have a release for two years , still u guys have never put me down ... Thank u so much :)


STR ‏@iam_str (https://twitter.com/iam_str) 9m9 minutes ago (https://twitter.com/iam_str/status/562625705746251777)
Special thanks to my friends who stood by me at my tough times and I realised who my real friends are ... Thanks for the immense love :)

Russellmvr
5th February 2015, 03:18 PM
http://movies.ndtv.com/regional/tamil-actor-simbus-mentally-ill-tweet-provokes-outrage-on-twitter-737160

Mr.GreyShirt
5th February 2015, 05:56 PM
He first needs to make a movie everyone likes; then he can speak about liking other movies.

uruzalari
6th February 2015, 01:32 AM
என்ன ஒரு புத்திசாலித்தனம்

3960

balaajee
6th February 2015, 08:33 PM
Birthday cake

3967

balaajee
11th February 2015, 11:29 AM
selvaraghavan ‏@selvaraghavan 15h15 hours ago (https://twitter.com/selvaraghavan/status/565169043070410754) Happy to announce my next project with @iam_str (https://twitter.com/iam_str) . it's sure to be something you'll all enjoy. Looking forward #longdue (https://twitter.com/hashtag/longdue?src=hash) #yuvan (https://twitter.com/hashtag/yuvan?src=hash) #str (https://twitter.com/hashtag/str?src=hash) #selva (https://twitter.com/hashtag/selva?src=hash)


Dhanush ‏@dhanushkraja 14h14 hours ago (https://twitter.com/dhanushkraja/status/565177732254818304) my anna @selvaraghavan (https://twitter.com/selvaraghavan) nd my thambi @iam_str (https://twitter.com/iam_str) come together:)all d best bros.im sure it's gonna be great.simbu get ready 2 learn 4m d best.

balaajee
11th February 2015, 11:39 AM
கௌதமின் அடுத்தப் படம், அச்சம் என்பது மடமையடா

கௌதம் இயக்கிய வாரணம் ஆயிரம், பச்சைக்கிளி முத்துச்சரம், விண்ணைத்தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடு ஆகியவை பிரபல பாடல் வரிகளை பெயராகக் கொண்டவை. என்னை அறிந்தால் கூட, எம்ஜிஆரின் உன்னை அறிந்தால் பாடலின் சாயலில் வைக்கப்பட்டதுதான்.
http://media.webdunia.com/_media/ta/img/article/2015-02/07/full/1423284739-83.jpg

அடுத்து சிம்புவை வைத்து இயக்கும் படத்துக்கு கௌதம், சட்டென்று மாறுது வானிலை என்ற தனது படத்தில் இடம்பெற்ற பாடல் வரியையே பெயராக வைத்தார். ஆனால் அதனை ஏற்கனவே ஒருவர் பதிவு செய்திருந்ததால் வேறு பெயரை பரிசீலனை செய்து வந்தனர்.

தற்போது பெயர் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதுவும் எம்ஜிஆர் பாடல் வரிதான். அச்சம் என்பது மடமையடா.

என்னை அறிந்தால் படத்துக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட இப்படம், என்னை அறிந்தால் வெளியாகிவிட்ட நிலையில் மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

balaajee
14th February 2015, 04:12 PM
3 காதலைத் தாண்டி வந்து விட்டேன் என்பதையே நம்ப முடியவில்லை... சிம்பு

நயன், ஹன்சிகா காதல் முறிந்துவிட்டதே என்று அதையே நினைத்துக் கொண்டிருக்க முடியாது. இதை உணர்ந்ததால் தான் என்னால் தற்போதும் ஹன்சிகா, நயன்தாராவுடன் நடிக்க முடிகிறது.


தற்போது காதல் ஒரு பிளஸ் மற்றும் ஒரு மைனஸ் ஆக உள்ளது. முன்பெல்லாம் காதல் தோல்வி அடைந்தால் அந்த பெண்ணை பழிவாங்கத் துடித்தோம். தற்போது அந்த எண்ணம் இல்லாமல் அடுத்த வேலையை கவனிக்கச் செல்வது பிளஸ். ஆனால் பலர் இஷ்டத்திற்கு ஜாலியாக காதலிக்கிறார்கள். அதை காதல் என்று வேறு தவறாக நினைப்பது தான் மைனஸ்.


நான் காதலிப்பதே வேடிக்கை தான். என்னை போன்றவன் காதலிக்க முடியாது. அப்படி இருந்தும் நான் 3 காதலை தாண்டி வந்துவிட்டேன் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை.


காதலில் தோல்வி ஏற்பட்டால் உடனே அழக் கூடாது. நடந்தது நன்மைக்கே என்று நினைத்து வாழ்க்கையைத் தொடர வேண்டு


நான் ஏன் திருமணம் செய்ய வேண்டும்? நான் ஒன்றும் திருமணத்திற்கு எதிரானவன் கிடையாது. நல்ல புரிதல் உள்ள ஆணும், பெண்ணும் செய்து கொள்வது தான் திருமணம். தற்போது விவாகரத்தும் அதிகரித்துவிட்டது. சூழ்நிலைக்கேற்ப என்னையே மாற்றிக் கொள்வேன். யாரோ ஒரு பெண்ணை பார்த்து, பேசி, திருமணம் செய்து கொள்ள முடியாது. சாகும் வரை இவளிடம் தோற்கலாம் என்று நினைக்கும் அளவுக்கு உள்ள பெண் கிடைத்த பிறகே திருமணம்.

balaajee
5th March 2015, 12:58 PM
STR @ மஞ்சு மனோஜின் திருமண நிச்சயதார்த்தம்
http://media.webdunia.com/_media/ta/img/article/2015-03/05/full/1425528969-6775.jpg

balaajee
6th March 2015, 02:29 PM
sridevi sreedhar ‏@srikutty45 (https://twitter.com/srikutty45) 3h3 hours ago (https://twitter.com/srikutty45/status/573723156059283456) @iam_str (https://twitter.com/iam_str) to start @selvaraghavan (https://twitter.com/selvaraghavan) film in April. Hrd its an awesome script. Lookin forward 2 a good film from director
https://pbs.twimg.com/media/B_ZGK1uUIAAMtmN.jpg
(https://twitter.com/srikutty45/status/573723156059283456/photo/1)

ilayapuyalvinodh_kumar
6th March 2015, 03:16 PM
Lethal Combo....

balaajee
18th March 2015, 05:42 PM
நீங்கள் பெருமைப் படும்படி மாறுவேன் - சிம்பு! - Vikatan

கௌதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் , பல்லவி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அச்சம் என்பது மடமையடா’. படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். தாமரை மற்றும் மதன் கார்க்கி படத்திற்கு பாடல்கள் எழுதுகின்றனர்.
‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தை போலவே இப்படத்திற்கும் அதீத எதிர்பார்ப்புகள் எகிறி உள்ளன. அந்த படத்தின் பாடல்களும் சரி, படமும் சரி இப்போதும் இளசுகளின் டாப் விருப்பமாக இருந்து வருகிறது. அந்த லிஸ்டில் தற்போது அடுத்த படம் உருவாகி வருகிறது ‘அச்சம் என்பது மடமையடா’.
http://cinema.vikatan.com/uploaded/tamil-actor-poda-podi-simbu-stills-poda-podi-varalakshmi-stills22.jpg
தற்போது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன என தனது ட்விட்டர் பக்கத்தில் சிம்பு தெரிவித்துள்ளார். மேலும் இந்த குழுவுடன் இணைந்து பணியாற்றியது மன அமைதியை தருகிறது. ஏப்ரல் வரை காத்திருக்க முடியவில்லை. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் என ட்வீட் செய்துள்ளார்.

இந்நிலையில் தனது அடுத்த ட்வீட்டில், நேற்று ‘வாலு’ படம் தள்ளிப்போவதால் சற்றே மன உளைச்சலுடன் ஒரு ட்வீட் செய்திருந்தார். அதற்கு பதில் கூறும் வகையில் , கொஞ்சம் அப்செட், இப்போ ஓகே, எனது ரசிகர்களான உங்களின் அன்புக்கு நன்றிகள். கண்டிப்பாக நீங்கள் பெருமை படுமளவிற்கு வருவேன் , நீங்க இல்லாம நான் இல்ல’ என ட்வீட் செய்துள்ளார்.

balaajee
24th March 2015, 11:30 AM
செல்வராகவன் படம் - சிம்புவுடன் நடிக்கும் த்ரிஷா, தாப்ஸி.....webulagam

தனுஷின் வுண்டர்பார் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கும் படம் அடுத்த மாதம் தொடங்குகிறது. சிம்பு ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் இரண்டு நாயகிகள் இருக்கிறார்கள்.

http://media.webdunia.com/_media/ta/img/article/2015-03/24/full/1427170199-619.jpg


செல்வராகவன் படத்தில் நாயகிகளுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். இந்தப் படத்திலும் அப்படியே. த்ரிஷா மற்றும் தாப்ஸி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.


http://media.webdunia.com/_media/ta/img/article/2015-03/24/full/1427170815-2657.jpg


முக்கியமான விஷயம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்கிறார். செல்வா - யுவன் என்ற வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைவது இசை ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம்.

balaajee
27th March 2015, 12:31 PM
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் சிம்பு... இசை அனிருத்!

balaajee
30th March 2015, 04:10 PM
ஆஃப் த ரெக்கார்டு! - vikatan


புத்த இயக்குனர் இயக்கத்தில் விரல் நடிகர் நடிக்கும் படத்தில், காணாமல் போன ஹீரோயினைத் தேடிக் கண்டுபிடிக்கும் கேரக்டராம். ஆனால் ஹீரோவே அவ்வப்போது ஷூட்டிங்கில் காணாமல் போய்விடுவதுதான் கடுப்பு.

balaajee
23rd April 2015, 05:39 PM
கௌதம் மேனன், சிம்பு படத்தில் ராணா

ஆரம்பம் கொடுத்த எண்ட்ரி ராணாவிற்கு இப்போது கோலிவுட்டில் அடிக்கடி வாய்ப்புகள் குவிய துவங்கி விட்டன. ஏற்கனவே தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘பகுபலி’ , தமிழில் ’மகாபலி’ என்னும் பெயரில் வெளியாக உள்ளது.

இதுமட்டுமின்றி தமிழில் உருவாகும் மலையாள ‘பெங்களூரு டேஸ்’ ரீமேக் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் , பல்லவி நடித்து வரும் படம் ‘அச்சம் என்பது மடமையடா’.
‘என்னை அறிந்தால்’ படத்திற்காக இந்த படத்தை பாதியில் நிறுத்தி வைத்திருந்து இப்போது மீண்டும் துவங்கி நடந்து வருகிறது. இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ராணா நடிக்க இருக்கிறார்.

சமீபத்தில் சென்னையில் பிரபல ஸ்டார் ஹோட்டலில் ராணாவை சந்தித்த கௌதம் மேனன் படத்தின் கதை மற்றும் ராணாவின் ரோல் குறித்து விளக்கவே ராணாவும் ஓகே சொல்லிவிட்டாராம். எனவே அச்சம் என்பது மடமையடா படத்தில் ராணா சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்.

balaajee
30th April 2015, 03:37 PM
ஆரம்பமானது செல்வராகவன் படம்! சிம்பு ஹாப்பி !

சிலம்பரசன் நடிக்கவிருக்கும் அடுத்தப் படத்தினை செல்வராகவன் இயக்குகிறார். முன்னதாக படத்திற்கான போட்டோ ஷூட் நிறைவடைந்துவிட்டது.

இரண்டாம் உலகம் படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிம்புவை வைத்து அடுத்தப் படத்தினை இயக்கவிருக்கிறார் செல்வராகவன். சிம்புவுக்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் டாப்ஸி நடிக்கிறார்கள். முக்கிய கதாப்பாத்திரத்தில் ஜெகபதி பாபு நடிக்கிறார்.

http://img.vikatan.com/news/2015/04/30/images/hqdefault.jpg
படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா. செல்வராகவனின் நெருங்கிய நண்பரான அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ஏற்கெனவே செல்வராகவனின் காதல்கொண்டேன், புதுப்பேட்டை மற்றும் 7ஜி ஜெயின்போ காலனி உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.

சிம்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ இயக்குநர் செல்வராகவனின் படத்திற்கான போட்டோ ஷூட் முடிந்துவிட்டது. க்ரேட் வோர்க் வித் த்ரிஷா, டாப்ஸி, ஜெகபதி சார்” என்று டிவிட் செய்திருக்கிறார். சிம்புவின் வாலு படம் மே 9 வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

balaajee
6th May 2015, 11:09 AM
கௌதம், சிம்பு படம் - நாயகி பல்லவி சுபாஷ் நீக்கம்

என்னை அறிந்தால் படத்துக்கு முன்பு கௌதம் சிம்புவை வைத்து ஒரு படத்தை தொடங்கினார். என்னை அறிந்தால் வாய்ப்பு கிடைத்ததும் அதனை நிறுத்தி வைத்தார். தற்போது அந்தப் படம் மீண்டும் டேக் ஆஃப் ஆகியுள்ளது.
http://media.webdunia.com/_media/ta/img/article/2015-05/06/full/1430888859-0866.jpg

அச்சம் என்பது மடமையடா என பெயர் வைக்கப்பட்டிருக்கும் அப்படத்தில் பல்லவி சுபாஷ் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். தற்போது அவர் படத்தில் இல்லை.

கௌதம் திடீரென என்னை அறிந்தால் படத்துக்குப் போனதால் பல்லவி சுபாஷ் தந்த தேதிகள் வீணாகிவிட்டதாகவும், தற்போது அவர் வேறு வேலைகளில் பிஸியாக இருப்பதால் மீண்டும் கால்ஷீட் தரவில்லை எனவும் கூறப்படுகிறது.

தற்போது வேறு நாயகியை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

balaajee
8th May 2015, 11:49 AM
கௌதம் படத்தில் சிம்புவோடு சேருகிறார் சமந்தா !


கௌதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அச்சம்என்பதுமடமையடா படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த பல்லவிசுபாஷ், படத்திலிருந்து விலகிவிட்டார். படம் மிகவும் தாமதமாவதால் அவர் விலகிக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது. அதற்குப் பிறகு இந்தப்படத்தில் நாயகியாக நடிக்க வைப்பதற்காகப் பல பெயர்களைப் பரிசீலித்தாராம் கௌதம்மேனன்.


கடைசியாக அவர் செய்திருக்கும் முடிவின்படி சிம்பு ஜோடியாக நடிக்கவிருப்பவர் சமந்தா என்று சொல்லப்படுகிறது. சமந்தா இப்போது விக்ரமுடன் பத்துஎண்றதுக்குள்ள, சூர்யவுடன் 24, தனுஷ் படம் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இது தவிர தெலுங்கிலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம். எனவே அவருடைய தேதிகள் கிடைப்பது கடினமாக இருக்கிறதாம். இருந்தாலும் கௌதம் படத்தில் நடிக்க சமந்தா தயாராக இருப்பதால் தேதிகள் எப்போது என்பதை முடிவு செய்துவிட்டு அதுபற்றிய அறிவிப்பை வெளியிடலாம் என்று இருக்கிறார்களாம்.

சமந்தாவை நடிக்க வைக்க இன்னொரு காரணமும் இருக்கிறதென்று சொல்கிறார்கள். விண்ணைத்தாண்டிவருவாயா படத்தின் தெலுங்குப்பதிப்பில் சமந்தா நடித்திருந்தார். இந்தப்படத்தையும் அதுபோலவே தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் எடுக்கத் திட்டமிடுகிறாராம் கௌதம்மேனன். அதனால் இரண்டு மொழிகளிலும் பிரபலமாக இருக்கும் சமந்தாவையே நாயகியாக்கிவிடலாம் என்ற அவர் முடிவு செய்திருக்கிறாராம். சிம்புவுக்கும் இதில் சம்மதம் என்பதால் சமந்தாவின் தேதிகள் கிடைத்ததும் வேகமாகப் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்று சொல்கிறார்கள்.

balaajee
11th May 2015, 01:45 PM
STR's emotional speech

https://www.youtube.com/watch?v=U4ububYgoo4

A.ANAND
11th May 2015, 02:46 PM
STR's emotional speech

https://www.youtube.com/watch?v=U4ububYgoo4

ithukkuthan SS sonna mathiri 'romba mela pona keela viluntha adi balama irukkum,athanala konjam tarayila irukka katthukanum'innu panam kottana aadarale..athey mathiri pirachana vantha nee than samalikanum jimbu sar..vazhakaila ithellam jagajam pa..

balaajee
13th May 2015, 05:40 PM
மீண்டும் சிம்பு படத்தில் திருப்பம்...ஹீரோயினாக மஞ்சிமா மோகன்

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘அச்சம் என்பது மடமையடா' படத்தின் நாயகியாக மலையாள நடிகை மஞ்சிமா மோகன் நடிக்க இருக்கிறார். இதற்கு முன்பு பல்லவி சுபாஷ் தேர்வு செய்யப்படிருந்தார். மேலும் அவரது கால்ஷீட் பிசி காரணமாக அவருக்கு பதில் சமந்தா நடிப்பார் என கூறப்பட்டது.

சமந்தாவும் தொடர்ச்சியாக ’விஐபி 2’, ‘24’,’விஜய் 59’ என பிசியாக இருப்பதால் கால்ஷீட் கிடைக்கவில்லை என்பதால் தற்போது மஞ்சிமா மோகன் தேர்வாகியுள்ளார். சமீபத்தில் வெளியான மலையாள படமான ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ படத்தில் இவரது நடிப்பை பார்த்து கௌதம் மேனன் இவரைத் தேர்வு செய்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



மஞ்சிமா மோகன் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்தவர். மேலும் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான மாநில விருதும் பெற்றவர். இந்நிலையில் தெலுங்கில் உருவாக உள்ள ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் ஹீரோ நாக சைதன்யா என்பது உறுதியான நிலையில் இரு மொழி படங்களையும் ஒரே நேரத்தில் எடுக்க இருக்கும் கௌதம் மேனன் தெலுங்கிலும் மஞ்சிமாவையே நடிக்க வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

balaajee
14th May 2015, 11:53 AM
மதியம் வந்தால் போதும்- கௌதம் படத்தில் சிம்புவுக்குச் சலுகை.

கௌதம் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அச்சம்என்பதுமடமையடா படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக நடந்துகொண்டிருக்கிறதாம். தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் ஒரேநேரத்தில் தயாராகும் இந்தப்படத்தில் தமிழில் நாயகனாக சிம்புவும் தெலுங்கில் நாயகனாக நாகசைதன்யாவும் நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தற்பொழுது இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்துகொண்டிருக்கிறது. தமிழில் எடுத்துவிட்டு அப்புறம் தெலுங்கு என்றில்லாமல் தினமும் இரண்டுமொழிகளுக்கும் சேர்த்தே படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள். இதனால் தெலுங்கு நாயகன் நாகசைதன்யா சென்னை வந்திருக்கிறாராம். அவருக்குத் தினமும் அரைநாள்தான் படப்பிடிப்பு.
காலையில் அவர் சம்பந்தப்பட்ட தெலுங்குப்படத்தின் காட்சிகளைப் படமாக்குகிறாராம் கௌதம். மதியத்துக்கு மேல் சிம்பு நடிக்கிறாராம். அவர் தூங்கி எழுந்து தயாராகிப் படப்பிடிப்புக்கு வர மதியமாகிவிடும் என்று வழக்கமாகச் சொல்லப்படும். அதனாலேயே அவருக்கு மதியத்துக்கு மேல் படப்பிடிப்பு வைத்துவிட்டார் போலும். சிம்பு வந்ததும், தமிழ்ப்படத்துக்கான காட்சிகள் படமாக்கப்படுகின்றனவாம்.

நாயகியாக நடிக்கும் மஞ்சிமாமோகனுக்குத்தான் ஓய்வில்லை. இரண்டு மொழிகளிலும் அவர்தான் நாயகி என்பதால் முழுநாளும் படப்பிடிப்பில் இருக்கவேண்டும். ஒரு நடிகை முழுநாள் படப்பிடிப்பில் இருப்பதிலொன்றும் சிக்கலில்லை, மலையாளப்பெண்ணான அவர், காலையில் தெலுங்கு பேசுவதுபோல் வாயசைக்கவேண்டும் மாலையில் தமிழ்பேசுவதுபோல வாயசைக்கவேண்டும் என்பதுதான் கஷ்டம்.

balaajee
15th May 2015, 12:16 PM
துவங்கியது சிம்பு - செல்வராகவன் படம் !
http://img.vikatan.com/album/2015/05/nmzmnw/thumb/104583.jpg (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4226&p_id=104583) http://img.vikatan.com/album/2015/05/nmzmnw/thumb/104584.jpg (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4226&p_id=104584) http://img.vikatan.com/album/2015/05/nmzmnw/thumb/104585.jpg (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4226&p_id=104585)

balaajee
15th May 2015, 10:50 PM
திருட்டுக் கல்யாணம் - சிம்பு பாடும் ஆச மேல ஆச பாடல் மேக்கிங் வீடியோ!

https://www.youtube.com/watch?v=bkLaNARkqLI

balaajee
20th May 2015, 02:08 PM
சிம்பு நடித்த படங்கள் வெளியாகாமல் இருந்தாலும் புதியபடங்களில் அவரை ஒப்பந்தம் செய்யப் பலரும் ஆர்வம் காட்டிவருவது வியப்பான செய்திதான். அவர் இப்போது கௌதம்மேனனின் அச்சம்என்பதுமடமையடா, செல்வராகவனின் படம் ஆகியனவற்றில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்தப்படங்களைத் தொடர்ந்து, உதயநிதியின் மனைவி கிருத்திகாஉதயநிதியின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. திரைக்கதை எழுதும் வேலைகளை முழுமையாக முடித்துவிட்டுப் படப்பிடிப்பைத் தொடங்கத் தயாராகிவிட்டாராம் இயக்குநர் கிருத்திகாஉதயநிதி. இந்நிலையில் அந்தப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் சிக்கல் ஏற்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இதனால் எப்போது படப்பிடிப்பு என்று திட்டமிடுவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறதாம். இந்நிலையில் இந்தச்சிக்கலை அறிந்த உதயநிதி அதில் தலையிட்டுச் சிக்கலைத் தீர்த்துவைத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால் கௌதம்மேனன் மற்றும் செல்வராகவனின் படப்பிடிப்புகள் முடிவடைகிற நேரத்தில் கிருத்திகா இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்று சொல்கிறார்கள்.

இந்த மூன்றுபடங்களையும் முடித்துவிட்டுத்தான் அடுத்த படங்களை ஒப்புக்கொள்வது என்று உறுதியாகச் சொல்லியிருக்கிறாராம் சிம்பு. அது மட்டுமின்றி முதலில் வாலு, அடுத்து இதுநம்மஆளு ஆகிய படங்களை வெளியிடுவதும் வேகமாக நடக்கவேண்டும் என்பதிலும் கவனமாக இருக்கிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்

balaajee
28th May 2015, 12:45 PM
செல்வராகவன், சிம்பு இணையும் படத்தின் பெயர் கான்

இரண்டாம் உலகம் தோல்விக்குப் பிறகு செல்வராகவன் சிம்புவை வைத்து படம் இயக்குகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
http://media.webdunia.com/_media/ta/img/article/2015-05/15/full/1431694550-4482.jpg

இந்தப் படத்தில் தாப்ஸி, கேத்ரின் தெரேசா ஆகியோர் நடிக்கின்றனர். ஆக்ஷன் த்ரில்லராக படம் தயாராகிறது. யுவன் இசையமைக்க, அர்விந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த முக்கூட்டணி பல வருடங்களுக்குப் பிறகு இணைந்துள்ளது.

இந்தப் படத்துக்கு கான் என்று பெயர் வைத்துள்ளனர். கான் என்றால் தமிழில் காடு என்று அர்த்தம். இதில் சிம்பு முருக பக்தராகவும், தாப்ஸி போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கின்றனர்

balaajee
28th May 2015, 08:23 PM
எனக்கு என் ரசிகர்கள் இருக்கிறார்கள்.. சிம்பு அதிரடி

’வாலு’ படம் பல போராட்டங்களை கடந்து ஜூன் மாதம் 12ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது, ஒரு படத்திற்கு இத்தனை முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போடப்பட்ட படம் சிம்புவின் ‘வாலு’ படமாகத்தான் இருக்கும்.'விஸ்வரூபம்’, ‘மாஸ்’ , ’என்னை அறிந்தால்’ போன்ற படங்கள் கூட இரண்டாவது , மூன்றாவது அறிவிப்பில் ரிலீஸ் உறுதியானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ”ஒரே நேரத்தில், பாண்டிராஜுடன் ‘இது நம்ம ஆளு’, கௌதம் மேனனின் ‘அச்சம் என்பது மடமையடா’, செல்வராகவனின் புதிய படமென தொடர் ஷூட்டிங்கில் இருக்கிறேன்’. வித்தியாசமான அனுபவம், ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமான ரோல்” என சிம்பு ட்வீட் செய்துள்ளார்.

http://img.vikatan.com/cinema/2015/05/27/images/pcdl6Khaeiibg.jpg இது தவிர்த்து ”என் ரசிகர்கள் என்னுடன் இருக்கிறார்கள், மற்ற நடிகர்களின் ரசிகர்கள் எனக்குத் தேவையில்லை, என் ரசிகர்களின் , அன்பும் ஆதரவாலும் நான் நெகிழ்ந்து போயுள்ளேன். உங்கள் அன்புக்கு நன்றி” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சிம்பு.
இந்நிலையில், பாண்டிராஜ் தனது ட்விட்டரில் , எனது சினிமா வாழ்வில் 'இது நம்ம ஆளு’ படம் மிக முக்கியமான படம். எந்த நிலையிலும் அப்படத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ரிலீஸ் செய்வேன். சிம்பு உங்களை நான் வேறு பரிமாணத்தில் சந்திப்பேன்” என ட்வீட் செய்துள்ளார்.



https://pbs.twimg.com/profile_images/595982598817517569/-i6pyvRt_normal.jpg STR @iam_str (https://twitter.com/iam_str) · May 26 (https://twitter.com/iam_str/status/603218819000049666)

Bin a great experience :) After @pandiraj3 (https://twitter.com/pandiraj3) then @menongautham (https://twitter.com/menongautham) and @selvaraghavan (https://twitter.com/selvaraghavan)..Totally different kinds of roles ..Hope I deliver my best
346 retweets 614 favorites

balaajee
4th June 2015, 11:15 AM
அதெல்லாம் கடவுள் பாத்துப்பாரு.. பீலாகும் சிம்பு!

சென்னை: அடுத்தடுத்து இரு காதல்கள் தோல்வியில் முடிந்ததால் நொந்து போயிருந்த சிம்பு தற்போது எனது திருமணம் கடவுளின் விருப்பபடி நடக்கும் என்று பீலிங்க்ஸ் காட்டியுள்ளார். தமிழ்த் திரையுலகின் இளம் நடிகரான சிம்பு முதலில் நயன்தாராவை வல்லவன் படத்தின் போது உருகி உருகி காதலித்தார், பிரேக் அப் ஆனது தான் மிச்சம். மீண்டும் நடிகை ஹன்சிகாவை வாலு திரைப்படத்தின் போது காதலித்தார் , என் வாழ்க்கையே உன்னோடுதான் என்று இருந்த இருவருக்கும் இடையில் என்ன நடந்ததோ முதல் வாரம் காதலிக்கிறேன் என்று மீடியாவைக் கூப்பிட்டு சொன்னவர்கள் மறுவாரம் பிரிந்து விட்டோம் என்று அதே மீடியாவின் வாயிலாக அறிவித்துப் பிரிந்தார்கள். My Marriage is God Plan – Actor Simbu எந்த நல்ல நேரத்தில் வாலுவுக்கு பூஜை போட்டார்களோ படம் இன்னும் வெளிவராமல் இதோ அதோ என்று பல ரிலீஸ் தேதிகளைப் பார்த்து விட்டது, இன்னும் வெளியானபாடில்லை. இந்தியாவிலேயே முதல்முறையாக பல ரிலீஸ் தேதிகளைப் பார்த்த படம் என்று பட்டம் கொடுக்கும் அளவிற்கு வாலு ஆளாகி விட்டது. காதலி திரையுலகின் நம்பர் ஒன் நாயகியாக வலம்வர நாயகன் படம் வெளியாவதே பெரும்பாடாக உள்ளது, இந்நிலையில் சிம்பு சமூக வலைதளமொன்றில் அவரின் ரசிகர்கள் கேள்வி கேட்டதற்கு கடவுளின் விருப்பப்படி எனது திருமணம் நடைபெறும் என்று தற்போது கூறியிருக்கிறார். நடக்குமா நடக்காதா... !?!

balaajee
5th June 2015, 05:44 PM
விரல் நடிகரின் நாளொரு தள்ளிவைப்பால் கோலிவுட்டில் சலசலப்பு அதிகமாகி உள்ளது. மேலும் இப்போது நடக்கவிருந்த செய்தியாளர் சந்திப்பும் தள்ளிவைக்கப்பட நடிகர் தரப்பிலிருந்து மீண்டும் ஒரு தள்ளிவைப்பு என மீடியாக்கள் செய்திகளை வெளியிட அப்செட்டில் இருக்கிறாராம் விரலு! ...vikatan

balaajee
8th June 2015, 01:19 PM
தனுஷ் படத்தில் சிம்பு நடித்தது எப்படி? - ’காக்கா முட்டை’ இயக்குநர் மணிகண்டன் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி! சர்வதேச திரைப்படவிருதுகள், தேசியவிருதுகள் என்று பல விருதுகளைக் குவித்திருத்திருக்கும் காக்காமுட்டை படத்தின் இயக்குநர் மணிகண்டனிடம் ஓர் உரையாடல்.

