PDA

View Full Version : Makkal thilagam mgr- part 23



Pages : 1 2 3 4 5 6 7 [8] 9 10 11 12 13 14 15 16 17

okiiiqugiqkov
21st July 2018, 09:35 AM
http://i65.tinypic.com/6iz5tl.jpg

okiiiqugiqkov
21st July 2018, 09:37 AM
http://i63.tinypic.com/qocahw.jpg

okiiiqugiqkov
21st July 2018, 09:39 AM
http://i67.tinypic.com/2mm5zd0.jpg

okiiiqugiqkov
21st July 2018, 09:40 AM
http://i64.tinypic.com/2vkjof5.jpg

okiiiqugiqkov
21st July 2018, 09:41 AM
http://i65.tinypic.com/2qtaik2.jpg

okiiiqugiqkov
21st July 2018, 09:43 AM
http://i63.tinypic.com/2dvr5ox.jpg

okiiiqugiqkov
21st July 2018, 09:44 AM
http://i66.tinypic.com/2rrxi0i.jpg

okiiiqugiqkov
21st July 2018, 09:48 AM
http://i65.tinypic.com/rgw70x.jpg

okiiiqugiqkov
21st July 2018, 09:50 AM
http://i65.tinypic.com/2vb64k2.jpg

okiiiqugiqkov
21st July 2018, 09:52 AM
http://i67.tinypic.com/2r24oqg.jpg

okiiiqugiqkov
21st July 2018, 09:58 AM
http://i63.tinypic.com/4qivec.jpg


http://i63.tinypic.com/a3mjah.jpg


http://i64.tinypic.com/2r4pi79.jpg

okiiiqugiqkov
21st July 2018, 10:00 AM
http://i65.tinypic.com/655qxc.jpg

okiiiqugiqkov
21st July 2018, 10:06 AM
http://i64.tinypic.com/ofr5oj.jpg

okiiiqugiqkov
21st July 2018, 10:08 AM
http://i63.tinypic.com/30ry4q9.jpg

okiiiqugiqkov
21st July 2018, 10:11 AM
http://i64.tinypic.com/258uv07.jpg

okiiiqugiqkov
21st July 2018, 10:13 AM
http://i68.tinypic.com/28kt2r4.jpg

okiiiqugiqkov
21st July 2018, 10:15 AM
http://i67.tinypic.com/1zcpms0.jpg

Richardsof
21st July 2018, 06:31 PM
மக்கள் திலகம் எம்ஜிஆரை தரம் தாழ்த்தி வெளியிடப்பட்ட நோட்டீஸ் பலவற்றை சிவாஜியின் திரியில் பதிவிட்டு வரும் திரு சிவா அவர்கள் சிவாஜியின் ரசிகனின் தரமற்ற அநாகரீக செயலை படம் பிடித்து காட்டியுள்ளார் . அதற்கு பதில் தரும் வகையில் நம்முடைய திரியில் நண்பர்கள் சிவாஜியை பற்றி பதிவிடுவது வருந்த தக்கது . அவர்கள் செய்யும் மாபெரும் தவறை நாமும் செய்வது மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு பெருமை சேர்க்காது .

மக்கள் திலகத்தின் பெயரும் புகழும் செல்வாக்கும் நாளுக்கு நாள் உயர்ந்தது கொண்டு வருவது உலக வரலாற்றில் யாருக்கும் கிடைக்காத சிறப்பாகும் . இந்த பெருமை ஒன்று நமக்கு போதும் .

Richardsof
21st July 2018, 06:44 PM
நினைத்ததை முடித்தவன் எம்ஜிஆர் .
ஆச்சரியமாக உள்ளது இல்லயா ?
************************************************** **********
எம்ஜிஆர் தன்னுடைய இளம் வயதில் ஆங்கில திரைப்படங்களை பார்த்ததின் விளைவுதான்
நாடோடி மன்னன் படம் எடுக்க தூண்டியது . ஏராளமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு
1958ல் திரைக்கு வந்து நாடு முழுவதும் ரசிகர்களால் மக்களால் ஏராளமான பாராட்டுக்களை பெற்று
சரித்திர சாதனை புரிந்தது .
எம்ஜிஆர் வெற்றி பெற்று நினைத்ததை முடித்தார் .
1967 தேர்தலில் தமிழகத்தில் பேரறிஞர் அண்ணாவின் தலைமயில் திமுக ஆட்சி அமைந்திட நினைத்தார் . அதற்க்காக உயிர் தியாகம் வரை சென்று உழைத்து தானும் வெற்றி பெற்று தன்னுடைய இயக்கத்தையும் வெற்றி பெற செய்து தன்னுடைய தலைவர் பேரறிஞர் அண்ணா தமிழக முதல்வராக பதவி அமரவைத்த எம்ஜிஆர் நினைத்ததை முடித்தார் .
1972ல் எம்ஜிஆரையே அழிக்க நினைத்த திமுகவின் கனவை 1973 திண்டுக்கல்தேர்தல் துவங்கி 1987 வரை அரசியல் எதிரிகள் அனைவரையும் எதிர்த்து வெற்றி மேல் வெற்றி பெற்று தான் நினைத்ததை முடித்தார்
.
சினிமாவில் எம்ஜிஆரின் சரித்திரம் முடிந்துவிட்டது என்று 1959, 1967, 1972 கால கட்டங்களில் நடந்த சோதனைகளை தவிடு பொடியாக்கி எம்ஜிஆர் உருவாக்கிய திரை உலக சாதனைகள் வெற்றிகள் குவித்ததின் மூலம் தான் நினைத்ததை முடித்தார் .
1977 வரை எம்ஜிஆர் திரை உலகை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து திரை உலக வசூல் சக்ரவர்த்தி யாக திகழ்ந்தார் என்று திமுக தலைவர் திரு கருணாநிதி 1987 எம்ஜிஆர் மறைவு தினத்தன்று கூறியது நினைவிற்கு வருகிறது .
நினைத்ததை முடிப்பவன் - 1975ல் வெளியானது , தலைப்பிற்கு ஏற்ப எம்ஜிஆர் தான் வாழ்ந்த காலத்திலும் நினைத்ததை முடிப்பவன்
என்று சாதித்து காட்டினார்.
மறைந்த பின்னரும் 30 ஆண்டுகளாக அரசியலிலும் சினிமா மறு வெளியீடுகளில் , புது தொழில் நுட்ப
மறு வெளியீடுகளிலும் எம்ஜிஆர் என்ற தனி
மனிதரின் வெற்றிகள் சரித்திர சாதனையை நினைத்ததை முடிப்பவன் எம்ஜிஆர் ரசிகர்களாகிய நாங்கள் எப்போதும் பெருமை கொள்கிறோம் .
நன்றி டி ஜி ராமமூர்த்தி

