PDA

View Full Version : Makkal thilagam mgr- part 25



Pages : 1 2 3 4 5 6 7 [8] 9 10 11 12 13 14 15 16 17

orodizli
23rd October 2019, 09:13 PM
ஆஹா ...இப்படியும் ஒரு தலைவன்............என்னவென்று சொல்வது... இறைவனே என்றாலும் தூர அமர்ந்து சாப்பிடுவார். நம் தலைவர் அப்படியல்ல... உண்மை தானே...(நரிக்குறவர் சமுதாய மக்களோடு மக்கள் திலகம் பக்கத்திலமர்ந்து... பாசத்துடன்...உணவருந்தும் அற்புதமான புகைப்படம் கண்டு நண்பர்கள் பகிர்ந்த வாசகங்கள்... Thanks...

orodizli
23rd October 2019, 09:15 PM
பல ஆண்டுகள் பழகிய நாம் இருவரும் அருகருகே அமர்ந்து உண்பது போல........தலைவர்... குறவர் ஒருவருடன், எந்தவித பந்தாவும் இல்லாமல், மிகவும் சகஜமாக....... Thanks...

orodizli
23rd October 2019, 09:20 PM
கோவை & மாவட்டங்களில்... கடும் மழை பெய்து வரும் வேளையில் மழை விட்டு சில நாள்கள் கடந்து கூட புரட்சி நடிகர் காவியங்களை திரையிடலாம் தானே...என்ன நமது கருத்து சரியா தோழர்களே...

oygateedat
24th October 2019, 03:00 AM
https://i.postimg.cc/gJRfTCnb/IMG-4056.jpg (https://postimg.cc/PpX3LFWS)

oygateedat
24th October 2019, 03:01 AM
https://i.postimg.cc/85VyjjPx/4d8c2f41-0fa2-42c1-a575-c87115861796.jpg (https://postimg.cc/06cG45SC)
நன்றி - திரு உலகப்பன்

oygateedat
24th October 2019, 03:02 AM
https://i.postimg.cc/ZRKd7SfC/54a4c656-b3b8-4b9d-8a8b-d4774f876dc4.jpg

oygateedat
24th October 2019, 03:03 AM
https://i.postimg.cc/nrKMpSS6/772ca4e1-586f-4edd-a770-2cc231f8c4ee.jpg (https://postimg.cc/RJFvTdBR)

oygateedat
24th October 2019, 03:09 AM
https://i.postimg.cc/rFSY2GVx/62ebb4a8-b6b0-418d-866b-d12d92e23a8c.jpg

oygateedat
24th October 2019, 03:20 AM
https://i.postimg.cc/G2KGj2dB/8f46638d-54e9-41b7-9944-bde83492aedc.jpg (https://postimages.org/)

oygateedat
24th October 2019, 04:31 AM
https://i.postimg.cc/YCK2pL4Q/b30206f6-d3a3-4f25-88ae-867f1f6a76dc.jpg (https://postimages.org/)

oygateedat
24th October 2019, 04:32 AM
https://i.postimg.cc/vBJ8c4qR/b9319b21-73ff-42e9-abd2-2faa614c201e.jpg (https://postimages.org/)

oygateedat
24th October 2019, 07:31 AM
https://i.postimg.cc/hGL3JrLb/IMG-4075.jpg (https://postimages.org/)
Thanks to Mr.Asokan - Neyveli (face book)

oygateedat
24th October 2019, 07:33 AM
https://i.postimg.cc/26Xd3bK7/IMG-4076.jpg

oygateedat
24th October 2019, 07:41 AM
https://i.postimg.cc/63LxcJD8/IMG-4077.jpg (https://postimg.cc/R6FYC8Cm)
நமது போற்றுதற்குரிய

தலைவர்

தமது இல்லத்தரசியோடு

oygateedat
24th October 2019, 07:59 AM
https://i.postimg.cc/C1PTXHx0/1571869722431.jpg

orodizli
24th October 2019, 07:20 PM
தூத்துக்குடி- சத்யா DTS.,திரையரங்கம் புதியபொலிவுடன் நாளை ஆரம்பம் ...ஆரம்பமே அசத்தல்... புரட்சித்தலைவரின் "நினைத்ததை முடிப்பவன் ", தூள் கிளப்புகின்றார் தகவல் ... நெல்லை ராஜா .. நன்றி ...மதுரை.எஸ் குமார்... Thanks ..........

orodizli
24th October 2019, 07:26 PM
1984 அக்டோபரில், எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, அவர் குணம் அடைய தமிழகம் முழுவதும் பிரார்த்தனைகள் நடந்தன.
அப்போது “ஒளிவிளக்கு” படத்தில் வாலி எழுதியிருந்த “இறைவா, உன் மாளிகையில் எத்தனையோ திருவிளக்கு! தலைவா, உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு” என்ற பாடல்தான் பிரார்த்தனை கீதமாக ஒலிபரப்பப்பட்டது.
எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தபொழுது, மிகுந்த மனச்சுமையோடு அவரைப் பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்குச் சென்றிருக்கிறார் கவிஞர் வாலி. திருமதி ஜானகி அம்மாளும், சத்தியவாணிமுத்து அம்மையாரும் கண் கலங்க நின்று கொண்டிருக்க, ஆறுதல் சொன்னார் கவிஞர்.
“உங்கள் ஒளிவிளக்கு படத்து பாடலைத்தான், நாடே பாடி உங்கள் அண்ணனுக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறது. அந்த பிரார்த்தனையின் பலனாகத்தான், அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார் என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். இனிமேல் அவருக்கு ஆபத்து இலலை” என்று திருமதி ஜானகி அம்மையார் கண்கள் பனிக்க வாலியிடம் கூறினாராம்.
“என் பாட்டுடைத் தலைவனுக்கு என் பாட்டே பிரார்த்தனை கீதமாக ஆனது குறித்து, நான் அளவில்லாத ஆனந்தம் அடைந்தேன். இருந்தாலும், அம்மா! இது வாலி பாக்கியம் அல்ல; உங்கள் தாலி பாக்கியம்” என்று சமயோசிதமாக பதில் கூறினாராம் நம் கவிஞர்............ Thanks.........
��

orodizli
24th October 2019, 07:34 PM
"வீர மாமுகம் தெரியுதே, அதில் வெற்றி புன்னகை புரியுதே" காலா காலமாக "சீரஞ்சிவித்துவம் "பெற்ற "தீர்க்க தரிசனம்" ... நம் காவியதலைவர் நமக்களித்த வெற்றி கொடை... "இரட்டை இலை" இரட்டை மஹா வெற்றி...

oygateedat
25th October 2019, 12:48 AM
https://i.postimg.cc/fyQpWpym/f7e3b86e-5896-403b-811f-3f4889e1cea4.jpg

oygateedat
25th October 2019, 12:50 AM
https://i.postimg.cc/MHZ4jR0p/IMG-4086.jpg (https://postimg.cc/hzwMkX3k)

🌱🌱🌱🌱பொன்மனச்செம்மல்🌱🌱🌱🌱

orodizli
25th October 2019, 01:47 PM
https://youtu.be/Xyp_IBF9-CI............ Thanks.........

orodizli
25th October 2019, 01:49 PM
புரட்சித்தலைவர் அவர்களின் தம்பிமார்களுக்கு வணக்கம். நேற்று வெளிவந்துள்ள இரண்டு சட்டசபை இடைத்தேர்தல் முடிவின் வெற்றி நம் அனைவருக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. இம்மாதிரியான பல வெற்றிகளை பெறுவதற்கு, விதை விதைத்து உருவாக்கிய நம் புரட்சித்தலைவர் அவர்களை வணங்கி ஆசி பெறுவோம்.
பாஸ்கரன்,
கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை............. Thanks.........

orodizli
25th October 2019, 01:51 PM
ஒரு தலைவன் எப்படி உருவாக வேண்டும்... என காட்டிய ஒரே தலைவன் எம். ஜி .ஆர்.,
தன் உழைப்பால் உயர்ந்தார் எம் ஜி ஆர்
தான் ஈட்டியதை ஈந்து மகிழ்ந்தார்
மக்களோடு மக்கள் ஆனார் மக்களின் அன்பின் உச்சம் கண்டார்...
எம் ஜி ஆரை குறித்து ஒரு பிரபல மலையாள நாளிதழ் இப்படி குறிப்பிட்டது
மகாத்மா காந்திஜீ க்கு கூட சென்று அடைய முடியாத மக்களின் அடிமனம் சென்று அவர்களின் முழு அன்பையும் எம் ஜி ஆரால் பெற முடிந்தது என்று

வாழ்க எம் .ஜி. ஆர்., புகழ்........... Thanks.........

orodizli
25th October 2019, 01:54 PM
ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின்...,

“இனி தமிழகத்தில் அண்ணா திமுக என்ற ஒரு கட்சியே இருக்க போவது இல்லை” என்று திமுகவினர் மட்டுமல்ல, அதிமுகவின் அதி தீவரமான தொண்டர்கள் கூட நம்பிக்கை இழந்து கவலை கொள்ள தொடங்கியதில் வியப்பு ஒன்றும் இல்லை அன்று.

ஒரே கட்சி சிதறு தேங்காய் போல நான்காக உடைந்து, இரட்டை இலை சின்னமும் இழந்து, மக்களிடம் செல்வாக்கும், நம்பிக்கையும் இழந்து, ஸ்டாலினிடம் மறைமுக பேரம் கண்ட தினகரனின் தினம் ஒரு ஆட்டங்களினால் இருந்த சொச்சகொச்ச நம்பிக்கையும் மக்களிடம் இழந்து, கடலில் பெரும் அலைகளுக்கு இடையே தத்தளிக்கும் ஒரு கப்பல் போல, அனைத்து நம்பிக்கைகளையும் இழந்து, கிட்டத்தட்ட பூஜ்யம் என்ற நிலையை அடைந்த ஒரு ஆட்சியை, கட்சியயை...

அடடா...

என்ன ஒரு லாவகத்துடன்... என்ன ஒரு நிதானத்துடன்... என்ன ஒரு ராஜதந்திரத்துடன்.... காச்மூச் என்று மிரட்டி கொண்டிருந்த மத்திய அரசுடன் இருந்த உறவை.. நட்பாக்கி, பின், இறுக்கி..... எதிர் கட்சி எம்.எல்.ஏ க்களை கூட அனாசியமாக வளைத்து போட்டு, சிலரை இணைத்து, சிலரை வெளியே அனுப்பி, சிலரை ஆப் செய்து, சிலரை மண்ணை கவ்வ வைத்து, சிலருக்கு கிச்கிச் மூட்டி, சிலரை தலை கிறுகிறுங்க வைத்து, இதோ இன்று கவிழும்... நாளை கவிழும் என்று மிரட்டி கொண்டிருந்த எதிர்கட்சி தலைவரின் கனவில் மண்ணை அள்ளி தூவி.... மக்கள் திலகம் கண்ட மாபெரும் இயக்கம், செல்வி ஜெயலலிதாவினால் உச்சம் கொண்டு செல்லப்பட்ட நாட்டின் மிக பெரிய ஒரு இயக்கத்தின் மீது... மீண்டும் மக்களின் நம்பிக்கையை பெற வைத்து, எந்த வித சேதாரமும் இன்றி, இன்று கப்பலை பாதுகாப்புடன் கரையில் சேர்த்துள்ளார் முதல்வர் எடப்பாடி அவர்களும், துணை முதல்வர் அவர்களும். நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.... பாராட்டுக்கள்.. நன்றிகள்.

அண்ணா திமுக என்பது குடும்ப கட்சி அல்ல. இது தொண்டர்களின் இயக்கம். எம்.ஜி.ஆர். அவர்கள் கண்ட இயக்கம். செல்வி ஜெயலலிதா அவர்களின் இயக்கம் என்பதை மீண்டும் நிருபித்து உள்ளது. அண்ணா திமுக தொண்டர்களின் அசுரதனமான பணிகளுக்கும், அயராத முயற்சிக்கும் கிடைத்த வெற்றி இது. வெற்றிகள் தொடரட்டும்...... Thanks...

orodizli
25th October 2019, 01:55 PM
கருணாநிதியைக் கலங்கடித்த திண்டுக்கல் தேர்தலும்
தி.மு.கவை உறைய வைத்த உலகம் சுற்றும் வாலிபனும்

சட்டமன்றத்தில் அனல் பறந்துகொண்டிருந்தது. சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்துள்ளது. ஆகவே, சபாநாயகர் அவைக்குத் தலைமை தாங்கக் கூடாது; துணை சபாநாயகரைக் கூப்பிடுங்கள் என்பது ஆளுங்கட்சியின் கோரிக்கை. அதற்கான அவசியமே இல்லை. விவாதத்துக்கு வேறொரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் நானே அவைக்குத் தலைமை தாங்குவேன் என்பது சபாநாயகர் மதியழகனின் வாதம். தமிழக சட்டமன்றம் இதற்குமுன்னால் சந்தித்திராத புதிய சர்ச்சை.
பலத்த சலசலப்புகள் எழுந்த சூழ்நிலையில் சபாநாயகர் நாற்காலிக்குக் கீழே புதிய நாற்காலி ஒன்று போடப்பட்டது. துணை சபாநாயகர் சீனிவாசன் வந்து அந்த நாற்காலியில் வந்து உட்கார்ந்தார். ஆம், சபாநாயகருக்குப் போட்டியாக துணை சபாநாயகரைக் களத்தில் இறங்கியிருந்தார் கருணாநிதி. சபாநாயகரைக் கையில் வைத்துக்கொண்டு தனக்கு எதிராக எம்.ஜி.ஆர் தொடங்கிய யுத்தத்துக்குப் பதிலடி கொடுக்கக் கருணாநிதி தயாராகிவிட்டார் என்பது அந்த நடவடிக்கையில் அப்பட்டமாகத் தெரிந்தது. சட்டென்று சுதாரித்த எம்.ஜி.ஆர் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அமைச்சரவை மீது நாங்கள் கொடுத்துள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை முதலில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்று சபாநாயகர் மதியழகனிடம் கோரினர். கோரிக்கை ஏற்கப்பட்டது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பேசுங்கள் என்று எம்.ஜி.ஆரை அழைத்தார். உடனே எம்.ஜி.ஆர் பேசத் தொடங்கினார். ஆனால் அவருடைய பேச்சு எதுவும் வெளியே கேட்கவில்லை.

விஷயம் இதுதான். சபாநாயகர், எம்.ஜி.ஆர் இருவருடைய மைக்குகளுக்கும் இணைப்பு தரப்படவில்லை. துணை சபாநாயகர் மற்றும் ஆளுங்கட்சியினருக்கு மட்டுமே மைக் இணைப்புகள் தரப்பட்டிருந்தன. நுணுக்கமாகச் செயல்பட்டிருந்தனர் ஆளுங்கட்சியினர். இணைப்பு இல்லாததைப் பற்றி எம்.ஜி.ஆர் கவலைப்படவில்லை. தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.புதிய நாற்காலியில் அமர்ந்த துணை சபாநாயகர் சீனிவாசன் முதலில் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தார். விவாதம் தொடங்கியது. உடனடியாகத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. திமுகவில் இருந்து எம்.ஜி.ஆருடன் சேர்ந்து விலகிய சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை வெகுசொற்பம். மாறாக, திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையோ மிக அதிகம். தீர்மானம் வெகு எளிதாக நிறைவேறியது. சபாநாயகர் பதவியில் இருந்து மதியழகன் நீக்கப்பட்டதாக அறிவித்தார் துணை சபாநாயகர் சீனிவாசன்.

அந்த அறிவிப்பு வெளியானபோதும் சபாநாயகர் இருக்கையில் மதியழகனே இருந்தார். இன்னொரு பக்கம் இணைப்பு இல்லாத மைக்கில் பேசிக்கொண்டே இருந்தார் எம்.ஜி.ஆர். சட்டென்று சபை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துவிட்டு வெளியேறினார் சபாநாயகர். ஆனாலும் சபை தொடர்ந்து நடந்தது. உடனடியாக எம்.ஜி.ஆரும் அவருடைய ஆதரவு எம்.எல்.ஏக்களும் சபையைவிட்டு வெளியேறினர். அதன்பிறகு ஒரு மணி நேரத்துக்கு சபையை நடத்திவிட்டு சபையை ஒத்திவைத்தார் துணை சபாநாயகர் சீனிவாசன்.

ஒருவழியாக பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது என்றுதான் நினைத்தனர். ஆனால் கருணாநிதி அத்துடன் நிறுத்தவில்லை. அமைச்சரவை மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரத் தயாரானார். எம்.ஜி.ஆர் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்குப் பதில் கொடுக்கவேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கம். நம்பிக்கைத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது அமைச்சரவைக்கு ஆதரவாக 172 வாக்குகள் விழுந்தன. எதிர்த்து விழுந்த வாக்குகள் பூஜ்ஜியம். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்று தன்னுடைய பலத்தை உணர்த்தியிருந்தார் கருணாநிதி.
இடைத்தேர்தல். திண்டுக்கல் மக்களவை திமுக உறுப்பினர் ராஜாங்கம் மரணம் அடைந்திருந்தார். ஆகவே, அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியின் வலிமையை எடை போட்டுப் பார்க்கும் தேர்தல் என்பது பொதுவான கருத்து. அதிலும், கட்சி பிளவுபட்டிருந்த சூழலில் அந்த இடைத் தேர்தல் முடிவைத் தனக்கான கௌரவ விஷயமாகப் பார்த்தார் கருணாநிதி. செல்வாக்கு மிக்க வேட்பாளரைக் களமிறக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்காக அவர் களமிறக்கிய வேட்பாளர் பொன். முத்துராமலிங்கம். சுறுசுறுப்புக்குப் பஞ்சமில்லை. செல்வாக்குக்கும் குறைவில்லை. உற்சாகமாகக் களமிறங்கினர் திமுக தொண்டர்கள்.
புதிய கட்சியைத் தொடங்கிய சமயம் என்பதால் இடைத்தேர்தல் சரியான வெள்ளோட்டமாக இருக்கும் என்பது எம்.ஜி.ஆரின் கணிப்பு. மாயத்தேவர் என்ற வழக்கறிஞரை வேட்பாளராக்கினார். திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சிக்கும் நல்ல செல்வாக்கு இருந்தது. குறிப்பாக, காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரசுக்கு. அந்தக் கட்சியின் சார்பில் என்.எஸ்.வி. சித்தன் நிறுத்தப்பட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சங்கரய்யாவை வேட்பாளராக்கியது. இந்திரா காங்கிரஸும் நின்றது. ஆனால் எம்.ஜி.ஆருக்கு ஆதரவு கொடுத்துவிட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.ஜி.ஆருக்கு ஆதரவாகத் தனது வேட்பாளரை வாபஸ் பெற்றுக் கொண்டது.
கௌரவத்தைத் தக்கவைக்கும் முயற்சியில் கருணாநிதி இறங்கினார். புதிய கௌரவத்தை அடையும் நோக்கத்தில் எம்.ஜி.ஆர் களத்தில் இறங்கினார். அப்போது தேர்தலுக்குத் தொடர்பில்லாத புதிய பிரச்னை ஒன்று வந்தது. அது, எம்.ஜி.ஆரின் தயாரிப்பின் உருவாகியிருந்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம். திமுகவில் இருந்தபோது தொடங்கப்பட்ட படம். வெளியிடும் தருணத்தில் புதிய கட்சியைத் தொடங்கியிருந்தார் எம்.ஜி.ஆர்.
படத்துக்கான சுவரொட்டியைக்கூட ஒட்டமுடியாத சூழல். ஒட்டிய சுவரொட்டிகளை எல்லாம் திமுகவினர் கிழித்தெறிந்ததாகச் செய்திகள் பரவிக்கொண்டிருந்தன. இதன் பின்னணியில் இருப்பவர் திமுகவின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான மதுரை எஸ். முத்து என்றனர் எம்.ஜி.ஆர் ரசிகர்கள். படம் திரையில் ஓடாது; ஓடினால் சேலை கட்டிக்கொள்கிறேன் என்று முத்து சவால் விட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின

பலத்த நெருக்கடிகளுக்கு மத்தியில் உலகம் சுற்றும் வாலிபன் வெளியானது. அரசியல் வாடையே வீசாத வகையில் எடுக்கப்பட்ட படம் அது. திடீரென உருவான அரசியல் பிரச்னைகளுக்கு ஆளாகியிருந்தது. எனினும், படம் பிரம்மாண்டமான வெற்றி. உண்மையில் அந்த வெற்றி திமுகவினரை அதிர்ச்சியடையச் செய்தது.
இடைத்தேர்தலில் சுமார் ஐந்து லட்சம் வாக்குகள் பதிவாகின. அதிமுகவின் மாயத்தேவர் 2,60,930 வாக்குகளைப் பெற்று அபாரவெற்றியைப் பெற்றிருந்தார். ஸ்தாபன காங்கிரஸின் என்.எஸ்.வி. சித்தன் 1,19,032 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மாறாக, திமுக வேட்பாளர் பொன். முத்துராமலிங்கம் 93,496 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருந்தார். கருணாநிதியை அதிர்ச்சியில் உறையவைத்த தேர்தல் முடிவு இது. திண்டுக்கல் தோல்வி குறித்து பின்னாளில் கருணாநிதி இப்படித்தான் எழுதினார். ‘திமுகழகத்தின் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த இடம் திண்டுக்கல். இந்தத் திண்டுக்கல்தான் கழகத்தின் பல்வேறு வெற்றிகளுக்கெல்லாம் தடைக்கல்லாகவும் இருந்தது.’........... Thanks.........

fidowag
25th October 2019, 05:25 PM
தீபாவளி மறுவெளியீடு*---------------------------------------
இன்று முதல் (25/10/19) சென்னை பாலாஜியில் புரட்சி நடிகர் /புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது*


இன்று முதல் (25/10/19) மதுரை சென்ட்ரலில் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய " நாடோடி மன்னன் " தினசரி 4 காட்சிகளில் வசூல் சாதனை புரிய வருகை தந்துள்ளது .

கோவை பக்தர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி .------------------------------------------------------------------

சண்முகாவில் 25/10/19முதல்* மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அகிலம் போற்றும் "ஆயிரத்தில் ஒருவன் "* டிஜிட்டல் தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது*

டிலைட்டில்* 25/10/19 முதல் வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். நடித்த பிரம்மாண்ட வெற்றி படமான டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது .

தூத்துக்குடி சத்யாவில் 25/10/19 முதல் கொள்கை வேந்தன் / கலைவேந்தன் எம்.ஜி.ஆர். அசத்தலாக நடித்த டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " தினசரி 2 காட்சிகள் , சனி ஞாயிறு 3 காட்சிகள் நடைபெறுகிறது*


23/10/19 முதல் மதுரை திருப்பரங்குன்றம் லட்சுமியில் ' பொன்மன செம்மல் எம்.ஜி.ஆரின் "தர்மம் தலை காக்கும் " தினசரி 3 காட்சிகள் (3 நாட்கள் மட்டும் )நடைபெறுகிறது .

fidowag
26th October 2019, 12:26 AM
செய்தி திருத்தம்*-------------------------
25/10/19 முதல் சென்னை சரவணாவில் டி.டி.எஸ். அரங்கில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "நினைத்ததை முடிப்பவன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .சென்னை பாலாஜியில் அல்ல..

fidowag
26th October 2019, 12:44 AM
தினத்தந்தி வெள்ளிமலர் -25/10/19

என்றென்றும் கண்ணதாசன் .--------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மதுரை வீரன் படத்திற்கு 1956லும், மகாதேவி படத்திற்கு 1957லும் கவிஞர் கண்ணதாசன் வசனம் எழுதி இரண்டும் மாபெரும் வெற்றி பெற்றன .

இந்த வெற்றிகளை தொடர்ந்து கவிஞர் கண்ணதாசன் சொந்தமாக ஒரு நிறுவனத்தை தொடங்கி மக்கள் திலகம் கதாநாயகனாக நடிக்க "ஊமையன் கோட்டை " என்கிற படத்தை தயாரிக்க முற்பட்டார் .

ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் பெரிய மேடை போடப்பட்டு , அறிஞர் அண்ணா தலைமையில் தொடக்க விழா நடைபெற்றது.* தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்தின் தொடக்க விழா இப்படி நடைபெற்றது அதுவே முதல் தடவை .

ஊமையன் கோட்டை* படப்பிடிப்பு தொடங்கியது .* எம்.ஜி.ஆர். வேறு படங்களில் நடித்து கொண்டிருந்ததால்* அவர் இல்லாத காட்சிகள் முதலில் படமாக்கப்பட்டன .

மதுரை வீரன், மகாதேவி படங்களின் வசனங்கள், வெற்றிகள் பற்றி* கேள்விப்பட்டவர்கள் சினிமாவிலும், அரசியலிலும் உயரத்திற்கு போய்விடுவார்.அவரை வளர விடக்கூடாது என்று முடிவு செய்து , இடைப்பட்ட காலத்தில்*எம்.ஜி.ஆரிடம் இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி அவர் மனதை கலைத்து விட்டார்கள் .

கண்ணதாசன் தன்னை பற்றி இப்படி பேசி இருப்பாரா என்று எம்.ஜி.ஆர். யோசிக்கக்கூட அவர்கள் விரும்பவில்லை .எம்.ஜி..ஆரும்,கண்ணதாசனும் அப்போது தி.மு.க. வில்தான் இருந்தார்கள் .இதன் காரணமாக ஊமையன் கோட்டை படம் கைவிடப்பட்டது .

கண்ணதாசன் மீது தப்பில்லை.* தன்னிடம் வேண்டுமென்றே தவறான தகவல்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன என்று பின்னாளில் எம்.ஜி.ஆர். உணர்ந்து கொண்டார் .* இருவரும் மனம் விட்டு பேசினார்கள். மீண்டும் எம்.ஜி.ஆர். கண்ணதாசன் கூட்டணியில் _நாடோடி மன்னன் , மன்னாதி மன்னன், ராணி சம்யுக்தா , ராஜா தேசிங்கு என வரிசையாக படங்கள் வெளிவந்தன .

fidowag
26th October 2019, 12:54 AM
குமுதம் வார இதழ்*

கே. ராஜேஷ், திருவள்ளூர்*

நீங்கள் அடிப்படையில் எம்.ஜி.ஆர். ரசிகராமே.?* இதுதான் தங்களை ஆக்ஷன்*படங்களில் நாட்டம் கொள்ள வைத்தது உண்மையா ?

பதில் :எம்.ஜி.ஆர். அவர்களின் டெக்னீகல் நாலெட்ஜ் மீது பெரிய வியப்பு உண்டு .ஜேம்ஸ் பாண்ட் படம் போன்ற உலகம் சுற்றும் வாலிபன், அண்டர் வாட்டரில்*அவள் ஒரு நவரச நாடகம், பாடல், ஸ்கெட்டிங்கில் கிளைமாக்ஸ் சண்டை, , நாடோடி மன்னனின் ஒரு தீவு தண்ணீரில் மூழ்குவது !. இதெல்லாம் பிரமிப்பான கற்பனைகள் .

fidowag
26th October 2019, 01:05 AM
தினகரன் வெள்ளிமலர் 25/10/19---------------------------------------------
old is gold

பந்துலு கட்சி மாறிய கதை .------------------------------------------

பி.ஆர். பந்துலு , சிவாஜி கணேசனின் ஆஸ்தான இயக்குனராக 1960களில்*தொடக்கத்தில் உருவெடுத்தார் .சிவாஜி கணேசனின் 100வது படத்தை தானே தயாரித்து, இயக்கி ,முரடன் முத்து என்கிற படத்தை வெளியிட முற்பட்டார் .

ஆனால் ஏ.பி.என்.நாகராஜன் தயாரிப்பில் , 100வது* படமாக நவராத்திரி படத்திற்கு சிவாஜி கணேசன் அந்தஸ்து அளித்தார் .

இதனால் ஏமாற்றத்திற்கு உள்ளான பந்துலு, தான் இதுவரை இயக்காத* எம்.ஜி.ஆரை ஒப்பந்தம் செய்து ,* படம் தயாரிக்க விரும்பினார் .* *எம்.ஜி.ஆரும்* பச்சை கொடி காட்ட "ஆயிரத்தில் ஒருவன் " படத்தை பிரமாண்டமாக தயாரித்து பெரும் வெற்றி பெற்றார் . அதை தொடர்ந்து, நாடோடி, ரகசிய போலீஸ் 115, தேடி வந்த மாப்பிள்ளை ஆகிய படங்களை தயாரித்தார் .

fidowag
26th October 2019, 01:14 AM
தினகரன் -25/10/19

அ.தி.மு.க. வேட்பாளர்கள் பெற்ற வெற்றியை*எம்.ஜி.ஆர். - ஜெயலலிதாவிற்கு காணிக்கையாக்கி மகிழ்கிறோம்*

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும்*கூட்டாக வெளியிட்ட அறிக்கை .

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றிக்கு அயராது பாடுபட்ட அ. தி.மு.க. தொண்டர்கள், வாக்களித்த பொதுமக்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் திரு.ராமதாஸ், திரு.விஜயகாந்த், திரு.ஜி.கே.வாசன், திரு.சரத்குமார் ஆகியோருக்கும், கட்சி தொண்டர்களுக்கும், நன்றி தெரிவிப்பதோடு, இந்த வெற்றியை அ. தி.மு.க. தலைவர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவிற்கு காணிக்கை ஆக்குகிறேன் .என்று அறிக்கை வெளியிட்டனர் .

sivaa
26th October 2019, 03:26 AM
தினகரன் வெள்ளிமலர் 25/10/19---------------------------------------------
old is gold

பந்துலு கட்சி மாறிய கதை .------------------------------------------

பி.ஆர். பந்துலு , சிவாஜி கணேசனின் ஆஸ்தான இயக்குனராக 1960களில்*தொடக்கத்தில் உருவெடுத்தார் .சிவாஜி கணேசனின் 100வது படத்தை தானே தயாரித்து, இயக்கி ,முரடன் முத்து என்கிற படத்தை வெளியிட முற்பட்டார் .

ஆனால் ஏ.பி.என்.நாகராஜன் தயாரிப்பில் , 100வது* படமாக நவராத்திரி படத்திற்கு சிவாஜி கணேசன் அந்தஸ்து அளித்தார் .

இதனால் ஏமாற்றத்திற்கு உள்ளான பந்துலு, தான் இதுவரை இயக்காத* எம்.ஜி.ஆரை ஒப்பந்தம் செய்து ,* படம் தயாரிக்க விரும்பினார் .* *எம்.ஜி.ஆரும்* பச்சை கொடி காட்ட "ஆயிரத்தில் ஒருவன் " படத்தை பிரமாண்டமாக தயாரித்து பெரும் வெற்றி பெற்றார் . அதை தொடர்ந்து, நாடோடி, ரகசிய போலீஸ் 115, தேடி வந்த மாப்பிள்ளை ஆகிய படங்களை தயாரித்தார் .

நன்றி திரு லோகநாதன் சார்.

சிவாஜி கணேசன் அவர்களுக்கும் பந்துலுவிற்குமான பிரிவுக்கு மேற்கண்ட பிரச்சனைதான் காரணம்.

இதை நாங்கள் பலமுறை சொல்லியிருக்கின்றோம் ஆனால் உங்கள் பக்கத்திலிருந்து எதிர்மறை கருத்தே பதிவிடப்பட்டது.

எங்கள் பக்கம் இருந்து சொல்லப்பட்ட உண்மை நிலவரத்தை தங்களது மேற்கண்ட பதிவின்மூலம் உறுதிப்படுத்தியமைக்கு

மிக்க நன்றி.(உண்மைகள் எப்பொழுதும் உறங்காது என்றோ ஒரு நாள் விழித்துக்கொள்ளும்)

oygateedat
26th October 2019, 10:42 AM
https://i.postimg.cc/hvm5yrxh/872ee57d-fe36-438f-ab6e-723f258ea2cd.jpg

orodizli
26th October 2019, 10:43 AM
தினகரன் நாளிதழில் நேற்று வந்த செய்தியில் ஒரு பக்கமாக தான் (எடிட்) பண்ணி எழுதியுள்ளனர். இதுவும் ஒரு காரணம் அவ்வளவே. மற்றபடி திரு பந்துலு தயாரித்து வெளியிட்டு நஷ்டப்பட்ட 1961 ம் வருடம் படம், பின்பு 1964 பொங்கலுக்கு வெளியிட்டு பெருத்த நஷ்டத்தை சந்தித்த படம் ( 100 நாள் கண்ட பின்பும் இழப்பை சரி செய்ய இயலாதலால்) அணி மாற நேரிட்டது. இது அந்த காலத்திலேயே திரைப்பட துறையினர் உட்பட சினிமா சம்பந்தப்பட்ட அனைவரும் அறிந்த செய்தியே...

orodizli
26th October 2019, 10:48 AM
" ஒருமுறை திருச்சிக்கு எம்.ஜி.ஆருடன் காரில் பயணிக்கிறேன். வழியில் ஒரு ரயில்வே கேட். கார் நிற்கிறது. எம்.ஜி.ஆர். வந்த செய்தியறிந்து பக்கத்து வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த மக்கள் பறந்து வருகிறார்கள். அத்தனை பேரும் காரைச் சூழ்ந்து கொண்டு பாசத்தைக் கொட்ட… திக்குமுக்காடிப் போகிறார் எம்.ஜி.ஆர். ‘’எல்லாரும் நல்லா இருக்கீங்களா?’’ என்று அன்போடு விசாரிக்கிறார். பதிலுக்கு அந்த மக்களோ ‘’மகராசா…நீங்க நல்லா இருந்தாலே போதும், நாங்க நல்லா இருப்போம்’’ என்று அந்த உழைக்கும் மக்கள் கையெடுத்துக் கும்பிட்டுச் சொல்ல…அவர்கள் அத்தனை பேரின் கைகளைப் பற்றிக்கொண்டு நெகிழ்ந்து போகிறார் எம்.ஜி.ஆர்.

கார் நகர்கிறது. சில நிமிடங்கள் மௌனமாக வந்த எம்.ஜி.ஆர். உருகிப்போய் சொன்னார்: ‘’ நான் நல்லா இருந்தாலே தாங்களும் நல்லா இருப்போம்னு சொல்ற இந்த மக்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போறேன்!''
மக்கள் தன் மீது காட்டிய பாசத்தைப் போலவே, மக்கள் மீது அவர் காட்டிய அன்பையும் அக்கறையையும் நேரில் பார்த்தேன்.

அவரது ஆட்சியின்போது ஒருமுறை ராமேஸ்வரத்தில் கடுமையான புயல் மழை. குடியிருப்புப் பகுதிகளில் பலத்த சேதம். தகவல் கிடைத்ததும் உடனே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றார் எம்.ஜி.ஆர். அவருடன் நானும். சேறும் சகதியுமாக நீரோடிய வீதிகளில், கண்ணீரும் கம்பலையுமாக நின்றிருந்தனர் மக்கள். அவர்களைப் பார்த்ததுமே காரிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆர். கொஞ்சம்கூட யோசிக்காமல் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு முழங்கால் அளவு தண்ணீரில் நடக்க…பதறிப்போன மக்களோ ‘அய்யா, எங்களுக்கு ஒண்ணும் பிரச்னையில்ல, உங்களப் பாத்ததே போதும், சகதியில நடக்காதீங்க’’ என்று தடுத்தும் கேளாமல், அவர்களது அருகில் போய் ஆறுதல் கூறினார். அதேஜோரில் மின்னல் வேகத்தில் நிவாரணப்பணிகளுக்கும் உத்தரவிட்டார்.

மக்களின் குறைகளை கோட்டையில் உட்கார்ந்து கேட்டவர் அல்ல…
தெருவுக்கே வந்து தீர்த்து வைத்தவர் எம்.ஜி.ஆர்.

முதல்வராக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள்முதல் அவர் அமரராகும் வரை…அந்த 11 ஆண்டுகளில் 1 சென்ட் நிலமோ அல்லது வீடோ... இந்தத் தமிழ்நாட்டிலோ, வேறெந்த மாநிலத்திலோ அவர் வாங்கியது கிடையாது. அதேசமயம் திரையுலகில் இருந்தபோது தான் சம்பாதித்த சொத்துக்களை மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் நலனுக்கும், கட்சிக்கும் என தமிழக மக்களிடமே திருப்பிக் கொடுத்து லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் அவர்போல இடம் பிடித்தவர் வேறு யாரும் கிடையாது.

ஏனெனில் தான் சம்பாதித்த மாபெரும் சொத்து மக்கள் செல்வாக்கு என்பதைத்தான் அவர் மதித்தார், அதில் துளிகூட கீறல் விழாமல் கடைசிவரை காத்தார்.

இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம்…எம்.ஜி.ஆருடன் காரில் செல்கிறேன். சாலையில் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் ’’தலைவா வாழ்க! எம்.ஜி.ஆர். வாழ்க’’ என்று கோஷமிடுகிறார்கள். இதைப் பார்த்த எம்.ஜி.ஆர். என்னிடம் ‘’எல்லாருமே எம்,ஜி,ஆர், வாழ்க’ன்னுதானே வாழ்த்தறாங்க. ஒருத்தர்கூட ‘முதலமைச்சர் வாழ்க’ன்னு சொல்லலை. ஏன் தெரியுமா?’’ என்று கேட்டார். ‘’ உங்க மூன்றெழுத்துப் பெயர்தான் அவங்களுக்கு மந்திரம் மாதிரி. அதனாலதான்’’ என்றேன்.

அதற்கு அவர் ‘’அதுமட்டுமல்ல, முதலமைச்சர் வாழ்கன்னு சொன்னா அது பதவியை வாழ்த்தற மாதிரி, எம்.ஜி.ஆர். வாழ்கன்னு சொன்னாதான் அவங்களுக்கு என்னை வாழ்த்தற திருப்தி. இதுதான் நான் சம்பாதிச்ச சொத்து. இதைத்தான் நான் பத்திரமா காப்பாத்தியாகணும்!’ என்றார்’. இறுதிவரை சொன்னது போலவே நின்றார்."

புரட்சி தலைவரின் அபிமானி! ............ Thanks.........

orodizli
26th October 2019, 10:52 AM
எல்லோருக்கும் இறைவன் ஆசிர்வாதம்... மக்கள் திலகம் நல்லாசியோடு இனிய " தீபாவளி" திருநாள் நல்வாழ்த்துக்கள்��.........

okiiiqugiqkov
26th October 2019, 07:26 PM
நன்றி திரு லோகநாதன் சார்.

சிவாஜி கணேசன் அவர்களுக்கும் பந்துலுவிற்குமான பிரிவுக்கு மேற்கண்ட பிரச்சனைதான் காரணம்.

இதை நாங்கள் பலமுறை சொல்லியிருக்கின்றோம் ஆனால் உங்கள் பக்கத்திலிருந்து எதிர்மறை கருத்தே பதிவிடப்பட்டது.

எங்கள் பக்கம் இருந்து சொல்லப்பட்ட உண்மை நிலவரத்தை தங்களது மேற்கண்ட பதிவின்மூலம் உறுதிப்படுத்தியமைக்கு

மிக்க நன்றி.(உண்மைகள் எப்பொழுதும் உறங்காது என்றோ ஒரு நாள் விழித்துக்கொள்ளும்)


நன்றி திரு லோகநாதன் சார்.

சிவாஜி கணேசன் அவர்களுக்கும் பந்துலுவிற்குமான பிரிவுக்கு மேற்கண்ட பிரச்சனைதான் காரணம்.

இதை நாங்கள் பலமுறை சொல்லியிருக்கின்றோம் ஆனால் உங்கள் பக்கத்திலிருந்து எதிர்மறை கருத்தே பதிவிடப்பட்டது.

எங்கள் பக்கம் இருந்து சொல்லப்பட்ட உண்மை நிலவரத்தை தங்களது மேற்கண்ட பதிவின்மூலம் உறுதிப்படுத்தியமைக்கு

மிக்க நன்றி.(உண்மைகள் எப்பொழுதும் உறங்காது என்றோ ஒரு நாள் விழித்துக்கொள்ளும்)

சிவா அய்யா

எங்கள் திரிக்கு வந்து விளக்கம் சொன்னதுக்கு நன்றி. அதனால், மீண்டும் உண்மயை விளக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதுக்கும் நன்றி.

மிகப் பெரிய பொருள் செலவு செய்து எடுக்கப்பட்ட கர்ணன் படம் போதுமான லாபத்தை தரவில்லை. பந்துலு நஷ்டம் அடைந்தார். உங்கள் திரியிலியே கூட விநியோகஸ்தர்கள் பொய் கணக்கு காட்டி பந்துலுவை ஏமாற்றி விட்டார்கள் என்று பதிவு போட்டு இருக்கிறார்கள். உங்களுக்கும் நினைவு இருக்கும்.

எப்படியோ பந்துலுக்கு பணம் வரவில்லை. லாபம் கிடைக்கவில்லை.

உங்கள் திரியிலே ஏற்கனவே சொல்லப்பட்டபடி, விநியோகஸ்தர்களால் பந்துலு ஏமாற்றப்பட்டாரே என்னவோ எங்களுக்குத் தெரியாது. ஆனால், அவருக்கு லாபம் கிடைக்கவில்லை. இது உங்கள் திரியிலேயே ஏற்கெனவே ஒப்புக் கொள்ளபட்ட விசயம்.

நாங்களும், பந்துலு நஷ்டப்பட்டார். அதற்கு பின்னர், மக்கள் திலகத்தை வெச்சு ஆயிரத்தில் ஒருவன் படம் எடுத்து லாபம் பார்த்து நஷ்டத்தில் இருந்து மீண்டார் என்றுதான் கூறுகிறோம்.

மற்றபடி, பந்துலு உங்களை விட்டு பிரிவதற்கு கர்ணன் பட நஷ்டம்தான் காரணம் என்று நாங்கள் கூறவில்லை.

அப்படி அதனால் 2 பேரும் பிரிஞ்சிருந்தால் அப்புறம் முரடன் முத்து படத்தை எடுத்து இருப்பாரா?

இது கூட எங்களுக்குத் தெரியாதா.

நன்றி.

சிவா அய்யா,

உங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள். மக்கள் திலகம் ரசிகரான உங்கள் அண்ணன் பெரிய அய்யாவுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

okiiiqugiqkov
26th October 2019, 07:27 PM
திரி நெரியாளர்கள், பதிவாளர்கள், பார்வையாளர்களுக்கும்


மக்கள் திலகத்தின் ரத்தத்தின் ரத்தங்களுக்கும்

தீபாவளி வாழ்த்துக்கள்.

fidowag
27th October 2019, 12:35 AM
நண்பர் திரு.சிவானந்தன் அவர்களுக்கு வணக்கம் .

எனது பதிவுகளுக்கு பாராட்டுக்கள் தெரிவித்ததற்கு நன்றி.

தங்களின் விளக்கமும் உங்கள் சொந்த கருத்து. வாதிடவில்லை.. அதுபற்றி பலவிதமான கருத்துக்கள் நண்பர்கள் பதிவு செய்கின்றனர் .உண்மை நிலவரம் பந்துலுக்கே தெரியும். மேற்கொண்டு கருத்து சொல்ல விருப்பமில்லை .

தங்களின் நண்பர் , அகஸ்தியாவில் தரம் கெட்ட படங்களை தொடர்ந்து வெளியிட்டு* அரங்கின் புனிதமே கெட்டுவிட்டது . அதை* ராஜா சரி செய்வார் என்று தரம் தாழ்ந்து பதிவிடுவது சரியா .தரமான படங்கள் (தங்கள் நண்பரின் கூற்றுப்படி )ஒரு சில வெளியாகி தரம் இல்லாத வசூல் பெறுகிறது என்பது அவருக்கு தெரியுமா தரம் கெட்ட* படங்கள்தான் (நண்பர் கூற்றுப்படி ) தரமான வசூலை பெறுகின்றன .எனவேதான் விநியோகஸ்தரும்,அரங்க மேலாளரும் தொடர்ந்து எங்கள் தலைவரின் படங்களை அதிகம் வெளியிடுகிறார்கள். வெளியிடுவார்கள் .,

எங்கள் தலைவரின் வசனம் : எதிரி கூட சமமாக இல்லையென்றால் அலட்சியப்படுத்துகிறவன் நான் . அதுபோல நாங்கள் தங்களின் நண்பரின் வார்த்தைகளை அலட்சியம் செய்கிறோம் .*

மேலும் எங்க வீட்டு பிள்ளை 1965ல்* 7 அரங்குகளில் வெள்ளிவிழா சாதனையை*1979ல் தான் திரிசூலம் 8 அரங்குகளில் வெள்ளிவிழா கண்டு முறியடித்தது .11 அரங்குகள் என்பது தவறான செய்தி .

ஞான ஒளி - பிளாசா 104, பிராட்வெ 69, சயானி 69, கமலா 56, தமிழ் நாடு 20 நாட்கள் என்பது சரி. ஆனால் உங்கள் பதிவில் பிளாசா 104, பிராட்வெ 76, சயானி 76, கமலா 69 , தமிழ்நாடு 41 என்று பதிவு ஆகியுள்ளது.* நாடோடி மன்னன் பற்றி கருத்து கூறும் தாங்கள் இதற்கு என்ன பதில் தர போகிறீர்கள். உண்மை தகவலை பதிவிடுங்கள் என்று கேட்டு கொள்கிறேன் . நன்றி .

உங்களுக்கும் ,உங்கள் சகோதரர் திரு.சுதானந்தன் அவர்களுக்கும் எனது சார்பிலும், மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் சார்பிலும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் .




*

fidowag
27th October 2019, 02:08 AM
நண்பர்கள் திரு.மஸ்தான் சாஹிப், திரு.சுந்தர பாண்டியன் அவர்களுக்கு வணக்கம்.*நீண்ட நாட்களுக்கு பிறகு திரியில் சந்திக்கிறேன்.*

இருவருமே தங்களின் தொடர்பு எண்ணை என்னிடமோ, அல்லது திரு.சுகாராம் அவர்களிடமோ தெரிவித்தால் விளக்கங்கள், சந்தேகங்கள் தீர்த்து கொள்ள ஏதுவாக இருக்கும் .

தங்களின் சுவாரஸ்யமான பதிவுகளை வரவேற்கிறேன்.*இருவருக்கும் , மற்றும் ஏனைய பதிவாளர்கள், பார்வையாளர்கள், நண்பர்கள், அன்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் .

fidowag
27th October 2019, 02:10 AM
எனது 27,000* பதிவுகளுக்கு நேரிலும், கைபேசியிலும் , வாட்ஸ் அப்பிலும் , மய்யத்திலும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து* நல்ல இதயங்களுக்கும்* இதயங்கனிந்த நன்றி .

orodizli
27th October 2019, 02:25 AM
திரையில் வீரம், நிஜத்திலும் , வீரம் அதுவே எம். ஜி. ஆர் .,.........
ராகவேந்திரா மண்டபம் கட்டிய போது ஒரு பெரும்புள்ளி இடைஞ்சலான போது நான் பல மேல்மட்டத்தையும் அணுகியும் நடக்கவில்லை கடைசியில் எம் ஜி ஆரிடம் போய் சொல்லி விட்டு சென்று பார்த்த போது பெரும் புள்ளி எம் ஜி ஆர் முன் கைகட்டி நிற்ப்பதை பார்த்தேன் அது தான் எம் ஜி ஆர் அவர் ஒரு தெய்வப்பிறவி இப்படி கூறியவர் ரஜினி காந்து

இறைவனிடம் முறையிட்டாலும் நிறைவேற்ற சிறு தாமதம் ஆகலாம் ஆனால் என் அன்பு தெய்வம் எம் ஜி ஆரிடம் முறையிட்டால் உடனே நடக்கும் இப்படி கூறியவர் சரோஜா தேவி
ஜெனநாயக நாட்டில் ஒரு மன்னனாக வாழ்ந்தவர் எம் ஜி ஆர் இப்படி கூறியவர் எம் என் நம்பியார்

எம் ஜி ஆரை வென்றவர் இல்லை
நினைத்ததை முடிப்பவர் எம் ஜி ஆர்
எந்த கொம்பனும் எம் ஜி ஆர் முன் தலை வணங்குவான்

எம் ஜி ஆர் நல்லவனுக்கு நல்லவனாக
கெட்டவனுக்கு அவன்வழியிலே நல்வழி காட்டிய மாவீரன்

வாழ்க எம் ஜி ஆர் புகழ்.......... Thanks.........

orodizli
27th October 2019, 02:42 AM
நமது தோழர்கள் மாற்று முகாம் நண்பருக்கு உண்மையான, நடந்த விடயங்களை பூசி மொழுகாமல் உள்ளதை தெரிய படுத்துவதில் எந்த தவறுமில்லை... அவர்களின் அபிமான நடிகரே 1970ம் வருடம் 140 படங்களில் நடித்து வெளியான பின் ரசிகர் மன்ற ஆல்பத்தில் கர்ணன் பட comment செய்யும்போது ' பிரமாண்ட தயாரிப்பு என்றாலும் எதையோ கோட்டை விட்டு விட்டோம்' என்று பதிவு போட்டதை சிலர் அறியாமல் இருக்கலாம்.. அதே ஆல்பத்தில் சிவந்த மண் பட பதிவில், 'அள்ளி அள்ளி தந்த மக்களுக்கு ஆனந்ததால் கண் சிவந்தது', என்றும் பதிவு செய்திருப்பார்.. அந்த தகவல் வேண்டுமானால் அந்த பட தயாரிப்பாளர் மூலமாக தவறாக கிடைத்திருக்க வாய்ப்புள்ளது.. ஏனெனில் மக்கள் திலகம் போன்று எல்லா விடயங்களிலும் அவர்கள் நடிகர் update கிடையாது என்பதும் பலரும் அறிந்ததே...... Thanks...

orodizli
27th October 2019, 02:44 AM
தினத் தந்தி ...

இது குறித்து நான் முன்பே பதிவு செய்துள்ளேன்.

ஊமையன் கோட்டை

நேற்று தினத் தந்தியில் "புரட்சித் தலைவர் கண்ணதாசன் கருத்துவேறுபாடு" படித்தேன். அதில் வந்த செய்தி உண்மையா இல்லையா என்பது எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்த உண்மையை/படித்ததை சொல்கிறேன் :

புரட்சித் தலைவர் அவர்களை "தானாக முன்வந்து நான் ஊமைத்துரை பாத்திரத்தில் நடிக்கிறேன்" என்றார். படத்துக்கு பைனான்ஸ்/ நிதி வேணுகங்கா பிலிம்ஸ் ...திரு. சிங்காரம் செட்டியார். மிகவும் கண்டிப்பானவர்.

படத்தின் இயக்குனர் இலங்கைவாசியும் பல சிங்கள படங்களை டைரக்ட் செய்த மஸ்தான். இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி - இரண்டு பாடல்கள் பதிவு செய்யப்பட்டன. நெப்ட்டுனே ஸ்டுடியோவில் சின்னமருது பெரிய மறுத்து தர்பார் செட் போடப்பட்ட 'சாந்துப் பொட்டு தளதளக்" ஷூட்ஜிங் நடைபெற்றது.........

இந்த காலத்தில் திரு. ரங்கசாமி அவர்கள்தான் புரட்சித் தலைவருக்கு மேக்கப் போடுவார். "விக்" செய்யும் விஷயமாக திரு. செட்டியார் அவர்களை அணுகினார். செட்டியார் அவர்கை மொன்று நாங்கள முறை சாக்குபோக்கு சொல்லி அலையவிட்டார். தலைவரிடம் ரங்கசாமி விவரத்தை சொன்னார். தொலைபேசியில் தலைவர் செட்டியாரிடம் பேசினார் .....இருவருக்கு பெரிய தகராறு.

செட்டியார் பைனான்ஸ் தர முடியாது என்று சொல்லிவிட்டார். ஊமையன் கோட்டை படம் நின்றுவிட்டது. "சிவகங்கை சீமை" படத்தில்
'சாந்துப் பொட்டு தளதளக்" என்று பாடலை பார்க்கலாம்.

புரட்சித் தலைவர் கவிஞரை அழைத்து சமாதானப்படுத்தி அடுத்த படம் பண்ணித்தருவதாக சொல்லி அனுப்பினார்.

ஆகா படம் நின்றதற்கு "பைனான்சியர்"/"விக்" தான் காரணம். இது எனக்கு தெரிந்த தகவல்.

நன்றி. ������... Thanks mr.SB.,

orodizli
27th October 2019, 02:49 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றியும் மக்கள் திலகம் எம்ஜிஆரின் சாதனைகளை பற்றியும்
சமூக வலை தளங்கள் , முகநூல் , வாட்ஸ் ஆப் மற்றும் எம்ஜிஆர் குழுக்கள் போன்ற இணைய தளத்தில் பலரும் உண்மைக்கு மாறான செய்திகளையும் , தவறான தகவல்களையும் ,பதிவிட்டு வருகிறார்கள் . குறிப்பாக சரியாக படிக்காமல் மற்றவர்களுக்கும் அனுப்பி வைக்கிறார்கள் . இது வருந்தத்தக்கது .
அதே போல் நடிகர் சிவாஜி கணேசனின் சாதனை என்ற பெயரில் பொய்யான பல செய்திகளை பரப்பி வருகின்றனர் .

ஆதார பூர்வமாக பத்திரிகைகளில் வந்த விளம்பரம் ஒன்றுதான் நம்பக தன்மை கொண்டது .

நாடோடிமன்னன்
எங்க வீட்டுப்பிள்ளை
காவல்காரன்
அடிமைப்பெண்
நம்நாடு
மாட்டுக்காரவேலன்
ரிக்ஷக்காரன்
உலகம் சுற்றும் வாலிபன்
மேற்கண்ட எம்ஜிஆரின் படங்கள் வசூல் விபரத்தோடு விளம்பரங்கள் வந்தது . இதுதான் உண்மையான ஆதாரம் .

சென்னை நகரில் 10 லட்சம் வசூல் செய்த முதல் படம் 1965ல் "எங்க வீட்டுப்பிள்ளை "...
சென்னை நகரில் 1977 வரை வசூலில் முதலிடம் இருந்த படம் 1973ல் "உலகம் சுற்றும் வாலிபன் ."

தென்னிந்திய திரை உலகின் வசூல் மன்னன் , வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர் ., என்பதை உலகமறிந்தது .........
தென்னிந்திய திரை உலகின் அதிகம் சம்பளம் வாங்கியவர் எம்ஜிஆர் .
ஏராளமான மன்றங்கள் , ரசிகர்களை பெற்று இருந்தவர் எம்ஜிஆர் .
சாதனைகளின் சிகரத்தில் இருந்தவர் ...இருக்கிறவர் ,,இருக்கப்பபோகிறவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் என்பதை அறிவோம் . நிஜத்திலும் அதற்கு தகுதியாகி முறையாக நிரூபித்து காட்டிய மஹான்...
தவறான பதிவுகளை யாருக்கும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் .
தவறான பதிவுகளை புத்தகத்தில் அச்சிட வேண்டாம் .
சந்தேகம் இருப்பின் மூத்த எம்ஜிஆர் விசுவாசிகளிடம் பேசி பகிர்ந்து கொள்ளலாம்

எம்ஜிஆர் ரசிகர்களே
தவறான செய்திகளை ஆராய்ந்து பாராமல் பதிவிடுவதை நிறுத்தவும் .
எம்ஜிஆரின் நடிப்பின் ஆளுமைகளை உங்கள் பார்வையில் விரும்பிய காட்சிகளை அழகாக எழுதி பதிவிடவும் .......... Thanks.........

orodizli
27th October 2019, 10:03 AM
கலைப் பேரரசர் எம்ஜிஆர், அஷ்டாவதானி பானுமதி ராமகிருஷ்ணா, விஜயகுமாரி, எஸ்எஸ் ராஜேந்திரன், எம் ஆர் ராதா, முத்துகிருஷ்ணன், அசோகன், திருப்பதி சாமி, டி ஏ மதுரம், ஜி சகுந்தலா, மனோரமா, நளினி, மாலா, எஸ் ராமராவ், செந்தாமரை, பெங்களூர் பச்சையா மற்றும் பலர் நடித்த மாபெரும் பல்லவர் சரித்திர திரைப்படம் காஞ்சித்தலைவன் இன்றோடு(26-10-1963) இந்த படம் வெளியாகி 56 வருடங்களை கடந்து மக்கள் உள்ளத்தில் நிலைத்திருக்கும் மாமல்லன் நரசிம்ம பல்லவர் (எம்ஜிஆர்) இன் மகத்தான வெற்றி காவியம். பாடல்கள் அத்தனையும் அருமை குறிப்பாக, (கண் கவரும் சிலையே), (மயங்காத மனம் யாவும் மயங்கும்), (ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா), (மக்கள் ஒரு தவறு செய்தால்), இவை யாவும் மிகவும் சிறப்புடன் தேமாங்கனி ஆக இனிக்கும். அனல் பறக்கும் சண்டை காட்சிகள் நெஞ்சை புல்லரிக்கச் செய்யும். பெங்களூர் பச்சைyavudan எம்ஜிஆர் மல்யுத்தத்தில் வெற்றி பெறுவார். இதில் பச்சையா தான் படத்தில் நடிக்கவும் என்பதை மறந்து தாறுமாறாக நடந்துகொள்வார். ஆனால் எம்ஜிஆர் எப்பேர் பட்ட பயில்வான் என்றாலும் தோற்கடித்து விடுவார். ஆதலால் எப்படியும் பச்சையாvai வெற்றிக் கொள்வார் எம்ஜிஆர். எம்ஜிஆர் பானுமதியின் அபாரமான நடிப்பு சிறப்பானது. படத்திற்கு மெருகூட்டுகிறது............. Thanks.........

orodizli
27th October 2019, 10:06 AM
அனைவருக்கும் இனிய " தீபாவளி" திருநாள் நல்வாழ்த்துக்கள்... என்றும் வாழ்க வளமுடன்...

orodizli
27th October 2019, 10:07 AM
எம்.ஜி.ஆர் பக்தர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.இச்சூழலில் புரட்சித்தலைவரின் இரட்டைஇலை நாங்குநேரி விக்ரவாண்டி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம்.இதற்கு உழைத்த EPS &OPS அண்ணன்களுக்கும் அவர்களுடன் உழைத்த அனைத்து கழக உடன்பிறப்புகளுக்கும் எம்.ஜி.ஆர் பக்தன் என்ற முறைக்கு நான் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதில் ஒரு சூட்சுமமும் உள்ளது.ஆளும் அரசு பல வசதிகள் ..........செய்தது.இருப்பினும் ஒரு கூடுதல் அம்சம் இரட்டை இலைக்கு வோட்டு போட்ட 20000க்கும் மேற்பட்ட எம்.ஜி.ஆர் பக்தர்கள்.வசதிகள் போக உள்ள சுத்தியுடன் வோட்டு போட்டவர்கள்.காரணம் சைதயார் இந்த தேர்தல் பிரச்சார காலங்களில் தினத்தந்தி TV ல் 7 எபிஸோடு நம் தலைவன் எம்.ஜி.ஆர் மற்றும் அவர் காமராஜரை எப்படி மதித்தார் என்று மிக விலாவாரியாக விவரித்து அந்த எபிசோடில் சொன்னார்.நாங்குநேரி கணிசமான காங்ரஸ் ஒட்டு வங்கி.அதில் சில அனுதாபிகள் எம்.ஜி.ஆர் இந்த அளவுக்கு காமராஜரை மதித்தார் என்ற மகிழ்வில் நமக்குவோட்டு கிடைத்தது என்ற நிலை உள்ளது.ஏனெனில் நாங்குநேரி காங்ரஸ் முக்கியஸ்தர்கள் சைதயாரிடம் இது குறித்து முக்கால்மணி நேரம் நேரடியாக பேசியுள்ளனர்.சோர்வுடன் இருந்த எம்.ஜி.ஆர் பக்தர்களுக்கு சைதயாரின் 7 எபிஸோடு பேச்சு நமக்கு மிக்க உந்துதலாக இருந்தது என்பதை மறக்க முடியாது.நாங்குநேரி மக்கள் நிறைய பேர் தந்தி TV பிரியர்கள்.அதனால் சைதயாரின் 7 எபிசோடின் பேச்சு அவர்களை ஈர்த்தது என்பது மறுக்க முடியாத உண்மை.ஆக நாம் சைதயாருக்கும் நன்றி சொல்லவேண்டும்........... Thanks...........
.

orodizli
27th October 2019, 11:59 PM
எந்தக் கட்சி வரலாற்றிலும் இல்லாத அளவு 300 க்கும் மேற்பட்ட சாதாரணத் தொண்டா்களை ,

அமைச்சா்களாக உயா்த்திய இயக்கம் .........அஇஅதிமுக !............ Thanks.........

orodizli
28th October 2019, 12:00 AM
https://youtu.be/dXvvFDzvTIc.......... Thanks...

orodizli
28th October 2019, 12:01 AM
https://www.facebook.com/100028116634723/posts/421844205429464/?sfnsn=scwspwa&d=w&vh=i&funlid=35FecXTGA4PwvQAy....... Thanks...

orodizli
28th October 2019, 12:03 AM
https://www.facebook.com/groups/ROSAIAH/permalink/1234946653344746/?sfnsn=scwsppmo......... Thanks...

orodizli
28th October 2019, 12:05 AM
எழுத்தாளர் மாலனின் வலைப்பூ

தொப்பியும் இல்லாமல், கண்ணாடியும் அணியாமல் என் முன்னே உட்கார்ந்திருந்தார் எம்.ஜி.ஆர். ஒரு நாள் முழுக்க அவரோடு இருந்து அவரது அசைவுகளை எழுதுவதற்காக நான் அவர் அறையில் அமர்ந்திருந்தேன்.காலையில் எழுந்து பல்துலக்கியதுமே ராமாவரம தோட்டத்திற்குப் போய் அவரோடு அவருடைய காரிலேயே கோட்டைக்கும் போய்விட்டு மதியச் சாப்பாட்டிற்கு திநகர் ஆற்காடு (முதலியார்) வீதிக்குத் திரும்பியிருந்தோம். எம்ஜிஆர் சாப்பிடத் தனது அறைக்குப் போனார். எங்களுக்குக் கீழே சாப்பாடு ஏற்பாடாகியிருந்தது.

அவரது ஆற்காடு முதலி வீட்டில் (இப்போது நினைவகம் இருக்கிறது) அவர் இருந்த காலத்தில், தினம் மதியம் 100 பேராவது சாப்பிடுவார்கள்.அது சாப்பாடு இல்லை. விருந்து. ராமவரத்திலும் காலையில் ஒரு 50 60 பேராவது சாப்பிடுவார்கள்.பகல் 12 மணியிலிருந்து மதியம் இரண்டு இரண்டரை மணி வரைக்கும் யாரைப்பார்த்தாலும், அலுவலக உதவியாளர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், சந்திக்க வருகிற பார்வையாளர்கள், லி·ப்ட் இயக்குநர். கார் டிரைவர், என யாரைப் பார்த்தாலும் 'சாப்பீட்டீங்களா?' என்பதுதான் அவரது முதல் கேள்வியாக இருக்கும்.

சாப்பிட்டுவிட்டு மேல அவரது அறைக்கு வந்த என்னைப் பார்த்து "சாப்டீங்களா?" என்றார். "ஆச்சு" " என்ன சாப்டீங்க? சைவமா அசைவமா?" என்று கேட்டு "ஓ! நீங்க அசைவம் சாப்பிட மாட்டீங்கல்ல?" என்று அவரே பதிலும் சொல்லிக் கொண்டார். என்ன மெனு என்று சொல்லச் சொன்னார். ஏதாவது ஒன்றிரண்டை விட்டு விட்டேனோ என்னவோ, வெடுக் என்று கையைப் பறித்து உள்ளங்கையை முகர்ந்து பார்த்தார். "ஸ்வீட் சாப்டீங்களா? என்ன ஸ்வீட்?" என்றார். எங்களுக்கு அன்று ஸ்வீட் பரிமாறப்படவில்லை. நாங்களும் அதைப் பொருட்படுத்தவில்லை. சாப்பிடுவதற்கா போயிருக்கிறோம்? கோட்டையிலிருந்து திரும்பும் போதே இரண்டு மணி இருக்கும். அதற்குள் பல பந்திகள் முடிந்திருந்தன. ஸ்வீட் தீர்ந்து போயிருக்கலாம். எங்கள் மெளனத்தைப் பார்த்துவிட்டு காலின் கீழ் இருந்த அழைப்பு மணியை அழுத்தினார். அவர் அதற்கான விசையை அங்கேதான் வைத்திருந்தார். உதவியாளர் வந்தார்." "இவங்களுக்கு சாப்பாட்ல ஸ்வீட் போட்டீங்களா?" என்றார். உதவியாளர் எங்கள் முகத்தைப் பார்த்தார். 'போட்டுக் கொடுத்திட்டீங்களா? பாவிகளா?" என்பது போல இருந்தது அவர் பார்வை. மெளனமாக இருந்தார். ஒரு நிமிடத்தில் எம்.ஜி.ஆரின் முகம் சிவந்து விட்டது,
"இப்படித்தான் தினமும் இங்கே நடக்குதா?" என்று இறைந்தார். "எத்தனை நாளா இப்படி நடக்குது/" என்றார் மறுபடியும். உதவியாளர் ஸ்வீட் தீர்ந்து போன நிலையை விளக்க முயன்றார்." அதெல்லாம் எனக்குத் தெரியாது. இப்ப இவங்களுக்கு ஸ்வீட் வரணும் என்றார். சிறிது நேரத்தில் ஒரு பெரிய தூக்குவாளி நிறைய ஒரு லிட்டர் பாசந்தி வந்தது. அதை அப்போதே நாங்கள் சாப்பிட்டாக வேண்டும் என வற்புறுத்தினார்.