யாரிடமும் உதவிஇயக்குநராக இல்லாமலே இந்தப்படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றது எப்படி?
நான் உதவிஒளிப்பதிவாளராகப் பல ஆண்டுகள் வேலை செய்திருக்கிறேன். 2010 இல் நான் இய,க்கிய குறும்படமொன்றை வெற்றிமாறன் பார்த்திருந்தார். அப்போதே என்னைத் தெரியும். அதன்பின் ஒராண்டு கழித்து என்னைக் கூப்பிட்டு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார். இந்தப்படத்தின் கதையைச் சொன்னேன். உடனே தாம் தயாரிப்பதாகச் சொன்னார்.

ஒளிப்பதிவாளராக முயலாமல் இயக்குநரானது ஏன்?
நான் ஒளிப்பதிவாளர் ஆகத்தான் முயன்றுகொண்டிருந்தேன். சில வாய்ப்புகளும் வருகிறமாதிரி இருந்தது. அப்போது என்னுடைய குறும்படங்களைப் பார்த்த நண்பர்கள், நீங்கள் இயக்குநராகவே இருக்கலாமே என்று சொன்னார்கள். எனவே படம் இயக்கும் எண்ணத்துக்கு வந்தேன். படம் இயக்குவோம் சரியாக வரவில்லையென்றால் ஒளிப்பதிவில் மட்டும் கவனம் செலுத்துவோம் என்று முடிவுசெய்துதான் இதில் இறங்கினேன்.

காக்காமுட்டை என்று பெயர் வைத்தது எதனால்?
நாம் புறாவுக்கோ கிளிக்கோ கொடுக்கிற முக்கியத்துவத்தைக் காக்கைக்குக் கொடுப்பதில்லை, அது கறுப்பாக இருப்பதாலேயே ஒதுக்கப்படுவதாக உணர்கிறேன் அதுவே வெள்ளையாக இருந்திருந்தால் எல்லோரும் கொண்டாடியிருப்பார்கள் என்று தோன்றியது. எனவே கறுப்பாக இருப்பவர்களைப் பிரதிநிதித்துவம் செய்கிற மாதிரி காக்காவை வைத்தேன். படத்தில் வருகிற மாதிரி நிஜத்திலும் காக்காமுட்டை குடிப்போம் என்று சொல்லியிருந்தார்கள். அதனால் அந்தப்பெயரை வைத்தேன். தொடக்கத்தில் ஒர்க்கிங்டைட்டிலாகத்தான் வைத்தேன். கேட்கிற எல்லோருக்கும் அது பிடித்திருந்ததால் அப்படியே வைத்துவிட்டோம்.

படத்தில் நடித்த சிறுவர்களைத் தேர்வு செய்தது எப்படி?
காசிமேட்டில் அண்ணாநகர்குப்பம் என்று இருந்தது. (இப்போது இல்லையாம்) அந்தக் குப்பத்தில் இருந்த இந்தச்சிறுவர்களை ரெபரன்ஸ்க்காக படமெடுத்து வந்தேன். அவர்களை நடிக்கவைக்கும் எண்ணமில்லை. படங்கள் மற்றும் தொலைக்காட்சித்தொடர்களில் நடிக்கும் சிறுவர்களை நடிக்கவைத்துப் பார்த்தோம். எதுவும் சரியாக இல்லை. அதன்பின் இந்தச்சிறுவர்களை அழைத்து வந்து இரண்டுமாதங்கள் பயிற்சி கொடுத்தோம். கூத்துப்பட்டறையிலிருந்து முத்துக்குமார் என்றொருவர் வந்து நடிப்புச் சொல்லிக்கொடுத்தார்.

படப்பிடிப்பில் சரியாக நடித்தார்களா?
படப்பிடிப்பு தொடங்கி ஒருவாரம் சிரமப்பட்டார்கள். அதன்பின் சரியாகச் செய்யத் தொடங்கினார்கள். கடைசிக்கட்டத்தில் தேர்ந்த தொழில்முறை நடிகர்கள் போல் ஆகிவிட்டார்கள்.

எடுக்கும் போதே விருதுகளுக்கான படம் என்று முடிவு செய்தது எதனால்?
விருதுக்கான படம் என்று நினைத்து எடுக்கவில்லை, இப்போது இருக்கும் தரத்தில் சரியாக இருக்கவேண்டும் என்று உறுதியாக இருந்தேன். எடுக்கும்போதே இப்படித்தான் எடுப்பேன் என்பதைச் சொல்லிவிட்டேன்.
அவர்களும் அதை அப்படியே ஒப்புக்கொண்டு எடுக்கச்சொன்னார்கள்.

தனுஷ் தயாரிக்கும் படத்தில் சிம்புவை நடிக்கவைப்பதென்று முடிவு செய்தது எப்படி?
நான் கதை எழுதும்போதே சிம்பு என்றுதான் எழுதினேன். அதற்குக் காரணம் சிறுவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது சிம்புவை அவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்பது தெரிந்தது. அதனால் அப்படி எழுதினேன். இந்தப்படம் தனுஷ் கைகளுக்குப் போனதும், எனக்கே ஒரு தயக்கம் வந்தது. ஆனால் தனுஷ் இதைக்கேட்டதும் உடனே ஒப்புக்கொண்டதோடு அவரே சிம்புவிடமும் பேசி ஒப்புக்கொள்ளவைத்தார். சிம்புவும் பெரிதாகக் கேள்விகள் கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்டார். சிம்புவுக்கும் தனுஷூக்கும் சிக்கல் என்று வெளியில்தான் சொல்லப்பட்டது. அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதைப் பார்த்தால் இருவருக்கும் நல்லபுரிதல் இருப்பது தெரியும்.

படத்தில்,சிம்புவை அவன்இவன் என்று பேசுவதெல்லாம் அவருக்கு முன்பே தெரியுமா?
எல்லாமே அவருக்குத் தெரியும், அவருடைய மெச்சுரிட்டிலெவல் இந்தப்படத்தின் மூலம் நான் நன்றாக உணர்ந்துகொண்டேன். என்ன படம்? என்ன கதை?காட்சியின் நோக்கம் எல்லாவற்றையும் உணர்ந்து நடித்தார். பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்பதுகூட, இப்படித்தான் இருக்கும் என்று முன்பே சொல்லிவிட்டேன். அவரும் இப்படித்தானே இருக்கிறது அப்படியே செய்துவிடலாம் என்று சொன்னார். தயங்கிக்கூடச் சரி என்று சொல்லவில்லை கேட்டவுடனே சரி என்றார்.

விருதுக்குழுவினர்களிடம் அங்கீகாரம் பெற்றுவிட்டீர்கள், வெகுமக்களிடம் வரவேற்பு எப்படியிருக்கும் என்கிற பதட்டம் இருக்கிறதா?
திரைப்படவிழாக்களில் இந்தப்படம் திரையிடப்பட்டபோதே ஜெனரல்ஆடியன்ஸ் என்று சொல்லப்படுகிற நிறையப்பேர் படத்தைப் பார்த்துவிட்டு மிகவும் வரவேற்றுப்பேசினார்கள். விருதுகள் வாங்கியதைவிட அது அதிகசந்தோசத்தைக் கொடுத்தது. எனவே வெகுமக்களும் இந்தப்படத்தைப் பெரிதும் வரவேற்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது.

நீங்கள் அடுத்து இயக்கியிருக்கும் குற்றமும் தண்டனையும் படம் பற்றி?
நான் முதலில் இயக்க ஒப்புக்கொண்டது அந்தப்படம்தான். அது சில மாதங்கள் தள்ளிப்போன நேரத்தில் இந்தக்கதையை எழுதினேன். எழுதியவுடன் இது முதல்படமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது எனவே விதார்த்திடம் சொல்லிவிட்டு இந்தப்படத்தை முடித்துவிட்டு அதைத் தொடங்கினேன். அந்தப்படமும் தயாராகிவிட்டது. இளையராஜாவின் இசைக்காகக் காத்திருக்கிறோம். அது காக்காமுட்டையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.- அ.தமிழன்பன் -

balaajee
11th June 2015, 04:44 PM
'கெட்டவன்' மீண்டும் தொடக்கமா?- சிம்பு பதில்

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02435/kettavan_2435138f.jpg
'கெட்டவன்' படத்தை மீண்டும் துவங்கும் திட்டமில்லை என்று சிம்பு தெரிவித்தார்.

நந்து இயக்கத்தில் சிம்பு, லேகா வாஷிங்டன் உள்ளிட்ட பலர் நடிக்க தொடங்கப்பட்ட படம் 'கெட்டவன்'. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருந்த இப்படத்தை பரதன் பிலிம்ஸ் தயாரித்தது. இயக்குநருக்கும் சிம்புவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் படம் பாதியில் கைவிடப்பட்டது.

இந்நிலையில், சில நாட்களாக, நந்து சிம்புவை சந்தித்ததாகவும், மீண்டும் 'கெட்டவன்' படத்தை துவங்க இருக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளியாகின. மேலும், நயன்தாராவிடம் நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இது குறித்து சிம்புவிடம் கேட்டபோது "'கெட்டவன்' படத்தை மீண்டும் துவங்கும் திட்டம் எல்லாம் கண்டிப்பாக இல்லை. தற்போது 'அச்சம் என்பது மடமையடா', செல்வராகவன் படம் ஆகியவற்றில் நடித்து வருகிறேன். இப்படங்களின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இன்று (11/6/2015) சென்னை வந்துவிடுவேன். அதனைத் தொடர்ந்து 'வாலு' வெளியீட்டு தேதியை முடிவு செய்து அறிவிக்க இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

Russellvzp
11th June 2015, 06:51 PM
paavam.. intha paiyana paatha romba paavama irukku.. romba marittan ippo so i pray good things happen soon for him..

balaajee
12th June 2015, 11:04 AM
சிம்புவின் ஒன்றரை மாத மாரத்தான்

நடிகர் விஜய் கடந்த பதினைந்து, இருபது வருடங்களாக தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது வெற்றிக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், இந்த கடும் உழைப்புக்கு முக்கிய பங்கு உண்டு. ஒரு படம் முடிந்தால் சில தினங்கள் அல்லது சில வாரங்கள் மட்டும் ஓய்வு. அதைவிட்டால் எப்போதும் படப்பிடிப்பு... படப்பிடிப்பு...
http://media.webdunia.com/_media/ta/img/article/2015-06/06/full/1433581112-4494.jpg

சிம்பு அப்படியல்ல. ஒரு படத்தை தொடங்கிவிட்டு அவர் வேறு வேலை பார்த்துக் கொண்டிருப்பார். பெரும்பாலும் அது வெட்டி வேலையாகதான் இருக்கும். சிம்பு நடித்து மூன்று வருடங்களாக ஒரு படமும் வெளியாகவில்லை என்றால் அதற்கு இந்த வெ.வேலைதான் காரணம்.

இப்படியேப் போனால் சினிமா நம்மை மறந்துவிடும் என்பதை தாமதமாக உணர்ந்தவர், கடந்த ஒன்றரை மாதங்களாக செல்வராகவன் இயக்கத்தில் கான் படத்திலும், கௌதம் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா படத்திலும் மாறி மாறி நடித்து வருகிறார். சிம்பு அவரது வாழ்க்கையில் தொடர்ச்சியாக ஒன்றரை மாதங்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்வது இப்போதுதான். அதனை அவர் மாரத்தான் என்று குறிப்பிட்டு ட்விட்டரில் பெருமிதப்பட்டிருக்கிறார்.

இந்தியாவில் வாழ்நாளெல்லாம் வேலை பார்ப்பவர்கள் இருப்பது சிம்புவுக்கு தெரியாதோ.

balaajee
16th June 2015, 05:01 PM
ஜூன் 17-ல் வெளியாகிறது 'கான்' ஃபர்ஸ்ட் லுக்

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் 'கான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 17ம் தேதி மாலை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு, டாப்ஸி, கத்ரீன் தெரஸா, ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்றது.

முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட திட்டமிட்டு இருந்தார்கள். படத்திற்கு 'கான்' என்ற தலைப்பை இறுதிப்படுத்தி வைத்தார்கள். படத்தின் முக்கிய காட்சிகள் சிலவற்றை காட்டுக்குள் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், "சிம்பு நடித்து வரும் 'கான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் புதன்கிழமை மாலை 5 மணிக்கு வெளியிடப்படும். உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்" என்று இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

இப்படத்தில், சிம்பு முருக பக்தராக நடித்து வருகிறார். 'கான்' என்றால் 'காடு' என்று அர்த்தம். போலீஸ் அதிகாரியாக டாப்ஸி நடித்து வருகிறார். ஆக்*ஷன் த்ரில்லர் பாணியில் இப்படம் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

balaajee
17th June 2015, 12:30 PM
நிறைய கஷ்டங்களை கடந்து வந்துவிட்டேன்: சிம்பு நேர்காணல்

கடந்த சில ஆண்டுகளாக சினிமா ரேஸில் இருந்து சற்று விலகியிருந்த சிம்பு, தற்போது மீண்டும் சிலிர்த்தெழுந்துள்ளார். ‘வாலு’, ‘இது நம்ம ஆளு’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘கான்’, அமீரின் இயக்கத்தில் ஒரு படம் என்று திரையரங்கில் சரவெடி வெடிக்க தயாராக இருக்கிறார். தொடர் படப்பிடிப்புகளுக்கு நடுவில் சில நாட்கள் ஓய்வில் இருக்கும் சிம்புவை சந்தித்தோம்.
இரண்டரை வருட இடைவெளிக்குப் பிறகு தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபடுவது கஷ்டமாக இல்லையா?
ஒரு கஷ்டமும் இல்லை. இதற்கு முன்பும் நான் இப்படி தொடர்ச்சியாக நடித்தவன்தானே? இந்த ஓய்வும் நானாக தேடிக்கொண்டதல்ல. அதுவாகவே அமைந்தது. இப்போது மீண்டும் பரபரப்பான வாழ்க்கையை வாழத் தொடங்கியிருக்கிறேன். இந்த வாழ்க்கை சந்தோஷமாக நகர்கிறது. எப்போதுமே வாழ்க்கையை அதன் போக்கில் அணுகுவதுதான் என் வழக்கம். கடந்த 2 வருடங்களில் எதுவுமே இல்லாத வாழ்க்கையைப் பார்த்துவிட்டேன். இப்போது காலையில் கெளதம் மேனனின் படம், இரவு செல்வராகவனின் படம் என்று பரபரப்பாக வாழ்க்கை நகர்கிறது. இதையும் நான் ரசித்துத்தான் செய்கிறேன்.
‘படையப்பா’ படத்தின் பாடலில், ‘என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழ் அல்லவா’ என்று ஒரு வரி வரும். அதேபோல இப்போது நான் வியர்வை சிந்தி உழைக்கும் ஒவ்வொரு படத்தின் பலனும் விரைவில் திரையில் தெரியும்.

‘இனிமே இப்படித்தான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் நீங்கள் பட்ட பல கஷ்டங்களைச் சொல்லி வருத்தப்பட்டீர்கள். அதைக் கேட்டு வீட்டில் என்ன கூறினார்கள்?
அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் சந்தானத்துக்காக கலந்துகொண்டேன். எந்தவொரு நிகழ்ச்சியிலும் என்ன பேச வேண்டும் என்று தயார் செய்யும் வழக்கம் எனக்கு கிடையாது. என் மனதில் பட்டதை பேசுவேன். அந்த நிகழ்ச்சியிலும் என் மனதுக்குப் பட்டதைப் பேசினேன். கடந்த இரண்டரை வருடங்களில் நான் பட்ட கஷ்டங்களைப் பற்றி பேசினேன்.
சாதாரண மக்களைப் போல் என்னால் கடற்கரை, ஸ்பென்சர், சத்யம் சினிமாஸ் என்று சுற்ற முடியுமா? 700 நாட்கள் சும்மாவே 4 சுவர்களுக்குள் வாழ்வது எவ்வளவு கொடுமையாக இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். அந்த நாட்களை எப்படி கடந்து வந்தேன் என்பதைத்தான் நான் அன்றைய நிகழ்ச்சியில் பேசினேன். என் அம்மாவும் அப்பாவும் அதற்கு வருத்தப்பட்டார்கள். “ஏன் இப்படியெல்லாம் ஒரு நிகழ்ச்சியில் பேசுகிறாய்? உனக்கு என்ன இல்லை” என்று கேட்டார்கள். அவ்வளவுதான்.
இந்த இருண்ட வாழ்க்கையில் இருந்து வெளியே வருவோம் என்ற நம்பிக்கையை எனக்கு கொடுத்தது என் ரசிகர்கள்தான். அவர்களை என்றைக்குமே நான் மறக்க மாட்டேன். அதே போல “ப்ரோ.. இப்படி வீட்டுக்குள்ளேயே இருக்காதீங்க. சனிக்கிழமையாவது வெளியே வாங்க” என்று திட்டி வெளியே கூட்டிக்கொண்டு போனது அனிருத்தான்.

நீங்கள் எப்போதுமே படப்பிடிப்புக்கு லேட்டாக வருவதாக சொல்கிறார்களே?
நான் லேட்டாக போகிறேன் என்றால் நான் நடித்து இத்தனை படங்கள் எப்படி வெளியானது. அப்படிச் சொல்பவர்கள் இதற்கு பதில் சொல்லட்டும். சிம்பு தாமதமாக வருவார் என்று சொல்லும் இயக்குநர்களிடம், சிம்பு எத்தனை மணிக்கு கிளம்புவார் என்ற கேள்வியைக் கேளுங்கள். அவர்கள் சொல்லும் பதிலுக்காக நான் காத்திருக்கிறேன். சில நாட்கள் நான் தாமதமாக சென்றாலும், முழுக் காட்சிகளையும் முடித்துக் கொடுத்துவிட்டுதான் திரும்பியிருக்கிறேன். லேட்டாக வந்துவிட்டு 6 மணிக்கே கிளம்பவேண்டும் என்று நான் சொன்னதில்லை.

செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் ‘கான்’ பட அனுபவம் எப்படி இருக்கிறது?
ஒவ்வொரு நாளும் நிறைய விஷயங்களை புதிதாக கற்றுக் கொள்கிறேன். நீங்கள் இதுவரை பார்த்த செல்வராகவன் படங்களில் இருந்து இந்தப் படம் மாறுபட்டு இருக்கும். ஒரே ஒரு விஷயம் சொல்லவா.. இதுவரை நீங்கள் ஹீரோக்களை உருவாக்கிய செல்வராகவன் படங்களைத்தான் பார்த்திருப்பீர்கள். இப்போது முதல் முறையாக செல்வராகவன் ஒரு ஹீரோவுக்காக படம் பண்ணுகிறார். இந்தப் படத்தைப் பற்றி இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்.

‘இது நம்ம ஆளு’ படத்தில் என்ன பிரச்சினை. ஏன் இந்த தாமதம்?
‘வாலு’ படம் வெளியீட்டுக்கு தயாராகி இருக்கிறது. ஒரு படம் பிரச்சினையில் இருக்கும் போது, அந்தப் படத்தை அப்படியே விட்டு விட்டு அடுத்த படத்தில் கவனம் செலுத்துவது முறையல்ல. நிறைய படங்கள் அதேபோல நிற்கிறது. ‘வாலு’ படத்தை நானே வாங்கி பிரச்சினைகளை முடித்துள்ளேன். இப்படம் வெளியானவுடன் ‘இது நம்ம ஆளு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கான தேதியை அறிவிக்க உள்ளேன். ‘இது நம்ம ஆளு’ படத்தில் எந்த பிரச்சினையும் கிடையாது என்பதுதான் உண்மை. படத்தின் 2 பாடல் காட்சிகளை மட்டும் காட்சிப்படுத்த வேண்டியுள்ளது. மற்றபடி படம் தயார். ‘வாலு’வைத் தொடர்ந்து ‘இது நம்ம ஆளு’ வெளியாகும். இரண்டுமே எனக்கு வேறொரு பரிமாணத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நீண்ட நாட்கள் கழித்து வெளியாகவுள்ள ‘வாலு’ படம் எப்படி இருக்கும்?
நிறைய கமர்ஷியல் படங்களைப் பார்த்திருப்பீர்கள். அதில் ஹீரோ, வில்லனை ஏன் அடிக்கிறான் என்பதுதான் படத்தின் மிகப்பெரிய பலம். அந்த பலம் ‘வாலு’வில் மிக அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமன்றி, நான் நாயகனாக நடித்த படம் 3 வருடங்கள் கழித்து வெளியாகிறது. என் ரசிகர்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் ‘வாலு’ படத்தில் இருக்கும். இது ஒரு புதுமுக இயக்குநரின் படம் போலவே இருக்காது. இப்படம் வெளியானதும் அதன் இயக்குநர் விஜய் சந்தர் ஒரு நல்ல கமர்ஷியல் இயக்குநராக உருவெடுப்பார்.

மீண்டும் காதலில் விழும் திட்டம் இருக்கிறதா?
தெரியவில்லை. இப்போது நிம்மதியாக இருக்கிறேன். என்னுடைய வேலையை காதலித்து கொண்டிருக்கிறேன். மீண்டும் காதலிப்பேனா என்று எனக்குத் தெரியாது. எனக்கானவளை நான் பார்க்கும்போது மீண்டும் காதலில் விழலாம்.

எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள்?
முதலில் காதலைப் பற்றிக் கேட்டீர்கள். இப்போது திருமணத்தைப் பற்றி கேட்கிறீர்கள். இதற்கும் தெரியாது என்பதுதான் என் பதில். இப்போது இருக்கும் சமூக சூழ்நிலைகளைப் பார்க்கும்போது கல்யாணம் அவ்வளவு எளிது அல்ல என்பது மட்டும் புரிகிறது. ஏதோ ஒரு பெண்ணைப் பார்த்தார்கள், கல்யாணம் பண்ணிக்கிட்டேன் என்பது கஷ்டம். எனக்காக ஒரு பெண் வந்து, இருவரும் முழுமையாக புரிந்துகொள்ளும் நிலையில் எப்போது வேண்டுமானாலும் என் கல்யாணம் நடக்கும்.

இவ்வளவு வெளிப்படையாக பேசும் நீங்கள் உங்களைப் பற்றிய சர்ச்சைகளுக்கு ஏன் விளக்கம் கொடுப்பதில்லை?
உண்மைக்கு விளக்கம் கொடுக்கலாம். பொய்க்கு விளக்கம் கொடுத்தால், அந்தப் பொய் உண்மையாகிவிடும். வாரத்துக்கு ஒரு முறை என்னைப் பற்றி ஏதாவது எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். அதற்கெல்லாம் விளக்கம் கொடுக்க ஆரம்பித்தால், பிறகு நான் அந்த வேலையை மட்டுமே பார்க்க வேண்டிவரும். மேலும் அதற்கெல்லாம் விளக்கம் கொடுத்தால் சிம்பு கெட்டவனாகி விடுவான்.
என்னை பொறுத்தவரை எனக்கென்று சில ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ரசிக்கிற மாதிரி படங்கள் செய்தாலே போதும். என்னை நம்பி வரும் இயக்குநர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தாலே போதும்.

balaajee
17th June 2015, 07:54 PM
Thanks Nov

https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xft1/t31.0-8/11427415_10206563315383619_7120089616704986952_o.j pg

balaajee
23rd June 2015, 11:29 AM
ரசிகர்களின் சண்டை, கண்டுகொள்ளாத அஜித், விஜய் . சமரசம் பேசும் சிம்பு

விஜய், அஜித் ரசிகர்களின் சண்டை விஜய் பிறந்த நாளையும் விட்டு வைக்கவில்லை. விஜய் பிறந்த நாளான இன்று விஜய் பற்றி தப்பான ஹாஸ் டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர் அஜித் ரசிகர்கள். இதனால் இரண்டு ரசிகர்களுக்கிடையே ட்விட்டரில் போர் தொடங்க அதை நிறுத்துமாறு சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

http://img.vikatan.com/news/2015/06/22/images/simb%20u%201.jpg
விஜய் பிறந்த நாளுக்கு அவரின் ரசிகர்கள் #HBDDearVIJAY என்ற ஹாஸ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர். இதற்கு எதிராக அஜித் ரசிகர்கள் #VijayTheCurseOfCinema என்று ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்தார்கள். அந்த ஹாஸ்டேக்கில் விஜய் பற்றி காமெடி, கிண்டல்கள். மீம்ஸ்கள் மற்றும் தவறான வார்த்தைகளால் புண்படுத்தும் விதமான புகைப்படங்களை ட்விட் செய்துவந்தனர். இதனால் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். அதனால் அவர்களும் அஜித் சார்ந்த காமெடி மீம்ஸ்களை ட்விட்டரில் பதிவிட்டுவருகின்றனர்.

இதனால் சிம்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஜய் - அஜித் இரண்டு ரசிகர்களுக்கும் இடையே சண்டை வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து அவர் ட்விட்டரில் ட்விட்டியதாவது, “ நான் தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன், உண்மையான தல ரசிகர்கள் என்றால் தவறான ஹாஸ்டேக்கை பயன்படுத்துவதை நிறுத்துங்கள். இதை செய்வது நம்முடைய நோக்கமில்லை, அதுபோல விஜய் அண்ணா ரசிகர்களையும் தயவுசெய்து கேட்டுக் கொள்கிறேன். யாரையும் புண்படுத்தும் விதமாக எதுவும் செய்யவேண்டாம். உண்மையான ரசிகனா இதைத்தான் உங்க நட்சத்திரத்திற்கு திரும்பி செய்வீர்களா!” என்று இரண்டு தரப்பு ரசிகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், “ அனைத்து நட்சத்திரங்களின் விசிறிகளும் தங்களுடைய நட்சத்திரங்களை ஆதரிக்க மட்டும் செய்யவேண்டும். மற்றவரை இகழ வேண்டாம். அனைத்து ரசிகர்களின் நிலைமையையும் உணர்கிறேன். எதிர்மறையாக நமக்கு செய்தால் கூட அதற்கு நேர்மையான வழியிலேயே நம்முடைய பலத்தையும், அன்பையும் பிரதிபலிக்கவேண்டும், மற்றவர்கள் புண்படுத்தும் அந்த நிலையை நான் நன்கு உணர்கிறேன்.ஆனாலும் கொஞ்சம் முதிர்ச்சியுடனும், மனிதநேயத்துடனும் இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு எதிர்மறையாக செய்வது நம்முடைய உண்மையான குணத்தையும், அடையாளத்தையும் கொன்றுவிடும். முதலில் மனிதர்களை நேசிப்போம். பிறகே நம்முடைய சமுகத்தையும், நாட்டையும் நேசிக்கலாம்” என்று ட்விட் செய்துள்ளார் சிம்பு.

சிவாஜி - எம்ஜிஆர், ரஜினி - கமலில் தோன்றி இன்று விஜய் - அஜித் என்று ரசிகர்களிடையே சண்டைகள் இன்றும் குறையவில்லை. முன்னரெல்லாம் ஒரே நாளில் இரண்டு பெரிய நட்சத்திரங்களின் படம் வெளியானால் திரையரங்குகளில் ஆரம்பமாகும் இந்த சண்டை சச்சரவு தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பிறகும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தச்செயல்பாடு தவறான முன்னுதாரணமாகவே இருக்கிறது. விஜய் - அஜித் போன்று அனைத்து நட்சத்திரங்களும் நண்பர்களாகவே இருக்கிறார்கள், ஆனால் அவர்களின் பெயரைச் சொல்லிக்கொண்டு ரசிகர்கள் தான் தேவையில்லாமல் சண்டையிட்டுவருகின்றனர் என்கிறார்கள் ட்விட்டர் பயனீட்டாளர்கள். எனவே சண்டை, சச்சரவுகளைத் தவிர்ப்பதே நம்முடைய நோக்கமாகவும் இருக்கட்டும்.

balaajee
8th July 2015, 01:02 PM
சர்வதேச அளவில் 16 மொழிகளில் தயாராகிறது 'கான்'


செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் 'கான்' திரைப்படத்தை, சர்வதேச அளவில் 16 மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார்கள். சிம்பு, கத்ரீன் தெரஸா, டாப்ஸி, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'கான்' படத்தை இயக்கி வருகிறார் செல்வராகவன். யுவன் இசையமைத்துவரும் இப்படத்துக்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்து வருகிறார். Glo ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் கீதாஞ்சலி செல்வராகவன் மற்றும் சித்தார்த் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவுற்று இருக்கிறது. விரைவில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. "'கான்' படத்தை சர்வதேச மொழிகளில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறேன். சினிமா ரசிகர்கள் இதை விரும்புவார்கள் என நம்புகிறேன்" என இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

சர்வதேச மொழிகளில் வெளியீடு குறித்து இயக்குநர் செல்வராகவனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, "சர்வதேச மொழிகளான ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ் உள்ளிட்ட 16 மொழிகளில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறேன். சர்வதேச அளவில் வெளியிடும்போது பாடல்கள், காட்சிகள் உள்ளிட்டவற்றை நீக்குவது, சேர்ப்பது தொடர்பானவை அனைத்துமே படம் வெளியாகும் சமயத்தில் முடிவு செய்யப்படும்" என்று தெரிவித்தார்.
இப்படத்தை தமிழில் டிசம்பரில் வெளியிட திட்டமிட்டு, பணியாற்றி வருகிறது படக்குழு.

balaajee
17th July 2015, 09:25 PM
Simbu: Phase Two (http://indulge.newindianexpress.com/simbu-phase-two/chennai/33570)

http://indulge.newindianexpress.com/wp-content/uploads/2015/07/MG_1430-600x357.jpg (http://indulge.newindianexpress.com/wp-content/uploads/2015/07/MG_1430.jpg)
Silambarasan on his film Vaalu and finding new direction in life
When we caught up with Silambarasan TR, we were surprised to find Tamil cinema’s favourite bad boy uncharacteristically sombre, laid-back and rather exhausted. The lull at the box office seems to have taken its toll on the actor, singer and producer. Besides a string of flops like Idhu Namma Aalu and Vettai Mannain in the past two years, the 32-year-old has also received a lot of flak for his off-and-on relationships with his co-stars and has been the butt of negative publicity, especially post his break-up with co-star Hansika Motwani. With STR’s latest film, Vaalu (co-starring Motwani), releasing soon and Gautham Menon’s Acham Embathu Madamaiyada and Selvaraghavan’s Kaan in the pipeline, he is hopeful but talks less about his movies and more about life.
Shooting star
Silambarasan says he plays a macho character in Menon’s next, in contrast to his breakthrough character of Karthik in Vinnaithandi Varuvaaya. “I have respect for Gautham Menon’s faith in me, even after I hit an all-time low. We deliberately kept my character in his next film a stark contrast to the boy-next-door image. The character is like a mix of Karthik in Vinnaitandi Varuvaaya and Surya of Kaakha Kaakha. Kaan, on the other hand, will see me as a devotee to Lord Murugan,” says the actor, who is shooting simultaneously for both projects. Does he research the diverse characters he is playing? “I just go on the set and speak to my director. Then I launch into my character. I do not require any former preparation, I know I’m good at what I do,” he says.
Changing goals
“Superstar MGR was very careful about his image as a star, which got him to where he was. I did just the opposite, but I still became a superstar,” says the Vallavan star, who has been known to call a spade a spade. “The last two years have not been easy for me. I realised I have had my biggest learning in 32 years during this phase. My goals are no longer restricted to making films. Box office hits or `100 crore films do not excite me. I do films because my fans have stood by me. As long as they whistle and clap and have a good time, my job is done,” says Silambarasan. The actor who has adopted meditation, and embraced spirituality over the last two years says he does not chase money or fame anymore. “In the last two years, I did not ask my parents for money even when I ran dry. I have realised there is a larger goal to life than chasing material goals and I am keener on finding myself with God; of reaching further through meditation,” he insists.
Bigger plans
The actor does not have much to say about making it to film festivals. “I don’t have to pretend to be somebody and talk about awards and off-beat cinema. I like the kind of films I do and am also appreciative of films like Kaaka Muttai, where I did a brief cameo,” he says, meanwhile, he has no plans of getting married anytime soon. “Life is moving forward and with women empowerment and equality on the cards, women are choosing what they’d like to do, be it same sex marriage or staying single. As a man, I choose to live and let live,” laughs the actor, who brushes off his past relationships, commenting that probably life has “bigger plans for him”. So what is with his meditative state of mind? “Every human being has a phase two. I am just lucky to have discovered my calling,” the actor concludes.

Vaalu is scheduled to release shortly.:fatigue:

elsaen11
27th July 2015, 04:33 PM
வாலு படம் வெளியாக விஜய் செய்த பெரியஉதவி


சிம்புவின் வாலு படம் பல்வேறு முறை வெளியீட்டுத் தேதிகள் அறிவிக்கப்பட்டதோடு சரி. கடைசிநேரத்தில் ஏதாவதொரு சிக்கல் காரணமாகத் தள்ளிப்போய்விடும். ரசிகர்களைப்போல திரைத்துறையினரும் இதை ஒரு செய்தியாகத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.



இந்தச் செய்திகளை அண்மையில் கேட்டறிந்த நடிகர் விஜய், படத்துக்கு என்ன சிக்கல்? என்று சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டறிந்திருக்கிறார். ஒரு இந்தப்படம் வெளியாகவேண்டுமென்றால் பெரியதொகை கொடுத்தாகவேண்டும் என்கிற விசயம் அவருக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அதைக் கேட்டவுடனே அவ்வளவு தொகையையும் தாமே தருவதாக ஒப்புக்கொண்டாராம் விஜய்.

“பலமுறை இந்தப்படம் தள்ளிப்போனதில் எனக்கு வருத்தம். எனவே படம் வெளியாக என்னாலான இந்த உதவியைச் செய்கிறேன் இதை எப்போது முடியுமோ அப்போது திருப்பிக்கொடுத்தால் போதும்” என்று சொல்லி அந்தப்பணத்தைக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அதோடு தமக்கு வேண்டிய விநியோகஸ்தர்களிடம் இந்தப்படம் வெளியாக உதவி செய்யுமாறும் கேட்டுக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

இவ்வளவையும் செய்துவிட்டு நான் இதைச் செய்கிறேன் என்பதை யாருக்கும் தெரியாமல் பார்த்தக்கொள்ளுங்கள் என்றும் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. பொதுவாக சிம்பு தன்னை அஜித் ரசிகன் என்றே சொல்லிக்கொள்வார். இந்தப் படத்தைத் தயாரித்தவரும் அஜித்தின் முன்னாள் நெருங்கிய நண்பர். ஆனால் இந்தப் படத்துக்கு இப்போது உதவியிருப்பது விஜய் என்பதால் இதை எல்லோரும் ஆச்சரியத்துடன் பேசிக்கொண்டிருக்கிறார்களாம்.

balaajee
5th August 2015, 04:12 PM
சிம்புவின் கான் படம் பற்றிய ரகசியங்களை உடைத்த ஜகபதிபாபு!
மகேஷ்பாபு , ஸ்ருதி ஹாசன், ஜெகபதிபாபு உட்பட பலர் நடிப்பில் தமிழில் வெளியாகவிருக்கும் படம் செல்வந்தன். இப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஜெகபதிபாபு, தான் நடிக்கும் கான் படம் பற்றிய சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

http://img.vikatan.com/cinema/2015/08/05/images/simbu.jpgசெல்வராகவன் இயக்கத்தில் சிம்பு, டாப்ஸி, காத்ரீன் தெரஸா, ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் கான். இப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தில் சிம்பு முருக பக்தராக நடிக்கிறார். மேலும் கான் என்றால் காடு என்று அர்த்தம். முக்கிய காட்சிகள் சிலவற்றைக் காட்டுக்குள் படமாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், டாப்ஸி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றும் தகவல்கள் ஏற்கெனவே வெளிவந்தன.

நேற்று நடைபெற்ற செல்வந்தன் பட செய்தியாளர் சந்திப்பில் கான் படத்தின் சில ரகசியங்களை ஜகபதி பாபு கூறும்போது, “ குடி, புகைப்பழக்கம், கெட்ட குணம் என்று கெட்ட வழியில் சென்றதால் “ராணுவ” அதிகாரியான நான் வேலையிலிருந்து நீக்கப்படுகிறேன். இன்னொரு அதிகாரியான சிம்புவுக்கும் எனக்குமான போராட்டமே கான்” என்றார் ஜகபதிபாபு.

paranitharan
8th August 2015, 08:09 PM
வாலு படம் வெளியாக விஜய் செய்த பெரியஉதவி


சிம்புவின் வாலு படம் பல்வேறு முறை வெளியீட்டுத் தேதிகள் அறிவிக்கப்பட்டதோடு சரி. கடைசிநேரத்தில் ஏதாவதொரு சிக்கல் காரணமாகத் தள்ளிப்போய்விடும். ரசிகர்களைப்போல திரைத்துறையினரும் இதை ஒரு செய்தியாகத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.



இந்தச் செய்திகளை அண்மையில் கேட்டறிந்த நடிகர் விஜய், படத்துக்கு என்ன சிக்கல்? என்று சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டறிந்திருக்கிறார். ஒரு இந்தப்படம் வெளியாகவேண்டுமென்றால் பெரியதொகை கொடுத்தாகவேண்டும் என்கிற விசயம் அவருக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அதைக் கேட்டவுடனே அவ்வளவு தொகையையும் தாமே தருவதாக ஒப்புக்கொண்டாராம் விஜய்.

“பலமுறை இந்தப்படம் தள்ளிப்போனதில் எனக்கு வருத்தம். எனவே படம் வெளியாக என்னாலான இந்த உதவியைச் செய்கிறேன் இதை எப்போது முடியுமோ அப்போது திருப்பிக்கொடுத்தால் போதும்” என்று சொல்லி அந்தப்பணத்தைக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அதோடு தமக்கு வேண்டிய விநியோகஸ்தர்களிடம் இந்தப்படம் வெளியாக உதவி செய்யுமாறும் கேட்டுக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

இவ்வளவையும் செய்துவிட்டு நான் இதைச் செய்கிறேன் என்பதை யாருக்கும் தெரியாமல் பார்த்தக்கொள்ளுங்கள் என்றும் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. பொதுவாக சிம்பு தன்னை அஜித் ரசிகன் என்றே சொல்லிக்கொள்வார். இந்தப் படத்தைத் தயாரித்தவரும் அஜித்தின் முன்னாள் நெருங்கிய நண்பர். ஆனால் இந்தப் படத்துக்கு இப்போது உதவியிருப்பது விஜய் என்பதால் இதை எல்லோரும் ஆச்சரியத்துடன் பேசிக்கொண்டிருக்கிறார்களாம்.

money for promotional speech at audio release.. Good deal

balaajee
14th August 2015, 11:28 AM
அமீர் இயக்கத்தில் நடிக்கும் சிம்பு

சிம்புவின் வாலு ஒருவழியாக வெளியாகிவிட்டது. இதையடுத்து, இது நம்ம ஆளு வரவிருக்கிறது.

http://media.webdunia.com/_media/ta/img/article/2015-08/13/full/1439483503-2539.jpg


இந்த இரு படங்கள் தவிர்த்து கௌதம் இயக்கத்தில், அச்சம் என்பது மடமையடா, செல்வராகவன் இயக்கத்தில், கான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்தப் படங்களுக்குப் பிறகு அடுத்த வருடம், அமீர் இயக்கும் படத்தில் சிம்பு நடிக்கிறார். இது சிலர் சொல்வது போல் இரண்டு நாயகர்கள் கதையல்ல. சிம்பு தனி ஹீரோவாக இந்தப் படத்தில் நடிக்க உள்ளார்.

balaajee
14th August 2015, 11:32 AM
உண்மையானவர்கள் யார் என்பதை தெரிந்துகொண்டேன்: ‘வாலு’ பிரச்சினை பற்றி சிம்பு மனம் திறக்கிறார்

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02508/simbu_2508277f.jpg சிம்பு

‘வாலு’ படப் பிரச்சினையின் மூலம் எனக்கு உண்மை யானவர்கள் யார் என்பதை தெரிந்துகொண்டேன் என்று சிம்பு கூறியுள்ளார்.
சிம்பு, ஹன்சிகா நடித்த ‘வாலு’ திரைப்படம், பல்வேறு பிரச்சினைகளைக் கடந்து நாளை வெளியாகிறது. இந்நிலையில் ‘பாஸ்கி டிவி’ என்ற பெயரில் புதிதாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கவிருக்கும் பாஸ்கிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டி:

‘வாலு’ திரைப்படம் வெளிவர தாமதமானதற்கு நீங்களும் ஒரு வகையில் காரணம் இல்லையா?
முக்கியமான காரணம் நான் தான். இங்கே என் வெற்றிக்கான எல்லா விஷயங்களையும் நான் தான் செய்ய வேண்டும். என்னை எதிர்பார்ப்பவர்களுக்கான வேலையை நான் செய்ய வேண் டும். அப்பா எனக்காக நிறைய சம்பா தித்து வைத்திருக்கிறார். நானும் சம்பாதிக்கிறேன். மற்ற யாரிடமும் நான் எதுவும் கேட்டதில்லை.
நான் சின்ன வயதில் இருந்தே வேலை பார்க்க தொடங்கியவன். ஒரு கட்டத்தில் நாம ஏன், இப்படி ஓட வேண்டும் என்ற கேள்வி எனக் குள் வந்தபோது ஆன்மிகத்துக்குள் சென்றேன். அங்கே சென்ற பிறகுதான் வாழ்க்கை என்றால் என்ன என்ற புரிதல் வந்தது. மீண் டும் இங்கே வராமல் அங்கேயே இருந்திருக்கலாம். ஆனால், ‘சிம்பு பயந்துவிட்டான்’ என்று சொன்னால் என்ன செய்வது. அதனால்தான் மீண்டும் வந்தேன். அடுத்தடுத்து படங்களில் நடிக்கிறேன்.

‘வாலு’ படத்தின் சிக்கல்களுக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க முடிந்ததா?
இந்த இடைவெளியிலும், நெருக்கடியிலும் எனக்கு உண்மை யானவர்கள் யார் என்று தெரிந்து கொண்டேன். இப்படி ஒரு சம்பவம் இல்லாமல் போயிருந்தால் எனக்கு யாரெல்லாம் எதிரி என்று தெரியாம லேயே போயிருக்கும்.ஜூலை 17-ம் தேதி படம் ரிலீஸ் என்று முன்பே அறிவிக்கப்பட்டு விளம்பரம் வந்தது. அப்போதெல்லாம் விட்டு விட்டு படம் ரிலீஸாக ஒரு வாரம் மட்டுமே இருக்கும்போது ‘வாலு’ படத்தை வெளியிடாமல் தடுக்க வேண்டும் என்று நிற்கிறார்கள். இதன் பின்னணியில் இருந்தது யார் என்பதை கண்டுபிடித்தேன்.

சிம்பு தனுஷ் இடையே பலத்த போட்டி இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறதே?
நாங்கள் இருவருமே பேசிக் கொள்ளாத ஒரு காலகட்டம் இருந் திருக்கிறது. அவரிடம் ஒன்றும், என்னிடம் ஒன்றும் கூறப்பட்ட சூழலும் இருந்தது. இதெல்லாம் ஆரம்ப கட்டம். அவர் 230 ரன்கள் அடித்தால் நானும் அதைப்போல் ஜெயிக்கவேண்டும் என்று நினைத் திருக்கிறேன். அதற்கு பதிலாக நீ சதமே அடிக்கக்கூடாது என்று சொல்லும் மனநிலை எனக்கு கிடையாது.

ஒரு மாதம் முழுக்க பெண்களிடம் பேசாமல் உங்களால் இருக்க முடியுமா?
முடியாது. ஏனென்றால் எனக்கு பெண்களைப் பிடிக் கும். அவர்கள் நம்முடைய எதிர்பால். பெண்கள் எப் போதும் என்னிடம் சகஜமாக பழகுகிறார்கள். நானும் அவர் களுக்கு மரியாதை கொடுப் பேன்.

‘வாலு’ திரைப்படம் வெளிவரு வதில் விஜய் உங்களுக்கு கை கொடுத்ததாக கூறப்படுகிறது. நீங்கள் அஜித் ரசிகராயிற்றே?
விஜய் சாருடன் நான் நெருக்கமானவன். நாங்கள் இருவருமே இளம் வயதில் சினிமாவுக்குள் வந்தவர்கள். விஜய் சார் யாரிடமும் பேசாமல் இருக்கும் இடங்களில்கூட என்னிடம் மட்டுமே பேசி யிருக்கிறார். நாங்கள் சகோதரர் களாகத்தான் பழகி வருகிறோம். நான் ஒரு அஜித் ரசிகன் என்று சொன்னதால் எனக்கு விஜய்யை பிடிக்காது என்று பலரும் அவர் களாகவே நினைத்துக்கொள் கிறார்கள். அதுதான் இங்கே பிரச்சினை. ‘ஒஸ்தி’ படத்தின் ஆடியோ ரிலீஸுக்கு விஜய் வந்தார். ‘தலைவா’ படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டபோது நான் அவரிடம் பேசினேன். இப்போது ‘வாலு’ படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டபோது தனக்கு நெருக்கமான விநியோகஸ் தர்களிடம் பேசி இதைத் தீர்க்கு மாறு அவர் கூறியுள்ளார்.
இந்த விஷயத்தில் அஜித் சார் வெளியில் வந்து பேச வேண்டும் என்பது அவசியமில்லை. அஜித் சாரை அப்பா சந்தித்தபோதுகூட, ‘இந்த பிரச்சினைக்காக கவலைப் பட வேண்டாம். இதையெல்லாம் கடந்து சிம்பு வந்துவிடுவார்’ என்று கூறியிருக்கிறார்.
‘வாலு’ படத்தின் தயாரிப்பாளராக நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியும் இருக்கிறார். அவர் அஜித் சாரின் நண்பர். அதனால் கூட அஜித் சார் இந்த விஷயத்தில் அமைதியாக இருந்திருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

balaajee
18th August 2015, 12:46 PM
கிருத்திகா உதயநிதி படத்தில் நடிக்க சிம்பு மறுப்பு?

வணக்கம் சென்னை என்ற படாவதி படத்தை எடுத்த கிருத்திகா உதயநிதி அடுத்து சிம்புவை வைத்து ஒரு படம் இயக்குவதாக ஏற்கனவே கூறியிருந்தார். அதற்கு சிம்புவும் சம்மதம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சிம்பு அளித்த தனது வருங்கால படங்கள் பட்டியலில் கிருத்திகாவின் படம் இல்லை. பாண்டிராஜ் இயக்கத்தில் இது நம்ம ஆளு, கௌதம் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா, செல்வராகவன் இயக்கத்தில் கான் படங்களுடன் அடுத்த வருடம் நடிக்கயிருக்கும் அமீர் படத்தையும் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் பட்டியலில் கிருத்திகாவின் படம் இல்லை.
வாலு பிரச்சனையில் உதயநிதியின் பெயரும் அடிபட்டது. அதற்கு அவர் விளக்கமளித்தாலும் அந்த உரசல் காரணமாகவே கிருத்திகா படத்தை சிம்பு புறக்கணிப்பதாக கூறப்படுகிறது.

balaajee
24th August 2015, 02:23 PM
சிம்புவுடன் தமன்னா நடிக்கிறாரா இல்லையா?

சிம்பு இப்போது கௌதம் இயக்கத்தில் அச்சம்என்பதுமடமையடா, செல்வராகவன் இயக்கத்தில் கான் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப்படங்களைத் தொடர்ந்து அவர் அமீர் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார்.

http://img.vikatan.com/cinema/2015/08/24/images/simbu%20tamman%201.jpgஇவ்விரு படங்களும் இவ்வாண்டில் நிறைவு பெற்றுவிடும் என்று சொல்லப்படுகிறது. அதன்பின்னர்தான் அமீர் படம் தொடங்கும். ஆனால் இப்போதே அந்தப்படத்துக்கான வேலைகள் தொடங்கிவிட்டன என்று சொல்லப்படுகிறது.

அந்தப்படத்தில் சிம்பு ஜோடியாக தமன்னா நடிக்கவிருக்கிறார் என்றும் முதன்முறையாக சிம்பு ஜோடியாக அவர் நடிக்கவிருக்கிறார் என்றும் அது தொடர்பாகப் பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டன என்றும் செய்தி வந்திருக்கிறது. இது தொடர்பாக தமன்னாவின் தரப்பில் கேட்டால், அப்படி யாரும் இதுவரை எங்களிடம் பேசவில்லை என்று சொல்கிறார்கள்.

balaajee
26th August 2015, 01:43 PM
அமீர் - சிம்பு - தமன்னா - ஒரு மெர்சலான கூட்டணி

பாண்டிராஜ் இயக்கத்தில் இது நம்ம ஆளு, கௌதம் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா, செல்வராகவன் இயக்கத்தில் கான் என மூன்று படங்களில் நடித்து வருகிறார் சிம்பு.

http://media.webdunia.com/_media/ta/img/article/2015-08/25/full/1440487612-3097.jpg


இதையடுத்து அவர் அமீர் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த செய்தியை சென்ற வாரமே வெளியிட்டிருந்தோம். இவர்கள் இணையும் படத்துக்கு மெர்சல் என்று பெயர் வைத்துள்ளனர்.

மெர்சலில் சில ஆச்சரியங்கள். முதலாவது, அமீரின் அனைத்துப் படங்களுக்கும் இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜா மெர்சலில் இல்லை.

அவருக்குப் பதில் அனிருத்தை ஒப்பந்தம் செய்துள்ளார். முதல்முறையாக தமன்னா சிம்பு ஜோ*டியாக நடிக்கிறார்.

Russellvzp
27th August 2015, 02:19 AM
iththanai padam nadichi enna projanam? edho james cameron padam mathiri next film anegama oru 3 varushathukku apram than varumnu nenakiren..

PARAMASHIVAN
27th August 2015, 07:35 PM
iththanai padam nadichi enna projanam? edho james cameron padam mathiri next film anegama oru 3 varushathukku apram than varumnu nenakiren..

Lol, VTV and Manmadhan were his only "tolerable" movies till date, rest of the are marana mokkais !

balaajee
28th August 2015, 01:58 PM
சிம்புவின் சுவாரஸிய ட்விட்டர் உரையாடல்

சிம்பு ட்விட்டர் மூலமாக அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடுவார். வில்லங்கமான கேள்விகளுக்கும் பதில் வரும் அவரிடமிருந்து.


இந்தமுறை கேள்விகளில் விஜய்யும் இடம் பிடித்திருந்தார். வாலு வெளியாக உதவியதன் மூலம் சிம்புவின் உடன்பிறவா சகோதரர் ஆகிவிட்டாரல்லவா விஜய்.

நடிகர் விஜய்யை உங்கள் படத்தில் நடிக்க அழைப்பீர்களா என வில்லங்கமாக ஒரு கேள்வி.
விஜய்யை என்னுடைய படத்தில் நடிக்க அழைப்பது நியாயமாக இருக்காது. ஆனால், அவர் அவருடைய படத்தில் நடனம் ஆட அழைத்தால் நிச்சயம் போய் நடனமாடுவேன் என்று தெரிவித்தார்.

இது நம்ம ஆளு படத்தின் வெளியீடு குறித்தும் ஒரு கேள்வி. படம் எப்போது வரும், தீபாவளிக்கா?
தல படம் தீபாவளிக்கு வந்தால், இது நம்ம ஆளு படத்தின் ரிலீஸ்...தள்ளிப் போகும். தல படம் தீபாவளிக்கு வராவிட்டால் இது நம்ம ஆளு படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் பதிலளித்துள்ளார்.

சிம்பு என்றால் தனுஷ் இல்லாமலா? தனுஷ் நடித்தப் படங்களில் எது சிம்புவுக்குப் பிடிக்கும்?
தனுஷ் படங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். ஆனாலும், காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆடுகளம் மிகவும் பிடிக்கும் என நேர்மையாக பதிலளித்துள்ளார் சிம்பு.

நடிகர் சங்க விவகாரத்தில் சிம்பு சரத்குமார் பக்கம். இது குறித்த கேள்விக்கு, நடிகர் சங்க விவகாரத்தில் விரைவில் தீர்வு கிடைக்கும் என பட்டும் படாமலும் பதிலளித்துள்ளார்.

நின்றுபோன வேட்டை மன்னன் இன்னும் ரசிகர்கள் மனதிலிருந்து விலகவில்லை. வேட்டை மன்னன் வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. புதிய தகவல் ஏதாவது இருந்தால் நானே தெரிவிக்கிறேன் என்று நம்பிக்கை அளித்துள்ளார்.

எந்த நடிகருக்கும், யாராவது ஒரு முக்கிய இயக்குனரின் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். சிம்புவுக்கு?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஆசையாக இருப்பதாக சிம்பு தெரிவித்துள்ளார்.
அடுத்தமுறை நயன்தாரா, ஹன்சிகா பற்றியும் காரசாரமாக பேசுங்க சிம்பு.

balaajee
30th August 2015, 03:07 PM
STR ‏@iam_str (https://twitter.com/iam_str) 16h16 hours ago (https://twitter.com/iam_str/status/637678995329314816)
Finally things are falling in place followed by #Vaalu (https://twitter.com/hashtag/Vaalu?src=hash) next #INA (https://twitter.com/hashtag/INA?src=hash) then #AYM (https://twitter.com/hashtag/AYM?src=hash) and #KAAN (https://twitter.com/hashtag/KAAN?src=hash) ... what more can i ask for :) ... thanks to allmighty

balaajee
6th September 2015, 07:43 AM
கமல், அரவிந்த்சாமி வரிசையில் சிம்பு

சின்னத்திரையில் தன்னுடைய செல்வாக்கினால் தொடர்ந்து இருந்துகொண்டிருக்கிறார் குஷ்பு. இப்போதும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடிகர்களைப் பேட்டி எடுத்துக்கொண்டிருக்கிறார்.

http://img.vikatan.com/cinema/2015/09/05/images/kamal%20aravand%20kus1.jpg “சிம்ப்ளிகுஷ்பு” என்கிற அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்நடிகர் ஜெயம்ரவி. அதில் அவர் பல முக்கியமான விசயங்களைப் பகிர்ந்துகொண்டார். அவரையடுத்து கமல், கார்த்தியையும் அதற்கடுத்து அரவிந்தசாமியையும் பேட்டி எடுத்திருக்கிறார் குஷ்பு.

நான்காவதாக அவர் பேட்டி எடுத்திருப்பது சிம்புவை. அடுத்தடுத்த வாரங்களில் அந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருக்கிறதாம். தொடக்கத்திலேய பெரிய நடிகர்களை அழைத்து வந்திருப்பதால் குஷ்பு வெயிட்டானவர்தான் என்று சொல்லப்படுகிறது.

அதேநேரம், இதே தொலைக்காட்சி சார்பாகப் பேட்டி கேட்டால் இந்த நடிகர்கள் எல்லாம் பேட்டி தருவார்களா? நிச்சயம் தரமாட்டார்கள், ஆனால் பேட்டி எடுப்பவர் குஷ்பு என்பதால் எல்லோரும் ஒடிவந்து பேட்டி கொடுக்கிறார்கள் என்கிற விமர்சனங்களும் இருக்கின்றன.

balaajee
11th September 2015, 04:26 PM
நடிகர் சங்க தேர்தலில் முக்கிய பதவிக்கு மல்லுக்கட்டும் நடிகர்– நடிகைகள்!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் 2 அணிகள் போட்டியிடுவதால் விஷால் அணியில் கார்த்தியும், குஷ்பும், சரத்குமார் அணியில் சிம்புவும் முக்கிய பதவிகளுக்கு போட்டியிடுகிறார்கள்.


http://img.vikatan.com/news/2015/09/11/images/kushboo-%20karthi-%20simbu.jpgதென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. தற்போதைய நிர்வாகிகள் பதவிகாலம் முடிவடைந்ததை தொடர்ந்து, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய அடுத்த மாதம் 18ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த 2009 மற்றும் 2012ஆம் ஆண்டு தேர்தல்களில் சரத்குமார் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச்செயலாளராக ராதாரவி பதவி வகித்தார்.