ஏன் சாப்பாடு சாப்பாடு என வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார் என்று எனக்குள் ஒரு கேள்வி. அவருடைய சத்துணவுத் திட்டத்தைப் பற்றிப் பேச இதுதான் சந்தர்ப்பம் என்று எனக்குத் தோன்றியது. அந்த திட்டம் பற்றிய விமர்சனங்களை வீச ஆரம்பித்தேன்." மக்களுடைய வரிப்பணத்தை எடுத்து இப்படிச் சோறு போட செலவழிக்க வேண்டுமா? தொழிற்சாலைகள் நிறுவி, மக்களுக்கு வேலை கொடுத்தால் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சோறு போட மாட்
டார்களா?" என்று என் கேள்வியை ஆரம்பித்தேன்.

அதற்கு பதிலாக அவர் தனது இளமைக்கால சம்பவம் ஒன்றை விவரிக்க ஆரம்பித்தார்." அப்போது நான் பாய்ஸ் கம்பெனியில் நடிச்சிக்கிட்டு இருக்கேன். பாய்ஸ் கம்பனினா என்னனு தெரியுமா உங்களுக்கு? (பாய்ஸ் கம்பெனி என்பது ஒரு குழுவாகத் தொழில் முறை நடிகர்களை வைத்து நாடகம் போடும் நிறுவனங்கள். அதில் சிறுவர்கள் நிறைய இருப்பார்கள். வறுமையின் காரணமாகவும், கலை ஆர்வம் காரணமாகவும் வந்து சேரும் சிறுவர்கள். எல்லோரும் ஒன்றாகத் தங்கி, ஒன்றாக உண்டு, ஊர் ஊராகப் போய் நாடகம் போடுவார்கள். சிறுவர்களுக்குப் பயிற்சி அளிக்க வாத்தியார்களும் இருப்பார்கள்) குரல் உடையற வயசு. அந்த வயசில இருக்கிறவனுக்குப் பாடம் கொடுக்க மாட்டாங்க. பாட முடியாதில்ல?. வேஷம் இல்லாதவனுக்கு கம்பெனியில மரியாதை கிடையாது. ஆசிரியர்கள் வேண்டாத மாணவர்களைப் பழி தீர்த்துக் கொள்ள்வதும் அப்போதுதான். வாழ்க்கை பெரிய நரகமாக ஆகிவிடும். ஒரு நாளைக்கு சாப்பிட உட்கார்திருக்கோம். நல்ல பசி. இலை போட்டாச்சு. காயும் ஊறுகாயும் வைச்சுட்டுப் போயிருக்காங்க. சோறு வந்துகிட்டே இருக்கு. என்னை பிடிக்காத வாத்தியார் ஒருத்தர் நான் சாப்பிட உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தாரு. வேகமாக கிட்ட வந்தாரு. ' ஏண்டா உங்களுக்கெல்லாம் முதப் பந்தி கேட்ட்குதா?'னு கையைப் பிடிச்சு எழுப்பிவிட்டார். கையிலசோறு எடுத்து வாயில போடப்போற நேரத்தில எழுப்பிவிட்டா எப்படி இருக்கும்? ஆனா அந்த நேரத்தில எனக்கு பசியைவிட அவமானம்தான் அதிகமாக இருந்தது. 'அவரை எதிர்த்து யாரும் சண்டை போட முடியாது, கேள்வி கேட்க முடியாது, தன் கிட்ட அதிகாரம் இருக்குனு தானே எழுப்பிவிடறாரு?எனக்கு என்னிக்காவது அதிகாரம் வந்தா நாலு பேருக்குச் சோறு போடுவேன், எவன் சோத்தையும் பறிக்க மாட்டேன்'னு அன்னிக்கு நினைச்சேன். இன்னிக்கு எல்லோரும் என்னை வாத்தியார் வாத்தியார்னு கூப்பிடும் போது எனக்கு அவங்களுக்கு சோறு போடற கடமை இருக்குகிற நினைப்பு வருது. அடுத்த வேளைச் சோற்றுக்கு உத்திரவாதம் இருக்கிறவங்க ஏழைகள் சோற்றைப் பற்றி என்ன வேணா கேள்வி கேட்கலாம். எனக்கு அதைப் பற்றி கவலை இல்லீங்க."
இதைச் சொல்லும் போது அவர் குரல் கனமேறிக் கரகரத்தது.
புத்தகங்களில் உள்ள பொருளாதாரத் தத்துவங்களால் விளக்க முடியாததாக இருந்ததுஅவரது சத்துணவுத் திட்டம். ஆனால் இன்று பின்னோகிப் பார்க்கும் போது ஆரம்பக் கல்வி நிலையங்களில் உள்ள மாணவர்கள் படிப்பைப்
பாதியில் நிறுத்திவிட்டு விலகும் விகிதம் (dropout rate) இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் குறைவு. The National University of Educational Planning and Administration (NUEPA) என்ற நிறுவனம் பள்ளிகளைப் பற்றித் தயாரித்த ரிப்போர்ட் கார்டின் படி தமிழ்நாட்டில் Retention rate 100%. Common Man's logic என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அது தத்துவங்களுக்கு அப்பாற்பட்டது .....!.......... Thanks...

orodizli
28th October 2019, 12:08 AM
இவர் கண்ட இயக்கம் வெற்றி பெற்றத்துக்கு கண்டும் காணாதது போல இருந்த அத்துணை எம்ஜியார் போலிகளுக்கும் நன்றி நன்றி...கேட்டா. அம்மா பிடிக்காது என்பார்...ஏதோ இவர்கள் ஆதி காலத்தில் கிணறு வெட்டியது போல் ரசீது எங்கே படம் எங்கே என்றால் இதோ இருக்கு எங்களிடம் எம்ஜியார் படம் என்பார். நான் பார்த்தால் பைத்தியக்காரன். உங்க பாட்டானுக்கும் வைத்தியம் பார்ப்பேன்

எம்ஜியார் அவர்களை 1972 முதல் 1987 வரை உங்களுக்கு பிடித்து இருக்கும் அல்லவா எங்கே ஆதாரம் காட்டு.

சரி அதை விடு எல்லோரும் அரசியல் சார்ந்து இருக்க முடியாது.. ஒரு இடத்தில் ஆவது அவர் நிழல் பட்ட அடையாளம் கூடவா இல்லை... அப்போ

அதைத்தான் கேட்டு குமுறும் எம்ஜியார் பக்தர்கள்... வேண்டாம் விடு...இப்ப ஏன் அவர் கண்ட இயக்கத்தை விமர்சிக்கிறாய்...உங்களுக்கு அந்த உரிமை இருக்கா...

எல்லாம் பிடித்தா நடந்து கொண்டு இருக்கு...அவருக்காக வண்டி ஓடிக்கொண்டு இருக்கு.. இன்னும் ஓடும்...ஏதோ சின்ன பிள்ளை தனமா இருக்கே...உங்கள் நிலை...

ஆதரிக்கும் மனம் இல்லை.. எதிர்த்து நிற்க கூட்டம் கூட்ட நேரம் காலம் இருக்கு.

நடக்கட்டும் பலிக்காது உங்கள் எண்ணம்.
நன்றி

வாழ்க எம்ஜியார் புகழ். திரையிலும்...அரசியல் துறையிலும்....நன்றி........... Thanks...

fidowag
28th October 2019, 12:56 AM
சன் டி.வி.யில் இன்றைய பட்டிமன்ற நிகழ்ச்சி , திரைப்படம் வெற்றி அடைவது பாடல்களினாலா* அல்லது கதையினாலா .----------------------------------------------------------------------------------------------------------------------------

நிகழ்ச்சியில் கவிஞர் பா.விஜய்* பேசியதாவது :

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த பாடல்களை பல கவிஞர்கள் எழுதியுள்ளனர்.குறிப்பாக , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கருத்தாழமிக்க பாடல்களை எழுதி* தானும் புகழ் பெற்று, எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் புகழும், பெருமையும் சேர்த்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வரான பின்பு அளித்த பேட்டியில் ( உண்மை சம்பவம் ) நான் அமரபோகும் முதல்வர் நாற்காலிக்கு நான்கு கால்கள் என்றால் நிச்சயமாக ஒரு கால் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களையே சாரும் என நன்றி பாராட்டினார். அந்த வகையில் ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு பாடல்கள் பெரிதும் உதவின .



நடுவரான திரு. சாலமன் பாப்பையா , பேரறிஞர் அண்ணாவின் வேலைக்காரி திரைப்படத்தை 10 முறைக்கு மேல் பார்த்ததாகவும், தனக்கு மிகவும் பிடித்த பாடல் படகோட்டி படத்தின் , தரைமேல் பிறக்க வைத்தான் என்பதுதான் என்றும், எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு ஏற்படுவதில்லை என்று குறிப்பிட்டார் .

orodizli
28th October 2019, 01:45 AM
https://youtu.be/UwiB7X2VOiQ... Thanks......

orodizli
28th October 2019, 02:10 AM
இன்று 27-10-1962 -27-10-2019 57 ஆண்டுகள் நிறைவடைந்து... 58 ம் வருடம் தொடக்கம்... கலையுலக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் "விக்கிரமாதித்தன்" காவியம் வெளியான திருநாள்... முதல் வெளியீடு... பின்பு மறு வெளியீடுகளிலும் பட்டையை கிளப்பிய வசூல் திலகம்...

oygateedat
28th October 2019, 07:04 AM
https://i.postimg.cc/j5629XVq/dae83b1c-9ba8-47b2-b223-5d7a62165576.jpg (https://postimg.cc/sQX3G5Db)

oygateedat
28th October 2019, 07:05 AM
https://i.postimg.cc/hvPDYRbM/acbedef6-f4c7-4376-8a18-5e8494719b2e.jpg (https://postimg.cc/KkwhKVWg)

oygateedat
28th October 2019, 07:06 AM
https://i.postimg.cc/c1j22NmH/cdb061e1-eaa6-4e2e-a862-5d63c2c18ab2.jpg (https://postimg.cc/5jBsQTDd)

oygateedat
28th October 2019, 07:08 AM
https://i.postimg.cc/fLP2GxYF/d45114a8-4158-42f5-8766-26a078f3a337.jpg

oygateedat
28th October 2019, 07:11 AM
https://i.postimg.cc/xTN8VnVF/b6c71271-30dc-412f-8ed5-1a864e9b46cf.jpg (https://postimg.cc/dLvw8M18)

oygateedat
28th October 2019, 07:14 AM
https://i.postimg.cc/KvQ2WWRs/d74504bc-f115-43ef-85df-9483ab932789.jpg

oygateedat
28th October 2019, 12:55 PM
https://i.postimg.cc/fbpsknP5/IMG-4117.jpg

orodizli
28th October 2019, 01:16 PM
சார் நீங்கள் தினகரன் வெள்ளி மலரில் வந்த
பந்துலு ஏன் அணி மாறினார் என்ற செய்தியை எடுத்துப் போட உடனே கனடாவில் உள்ள சிங்கம் உடனடி குதூகலம் கொண்டு நன்றி நன்றி உண்மையை சொன்னதற்கு என்று கண்கள் பனிக்க சொல்லி விட்டு அடைப்புக் குறிக்குள் உண்மை என்றும் உறங்காது அது என்றேனும் ஒரு நாள் வெளியில் வரும் என்றும் உணர்ச்சி வசப்
பட்டிருக்கிறது பெரிய
உண்மையின் வடிவம்
சத்தியத்தின் மைந்தன்
ஒன்றை மறந்து விட்டார்
இந்த செய்தி ஒரு பொது ஜனப் பத்திரிக்கையில் வெளியான ஒரு செய்தி
அதை திரு. லோகநாதன் சார் எடுத்துப் போட்டார்கள்
அவ்வளவுதான் அவராக
எழுதவில்லை
அந்த பத்திரிக்கையில்
எழுதும் போது நடந்த எல்லாவற்றையும் எழுதுவார்களா? பந்துலு
கர்ணன் படத்தினால் மீளவே முடியாத கடன்
தொல்லைக்கு ஆளானது உண்மை அது மட்டுமல்ல இந்த பிரச்சினை நீறு பூத்த
நெருப்பாக மாறி அதனால் இருவருக்குள்ளும் முட்டல் மோதல் ஆகி
சம்பளப் பிரச்சினையை
காரணம் காட்டி கோர்ட்
நடவடிக்கை எடுக்கப்
போவதாக கணேசன்
கூறியதும் உண்மை இந்த சமாச்சாரங்கள்
எல்லாம் அன்றைய பத்திரிக்கைகளில் வந்ததும் உண்மை கதை வசன கர்த்தா திரு.சண்முகம் அவர்கள்
இதே கர்ணன் படத்துக்கு பந்துலு அவர்களின் உதவியாளராக இருந்தாரா இல்லையா
என்பது இந்த உண்மை
விளம்பிக்கு தெரியுமா?
அதான் தினசரி மெனக்கெட்டு உட்கார்ந்து ஏதாவது ஒரு பொய்யை அவிழ்த்து விடும் இந்த
சத்திய மைந்தனுக்கு
எப்படி தெரியாமல் போனது? சரி எல்லாம்
போகட்டும் இந்த பந்துலு விவகாரத்தை கொஞ்ச நாட்களுக்கு முன்பு இதற்கு முந்தைய
திரிகளில் நம் அன்பர்கள் எழுதிய போது இந்த பாரி, ஓரி, அதியமான் , சிபி சக்கரவர்த்தி வரிசையில் வந்த நடிகரின் ரசிக குஞ்சுகள் விட்டேனா பார் என்று எப்படியெல்லாம் துள்ளிக் குதித்தார்கள்
என்ன என்ன இல்லாத பொய் கதைகளை எல்லாம் அவிழ்த்து விட்டார்கள் என்பது மறந்து போச்சா என்ன?
என்னவோ பந்துலு தலைவரை வைத்து படம் எடுத்தால் மட்டுமே
தலைவர் கஞ்சி குடிக்க முடியும் என்பது போல
தலைவர் வீட்டில் வைத்து பந்துலுவை சிவாசியிடம் இருந்து பிரிக்க சதித் திட்டம் தீட்டப் பட்டது என்றும்
திருமதி. எம். வி. ராஜம்மா என்ற குணச் சித்திர நடிகை மூலம் முயற்சிகள் செய்து கடைசியில் பந்துலுவை
சிவாசியிடம் இருந்து பிரித்து விட்டார் என்று
எழுதியதெல்லாம் கிணற்றுக்குள்ளே போய் விட்டதோ?
உடனே குதித்துக் கொண்டு எம். வி. ராஜம்மா யார் என்று
கேட்டு விடப் போகிறார்
பழைய கதைகள் தெரியாவிட்டால் சென்னை வரும்போது
கன்னிமராவோ அல்லது வேறு பழைய நூலகங்களில் சென்று
1964, 1965 ஆம் வருட பழைய செய்தித் தாள்களைப் படிக்கச்
சொல்லுங்கள்
பின் குறிப்பு: லயோலா கல்லூரியில் பழைய நூலகம் இருக்கும் என்று நினைக்கிறேன்
எதுக்கும் தேடிப் பார்க்கச் சொல்லுங்கள்! ........... Thanks.........

orodizli
28th October 2019, 01:17 PM
சுகாராம் சார், வணக்கம் ... தொடர்ந்து தவறான விபரங்களை பதிவிடுவதிலே குறியாக இருக்கும் இவர்களை என்ன செய்ய?
கௌரவம் படம் குவைத்
நாட்டில் முதன் முதலில்
திரையிடப் பட்ட தமிழ் படமாம் இவர்கள் போய்
பார்த்திருக்கிறார்கள்
1980 க்கு பிறகுதான் இந்தியர்கள் அங்கு போக ஆரம்பித்தார்கள்
அதுவும் முதலில் போனது மலையாளிகள்
இப்படி இருக்க 1975 ம் வருடம் படம் திரையிடப் பட்டதாக பதிவு ஒரு வேளை 1960 இல் எகிப்தில் நடந்த ஆசிய ஆப்பிரிக்க பட விழா மாதிரி குவைத்திலும் நடந்தது போல
பரவாயில்லை படம் திரையிடப்பட்ட போது
நெரிசலை சமாளிக்க முடியாமல் 6 பேர் பலி
மற்றும் ஒட்டகப் படையை கொண்டு வந்து கூட்டத்தை சமாளித்தார்கள் என்று
எழுதாமல் போனது உத்தமம்.
கஷ்டம்!.......... Thanks...

orodizli
28th October 2019, 01:21 PM
நேற்று தலைவர் காவியங்கள் மதுரை, கோவை, தூத்துக்குடி இடங்களில் வசூல் சூப்பர் என தகவல்கள்... மன்னன் மார்ந்தாண்டன் 100000.00 (ஒரு லட்சம்) ரூபாயை தாண்டியதாக தகவல்...

orodizli
28th October 2019, 04:41 PM
https://youtu.be/N0P1Tbm3A7g.......... Thanks.........

orodizli
28th October 2019, 05:02 PM
மதுரை சென்ட்ரல் DTS., சினிமாவில் வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின்
"நாடோடி மன்னன்" காவியங்களின் திலகம்... முதல் மூன்று நாட்களில் ரூ.1,00,000/- மேல் வசூல் ஈட்டி அசுர சாதனை...... இதுவரை வெளியான அனைத்து பழைய படங்களின் வசூலை முறியடித்து சாதனை, சரித்திரம் ,சகாப்தம், படைத்துள்ளது............. Thanks mr.Loganathan...

orodizli
28th October 2019, 05:04 PM
தகவல் உதவி மதுரை நண்பர் திரு.எஸ். குமார் ...
தூத்துக்குடி சத்யா அரங்கில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் நினைத்ததை மு டிப்பவன் ஞாயிறு (27/10/2019) மாலை காட்சி அரங்கு நிறைந்தது ..........என்று நெல்லை நண்பர் திரு.ராஜா .......தெரிவித்தார் ....... Thanks...

orodizli
28th October 2019, 05:06 PM
இந்தவருடம் தீபாவளி மதுரை சென்ட்ரல்சினிமா டி.டி.எஸ் புரட்சித்தலைவர் நடித்த நாடோடிமன்னன் சென்னை சரவணா பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களின் நினைத்ததைமுடிப்பவன் கோவை சண்முகா. கலைக்கடவுள் எம்ஜிஆர் அவர்களின் ஆயிரத்தில்ஒருவன் கோவை.டிலைட் மக்கள்திலகம் எம்ஜிஆர் அவர்களின் ரிக்சாக்காரன் தூத்துக்குடி சத்யா மணிதமகான் எம்ஜிஆர் அவர்களின் நினைத்ததைமுடிப்பவன் திரையிட்ட திரையரங்க உரிமையாளர்கள் திரைப்பட விநியோகஸ்தர்கள் கண்டுமகிழும் அனைத்து ரசிகப் பெருமக்களுக்கும் மதுரை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் மதுரை.எஸ் குமார்......... Thanks...

orodizli
28th October 2019, 10:33 PM
https://m.facebook.com/groups/305988912907196?view=permalink&id=1254048011434610&sfnsn=scwspwa&funlid=S8wqHQO7MTIQjHAs........... Thanks.........

orodizli
28th October 2019, 10:37 PM
எங்க வீட்டு பிள்ளை வெள்ளி விழா

அன்றைய தமிழக முதல்வரிடம் மக்கள் திலகம் பரிசு பெறும் காட்சி

மக்கள் திலகத்தின் அரசியல் நாகரீகம் பற்றிய ஒரு தகவல் .

மக்கள் திலகம் அமெரிக்காவிலிருந்து தமிழகம் திரும்பியபின்னர் அவரை சந்திக்க முன்னாள் தமிழக முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திரு பக்தவச்சலம் அனுமதி கேட்டிருந்தார். இந்த செய்தியினை அறிந்தவுடன் மக்கள் திலகம் உடனடியாக தானே வந்து அவரை சந்திப்பதாக கூறி உடனே சென்று திரு பக்தவச்சலம் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் .

மக்கள் திலகம் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் அரசியல் நாகரீகத்தை கடை பிடித்த விதம்
வியக்க வைக்கிறது . ......... Thanks...

orodizli
28th October 2019, 10:42 PM
இன்றும் திங்கள்கிழமை ரசிகர்கள் கூட்டத்தில் நாடாண்ட மன்னவன் எம்.ஜி.ஆர்., அவர்களின் "நாடோடி மன்னன்", மகத்தானவெற்றி மகிழ்ச்சியில் மதுரை எஸ் குமார்........ Thanks...

oygateedat
29th October 2019, 02:15 AM
நானும் எனது புதல்வரும் கோவை சண்முகா
திரையரங்கம் சென்று ஆயிரத்தில் ஒருவன்
காவியத்தை (மதியக்காட்சி)
கண்டு மகிழ்ந்தோம். அப்பொழுது எடுத்த
சில படங்கள் -

https://i.postimg.cc/G22MdYXy/IMG-4145.jpg (https://postimg.cc/QB2gqBG8)

oygateedat
29th October 2019, 02:19 AM
https://i.postimg.cc/nhHjD4Nj/IMG-4142.jpg (https://postimg.cc/w7GjKmqg)

oygateedat
29th October 2019, 02:21 AM
https://i.postimg.cc/0NjTXNz5/IMG-4136.jpg

oygateedat
29th October 2019, 02:23 AM
https://i.postimg.cc/MG17S7M9/IMG-4143.jpg

oygateedat
29th October 2019, 02:24 AM
https://i.postimg.cc/4NzHnfN3/IMG-4128.jpg

oygateedat
29th October 2019, 02:25 AM
https://i.postimg.cc/YqbkdZd3/IMG-4137.jpg (https://postimg.cc/ZCB1R7tB)

oygateedat
29th October 2019, 02:30 AM
https://i.postimg.cc/G22MdYXy/IMG-4145.jpg (https://postimg.cc/QB2gqBG8)

orodizli
29th October 2019, 03:25 AM
https://youtu.be/_ZzxWtdWvxg.......... Thanks...

orodizli
29th October 2019, 03:25 AM
https://youtu.be/jAoCsL6g96c......... Thanks...

orodizli
29th October 2019, 03:26 AM
https://youtu.be/bp_unnrnvzE......... Thanks...

orodizli
29th October 2019, 03:27 AM
நடிகர் விஜய் நடித்த "பிகில்"படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் பாடலான "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே",விஜய் காரில் பயணம் செய்யும் போது இடைவிடாமல் ஒலிக்கின்றது.தொடர்ந்து ஒரு சண்டை காட்சியின் போது ,அதே பாடலை தன் வாயால் பாடுகிறார். இடையில் நமது தலைவரின் ஸ்டில் (தர்மம் தலை காக்கும்)சில நொடிகள்
காண்பிக்கப்படுகிறது........... Thanks...

orodizli
29th October 2019, 03:29 AM
https://youtu.be/pA-ji5PhOFs........... Thanks...

orodizli
29th October 2019, 03:29 AM
https://youtu.be/FrnfoqC6VrA......... Thanks...

orodizli
29th October 2019, 07:03 PM
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 32.

18, 2. 1966. அன்று தான் முகராசி படம் வெளிவந்து வெற்றி வாகை சூடியது.
13, நாட்களில் எடுக்கப்பட்டு 100 நாட்கள் மேல் ஒடிய வசூல் சாதனையை எட்டியது. .
படத்தின் பூஜையில் கலந்துக்கொண்ட சின்னப்பர் தேவர் அதன் பிறகு உடல் நிலை சரியில்லை என்பதால் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ,தான் நடிக்க வேண்டிய காட்சிகளில் மட்டும் நடித்து விட்டு ஒய்வு எடுத்துக்கொணாடார். முமு படப்பிடிப்பும் வாத்தியாரே அருகே இருந்து .இயக்குனராக படபிடிப்பு நடத்தினார்.படத்தின் எடிட்டிங் வாத்தியார் தான் கவனித்தார். சிறிது ஓய்வு இல்லாமல் இரவும் பகலும் அயராது உழைத்து படம் முமுவதும் எடுத்து முடித்தார். .இன்னும் சொல்லனும் என்றால் படத்தில் அனைத்து தொழில் நுட்பமும் வாத்தியார்தான் கவனித்தார். இதில் என்ன வேடிக்கை என்றால் வாத்தியார்க்கும் உடல் நிலை சரியில்லை சூழ்நிலையிலும் முமு படத்தையும் எடுத்து முடித்தார். .உண்மையான உழைப்பு ஒரு நாளும் வீண் போகாது. .அதன் பலன் வெற்றியைத்தான் கொடுக்கும் என்பதற்கு இப்படம் ஒர் உதாரணம் ஆகும். ..

ஜெயலலிதா பொம்மை மாத இதழில் கொடுத்த பேட்டியில்..இது வரை நான் நடித்த படங்களிலேயே அதிக அளவில் கஷ்டப்பட்டு உழைத்தது. முகராசி படத்துக்குதான்.அந்த படத்திற்காக இரவும் பகலும் அயராது உழைத்தேன். என்னைவிட எம் ஜி ஆர் அவர்கள் அனைத்து வேலைகளையும் தன் வேலையை என எண்ணி உழைத்த உழைப்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை. தனது சொந்த படத்துக்காக கூட ஓய்வு இல்லாமல் உழைத்திருக்க மாட்டார். .அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் தனது சொந்த படமாக நினைத்துத்தான் உழைக்கிறார். என்பதை முகராசி படபிடிப்பில்தான் கண்டேன்.எத்தனையோ சூழ்நிலைகளுக்கு மத்தியில் இதை செய்கிறார் என்றால் மிகவும் ஆச்சரியமான விஷயம் ஆகும். . அவரை வாத்தியார் என்று அழைக்கப்பட்ட காரணம். முகராசி படபிடிப்பில்தான் கண்டேன். .அனைத்து தொழிலுக்கும் ஒரு வாத்தியாரா இருந்து கற்றுக்கொடுக்கிறார். படத்தில் எனக்கும் அவர்தான் வாத்தியாரா இருந்து கற்றுக் கொடுப்பார். .எல்லா மனிதர்களுக்கும் எல்லாம் பட்டமும் பொருந்தாது. ஆனால் எம் ஜி ஆர் ஒருவர்தான் அனைத்து பட்டங்களுக்கும் பொருத்தமாக வாழ்ந்தார். பொருந்தியது. இது வேறு யாரிடமும் காண முடியாத அதிசயம் ஆகும். என்று பேட்டியில் கூறியுள்ளார். ..

ஜெமினி கணேசன் வாத்தியாருடன் நடித்த ஒரே திரைப்படமாகும். .நடிகை ஜெயந்தி வாத்தியாருடன் நடித்த இரண்டாவது படம் ஜெயலலிதா வாத்தியாருடன் தேவர் பிலிம்ஸ் சார்பில் 6 படங்களில் நடித்தார் அதில் 100 நாட்கள் மேல் ஒடிய ஒரே திரைப்படம் இதுதான். இப்படத்தின் வசூலும் வெற்றியும் சின்னப்பர் தேவர் மகிழ்ச்சியில் பூரிப்படைந்தார். .வாத்தியாரை மனித வடிவில் முருக கடவுளாக கண்டார். அதற்காக வாத்தியாரை வேடத்தில் காண ஆசைப்பட்டார். தனது ஆசையை தனது அடுத்த படத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று உறுதியாக இருந்தார்............ Thanks.........

orodizli
29th October 2019, 07:07 PM
https://m.facebook.com/groups/1666545363671016?view=permalink&id=2504776116514599&sfnsn=scwspwa&funlid=qGZ8PikHFV4NTulx........... Thanks..........

okiiiqugiqkov
29th October 2019, 07:29 PM
27 ஆயிரம் பதிவுகளை கடந்து புரட்சித் தலைவர் புகழ் பாடி சாதனை செய்திருக்கும் நண்பர் திரு.லோகநாதன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

தொடர்ந்து நீங்கள் புரட்சித் தலைவர் புகழைப் பரப்ப தொண்டாற்றவும் வாழ்த்துக்கள்.

fidowag
30th October 2019, 02:34 AM
எனக்கு தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்த நண்பர் திரு.சிவானந்தன் அவர்களுக்கு*நெஞ்சம் நெகிழ்ந்த நன்றி .

எனது 27,000 பதிவுகளுக்கு பாராட்டுக்கள் /வாழ்த்துக்கள் தெரிவித்த அன்பு நண்பர் திரு.சுந்தர பாண்டியன் அவர்களுக்கு என் பசுமையான நன்றி .

orodizli
30th October 2019, 03:23 AM
https://youtu.be/X9Q1BwoUHh4............ Thanks.........

orodizli
30th October 2019, 03:25 AM
ஜனவரி 1972

போருக்கு புரட்சித் தலைவர் உதவி

இந்திய பாக்கிஸ்தான் போர் நீதிக்கும், பங்காள தேசத்து வளர்ச்சிக்கும் தனது ஒரு படத்தின் வருமானம் முழுவதையும் கொடுப்பதென்று சென்னையில் ஒரு கூட்டத்தில் புரட்சித் தலைவர் கூறினார். புரட்சித் தலைவி அவர்கள் போர் நிதிக்கு ரூ5000/= வழங்குவதாக அறிவித்தார். இந்த விழாவில் மத்திய திட்ட அமைச்சர் திரு. சி.சுப்ரமணியம் தலைமை தாங்கி பேசினார்.������........ Thanks...

orodizli
30th October 2019, 03:26 AM
நியூயார்க்கில் புரட்சித் தலைவர்

நியூயார்க் தமிழ் சங்கம் நாவொம்பேர் மாதம் 16ஆம் தேதி மாலை சிறப்பானதொரு வரவேற்பு நல்கியது. கொலம்பியா பல்கலைக்கழக வட்டத்தில் "ஏரல் மண்டபத்தில்/Earl Auditorium" நடந்த நிகழ்ச்சிக்கு பல பகுதிகளில் இருந்து தென்நித்யா மக்கள் 500-600பேர் வந்து கலந்து கொண்டனர்.

தமிழ்ச் சங்கத் தலைவர் டாக்டர் முருகேசன் வரவேற்புரையை தமிழ்ச் சங்கத்தின் நோக்கத்தை குறிப்பிட்டார்.......

புரட்சித் தலைவர் வரவேற்புக்கு நன்றி தெரிவித்துப் பேசுகையில் தமிஸ்ஹாக வரலாற்றை உண்மையான வரலாற்றை வெளியிடும் பொது பல வித பிரச்சனைகள் குறுக்கிடும் என்றும் ......கழகம் ஆட்சிக்கு வரும்போது தமிழ்நாட்டின் உண்மையான வரலாற்றை வெளியிட அவனை செய்யும் என்றும், சமதர்மம், சகோதரத்துவம் தமது கட்சியின் அடிப்படை என்றார். தொடர்ந்து கேள்வி பதில் ...சில பதில்கள்:

மாநில சுயாட்சி கழகம் கேட்காது.....

ஜெயப்ரகாஷ் நாராயணன் நடத்திய கிளர்ச்சி பற்றி பதில் கூறுகையில் ஊழல் குற்றச் சாட்டுக்கு தான் ஆட்சேபிக்க வில்லை என்றும்.......இணையான அரசாங்கம் தான் எதிர்ப்பதாகவும் ... ஊழல் குற்றச் சாட்டுக்கு தான் ஆட்சேபிக்க வில்லை என்றும் தலைமைப்பீடத்தில் உள்ளவர்கள் தூய்மையாக இருந்தால்தான் கீழே உள்ளவர்கள் அரசாங்க இயந்திரமும் லஞ்சம் ஊழலின்றி திகழும் என்றார்

இறுதியில் சங்கத்தில் செயலாளர் திரு. சேகர் ஹென்றி அவர்கள் நன்றி தெரிவித்து பேசினார். பின்னர் சங்க உறுப்பினர்களுக்கு "உலகம் சுற்றும் வாலிபன்" திரையிடப்பட்டது........ Thanks SB., Sir...

orodizli
30th October 2019, 03:27 AM
மகாராஷ்டிரா மாநிலத்தில் சாத்தாரா மாவட்டத்தில் இருக்கும் ராஜகோபுரம்.

இந்த ராஜகோபுரம் கட்டப்பட்டது யாரால்? நமது ராஜா ராஜன் புரட்சித் தலைவரால்.

உய்ந்த புகைப்படத்தை எடுத்தவர், புகைப்படத்தில் இருக்கிறார் அனைவருடன் பகிர்ந்துகொள்ள சம்மதம் தெரிவித்தார். ������...... Thanks SB.,

orodizli
30th October 2019, 03:29 AM
உலகம் சுற்றும் வாலிபன்

சுபாங் சர்வதேச விமான நிலையம் ஏர் சிலோன் விமானத்தில் புரட்சித் தலைவர் குழுவினர்கள் அக்டோபர் ல் சென்று அடைந்தனர். நட்சத்திர கூட்டத்தை காண மக்கள் திரளாக வந்திருந்தனர். மக்கள் புரட்சித் தலைவரை சூழ்ந்து கொண்டனர். ரசிகர்களின் அன்புத் தொல்லைகளால் படப்பிடிப்பு சுமார் ஒரு மணி நீரால் தாமதம். சுமார் இரண்டு மணி நேரத்துக்கு பின் பயணமான புரட்சித் தலைவர் அவர்கள் தான் திரும்பவும் பினாங்கு செல்ல இயலாது என்று தெரிவித்தார்.

நடிகைகளிடம் நீங்கள் முத்தமிடம் காட்சிகளை பற்றி உங்கள் கருது என்ன என்று கேட்டதற்கு. அனைவருக்கும் ஏகோபித்த குரலில் இந்திய படங்களில் அதற்கு இடமில்லை, நாங்களும் தயாரில்லை என்றார்கள்.

ஜப்பான், ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேஷியா இலங்கை முதலிய நாடுகள் இந்த பயணத்தில் அடங்கியது. ........ Thanks SB.,

orodizli
30th October 2019, 03:31 AM
வாலி எம்.ஜி ஆரைப் பற்றி
எழுதிய கவிதை.
--------------------------
நீ
இந்தியாவில் பிறந்து
இலங்கைக்கு சென்ற-
இராமச்சந்திரனல்ல;
இலங்கையில் பிறந்து
இந்தியா வந்த
இராமச்சந்திரன்.!

அந்த இராமச்சந்திரன்
சூரிய குலத்தில் வந்தவன்.
நீயும்-
உதய சூரியனின்
வழித்தோன்றல்தான்.

அவனும்
ஜானகி மணாளன்.
நீயும்
ஜானகி மணாளன்.

அவனும்
பதவி ஆசை பிடித்தவர்களால்
வெளியேற்றப்பட்டான்.
நீயும் அப்படியே.

அவனும்
நாடோடியாகத் திரிந்து
மன்னனானான்.
நீயும்-
நாடோடி மன்னன்தான்.

அவனிடத்தில்
இருந்தது போலவே
உன்னிடத்தில்லும்
"வில் பவர்" இருந்தது.

அந்த இராமச்சந்திரன்
தெய்வமாக இருந்து
மனிதனாக மாறியவன்.
நீ-
மனிதனாக இருந்து
தெய்வமாக மாறியவன்.
இதனால்தான் உன்னை
இதய தெய்வம் என்கிறோம்.

ஆனால் ஒன்று
அவன்
வாலியை
அம்பு கொண்டு வீழ்த்தியவன்.
நீயொ
வாலியை
அன்பு கொண்டு வாழ்த்தியவன்.

நீயே
எனக்கு
நிஜமான கருணா(நிதி) .!
வாலி..........இன்று மறைந்த திரு. வாலி அவர்கள் பிறந்தநாள்....... Thanks...

orodizli
30th October 2019, 03:36 AM
'சங்கதமிழன்' விஜயா, வாஹினி தயாரிப்பில் புதிய விஜய் சேதுபதி படத்தில் காவல்துறை அதிகாரி ஆக வருபவர் name badge இல் M. G. ராமச்சந்திரன் என்ற பெயர் காணப்படுகிறது...

orodizli
30th October 2019, 11:14 AM
சார் வணக்கம்...

சமீபத்தில் அகஸ்தியா அரங்கில் சிவாஜி நடித்து வெளியான " ராஜா" திரைப்படம் வெளியானது
அந்த படம் வெளியாவதை ஒட்டி ஒரு ரசிகர் கொடுத்த விளம்பரம் " தரம் கெட்ட
படங்களை திரையிட்டு தரம் குறைந்து போன அகஸ்தியா திரை அரங்கை புனிதப் படுத்த வரப் போகிறார்
ராஜா , அது மட்டுமா அகில உலக ஸ்டைல் சக்கரவர்த்தி(?) , உலகப் பேரழகன்(��), அட்டைக்கத்தி சீடர்களுக்கு ஆப்பு வைத்த மன்மதன், வசூல் சக்கரவர்த்தி இப்படியெல்லாம் ஒரு
நண்பர் விளம்பரப் படுதியிருந்தார் ரொம்ப
நல்ல காரியம் ஆனால் இதுல பாருங்க ஒரு சின்ன சந்தேகம் இப்படி
உங்களுக்குள்ளே விளம்பரப் படுத்தி மாறி மாறி கிச்சு கிச்சு மூட்டி
சந்தோஷப் பட்டுக் கொள்கிறீர்கள் ரொம்ப
மகிழ்ச்சி , நான் ஒரு சின்ன கேள்வி கேட்கிறேன் இப்படி விளம்பரம் செய்யும் நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்
நேர அகஸ்தியா திரை அரங்குக்குப் போய் உரிமையாளர்/ மேலாளரைப் பார்த்து சார் இப்படி நீங்கள் தொடர்ந்து தரம் கெட்ட படங்களா போட்டுப் போட்டு தரம் கெட்டுப் போய் விட்டீர்கள் அதனால் நாங்கள் ஒரு 10 பேர் வாரியல், தூப்பான், பினாயில், டெட்டால் இவைகளுடன்
வந்து கூடவே தீட்டு கழிக்கவும் ஒரு ஆளை கூட்டிக் கொண்டு வரப் போகிறோம் என்று சொல்லி இருந்தால் பாராட்டலாம்,( இப்படி ஒரு விளம்பரம் வந்தது அரங்கு ஓனருக்கு தெரிந்திருந்தால் நிலைமை என்ன ஆயிருக்குமோ தெரியவில்லை?) சரி அடுத்தது இந்த படத்தை
திரையிட்டு எத்தனை லட்சம் வசூல் வந்தது?
கழிந்த நான்காம் தேதி
இதே அகஸ்தியா அரங்கில் திரையிடப் பட்ட தரம் குறைந்த படமான நாடோடி மன்னன் படத்திற்கு முதல் மூன்று நாளில் ஒரு லட்சம் வசூல், இறுதியாக ஒரு வாரம் ஓடி முடிய 1,85,000 வசூல் அதனால் கண்டிப்பாக மிகவும் தரமான படமான ராஜா
படத்திற்கு கண்டிப்பாக
இதை விட அதிக வசூல்
கிடைத்திருக்க வேண்டும் ( நல்ல வேளை இப்போது சாந்தி அரங்கம் இல்லை அப்படி இருந்து
இந்த படம் அங்கு வந்திருந்தால் கண்டிப்பாக ஒரு வாரத்தில் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வசூல் ஆகி இருக்கும்)
சரி அடுத்தது " அட்டைக் கத்தி" சீடர்களுக்கு ஆப்பு வைத்த மன்மதன்
வசனத்துக்கு வருவோம்
சரி அட்டைக் கத்தி பயன் படுத்தியது யார்?
அந்த காலத்தில் எம்.ஜி.ஆர் பயன் படுத்திய கத்திகளில் பெரும் பாலானவை தி.நகர் நினைவு இல்லத்தில் வைக்கப் பட்டுள்ளன இது எல்லோருக்கும் தெரியும் , வாள் சண்டை
போடும்போது எத்தனையோ முறை நம்பியாருக்கும் காயம்
பட்டிருக்கிறது எம். ஜி.ஆருக்கும் காயம் பட்டிருக்கிறது , ஒரு படத்தின் சண்டைக் காட்சியின் போது தலைவரின் கண் புருவத்தில் காயம் பட்டது அனைவரும்
தெரிந்த ஒரு கதைதான்
எனக்கு ஒரு சந்தேகம்
என்னன்னா அட்டையில்
செய்த கத்தி இப்படி காயத்தை உண்டாக்குமா? விபரம் தெரிந்தவர்கள் தயவு செய்து பதில் சொல்லுங்களேன் please, அடுத்து மன்மதன்( ஊருக்குள்ள
சொல்லிக்கிட்டாக) ஏம்ப்பா எழுதும் போதே
உங்களுக்கே சிரிப்பு
வரலையா? 1968 க்குப் பிறகு கொஞ்சம் வயிறையும் குறைத்து விக்கையும், மீசையை பென்சில் போல வைத்த
வுடன் மன்மதன் ? சரி இருந்து விட்டுப் போகட்டும் அடுத்து அகில உலக ஸ்டைல் சக்கரவர்த்தி? அடடா கையில ஒரு பாட் மிண்டன் ராக்கெட்டை வைத்துக் கொண்டு நின்றவுடன் ஸ்டைலா?
அதுவும் உலகத்தையெல்லாம் வம்புக்கு இழுத்திருக்கிறார்
ஒளி விளக்கு படத்தில்
துவக்கக் காட்சியில்
freeze style காட்சி எல்லாம் வைத்திருப்பார்கள்,மற்றபடி ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நம்பியாருடன் சண்டையிடும் முன் வாளை உருவி எடுப்பதிலே ஒரு ஸ்டைல் காண்பித்திருப்பார் இதையெல்லாம் என்ன என்று சொல்வீர்கள் அன்பரே, இடையில் அட்டைக் கத்தி சமாச்சாரத்தில் ஒன்றிரண்டு விட்டுப் போய் விட்டது உங்களின் அபிமான அகில உலக ஸ்டைல் சக்கரவர்த்தி கூட வணங்கா முடி, தங்க மலை ரகசியம், மருத நாட்டு வீரன், உத்தம புத்திரன் போன்ற படங்களில் அட்டைக் கத்தி வைத்துக் கொண்டுதானே மெரினா பீச்சில் ஓடும்
குதிரை மாதிரி முன்னங் கால்களை தூக்கித் தூக்கி சண்டை
போட்டிருப்பார் ( ஸ்டண்ட் சோமு கெட் டார் போங்கள்) அதுமட்டுமல்ல சமீபத்தில் கூட ஒரு எழுத்தாளர் சிவாஜி சண்டை என்ற பெயரில்
புல் வெட்டுவார் என்று சொல்லி அது ஒரு வாரப் பத்திரிகை யில் வெளிவந்தது, பைபிளில் ஒரு வாசகம்
வரும் " உங்களில் குற்றம் இல்லாதவன் எவனோ அவன் முதல் கல்லை எறியட்டும்" அதுபோல் அடுத்தவர்களை விமர்சிக்கும் முன் தன்னையும் கொஞ்சம்
நினைத்துப் பார்க்க வேண்டும் அதுதான் புத்தி சாலித் தனம்
நீங்கள் அட்டைக் கத்தி என்று கூறும் நபர்தான்
சாதாரண சினிமா நடிகராக இருக்கும் போது அமெரிக்கா, ரஷ்யா, மொரீஷியஸ் போன்ற நாடுகளின் அரசு விருந்தினராக
கௌரவப் படுத்தப் பட்டார் என்பதை நினைவில் கொள்க
உடனே குதித்துக் கொண்டு எங்க ஆளும்
ஒரு நாள் மேயர் பதவி
எல்லாம் வகித்திருக்கி றார் என்று சொல்லி விடாதீர்கள் அந்த ஒரு நாள் மேயர் பதவி வெறும் சினிமாவுக்காக
கொடுக்கப் பட்ட ஒரு நிகழ்வு ஆனால் இங்கே
நன்றாக கவனியுங்கள்
வெறும் சினிமா நடிகனாக பார்க்காமல் ஒரு நாட்டின் பிரதமரை
போன்று அதிகாரப் பூர்வமாக கொடுத்த அழைப்புகள் இன்னொரு முக்கிய விஷயம் மொரீஷியஸ் நாட்டின் சுதந்திர தின விழா வின் போது அதன் அதிபர் ராம்கூலம் அவர்களின்
அருகிலேயே அமர வைக்கப்பட்டு கௌரவப் படுத்தப் பட்டவர்தான் உங்களால்
விமர்சிக்கப் படும் இந்த
அட்டைக் கத்தி வீரர்
அதனால் இந்த மாதிரி
மல்லாக்கப் படுத்துக் கொண்டு எச்சில் துப்புற
சமாச்சாரத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்
முதலில் உங்களின் நடிகரின் பெயரால் பத்திரிக்கை ஏதாவது வந்தால் அதை ஆதரித்து வெளியிடும்
நபரை வாழ வையுங்கள் , சமீபத்தில்
ஆளில்லாமல் ஆல்பர்ட்
அரங்கில் ஒரு வாரம் பிறகு மூன்று நான்கு பேரை வைத்து ஒரு 55 நாள் பிறகு கடைசியாக
அக்டோபர் மாதத்தில்
ஒரு ஷோ வெளியிட்டு
நூறாவது நாள் விழா
எடுத்தீர்களே அந்த படத்தின் பெயரால் ஒருவர் ஒரு பத்திரிக்கை வெளியிட்டு பாவம் கடைசியில் ஒன்றிரண்டு மாதத்துடன் போட்ட முதலைக் கூட எடுக்க
முடியாமல் Back to pavilion ஆன கதை எல்லோரும் அறிந்ததுதான் , இறுதியில் மக்கள் திலகம் மலர் மாலை1 என்ற பெயரில் ஆல்பம்
வெளியிட்டு சிரமத்தில்
இருந்து மீண்ட கதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை அந்த
ஆல்பம் எப்படி நீ வெளியிடலாம் என்று சொல்லி நீங்களெல்லாம் பாய்ந்தது ஒரு பக்கம் இருக்க சீக்கிரமே மக்கள் திலகம் மலர் மாலை2 புத்தகமும் விரைவில் வெளியாகப்
போகிறது, எப்போதாவது தலைவரின் ரசிகர்கள்
உங்கள் நடிகரை அவமானப் படுத்துவது
மாதிரி ஏதாவது சினிமா
விளம்பரங்கள் போடுகிறார்களா? அப்படியிருக்க நீங்கள் மட்டும் ஏன் இப்படி குமுறி சாகிறீர்கள்? அந்த காலம் தொட்டே இந்த குமுறல்கள் உங்களுக்கு புதிதல்ல
இப்படி குமுறுகிறவர்கள் உங்கள் நடிகரை ஒரு
வார்டு மெம்பராக வாவது ஆக்கியிருக்கலாம்
அதையும் செய்யவில்லை
கடற்கரையில் இருந்த சிலையை அகற்ற வேண்டும் என்று சொல்லி கேஸ் போட்டது
காங்கிரஸ் காரர் கடைசியில் பழி தலைவர் மீது, கே. எஸ் அழகிரி சாபம் வேறு கொடுக்கிறார் அந்த சாபத்தை காங்கிரஸ் தியாகி சீனிவாசன் குடும்பத்துக்கு கொடுக்கட்டும் அதை விட்டு தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டிய
கதையாக பாய வேண்டிய இடத்தை விட்டு விட்டு எங்கேயோ
பாய்வது
தயவு செய்து இந்த மாதிரி பதிவுகள் போடுவதை நிறுத்திக்
கொள்ளுங்கள் அதுதான் உங்களுக்கும்
நல்லது

வணக்கம்!.......... Thanks mr. J W.,

okiiiqugiqkov
30th October 2019, 07:17 PM
சுகாராம் அய்யா,

உங்கள் பதிவு பற்றி (பதிவு எண் 1850)

சரி விடுங்கள். பிரச்சினை முடிஞ்சி போச்சு. மாற்று திரி நண்பர்கள் ஏதாவது சொன்னால் பதில் சொல்லலாம். சும்மா சண்டை வலிச்சாலும் போர் அடிக்கிறது.

மாற்று முகாம் ரசிகர்கள் வாட்ஸ் அப்பில் ஏதாவது சொன்னால் அதை அப்படியே போட வேண்டுமா?


(உதாரணம்... அட்டை கத்தி சீடர்களுக்கு ஆப்பு வைத்த மன்மதன்) இதை எல்லாம் தவிர்க்கலாமே, நம்ம திரியிலேயே இதைப் படிக்கும்போது மனசு கஷ்டமாக உள்ளது சார்.

நன்றி.

orodizli
30th October 2019, 07:52 PM
https://youtu.be/woXh5r_sTlA........... Thanks.........

orodizli
30th October 2019, 08:09 PM
தோழர் சு. பா., அவர்களுக்கு ... நாம் ஒன்றும் சண்டைக்கு or சர்ச்சைக்கு அலையவில்லை... நமது மஹான் நம்மை அப்படி ஒரு நிலைக்கு நம்மை ஆளாக்கவில்லை என்பதை நீர் அறியாதவரில்லை... அந்த முகாமில் திருச்சியை சேர்ந்த ...சிறிதும் புத்தியில்லாத, இங்கிதமறியாத வீணர்கள் பதிவிட்ட சேதி தான் நண்பர் பதிவிட்டது. மற்றபடி அந்த மகானுபாவர்கள் சேதியும் நம்மில் சிலர் அறியாமலிருக்கலாம்... நாமும் சற்று அதிகமாக தாக்குதல் தொடுப்பது ஏன்?! என தெரிய வேண்டுமல்லவா?! ஆகையால் அவர்கள் எழுதிய சொற்றொடர் அப்படியே பதிவிடப்பட்டுள்ளது... என்ன சரியா? நண்பரே...

orodizli
30th October 2019, 09:30 PM
விரைவில்... மதுரை - சென்ட்ரல் dts., திரையரங்கில்... எப்பொழுதும் திரையுலகை ஆளும் அசராத வசூல் சக்கரவர்த்தி மக்கள் நடிகர் வழங்கும் காவியம்..." ராமன் தேடிய சீதை" கலர் புல்... குளு குளு படைப்பு... தகவல் உதவி : திரு. குமார், மதுரை...

fidowag
31st October 2019, 12:20 AM
கோவை சண்முகாவில்* மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " டிஜிட்டல் திரைப்படம்* வெற்றிகரமாக 2 வது வாரமாக தொடர உள்ளது என்று*நெல்லை நண்பர் திரு.ராஜா தகவல் அளித்துள்ளார் .
ஆயிரத்தில் ஒருவன் படத்தின் விநியோகஸ்தர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட அவரது மற்றொரு படம்* அதே சண்முகா அரங்கில்**4 நாட்கள்தான் ஓடியது .* *ஆயிரத்தில் ஒருவன் இடைவிடாமல் தமிழகத்தில் உள்ள அரங்குகளில் வலம் வந்த வண்ணம் உள்ளது . அன்றும் , இன்றும், என்றும் தலைவர்தான் வசூல் சக்கரவர்த்தி என்றும் குறிப்பிட்டார் .

fidowag
31st October 2019, 12:39 AM
மக்கள் குரல் -30/10/19

பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பெருமை சேர்த்தவர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சி தலைவி ஜெயலலிதா .- முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் .
-------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்று (30/10/19) முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில்* உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் .

அப்போது பின்வருமாறு பேசினார் :இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 112 வது* பிறந்த நாள் விழா, 57 வது*குருபூஜை விழா* அரசு சார்பில்**நடைபெறுகிறது .

ராமநாதாபுரத்தில்* 1937ம் ஆண்டு மாநில தேர்தலில் வெற்றி பெற்றவர் தேவர் திருமகனார் . பின்னர் 1946ம் ஆண்டு சென்னை மாகாண தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் .* 1952,1957,1962 சட்டமன்ற தேர்தல்களிலும் மக்களால் சட்ட மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்கு உரியவர் .**

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது தேவர் திருமகனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் , அவருடைய பொதுசேவையை பாராட்டி, ஒவ்வொரு ஆண்டும் இனி தமிழக அரசு சார்பில் விழா எடுக்கப்படும் என்று அறிவித்தார் .1979ம் ஆண்டு முதல் தொடர்ந்து இந்த அரசு விழா நடைபெற்று வருகிறது .*


புரட்சி தலைவி ஜெயலலிதா* 1994ம் ஆண்டு சென்னை நந்தனத்தில் மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத்தேவருக்கு முழு வெண்கல சிலை நிறுவி , திறந்து வைத்தார்* 2010ம் ஆண்டு பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவருடைய நினைவிடத்தில் ,அவரின் திருஉருவச்சிலைக்கு தங்க கவசம் அளிக்கப்படும் என்று அறிவித்து 2014ம் ஆண்டு நேரடியாக சென்று 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை வழங்கினார் .
இவ்வாறு இரு தலைவர்களும்* அண்ணா தி.மு.க. ஆட்சியில் தேவர் திருமகனாருக்கு பெருமைகள் சேர்த்துள்ளனர் என்று பேசினார் .

orodizli
31st October 2019, 12:50 AM
மதுரையில் இன்று விடாத மழையிலும் ...... நாடாண்ட மன்னவன் எம்.ஜி.ஆர்., அவர்களின் "நாடோடி மன்னன்", ரசிகர்கள் கூட்டம் குறையவில்லை ... கோவை.நண்பர் திரு.அய்யாச்சாமி மாலக்காட்சி மன்னவர் தரிசனம் மகிழ்ச்சியில் ... மதுரை.எஸ் எம்ஜிஆர் குமார்... Thanks.........

fidowag
31st October 2019, 01:48 AM
துக்ளக் வார இதழ் -23/10/19

எம்.ஜி.ஆரை சுட்டவர் மகனுக்கு அ. தி.மு.க.வில் சீட்டா -நடிகர் ராதா ரவி .
---------------------------------------------------------------------------------------
எங்க வீட்டு பிள்ளையின் முதல் பாதியில் எம்.ஜி.ஆரை நம்பியார் சவுக்கால்* அடித்தால்தான் ஒத்துக்கொள்வார்கள் .* வேறு நடிகரை போட்டிருந்தால்* ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள் . அப்போதும் கூட, நம்பியார் , எம்.ஜி.ஆரை சவுக்கால் அடிக்கும்போது* இருடி .... இடைவேளை வரட்டும் , உனக்கு இருக்கு ஆப்பு, வேட்டு .*என்று ரசிகனே தரையில் உட்கார்ந்தபடி,* ஸ்க்ரீன் பிளே* எழுதுவான் .**

ராமன் எத்தனை ராமனடி படத்தில் தன தங்கையை பெண் கேட்டு வந்த வசதியில்லாத சிவாஜியை, நம்பியார் பிரம்பால் அடித்து விரட்டுவார் .* பின்னர் சிவாஜி* பணக்காரனாகி, மீண்டும் பெண் கேட்டு வருவார் .* ஆனால் அப்போது அந்த பெண் இருக்க* மாட்டாள்* உடனே கோபத்தில் சிவாஜி, கையில் ஒரு பிரம்பை* எடுத்து ஆக்ரோஷமாக* அதை வளைத்து , முறித்து விட்டு வந்து விடுவார் .* அப்போது தியேட்டரில் கிளம்பும் டயலாக் என்ன தெரியுமா . இந்நேரம் புரட்சி தலைவராக இருந்தால் நம்பியாரை உண்டு இல்லைன்னு பண்ணி இருப்பார் .இவருக்கு அவ்வளவு தைரியம் போதாதப்பா .* அந்த காலத்தில் ரசிகர்கள் தங்கள் மனங்களை அப்படி செட் செய்து வைத்திருந்தார்கள்**

ஆனந்த் -கேள்வி : உங்கள் அப்பா எம்.ஜி.ஆரை சுட்டவர் .* பின்னாட்களில் நீங்கள் எம்.ஜி.ஆரை சந்தித்தபோது , அது குறித்து உங்களுக்கு குற்ற உணர்ச்சி ஏதேனும் இருந்ததா ? எம்.ஜி.ஆர். உங்களை எப்படி எடுத்துக் கொண்டார் .

ராதாரவி பதில் : குற்ற உணர்ச்சி என்று கூற முடியாவிட்டாலும் , என் அப்பா கோபத்தில் எடுத்த முடிவு, அவர் வாழ்க்கையிலும் சரி, எங்கள் வாழ்க்கையிலும் சரி , ஒரு தடங்கலை ஏற்படுத்தியது உண்மைதான் .* எம்.ஜி.ஆரை நான் சிறுவயதில் பலமுறை சந்தித்திருக்கிறேன் .**

நல்லவன் வாழ்வான் படத்தில் என் அப்பா வேண்டாம் என்று* சொல்லியும், கிளைமாக்சில் ஒரு வித்தியாசமான சண்டைக்காட்சி வைக்கலாம் என்று என் அப்பாவைக் கட்டாயப்படுத்தி , தண்ணீருக்கு அடியில் ஒரு சண்டைக் காட்சியை எம்.ஜி.ஆர். அமைத்தார் .* ஒரு கண்ணாடி தொட்டியில் தண்ணீரை நிரப்பி,*அதற்குள் நீச்சல் அடித்துக் கொண்டே இருவரும் சண்டை போடும்* காட்சிகள்.**ஒரு வாரம் முழுக்க படமாக்கப்பட்டன*

முடிவில் என் தந்தை உடலெங்கும்* வீக்கம் கண்டு படுத்த படுக்கையாகிவிட்டார் .என் அப்பா வேண்டாம் என்று சொல்லியும்* ,எம்.ஜி.ஆர். அவரை வற்புறுத்தி நடிக்க வைத்ததால் , எம்.ஜி.ஆருக்கு குற்ற உணர்ச்சி வந்துவிட்டது .* ஒரு வார காலம் அதாவது என் அப்பா நோயில் இருந்து மீண்டு வரும்வரை , தினசரி காலை 9 மணிக்கு எம்.ஜிஆர். எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவார் .* என் அப்பாவின் படுக்கை அருகிலேயே அமர்ந்து அவருடன் பேசி கொண்டிருப்பார் .* மதியம் அவருக்கு தோட்டத்திலிருந்து உணவு வரும். இங்கேயே சாப்பிடுவார் .* மாலை 5 மணிக்கு மேல்தான் கிளம்பி தனது வீட்டுக்கு போவார் .* இப்படி என் அப்பா குணமாகும்வரை ஒரு வாரத்திற்கு எம்.ஜி.ஆர். எங்கள் வீட்டிற்கு வந்து சென்றார் .அப்போதெல்லாம் அவரை பார்த்து இருக்கிறேன் .

அந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த பிறகு , நான் முதல்முதலாக சந்தித்தது ஒரு விமானத்தில்தான் .* நடிகர் சத்யராஜ் திருமணத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து கோவை செல்லும் விமானத்தில் ஏறி அமர்ந்திருந்தேன்*கடைசி நேரத்தில், எம்.ஜி.ஆர். , ஜானகி* அம்மாள் , பண்ருட்டி ராமச்சந்திரன்*ஆகிய மூவரும் அதே விமானத்தில் ஏறி முதல் வரிசையில் அமைத்தார்கள் .* அவர்களும் சத்யராஜ் திருமணத்தில் கொள்ள வந்திருந்தார்கள் .அப்போதெல்லாம் கோவை செல்லும் விமானம், பெங்களூரு வழியாகத்தான் செல்லும்.* எனவே, பெங்களூரு விமான நிலையத்தில் அந்த விமானம் சுமார் 30* நிமிடம் நின்றது .* இறங்க வேண்டிய பயணிகள் இறங்கியதும், நான் விறுவிறு என்று முதல்வரிசைக்கு சென்று எம்.ஜி.ஆரிடம் பேச ஆரம்பித்தேன் .* அப்போதுதான் அந்த விமானத்தில் எம்.ஜி.ஆருக்கு பாதுகாப்பாக ஆங்காங்கே எத்தனை பாதுகாவலர்கள் இருந்தார்கள் என்பது தெரிய வந்தது .* அத்தனை பேரும் தடாலடியாக எழுந்து வந்து என்னை பிடித்துக் கொண்டார்கள் .

ஆனால், நான் அதற்குள், நான் யார் என்று தெரிகிறதா ? நான்தான் எம்.ஆர். ராதாவின் மகன் ராதாரவி* என்று கூறிவிட்டேன் .* உடனே என் கைகளை பிடித்து கொண்டார் .* உடனே, நான் நடிகர் சங்க தலைவராக உள்ளேன். உங்களை சந்திக்க யாரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்குவது தெரியவில்லை .* உங்களை சந்திக்க அனுமதிப்பீர்களா ? என்று கேட்டு விட்டேன் .* அவர் என் கையை பிடித்துக் கொண்டதும் , பாதுகாவலர்கள்* விலகி கொண்டார்கள் .* அப்போது எம்.ஜி.ஆர். சரளமாக பேச முடியாத நிலையில் இருந்தார் .* எனவே, அவர் பண்ருட்டி ராமச்சந்திரனை திரும்பி பார்த்தார் .* அவர் உடனே, நீங்கள் சென்னைக்கு வாருங்கள் . நான் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி தருகிறேன் என்று சொன்னார் .**பின்னர் விமானம் புறப்பட்டதும், கோவையில் இறங்கியதும், எம்.ஜி.ஆர். முதல் ஆளாக இறங்கி சென்று விட்டார் .* நான் பிற்பாடு பிற பயணிகளுடன் கீழே இறங்கி வந்தேன் .**

அப்போது ஒரு சப் இன்ஸ்பெக்டர் , ஒரு காவலர் , என்னை தடுத்து நிறுத்தி,*கொஞ்ச நேரம் இங்கேயே நில்லுங்கள் என்று சொன்னார்கள் .* 15 நிமிடங்களுக்கு பிறகு* போலீசார் என்னை வெளியே அழைத்து சென்று பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர் .* அப்போதுதான் புரிந்தது .* அங்கு எம்.ஜி..ஆரை* வரவேற்க*ஏராளமான கட்சி தொண்டர்கள் , காத்திருந்தார்கள் என்பதும், அவர்கள் எம்.ஆர். ராதாவின் மகன் என்று தெரிந்தால் என்னை தாக்க கூடும் என்றும் யூகித்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். என்னை பாதுகாப்பாக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்திருந்தார் என்பது அறிந்தது ம்* , உண்மையில் புல்லரித்துப்**போனேன் .*

அதன் பின், சத்துணவு திட்டத்திற்காக நடிகர்கள் நிதி திரட்டிக் கொடுத்தபோது*நடிகர்களை பாராட்டி எம்.ஜி.ஆர். ஒரு விழா எடுத்து கலைஞர்களுக்கு தங்க மோதிரம் , சங்கிலி* போன்றவற்றை பரிசளித்தார் .* நான் நடிகர் சங்க தலைவர் என்பதால் , நம்பியார் போன்ற ஓரிரு மூத்த நடிகர்களுக்கு பரிசு அளித்த பின்னர்*என்னை அழைத்து கௌரவப்படுத்தினார் .**

கோகுல கிருஷ்ணன் கேள்வி : எம்.ஆர். ராதாவின் மகனாக இருந்தும், பிற்பாடு எம்.ஜி.ஆர். துவங்கிய காட்சியிலேயே நீங்கள் சேர முயற்சித்தபோது , உங்களை சேர்ப்பதற்கு அங்கு தயக்கம் ஏதும் இல்லையா ?

ராதாரவி பதில் :* முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில்தான் அ.தி.மு.க. வில் சேர்ந்தேன் .* நான் கட்சியில் சேர்வதால் , உங்களுக்கோ, உங்கள் கட்சிக்கோ ஏதாவது களங்கம் வருமா என்று, அன்றைய முதல்வரிடம் கேட்டபோது , அதெல்லாம் ஒன்றும் வராது .என்று சிரித்தபடி சொன்னவர் ,எனக்கு சைதாப்பேட்டை தொகுதியை ஒதுக்கினார் .* *அப்போது தி.மு.க. தரப்பில் எம்.ஜி.ஆரை சுட்டவருக்கு அ. தி.மு.க. வில். சீட்டா என்று போஸ்டர் ஓட்டப்போவதாக எனக்கு தகவல் கிடைத்தது .* அப்படி ஓட்டினால், எம்.ஜி.ஆரை யார் சுட்டது என்று உண்மையிலேயே , நாள் வெளியே சொல்ல வேண்டியிருக்கும் என்று* ஒரு திரியை கொளுத்தி போட்டேன் .* எங்கே கருணாநிதி பெயரை சொல்லிவிடுவானோ என்று பயந்துவிட்டார்கள். அதன்பிறது போஸ்டர் ஒட்டப்படவே இல்லை .**

orodizli
31st October 2019, 02:13 AM
https://youtu.be/adKhQq9m9UA.......... Thanks...

orodizli
31st October 2019, 02:14 AM
https://youtu.be/X9Q1BwoUHh4.......... Thanks.........

orodizli
31st October 2019, 02:44 PM
https://youtu.be/kPkJyr-O8eg .. .......... Thanks.........

orodizli
31st October 2019, 02:45 PM
உலகம் சுற்றும் வாலிபன் படம் ரெடியாயிட்டிருந்த நேரம். பல பரபரப்புகளுக்கு நடுவுல எம்ஜியார் படத்தை ஆரம்பிச்சிருந்தார்.