இந்த தேர்தலில் விஷால் தலைமையில் இன்னொரு அணி களத்தில் குதித்துள்ளது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது. இரு அணியினரும் ஆதரவு திரட்டும் பணியில் கடந்த ஒருமாதமாக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட தகுதி உள்ளவர்களாக 3,139 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், அதிகம்பேர் இசை நாடக நடிகர்கள். இவர்கள் மேடையில் பாட்டுப்பாடி நடிக்க கூடியவர்கள். மதுரை, சேலம், திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல் பகுதிகளில் அதிகம் வசிக்கின்றனர். கரூர், காரைக்குடி, திண்டுக்கல் பகுதிகளிலும் நாடக நடிகர்கள் பரவலாக காணப்படுகின்றனர்.

சினிமா நடிகர்களைவிட, நாடக நடிகர்கள்தான் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பவர்களாக இருக்கின்றனர். எனவேதான், தேர்தலில் போட்டியிடுபவர்கள் இவர்களை குறிவைக்கிறார்கள். ஏற்கனவே இரு அணியினரும் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து நாடக, நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினர். இரண்டாவது கட்டமாக மீண்டும் இந்தப்பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.


http://img.vikatan.com/news/2015/09/11/images/Nalini-%20ponvannan-%20karunas.jpgஇன்னொரு புறம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வும் விறுவிறுப்பாக நடக்கிறது. சரத்குமார் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். அவரது அணி சார்பில் பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவி நிற்கிறார். பொருளாளர் பதவிக்கு சிம்பு நிறுத்தப்படுவார் என்று பேச்சு அடிபடுகிறது. இந்த பதவியில் முன்பு வாகை சந்திரசேகர் இருந்தார்.

இவர்கள் அணியில் இரண்டு துணைத் தலைவர்கள் பதவிக்கு விஜயகுமார், மற்றும் மறைந்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மகன் எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தியாகு, குண்டு கல்யாணம், குயிலி, நளினி, ஜெயமணி ஆகியோரும் முக்கிய பதவிகளுக்கு போட்டியிடுகிறார்கள்.

விஷால் அணியில் தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிடுகிறார். பொதுச்செயலாளராக விஷால் நிற்கிறார். பொருளாளர் பதவிக்கு பொன்வன்ணன் அல்லது கருணாஸ் நிறுத்தப்படுவார் என தெரிகிறது.

கார்த்தி துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவர்கள் அணி சார்பில் நடிகை குஷ்புவையும் முக்கிய பதவிக்கு போட்டியிட வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

balaajee
15th September 2015, 12:47 PM
சரத்குமார் அணியில் சிம்பு உபதலைவர் பதவிக்கு போட்டி: ஒரு வாரத்தில் வேட்பாளர்கள் பட்டியல்

நடிகர் சங்கத் தேர்தலில் சரத் குமார் அணியில் நடிகர் சிம்பு உப தலைவராகப் போட்டி யிடுகிறார்.
நடிகர் சங்கத் தேர்தல் அக்டோபர் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியினரும், நடிகர் விஷால் தலைமையில் மற்றொரு அணி யினரும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சங்கத் தேர்தல் குறித்து சரத்குமார் நேற்று சென்னையில் பத்திரிகை யாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நடிகர் சங்கத் தேர்தல் நெருங்கி வருவதை ஒட்டி என் மீது தொடர்ந்து பல குற்றச் சாட்டுகள் கூறப்பட்டு வரு கின்றன. இந்நிலை நீடித்தால் பல உண்மைகளை வெளியிட வேண்டி வரும். படங்கள் வெளி யிடுவதில் பிரச்சினை என்றாலும், நடிகர்களுக்கு எந்த ஒரு பிரச்சினை ஏற்பட்டாலும், நடிகர் சங்கத் தலைவர் என்கிற முறையில் பல பிரச்சினை களைத் தீர்ப்பதில் முழு ஈடுபாட் டோடு செயல்பட்டுள்ளேன்.

நடிகர் சங்கக் கட்டிடம் 2013லேயே கட்டி முடிக்கப்பட் டிருக்க வேண்டும். அவ்வாறு நடைபெற்றிருந்தால், நலிவுற்ற கலைஞர்கள் எத்தனையோ பேர் இன்று பலன் அடைந்தி ருப்பார்கள். இவ்வாறு சரத் குமார் பேசினார்.

உப தலைவர் பதவிக்கு சிம்பு

சரத்குமார் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் சிம்பு உபதலைவர் பதவிக்கு போட்டி யிடுவதாக அறிவித்துள்ளார். பத்திரிகையாளர் பேட்டி யின்போது சிம்பு கூறிய தாவது:
நான் டி.ஆரோட பையன் என் பதைத் தாண்டி ஒரு சிறந்த மனித னாக இருக்கவே விரும்புகி றேன். ஆரம்பம் முதற்கொண்டே நடிகர் சங்கத்தின் செயல்பாடு களைப் பார்த்து வருகிறேன். இந்த அணிக்கு நான் ஏன் வந்துள்ளேன் என்றால் இந்த அணியில்தான் உண்மை உள்ளது. நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதா ரவி உள்ளிட்டோரின் செயல்பாடு களைப் பார்த்து அவர்களின் அணியில் சேர்ந்துள்ளேன். நடி கர்களுக்குள் பல பிரச்சினைகள் இருந்தாலும் ஒற்றுமையை இழந்துவிடக்கூடாது என்றார்.

balaajee
15th September 2015, 01:30 PM
சரத்குமார் தலைமையிலான அணியின் ஆலோசனைக் கூட்டம் !
http://img.vikatan.com/album/2015/09/odgnja/thumb/118752.jpg (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4713&p_id=118752) http://img.vikatan.com/album/2015/09/odgnja/thumb/118753.jpg (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4713&p_id=118753) (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4713&p_id=118754) (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4713&p_id=118755) (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4713&p_id=118756) (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4713&p_id=118757) (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4713&p_id=118758) (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4713&p_id=118759) (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4713&p_id=118760) (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4713&p_id=118761) (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4713&p_id=118762) http://img.vikatan.com/album/2015/09/odgnja/thumb/118763.jpg (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4713&p_id=118763) (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4713&p_id=118764) (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4713&p_id=118765) http://img.vikatan.com/album/2015/09/odgnja/thumb/118766.jpg (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4713&p_id=118766) (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4713&p_id=118767) http://img.vikatan.com/album/2015/09/odgnja/thumb/118768.jpg (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4713&p_id=118768) (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4713&p_id=118769) (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4713&p_id=118770) http://img.vikatan.com/album/2015/09/odgnja/thumb/118771.jpg (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4713&p_id=118771) (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4713&p_id=118772) (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4713&p_id=118773) http://img.vikatan.com/album/2015/09/odgnja/thumb/118774.jpg (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4713&p_id=118774) (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4713&p_id=118775) http://img.vikatan.com/album/2015/09/odgnja/thumb/118776.jpg (http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4713&p_id=118776)

balaajee
23rd September 2015, 01:15 PM
ட்விட்டரிலிருந்து வெளியேறுகிறார் சிம்பு!

இனி நான் ட்விட்டரில் இல்லை என்று சிம்பு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்பு நடித்து வெளியான படம் வாலு. வாலு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நயன்தாராவுடன் நடித்துவரும் இது நம்ம ஆளு படம் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கிவருகிறார்.
http://img.vikatan.com/cinema/2015/09/22/images/simbu(1).jpgதொடர்ந்து கெளதம் மேனனுடன் அச்சம் என்பதுமடமையடா, செல்வராகவனுடன் கான் உள்ளிட்ட படங்களில் நடித்துவருவதால் இடைவிடாது படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் சிம்பு. அதனால் இனி ட்விட்டரில் நான் தொடரப்போவதில்லை என்பதை திட்டவட்டமாக அறிவித்துள்ளர்.

ட்விட்டரில் சிம்பு கூறியதாவது, “ இதுவரை என் ரசிகர்களும், என் நண்பர்களும் என்னை ட்விட்டரில் தொடர்ந்தவாறு இருந்தமைக்கு நன்றி. இன்று முதல் எனது ட்விட்டர்,எனது ரசிக மன்ற நிர்வாகிகளால் நிர்வகிக்கப்படும் .

தேவைப்பட்டால் மட்டுமே ட்விட்டரில் என்னுடைய கருத்தை பதிப்பேன். ஒரு நடிகனாக தரமான படம் கொடுக்கவேண்டும் என்ற கடமை எனக்கு இருக்கிறது. அவர்களுடனான என்னுடைய தொடர்ப்பு வெற்றிதரும் படம் மட்டுமே. தவிர இதுசார்ந்த எந்த சமுக வலைதளங்களில் உங்களுடன் பேசுவதில் நான் இல்லை என்பதை உணர்ந்துகொண்டேன்.

என்னுடைய இந்த முடிவை நீங்கள் ஏற்றுகொள்வீர்கள் என்பதில் ஐயமில்லை. மிஸ் யூ” என்று சிம்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

balaajee
7th October 2015, 10:36 PM
Simbu's angry speech against Vishal's Paandavar Ani - Part 1

https://www.youtube.com/watch?v=_b9pbivDozw&feature=youtu.be

balaajee
7th October 2015, 10:37 PM
Simbu's angry speech against Vishal's Paandavar Ani - Part 2



https://www.youtube.com/watch?v=SU3LRFIgP04

balaajee
9th October 2015, 11:46 AM
சிம்பு யாரையும் தவறாக பேசக்கூடாது: வடிவேலு அறிவுரை...

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02576/13MAYCHUDH01_va_14_2576629f.jpg

நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான விஷயத்தில் சிம்பு யாரையும் தவறாக பேசக்கூடாது என்று வடிவேலு பேசினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் வடிவேலு பேசியதாவது:

''விஷால் நரி வேலை செய்கிறார் என்று சிம்பு பேசியது தவறு. சிம்பு நல்ல தம்பி. நல்ல பிள்ளை. யாரையும் தவறாக பேசக்கூடாது.
நடிகர் சங்கத் தேர்தலில் சமாதானம் செய்ய முயற்சிப்பதில் உள்நோக்கம் உள்ளது.

கமல் தூண்டிவிடுகிறார் என்று சரத்குமார் அணியினர் சொல்கிறார்கள். யாரும் யாரையும் தூண்டவில்லை. விஷால் அணி நடிகர் சங்க விவகாரத்தை தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.
உண்மையைக் கண்டுபிடிக்கப் போகும் பாண்டவர் அணி எல்லா கலைஞர்களுக்கும் நல்லது செய்வார்கள். களவு போன நடிகர் சங்கத்தைக் கண்டுபிடிப்போம்'' என்று வடிவேலு பேசினார்.

balaajee
13th October 2015, 12:34 PM
கைவிடப்பட்டது 'கான்'?- தனுஷை இயக்கும் செல்வராகவன்! - Tamil Hindu

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் 'கான்' திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு, கத்ரீன் தெரசா, டாப்ஸி, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'கான்'. யுவன் இசையமைத்து வந்த இப்படத்தை கீதாஞ்சலி செல்வராகவன் மற்றும் சித்தார்த் இருவரும் இணைந்து தயாரித்து வந்தார்கள்.

சென்னையில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 'அச்சம் என்பது மடமையடா' படத்தை முடித்துவிட்டு இப்படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருந்தார் சிம்பு.
இந்நிலையில், 'கான்' திரைப்படத்துக்கு பணம் அளிக்க எந்த ஒரு பைனான்சியரும் முன்வரவில்லை. எப்போதுமே ஒரு படம் தொடங்கிய உடன் தான் பைனான்சியர் பணம் அளிக்க முன்வருவார்கள். இப்படம் தொடங்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்ட போதும், யாருமே பணம் அளிக்க முன்வரவில்லை. இதனைத் தொடர்ந்து இப்படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், செல்வராகவன் தன் அடுத்த படத்தை தனுஷை வைத்து இயக்க முடிவு செய்திருக்கிறார். இப்படத்தில் தனுஷ் நடிப்பது மட்டுமன்றி, தயாரிப்பார் என்று முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
'கான்' கைவிடப்பட்ட செய்தியால், சிம்பு ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான போது உலகளவில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி தீர்த்தார்கள் சிம்பு ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

balaajee
13th October 2015, 05:17 PM
கான் பட விவகாரம், சிம்புவுக்கு மீண்டும் சோதனை! - VIKATAN

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் கான் படம் திடீரென கைவிடப்பட்டுள்ளது. படம் ஆரம்பித்தும் படத்திற்கு போதிய நிதியுதவி கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது. இது குறித்து செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

நிறைய வதந்திகள் கான் படம் குறித்து உலாவிவருகின்றன. நான் அதற்கு தகுந்த பதிலளிக்க விரும்புகிறேன். கான் படம் என் மனதுக்கு நெருக்கமான கதையம்சம் கொண்ட படம். லட்சியம் சார்ந்த படம் மற்றும் படக்குழுவும் அமைந்தது. படக்குழுவும், நானும் இணைந்து ஒருமனதாக படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புகளை அடுத்த வருடம் மீண்டும் துவக்கலாம் என இருக்கிறோம். சிம்பு மற்றும் படக்குழுவுடன் இணைந்து பணியாற்றிய நிமிடங்களைக் கண்டிப்பாக நான் மிஸ் பண்ணுவேன் எனக் கூறியுள்ளார்.

http://img.vikatan.com/cinema/2015/10/13/images/kaan-simbu-upcoming-movie-first-look-poster1.jpgஒரு படம் ஆரம்பித்தவுடனேயே படத்திற்கான நிதியுதவி கிடைத்து படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற ஆரம்பித்துவிடும். ஆனால் கான் படத்தின் படப்பிடிப்புகள் துவங்கி சென்றுகொண்டிருக்கும் வேளையிலும் யாரும் தயாரிப்புச் செலவுக்கு பைனான்ஸ் அளிக்க முன்வரவில்லை எனவே தான் படம் கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சிம்பு நடிக்கும் படம் கைவிடப்பட்டுள்ள இதே வேளையில் தனுஷ் நடிக்கும் புதிய படம் ஒன்றை செல்வராகவன் இயக்க இருப்பதாகவும் அந்தப் படத்தை தனுஷ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பல போராட்டங்களுக்குப் பிறகு வாலு வெளியானது. இது நம்ம ஆளு படம் எப்போது ரிலீஸ் என்றே தெரியாமல் இருக்கிறது. இப்போது கான் படம் கைவிடப்பட்டதும் சேர்ந்துகொண்டுள்ளது. எனினும் கௌதம் மேனனின் படம் வெளியானால் மட்டுமே சிம்புவுக்கே சரியான நேரம் துவங்கும் என்றே தோன்றுகிறது.

balaajee
13th October 2015, 05:21 PM
கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் மெகா படம்

கெளதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன், அல்லு அர்ஜுன், புனீத் ராஜ்குமார், ஃபகத் ஃபாசில் இணையும் மெகா படம் ஒன்று தயாராக இருக்கிறது.
இயக்குநர் கெளதம் மேனன் அடுத்தாக கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் மற்றும் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் நடிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் இருவரும் நடிக்கவுள்ளனர். எனவே இந்தப் படம் 4 தென்னிந்திய மொழிகளிலும் தயாராகும் என்று தெரிகிறது.

தமிழில் சிம்பு, தெலுங்கில் நாக சைதன்யா நடிக்க, ஒரே நேரத்தில் 'அச்சம் என்பது மடமையாடா' படத்தை கெளதம் மேனன் இயக்கிவருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்னரே புனீத் ராஜ்குமாருடன் இணைய திட்டமிட்டிருந்த கெளதம் மேனன், 7-அப் விளம்பர படப்பிடிப்பின்போது அவரை சந்தித்து பேசி சம்மதம் பெற்றுள்ளார். புனீத் ராஜ்குமாரும் கவுதம் மேனனுடன் இணைய ஆவலாக இருந்ததால், அவர் தற்போது அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு, தேதிகளை ஒதுக்கியுள்ளதாகத் தெரிகிறது. இதேபோல ஃபகத் ஃபாசிலும் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்க ஆவலாக இருந்தார். அவரது ஆசையும் நிறைவேற உள்ளது..

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனும், தமிழிலிருந்து சிலம்பரசனும் இந்தப் படத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழி படங்கள் இயக்கி பழக்கப்பட்டுள்ள கெளதம் மேனன், இந்தப் படத்தின் தமிழ் மற்றும் மலையாளம் பதிப்புகளை தயாரிப்பார் என்றும், புனீத் கன்னட பதிப்பையும், முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் தெலுங்கு பதிப்பையும் தயாரிப்பார்கள் என்றும் தெரிகிறது. இந்தப் படத்துக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானை கெளதம் மேனன் சந்திக்கவுள்ளார்.

ராம் சரண் தேஜாவுடன் இணைந்து மற்றொரு தெலுங்கு படத்தையும் கெளதம் மேனன் இயக்கவுள்ளார். 'தனி ஒருவன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ள ராம் சரண், அது முடிந்ததும் அடுத்த வருடம் ஜூன் மாதம் முதல் கெளதம் மேனன் படத்தைத் தொடங்குவார். இடைப்பட்ட நேரத்தில் இந்த பன்மொழிப் படத்தை துவங்க திட்டமிட்டுள்ள கெளதம் மேனன், அது உடனடியாக நடக்கவில்லையென்றால், ராம் சரணையும் இந்த பன்மொழிப் படத்தில் நடிக்கவைப்பார் என்று தெரிகிறது.

balaajee
19th October 2015, 11:28 AM
Ponvannan : 1235 Won
Silambarasan (Simbu) : 1107 Lose

balaajee
22nd October 2015, 06:05 PM
vikatan

ஒரு படத்தை வெளியிடுவதற்குள்ளேயே நூடுல்ஸ்ஸான விரல்நடிகர், அடுத்துத் தயாரித்து நடித்துவரும் படமும் வெளியாவது சந்தேகமே. அந்தப் படத்தில் நடித்திருக்கும் நம்பர் நடிகைக்குப் பேசப்பட்ட சம்பளத்தில் பாதியே கொடுத்திருக்கிறார்களாம். மேலும் விரல் நடிகர் தனியாக 30 லட்சம் தருவதாகச் சொல்லிய பணமும் தரவில்லையாம். இன்னும் இரண்டு பாடல்கள் பாக்கியிருப்பதால் நடித்துத் தாருங்கள், மீதித் தொகை அனைத்தையும் தந்துவிடுகிறேன் என்று கேட்டாலும், முடியவே முடியாது என்று கறாராக சொல்லிவிட்டாராம் நம்பர் நடிகை. விரல் நடிகருக்கு எந்தப் பக்கம் திரும்புனாலும் அடிமேல் அடிவிழுந்து வருகிறது! பாவம் யார்(நடிகைகள்) விட்ட சாபமோ!

balaajee
23rd October 2015, 11:51 AM
SIMBU candid with BOSSKEY

https://www.youtube.com/watch?v=qoQ4wgVrEAc

balaajee
12th December 2015, 01:29 PM
சிம்பு கைதாகிறாரா? பாடல் நீக்கப்பட்டதா?

அதிர்ச்சி தகவல்
http://dimg.zoftcdn.com/img/wh/100/450x250/cdn/cinema/thumbs/tamil/actors/simbu/013.jpg சிம்பு சில நாட்களாக எந்த வம்பிலும் மாட்டாமல் இருந்தார். அப்படி இருந்தால் அது சிம்புவே இல்லையே...பீப் சாங் என ஒன்று வெளியிட்டு வம்பில் மாட்டிக்கொண்டார்.
இப்பாடலுக்கு சமூக வலைத்தளங்கள் ஆதரவும், எதிர்ப்பும் குவிந்து வருகின்றது. ஆனால், ஒரு எழுத்தாளர் இது அரசியல் சதி, ஆட்சியின் குறைப்பாட்டை திசை திருப்ப, அரசே செய்த வேலை என்ற ரேஞ்சில் பேசி செம்ம காமெடி செய்துள்ளார்.
மேலும், பல பெண் அமைப்பினர்கள் இவர்களை கைது செய்ய வேண்டும் என கொடி பிடிக்க, அட போங்கடா என அந்த பாடல் யு-டியுபில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. இச்சம்பவம் திரையுலகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

balaajee
12th December 2015, 06:26 PM
திரு சிம்பு அவர்களே...ஒரு தமிழ் பெண்ணின் கடிதம் !!!!

தமிழ் சினிமாவில் சில காலமாக ‘சிறந்த பாடல்களையும் படங்களையும் வழங்கி’ இளைஞர்களின் நெஞ்சில் இடம் பிடித்து இருக்கும் சிலருக்கு தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் ஒரு சராசரி பெண் சொல்ல விரும்பும் விஷயங்கள் இங்கே...


திரு.சிம்பு, திரு.தனுஷ், திரு.ஜி.வி. பிரகாஷ், திரு.அனிருத், "ஹிப்ஹாப் தமிழா" திரு.ஆதி மற்றும் இன்னும் பலருக்கு,

சமீபத்தில் உங்களுடைய படங்களை, பாடல்களை வெற்றி பெற வைக்கும் பொருட்டு நீங்கள் வெளியிடும் உங்கள் படைப்புகள் ஒரு சராசரி பெண்ணின் வாழ்க்கையில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா என்பதை என்னால் கணிக்க இயலவில்லை.

பொதுவாக தமிழர்கள் சினிமா வேறு வாழ்க்கை வேறு என்று பார்ப்பது கிடையாது. படங்களில், மெகா சீரியல்களில் வரும் வில்லன்கள் வில்லிகள் நன்றாக இருக்கக்கூடாது என்று வாரித் தூற்றும் அளவுக்கு அவர்களது வாழ்க்கை சினிமாவுடன் பிணைக்கப்பட்டு உள்ளது. சினிமா நடிகர்களை நாட்டை ஆள வைத்து அழகு பார்ப்பவர்கள்.

http://img.vikatan.com/news/2015/12/12/images/simbu_vc1.jpg


இத்தகைய சமூகத்தில், உங்களுடைய பாடல்களை, பட வசனங்களை வைத்து இங்கு தினம் தினம் எவ்வளவு பெண்கள் 'வெர்பல் அப்யூஸ்' எனப்படும், ’வார்த்தை வதை’யை எதிர்கொள்கிறார்கள் என்பதை ரசிகர்களை மகிழ்விக்க பறந்து பறந்து வேலை பார்க்கும் நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான். ‘இது வெறும் ஜாலிக்குதான்... நாங்கள் பெண்களை திட்டவில்லை’ என்று நீங்கள் கூறும் பதில்களை கேட்டு கேட்டு காது புளித்துப்போனவர்களில் நானும் ஒருத்தி!

அது என்ன மாயமோ புரியவில்லை, என்ன மந்திரமோ தெரியவில்லை ஜாலிக்கு திட்ட பெண்கள் மட்டுமே கிடைக்கிறார்கள். "க்ளப்புல மப்புல" பெண்கள் திரிவதாக பாடிய ’ஹிப்பாப் தமிழா’ திரு.ஆதியின் கண்களுக்கு குடிப்பழக்கம் உள்ள சுமார் நான்கு சதவீத பெண்கள் மட்டுமே தெரிகிறார்கள். அவருக்குப் பிடித்த பாரதியாரின் கூற்றின்படி நிமிர்ந்த நன்னடையில், நேர்கொண்ட பார்வையுடன் இப்புவியில் யாருக்கும் அஞ்சாத துணிவுடன் இந்த சமூகத்தில் போராடி முன்னேறும் பெண்களை பார்க்காமல் போய்விட்டார். குடிக்கும் பழக்கம் உள்ள முக்கால்வாசி ஆண்களைப் பற்றி பாடியதே இல்லை. பெண்கள் கர்சீப்பை கட்டிக் கொண்டு நடமாடுவதாகக் கூறிய திரு.ஆதி அவர்கள், ஏனோ லோ ஃஹிப், ஜீன்ஸ், டீ ஷர்ட், ஷார்ட்ஸ் போடும் ஆண்களிடம் வேட்டி சட்டை கட்ட சொல்லவே மறந்து விட்டார். 'ஆண்கள் குடித்தால், பெண்கள் குடிப்பதில் என்ன தவறு... பெண்களும் குடிக்க வேண்டும் ' என்று வறட்டு பெண்ணியம் பேசும் பெண் அல்ல நான். மது அருந்துவது பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை இருக்கும். ஆனால் ‘பெண்கள் எல்லாம் குடிக்கிறார்கள்’ என்று கூப்பாடு போடுவதுதான் இங்கு பிரச்னை.

இங்கு பல பெண்கள் ஆசிட் வீச்சிலும் இன்னும் பல கொடூரமான வழிகளிலும் கொல்லப்பட, சித்ரவதை செய்யப்பட ‘அடிடா அவள, ஒதடா அவள, வெட்ரா அவள’ என்று பாட எப்படிதான் மனசு வருகிறதோ என்று தெரியவில்லை ’பொயட்டு’ திரு.தனுஷ் அவர்களுக்கு. நெரிசல்மிக்க நகரத்தின் பீக் ஹவரில், நகரப் பேருந்தில் பயணிக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் அவஸ்தையை அறிவீர்களா நீங்கள்! சமூகக் காரணங்களால் ஆசைப்பட்ட படிப்பைப் படிக்க முடியாமல், இஷ்டப்பட்ட வேலைக்குச் செல்ல முடியாமல், வீட்டின் பொருளாதாரத்துக்கு கை கொடுக்க ஏதோ ஒரு வேலைக்கு காலையில் செல்லும்போது, எத்தனை உரசல்கள், சீண்டல்களை நாங்கள் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது தெரியுமா? உடல் முழுக்க உறுப்பு முளைத்த எத்தனை ‘ஆண்களை’க் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது தெரியுமா? உடல் அவஸ்தையை பொறுத்துக் கொண்டு, விடுப்பு எடுக்க முடியாமல் மாதம் முழுக்க வேலைக்குச் செல்லும் எங்களை, எப்படி ஒரு போகப் பொருளாக மட்டும் உங்களால் பார்க்க முடிகிறது!?


http://img.vikatan.com/news/2015/12/12/images/simmbu_400400_vc1.jpg


இதற்கெல்லாம் உச்சகட்டமாக ஒரு படம் முழுக்கவே பெண்களை மிகக் கேவலமாக சித்தரித்து எதிர்பாராத அதிர்ச்சியை ஏற்படுத்தினார் திரு.ஜி.வி.பிரகாஷ். வெர்ஜினிட்டி என்ற பிற்போக்கு தனத்தை முதன்மைப்படுத்தி, வெர்ஜின் பெண்கள் டைனோசர் காலத்திலேயே போய்விட்டனர் என்றாகவெல்லாம் பட வசனங்கள். இது முழுக்க முழுக்க முட்டாள்தனத்தின் உச்சகட்டம். ஒரு பெண்ணை வெறும் பாலியல் உறவுக்காக மட்டுமே ஒருவன் பயன்படுத்தி அவளைத் தூக்கி எறிந்தால், அந்தப் பெண் வெர்ஜினிட்டியை இழந்து விட்டதன் காரணத்தால் அவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகரக் கூடாதா? காதலன் கைவிட்ட, கணவனைப் பறிகொடுத்த பெண்கள் இன்னொரு திருமணம் செய்யக்கூடாதா? மணமுறிவு பெற்ற பெண்கள் இன்னொரு ஆணைத் திருமணம் செய்யக் கூடாதா? பெண்களுக்கு பலமான பொருட்களை தூக்கினாலும், வெகு தூரம் சைக்கில் ஓட்டினாலும், கன்னித்திரை பாதிக்கப்பட்டு நீங்கள் பொக்கிஷமாகக் கருதும் ‘வெர்ஜினிட்டி’ போய்விடும். தடகளம் உள்ளிட்ட* விளையாட்டுகளில் பயிற்சி பெறும் பெண்களுக்கும் வெர்ஜினிட்டி இருக்காது. இது மருத்துவ உண்மை. அவர்களை என்ன செய்வது? அப்படியான பெண்கள் உங்கள் வீட்டில் இருந்தால் என்ன செய்வீர்கள்?

இரண்டு நாட்களுக்கு முன் திரு.சிம்பு-திரு.அனிருத் கூட்டணியில் வெளிவந்த ’பீப் சாங்’... வக்கிரத்தின் உச்சம்! பாடலின் வரிகள் ஆபாசத்தின் உச்சம். அந்தப் பாடலின் ஒரு வரி, 'பெண்களை உடலுறவுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம், காதல் வேண்டாம்' என்கிறது. நாங்கள் பெண்கள், ஆண்களான* உங்களைப் போலவே ரத்தமும் சதையும் உள்ளவர்கள். காமத்துக்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் அல்ல.

ஆண்களால் காதல் என்ற பெயரில் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையே இங்கு அதிகம். ஆனால் பெண்கள் ஏமாற்றுவார்கள், பொழுதுபோக்குக்காக காதலிப்பவர்கள் என்ற பெயரில் பெண்களுக்கு எதிரான ஒரு பொது புத்தியை கட்டமைக்கிற வேலையை செய்கின்றன தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் உங்களுடைய பாடல்களும் படங்களும். இப்படியான முயற்சிகள் பெண்களை ஏமாற்றிய சில ஆண்கள் மீதிருக்கும் களங்கத்தை மறைக்க முனைவதாகவே தெரிகிறது. ஆனால், ஒரு பெண்ணாக நாங்களே பாதிக்கப்பட்ட தரப்பினராகவும் இருந்து, நாங்களே குற்றவாளிகளாகவும் ஆக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் துன்பத்துக்கு உள்ளாக்கப்படுவது இந்தச் சமூகத்தில் எங்களுக்குப் புதிதாக நடைபெறுவதில்லை. பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட, பாதிக்கப்பட்ட பெண்ணின் மீதே குற்றம் சுமத்தும் சமூகத்தில்தானே நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?

ஒரு பெண்ணாக எங்களது சிறிய அபிலாஷை என்னவெனில், இனியாவது இது மாதிரி படங்களையும், பாடல்களையும், வசனங்களையும் பயன்படுத்துவதை நிறுத்தவும், தவிர்க்கவும். உங்கள் வீட்டுப் பெண்களையும் சேர்த்து பெண்கள் இனத்தின் வலியைப் புரிந்து கொள்ளவும்!
அப்புறம் இன்னொரு விஷயம்... ‘இது என்னோட பெர்சனல் கலெக்*ஷன்... அதைப் பற்றி ஏன் விமர்சிக்கிறீர்கள்?’ என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் போல. பெர்சனல் கலெக்*ஷன்ல் பொதுவெளிக்கு வரவிடாமல் தடுத்திருக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. அப்படி வந்த பெர்சனல் கலெக்*ஷன் ஒட்டுமொத்த பெண்களையும் பாதிப்பதாக இருந்தால், ஆதங்கத்தையும் ஆவேசத்தையும் வெளிப்படுத்தவே செய்வோம். உங்களுக்கு இருக்கும் படைப்புச் சுதந்திரம் போல, எங்களுக்கு ‘விமர்சன சுதந்திரமும்’ இருக்கிறது.

இன்னுமொரு முக்கியமான விஷயம்... சென்னையே நூறாண்டு காணாத வெள்ளப் பாதிப்பில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருக்கும்போது, இந்தப் பாடல் உங்களுக்கே கூட தெரியாமல் வெளியாக வேண்டிய தேவை என்ன? இந்திய சினிமாக்களிலேயே கிளாமர் கொடி கட்டிப் பறக்கும் தெலுங்கு திரையுலகமே, சென்னை வெள்ளத்துக்கு ஒன்றிணைந்து உதவிக் கரம் நீட்டிக் கொண்டிருக்கும் சமயம், நீங்கள் தமிழர்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை... இப்படியான உபத்திரவங்கள் செய்யாமல் இருக்கலாமே..! இந்த ஒற்றை கேடுகெட்ட பாடல், மக்களின் மனநிலையில், கவனத்தில் பெரும் மாற்றத்தை உண்டாக்கிவிட்டதை அறிவீர்களா? அவ்வளவு ஏன், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வந்திருந்த நானே, வேலை மெனக்கெட்டு இந்தக் கட்டுரைக்காக சில மணி நேரங்களை வீணாக்கிக் கொண்டிருக்கிறேனே!

இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் மற்றும் வார்த்தைகள் திரு.சிம்பு, திரு.தனுஷ், திரு.ஜி.வி. பிரகாஷ், திரு.அனிருத், திரு.ஆதி ஆகியோர்களுக்கு ஏதேனும் மன சங்கடத்தை உண்டாக்கியிருந்தால்.... அதற்காக நான் வருந்தப்போவது இல்லை. அதைக் காட்டிலும் லட்சம், கோடி மடங்கு உங்கள் ’படைப்பு’கள் என்னைப் போன்ற பெண்களை அனுதினமும் துரத்துகின்றன... தீண்டுகின்றன. அது தரும் துன்பத்தையும் துயரத்தையும் ஒரு நொடி உணர்ந்தால் கூட, இனி அப்படியான ‘படைப்பு’களைப் படைக்க மாட்டீர்கள்!

நன்றி!


FROM VIKATAN

- ரமணி மோகனகிருஷ்ணன் (மாணவப் பத்திரிக்கையாளர்)

balaajee
12th December 2015, 06:32 PM
ஆபாச பாடல்- சமாளிக்கும் சிம்பு


http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_151212172914000000.jpg


சென்னை மக்கள் மழை வெள்ளத்தில் சிக்கி சின்னாபின்னமாகி கிடக்கும்போது, நடிகர் நடிகைகள் தங்கள் பொன்னான நேரத்தை மக்களோடு நின்று அவர்களுக்கு பணியாற்றுவதற்கு செலவிடும்போது கொஞ்சம்கூட சமூக பொறுப்பு இல்லாமல் பீப் சாங் என்ற தலைப்பில் ஒரு ஆபாச பாடல் இணைய தளங்களில் வெளியாகி இருக்கிறது.

இந்தப் பாடலை சிம்பு, எழுதி பாடியுள்ளார் என்றும், அனிருத் இசை அமைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. பாடல் முழுக்க ஆபாச வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது. அந்த இடத்தில் பீப் சவுண்ட் போட்டிருந்தாலும் எல்லோரும் அந்த வார்த்தையை கணிக்க முடியும். இந்தப் பாடலை சிம்பும், அனிருத்தும் தனிப்பட்ட முறையில் வைத்திருந்ததாகவும் அதனை யாரோ வெளியிட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. முதலில் லீக்காக்கி பார்ப்போம் மக்கள் வரவேற்பை பொறுத்து வெளியிடுவோம் என்ற சிம்பு தரப்பே செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

http://tamilrockers.com/public/style_emoticons/default/happy.gif "சிம்பு வீட்டு பாத்ரூம் கதவும், ஜன்னலும் அம்புட்டு வீக்கா" http://tamilrockers.com/public/style_emoticons/default/happy.gif என்று கேட்கிறான் ரசிகன்.

balaajee
12th December 2015, 06:37 PM
என் வீட்டின் படுக்கையறையில் செய்வதை நீங்கள் பார்க்காதீர்கள்- பீப் பாடல் சிம்பு ஆவேச பதில்

http://dimg.zoftcdn.com/img/wh/100/450x250/cdn/cinema/thumbs/tamil/actors/simbu/017.jpg சிம்பு பாடி, அனிருத் இசையமைத்த பீப் பாடல் தான் தற்போதைய வைரல். இப்பாடலை பலரும் எதிர்த்து வருகின்றனர். இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று அந்த பாடல் போலவே இவர்களும் பேசி அர்ச்சனை செய்து வருகின்றனர்.
இதுக்குறித்து சிம்பு கூறுகையில் ‘நானும் அனிருத்தும் இதுப்போல் 150 பாடல்களை உருவாக்கியுள்ளோம், இதில் இந்த பாடலை யாரோ திருடி இணையத்தில் அப்லோட் செய்துள்ளார்கள்.
முதலில் அப்பாடல் ஏதாவது ஒரு படத்திலோ, ஆல்பத்திலோ இடம்பெறவில்லை. அது இணையத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. நான் ஒரு கேள்வி கேட்கிறேன். அதே இணையத்தில் தானே ஆபாச வீடியோக்களும் இருக்கிறது. தேவை என்றால் தானே போய் பார்க்கிறீர்கள். அதேபோல் தான் பாடல் பிடிக்கவில்லை என்றால் கேட்காதீர்கள்.
என் வீட்டின் படுக்கையறையிலும், பாத்ரூமிலும் என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதை எட்டிப் பார்க்கும் அதிகாரம் நான் யாருக்கும் அளிக்கவில்லை. அதேபோல் உங்கள் வீட்டில் நான் எட்டிப்பார்க்க மாட்டேன்.
மேலும், சில வருடங்களுக்கு முன் அன்பை பரிமாறுங்கள் என்று ஒரு பாடல் வெளியிட்டேன், அப்போதெல்லாம் நீங்கள் எங்கு போனீர்கள்’ என்று மிக கோபமாக பதில் அளித்துள்ளார்.

balaajee
12th December 2015, 07:55 PM
Whats wrong with Beep song ?

https://www.youtube.com/watch?v=Qarcyb1Xm8M

thamiz
13th December 2015, 03:36 AM
I think Simbhu and Anirudh leaked the song on purpose and now he is complaining that someone stole it!

Nobody looked at your bathroom- we all know you are ugly even when you are covered yourself!

Your bathroom does not have a roof or walls, genius!

We know what you half-baked M-beep-O-beep-R-beep-O-beep-N-beep-S do!

balaajee
13th December 2015, 09:41 AM
கொதித்து எழுந்த மாதர் சங்கம்- சிம்புவிற்கு புதிய நெருக்கடி

http://dimg.zoftcdn.com/img/wh/100/450x250/cdn/cinema/thumbs/tamil/others/2015/12/bss001.jpg

பீப் சாங் இன்னும் எத்தனை பெரிய பிரச்சனையை உருவாக்கும் என்று தெரியவில்லை. இதை சிம்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
இந்நிலையில் யாரோ இந்த பாடலை இணையத்தில் லீக் செய்ய பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
தற்போது கோவையை சார்ந்த மாதர் சங்கத்தினர் சிம்பு-அனிருத் போஸ்டர்களை கிழித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

thamiz
13th December 2015, 10:18 AM
கொதித்து எழுந்த மாதர் சங்கம்- சிம்புவிற்கு புதிய நெருக்கடி

http://dimg.zoftcdn.com/img/wh/100/450x250/cdn/cinema/thumbs/tamil/others/2015/12/bss001.jpg

பீப் சாங் இன்னும் எத்தனை பெரிய பிரச்சனையை உருவாக்கும் என்று தெரியவில்லை. இதை சிம்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
இந்நிலையில் யாரோ இந்த பாடலை இணையத்தில் லீக் செய்ய பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
தற்போது கோவையை சார்ந்த மாதர் சங்கத்தினர் சிம்பு-அனிருத் போஸ்டர்களை கிழித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.




சிம்புக்கு அழிவுகாலம் ஆரம்பிச்சுடுச்சு!

thamiz
13th December 2015, 10:20 AM
I dont see anybody supporting him in this issue! If they do, they will be in trouble too!

interz
13th December 2015, 06:33 PM
So let me get it straight. A guy watches porn on his computer in his home. Somebody leaks out the news he visit porn sites to public. The public get outraged by this behaviour. They burn his pictures and call him abusive words (<-note this). Because all guys are innocent and only talks purity language acc to the public right?

Let guys be guys for gods sake. Dont make them into political correct dolls with strings.

ajaybaskar
13th December 2015, 06:43 PM
Interz,

You've got it wrong. When his pics with Nayantara released a few years back nobody reacted like this. Its his personal thing. But supposedly leaking a song full of cuss words in public when the people are just returning to their normal life is condemnable. He has the history of claiming that someone has stole photos, videos from his mobile and this is not the first time.

This alleged leak on the same day of Dhanush's new movie's trailer release doesn't look like a coincidence

Sent from my SM-G531F using Tapatalk

interz
13th December 2015, 08:31 PM
Are you sure its Simbu who leaked the song? I really doubt Simbu would do it after he choose the "spiritual " pattern last year. I think if any one should be blamed for its the guy who leaked it.

To me its more offensive people are getting upset about what people do in privacy. Furthermore I thought people had more to cleaning the places after the flood than complaining and demonstrating about cinema. These people never change..

thamiz
13th December 2015, 08:37 PM
Are you sure its Simbu who leaked the song? I really doubt Simbu would do it after he choose the "spiritual " pattern last year.

Well, a spiritual person would not sing such a song and enjoy hearing it in his bathroom or bedroom. Only a sick spiritual person would do!

BTW, what does "spiritual" mean?

interz
13th December 2015, 09:59 PM
http://www.tamilstar.com/news-id-simbu-turns-a-spiritualist-simbu-in-spiritual-trip-tamil-movies-28-05-134927.htm

My bad it was 2 and half years ago. The article explains it all.

Furthermore I havent read it is a song Anirudh and Simbu made while chennai suffered from flood. The guy who leaked it is enjoying his deed now. Every one blame Simbu and Anirudh but him.

ajaybaskar
13th December 2015, 10:00 PM
TR writes to Commissioner of Police mentioning that music was composed by Anirudh in his letter

Sent from my SM-G531F using Tapatalk

paranitharan
14th December 2015, 01:23 AM
Antha maavu pisairavanga ellaam eppidi escape aavuranga.
Etho movie la dressing code paththi kuuda advice pannuvaar. that was even worse

rajeshkrv
14th December 2015, 05:29 AM
Are you sure its Simbu who leaked the song? I really doubt Simbu would do it after he choose the "spiritual " pattern last year. I think if any one should be blamed for its the guy who leaked it.

To me its more offensive people are getting upset about what people do in privacy. Furthermore I thought people had more to cleaning the places after the flood than complaining and demonstrating about cinema. These people never change..

he has all right to do in his bedroom/bathroom but in public that too this cheap... not at all ... but current generation is like that, doesnt care about lyrics but only likes/views. if everyone would have banned why this kola veri and danush's atrocious lyrics from then now this wouldnt have happned.. Simbu just added icing on the cake

balaajee
14th December 2015, 02:23 PM
பீப் பாடலுக்காக சிம்புவுக்கு சம்மன். காவல்நிலையத்தில் ஆஜராவாரா? - VIKATAN

பீப் பாடல் விவகாரம் தொடர்பாக, வரும் 19 ம் தேதி கோவை காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நடிகர் சிம்புவுக்கு கோவை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். சிம்பு இல்லாததால் அவரின் தந்தை டி.ராஜேந்தரிடம் சம்மன் வழங்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் அனிருத் இசையில், நடிகர் சிம்பு எழுதி, பாடியதாகச் சொல்லப்படும் ஆபாச வரிகளைக் கொண்ட பாடல் ஒன்று, இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்தப் பாடலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கோவை,தூத்துக்குடி,கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களில் மாதர் சங்கத்தினர் போரட்டங்களும் நடத்தினர்.

இந்நிலையில் நடிகர் சிம்பு, அனிருத் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையரிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் புகார் கொடுக்க, உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டார் காவல் ஆணையர் அமல்ராஜ். இதையடுத்து சிம்பு, அனிருத் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என நடிகர் சிம்புவுக்கு கோவை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

http://img.vikatan.com/cinema/2015/12/14/images/simbu_vc1.jpgவரும் 19-ம் தேதி காலை கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கமளித்திட வேண்டும் என அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மனை விநியோகிக்க கோவை போலீசார், சென்னையில் உள்ள சிம்புவின் வீட்டுக்கு இன்று காலை சென்றனர். சிம்பு வீட்டில் இல்லாததையடுத்து, அவரது தந்தை டி.ராஜேந்தரிடம் சம்மனை போலீசார் அளித்தனர். அதன்படி வரும் 19-ம் தேதி சிம்பு நேரில் ஆஜராகி விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் கூறுகையில், "பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஆபாச பாடலை இணையத்தில் வெளியிட்டது தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளோம். இது தொடர்பாக சிம்புவிடம் விசாரிக்க வரும் 19-ம் தேதி அவரை நேரில் ஆஜராக கோரி சம்மன் அனுப்பியுள்ளோம். விசாரணைக்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் சிம்பு, அனிருத் மீது நடவடிக்கை கோரி புகார்கள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

balaajee
15th December 2015, 12:20 PM
பீப் பாடலில் சம்மந்தப்பட்டவர்களை தூக்கில் போடுங்கள்- ஒய்.ஜி.மகேந்திரன் ஆவேசம்

சமீபத்தில் இணையத்தில் லீக்காகி பெரும் சர்ச்சைக்குள்ளானது சிம்பு பாடிய பாடலான ‘பீப் பாடல்’. இது பலரையும் முகம் சுளிக்கச் செய்துள்ளது. வைரமுத்து, கங்கை அமரன் உட்பட பலரும் இந்தப் பாடலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது பழம்பெரும் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா தனது முகநூல் பக்கத்தில் மிகவும் ஆவேசமாக கேள்விகள் எழுப்பியுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, மற்றுமொரு சர்ச்சைக்குரிய தமிழ்ப் பாடல். பீப் பாடல். அனிருத் எனக்கும் அந்தப் பாடலுக்கு சம்மந்தம் இல்லை எனத் தெளிவாகக் கூறிவிட்டார். அதனால் இந்தப் பாடல் கண்டனத்துக்குரியது. இந்தப் பாடலுக்கு பொறுப்பாளி யார் என்பதைக் கண்டறியவேண்டும். இந்த அசிங்கமான பாடலில் எந்தவொரு உணர்வும், எந்தவொரு மெலொடியும் இல்லை.

http://img.vikatan.com/cinema/2015/12/15/images/B.jpgவெறும் குழந்தைகளை அந்த பீப் சத்தத்தில் மறைந்திருக்கும் வார்த்தை என்ன எனக் கேட்கச் செய்து பெரியவர்களை சங்கடத்தில் ஆழ்த்தும் பாடலே.
இந்தப் பாடல் அவசியமான ஒன்றா. லீக்கானதோ, ஆகாததோ எனினும் மூளை பாதிக்கப்பட்ட மனிதனால் மட்டுமே இப்படி ஒரு பாடலை உருவாக்க இயலும். கண்ணதாசன் தனது கல்லறையில் கண்டிப்பாக நிம்மதியின்றியே இருப்பார். ஆனாலும் யார் மீதேனும் தவறான பழிகள் வந்து சேரும் முன் உண்மையான நபரைக் கண்டறிந்து அவரைத் தூக்கிலிட வேண்டுமென தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்..

interz
15th December 2015, 03:55 PM
Bullocks. I think people are hyping up the song to be more controversial than it is. I condemn every one condemning this song. It is a song, it is not the bible or quran or bhagavadh geeta. For ever silly protest I in india, it makes me wonder has India really been freed, or is it yet to happen...

balaajee
15th December 2015, 04:48 PM
பீப் சாங் எதிரொலி: சிம்பு வீட்டை முற்றுகையிட்டு மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!


சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நடிகர் சிம்பு-அனிருத் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் சிம்பு வீட்டை முற்றுகையிட்டு மாதர் சங்கத்தினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது நடிகர் சிம்புவை கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத் தளங்களில் நடிகர் சிம்பு குரலில், இசையமைப்பாளர் அனிருத் இசையில் வெளியானதாகக் கூறப்படும் 'பீப்' பாடல் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://img.vikatan.com/cinema/2015/12/15/images/simbu%20protest%20chennai%201.jpg
பெண்களை இழிவுப்படுத்தும் நோக்கில் இந்தப் பாடல் உள்ளது என்று சிம்புவுக்கும்,அனிருத்துக்கும் கண்டனம் தெரிவித்து,கோவை,தூத்துக்குடி,சேலம்,கோவில்பட்ட ி என்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மாதர் சங்கத்தினரும், மகளிர் அமைப்பினரும் கண்டன ஆர்ப்பாட்டமும், உருவப்பட எரிப்பும் நடத்தி வருகின்றனர். மேலும் கோவை போலீசாரிடம் மாதர் சங்கத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் சிம்புவிற்கும், அனிருத்திற்கும் வரும் 19ம் தேதி நேரில் ஆஜராக சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள நடிகர் சிம்புவின் வீட்டு முன்பு இன்று (செவ்வாய்) காலை மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கையில், சிம்புவை கைது செய்ய வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள், சிம்புவின் படத்தை கிழித்தும், கொளுத்தியும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். மேலும், சிம்புவையும், அனிருத்தையும் விரைவில் கைது செய்ய, தமிழக அரசை வலியுறுத்தியும், பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் உருவாகும் பாடல்களை தடை செய்ய வேண்டும் என்று கூறியும் கோஷங்களை எழுப்பினர்.

http://img.vikatan.com/cinema/2015/12/15/images/simbu%20protest%20chennai%202.jpg
இதுகுறித்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தென் சென்னை மாவட்ட செயலாளர் மரியாள் கூறுகையில், "நடிகர் சிம்பு, பெண்களை ஆபாசப்படுத்தி ஒரு பாடலை எழுதி, இணையத்தில் வெளியிட்டுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த பாடல், பெண்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடலை தடை செய்து, சிம்பு மற்றும் அனிருத் எங்கிருந்தாலும், உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி இந்த ஆர்பாட்டத்தை நடத்தியுள்ளோம். சிம்பு தலைமறைவாக உள்ளதாக கேள்விப்பட்டோம்.

http://img.vikatan.com/cinema/2015/12/15/images/simbu%20protest%20chennai.jpg
அவர் எங்கு இருந்தாலும் உடனடியாக தமிழக காவல் துறையினர், அவரை கைது செய்ய வேண்டும். அதுவரை, பல்வேறு வடிவங்களில் எங்களுடைய போராட்டம் தொடரும். சில தினங்களுக்கு முன், சிம்பு தன் பெட்ரூமை யாரும் எட்டிப்பார்க்கக் கூடாது எனக் கூறியுள்ளார். ஆனால், அவர் பெட்ரூமில் படுக்கவில்லை. நடுரோட்டில் படுத்துக் கொண்டிருக்கிறார். நடுரோட்டில் இருந்து அவர் எழுந்து கொள்ள வேண்டும். நாங்கள் எழுந்து கொள்ள வைப்போம். மேலும் கானா பாடல்கள் சிலவும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. இதுபோன்ற பாடல்களுக்கு, சென்சார் போர்டு அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்." என்றார்.


சிம்பு குற்றவாளியா? நிரபராதியா?


சிம்பு உருவாக்கியுள்ள பீப் பாடல் அவருக்குப் பலத்த எதிர்ப்பை உருவாக்கிவிட்டது. சிம்புவைக் கைது செய்யவேண்டும், அவரை திரையுலகில் செயல்பட சில ஆண்டுகளுக்குத் தடைவிதிக்கவேண்டும், கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்று பலரும் பலவிதமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் எல்லோருடைய ஒட்டுமொத்த உணர்வும், இந்தப்பாடலை உருவாக்கியதற்காக சிம்பு ஏதோவொருவகையில் தண்டிக்கப்படவேண்டுமென்பதே.

http://img.vikatan.com/cinema/2015/12/15/images/simbu.jpg
இந்தப்பாடல் வெளியானபோது, அனிருத் இசையில் சிம்பு பாடியதாகச் சொல்லப்பட்டது. ஆனால் அனிருத், இதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்று சொல்லியிருக்கிறார். அதேசமயம், டி.ராஜேந்தர் இது தொடர்பாக காவல்துறையில் கொடுத்துள்ள புகாரில், அனிருத் இசையமைப்பில் சிம்பு பாடியதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இது ஒருபுறமிருக்கட்டும்.

அந்தப்புகாரில், டி.ராஜேந்தர் குறிப்பிட்டுள்ளபடி பார்த்தால் இந்தப்பாடல் டம்மியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதை உருவாக்கியது சிம்பும் அனிருத்தும்தான். சிம்புவின் புகழைக் கெடுப்பதற்காக யாரோ அதைத் திருடி வெளியிட்டுவிட்டார்கள் என்று சொல்லியிருக்கிறார். அவருடைய கூற்றின்படியே அந்தப்பாடலை உருவாக்கியது சிம்புதான் என்று உறுதியாகியிருக்கிறது. திரைத்துறையில் முதலில் டம்மியாகச் சில சொற்களைப் போட்டு பாடலை உருவாக்குவார்கள். அதன்பின் அதற்காக வரிகளை எழுதிச் சேர்ப்பார்கள். அந்தவகையில் இது டம்மியாக உருவாக்கப்பட்டது. தேவைப்படுகிறபோது நல்ல சொற்களைப் போட்டு பாடலை உருவாக்கி பயன்படுத்திக்கொள்வார்கள். டி.ராஜேந்தரின் புகாரின்படி பார்த்தால் அப்படி டம்மியாக உருவாக்கப்பட்ட பாடல் என்று தெரிகிறது. இதனால் உருவாக்கத்தில் குற்றமில்லை என்பது அவருடைய தரப்பாக இருக்கிறது. இதனால், பாடலை உருவாக்கியவர் குற்றவாளியா? அதை வெளியிட்டவர் குற்றவாளியா? என்கிற கேள்வி எழுகிறது.

சில நல்ல சொற்கள்கூட காலப்போக்கில் வசைச்சொல்லாக மாறிவிடுகின்றன. அந்தவகையில் வசைச்சொல்லாகவே அறியப்படுகிற அந்தச்சொல்லை வைத்துக்கொண்டு ஒரு பாடலை உருவாக்கவேண்டும் என்கிற எண்ணம் சிம்புவுக்கு வந்ததும், ஒரு பாடல் தயாராகிறநேரத்தில் (அது டம்மி என்றாலும் கூட) குறைந்தது நான்கைந்து பேராவது இருப்பார்கள். கழிவறையில் தனியாக இருப்பதுபோல் தனியாக ஒரு பாடலைப் பதிவு செய்யவியலாது. பாடல் உருவாக்கத்தின்போது ஒவ்வொரு சொல்லும் மட்டுமல்ல ஒவ்வொரு எழுத்து பற்றியும் கவனமாக இருப்பார்கள் என்பது பாடல்கள் உருவாக்கத்தில் உள்ளவர்களுக்கு நன்கு தெரியும். இப்பாடல் பதிவுசெய்யப்படும்போது அந்தக்கூடத்தில் என்னென்னவெல்லாம் பேசிச்சிரித்திருபபார்கள் என்று நினைக்கும்போதே கோபம் கொப்பளிக்கிறது.

வெகுமக்களுக்குத் தெரிந்த ஒரு கலைஞன், நிறைய இளைஞர்களை ரசிகர்களாகக் கொண்டவனுக்கு இம்மாதிரி ஒரு எண்ணம் வந்ததே முதல்குற்றம் என்கிறார்கள். தான் யார்? தன் குடும்பம் எத்தகையது? தான் செய்யும் செயல்கள் சமூகத்தை எவ்வளவு பாதிக்கும்? என்பதெல்லாம் நன்கு தெரிந்த ஒரு நபர், இப்படிச் செய்யத் துணிகிறாரென்றால் அவருடைய மனநிலையை என்னவென்று சொல்வது? உண்மையிலேயே நல்லமனநிலையுடன்தான் இருக்கிறாரா? என்கிற கேள்விகள் பலருக்கும் வந்திருக்கிறது. அப்பனுக்குப் புள்ள தப்பாம பொறந்திருக்கு என்பார்கள் இங்கோ நிலைமை தலைகீழ், புள்ளைக்கு அப்பன் தப்பாமப் பேசறார் என்று சொல்கிற மாதிரி, பாடல்வரி அது உச்சரிக்கப்பட்டவிதம் அதில் சொல்லப்படும் கருத்து ஆகிய எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் மகனின் புகழைக் கெடுக்கப்புறப்பட்டுவிட்டார்கள் என்று புகார் கொடுக்கக்கிளம்பிவிட்டார் டி.ராஜேந்தர். இதுவரை பெண்களைத் தொட்டுக்கூட நடிக்காத பெருமைக்குச் சொந்தக்காரரான டி.ஆர் இந்த விசயத்தில் விமர்சனம் எதுவுமில்லாமல் மகனுக்கு ஆதரவாகப் பேசியதன் மூலம் இதுவரை சேர்த்த பெருமைகளை இழந்துவிட்டார் என்று பேசிகிறார்கள்.