பாட்டு எழுத கவிஞர் வாலியை கூப்பிட்டிருக்காங்க. வாலி வழக்கம் போல வார்த்தைகளால ஜாலம் காட்ட, எம்ஜியாருக்கு ரொம்ப சந்தோஷம்.

அமர்க்களமான ட்யூனோட வாலியோட வரிகளும் சேர, ரெக்கார்டிங் முடிஞ்சுது.

பல பிரச்னைங்க இருந்தாலும், எப்படியோ கஷ்டப்பட்டு வெளிநாட்டுக்கு போய் ஷூட்டிங்க முடிச்சுட்டு வந்தார் தலைவர்.

எடிட்டிங் முடிஞ்சு, இறுதி கட்ட வேலைங்க எல்லாம் முடிச்சு படம் கிட்டத்தட்ட ரெடி.

படத்துல இருக்க அத்தனை பாட்டும் சூப்பர் ஹிட்டாகும்னு எம்ஜியார் கூட இருந்தவங்க கிட்ட சொல்லிட்டிருந்தார்.

எம்ஜியாருக்கு வாலி ரொம்ப செல்லம். “என்ன ஆண்டவரே”ன்னு தான் கூப்பிடுவார். சரி, வாலியைக் கொஞ்சம் வெறுப்பேத்தலாம்னு, எம்ஜியார் வாலிய கூப்பிட்டு, “இந்த படத்துல பாட்டு எல்லாம் நல்லா வந்திருக்கு. ஆனா உங்க பேரை நான் டைட்டில்ல போட போறதில்லை” அப்டீன்னாராம்.

வாலி சிரிச்சுகிட்டே கம்முனு இருந்திருக்கார்.

“அட, நிஜமாதான் சொல்றேன். உங்க பேர் வராது.”

“என் பேரை போடாம உங்களால படத்தை ரிலீஸ் பண்ண முடியாது.”

“அப்டியா? நான் ரிலீஸ் பண்ணிட்டா?”

“எப்டிங்க ரிலீஸ் பண்ணுவீங்க? படத்தோட பேரு ‘உலகம் சுற்றும் வாலிபன்’. இதுல ‘வாலி’ங்கறத எடுத்துட்டா ‘உலகம் சுற்றும் பன்’ ஆயிடும். மக்கள் திலகம் நடிக்கும் ‘உலகம் சுற்றும் பன்’ அப்டீனா போஸ்டர் ஒட்டுவீங்க?”

எம்ஜியார் பலமாக சிரிச்சுகிட்டே வாலியை முதுகில் தட்டி, கட்டி பிடிச்சுகிட்டாராம்!......... Thanks ..

orodizli
31st October 2019, 02:46 PM
https://youtu.be/fGVx-41mVDU............ Thanks.........

orodizli
31st October 2019, 02:53 PM
31-10-1975 - 31-10-2019... இன்று கலைஉலகின் ஆதாரம், வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., "பல்லாண்டு வாழ்க" லட்சிய காவியம் வெளியாகி 44 வருடங்கள் நிறைவடைந்து, 45ம் ஆண்டு தொடக்கம்... இனி இது போல ஒரு படிப்பினை காவியம் தான் எடுக்க முடியுமா? வேறு யாராலும் இயலுமா?!!!!

orodizli
31st October 2019, 08:28 PM
முன்னாள் பாரத பிரதமர் இந்தியாவின் இரும்புப் பெண்மணி
அன்னை இந்திரா அவர்களின்
நினைவுநாள் இன்று(31.10. 2019)
அன்னையை போற்றி வணங்குவோம்!அப்போலோ பரபரப்பானது !
காரணம் , பிரதமர் வந்து கொண்டிருந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல் அமைச்சரைப் பார்ப்பதற்காக !

இது நடந்தது இந்திராகாந்தி - எம்.ஜி.ஆர்.காலத்தில்.
.
அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் , திடீரென அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார் - அக்டோபர் 1984 இல்.

உடனே விரைந்து வந்தார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி .

அது வரை யாருக்கும் எம்.ஜி.ஆரைப் பார்க்க அனுமதியில்லை.
ஆனால் இந்திரா காந்தி , அப்போலோ மருத்துவமனைக்கு சென்று கண்ணாடிக் கதவு வழியாக , எம்.ஜி.ஆரைப் பார்க்க அனுமதிக்கப் பட்டார்.

அதிர்ந்து போனார் இந்திரா.
அவர் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் :
" IS THAT MGR ? OH MY GOD ,
I CANT BELIEVE IT."

அருகில் இருந்த ஜானகி அம்மையாரின் கைகளைப் பிடித்துக் கொண்டு இந்திரா காந்தி சொன்னாராம் : “கவலைப்படாதீர்கள். இவரை காப்பாற்றுவது இந்த நாட்டின் கடமை ; என்னுடைய கடமை .”

சொன்னதோடு நிறுத்திக் கொள்ளாமல் செயலில் இறங்கினார் இந்திராகாந்தி.

அடுத்த நாளே பிரதமரின் சிறப்பு விமானத்தில் அமெரிக்காவிலிருந்து மருத்துவர்கள் , அப்போலோவுக்கு வரவழைக்கப்பட்டார்கள்.

அது மட்டுமா? இந்திரா காந்தியின் ஏற்பாட்டின் பேரில் , ஏர் இந்தியா போயிங் விமானம் ஒன்று , சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 24 மணி நேரமும் தயாராக , எம்.ஜி.ஆருக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது . அவசரமாக மருத்துவர்களை அழைத்து வருவதற்கும் , தேவைப்பட்டால் எம்.ஜி.ஆரை வெளி நாட்டு சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதற்கும் தயாராக இருக்கச் சொல்லி இருந்தார் இந்திராகாந்தி .
.
எம்.ஜி.ஆரின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவே ,
5.11. 1984 அன்று ஏற்கனவே இந்திராகாந்தி ஏற்பாடு செய்திருந்த தனி விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் எம்.ஜி.ஆர்.

சிகிச்சை சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.

ஆனால்...

இதை எல்லாம் ஏற்பாடு செய்து கொடுத்திருந்த இந்திராகாந்தி -
அப்போது உயிரோடு இல்லை.

ஆம் . அக்டோபர் 31 காலை வேளையில்தான் , கண் இமைக்கும் நேரத்தில் அந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்து விட்டது.

இந்திரா காந்தி தன் பாதுகாவலர்கள் இருவரால் பரிதாபமாக சுட்டுக் கொல்லப்பட்டார்.

உலகமே அந்தச் செய்தியை உடனே அறிந்து கொண்டு விட்டாலும் , எம்.ஜி.ஆரிடம் மட்டும் அதை சொல்லாமல் மறைக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் தவித்தார்கள் மருத்துவர்கள்.

ஏனென்றால் இந்திரா காந்தி இறந்த அந்த வேளையில்தான் , எம்.ஜி.ஆர். உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு , உயிருக்குப் போராடிக் கொண்டு தீவிர சிகிச்சையில் இருந்தார்.
அந்த நேரத்தில் இந்த செய்தியை சொல்லி , அதைத் தாங்க முடியாமல் எம்.ஜி.ஆர். உயிருக்கு ஆபத்து ஏதாவது ஏற்பட்டு விட்டால் ?

சில நாட்களுக்குப் பின் அமெரிக்காவில் மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டு, எம்.ஜி.ஆர். உடல் நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது.

உடல்நலம் தேறி எழுந்து வந்தார் எம்.ஜி.ஆர்.

அதன் பிறகுதான் மெல்ல மெல்ல இந்திரா காந்தியின் மரணச்செய்தியை தயக்கத்துடன் எம்.ஜி.ஆரிடம் சொன்னார்கள் அதிகாரிகள்.

அதைக் கேட்டவுடன் அதிர்ந்து போனார் எம்.ஜி.ஆர்.
உடனடியாக இந்திரா காந்தியின் இறுதி ஊர்வலக் காட்சிகளின் "வீடியோ"க்களை கொண்டு வரச் சொல்லி உத்தரவிட்டார் .
வீடியோ ஓட ஓட , எம்.ஜி.ஆரின் விழிகளில் கண்ணீர் பெரு வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.

எதற்கும் கலங்காத எம்.ஜி.ஆர். , இந்திராவின் இறுதி ஊர்வலக் காட்சிகள் அடங்கிய அந்த வீடியோவைப் பார்த்து விட்டு , தேம்பி தேம்பி சிறு பிள்ளை போல் அழுதிருக்கிறார்.

காரணம் , தன் உயிரைக் காப்பாற்ற ஓடோடி வந்த இந்திராகாந்திக்கு நன்றி சொல்ல எம்.ஜி.ஆர். உள்ளம் துடிக்கிறது.

ஆனால் இந்திரா இப்போது உயிரோடு இல்லை.

பக்கத்தில் இருப்பவர் யாரிடமாவது இதை சொல்லி வாய் விட்டு அழலாம் என்றால் கூட , பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட எம்.ஜி.ஆருக்கு வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேச இயலவில்லை.
.
இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் , மௌனமாக தனக்குள் அழுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் எம்.ஜி.ஆரால் ?

“வாழும் போது வருவோர்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்
வார்த்தை இன்றி போகும் போது
மௌனத்தாலே நன்றி சொல்வோம்
நாலு பேருக்கு நன்றி.”

இன்று (அக்டோபர் 31)இந்திரா காந்தி நினைவு தினம் .............. Thanks.........

orodizli
31st October 2019, 08:30 PM
லண்டனில் புரட்சித் தலைவர் - 2nd VISIT...

லண்டன் சென்ற தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் அவர்களுக்கு லண்டன் தமிழ்ச் சங்கத்தினர் அமோக வரவேற்பு அளித்தனர்.

1978ஆம் வருடம் நவம்பர் மாதம் 4ஆம் தேதி சனிக்கிழமை நடந்தது. லண்டன் பாரதிய வித்யா பவனில் நடந்த இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பெரும் திரளான மக்கள் காலத்து கொண்டனர்......

புரட்சித் தலைவர் யாரின் நெஞ்சையும் ஈர்க்கும் கவர்ச்சிமிக்கச் சொற்பொழிவு ஆற்றினார். தமது சிறுவயது முதல் பேரறிஞர் அண்ணாவை தெய்வமான கருதுவதாகவும் அவருடைய கொள்கைகளை பின்போரி வருவதாகவும் கூறினார்.

தமிழகத்தில் நாடாகும் தொழிலாளர் கலவரம், சாதிக் சண்டைகள் .....ஏற்படும் தீங்குகளையும் இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் நஷன்களையும் தவிக்க தாம் ஏற்ற மருந்து கண்டுபிடித்து அமைதிநிலவப் பாடுபட்டு வருவதையும் எடுத்துரைத்தார்.

தேசிய கீதத்தின் பின்னர் வரவேற்பு கூட்டம் முடிவடைந்தது........... Thanks SB.,

orodizli
31st October 2019, 08:32 PM
பிர*ப*ல முன்னாள் திரைப்ப*ட* ந*டிகை கீதாஞ்ச*லி (72 வ*ய*து) இன்று மார*டைப்பால் காலமானார்.

இவ*ர் ஆந்திராவை பூர்வீக*மாக கொண்ட*வ*ர். சிற*ந்த* குணச்சித்திர* ந*டிகை. தெலுங்கில் சுமார் 40 ப*ட*ங்க*ளும், த*மிழில் 15 ப*ட*ங்க*ளும், மலையாளம் மற்றும் ஹிந்தியில் சில ப*ட*ங்க*ளும் ந*டித்துள்ளார்.

மக்கள் திலகத்துட*ன் தாயின் மடியில், என் அண்ண*ன், ப*ணம் ப*டைத்த*வ*ன், அன்னமிட்ட* கை உள்ளிட்ட ப*ட*ங்க*ளில் ந*டித்துள்ளார். இவை த*விர நெஞ்சிருக்கும் வ*ரை, நீலவான*ம், சார*தா, அதே க*ண்க*ள் ஆகிய ப*ட*ங்க*ளில் குறிப்பிட*த்த*க்க வேட*ம் புரிந்துள்ளார்.

மேலும் மக்கள் திலகம் த*யாரிக்கவிருந்த* "இணைந்த* கைக*ள்" ப*ட*த்தில் இரு க*தாநாய*கிய*ரில் ஒருவ*ராக ந*டிக்க* ஒப்ப*ந்த*மாகி பின் சில காட்சிக*ளுட*ன் நின்று போனது.

கீதாஞ்ச*லியின் மறைவிற்கு ஆழ்ந்த* இர*ங்க*லை தெரிவித்துக் கொள்கிறோம்............ Thanks.........

oygateedat
1st November 2019, 03:15 AM
https://i.postimg.cc/kgKyYgGy/26659b20-7ae0-4ae7-a26d-d94d7fab175b.jpg (https://postimages.org/)

fidowag
1st November 2019, 11:06 AM
கடந்த வாரம் மதுரை சென்ட்ரல் சினிமாவில் வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "நாடோடி மன்னன் " தினசரி 4 காட்சிகளில் ஒரு வார வசூலாக*ரூ.1,93,000/- ஈட்டி அபார, அரிய, அசுர ,அட்டகாசமான சாதனை படைத்துள்ளது.*இனி வரும் காலத்தில், வெளியாகும் பழைய படம் இந்த வசூலை முறியடிக்க முடியுமா என்பது கேள்விக்குறி. ஆனால் தலைவரின் படத்தை தலைவர் படங்களே முறியடித்து சாதனை படைக்கும் என்பது திண்ணம் .

தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ் குமார் .

orodizli
1st November 2019, 03:25 PM
https://youtu.be/nn3QClVdThE........ Thanks.........

orodizli
1st November 2019, 03:28 PM
http://www.kalamnewstv.live/?p=2658

*KALAM NEWS TV*
*உண்மை செய்தியை உலகிற்கு உரக்கச் சொல்லும் கலாம் நியூஸ் டிவி தமிழ் தொலைக்காட்சி* ........... Thanks............

orodizli
1st November 2019, 03:29 PM
https://youtu.be/qUhlVwrT-Vc
தலைவர் தலைவர் தான்✌����������........ Thanks...

orodizli
1st November 2019, 03:35 PM
https://www.facebook.com/groups/MGR100/permalink/2507095412949336/?sfnsn=scwspwa&funlid=Dr5knPElclhV6E7k... Thanks......

orodizli
1st November 2019, 06:14 PM
இப்பொழுது 5.45 மணியளவில் ரிஷி மூவிஸ் திரு சாய் நாகராஜன் அவர்கள் அலைபேசியில் தெரிவித்த இனிய, இன்ப தகவல்கள்... மதுரை - சென்ட்ரல் சினிமாஸ் dts., திரையரங்கில் 'தீபாவளி' திருநாளில் திரையிடப்பட்டு... தினசரி 4 காட்சிகள், 7 நாட்களில் வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., அவர்களின் பிரமாண்ட லட்சிய படைப்பு "நாடோடி மன்னன்" , ரூபாய் 195000.00 எவரும் நெருங்க இயலாத, நினைத்து கூட பார்க்க முடியாத வசூல் பிரளயம் படைத்திருக்கிறார்... அது8 அடாத, விடாத மழையிலும்... காவியத்தை பார்த்து ரசித்த நல்ல உள்ளங்கள் 5001 நபர்களுக்கு மேல்......... கலர் பகுதி பிரிண்ட் சுமாராக இருந்தும்... பல காட்சிகள் எடிட்டிங் செய்து குறைக்கப்பட்டலுமே இவ்வளவு பெரிய
மகத்தான வசூலை சர்வ... சாதாரணமாக... அள்ளி குவித்துள்ளது...இதுதான் சரித்திரம்... சாதனை... சகாப்தம் ஆகியவைகளின் உச்சமோ...உச்சம்...

orodizli
1st November 2019, 06:15 PM
https://youtu.be/deqTvMWqWe4........ Thanks...

fidowag
1st November 2019, 11:13 PM
செய்தி திருத்தம்
*-------------------------

கடந்த வாரம் மதுரை சென்ட்ரல் சினிமாவில் வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட தயாரிப்பான "நாடோடி மன்னன் " ஒரு வார வசூலாக*ரூ.1,93,000/- என்று தகவல் அளித்திருந்தேன் . அது தவறு .


1958ல்* முதல் வெளியீட்டில் மதுரை தங்கம் தியேட்டரில் ( ஆசியாவின் மிக பெரிய அரங்கம் ) வெற்றிகரமாக 140 நாட்கள் ஓடியது . அதன்பின் நூற்றுக்கணக்கான முறை* மதுரையில் கடந்த 61 ஆண்டுகளாக பல அரங்குகளில் வெளியாகி வெற்றி வாகை சூடி வசூலை குவித்துள்ளது .* ஆனால் வாட்ஸ் அப்பில் நண்பர்கள் தவறாக 61 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் வெளியாகி வெற்றி பெற்று வசூலை குவித்துள்ளது என்பது போல் செய்தி பதிவு செய்துள்ளது மன வருத்தத்தை அளிக்கிறது .எனவே நண்பர்கள் செய்திகளை பதிவிடும்போது சரியான, முறையான தகவலை பதிவிடும்படி கேட்டு கொள்கிறேன் .



தீபாவளி வெளியீடாக , புதிய படங்களுக்கு போட்டியாகவும், கொட்டும் மழையை பொருட்படுத்தாமலும் , பக்தர்கள், ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் படையெடுத்து*நாடோடி மன்னன் வெற்றி காவியத்தை முற்றிலும் புதிய பரிமாணத்தில் கண்டு ரசித்து , பேராதரவு* அளித்து , விநியோகஸ்தர் அறிவித்த தகவலின்படி*ரூ.1,95,000/- வசூல் ஈட்ட* சுமார் 5.100 நபர்கள் காரணமாக திகழ்ந்துள்ளனர் .என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.* *இந்த வசூலை இனி* எந்த பழைய படமும் அவ்வளவு எளிதாக முறியடிக்க வாய்ப்பே இல்லை .* ஆனால் மற்றொரு தலைவரின் படம் வெளியானால் இந்த வசூலை முறியடிக்கும் என்பது எனது நம்பிக்கை . இந்த சாதனை, சரித்திரம், சகாப்தம் படைக்க பேருதவியாக இருந்த ரசிகப்பெருமக்களுக்கு ஏகோபித்த நன்றி .


* சென்னை**அகஸ்தியாவில் கடந்த மாதம் வெளியான புரட்சி தலைவரின் நாடோடி மன்னன் ரூ.66/-, ரூ.80/-* கட்டணத்தில் ஒரு வார வசூலாக ரூ.1,85,000/-* பெற்று சாதனை படைத்தது .* தற்போது மதுரையில்* சென்ட்ரல் அரங்கில் ரூ.30/-, ரூ.50/- கட்டணத்தில் ரூ.1,95,000/- வசூல் செய்து சரித்திரம் படைத்துள்ளது . எனவே அன்றும் இன்றும், என்றும் மக்கள் தலைவர் தான் வசூல் சக்கரவர்த்தி*
இவ்வாறு* : மதுரை நண்பர் திரு. எஸ். குமார் .செய்தியளித்தார் .

fidowag
1st November 2019, 11:27 PM
தினகரன்* *-வெள்ளி மலர்*
-------------------------------------------

நான் இல்லாமே நடக்காது - கவிஞர் வாலி .
---------------------------------------------------------------------
எம்.ஜி.ஆர். பொதுவாக அடிக்கடி கவிஞர் வாலியை வெறுப்பேற்றுவார் .அதை புத்திசாலித்தனமாக எதிர் கொள்ளும் முறையை எம்.ஜி.ஆர். ரசிப்பார் .

அப்போது தன்* கனவு படைப்பான "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தை பெரும் பொருட்ச்செலவில் எடுத்துக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். வாலியை சந்தித்தபோது "இந்த படத்தோட டைட்டில் கார்டில் உங்க பேரு இருக்காது கவிஞரே , ஏன்னா,இந்த படத்திற்கு உங்களிடம் பாட்டு கேட்க போவதில்லை . என்று விளையாட்டாக சொன்னார் .

வாலி , பதிலுக்கு, அண்ணே, என் பேரு இல்லாமே உங்க படத்தை , நீங்க ரிலீஸ் பண்ணவே* முடியாது , இது சவால் என்றார் .**

அப்படியா ? பார்த்துவிடலாமா என்று உசுப்பு ஏற்றிவிட்டார்* எம்.ஜி.ஆர்.*

அண்ணே, உலகம் சுற்றும் வாலிபன் டைட்டிலிலேயே என் பெயர் இருக்கு .* அதை எடுத்துட்டா,* உலகம் சுற்றும் பன்* என்றுதான் நீங்க படத்தை ரிலீஸ் செய்யணும் .

வாலி இல்லாமே எப்படி வாலிபன் வெளியாகும் என்றார் .

எம்.ஜி.ஆருக்கு சிரிப்பு* பொத்துக்* கொண்டு வந்தது .

உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக, பின்னர் 4 பாடல்கள் எழுத எம்.ஜி.ஆர்.*வாய்ப்பளித்தார் .* அதில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகின .

fidowag
1st November 2019, 11:35 PM
தினகரன்* *- வெள்ளிமலர் -01/11/19
------------------------------------------------------

தாலி பாக்கியம்*
------------------------------
எம்.ஜி.ஆர். உடல்நல குறைவால் அமெரிக்காவில் இருந்தபோது தமிழகம் எங்கும்* ஒளி விளக்கு படத்தில் கவிஞர் வாலி எழுதிய "இறைவா உன் மாளிகையில் "பாடல்தான் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது .

எம்.ஜி.ஆர். உடல்நலம் தேறி, சென்னை திரும்பியதும் , உடல்நலம் விசாரிக்க நேரில் போனார் வாலி.* அப்போது எம்.ஜி.ஆரின் மனைவி, வி.என்.. ஜானகி ,வாலியிடம் ,* ஒளி விளக்கு படத்தின்* உங்க பாடலான '"இறைவா உன் மாளிகையில் " பாடலைத்தான் நாடே பாடி, உங்க அண்ணனுக்கு பிரார்த்தனை செய்தாங்க .* அதன் பலனாலேதான் அவர் நல்லா ஆயிட்டாரு .* என்று உருக்கமாக சொன்னார் .

அப்போது வாலி, அம்மா அது வாலி பாக்கியம் இல்லை,. உங்க தாலி பாக்கியம் தான் என்று கூறி நெகிழவைத்தார் .

orodizli
2nd November 2019, 06:49 AM
Is Vijay trying to emulate MG Ramachandran with his films? https://indianexpress.com/article/entertainment/opinion-entertainment/is-vijay-trying-to-emulate-mg-ramachandran-with-his-films-bigil-6096161/.......... Thanks.........

orodizli
2nd November 2019, 06:50 AM
https://youtu.be/ZdAF3Zo9v5c........... Thanks.........

orodizli
2nd November 2019, 06:53 AM
Meet Santhana Krishnan, a die-hard MGR fan - The Hindu - https://www.thehindu.com/society/meet-santhana-krishnan-a-die-hard-mgr-fan/article28472749.ece....... Thanks...

orodizli
2nd November 2019, 07:05 AM
சகோதரர் திரு லோகநாதன் அவர்கள் பகிர்ந்த தகவல்களுக்கு நன்றி ... மதுரையில் பிரமாண்டமான வெற்றியை ஈட்டிய திரையுலக வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் படைப்பு " நாடோடி மன்னன்" காவியத்திற்கு ரசிகர்கள் யாவரும் டிக்கெட் எடுத்து தாமாக பார்த்து களித்தனர்... ஆனால்... ஒரு சில நடிகர் படங்களுக்கு சாலையில் வருவோர், போவோர் என கூப்பிட்டு இலவச டிக்கெட் எடுத்து கொடுத்து ஆயிரக்கணக்கில், லட்ச கணக்கில் செலவு செய்து கணக்கு காண்பிக்கின்றனர்... இப்படியும் புத்தி கெட்ட செயல்கள் நடைபெறுகிறது மாற்று முகாமில்... இந்த செய்கை மிகவும் வெட்க கேடானது...

oygateedat
2nd November 2019, 08:04 AM
https://i.postimg.cc/Rhtv0BF2/c05681ff-f0c3-4a71-9ac5-8c6a61573f9e.jpg (https://postimages.org/)

விரைவில்

கோவை

சண்முகாவில்

orodizli
2nd November 2019, 07:56 PM
1947-இல் ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா விடுதலை பெற தமிழ்திரைப்படங்கள் மக்களிடையே காலனிய ஆதிக்க எதிர்ப்பு உணர்வுகளை தூண்டின. 1931 ஆம் ஆண்டு வெளிவந்த முழுநீள பேசும் படமான காளிதாஸில் தேசிய தலைவர் காந்தி பெயரும் தேசிய முழக்கம் வந்தே மாதரமும் பயன்படுத்தப்பட்டன.

1937 ஆம் ஆண்டு வெளியான “சதி அனுசுயா” வில் அனுசுயா கைராட்டையோடு திரையில் தோன்றினார். 1936 ஆன் ஆண்டு வெளிவந்த “நவீன சாரங்க தாரா’ திரைப்படத்தில் கொடுங்கோல் மன்னனுக்கு எதிராக போராடும் மக்கள் காந்தி குல்லா அணிந்திருந்தனர்.

திரை அரங்குகள் நகர்புறங்களிலேயே இருந்ததனால், ஊரக மக்கள் திரைப்படங்களின் தாக்கத்துக்கு ஆட்படவில்லை. இந்திய விடுதலைக்குப்பின் ஊரக பகுதிகள் மின்மயமாக்கப்பட்டவுடன், திரைப்படம் மக்களுக்கு சென்று சேர ஆரம்பித்தது. இச்சூழலில் திமுக திரைப்படங்களை அரசியல் பரப்புரைக்கு பயன்படுத்திக் கொண்டது.

திரைப்பட ரீதியிலான அரசியல் பரப்புரைகள் மூன்று வழிகளில் நிகழ்ந்தது எனலாம்.

நேரடியாக திரைப்பட வசனங்கள் வாயிலாக அரசியல் பரப்புரையில் ஈடுபட்ட திரைப்படங்கள்...

நேரடி அரசியல் பரப்புரையில் ஈடுபட்ட திரைப்படங்கள் முதல்வகை. தி.மு.கவின் வெளிப்படையான பரப்புரை படங்களான நல்லதம்பி(1949), வேலைக்காரி( 1949) மந்திரிகுமாரி(1950), மர்மயோகி (1951), சர்வாதிகாரி (1951) பராசக்தி(1952) சொர்க்கவாசல், (1954) நாடோடி மன்னன் (1958) மற்றும் தாய் மகளுக்குக் கட்டிய தாலி (1959) ஆகியன.

திரைப்படங்களின் வெற்றிவிழா கூட்டங்களில் அரசியல் பிரச்சார உத்தி பின்பற்றப்பட்ட திரைப்படங்கள்...

எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த நாடோடிமன்னன் திரைப்படம் 100 நாட்களை தொட்ட பொழுது தி.மு.க அந்நிகழ்வை கொண்டாட வண்ணமயமான பிரமாண்டமான ஊர்வலத்தை நடத்தியது. அதன்பின் நடந்த பொதுக்கூட்டத்தில் சி.என்.அண்ணாதுரை முதலிய தி.மு.க தலைவர்கள் உரையாற்றினார்கள். கூட்டத்தில் பேசிய எம்.ஜி.ஆர் நாடோடிமன்னன் திரைப்படம் மக்களுக்கு சேவை செய்யும் கட்சி தி.மு.க என காட்டவே தயாரிக்கப்பட்டது என்றார்.

1947-இல் வெளியான “ராஜகுமாரி” படத்தில் நாயகன் கருப்புச் சட்டையில் தோன்றியது தி.க தொண்டர்களை பரவசப்படுத்தியது. 1957-இல் வெளியான சக்கரவர்த்தி திருமகன் படத்தில் “உதயசூரியன்” என பெயர் தாங்கி நடித்தார்.

1963-இல் வெளியான “எம்.ஜி.ஆர் திரைப்படத்திற்கு “காஞ்சித்தலைவன் “ என பெயரிடப்பட்டது. இது காஞ்சியில் தோன்றிய அண்ணாவை குறிக்கும் வகையில் இத்தலைப்புச் சூட்டப்பட்டது.
1968-இல் வெளியான “புதியபூமியில்” கதிரவன் என சூரியன் பெயரைத் தாங்கி நடித்தார்.

பாடல்கள் வழியாக மட்டும் அரசியல் பிரச்சாரம் செய்த திரைப்படங்கள்...

பாடல் வரிகளிலும் எம்.ஜி.ஆர் அண்ணா புகழ் பாடினார். இதயக்கனி படத்தில் வரும் பாடல் வரிகள்;

“உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்

“படியரிசி கிடைக்கிற காலத்திலே – நாங்க
படியேறி பிச்சை கேட்கப் போவதில்லே.
குடிசையெல்லாம் வீடாகும் நேரத்திலே – நாங்க
தெருவோரம் குடியேறத் தேவையில்லே.
சர்க்காரு ஏழைப் பக்கமிருக்கையிலே – நாங்க
சட்டத்திட்டம் மீறியிங்கே நடப்பதில்லே..”
என்ற ‘ஒளிவிளக்கு ‘ (1968). அப்போதைய முதலமைச்சர் அறிஞர் அண்ணா கொண்டு வந்த ஒரு ரூபாய்க்கு மூன்றுபடி (4.8 கிலோ) அரிசி திட்டம் மற்றும் குடிசைகளை கட்டட வீடுகளாக மாற்றும் திட்டம் ஆகியவற்றிற்கு தான் இப்படி பப்ளிசிட்டி.
” வாங்கைய்யா வாத்தியாரய்யா

அண்ணனின் தம்பி; உண்மையின் தோழன்
ஏழைக்குத் தலைவன் நீங்களய்யா
சமயம் வந்தது; தருமம் வென்றது
நல்லதை நினைத்தோம் நடந்ததையா!

”பொய்யும் புரட்டும் துணையாய் கொண்டு
பிழைச்சவரெல்லாம் போனாங்க.
மூலைக்கு மூலை தூக்கியெறிஞ்சும்
தலை குனிவாக ஆனாங்க.”
”கடமைக் கண்ணியம் கட்டுப்பாடு
காலத்தினாலே அழியாது.
சூரியன் உதிச்சதுங்க – இங்கே
காரிருள் மறைஞ்சதுங்க
சரித்திரம் மாறுதுங்க -இனிமே
சரியாப் போகுமுங்க…” ( நம்நாடு – 1969)

இந்த ‘நம்நாடு’ படம் மாமூல் எம்.ஜி.ஆர். •பார்முலா படமானாலும் இதில் முனிசிபல் தேர்தல் முக்கிய இடம் பிடித்திருக்கும். நடந்து முடிந்த 1967 சட்டமன்றப் பொதுத் தேர்தலின் உருவகமாக இந்த முனிசிபல் தேர்தல் சித்தரிக்கப்பட்டிருக்கும். அதாவது படத்தில் முனிசிபால் தலைவராக ஜெயிக்கும் எம்.ஜி.ஆர். சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஜெயித்த அண்ணாதுரையை குறித்தார்.. இந்த படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தின் பெயரும் ‘துரை’ என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் சில ‘சுருக்’ வசனங்களும் உண்டு
” பசியை தீர்க்கறவங்களா பார்த்து ஓட்டு போடுங்க.”
” யாருக்கு ஓட்டுப் போடணும்னு சமயம் வரும்போது அய்யாவே (எம்ஜிஆர்) உங்களுக்கெல்லாம் சொல்லுவாரு. ”
” குழாய் தண்ணீ வசதி கேட்டா கவுன்சிலரு ‘ஆகட்டும் பார்க்கலாம்’னு சொல்லிட்டு
போயிடறாரு ” (‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்பது காமராஜர் அடிக்கடி சொல்வாராம்)

முதலமைச்சராக இருந்த அண்ணா, நோய்வாய்பட்டு 1969 பிப்ரவரி 3ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து ‘ பதவி நாற்காலிக்காக திமுகவில் அடிபிடி நடக்கும். குழப்பம் வரும். தலைவனை பறிகொடுத்தக் கட்சி காணாமல் போய் விடும் ‘ என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுமூகமாக கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சராக 10-2-1969ல் பதவியேற்றார். இந்த விஷயத்தில் எதிரிகளுக்கு மூக்குடைப்பு ஏற்பட்டு தனது ஆருயிர் நண்பர் மு.க. முதலமைச்சரான மகிழ்ச்சியை எம்.ஜி.ஆர். 1970ல் வெளியான ‘எங்கள் தங்கம்’ படத்தில் ஒரு பாடலில் வெளிப்படுத்தியிருப்பார்.

எம்.ஜி.ஆர். 1967ல், தான் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிர் பிழைத்ததை சுட்டிக் காட்டி தனது ரசிகர்களை குஷிப்படுத்தியபடி தொடங்கும் ” நான் செத்து பொழச்சவன்டா. எமனைப் பார்த்து சிரிச்சவன்டா…” என்ற பாடல் தான் அது.

“ வாழை போல வெட்ட வெட்ட முளைச்சி
சங்கு போல சுடச்சுட வெளுத்து
வளரும் ஜாதியடா;
வந்தால் தெரியும் சேதியடா

சந்தனப் பெட்டியில் உறங்கிறார் அண்ணா
சரித்திரப் புகழுடன் விளங்கிறார்.
எதையும் தாங்கும் இதயம் கொண்டு – அண்ணன்
எங்களை வாழ்ந்திடச் சொன்னதுண்டு.
அண்ணன் அன்று நல்ல நல்ல கருத்தை
அழகுத் தமிழில் சொல்லிச் சொல்லிக் கொடுத்து
வளர்ந்த பிள்ளையடா; அதனால் தோல்வியில்லையடா”
ஓடும் ரயிலை வழிமறிச்சு
அதன் பாதையில் தனது தலை வைத்து
உயிரையும் துரும்பாய் தான் மதித்து
தமிழ் பெயரைக் காத்த கூட்டமிது ”

அண்ணாவுக்கு பிறகு கருணாநிதி முதலமைச்சரானதன் பின்னணியில் எம்.ஜி.ஆருக்கு முக்கிய பங்கிருந்ததாம். முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட்ட நாவலர் நெடுஞ்செழியன், மதியழகன் போன்றோரை ஓரம்கட்டி மு.கருணாநிதி ஜெயிக்க எம்.ஜி.ஆர். பெரிதும் உதவி செய்தாரென தகவல் உண்டு. 1970ல் எம்.ஜி.ஆரை கட்சியின் பொருளாளராக்கி அழகு பார்த்தார் கலைஞர்.
” சூரியன் உதிச்சதுங்க…”
இங்கே காரிருள் மறஞ்சதுங்க
சரித்திரம் மாறுதுங்க
இனி சரியா பொகுமுங்க

என்ற எம்.ஜி.ஆர் பாடல் 1967 பிப்ரவரியில் தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டதும் அரசியல் களம் பரபரப்பானது. அப்போது ஆட்சிப் பீடத்தில் இருந்த பக்தவச்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்ப திமுக வரிந்துக் கட்டியது.

காங்கிரசுக்கு ஆதரவாகவும் தங்களுக்கு எதிராகவும் பெரியாரே களம் இறங்கிய போதும் திமுக கவலைப்படவில்லை.

முக்கியமான இந்நிலையில், தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன், அதாவது ஜனவரி 12ம் தேதி கட்சியின் முக்கியப் பிரச்சார பீரங்கியான எம்.ஜி.ஆர்., தனது சென்னை ராமாவரம் வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் திமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

(எம்.ஜி.ஆரை சுட்டதாக நடிகர் எம்.ஆர்.ராதா கைது செய்யப்பட்டு சிறை தண்டனையும் பெற்றார். இந்த சம்பவத்துக்கு சினிமாத் தொழில் தகராறு என்று ஒரு பக்கமும்; இல்லையில்லை உண்மையில் அரசியல் பின்னணி இதில் மறைந்திருக்கிறதென்று இன்னொரு பக்கமும் காரசார வதந்திகள், ஊகங்கள் கிளம்பி ஒரு கட்டத்தில் அடங்கியது என்பது வேறு விஷயம்)

ஆனாலும், துப்பாக்கி குண்டுகளை தொண்டையில் தாங்கி எம்.ஜி.ஆர். உயிர் பிழைத்தார். ஏழைகளுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்த தர்மம், எம்ஜிஆரின் உயிரைக் காப்பாற்றி விட்டதென்ற இமேஜ் வலுப்பெற்று, ‘மக்கள் திலகமாக’ அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை மேலும் அதிகப்படுத்தியது. குண்டு காயம்பட்ட கழுத்தில் , பெரிய பேண்டேஜ் கட்டுடன் கைகூப்பி வணங்கியபடி எம்.ஜி.ஆர் ஆஸ்பத்திரியில் இருக்கும் •போட்டோவை போஸ்டர்களாக அச்சிட்டு தமிழகம் முழுவதும் ஒட்டி பிரச்சாரம் செய்தது திமுக.இத்தேர்தலில் திமுக அமோகமாக வென்று ஆட்சியை பிடித்ததற்கு எம்.ஜி.ஆரின் இந்த போஸ்டரும் ஒரு முக்கிய காரணம் என்பார்கள்..........

அப்போதைய, பரங்கிமலைத் தொகுதியில் (பல்லாவரம்) போட்டியிட்ட எம்.ஜி.ஆர், ஆஸ்பத்திரியில் இருந்தபடி தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு போகாமலேயே சுமார் 25 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்று, முதன்முறையாக எம்.எல்.ஏ., ஆனார்.

இத்தேர்தலில் திமுக 173 இடங்களில் போட்டியிட்டு 138 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. காங்கிரசுக்கு 49 இடங்கள் தான். ‘படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்’ என்று சொன்ன பெருந்தலைவர் காமராஜரே தனது சொந்த விருதுநகர் தொகுதியிலேயே தோற்று போகுமளவுக்கு எம்.ஜி.ஆர்., திமுக அலை வீசியது 1967 தேர்தலில்.

சாமானியர்கள் சிலர் சேர்ந்து 1949-ல் துவக்கிய ஒரு சாதாரண பிராந்தியக் கட்சி, சுமார் 18 ஆண்டுகளில் பாரம்பரியம்மிக்க ஒரு தேசிய கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடித்தது.அண்ணாதுரை தலைமையில் 6-3-1967ல் திமுக அரசு அமைந்ததற்கு எம்.ஜி.ஆரின் முக்கியமான...உழைப்பும் உண்டு........... Thanks.........

orodizli
2nd November 2019, 07:58 PM
https://m.facebook.com/groups/2505205066386259?view=permalink&id=2523049314601834&sfnsn=scwspwa&funlid=f7Ytgphy4VMCMW1P............ Thanks...

orodizli
2nd November 2019, 08:00 PM
https://youtu.be/ZEpMqWf6cQQ......... Thanks...

orodizli
2nd November 2019, 08:01 PM
https://youtu.be/MRL9PXNcGV8... Thanks...

orodizli
2nd November 2019, 08:04 PM
பேரறிஞர் அண்ணா அவர்களின் மனைவியார் ராணி அம்மாள் அவர்கள் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்று தமிழ்ப் பத்திரிகையில் வெளியிடப்பட்டது. பின்வரும் கருத்துப்பட எழுதியுள்ளார்

தம்பி கருணாநிதிக்கு,

எனக்கும் எனது குடும்பத்துக்கும் கடந்த ஆண்டுளில் பல சிறுமைகளும், கொடுமைகளும் இழைக்கப்பட்டிருக்கிறது ....ஆயினும் கசஹ்கத்துக்கு பக்கம் வரலாகாது என்பதற்காக அவற்றை மைன்று விழுங்கி சமைத்துக்கொன்று வந்திருக்கிறேன்.

அண்ணாவின் மறைவுக்கு பிறகு மக்களின் நன்மதிப்பைப் பெற்ற நல்லவரான கருணாநிதி விளங்குவார் என்று நான் நம்பினேன், ஆனால் அண்ணாவால் உருவாக்கப்பட்ட கழகத்திலிருந்து எம்.ஜி.ஆர், பல்லாயிரக்கணக்கான தொண்டர்களையும் இயக்கத்தை விட்டு விலகியதால் மூலம் கழகத்தை உடைத்துவிட்டார் ......அண்ணா உருவம் பொறித்த தபால் தலையை பிரதமர் வெளியீட்டபோது அவரிடமிருந்து அதை நான் பெரும் பேற்றைக்கூட நான் பெறவிடாமல் நீ தடுத்தாய்....கடைசியாக உன் அண்ணன் பெயரால் கேட்கிறேன் கழகத் தோழர்களின் அழுகுரல் ஓய, அவர்கள் அண்டடம் சிந்தும் ரத்தமும் படும் துயரமும் நிற்க, ஊழை ஆட்சி என்ற அவப்பெயர் மறைய நீயும், உனது மந்திரி சபையும் நாள் முடுக்கு வந்து, அண்ணனின் நல்ல தம்பிகள் என்பதை நாட்டுக்கு உணர்த்துங்கள்.

[ இதற்கு தி.மு.க சார்பில் கழக செயற்குழு பொதுச் செயலாளர் நாவலர் பதிலளித்தார் ........!]������...... Thanks.........

orodizli
2nd November 2019, 08:05 PM
புரட்சித் தலைவருக்கு பாரத் பட்டம் -தென்னிந்திய நடிகர் சங்கம் பாராட்டு விழா

அகில இந்தியாவுக்குமான 1971ஆன் ஆண்டிற்கான சிறந்த நடிகர் பரிசை புரட்சித் தலைவர் பெற்றார். அத்துடன் "பாரத்" பட்டமும் கிடைத்தது.

இதையொட்டி தென்னிந்திய நடிகர் சங்கம் புரட்சித் தலைவருக்கு பாராட்டு விழா நடத்தியது. 1972ஆம் வருடம் ஜூலை மாதம் 30ஆம் தேதி நடைபெற்ற இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் பெரிய அளவில் செய்யப்பட்டன.

இந்த விழாவில் புரட்சி தலைவருக்கு "நடிகர் சங்க சின்னம் பொறித்த" கேடயத்தை சிவாஜி கணேசன் வழங்கி பொன்னடி போர்த்தினார்.

பல நடிகர் நடிகைகள், பட உலக பிரபலங்கள் விசாவில் கலந்து கொண்டனர். என்.டி.ஆர், ராஜ்குமார் [கன்னடம்], பிரேம் நசிர், சஞ்சீவ் குமார் போண்டா பல மொழி கலைஞர்கள் மக்கள் திலகத்தை பாராட்டி பேசினார்கள்.

தென்னிந்திய திரையுலக சார்பில் சினிமா அதிபர் நாகி ரெட்டி, எஸ்.எஸ் ஆர், இயக்குனர் ஏ.பி.நாகராஜன், ஸ்ரீதர், நடிகர் சௌகார் ஜானகி போன்றோரும் பாராட்டி பேசினார்கள்.

- "புகைப்படம் விளக்குவதற்கானதாக மட்டுமே என்று கருதவேண்டும்" ... Thanks...

oygateedat
2nd November 2019, 08:20 PM
https://i.postimg.cc/sXpYTZVK/IMG-4174.jpg (https://postimages.org/)

oygateedat
2nd November 2019, 08:20 PM
https://i.postimg.cc/1XvNdGb0/9e847ca4-4fc1-4a3f-bdcd-b2c294c213ac.jpg (https://postimages.org/)

oygateedat
2nd November 2019, 08:21 PM
https://i.postimg.cc/mkngM80n/d341e051-1e6c-4715-bdc6-f3b14d388675.jpg (https://postimages.org/)

oygateedat
2nd November 2019, 08:22 PM
https://i.postimg.cc/xdgYM6mP/2014e458-0775-4df8-9512-c21b9049c3ce.jpg (https://postimages.org/)

oygateedat
2nd November 2019, 08:23 PM
https://i.postimg.cc/NfYcChxx/ff6d2c21-80a2-4504-aa75-a1fa6af00e4e.jpg (https://postimg.cc/Lhywhbwq)

oygateedat
2nd November 2019, 08:23 PM
https://i.postimg.cc/sg49PWgc/1c2d0156-04ce-4987-ba86-b259b3765f27.jpg (https://postimg.cc/4Yn9smt7)

oygateedat
2nd November 2019, 08:24 PM
https://i.postimg.cc/mk4gSPDY/9c39219f-ca77-4b0f-9ab9-de39c8a4821f.jpg (https://postimg.cc/BLh3SQ2b)

oygateedat
2nd November 2019, 08:26 PM
https://i.postimg.cc/QC6ZWCWx/IMG-4152.jpg (https://postimg.cc/JHB2f1q9)

oygateedat
2nd November 2019, 08:27 PM
https://i.postimg.cc/JnVr1sjf/IMG-4151.jpg (https://postimg.cc/4KPkPNLP)

oygateedat
2nd November 2019, 08:27 PM
https://i.postimg.cc/KYdPxDqm/IMG-4176.jpg (https://postimg.cc/rdN09x2H)

fidowag
3rd November 2019, 03:29 PM
வெள்ளி முதல் (01/11/2019) சென்னை பாலாஜியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "தனிப்பிறவி " தினசரி 2 காட்சிகள் (மேட்னி /இரவு ) நடைபெறுகிறது .
தகவல் உதவி : தங்கசாலை நண்பர் திரு.ராமு*

fidowag
3rd November 2019, 04:16 PM
தினத்தந்தி - 01/11/2019

என்றென்றும் கண்ணதாசன்*
----------------------------------------------

கண்ணதாசனின் நெருங்கிய நண்பராக இருந்தவர் வி.பி.ராமன் என்ற வழக்கறிஞர் .வி.பி.ராமனின் தந்தையும் ஒரு வழக்கறிஞர் .* லாயிட்ஸ் ரோடில் (அவ்வை சண்முகம் சாலை ) அடுத்தடுத்து நான்கு பங்களாக்கள் அவருக்கு இருந்தது .இதில் ஒன்றில்தான், சினிமாவில் நடிக்க வந்த புதிதில் , எம்.ஜி.ஆரும், அவரது சகோதரர் சக்கரபாணியும் வாடகைக்கு குடியிருந்தனர் .

சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் நீண்டநாள் கனவு .* தாங்கள் குடியிருந்த வீட்டையே வாங்க வேண்டும் என்பது அவர்களின் ஆசை .* ஆனால் அதற்கு வாடகை தரவே வருமானம் போதாதா நிலையில் எப்படி வாங்குவது .

ஒருநாள் வி.பி. ராமனின் தந்தை எம்.ஜி.ஆரை அழைத்து வீட்டை விற்க போகிறேன் .வேறு ஒருத்தருக்கு தர மனமில்லை.* நீயே வாங்கி கொள் என்றார் .* பதிலுக்கு*எம்.ஜி.ஆர்., வாங்கணும்னு ஆசைதான் . ஆனால் இப்போ இருக்க சூழல்ல வாங்க முடியாது என்றார் .

ஏன் முடியாது. இதுவரையில் நீ தந்த வாடகையை அட்வான்ஸாக வைத்துக் கொள்கிறேன் . பாக்கியை கொஞ்சம் கொஞ்சமாக தா என்றார் வி.பி.ராமனின் தந்தை*

அப்படி எம்.ஜி.ஆர். வாங்கிய வீடுதான் இன்றைக்கு அ.இ .அ .தி.மு.க. வின் தலைமை அலுவலமாக* இருக்கிறது .* *இதை எம்.ஜி.ஆர். நான் ஏன் பிறந்தேன்*என்கிற தான் எழுதிய நூலில் குறிப்பிட்டு உள்ளார். அதை வெளியிட்டது கண்ணாதாசன் பதிப்பகம் .

orodizli
3rd November 2019, 07:41 PM
1967 நவ 1 தீபாவளி ரிலீஸுக்கு ஒரு சில தினங்களுக்கு முன்னால் விவசாயி படத்தின் பிரிவ்யூ ஷோ எம்ஜிஆரிடம் போட்டு காண்பிக்க பட்டது. அதைப் பார்த்த எம்ஜிஆர் படத்தின் ஓப்பனிங் சீன் சரியில்லை, ரீ ஷீட் பண்ண வேண்டியிருக்கும் என்று சொல்லி விட்டார். படத்தின் ஓப்பனிங் சீன் விவசாயி பாடல்தான். உடனே வசனகர்த்தாவை வரச்சொல்லி விவசாயியின் பெருமையை பாடலுக்கு முன்னாடி சேர்க்க வேண்டும், அதற்கு தகுந்தவாறு வசனத்தை எழுத வேண்டும் என்றார். பின்னர் அதை உடனே ரீ ஷுட் செய்து படத்தை குறிப்பிட்ட நாளிலேயே வெளியிட்டார்.
அப்படி அவர் சேர்க்க சொன்ன வசனம்
எம்ஜிஆருடைய தாயும் தகப்பனும் பேசிக்கொண்டிருக்கும் காட்சியில்
என்னங்க நம்ம பையனுக்கு பொண்ணு பார்த்திட்டீங்களா என்றவுடன் அப்போது பார்த்து கல்யாண புரோக்கர் எம்ஜிஆரின் தகப்பனாரிடம் கைவசம் ஏகப்பட்ட இடம் இருப்பதாக கூறுவார்.உடனே அவரும் யாரெல்லாம் சொல்லுங்கள் என்பார்.
புரோக்கரும் பண்ணையார் மகள், ஜமீன்தார் மகள் என்று ஒவ்வொன்றாக சொல்லி கொண்டே போவார். சரி எதையாவது ஒன்றை பேசி முடியும் என்பார்.
புரோக்கர் உடனே ஜமீன்தார் மகளுக்கு டாக்டர் மாப்பிள்ளை வேணுமாம், பண்ணையார் மகளுக்கு இன்ஜினியர் மாப்பிள்ளை வேணுமாம் என்பார்.
உடனே கோபமுற்ற எம்ஜிஆரின் தந்தை வெளியே போங்கையா என்பார்.
எம்ஜிஆரின் தாய் நாள் அன்றைக்கே சொன்னேன் பையனை நல்ல படிப்பு படிக்க வைங்கேன்னு சொன்னேன் நீங்க தான் விவசாயப்படிப்பை படிக்க வைச்சிட்டீங்க இப்ப பாருங்க பொண்ணு கிடைக்க மாட்டேங்குது என்பார். உடனே எம்ஜிஆருடைய அப்பா ஏண்டி இந்த படிப்புக்கு என்னடி அந்த ஜமீன்தார், பண்ணையார்,ஏன் இந்த உலகத்துக்கே சோறு போடறவன் யாரு ,யாரு என்று உரக்க பேசியவுடன் தலைவர் விவசாயி, விவசாயி என பாடும் போது பறக்கும்
விசில் சத்தம் நடுவே பாட்டு உங்களுக்கு கேட்டதா ஒரு சாதாரண காட்சியை சூப்பர் சீனாக மாற்றியது தலைவருடையை திரைக்கதை அறிவு............. Thanks.........

orodizli
3rd November 2019, 07:42 PM
இனிய மாலை வ*ணக்கம் ந*ண்ப*ர்க*ளே!

புர*ட்சித்த*லைவ*ருட*ன் சிலோன் எம்ஜிஆர் என்றழைக்க*ப்ப*ட்ட* விஜ*ய* கும*ர*ணதுங்கே!

இவ*ர் 114 ப*டங்க*ளில் ந*டித்துள்ளார். பெரும்பாலும் வெற்றிப்ப*ட*ங்க*ளே. பாட*க*ர், அர*சிய*ல் த*லைவ*ர், த*யாரிப்பாள*ர் என ப*ன்முக*த்தன்மை கொண்ட*வ*ர்.

தன*து அர*சியல் எதிரிக*ளால் 1988 பிப்ர*வ*ரியில் கொடூர*மாக சுட்டுக்கொல்ல*ப்ப*ட்டார். அப்போது இவ*ர் வ*ய*து 43 மட்டுமே. விஜ*ய* கும*ர*ணதுங்கே ம*றைந்த* பிற*கும் இவ*ர் ந*டித்த சில ப*ட*ங்க*ள் வெளியாகி வெற்றி பெற்ற*ன. த*மிழில் ந*ங்கூர*ம் என்ற* ப*ட*த்தில் லட்சுமிக்கு ஜோடியாக* ந*டித்துள்ளார்.

1984ல் ஸ்ரீல*ங்கா ம*காஜ*ன க*ட்சியை விஜ*ய*குமார*துங்கே துவ*க்கினார். இவ*ர*து மனைவி ச*ந்திரிகா குமார*துங்கே சிலகாலம் இலங்கை அதிப*ராக இருந்துள்ளார்........ Thanks...

orodizli
3rd November 2019, 07:44 PM
“ராம்சந்தருக்கு பால் கொண்டு வாடா..!” எம்.ஜி.ஆருக்கு கிடைத்த முதல் கவுரவம்: நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் -

ராம்சந்தர்

பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக சத்யபாமா உழைக்க ஆரம்பித்தார். உடலை வருத்தி ஒரே நாளில் பல சிறுசிறு வேலைகளைச் செய்து சம்பாதிக்க ஆரம்பித்தார். ஆனாலும் வறுமை அந்தக் குடும்பத்தை முழுவதுமாகவிட்டு விலகி ஓடிவிடவில்லை. பள்ளிசேர்க்கும் வயது வந்தபோது கும்பகோணம் ஆனையடிப் பள்ளியில் பிள்ளைகள் சேர்க்கப்பட்டனர். பள்ளியில் ராம்சந்தர் படுசுட்டி. ஏதாவது குறும்பு செய்துவிட்டு ஓடி ஒளிந்துகொள்வான். பஞ்சாயத்து, அண்ணன் சக்கரபாணிக்கு போகும். தம்பியைக் கூப்பிட்டுக் கோபப்படுவதுபோல் நடிப்பார். புகார் சொன்னவர்கள் சமாதானம் அடைவர். பிறகு, ''ஏன் ராம்சந்தர்... இப்படிச் செய்றே? அம்மாவிடம் யாராவது இதைச் சொன்னா பிரம்படிதான் கிடைக்கும்” என தம்பி மீது இரக்கப்பட்டுப் பேசுவார் சக்கரபாணி. எம்.ஜி.ஆர் அவர்களிடமிருந்த நல்ல பழக்கங்கள் பல சத்யபாமாவினால் வந்தவை. பிள்ளைகள் பொய்சொல்வதை, சொந்த சகோதரனாக இருந்தாலும் அனுமதியின்றி ஒருவர் பொருளை இன்னொருவர் எடுப்பதை அவர் அனுமதிக்கமாட்டார்.

இம்மாதிரி சமயங்களில்தான் சத்யபாமா பிரம்பைத் தூக்குவார்; படிப்பில் குழந்தைகள் சோடைபோனால்கூட மன்னிப்பார்; ஒழுக்கத்தில் குறை கண்டால் பொறுக்கமாட்டார். ஒழுக்கம்தான் பிள்ளைகளை உயர்த்தும் என்பதில் உறுதியான பெண்மணி அவர். சத்யபாமாவின் இந்தக் கண்டிப்புதான் சகோதரர்களை வறுமையிலும் செம்மையாக இருக்கவைத்தது.

படிப்பு, அப்படி இப்படி என்றாலும் சகோதரர்களுக்கு நடிப்பு நன்றாக வந்தது. பள்ளியில் அந்த வருட விழாவில் அரங்கேற்றப்பட்ட 'லவகுசா' நாடகத்தில் ராம்சந்தருக்கு லவன் வேஷம் அளிக்கப்பட்டது. சிறுவன் பின்னியெடுத்துவிட்டான். அதுமுதல் ராம்சந்தருக்கு தடபுடல் மரியாதைதான் பள்ளியில். நாடக ஆசையில் கொஞ்சநாள் கனவிலும் நனவிலும் தன்னை ராஜா போன்று எண்ணிப் பேசிவந்தான்.

எம் ஜி.ஆர்

இப்படித்தான் ஒரு விடுமுறை நாளில் சிறுவன் ராம்சந்தர் வில் அம்பு செய்து தெருவில் விளையாடிக்கொண்டிருந்தான். சிறுவன் விட்ட அம்பு தெருவில் போய்க்கொண்டிருந்த ஒருவர் மீது பட்டு காலில் ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. குறிபார்த்து விட 'ராமச்சந்திர'னா என்ன; ராம்சந்தர்தானே! பயந்து வீட்டில்போய் பதுங்கிக்கொண்டான். ஆனாலும் அடிபட்டவர், கோபத்துடன் ராம்சந்தர் வீட்டுக்குள் நுழைந்து, ''கூப்பிடுறா... உன் அப்பா அம்மாவை'' என எகிற... அப்போது, எதேச்சையாக உள்ளே நுழைந்தார் வேலுநாயர். அடிபட்டவரை பார்த்து, ''வாரும்... எப்போ வந்தீர்... ஏன் இவ்வளவு தாமதம்... இது என்ன ரத்தம்” எனக் கேட்டார். ராம்சந்தருக்கு ஒன்றும் புரியவில்லை. வீட்டுக்குள் இருந்துவந்த சத்யபாமாவுக்கும் ஒன்றும் புரியவில்லை. பின்னர்தான் புரிந்தது. வந்தவர் வேலுநாயரின் உறவினர். நாடகக் கம்பெனி ஒப்பந்ததாரர். பிள்ளைகள் இருவரும் படிப்பில் சற்று மந்தமாக இருந்ததால் சத்யபாமாவிடம் அனுமதி பெற்று அவர்களை நாடகக் கம்பெனியில் சேர்க்கத் திட்டமிட்டு வரச்சொல்லியிருக்கிறார். வந்த இடத்தில்தான் இந்த ரகளை.

எது எப்படியோ நாராயணன் நாயருக்கு (அடிபட்டவர்) சகோதரர்களைப் பிடித்துவிட்டது. சத்யபாமாவையும் பேசிக் கரைத்துவிட்டார் வேலுநாயர். புகழ்பெற்ற மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி அப்போது கும்பகோணத்தில் முகாமிட்டிருந்தது. அன்றே சிறுவர்கள் அதில் சேர்த்துவிடப்பட்டனர். கும்பகோணத்தில் கொஞ்சநாள் பயிற்சி. பின்னர் பாண்டிச்சேரியில் நாடகம் போட கம்பெனி நிர்வாகம் முடிவெடுத்தது. முதல்முறையாகத் தாயைப் பிரிந்துசெல்கின்றனர் சகோதரர்கள். இரண்டு தரப்பிலும் கண்ணீர் வெள்ளம். “ எல்லாம் உங்க நன்மைக்குதானப்பா” பிள்ளைகளின் கண்ணீரைத் துடைத்தபடி சொன்னார் சத்யபாமா. பீறிட்டுக் கிளம்பிய ரயிலின் சத்தத்தில் குழந்தைகளின் அழுகைச் சத்தம் குறைவாகவே கேட்டது.

எம்.ஜி.ஆர்நாடகக் கம்பெனியில், ராம்சந்தருக்கு மகாபாரத நாடகத்தில் விகர்ணன் வேஷம் கொடுக்கப்பட்டது. கௌரவர்களில் ஒருவனே இந்த விகர்ணன். கண்பார்வையற்ற மன்னனான திருதராஷ்டிரனுக்கும், காந்தாரிக்கும் பிறந்த நூறு பிள்ளைகளுள் ஒருவன். சிறுவேஷம் என்றாலும் ராம்சந்தருக்கு தன்னை நிரூபிக்க அது போதுமானதாக இருந்தது. நாடக நுணுக்கங்களை ஓரளவு சகோதரர்கள் தெரிந்துகொள்ளத் தொடங்கினர். விகர்ணன் வேஷத்தில் நன்றாக நடித்ததால், அடுத்த முறை அதே நாடகத்தில் அபிமன்யு வேஷம் தரப்பட்டது.

'நாடகத்தில் படையோடு எழுந்திடுவேன்' என அபிமன்யு பாடும் பாடல் ஒன்று உண்டு. ஆனால், எம்.ஜி.ஆருக்கு பாடுவதில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. ரிகர்சலிலேயே கொஞ்சம் அப்படி இப்படித்தான் பாடினார். பாடலாசிரியரும் நாடகத்தின் நகைச்சுவை நடிகருமான பக்கிரிசாமி, “பையா நீ இந்தப் பாட்டை நாடகத்தில் நன்றாகப் பாடி முடித்துவிட்டால், உனக்கு என் பரிசு 1 ரூபாய். இல்லையென்றால் நான் தரும் தண்டனையை நீ வாங்கிக்கொள்ள வேண்டும்” எனக் கறாராகச் சொல்லிவிட்டார். 'இதென்னடா வம்பு, பாடினால் பரிசு... பாடாவிட்டால் தண்டனையா...' சரியாக சிக்கிக்கொண்டோமா என்ற குழப்பத்துடனே ரிகர்சலில் ஈடுபட்டான் சிறுவன் ராம்சந்தர்.

தண்டனைக்காக அல்லாமல் தான் பாடத்தகுதியற்றவன் என்ற ஆசிரியரின் எண்ணத்தை மாற்றியாகவேண்டும் என முடிவெடுத்தான் ராம்சந்தர். பலநாட்கள் கடும் முயற்சியில் ரிகர்சலில் ஈடுபட்டான். நாடகத்தன்று நாடகக் குழுவில் இருந்த ராம்சந்தரின் நண்பர்கள் பதைபதைப்போடு மேடையை வெறித்துகொண்டிருந்தனர்.

ராம்சந்தர் பாடத் தொடங்கினான். எங்கும் சுருதி விலகவில்லை. வாத்தியாரின் எதிர்பார்ப்பையும் விஞ்சி உச்சஸ்தாயியில் பாடி முடித்தபோது... அரங்கமே அதிரும்படி கைதட்டல் எழுந்தது.


வாத்தியார் வைத்த பரீட்சையில் தன் தம்பி ஜெயித்துவிட்டதை மகிழ்ச்சியுடன் அரங்கின் ஓரத்தில் நின்று ரசித்துக்கொண்டிருந்தார் சக்கரபாணி . நினைத்ததை முடித்துவிட்ட மகிழ்ச்சியில், கூட்டத்தைப் பெருமிதத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான் ராம்சந்தர்.

அரங்கில் அன்று அவன் காதுகளில் முதன்முறையாக ஒலித்த கைதட்டல், அடுத்த பல பத்து ஆண்டுகளுக்கு தொடரப்போவதை காலம் மட்டுமே அன்று அறிந்திருக்கும்.

சில நிமிடங்களும் தாமதிக்கவில்லை. பக்கிரிசாமி, ராம்சந்தரை அழைத்து கட்டிப்பிடித்தபடி ஓங்கி குரல் கொடுத்தார். “ஏய் பையா, ராம்சந்தருக்கு பால் கொண்டுவாங்கடா..”- ராம்சந்தருக்கு இன்னும் மகிழ்ச்சி. ஆம் அன்றைய நாளில் பாய்ஸ் கம்பெனியில் ஒரு வழக்கம் உண்டு. அதாவது, நாடகத்தில் அப்ளாஸ் வாங்கும் அளவு சிறப்பாக நடிப்பவர்களுக்கு கம்பெனி உரிமையாளர் தன் கையால் நாடகம் முடிந்தவுடன் பாராட்டி பால் தருவார். கம்பெனியில் அது ஒரு கெளரவம். அதுவரை அரிதான சிலரே அப்படி கெளரவம் பெற்றிருந்தனர். முதன்முறையாக ராம்சந்தருக்கு அன்று, அந்தக் கெளரவம் கிடைத்தது.

எம்.ஜி.ஆர்

கம்பெனியில் நல்ல நடிகன் என பெயர் வாங்கியாகிவிட்டது. இப்போது முறைப்படி ராம்சந்தருக்கு 6 வருட அக்ரிமென்ட்டும், சக்கரபாணிக்கு 3 ஆண்டுகளும் என ஒப்பந்தம் கையெழுத்தானது. சகோதரர்கள் தொடர்ந்து பாய்ஸ் கம்பெனியின் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தனர். பாலபார்ட் நடிகனாக ராம்சந்தர் நடித்துக்கொண்டிருந்தபோது அங்கு ராஜபார்ட் நடிகராக இருந்தவர் அந்நாளைய சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான பி.யு.சின்னப்பா. கதாநாயக நடிகர் என்பதால், கம்பெனியில் ஏக மரியாதை அவருக்கு. அதைப் பார்க்கிறபோதெல்லாம் தானும் ஒருநாள் இப்படிப் பலரும் மதிக்கும் பெயரும் புகழும் பெற்ற நடிகனாக வேண்டும் என்ற வெறி சிறுவன் ராம்சந்தரின் மனதில் எழும். ராம்சந்தரின் ஆசை நிறைவேறியதா...?........... Thanks.....

orodizli
3rd November 2019, 07:47 PM
பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் நற்பணி சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எம் எஸ் மணியன் அன்பு ரத்ததின் ரத்தமானா உடன்பிறப்புகளுக்கு எனது இளைய மகள் s சந்தியா அவர்களின் திருமணம் 15.11.2019 திருமலையில் நடைபெற உள்ளது. மக்கள் திலகம் எம் ஜி ஆர் அண்ணன் சைதையார் அவர்களின் ஆசியுடன் திருமண வரவேற்பு 18.11.2019 அன்று சென்னை அசோக் நகர் m p k மஹால் லக்ஷ்மன் ஸ்ருதி அருகில் புகாரி ஓட்டல் எதிரில் மாலை 6.30 மணிக்கு மேல் நடைபெற உள்ளதால் அனைவரும் இதையே அழைப்பிதழாக ஏற்றுக்கொண்டு வருகை புரிந்து மணமக்களை வாழ்த்து ம்படி மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம் ������.......... Thanks...

orodizli
3rd November 2019, 07:48 PM
https://youtu.be/yrp-lBW99tM.......... Thanks...

orodizli
3rd November 2019, 07:51 PM
எம் ஜி ஆருக்கு எத்தனை முகம்
அழகு காட்டும் முகம் ஒன்று
கருணை காட்டும் முகம் ஒன்று
வீரம் காட்டும் முகம் ஒன்று
பாமரனை காக்கும் முகம் ஒன்று
வள்ளலாகி தரும் முகம் ஒன்று
வெற்றி காணும் முகம் ஒன்று
எவராலும் வெல்ல முடியாத முகம் ஒன்று
எத்தனை முகம் கண்டாலும் அகத்தின் அழகான பொன்மனதின் அழகு தானே முகத்தில் பிரகாசிக்கிறது

வாழ்க எம். ஜி. ஆர் ., புகழ்.......... Thanks.........

orodizli
3rd November 2019, 07:54 PM
உலகில் எந்த ஒரு நாட்டிலும் நடக்காத அதிசயம் என்னவென்றால் திரைபடத்தின் மூலம் ஒரு நடிகராக படிப்படியாக [1936-1947]உயர்ந்து தன்னுடய கொள்கைக்கு ஏற்ற கதைகளில் மட்டுமே நடித்து ஒரு சாதாரண மக்களின் உள்ளங்களில் குடிக்கொண்டு
திரைப்படம் காண வந்தவரை ஒரு ரசிகனாக மாற்றி ,1954ல் மலைக்கள்ளன் படம் மூலம் புரட்சி நடிகராக உயர்ந்து 1977 வரை திரை உலகில்

புரட்சி நடிகர்

மக்கள் திலகம்

வாத்தியார்

வசூல் சக்ரவர்த்தி

கலைவேந்தன்

கொடைவள்ளல்

பொன்மனச்செம்மல்

பாரத்

புரட்சித்தலைவர்

என்ற பட்டங்களை மக்கள் மன்றமும் ரசிகர் மன்றமும் வழங்கிய பாராட்டுக்களை பெற்றவர் நம் மக்கள் திலகம் .

அவர் திரைபடத்தில் ஏற்ற பாத்திரங்களும் ,கதை அமைப்பும் , பாடல்கள் , வசனங்கள் எல்லாமே சமுதாயத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் அன்றாட பிரச்சினைகளை பிரதிபலித்தது .

1950,1960,1970,1980,1987 ..... கால கட்டங்களில் ஏழை மக்களின் கண்ணீரை துடைக்கும் மக்கள் காவலனாய் , பல நல திட்டங்கள் வகுத்து நாடோடி மன்னனில் சொன்னதை 1977ல் செய்து காட்டி 1987 வரை நல்லாட்சி புரிந்து அவர் மறைந்து 30 ஆண்டுகள் பின்னரும் அவரது ஆட்சி இன்றும் தொடர்கிறது .
அவரது திரைப்படங்களும் இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது .

மக்கள் திலகத்தின் புகழ் ஒரு அமுத சுரபி போல் ...........

நீங்கள் சொன்னதை போல் நம் இதய தெய்வம் மக்கள் திலகம் அவரின் படங்களை மக்களும் ரசிகர்களும் எதையெல்லாம் உண்மையோ அதை மட்டும் நம்பினார்கள் .

ரசிகர்களையும் மக்களையும் என்றுமே யாரும்
ஏமாற்ற முடியாது ............ Thanks.........

orodizli
3rd November 2019, 07:59 PM
https://youtu.be/vpEOq6Cbg-8........ Thanks.........

orodizli
3rd November 2019, 08:09 PM
கண்களும் நடிக்கும் அவரது புருவமும் நடிக்கும் என்று காலங்காலமாக கதையளக்கும் போலிகளே, இந்தக்காட்சியைப் பாருங்கள் ... தனது ஒரு காலில் காயம் உண்டாகி நடக்க முடியாமல், இருக்கும்போதும் தன்னைக் கொல்ல வரும் எதிரியை சாதுரியமாக தடுத்து அவனையே அடித்து விரட்டும் தலைவரின் சாதுரியத்தைப் பாருங்கள் ...தமிழர்களின் கலையில் இதுவல்லவோ வீரம் ... இது. இவருக்குத் தானே வருது... அப்ப இவர்தானே சூப்பர்நடிகர்... புரட்சித்தலைவரின் வீரத்தில் அனைவருக்கும் இன்றையநாள் நல்லதாக அமையட்டும்..... மதுரை எஸ் குமார்....(தாயின் மடியில் காவியம் காணொளி)...... Thanks.........

orodizli
3rd November 2019, 08:14 PM
1979.....திரு K.A. கிருஷ்ணசாமி அவர்கள் தமிழக மந்திரியாக பதவி ஏற்றவுடன் அவரை இருக்கையில் அமரசெய்த காட்சி .

உடன் இருப்போர் திரு சோமசுந்தரம் மற்றும் திரு நாஞ்சில் மனோகரன் .

1976ல் புரட்சிதலைவர் அவர்கள் அண்ணா திமுக கொடியினை தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை கையில் பச்சை குத்திக்கொள்ள சொல்லியபோது திரு நாஞ்சிலாரும்அண்ணா திமுக கொடியினை தந்து கையில் பச்சை குத்தி .
கொண்டார் .நாஞ்சிலார் கையில் அதை காணலாம் .......... Thanks.........

orodizli
3rd November 2019, 08:16 PM
கண்ணதாசனும் எம்.ஜி.ஆரும்.

1965-ஆம் ஆண்டில் பரங்கிமலைத் தொகுதியில் பாலம் கட்டவும், நீர்த்தேக்கம் அமைக்கவும் தந்த தொகை ரூபாய் 41,500 ஆகும்.

1968-ஆம் ஆண்டில் மட்டும் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி, விழுப்புரம் கல்லூரி, செங்கல்பட்டு கல்லூரி, கேரளா, பாண்டிச்சேரி, ஆந்திரா, மராட்டிய மாநில வெள்ள நிவாரணங்கள், ராஜஸ்தான் பஞ்சநிவாரணம், ஒரிஸ்ஸா பூகம்ப நிவாரண மற்றம் பல நற்செயல்களுக்கும் வழங்கிய தொகை இலட்ச ரூபாய்களுக்கும் மேலாகும்.

இவ்வளவுதானா? …. 1968 – ஆம் ஆண்டே சென்னையில் தீப்பிடிக்காத வீடுகள் கட்டித் தந்த தொகை ரூபாய் ஒரு இலட்டசமாகும்.

சிலம்புச்செல்வர் ம.பொ.சி. விழாக்களுக்கு மட்டும் பலமுறை தந்த ரூபாய் ஐந்து இலட்சங்கள்.

இவை போன்று எத்தனையோ, தமிழ்ச்சான்றோர்கள், கலையுலகப் பிரமுகர்கள், நலிந்த கலைஞர்கள் எம்.ஜி.ஆரிடம் தனிப்பட்ட முறையில் பெற்ற நிதி ஏராளம்! ஏராளம்!

தாராளமாய்க் கலியுகப் பாரிவள்ளலாம் எம்.ஜி.ஆர். கரங்கள் ஈந்த நிதிக்கு எல்லாம் பட்டியல் ஈந்தால் அதிவே ஒரு நூலாக மலர்ந்து விடும்.

இவற்றையெல்லாம் இங்கு குறிப்பிடக் காரணம், கவியரசர் பார்த்த பார்வையில் எம்.ஜி.ஆர் இறுதி வரையில் ஈயும் மனத்தோடு இருந்தார் என்பதனைச் சுட்டிடவே என்பேன்.

அதுமட்டுமல்ல… ‘கண்ணதாசன் என்ற கவிஞரின் வாக்கு, பொய்த்ததில்லை’ என்பதனை இந்தப் தமிழ்ப்புவியும் அறியவேண்டும் என்ற ஆவலுமே எனலாம்.

கவிஞரின் பாராட்டுக் கடிதத்தில் பவனி வரும் சில சொல்லோவியங்களைப் பாருங்களேன்!

இதய கீதமாக மட்டுமா எம்.ஜி.ஆர் திகழ்ந்தார். இலட்சோப இலட்சம் மக்களின் இதய தெய்வமாக அல்லவா எம்.ஜி.ஆர் திகழ்ந்தார். இன்றும் திகழ்ந்து கொண்டல்லவா இறந்தும், இறவாயிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இன்னும் கவியரசரின் கணிப்பைச் சற்று, காண்போமா?

இது கணிப்பு மட்டுமல்ல… 1954 – 56 – ஆம் ஆண்டுகளில் வெளிவந்த படங்கள் சரிந்திர சாதனைகளுமே எனலாம்.

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் நடித்து 1956 – ஆம் ஆண்டில் வெளிவந்த படங்கள் மூன்று. அவை முறையே,

அலிபாபாவும் 40 திருடர்களும்
மதுரை வீரன்
தாய்க்குப்பின் தாரம்

இம்மூன்று படங்களுமே வித்தியாசமான கோணங்களில் வெளிவந்து மகத்தான வெற்றிகளை ஒரே ஆண்டில் கண்ட ஒப்பற்ற படங்களாகும்.

12.1.1956 அன்று வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸ் வெளியீடான, டி.ஆர். சுந்தரம் இயக்கிய ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ தமிழில் வெளியான முதல் கலர் திரைப்படமாகும்.

இத்திரைப்படம் மகத்தான வெற்றி வெற்றதோடு, மதுரை ‘சிந்தாமணி’ திரையரங்கில் தொடர்ந்து, தினமும் மூன்று காட்சிகளாக 168 நாள்கள் ஓடி, சாதனை படைத்தது.

‘மதுரை வீரன்’ – இப்படத்தின் பெரும் பெருமைகளில், சிலவற்றைக் கண்டு மகிழ்ந்தோம்.

‘தாய்க்குப்பின் தாரம்’ 21.9.1956 அன்று வெளியிடப்பட்ட வெற்றிப் படமாகும். இப்படமும் மதுரை மாநகர் சந்திரா டாக்கீஸில் 161 நாள்கள் ஓடி, சாதனை படைத்தது. இப்படத்தின் சிறப்புகளையும் கண்டோம்.

ஆக, புரட்சி நடிகர் நடித்து 1956 – ஆம் ஆண்டில் வெளிவந்த மூன்று திரைக்காவியங்களும் மகத்தான வெற்றிகளைக் கண்டன என்பதனை நாம் அறியலாம்.

இனி இரண்டு படங்கள் எவை?

மலைக்கள்ளன்,

குலேபகாவலி – எனும் இவையே.

‘மலைக்கள்ளன்’, அன்றைய தமிழக அரசின் ஆஸ்தானக் கவிஞராக இருந்த நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை எழுதிய கதையாகும். இக்கதை பட்சிராஜா பிலிம்ஸாரின் சார்பில் திரைப்படமாகத் தயாரித்தபோது, கலைஞர் மு. கருணாநிதி, வசனங்களைத் தீட்டினார். 1954 – ஆம் ஆண்டு வெளியான இப்படம் மகத்தான வெற்றியைப் பெற்றதோடு, ஜனாதிபதியின் வெள்ளிப்பதக்கம் பெற்ற முதல் தமிழ்ப்படம் என்ற பேற்றினையும் பெற்றது. அப்படம் கோவையில் 150 நாள்கள் தொடர்ந்து ஓடியது.

குலேபகாவலி – ஆர்.ஆர். பிக்சர்ஸ் சார்பில், டி.ஆர் ராமண்ணா இயக்கத்தில் உருவானது. இப்படத்தின் பாடல்கள், வசனங்களைத் தஞ்சை இராமையதாசு எழுதினார். 1955 – ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படமும் மகத்தான வெறியைக் கண்டது. திருச்சி பிரபாத் திரையரங்கில் இப்படம் 166 நாள்கள் தொடர்ந்து ஓடிச் சாதனை படைத்தது.

பெரும் அதிசயம் என்னவெனில், இந்த ஐந்து படங்களும் இலங்கையில் பல திரையரங்குகளில் நூறு நாள்களுக்கும் மேலாக ஓடி மேன்மைமிகு சரித்திரங்களைப் படைத்துக் காட்டின.

இந்த ஐந்து படங்களில், ‘குலேபகாவலி’ தவிர ஏனைய நான்கு படங்களில் நடிப்பின் இலக்கணமாய்த் திகழ்ந்த பி. பானுமதியே புரட்சி நடிகருடன் கதாநாயகியாய் நடித்துப் பெருமை பெற்றார்.

தமிழ்ப்படவுலக வரலாற்றில் வசூல் சாதனைகளைச் செய்து காட்டிய இந்தப் படங்களைத் தொடர்ந்து, மக்கள் திலகம் நடித்த ஏனைய படங்களும் எல்லையற்ற சாதனைகளைச் செய்து காட்டின.

அப்படங்களின் பட்டியலைப் பாருங்களேன்.

1957 – ஆம் ஆண்டு;

சக்கரவர்த்தி திருமகள்

மகாதேவி

புதுமைப்பித்தன்

ராஜராஜன்.

இவற்றில் முதல் மூன்றும் இணையற்ற சாதனைப் படங்களே.

1958 – ஆம் ஆண்டு;

நாடோடி மன்னன்.

நம்பிக்கை நாயகனாக எம்.ஜி.ஆரை மாற்றி, நாட்டிலேயே பெரும் புரட்சியை உருவாக்கிய படமே நாடோடி மன்னன்.

1959 – ஆம் ஆண்டு;

கல்பனா கலா மந்திர் தயாரித்த , அறிஞர் அண்ணா கதை எழுதி, இராம. அரங்கண்ணல் வசனம் எழுதி, ஆர்.ஆர். சந்திரன் இயக்கத்தில், அருமையான பாடல்களோடு வெளிவந்த படமே ‘தாய் மகளுக்குக் கட்டிய தாலி’ என்ற புரண்ட்சிக்கருத்துகள் நிறைந்த படம்.

புரட்சி .நடிகரோடு, ஜமுனா கதாநாயகியாக நடித்த இப்படம் எதிர்பாத்த வெற்றியை ஈட்டவில்லை.

இப்படத்தில் கவியரசரின்,

“ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல ஒப்புவமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில்’ என்று தொடங்கும் ஒப்பற்ற பாடல் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

1960 ஆம் ஆண்டு:

பாக்தாத் திருடன்

மன்னாதி மன்னன்

ராஜா தேசிங்கு

இம்மூன்றில், எம்.ஜி.ஆரோடு வைஜயந்திமாலா இணைந்து நடித்த, பாக்தாத் திருடன் பெரும் வெற்றியைப் பெற்றது.

கவியரசர் கண்ணதாசனின் கதை, வசனம், பாடல்களைத் தாங்கி, வெளிவந்த ‘மன்னாதி மன்னன்’ முதலில் பரபரப்பான வெற்றியை எட்ட இயலாத நிலையில் இருந்து, பின்னர் யாரும் எதிர்பாராத வெறியை ஈட்டியது. ன்றளவும் இப்படம் மக்களால் பெரிதும் வரவேற்கப்படும் வெற்றிப்படமாகவே திகழ்கிறது.

கவியரசர் வசனத்தில், எம்.ஜி.ஆர். பானுமதி, பத்மினி, கலைவாணர், டி.ஏ. மதுரம் போன்றோர் நடித்து, மதுரை வீரனைத் தயாரித்த லேனா செட்டியார் தயாரிப்பில், டி.ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளியான ‘ராஜாதேசிங்கு’, இஸ்லாமியக் கோட்பாடுகளில் சில சிக்ல்களால் பெரிய வெற்றியைப் பெறவில்லை.

இதன்பின்னர், ஜீபிடர் பிக்சர்ஸ் வெளியீடான ‘அரசினங்குமரி’: ஏ.எல்.எஸ். புரொடக்ஷன்ஸ் வெளியிட்ட, கண்ணதாசன் வசனத்தில் வெளிவந்த ‘திருடாதே’; தேவர் பிலிம்ஸ் வெளியீடான ‘தாய் சொல்லைத் தட்டாதே’, ‘குடும்பத் தலைவன்’ ஆகிய படங்களெல்லாம் மக்களால் வர்வேற்கப்பட்ட மகோன்னத வெற்றிப்படங்களாய்த் திகழ்ந்தன. எம்.ஜி.ஆரின் புகழ்க்கொடியை ஏந்திப் பறக்க வைத்தன.

இன்னும் நம் இனிய கவிஞர் சொன்ன இதயம் கவர்ந்த கருந்துகள் ஒன்றிரண்டைக் காண்போமே! அவை நல்கும் ஒப்பற்ற செய்திகளை அறிவோமே!

1955 – 56 – ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பெற்ற ‘ராணி லலிதாங்கி’ திரைப்படத்தில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடிக்கத் தொடங்கினார். தஞ்சை இராமையதாஸின் வசனம் பாடல்கள் இடம்பெற்ற இப்படத்தில், எம்.ஜி.ஆரின் இயக்கக் கொள்கைகளுக்கு மாறுபட்ட கதையமைப்பும், பாடல் காட்சிகளும் இடம்பெறத் தொடங்கின.

‘ஆண்டவனே இல்லையே!
தில்லையம்பல நடராஜனைப்போல்
ஆண்டவனே இல்லையே!’

என்ற பாடல் காட்சியில், நடிக்க இயலாது என்று எம்.ஜி.ஆர் சொல்லியும், தயாரிப்பாளர் சார்பில் விட்டுக்கொடுக்காத நிலை உருவாகியது.

உடனே, எம்.ஜி.ஆர். தான் நடித்த காட்சிகளுக்கான செலவனைத்தையும் தந்துவிட்டு, படத்தில் நடிப்பதில் இருந்து விலகிக் கொண்டார். பின்னர் சிவாஜிகணேசன், பானுமதியோடு இணைந்து நடித்து, அப்படம் 1957 – ஆம் ஆண்டு வெளியானது.

ஆர்.ஆர். பிக்சர்ஸ் சார்பில், டி.ஆர். ராமண்ணா தொடங்கிய ‘காத்தவராயன்’ படத்தில், கட்சிக்கோட்பாடுகளைக் கருத்தில் கொண்டு, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் நடிக்க மறுத்துவிட்டார். இது போன்று, கட்சிக் கொள்கைகளுக்காக எம்.ஜி.ஆர் பல இலட்சங்களை இழந்தார். ஆனாலும் பல இலட்சம் இளைஞர்களின் இதயங்களை எம்ழஜி.ஆர், பரிசாகப் பெற்றுத் திகழ்ந்தார் என்பது மட்டும் அன்றே பெருமைக்குரிய செய்தியாகத் திகழ்ந்தது.

புரட்சி நடிகர் தன்னுடைய கோட்பாடுகளில் இருந்து, மாறுபட்ட காட்சிகள் அமைந்து, திரைப்படம் தயாரிப்பவர்களின் மடங்களில் என்றுமே நடித்ததில்லை. 1967, 68 – ஆம் ஆண்டுகளில், அன்றைய பிரபல இயக்குநர் ஸ்ரீதர், தயாரித்து இயக்கிய ‘அன்று சிந்திய ரத்தம்’ என்ற தலைப்பிலான படத்தில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்து சில காட்சிகளும் படமாக்கப்பட்டன. எம்.ஜி.ஆரின் கொள்கை கோட்பாடுகளுக்கு, மாறுபட்ட ஓரிரு காட்சிகள் படத்தில் உருவாக்கப்பட்டிருந்தன. அவற்றில் எம்.ஜி.ஆர். நடிக்க மறுத்து, ஸ்ரீதரிடம் வாங்கிய தொகையைக் கொடுத்துவிட்டு வந்தார்.

அதன்பின்னர், அந்தப் படம் சிவாஜி நடித்து ‘சிவந்த மண்’ என்ற பெயரில் வெளியானது. ‘அன்று சிந்திய ரத்தம்’ என்ற தலைப்பு ஜெய்சங்கர் நடித்த வேறொரு படத்தின் பெயராகிப்போனது.

காலவோட்டத்தில் மீண்டும் ஸ்ரீதர், தனக்கு ஏற்பட்ட சோதனையான காலகட்டத்தில், புரட்சி நடிகரைப் பார்த்து உரையாடி, ‘உரிமைக்குரல்’, என்ற படத்தைத் தயாரித்து, வெளியிட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்.

இவற்றையெல்லாம் இங்கே குறிப்பிடக் காரணம்: கண்ணதாசன், எம்.ஜி.ஆர். என்ற மாபெரும் மனிதசக்தியைப் பார்த்து, கணித்துச் சொன்ன கருத்துகள் எனல்லாம் உண்மைகளாய், என்றும் உயர்ந்து நின்றன என்பதனை அனைவரது உள்ளங்களிலும் பதியவைத்திட வேண்டும் என்பதற்காகவே.

இன்னும், எம்.ஜி.ஆர். நடிகர் சங்கத் தலைவர், பொதுச் செயலாளர் பதவிகளை வகித்தபோதும்; பதவிகளில் இல்லாத போதும், சங்கத்திற்காக ஆற்றிய பணிகள் சரித்திர சாதனைகள் படைத்தனவே. அவரது பணிகளை நடிகர் உலகமே நன்கறியும், அவரது அரும்பணிகளின் அடியொற்றி, இன்றைய சங்கத்தலைவர் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் நடிகர்கள் பட்டாளத்தை ஓரணியில் திரட்டி, நடிகர் சங்கத்தையமு, கட்டடத்தையும் கடனில் இருந்து மீட்டுள்ள சாதனையை எம்.ஜி.ஆர். சார்பில் பாராட்டி மகிழ்வோமாக.

தொடரும்............... Thanks.........

orodizli
3rd November 2019, 08:21 PM
சார் வணக்கம்.


பார் புகழும் எங்கள்
பொன்மன செல்வம்
எங்கள் மீனவ குலத்தின் வேதனைகளையும், விம்மல்களையும் இந்த
தரணிக்கே புரியும் படியாக ஆணித் தரமாகவும், அழுத்தமாகவும் தன் பண்பட்ட இயற்கை நடிப்பின் மூலமாகவும்
பாடல்கள் மூலமாகவும்,
காட்சி அமைப்புகள் மூலமாகவும் எடுத்துரைத்து பாரெங்கும் ஜெயக் கொடி பறத்தி 1964 ஆம்
வருடம் வசூல் பிரளயம்
நிகழ்த்தி அந்த வசூல்
பிரளயத்தை இன்று வரை தொடர்ச்சியாக
நிகழ்த்திக் கொண்டிருக்கும் " படகோட்டி" வெளியான
வரலாற்று சிறப்பு மிக்க
தினம் இன்று( 03/ 11/ 1964)
என்னடா இவன் ஒரு சாதாரண திரைப் படம்
வெளியான தினத்தை
வரலாற்று சிறப்பு மிக்க
தினம் என்று குறிப்பிடு கிறானே என யாரும் நினைக்க வேண்டாம்
காரணம் என்னைப் பொறுத்த வரைக்கும்
வரலாற்று தினம் என்று
குறிக்க பல காரணங்கள் இருக்கிறது
கழிந்த இரண்டு தினங்களுக்கு முன்பு செய்தித் தாள்களில் எல்லோரும் ஒரு வேளை படித்திருக்க வாய்ப்பிருக்கிறது அது
என்ன செய்தி என்றால்
சமீபத்தில் அடித்த " கியார்" புயலில் ஆழ் கடலுக்கு மீன் பிடிக்கச்
சென்ற குமரி மாவட்டத்தைச் சேர்ந்த
92 மீனவர்களை காணவில்லை என்ற
செய்திதான் அது , ஆனால் நிறையப் பேர்
அந்த செய்தியை படித்திருக்க வாய்ப்பில்லை ஏன் என்றால் எல்லா பத்திரிக்கைகளிலும்
நான்காம் பக்கத்தில்
ஒரு மூலையில் இந்த
செய்தி பிரசுரிக்கப் பட்டதால் இதை யாரும்
ஒரு பொருட்டாகவே
மதித்திருக்க மாட்டார்கள் , எல்லோர்
கவனத்தையும் வேறு ஒரே ஒரு செய்தியை
மட்டும் படிக்கத் தூண்டும் வகையில் முதல் பக்கம் பிரசுரிக்கப்பட்ட செய்தி
நாட்டுக்கு மிகவும் முக்கியமான செய்தி
தேசத்தின் வறுமையை
போக்கும் செய்தி , ஏழைகளின் கண்ணீரை
துடைக்கும் செய்தி
வேறு ஒன்றுமில்லை
நடிகர் ரஜினி காந்துக்கு
வாழ் நாள் சாதனையாளர் விருது
கிடைத்துள்ளது
இப்படிப் பட்ட ஊடகங்களைப் பெற்றிருக்கும் நம் தமிழ்
சமுதாயம் பெருமைப் பட வேண்டாமா?
இந்த சமுதாயத்தை நல்ல வழியில் கொண்டு செல்ல தன்
படங்களை ஒரு பாடமாக
பயன்படுத்திய ஒரு உத்தம ராசாவுக்கு இந்த
விருது கொடுக்க வேண்டியதுதான் ஏற்கெனவே பள்ளிப் பிள்ளைகள் படிக்கும்
பாடப் புத்தகத்தில் இவரைப் பற்றிய பாடம்
இணைத்தாகி விட்டது
எப்பேர்ப் பட்ட தியாகி
சரி அது போகட்டும்
இரண்டு வருடங்களுக்கு முன் இதே குமரி மாவட்டத்தில் " ஒகி" புயல் அடித்த போது நூற்றுக் கணக்கான
மீனவர்கள் மடிந்து போனார்கள் , இப்போதும் 92 மீனவர்களை காணவில்லை இதைப்
படிக்கும் எல்லோருக்கும்
இது ஒரு சாதாரண ஒரு
வரி செய்திதான் ஆனால் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்
தன் வீட்டுப் பிள்ளைகளை யாரால் பசி, பட்டினி இல்லாமல் யாரால்
வளர்க்கப் பட்டாமோ அந்த கடல் தாயிடமே தூக்கிக் கொடுத்து விட்டு தணலில் இட்ட
புழுவாகத் துடிக்கும் அந்த குடும்பங்களை
நினைத்துப் பாருங்கள்
கடல் தாயின் மடியில்
படுத்துறங்கி அந்த தாயின் அரவணைப்பில் மூன்று
வேளை நிம்மதியாக
கஞ்சி குடித்துக் கொண்டிருக்கும் குமரி
மண்ணில் ஈர உள்ளங்கள் கொண்ட
மீனவ குலத்தில் தான்
நானும் பிறந்தேன்
எங்களின் வாழ்க்கை
" சுறா" என்னும் படத்தைப் போன்று வெறும் காசுக்காக முழுக்க முழுக்க கமர்ஷியல் ரீதியில் தயாரிக்கப் பட்ட படத்தைப் போல அல்ல
அது வலியும் வேதனையும் கண்ணீரையும் சுமந்து
செல்லும் ஒரு நெடிய பயணம்.
நிறைய பேர் நினைக்கலாம் ஏன் இந்த மீனவ மக்கள் எம்.ஜி ஆரை இந்த அளவுக்கு தூக்கிப் பிடிக்கிறார்கள் என்று
அதற்கு காரணம் இருக்கிறது , எங்களின்
வாழ்க்கை முறையையும், கடல் தொழிலில் உள்ள கஷ்ட
நஷ்டங்களையும், வேதனைக் குமுறல்களை யும் , ஒற்றுமையாக போராடினால் எல்லா
நன்மைகளையும் நம்மால் நிச்சயமாகப்
பெற முடியும் என்பதையும் கருத்துள்ள வசனங்களாலும், மனதை வருடுகின்ற பாடல்களாலும், நம் ஊரில் கூட இப்படித்தான் நடக்கிறது என்று படம் பார்க்கும் ஒவ்வொரு
மனிதனையும் சிந்திக்க
வைக்கும் காட்சி அமைப்புக்களாலும் இப்படி ஒரு படம் இது வரை வந்ததில்லை என்னும் அளவுக்கு எங்கள் மீனவ குலத்தின் பிரதிபலிப்பாக " படகோட்டி" வந்ததைப் போல எந்த படமும் இந்த 2019 வரையிலும்
வர வில்லை இனி மேலும் வரவே முடியாது
சக்தி கிருஷ்ணசாமி அவர்கள் இந்த படத்துக்கு முன்னும் படங்களில் வசனம் எழுதி நாமும் பார்த்தோம் ஆனால் அதெல்லாம் திரை அரங்குக்கு வெளியே எதிரொலித்த தில்லை
காரணம் அதெல்லாம்
வெறும் பணத்திற்கான
வெற்று அலங்கார கூச்சல்கள்
ஆனால் இங்கே சக்தி கிருஷ்ணசாமி எழுதுகிறார் பாருங்கள்
வசனங்கள்
ஒரு இடத்தில் நம்பியார்
ஆவேசமாக கேட்கிறார்
எங்க வந்து என்ன பேசுற?
அதற்கு தலைவர் சொல்லும் பதில் " என் மக்கள் கிட்ட அவங்க அறியாமையைப் பற்றி
பேசுறேன்"
அசோகன் நம்பியாரின்
உத்தரவின் பேரில் தலைவரை வெளியே தள்ள வரும் போது
தலைவர் முகமெல்லாம்
சிவக்க சொல்லுவார்
பாருங்கள் ஒரு வசனம்
தியேட்டரே ரெண்டாகி யிருக்கும் " நெருங்காதே ஜாக்கிரதை"
ஒரு இடத்தில் அசோகன்
சொல்வார் " எஜமான் உங்களை அவமானமாக இவன் பேசுகிறான் அதைப் பார்த்து நீங்கள் பொறுமையாய் இருக்கலாம் ஆனால் என்னால் இருக்க முடியாது என்று
அதற்கு தலைவர் அசால்ட்டாக சொல்லும்
வசனம்" ரொம்ப அவமான மாயிருந்தா நாக்கை புடுங்கிகிட்டு செத்துப் போயேன்"
அதே போல் தலைவர்
இன்னொரு இடத்தில்
சொல்லும் வசனம்
" இல்லாதவங்க குறைவது நன்மை
இல்லாதவங்க நிறைவது தீமை"
இதுபோல இன்னும் பல
இடங்களில் சும்மா கத்தி
சொருகுகிற மாதிரி இருக்கும் வசனங்கள்
ஒற்றுமையைப் பற்றி
தலைவர் சொல்லும் வசனங்கள் எல்லாமே
உண்மையின் உரை கல்லாக அப்படியே ஜொலிக்கும்
வாள் யார் கையில் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால்
அதை வீசுபவன் கை
வலிமையையும், திறமையையும் பொறுத்துதான் சாம்ராஜ்யங்கள் அமைந்தது அது போல
எல்லோரும் வசனம் பேசலாம் ஆனால் அது
யார் வழியாக வெளியில் வருகிறது என்பது தான் முக்கியம்
அதனாலதான் எங்கள்
மீனவ சமுதாயம் என்றைக்கும் தலைவரின் அதி தீவிர
விசுவாசிகளாக இருக்க
காரணம்
படகோட்டி திரைப் படத்துக்கு முன்பு வெளியான என் கடமை
படம் தலைவர் எம். எல். சி பதவியை ராஜினாமா
செய்ததால்தான் சரியாக ஓடவில்லை என்று வீணர்கள் ஊளையிட்டார்கள் ஆனால் அதற்கு அடுத்ததாக படகோட்டி
வெளியாகி வசூலில் இமயம் தொட்டு கொடி
நாட்டியதும் ஊளையிட்ட
பதர்களின் வாய்கள் எல்லாம் பெவிக்கால் போட்டது போல ஒட்டிப் போனது
சென்னை பிளாசா 102 நாள் மற்றும் மேற்கு மாம்பலம் சீனிவாசா அரங்கு 100 நாள்
கிரவுன்72 நாள், புவனேஸ்வரி 79 நாள்
ஓடி எதிர்த்து வந்த ராத்திரி முரடர்களை ஓட
ஓட துரத்தி வரலாறு
படைத்தது
படம் என்றால் கமர்ஷியல் கலந்து கருத்துள்ள படமாகவும்
இருந்தால் மக்கள்
கொண்டாடுவார்கள்
என்பதற்கு "படகோட்டி"
ஒரு உதாரணம்
அது மட்டுமல்ல பாட்டுக்கொரு "படகோட்டி " என்று இன்று வரை மக்களை
பேச வைத்த படம் தலைவரின் "படகோட்டி"

நன்றி!.......... Thanks.........

orodizli
3rd November 2019, 08:31 PM
1-11-1967...1-11-2019... கலையுலக நடிகர்கள், நடிகைகள், உட்பட சினிமா சம்பந்தப்பட்ட தொழில் நுட்ப கலைஞர்கள் எல்லோருக்கும் சமுதாயத்தில், சமூகத்தில் அந்தஸ்து... பெருமை... தேடி தந்த ஒரே வள்ளலாம் மக்கள் திலகம் "விவசாயி" காவியம் வெளிவந்து... 52 ஆண்டுகள் நிறைவு பெற்று... 53 ம் வருட தொடக்கம்... 1967ம் வருடம் "தீபாவளி" நாளில் வந்த படங்களில் தலையாய வசூல் கண்டு ஏற்றம் கண்டதும்... மறு வெளியீடுகளிலும் இன்று வரை சக்கை போடு போடுவதும்... "விவசாயி"...

orodizli
4th November 2019, 04:04 PM
மலேசியா பிரதமர் துறை அமைச்சரின் கையில் மக்கள் திலகத்தின் புத்தகம்

இந்தியாவிற்கே பெருமை தேடித்தந்த இதய தெய்வம்.

புரட்சி நடிகர் நடித்த படங்கள் தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா, மும்பை, டெல்லி போன்ற இடங்களில் வெற்றி கொடி நாட்டியிருக்கிறது. அதே போல உலக அளவில் இலங்கை மலேசியா, சிங்கப்பூர், பினாங் போன்ற நாடுகளில் வெற்றி பெற்றுள்ளது..மலேசியாவில் தலைவரின் படங்கள் வெளியாகும்போது தமிழரல்லாத சீனர்களும், மலேயரும் ஆர்வமுடன் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி படம் பார்த்த வரலாறுகளும் உண்டு..அவர்களில் பல பேர் எம்ஜிஆர் ரசிகர்கள் ஆனார்கள். அப்படி எம்ஜிஆரின் படங்களின் பாதிப்பினால் ரசிகர் ஆகி, பினாங் மாநிலத்தில் சுமார் 7 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தவர் திரு. டான் ஸ்ரீ கோ சூ கூன்..

சமீபத்தில் மலேசிய கோலாலம்பூர் நகரில் அமைந்துள்ள செந்தூல் கன்வென்ஷன் சென்டரில் மலேசியா எம்ஜிஆர் நற்பணி இல்லத்தின் சார்பில் - எம்ஜிஆர்-96' என்ற மாபெரும் கலை நிகழ்ச்சியுடன் கூடிய பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தலைமை தாங்கியவர்தான் மேலே கூறப்பட்ட திரு. டான் ஸ்ரீ கோ சூ கூன்..இவர் தற்போது மலேசியா பிரதமர் துறை அமைச்சராக உள்ளார்.

இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து சிறப்பு அழைப்பாளராக எம்ஜிஆரிடம் 30 ஆண்டுகள் பணியாற்றிய எம்ஜிஆரின் பாதுகாவலர் திரு. கே.பி. ராமகிருஷ்ணன் அழைக்கப்பட்டிருந்தார்..மலேசியா எம்ஜிஆர் ரசிகர்கள் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விஞ்ஞானி சிவசுப்ரமணியத்திற்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. டத்தோ துரைராஜ், மலேசியா பத்திரிகையாளர்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..மலேசியா இசைக்குழு சார்பாக நமது தெய்வத்தின் திரைப்பட பாடல்கள் பாடப்பட்டு எம்ஜிஆர் உடையில் கலைஞர்கள் நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.. டி.எம்.எஸ். செல்வகுமார் அவர்கள் தலைவரின் பாடல்களை பாடினார்

நமது வள்ளலின் உயர்ந்த குணங்களையும் சிறப்புகளையும் ரசிகர்களிடம் திரு.கே.பி.ராமகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டார். மலேசியாவில் உள்ள மக்கள் ஓசை பத்திரிகை சார்பில் ராமதாஸ் கலந்து கொண்டார்..

மலேசியா பிரதமர் துறை அமைச்சர் திரு. டான் ஸ்ரீ கோ சூ கூன் பேசுகையில் எம்ஜிஆரை போலவே அவரது வாழ்வில் படிப்படியாக உயர்ந்தவர் தான் தங்கள் நாட்டின் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீத் என்று கூறி, எம்ஜிஆரின் சிறப்பை மேலும் உயர்த்தினார்..இதை கேட்கும்போது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமைதானே..திரைப்படத்தின் மூலம் நல்ல கருத்துகளை கூறி, அதன் வழி நடந்து, மங்கா புகழ் பெற்று, உலகத்தலைவர்களுக்கு உதாரணமாக இருக்கும் நம் தெய்வத்தின் ரசிகர்களாக இருப்பதில் பெருமிதம் ஏற்படுகிறது. விழா செய்திகள் தினமலர் மற்றும் மக்கள் குரல் நாளேட்டில் வந்திருக்கிறது.

விழா ஏற்பாடுகளை மலேசிய எம்ஜிஆர் நற்பணி இல்லத்தின் தலைவர் ஆர்.ஜே தாமோதரன் செய்திருந்தார்..திரு. தாமோதரன் அவர்கள் எம்ஜிஆரின் தீவிர பக்தர்..எம்ஜிஆர் புகழை உலகமெல்லாம் பரப்ப பாடுபடும் ஒரு உண்மைதொண்டர்..அவர் புதுச்சேரி வந்திருந்தபோது பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அறக்கட்டளையின் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதை இப்போது நினைவு கூர்கிறேன்........... Thanks.........

orodizli
4th November 2019, 04:05 PM
https://www.facebook.com/groups/MGR100/permalink/2506893282969549/?sfnsn=scwspwa&d=w&vh=i&funlid=96lHupvYqvRiUjuj........ Thanks...

orodizli
4th November 2019, 04:11 PM
1969ம் ஆண்டின் டைரி - எம்ஜிஆர் ரசிகனின் பொன்விழா ஆண்டு மலரும் நினைவுகள் .
************************************************** ************************************************** ******************

1968 ஆண்டு என்னை போன்ற மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் தமிழ் திரையுலகத்திற்கும் மறக்க முடியாத ஆண்டாக நிறைவு பெற்றது .
எம்ஜிஆரின் 8 படங்கள் வெளிவந்தது .8 படத்திலும் ஜெயலலிதா ஜோடியாக நடித்திருந்தார் . 3 வண்ணப்படங்கள் .5 கருப்பு வெள்ளை படங்கள் .
எம்ஜிஆரின் 100 வது படமாக ''ஒளிவிளக்கு '' 20.9.1968ல் வெளிவந்தது . ரகசிய போலீஸ் 115, குடியிருந்த கோயில் , ஒளிவிளக்கு - 3 படங்களும் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்து விட்டது .புதியதாக எம்ஜிஆருக்கு ஏராளமான ரசிகர்களும் , ரசிக மன்றங்களும் உருவாகிய நேரம்
.
இனி ....
..
1969 டைரி .......
தினத்தந்தி , முரசொலி , சுதேசமித்திரன் , தினமணி , போன்ற தினசரி பத்திரிகைகளிலும் , சமநீதி திரை உலகம் , திரைச்செய்தி , பொம்மை , பேசும்படம் போன்ற சினிமா இதழ்களிலும் எம்ஜிஆர் நடித்து கொண்டிருந்த படங்களை பற்றி செய்திகள் வந்த வண்ணம் இருந்தது .ஏறத்தாழ 6 மாதங்களாக எம்ஜிஆர் புது படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை அடிமைப்பெண் , நம்நாடு , மாட்டுக்காரவேலன் , எங்கள் தங்கம் , தேடிவந்த மாப்பிள்ளை , குமரிக்கோட்டம் அன்னமிட்டகை , தலைவன் , ஒருதாய் மக்கள், என அண்ணன் சங்கே முழங்கு ஆகிய படஙக்ளில் நடித்து கொண்டு வந்தார் .
அடிமைப்பெண்
********************************

ரசிகர்கள் வெகு ஆவலுடன் எதிர்பார்த்த அடிமைப்பெண் 1.5.1969ல் வெளிவந்தது . ஹாலிவுட் படம் போல் அடிமைப்பெண் படம் இருந்தது என்று திரை உலக ஜாம்பவான்கள் கருத்து கூறினார்கள் .


ரசிகர்களுக்கு தித்திக்கும் விருந்தாக அமைந்து விட்டது . வசூலை வாரி குவித்தது .திரை உலகத்தினர் அனைவரும் எம்ஜிஆரின் சாதனையை புகழ்ந்து பாராட்டினார்கள் .வெள்ளி விழா காவியமான அடிமைப்பெண் முந்தைய சாதனைகளை முறியடித்து முதலிடத்தில் நின்றது மீண்டு 6 மாத இடைவெளி .......
நம்நாடு
*******************
7.11.1969 அன்று நம்நாடு படம் திரைக்கு வந்தது . அடிமைப்பெண் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் நம்நாடு படமும் வசூலில் கலக்கியது .
எம்ஜிஆரின் நடிப்பு , சமூக அக்கறை கொண்ட ஜனரஞ்சகமான பொழுது போக்கு படமாக வெற்றி பவனி வந்தது .
அடிமைப்பெண் மற்றும் நம்நாடு இரண்டு படங்கள் 1969ல் மக்களால் , ரசிகர்களால் மிகவும் விரும்பி பார்க்கப்பட்ட படங்களாக இருந்தது
1969 இறுதியில் எம்ஜிஆர் ரசிகர்களுக்காக ''மாட்டுக்கார வேலன் '' திரைப்படம் 1970 பொங்கல் விருந்தாக திரைக்கு வருவதை அறிந்தது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் வரவேற்க . காத்திருந்தார்கள் .

1969ல் எம்ஜிஆரின் சாதனைகள்
***********************************************.
அடிமைப்பெண் - மதுரை நகரில் வெள்ளிவிழா
தமிழகத்தில் 14 திரை அரங்கில் 100 நாட்கள்
சென்னை நகரில் 4 அரங்கில் தொடர்ந்து 400 காட்சிகள் ஹவுஸ் புல்
1969 பிலிம் பேர் - விருது
1969 தமிழ் நாடு - சிறந்த படம் விருது
காலத்தை வென்றவன் நீ - பாடல் மூலம் எம்ஜிஆரின் அரசியல் வெற்றிகளுக்கு அஸ்திவாரம் கண்டது .

நம்நாடு - ஒரு அரசியல் படம் என்ற சாதனை பெற்றது
தவறுகள் செய்யும் அனைவருக்கும் ஒரு படிப்பினை தந்த படம்
வாங்கய்யா ...வாத்தியாரய்யா பாடல் மக்களுக்கு ஒரு நல்ல செய்தியை தந்தது .
1969ல் யாருமே நினைத்து பார்க்கவில்லை .
நம்நாடு - 9 ஆண்டுகளுக்கு பின்னர் 1977ல் எம்ஜிஆர் கைக்கு கிடைத்தது . ரசிகர்கள் . தொண்டர்கள் ஆனார்கள் . சட்ட மன்ற , பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆனார்கள் . பலர் அமைச்சர்கள் ஆனார்கள் . நம்நாடு படத்தில் நடித்த எம்ஜிஆர் தமிழக முதல்வர் ஆனார் . 10 ஆண்டுகள் தொடர்ந்து முதல்வராக நீடித்தார் .
எம்ஜிஆரை நேசித்த
ஜெயலலிதா
பன்னீர்செல்வம்
பழனிசாமி மூவரும்
எம்ஜிஆரின் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக இருந்தார்கள் , இருக்கிறார்கள் என்பது நம்நாடு படம் தந்த வெற்றிதான் காரணம் .

1969 ல் உருவான எம்ஜிஆரின் சினிமா மற்றும் அரசியல் வெற்றிகள் 2019 லும் 50 ஆண்டுகளாக தொடர்ந்து நீடித்து வருவது உலகில் எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் , எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத பெருமை . குறிப்பாக எம்ஜிஆர் ரசிகர்களுக்கு முழு பங்கு உள்ளது .
நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் .(இறைவன் அருளால்... நாம் தான்... நாம் மட்டுமே... கொடுத்து வைத்தவர்கள் என்றால் அது மிகையில்லை...)...... Thanks..........

orodizli
4th November 2019, 04:13 PM
கோவை சண்முகா DTS., தியேட்டரில் புரட்சித்தலைவரின் "ஆயிரத்தில் ஒருவன் " தொடர்ந்து 2 வது வாரம் ,வழங்கம்போல் பட்டாசு வெடித்து ,பால்அபிசேகம் செய்து பக்தர்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரத்துடன் கண்டு களித்தனர்........... Thanks.........

orodizli
4th November 2019, 08:27 PM
https://youtu.be/UwiB7X2VOiQ........ Thanks.........

orodizli
4th November 2019, 08:29 PM
எம் ஜி ஆராலே தமிழகம் ஏற்றம் கண்டது கல்வியில்
ப்ளஸ் டூ தந்தவர் எம் ஜி ஆர்
அண்ணா பல்கலை கழகம் தந்தவர் எம் ஜி ஆர்
அன்னை தெரசா பல்கலைகழகம் தந்தவர் எம் ஜி ஆர்
பாரதியார் பலகலைகழகம் தந்தவர் எம் ஜி ஆர்
பாரதி தாசன் பல்கலை கழகம் தந்தவர் எம் ஜி ஆர்
தமிழுக்கு பல்கலை கழகம் தந்தவர் எம் ஜி ஆர்
இன்னும் பல பல்கலைகழகம் எம் ஜி ஆர் தந்தது
வாழ்வுக்கு முக்கிய உணவை சத்துணவாக தந்து வலுவான தமிழ் சமூகம் உருவாக்கியவர் எம்ஜிஆர்

கல்வியின் பொற்க்காலம் எம் ஜி ஆர் ஆட்சி
சிலர் காமராஜ் பள்ளி கூடங்கள் திறந்தார் என வக்காலத்து வாங்கலாம் அப்போது சுதந்திரம் கிடைத்த புதிது அடிபடை கடாடுமானம் அமைகாக 20 அம்சதிட்டம் போன்ற திட்டமும் எவர் வந்தாலும் செய்யும் அடிபடை வசதிகளே அவை

தொழிற்க்கல்வி மேற்கல்வியில் புரட்சி முன்னேற்றம் தந்தவர் எம் ஜி ஆர்

வாழ்க எம் .ஜி .ஆர்., புகழ்....... Thanks...

orodizli
4th November 2019, 08:35 PM
https://youtu.be/yt0pgmOviwY....... Thanks.........

orodizli
4th November 2019, 08:36 PM
https://youtu.be/zwZ74Re4rrE......... Thanks.........

orodizli
4th November 2019, 08:37 PM
https://youtu.be/aqVBYqNGV6w.......... Thanks.........

fidowag
5th November 2019, 07:56 PM
வரும் வெள்ளி முதல் (08/11/19)* கோவை டிலைட்டில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் வழங்கும் "நீதிக்கு பின் பாசம் " தினசரி 2 காட்சிகளில் வெளியாகிறது .

தகவல் உதவி ; சத்தியமங்கலம் திரு.சாமுவேல் .

fidowag
5th November 2019, 08:14 PM
இரங்கல் செய்தி .
-------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் உண்மை விசுவாசியும், தீவிர பக்தருமாகிய திரு.அப்துல் கனி (69 வயது ) கடந்த மாதம் 21/10/2019 அன்று* உடல்நல குறைவால்*தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் என்கிற அதிர்ச்சி கலந்த துயர செய்தி அவருடைய*சகோதரர் திரு.அப்துல் வாஹித் மூலம் அறிந்து மிகவும் வேதனைப்பட்டேன் .இந்த செய்தி மிகவும் தாமதமாகத்தான் எனக்கு தெரிந்தது .

திரு.அப்துல் கனி, நடிக மன்னன் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் என்கிற அமைப்பில் 1972 முதல் நிர்வாகியாகவும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். புகழ் பாடுவதில் முன்னணி*பக்தராகவும் விளங்கியவர்.* 1973 முதல் அவருடன் நெருங்கிய நட்பு இருந்தது .பல* ஆண்டுகளுக்கு முன்பு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய சில மலர்கள், புத்தகங்கள் எனக்கு வழங்கி இருந்தார் .உலகம் சுற்றும் வாலிபன், திரைப்பட வெற்றிகள், சாதனைகள் ஆகியவற்றை அப்போது வெளியாகியிருந்த இந்தி, ஆங்கில பட வசூல்களுடன் ஒப்பிட்டு நோட்டிஸ்கள் அடித்து வெளியிட்டு பக்தர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் .* தொடர்ந்து,நேற்று இன்று நாளை , உரிமைக்குரல், இதயக்கனி, பல்லாண்டு வாழ்க , நினைத்ததை முடிப்பவன் , நீதிக்கு தலைவணங்கு, உழைக்கும் கரங்கள் , இன்றுபோல் என்றும் வாழ்க, மீனவ நண்பன் போன்ற* படங்களுக்கும் அதன் வெற்றிகள் , பற்றி பறைசாற்றி வந்தார் .


திரு.அப்துல் கனி அவர்களின் ஆன்மா சாந்தி அடைய நமது இதய தெய்வம் எம்.ஜி.ஆர்.அருள் புரியட்டும்* அவரை இழந்து வாடும் அவரது மனைவி , மகள்*மற்றும் உறவினர்கள் , நண்பர்கள் அனைவருக்கும் அனைத்து எம்.ஜி.ஆர் மன்ற*அமைப்புகள் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் ..

fidowag
5th November 2019, 09:17 PM
1964ம் ஆண்டில் சாதனை புரிந்த படங்கள் _ ஒரு அலசல்*--------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிப்பில் 1964ம் ஆண்டில் 7 படங்கள் வெளியாகி இருந்தன . அவை 1, வேட்டைக்காரன் .2, என் கடமை .* 3, பணக்கார குடும்பம்*4.தெய்வத்தாய் . 5. தொழிலாளி* 6.படகோட்டி . 4. தாயின் மடியில் .

1. வேட்டைக்காரன் , சென்னை, சித்ரா, பிராட் வே , மேகலா , மற்றும் சேலம் அரங்கில் 100 நாட்கள் ஓடி, பொங்கல் திருநாளில் வெளியான படங்களிலேயே அதிக வசூல் பெற்ற* படமாக திகழ்ந்தது .

2. என் கடமை வெளியானபோது, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் பெருந்தலைவர் .காமராஜரை என் தலைவர் , பேரறிஞர் அண்ணாவை என் வழிகாட்டி* என பேசியதை சிலர் அரசியலாக்கி* படம் , பாடல்கள் தரமாக இருந்தாலும் , கடும் விமர்சனங்கள் எழுப்பி , வெற்றி பெறாமல் செய்தனர் .அனால் இந்த படம் தலைவர் கட்சி ஆரம்பித்த பின்பு1973 லிருந்து 1990 ஆண்டு வரையில்* *ரெகுலர் காட்சிகளிலும்,பகல் காட்சிகளிலும் நூற்றுக்கணக்கான அரங்குகளில் வெளியாகி வெற்றிமுரசு கொட்டி வசூலை குவித்தது .

3. பணக்கார குடும்பம் - சென்னை சித்ரா , பிராட் வே, மேகலா, மதுரை தேவி,திருச்சி*பேலஸ் , சேலம் விக் டோரியா , கோவை சுவாமி அரங்குகளில் 100 நாட்கள் ஓடியது .1964ம் ஆண்டிலேயே பாக்ஸ் ஆபிஸ் ஹிட், அதிக வசூல் ஈட்டிய படம் .

4. தெய்வத்தாய் - சென்னை பிளாசா , கிரவுன் , புவனேஸ்வரி அரங்குகளில் 100 நாட்கள் வெற்றிகரமாக கடந்த சத்யா மூவிஸ் தயாரித்த உன்னத படம் .ஒரு முறை ஆனந்த் அரங்கில் தினசரி 3 காட்சிகளில் ஒரு வாரம் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது .

5. தொழிலாளி - சென்னை சித்ரா , பிராட் வே,, மேகலா அரங்குகளில் 50 நாட்களை கடந்து வணிக ரீதியாக வெற்றிகண்ட படம். 1973க்கு பிறகு பல அரங்குகளில் , பகல் காட்சிகளில் வெளியாகி வசூலை ஈட்டியது . இப்போதும்*சென்னை, மதுரை, கோவை* போன்ற பெருநகரங்களில் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்கிறது . விரைவில் கோவை சண்முகாவில் வெளியாக உள்ளது .

6. படகோட்டி,- சென்னை பிளாசாவில் வெற்றிகரமாக 100 நாட்களை கடந்தது .*கிரவுனில் 72 நாட்களும், புவனேஸ்வரியில் 79 நாட்களும் ஓடியது .73வது நாளில் வெளியான எங்க வீட்டு பிள்ளையின் இமாலய வெற்றி இந்த படம் ஓட்டத்திற்கு தடையாக இருந்தது .அதனால் பல அரங்குகளில் 100 நாள் எட்டவில்லை . ஆனால் அ .தி. மு.க. உதயம் ஆன பின்பு* 1973 முதல் 2000 வரையில் தொடர்ந்து தொய்வில்லாமல் நூற்றுக்கணக்கான (பட்டி தொட்டி களில் ) அரங்குகளில் வெளியாகி வசூலை வாரி குவித்தது . தேவி பாரடைஸில் இருமுறை வெளியான படம் இதுவே . 1964 ம்* ஆண்டில் வெளியான படங்களிலேயே இதுவரையில் அதிக வசூலை பெற்ற படம் இதுதான் .* கடந்த பல ஆண்டுகளாக அரங்குகளில் வெளியாகாததால் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள படம்* ஆனால் அவ்வப்போது தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது . டிஜிட்டல் வடிவில் உருவானால் நல்ல வரவேற்பை பெறும் வகையில் உள்ளது .*

7.தாயின் மடியில் - கதை அமைப்பில் உள்ள குழப்பம், திரைக்கதை அமைப்பு கோளாறு, சோக காட்சிகள் அதிகம் காரணம், 28 வது நாளில் எங்க வீட்டு பிள்ளை வெளியீடு ஆகியவற்றால் படம் வந்த சுவடு தெரியாமல் , எதிர்பார்த்த வெற்றி பெறாமல் மறைந்தது .

மாற்று முகாம் நண்பர் பதிவிடும் தவறான செய்திகள் .
--------------------------------------------------------------------------------------
தெய்வத்தாய் 100 நாள் பட்டியலில் இடம் பெறவில்லை.* மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிப்பில் 7 படங்கள் வெளியாகி இருந்தது . ஆனால் அவர் 3 படங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார் .**
கை. கொ.தெய்வம் - 100 நாள் பட்டியலில் கோவை கர்னாடிக் -கையால் விளம்பரத்தில் எழுதப்பட்டுள்ளது .


வெ .ரோஜா - திண்டுக்கல் கணேஷில் 50 நாளில் ரூ.8,10,000/-. வசூல் .இப்போது வெளியாகும் படம் கூட 50 நாளில் இந்த வசூல் பெற வாய்ப்பே இல்லை . அந்நாளில் கட்டணம் மிக குறைவு. இந்த நிலையில் பொய்யான வசூலை பதிவு*செய்து தங்கள் அபிமான நடிகருக்கு பெருமை தேடி தருவதாக நினைத்து சிறுமை சேர்க்கிறார்கள் .


உண்மையான தகவல்களையே பதிவிடுவதாக சொல்லி, நமது நண்பர்களின் பதிவுகளை குறை சொல்பவர்கள் இனியாவது உண்மை தகவல்களை பதிவிடுவார்கள் என்று எதிர்பார்ப்போம் .* * * * *

orodizli
5th November 2019, 10:09 PM
🦉எம்.ஜி.ஆர் உடல் நல்ம குன்றி அப்போலோவிலிருந்து மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப் பட்ட நாள்- இன்று!- நவம்பர் =5


🚦வழக்கம்போல் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த முதல் அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் 5.10.1984 இரவு சென்னையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

எம்.ஜி.ஆர். லேசான ஆஸ்துமா தொந்தரவினால் பாதிக்கப்பட்டு இருப்பதால், அதற்கு சிகிச்சை பெறுவதற்காகவும், ஓய்வு எடுப்பதற்காகவும் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

விஷ்யம் தெரிந்து கூடி விட்ட பத்திரிகை
யாளர்களிடம்அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பிரதாப் சி.ரெட்டி, "எம்.ஜி.ஆருக்கு கடந்த ஒரு வார காலமாக சளி (ஜலதோஷம்) இருந்தது. காய்ச்சல் இருந்தது. சிறிது ஆஸ்துமா தொந்தரவு ஏற்பட்டதால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் குணம் அடைந்து வருகிறார்.என்று கூறினார்.

இதற்கிடையில் தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கி நடந்து வந்தது. சட்டசபையில் சித்தன் (இ.காங்கிரஸ்) பேசும்போது, "எம்.ஜி.ஆர். உடல் நிலை பற்றிய விவரங்களைத் தெரிவிக்கவேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் நெடுஞ்செழியன்,
"5.10.1984 வெள்ளிக்கிழமை முதல் அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு "ஆஸ்துமா" போன்று மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஓய்வுக்காகவும், சிகிச்சைக்காகவும் சேர்க்கப்பட்டார்.

சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியை சேர்ந்த டாக்டர்கள் திருவேங்கடம், சேஷய்யா, அப்பல்லோ ஆஸ்பத்தி ரியை சேர்ந்த டாக்டர் சி.ரெட்டி, ராமலிங்கம், எம்.ஜி.ஆரின் தனி மருத்துவர் பி.ஆர்.சுப்பிரமணியம் ஆகிய டாக்டர்கள் குழுவினர் முதல் அமைச்சரின் உடல் நிலை குறித்து கவனித்து வருகிறார்கள்.

மறுநாள் முதல் அமைச்சரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து நல்ல முறையில் சிகிச்சை கொடுக்கப்படுகிறது. மூச்சு விடுவதில் இருந்த சிரமம் நீங்கிவிட்டது. இன்று காலையில் முதல் அமைச்சரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. நல்ல உற்சாகத்துடனும், ஊக்கத்துடனும் இருக்கிறார்.

மூச்சு விடுவதில் சிரமம் இல்லை. ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை (டயாலிசீஸ்) நல்ல உதவியை செய்துள்ளது. சிறு நீரகத்தை கிட்னி என்ற உறுப்பில் இந்த டயாலிசீஸ்' இயந்திரம் பயன்படுத்தப்படவில்லை. வயிற்று குடலில் உள்ள ஜவ்வில்தான் அந்த இயந்திரம் பயன்படுத்தப்பட்டது." என்று நெடுஞ்செழியன் கூறினார்..

பின்னர் அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பிரதாப் சி.ரெட்டி,"நுரையீரலில் ஒரு வகை திரவம் சேர்ந்ததால் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அந்த திரவத்தை "பெரிடோனியல் டயாலி சீஸ்" முறை மூலம் முழுவதுமாக வெளி எடுத்துவிட்டோம்.

இது போன்றவற்றால் சிறுநீரகத்தில் மிகச்சிறிய அளவில் கோளாறு ஏற்பட்டது. எனவே சிறுநீரகத்துக்கு அதிக வேலை கொடுக்க வேண்டாம் என்பதற்காகவே "டயாலிசீஸ்" மூலம் திரவத்தை வெளியேற்றினோம்.

அவருக்கு இனி சிகிச்சை தேவை இல்லை. எம்.ஜி.ஆருக்கு முழு ஓய்வு தேவை. எனவே ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் அவர் தங்கி இருக்கவேண்டும். ஓய்வுக்காகத்தான் எம்.ஜி.ஆர். ஆஸ்பத்திரியில் தங்கி இருப்பாரே தவிர சிகிச்சைக்காக அல்ல." என்று அவர் கூறினார்..

இப்படி எம்.ஜி.ஆர். உடல் நிலை தேறி வருவதாக தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. ஆனால் 14ந்தேதி அதிர்ச்சி தரும் ஒரு தகவலை டாக்டர்கள் வெளியிட்டனர்.

அன்று மாலை டாக்டர்கள் வெளியிட்ட அறிக்கை,”
"13ந்தேதி இரவு எம்.ஜி.ஆர். தூங்கச்செல்லும்போது சிரமம் இல்லாமலும், நல்ல உணர்வுடனும் இருந்தார். இரவில் அவரது வலது பக்க கை, கால் அசைவில் பாதிப்பு ஏற்பட்டதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். உடனே நரம்பியல் பேராசிரியர் டாக்டர் ஜெகநாதன் வரவழைக்கப்பட்டு எம்.ஜி.ஆர். உடல் நிலையை ஆராய்ந்தார்.

தலைப்பகுதியை `எக்ஸ்ரே' படம் பிடித்து பார்த்ததில் மூளையில் ஒரு இடத்தில் ரத்த உறைவு இருப்பது தெரியவந்தது. ஆனால் ரத்த கசிவு எதுவும் இல்லை. எம்.ஜி.ஆரின் உடலில் உள்ள நரம்புகள் இயங்குவது சீராக உள்ளது. ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை காரணமாக சிறுநீர் பிரிவதில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது." என மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டது..

சிகிச்சைக்காக எம்.ஜி.ஆர். அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்படுவார் என்று கூறப்பட்டு வந்தது. இதற்காக தனி விமானம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது. எம்.ஜி.ஆர். உடல் நிலையை பரிசோதிக்க பம்பாயில் இருந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டார்கள்.

எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற வெளிநாட்டிற்கோ அல்லது அமெரிக்காவுக்கோ அனுப்புவதாக இருந்தாலோ அதற்கு உதவிகளை செய்வதாக கவர்னருக்கு பிரதமர் இந்திரா காந்தி தகவல் அனுப்பினார்.

அமைச்சர்கள் அனைவரும் ஆஸ்பத்திரிக்கு வந்து எம்.ஜி.ஆர். உடல் நிலை பற்றி டாக்டர்களிடம் விசாரித்தவண்ணம் இருந்தனர்.

திரை உலக பிரமுகர்கள், நடிகர்_ நடிகைகள் ஆஸ்பத்திரிக்கு படை யெடுத்தனர். எம்.ஜி.ஆர். உடல் நலம் பற்றி விசாரித்தனர்.

கோவில்களில் எம்.ஜி.ஆர். நலம் பெற வேண்டி பூஜைகள் நடத்தப்பட்டன. எம்.ஜி.ஆர். உடல் நிலை பற்றிய மருத்துவ அறிக்கை சட்டசபையில் தினமும் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.

ஆஸ்பத்திரி சார்பிலும் மருத்துவ அறிக்கை அவ்வப்போது வெளியிடப்பட்டு வந்தது. 16ந்தேதி மாலை 4 மணிக்கு பிரதமர் இந்திராகாந்தி தனி விமானம் மூலம் சென்னை வந்தார்.

நேராக அப்பல்லோ ஆஸ்பத்திரிக்குச் சென்றார். எம்.ஜி.ஆர். சிகிச்சை பெறும் அறைக்கு சென்று 10 நிமிடம் இருந்து எம்.ஜி.ஆரை பார்த்து உடல் நலம் விசாரித்தார்.

அப்போது அந்த அறையில் எம்.ஜி.ஆர். மனைவி ஜானகி அம்மாள் மற்றும் டாக்டர்கள் இருந்தனர். பிறகு டாக்டர்களுடன் இந்திரா 15 நிமிடம் பேசி எம்.ஜி.ஆருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை கேட்டு அறிந் தார். மொத்தம் 30 நிமிடம் இருந்துவிட்டு இந்திரா காந்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இதையடுத்து கிண்டி கவர்னர் மாளிகையில் தங்கி இருந்த பிரதமர் இந்திரா காந்தியை நிருபர்கள் சந்தித்தபோது நடந்த கேள்வி - பதில் :.

கேள்வி:- எம்.ஜி.ஆர். உடல் நிலை எப்படி இருக்கிறது?

பதில்:-அவரை பார்க்கப்போன எங்கள் எல்லோரையும் எம்.ஜி.ஆர். அடையாளம் கண்டு கொண்டார். நான் அவரிடம் சில வார்த்தைகள் பேசினேன். "நீங்கள் ஒரு தைரியசாலி. கஷ்டமான சந்தர்ப்பங்களிலும் தைரியமாக இருந்து அவற்றை சமாளித்து இருக்கிறீர்கள்.

அதுபோல இப்போது மன தைரியத்துடனும், ஊக்கத்துடனும் இருங்கள். தமிழ்நாட்டிலுள்ள மக்கள் மட்டுமல் லாமல் இந்தியாவில் உள்ள மக்கள் எல்லோரும் நீங்கள் விரைவில் பூரண குணம் அடைய விரும்புகிறார்கள்" என்று நான் சொன்னதும் எம்.ஜி.ஆர். புன்னகை செய்தார்.