இந்தப்பாடலை திருட்டுத்தனமாக வெளியிட்டது யார் என்று கேள்விக்குப் பெரும்பான்மையானோரின் பதில் சிம்பு என்றுதானிருக்கிறது. காவல்துறை உண்மையாகவே துப்றியத் தொடங்கினால் அவர்தான் மாட்டிக்கொள்வார் என்று சொல்லப்படுகிறது. அல்லது அவரே டம்மியாக ஏதாவதொருவரை சரணயடைய வைக்கலாம். அப்படி சரணடைகிறவர், வெளியிட்டதற்கு என்ன காரணம் சொல்வார்? இந்த ஆழ்ந்த கருத்து புதியசிந்தனையை இந்த வையகம் கொண்டாடவேண்டும் என்று நினைத்தே வெளியிட்டதாகச் சொல்வாரா? நீங்கள் ரசிக்கும் சிம்புவின் இன்னொரு முகத்தை மக்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக வெளியிட்டேன் என்று சொல்வாரா? அப்படிச் சொல்வாரானால் அவர் குற்றவாளியா? எது எப்படியானாலும் இப்படி ஒரு பாடலை மொபைலில் வைத்துகொண்டு திரிபவர்களை ஆங்கிலத்தில் "பெர்வெர்ட்" என்று சொல்வார்கள்.

selvakumar
15th December 2015, 06:45 PM
Well, a spiritual person would not sing such a song and enjoy hearing it in his bathroom or bedroom. Only a sick spiritual person would do!

BTW, what does "spiritual" mean?

[emoji23] good one


Sent from my iPhone using Tapatalk

selvakumar
15th December 2015, 10:10 PM
He is not understanding that people are condemning him for the song itself and his thought process and don't care whether it is leaked or not. He should re think and go for personal counseling


Sent from my iPhone using Tapatalk

Russellvzp
15th December 2015, 11:03 PM
He is not understanding that people are condemning him for the song itself and his thought process and don't care whether it is leaked or not. He should re think and go for personal counseling


Sent from my iPhone using Tapatalk

enakkennavo konjam FAME STR thalaila eruna mathiri theriyuthu.. needs to calm down a bit. may be tendering a public apology would suffice for now. going against the stream won't work all the times like he did on nadigar sangam election..

but enga irunthu ivlo aarpattam kootam varuthu? ivlo otrumaya aarpattam panranga edho organized mathiri:banghead:

balaajee
16th December 2015, 12:16 PM
தங்கமகன் படத்துக்குத் தடைவருமா? - VIKATAN

சிம்பு பாடிய ஒருபாடலால் பெரும் சர்ச்சை வெடித்திருக்கிறது. அந்தப்பாடலுக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால் கனடாவிலிருந்து அந்தப்பாடலுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்று அனிருத் சொல்லியிருக்கிறார்.

http://img.vikatan.com/cinema/2015/12/16/images/Gold-Son.jpgஅவர் சொன்ன அதேநாளில் காவல்துறையில் சிம்பு சார்பாகக் கொடுக்கப்பட்ட புகாரில் அனிருத் பெயரும் இருந்தது. இதனால் எது உண்மை? என்கிற குழப்பம் நீடித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அனிருத் இசையமைப்பில் இந்தவாரம் வெளியாகவிருக்கும் தங்கமகன் படத்துக்குத் தடைவிதிக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்திருக்கிறது.

தமிழ்நாடுஆதிதிராவிடர்முன்னேற்றகழகம் என்கிற அமைப்பின் சார்பில் தமிழகஅரசுக்கு இந்தக்கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அந்தக்கோரிக்கை மனுவில், பெண்ணின் பிறப்புறுப்பைக் குறிக்கும் சொல்லைப் பயன்படுத்தி அனிருத் இசையமைத்து சிம்பு பாடி இணையதளங்களில் வெளியாகியுள்ள பீப் பாடலுக்கு சமுகஆர்வலர்கள், பெண்ணியவாதிகள் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. போராடங்களும் நடந்துவருகின்றன.

இதுதொடர்பாக இருவருக்கும் காவல்துறை சம்மன் அனுப்பியிருக்கும் நிலையில் அனிருத் இசையமைப்பில் வெளிவரவிருக்கும் தங்கமக்ன படத்துக்கு தமிழகஅரசு தடைவிதிக்கவேண்டும், அப்போதுதான் அரசாங்கத்தின் மீது நல்லஅபிப்ராயமும் நம்பகத்தன்மையும் ஏற்படும், தடை விதிக்காமல் அப்படம் திரையிடப்படுமானால் அப்படம் ஓடும் திரையரங்குகள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

balaajee
16th December 2015, 01:26 PM
'பீப்' பாடல் விவகாரத்தை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள தயார்: சிம்பு - tamil hindu

'பீப்' பாடல் விவகாரத்தை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள தயாராக உள்ளதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் அனிருத் இசையில், நடிகர் சிம்பு பாடிய பாடல் 'யூ டியூப்' மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடலில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பாடல் வரிகள் இருப்பதாகக் கூறி, நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது சென்னை, கோவை, தஞ்சாவூர், விருதுநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே 'பீப்' பாடல் விவகாரம் தொடர்பாக சிம்பு, "யாருடைய கேள்விக்கும் நான் பதில் சொல்ல முடியாது. அதேபோல், என்னுடைய பணியைப் பற்றி குறை சொல்பவர்கள் யாருக்கும் நான் பதில் வேண்டிய அவசியமில்லை" என்று தெரிவித்திருந்தார். இவ்விவகாரம் தொடர்பாக அனிருத், "‘பீப்’ பாடலுக்கு நான் இசையமைக்கவில்லை. அதை எழுதவோ, பாடவோ இல்லை. தேவையில்லாமல் என் பெயர் அதில் சேர்க்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் தற்போது போலீஸ் சம்மன், வழக்குகள் என 'பீப்' பாடல் விவகாரம் சூடுபிடித்திருக்கும் நிலையில், சிம்பு "சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள தயாராகவுள்ளேன். ஓடி ஒளியமாட்டேன். எனக்கு கடவுள் மேல் நம்பிக்கை உள்ளது. அவர் பார்த்துக் கொள்வார். எனக்கு நேர்மையின் மீதும், உண்மையின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

balaajee
17th December 2015, 11:55 AM
ஒழுக்கமற்றவர்களின் ஓலக்குரல்- சிம்பு பாட்டுக்கு கவிஞர்கள் கடும்கண்டனம்-

இணையத்தில் வெளியான ஆபாச ‘பீப்’ பாடலால் பொதுஅமைப்புகள் மட்டுமின்றி திரைத்துறையினரர் பலரும் கோபத்தையும், கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் திரைப்படப் பாடலாசிரியர்கள் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது அதில் பாடலுக்கு வலுவான எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
மதிப்பிற்குரிய பத்திரிகை - தொலைக்காட்சி மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். சமீபத்தில் திரு.அனிருத் இசையில் திரு.சிலம்பரசன் பாடியதாக வெளிவந்த பாடல் குறித்த கருத்துப் பதிவு. தமிழ்த்திரைப்படத் துறை என்ற மிகப்பெரிய ஊடகத்தில் இருந்து வெளியாகும் படைப்புகளை பெரிதும் ரசிக்கும் ரசிகர்கள் கோடிக்கணக்கான பேர்.

http://img.vikatan.com/cinema/2015/12/17/images/420simbu.jpgவெகுஜனங்கள் மத்தியில் விரைந்து சேர்ந்து அனைவர் இல்லங்களையும் உள்ளங்களையும் அடைந்து விடும் இப்படைப்புகள் சமூக அக்கறையோடும் பொறுப்போடும் இருக்க வேண்டும். அந்த எல்லை மீறப்படும் போது அது பலர் மனதைப் புண்படுத்துவதாக அமைந்து விடுகிறது. குறிப்பாக சச்சைக்குரிய பாடல் பெண்களை இழிவுபடுத்தும் நோக்கிலும் ஒழுக்கமற்றவர்களின் ஓலக்குரலாகவும் ஒலிக்கிறது. மக்கள் இன்னும் மழை பாதிப்பில் இருந்து மீளாத சூழ்நிலையில் அவர்களின் மனநிலை புரியாமல் பொறுப்பற்ற வன்செயலாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.
இப்படிப்பட்ட பாடல் சிறு பிள்ளைகள் மத்தியில் பரவிவிட்டால் ஒரு நாகரீகம் இழந்த தொற்று நோய் அவர்கள் மனதில் பதிந்துவிடும். குறிப்பிட்ட பீப் சத்தம் ஏன் என்று கேட்டு மனம் அசுத்தம் அடைவார்கள். இப்பாடல் குறித்து மாணவர் அமைப்புகள், மாதர் சங்கங்கள் பல எழுத்தாளர்கள் தங்கள் எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில், இந்தக் கூட்டறிக்கை வாயிலாக எங்களது கண்டனத்தையும் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளோம் மக்கள் அங்கீகரிக்கப்பட்டு மிகப்பிரபலமாக இருக்கும் படைப்பாளிகள் - கலைஞர்கள் இப்பொறுப்பினை உணர்ந்து செயல்பட வேண்டும்.
ஒருவேளை திரு.சிலம்பரசன் திரு.அனிருத் தரப்பில் நேற்று கூறப்பட்டது போல் அந்த சர்ச்சைக்குரிய பாடல் அவர்களது படைப்பாக இல்லாது இருக்குமாயின் இந்த கொடும் செயலைச் செய்தவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல் சமூகத்தைச் சீரழிக்கும் பாட்டுகள் படைப்புகள் வெளிவராது செய்ய அனைத்து படைப்பாளிகளும், ஊடகங்களும் ஒன்று பட வேண்டும்
இப்படிக்கு:
http://img.vikatan.com/cinema/2015/12/17/images/letter.jpghttp://img.vikatan.com/cinema/2015/12/17/images/IMG_0002(1).jpg

இந்தக் கூட்டறிக்கையில் புலமைப்பித்தன், முத்துலிங்கம், சினேகன், யுகபாரதி, பா.விஜய், கவிஞர்.யோசி உள்ளிட்ட பலரும் கையெழுத்திட்டுள்ளனர்.

interz
17th December 2015, 04:44 PM
I am trying to understand the uproar, but I still think what people do in privacy is their own matter, others should not interfer and tell them how to behave. I dont usually support Simbu, but I support the right for guys to be guys among guys! 100 % support to freedom, dont silence it!

balaajee
17th December 2015, 05:17 PM
பீப் பாடல் தொடர்பான கேள்விக்கு இளையராஜா என்ன பதில் சொன்னார் தெரியுமா?




சென்னை வெள்ள நிவாரணம் சார்ந்த பாராட்டு விழாவில் இளையராஜா இன்று கலந்துகொண்டார். விழா முடிவில் சிம்புவின் பீப் பாடல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
பீப் பாடல் குறித்த கேள்வியை எழுப்பிய செய்தியாளரிடம் எதிர் கேள்வியை எழுப்பினார் இளையராஜா. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

http://img.vikatan.com/cinema/2015/12/17/images/illaya.jpgஅவர்களின் கலந்துரையாடல் விவரம்...

செய்தியாளர்: சிம்பு தவறுதலான பாடல் பாடியுள்ளது பற்றி?
இளையராஜா: உனக்கு எதாவது இருக்கா? அந்தப் பிரச்னைக்காகவா வந்துருக்கோம். உனக்கு அறிவு இருக்கா? நான் கேட்குறதுக்குப் பதில் சொல்லு?
செய்தியாளர்: சார், அறிவு இருந்ததால தான் கேக்குறேன்!
இளையராஜா: அறிவு இருக்குங்குறத எந்த அறிவை வைச்சு கண்டுபிடிக்குற?
செய்தியாளர்: ஒரு இசையமைப்பாளர் நீங்க? உங்க துறை சார்ந்து உங்களிடம் கேக்குறதுல என்ன தவறு இருக்கு?
இளையராஜா: யார்கிட்ட கேட்கவேண்டிய கேள்விய என்கிட்ட வந்துகேட்டுட்டு இருக்க? (சிரித்தவாறு)

தொடர்ந்து இளையராஜாவுக்கும் செய்தியாளருக்குமிடையேயான விவாதம் பின்னர் சுமுகமாக முடிந்ததையடுத்து பரபரப்பு குறைந்தது.

balaajee
17th December 2015, 08:39 PM
BEEP SONG CONTROVERSY - "ARREST Simbu & Anirudh"

https://www.youtube.com/watch?v=Kropl9f1Bjg

balaajee
17th December 2015, 08:43 PM
'BEEP BEEP BEEP' ! ! !

Be it Beep or Beef, most of the nation wants to ban it. The controversial kid of Kollywood, STR is back to headlines this time for a song which didn’t even have a formal release. Before trying to voice my concern over the petty issue (according to me) as a journalist, I want to hereby declare saying that, ‘when enough of news was being reported about Chennai Floods, there was a definite scarcity and here comes a timely swindle to hold on to’.

What if there was a society with nothing being reported or sensationalized about? When lot more is waiting to be brought to the public’s notice, here is me who is also trying to sound smart and convincing about the Beep song. From freedom of speech and expression to the growing hypocrisy in the country, what it exactly takes to lead a life of serenity and prosperity among this entire nuisance?

Little Superstar to Young superstar, Simbu has gone through a transformation in which every step of it was made into a news. What really goes into his head is quite unknown, but for sure, he is a potential talent who rarely gets to testify. Whether it was his frankness or his characteristic rebellious nature, Simbu has always been a part of contentious phenomena. The versatile artist had his days at the box-office and award functions but of late, TR’s elder son is only associated with news making deeds.

After Vaalu’s release, Simbu got busy with Kaan directed by Selvaraghavan but that also got dropped. Now Simbu is on the verge of completing Achcham Yenbadhu Madamaiyada with Gautham Menon. Though Idhu Namma Aalu and Vettai Mannan are still waiting to be completed, Simbu’s progress in the industry is definitely a little slow and he has managed to make it to the headlines despite not having releases. After the loss of position in the recently conducted Nadigar Sangam Elections, Simbu has been low-key factor except for the soliloquy he made at Inimey Ippadithaan audio launch.

Despite Vaalu’s show at the box-office or no fruitful signing of future projects, Simbu has once again made it to the news because of the unofficial release of the Beep song. Giving it a listen over a couple times, the song seems to be on the usual lines of Simbu’s attitude towards the suffering and grief from the loss of a loved one. Though there are instances where the lyrics sound genuine and hope giving, the shortcomings of the beep and the placement has created all the hype and trouble. Interesting twist to the tale being the prominence of Anirudh’s voice and also the arrangement of the song, it was unusual to read his statement about the controversy.

Are we taking entertainment way too seriously? When a song from a jamming session gets leaked and then it becomes a sensation, the intention is pretty much clear. The beep was consciously added so that the song doesn’t become a regular outing. It is not new or uncommon to use derogatory remarks about women in songs. Be it the blatant explanation of their beauty or symbolizing the love-making through metaphors, lyricists have used their words to personify the exquisiteness about such extremely private conversations.

It is natural to involve Simbu into some form of a debacle and be excited to make remarks about his persona, but it’s high time he stops creating space for all this and try channelizing all of his talents into something more exciting. Though pop culture and commercial cinema have been making derogatory remarks about women and womanly factors, Simbu seems to be the scapegoat for the current scenario.

When there are English songs just made on cuss words, this beep filled track might actually not be critical enough for the worldwide audience. Though the acceptance level is something learnt from the kind of schema we are brought up with, would the song or a song praising womanhood is actually going to reposition the condition of women in India?

Indian is the same country that rapes women and also prays the female gods. More than taking it as a chance to take it hard on Simbu and once more making him famous, there can definitely be a caution exercised over the sanctity of women, but it is high time we start spending time on further more sensitive issues and not stick to something that adds no value either to the creator or to the listener (reader).

After all, it could have also been ‘Enna Punakku’ku love panra’!!!

rajeshkrv
17th December 2015, 09:40 PM
I am trying to understand the uproar, but I still think what people do in privacy is their own matter, others should not interfer and tell them how to behave. I dont usually support Simbu, but I support the right for guys to be guys among guys! 100 % support to freedom, dont silence it!

privacy kept private then this doesnt occur .. once its out it will be talked about & why not. he is not above anyone to be condemned

lord_labakudoss
18th December 2015, 07:03 AM
Naaama thaan romba seerazhinjittoamoa-nnu thoanuthu west-la settle aayittu - when I look at the reaction here.

Other than that one swear word, there is really nothing derogatory in the song; and it is not even directed at any girl - kind of like What the $%#@.

College'la if you keep a hidden mike, you'll get thousands of such 'lyrics'.

Do the guys on this board really think it reflects badly on Simbhu's way of thinking? or on him as a person?

balaajee
18th December 2015, 02:33 PM
அடப்பாவிகளா, நானும் இதைத்தானே 20 ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்...!

பாட்டு கேட்க நேரமே இல்லை கடந்த நான்கு நாட்களாக மாற்றி மாற்றித் தொலைபேசி அழைப்புகள். சிம்பு-அனிருத் தொடர்புள்ள பாடல் குறித்து என் கருத்து வேண்டும் என்று ஊடகவியலாளர்கள் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். உண்மையில் எனக்கு ஒருவாரமாக இரவு பகல் பாராத வேலை. வீட்டுக்கும், பணியிடத்துக்குமாக ஓடிக்கொண்டே இருக்கிறேன். இதில் எங்கே போய் இதுபோன்ற பாடல்களையெல்லாம் கேட்பது ?

பாட்டு கேட்க நேரமே இல்லை கடந்த நான்கு நாட்களாக மாற்றி மாற்றித் தொலைபேசி அழைப்புகள். சிம்பு-அனிருத் தொடர்புள்ள பாடல் குறித்து என் கருத்து வேண்டும் என்று ஊடகவியலாளர்கள் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். உண்மையில் எனக்கு ஒருவாரமாக இரவு பகல் பாராத வேலை. வீட்டுக்கும், பணியிடத்துக்குமாக ஓடிக்கொண்டே இருக்கிறேன். இதில் எங்கே போய் இதுபோன்ற பாடல்களையெல்லாம் கேட்பது ?

இதில் நான் என்ன சொல்ல என்ன இருக்கு ஆனால் ஊடகங்கள் துரத்த ஆரம்பித்த பின்பு கேட்டு வைத்தேன். அப்புறம்தான் தோன்றியது, இதில் நான் கருத்துச் சொல்ல என்ன இருக்கிறது ? என்று. இப்படியெல்லாம் எழுதலாமா, பெண்களை இழிவுபடுத்தலாமா, சமூக சீரழிவு இத்யாதி இத்யாதி....

அடப்பாவிகளா அடப்பாவிகளா, நானும் இதைத்தானே இருபது ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன், இப்போதுதான் ஏதோ புதிதாகக் கண்டுபிடித்தது போல பொங்குகிறார்களே என்று..... நான் சொன்னது மட்டுமல்ல, செய்தே காட்டியிருக்கிறேன். வெறும் வாய்ப்பேச்சில்லை, உதார் விடவில்லை, வாயால் வடை சுடவில்லை, செயலால் காட்டியிருக்கிறேன்.

நீண்ட நெடிய 18 ஆண்டுகள். ஆபாசமாக எழுதமாட்டேன், அருவருக்கத்தக்க வரிகள் தரமாட்டேன், சமூகத்தைக் கெடுக்கும் பாடல் எழுத மாட்டேன்.... பாடல்கள் மட்டுமல்ல , காட்சிகள், வசனங்கள், நடிகர்களின் உடல்மொழி எதிலும் ஆபாசம் கூடாது என்று வலியுறுத்தி வந்திருக்கிறேன். இதற்காகத் தனிப்பட்ட முறையில் எனக்குப் பல இழப்புகள் இருந்திருக்கலாம், ஆனால் என் ' கலை, கலைஞர்களின் பொறுப்புணர்வு ' தொடர்பான நிலைப்பாட்டில் எந்த சமரசமுமில்லை. நேற்று இப்படித்தான், இன்று இப்படித்தான் , நாளையும் இப்படித்தான்... எனவே, நானே கருத்தாக இருக்கும்போது, தனியாக இது குறித்துக் கருத்து வேறு சொல்ல வேண்டுமா ?...

சரி போகட்டும், நீங்கள் என்ன விரும்பினீர்களோ அதுதானே கிடைத்திருக்கிறது ?? அப்புறம் ஏன் இந்தப் 'பொங்கல்'? நல்ல பாடல்கள் வரவேண்டும் என்று இந்த சமூகம் விரும்பியிருந்தால், தாமரை போல் இத்தனை நேரம் ஒரு பத்துப்பேராவது வந்திருக்க வேண்டாமா? ' தாமரை சமூகத்தைச் சீரழிக்காத, ஆபாசமற்ற நல்ல பாடல்களை எழுதி வெற்றி பெற்றிருக்கிறார், நானும் அவரைப் பின்பற்றி எழுதப் போகிறேன்' என்று ஊரிலிருந்து புறப்பட்டு வந்தவர்கள் எத்தனை பேர்? கை தூக்குங்கள் பார்க்கலாம்...

இல்லையல்லவா, ஒருவர்கூட இல்லையல்லவா ?? அப்புறமென்ன, ' ஐயோ திரைப்படப் பாடல்கள் சீரழிக்கின்றன ? ' என்ற ஒப்பாரி ?? உண்மை என்னவெனில் தாமரைகள் இந்த சமூகத்திற்குத் தேவையில்லை. தாமரைகள் ' பிழைக்கத் தெரியாதவர்கள், காலாவதியாகிப் போனவர்கள், Museum pieces'... நல்லனவற்றைக் கொண்டாடத் தெரியாத, பாதுகாத்து வைத்துக் கொள்ளாத சமூகத்திற்கு அல்லன தானே கிடைக்கும் ??U asked for it, U got it, அப்புறம் ஏன் புலம்ப வேண்டும் ?

இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தானே சிம்புவும், அனிருத்தும் அரசியல், ஆன்மிகம், இலக்கியம், குடும்பம், கல்வித்துறை, நீதித்துறை, ஊடகங்கள்..... என சமூகத்தின் எல்லாத்தரப்பிலும் சீரழிவு, சீரழிவு, சீரழிவு... சினிமா மட்டும் சீலத்தோடு இருக்க வேண்டுமெனில் எப்படி ? சிம்புவும் அனிருத்தும் எங்கே இருந்து வந்தார்கள் ? வானத்திலிருந்து குதித்தார்களா ? வேற்றுக்கோள் வாசிகளா ? இந்த சமூகத்திலிருந்துதானே அவர்களும் வந்தார்கள் ??

இணையத்தில் ஒருவர் எழுதியிருந்தார், குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசுவதில்லை, கேட்ட வார்த்தையைத்தான் பேசுகிறார்கள் என்று ! எவ்வளவு உண்மை !! குழந்தைகள் பட்டதைச் செய்வதில்லை, பார்த்ததைத்தான் செய்கிறார்கள். நாம் 'பின்நவீனத்துவவாதி'களாக இருந்து கொண்டு அவர்களை மட்டும் 'முன்நவீனத்துவத்திற்கு'ப் போகச்சொன்னால் எப்படி ஐயா ??? . க்க்குறும்பு.......!!!

இணையத்தில் ஒருவர் எழுதியிருந்தார், குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசுவதில்லை, கேட்ட வார்த்தையைத்தான் பேசுகிறார்கள் என்று ! எவ்வளவு உண்மை !! குழந்தைகள் பட்டதைச் செய்வதில்லை, பார்த்ததைத்தான் செய்கிறார்கள். நாம் 'பின்நவீனத்துவவாதி'களாக இருந்து கொண்டு அவர்களை மட்டும் 'முன்நவீனத்துவத்திற்கு'ப் போகச்சொன்னால் எப்படி ஐயா ??? . க்க்குறும்பு.......!!!

தாமரை போன்றவர்கள் விதிவிலக்குகள், உதிரிகள். தனிமரம் தோப்பாகாது. தனிமரங்கள் தடையாகக் கருதப்படும், வெட்டப்படும், வீழ்த்தப்படும். நினைவில் கொள்ளவும்: அறம், விழுமியங்கள் அழிந்த சமூகத்திற்கு அறம், விழுமியங்கள் அற்ற படைப்புகள்தாம் கிடைக்கும் என்று கூறியுள்ளார் தாமரை.

balaajee
18th December 2015, 05:14 PM
சிம்புவின் மற்றொரு முகம்! - tamil hindu

‘பீப்' பாடல் சர்ச்சைக்கு முன்பாக வெள்ள பாதிப்பின்போது ‘நிம் கேர்’ என்ற தொண்டு நிறுவனம் மூலமாக சுமார் 40 லட்ச ரூபாய் கொடுத்திருக்கிறார் சிம்பு. தொண்டு நிறுவனங்கள் மூலமாக உதவி செய்தால் மட்டுமே நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்று அடையும் என்பதால் இப்படி செய்தாராம். நிவாரணப் பொருட்களை பேக் செய்யத் தனது வீட்டையும் கொடுத்து உதவியது மட்டுமல்லாமல் குழுவினருடன் அவரும் தொடர்ந்து 48 மணிநேரம் பேக் செய்வதில் சளைக்காமல் வேலை செய்தாராம். நிவராணப் பணிகளைச் சிறப்பாகச் செய்து முடித்த அந்த தொண்டு நிறுவனத்தின் தன்னார்வலர்களைப் பாராட்டி சிம்பு அவர்களை அழைத்து விருந்து கொடுத்து கவுரவம் செய்திருக்கிறார்

mexicomeat
18th December 2015, 07:11 PM
There was a **beep** in ethir neechaladi song as well, no one complained then?

balaajee
20th December 2015, 04:22 PM
T Rajendar's humble and emotional speech on Beep Song Controversy | Simbu, Anirudh | Interview

https://www.youtube.com/watch?v=WA4ZW2lXOWo

mexicomeat
20th December 2015, 06:03 PM
T Rajendar's humble and emotional speech on Beep Song Controversy | Simbu, Anirudh | Interview


there was nothing humble in the interview :-)

balaajee
20th December 2015, 06:08 PM
Exclusive Interview with Simbu About Beep Song Controversy - Thanthi TV

https://www.youtube.com/watch?v=b9PE22dBk5E

balaajee
20th December 2015, 06:10 PM
Ayutha Ezhuthu Neetchi : Debate on "Simbu's Beep Song Controversy.- Thanthi TV

https://www.youtube.com/watch?v=ctJfSf0g3M0

balaajee
20th December 2015, 06:12 PM
Simbu's Controversial Beep Song is Wrong : Sarathkumar Questions Nadigar Sangam Over this Issue...


https://www.youtube.com/watch?v=EO4H4CG-F78

balaajee
21st December 2015, 11:17 AM
மன்னிப்புக் கேட்டு விளக்கம் அளிக்க வேண்டும் - சிம்புவுக்கு நடிகர் சங்கம் கண்டனம்!

நடிகர் சிம்பு எழுதிப் பாடியதாக வெளியாகியிருக்கும் பீப் பாடல் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ''சினிமா என்பது கலைக்கும், பல கோடி வியாபாரத்துக்கும் இடையே பயணிக்கிற ஊடகமாக இருக்கிறது. அதை மக்களும் உணர்ந்தே இருக்கிறார்கள். அதனால், அதற்கு சில எல்லைகளை தளர்த்தி விரிவாக்கி தந்து இருக்கிறார்கள். அதை உணர்ந்த சினிமா கலைஞர்கள் பலரும் சினிமா ஊடகத்தை திறம்பட பயன்படுத்தி வெற்றியும் பெற்றுவருகிறார்கள்.


அவர்களை மக்கள் தங்கள் வீட்டு பிள்ளைகளாக கொண்டாடியும் வருகிறார்கள். ஆனால் அதுவே எல்லை மீறி செல்லும்போதும் முகச்சுளிப்பையும், சினத்தையும் வெளிப்படுத்தி எதிர்ப்பும் தெரிவிக்கிறார்கள். முறையாக வெளியிடப்பட்டதா, திருட்டுத்தனமாக கசிந்ததா என்ற சந்தேகத்திற்கிடையே சமீபத்தில் அனிருத் இசையமைத்து, சிம்பு எழுதி பாடியதாக வெளியாகி இருக்கும் பாடலில் ‘பீப்’ செய்யப்பட்டு கேட்பவர்களின் யூகத்திற்கு விடப்பட்ட வார்த்தைகள் மிக கொச்சையான உணர்வையும், பெண்களை இழிவுபடுத்தியும் இருப்பதினால் அது நிச்சயம் கண்டனத்துக்குரியது, கண்டிக்கத்தக்கது.

http://img.vikatan.com/cinema/2015/12/21/images/poda-podi-new-tamil-movie-stills13.pngஒரு கலைஞனின் கருத்து மக்களிடையே சென்றடைந்து அது எதிர் விமர்சனங்களை ஏற்படுத்துகிறபோது, அது சம்பந்தப்பட்ட கலைஞர்கள் மக்களின் உணர்வை மதித்து வருத்தமோ, மன்னிப்போ கேட்டு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது கடமையாகிறது. அந்த கலைஞர்களுக்கு கால அவகாசம் கொடுத்து காத்திருந்தோம். அதோடு தென்னிந்திய நடிகர் சங்கம் கடந்த ஒரு மாதமாக மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எல்லா பகுதிகளிலும் இரவு, பகல் பாராமல் வேலை செய்து வந்தது. தொடர்ந்து இந்த விஷயத்தில் உடனடியாக கருத்து தெரிவித்தால் கடந்த தேர்தலில் எங்கள் அணிக்கு எதிராக சிம்பு தீவிரமாக செயல்பட்டதால் பழிவாங்கும் நடவடிக்கையாக விமர்சனம் வந்துவிடக்கூடாது என்றும் எங்கள் கருத்தாக இருந்தது.