நாங்கள் அவர் இருக்கிற அறைக்கு போனோம். படுக்கையில் இருந்து எழுந்து உட்கார முயற்சி செய்தார். ஆனால் அவரை படுக்கையில் இருந்து எழவேண்டாம் என்று டாக்டர்கள் சொல்லி மீண்டும் படுக்க வைத்தார்கள்.

கேள்வி:- மேற்கொண்டு சிகிச்சைக்காக எம்.ஜி.ஆர். வெளிநாட்டுக்கு அனுப்பப்படுவாரா?

பதில்:-வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள் வருகிறார்கள். எம்.ஜி.ஆரை பரிசோதித்துவிட்டு, அவரை வெளி நாட்டுக்கு கொண்டுபோகவேண்டுமா என்பதை முடிவு செய்வார்கள். எம்.ஜி.ஆரின் சிகிச்சைக்காக எல்லா உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது." என்று இந்திராகாந்தி கூறினார்.

பின்னர் அமைச்சர் ஹண்டேயையும் இந்திரா டெல்லிக்கு அழைத்துச்சென்றார் -சில சுப்பீரியர் டாக்டர்களிடம் கன்சல்ட் செய்யதான்.

ஆந்திர முதல் மந்திரி என்.டி.ராமராவ், கர்நாடக முதல் மந்திரி ஹெக்டே, மத்திய மந்திரிகள் பலர் எம்.ஜி.ஆர். உடல் நிலைபற்றி விசாரித்தபடி இருந்தார்கள். ஜெயலலிதா, மூப்பனார் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், திரை உலகத்தினர் ஆஸ்பத்திரிக்கு சென்று எம்.ஜி.ஆர். உடல் நலம் பற்றி கேட்டறிந்தனர்.

அக்டோபர் 17ந்தேதி காலையில் எம்.ஜி.ஆர். உடல் நிலையை பரிசோதிக்க அமெரிக்காவில் இருந்து டாக்டர் பிரீட்மேன் (நியூயார்க் நகரில் புரூக்லீன் என்ற இடத்தில் உள்ள டவுன் ஸ்டேட் மருத்துவமனை சிறுநீரகப் பிரிவு தலைவர்), டாக்டர் கிறிஸ்டோபர் பிளாக் (வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியர்), டாக்டர் ஸ்ரீபரதராவ் (புருக்லீன் டவுன் ஸ்டேட் ஆஸ்பத்திரி டயாலிசீஸ் பிரிவு டைரக்டர்), டாக்டர் ஜான் ஸ்டிரிலிங்மேயர் (டெக்சாஸ் நகர மருத்துவ கல்லூரி நரம்பியல் பேராசிரியர்) ஆகியோர் சென்னை வந்தார்கள்.

அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்த அவர்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஹண்டே வரவேற்று தனி விமானத்தில் சென்னைக்கு அழைத்து வந்தார். காலை 8.20 மணிக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அமெரிக்க டாக்டர்கள் வந்து எம்.ஜி.ஆரை பரிசோதித்தனர்.

பின்பு இதுவரை சிகிச்சை அளித்த டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தினர். பின்பு அமெரிக்க டாக்டர்களை நிருபர்கள் மீட் பண்ணிய போது,””எம்.ஜி.ஆருக்கு சர்க்கரை வியாதி, சிறுநீரக கோளாறு ஆகியவை உள்ளன. வலதுபுற கை, கால் செயல் இழந்து உள்ளன.

இங்குள்ள டாக்டர்கள் சிறப்பாக அளித்த சிகிச்சையால் அவரது உயிரை காப்பாற்றி குணம் அடையும் பாதையில் செல்ல வழிவகுத்துள்ளன. மூளையில் உள்ள வீக்கம் குறைந்து இருக்கிறது. எனவே அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.”இவ்வாறு டாக்டர்கள் கூறினார்கள்.....

டாக்டர் பிரீட்மேன் கூறும்போது, "எம்.ஜி.ஆரின் இரு சிறுநீரகங்களுமே பாதிக்கப்பட்டு இருக்கின்றன. மாற்று சிறுநீரகம் பொருத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை" என்று கூறினார். டாக்டர் ஸ்டிரிலிங் மேயர் சென்னையிலேயே தங்கி எம்.ஜி.ஆருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தார். மறுநாள் மீண்டும் எம்.ஜி.ஆரை பரிசோதனை நடத்திவிட்டு மற்ற 3 டாக்டர்களும் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்கள்.

அமெரிக்க டாக்டர் பிரீட்மேன் அமெரிக்கா புறப்படும் முன்பு விசேஷ பேட்டி அளித்தார். "எல்லாம் நல்லபடியாக நடந்தால் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். பழைய நிலையை அடைந்து வழக்கமான வாழ்க்கையை தொடர முடியும்.

அவர் 67 வயதிலும் இளமையுடன் இருக்கிறார். அவர் குணம் அடைய சிறிது காலம் பிடிக்கலாம். இன்னும் 3 மாதத்தில் அவரால்நடக்கமுடியும்" என்று கூறினார்.

🎯ஆனால் திடீரென்று எம்.ஜி.ஆரின் மூளையில் ஒரு கட்டி ஏற்ப்படிருப்பதாகவும் அந்த ரத்தக்கட்டியை கரைப்பதற்கு சிகிச்சை அளிப்பதற்காக ஜப்பானிய நிபுணர்கள் கானு, நகமோரா ஆகியோர் தனி விமானம் மூலம் 20_ந்தேதி சென்னை வந்தார்கள்.

காலை 7.45 மணிக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்றார்கள். எம்.ஜி.ஆர். அறைக்குச்சென்று அவருடைய உடல் நிலையை பரிசோதித்தனர். மொத்தம் 2 மணி நேரம் பரிசோதனை நடந்தது. எம்.ஜி.ஆரின் மூளையில் ஏற்பட்டுள்ள ரத்தக்கட்டியை கரைக்க அறுவை சிகிச்சை நடத்தலாம் என்று யோசனை தெரிவித்தனர். அதுவும் அவரை வெளிநாட்டுக்கு அழைத்து போய் பண்ன திட்டமிட்டார்கள்

அதாவது இன்னும் சில வாரங்கள் கழித்து "பைபாஸ்" முறையில் ரத்த குழாய்களில் ஒட்டு அறுவை சிகிச்சை பெறச்செய்து மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவது பற்றி சிந்திப்பதாகவும் ஜப்பான் டாக்டர்கள் தெரிவித்தனர்.

எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஜப்பானில் இருந்து சில முக்கியமான மருந்துகளையும் ஜப்பான் டாக்டர்கள் கொண்டு வந்தார்கள். மூளையில் உள்ள வீக்கத்தை குறைக்க அவர்கள் கொண்டு வந்த "கிளிசரால்" என்ற மருந்து எம்.ஜி.ஆர். உடலில் ஏற்றப்பட்டது.

மேலும் விமானப்பயணத்தை எம்.ஜி.ஆர். உடல் தாங்குவ தற்கான விசேஷ மருந்தும் ஜப்பானில் இருந்து வர வழைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு வாரம் சென்று மீண்டும் வருவதாக கூறிவிட்டு டாக்டர்கள் கானு, நகமோரா ஆகியோர் ஜப்பானுக்கு புறப்பட்டுச் சென்றார்கள். எம்.ஜி.ஆர். மீது பற்றும், பாசமும் கொண்ட 10க்கும் மேற்பட்ட தொண்டர்கள் அதிர்ச்சியால் தீக்குளித்தும், தற்கொலை செய்தும் மாண்டனர். கோவையைச் சேர்ந்த பாலன் (வயது 35) என்பவர் உண்ணாவிரதம் இருந்து உயிர் விட்டார்.

எம்.ஜி.ஆர். உடல் நலம் பெற வேண்டி கவர்னர் குரானா திருப்பதி சென்று, பிரார்த்தனை செய்தார். கிறிஸ்தவ ஆலயம், மசூதி மற்றும் கோவில்களில் பிரார்த்தனைகள் நடந்தது. ஏராளமான பேர் பாதயாத்திரை சென்று வழிபாடு நடத்தினார்கள். தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது வெளிமாவட்ட சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினார். எம்.ஜி.ஆர். சிகிச்சை பெறும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

அவருடன் அன்பழகன், துரைமுருகன், அன்பில் தர்மலிங்கம், டி.ஆர்.பாலு, நீலநாராயணன் ஆகியோரும் சென்றனர். எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள், டாக்டர்கள் ஆகியோரை கருணாநிதி சந்தித்து எம்.ஜி.ஆர். உடல் நிலை குறித்து விசாரித்தார்.

நடிகர் சிவாஜிகணேசனும் ஆஸ்பத்திரிக்குச் சென்று விசாரித்தார். இதற்கிடையே எம்.ஜி.ஆரிடம் இருந்த இலாகாக்களை, அமைச்சர் நெடுஞ்செழியன் கவனிப்பார் என்று கவர்னர் குரானா அறிவித்தார்.

இதற்கிடையே, பிரதமர் இந்திரா காந்தி 31.10.1984 அன்று டெல்லியில் அவருடைய மெய்க்காவலர்களாலேயே (சீக்கியர்கள்) சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திரா காந்தியின் மூத்த மகன் ராஜீவ் காந்தி புதிய பிரதமராக பதவி ஏற்றார். எம்.ஜி.ஆரின் உடல் நிலையைக் கருதி, இந்திரா காந்தி மரணம் அடைந்தது பற்றி, அவரிடம் தெரிவிக்கப்படவில்லை.

எம்.ஜி.ஆர். அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ஏறக்குறைய ஒரு மாத காலம் ஆகிவிட்டது. விமானப் பயணம் செய்யும் அளவுக்கு, உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. மூளையில் உள்ள ரத்தக்கட்டியை நீக்குவதற்காக எம்.ஜி. ஆருக்கு ஜப்பானில் அறுவை சிகிச்சை செய்ய முதலில் திட்டமிடப்பட்டு இருந்தது அல்லவா?.

அதையொட்டி எம்.ஜி.ஆர். உடல் நிலையை பரிசோதிக்க ஜப்பான் டாக்டர் கானு மீண்டும் 3ந்தேதி சென்னை வந்தார். எம்.ஜி.ஆரை பரிசோதித்து விட்டு, "எம்.ஜி.ஆரின் மூளையில் இருந்த வீக்கம் முழுவதுமாக நீங்கிவிட்டதால் அவருக்கு ஆபரேஷன் தேவை இல்லை" என்று அறிவித்தார். எனவே, மூளை ஆபரேஷனுக்காக எம்.ஜி.ஆரை ஜப்பானுக்கு கொண்டு செல்லும் யோசனை கைவிடப்பட்டது.

ஆனாலும், சிறுநீரக சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்துச்செல்ல அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக நடந் தன. அமெரிக்காவில் நிïயார்க் நகரில் உள்ள புரூக்ளின் மருத்துவமனை சிறுநீரக கோளாறுக்காக, சிகிச்சை அளிப்பதில் உலகப்புகழ் பெற்றதாகும். அந்த ஆஸ்பத்திரியில்தான் எம்.ஜி. ஆருக்கு ஆபரேஷன் செய்ய தீர்மானிக்கப்பட்டது.

இதற்காக ஒரு சிறிய ஆஸ்பத்திரி போன்று அமைக்கப்பட்ட விசேஷ விமானம் தயாரானது. அந்த `போயிங்' ரக விசேஷ விமானம் 4_ந்தேதி சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த விமானத்தில் இருக்கைகள் அகற்றப்பட்டு படுக்கை வசதி, ரத்த சுத்திகரிப்பு (டயாலிசீஸ்) கருவிகள், ரத்தப்பரி சோதனை கருவி, பிராணவாயு சிலிண்டர்கள் போன்ற வசதிகள் அமைக்கப்பட்டிருந்தன.

விமானம் பறக்கும்போது சிகிச்சை கருவிகள் சரிவர இயங்குகின்றனவா? என்று பரிசோதிக்க இந்த விமானம் 70 நிமிடம் வானத்தில் சென்னை நகரை சுற்றி பறந்தது. பின்னர் தரை இறக்கப்பட்டு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

பிரதமர் ராஜீவ் காந்தி சார்பில் மந்திரி நரசிம்மராவ், காங்கிரஸ் பொதுச்செயலாளர் மூப்பனார், ஜி.பார்த்தசாரதி ஆகியோர் தனி விமானம் மூலம் சென்னை வந்தார்கள்.

ஆஸ்பத்திரிக்கு சென்று எம்.ஜி.ஆரை பார்த்தார்கள். ராஜீவ் காந்தியின் வாழ்த்து கடிதத்தை கொடுத்தார்கள். இதையடுத்து *இதே* 5.11.1984 இரவு 9.05 மணிக்கு எம்.ஜி.ஆரை `ஆம்புலன்ஸ்' வேன் மூலம் மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு அழைத்து சென்றனர். ஆம்புலன்ஸ் வண்டியின் கண்ணாடி ஜன்னல்களின் திரை தொங்கவிடப்பட்டிருந்தது.

இருபுறமும் போலீஸ் ஜீப்புகள் சென்றன. ஜானகி அம்மாள், டாக்டர்கள், நர்சுகள் உடன் சென்றனர். இரவு 9.55 மணிக்கு ஆம்பு லன்ஸ் வேன் விமான நிலை யத்தை அடைந்தது. அங்கு அமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள், திரை உலக பிரமுகர்கள் காத்திருந்த னர். எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி, அவர் மனைவி மீனா அம்மாள் மற்றும் குடும்பத்தினர் நின்று கொண்டு இருந்தனர்.

விமானத்தின் அருகில் கவர்னர் குரானா, அமைச்சர் நெடுஞ்செழியன் ஆகியோர் சென்றனர். விமானம் அருகே ஆம்புலன்ஸ் வேன் சென்றதும் எம்.ஜி.ஆர். இருந்த தூக்குப் படுக்கையை (ஸ்டிரெச்சர்) இயந்திர கருவி மூலம் அப்படியே தூக்கி விமானத்துக்குள்ளே வைத்தார்கள். சரியாக இரவு 10.45 மணிக்கு விமானம் அமெரிக்காவுக்குப் புறப்பட்டது.

எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள், அமைச்சர் ஹண்டே, முதல்_அமைச்சரின் தனிச்செயலாளர் பரமசிவம் மற்றும் டாக்டர்கள், நர்சுகள், உதவியாளர்கள் உள்பட மொத்தம் 21 பேர் அந்த விமானத்தில் சென்றார்கள். வழியில் பெட்ரோல் நிரப்புவதற்காக பம்பாய், லண்டன் ஆகிய இடங்களில் விமானம் தரை இறக்கப்பட்டது.

பின்னர் இந்திய நேரப்படி 6.ந்தேதி இரவு 10.22 மணிக்கு விமானம் அமெரிக்காவில் உள்ள நிïயார்க் நகரத்தை அடைந்தது. அமெரிக்க டாக்டர்கள் விமானத்துக்குள் சென்று எம்.ஜி.ஆர். உடல் நிலையை பரிசோதித்தனர். அவர் உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவித்தனர்.

பின்னர் எம்.ஜி.ஆர். ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி புரூக்ளின் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டார். அங்கு ஏற்கனவே அவருக்காக தயார் செய்து வைக்கப்பட்ட அறையில் அனுமதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியின் 5 வது மாடியில் எம்.ஜி.ஆர். இருந்தார்.

10ந்தேதி எம்.ஜி.ஆரை சாய்வு நாற்காலியில் அமர வைத்தார்கள். 2 மணி நேரம் நாற்காலியில் அவர் அமர்ந்திருந்ததாக அமெரிக்காவில் இருந்து தகவல் வந்தது. அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் மூலம் எம்.ஜி.ஆரின் உடல் நிலையில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது.😍............ Thanks.........

orodizli
5th November 2019, 10:25 PM
பெற்றால் தான் பிள்ளையா ?
___________________
காமராஜர் அரங்கத்தில் சத்யராஜ் அவர்கள் கூறியது !
இந்தப் பக்கம் ஒரு டி வி வைப்பா... இந்தப் பக்கம் ஒரு டி வி வைப்பா... ஒரு டி வி யில் உலகிலுள்ள அனைத்து நடிகர்களின் இதை மூன்று முறை சொன்னாா் உணர்ச்சிமயமான காட்சியை போடுங்கப்பா...
இந்தப் பக்கம் உள்ள டி வி யில் மக்கள் திலகம் குழந்தைக்காக வாதடற உணர்ச்சிகரமான காட்சியை போடுங்கப்பா... அப்பறம் பாருங்கப்பா...என்று சொல்ல அரங்கம் இடிந்து விழந்திடுமோ ...என்ற அச்சத்தை ஏற்படுத்தும் கைதட்டல் ...
என் கரங்களும் சிவந்தன என சொல்லத்தான் வேணுமோ ?.........

........... Thanks.........

orodizli
5th November 2019, 10:31 PM
கண்ணதாசனும் எம்.ஜி.ஆரும்..

தமிழ்த் திரையுலகில் கதை வசனங்களில் பெரும் மற்றங்களை ஏற்படுத்திய சிலருள் கவிஞர் கண்ணதாசனும் ஒருவரே எனலாம்.

“வசனத் துறையில் எனக்கென்று ஒரு தனி பாணி உண்டு. சமூகக் கதைகளைவிட சரித்திரக் கதைகளிலே அதை நிறைவேற்ற வாய்ப்புண்டு.”

இவ்வாறு, கவியரசரே, ‘எனது சுயசரிதம்’ என்ற நூலில் எழுதியிருப்பது, இங்கு குறிப்பிடத்தக்கது எனலாம்.
மக்கள் மனங்களைக் கவர்ந்த மதுரைவீரன்!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றிப்படம் ‘மதுரைவீரன்’. இதற்கான திரைக்கதை வசனத்தைத் தீட்டியவர் கவியரசர் கண்ணதாசனே. இப்படத்தில் சில அற்புதமான பாடல்களையும் கவியரசரே எழுதினார்.

‘கிருஷ்ணா பிக்சர்ஸ்’ என்ற பெயரில் சிதம்பரம் லேனா செட்டியார் தயாரித்த இப்படத்தை, டி. போகானந்த் இயக்கினார்.

1956 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘மதுரை வீரன்’ திரைக்காவியம், தமிழகத்தில் முதன்முதலில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலான மகத்தான வெற்றிப்படமாக மகுடத்தைச் சூட்டியது.

தமிழகத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் முதன் முறையாக நூறு நாட்களுக்கும் மேலாக ஓடிய பெருமையினையும் இந்தப் படமே பெற்றது.

அம்மட்டோ! அக்காலத்தில், ‘டூரிங் டாக்கீஸ்’ என்று அழைக்கப்பட்ட, தென்னங்கீற்று வேய்ந்த திரையரங்குகள் பலவற்றிலும் ‘மதுரை வீரன்’ படம் ஐம்பது நாட்களுக்கும் மேலாக ஓடி அபூர்வ சாதனைகளை நிகழ்த்தியது.

இன்னும் என்ன என்ன சாதனைகளை ‘மதுரைவீரன்’ என்ற திரைக்காவியம் நிகழ்த்தியது என்கிறீர்களா?

சொன்னால் பட்டியல் நீளும்! சுருங்கக் காண்போமாக!

பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மாநகரில் முதன்முதலாக நூறு நாட்கள் ஓடிய திரைப்படம் மதுரைவீரன்! ஆம் காஞ்சிபுரம், முருகன் திரையரங்கில் தொடர்ந்து, மூன்று காட்சிகளாக 157 நாட்கள் ஓடி சாதனை படைத்த ஒரே படம் ‘மதுரைவீரன்’ தான்.

செங்கல்பட்டு நகரில் 84 நாட்கள் ஓடிய முதல் படம் ‘மதுரைவீரன்’ தான். திருமலை திரையரங்கில்தான் இச்சாதனை நிகழ்ந்தது.

1956 – இல், குறைந்த ‘ மக்கள் தொகை கொண்ட ஆம்பூர் நகரில், அதிக நாட்கள் (85) நாட்கள்) ஓடிய படமும் மதுரைவீரனே.

பூவிருந்தவல்லி ‘விக்னேஸ்’ திரையரங்கில் அதிக நாட்கள் (85 நாட்கள்) ஓடி வெற்றி முத்திரையைப் பதித்த படமும் மதுரைவீரனே.

கும்பகோணம் நகரில் முதன்முதலாக நூறு நாட்கள் ஓடிய ஒரே படமும ‘மதுரைவீரன்’தான். டைமண்ட் டாக்கீஸில் 119 நாட்கள் ஓடி புதிய சாதனை படைத்தது.

இவ்வளவுதானா என்கீர்களா? ஒரு படத்தைப் பற்றி இப்படியொரு பெருமிதமா என்பீர்கள்? இன்றைய நிலையில், பரபரப்பான தொலைக்காட்சிகளின் விளம்பரங்களுக்கிடையில், ஏதேனும் ஒரு திரையரங்கில் பகல் காட்சியாகப் படத்தை ஓட்டி நூறுநாள் விளம்பரப் போஸ்டர்களை ஒட்டும் போக்கை நாம் பார்க்கிறோம்.

ஆனால், பத்திரிகை விளம்பரங்களே பற்றாக்குறையாக இருந்த 1956 – ஆம் ஆண்டு காலகட்டத்தில், சின்னஞ்சிறிய நகரங்களான பழனி, பொள்ளாச்சி, ஊட்டி, புதுக்கோட்டை, நாமக்கல், ஆத்தூர், பவானி, மன்னார்குடி, விருத்தாச்சலம், பண்ருட்டி, காஞ்சிபுரம், கும்பகோணம், திருவாரூர், கம்பம், போடி, பரமக்குடி, மாயவரம், கடலூர், கரூர், நாகர்கோவில், விருதுநகர், விழுப்புரம் போன்ற பல இடங்களிலும் நூறு நாட்கள் ஓடி ஒப்பற்ற உலக சாதனையை நிகழ்த்திய ‘மதுரைவீரன்’ படத்தைப் போற்றிப் புகழாமல் இருக்க முடியுமா? சொல்லுங்கள்.

இத்துடன், மாவட்டத் தலைநகர்களிலும் மகத்தான சாதனைகளை நிகழ்த்திய மதுரைவீரன் திரைப்படம், சென்னை, மாநகரில் முதன்முதலாக, திரையிடப்பட்ட சித்ரா, பிரபாத், சரஸ்வதி, காமதேனு ஆகிய நான்கு திரையரங்குகளிலும் தொடர்ந்து நூறுநாட்கள் ஓடிச் சாதனைச் சரித்திரமே படைத்தது.

மதுரை மாநகர் சென்ரல் திரையரங்கில் ‘மதுரைவீரன்’ இருநூறு நாட்கள் ஓடி இமாலயச் சாதனை படைத்தது. இதற்கான வெற்றிவிழா, வெள்ளிவிழா மதுரை மாநகரில், மகத்தான முறையில் நடைபெற்றது. புரட்சி நடிகர் கலந்துகொண்ட இவ்விழாவில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர்.

திரையரங்கு சார்பிலும், மதுரை மாவட்டத்தின் சார்பிலும் மக்கள் திலகத்திற்கு வெள்ளிக்கேடயமும், வீரவாளும் பரிசாக வழங்கப்பட்டன.

இத்தகைய சிறப்புகள் பெறுவதற்கான காரணங்கள் யாவை? மதுரைவீரன் திரைக்காவியத்தைப் பற்றி ஆய்ந்தால் தெரிந்துவிடுமே! ஆய்வோமே!

வாரணவாசிப் பாளையம் – அரசன் துளசி அய்யா – பல்லாண்டுகள் பிள்ளைப்பேறு இல்லை – தவிப்பு – ஆண்டவன் அருளால், ஒரு ஆண் குழந்தைக்குத் தந்தை ஆனான்.

ஆனால், நிமித்திகர் ஒருவர் அரசனைப் பார்த்து, ‘மாலை சுற்றிப் பிறந்த குழந்தை மன்னர் பரம்பரைக்கும், அரண்மனைக்கும் ஆபத்தை விளைவிக்கும்’ என்று கூறக் குழந்தை, காட்டில் கொண்டுவிடப்படுகிறது.

காட்டில் விடப்பட்ட குழந்தையை, நாகமும், யானையும் காப்பாற்றி வருகின்றன. அந்நிலையில் அங்கு வந்த சக்கிலியர் இனத்தைச் சேர்ந்த சின்னானும், அவன் மனைவியும் அக்குழந்தையை எடுத்துச் சென்று ‘வீரன்’ என்று பெயரிட்டு வளர்க்கிறார்கள். வளர்ந்து பெரியவனான ‘வீரன்’ தன் பெயருக்கு ஏற்றாற்போல பெரிய வீரனாகிறான்.

(இந்தப் பெரிய வீரனாக, மதுரை வீரனாக மக்கள் திலகம் எம்ஜி.ஆரும்; சின்னானாக்க் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும், அவரது மனைவி செல்வியாக டி.ஏ. மதுரமும் நடித்தார்கள்)

இதன் பின்னர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொட்டியம் பாளையம் இளவரசி பொம்மியை வீரன் காப்பாற்ற முறைமாமன் நரசப்பன் தானே காப்பாற்றியதாகக் கூறுகிறான். பாளையக்கார பொம்மண்ணன் மகிழ்கிறான். ஆனாலும் பொம்மியின் மனம் வீரனிடம் பறிபோகிறது.

இப்படக் கதை செல்லும்.

பொம்மியாக நடிப்பின் இலக்கணமாம் பி. பானுமதியும், நாரசப்பனாக நடிப்பின் நாயகன் டி.எஆ. பாலையாவும் நடித்தார்கள்.

மதுரை மன்னனாகோ.ஏ.கே தேவரும்; அரண்மனை நாட்டியக்காரியாக நாட்டியப் பேரொளி பத்மினியும் நடித்திருந்தனர்.

சிக்கலான கதையை, மக்கள் ஜீரணித்து, ஏற்றுக்கொண்டு, ஏகோபித்த வெற்றியைத் தேடித்தந்ததற்குக் காரணமே கவியரசரின் திரைக்கதை அமைப்பும்; கருத்தைக் கவரும் வசனங்களுமே எனலாம்.

தாழ்த்தப்பட்ட ஓர் இனத்தின் பெருமையை, அருமையாக உயர்த்திக் காட்டி, தமிழ்த்திரையுலகில் அரும்பெரும் சாதனையை நிகழ்த்திக் காட்டிய வரலாற்றுக் காவியமே மதுரைவீரன் எனலாம்.

இப்படத்தில், புரட்சிநடிகரின் இயற்கையான நடிப்பிற்கு உலக அளவில் பெரும் பாராட்டுகள் கிட்டின என்பதனையும் நாம் மறந்துவிட இயலாது.

அந்த அளவிற்குக் கண்ணதானின் திரைக்கதை – வசனம் பெரும்துணையாய், மதுரைவீரன் படத்திற்கு அமைந்திருந்தன.

படத்தில் இடம்பெற்ற காலத்தின் கொடையான இனிய தமிழ் வசனங்களில் இருந்து, சில வரிகளை வாசித்துப் பார்ப்போமா!

வாருங்கள்!

(பொம்மியோடு தப்பிவிட்ட மதுரைவீரன், பாளைய அதிபதி பொம்மண்ணனின் வேண்டுகோளின்படி, திருச்சி மன்னன் விஜயரங்க சொக்கன் வீரர்களால் கைது செய்யப்பட்டு பொம்மியோடு விசாரணை மன்றத்தில் நிறுத்தப்படுகிறான்)

நரசப்பன்; பேரரசின் பிரதிநிதிகளே! பெருமக்களே! குற்றம் சாட்டப்பட்டு நிற்பவன் குலத்திலே சக்கிலியன்; நம் போன்றாரிடம் பேசுவதென்றால் கூட எட்டி நின்று பேச மட்டுமே அருகதையுடையவன். இவன் காதலித்தான், அது முதல் தவறு.

மன்னன் சொக்கன்: என்ன? காதலித்ததே தவறா?

நரசப்பன்: உம்..ம். மன்னன் மகளைக் காதலித்தான். அது முதல் தவறு. அரண்மனைக் கன்னிமாடத்துக்குள் புகுந்தான். அது இரண்டாவது தவறு. கொற்றவன் பெற்ற குலக்கொடியைக் கூசாமல் தூக்கிச் சென்றான். அது மூன்றாவது தவறு. எதிர்த்து வந்தோரை அடித்தான். ஏனென்று கேட்டோரைக் கொன்றான். கீழ்மகன் இவ்வளவு அநியாயங்களைச் செய்வதா? பொறுக்க முடியுமா, அரசே! ஆகவே இந்தத் தீயவனுக்குத் தக்க தண்டனே விதித்துத் தீர்ப்பளிக்குமாறு மன்னரைக் கேட்டுக் கொள்கிறேன்.

மன்னன் சொக்கன்: இந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் உன் பதில்?

வீரன்: ஒரே பதில்! கண்டேன். கண்டாள். காதலித்தோம்! கட்டுண்டோம்! பொறுத்திருந்தோம்! காலம் வந்தது; தூக்கிச் சென்றேன்.

சொக்கன்: தூக்கிச் சென்றது குற்றம் என்கிறார் நரசப்பன்.

வீரன்: இல்லை!

சொக்கன்: எப்படி?

வீரன்: கேட்டால் கொடுக்கமாட்டாரே! அதனால் தூக்கிச் சென்றேன்.

சொக்கன்: நீதான் கீழ்மகயிற்றே. கேட்டால் எப்படிக் கொட்ப்பார் என்பது நரசப்பன் வாதம்!

வீரன்: கீழ்மகனா? ‘இட்டார் பெரியோர்! இடாதார் இழிகுஙத்தோர்!’ என்ற இரண்டே ஜாதிகள்தான் உண்டு என்பது பள்ளிப்பாடம். இவர் நிழலுக்காவது பள்ளிக்கூடத்தில் ஒதுங்கி இருந்தால்தானே மன்னா! எங்கள் இருவர் உடலிலிருந்தும் ரத்தத்தை எடுத்துச் சோதியுங்கள். அதிலே கீழ்மகன், மேல்மகனென்று பேதம் தெரிகிறதா என்று பாருங்கள்!

நரசப்பன்: ஐயய்யோ வேண்டாம் மன்னா! அந்தப் பரீட்சை! அவன் கீழ்ச்சாதிக்காரன் என்பது பிறப்போடு வந்த வழி…

வீரன்: இல்லை! உன் போன்ற பித்தர்கள் செய்த சதி!

{பருகினீர்களா? வளமான தமிழ் வசனங்களை… அறிவுக்கு விருந்தாகும், மருந்தாகும் இந்த வசனங்களை மறக்க முடியுமா?}

இப்படியே நீளும் வாதங்களின் முடிவில்….

நரசப்பன்: தீச்செயல் பல செய்த இவனுக்கு மரண தண்டனை விதிக்கலாம்! ஆனாலும், போகட்டும் ஆயுள்தண்டனை விதியுங்கள்!

சொக்கன்: ஆம். ஆயுள் தண்டனை! அதிலிருந்து தப்ப முடியாது. இன்றுமுதல் பொம்மியின் மனச்சிறையில் ஆயுள் முழுவதும் கிடந்து சாவாயாக! அதோடு நமது தளபதியும் ஆவாயாக.

நரசப்பன்: அரசே!

சொக்கன்: போவாயாக.

(இந்த வசனங்கள் வரும்போது, திரையரங்குகளில் எழுந்த சிரிப்பொலியும், கரவொலியும் அடேயப்பா! எத்துனை ஆரவாரமானது.)

பொம்மண்ணன்: மன்னா!

சொக்கன்: பொம்மண்ணா! கறந்த பால் மடி புகாது. இயற்கையாகக் கலந்துவிட்ட அவர்களை, இனிப் பிரித்தாலும் உமது மகள் கன்னித்தன்மை பெறமுடியாது.

பொம்மண்ணன்: ஆனாலும் அவன் கீழ்ச்சாதி.

சொக்கன்: சாதி என்பது மனிதன் வகுத்த அநீதி! அதை மாற்றிக் கொள்வதுதான் நீதி! காலம் மாறி வருகிறது! எல்லோரும் ஓரு குலமு என்பதை அறிவுலகம் ஏற்றுக்கொள்ளத்தான் போகிறது. அதற்கு நாம் அச்சாரம் போடுகிறோம் இன்று! அந்தப் பெருமையில் நீரும் பங்கு கொள்ளும்.

{கேட்டீர்களா? சாதி எனும் தீயை அணைக்கத் தேன்தமிழில், நம் தீஞ்சுவைக் கவிஞர் தீட்டித் தந்த தெளிவான வசனங்களை…!}

இப்படியே நம் இதயங்களை ஈர்க்கும் வசனங்கையே பார்த்துச் சென்றால், மதுரைவீரன் வசனங்கள் மட்டுமே நூலை நிரப்பிவிடும். பின்னர், ‘கண்ணதாசன் பார்வையில் எம்.ஜி.ஆர் என்ற கருத்துகளைக் காண இயலாமல் போய்விடும்.

ஆதலால் மதுரைவீரனுக்கு மாறுகால், மாறுகை வாங்குமறு தீர்ப்பளித்த திருமலை மன்னனை நோக்கி பொம்மியும், வெள்ளையம்மாளும் பேசுமாறு, கவியரசர் புவி புகழத் தீட்டிய வசனங்களின் ஓரிரு பகுதிகளை மட்டும் பார்த்துவிட்டு ஏனைய கருத்துகளைக் காண்போமே!

பொம்மி: நீதான் மதுரை மன்னனா? வா! ஏன் வந்தாய்? எதற்காக வந்தாய்? கொலை புரியும் காட்சியைக் கண்டுகளிக்க வந்தாயா? அக்கிரமத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்ட ஆனந்தத்திலே ஓடி வந்தாயா? தாவி வந்த குழந்தையின் கன்னத்தைக் கடித்தாயே! மனம் திறந்து உண்மையைக் கூறியும் கடும் தண்டனை விதித்தாயே! சாவு எப்படி இருக்கிறது என்று கார்க்க வேண்டுமா? பார்! பார்! பாவி பார்! கண்கெட்ட உன் ஆட்சியின் பெருமையைக் காப்பாற்ற ஓடுவந்த கால்களைப் பார். சுற்றி வரும் எதிரிகளை தூகாக்குவேன் என்று கத்தி எடுத்த கைகளைப் பார்! ரத்த வெள்ளத்தில் மிதக்கும் அந்த சுத்த வீரனைப் பார்! மாலையிட்ட மணவாளன் அங்கே! ஆலையிட்ட கரும்பாக அவதிப்படும் நான் இங்கே! நீதி எங்கே? நியாயம் எங்கே? நாடு ஆளும் மன்னவனா நீ? நடுநிசியில் கொலை புரியும் கள்ளனுக்கும், உனக்கும் என்ன பேதம்? போ! போய்விடு.

திருமலை மன்னன்: ஐயோ! தவறு நடந்துவிட்டது. என்னை மன்னித்து விடுங்கள்! எல்லாம் அவன் செயல்!

வெள்ளையம்மாள்: அழு! நன்றாக அழு! தொண்டை அடைத்துப் போகும் அளவுக்கு அழு! ஆற்றாது அலறும் இந்த அபலைப் பெண்கள் தனியாகவே அழுவது? நீயும் கூட, சேர்ந்து அழு! அநியாயத்தின் உருவமே! சாகப்போகும் போதாவது உன் கண்கள் திறந்தன. அந்தக் கண்களிலே ஒளியிருக்கிறதா? இருந்தால் பார்! தேம்பி அழும் இந்தப் பச்சைப் பசுங்கிளியைப் பார்! நான்கு புறமும் வேடர் சூழ நடுவில் சிக்கிய மான்போல தவிக்கும் இந்த இல்லறச் செல்வியைப் பார்! மாலை இழந்து, மஞ்சள் அழிந்து, கூந்தல் அவிழ்ந்து, குங்குமம் கலைந்து, பச்சைப் பருவத்திலே பட்டுப்போன மரத்தைப் பார்! பார் மன்னா! நன்றாகப் பார்!

அன்பு தவழும் கணவன் முகத்தை ஆசையோடு பார்க்கவேண்டிய கண்கள். அதிலே ஆறாக ஓடும் கண்ணீர்! அத்தான்! அத்தான்!’ என்று பாசத்தோடு அழைக்கவேண்டிய உதடுகள்! அதிலை சோகத்தின் துடிதுடிப்பு! நீதியற்ற மன்னவனே! உன் ஒரு வார்த்தையிலே உயிரற்ற நடைப்பிணமாகி விட்ட இந்த உத்தமியைப் பார்! ஏன் அசையாமல் நிற்கிறாய்?

‘வீடு தட்டி வந்த கள்வன் யார்?’ என்று கேட்க, ‘தட்டியவன் நானே!’ என்று, வெட்டி வீழ்த்திக் கொண்டான் கையை, பொற்கைப் பாண்டியன். குற்றமற்ற கோவலனைக் கொலை செய்தோம் என்பதை உணர்ந்ததும், சிங்காதனத்திலிருந்து வீழ்ந்து உயிர்விட்டான் பாண்டியன் நெடுஞ்செழியன். கன்றைக் கொன்றான் சோழமன்னன். கற்பு நிறைந்த மணிமேகலையைக் கெடுக்க முயன்றான் மகன் என்று தெரிந்ததும், ‘ஊரார் கொன்று விட்டார்களே! அவனை நானல்லவா கொன்றிருக்க வேண்டும்!’ என்று நீதி முரசு எழுப்பினான் பூம்புகார்ச் சோழன். ஏன்? ஆண்டி முதல் அரசர் வரை ஒரே நீதி வழங்கியதே மூவேந்தர் பரம்பரை! அந்தச் சிங்காசனத்திலே நீ! அந்தச் சிங்கனத்திலே நீ!

திருமலை மன்னன்: இல்லை! பிறழாத நீதி பிறழ்ந்தது! வளையாத செங்கோல் வளைந்தது! என்னைக் கெடுத்துவிட்டார்கள் சண்டாளர்கள்! என்னை மன்னித்து விடுங்கள்!

வெள்ளையம்மாள்: மன்னிப்பு! வானகமே! வையகமே! வளர்ந்து வரும் தாயகமே! ஆராய்ச்சி மணி கட்டிப் போர்க்களத்திலே சிரிக்கின்ற பொன் மதுரை மண்டலமே! மறையப்போகிறது ஒரு மாபெரும் ஜீவன்! மன்னிப்புக் கேட்கிறார் திருமலை மன்னர்! மாபாதகம் தீர்க்க மண்டியிடுகிறார் திருமலை மன்னர்! மன்னியுங்கள்! மன்னா போ! அவர் காலிலே விழு! புரண்டு அழு! கண்ணீரால் உன் களங்கத்தைக் கழுவு! போ! போ! போ!

பார்த்தீர்களா! படித்தீர்களா?

நம் இதயங்களை, இலக்கியச் சொல்லோவியங்களால், மூவேந்தர் ஆண்டிருந்த காலத்து நீதிமுறைகளைச் சொல்லிச் சொல்லிச் சொக்க வைக்கும் கண்ணதாசனின் கருத்துக் கருவூலங்களை…..!

இரண்டு மாதரசிகள் மூலம் மதுரை மன்னனுக்கு நீதியைப் புகட்டி, மதுரைவீரனின் மங்காத புகழை, மக்கள் மனங்களில் நிலையிறுத்திக் காட்டும் கண்ணதாசனின் உணர்ச்சிப்பிழம்பான, உணர்வுப்பூர்வமான வசன ஓட்டங்கள்… ஆடாத நெஞ்சங்களையும் ஆண்டி வைக்கும் ஆற்றல் பெற்றன அல்லவா?

இந்த வசனங்கள்தான், இன்றும் தென்பாண்டி நாட்டிலை, மதுரைவீரனைத் தெய்வதமாக நிரந்தரமாக வணங்க வைத்துக் கொண்டிருக்கிறது என்பது உண்மையிலும் உயர்ந்த உண்மையாகும்.

மதுரைவீரனாக நடித்த மக்கள் திலகம், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் புகழை மென்மேலும் உயரச் செய்த்தோடு, தாழ்த்தப்பட்ட மக்களின் நெஞ்சங்களில் எம்.ஜி.ஆர். எனும் பெயரைத் தாரக மந்திரமாக்கி உச்சரிக்க வழிவகுத்துத் தந்ததும் கண்ணதாசனின் கருத்தோட்டத்தில் எழுந்த எழுச்சிமிக்க வசனங்ளே என்பதும் உண்மையே.

கவிஞர் வசனங்கள் எழுதிய எம்.ஜி.ஆரின் காவியங்கள்!

கவியரசர் கண்ணதாசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி முதலில் 1954 – ஆம் ஆண்டு ‘இல்லற ஜோதி’ என்ற திரைப்படம் வெளிவந்தது. இலக்கிய ரசனையும், தன்னிகரற்ற தமிழ்நசயமும் மிகுந்த வசனங்கள் இடம் பெற்றிருந்தும் அந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.

1956 – ஆம் ஆண்டில், கவியரசரே பெருமிதப்படும் வசனங்கள் அமைந்திருந்த ‘நானே ராஜா’ படமும் வெற்றிக்கனியைப் பறித்துத் தரவில்லை. இதே ஆண்டில் கவிஞரின் திரைக்கதை வசனத்தில் வெளியான ‘தெனாலிராமன்’ படம் ஓரளவுக்கு வெற்றிப்படமாக அமைந்தது. மூன்றிலும் நடிகர்திலகம் சிவாஜிகணேசனே நடித்திருந்தார்.

இருப்பினும் இதே 1956 – ஆம் ஆண்டில் கண்ணதாசனின் திரைக்கதை வசனத்தில் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘மதுரைவீரன்’ திரைப்படமோ மாபெரும் வெற்றிப்படமாகத் திகழ்ந்தது. இதனால், கவிஞரின் புகழும், எம்.ஜி.ஆரின் மகோன்னத வெற்றியும் மக்களால் மாறி மாறி பேசப்பட்டது. இப்படம் குறித்த செய்திகளை முன்னரே பார்த்தோம்.

1956 – ஆம் ஆண்டிலேயே சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவரால் தொடங்கப்பெற்ற தேவர் பிலிம்ஸாரின் முதல் படமான ‘தாய்க்குப் பின் தாரம்’ கண்ணதாசனின் வசனத்திலேயே வளர்ந்து வந்தது. கவிஞர் ‘திர்க்கோஷ்டியூர்’ தொகுதி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட நேர்ந்ததாலும், கழகப்பணிகளில் பெரும் நேரம் செலவிட்டதாலும் கவிஞரின் உதவியாளர் ச. அய்யாப்பிள்ளை அப்படத்தின் வசனங்களைத் தொடர்ந்து எழுதினார். இருப்பினும் கவிஞரின் மேற்பார்வையில் வசனங்கள் மெருகூட்டப்பட்டன. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த இத்திரைப்படம் மகத்தான வெற்றியைக் கண்டது.

ஆக 1956 – ஆம் ஆண்டில், கண்ணதாசன் வசனங்கள் எழுதிய படங்கள் நான்கும் பெருமைக்குரியனவாகவே வெளிவந்தன.

அதில் வரலாற்றுப் பெருமைக்குரியதாய், ‘மதுரை வீரன்’ படமும். சமூகப் பிரச்சனைகளைச் சித்தரித்து, குடும்ப உறவுகளில் ஏற்படும் பகையினால் விளையும் தீமைகளைப் பக்குவமாய்ப் பேசித் தீர்வு காண வைக்கும் படமாய்த் ‘தாய்க்குப் பின் தாரம்’ படமும் அமைந்தன.

1957 – தேர்தல் பிரச்சாரத்தில் தாய்க்குப் பின் தாரம்!
1957 – ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக சட்டசபைத் தொகுதிகள் 123-லும், நாடாளுமன்றத் தேர்தலில் 13 தொகுதிகளிலும் முதன்முறையாகத் தனது வேட்பாளர்களை நிறுத்திப் போட்டியிட்டது.

இந்த வேட்பாளர்களோடு, கழக ஆதரவு பெற்ற வேட்பாளர்களாகச் சிலரும் போட்டியிட்டனர்.

இத்தேர்தலில் தி.மு.க தலைவர்கள் அனைவரும் போட்டியிட்டனர். கழகத்தின் முதுகெலும்பாய்த் திகழ்ந்த அறிஞர் அண்ணா, தமது காஞ்சியுரம் தொகுதி தேர்தல் பணியோடு, பிரச்சாரப் பணிகளிலும் பல தொகுதிகளில் முழுமூச்சோடு ஈடுபட்டார்.

இத்தருணத்தில் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். தொடர்ந்து பத்தொன்பது நாள்கள் தமிழகமெங்கும் சூறாவளிச் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு, தொடர்ச்சியாகப் பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.

அத்தோடு நில்லாமல், தனது நாடகக்கூழுவைக் கொண்டு, தானே நடித்த ‘இன்பக் கனவு’. ‘சுமைதாங்கி’ நாடகங்களையும், மதுரை, திண்டுக்கல், நாகர்கோயில் போன்ற முக்கிய நகரங்களில் நடத்திப் பெரும் சாதனையைப் படைத்தார்.

இம்மட்டோ! கழகத்தின் முக்கியத் தலைவர்களாம் அறிஞர் அண்ணா போட்டியிட்ட காஞ்சிபுரம் தொகுதியில் 1957 மார்ச்சு மாதம் முதல்தேதி முழுவதும், கலைஞர் கருணாநிதியின் குளித்தலைத் தொகுதியில் மார்ச்சு மாதம் எட்டாம் தேதி முழுவதும், மதுரை முத்துவின் மதுரை மத்தியத் தொகுதியில் ஒன்பதாம் தேதி முழுவதும், என்.வி. நடராசன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, பேராசிரியர் அன்பழகன், சத்தியவாணிமுத்உத உள்ளிட்டோர் போட்டியிட்ட சென்னை மாநகரத் தொகுதிகளில், அறிஞர் அண்ணாவோடு இணைந்து மார்ச்சு ஐந்து, ஆறு தேதிகளிலும் புரட்சிநடிகர் புயல்வேகப் பிரச்சாரம் செய்தார்.

இன்னும், நாஞ்சில் மனோகரன் பாராளுமன்றத்திற்கும், நாகூர் அனீபா சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட நாகப்பட்டினம் தொகுதியில் பிப்ரவரி 19 – ஆம் தேதியும், இரா. செழியன் பாராளுமன்றத்திற்கும், எம். குழந்தைவேலு சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட கரூர் தொகுதியில் பிப்ரவரி 20 – ஆம் தேதியும், கவியரசர் கண்ணதாசன் போட்டியிட்ட திருக்கோஷ்டியூர் தொகுதியில் பிப்ரவரி 25 – ஆம் தேதியும், இலட்சியநடிகர் எஸ்.எஸ்.ஆர் போட்டியிட்ட தேனித்தொகுதியில் பிப்ரவரி 26, 27 தேதிகளிலும் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர் எழுச்சிமிகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்தார்.

எந்தவொரு நடிகரும். தலைவரும் செய்திட இயலாத அளவிற்குத் தன்னுடைய படப்பிடிப்புப் பணிகளையெல்லாம் பார்க்காமல், பணச்செலவுகளைப் பற்றியும் கவலைப்படாமல் வியத்தகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்து அனைவர்க்கும் வியப்பூட்டி நின்றவரே மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர் எனலாம்.

இவரது 1957 – ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தோடு, மக்களை பிரமிக்க வைத்த பிரச்சாரச் சுவரொட்டிகளாய் மலர்ந்தனவே ‘தாய்க்குப் பின் தாரம்’ திரைப்படக் காட்சி, சுவரொட்டிகள் எனில் மிகையாகா.

தேர்தல் களத்தில் தி.மு.கழகத்தோடு மோதும் முதன்மையான கட்சி காங்கிரஸ் கட்சியாகும். அக்கட்சியின் தேர்தல் சின்னமோ ‘நுகத்தடி பூட்டிய காளைமாடுகள்’ சின்னமாகும்.

தாய்க்குப்பின் தாரம் திரைப்படத்திலோ மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், யாரும் அடக்க முடியாத ஜல்லிக்கட்டு காளைமாட்டோடு போராடி, அதனை வீழ்த்தி வெற்றி பெறுவதாக ஓர் அருமையான காட்சி இடம் பெற்றுள்ளது.

அதனையே தேர்தல் பிரச்சாரச் சுவரொட்டிகளாக தி.மு.கழகத்தவர் நாடெங்கும் சுவர்களில் ஒட்டியும், வரைந்தும் இருந்தார்கள். தட்டிகளிலும் ஏராளமாக ஒட்டி வைத்தார்கள்.

காங்கிரஸ் என்ற காளையை, உதயசூரியன் என்ற தடுப்புப் பலகையோடு இளைஞர் எம்.ஜி.ஆர், அடக்குவதுபோன்ற கருத்துப் படத்தை, 25.1.1957 ஆம் தேதியிட்ட ‘முரசொலி’ இதழும் வெளியிட்டது.

அன்றைய தி.மு.கழகத்தின் அதிகாரப்பூர்வமான வார ஏடாக வெளிவந்த நாவலரின் ‘நம்நாடு’ இதழ், இதுபற்றி எழுதியாதையும் நாம் இப்போது வாசித்துப் பார்ப்போமே!

“தாய்க்குப்பின் தாரம்” படத்தில், காளை மாட்டோடு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர், சண்டையிடும் காட்சியைக் கையிட்டு வரைந்தும், சில இடங்களில் தட்டிகள், பானர்கள் வைக்கப்பட்டும் இருந்தன. தி.மு.கழகத்தின் தேர்தல் ஈடுபாட்டை, இந்தத் தேர்தல் உத்திகளை மக்கள் வரவேற்றனர்; இரசித்தனர். மக்கள் வாக்களிப்பார்களா? – என்பதைவிடக் கூட்டம் கூட்டமாக வரவேற்பு இருந்ததைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது”

பார்த்தீர்களா? 1957 – ஆம் ஆண்டு தேர்தலிலேயே, ‘தாய்க்குப்பின் தாரம்’ படக்காட்சிகன் மூலமும், தனது பிரச்சாரத்தின் மூலமும், தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், மறுமலர்ச்சியையும் தோற்றுவித்த எம்.ஜி.ஆரின் அரிய பணிகளை….! இதனாலன்றோ பின்னாளில் புரட்சித்தலைவராக அவரால் பீடுநடை போட முடிந்தது.

முயற்சிகளால் முன்னேறிய எம்.ஜி.ஆரை முட்டுக்கட்டைகள் எவற்றாலும் தடுக்க முடிந்தனவா? தடுக்க முயன்றவர்கள்தானே தடம் புரண்டு வீழ்ந்தார்கள்.

இத்தகு வித்தகர் நடித்த பல படங்களுக்கு, நம் கவித்திருமகனார் வீர வசனங்களை எழுதியுள்ளார்.

1957 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘மகாதேவி’, 1958 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘நாடோடி மன்னன்’, 1960 – ஆம் ஆண்டில் வெளிவந்த ‘மன்னாதி மன்னன்’, ‘ராஜா தேசிங்கு’, 1961 – ஆண்டு வெளிவந்த ‘ராணி சம்யுக்தா’ ஆகிய வரலாறு படைத்த படங்களுக்கெல்லாம் கண்ணதாசனே நம் கருந்துகளைக் கவரும் வசனங்களை எழுதியுள்ளார்.

நூலில் இடம் அமைந்திடும் அளவிற்கு, நம் இதயங்களில் அவரது வசனங்கள் இதம்பெறப் பின்பு முயற்சிக்கலாம். இப்போது கவிமகன், சத்தியத்தாய் மகனுக்குத் தந்த பாராட்டை வாசிக்கலாம்.

தென்றல் ஏட்டில், சத்யத்தாய்
மகனுக்கு, கவிமகன் தந்த பாராட்டு!
கவியரசர் கண்ணதாசன், தனது தென்றல் வார இதழில் (27.10.1956 – இல்), ‘புரட்சி நடிகரின் நன்கொடைகள்’ என்ற தலைப்பில் எழுதிய எழுச்சிமிகு பாராட்டுக் கடிதத்தை நாம் இப்போது படித்துப் பார்ப்போமா!

“நடிகத் தோழர்களின் சேவை, நாட்டுக்குப் பலவகைகளிலும் பயன்படுகிறது. கலையை மட்டும் அல்லாது, நாட்டின் பல்வேறு நிறுவனங்களையும் வளர்க்கும் பெருமை நடிகத் தோழர்களில் பலரைச் சாருகிறது.

கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள், தன் கொடைத்திறனால் மக்கள் மன்றத்தில் பெருமதிப்புப் பெற்றவர். பிறர் கண்ணீரைக் காணச் சகியாத உள்ளம், அவர் உள்ளம். இல்லையென வருவாருக்கு, இயன்ற மட்டும் தருவது அவர் பழக்கம். கைப்பணத்திலும் ஆயிரமோ, இரண்டாயிரமோ கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.

அந்த வரிசையிலே இப்பொழுது புரட்சி நடிகர் இராமச்சந்திரன் இடம் பெறுகிறார். புயல் நிவாரண நிதிக்கு அவர் வாரி வழங்கிய தன்மையை நாடறியும். இப்பொழுது மதுரைத் தமிழ்ச்சங்கத்துக்கும், தெற்குத் திட்டங்களத்து ஆதிதிராவிடப் பள்ளிக்கும், சென்னை தியாகராயர் கல்லூரிக்கும் முறையே ரூ 1000, 2000, 2500 நன்கொடையாகத் தந்துள்ளார். அதன்றியும் அகில இந்தியப் பெண்கள் உணவு சங்கத்தின் சென்னைக் கிளைக்கும் ரூ. 500ம் தந்துள்ளார்

வருமானம் அதிகரிக்கலாம்; புகழ் பெருகலாம். பெரிய மனிதர்கள் கூட்டுறவு ஏற்படலாம். ஆனாலும் நாராள மனது எல்லாருக்கும் வந்துவிடுவதில்லை. கையிலிருந்து பணம் கொடுப்பது என்றாலே, கண்களில் ரத்தம் கசியும் சிலருக்கு. வந்த பணத்தை, எப்படித் தன் குடும்பத்துக்குச் சொத்தாக்குவது என்றுதான் எல்லோருமே செய்யும் உபதேசமே, ‘பணத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்ளப்பா’ என்பதுதான். பணம் கைக்கு வந்ததும் மடிக்கு மாறி, பெட்டிக்குள் பதுங்கப் பார்க்கிறது. ‘நாம் தொல்லைப்படும் போது, யார் நமக்குத் தருகிறார்கள்? நமக்கெதற்கு வள்ளன்மை!’ என்ற பேச்சுப் புறப்படுகிறது.

‘ஐயா பசி!’ என்று அலறுபவனைப் பார்த்து, ‘எல்லார்க்கும் அப்படித்தான்! போ! போ!’ என்று இரக்கமின்றிக் கூறத் தோன்றுகிறது. கைப்பணத்துக்கும், தன் பெண்டு பிள்ளைகளுக்குமே தொடர்பு ஏற்படுத்தி, மனம் கணக்கிடுகிறது. பெரும்பகுதி மனித மனம் இப்படி இருப்பதால்தான், ஈந்து சிவக்கும் இருகரம் படைத்தோரை வாயார வாழ்த்தத் தோன்றுகிறது.

கலைவாணர் என.எஸ்.கே, நடிப்பிசைப் புலவர் ராமசாமி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். முதலியோர் நடிகர்களில் வள்ளல்கள் ஆவார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவில் எம்.ஜி.ஆர். உறுப்பினர். தீவிரமான கொள்கைகளை உறுதியாகக் கடைப்பிடிப்பவர். இலட்சோப இலட்சம் மக்களின் இதயகீதம் அவர் பெயர். சமீகத்தில் அவர் நடித்து வெளிவந்த ஐந்து படங்களும் இதுவரை படுலக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வசூலைத் தந்துள்ளன. இப்பொழுது சுமார் பதினைந்து படங்களில் நடித்து வருகிறார்.

இரண்டொரு படங்களில் நடிப்பதாக இருந்து கொள்கை மாறுபாட்டால் அவர் நடிக்க மறுத்ததை நாடறியும். கூமார் இரண்டு இலட்சம் ரூபாய்கள்வரை, இதனால் அவர் இழந்தார். அதற்காகத் துளியும் வருந்தியதில்லை அவர். திருச்சியிலும், மதுரையிலும் சமீபத்தில் மதுரைவீரன் 200 ஆவது நாள் விழா நடந்தபோது, அவற்றில் பேசிய எம்.ஜி.ஆர். ‘எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் என் கொள்கையை விட்டு நடிக்க மாட்டேன். தயாரிப்பாளர்கள் இருக்கும் இந்த மேடையிலேயே அதை அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறேன்’, என்றார்.

நான் நடிக்கப் போகும் கதையை, முன்கூட்டியே பரிசீலித்துத்தான் நடிக்கிறார். கதைகளிலே தன் கருத்தை வெளியிட இரண்டு நடிகர்களுக்குக் கற்பனை ஓட்டம் உண்டு. ஒருவர் கலைவாணர். மற்றொருவர் புரட்சி நடிகர். இன்றையத் திரை உலகில் தலையாய நடிகர் என்ற பெருமை புரட்சி நடிகருகுக்க் கிட்டியுள்ளது. தென்இந்திய நடிகர் சங்கத்தைத் தொடங்கி சிறப்புடன் வளர்க்கும் பெருமை இவருக்கு உண்டு. இவர் பதிப்பாசிரியராக இருந்து நடத்தி வரும் ‘நடிகன் குரல்’ என்ற மாத இதழ், சுமார் இருபத்து மூவாயிரம் பிரதிகள் செலவழிகிறது. அதில் தன் வரலாற்றை எழுதி வருகிறார்.

தி.மு.க. கழகத் தலைவர்கள் அனைவரும் இவரிடத்து நல்ல மதிப்பு வைத்திருக்கிறார்கள்.

நடிகர்களில், அழகாகப் பேசக்கூடியவர் இவர். இவர் புகழில் நாம் பெருமைப்பட நியாயம் இருக்கிறது. காரணம், இவர் நம் குடும்பத்துத் திடமான பிள்ளைகளில் ஒருவர்! வாழ்க!”

படித்துப் பார்த்தோம்! இவற்றிலிருந்து சத்தியத்தாய் பெற்றெடுத்த சரித்திர மகனைப் பற்றி, கவதைத்தாயின், காவியத்தாயின் மகனின் கணிப்பு சரிதானா? கொஞ்சம் சிந்திப்போமே!

1956 – ஆம் ஆண்டில் புட்சி நடிகர் பற்றிக் கவியரசர் பார்வை:-

கலைவாணர் வரிசையிலே கொடை கொடுப்பதில் இப்பொழுது புரட்சி நடிகர் இடம்பெறுகிறார்!’ என்ற கண்ணதாசன் கருத்து, வளர்ச்சி பெற்ற வளமான உண்மையாகவே வருங்காலத்தில் உருவெடுத்தது.

1956 – ஆம் ஆண்டில் ஒரு சவரன் (பவுன்) ரூபாய் நூறுக்கும் குறைவாகவிற்றபோதே, பல்லாயிரக்கணக்கில் வாரி வாரி வழங்கிய வள்ளலே எம்.ஜி.ஆர். என்பதனை அறியும்போது, அவர் ‘மக்கள் திலகம்’ என்ற மகுடத்தைப் பெற்ற மகிமை நம் மனங்களுக்கு நன்கு புரிகிறது.

பின்னாளில் 1959 – ஆம் ஆண்டில் மட்டும் மருத்துவமனைகள், பள்ளிக்களுக்கு எம்.ஜி.ஆர் வாரி வழங்கிய நிதி ரூபாய் மூன்று இலட்சமாகும்.

1961, 1964 – ஆம் ஆண்டுகிளல் அடையாறு ஔவை இல்லத்திற்கு வழங்கிய நிதி ரூபாய் அறுபது ஆயிரங்கள்.

1960, 61, 64 – ஆம் ஆண்டுகளில் சென்னை வெள்ளநிவாரண நிதிக்கு வழங்கிய ரூபாய் எண்பத்தைந்தாயிரம்.

1960, 62, 64 – ஆம் ஆண்டுகளில் மதுரை, தஞ்சை, திருச்சி, நகரங்களின் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கிய ரூபாய் ஒரு இலட்சமாகும்.

1961 – ஆம் ஆண்டு ரிக் ஷா தொழிலாளர்களுக்கு மழைக்கோட்டு வாங்கி, வழங்கிடத் தந்த தொகை ரூபாய் அறுபதாயிரம்.

1962 – ஆம் ஆண்டு சீனப்படையெடுப்பின் போது எம்.ஜி.ஆர் வழங்கிய யுத்த நிதி, ரூபாய் ஒரு இலட்சமாகும்.

1964-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பில் தீக்குளித்த தியாகிகளுக்கு வழங்கிய நிதி ரூபாய் இருபதாயிரம். இதே ஆண்டில் பண்டிதர் நேரு பிரான் நினைவு நிதிக்கு வழங்கிய தொகை ரூபாய் இருபத்தைந்தாயிரமாகும்........... Thanks...

orodizli
5th November 2019, 10:31 PM
கண்ணதாசனும் எம்.ஜி.ஆரும்..

தமிழ்த் திரையுலகில் கதை வசனங்களில் பெரும் மற்றங்களை ஏற்படுத்திய சிலருள் கவிஞர் கண்ணதாசனும் ஒருவரே எனலாம்.

“வசனத் துறையில் எனக்கென்று ஒரு தனி பாணி உண்டு. சமூகக் கதைகளைவிட சரித்திரக் கதைகளிலே அதை நிறைவேற்ற வாய்ப்புண்டு.”

இவ்வாறு, கவியரசரே, ‘எனது சுயசரிதம்’ என்ற நூலில் எழுதியிருப்பது, இங்கு குறிப்பிடத்தக்கது எனலாம்.
மக்கள் மனங்களைக் கவர்ந்த மதுரைவீரன்!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றிப்படம் ‘மதுரைவீரன்’. இதற்கான திரைக்கதை வசனத்தைத் தீட்டியவர் கவியரசர் கண்ணதாசனே. இப்படத்தில் சில அற்புதமான பாடல்களையும் கவியரசரே எழுதினார்.

‘கிருஷ்ணா பிக்சர்ஸ்’ என்ற பெயரில் சிதம்பரம் லேனா செட்டியார் தயாரித்த இப்படத்தை, டி. போகானந்த் இயக்கினார்.

1956 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘மதுரை வீரன்’ திரைக்காவியம், தமிழகத்தில் முதன்முதலில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலான மகத்தான வெற்றிப்படமாக மகுடத்தைச் சூட்டியது.

தமிழகத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் முதன் முறையாக நூறு நாட்களுக்கும் மேலாக ஓடிய பெருமையினையும் இந்தப் படமே பெற்றது.

அம்மட்டோ! அக்காலத்தில், ‘டூரிங் டாக்கீஸ்’ என்று அழைக்கப்பட்ட, தென்னங்கீற்று வேய்ந்த திரையரங்குகள் பலவற்றிலும் ‘மதுரை வீரன்’ படம் ஐம்பது நாட்களுக்கும் மேலாக ஓடி அபூர்வ சாதனைகளை நிகழ்த்தியது.

இன்னும் என்ன என்ன சாதனைகளை ‘மதுரைவீரன்’ என்ற திரைக்காவியம் நிகழ்த்தியது என்கிறீர்களா?

சொன்னால் பட்டியல் நீளும்! சுருங்கக் காண்போமாக!

பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மாநகரில் முதன்முதலாக நூறு நாட்கள் ஓடிய திரைப்படம் மதுரைவீரன்! ஆம் காஞ்சிபுரம், முருகன் திரையரங்கில் தொடர்ந்து, மூன்று காட்சிகளாக 157 நாட்கள் ஓடி சாதனை படைத்த ஒரே படம் ‘மதுரைவீரன்’ தான்.

செங்கல்பட்டு நகரில் 84 நாட்கள் ஓடிய முதல் படம் ‘மதுரைவீரன்’ தான். திருமலை திரையரங்கில்தான் இச்சாதனை நிகழ்ந்தது.

1956 – இல், குறைந்த ‘ மக்கள் தொகை கொண்ட ஆம்பூர் நகரில், அதிக நாட்கள் (85) நாட்கள்) ஓடிய படமும் மதுரைவீரனே.

பூவிருந்தவல்லி ‘விக்னேஸ்’ திரையரங்கில் அதிக நாட்கள் (85 நாட்கள்) ஓடி வெற்றி முத்திரையைப் பதித்த படமும் மதுரைவீரனே.

கும்பகோணம் நகரில் முதன்முதலாக நூறு நாட்கள் ஓடிய ஒரே படமும ‘மதுரைவீரன்’தான். டைமண்ட் டாக்கீஸில் 119 நாட்கள் ஓடி புதிய சாதனை படைத்தது.

இவ்வளவுதானா என்கீர்களா? ஒரு படத்தைப் பற்றி இப்படியொரு பெருமிதமா என்பீர்கள்? இன்றைய நிலையில், பரபரப்பான தொலைக்காட்சிகளின் விளம்பரங்களுக்கிடையில், ஏதேனும் ஒரு திரையரங்கில் பகல் காட்சியாகப் படத்தை ஓட்டி நூறுநாள் விளம்பரப் போஸ்டர்களை ஒட்டும் போக்கை நாம் பார்க்கிறோம்.

ஆனால், பத்திரிகை விளம்பரங்களே பற்றாக்குறையாக இருந்த 1956 – ஆம் ஆண்டு காலகட்டத்தில், சின்னஞ்சிறிய நகரங்களான பழனி, பொள்ளாச்சி, ஊட்டி, புதுக்கோட்டை, நாமக்கல், ஆத்தூர், பவானி, மன்னார்குடி, விருத்தாச்சலம், பண்ருட்டி, காஞ்சிபுரம், கும்பகோணம், திருவாரூர், கம்பம், போடி, பரமக்குடி, மாயவரம், கடலூர், கரூர், நாகர்கோவில், விருதுநகர், விழுப்புரம் போன்ற பல இடங்களிலும் நூறு நாட்கள் ஓடி ஒப்பற்ற உலக சாதனையை நிகழ்த்திய ‘மதுரைவீரன்’ படத்தைப் போற்றிப் புகழாமல் இருக்க முடியுமா? சொல்லுங்கள்.

இத்துடன், மாவட்டத் தலைநகர்களிலும் மகத்தான சாதனைகளை நிகழ்த்திய மதுரைவீரன் திரைப்படம், சென்னை, மாநகரில் முதன்முதலாக, திரையிடப்பட்ட சித்ரா, பிரபாத், சரஸ்வதி, காமதேனு ஆகிய நான்கு திரையரங்குகளிலும் தொடர்ந்து நூறுநாட்கள் ஓடிச் சாதனைச் சரித்திரமே படைத்தது.

மதுரை மாநகர் சென்ரல் திரையரங்கில் ‘மதுரைவீரன்’ இருநூறு நாட்கள் ஓடி இமாலயச் சாதனை படைத்தது. இதற்கான வெற்றிவிழா, வெள்ளிவிழா மதுரை மாநகரில், மகத்தான முறையில் நடைபெற்றது. புரட்சி நடிகர் கலந்துகொண்ட இவ்விழாவில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர்.

திரையரங்கு சார்பிலும், மதுரை மாவட்டத்தின் சார்பிலும் மக்கள் திலகத்திற்கு வெள்ளிக்கேடயமும், வீரவாளும் பரிசாக வழங்கப்பட்டன.

இத்தகைய சிறப்புகள் பெறுவதற்கான காரணங்கள் யாவை? மதுரைவீரன் திரைக்காவியத்தைப் பற்றி ஆய்ந்தால் தெரிந்துவிடுமே! ஆய்வோமே!

வாரணவாசிப் பாளையம் – அரசன் துளசி அய்யா – பல்லாண்டுகள் பிள்ளைப்பேறு இல்லை – தவிப்பு – ஆண்டவன் அருளால், ஒரு ஆண் குழந்தைக்குத் தந்தை ஆனான்.

ஆனால், நிமித்திகர் ஒருவர் அரசனைப் பார்த்து, ‘மாலை சுற்றிப் பிறந்த குழந்தை மன்னர் பரம்பரைக்கும், அரண்மனைக்கும் ஆபத்தை விளைவிக்கும்’ என்று கூறக் குழந்தை, காட்டில் கொண்டுவிடப்படுகிறது.

காட்டில் விடப்பட்ட குழந்தையை, நாகமும், யானையும் காப்பாற்றி வருகின்றன. அந்நிலையில் அங்கு வந்த சக்கிலியர் இனத்தைச் சேர்ந்த சின்னானும், அவன் மனைவியும் அக்குழந்தையை எடுத்துச் சென்று ‘வீரன்’ என்று பெயரிட்டு வளர்க்கிறார்கள். வளர்ந்து பெரியவனான ‘வீரன்’ தன் பெயருக்கு ஏற்றாற்போல பெரிய வீரனாகிறான்.

(இந்தப் பெரிய வீரனாக, மதுரை வீரனாக மக்கள் திலகம் எம்ஜி.ஆரும்; சின்னானாக்க் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும், அவரது மனைவி செல்வியாக டி.ஏ. மதுரமும் நடித்தார்கள்)

இதன் பின்னர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொட்டியம் பாளையம் இளவரசி பொம்மியை வீரன் காப்பாற்ற முறைமாமன் நரசப்பன் தானே காப்பாற்றியதாகக் கூறுகிறான். பாளையக்கார பொம்மண்ணன் மகிழ்கிறான். ஆனாலும் பொம்மியின் மனம் வீரனிடம் பறிபோகிறது.

இப்படக் கதை செல்லும்.

பொம்மியாக நடிப்பின் இலக்கணமாம் பி. பானுமதியும், நாரசப்பனாக நடிப்பின் நாயகன் டி.எஆ. பாலையாவும் நடித்தார்கள்.

மதுரை மன்னனாகோ.ஏ.கே தேவரும்; அரண்மனை நாட்டியக்காரியாக நாட்டியப் பேரொளி பத்மினியும் நடித்திருந்தனர்.

சிக்கலான கதையை, மக்கள் ஜீரணித்து, ஏற்றுக்கொண்டு, ஏகோபித்த வெற்றியைத் தேடித்தந்ததற்குக் காரணமே கவியரசரின் திரைக்கதை அமைப்பும்; கருத்தைக் கவரும் வசனங்களுமே எனலாம்.

தாழ்த்தப்பட்ட ஓர் இனத்தின் பெருமையை, அருமையாக உயர்த்திக் காட்டி, தமிழ்த்திரையுலகில் அரும்பெரும் சாதனையை நிகழ்த்திக் காட்டிய வரலாற்றுக் காவியமே மதுரைவீரன் எனலாம்.

இப்படத்தில், புரட்சிநடிகரின் இயற்கையான நடிப்பிற்கு உலக அளவில் பெரும் பாராட்டுகள் கிட்டின என்பதனையும் நாம் மறந்துவிட இயலாது.

அந்த அளவிற்குக் கண்ணதானின் திரைக்கதை – வசனம் பெரும்துணையாய், மதுரைவீரன் படத்திற்கு அமைந்திருந்தன.

படத்தில் இடம்பெற்ற காலத்தின் கொடையான இனிய தமிழ் வசனங்களில் இருந்து, சில வரிகளை வாசித்துப் பார்ப்போமா!

வாருங்கள்!

(பொம்மியோடு தப்பிவிட்ட மதுரைவீரன், பாளைய அதிபதி பொம்மண்ணனின் வேண்டுகோளின்படி, திருச்சி மன்னன் விஜயரங்க சொக்கன் வீரர்களால் கைது செய்யப்பட்டு பொம்மியோடு விசாரணை மன்றத்தில் நிறுத்தப்படுகிறான்)

நரசப்பன்; பேரரசின் பிரதிநிதிகளே! பெருமக்களே! குற்றம் சாட்டப்பட்டு நிற்பவன் குலத்திலே சக்கிலியன்; நம் போன்றாரிடம் பேசுவதென்றால் கூட எட்டி நின்று பேச மட்டுமே அருகதையுடையவன். இவன் காதலித்தான், அது முதல் தவறு.

மன்னன் சொக்கன்: என்ன? காதலித்ததே தவறா?

நரசப்பன்: உம்..ம். மன்னன் மகளைக் காதலித்தான். அது முதல் தவறு. அரண்மனைக் கன்னிமாடத்துக்குள் புகுந்தான். அது இரண்டாவது தவறு. கொற்றவன் பெற்ற குலக்கொடியைக் கூசாமல் தூக்கிச் சென்றான். அது மூன்றாவது தவறு. எதிர்த்து வந்தோரை அடித்தான். ஏனென்று கேட்டோரைக் கொன்றான். கீழ்மகன் இவ்வளவு அநியாயங்களைச் செய்வதா? பொறுக்க முடியுமா, அரசே! ஆகவே இந்தத் தீயவனுக்குத் தக்க தண்டனே விதித்துத் தீர்ப்பளிக்குமாறு மன்னரைக் கேட்டுக் கொள்கிறேன்.

மன்னன் சொக்கன்: இந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் உன் பதில்?

வீரன்: ஒரே பதில்! கண்டேன். கண்டாள். காதலித்தோம்! கட்டுண்டோம்! பொறுத்திருந்தோம்! காலம் வந்தது; தூக்கிச் சென்றேன்.

சொக்கன்: தூக்கிச் சென்றது குற்றம் என்கிறார் நரசப்பன்.

வீரன்: இல்லை!

சொக்கன்: எப்படி?

வீரன்: கேட்டால் கொடுக்கமாட்டாரே! அதனால் தூக்கிச் சென்றேன்.

சொக்கன்: நீதான் கீழ்மகயிற்றே. கேட்டால் எப்படிக் கொட்ப்பார் என்பது நரசப்பன் வாதம்!

வீரன்: கீழ்மகனா? ‘இட்டார் பெரியோர்! இடாதார் இழிகுஙத்தோர்!’ என்ற இரண்டே ஜாதிகள்தான் உண்டு என்பது பள்ளிப்பாடம். இவர் நிழலுக்காவது பள்ளிக்கூடத்தில் ஒதுங்கி இருந்தால்தானே மன்னா! எங்கள் இருவர் உடலிலிருந்தும் ரத்தத்தை எடுத்துச் சோதியுங்கள். அதிலே கீழ்மகன், மேல்மகனென்று பேதம் தெரிகிறதா என்று பாருங்கள்!

நரசப்பன்: ஐயய்யோ வேண்டாம் மன்னா! அந்தப் பரீட்சை! அவன் கீழ்ச்சாதிக்காரன் என்பது பிறப்போடு வந்த வழி…

வீரன்: இல்லை! உன் போன்ற பித்தர்கள் செய்த சதி!

{பருகினீர்களா? வளமான தமிழ் வசனங்களை… அறிவுக்கு விருந்தாகும், மருந்தாகும் இந்த வசனங்களை மறக்க முடியுமா?}

இப்படியே நீளும் வாதங்களின் முடிவில்….

நரசப்பன்: தீச்செயல் பல செய்த இவனுக்கு மரண தண்டனை விதிக்கலாம்! ஆனாலும், போகட்டும் ஆயுள்தண்டனை விதியுங்கள்!

சொக்கன்: ஆம். ஆயுள் தண்டனை! அதிலிருந்து தப்ப முடியாது. இன்றுமுதல் பொம்மியின் மனச்சிறையில் ஆயுள் முழுவதும் கிடந்து சாவாயாக! அதோடு நமது தளபதியும் ஆவாயாக.

நரசப்பன்: அரசே!

சொக்கன்: போவாயாக.

(இந்த வசனங்கள் வரும்போது, திரையரங்குகளில் எழுந்த சிரிப்பொலியும், கரவொலியும் அடேயப்பா! எத்துனை ஆரவாரமானது.)

பொம்மண்ணன்: மன்னா!

சொக்கன்: பொம்மண்ணா! கறந்த பால் மடி புகாது. இயற்கையாகக் கலந்துவிட்ட அவர்களை, இனிப் பிரித்தாலும் உமது மகள் கன்னித்தன்மை பெறமுடியாது.

பொம்மண்ணன்: ஆனாலும் அவன் கீழ்ச்சாதி.

சொக்கன்: சாதி என்பது மனிதன் வகுத்த அநீதி! அதை மாற்றிக் கொள்வதுதான் நீதி! காலம் மாறி வருகிறது! எல்லோரும் ஓரு குலமு என்பதை அறிவுலகம் ஏற்றுக்கொள்ளத்தான் போகிறது. அதற்கு நாம் அச்சாரம் போடுகிறோம் இன்று! அந்தப் பெருமையில் நீரும் பங்கு கொள்ளும்.

{கேட்டீர்களா? சாதி எனும் தீயை அணைக்கத் தேன்தமிழில், நம் தீஞ்சுவைக் கவிஞர் தீட்டித் தந்த தெளிவான வசனங்களை…!}

இப்படியே நம் இதயங்களை ஈர்க்கும் வசனங்கையே பார்த்துச் சென்றால், மதுரைவீரன் வசனங்கள் மட்டுமே நூலை நிரப்பிவிடும். பின்னர், ‘கண்ணதாசன் பார்வையில் எம்.ஜி.ஆர் என்ற கருத்துகளைக் காண இயலாமல் போய்விடும்.

ஆதலால் மதுரைவீரனுக்கு மாறுகால், மாறுகை வாங்குமறு தீர்ப்பளித்த திருமலை மன்னனை நோக்கி பொம்மியும், வெள்ளையம்மாளும் பேசுமாறு, கவியரசர் புவி புகழத் தீட்டிய வசனங்களின் ஓரிரு பகுதிகளை மட்டும் பார்த்துவிட்டு ஏனைய கருத்துகளைக் காண்போமே!

பொம்மி: நீதான் மதுரை மன்னனா? வா! ஏன் வந்தாய்? எதற்காக வந்தாய்? கொலை புரியும் காட்சியைக் கண்டுகளிக்க வந்தாயா? அக்கிரமத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்ட ஆனந்தத்திலே ஓடி வந்தாயா? தாவி வந்த குழந்தையின் கன்னத்தைக் கடித்தாயே! மனம் திறந்து உண்மையைக் கூறியும் கடும் தண்டனை விதித்தாயே! சாவு எப்படி இருக்கிறது என்று கார்க்க வேண்டுமா? பார்! பார்! பாவி பார்! கண்கெட்ட உன் ஆட்சியின் பெருமையைக் காப்பாற்ற ஓடுவந்த கால்களைப் பார். சுற்றி வரும் எதிரிகளை தூகாக்குவேன் என்று கத்தி எடுத்த கைகளைப் பார்! ரத்த வெள்ளத்தில் மிதக்கும் அந்த சுத்த வீரனைப் பார்! மாலையிட்ட மணவாளன் அங்கே! ஆலையிட்ட கரும்பாக அவதிப்படும் நான் இங்கே! நீதி எங்கே? நியாயம் எங்கே? நாடு ஆளும் மன்னவனா நீ? நடுநிசியில் கொலை புரியும் கள்ளனுக்கும், உனக்கும் என்ன பேதம்? போ! போய்விடு.

திருமலை மன்னன்: ஐயோ! தவறு நடந்துவிட்டது. என்னை மன்னித்து விடுங்கள்! எல்லாம் அவன் செயல்!

வெள்ளையம்மாள்: அழு! நன்றாக அழு! தொண்டை அடைத்துப் போகும் அளவுக்கு அழு! ஆற்றாது அலறும் இந்த அபலைப் பெண்கள் தனியாகவே அழுவது? நீயும் கூட, சேர்ந்து அழு! அநியாயத்தின் உருவமே! சாகப்போகும் போதாவது உன் கண்கள் திறந்தன. அந்தக் கண்களிலே ஒளியிருக்கிறதா? இருந்தால் பார்! தேம்பி அழும் இந்தப் பச்சைப் பசுங்கிளியைப் பார்! நான்கு புறமும் வேடர் சூழ நடுவில் சிக்கிய மான்போல தவிக்கும் இந்த இல்லறச் செல்வியைப் பார்! மாலை இழந்து, மஞ்சள் அழிந்து, கூந்தல் அவிழ்ந்து, குங்குமம் கலைந்து, பச்சைப் பருவத்திலே பட்டுப்போன மரத்தைப் பார்! பார் மன்னா! நன்றாகப் பார்!

அன்பு தவழும் கணவன் முகத்தை ஆசையோடு பார்க்கவேண்டிய கண்கள். அதிலே ஆறாக ஓடும் கண்ணீர்! அத்தான்! அத்தான்!’ என்று பாசத்தோடு அழைக்கவேண்டிய உதடுகள்! அதிலை சோகத்தின் துடிதுடிப்பு! நீதியற்ற மன்னவனே! உன் ஒரு வார்த்தையிலே உயிரற்ற நடைப்பிணமாகி விட்ட இந்த உத்தமியைப் பார்! ஏன் அசையாமல் நிற்கிறாய்?

‘வீடு தட்டி வந்த கள்வன் யார்?’ என்று கேட்க, ‘தட்டியவன் நானே!’ என்று, வெட்டி வீழ்த்திக் கொண்டான் கையை, பொற்கைப் பாண்டியன். குற்றமற்ற கோவலனைக் கொலை செய்தோம் என்பதை உணர்ந்ததும், சிங்காதனத்திலிருந்து வீழ்ந்து உயிர்விட்டான் பாண்டியன் நெடுஞ்செழியன். கன்றைக் கொன்றான் சோழமன்னன். கற்பு நிறைந்த மணிமேகலையைக் கெடுக்க முயன்றான் மகன் என்று தெரிந்ததும், ‘ஊரார் கொன்று விட்டார்களே! அவனை நானல்லவா கொன்றிருக்க வேண்டும்!’ என்று நீதி முரசு எழுப்பினான் பூம்புகார்ச் சோழன். ஏன்? ஆண்டி முதல் அரசர் வரை ஒரே நீதி வழங்கியதே மூவேந்தர் பரம்பரை! அந்தச் சிங்காசனத்திலே நீ! அந்தச் சிங்கனத்திலே நீ!

திருமலை மன்னன்: இல்லை! பிறழாத நீதி பிறழ்ந்தது! வளையாத செங்கோல் வளைந்தது! என்னைக் கெடுத்துவிட்டார்கள் சண்டாளர்கள்! என்னை மன்னித்து விடுங்கள்!

வெள்ளையம்மாள்: மன்னிப்பு! வானகமே! வையகமே! வளர்ந்து வரும் தாயகமே! ஆராய்ச்சி மணி கட்டிப் போர்க்களத்திலே சிரிக்கின்ற பொன் மதுரை மண்டலமே! மறையப்போகிறது ஒரு மாபெரும் ஜீவன்! மன்னிப்புக் கேட்கிறார் திருமலை மன்னர்! மாபாதகம் தீர்க்க மண்டியிடுகிறார் திருமலை மன்னர்! மன்னியுங்கள்! மன்னா போ! அவர் காலிலே விழு! புரண்டு அழு! கண்ணீரால் உன் களங்கத்தைக் கழுவு! போ! போ! போ!

பார்த்தீர்களா! படித்தீர்களா?

நம் இதயங்களை, இலக்கியச் சொல்லோவியங்களால், மூவேந்தர் ஆண்டிருந்த காலத்து நீதிமுறைகளைச் சொல்லிச் சொல்லிச் சொக்க வைக்கும் கண்ணதாசனின் கருத்துக் கருவூலங்களை…..!

இரண்டு மாதரசிகள் மூலம் மதுரை மன்னனுக்கு நீதியைப் புகட்டி, மதுரைவீரனின் மங்காத புகழை, மக்கள் மனங்களில் நிலையிறுத்திக் காட்டும் கண்ணதாசனின் உணர்ச்சிப்பிழம்பான, உணர்வுப்பூர்வமான வசன ஓட்டங்கள்… ஆடாத நெஞ்சங்களையும் ஆண்டி வைக்கும் ஆற்றல் பெற்றன அல்லவா?

இந்த வசனங்கள்தான், இன்றும் தென்பாண்டி நாட்டிலை, மதுரைவீரனைத் தெய்வதமாக நிரந்தரமாக வணங்க வைத்துக் கொண்டிருக்கிறது என்பது உண்மையிலும் உயர்ந்த உண்மையாகும்.

மதுரைவீரனாக நடித்த மக்கள் திலகம், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் புகழை மென்மேலும் உயரச் செய்த்தோடு, தாழ்த்தப்பட்ட மக்களின் நெஞ்சங்களில் எம்.ஜி.ஆர். எனும் பெயரைத் தாரக மந்திரமாக்கி உச்சரிக்க வழிவகுத்துத் தந்ததும் கண்ணதாசனின் கருத்தோட்டத்தில் எழுந்த எழுச்சிமிக்க வசனங்ளே என்பதும் உண்மையே.

கவிஞர் வசனங்கள் எழுதிய எம்.ஜி.ஆரின் காவியங்கள்!

கவியரசர் கண்ணதாசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி முதலில் 1954 – ஆம் ஆண்டு ‘இல்லற ஜோதி’ என்ற திரைப்படம் வெளிவந்தது. இலக்கிய ரசனையும், தன்னிகரற்ற தமிழ்நசயமும் மிகுந்த வசனங்கள் இடம் பெற்றிருந்தும் அந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.

1956 – ஆம் ஆண்டில், கவியரசரே பெருமிதப்படும் வசனங்கள் அமைந்திருந்த ‘நானே ராஜா’ படமும் வெற்றிக்கனியைப் பறித்துத் தரவில்லை. இதே ஆண்டில் கவிஞரின் திரைக்கதை வசனத்தில் வெளியான ‘தெனாலிராமன்’ படம் ஓரளவுக்கு வெற்றிப்படமாக அமைந்தது. மூன்றிலும் நடிகர்திலகம் சிவாஜிகணேசனே நடித்திருந்தார்.

இருப்பினும் இதே 1956 – ஆம் ஆண்டில் கண்ணதாசனின் திரைக்கதை வசனத்தில் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘மதுரைவீரன்’ திரைப்படமோ மாபெரும் வெற்றிப்படமாகத் திகழ்ந்தது. இதனால், கவிஞரின் புகழும், எம்.ஜி.ஆரின் மகோன்னத வெற்றியும் மக்களால் மாறி மாறி பேசப்பட்டது. இப்படம் குறித்த செய்திகளை முன்னரே பார்த்தோம்.

1956 – ஆம் ஆண்டிலேயே சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவரால் தொடங்கப்பெற்ற தேவர் பிலிம்ஸாரின் முதல் படமான ‘தாய்க்குப் பின் தாரம்’ கண்ணதாசனின் வசனத்திலேயே வளர்ந்து வந்தது. கவிஞர் ‘திர்க்கோஷ்டியூர்’ தொகுதி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட நேர்ந்ததாலும், கழகப்பணிகளில் பெரும் நேரம் செலவிட்டதாலும் கவிஞரின் உதவியாளர் ச. அய்யாப்பிள்ளை அப்படத்தின் வசனங்களைத் தொடர்ந்து எழுதினார். இருப்பினும் கவிஞரின் மேற்பார்வையில் வசனங்கள் மெருகூட்டப்பட்டன. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த இத்திரைப்படம் மகத்தான வெற்றியைக் கண்டது.

ஆக 1956 – ஆம் ஆண்டில், கண்ணதாசன் வசனங்கள் எழுதிய படங்கள் நான்கும் பெருமைக்குரியனவாகவே வெளிவந்தன.

அதில் வரலாற்றுப் பெருமைக்குரியதாய், ‘மதுரை வீரன்’ படமும். சமூகப் பிரச்சனைகளைச் சித்தரித்து, குடும்ப உறவுகளில் ஏற்படும் பகையினால் விளையும் தீமைகளைப் பக்குவமாய்ப் பேசித் தீர்வு காண வைக்கும் படமாய்த் ‘தாய்க்குப் பின் தாரம்’ படமும் அமைந்தன.

1957 – தேர்தல் பிரச்சாரத்தில் தாய்க்குப் பின் தாரம்!
1957 – ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக சட்டசபைத் தொகுதிகள் 123-லும், நாடாளுமன்றத் தேர்தலில் 13 தொகுதிகளிலும் முதன்முறையாகத் தனது வேட்பாளர்களை நிறுத்திப் போட்டியிட்டது.

இந்த வேட்பாளர்களோடு, கழக ஆதரவு பெற்ற வேட்பாளர்களாகச் சிலரும் போட்டியிட்டனர்.

இத்தேர்தலில் தி.மு.க தலைவர்கள் அனைவரும் போட்டியிட்டனர். கழகத்தின் முதுகெலும்பாய்த் திகழ்ந்த அறிஞர் அண்ணா, தமது காஞ்சியுரம் தொகுதி தேர்தல் பணியோடு, பிரச்சாரப் பணிகளிலும் பல தொகுதிகளில் முழுமூச்சோடு ஈடுபட்டார்.

இத்தருணத்தில் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். தொடர்ந்து பத்தொன்பது நாள்கள் தமிழகமெங்கும் சூறாவளிச் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு, தொடர்ச்சியாகப் பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.

அத்தோடு நில்லாமல், தனது நாடகக்கூழுவைக் கொண்டு, தானே நடித்த ‘இன்பக் கனவு’. ‘சுமைதாங்கி’ நாடகங்களையும், மதுரை, திண்டுக்கல், நாகர்கோயில் போன்ற முக்கிய நகரங்களில் நடத்திப் பெரும் சாதனையைப் படைத்தார்.

இம்மட்டோ! கழகத்தின் முக்கியத் தலைவர்களாம் அறிஞர் அண்ணா போட்டியிட்ட காஞ்சிபுரம் தொகுதியில் 1957 மார்ச்சு மாதம் முதல்தேதி முழுவதும், கலைஞர் கருணாநிதியின் குளித்தலைத் தொகுதியில் மார்ச்சு மாதம் எட்டாம் தேதி முழுவதும், மதுரை முத்துவின் மதுரை மத்தியத் தொகுதியில் ஒன்பதாம் தேதி முழுவதும், என்.வி. நடராசன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, பேராசிரியர் அன்பழகன், சத்தியவாணிமுத்உத உள்ளிட்டோர் போட்டியிட்ட சென்னை மாநகரத் தொகுதிகளில், அறிஞர் அண்ணாவோடு இணைந்து மார்ச்சு ஐந்து, ஆறு தேதிகளிலும் புரட்சிநடிகர் புயல்வேகப் பிரச்சாரம் செய்தார்.

இன்னும், நாஞ்சில் மனோகரன் பாராளுமன்றத்திற்கும், நாகூர் அனீபா சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட நாகப்பட்டினம் தொகுதியில் பிப்ரவரி 19 – ஆம் தேதியும், இரா. செழியன் பாராளுமன்றத்திற்கும், எம். குழந்தைவேலு சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட கரூர் தொகுதியில் பிப்ரவரி 20 – ஆம் தேதியும், கவியரசர் கண்ணதாசன் போட்டியிட்ட திருக்கோஷ்டியூர் தொகுதியில் பிப்ரவரி 25 – ஆம் தேதியும், இலட்சியநடிகர் எஸ்.எஸ்.ஆர் போட்டியிட்ட தேனித்தொகுதியில் பிப்ரவரி 26, 27 தேதிகளிலும் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர் எழுச்சிமிகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்தார்.

எந்தவொரு நடிகரும். தலைவரும் செய்திட இயலாத அளவிற்குத் தன்னுடைய படப்பிடிப்புப் பணிகளையெல்லாம் பார்க்காமல், பணச்செலவுகளைப் பற்றியும் கவலைப்படாமல் வியத்தகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்து அனைவர்க்கும் வியப்பூட்டி நின்றவரே மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர் எனலாம்.

இவரது 1957 – ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தோடு, மக்களை பிரமிக்க வைத்த பிரச்சாரச் சுவரொட்டிகளாய் மலர்ந்தனவே ‘தாய்க்குப் பின் தாரம்’ திரைப்படக் காட்சி, சுவரொட்டிகள் எனில் மிகையாகா.

தேர்தல் களத்தில் தி.மு.கழகத்தோடு மோதும் முதன்மையான கட்சி காங்கிரஸ் கட்சியாகும். அக்கட்சியின் தேர்தல் சின்னமோ ‘நுகத்தடி பூட்டிய காளைமாடுகள்’ சின்னமாகும்.

தாய்க்குப்பின் தாரம் திரைப்படத்திலோ மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், யாரும் அடக்க முடியாத ஜல்லிக்கட்டு காளைமாட்டோடு போராடி, அதனை வீழ்த்தி வெற்றி பெறுவதாக ஓர் அருமையான காட்சி இடம் பெற்றுள்ளது.

அதனையே தேர்தல் பிரச்சாரச் சுவரொட்டிகளாக தி.மு.கழகத்தவர் நாடெங்கும் சுவர்களில் ஒட்டியும், வரைந்தும் இருந்தார்கள். தட்டிகளிலும் ஏராளமாக ஒட்டி வைத்தார்கள்.

காங்கிரஸ் என்ற காளையை, உதயசூரியன் என்ற தடுப்புப் பலகையோடு இளைஞர் எம்.ஜி.ஆர், அடக்குவதுபோன்ற கருத்துப் படத்தை, 25.1.1957 ஆம் தேதியிட்ட ‘முரசொலி’ இதழும் வெளியிட்டது.

அன்றைய தி.மு.கழகத்தின் அதிகாரப்பூர்வமான வார ஏடாக வெளிவந்த நாவலரின் ‘நம்நாடு’ இதழ், இதுபற்றி எழுதியாதையும் நாம் இப்போது வாசித்துப் பார்ப்போமே!

“தாய்க்குப்பின் தாரம்” படத்தில், காளை மாட்டோடு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர், சண்டையிடும் காட்சியைக் கையிட்டு வரைந்தும், சில இடங்களில் தட்டிகள், பானர்கள் வைக்கப்பட்டும் இருந்தன. தி.மு.கழகத்தின் தேர்தல் ஈடுபாட்டை, இந்தத் தேர்தல் உத்திகளை மக்கள் வரவேற்றனர்; இரசித்தனர். மக்கள் வாக்களிப்பார்களா? – என்பதைவிடக் கூட்டம் கூட்டமாக வரவேற்பு இருந்ததைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது”

பார்த்தீர்களா? 1957 – ஆம் ஆண்டு தேர்தலிலேயே, ‘தாய்க்குப்பின் தாரம்’ படக்காட்சிகன் மூலமும், தனது பிரச்சாரத்தின் மூலமும், தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், மறுமலர்ச்சியையும் தோற்றுவித்த எம்.ஜி.ஆரின் அரிய பணிகளை….! இதனாலன்றோ பின்னாளில் புரட்சித்தலைவராக அவரால் பீடுநடை போட முடிந்தது.

முயற்சிகளால் முன்னேறிய எம்.ஜி.ஆரை முட்டுக்கட்டைகள் எவற்றாலும் தடுக்க முடிந்தனவா? தடுக்க முயன்றவர்கள்தானே தடம் புரண்டு வீழ்ந்தார்கள்.

இத்தகு வித்தகர் நடித்த பல படங்களுக்கு, நம் கவித்திருமகனார் வீர வசனங்களை எழுதியுள்ளார்.

1957 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘மகாதேவி’, 1958 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘நாடோடி மன்னன்’, 1960 – ஆம் ஆண்டில் வெளிவந்த ‘மன்னாதி மன்னன்’, ‘ராஜா தேசிங்கு’, 1961 – ஆண்டு வெளிவந்த ‘ராணி சம்யுக்தா’ ஆகிய வரலாறு படைத்த படங்களுக்கெல்லாம் கண்ணதாசனே நம் கருந்துகளைக் கவரும் வசனங்களை எழுதியுள்ளார்.

நூலில் இடம் அமைந்திடும் அளவிற்கு, நம் இதயங்களில் அவரது வசனங்கள் இதம்பெறப் பின்பு முயற்சிக்கலாம். இப்போது கவிமகன், சத்தியத்தாய் மகனுக்குத் தந்த பாராட்டை வாசிக்கலாம்.

தென்றல் ஏட்டில், சத்யத்தாய்
மகனுக்கு, கவிமகன் தந்த பாராட்டு!
கவியரசர் கண்ணதாசன், தனது தென்றல் வார இதழில் (27.10.1956 – இல்), ‘புரட்சி நடிகரின் நன்கொடைகள்’ என்ற தலைப்பில் எழுதிய எழுச்சிமிகு பாராட்டுக் கடிதத்தை நாம் இப்போது படித்துப் பார்ப்போமா!

“நடிகத் தோழர்களின் சேவை, நாட்டுக்குப் பலவகைகளிலும் பயன்படுகிறது. கலையை மட்டும் அல்லாது, நாட்டின் பல்வேறு நிறுவனங்களையும் வளர்க்கும் பெருமை நடிகத் தோழர்களில் பலரைச் சாருகிறது.

கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள், தன் கொடைத்திறனால் மக்கள் மன்றத்தில் பெருமதிப்புப் பெற்றவர். பிறர் கண்ணீரைக் காணச் சகியாத உள்ளம், அவர் உள்ளம். இல்லையென வருவாருக்கு, இயன்ற மட்டும் தருவது அவர் பழக்கம். கைப்பணத்திலும் ஆயிரமோ, இரண்டாயிரமோ கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.

அந்த வரிசையிலே இப்பொழுது புரட்சி நடிகர் இராமச்சந்திரன் இடம் பெறுகிறார். புயல் நிவாரண நிதிக்கு அவர் வாரி வழங்கிய தன்மையை நாடறியும். இப்பொழுது மதுரைத் தமிழ்ச்சங்கத்துக்கும், தெற்குத் திட்டங்களத்து ஆதிதிராவிடப் பள்ளிக்கும், சென்னை தியாகராயர் கல்லூரிக்கும் முறையே ரூ 1000, 2000, 2500 நன்கொடையாகத் தந்துள்ளார். அதன்றியும் அகில இந்தியப் பெண்கள் உணவு சங்கத்தின் சென்னைக் கிளைக்கும் ரூ. 500ம் தந்துள்ளார்

வருமானம் அதிகரிக்கலாம்; புகழ் பெருகலாம். பெரிய மனிதர்கள் கூட்டுறவு ஏற்படலாம். ஆனாலும் நாராள மனது எல்லாருக்கும் வந்துவிடுவதில்லை. கையிலிருந்து பணம் கொடுப்பது என்றாலே, கண்களில் ரத்தம் கசியும் சிலருக்கு. வந்த பணத்தை, எப்படித் தன் குடும்பத்துக்குச் சொத்தாக்குவது என்றுதான் எல்லோருமே செய்யும் உபதேசமே, ‘பணத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்ளப்பா’ என்பதுதான். பணம் கைக்கு வந்ததும் மடிக்கு மாறி, பெட்டிக்குள் பதுங்கப் பார்க்கிறது. ‘நாம் தொல்லைப்படும் போது, யார் நமக்குத் தருகிறார்கள்? நமக்கெதற்கு வள்ளன்மை!’ என்ற பேச்சுப் புறப்படுகிறது.

‘ஐயா பசி!’ என்று அலறுபவனைப் பார்த்து, ‘எல்லார்க்கும் அப்படித்தான்! போ! போ!’ என்று இரக்கமின்றிக் கூறத் தோன்றுகிறது. கைப்பணத்துக்கும், தன் பெண்டு பிள்ளைகளுக்குமே தொடர்பு ஏற்படுத்தி, மனம் கணக்கிடுகிறது. பெரும்பகுதி மனித மனம் இப்படி இருப்பதால்தான், ஈந்து சிவக்கும் இருகரம் படைத்தோரை வாயார வாழ்த்தத் தோன்றுகிறது.

கலைவாணர் என.எஸ்.கே, நடிப்பிசைப் புலவர் ராமசாமி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். முதலியோர் நடிகர்களில் வள்ளல்கள் ஆவார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவில் எம்.ஜி.ஆர். உறுப்பினர். தீவிரமான கொள்கைகளை உறுதியாகக் கடைப்பிடிப்பவர். இலட்சோப இலட்சம் மக்களின் இதயகீதம் அவர் பெயர். சமீகத்தில் அவர் நடித்து வெளிவந்த ஐந்து படங்களும் இதுவரை படுலக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வசூலைத் தந்துள்ளன. இப்பொழுது சுமார் பதினைந்து படங்களில் நடித்து வருகிறார்.

இரண்டொரு படங்களில் நடிப்பதாக இருந்து கொள்கை மாறுபாட்டால் அவர் நடிக்க மறுத்ததை நாடறியும். கூமார் இரண்டு இலட்சம் ரூபாய்கள்வரை, இதனால் அவர் இழந்தார். அதற்காகத் துளியும் வருந்தியதில்லை அவர். திருச்சியிலும், மதுரையிலும் சமீபத்தில் மதுரைவீரன் 200 ஆவது நாள் விழா நடந்தபோது, அவற்றில் பேசிய எம்.ஜி.ஆர். ‘எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் என் கொள்கையை விட்டு நடிக்க மாட்டேன். தயாரிப்பாளர்கள் இருக்கும் இந்த மேடையிலேயே அதை அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறேன்’, என்றார்.

நான் நடிக்கப் போகும் கதையை, முன்கூட்டியே பரிசீலித்துத்தான் நடிக்கிறார். கதைகளிலே தன் கருத்தை வெளியிட இரண்டு நடிகர்களுக்குக் கற்பனை ஓட்டம் உண்டு. ஒருவர் கலைவாணர். மற்றொருவர் புரட்சி நடிகர். இன்றையத் திரை உலகில் தலையாய நடிகர் என்ற பெருமை புரட்சி நடிகருகுக்க் கிட்டியுள்ளது. தென்இந்திய நடிகர் சங்கத்தைத் தொடங்கி சிறப்புடன் வளர்க்கும் பெருமை இவருக்கு உண்டு. இவர் பதிப்பாசிரியராக இருந்து நடத்தி வரும் ‘நடிகன் குரல்’ என்ற மாத இதழ், சுமார் இருபத்து மூவாயிரம் பிரதிகள் செலவழிகிறது. அதில் தன் வரலாற்றை எழுதி வருகிறார்.

தி.மு.க. கழகத் தலைவர்கள் அனைவரும் இவரிடத்து நல்ல மதிப்பு வைத்திருக்கிறார்கள்.

நடிகர்களில், அழகாகப் பேசக்கூடியவர் இவர். இவர் புகழில் நாம் பெருமைப்பட நியாயம் இருக்கிறது. காரணம், இவர் நம் குடும்பத்துத் திடமான பிள்ளைகளில் ஒருவர்! வாழ்க!”

படித்துப் பார்த்தோம்! இவற்றிலிருந்து சத்தியத்தாய் பெற்றெடுத்த சரித்திர மகனைப் பற்றி, கவதைத்தாயின், காவியத்தாயின் மகனின் கணிப்பு சரிதானா? கொஞ்சம் சிந்திப்போமே!

1956 – ஆம் ஆண்டில் புரட்சி நடிகர் பற்றிக் கவியரசர் பார்வை:-

கலைவாணர் வரிசையிலே கொடை கொடுப்பதில் இப்பொழுது புரட்சி நடிகர் இடம்பெறுகிறார்!’ என்ற கண்ணதாசன் கருத்து, வளர்ச்சி பெற்ற வளமான உண்மையாகவே வருங்காலத்தில் உருவெடுத்தது.

1956 – ஆம் ஆண்டில் ஒரு சவரன் (பவுன்) ரூபாய் நூறுக்கும் குறைவாகவிற்றபோதே, பல்லாயிரக்கணக்கில் வாரி வாரி வழங்கிய வள்ளலே எம்.ஜி.ஆர். என்பதனை அறியும்போது, அவர் ‘மக்கள் திலகம்’ என்ற மகுடத்தைப் பெற்ற மகிமை நம் மனங்களுக்கு நன்கு புரிகிறது.

பின்னாளில் 1959 – ஆம் ஆண்டில் மட்டும் மருத்துவமனைகள், பள்ளிக்களுக்கு எம்.ஜி.ஆர் வாரி வழங்கிய நிதி ரூபாய் மூன்று இலட்சமாகும்.

1961, 1964 – ஆம் ஆண்டுகளில் அடையாறு ஔவை இல்லத்திற்கு வழங்கிய நிதி ரூபாய் அறுபது ஆயிரங்கள்.

1960, 61, 64 – ஆம் ஆண்டுகளில் சென்னை வெள்ளநிவாரண நிதிக்கு வழங்கிய ரூபாய் எண்பத்தைந்தாயிரம்.

1960, 62, 64 – ஆம் ஆண்டுகளில் மதுரை, தஞ்சை, திருச்சி, நகரங்களின் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கிய ரூபாய் ஒரு இலட்சமாகும்.

1961 – ஆம் ஆண்டு ரிக் ஷா தொழிலாளர்களுக்கு மழைக்கோட்டு வாங்கி, வழங்கிடத் தந்த தொகை ரூபாய் அறுபதாயிரம்.

1962 – ஆம் ஆண்டு சீனப்படையெடுப்பின் போது எம்.ஜி.ஆர் வழங்கிய யுத்த நிதி, ரூபாய் ஒரு இலட்சமாகும்.

1964-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பில் தீக்குளித்த தியாகிகளுக்கு வழங்கிய நிதி ரூபாய் இருபதாயிரம். இதே ஆண்டில் பண்டிதர் நேரு பிரான் நினைவு நிதிக்கு வழங்கிய தொகை ரூபாய் இருபத்தைந்தாயிரமாகும்........... Thanks...

orodizli
5th November 2019, 10:41 PM
சார் வணக்கம்

நேற்று ஒரு பதிவு பார்த்தேன் அதைப் பற்றிய ஒரு சிறிய விளக்கம்.
1964 ஆம் ஆண்டில் வெளியான படங்களின்
வெற்றி குறித்து ஒருவர்
போட்ட பதிவை இன்னொருவர் எடுத்து
மிகவும் குஷியாக போட்டிருக்கிறார், ஏற்கெனவே முகநூலில்
திரிசூலம் படம் 6 கோடி
ரூபாய் வசூல் செய்ததாகவும், பதினொரு அரங்குகளில் வெள்ளி விழா கண்டதாகவும் ஒரு பத்திரிக்கை பதிவையும் போட்டிருந்தார் , அந்த பதிவுக்கு பதிலாக லோகநாதன் சார் கேட்டிருந்தார் வெறும் 8
அரங்குகள் வெள்ளி விழா ஓடிய திரிசூலம் படம் எப்படி 11 திரை அரங்குகள் ஆனது ? அதுவும் குறிப்பாக 1965 இல் 7 அரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடிய " எங்க வீட்டுப் பிள்ளை" படத்தை விட ஒரு அரங்கிலாவது கூட ஓட்டி முந்தி விட வேண்டும் என்ற வெறியிலே வேலூரில்
ஒரு அரங்கில் இழுங்கப்பா இழுங்கப்பா என்று தியேட்டர் காரர்களே டயர்ட் ஆகி போகும் அளவுக்கு இழுத்து எப்படியோ இலக்கை அடைந்து விட்டோம் என்று நிம்மதிப் பெரு மூச்சு விட்டார்கள் இது
நடந்தது 1979 இல் நல்லா பார்த்துக்கோங்க ஜனங்களே 1965 படத்தை 12 வருடம் கழித்து முறியடிக்க நினைத்து சில ஜிம்னாஸ்டிக் வேலைகள் செய்து வடிவேலு காமெடி போல அஹ்ஹாஹா பார்றா பார்றா 8 தியேட்டர்ல ஓட்டிட்டோம்ல என்று தனக்குத் தானே மகிழ்ச்சி (?) அடைந்து கொண்டார்கள் ஆனால் பாருங்க இத்தனை வருடம் கழித்து முக நூலில் போடும்போது அப்படியே நைஸாக 8 அரங்கு குட்டி போட்டு 11
அரங்காகி விட்டது அது
மட்டுமல்ல அந்த பேப்பர்
விளம்பரத்தில் கூட வசூல் 2 கோடி என்றுதான் போட்டிருந்தார்கள் ஆனால் அதுவே இப்போது வட்டியும் குட்டியுமாக சேர்ந்து 6
கோடி ஆகிவிட்டது
( ஏம்ப்பா எழுதும் போது
உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?) லோகநாதன் சார் இது பற்றியும் ஞான ஒளி படம் சம்பந்தமாக ஓடிய
நாட்கள் குறித்து கேட்ட
கேள்விக்கும் உத்தம புத்திரன், அரிச்சந்திர மகாராசா விடம் இருந்து
இது வரை பதில் இல்லை, சரி போகட்டும்
இப்போ அதே திரிசூலம்
பட பதிவு போட்டவரின் மற்ற ஒரு பதிவுதான் இந்த 1964 ஆம் வருடத்திய பதிவு அதை எடுத்து இன்னொரு சிங்கம் போட்டு குதூகலம் அடைந்திருக்கிறது
1964 ஆம் ஆண்டில் வெளிவந்த மக்கள் திலகத்தின் பட்டியலில்
100 நாள் ஓடிய படங்களில் தெய்வத் தாய் படத்தை தூக்கி
எங்கு போட்டாரோ தெரியவில்லை இந்த எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் சரி போகட்டும் , எத்தனையோ தடவை சொல்லியாகி விட்டது
கர்ணன் படம் மாபெரும்
தோல்விப் படம் பந்துலுவை மீளவே முடியாத கடன் தொல்லைக்கு ஆளாக்கின படம் என்று
ஆனால் சிங்கம் திரும்பத் திரும்ப மதுரை தங்கம் அரங்கில் நூறு நாள் ஓடியது, அங்கே ஓடியது
இங்கே ஓடியது என்று
கதை அளப்பதை மட்டும்
விட்ட பாடில்லை கர்ணன் படம் படுதோல்வி அடைந்ததனால் அவசரம் அவசரமாக கால்ஷீட் கொடுத்து இந்த படமாவது ஓடி விடாதா என்ற நப்பாசையில் தயாரித்து குறுகிய கால
வெளியீடாக வந்ததுதான் இந்த முரடன் முத்து ஆனா பாருங்க இதுவும் சுருண்டு டப்பாவுக்குள்
போய் குதிரை கீழேயும்
தள்ளியது பத்தாதுன்னு
குழியும் பறித்த கதையாக ஆகிவிட்டது
நொந்து நூலாகி விட்ட
அந்த மனுஷனை இன்னும் பங்கப்பாடு படுத்தி அய்யன் சார் நோகடித்தது எல்லாம் பழைய வரலாறு ,
நடிகர் விசு ஒரு பேட்டியின் போது சொல்கிறார் நான் பயங்கர சிவாஜி ரசிகன்
கர்ணன் படம் ரிலீஸ் சமயத்தில் நாங்கள் கொஞ்ச பேர் அது ஓடும்
திரை அரங்குக்குப் போய் முதல் நாள் பார்த்த போது முதல் ஷோவுக்கு பயங்கர கூட்டம், எங்களால் மகிழ்ச்சி தாங்க முடியவில்லை அப்படியே வேட்டைக்காரன் ஓடும்
அரங்குக்கு போய் பார்க்கிறோம் கொஞ்சம்
கூட்டம் குறைவாகத்தான் இருந்தது எங்களுக்கெல்லாம் பயங்கர சந்தோஷம் வேட்டைக்காரன் கதை
முடிந்தது என்று எங்கள்
மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டோம் கடைசியா
செய்தி வருது வேட்டைக்காரனுக்கு ராத்திரியே கூட்டம் கூடியதால் விடியற்காலமே படத்தை தொடங்கி விட்டதும் அடுத்த ஷோவுக்கான கூட்டம்தான் கூட ஆரம்பித்தது என்னும் உண்மை தெரிந்ததும்
நொந்து போய் விட்டோம்( இது சும்மா டிரெய்லர் தான்)
வேட்டைக்காரன் படம் வசூலை அள்ளிக் குவித்த கதையை சமீபத்தில் தமிழ் ஒன் இந்தியா இணைய பத்திரிக்கையில் பெரு.
துளசி வேல் என்பவர் கூட எழுதியிருந்தார்
அடுத்தது " நவராத்திரி"
படம் நாலு தியேட்டரில்
நூறு நாள் ஓடியதாம்
சரிதான் மறுக்கவில்லை இந்த நாலு தியேட்டரிலும் சிவாஜியின் நூறாவது
படம் எந்த காரணம் கொண்டும் அவமானப் பட்டு விடக் கூடாது என்ற ஒற்றை காரணத்துக்காக நூறு நாள் தேய்ப்பதற்கு என்ன என்ன ஏற்பாடுகள் செய்யப் பட்டது( உள்ளடி வேலைகள்) மற்றபடி விஜய லட்சுமி பிக்சர்ஸ்
சார்பாக பரிசுப் போட்டி
என்ற பெயரில் 9 சிவாஜி நடிப்பில் எந்த சிவாஜி நடிப்பு சிறந்தது
என்னும் போட்டியெல்லாம் வைத்து ( பாதி டிக்கட் வேற கண்டிப்பா இணைக்கணும்) ஏ. பி.
நாகராஜன் என்னென்ன பாடு பட்டார் என்பதை பின்னாளில் ஒரு சினிமாப் பத்திரிக்கையில் வெட்ட வெளிச்சம் ஆக்கிய கதை சிங்கத்துக்கு தெரியுமோ தெரியாதோ
தெரியல, ஏ. பி. என் அவர்கள் சொன்ன இன்னொரு செய்தி அந்த நடிகரை வைத்து எவ்வளவோ படங்கள் எடுத்தேன் ( நிறைய கலர் படங்கள்) கடைசியில் பெயரை அவர் எடுத்துக் கொண்டு போய் விட்டார் படம் எடுத்த நானோ செலவழித்த காசைக் கூட எடுக்க முடியாமல் நடுத் தெருவில் நின்றதுதான்
மிச்சம்( எல்லோரும் நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும் இந்த பேட்டி
நவரத்தினம் படம் வந்த பிறகு கொடுத்த பேட்டி
இவ்வளவுக்கும் நவரத்தினம் கொஞ்சம்
சுணங்கிதான் போனது
ஆனால் ஏ. பி. என் எவ்வளவு லாபம் சம்பாதித்தார் என்பதை
சமீபத்தில் ஆயிரத்தில் ஒருவன் பட விழாவின் போது அவர் உறவினர்
சொன்னது எல்லோருக்கும் தெரியும் அது மட்டுமல்ல நவரத்தினம்
தோல்விப் படம் என்று
சிவாஜி ரசிகர்களால்
விமர்சிக்கப் பட்ட படம்
ஆனால் இந்த 2019 வரையிலும் அடுத்தடுத்த வெளியீடுகளில் தொடர்ந்து வந்து வசூலை அள்ளி குவித்துக் கொண்டே இருக்கிறது ஆனால் உங்களால் 4 அரங்கில்
ஓட்டப் பட்ட நவராத்திரி
படம் மறு வெளியீடு கண்டதுண்டா? இல்லை அதன் பிறகு எப்பவாவது எந்த விநியோகஸ்தராவது அதை வெளியிட துணிந்ததுண்டா? பேச வந்துட்டார் சத்திய புத்திரன், சமீபத்தில் கூட ஆரூர் தாஸ் சொன்னார் எம். ஜி ஆரின் ஒரு சில படங்கள் தோல்வி அடைந் திருக் கலாம் ஆனால் அதெல்லாம்
யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்ற
கதைதான் எனவே அவரின் எந்தப் படமும்
தோல்வி லிஸ்டில் எடுக்க முடியாது.
அடுத்து பச்சை விளக்கு
1990 களில் ஆனந்த விகடன் குழுமத்திலிருந்து " ஜெமினி சினிமா" என்ற
சினிமா இதழ் வெளி வந்து கொண்டிருந்தது
அதில் ஒரு சமயம் அது வரை சிவாஜி நடித்து வெளி வந்த படங்களைப் பற்றி சிவாஜியிடம் comment
சொல்லச் சொன்னார்கள் அந்த வரிசையில் பச்சை விளக்கு படத்தைப் பற்றி சிவாஜி அடித்த கமென்ட் "நல்ல வேளை
சிவப்பு விளக்கு விழாமல் போனது" அனைவருக்கும் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்
அந்த படத்தை வேல் பிக்சர்ஸ் பேனரில் தயாரித்தது பைனான்ஸ் செய்தது யார் என்பது அனைவருக்கும் தெரியும் அது மட்டுமல்ல வெலிங்டன் திரை அரங்கத்தை யார்
லீசுக்கு எடுத்திருந்தார் கள் என்பதும் தெரியும்
அப்படியிருக்க பச்சை விளக்காம்? போங்கப்பா
இந்த வரிசையில் ஒரே
ஒரு படம் மட்டும் கொஞ்சம் கை கொடுத்தது என்றால்
அது"கை கொடுத்த தெய்வம்" படம்தான்
காரணம் இந்த படத்தைப் பற்றி இயக்குனர் கே. எஸ். கோபால கிருஷ்ணன் சொன்னது " உண்மையிலேயே இந்த
படம் கை கொடுத்த தெய்வம்தான் காரணம்
தொடர் தோல்வியினால் துவண்டிருந்த சிவாஜிக்கு அது உண்மையிலேயே கை
கொடுத்தது
இதில் ஒரு பெரிய விஷயம் என்னவென்றால் சிவாஜி ஒத்துக் கொண்டாலும் இந்த அடிப் பொடிகள் ஒத்துக்
கொள்ள மாட்டார்கள்
இந்த படம் அங்கே நூறு நாள் ஓடியது இங்கே நூறு நாள் ஓடியது என்று லிஸ்ட் காட்டுவது
இது எப்படியிருக்கிறது என்றால் ஒரு முறை " உத்தம புத்திரன்" படத்தைப் பற்றி ஒரு தொலைக்காட்சி பேட்டியில் நடிகர் கமலஹாசன் ஆஹோ ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி விட்டு அது நன்றாக ஓடியதாகவும்
சொன்னார் , அதன் பிறகு ஒரு நாள் ஒரு
பத்திரிக்கை பேட்டியில்
கமல் சொல்கிறார் நான்
சிவாஜியைப் பார்க்க
அன்னை இல்லம் சென்றிருந்தேன் அப்போது சிவாஜி சொன்னார் நீ உத்தம புத்திரன் படத்தைப் பற்றி சொன்னது எல்லாம் உண்மைதான்
ஆனால் அது வெற்றிப்
படமல்ல நூறு நாள் ஓடியது அவ்வளவுதான்
அது மட்டுமா கண்ணதாசன் குடும்பத்தார் ராசி பிலிம்ஸ் என்ற பெயரில்
அவன்தான் மனிதன் படத்தை எடுத்து வெளியிட்டார்கள் நகரப்
பகுதிகளில் ஓரளவு வெற்றி பெற்ற அந்த படம் பி அண்ட் சி என்று
சொல்லக் கூடிய சிறு குறு நகரங்களில் மண்ணைக் கவ்வியது
ஆனால் அதுவும் நூறு
நாள் படம், ஜேயார் மூவீஸ் தயாரிப்பில் 1972 இல் தொடங்கி 1975 ஆம் ஆண்டில் வெளிவந்த" மன்னவன்
வந்தானடி" படமும் நூறு
நாள் படம்தான் ஆனால் அந்த படத்தைப் பற்றி
எழுத்தாளர் சுதாங்கன்
அவர்கள் தினமலர் வாரமலரில் சிவாஜியை
பற்றி எழுதி வந்த "செலூலாயிட் சோழன்"
என்ற தொடரில் மன்னவன் வந்தானடி படம் ஒரு தோல்விப் படம் என்று உண்மையை எழுதினார் இது 2016 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன் உடனே
மையத்தில் அடிப் பொடிகளெல்லாம் துள்ளிக் குதித்தார்கள்
சுதாங்கனை கண்டபடி
திட்டி பதிவெல்லாம் போட்டார்கள் இவன் எவனுக்கு கையாளோ
என்று போட்டு மன்னவன் வந்தானடி
100 வது நாள் விளம்பரத்தையும் போட்டார்கள் இவ்வளவுக்கும் சுதாங்கன் தீவிர சிவாஜி ரசிகர் ஆனால்
அவர் உண்மையை எழுதினார் அப்போ புரிந்து கொள்ளுங்கள்
இவர்கள் சொல்லும் நூறாவது நாள் படங்களின் லட்சணங்கள் , நான் நேரடியாகவே கேட்கிறேன் 4 அரங்கில் நூறு நாள் ஓடிய நவராத்திரி படமும் , முரடன் முத்து படமும்
படகோட்டி ஓடிய 50 நாள்
வசூலை தொட முடிந்ததா? பதில் சொல்லுங்கள் பார்ப்போம், எங்கள் தலைவருக்கு நூறு நாள் ஓடிதான் தன்னை
நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை
விநியோகஸ்தர் களுக்கு நன்றாகத் தெரியும் 98 நாள் ஓடி 100 நாள் ஓடாமல் போன படத்தைக் கூட
அவர் கண்டு கொள்ளவில்லை
1964 ஆம் ஆண்டிலேயே
தலைவர் நான்கு லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கத் தொடங்கி விட்டார் ஆனால் 1968 ஆம் ஆண்டு ஏ. வி. எம் நிறுவனம் தயாரித்த
உயர்ந்த மனிதன் படத்துக்கு சிவாஜிக்கு
ஒரு லட்சம் சம்பளம் கொடுத்த போது கூட ஒரு 25000 கேட்ட போது
மறுத்து விட்டார்கள் அதற்கு அவர்கள் சொன்ன காரணம் சிவாஜியின் மார்க்கெட்
வேல்யு என்ன என்பது
எங்களுக்குத் தெரியும்
அடிக்கடி இது வேறு
ஒரே நாளில் இரண்டு
படம் வெளியிட்டு சாதனை படைத்தார்
ஒண்ணு நல்லா தெரிஞ்சு க்கோங்க பண்ணி பல குட்டி போட்டு ஒரு பலனும் இல்ல ஆனால் சிங்கம் ஒரு குட்டி போட்டாலும்
சிங்கம் சிங்கம்தான்
அதை மறந்து விடாதீர்கள்
படகோட்டி முதல் வெளியீட்டில் பிளாசாவில் மட்டும் நூறு நாள் என்று மனத் திருப்தி அடையும் நீங்கள் அடுத்தடுத்த வெளியீடுகளில் நகரங்கள் முதல் கிராமங்கள் வரை பட்டி
தொட்டியெங்கும் பட்டயைக் கிளப்பிய , கிளப்புகிற வரலாறை
மறந்தது ஏனோ?
உங்களால் அந்த நாட்களில் வெற்றிப் படம் என்று சொல்லப் பட்ட நவராத்திரி படம் உட்பட 80 சத விகித படங்கள் குறட்டை விட்டு
தூங்குவதை மறந்து விடாதீர்கள், இப்போது கூட படகோட்டி படத்தை
டிஜிட்டல் செய்து வெளியிட பல பேர் செருப்பு தேய நடந்தும்
விநியோக உரிமையை
வைத்திருப்பவர் கொடுக்க மறுக்கிறார்
அதை தெரிந்து கொள்ளுங்கள்

பின் குறிப்பு: தீபாவளிக்கு வெளியான " நாடோடி மன்னன் படம் 5100 பேர்களால் பார்க்கப்பட்டு ஒரு வார
வசூலாக 1,95,000 .00 வசூலித்து சரித்திரம் படைத்திருக்கிறது( வழியில் போவோரையும், புடவை, வேட்டி கொடுத்தும் யாரையும்
அழைக்காமலும் தானாக வசூல் ஆன தொகை இது , இதனை முதலில் முறியடித்து
சாதித்து விட்டு அப்புறம்
பேசுங்கள் )
அப்புறம் இன்னொன்று
தலைவரை மிக உயர்வாக காட்டி காட்சிகள் வைத்த பிகில் படம் பத்து நாளில் 250 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது

நன்றி!........... Thanks.........

orodizli
5th November 2019, 10:42 PM
பாராட்டுக்களும்....!
வாழ்த்துக்களும்....!!
****************************
ஒளிவிளக்கு MGR குடும்பத்தில் நாள்தோறும் நமது தெய்வம், பொன்மனத்திலகம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் காலத்தால் அழிக்க முடியாத காவிய வரலாறுகளை குரல்பதிவு மூலமாக பதிவு செய்து...மக்கள் திலகம் அவர்களின் எண்ணற்ற பக்தர்களின் இதயத்தில் தனக்கென்று ஓர் இடம் பிடித்து புரட்சி படைத்துக் கொண்டிருக்கும் பாசத்திற்குறிய இனிய சகோதரர் திரு. சம்பங்கி GSR அவர்கள் தொடர்ந்து நம் கொடைவள்ளலின் புகழ் ஒலிக்க செய்ய பாராட்டுக்களும்... வாழ்த்துக்களும் கூறி கொள்வதோடு , அண்ணாரின் குரல் உழைப்பை போற்றி பாராட்டு தெரிவித்த சகோதரர் திரு. குமார் அவர்களுக்கு , பெங்களூரில் புனித தெய்வம் எம்ஜிஆர் அவர்களின் ஏகோபித்த உண்மை விசுவாசிகளின் நல் ஆதரவு பெற்று 27 ஆண்டுகளை கடந்தும் சிறப்புடன் இயங்கி வரும் "அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை " யின் சார்பாக நன்றிகளை தெரிவிக்கின்றோம்.
என்றும் ,
எம்ஜிஆரின் காலடி நிழல் க. பழனி........ Thanks...

orodizli
6th November 2019, 12:09 AM
https://youtu.be/e13s9xjUbCg........ Thanks.........

orodizli
6th November 2019, 12:11 AM
கன்னியாகுமரில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைய மூலகாரணம் யார் தெரியுமா? திக-வும் இல்லை; திமுக-வும் இல்லை.

கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்கிற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? கருணாநிதிக்கா, வீரமணிக்கா.... இல்லை.

ஆர்எஸ்எஸ் பிரச்சாரக்கான ஏக்நாத் ரானடே என்கிற மகத்தான கர்மயோகிக்குதான்.

கன்னியாகுமரியில் இருந்த இரண்டு பாறைகளையும் அன்று சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டும் ஏக்நாத் ரானடே தலைமையில் இயங்கிய விவேகானந்தா நினைவு மண்டப கமிட்டி மற்றும் விவேகானந்தா கேந்திரத்திடம் ஒப்படைத்திருந்தது தமிழக அரசு.

சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டி முடிக்கப்பட்டபின் பக்கத்தில் இருந்த மற்றொரு பாறையை 17-7-1977ல் தமிழக அரசாங்கத்திடமே ஒப்படைத்தது விவேகானந்தா கேந்திரம்.

ஒப்படைத்த து மட்டுமல்லாமல், 15-3-1979ல் தமிழக அரசாங்கத்திற்கு திருப்பி அளிக்கப்பட்ட அந்த பாறையில் சுவாமி திருவள்ளுவருக்கு நினைவாலயம் மற்றும் திருவள்ளுவருக்கு சிலை எழுப்ப வேண்டும் என்கிற திட்டத்தை அனுப்பியது விவேகானந்தா கேந்திரம். அனுப்ப ஏற்பாடு செய்தவர் ஏக்நாத் ரானடே அவர்கள்.

அதன் காரணமாக தமிழக அரசாங்கமும் அதை ஏற்றுக் கொண்டு திருவள்ளுவர் நினைவாலயத்திற்கான அடிக்கல்லை அப்போதைய முதல்வராக இருந்த திரு.எம்.ஜி ஆர்.,... அவர்களாலும் திருவள்ளுவர் சிலைக்கான அடிக்கல்லை அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களாலும் 15-04-1979ல் கன்னியாகுமரில் நாட்டப்பட்டது.

ஆக, கன்னியாகுமரில் திருவள்ளுவருக்கு இன்று கம்பீரமாக சிலை இருக்கிறது என்று சொன்னால் அதற்கு முழு முதல் காரணம் *ஆர்எஸ்எஸ் பிரச்சாரக் ஏக்நாத் ரானடே* அவர்கள்தான். இந்து அமைப்புதான் காரணம்........... Thanks.........

oygateedat
6th November 2019, 05:50 AM
https://i.postimg.cc/Dy2XH4qx/39b63ff6-b4bd-468c-bfe5-088c5f5b7ec9.jpg (https://postimages.org/)


கோவை டிலைட்

திரையரங்கில்

oygateedat
6th November 2019, 05:54 AM
https://i.postimg.cc/g0qpCjyK/IMG-4210.jpg (https://postimg.cc/yJd29VbJ)
நன்றி - திரு ரஞ்சித்

oygateedat
6th November 2019, 05:59 AM
https://i.postimg.cc/rpP6X40x/IMG-4213.jpg

orodizli
6th November 2019, 09:49 AM
#புர*ட்சித்த*லைவ*ருட*ன் "அடிமைப்பெண்"... திரைப்ப*ட*த்தில் புர*ட்சித்த*லைவி ந*டித்ததைப்ப*ற்றி அவ*ரே விளக்கும் க*ட்டுரை..

உலகப் பொது மறையான திருக்குறளை நினைவுபடுத்தியது-புரட்சி நடிகர் அன்று என்னிடம் கேட்ட அந்தக் கேள்வி

அவர் அப்படி என்னதான் கேட்டார் என்கிறீர்களா? ஆரம்பத்திலிருந்தே சொல்லுகிறேன்.

“அடிமைப் பெண்" வேடத்தில் நடித்த போது எப்போதும் போல, கதாநாயகி வேடம் என்று எண்ணி இருந்தேன். படத்தின் பூர்வாங்க வேலைகள் வெகு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. கதைக்கேற்ப வில்லியாக வேறு ஒருவரை நடிக்க வைக்கத் திட்டமிட்டிருந்தார்கள். சொல்லப் போனால் எனக்கு அப்போது இரட்டை வேடம் அதில் கிடையாது.

பின்னர் மீண்டும் அப்ப*ட*த்தை உருவாக்கும்போது க*தை ச*ற்றே மாற்ற*ப்ப*ட்ட*து. எனக்கு இர*ட்டை வேட*ம் கிடைத்த*து. உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி க*தை நீயே இரட்டை வேடம் ஏற்று இதில் நடிக்கிறாயா? என்று கேட்டார் எம்.ஜி.ஆர். சட்டென்று எனக்கு ஒரு திருக்குறள் தான் நினைவுக்கு வந்தது.

“கொக்கக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்தவிடத்து” என்ற வரிகளை எண்ணிக் கொண்டேன். இதைத்தான் முதலில் குறிப்பிட்டிருக்கிறேன்.

இம்மாதிரியான சந்தர்ப்பம் வாய்க்காதா என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நான் இதை நழுவ விடுவேனா? முழு மனதுடன், மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டேன்.