வருகின்ற 26-ம் தேதியில் நடக்க இருக்கும் செயற்குழுவில் இதுபற்றி விவாதித்து கருத்து தெரிவிக்கலாம் என்றிருந்தோம். ஆனால் சூழ்நிலை கருதி நிறுவனக்குழுவில் முடிவெடுக்கப்பட்டு இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. இன்று இந்த விவகாரம் மக்கள் மன்றத்தை மட்டுமல்ல, நீதிமன்றத்தையும் சென்றடைந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் விரைவில் இதிலிருந்து விடுபட்டு புதுப்பொலிவோடு கலைப்பணி ஆற்ற வரவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வரும் இக்காலக்கட்டத்தில் ‘பீப்’ பாடல் என்கிற நிகழ்வு சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கு மட்டுமல்ல, எல்லா கலைஞர்களுக்கும் ஒரு படிப்பினையாக அமைந்துள்ளது. வருங்காலத்தில் இப்படி மீண்டும் ஒரு சங்கடமான சூழல் உருவாகக்கூடாது என்ற விழிப்புணர்வோடு செயல்படவேண்டும் என்பதை இச்சமயத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவுறுத்த விரும்புகிறது" என்று கூறி உள்ளார்.

balaajee
21st December 2015, 02:39 PM
பீப் பாடலுக்கும் அனிருத்துக்கும் தொடர்பில்லை: நடிகர் சிலம்பரசன் பேட்டி - tamil hindu

பீப் பாடலுக்கும், இசையமைப்பாளர் அனிருத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் நடிகர் சிலம்பரசன் பாடிய பீப் சாங்க என்ற பாடல் இணையத்தில் வெளியானது. ஆபாசமான பாடல், பெண்களை இழிவுபடுத்துகிறது எனக்கூறி அந்தப் பாடலுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு வழக்குகளும், போராட்டங்களும் தொடர்ந்தன.

முதலில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து சிம்பு பாடியுள்ளார் என்று பரவினாலும், அனிருத் தான் அதை இசையமைக்கவில்லை என்று கூறினார். சிலம்பரசன் தரப்பு அமைதியாக இருக்க, தற்போது அவரும் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். அதன் ஒலிப்பதிவும் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. பேட்டியின் சுருக்கம் பின்வருமாறு:

"இந்தப் பாடல் எந்தப் படத்திலும் வரவில்லை, டிவி ரேடியோவில் ஒலிபரப்பாகவில்லை. பிறகு என்னிடம் கேள்வி கேட்பது ஏன்? இது என் பாடல் தான். இதற்கும் அனிருத்துக்கும் சம்மந்தம் இல்லை. இது என் பாடல். அவரை இழுக்க வேண்டாம். எல்லாவற்றையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். ஒரு படமோ பாடலோ நான் அதிகாரப்பூர்வமா வெளியிடப்படும் போது நீங்கள் என்னை கேள்வி கேட்கலாம்.

நான் எனது வீட்டில் காதல் தோல்வி பாடல், ஹீரோ அறிமுகப் பாடல், கடவுளை வாழ்த்தும் பாடல், நண்பர்களுக்கான பாடல் என பல பாடல்களை இசையமைத்துப் பாடியுள்ளேன். தமிழ் சினிமா பாடல் கம்போஸிங்கில் டம்மியான வரிகள் போட்டு பாடுவது என்றைக்குமே வழக்கம் தான். அந்தப் பாடல் கடைசியாக மக்களிடம் சேரும்போது என்ன வடிவத்தில் இருக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும்.

இதில் எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் பொதுவாக காதல் தோல்வி பாடல்கள் எல்லாம் பெண்களை திட்டியே இருக்கும். ஆனால் என் பாடலில் அப்படி இருக்கக் கூடாது என்பதால் தான் பெண்களை திட்ட வேண்டாம், உன்னை நீயே திட்டிக்கோ என்றுதான் எழுதியுள்ளேன். பெண்களை திட்ட வேண்டாம் என்பதே என் பாடலின் கரு.

சென்சாரில் சின்ன கெட்ட வார்த்தைகளை கூட நீக்க சொல்லி விடுவார்கள், அதை மனதில் வைத்து தான் இதில் பீப் பயன்படுத்தினேன். அது வேடிக்கையாகத் தான் முயற்சி செய்தேனே தவிர அது இறுதியான யோசனை அல்ல. நான் விளையாட்டாக வீட்டில் வைத்திருந்ததை எடுத்து யாரோ பொதுவெளியில் விட்டதற்கு என்னை கேள்வி கேட்கலாமா? சமைத்துக் கொண்டிருக்கும் உணவை திருடிவிட்டு நன்றாக இல்லை என சொல்வது போல இருக்கிறது. சமைத்து முடித்தவுடன் தானே அசல் சுவை தெரியும்.

இந்தப் பாடல் குழந்தைகளைப் போய் சேர்கிறது என சொல்லாதீர்கள். டிவியில் வந்தால் தான் குழந்தைகளிடம் சென்றடையும். இணையத்தில் ஆபாச தளங்கள் கூடத்தான் இருக்கிறது. அவை குழந்தைகளை சென்றடையாதா? என் பாடல் மட்டும்தான் குழந்தைகளிடம் போய் சேருமா?

பெண்ணை அடி, உதை என சொல்லும் பாடல்களை யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆனால் தாடி வளர்க்காத, தண்ணி அடிக்க வேண்டாம் என்று நான் பாடும் பாடலுக்கு மட்டும் எதிர்ப்பு வருகிறது. பெண்களுக்கு ஆதரவான பாடலை எதிர்ப்பது கஷ்டமாக இருக்கிறது. எனக்கு பெண் ரசிகைகள் தான் அதிகம். இதை தேவையில்லாமல் திரித்துவிட்டு சிம்பு என்ற தனிமனிதக்கு எதிராக திருப்பிவிட்டிருக்கிறார்கள்.

இனிமேல் என் இமேஜ் கெட்டுப்போக எதுவுமில்லை. ஏற்கனவே நிறைய காயப்படுத்திவிட்டார்கள். அதையும் மீறி நான் இன்று உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். அதற்குக் காரணம் கூட என் பெண் ரசிகைகள்தான். அவர்களின் ஆதரவு தான்.

எனக்கு சினிமா மட்டும் தான். சட்டரீதியான விஷயங்கள் எதுவும் தெரியாது. எனது நலவிரும்பிகள், என்னை ஆதரிப்பவர்கள் சட்டரீதியான உதவி செய்கிறார்கள். வக்கீல் வைத்து என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து வருகிறேன்.

என்னை ஆதரிக்கும் இப்படி ஒரு குடும்பத்தை பெற நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். கவிஞர்களின் கூட்டறிக்கையை நான் மதிக்கிறேன். அவர்களது தனிப்பட்ட கருத்துகளை மதிக்கிறேன். ஆனால் அதிகாரப்பூர்வமாக நான் வெளியிடாத ஒரு பாடலை விமர்சனம் செய்வதில் என்ன நியாயம் இருக்கிறது என்பதை மட்டும் அவர்களிடம் கேட்க விரும்புகிறேன். நான் தவறு செய்தால் முதல் ஆளாக மன்னிப்பு கேட்பேன்.

மக்கள் மழையால பாதிக்கப்பட்டுள்ள இந்த வேளையில் யாராவது விளம்பரத்துக்காக இப்படி ஒரு காரியத்தை செய்வார்களா? என் வீட்டுக்கு வெளியே தண்ணீர் தேங்கி, இணையம், போன் என எதுவும் வேலை செய்யாமல் நானும் கஷ்டத்தில் இருந்தேன். இப்படி ஒரு சூழலில் நான் ஏன் விளம்பரம் தேட வேண்டும்? நான் 30 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன்? என்னை தமிழ்நாட்டில் யாருக்குமே தெரியாதா? இந்த மாதிரி ஒரு பாடல் வெளியிட்டு விளம்பரம் தேட வேண்டிய அவசியம் எனக்கில்லை.

பலாத்கார வழக்கில் சிக்கியவன் விடுதலையாகிறான். ஆனால் நான் செய்யாத தவறுக்கு அந்தப் பாட்டைக் கூட சரியாக கேட்காமல் உருவ பொம்மை எரிப்பு என போராட்டம் செய்வது ஏன் என்று தெரியவில்லை. தமிழ் சினிமாவில் யாருமே எனக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. கூட இருந்தவர்கள் கூட ஆதரவிக்கவில்லை. ஆனால் தமிழ் மக்கள் என்னை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அவர்கள் மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது.

தவறு செய்தால் அதை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்கும் பக்குவம் எனக்குள்ளது. ஓடி ஒளிய மாட்டேன். இனி இதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு கவலையில்லை. எனது நிலைப்பாட்டை நான் தெரிவித்துவிட்டேன்" இவ்வாறு சிலம்பரசன் கூறியுள்ளார்.

balaajee
21st December 2015, 05:14 PM
’பீப்’ பாடல் எதிரொலி...ரசிகர்கள் தீக்குளிக்க முயற்சி! - VIKATAN


சிம்புவின் பீப் பாடல் பிரச்னை நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. ஒரு பக்கம் மாதர் சங்கங்கள், சமூக நல அமைப்புகள் என கண்டங்களையும் புகார்களையும் கொடுத்து வரும் நிலையில் சிம்புவுக்கு நாங்கள் ஆதரவு என்ற ரீதியிலும் ரசிகர்கள் கொந்தளிக்கத் துவங்கியுள்ளனர்.

சிம்புவின் ஆதரவாளர்களின் கேள்விகள் இதுதான். அவர் சொந்த விஷயத்துக்காக உருவாக்கிய பாடல். அது வேறு யாரோ தெரியாமல் வெளியிட்டுவிட்டனர். மேலும் இது போன்ற பாடல்கள் இதுவரை தமிழ் சினிமாவில் வந்ததே இல்லையா.

http://img.vikatan.com/cinema/2015/12/21/images/simbu_109_55201114520123.jpgஇதைவிட மோசமான பாடல்கள், வசனங்கள் என வந்துள்ளன. அது ஏன் சிம்புவை மட்டும் டார்கெட் செய்கிறீர்கள், என்ற கேள்விகளுடன் #WeSupportSimbu என்ற டேக் இட்ட வார்த்தைகளும் ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் சுற்றலில் உள்ளன.
இந்நிலையில் சிம்புவுக்கு ஆதரவாக வேலுரைச் சேர்ந்த மதன் மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த கெட்டவன் பிரகாஷ் இருவரும் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பிரச்னை இப்படியே போனால் கண்டிப்பாக தமிழ் சினிமாவின் மீதுள்ள மரியாதை கெடும் என்பதே உண்மை.

balaajee
22nd December 2015, 11:31 PM
சிம்புவின் ‘பீப்’ பாடலை இணைய தளத்தில் வெளியிட்ட பிரபல கதாநாயகன் போலீசில் சிக்குகிறார்

http://t1.someimage.com/zFRoYSF.jpg

சிம்பு பாடிய பீப் ஆபாச பாடலை வெளியிட்டது தொடர்பாக பிரபல கதாநாயகன் ஒருவர் சிக்குகிறார். அவர் மீது போலீசார் சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஆபாச பாடல் எழுதி, பாடியதாக நடிகர் சிம்புவுக்கு எதிராகவும், இசையமைத்து இருப்பதாக கூறப்படும் அனிருத்துக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக போராட்டம் வலுத்து வருகிறது. சென்னை தி.நகரில் மாசிலா மணி தெருவில் உள்ள உள்ள சிம்பு வீட்டு முன் பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். சிம்பு, அனிருத்தின் உருவ படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து சாணியால் அடித்தனர். தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது. இதைத் தொடர்ந்து கோவை ரேஸ் கோர்ஸ் போலீசார் இருவர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். ஆனால், இருவரும் நேரில் ஆஜராகவில்லை. அவர்களுக்கு பதிலாக இருவரின் பெற்றோர் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், நேரில் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை சைபர் கிரைம் போலீசாரும் சிம்பு, அனிருத் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர். இது அவர்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. கைது நடவடிக்கை உறுதி என்ற நிலை ஏற்பட்டது. இதற்கிடையில், தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் சிம்பு, அனிருத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. சில வழக்குகளில் இருவரும் முன் ஜாமீன் பெற்றனர். தாங்கள் பாடலை வெளியிடவில்லை. தங்களுக்கு வேண்டப்படாத யாரோ இதுபோன்று மோசடி வேலைகளில் இறங்கி விட்டனர் என சிம்பு, அவரது தந்தை டி.ராஜேந்தர் உருக்கமாக பேசினர். இதைத் தொடர்ந்து யூடியூப்பில் பாடலை வெளியிட்டது யார் என்ற விபரத்தை தெரிந்து கொள்வதற்காக மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஜெயக்குமார் யூடியூப் நிறுவனத்திற்கு கடிதம் எழுதினார். இதனால், குற்றவாளி விரைவில் சிக்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில், ஆபாச பாடலை வெளியிட்டதின் பின்னணி பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகிறது. பாடல் பாடப்பட்டு அதன் இணை அமைப்பு நிறைவடைந்த உடன் அனிருத் தனது பாடலை நட்பு ரீதியிலும், விளையாட்டு ரீதியிலும் வளர்ந்து வரும் பிரபலமான நடிகர் ஒருவருக்கு அனுப்பி உள்ளாராம். தற்போது நடித்துள்ள அனைத்து படங்களிலும் வெற்றி பதித்து வரும் மற்றும் பெண்கள், குழந்தைகள் மத்தியிலும் வரவேற்பை பெற்ற அந்த நடிகர் பாடலின் பாதிப்பு புரியாமலும், தன்மை தெரியாமலும் விளையாட்டுத்தனமாக அந்த பாடலை தனது நண்பர்கள் சிலருக்கு பகிர்ந்துள்ளார். அவர்கள் மற்ற நண்பர்களுக்கு பகிர, யூடியூப்பிலும் சிலர் பகிர்ந்துள்ளனர். அதன் பிறகு வாட்ஸ்அப், பேஸ் புக் என உலகம் முழுவதும் பாடல் பரப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது, போலீசாரின் கவனத்திற்கு சென்றுள்ளது. அவர்கள் சம்பந்தப்பட்ட கதாநாயகனிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் பாடலை லீக் செய்து இருந்தால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பீப் பாடல் விவகாரத்தில் பிரபல நடிகர் சிக்கி இருப்பது தற்போது, திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

balaajee
23rd December 2015, 10:49 AM
சிவகார்த்திகேயனுக்கும் பீப் பாடலுக்கும் தொடர்பில்லை: சிம்பு விளக்கம்!

பீப் பாடல் விவகாரத்தில் மேலும் ஒரு சர்ச்சையாக, அப் பாடல் வெளியாக சிவகார்த்திகேயன்தான் காரணம் என வாட்ஸ் அப்பில் செய்தி பரவியது. சமூக வலைத்தளங்களிலும், சிம்புவின் பீப் பாடலை சிவகார்த்திகேயன் வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகின.


இந்நிலையில், "இந்த பாடல் வெளியானதற்கும் சிவகார்த்திகேயனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரை யாரோ வேண்டுமென்றே இந்த பிரச்னையில் சிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். அவருக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை.

http://img.vikatan.com/cinema/2015/12/23/images/maxresdefault%20(1).jpgவதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்" என தனது ட்விட்டர் பக்கத்தில் சிம்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிம்பு இதே பிரச்னையில், அனிருத்துக்கும் இந்த பாடலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


http://img.vikatan.com/cinema/2015/12/23/images/str.jpg

balaajee
23rd December 2015, 10:51 AM
சிம்புவைக் கைது செய்ய எந்தத் தடையும் இல்லை - நீதிபதி அதிரடி உத்தரவு!


பீப் பாடல் விவகாரத்தில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணையில், சிம்புவுக்கு ஜாமீன் வழங்க தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
விசாரணையில், அந்தப் பாடலை கேட்டபிறகு தீர்ப்பு வழங்குமாறு நீதிபதியிடம் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால், நீதிபதி பாடலை கேட்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

http://img.vikatan.com/cinema/2015/12/22/images/vettai-mannan-str-simbu-silambarasan-hansika-motwani-santhanam-19(1).jpgபீப் பாடல் குறித்த அரசின் விளக்கத்தை கேட்கவும், மனுதாரர் மற்றும் பெண் வழக்கறிஞர் சங்கத்தினரின் வாதத்தை கேட்கவும் ஏதுவாக வழக்கு விசாரணை இன்று (செவ்வாய்) பிற்பகலுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
பிற்பகலில் மீண்டும் வழக்கை விசாரித்ததில் பீப் பாடலை பாடிய நடிகர் சிம்புவைக் கைது செய்ய எந்தவித தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி ராஜேந்திரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

balaajee
23rd December 2015, 11:06 AM
இளையராஜா பற்றி அவதூறு... மன்னிப்புக் கேட்ட ஜேம்ஸ் வசந்தன்!

இசைஞானி இளையராஜா பற்றி தவறாகப் பேசியதற்கு ரசிகர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.சமீபத்தில் மழை வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த இளையராஜாவிடம், ஒரு தொலைக்காட்சி செய்தியாளர் சம்பந்தமே இல்லாமல் பீப் பாடல் குறித்து கேள்வி எழுப்ப, அதனால் கோபமடைந்த இளையராஜா, "எந்த நேரத்தில் என்ன கேள்வி கேட்கிறாய்.. உனக்கு அறிவிருக்கா?' என்று கேட்டார்.இதற்கு இணைய வெளியில் ஏகப்பட்ட கருத்து மோதல்கள். பெரும்பாலான மீடியாக்காரர்களும் கூட அந்த தொலைக்காட்சி நிருபரின் செயலைக் கண்டித்திருந்தனர். இடம் பொருள் தெரியாமல் கேள்வி கேட்டு இளையராஜா போன்ற மேதைகளை அவமதித்தது தவறு என்று கூறினர்.ஆனால் சிலர் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இளையராஜா பற்றி அவதூறாகப் பேச ஆரம்பித்தனர். அவர்களில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனும் ஒருவர்."ஒளிந்து கொண்டிருந்த நிஜ சொரூபத்தை வெளிக்கொணர்ந்த அந்த இளம் பத்திரிகையாளனைப் பாராட்ட வேண்டும்" என்று ஒரு ட்விட்டும், அது தொடர்பாக ரசிகர்களுடன் எழுந்த மோதலில், மிகவும் கொச்சையாக இன்னொரு ட்விட்டும் போட்டார் ஜேம்ஸ் வசந்தன். அதன் பிறகு தனது ட்வீட்டுகளுக்கு விளக்கம் சொல்லும் வகையில், 'நான் இளையராஜாவின் இசைக்கு ரசிகன், வெறியன் அல்ல.. அவர் என்ன செய்தாலும் ஆதரிக்க முடியாது,' என்று கூறியிருந்தார்.இதனால் அவருக்கும் இளையராஜா ரசிகர்களுக்கும் இணைய வெளியில் கடும் மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தனது ட்விட்டர் கணக்கையே அழித்துவிட்டார் ஜேம்ஸ் வசந்தன். இந்த நிலையில் அவர் இப்போது ஒரு அறிக்கை

வெளியிட்டுள்ளார்.அதில் அவர் இளையராஜா ரசிகர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.அந்த அறிக்கை: உலகெங்கும் உள்ள தமிழ் உள்ளங்களுக்கு, சமீபத்தில் நான் ராஜா சார் பற்றிக் கூறிய கருத்துகள் மிகவும் பூதாகரமாக வெடித்து உள்ளது. இந்த சர்ச்சையை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், ராஜா சாருடைய ரசிகர்கள் பலர் என்னுடைய இந்தக் கருத்தால் காயமுற்றதால்தான் இந்த மன்னிப்பு அறிக்கை.இதே நேரத்தில் சில விஷமிகள் என்னுடைய பெயரையும் , படத்தையும் வைத்துக் கொண்டு அவதூறான கருத்துகளையும், பரப்புரையும் செய்து வருகிறார்கள். அதனால்தான் நேற்றே என்னுடை ட்விட்டர் தொடர்பையும் விட்டு விட்டேன்.இந்த அறிக்கை மூலம் நான் என்னுடைய நிலையை தெளிவு செய்துக் கொள்ள விரும்புகிறேன். நான் என்னுடைய மனதில் உள்ளதை பேசுபவன், யார் மனதை புண் படுத்தவோ குறிப்பாக தமிழ் சமுதாயத்தை சேர்ந்தவர்களை புண்படுத்தவோ நினைக்க கூட செய்யாதவன். நடந்த சம்பவங்களை மறந்து முன்னேறுவோம். நன்றி!இவ்வாறு ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார்.

venkkiram
23rd December 2015, 11:18 AM
இளையராஜா பற்றி அவதூறு... மன்னிப்புக் கேட்ட ஜேம்ஸ் வசந்தன்!

இசைஞானி இளையராஜா பற்றி தவறாகப் பேசியதற்கு ரசிகர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.சமீபத்தில் மழை வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த இளையராஜாவிடம், ஒரு தொலைக்காட்சி செய்தியாளர் சம்பந்தமே இல்லாமல் பீப் பாடல் குறித்து கேள்வி எழுப்ப, அதனால் கோபமடைந்த இளையராஜா, "எந்த நேரத்தில் என்ன கேள்வி கேட்கிறாய்.. உனக்கு அறிவிருக்கா?' என்று கேட்டார்.இதற்கு இணைய வெளியில் ஏகப்பட்ட கருத்து மோதல்கள். பெரும்பாலான மீடியாக்காரர்களும் கூட அந்த தொலைக்காட்சி நிருபரின் செயலைக் கண்டித்திருந்தனர். இடம் பொருள் தெரியாமல் கேள்வி கேட்டு இளையராஜா போன்ற மேதைகளை அவமதித்தது தவறு என்று கூறினர்.ஆனால் சிலர் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இளையராஜா பற்றி அவதூறாகப் பேச ஆரம்பித்தனர். அவர்களில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனும் ஒருவர்."ஒளிந்து கொண்டிருந்த நிஜ சொரூபத்தை வெளிக்கொணர்ந்த அந்த இளம் பத்திரிகையாளனைப் பாராட்ட வேண்டும்" என்று ஒரு ட்விட்டும், அது தொடர்பாக ரசிகர்களுடன் எழுந்த மோதலில், மிகவும் கொச்சையாக இன்னொரு ட்விட்டும் போட்டார் ஜேம்ஸ் வசந்தன். அதன் பிறகு தனது ட்வீட்டுகளுக்கு விளக்கம் சொல்லும் வகையில், 'நான் இளையராஜாவின் இசைக்கு ரசிகன், வெறியன் அல்ல.. அவர் என்ன செய்தாலும் ஆதரிக்க முடியாது,' என்று கூறியிருந்தார்.இதனால் அவருக்கும் இளையராஜா ரசிகர்களுக்கும் இணைய வெளியில் கடும் மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தனது ட்விட்டர் கணக்கையே அழித்துவிட்டார் ஜேம்ஸ் வசந்தன். இந்த நிலையில் அவர் இப்போது ஒரு அறிக்கை

வெளியிட்டுள்ளார்.அதில் அவர் இளையராஜா ரசிகர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.அந்த அறிக்கை: உலகெங்கும் உள்ள தமிழ் உள்ளங்களுக்கு, சமீபத்தில் நான் ராஜா சார் பற்றிக் கூறிய கருத்துகள் மிகவும் பூதாகரமாக வெடித்து உள்ளது. இந்த சர்ச்சையை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், ராஜா சாருடைய ரசிகர்கள் பலர் என்னுடைய இந்தக் கருத்தால் காயமுற்றதால்தான் இந்த மன்னிப்பு அறிக்கை.இதே நேரத்தில் சில விஷமிகள் என்னுடைய பெயரையும் , படத்தையும் வைத்துக் கொண்டு அவதூறான கருத்துகளையும், பரப்புரையும் செய்து வருகிறார்கள். அதனால்தான் நேற்றே என்னுடை ட்விட்டர் தொடர்பையும் விட்டு விட்டேன்.இந்த அறிக்கை மூலம் நான் என்னுடைய நிலையை தெளிவு செய்துக் கொள்ள விரும்புகிறேன். நான் என்னுடைய மனதில் உள்ளதை பேசுபவன், யார் மனதை புண் படுத்தவோ குறிப்பாக தமிழ் சமுதாயத்தை சேர்ந்தவர்களை புண்படுத்தவோ நினைக்க கூட செய்யாதவன். நடந்த சம்பவங்களை மறந்து முன்னேறுவோம். நன்றி!இவ்வாறு ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார்.