கதாநாயகி ஜீவா பாத்திரத்துடன், பட்டத்து ராணி பவளவல்லி (வில்லி) யாகவும் நடிக்கும் பெரும் வாய்ப்பை எம்.ஜி.ஆர் எனக்கு அளித்து விட்டார்.

வில்லிக்காக ஒரு மானரிசம் (mannerism), அதாவது ஒரு தனிப்பட்ட சேஷ்டையைக் கைக்கொள்ளும்படியும் எம்.ஜி.ஆர் அப்போதே கூறிவிட்டார். அதற்காக வீட்டில் கண்ணாடி முன் நின்று ஒரு விசேஷ சேஷ்டையைப் பயிற்சி செய்தேன். நாலைந்து பாவனைகள் பழக்கத்துக்குக் கொண்டு வந்தேன்.

அந்த பாவனை பயிற்சிகளை எம்.ஜி.ஆர் முன் நடித்துக் காட்டிய போது, அதில் ஒன்றை, இப்போது படத்தில் வரும் உதட்டை விரலால் வழித்து விடும் பாவனையை எம்ஜிஆர் தேர்ந்தெடுத்தார்.

“அடிமைப் பெண்” படம் வளரத் தொடங்கியது முதல், அதில் சில தனிச் சிறப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. படக் காட்சியில் எல்லா அம்சங்களும் கலந்தாலோசனை செய்யப்பட்ட பிறகே காமிரவுக்குச் சென்றன.

தயாரிப்பில் பங்கு பெற்ற அனைவரிடமும் ஒரு தனி உற்சாகம் நிறைந்து இருந்ததையும் என்னால் உணர முடிந்தது. என்னைப் பொறுத்தமட்டில், நான் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட படத்தில் நடித்துவிட்டேன். ஆனாலும் ‘அடிமைப்பெண்’ணில் ஒவ்வொரு காட்சியிலும், நானே அனுபவித்து, ரசித்து நடித்தேன். என்னை அறியாமலே ஒரு தனி உற்சாகம் இதில் நடிக்கும் பொழுது ஒட்டிக் கொண்டுவிட்டது.

“இப்படிச் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் போல் தோன்றுகிறதே’ என்று சொன்னால் போதும் அதை உடனே ஏற்றுக் கொண்டுவிடுவார் எம்.ஜி.ஆர் அதற்கு ஒரு சான்றும் கூறுகிறேன்.

ஜெய்ப்பூர் வெளிப்புறக் காட்சிக்காக சென்று அங்கு முகாம் செய்திருந்தோம். ஜெய்ப்பூர் அரண்மனையில், தர்பார் காட்சி ஒன்று அன்று படமாக்கப்பட்டது.

பட்டத்து ராணி (வில்லி)யாக நான் நடித்துக் கொண்டிருக்கிறேன். தர்பார் ஆசனத்தை விட்டுப் படி இறங்கி நடந்து வந்து, எதிர்க் கோடியில் கட்டப்பட்டிருக்கும் கதாநாயகனை நான் பார்க்க வேண்டும். படப்பிடிப்பு சமயத்தில் வில்லியாக வருகையில் எனக்கே இயல்பான, வழக்கமாக நான் மற்ற படங்களில் நடந்து வந்ததைப் போன்ற நடையில் நடந்து வந்தேன். காமிரா படமாக்கிக் கொண்டிருந்தது. டைரக்டரும் ஓ.கே சொல்லி, அந்த நடை காட்சியை முடித்து விட்டார்.

இவ்வளவு முடிந்தும் நான் எம்.ஜி.ஆர் முகத்தை பார்த்தேன். அவர் முகத்திலே அந்தக் காட்சி நினைத்தபடி அமையவில்லை என்பதற்கான அதிருப்தி நிலவியதைக் கண்டு கொண்டேன். ஆனால் அவர் எதுவும் சொல்லவில்லை.

“டைரக்டர் சார், இன்னொரு டேக் எடுக்கிறீங்களா? என்று நானாகவே கேட்டேன். ஏனெனில், என் மனதுக்குள் வேறொரு “ஸ்டைலில்’ நடந்து காட்ட வேண்டும் என்று ஒரு ஆவல் எழுந்தது.

மீண்டும் அந்த நடையலங்காரக் காட்சி படமாக்கப்பட்ட போது, முன் நடந்து வந்தது போல் நடக்காமல், என் கற்பனையில் உதித்த வேறொரு வகையில் ஒரு விசேட நடையை என் பாதங்கள் வெளிப்படுத்திற்று. எம்.ஜி.ஆர் முகத்தைப் பார்த்தேன். இப்போது மனநிறைவின் மகிழ்ச்சி அவர் முகத்தில் தோன்றியது. அதுமட்டுமல்ல உடனே அவர் என்னை அழைத்து, “இந்த நடை ரொம்பப் பிரமாதமாக இருக்கிறது. வில்லிக்கேற்ற அலங்கார நடையாக இருக்கிறது. படம் பூராவும், வில்லியாக வரும்போதெல்லாம் இதே நடையிலேயே நடந்து வந்துவிடு, என்று உத்தரவு போட்டு விட்டார். நடையில் மட்டுமல்லாமல், ஜீவாவாக வரும் போதும், பவளவல்லியாக வரும் போதும் என் குரல்களில் கூட சிறிது வித்தியாசம் இருக்கும். படத்திற்கென்று அப்படி மாற்றம் செய்து கொண்டு நடித்திருக்கிறேன்.

நடிப்பு, குரல் இரண்டையும் பற்றி சொல்லிவிட்டேன். இன்னும் சில குறிப்பிடத்தக்க அம்சங்களும் இதில் உள்ளன. அவற்றிலே முக்கியமாக உடை அலங்காரத்தைப் பற்றிச் சொல்லாமல் இருக்கலாமா? “அடிமைப் பெண்”ணில் வில்லியாக வரும்போது நான் அணிந்து வரும் ஆடைகள் அனைத்தும் புதுமையான பாணியில் தைக்கப்பட்டவை.

அடுத்தது என்னைப் பாட வைத்த முதல் பெருமையும் இந்தப் படத்துக்குத் தான் சேரும். என்னைப் பாடச் சொன்ன போது முதலில் பயந்து தன்னம்பிக்கை குறைவாக இருந்ததால் நான் வாதாடினேன், பிறகு, எம்.ஜி.ஆர் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று தைரியம் கூறிய பிறகே, இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் முன்பு தோன்றினேன்.

இசைக்கு அடுத்ததாக நடனம். “இதில் ஏதேனும் புதுமையைச் செய்ய முடியுமா? என்று புரட்சி நடிகர் என்னிடம் கேட்டார். பலவித நடனங்கள் ஆடிவிட்டேன், பலபடங்களில் ஸ்பானிஷ், எகிப்திய நடன பாணிகளிலும் நடனங்கள் ஆடியிருக்கிறார்கள். இதில் மாற்றம் புதுமையைப் புகுத்துவது எப்படி? இந்தக் கட்டத்தில் நான் பார்த்த பல படங்களை என் மனக் கண்ணுக்குள் கொண்டு வந்து பார்த்தேன். நான் படித்த பல புத்தகக் குறிப்புகளும் நினைவில் பம்பரமாக சுழன்றன . தனிமையில் அமர்ந்து ஓயாமல் சிந்தித்தேன்.

டிக் டிக் டிக்… என இதயத்துடிப்பு… டிக் டிக் துள்ளி எழுந்தேன். முரசு அதிர்ந்து நடனங்கள் ஆடப்படுவதுண்டு… முரசு அதிர்ந்து போர் பரணியும் புறப்படுவது உண்டு. படங்களில்... இந்தக் கட்டத்தில் முரசுகளையே சலங்கை போல் மேனியில் அணிந்து கொண்டு ஆடினால் என்ன? எப்படி இருக்கும்? “குட் ஐடியா” எனக்கு நானே சபாஷ் போட்டுக் கொண்டேன்.

மறுபடியும் ஸ்டுடியோவுக்குச் சென்றபோது எம்.ஜி.ஆரிடம்; ”முரசு அணிந்து ஆடினால் புதுமையாக இருக்கும் என்றேன். “அப்படியே செய்ய்லாம்” என்று கூறியதோடு நிற்காமல், நடனப் பயிற்சி வல்லுனரான நடன மாஸ்டர் சோப்ராவையும் வரவழைக்குபடி ஆளை அனுப்பிவிட்டார் புரட்சி நடிகர். கூடவே கே.வி.மகாதேவனும் வரவழைக்கப்பட்டார்.

ஆட்டம் பிறந்தது. கூடவே தனி விசேஷமானதோர் பின்னணி இசையும் பிறந்தது. மகாதேவன் கிளுகிளுப்பையும் புல்லரிப்பையும் இசையிலே எப்படியோ புகுத்திவிட்டார். அந்த இசை என்னை மேலும் உற்சாகத்துடன் நடனம் ஆட வைத்தது.

இப்படத்திலே நான் கதாநாயகனுக்கு சண்டை பயிற்சிகளும் சொல்லிக் கொடுத்து இருக்கிறேன். ஆமாம், எம்.ஜி.ஆருக்குத் தான் கத்திச் சண்டை, கோடரியில் சண்டை, ஈட்டிச் சண்டை, ஜூடோ சண்டை இத்தனையும் காமிராவில் பதிவாகும் முன் அவர் எனக்கு சொல்லித் தருவார், காமிரா படமாகும்போதோ, எம்.ஜிஆருக்கு நான் பயிற்சி தருவேன்.

இது தான் திரை உலக விந்தை! “அடிமைப் பெண்’ படத்தில் என் நடிப்பின் மீது நம்பிக்கை வைத்து, மகத்தான வாய்ப்புக் கொடுத்ததற்காக புரட்சி நடிகருக்கு என்றென்றும் நன்றி கூற கடமை பட்டிருக்கிறேன்.

இவ்வாறு புர*ட்சித்த*லைவி அடிமைப்பெண் ப*ட*த்தில் புர*ட்சித்த*லைவ*ருட*ன் ந*டித்த அனுப*வ*த்தை நெகிழ்ச்சியுட*ன் குறிப்பிடுகிறார்.

இனிய காலை வ*ணக்கத்துட*ன்...........
Thanks.........

orodizli
6th November 2019, 09:53 AM
மக்கள் திலகத்தின் வெற்றிக்கு துணை புரிந்த அவர் பெயரின் எண் கணிதம்
M.G.RAMACHANDRAN
M 4
G 3
R 2
A 1
M 4
A 1
C 3
H 5
A 1
N 5
D 4
H 5
R 2
A 1
N 5
=46 or 1
ஒன்று என்ற எண் ஸூர்யனைக் குறிக்கும். அரசியல் ஆட்சி இரண்டுக்கும் உரியது.உயர் தலைமையைக் குறிப்பது.ஸூர்யனின் சின்னத்தை ப்ரபலபடுத்தியவர் மக்கள் திலகமே.மேலும் ஸூர்யனின் ஆதிக்கம் பெற்றவர்கள் கண்ணாடி அணிபவர்களாக இருப்பார்கள்.
மக்கள் திலகம் கறுப்பு கண்ணாடி உபயோகித்தவர்.
இவரின் பெயரில் ஸூர்யனின் எண் ஒன்று நான்கு முறை வருகின்றது.
சந்த்ரனின் எண் இரு முறை வருகின்றது.
M.G.R.
குரு பகவானின் எண் 5 நான்கு முறை வருகின்றது.
எனவே அவர் கருணை வள்ளலாக தர்மத்தில் சிறந்தவராக மிளிர்ந்தார்
4 3 2 =9
செவ்வாய்குரிய இந்த எண்ணிலால் M.G.R.மிகவும் ப்ரபலமடைந்தார்.ராஜ தந்த்ரம் கை வரப்பெற்று போராடி மிக உன்னத நிலையைப் பெற்று நம் இதய தெய்வமாக விளங்குகின்றார்
மேலும் செவ்வாய் பலம் பெற்றவர்கள் மல்யுத்தம் கத்தி வாள் வீச்சு வீரர்கள். எந்த போட்டி விளையாட்டிலும் அனாவசியமாக வெற்றிக்கனியை தட்டிப் பறிப்பர்.
நம் பொன் மனச்செம்மலுக்கு இது எல்லாமே கை வந்த கலை தானே............ Thanks.........

orodizli
6th November 2019, 09:57 AM
M. G. R. ..N. T. R. தொடர்ச்சி பாகம் 2

ராமபுரம் தோட்டம் இல்லத்தில் எந்த நேரமும் அனையா விளக்கு போல் அடுப்பு எரியும் எப்போது யார் சென்றாலும் உணவு உண்ணாமல் திரும்புவதில்லை ....
யாராவது வரும் போது சாப்பிட்டு வந்திருந்தாலும் பால் பாயசம் அல்லது பழம் ஜூஸ் எதாவது ஒன்று சாப்பிட்டுத்தான் வர வேண்டும் ..இதுதான் வாத்தியார் கொள்கை லட்சியம்..ஆகும் ...புரட்சித்தலைவர் காண வந்த N. T. ராமராவ் அவர்கள் அங்கே சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களுடன். தானும் அமர்ந்து சாப்பிடுவதாக கூறினார் ..அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார் .புரட்சித்தலைவரே.அவர்க்கு உணவு பறிமாறினார். அறுச்சுவை உணவு என்றால் என்ன என்று புரட்சித்தலைவர் வீட்டில் சாப்பிட்டாத்தான் தெரியும் ..வாத்தியார் வீட்டில் சாப்பிட்டவர்கள். வேறு இடத்தில் சாப்பிட்டா அந்த உணவு நன்றாக இல்லை என்றுத்தான் நினைப்பார்கள்.
அதனால்தான் கர்ம வீரர் காமராஜர் அவர்கள் எம். ஜி. ஆர் எத்தனையோ முறை சாப்பிட கூப்பிட்டும் போகவில்லை ..அதற்கு காரணம் ஒரு முறை எம். ஜி. ஆர் வீட்டில் சாப்பிட்டா மீண்டும் மீண்டும் அவர் வீட்டு சாப்பாடு சாப்பிட தோண்றும். என்பதால் நாவின் சுவை அடக்கி வைத்திருந்தார் ..இப்போது அதே நிலைத்தான் புரட்சித்தலைவர் விருந்து உண்டவுடன். விருந்தோம்பல் என்றால் என்ன என்று..
எம். ஜி. ஆரிடம் கற்றுக்கொள்ளவேண்டும் என்றார் .N. T. ராமராவ் அவர்கள் ...

புரட்சித்தலைவர் ஆசிர்வாதத்துடன் ஆந்திராவின் முதல்வர் ஆனார் ...N. T. ராமராவ் அவர்கள்.
ஆந்திராவில் முதல் முதலாக சட்டசபையில் அறிவித்த திட்டங்களில் அறிவித்த ஒர் அறிவிப்பு இனி திருப்பதி திருமலையில் தினமும் அன்னதானம் வழங்கப்படும்..என்றார் ...இது எப்படி சாத்தியம் ஆகும் .என்று கேள்வி எமுப்பினார்கள் எதிர் கட்சி காரர்கள் ..அதற்கு N. T. ராமராவ் தந்த விளக்கம் ..

தமிழகம் முதல்வர் திரு..எம் ஜி. ராமச்சந்திரன் அவர்கள் வீட்டில் எந்த நேரம் சென்றாலும் உணவு கிடைக்கும். எப்போதும் அவர்வீட்டு அடுப்பு எரிந்துக்கொண்டே இருக்கும். தனி ஒரு மனிதர் வீட்டில் இது சாத்தியம் ஆகும் போது..
ஊர் உலகத்துக்கே படி அளக்கர திருப்பதி திருமலை ஏமுமலையான் ஆலயத்தில் ஏன் சாத்தியம் ஆகாது. என்று விளக்கம் தந்து திட்டத்தை நிறைவேற்றினார்..

பின் குறிப்பு .....N. T. ராமராவ் அவர்கள் முதல்வர் ஆவதற்கு முன் திருப்பதி திருமலையில் தினமும் அன்னதானம் கிடையாது. விஷேச நாட்கள் திருவிழா நாட்கள் மட்டுமே அன்னதானம் வழங்கப்பட்து..மற்ற நாட்களில் பிரசாதம் வழங்கப்பட்டது..N. T. ராமராவ் அவர்கள் வந்த பிறகு தான் சாமி தரிசனம் பார்த்து விட்டு வருபவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதன் பிறகு வந்த. சந்திர பாபு நாயுடு அவர்கள் திருப்பதி திருமலைக்கு வரும் அனைவோருக்கும் எப்போதும் உணவு.உண்டு திட்டம் நிறைவேற்றினார் .....
ஆக திருப்பதி திருமலையில் தினமும் அன்னதானம் உருவாதுக்கு காரணம்

நமது தெய்வம் பொன்மனச்செம்மல்............ Thanks............

orodizli
6th November 2019, 09:57 AM
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 34. .

எங்கெல்லாம் அதர்மம் தலை தூக்கிறதோ அங்கெல்லாம் எதாவது ஒரு ரூபத்தில் வடிவத்தில் அவதாரம் எடுத்து அதர்மத்தை அழிப்பேன். .
பகவத் கீதையில் கிருஷ்ணபரமாத்மா கூறியது. .
அதேப்போல் எங்கெல்லாம் துன்ப படுபவர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் உதவி செய்ய இறைவன் எதோ ரூபத்தில் வடிவத்தில் யாரையாவது அனுப்புவார். அப்படி அனுப்பப்பட்டவர்தான் நமது தெய்வம் பொன்மனச்செம்மல். .

வாத்தியார் ஒவ்வொருக்கும் உதவும் போதும். அவன் நல்லவனா கெட்டவனா ? எதிரியா நண்பனா? ? சொந்தமா உறவு முறையா? ? என்று பார்ப்பதில்லை. ..தன்னை நாடி வருபவர்களுக்கு உதவிடும் போதும். .தேடிச்சென்று உதவிடும் போதும். அங்கே அவனது கஷ்டமான சூழ்நிலையும். எண்ணி சராசரி மனிதாபிமானத்துடன்தான் உதவிடுவார் தவிர. உதவியால் பலன் உண்டு என்பதினாலோ. பிறர் உதவி எதிர்பார்த்தும் உதவிடுவதில்லை உதவி செய்வது நமது கடமை என்கிற ஒரே கொள்கை தான் அவர்க்கு கொடைவள்ளல் பொன்மனச்செம்மல் என்ற பட்டம் பொருந்தியது வழங்கப்பட்டது. . இது 100/. சதவீதம் உண்மையாகும்...இதற்கு ஆயிரம் ஆதாரம் உண்டு. அதிலே ஒரு ஆதாரம் தான். .இந்த பதிவு. .

கவியரசு கண்ணதாசன் அவர்கள் வாத்தியார் நடித்த பல படங்களில் மதுரைவீரன். .மகாதேவி .நாடோடி மன்னன். . ராஜாதேசிங்கு மன்னாதி மன்னன்
திருடாதே. .வசனம் எழுதி தேர்ச்சி,தன்னை ஒரு வசனகர்த்தா என்பதை நிருபித்து. வெற்றியும் வசூலும் குவித்தார். ....அதன் பிறகு அரசியல் சூழ்நிலை காரணமாக வாத்தியாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார். ..அதன் பின்னர் கண்ணதாசன் தயாரிப்பாளராக இருந்து எடுத்த மாலையிட்ட மங்கை. வானம்பாடி வெற்றி படமாக இருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றியடையவில்லை. நஷ்டம்தான் ஏற்பட்டது, ..மேலும் சிவகங்கை சீமை. ...இரத்ததிலகம். ...கவலையில்லாத மனிதன்
தாயே உனக்காக கருப்பு பணம் .போன்ற படங்கள் எடுத்து பெரும் நஷ்டம் ஏற்பட்டு கடனாளியாக ஆனார் ..கடனை அடைக்க முடியாமல் தவித்தார். .தனது சகோதரர்களான A L, சீனிவாசன். .A. L , நாராயணன். ..A. L, முத்தையா. .A. L, கண்ணப்பன். .மேலும் தனது சொந்தகாரர்கள் உறவினர்கள், நண்பர்கள் என பல பேர்களிடம். மற்றும் சிவாஜி. சந்திரபாபு பல சினிமா தயாரிப்பாளர்களிடம் .உதவி கேட்டார். எல்லோரும் எதாவது காரணம் பிரச்சினைகள் கூறி. உதவி செய்ய மறுத்து விட்டார்கள். .இன்னும் சொல்லனும் என்றால் தீபாவளி பண்டிகை குடுபத்துடன் கொண்டாட முடியாதளவுக்கு பணம் பிரச்சினை கஷ்டம் ஏற்பட்டது. கண்ணதாசன் சூழ்நிலை கேள்விப்பட்டார் வாத்தியார். . உடனே போனில் தொடர்பு கொண்டு பேசினார். .

உங்களுக்கு என்ன பிரச்சினை . எவ்வளவு கடன் ..எவ்வளவு பணம் தேவை ..ஏன் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லக்கூடாதா ..நான் போன் செய்து கேட்கறளவுக்கு வைத்துள்ளீர்கள். யார் யாரோரிடம் கேட்டீர்கள் என்னிடம் கேட்கனும் என்று தோன்றவில்லையா, சரி இப்போமுது எவ்வளவு பணம் தேவை என்று வாத்தியார் கேட்டதும். கண்ணதாசனால் பதில் பேச முடியாமல் தவித்தார் மனம் கலங்கினார். .இப்படியும் ஒரு மனிதரா இவரைப் போய் தவறாக எண்ணி தவறனா கருத்துக்கள் தெரிவித்தோமே என எண்ணி மனம் வருந்தியபடி குறிப்பிட்ட தொகையே கேட்டார்..மறுநாள் அதிகாலை நேரத்தில் கண்ணதாசன் வீட்டுக்கு ஒருவர் வந்து வாத்தியார் கொடுத்தார் என்று கூறி மிகபெரிய பொட்டலமும் தீபாவளி பண்டிகை கொண்டாட தேவையான அனைத்து பொருட்கள் பெட்டி நிறைய கொடுத்து விட்டு சென்றார். .அவ்வளவு தான் கண்ணதாசன் ஒன்றும் பேசமுடியவில்லை திக்குமுக்காடிப் போனார். .அப்போது அவருக்கு ஞாபகம் வந்த குறள் இதுதான். .
இன்னார் செய்தாரே ஒருத்தர் அவர் நாணம்
நம்மையும் செய்திடுக. ... என்ற குறள் தான்.
உடனே சின்னப்பர் தேவர்க்கு போன் செய்து நீங்கள், உங்கள் ஆண்டவரை வைத்து அடுத்து எந்த படம் எடுத்தாலும்,அந்த படத்திற்கு நான்தான் முமு பாடல்களும் எழுதுவேன், என்று கூறி போனை வைத்து விட்டார். சின்னப்பர் தேவர் இதைக்கேட்டதும் அதிர்ச்சியில் மகிழ்ச்சி அடைந்தார். .
வாத்தியார் கொடுத்த தொகையை கண்ணதாசன் பிரித்து பார்த்து மேலும் அதிர்ச்சி ஆகினர். அவர் கேட்ட தொகையை விட ஐந்து மடங்கு அதிகமாக இருந்தது. ..இன்னும் முடியலங்க வரலாறு தொடரும் தொடரும் தொடரும்....... Thanks...

orodizli
6th November 2019, 09:58 AM
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 35.

காரியத்தை ஆராய்ந்து பார்த்தால் காரணம் தானாகவே தெரியும். .
என்மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் எண்ணிக்கைகள் பல பல. ஒருவனை குற்றவாளியாக்கிக் விடலாம். நிரபராதி என்று நிருப்பதுத்தான் கடினம். இது வரை என் வாழ்விலே கள்ளம் இல்லை .கபடம் இல்லை .சூதும் இல்லை .
சூழ்ச்சி இல்லை. ...இந்த பதவி நான் கேட்டுக் பெறவில்லை. ..கூப்பிட்டு தந்திர்கள் என்பதற்காக நான் செய்வதெல்லாம் சரி என்று வாதிக்கவும் இல்லை. .
பொறாமைக்காரர்கள் விஷ மூச்சிலே. .சதிகாரர்கள் பின்புறம் இருந்து தாக்கிய சூழ்ச்சியிலே. நான் யார் என்ற கேள்வியை மறந்து. குற்றவாளி கூண்டிலே நிற்கவேண்டிய கோரமான நிலை அடைந்திருக்கிறேன்..
நான் நிரபராதி என்று நிருப்பிதற்க்கு முன் இந்த வழக்கை திருஷ்டி செய்தவர்கள் திறமைசாலிகள் என்பதை ஒப்புக்கொள்கிறேன் ..அந்த திறமைக்குத்தான் நீதிக்கு அடிப்படை என்றால் தாங்கள் இஷ்டம் போல் தீர்ப்பு கூறலாம். .

இது மதுரை வீரன் படத்தில் கவியரசு கண்ணதாசன் வாத்தியார் குணம் அறிந்து எழுதிய வசனம் ஆகு*ம். வாத்தியார் வாழ்க்கையில் பாதி வதந்திகளாலே அவர் செய்த உண்மையான தர்மமும் வள்ளல்தனமும். பொறாமைக்காரர்களின் சூழ்ச்சி சதியினாலும் வயிற்றெரிச்சலில் மறைக்கப்பட்டு உள்ளது. என்பதுதான். உண்மையாகும்.ஆனால் அவரால். உதவி பெற்றவர்கள். ..பலன் அடைந்தவர்கள்..
பயன் அடைந்தவர்கள்.. அவரால் வாழ்ந்துக்கொண்டிருப்பவர்கள். .முன்னேற்றம் அடைந்தவர்கள்...அவர் பெயர் சொல்லி பிழைப்பு நடத்துபவர்கள். இவர்களால் மட்டுமே வாத்தியார் பொன்மனம் வள்ளல்தனமும் மனிதநேயம் அறிய முடிகிறது. .ஒரு மனிதனின் நல்ல செயல்கள் யார் மறைக்க நினைத்தாலும்..
அவர்கள் செய்த உண்மையான தர்மமும் வள்ளல்தனமும் அவர்கள் புகழைக்காக்கும் என்பதற்கு வாத்தியார் வாழ்க்கையை ஒரு உதாரணம் ஆகும்..

கண்ணதாசன் அவர்கள் வாத்தியார் செய்த உதவியை எண்ணி அவர் ஒரு தனிபிறவி என்று புகழாரம் சூட்டினார். சின்னப்பர் தேவர் வாத்தியாரின் அடுத்த படத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோதுதான் கண்ணதாசன் போனில் பேசினார். .முதலில் பாடல் பதிவு செய்து விட்டு பிறகு படத்தின் பெயர் வைக்கலாம் என எண்ணி கண்ணதாசன் வீட்டுக்கு சென்றார். கண்ணதாசன் எமுதிய பாடலின் முதல் சரணம் வரிகள் இதுதான்
ஒருமுறை தான் உன்னிடம் பேசினேன் நீ ஒரு தனிபிறவி என்று நிருப்பித்துவிட்டாய் என்று தான் எழுதிய வரியின் சரணத்தை சின்னப்பர் தேவரிடம் காட்டினார். அவ்வளவு தான் சின்னப்பர் தேவர் கண்ணதாசனை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டார். படத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் நினைத்தேன் நீங்கள் உங்கள் பாடல் வரியிலே கூறிவிட்டீர்கள் அதுவே பாடல் அதுவே படத்தின் பெயர் என்றார்,..
கண்ணதாசன் கையில் பெரும் தொகையை திணித்து விட்டு சென்றார். .பாட்டும் சூப்பர் ஹிட் படமும் சூப்பர் ஹிட் வசூலும் சூப்பர் ஹிட் வாத்தியார் நடிப்பும் அற்புதம் அதிலும் உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே என்ற பாடல் காட்சியில் வாத்தியார் சுறுசுறுப்புக்கும் வேகத்துக்கும் இன்னொரு நடிகரால் ஈடு கொடுக்க முடியாது அவ்வளவு பிரமாதமாக வாத்தியார் அசத்திருப்பார் ......
தனிபிறவி யின் வள்ளல்தனம் தொடரும் தொடரும் தொடரும் .......... Thanks...

orodizli
6th November 2019, 10:04 AM
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைய மூலக்காரணம் யாரென்று ஆராய முற்பட்ட போது தான் பல உண்மைகள் தெரிய வந்தது.......... தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தி.க-வும் கிடையாது, திமுக-வும் கிடையாது.

கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்கிற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? கட்டுமரத்துக்கா, கோழைமணிக்கா.... இல்லை.

எல்லாப் புகழும் புரட்சித் தலைவர், பாரத ரத்னா, டாக்டர் எம்.ஜி ஆரு.,க்கே.

கன்னியாகுமரியில் இருந்த இரண்டு பாறைகளையும் அன்று சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டும் ஏக்நாத் ரானடே தலைமையில் இயங்கிய விவேகானந்தா நினைவு மண்டப கமிட்டி மற்றும் விவேகானந்தா கேந்திரத்திடம் ஒப்படைத்திருந்தது தமிழக அரசு.

சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டி முடிக்கப்பட்டபின் பக்கத்தில் இருந்த மற்றொரு பாறையை 17-07-1977ல் தமிழக அரசாங்கத்திடமே ஒப்படைத்தது விவேகானந்தா கேந்திரம்.

ஒப்படைத்தது மட்டுமல்லாமல், 15-03-1979ல் தமிழக அரசாங்கத்திற்கு திருப்பி அளிக்கப்பட்ட அந்த பாறையில் சுவாமி திருவள்ளுவருக்கு நினைவாலயம் மற்றும் திருவள்ளுவருக்கு சிலை எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை அன்றைய முதல்வர் திரு எம்.ஜி.ஆர்., அவர்களிடம் வைத்தது விவேகானந்தா கேந்திரம். இதற்கு முழுக்க முழுக்க பின்புலமாக இருந்து செயல்பட்டவர் திரு ஏக்நாத் ரானடே அவர்கள்.

அன்றைய முதல்வர் எம்ஜிஆரும் அதை உடனே ஏற்றுக் கொண்டு ஐயன் திருவள்ளுவர் மற்றும் திருக்குறளின் அழியாப்புகழ் மற்றும் அருமை, பெருமைகளை கருத்திற் கொண்டு இதற்கான அடிக்கல் நாட்டின் பிரதமரால் தான் நாட்டப்பட வேண்டும் என்று முடிவு செய்தார். அதன்படியே அன்றைய பாரதப் பிரதமர் திரு மொரார்ஜி தேசாயை அழைத்து திருவள்ளுவர் நினைவாலயத்திற்கான அடிக்கல்லை மிகவும் பொருத்தமாக தமிழ் வருடப்பிறப்பன்று (15/04/1979) எம்ஜிஆர் நாட்டினார். அதே நாளில் திருவள்ளுவர் சிலைக்கான அடிக்கல்லை மொரார்ஜி தேசாயைக் கொண்டு கன்னியாகுமரியில் நாட்டினார்.

ஆக, கன்னியாகுமரில் திருவள்ளுவருக்கு இன்று கம்பீரமாக சிலை இருக்கிறது என்று சொன்னால் அதற்கு முழுமுதற் காரணம் தன்னலம் கருதா தானைத்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தான்.

"இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே

ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே"....... Thanks.........

orodizli
6th November 2019, 10:09 AM
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 36.

"படகோட்டி " படத்தில். மீணவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டார். . .
"தொழிலாளி " படத்தில் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டார். .
"விவசாயி" படத்தில் விவசாயிகள் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டார்.
"பாசம்" படத்தில் தாயின் மகிமையும் தாயில்லாத பிரிவு எப்படிப்பட்டது என்பதை காட்டினார்.
"குடும்பத்தலைவன்" படத்தில் அண்ணன் தம்பி பாச ஒற்றுமையை காட்டினார்.
"பெற்றால்தான் பிள்ளையா" படத்தில் தந்தையின் பாசமும் குழந்தையின் பிரிவும் என்ன என்பதை உணர்த்தினார். .
இப்படி ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒவ்வொரு மைய கருத்துக்கள் கூறுவதுதான் வாத்தியார் படத்திற்கு உள்ள ஒரு பாடநூல் ஆகும்,
அப்படி கூறப்பட்ட மற்றொரு மைய கருத்து பாடநூல் தான் "தாய்க்கு தலைமகன்". ..
மகன் தாய் மீது உள்ள பாசத்தை காட்டி வாழ்ந்திருப்பார் வாத்தியார். .
தாய் மகன் மீது உள்ள பாசம் எப்படிப்பட்டது என்பதை காட்டினார் S. N. லட்சுமி. .
ஆயிரம் தவறு செய்தாலும் கணவர்தான் உலகம் என்பதை உணர்த்தினார் செளகார்ஜானகி. .
தந்தை மகள் பாசம் எப்படிப்பட்டது என்பதை நிருபித்து இருப்பார்கள். ஜெயலலிதாவும் S. V ரங்காராவ்
ஒரு குடும்பம் எப்படி இருக்கும் என்பதை தாய்க்கு தலைமகன் படத்தில் அனைவரும் வாழந்திருப்பார்கள்...கதையின் நாயகன் அசோகன் என்றாலும் வாத்தியார் நடிப்பு த்தான் அனைவரையும் பிரமிக்க வைத்தது பேசப்பட்டது. .முதல் முறையாக படத்தை பார்ப்பவர்கள் வாத்தியார் நடிப்பைக் கண்டு கண்ணீர் சிந்தாதவர் இல்லை...கலைஞர் மு கருணாநிதி அவர்கள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். .எம்ஜிஆர் நடிப்பை விமர்சனம் செய்யும் பத்திரிக்கையாளர்கள் தாய்க்கு தலைமகன் படத்தை பார்த்து விட்டு கண்ணீர் சிந்தாமல் வெளியே வந்தால் அல்லது அவரது நடிப்பில் குற்றம் குறை கண்டுபிடித்தால் சினிமாவில் கதை வசனம் எழுதுவதை நிறுத்தி விடுகிறேன். .என்று சவாலான கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் எந்த பத்திரிக்கையிலிருந்தும் வரவில்லை. . அந்தளவுக்கு வாத்தியார் நடிப்பு பேசப்பட்டது. .
சாண்டோ சின்னப்பர் தேவர் நல்லவராகவும் கெளரவவேடத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்த ஒரே திரைப்படம் இதுதான்.

எந்த தாயாக இருந்தாலும் மூத்த பிள்ளை மீதுதான் அதிகம் பாசம் வைத்திருப்பார்கள் அதற்கு என்ன காரணம் என்று இந்த படத்தை விட இது வரை வேறு எந்த ஒரு திரைப்படத்திலும் யாரும் கூறியதில்லை. .அவ்வளவு தெளிவாக விளக்கமாக மனதில் ஆழமாக பதியும் படி தாய்க்கு தலைமகன் படத்தில் சின்னப்பர் தேவர் திரைக்கதையில் தெளிவுபடுத்திருப்பார். ...அதற்க்கான விளக்கம் படத்தில் S N லட்சுமி கூறும் வசனம் இதோ உங்கள் பார்வைக்கு. ...

ஒவ்வொரு பெண்ணின் வவாழ்க்கையிலும் ஒரு கண்டம் உண்டு. . அதுதான் தலைப்பிரசவம். அதிலே சுகம் பிரசவம் ஏற்பட்டு நல்ல படியாக குழந்தை பெற்று விட்டால் அதுதான் அவளுக்கு மறுபிறவி. .அப்படி உயிருக்கு போராடி நொந்து பெற்று எடுக்கும் போது ஏற்படுற வலிதான் பிள்ளைமேல் தாய்க்கு அளவுக்கு மேல் பாசம் வளர்கிறது. .அதனால் மூத்த பிள்ளை எந்த தப்பு செய்தாலும் எவ்வளவு கெட்டவனாக இருந்ததாலும் அவன்மீது தான் பாசம் அஅதிகமாகஇருக்கும். அதனால் தான் தாய்க்கு தலைமகன் என்று மூத்த பிள்ளையே சொல்கிறார்கள்
இதுதாங்க வாத்தியார் படத்தின் பாடநூல் என்றேன். .இதைவிட தெளிவான விளக்கம் யாராலும் கூற முடியாது. என்பதற்கு இதைவிட வேறு சான்றிதழ் வேண்டுமா ??
12 1 1967 ம் ஆண்டு அன்று தான் வாத்தியார் குண்டடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தமிழமே கண்ணீர் கடலில் மூழ்கியது.
13, 1. 1967 ம் ஆண்டு அன்று தாய்க்கு தலைமகன் படம் வெளிவந்து தியேட்டரில் ரசிகர்கள் கண்ணீர் மல்கினர்
வாத்தியார் நடித்த படங்களில் குறைந்த பாடல்கள் இடம் பெற்றுள்ள இரண்டு திரைப்படம் ஒன்று தாய்க்கு தலைமகன் மற்றொன்று நல்ல நேரம். .இரண்டு படத்திலும் நான்கு பாடல்கள் தான் இடம் பெறுகிறது.
தாய்க்கு தலைமகன் படத்தில் முமு பாடல்களும் கவியரசு கண்ணதாசன் எழுதினார். சின்னப்பர் தேவர் படத்தில் மனோகர் நடித்த முதல் படம் இதுதான்
பாட்டு நடிப்பு சண்டைக்காட்சி வசூல் அனைத்திலும்" தாய்க்கு தலைமகன்"... வெற்றி மகுடம் சூட்டி மாபெரும் சாதனை படைத்தது. மேலும் சாதனைகள் தொடரும் தொடரும் ....... Thanks.........

orodizli
6th November 2019, 10:10 AM
நேற்று இன்று நாளை -1974.

1971ல் நடிகர் அசோகன் அவர்கள் தன்னுடைய மகன் அமல்ராஜ்

பெயரில் துவக்கிய படம் .

மக்கள் திலகம் அவர்களின் நேரிடை பார்வையில் எல்லா பாடல்களும் மெல்லிசை மன்னரின் கை வண்ணத்தில் இனிமையான பாடல்கள் உருவாகி வந்தன .

அசோகனின் பொருளாதார நிலையினை கருத்தில் கொண்டு

1971 இறுதியில் மக்கள் திலகம் தான் நடிக்கும்

உலகம் சுற்றும் வாலிபன்

இதயவீணை

ராமன் தேடிய சீதை

நினைத்ததை முடிப்பவன்

4 படங்கள் படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தும் போது

அசோகனுக்கு ஒரு செலவில்லாமல் ''நீ என்னென்ன சொன்னாலும் கவிதை '' பாடலை படமாக்கினார் .

1972 மக்கள் திலகம் தனி இயக்கம் கண்ட போது அசோகன் அவர்களின் நிலையில் தடுமாற்றமும் -தெளிவில்லாமல்
போனதும் படபிடிப்பு தள்ளி போனது .

1974 மே மாதத்தில் மக்கள் திலகம் பரிபூர்ண ஒத்துழைப்பு கொடுத்து படத்தை வெற்றிகரமாக ,எல்லா எதிர்ப்பையும் தவிடு பொடியாக்கி ''நேற்று இன்று நாளை '' படம் - வசூல் ரீதியாக மாபெரும் சாதனை புரிந்தது என்ற வரலாற்றை உருவாக்கினார் .

இதை புரியாத ஒரு சிலர் கட்டிய கதை - கதையாகவே முடிந்து போனது .
நடிகர் அசோகனின் குடும்பத்துக்கு இன்றும் வருமானம் தரும் படம் நேற்று இன்று நாளை .

நேற்று இன்று நாளை - 1974.

மக்கள் திலகம் திரியின் நண்பர்களுக்காக .....

மக்கள் திலகம் அவர்களின் அபரிதமான அரசியல் -சினிமா வளர்ச்சி கண்டு பொறாமை கொண்ட அன்றைய ''சக்திகள்'' நேற்று இன்று நாளை படத்தை வெளியிடாமல் இருப்பதற்கு என்னென்ன யுக்திகளை கையாள முடியுமோ அத்தனையும் உண்டாக்கி

விநியோகஸ்தர்கள் -

திரைஅரங்கு உரிமையாளர்கள்

எம்ஜியார் மன்ற நிர்வாகிகள்

எல்லோரையும் மிரட்டி - அராஜககம் செய்து - வன்முறையை கட்டவிழ்த்து

படம் வராது என்ற சூழ் நிலையில் இருந்தது .

வேறு எந்த நடிகராக இருந்தாலும் நிலைமையை சந்திக்க முடியாமல் சரண் அடைந்திருப்பார்கள் .

கட்டுக்கோப்பான மக்கள் திலகத்தின் ரசிகர்கள் - மன்ற பொறுப்பாளர்கள் ஒன்று பட்டு விநியோகஸ்தர்கள் -

திரைஅரங்கு உரிமையாளர்கள்

இருவருக்கும் அரணாக நின்று படத்தை திரையிட முழு ஆதரவு தந்தனர் .

பறக்கும் படை என்ற போர்வையில் - ஆளும் கட்சி ஆதரவுடன் சென்னை அயனாவரம் - சயானி அரங்கத்தை சூறையாடினார்கள் .

பல இடங்களில் வன்முறை தலை விரித்தாடியாது .

12.7.1974 அன்று படம் வெளியானது .

தமிழகமெங்கும் 40 அரங்குகளில் திருவிழா போல் மக்கள் - ரசிகர்கள் வெள்ளத்தில் மூழ்கினார்கள் .

படம் மிக பெரிய வெற்றி பெற்றது .

மக்கள் திலகம் தன்னுடைய பொறுமையினாலும் , ரசிகர்களுக்கு எந்தவித பாதிப்பு இல்லாமலும் படம் வெளிவர பல யுக்திகளை கையாண்டு வெற்றி பெற்றார் .

ஒரு பக்கம் கோவை - மேற்கு சட்டமன்ற இடை தேர்தல் மூலம் முதல் அண்ணாதிமுக சட்ட மன்ற உறுப்பினர் செல்கிறார் .

மக்கள் திலகம் ஆதரவு பெற்ற கோவை நாடாளுமன்ற இடைதேர்தலில்
கம்யுனிஸ்ட் வேட்பாளர் வெற்றி .

புதுவை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் அமோக வெற்றி

புதுவை மாநில ஆட்சியை முதல் முறையாக அதிமுக கைப்பற்றியது

அரசியலில் வெற்றி மேல் வெற்றி

திரை உலகில் சாதனை மேல் சாதனை

இப்போது கூறுங்கள்

ஒரு மக்கள் திலகத்தின் ரசிகனுக்கு இந்த அளவிற்கு விருந்து மேல் விருந்து

தந்து ''எல்லா புகழும் ஒருவருக்கே [இதயதெய்வம் எம்ஜியார் ] என்றென்றும்

என்று சொல்லும் அளவிற்கு நம்மை ஆக்கிவிட்ட வள்ளலின் பெருமை என்னவென்று சொல்ல ?

1974 ல்
அரசியல் ரீதியாக வெற்றி மேல் வெற்றி

உரிமைக்குரல் - 200 நாட்கள் - இமாலயவேற்றி

நேற்று இன்று நாளை - சிரித்து வாழ வேண்டும் - மிகப்பெரிய வெற்றி .

இப்போது சொல்லுங்கள் .....

நாம் எல்லோரும் கொடுத்து வைத்தவர்கள் ......... Thanks..........

orodizli
6th November 2019, 12:29 PM
இப்பொழுது மதுரை - சென்ட்ரல் dts திரையரங்கம் நிர்வாகி அளித்த தகவல்... கடந்த வாரம் வரலாற்று சிறப்புமிக்க, முக்கியத்துவம் வாய்ந்த பிரம்மாண்டமான வெற்றியை ருசித்த வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் படைப்பு " நாடோடி மன்னன்"... காவியத்தை பார்த்து ரசித்தவர்கள் எண்ணிக்கை ஏறத்தாழ 7000 பேர்கள் ...என்ற சிறப்பு செய்தியை பகிர்ந்துள்ளார்.........

fidowag
6th November 2019, 04:51 PM
வரும் வெள்ளி முதல் (8/11/19) கோவை டிலைட்டில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். வழங்கும் "நீதிக்கு பின் பாசம் " தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது .

தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .

orodizli
6th November 2019, 10:10 PM
பூம்பூஹர் ஷிப்பிங் கார்ப்பரேஷன் லிமிடெட்

1974 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம்தேதி ஒன்றிணைக்கப்பட்ட "பூம்பூஹர் ஷிப்பிங் கார்ப்பரேஷன் லிமிடெட்"....இவர்கள் "ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பழைய கப்பலை" வாங்கி "தமிழ் பெரியார்" மற்றும் "தமிழ் பெரியார்" என்று பெயர் சூட்டப்பட்டது!!!

வர்த்தக ரீதியாக அந்த் "ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பழைய கப்பல்கள் " ஜனவரி 1979ஆம் வருடமும், பிப்ரவரி 1981 வருடமும் "ஸ்கிராப்" செய்யப்பட்டது.

ஹலடியா முதல் தூத்துகுடி போர்ட் வரையில் நிலக்கரி சொந்த கப்பலில் எடுத்துச்சென்றால் தான் அது லாபகரம், முழு உபயோகம் என்பதை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 1985ஆம் ஆண்டு "தமிழ் அண்ணா" ஆகஸ்ட் 1985 செப்டம்பர் 1986ஆம் ஆண்டு "தமிழ் பெரியார்" மற்றும் ஜனவரி 1987ஆம் அன்று "தமிழ் காமராஜ்" என்று மூன்று கப்பல்கள் "புரட்சித் தலைவர் ஆட்சியில்" உலக அளவில் டெண்டர் விடப்பட்டு ஜப்பான் கப்பல் தயாரிக்கும் நிறுவனத்திடம் இருந்து வெளிநாட்டு வாங்கி [ Bank of Tokyo] மற்றும் ஸ்டேட் வங்கிகளிடம் [ State Bank of India - Tokya Branch]கடனாக பெற்ற பணத்தில் வாங்கப்பட்டது.

எதுவும் தனது பெயரில் புரட்சித் தலைவர் செய்ததில்லை. அவர் பெயர் என்றும் நிலைத்து நிற்கும்..........

கோட்டை கட்டி கொண்டாட்டம் போட்ட
கூட்டங்கள் என்னானது
பல ஓட்டை கண்டு தண்ணீரில் மூழ்கும்
ஓடங்கள் போலானது
ஏற்றிய ஏணியை தூற்றிய பேருக்கு
இதுதான் பாடமையா
நான் என்ன சொல்வதுநாட்டினில் நடப்பதை
கண்கொண்டு பாருமையா������............ Thanks...

orodizli
6th November 2019, 10:14 PM
ஓர் மலேசிய ரசிகரின் கேள்விக்கு தலைவரின் தன்மையான பதில் :��������

கேள்வி : அண்ணாவின் இதயக்கனியாம் எங்கள் தங்கமே,நான் சென்னை வந்தால் தங்களை நேரில் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் பாக்கியம் கிடைக்குமா?

பதில் : தம்பி என் புகைப்படத்தை நான் அனுப்புகிறேன்.அதே அளவுள்ள உங்கள் படத்தையும் சேர்த்து நுணுக்கத் திறமையுள்ள புகைப்பட நிபுணரிடம் கொடுத்து இணைத்துக் கொள்ளுங்கள்.நீங்கள் மலேசியாவிலிருந்து இங்கு வருவதால் ஆகும் செலவுத் தொகையை அங்கே உள்ள வேலையில்லாமல் கஷ்டப்படுகின்ற ஏதாவதொரு தொழிலாளர் குடும்பத்திற்கு பயன்படுத்தவும்.
1974 ம் ஆண்டு வெளிவந்த கேள்வி பதில் பகுதி.

இதுதான் தலைவர் எம்.ஜி.ஆர்.சொல் செயல் அனைத்திலும் தர்மசிந்தனை.

வாழ்க எம்.ஜி.ஆர் புகழ்....வளர்க தூய தொண்டு.... Thanks........

orodizli
7th November 2019, 10:08 AM
மக்கள் திலகம் எம். ஜி. ஆரின் தகப்பனார் வழி பூர்வீகம் : தமிழ்நாடு கோவை மாவட்டம்

மக்கள் திலகத்துடைய தந்தை கோபாலன். அவர்களுடைய தந்தை, பாட்டனார் உடைய பாரம்பரியம் கோவை மாவட்டத்தில் காங்கேயம் என்ற ஊருக்கு அடுத்து உள்ள புத்துயிர் என்று கிராமம், அதில் ஒரு சிறிய ஜமீன் போல் ஒரு மிராசுதாரர் ஆகவும் வாழ்ந்து உள்ளார்கள். இவர்கள் வாழும் காலத்தில் கோவை மாவட்டத்திற்கு பெயர் “கொங்கு நாடு” என்று சொல்லப்பட்டதாம். அவர்களுடைய ஜாதி கொங்கு வெள்ளாளர் என்ற சொல்லப்படுகிறது.

இந்த கொங்கு நாட்டில் இருந்து அந்தக் காலத்தில் கோபாலன், அவருடைய தாய் தந்தை, கேரளா பாலக்காடு வடவனூருக்கு வந்து குடியேறிவிட்டதாக தெரிகிறது.
எப்படி இருந்தாலும் கோபாலனுடைய பாரம்பரியம் தமிழ்நாடு கோவை மாவட்டம் என்பது ஆய்வில் தெரிகிறது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடைய பாரம்பரியம் தமிழ்நாடு தான் என்பது திட்டவட்டமாக தெரிகிறது. இப்போது நமக்கு எம்.ஜீ.ஆருடைய வாழ்க்கை வரலாறு தான் முக்கியம். பூர்வீகம் தமிழ்நாடு.

இவர் பிறந்தது இலங்கை கண்டி. இவர் படித்தது வளர்ந்தது பிறகு வேலைக்கு சென்றது செந்தமிழ்நாடு கும்பகோணம் இவருடைய அம்மா, அப்பா, அண்ணன்கள், அக்காக்கள் கேரளா நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நமக்கு எம்.ஜி.ஆர். தான் கணக்கு. இவருடைய வரலாறு எப்படி என்பதைத்தான் நாம் அறிய விரும்புகிறோம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், தான் ஒரு தமிழன் என்பதை பல முறை சொல்லி இருக்கிறார்.

இது மக்கள் திலகத்துடைய தாத்தா, பாட்டி அவர்களுடைய வரலாறு ஆகும். அந்த வரலாறுக்கு உட்பட்ட மக்கள் திகலம் எம்.ஜி.ஆரின் தந்தை கோபாலன். அவர்கள் கேரளாவிற்கு எந்த சூழ்நிலையில் எந்த வருடத்தில் வந்தார்கள் என்பது ஒரு பக்கம். கோவையிலிருந்து சுமார் 30, 40 மைல் தொலைவில் உள்ள பாலக்காடு என்ற பெரும் நகரத்திற்கு அடுத்து உள்ள 20 மைலில் உள்ள வடவனூர் என்ற ஊரில் மருதூர் என்ற இடத்தில் வசித்து வந்த கோபாலன் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் பெயர் சத்தியபாமா, அவருடைய ஊர் குழல் அந்தம். வடவனூருக்கு அடுத்து உள்ள குழல் அந்தம். கோபாலன் அவர்கள் பட்டப் படிப்பு வரை படித்து உள்ளவர். எந்த விடயத்திலும் கோபப்படமாட்டார்.

மனிதாபிமானத்தோடு நடந்து கொள்பவர். இவர்கள் வடவனூரில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் நான்கு குழந்தைகள் பிறந்தன இதில் இரண்டு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து உள்ளன.

இதில் நான்காவது குழந்தைதான் சக்கரபாணி. இந்த குழந்தைகளுடன் கோபாலன் சத்தியபாமா அவர்கள் வடவனூரில் வாழ்ந்து இந்த காலத்தில் கோபாலன் அவர்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கும் இவர்களுக்கும் சொத்து விடயத்தில் தகராறுகள் ஏற்பட்டன.

அது ரொம்ப பெரிய விடயமாக பெரிய அளவில் உண்டாகும் சமயத்தில் கோபாலன் அவர்கள் தர்ம நியாயம் அற்றவர்களுடன் நாம் சேர்ந்து வாழ்வதா என்ற எண்ணத்தோடு இலங்கையில் கண்டியில் உள்ள தன் நண்பர்களுக்கு தன்னுடைய குடும்ப சூழ்நிலையை எழுதுகிறார். அவர்களும் அதை படித்து புரிந்து கொண்டு உங்களுக்கு அங்கு வாழ பிடிக்கவில்லை என்றால் நீங்கள் இங்கு எப்போது வருகிaர்கள் (கண்டி) புறப்பட்டு வரவும்.

வரும் போது தெரியப்படுத்திவிட்டு வரவும் என்று கடிதம் எழுதினார்கள். அந்த கடிதம் கிடைத்த உடனே கோபாலன் மிக ரகசியமாக இந்த விடயத்தை வைத்துக் கொண்டு இலங்கை புறப்படும் ஏற்பாடுகளை செய்கிறார்.

கோபாலன் அவர்கள் பாலகாட்டில் ஒரு சில வருடங்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மாவட்ட முனிசிப்பல் நீதிமன்றத்தில் துணை நீதிபதியாக பணியாற்றி வரும் காலத்தில் வடவனூரை சேர்ந்த ஒரு வழக்கில் தனக்கு சாதகமான தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று உறவினர்கள் வற்புறுத்தினார்கள்.
அதை ஏற்றுக் கொள்ளாத துணை நீதிபதி உங்கள் பக்கத்தில் கொஞ்சம் கூட நியாயம் இல்லை. எனவே உங்களுக்கு நான் உதவ முடியாது என்று சொன்னதில் ஏற்பட்ட எதிர்ப்பு அந்த ஊரில் கோபானுக்கு உண்டு.

அதன் படி 1913ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நான்கு குழந்தைகளையும், தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு இலங்கை வருகிறார். இலங்கை கண்டிக்கு வந்தவுடன் ராமுபிள்ளை வேலுபிள்ளை இருவரும் கோபாலன் குடும்பத்தினருக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறார்கள். பிறகு இலங்கையில் கண்டியில் இவர்கள் தங்குகிறார்கள்.

இந்த காலகட்டத்தில் கண்டியில் பிறக்கிறார் எம்.ஜி.ஆர். 1917ல் செவ்வாய் கிழமை காலை 11.36 க்கு பிறக்கிறார். 5 வது குழந்தையாக தாய், தந்தையர் எல்லோரும் சேர்ந்து ராமச்சந்திரா என்று பெயர் வைக்கிறார்கள். அவரை அழைக்கும் போது நான்கு அண்ணன்கள் அக்காமார்கள் ராமச்சந்திரா என்று அழைத்து கொஞ்சி விளையாடும் போதும் அதை பார்த்து கோபால் சத்தியபாமா ரசிப்பார்கள்.

நான்காவது குழந்தையான சக்கரபாணிக்கும் எம்.ஜி.ஆருக்கும் 4 வயது வித்தியாசம் என்று சொல்லப்படுகிறது. எம்.ஜி.ஆருக்கு 3 வயது ஆகும் போது அவர் ஓர் அளவுக்கு ஓடி, ஆடி விளையாடுவதும் அப்பா கோபாலன் வீட்டிற்கு வந்தவுடனே அவரை கட்டிப் பிடித்து கொஞ்சுவாராம்.

இந்த காலகட்டத்தில் கோபாலனுக்கு ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை கிடைத்தது. அதில் இருந்து சில வருடங்கள் கழித்தவர் கண்டி மாவட்ட நீதி மன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். இந்த நான்கு குழந்தைகளுடன் நல்ல வசதியோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் காலத்தில் கோபாலனுக்கு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.

கோபாலன் மாரடைப்பால் 1920 ம் ஆண்டு இறந்து விடுகிறார். பிறகு சத்திய தாய் தன் கணவர் இறந்த துயரத்திலே மூழ்கி விடுகிறார். ராமுபிள்ளை, வேலுபிள்ளை ஆறுதல் சொல்லி செல்கிறார்கள்.

அதன் பிறகு தன் கணவரை இழந்த சத்தியபாமா தன் கணவர் வேலை பார்த்த காலத்தில் வாங்கப் பட்ட சொந்த வீடு, சேர்த்து வைத்துக் இருந்த பணம், நகைகள் இவைகளை எல்லாம் செலவுக்கு வைத்து கொண்டு கண்டியிலே வாழ்கிறார். இந்த காலகட்டத்தில் திடீர் என்று விஷகாய்ச்சல் ஏற்பட்டு தன் இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இறந்து விடுகிறார்கள்.

ஏற்கனவே தன் கணவரை பறிகொடுத்து விட்டு துக்கத்தில் இருக்கும் சத்தியபாமாவுக்கு மேலும் ஒன்றுக்கு பின் ஒன்றாக மூன்று குழந்தைகளும் இறந்ததை நினைத்து அழுது புலம்பும் சமயத்தில் எம்.ஜி.ஆர். தன் தாயின் கழுத்தை கட்டிப் பிடித்து அம்மா அழாதே! அம்மா என்று சொல்லுவாராம்.

ஐந்தாவது குழந்தையாக நீ பிறந்த பிறகு தாண்டா பெற்ற அப்பாவையும், உன் கூட பிறந்த 3 பேரும் செத்து போனார்களடா, என்று எம்.ஜி.ஆரை பிடித்து அழுவாராம். அவருடைய சேட்டைகள், விளையாட்டுகள் எந்த கவலையும் தெரியாமல் ஓடி, ஆடி மழலை பேச்சு பேசும் போது எல்லாம் அந்த தாய் பழைய நினைவுகள் எல்லாம் மறந்து சக்கரபாணியையும், ராமச்சந்திரனையும் காப்பாற்ற வேண்டும் என்ற பெரிய சபதத்தோடு மீண்டும் வேலுபிள்ளை, ராமுபிள்ளைகளின் உதவியை நாடுகிறார்கள்.

அந்த சமயம் அவர்கள் இருவரும் அம்மா சத்திய தாயிடம் அண்டி பிழைக்க வந்த இடத்தை விட்டு விட்டு தங்களுடைய சொந்த இடத்திற்கே செல்வது மிகச் சிறந்தது ஆகும். அப்போது சத்திய தாய் சொல்லுகிறார், எனக்கு சொந்த இடம் என்பது கேரளா வடவனூர்தான், அந்த ஊர் வேண்டாம் என்று தான் சபதத்தோடு இங்கு வந்தோம்.

இப்போ அவர் இல்லாமல் வடவனூருக்கு எப்படி செல்வேன்? என்ற கேள்வி அவருக்கு எழுந்தது. தான் அந்த சமயத்தில் கும்ப கோணத்தில் இருக்கும் மதுரை பாய்ஸ் நாடக கம்பெனியில் வேலை செய்யும் நாராயணன் என்பவரின் ஞாபகம் வந்தது. இவர் சத்தியபாமாவுக்கு நெருங்கிய உறவினர். நாராயணனுக்கு சத்திய பாமா தன் குடும்ப நிலைமைகளை பற்றி விரிவாக கடிதம் போடுகிறார்.

அதன்படி அவருடைய அழைப்பின் படி நீங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கும்பகோணம் வந்து விடுங்கள் என்று சொல்லுகிறார், அதன்படி வேலுபிள்ளை, ராமுபிள்ளை உதவியுடன் சத்தியபாமா குழந்தைகளை அழைத்துக் கொண்டு கும்பகோணம் வந்து சேருகிறார்கள்.

சத்தியபாமா நாராயணனுடைய உதவியுடன் கும்பகோணத்தில் ஒரு சிறிய வீடு வாடகைக்கு பிடித்து வாழ்ந்து கொண்டு இருக்கும் நாட்களில் தன்னுடைய இரண்டு மகன்களையும் எப்படியாவது ஓரளவுக்கு படிக்க வைக்க வேண்டும் என்று நாராயணனிடம் சத்தியபாமா சொல்கின்றார். அதன்படி, இந்த இரண்டு பையன்களையும் கும்பகோணத்தில் உள்ள யானை அடி இடத்தில் உள்ள அரசாங்க பள்ளிக் கூடத்தில் சேர்த்து விட்டார்கள்.

மேலும் பையன்கள் படிப்பதற்கு சிலேட்டு புத்தகங்களையும் வாங்கி கொடுத்து விட்டு பிறகு இந்த பையன்களின் பள்ளி படிப்புக்கு ஆன செலவுகளுக்கும், சாப்பாட்டிற்கும் என்ன செய்வது என்ற பிரச்சினை உண்டாகிறது.

இந்த நேரத்தில் சத்தியபாமா மிக மன தைரியத்தோடு நான் எங்கேயாவது வேலை செய்து என் பிள்ளைகளை காப்பாற்றுவேன் என்று நாராயணனிடம் செல்கிறார். அடுத்து சத்தியபாமா குடி இருக்கும் பகுதியில் அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் இந்த அம்மாவினுடைய நிலைமைகளை பார்த்து இந்த அழகான பையன்களுடைய நிலைமைகளை அறிந்தும் சிலர் வேலைக்கு செல்ல உதவி செய்கிறார்கள்.

இந்த நிலையில் எம்.ஜி.ஆருக்கும் சக்கரபாணிக்கும் 3 வயதுதான் வித்தியாசம். சக்கரபாணி, தம்பியை ராமச்சந்திரா என்று அழைப்பார். பள்ளிக்கூடம் முடிந்து அவர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் இவர்களுடைய தந்தை பற்றி போதனை சொல்லுவார்கள். சத்தியம், தர்மம், நேர்மை, நீதி, பக்தி எல்லாம் நிறைந்தவர் உங்கள் தந்தை, நன்றாக படித்தவர், நீதிபதியாகவும் பேராசிரியராகவும் பணிபுரிந்து பலரிடம் மதிப்பும், மரியாதையும் பெற்றவர்.

அவர் போல் நீங்களும் நன்கு படித்து வாழ்ந்து காட்ட வேண்டும் இதைக் கேட்ட இருவரும் தன் தாயிடம் உறுதி மொழி எடுத்து கொள்கிறார்கள். தந்தை சொல்லுக்கு மந்திரம் இல்லை என்பார்கள். ஆனால் இவர்களுக்கு தந்தைக்கு பதிலாக தாய் சொல்கிறார் மந்திரத்தை. அந்த மந்திரத்தை மனதில் பதிவு செய்து கொண்டவர்தான் மக்கள் திலகம் எம்.ஜி.அர். தன் தாயினுடைய உழைப்பால் மூன்று வேளையும் சாப்பிட்டு கொண்டு பள்ளிக்கூடம் சென்று வருகிறோம் என்ற எண்ணம் எம்.ஜி.ஆரு மனதுக்குள் நாளுக்கு நாள் வளரத் தொடங்கியது.

எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், ஜனவரி 17, 1917 - டிசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தார்.......எப்பொழுதும் வாழ்வார்......... Thanks.........

orodizli
7th November 2019, 10:10 AM
கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அறக்கட்டளை யை சார்ந்த திரு. ராமமூர்த்தி அவர்களின் தாயார் மறைவுக்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். சௌ.செல்வகுமார், செயலாளர், அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கம்.......... Thanks...

orodizli
7th November 2019, 10:14 AM
"காவல்காரன் "... புரட்சித்தலைவரின் ஒயிட்அன்பிளாக் படங்களிலேயே மகத்தான வெற்றி பெற்ற காவியங்களில் சிறப்பு பெற்றது... துரோகி நடிகர் எம்.ஆர்.ராதா வால் துப்பாக்கியால் சுடப்பட்டு மக்களின் பிரார்த்தனையால் பூரணநலம்பெற்று காவல்காரன் படத்தில் மேற்கண்ட கட்சியில்தான் முதன்முறையாக நடித்தார் மிகவும்சிரமப்பட்டு நடித்தார் திரையரங்கில் இக்காட்சியை கண்ட ரசிகர்களும் தாய்மார்களும் கண்ணீர்விட்டு அழுதனர் ஒருதிரைப்படநடிகர் நடித்த காட்சிகளை பார்த்து அவர் ரசிகர்களின் திருப்திக்காகமட்டுமே நடிப்பவர் படம் எண்ணிக்கை மற்றும் சம்பளத்துக்காக நடித்தவர்அல்ல என்று பத்திரிக்கை அன்றுவியந்தது பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களின் மறுபிறப்பு நமக்கு உயிர்துடிப்பு என்று இன்றையநாள் அனைவருக்கும் இனியதாக இருக்கட்டும் மதுரை.எஸ் குமார்..... Thanks...

orodizli
7th November 2019, 12:03 PM
7-11-1969 ---7-11-2019 இன்று 50 ஆண்டுகள் பொன்விழா நிறைவடைந்து இன்று 51ம் வருடம் தொடக்கம் திரையுலக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் வழங்கும் "நம் நாடு"... எக்காலத்திற்கும் உகந்த சமூக, அரசியல், கருத்து களஞ்சியம் தாங்கிய உன்னத படைப்பு������.......... Thanks.........

orodizli
7th November 2019, 03:16 PM
இன்றுடன் (07.11.2019) மக்கள் திலகம் நடித்த "உரிமைக்குரல்" காவியம், திரைப்படம் வெளிவந்து 45 வருடங்கள் ஆகிவிட்டது. 7.11.1974 ல் தீபாவளி வெளியீடாக வந்த வெற்றி காவியம் உரிமைக்குரல். இயக்குநர் ஸ்ரீதருக்கு புதுவாழ்வு மக்கள் திலகத்தால் கிடைத்தது. மெல்லிசை மன்னரின் இசையில் சூப்பர் ஹிட் பாடல்களை கொண்ட படம் இது. 57 வயதில் மக்கள் திலகத்தின் சுறுசுறுப்பு பாடல் காட்சிகளிலும் சண்டை காட்சிகளிலும் நம்மை பிரம்மிக்க வைக்கும். வெள்ளி விழா திரைப்படமான இது சின்ன சின்ன ஊர்களிலும் 50 நாட்களை கடந்தது சிறப்பு செய்தி நேத்து பூத்தாளே பாடலில் தியேட்டரில் ஆண்களின் ஆட்டம் ஒவ்வொரு காட்சியிலும் களை கட்டியதால் சில் ஊர்களில் பெண்களுக்கென்று தனியாக காட்சிகள் திரையிட்டது கூடுதல் சிறப்பு. என் தாய் எனக்கு பாலூட்டி வளர்த்தாங்க ஆனால் இந்த நிலத்தாய் எனக்கு சோறு ஊட்டி வளர்த்தாங்க என்று மக்கள் திலகம் பேசும் க்ளைமேக்ஸ் வசனத்தின் போது இன்றும் தியேட்டரில் விசில் தூள் பறக்கும்........ Thanks.........

orodizli
7th November 2019, 03:38 PM
"தாய் சொல்லை தட்டாதே", 7-11-1961---7-11-2019
இன்று 58 ஆண்டுகள் நிறைவு பெற்று , 59ம் வருடம் துவக்கம் காணுகிறது... சென்னை பிளாசா101 நாள் பாரத் 101 நாள் மகாலட்சுமி 101 நாள் மதுரை கல்பணா 101 நாள் கோவை ராஜா 101 நாள் திருச்சி ஜூபிடர் 101 நாள் சேலம் நியூசினிமா 101 நாள் இலங்கை- கொழம்பு கிங்ஸ்லி 100 நாள் ஓடியது.
சிரித்து சிரித்து ரசிகர்களை சிறையிலிட்ட புரட்சிநடிகர் எம்ஜிஆர் நடித்த தாய்சொல்லை தட்டாதே 7-11-1961 வெளியானது !....... Thanks...

fidowag
7th November 2019, 08:03 PM
அனுதாப செய்தி*
--------------------------

அ.இ அ .தி.மு.க. வின் தீவிர தொண்டரும் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மூத்த பக்தருமாகிய திரு.ஏ. தணிகாசலம் ( வயது 66 ) அவர்கள் உடல்நல குறைவால்*ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ,நேற்று இரவு 10 மணியளவில் (06/11/2019)* மாரடைப்பால் காலமானார் என்கிற துயர செய்தி* அறிந்ததும் இன்று (07/11/2019) காலை , மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மூத்த பக்தர்கள் பலருடன் சென்னை , அவ்வை சண்முகம் சாலை அருகில் உள்ள மாவடி விநாயகர் கோயில் தெருவில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று* அவரது பூத உடலுக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தேன். என்னுடன், திருவாளர்கள்* ஜி.வெங்கடேச பெருமாள், ஆதம்பாக்கம் சேகர், மயிலை மகாதேவன், மீர்சாகிப் பேட்டை பிரபாகரன், திருமங்கலம் தண்டபாணி என்கிற சரவணன் ஆகியோர் இறுதி மரியாதையில் கலந்து கொண்டனர் , [பின்னர் திரு.தாமோதரன், திரு.கே.எஸ். மணி மற்றும் பலர் இறுதி அஞ்சலி செலுத்தியதாக நண்பர்கள் தகவல் அளித்தனர் .


திரு.தணிகாசலம் 1973 லிருந்து* என்னுடன் நெருங்கி பழகியவர் . ஞாயிறுதோறும் மாலை வேளையில் பல காலம் சந்தித்து உரையாடி வந்துள்ளோம் .* அவருடைய திருமணம், மற்றும் மகன்கள் திருமணத்திற்கும் கலந்து கொண்டுள்ளேன் .பழகுவதற்கு மிகவும் இனிய நண்பர் .* 1973ல் இருந்து பொது தேர்தல், இடை தேர்தல் எதுவாக இருந்தாலும் , தமிழகம் முழுவதும், முக்கிய நகரங்கள், தொகுதிகள் ஆகியவற்றிற்கு விஜயம் செய்து , அன்றைய சூழ்நிலையில் மிக துல்லியமாக அ. தி. மு.க. கட்சியின் செயல்பாடு, தேர்தல் கூட்டங்கள், கட்சியின் அணுகுமுறை , தொண்டர்கள்* ஆதரவு, வெற்றி வாய்ப்பு ஆகியவற்றை இன்றைய மீடியாக்களில் தெரிவிக்கும் கருத்து கணிப்பு போல செய்திகள் சேகரித்து , சென்னை வந்ததும் , நண்பர்களுடன் அதை பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார் .அவருடைய வரவை எதிர்பார்த்து நாங்களும் காத்திருப்போம் .மறக்க முடியாத மலரும் நினைவுகள்.*


அன்னாரது இறுதி ஊர்வலம் அவரது இல்லத்தில் இருந்து இன்று மாலை 4 மணியளவில் புறப்பட்டு , மயிலை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது .

அவரது ஆன்மா சாந்தி அடைய அவர் இறுதிவரை நேசித்த நமது இதய தெய்வம் எம்.ஜி.ஆர். அருள் புரியட்டும் .

அவரை இழந்து வாடும் மனைவி, மகன்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள்*அனைவருக்கும், அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் , அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் .

orodizli
7th November 2019, 10:26 PM
https://youtu.be/meF7TbVpEbU.......... Thanks..........

orodizli
7th November 2019, 10:30 PM
இதயக்கனி மக்கள் திலகம் பக்தர்கள்... மறைந்த உடன்பிறப்புகளுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் திரி உறுப்பினர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்...

orodizli
8th November 2019, 09:32 AM
உங்களுக்கு தெரியுமா??? ...

எம். பக்தவத்சலம் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் இந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.

எம். பக்தவத்சலம் கடைசி பிறந்தநாள் [ 90வது பிறந்த நாள்] அவரது பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் ரூபாய் 90,000/= ஆயிரம் வழங்கினார். அத்துடன் எம். பக்தவத்சலம் அவர்களின் முன்னைய சேவைகளை பாராட்டி நினைவு கூர்ந்தார்.

கோவில் என்றால் கோபுரம் காட்டும்
தெய்வம் உண்டு அங்கே
உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும்
எண்ணம் "உண்டு" இங்கே........... Thanks.........

orodizli
8th November 2019, 09:38 AM
எம்.ஜி.ஆரின் மனதுக்கு நெருக்கமான ஒரு சின்னம்தான். உண்மையில் இரட்டை இலையை விட கூடுதலாக அவரது வாழ்வில் பயணித்த ஒரு பொருள் தொப்பிதான்.

எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் இரட்டை இலைக்கு உள்ள முக்கியத்துவம் போல் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் தொப்பிக்கு தனியிடம் உண்டு.

இரண்டு பொருட்களை நீங்கள் சொன்னால் ஒருவருக்கு எளிதாக எம்.ஜி.ஆரை நினைவுட்டிடமுடியும். அவை தொப்பியும் கறுப்பு கண்ணாடியும்! உண்மையில் எம்.ஜி.ஆர் எப்போது தொப்பி அணிய ஆரம்பித்தார் எனத்தெரியுமா...

எம்.ஜி.ஆருக்கு விதவிதமான தொப்பி கண்ணாடிகள் அணிவதில் சிறுவயதிலிருந்தே மிக விருப்பம். சினிமாவில் நடிக்கத்துவங்கிய காலத்தில் பொது இடங்களில் ரசிகர்களின் அன்புப்பிடியில் இருந்து தப்பிக்க தனது பாகவதர் கிராப் தலைமுடியை மறைக்க ஒரு துண்டை தலைப்பாகை போல தலையில் கட்டி லாவகமாக மறைத்துக்கொள்வார்.

திரைப்பட நடிகரானபின் தான் இளமையோடும் அழகோடும் தெரிவதற்கும் கதாபாத்திரத்தை வித்தியாசப்படுத்திக்காட்டவும் பல படங்களில் விதவிதமான தொப்பி அணிந்து நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆரைப்போல் வேறொரு நடிகருக்கு தொப்பி பொருந்தியிருக்குமா என்பது சந்தேகமே.

காவல்காரன் படத்தின்போதுதான் எம்.ஜி.ஆர் சுடப்பட்டிருந்தார். இதனால் படத்தின் பெரும்பாலான காட்சிகள் எம்.ஜி.ஆர் சுடப்பட்ட பின் எடுக்கப்பட்டவை. இதனால் பல காட்சிகளில் முகம் சோர்ந்தும் குரல்வன்மை கரகரவென கவர்ச்சியில்லாமலும் இருக்கும். படத்தில், “நினைத்தேன் வந்தாய் நுாறு வயது” பாடல் எடுக்கப்பட்ட அன்று எம்.ஜி.ஆர் வித்தியாசமாக தெரிய வெள்ளைத் தொப்பி அணிந்து சில காட்சிகளில் ஆடினார். பாடல்காட்சி முடிந்ததும் எம்.ஜி.ஆரிடம் அங்கிருந்தவர்கள், “அண்ணே, நீங்க தொப்பியில் நீங்க 10 வயசு குறைஞ்சி தெரியறீங்க” எனப் புகழ்ந்து தள்ள, தன் இமேஜ் மீது எப்போதும் பெரிய அக்கறை கொண்ட எம்.ஜி.ஆருக்கு வெட்கமாகப்போய்விட்டது. தன் முகப்பொலிவும் கவர்ச்சியும் குறைந்துபோயிருந்ததாக வருத்ததத்தில் இருந்தவருக்கு இது பெரும் மகிழ்ச்சியை தந்தது. இதன்பின்னர் வந்த படங்களில் எம்.ஜி.ஆர் விதவிதமாக தொப்பிகளை தேடிப்பிடித்து பயன்படுத்தினார்.

திரைப்படங்களில் மட்டும் அதுவரை தொப்பி பயன்படுத்திவந்தவருக்கு அடிமைப்பெண் திரைப்படம், நிரந்தரமாக தொப்பி அணியக் காரணமானது. படப்பிடிப்பிற்காக ஜெய்ப்பூர் சென்றிருந்தபோது பாலைவனத்தில் நடந்த படப்பிடிப்பினால் எம்.ஜி.ஆர் சோர்ந்துபோனார். படப்பிடிப்பை காணவந்த நண்பர் ஒருவர் முதன்முதலாக புஸ்குல்லா எனப்படும் வெள்ளைத்தொப்பியை கொடுத்தார். ஜெய்ப்பூரின் கடும் வெயிலை தொப்பியினால்தான் எம்.ஜி.ஆரால் சமாளிக்கமுடிந்தது. படப்பிடிப்பு முடிந்தபின் எம்.ஜி.ஆர் அதன் பயன்பாட்டைக் கருதி தொடர்ந்து தேர்தல் பிரசாரங்களிலும் வெயிலை சமாளிக்க பயன்படுத்த ஆரம்பித்தார். 'தொப்பி' எம்.ஜி.ஆர் வழக்கமான எம்.ஜி.ஆரை விட இளமையாக இருப்பதாக பாராட்டுக்கள் குவிய தொப்பியை அன்றுமுதல் நிரந்தரமாக்கிக்கொண்டார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆருக்கு தொப்பி அடையாளமான வரலாறு இதுதான். கண்ணாடியை ஏற்கனவே அணிந்துவந்திருக்கிறார்.

பின்னாளில் எம்.ஜி.ஆர் இந்த தொப்பியின்றி வெளியிடங்களுக்கு வருவதையோ, படம் எடுப்பதையோ விரும்பியதில்லை. தொப்பி நிரந்தரமானபின் நெருக்கமான நண்பர்கள் குடும்ப உறவினர்கள் தவிர வேறுயாரிடமும் தொப்பியின்றி காட்சி தரமாட்டார். ஆரம்பத்தில் தொப்பிக் கடைகளில் ரெடிமேட் தொப்பிகளை அணிந்துவந்த எம்.ஜி.ஆர் ரசாக் என்ற தொப்பி தயாரிப்பாளரிடம் தனக்கென பிரத்யேகமாக தொப்பிகளை தயாரித்து தர பணித்தார். இவரே எம்.ஜி.ஆருக்கு இறுதிவரை தொப்பி தயாரித்துக் கொடுத்தார்.

எம்.ஜி.ஆரின் தொப்பி வழக்கத்துக்கு மாறான தன்மையில் தயாரிக்கப்படும். காஷ்மீர் போன்ற குளிர்பிரதேசங்களில் வளரும் வெள்ளை செம்மறி ஆட்டின் முடியை பதப்படுத்தி அதை பலகட்டங்களில் மேம்படுத்தி அவை தயாரிக்கப்பட்டன. இதனுள் 3 அடுக்குகளில் கேன்வாஸ் வைத்து தைக்கப்பட்டிருக்கும். சிறுசிறு வெளியே தெரியாத ஓட்டைகளினால் வெளிக்காற்று எளிதாக உள்ளே சென்றுவரும் என்பதால் தலையில் வியர்வையோ வேறு எந்த சங்கடங்களோ ஏற்படாது. அதிக எடை இல்லாத புஸ்புஸ் குல்லா தலையில் இருப்பதாகவே தெரியாது. அடிக்கடி தொப்பிகளை மாற்றும் இயல்புடைய எம்.ஜி.ஆர், மொத்தமாக அரை டஜன் தொப்பிகளை ஆர்டர் வரவழைத்து அவற்றில் தனக்கு பொருத்தமான 2ஐ மட்டும் எடுத்துக்கொள்வது வழக்கம். ஆனால் அத்தனைக்கும் பணம் கொடுத்துவிடுவார்.

பின்னாளில் அவர் திமுகவிலிருந்து பிரிந்தபின் இந்த தொப்பி பெரும்பிரச்னையானது அவருக்கு. திமுக மேடைகளில் அவரை தொப்பித்தலையா என தரம் தாழ்ந்து கிண்டலடித்தது திமுக. தலை வழுக்கையை மறைக்கவே அவர் தொப்பி அணிவதாக அவர்கள் விமர்சனம் செய்தனர். முதல்வரானபின் இன்னும் நிலைமை மோசம். ஆட்சியின் நிர்வாக விஷயங்களை விட்டுவிட்டு அவரது தொப்பிதான் அதிகம் விமர்சனத்திற்குள்ளானது. திமுக மேடைகளில் எம்.ஜி.ஆரை தொப்பித்தலையா என்று பேசி எம்.ஜி.ஆருக்கு எரிச்சலை தந்தனர்.

பல சமயங்களில் ரசிகர்கள் என்ற போர்வையில் மேடையில் எம்.ஜி.ஆருக்கு மாலை அணிவிப்பதுபோல் அவரது தொப்பியை கழல வைக்க முயன்றனர் திமுகவினர். மதுரையில் ஒருமுறை அவருக்கு மாலையணிவிக்கும் சாக்கில் அவரது தொப்பியை தட்டிவிட்டார் ஒரு திமுக மாணவர். ஆனால் படங்களில் மட்டுமல்ல நிஜமாகவும் தனக்கு ஸ்டண்ட் தெரியும் என்பதை அவரிடம் நிரூபித்தார் எம்.ஜி.ஆர். அதன்பிறகுதான் திமுகவினர் இந்த நேரடி சாகசத்திற்கு முற்றுப்புள்ளிவைத்தனர். ஆனால் மேடைகளில் தங்கள் தொப்பி விமர்சனத்தை கைவிடவில்லை.

இதுபற்றி எம்.ஜி.ஆரிடம் ஒருமுறை கேள்வி கேட்கப்பட்டபோது,“ நான் தொப்பி அணிவதை பலர் கேலியும் கிண்டலுமாக விமர்சனம் செய்றாங்க. அந்தநாள்ல நான் ஜிப்பா போட்டிருந்தேன். பின்னாளில் காலர் வெச்ச முழுக்கைச் சட்டை போட ஆரம்பிச்சேன். ஒருமுறை சினிமா நிகழ்ச்சியில கலந்துக்கிட்டப்ப சட்டையின் கையில கிழிஞ்சிடுச்சி. அதை மறைக்க முழுங்கை வரை மடிச்சிவிட்டேன். உடனே 'எம்.ஜி.ஆர் ரவுடியைப்போல சட்டையை சுருட்டிவிட்டிருக்கார்'னு சொன்னாங்க. இதுக்கு என்ன சொல்றது.

உடலமைப்புக்கு, பாதுகாப்புக்கு எதுதேவையோ அதைத் தேர்ந்தெடுப்பதில் தவறில்லை. சரி நானே ஒரு பேச்சுக்கு கேட்கிறேன். என் தலையில் முடியே இல்லைன்னு வெச்சிக்குவோம். அப்போ என்னை நீங்க எம்.ஜி.ஆர் னு ஏத்துக்கமாட்டீங்களா..? வடநாட்டில் இளமையான நடிகர்கள்கூட தலையில் பொய்முடி(விக்) வெச்சிக்கிட்டுத்தான் வெளியே வர்றாங்க. அதுக்கு என்ன சொல்றீங்க?... இன்னொருத்தருடைய வற்புறுத்தலுக்காக மற்றவங்க என்ன சொல்வாங்களோ, என்ன நினைப்பாங்களோங்கறதுக்காக நம்மை மாத்திக்கக்கூடாது. அத்தியாவசிய தேவைகளை குறைச்சிக்கக்கூடாது. ” என எதிர்கட்சிகளுக்கு பதிலடி தந்தார் எம்.ஜி.ஆர்.
தன் சினிமா கவர்ச்சியினால்தான் எம்.ஜி.ஆர் தேர்தலில் வென்றார் எனக்கருதி அவரது இளமை இமேஜை அடித்துநொறுக்குவது என்பதே எம்.ஜி.ஆர் மீதான இந்த தனிப்பட்ட தாக்குதலுக்கு காரணம்.

திமுகவின் குடும்ப இதழ் ஒன்றில் தலைமைச் செயலகத்தில் காலையிலும் மாலையிலும் எடுக்கப்பட்ட இருபடங்களை வெளியிட்டு எம்.ஜி.ஆரின் கிருதா வித்தியாசத்தைக் கூறி முதல்வருக்கு மட்டும் எப்படி சில மணிநேரங்களில் இத்தனை நீளமாக தலைமுடி வளர்கிறது என கேள்வி எழுப்பியிருந்தது திமுக. இப்படி எம்.ஜி.ஆரின் மீதான தொப்பி விமர்சனம் எல்லையற்றுப்போனது. இறுதியாக தொப்பி அரசியல் மக்களிடையே எடுபடாததால் கால ஓட்டத்தில் அந்த விமர்சனத்தை நிறுத்திக்கொண்டது திமுக.

ஆனால் திமுகவின் இந்த அஸ்திரத்தை திமுகவுக்கு எதிராகவே செயல்படுத்திய சந்தர்ப்பம் ஒன்று நிகழ்ந்தது. 1983 ம் ஆண்டு மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் எம்.ஜி.ஆர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அன்றைக்கு பரபரப்பான அரசியல் சூழலில் எதிர்கட்சியான திமுக எம்.ஜி.ஆர் அரசு மீது பெரும் குற்றச்சாட்டு ஒன்றை வைக்கப்போவதாக எம்.ஜி.ஆருக்கு உளவுத்துறையிலிருந்து தகவல் போனது. அதேசமயம் தொப்பி பற்றிய தாக்குதல் உச்சத்தில் இருந்தநேரம் அது. பேட்டியளித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆரிடம் கருணாநிதியின் குற்றச்சாட்டு குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். ஆனால் எம்.ஜி.ஆர் பதிலைக் கூறாமல் ஒரு காரியம் செய்தார். மெல்ல தன் தலையிலிருந்து தொப்பியை கழற்றி மேஜைமீது வைத்தார். அவ்வளவுதான் அடுத்த நொடி புகைப்பட .ஃப்ளாஷ்கள் மின்னத் துவங்கின. மறுநாள் செய்தித்தாள்களில் தலைப்புச்செய்தி எம்.ஜி.ஆர் 'தலைச் செய்தி'தான். எம்.ஜி.ஆரின் தொப்பியற்ற தோற்றத்தை வெளியிட்ட பத்திரிகைகள் கருணாநிதியின் குற்றச்சாட்டை கடைசிப்பக்கத்தில் முக்கியத்துவம் இன்றி வெளியிட்டன. அதுதான் எம்.ஜி.ஆரின் சாதுர்யம்.

1984 ம் ஆண்டு தஞ்சை சென்ற எம்.ஜி.ஆர் ராஜராஜசோழன் அரண்மனைக்கு சென்றபோது மயங்கிவிழுந்தார். அடுத்த சில தினங்களில் அவருக்கு உடல்நிலை பாதித்தது. அப்பல்லோவிலும் பின்பு அமெரிக்காவிலும் சிகிச்சையளிக்கப்பட்டபோது அவரது மூளையில் கட்டி இருந்தது தெரியவந்தது. நீண்டகாலமாக தலையில் தொப்பி அணிந்ததால் இது உருவானதாக சொல்லப்பட்டது. அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற சமயம் தன் இமேஜை கட்டிக்காப்பதில் பெரும் அக்கறை கொண்ட எம்.ஜி.ஆருக்கு ஒரு சோதனை வந்தது.

எம்.ஜி.ஆர் உயிருடன் இல்லை என்பதாக தமிழகத்தில் பரவிய வதந்தியை முறியடிக்க அதிமுக தலைவர்கள் எம்.ஜி.ஆரின் பேசுவதும் சிரிப்பதுமாக வீடியோ எடுக்க திட்டமிட்டனர். வீடியோ படத்தில் தொப்பி அணியக்கூடாது என்ற மருத்துவர்களின் அறிவுறுத்தலில் வழக்கமான தோற்றத்தில் எம்.ஜி.ஆரை படம்பிடித்தது காமிரா.

அழகும் உடல்கட்டும் கொண்ட எம்.ஜி.ஆர் பரிதாபமாக நம் வீட்டுப்பெரியவர்போல படுக்கையில் படுத்தபடி பேப்பர் படித்த காட்சி தாய்மார்களை இன்னும் கருணைப்படவைத்தது. அந்த தேர்தலில் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் படுத்தபடியே வென்றார்.
1987 ம்ஆண்டு டிசம்பர் மாதம் 24ந்தேதி அதிகாலை தமிழகத்தை கண்ணீர் கடலில் மூழ்கவைத்தார் எம்.ஜி.ஆர். அரைநுாற்றாண்டு காலம் தமிழகத்தின் தவிர்க்கவியலாத தலைவராக வாழ்ந்து மறைந்த எம்.ஜி.ஆரின் உடலோடு காலம் முழுக்க அவர் நேசித்து அணிந்து மகிழ்ந்த தொப்பியையும் சேர்த்து அடக்கம் செய்தனர்.

தேர்ந்த ஒரு ஓவியரால் எம்.ஜி.ஆரை வரைய ஓரிரு நிமிடங்கள் போதும். ஒரு தொப்பியையும் கண்ணாடியையும் வரைந்தால் அது உங்களுக்கு எம்.ஜி.ஆராகவே தெரியும். ஆனால் இந்த இரு அடையாளங்களுமின்றி எம்.ஜி.ஆரை அடையாளப்படுத்த எக்காலத்திற்குமான ஒர் அடையாளம் உண்டு. அது எம்.ஜி.ஆர் தன் தலைக்கு அணிந்த தொப்பி அல்ல; தன் உள்ளத்தில் அணிந்த மனிதநேயம்!
✌✌✌��. M.G.R.✌✌✌������........ Thanks...

orodizli
8th November 2019, 09:44 AM
"உலகம் சுற்றும் வாலிபன்" காவியத்தின் மறு வெளியீடுக்கு சுவரொட்டிகள் (Wall Posters) தயாராகி வருவதாக சிறப்பு தகவல்கள்.........

orodizli
8th November 2019, 10:17 PM
#ஜனவாி_17

அதுவரை யாருக்கும் தெரியாமல்
இருந்த #புரட்சித்தலைவா்_எம்ஜிஆர்
பிறந்த நாள் பொது மக்களுக்குத்
தெரிந்தது எப்படி?

சென்னை 'யானைக்கவுனி' (எலிபண்ட்
கேட்) பகுதியில் எம்.ஜி.ஆர். வசித்து வந்த
அந்தக் காலத்தில் , அருகில் இருந்த
ஸ்ரீமுருகன் டாக்கீஸ் கால்நடையாகவே
சென்று படம் பார்க்கும் வழக்கத்தைக்
கொண்டிருந்தார் .

அப்பொழுது அவர் நாடக நடிகர் என்ற
முறையிலும் , பரமசிவ முதலியார்
தியேட்டர் உரிமையாளர் என்னும்
முறையிலும் ஒருவருக்கொருவர்
அறிமுகமாகி , நாளடைவில் அது
நட்பாகக் கனிந்தது .

எம்.ஜி.ஆர். திரைப்படங்களில்
நடித்துப் புகழ் பெற்று வசதியான
நிலைக்கு வந்த பிறகும்கூட அவருக்கும்
முதலியாருக்கும் இடையிலிருந்த அந்தப்
பழைய நட்பும் பாசமும் கொஞ்சம் கூட
குறையாமல் வளர்ந்து பெருகிக்
கொண்டே வந்தது .

வயது வளர வளர – வசதிகள் பெருகப்
பெருக , இருவருடைய நட்பும், தாம்புக்
கயிறுபோல இறுகி முறுக்கேறியது .
ஏனென்றால் , அது தூய , உண்மையான
நட்பு !

எம்.ஜி.ஆர். முதலமைச்சர் ஆன
பிறகு 1978 ஜனவரி மாதம் 17 ஆம் தேதி
‘தினத்தந்தி’ நாளிதழில் முதலியார் ஒரு
விளம்பரம் கொடுத்தார் .

அதில் ‘‘இன்று 61–வது பிறந்த நாள்
விழா காணும் எனது ஆரூயிர் குடும்ப
நண்பர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர்கள் பல்லாண்டுகள் நலமுடன்
வாழப் பிரார்த்தித்து வாழ்த்தும்
வி.எம்.பரமசிவ முதலியார்’’ என்று
குறிப்பிட்டு இருந்தார் .

அதைப்பார்த்த எம்.ஜி.ஆர்.,
முதலியாரை தொலைபேசி வாயிலாக
அழைத்து ,

‘‘என் பிறந்த நாள் உங்களைத்தவிர
யாருக்குமே தெரியாது . இதுவரைக்கும்
யார்கிட்டேயும் நான் சொன்னதும்
கிடையாது., சொல்றதும் இல்லை .

அப்படி இருக்கும்போது இன்னிக்கு
நீங்க ஏன் அதை ‘தினத்தந்தி’யில்
போட்டிங்க ?’’ என்று அன்புடன் கடிந்து
கொண்டார் .

அதற்கு முதலியார், ‘‘ இப்போ
நீங்க முந்தி மாதிரி சினிமா நடிகர்
இல்லே . இந்தத் தமிழ்நாட்டின்
முதலமைச்சர் .

இதுவரைக்கும் இல்லேன்னாலும்,
இப்போவாவது – இனிமேலாவது
உங்க பிறந்த நாள் எதுன்னு எல்லா
மக்களுக்கும் தெரியட்டுமேன்னுதான்
தினத்தந்தியிலே போட்டேன் ’’ என்றார் .

புரட்சித் தலைவரால் பதில் ஏதும்
பேச முடியவில்லை . அதற்குப் பிறகுதான்
தலைவா் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள்
ஜனவரி 17 என்பது அவருடைய
அத்தனை ரசிகப் பெருமக்களுக்கும்
மற்றும் அரசியல் , திரை உலக
நண்பர்களுக்குமே தெரிய வந்தது .

அதனைத் தொடர்ந்து , ஒவ்வொரு
ஆண்டும் ஜனவரி 17 , எம்.ஜி.ஆர். பிறந்த
நாளில் முதலியாரின் வாழ்த்துச் செய்தி
தவறாமல் ‘தினத்தந்தி’ நாளிதழில் வந்து
கொண்டிருந்தது .

புரட்சித் தலைவா் , மறைந்த
அடுத்த நாள் பரமசிவ முதலியார் பிறந்த
நாள் . ஆமாம். 25.12.1924–ல் முதலியார்
பிறந்தார்.

எம்.ஜி.ஆர். முதல்–அமைச்சரான
பின்னர் அவருக்கு பிறந்த நாள்
வாழ்த்துக்கூறி , எந்த ‘‘தினத்தந்தி’’யில்
எந்த முதலியார் விளம்பரம் செய்து வந்தாரோ – அதே ‘‘தினத்தந்தி’’யில்
அதே முதலியார் எம்.ஜி.ஆர். இறந்த
நாளான தனது பிறந்த நாளில் இப்படி
விளம்பரம் செய்தாா் .

‘‘எனது ஆரூயிர் குடும்ப நண்பர்
எம்.ஜி.ஆர். மறைந்த இந்த நாளில்
(டிசம்பர் 24) அவருடைய ஆன்மா சாந்தி
அடைய இறைவனைப்
பிரார்த்திக்கிறேன் .

– இப்படிக்கு, வி.எம்.பரமசிவ முதலியார்,
மிராசுதார் , சுரோத்தியம்தாரர் ,
உரிமையாளர் ஸ்ரீமுருகன் டாக்கீஸ் , சென்னை–1’’.

நேசமும் பாசமும் ஒன்று கலந்த
இந்த நினைவாஞ்சலிச் செய்தி
2005–ஆம் ஆண்டு வரையிலும் நாள்
தவறாமல் ‘தினத்தந்தி’யில் வந்தது.

அதற்கு அடுத்த ஆண்டு அது
வரவில்லை. ஏனென்றால் முந்தின
ஆண்டோடு அது முடிந்து போய் விட்டது.

காரணம் 27.8.2006–ல் தனது 81–வது
வயதில் வி.எம்.பரமசிவ முதலியார்
காலமானார் .......... Thanks.........
.

orodizli
8th November 2019, 10:22 PM
https://www.facebook.com/SIVA4777/videos/1677085569044018/?sfnsn=scwspmo&d=n&vh=i.......... Thanks.........

fidowag
8th November 2019, 11:06 PM
சஷ்டியப்த பூர்த்தி விழா செய்தி .
--------------------------------------------------

ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவை சார்ந்த திரு.குணசேகரன்* இன்று (08/11/19) சஷ்டியப்த பூர்த்தி விழாவை சென்னை மேற்கு மாம்பலம் ஆர்யா கவடா* சாலையில் உள்ள கௌரி மினி ஹாலில் சிறப்பாக*கொண்டாடினார் .**


ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு, பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் போன்ற அமைப்புகளை சார்ந்த பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .


திரு.குணசேகரன், திருமதி சுகுணாதேவி தம்பதியர் இன்று போல் எல்லா வளமும்,நலமும் , பெற்று பல்லாண்டு காலம்* நமது இதய தெய்வம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நல்லாசியுடன்* வாழ்க* என வாழ்த்துவோமாக .

oygateedat
9th November 2019, 06:02 AM
https://i.postimg.cc/kGSYr2js/b0aa2572-69a0-4948-836d-dac2637bc242.jpg

orodizli
9th November 2019, 10:20 AM
டியர் ஜேம்ஸ் ...........




உங்கள் ஆதங்கம் புரிகிறது .எம் ஜி.ஆர்., திரை உலகில் நிகழ்த்திய சாதனைகளை அனைவரும் அறிவார்கள் .பாக்ஸ் ஆபீஸ் ஹீரோ யார் என்றால் அது எம்ஜிஆர் மட்டும்தான் என்பது விநியோகஸ்தர்களுக்கும் நன்கு தெரியும் . நேற்றைய தலைமுறை மக்களுக்கும் எம்ஜிஆர் தான் வசூல் சக்கரவர்த்தி என்பதை அறிவார்கள் . ஆனால் குறிப்பிட்ட சில சிவாஜி கணேசனின் ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகரின் தோல்வி களை மறைக்க எம்ஜிஆர் படங்களை பற்றி தவறான தகவலை இணைய தளத்திலும் , முக நூலிலும் , சில குழுக்களிலும் பதிவிட்டு அற்ப மகிழ்ச்சி கொள்கிறார்கள் .
இதை நாம் பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம் . சிவாஜியின் வெற்றி தோல்வி புள்ளி விவரங்கள் அனைவரும் அறிந்ததே .

உங்கள் கவனத்தை சற்று மாற்றி கொண்டு எம்ஜிஆரின் நடிப்பாற்றல் பற்றிய பதிவுகளை நம்முடன் பகிர்ந்து கொள்ளவும் . உங்களுக்கு பிடித்த நடிப்பு காட்சிகள் , சண்டை காட்சிகள் , எம்ஜிஆரின் ஆளுமைகளை பற்றி பதிவிடவும் .பொன்னான நேரத்தை எம்.ஜி.ஆர் ., நினைவுகளுடன் நாம் பயணிப்போம் ..............(ஒரு ரசிக நண்பர் இன்னொரு ரசிக தோழருக்கு கூறிய விளக்கம்)......... Thanks.........

orodizli
9th November 2019, 10:27 AM
மதுரையில் பொங்கலுக்கு டிக்கெட் மொத்தமாக வாங்கி கிழிக்க ஒரு கும்பலே கும்பலாக காத்து கிடக்கிறது என மதுரை திரைப்பட விநியோகஸ்தர்கள் தெருவில் கோரஸ் ஆக கேட்கிறது... நண்பர்கள் தகவல்...

fidowag
9th November 2019, 10:59 PM
நாளை ஞாயிறு* முதல் (10/11/19) விருதுநகர் , அல்லம்பட்டி , ஸ்ரீராம் அரங்கில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .

தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார் .

oygateedat
10th November 2019, 02:03 PM
https://i.postimg.cc/MHg9KLgT/IMG-4246.jpg (https://postimg.cc/m1NYmmLf)

oygateedat
10th November 2019, 02:04 PM
https://i.postimg.cc/SxxGbknr/350dc86f-cdea-4518-9453-dcd837f2be4b.jpg (https://postimg.cc/pp3jDNYh)

oygateedat
10th November 2019, 02:05 PM
https://i.postimg.cc/xCnCBTCj/57e434f8-a9b9-4a5b-ac11-2c954422d1f6.jpg (https://postimages.org/)

oygateedat
10th November 2019, 02:06 PM
https://i.postimg.cc/Vkk2Zymy/65b00b00-fdee-4b30-8be6-2efc8bc4496c.jpg

oygateedat
10th November 2019, 02:08 PM
https://i.postimg.cc/66R0KMY8/IMG-4244.jpg (https://postimages.org/)

fidowag
10th November 2019, 10:15 PM
மக்கள் குரல் -9/11/19

விக்கிரவாண்டி தொகுதியில் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம்*
--------------------------------------------------------------------------------------------------

எம்.ஜி.ஆருக்கு இணையாக எந்த ஒரு தலைவரும் திரை துறையிலிருந்து அரசியலுக்கு* வர முடியாது .* முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு .
--------------------------------------------------------------------------------------------------------------------------

மக்கள் தலைவர் , பாரத ரத்னா ,டாக்டர் எம்.ஜி.ஆர். முதலில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து நாட்டு மக்களுக்கு நன்மை செய்தார் .* பல ஆண்டு காலமாக மக்களுக்கு சேவை செய்தார் .* பலமுறை* சட்டமன்ற உறுப்பினராக இருந்து* மக்களின் அன்பை பெற்றார் .**

தான் வாழ்நாளில் சாதிக்க நினைத்ததை திரைப்படங்களில் நடிக்கும்போதே மக்களுக்கு எடுத்துச் சொன்னார் .* ஆனால் விஷமிகளாக இருக்கின்ற சில துரோகிகள் அவரின் உழைப்பை மட்டும் பெற்றுக் கொண்டு , அவர் பதவிக்கு வருவதை விரும்பவில்லை .* அவருக்கு கொடுக்க வேண்டிய அந்தஸ்தை கூட கொடுக்க மறுத்த காரணத்தினால், தான் அண்ணா கண்ட கனவை நனவாக்க வேண்டுமென்பதற்காக அண்ணா தி.மு.க. என்கிற ஒரு மாபெரும் இயக்கத்தை உருவாக்கினார் .**

அவருக்கு இணையாக எந்தவொரு தலைவரும் , திரை துறையில் இருந்து அரசியலுக்கு அவர் மாதிரி வர முடியாது என்பதை மக்கள் முடிவு செய்திருக்கிறார்கள் .தன்* உயிர் இருக்கும்வரை* நாட்டு மக்களுக்காக உழைத்த ஒப்பற்ற தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.*

orodizli
11th November 2019, 09:46 AM
தினத்தந்தி - 01/11/2019...

என்றென்றும் கண்ணதாசன்*...
----------------------------------------------

கண்ணதாசனின் நெருங்கிய நண்பராக இருந்தவர் வி.பி.ராமன் என்ற வழக்கறிஞர் .வி.பி.ராமனின் தந்தையும் ஒரு வழக்கறிஞர் .* லாயிட்ஸ் ரோடில் (அவ்வை சண்முகம் சாலை ) அடுத்தடுத்து நான்கு பங்களாக்கள் அவருக்கு இருந்தது .இதில் ஒன்றில்தான், சினிமாவில் நடிக்க வந்த புதிதில் , எம்.ஜி.ஆரும், அவரது சகோதரர் சக்கரபாணியும் வாடகைக்கு குடியிருந்தனர் .

சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் நீண்டநாள் கனவு .* தாங்கள் குடியிருந்த வீட்டையே வாங்க வேண்டும் என்பது அவர்களின் ஆசை .* ஆனால் அதற்கு வாடகை தரவே வருமானம் போதாதா நிலையில் எப்படி வாங்குவது .

ஒருநாள் வி.பி. ராமனின் தந்தை எம்.ஜி.ஆரை அழைத்து வீட்டை விற்க போகிறேன் .வேறு ஒருத்தருக்கு தர மனமில்லை.* நீயே வாங்கி கொள் என்றார் .* பதிலுக்கு*எம்.ஜி.ஆர்., வாங்கணும்னு ஆசைதான் . ஆனால் இப்போ இருக்க சூழல்ல வாங்க முடியாது என்றார் .

ஏன் முடியாது. இதுவரையில் நீ தந்த வாடகையை அட்வான்ஸாக வைத்துக் கொள்கிறேன் . பாக்கியை கொஞ்சம் கொஞ்சமாக தா என்றார் வி.பி.ராமனின் தந்தை*

அப்படி எம்.ஜி.ஆர். வாங்கிய வீடுதான் இன்றைக்கு அ.இ .அ .தி.மு.க. வின் தலைமை அலுவலமாக* இருக்கிறது .* *இதை எம்.ஜி.ஆர். நான் ஏன் பிறந்தேன்*என்கிற தான் எழுதிய நூலில் குறிப்பிட்டு உள்ளார். அதை வெளியிட்டது கண்ணாதாசன் பதிப்பகம் ........ Thanks.........

orodizli
11th November 2019, 09:47 AM
தினகரன்* *-வெள்ளி மலர்*........
-------------------------------------------

நான் இல்லாமே நடக்காது - கவிஞர் வாலி .
---------------------------------------------------------------------
எம்.ஜி.ஆர். பொதுவாக அடிக்கடி கவிஞர் வாலியை வெறுப்பேற்றுவார் .அதை புத்திசாலித்தனமாக எதிர் கொள்ளும் முறையை எம்.ஜி.ஆர். ரசிப்பார் .

அப்போது தன்* கனவு படைப்பான "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தை பெரும் பொருட்ச்செலவில் எடுத்துக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். வாலியை சந்தித்தபோது "இந்த படத்தோட டைட்டில் கார்டில் உங்க பேரு இருக்காது கவிஞரே , ஏன்னா,இந்த படத்திற்கு உங்களிடம் பாட்டு கேட்க போவதில்லை . என்று விளையாட்டாக சொன்னார் .

வாலி , பதிலுக்கு, அண்ணே, என் பேரு இல்லாமே உங்க படத்தை , நீங்க ரிலீஸ் பண்ணவே* முடியாது , இது சவால் என்றார் .**

அப்படியா ? பார்த்துவிடலாமா என்று உசுப்பு ஏற்றிவிட்டார்* எம்.ஜி.ஆர்.*

அண்ணே, உலகம் சுற்றும் வாலிபன் டைட்டிலிலேயே என் பெயர் இருக்கு .* அதை எடுத்துட்டா,* உலகம் சுற்றும் பன்* என்றுதான் நீங்க படத்தை ரிலீஸ் செய்யணும் .

வாலி இல்லாமே எப்படி வாலிபன் வெளியாகும் என்றார் .

எம்.ஜி.ஆருக்கு சிரிப்பு* பொத்துக்* கொண்டு வந்தது .

உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக, பின்னர் 4 பாடல்கள் எழுத எம்.ஜி.ஆர்.*வாய்ப்பளித்தார் .* அதில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகின ...... ...... Thanks.........

orodizli
11th November 2019, 09:48 AM
தினகரன்* *- வெள்ளிமலர் -01/11/2019...........
------------------------------------------------------

தாலி பாக்கியம்*
------------------------------
எம்.ஜி.ஆர். உடல்நல குறைவால் அமெரிக்காவில் இருந்தபோது தமிழகம் எங்கும்* ஒளி விளக்கு படத்தில் கவிஞர் வாலி எழுதிய "இறைவா உன் மாளிகையில் "பாடல்தான் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது .

எம்.ஜி.ஆர். உடல்நலம் தேறி, சென்னை திரும்பியதும் , உடல்நலம் விசாரிக்க நேரில் போனார் வாலி.* அப்போது எம்.ஜி.ஆரின் மனைவி, வி.என்.. ஜானகி ,வாலியிடம் ,* ஒளி விளக்கு படத்தின்* உங்க பாடலான '"இறைவா உன் மாளிகையில் " பாடலைத்தான் நாடே பாடி, உங்க அண்ணனுக்கு பிரார்த்தனை செய்தாங்க .* அதன் பலனாலேதான் அவர் நல்லா ஆயிட்டாரு .* என்று உருக்கமாக சொன்னார் .

அப்போது வாலி, அம்மா அது வாலி பாக்கியம் இல்லை,. உங்க தாலி பாக்கியம் தான் என்று கூறி நெகிழவைத்தார் ....... Thanks..........

orodizli
11th November 2019, 09:50 AM
https://youtu.be/6XImt-0ymoM...... Thanks...

orodizli
11th November 2019, 09:51 AM
https://youtu.be/rQfidaFy3to...... Thanks...

orodizli
11th November 2019, 09:52 AM
https://youtu.be/8s_fnPO5ido...... Thanks...

orodizli
11th November 2019, 03:20 PM
1970பது களில் புரட்சித் தலைவர் நான் தான் ... தி.மு.க. தி.மு.க தான் நான் ... என்று சொன்னாரே நினைவில் இருக்கிறதா? அதை ஆணித்தரமாக வலியுறுத்தும் ஒரு அபூர்வ ஆவணம் : ஆதாரம் முத்தாரம் 01/05/1964.

பேரறிஞர், நாவலர், பேராசிரியர், கலைஞர், .......என்று பலர் இருந்தும் ... நமது புரட்சித் தலைவர் "புகைப்படம்" ... அவருக்கு பின்னால் உதய சூரியன் சின்னம் படத்துடன் விளம்பரம் ......தி.மு.கவின் வாக்கு வங்கியை கவரவேண்டும் என்றால் புரட்சி நடிகர் தான் வேண்டும்....

ஓயாது உழைப்பதில் சூரியன் நீ
ஒவ்வொரு வீட்டிலும் சந்திரன் நீ..������......... Thanks.........

orodizli
11th November 2019, 03:23 PM
https://m.facebook.com/groups/1666545363671016?view=permalink&id=2517876078537936&sfnsn=scwspwa&d=w&s=100021532151775&vh=i&funlid=yEpvzSiL8HJGjheC........ Thanks...

orodizli
11th November 2019, 03:25 PM
இந்த படம் அறிய ஒன்று .குமரிமுனை கடலின் நடுவே நடுவண் பாறையில் 133 அடி உயரம் கொண்ட வள்ளுவன் சிலை மறைந்த மாமனிதர் MGR., அவர்கள் 15.04.1979ல் அடிக்கல் நாட்டினார்.அந்த நிகழ்வில் அவருக்கு உதவியாளனாக கலந்துகொண்டேன் .படமும் எடுத்தேன் .பின்னர் 2000ல் கலைஞர் avl சிலையை திறந்தார்கள் .அதிலும் நான் முக்கிய பொறுப்பாளனாக கலந்துகொண்டேன்.அந்த 133அடி உயர வள்ளுவனின் தலைக்கு மேல் உள்ள பகுதி தான் இந்த படம்.இந்த படத்தை Cannon FTQL பிலிம் கேமராவில் 13.10.2004ல் நான் எடுத்தேன்.இது என்னுடைய adventurous shot ..... Thanks.........To mr.Kannan...

fidowag
11th November 2019, 08:51 PM
திருமண வாழ்த்து செய்தி .
--------------------------------------------

கலைவேந்தன் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை பக்தர்கள் குழுவை சார்ந்த நிர்வாகி திரு.சாந்தகுமார்* அவர்களுக்கு* இன்று (11/11/19) காலை , சென்னை வில்லிவாக்கம்* சௌமிய தாமோதர பெருமாள் கோயிலில் திருமணம் சிறப்பாக நடைபெற்றது .அதை தொடர்ந்து அருகில் உள்ள மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது .பல்வேறு எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள் சார்பில் பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

fidowag
11th November 2019, 08:52 PM
பாக்யா வார இதழ் -31/10/19
--------------------------------------------
வைரம் நூறு தொடர்*
--------------------------------
திருநீறை செல்வி, மங்கையர் கைராசி, திருமணம் கொண்டாள் இனிதாக .........

இதயவீணை* படத்தில் புரட்சி தலைவர் பாடும் ஒரு அற்புதமான பாடல் இது.திருமணம் நடக்கும் எல்லா வீடுகளிலும் இந்த பாடல் நிச்சயம் ஒலிக்கும் .

திருநிறைச்செல்வி , மங்கையற்கரசி* திருமணம் கொண்டாள் , இனிதாக என*படத்தில் வாழ்த்து பாடிய தலைவர் .....

பல ஆயிரம் குடும்பங்களுக்கு தனது சொந்த செலவில் திருமணம் செய்து வைத்துள்ளார் என்பது வரலாறு .
அவரது பெயர் நாகநாதன்.* உதவி நடிகர்.* புரட்சி தலைவர் நடிக்கும் எல்லா படங்களிலும் ஏதாவது ஒரு காட்சியில் வந்து விடுவார் .* அவருக்கு ஒரே மகள். திருமண ஏற்பாடுகளை செய்கிறார் . பத்திரிகை அடித்த கையோடு தலைவரை பார்க்க ராமாவரம் தோட்டம் செல்கிறார் .* தலைவர் சூட்டிங்க் ஒன்றிற்காக பெங்களூரில் இருப்பதாக தகவல் .* வந்த விவரத்தை சொல்லி மகளின் கல்யாண பத்திரிகையை கொடுத்துவிட்டு வருகின்றார் .* மிகவும் சிரமப்பட்டு திருமணத்தை நடத்தி விடுகிறார் நாகநாதன்.* தலைவரிடம் இருந்து எந்த விதமான உதவியும் வரவில்லையே என்ற கவலை மனதிற்குள் இருந்து கொண்டே இருக்கின்றது நாகநாதனுக்கு.* நம்ம நேரம் சரியில்லை என் மனசை தே ற்றிக் கொண்டார் .

திருமணம் முடிந்த சில மாதங்களில் தீபாவளி வந்து விடுகின்றது .* நாகநாதனுக்கு பெருங்கவலை வந்து விடுகிறது.* தீபாவளிக்கு மாப்பிள்ளையையும் மகளையும் அழைக்க வேண்டும்.* புது துணி எடுத்துக் கொடுத்து சிறப்பு செய்ய வேண்டும் .* பணத்திற்கு எங்கே போவது .* ஏற்கனவே திருமணத்திற்கு வாங்கிய கடன் அப்படியே இருக்கு* *இப்ப யாரு கடன் கொடுப்பா*என யோசித்து கவலையோடு இருக்கிறார் .* நாகநாதன்.* அப்போதுதான் தலைவரிடம் இருந்து அழைப்பு வருகிறது . தோட்டத்திற்கு செல்கிறார் . தலைவரை பார்த்து வணங்குகிறார் நாகநாதன் .

தலைவர் ஒரு பை நிறைய பணம் கொடுத்து அனுப்புகிறார்.* வீட்டிற்கு வந்து பணத்தை எண்ணிப் பார்த்த நாகநாதனுக்கு வியப்பு . ஆம் ...

மகளின் திருமணத்திற்கு நாகநாதன் வாங்கி இருந்த கடனை* அடைப்பதற்கு ம்*மாப்பிள்ளைக்கும்* மகளுக்கும் தலை தீபாவளி கொண்டாட தேவையான பணமும் அதில் இருந்தது .**

இதுபோன்ற எண்ணற்ற உதவிகள் செய்ததால்தான் , மக்கள் திலகம் மக்கள் தலைவரானார் .

fidowag
11th November 2019, 08:52 PM
தமிழ் இந்து -18/10/19
----------------------------------
திரையிசையின் விஸ்வரூபம்*
------------------------------------------------
திண்டுக்கல் இடை தேர்தல் வெற்றி (1973)* கொடுத்த உற்சாகம் எம்.ஜி.ஆரின் அடுத்தடுத்த படங்களில் வசன ங்களாகவும், பாடல்களாகவும் வெளிப்பட்டன.**நேற்று இன்று நாளை தொடங்கி மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை*எம்.ஜி.ஆருக்கு, எம் எஸ்.வி* இசையமைத்த பன்னிரண்டு திரைப்படங்களும் பாடல்களுக்காக இன்றுவரை பேசப்படுகின்றன .

பல திரை கலைஞர்களுக்கு சிறப்பான இசை வழங்கி கொண்டிருந்த எம்.எஸ்.வி. அரசியல் திரைப்படம் என தொடர்ந்து அதிர்வுகளை ஏற்படுத்தி கொண்டிருந்த எம்.ஜி.ஆர். உடன் பணிபுரிந்த அத்தியாயம் மட்டுமே தனி வரலாறு .*

அகண்ட காவிரி நதியை ஒப்பிட்டு எம்.ஜி.ஆரை வாழ்த்தி நீங்க நல்லா இருக்கணும்* என்று இதயக்கனி திரைப்படத்தில் விருத்தத்துடன் கூடிய* நீண்ட பாடலை கொடுத்தார் எம்.எஸ்.வி.* உரிமைக்குரல் படத்தில்* இந்துஸ்தானி இசையின் இனிய பஹாடி ராகத்தில் , விழியே கதை எழுத்து, மீனவ நண்பன் படத்தில் மிஸ்ரா சிவரஞ்சனி ராகத்தில் ,தங்கத்தில் முகம் எடுத்து , வலஜி ராகத்தில்* பொங்கும் கடலோசை என எம்.ஜி.ஆரை ராக அருவியில் நீராட்டினார் .**

மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்* படத்திலோ , த்விஜாவந்தி ராகத்தில்* அமுத தமிழில் எழுதும் கவிதை என்ற பாடலுடன் எம்.ஜி.ஆரின் அரசியல் கனவை காற்றில் ஒலிக்கவிட்டு, திரையிசையில் எப்படி வேண்டுமானாலும் தன்னால் விஸ்வரூபம் எடுக்க முடியும் என்று காட்டியவர் .**

1965 முதல் மெல்லிசை மன்னராக தனி இசை பயணம் செய்த எம்.எஸ்.வி. 1978 வரை , எம்.ஜி.ஆர். முதலமைச்சராக முழுநேர அரசியல் வாழ்க்கைக்கு சென்றது*வரையில் 36 திரைப்படங்களுக்கு இசை அமைத்தார் .

கேரளா மாநிலம் பாலக்காட்டில் 1928ல் ஜூன் 24ம் தேதி பிறந்த எம்.எஸ். வி. இயற்பெயர் .மனையங்கத்து சுப்பிரமணியன் விஸ்வநாதன் .* தனது 25வது* வயதில் 1953ல் வெளியான ஜெனோவா படத்திற்கு முதன் முதலாக இசை அமைத்தார். படத்தின் நாயகன் எம்.ஜி.ஆர். ஆபிஸ் பையனாக* இருந்து இசை அமைப்பாளராக உயர்ந்த எம்.எஸ். வியை தான் முன்னணி கதாநாயகனாக புகழ் பெற்றதும் தனது படங்களின் திரையிசைக்கு சுவீகரித்து கொண்டார் .

fidowag
11th November 2019, 09:04 PM
தினகரன் - வெள்ளி மலர் -11/10/19
--------------------------------------------------------

எம்.ஜி.ஆருக்கு நடிப்பு சொல்லி கொடுத்தவர்*
-------------------------------------------------------------------------

1931ல் கும்பகோணம் பாய்ஸ்* நாடக கம்பெனியில் 11 வயது குருமூர்த்தி , 14 வயது ராமச்சந்திரனுக்கு நடிப்பு* சொல்லி கொடுத்து கொண்டிருந்தார் .

வாத்தியார் காளி ரத்தினத்துக்கு மகிழ்ச்சி . குருமூர்த்தி அழைத்து வந்த ராமச்சந்திரன் அழகாகவும் இருந்தார் .* சொன்னதை புரிந்து கொண்டு அப்படியே நடித்துக்காட்டினார் . அந்த ராமச்சந்திரன் தான் பின்னாளில் மக்கள் திலகமாக தமிழ் திரையுலகை கொடி கட்டி ஆண்ட எம்.ஜி.ராமச்சந்திரன் .**

நேற்றுதான் தன்னுடைய கனகாபிஷேக விழாவை (100 வது* பிறந்த நாள் )சென்னையில் கொண்டாடினார் . மயிலாடுதுறையில் 1920ல் பிறந்த குருமூர்த்தி பள்ளி படிப்பின்போதே ஓவிய வகுப்பில் சேர்ந்து இளநிலை தேர்ச்சி பெற்றார்.அப்போதே நாடகங்களிலும் நடிக்க தொடங்கியதால் , பள்ளி படிப்பு பாதியில் நின்றது .

எம்.ஜி.ஆரோடு இணைந்து, பவளக்கொடி , கோவலன் ஆகிய நாடகங்களில் நடித்துள்ளார் .**

fidowag
11th November 2019, 09:15 PM
குங்குமம் வார இதழ் .
--------------------------------
நடிகை குஷ்பூ பதில்கள்*

--------------------------------------

வாசகர் கேள்வி* : பழைய படங்களில் உங்களுக்கு பிடித்த எம்.ஜி.ஆர் படங்கள் எவை ?
*பதில் : எங்க வீட்டு பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன்,* அன்பே வா .

orodizli
12th November 2019, 04:57 PM
இதயவீணை !
________________
நாய்கள் கடிப்பதும்
கழுதை உதைப்பதும்
இயற்கை என்பது தெரியும் !

புலிகள் பாய்வதும்
நரிகள் ஏய்ப்பதும்
பிறவிக் குணம் என்று
புரியும் !

எந்தெந்த நேரத்தில் கடிப்பான் இவன்
எந்தெந்த வேலையில்
உதைப்பான்
யாருக்கு இவர்களைத்
தெரியும் ?
பார்வையில் குணம்
என்ன புரியும் ?

கவிஞர் வாலி !

சிலவரிகளிலே மிகப் பெரிய உண்மைகளை
உடைக்கும் கவிஞர்களை எனக்கு பிடிக்கும் அதில் கவிஞர் வாலியும் ஒருவர் !

பாடல் வரிகளில் மூழ்கிய எனக்கு இன்னொன்றும் கண்ணுக்கு புலப்பட்டது

மக்கள் திலகத்தை கவனியுங்கள் !

Handsome wrestler

அப்படித்தானே தோற்றம் நண்பர்களே !.......... Thanks.........

fidowag
12th November 2019, 10:21 PM
மாலை சுடர் -12/11/19
-------------------------------------

மலேசியாவில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் வி.ஜி.பி.உலக தமிழ் சங்கம் வழங்கிய எம்.ஜி.ஆர். சிலை கோலாலம்பூர் லிட்டில் இந்தியா எம்.ஜி.ஆ.ர்* மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது .* இந்த சிலையை தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைத்தார் .* உடன் வி.ஜி.பி. உலக தமிழ் சங்க தலைவர் வி.ஜி.பி. சந்தோசம் , மலேசிய எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் மணிவாசகம் மற்றும் விளாத்திகுளம் சட்ட மன்ற உறுப்பினர் சின்னப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

fidowag
12th November 2019, 11:04 PM
அமுதசுரபி மாத இதழ் -அக்டொபர் 2019
---------------------------------------------------------------
திரைவானில் மின்னிய நட்சத்திரங்கள் -எம்.என். நம்பியார்*

கலைமாமணி வி.ராமமூர்த்தி*
--------------------------------------------------

பல ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் (அப்போது மேம்பாலம் கிடையாது ) ரயில் வரும்போது கேட்டை மூடி விடுவார்கள் .* நடிக* நடிகைகள் சூட்டிங் போவதற்கும் , படப்பிடிப்பை முடித்து*வீட்டுக்கு திரும்புவதற்கும்* பெரிய சங்கடமாக இருந்தது .**

ஒரு நாள் நடிகர் எம்.என்.நம்பியாரின் கார் வரும்போது ,ரயில்வே கேட்டை மூடிவிட , சில ரசிகர்கள் காரை நெருங்கி வந்து (எம் .ஜி..ஆர்.ரசிகர்கள் ) உங்களுக்கு* திமிர் ஜாஸ்தி.* என்ன தைரியம் இருந்தால் எங்கள் தெய்வம் எம்.ஜி.ஆரை நீங்க அடிக்கலாம் .* என்று கோபமாக கேட்டனர் .
நடிகர் நம்பியார் உடனே, ஏம்பா , அவரும் தானே என்னை அடிச்சார் .* குத்தினார் .**அதை நீங்கள் பார்க்க வில்லையா* என்று கேட்க , அவர் அடிக்கலாம் , என்ன அவர் எம்.ஜி.ஆர். ஆனால் நீங்க எப்படி அடிக்கலாம் என்று வாதிட்டனர் .* இதை ஒரு நிகழ்ச்சியில் நடிகர் நம்பியார் சிரித்து கொண்டே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் .

சினிமாவில் ஆரம்பம் முதலே, வில்லனாக நடித்து , கெட்டவன் என்று பெயர் வாங்கியவர் நடிகர் நம்பியார் .* சில குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும், வில்லன் என்றால் நம்பியார்தான் என்று முத்திரை ஆழமாக பதிந்துவிட்டது .சரிவாதிகாரி,நாடோடி மன்னன் அரசிளங்குமரி* ஆயிரத்தில் ஒருவன், படகோட்டி, எங்க வீட்டு பிள்ளை குடியிருந்த கோயில் , ரகசிய போலீஸ் 115. நான் ஏன் பிறந்தேன், ராமன் தேடிய சீதை ,உரிமைக்குரல், சிரித்து வாழ வேண்டும் , பல்லாண்டு வாழ்க, போன்ற படங்களில் கொடியவனாகவும் , வில்லத்தனமாக நடித்ததால், நயவஞ்சகன், சூழ்ச்சிக்காரன் என்கிற பட்டமும் சேர்ந்துவிட்டது .**

ஜூபிடர் கம்பெனி 1948ல் தயாரித்த மோகினியில் எம்.ஜி.ஆர். நாயகன். நம்பியார் வில்லன் . அதிலிருந்து எம்.ஜி.ஆர். நாயகனாகவும், நம்பியார் வில்லனாகவும்* நடித்து அந்த முத்திரை ஆழமாக குத்தப்பட்டது .* வில்லன் நடிப்புக்கு ஏற்ப கொடூரமான பார்வையும், மிரட்டும் விழிகளும்,அபூர்வமான* பேச்சும் , நடிப்பும்* நம்பியாருக்கு விழுந்த வில்லன் முத்திரையை சாசுவதமாக்கியது .

குறிப்பாக எம்.ஜி.ஆர். படங்களில் வில்லன் நடிப்பில் நம்பியார் வரலாறு படைத்தார் என்று சொல்லலாம் .* எங்க வீட்டு பிள்ளையில் அப்பாவி எம்.ஜி.ஆரை இவர் சவுக்கால் அடித்து சித்ரவதை செய்வதும், அடுத்து* முரட்டு எம்.ஜி.ஆரால்* அதே சவுக்கால் அடிபட்டு அலறுவதும் நம்பியார் நடிப்பில் அபாரம் .வேணும் இந்த பாவிக்கு என்று மக்களை சொல்ல வைத்தது . இதுவே நம்பியாருக்கு ,ஒரு மறைமுக பாராட்டுதானே .*

மு.கருணாநிதி கதை வசனத்தில், ஏ. காசிலிங்கம் இயக்கிய நாம் படத்தில் எம்.ஜி.ஆர். நாயகன் .* நம்பியார் நாயகன் எம்.ஜி.ஆரை வாழ்த்தி அண்ணா வாழ்கவே, குமர* அண்ணா வாழ்கவே* என்று பாடியுள்ளார் .**

orodizli
12th November 2019, 11:22 PM
https://youtu.be/5H9fKc-Nhhw......... Thanks...

orodizli
12th November 2019, 11:23 PM
https://youtu.be/9D5qjEscSac....... Thanks...

orodizli
12th November 2019, 11:24 PM
உங்களுக்கு தெரியுமா???

புரட்சித் தலைவருக்கு அந்த ஆண்டின் சிறந்த அகில இந்திய நடிகராகத் தேர்தெடுக்கப் பட்டு "பாரத்" விருதை பெற்றார்.

அந்த உற்சாகமான நிலையிலும் அந்த விருது பெற்ற பெருமகன்
அமைதியாக ஓவர் புன்முறுவலுடன் திகழ்ந்தார். ஒரு கணம் அவர் பார்வை எதையோ நோக்குகிறது. பின் நேராக மேடையில் வீற்றிருந்த ராஜ்கபூரை [வயதில் இளையவர்] பாதத்தை தொட்டு வணங்கிவிட்டு மேடையை விட்டு இறங்கினார்.

திகைத்துப்போகும் செய்தியா?

புரட்சித் தலைவர் அளித்த பதில் ; நான் அங்கே ராஜ்கபூரைப் பார்க்கவில்லை, அவருடைய உருவில் "அவருடைய தந்தையான பிரிதிவிராஜ் கபூரைத் தான் பார்த்தேன்", கலையுலக தந்தையான அவரை, விருது பெற்ற வேளையில் மானசீகமான நினைத்து வணங்கினேன்.

என்ன அடக்கம், என்ன தொழில் பக்தி - புரட்சித் தலைவருக்கு நிகர் என்றும் எவரும் இல்லை...... Thanks.........

orodizli
12th November 2019, 11:26 PM
இன்று தந்தி TV யில் இப்படி ஒரு நிகழ்ச்சி - ரஜினி - கமல் -: எம்.ஜி.ஆரா? சிவாஜியா?!!!!!

புரட்சித் தலைவர் மாதிரி யாரும் வர முடியாது ...
என்று ரஜினிகாந்த் சொல்லிவிட்டார்.

கமல் "சிவாஜி தான்" என்று கடந்த பாராளுமன்ற தேர்தலில் நிரூபித்துவிட்டார்!!!!!

அப்புறம் எதற்கு இந்த நிகழ்ச்சி???....... Thanks...

orodizli
12th November 2019, 11:29 PM
இன்று 12-11-2019 முரசு தொலைக்காட்சியில் மக்கள் திலகம் வழங்கிய கருத்து களஞ்சியம் "தாய் சொல்லை தட்டாதே", ஒளிப்பரபாகியது...

orodizli
12th November 2019, 11:31 PM
11-11-1966... 11-11-2019 நேற்று புரட்சி நடிகர் நடித்த சர்க்கஸ் காவியம் "பறக்கும் பாவை" 53 ஆண்டுகள் நிறைவடைந்து 54ம் வருடம் தொடக்கம்...

orodizli
12th November 2019, 11:35 PM
12-11-1976...12-11-2019... இன்று 43 வருடங்கள் நிறைவு கண்டு 44ம் ஆண்டு துவக்கம் காணுகிறார்...திரையுலக வசூல் சக்கரவர்த்தி "ஊருக்கு உழைப்பவன்" சாகச காவியம்...

fidowag
13th November 2019, 06:49 PM
வரும் வெள்ளி முதல் (15/11/19) கோவை சண்முகாவில் கொள்கை வேந்தன் எம்.ஜி.ஆர். வழங்கும் "தொழிலாளி " தினசரி 4 காட்சிகள் திரைக்கு வருகிறது .
தகவல் உதவி ; நெல்லை நண்பர் திரு.வி..ராஜா*

orodizli
13th November 2019, 07:22 PM
https://m.facebook.com/story.php?story_fbid=763320404013331&id=538550546490319&sfnsn=scwspwa&funlid=I8HzEYvdahzTmpVo....... Thanks.........

orodizli
13th November 2019, 07:30 PM
"இந்தப் படம் எங்கேயிருந்து கிடைச்சது?" - வியந்து கேட்ட கலைஞர்! #VikatanVintage
http://dhunt.in/7xOfR?s=a&ss=pd
Source : "விகடன்" via Dailyhunt

செயலியை பெற
http://dhunt.in/DWND...... Thanks...