Twitter:

Dummy's guide for "How to be always in News without doing anything useful?". Author: James Vasanthan

for i = 1 to ∞
{
News1: James Vasanthan abuses
News2: JV faces backlash
News3: JV runs away
News4: JV apologizes
News5: JV is back.
}

Russellvzp
25th December 2015, 12:46 AM
kolunthu vittu eriyuthu matter.. munnaye naa predict panna mathiri oru sinna sorry from STR would have put a full stop on this matter.. but instead he chose to go on no mans road.. eppa mudiyumo intha matter.. paavam kutti thalai:confused2:

balaajee
25th December 2015, 05:20 AM
"SIMBU has to CHANGE, Otherwise..." - Pandiraj | Pasanga2

https://www.youtube.com/watch?v=_N94ePRiM0Y

balaajee
25th December 2015, 05:23 AM
Simbu Mother: We Have No Privacy Here! Want To Leave TamilNadu | Beep Song - Usha T Rajendar Speech

https://www.youtube.com/watch?v=c4wUuXfgxm8

balaajee
25th December 2015, 05:25 AM
Beep Song Controversy : Simbu's Mother Cries for her Son - Full Emotional Interview

https://www.youtube.com/watch?v=jWXI9axpf9Y

balaajee
25th December 2015, 05:26 AM
Beep Song Controversy Anitha Kuppusamy about Simbu - Anirudh Song

https://www.youtube.com/watch?v=6zHbc9sOd40

balaajee
25th December 2015, 05:28 AM
Beep Song Controversy - Actor Sivakumar Indirectly Scolding Simbu - Must Watch

https://www.youtube.com/watch?v=1woFTOr8Rww

balaajee
25th December 2015, 05:29 AM
Beep Song Controversy - Power Star Condems Anirudh And Simbu

https://www.youtube.com/watch?v=0dk-hp1ahCk

balaajee
25th December 2015, 05:30 AM
Beep Song Controversy : 3 Special Teams formed to Arrest Simbu - ThanthI TV

https://www.youtube.com/watch?v=_3IabJE-KUg

balaajee
25th December 2015, 05:40 AM
Abinesh ‏@Abinesh30221574 (https://twitter.com/Abinesh30221574) 9h9 hours ago (https://twitter.com/Abinesh30221574/status/680041832672145408) @iam_str (https://twitter.com/iam_str) #WeNeverLetYouDownSTR (https://twitter.com/hashtag/WeNeverLetYouDownSTR?src=hash)
https://pbs.twimg.com/media/CW_-bLhU0AIpVfJ.jpg

balaajee
25th December 2015, 05:41 AM
Vignesh Vicky ‏@Vignesh69190661 (https://twitter.com/Vignesh69190661) 9h9 hours ago (https://twitter.com/Vignesh69190661/status/680041667974438912) #WeNeverLetYouDownSTR (https://twitter.com/hashtag/WeNeverLetYouDownSTR?src=hash) ..@iam_str (https://twitter.com/iam_str) we want that smile in ur face for ever..


https://pbs.twimg.com/media/CW_-SqDUQAE9GHw.jpg

balaajee
25th December 2015, 05:42 AM
Karthiga ‏@karthigadevi (https://twitter.com/karthigadevi) 9h9 hours ago (https://twitter.com/karthigadevi/status/680039042537267200) @iam_str (https://twitter.com/iam_str) #WeNeverLetYouDownSTR (https://twitter.com/hashtag/WeNeverLetYouDownSTR?src=hash)
https://pbs.twimg.com/media/CW_71rsUAAAnMNw.png

https://pbs.twimg.com/media/CW_73GVU0AACTg_.png

https://pbs.twimg.com/media/CW_74o6UEAABmdr.jpg

balaajee
25th December 2015, 05:55 AM
Dayan Shan ‏@dayan_shan (https://twitter.com/dayan_shan) 12h12 hours ago (https://twitter.com/dayan_shan/status/680005323537707009) The #BeepSong (https://twitter.com/hashtag/BeepSong?src=hash) issue in a nutshell https://abs.twimg.com/emoji/v2/72x72/1f914.png @iam_str (https://twitter.com/iam_str) @sri50 (https://twitter.com/sri50) @srikutty45 (https://twitter.com/srikutty45)
https://pbs.twimg.com/media/CW_dONJW8AAwa23.jpg

balaajee
25th December 2015, 05:57 AM
Radikaa Sarathkumar ‏@realradikaa (https://twitter.com/realradikaa) 19h19 hours ago (https://twitter.com/realradikaa/status/679893066849755137) Alert for @iam_str (https://twitter.com/iam_str) at all airports!!??? Wow, did I miss some point here?? Burning issues in the country& this is imp??

balaajee
27th December 2015, 05:34 PM
Nadigar Sangam's View on Simbu's beep Song Controversy - Thanthi TV
https://www.youtube.com/watch?v=wp4dVynARdc

balaajee
27th December 2015, 05:36 PM
Youtube Refuses to Remove Simbu's Beep Song !

https://www.youtube.com/watch?v=SsO5HPo04sA


https://www.youtube.com/watch?v=TFGee4UCpbo

balaajee
27th December 2015, 05:36 PM
Veeralakshmi and 30 other protesters Arrested for Supporting Simbu

https://www.youtube.com/watch?v=MR9NXxYr36A

balaajee
27th December 2015, 05:37 PM
Beep song controversy: Our family will not leave Tamil Nadu, says Simbu's father T Rajendar

https://www.youtube.com/watch?v=VoBJMBGX8Hw

balaajee
27th December 2015, 05:39 PM
SIMBU GET'S SUPPORT FROM AANGAL PATHUGAPPU SANGAM

https://www.youtube.com/watch?v=rYUBxue8igY

balaajee
27th December 2015, 07:46 PM
@iam_str (https://twitter.com/iam_str) #WeSupportSTR (https://twitter.com/hashtag/WeSupportSTR?src=hash)
https://pbs.twimg.com/media/CXN-V5zUMAAjyoI.jpg

balaajee
27th December 2015, 07:50 PM
23 hours ago (https://twitter.com/prasanthpriyan/status/680767584409501696)
@YouTube (https://twitter.com/YouTube) ask to tn police what are the wrong words in #BeepSong (https://twitter.com/hashtag/BeepSong?src=hash) #bulbmoment (https://twitter.com/hashtag/bulbmoment?src=hash) #maalimurasu (https://twitter.com/hashtag/maalimurasu?src=hash) @iam_str (https://twitter.com/iam_str) @anirudhofficial (https://twitter.com/anirudhofficial)
https://pbs.twimg.com/media/CXKSGfKUAAApYrI.jpg

balaajee
27th December 2015, 07:51 PM
"Tamil inam PathuKaapu Iyakam" supporting @iam_str (https://twitter.com/iam_str) in #BeepSongControversy (https://twitter.com/hashtag/BeepSongControversy?src=hash) #wearewithSTR (https://twitter.com/hashtag/wearewithSTR?src=hash)



https://pbs.twimg.com/media/CXKZ4RKUoAAOKMf.jpg

https://pbs.twimg.com/media/CXKZ5d0UoAAa2ie.jpg

https://pbs.twimg.com/media/CXKZ6xOUMAAg63g.jpg

balaajee
27th December 2015, 09:47 PM
Must Watch: Ask Premananda instead of Ilaiyaraja - Gangai Amaran on Beep Song controversy
https://www.youtube.com/watch?v=bTm3Y_Iw6VQ

Parthyy
28th December 2015, 03:43 PM
This guy is absolute disgrace being actor...in one Video blasting Vishal, Simbu says "Anmeegathula erangitaenu summa irupaan simbu nu nenastaanga" buildup himself total laughworthy ..
Pandiraaj complains about him,GVM it is endless....

nickraman
28th December 2015, 11:38 PM
Pandiraaj complains about him,GVM it is endless....

I still wonder why GVM puts so much stock in him for AYM. 2 going to 3 years delay. Pesamma antha telugu chaitanya ve tamil la potrukalam.

Not only is he in a financial mess, he badly needs a hit to come back in the limelight. Oru kaalathula, Photon Factory was producing movies. Barely a few were hits (and mostly losses) that led to TTA being delayed indefinetly as Courier boy kalyan releases (it opened to negative reviews nevertheless.)

GVM should drop AYM and do a fresh project with someone dependable.

bimmer
28th December 2015, 11:53 PM
Shame on the Media and Folks discussing this even as a topic...Is this the first time a song was written demeaning women....Adira avala, Vetra avala, uthada avala?? Sakaravalli kelangu maama samanjathu eppadi, kattipudi kattipudi da?? Rathiri nerathu poojayil, ponmeni uruguthey were written decades back...Talking about Beep song and forgetting other issues..The Minor Involved in Nirbhaya case has been acquitted, Kalam's memorial which is a garbage area now, etc...

Not supporting this guy by any means...Youtube has a lot more Vulgarity in terms of unverified, Non age related videos, Hara Hara Mahadevaki is still a rage..have we arrested that guy? Instead they are using his dialogues and modulations in movies..

mexicomeat
29th December 2015, 04:45 AM
Shame on the Media and Folks discussing this even as a topic...Is this the first time a song was written demeaning women....Adira avala, Vetra avala, uthada avala?? Sakaravalli kelangu maama samanjathu eppadi, kattipudi kattipudi da?? Rathiri nerathu poojayil, ponmeni uruguthey were written decades back...Talking about Beep song and forgetting other issues..The Minor Involved in Nirbhaya case has been acquitted, Kalam's memorial which is a garbage area now, etc...

in my opinion:

as gangai amaran said in his interview, we are able to list down songs with double meaning lyrics without any beeping required. it is acknowledged that such songs existed since the black and white era. however, no one (including tr or usha) can say what the beep word was in simbu's song was. he well and truly crossed the limit with this one.

agree with your point on hara hara mahadevaki. it should have had the same treatment as simbu. some of anirudh's songs had beeps (ethir neechal & vanakkam chennai song) -they should have had the same treatement as well.

Mahen
29th December 2015, 04:50 AM
Delay in aym is not because of simbhu..it is gautham and his working style..
And i hate to say this.. Simbhu is actuallly talented.. If he stay focused he can go places..he should cut drama and women in his life😀

balaajee
29th December 2015, 01:38 PM
Beep Song Controversy : Protest attempt by Simbu Fans in Chennai

https://www.youtube.com/watch?v=7P-mlB9imyo

balaajee
29th December 2015, 01:39 PM
If all Actors apologize, then Simbu will also apologize for Beep song - Simbu fans

https://www.youtube.com/watch?v=qhE8fYydQOA

balaajee
29th December 2015, 01:40 PM
Beep Song Controversy - Lyric Writer Snehan Advice Simbu - RedPix 24x7

https://www.youtube.com/watch?v=1TCbRSveCEw

balaajee
29th December 2015, 01:40 PM
PMK withdraws case against Simbu Beep song controversy - Dinamalar Dec 28th 2015

https://www.youtube.com/watch?v=lTdIT67UbdE

mexicomeat
30th December 2015, 03:41 PM
watch from 14:20 on wards to know pandiraj's point of view on what's wrong with simbu

https://www.youtube.com/watch?v=_N94ePRiM0Y

balaajee
30th December 2015, 04:18 PM
watch from 14:20 on wards to know pandiraj's point of view on what's wrong with simbu

https://www.youtube.com/watch?v=_N94ePRiM0Y

When ever a director talks more his movies talk less......it suits all director( may there be some exceptions) but pandiraj is not in exception list.
Except his first movie rest are test for patience inc Pasanga 2.

bimmer
30th December 2015, 07:57 PM
When ever a director talks more his movies talk less......it suits all director( may there be some exceptions) but pandiraj is not in exception list.
Except his first movie rest are test for patience inc Pasanga 2.


Empty Vessel...Will be Out of gas in no time - One film wonder!!!

A.ANAND
2nd January 2016, 02:51 PM
அறுந்த ரீலு 17: சிம்பு பட டீஸர் 'அவசர' ரிலீஸ் பின்னணியில் ரஹ்மான்!

'அச்சம் என்பது மடமையடா' படத்தின் டீஸர் புத்தாண்டுக்கு வெளியானால் நன்றாக இருக்கும் என்று பேசி வெளியிட வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

சிம்பு, மஞ்சிமா மோகன், பாபா சேகல் உள்ளிட்ட பலர் நடிக்க கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'அச்சம் என்பது மடமையடா'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தை கெளதம் மேனன் தயாரித்திருக்கிறார். ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் முதல் டீஸர் வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இப்படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரெய்லர் உள்ளிட்ட எதுவுமே வெளியிடப்படவில்லை. படப்பிடிப்பை முடிப்பதில் கவனம் செலுத்தி வந்தது படக்குழு.

இந்நிலையில், கெளதம் மேனனும் ரஹ்மானும் 'சிம்புவுக்கு பெரும் சர்ச்சை உருவாகி இருக்கிறது. இந்த நேரத்தில் அந்தப் பையனுக்கு நாம் ஏதாவது பண்ண வேண்டும்' என்று பேசியிருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான், அப்படத்துக்கு கொடுக்க வேண்டிய இறுதிப் பாடலை முடித்துக் கொடுத்திருக்கிறார்.

தெரிந்தோ தெரியாமலோ சிம்பு 'பீப்' இசை சர்ச்சையில் சிக்கிவிட்டார். அந்தப் பாடல் உருவாக்கத்தில் உள்ள தர்க்க ரீதியிலான சரியா தவறா விவாதங்களைத் தாண்டி, அவரால் அதிகாரபூர்வமாக அப்பாடல் வெளியிடப்படாமல் சிக்கல் ஏற்பட்டது. நம்முடன் பணிபுரியும் ஓர் இளம் கலைஞனுக்கு சமூகத்தில் தெரிந்தோ தெரியாமலோ மதிப்பில் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. இந்த நேரத்தில், அவர் குறித்த பார்வை மாற வேண்டும். அதற்கு, இப்போது டீஸர் வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் என்று ரஹ்மான்தான் எடுத்துச் சொன்னதாக தகவல்.

அத்துடன், "படத்தின் டீசரை உடனே முடித்துக் கொடுங்கள், நான் பின்னணி இசையை முடித்துக் கொடுத்துவிடுகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். அதன்படி, தான் ஏற்கெனவே திட்டமிட்ட பணிகளை சற்றே தள்ளிவைத்துவிட்டு, டீசருக்கான இசைப் பணியை முடித்துத் தந்திருக்கிறார்.

இருவருமே உடனடியாக டீசருக்கான வேலைகளை முடித்து அதை வெளியிட்டு இருக்கிறார்கள். இதேபோல், படத்தின் முழு வேலைகளையும் முடித்து விரைவில் படத்தை வெளியிட வேண்டும் என்ற முனைப்பில் இருவரும் இறங்கி இருக்கிறார்கள்.

பொதுவாக, ரஹ்மான் தனது சமூகவலைதளப் பக்கங்களில் பட டீஸர்களை ஷேர் செய்வது அரிது. ஆனால், 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் டீஸர் வெளியானவுடன் முதலில் பகிர்ந்தவர் அவரே என்பது கவனிக்கத்தக்கது.
http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%A E%A4-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AF%81-17-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%A F%81-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%A F%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%A E%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%A E%A9%E0%AF%8D/article8054601.ece

balaajee
4th January 2016, 03:41 PM
• நடிகர் சிம்புவுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்
• காவல்துறை அழைக்கும் போது ஆஜராகி போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க சிம்புவுக்கு உத்தரவு

balaajee
4th January 2016, 08:26 PM
நடிகர் #Simbu (https://twitter.com/hashtag/Simbu?src=hash) -வுக்கு நிபந்தனை முன்ஜாமீன் :நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. #BeepSong (https://twitter.com/hashtag/BeepSong?src=hash)
https://pbs.twimg.com/media/CX3gkGSUwAAi_fn.jpg

balaajee
5th January 2016, 04:18 PM
பெண்களை சிம்பு மதித்து நடக்க வேண்டும்: 'பீப்' பாடல் வழக்கில் உயர் நீதிமன்றம் அறிவுரை - Tamil Hindu
‘பீப்’ பாடல் தொடர்பான வழக்கு களில் நடிகர் சிம்பு கீழ் நீதிமன்
றத்தை அணுகி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்,
அவர் பெண்களை மதித்து நடக்க வேண் டும் என அறிவுரை வழங்கியது.
‘பீப்’ பாடல் விவகாரத்தில் தனக்கு முன்ஜாமீன் அளிக்கக் கோரி, சென்னை
உயர் நீதிமன்றத் தில் சிம்பு மனு தாக்கல் செய்திருந் தார். நீதிபதி பி.ராஜேந்திரன்
முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

சிம்பு தரப்பு வழக்கறிஞர் முத்துக் குமாரசாமி தனது வாதத்தில்,
‘‘சிம்பு மீது பதியப்பட்ட அனைத்து பிரிவு களும் ஜாமீனில் வெளிவரக்கூடி யவை. அவர்
தனிப்பட்ட முறையில் ‘பீப்’ போட்டு பாடிய பாடலை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக
வெளியிடவில்லை. ‘அவர் வெளி நாட்டுக்கு தப்பிவிடுவார். சாட்சி களை கலைப்பார்’ என
அரசு தரப்பு கூறுகிறது. அதுபோன்ற செயல்களில் சிம்பு கண்டிப்பாக ஈடுபடமாட்டார்.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளார். எனவே அவருக்கு முன்ஜாமீன்
வழங்க வேண்டும்’’ என்றார்.

அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் சண்முக வேலாயுதம்
கூறியதாவது:

‘பீப்’ என்ற ஒலி வரும் இடத்தில் உள்ள விடுபட்ட வார்த்தை என்ன என்பதை,
பாடலைக் கேட்பவர்களே ஊகிக்கச் செய்வதுதான் ‘பீப்’ பாடல். ஆனால், இந்த பாடலில் அந்த
வார்த்தை என்ன என்பதை அப்பட்டமாக எல்லோராலும் கேட்க முடிகிறது. அது பெண்களை
ஆபாசமாக கொச்சைப்படுத்தியுள்ளது. இப்பாடலை எழுதியது, பாடியது, உருவாக்கம் செய்தது
எல்லாமே சிம்புதான். ஆனால் பாடல் எப்படி இணையத்தில் வெளியானது என தனக்கு தெரியாது
என்று அவர் கூறுவதை ஏற்கமுடியாது. இதற்காக அவரிடம் குரல் பதிவு சோதனை நடத்த
வேண்டியது அவசியம். எனவே, அவருக்கு முன்ஜாமீன் அளிக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘‘இந்த வழக்கு கள் அனைத்தும்
ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டவை என்பதால், சம்பந்தப்பட்ட
கீழ் நீதிமன்றத்தை சிம்பு தாராளமாக அணுகி ஜாமீன் கோரலாம். அதற்கு எந்த தடையும்
இல்லை. அத்துடன், வரும் 11-ம் தேதி அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில்
ஆஜராகி போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.


சிம்புவுக்கு அறிவுரை

பெண் வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இனி சிம்பு பெண்களை
மதித்து நடக்க வேண்டும் என அறிவுரையும் வழங்கினார்.

ஆதரவாக இருந்தவர்களுக்கு டி.ராஜேந்தர் நன்றி

உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, டி.ராஜேந்தர் சென்னை தி.நகரில்
உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: திரையுலகினர் எங்களுக்கு
உதவி செய்யாவிட்டாலும், தொந்தரவு தருவதுபோல நடந்துகொண்டனர். செய்யாத தவறுக்கு
மன்னிப்பு கேட்கவேண்டும் என்றனர். அதில் நியாயம் இல்லாததால் சிம்பு மன்னிப்பு
கேட்கவில்லை. என் மனைவி கண்ணீர் விட்டதைப் பார்த்து, மக்கள் பலரும் எங்களுக்கு
ஆதரவு அளித்தனர்.

நீதிமன்றத்தில் எங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைத்தோம். இந்த
வழக்கில் எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைத்திருக்கிறது, தர்மம் வென்றிருக்கிறது.
நீதி கிடைத்துள்ளது. எங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நல்ல உள்ளங்களுக்கும், தமிழக
மக்களுக்கும், சிம்பு ரசிகர்களுக்கும், ராமதாஸ், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்
களுக்கும், இறைவனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

PARAMASHIVAN
6th January 2016, 05:30 PM
Have not heard the song .. nor am I interested in listening to it..

I am not sure if any one recall a song called "No problem" by ARR, I think it is from Mr.Romeo ? The initial portion of this song is a Rap sung by the Legendary Rapper Apache Indian ! and it had one vulgar word repeated for almost every single line in the Lyric? AppO ivangelllam Enge ponanga ?

Bimmer, Had mentioned lots of songs here which had "Hidden" vulgarity meanings ? This has been happening for decades ? appO ellam enna pannanga ?

I am not in support of STR , but rules applies to all right ?

balaajee
6th January 2016, 05:47 PM
Have not heard the song .. nor am I interested in listening to it..

I am not sure if any one recall a song called "No problem" by ARR, I think it is from Mr.Romeo ? The initial portion of this song is a Rap sung by the Legendary Rapper Apache Indian ! and it had one vulgar word repeated for almost every single line in the Lyric? AppO ivangelllam Enge ponanga ?

Bimmer, Had mentioned lots of songs here which had "Hidden" vulgarity meanings ? This has been happening for decades ? appO ellam enna pannanga ?

I am not in support of STR , but rules applies to all right ?

Its LOVE BIRDS i think.

mappi
6th January 2016, 07:23 PM
Param ji,

Here is the lyrics of the Rap part sung by Apache Indian in the movie Love Birds, music composed by Ar-Rahman. The Rap is typical wordplay lyrics mixing English, Tamil, Punjabi & Hindi.

Please let us know which word/line is/are offending/vulgar :

(Omitting reapted words like : You hear, You here, Yeah, No Problem, etc.)

All the people at Cinema, far good India just bowl out,
Rude boy greeting with respect,
Namaste, Sat Sri Akal, Salamu Alaykum & Vannakam to all Tamil masses,
Live & Direct straight from Handsworth To Madras.

So Susikar Mere Suno, Take back no chat
Piche Hoke dekho, Coming home for your tart
Inna Madras where we did make a stop
Vannakam Apache with the people in da chat

If you a citadel jus(t) say,
If you touch on radio say,
Say you know about your history,
Say you big in society.

Everybody come together (a)n(d) send off my friend,
Woof up with me in the same direction,
Indian we are born (a)n(d) that we boost strong,
Come from Madras or over England,
Sabhash we’ve all the appreciation,
Balle Balle good vibes from around,
Reach to the top in your profession,
When u succeed do it as an Indian.

If you come from Madras say,
Say the Bombay Parsis,
And you from Hyderabad say,
Say Anwar Bersih.

All we are Indian (a)n(d) we are be proud of it,
Go through your life with an incentive,
Work together (a)n(d) be supportive,
Do a future most constructive,
Have a lot to learn but we have a lots to give,
Apache Indian has the right motive,
In telugu where we tell the massive,
Chal Mohana Ranga be supportive.

Be a bipi n your bapa,
Be a chachi n your chacha,
Be the Rani n the Raja,
Be a machi n your macha.

Remember the teaching of Gandhi,
Non-violence n one unity,
Come over the gang n nod in Parsi,
Makes me a mark in the society,
On the radio n in the movie,
Adhu Raja n adhu Rani,
Inna Madrasa Bombay city,
Don’t brood hard when u follow what I say.

Put you hands in the air n say
If you proud of your land say,
Say the women and the man say,
When you set off a plan say.

Ah from the Bombay Parsis,
Say the Madras Parsis,
Say you in Hyderabad say,
And you in a Cochin say.

And then say Balle Balle say,
And a Shawa Shawa say,
Oh Chak de Phatte say,
Vannakam Apache say.

Big respect to all the masses, who want to Live & direct out of England, your Apache Indian link up across the sea on part of Ar-Rahman live, Rahman Live and direct out of Madras.

PARAMASHIVAN
6th January 2016, 08:05 PM
Param ji,

Here is the lyrics of the Rap part sung by Apache Indian in the movie Love Birds, music composed by Ar-Rahman. The Rap is typical wordplay lyrics mixing English, Tamil, Punjabi & Hindi.

Please let us know which word/line is/are offending/vulgar :

(Omitting reapted words like : You hear, You here, Yeah, No Problem, etc.)

All the people at Cinema, far good India just bowl out,
Rude boy greeting with respect,
Namaste, Sat Sri Akal, Salamu Alaykum & Vannakam to all Tamil masses,
Live & Direct straight from Handsworth To Madras.

So Susikar Mere Suno, Take back no chat
Piche Hoke dekho, Coming home for your tart
Inna Madras where we did make a stop
Vannakam Apache with the people in da chat

If you a citadel jus(t) say,
If you touch on radio say,
Say you know about your history,
Say you big in society.

Everybody come together (a)n(d) send off my friend,
Woof up with me in the same direction,
Indian we are born (a)n(d) that we boost strong,
Come from Madras or over England,
Sabhash we’ve all the appreciation,
Balle Balle good vibes from around,
Reach to the top in your profession,
When u succeed do it as an Indian.

If you come from Madras say,
Say the Bombay Parsis,
And you from Hyderabad say,
Say Anwar Bersih.

All we are Indian (a)n(d) we are be proud of it,
Go through your life with an incentive,
Work together (a)n(d) be supportive,
Do a future most constructive,
Have a lot to learn but we have a lots to give,
Apache Indian has the right motive,
In telugu where we tell the massive,
Chal Mohana Ranga be supportive.

Be a bipi n your bapa,
Be a chachi n your chacha,
Be the Rani n the Raja,
Be a machi n your macha.

Remember the teaching of Gandhi,
Non-violence n one unity,
Come over the gang n nod in Parsi,
Makes me a mark in the society,
On the radio n in the movie,
Adhu Raja n adhu Rani,
Inna Madrasa Bombay city,
Don’t brood hard when u follow what I say.

Put you hands in the air n say
If you proud of your land say,
Say the women and the man say,
When you set off a plan say.

Ah from the Bombay Parsis,
Say the Madras Parsis,
Say you in Hyderabad say,
And you in a Cochin say.

And then say Balle Balle say,
And a Shawa Shawa say,
Oh Chak de Phatte say,
Vannakam Apache say.

Big respect to all the masses, who want to Live & direct out of England, your Apache Indian link up across the sea on part of Ar-Rahman live, Rahman Live and direct out of Madras.

I withdraw my case your honor , the highlighted word sounded like some thing else to me :oops: , Lol, cos I have head many of "Apache Indian" songs, and most of them tend to have it !

saary for the disturbance ,I yaam da yescapU :yessir:

PARAMASHIVAN
6th January 2016, 08:07 PM
Its LOVE BIRDS i think.

Ah that's the one, it had a wonder full song by HH and KSC called "MalargalE MalargalE" :)

Nasc
6th January 2016, 10:53 PM
Param ji,

Here is the lyrics of the Rap part sung by Apache Indian in the movie Love Birds, music composed by Ar-Rahman. The Rap is typical wordplay lyrics mixing English, Tamil, Punjabi & Hindi.

Please let us know which word/line is/are offending/vulgar :

(Omitting reapted words like : You hear, You here, Yeah, No Problem, etc.)

All the people at Cinema, far good India just bowl out,
Rude boy greeting with respect,
Namaste, Sat Sri Akal, Salamu Alaykum & Vannakam to all Tamil masses,
Live & Direct straight from Handsworth To Madras.

So Susikar Mere Suno, Take back no chat
Piche Hoke dekho, Coming home for your tart
Inna Madras where we did make a stop
Vannakam Apache with the people in da chat

If you a citadel jus(t) say,
If you touch on radio say,
Say you know about your history,
Say you big in society.

Everybody come together (a)n(d) send off my friend,
Woof up with me in the same direction,
Indian we are born (a)n(d) that we boost strong,
Come from Madras or over England,
Sabhash we’ve all the appreciation,
Balle Balle good vibes from around,
Reach to the top in your profession,
When u succeed do it as an Indian.

If you come from Madras say,
Say the Bombay Parsis,
And you from Hyderabad say,
Say Anwar Bersih.

All we are Indian (a)n(d) we are be proud of it,
Go through your life with an incentive,
Work together (a)n(d) be supportive,
Do a future most constructive,
Have a lot to learn but we have a lots to give,
Apache Indian has the right motive,
In telugu where we tell the massive,
Chal Mohana Ranga be supportive.

Be a bipi n your bapa,
Be a chachi n your chacha,
Be the Rani n the Raja,
Be a machi n your macha.

Remember the teaching of Gandhi,
Non-violence n one unity,
Come over the gang n nod in Parsi,
Makes me a mark in the society,
On the radio n in the movie,
Adhu Raja n adhu Rani,
Inna Madrasa Bombay city,
Don’t brood hard when u follow what I say.

Put you hands in the air n say
If you proud of your land say,
Say the women and the man say,
When you set off a plan say.

Ah from the Bombay Parsis,
Say the Madras Parsis,
Say you in Hyderabad say,
And you in a Cochin say.

And then say Balle Balle say,
And a Shawa Shawa say,
Oh Chak de Phatte say,
Vannakam Apache say.

Big respect to all the masses, who want to Live & direct out of England, your Apache Indian link up across the sea on part of Ar-Rahman live, Rahman Live and direct out of Madras.

ahhhh ..the good old days when madras/chennai ruled the roast .......athuku aprom killi paranthu poiduthu

balaajee
9th January 2016, 04:34 PM
Babloo Talks about STR's Beep Song (https://www.youtube.com/watch?v=wtIYdGrlrbo)


https://www.youtube.com/watch?v=wtIYdGrlrbo

mexicomeat
9th January 2016, 05:03 PM
balaji, are u a simbu fan?

balaajee
9th January 2016, 05:18 PM
balaji, are u a simbu fan?

YES i AM

Mahen
10th January 2016, 04:56 PM
Paramu:mad: got a shock when u said no problem had vulgarities.. Arr would never agree to that

ajaybaskar
10th January 2016, 05:41 PM
Yes. Even his sensual songs don't have the 'mukkals and munagals'. He is a socially responsible artist. I can vouch for that.

Sent from my SM-G531F using Tapatalk

PARAMASHIVAN
11th January 2016, 04:08 PM
YES i AM

Lol ! Are you serious ?

PARAMASHIVAN
11th January 2016, 04:10 PM
Paramu:mad: got a shock when u said no problem had vulgarities.. Arr would never agree to that

MannikavUm , Athuku thaan Mannipu kettutEne, :)

balaajee
21st January 2016, 06:34 PM
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு: உருவானது புதிய அணி - Tamil Hindu

'த்ரிஷா இல்லனா நயன்தாரா' இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்
சிம்பு நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மே 1ம் தேதி முதல் படப்பிடிப்பு
தொடங்குகிறது.

ஜி.வி.பிரகாஷ் நடித்த 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். இப்படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்றது.

தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர்
ஆதிக் ரவிச்சந்திரன். சிம்புவை சந்தித்து கதையை தெரிவித்திருக்கிறார். அவரும்
நடிக்க சம்மதம் தெரிவிக்கவே, மே 1ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு
இருக்கிறார்கள்.

இப்படத்தை ரெபில் ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் தீபன் பூபதி தயாரிக்க
இருக்கிறார். இப்படத்துக்கு சிம்புவுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய சம்பளம்
கொடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 கெட்டப்களில் நடிக்கவிருக்கும் சிம்புவுக்கு ஜோடியாக 3 நாயகிகள்
நடிக்க இருக்கிறார்கள். சிம்புவுடன் நடிக்கவிருக்கும் நடிகைகள், நடிகர்கள் தேர்வு
தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

balaajee
25th January 2016, 06:58 AM
10 Days More!! #INAAudioOnFeb3rd (https://twitter.com/hashtag/INAAudioOnFeb3rd?src=hash) #HappyBirthdaySTR (https://twitter.com/hashtag/HappyBirthdaySTR?src=hash) | @iam_str (https://twitter.com/iam_str) @STRFans

(https://twitter.com/STRFans)

https://pbs.twimg.com/media/CZgBlHXUMAAn5N3.jpg

balaajee
28th January 2016, 10:05 PM
Super rare photo of STR (https://twitter.com/iam_str)



https://pbs.twimg.com/media/CZvblSzUAAA8uOG.jpg