Richardsof
22nd July 2018, 10:55 AM
மலைக்கள்ளன்
மக்கள் விரும்பும் நடிகராக இருந்த எம்ஜிஆரை திரைக்கு வெளியேயும் மக்களின் நாயகனாக நிலை நிறுத்திய முதல் படம் என்று மலைக்கள்ளனை சொல்லலாம். ஐரோப்பிய நாடுகளில் அடித்துத் தேய்த்த ராபின்ஹூட் கதைதான் என்றாலும் 1954ல் தமிழக மக்களுக்குப் புதிது. கோவையைச் சேர்ந்த பட்சி ராஜா ஸ்டுடியோ தயாரித்த இந்தப் படத்துக்கு கருணாநிதி வசனம். மலைக்கள்ளன் என்ற நாவலை அப்படியே படமாக்கியதாலோ என்னவோ வில்லன்களை போலீஸ் கைது செய்த பிறகும் முக்கால் மணி நேரம் படம் ஓடிக் கொண்டே இருக்கும்.

“எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என்ற சூப்பர் டூப்பர் ஹிட் பாடலைத் தொடர்ந்து டிஎம்எஸ் எம்ஜிஆரின் குரலாகிப் போனார். இந்தப் படத்தில் எம்ஜிஆர் கிட்டத்தட்ட ஒரு சூப்பர் மேனாகவே வருவார். ஒரு வடநாட்டு இஸ்லாமியர் வேடத்தில் வந்து “அரே ஜல்தி ஆவோ” “நிம்பள்கி நம்பள்கி” என்று பேசி போலீஸ், காதலி என்று அனைவரையும் ஜாலியாக ஏமாற்றுவார். அவர் திட்டமிட்டது அனைத்தும் எந்தப் பிறழ்வும் இல்லாமல் சரியாக நடக்கும். கதாநாயகி மட்டும் நாயகன் தனது அத்தான் என்று தெரியும்வரை கடுகடுவென்றே இருப்பார். அவர் எத்தனை நல்லது அல்லது கெட்டது செய்திருந்தாலும் அவரும் முதலியார் என்று தெரிந்த பிறகுதான் பெண்ணைத் தர சம்மதிப்பார்கள். தமிழ் பண்பாடு.

படத்தைத் தூக்கிச் செல்வது மாம்பழ நாயுடு என்ற போலீஸ் வேடம். அதை டி.எஸ்.துரைராஜ் செய்திருப்பார். உண்மையில் எம்ஜிஆரை விட அவருக்குத்தான் அதிக வசனம் இருக்கும். எம்ஜிஆரின் அண்ணன் சக்ரபாணிதான் சப் இன்ஸ்பெக்டர். கடைசி வரை முகவாயைத் தேய்த்துக் கொண்டிருந்துவிட்டு எம்ஜிஆர் கை காட்டியவர்களை எல்லாம் பிடித்து பிரமோஷன் வாங்கிக்கொள்ளும் வேடம்தான்.

படத்தில் சிறுத்தை-காட்டுப்பன்றி சண்டையெல்லாம் உண்டு. எம்ஜிஆரின் இடத்துக்கு செல்ல பிரைவேட்டாக ஒரு விஞ்ச் வசதி இருக்கும். அந்த சக்கரத்தை சுற்ற முழுநேர பணியாளர்கள் சாப்பிட்டு உடற்பயிற்சி செய்து தயாராக இருப்பார்கள். எம்ஜிஆர் வாரத்துக்கு ஒருமுறை வந்து செல்வார் என்று வைத்துக் கொண்டால் அவர்களின் வேலைப்பளு சில அரசு அலுவலகங்களை நினைவூட்டுகிறது. கதையில் யாருக்காவது பொழுது போகவில்லை என்றால் பானுமதியைக் கூப்பிட்டு நடனமாடச் சொல்லி விடுகிறார்கள்.

முதன் முதலாக குடியரசுத் தலைவர் விருது பெற்ற தமிழ்படம், சிங்களம் உட்பட ஆறு மொழிகளில் மீளுருவாக்கம் செய்யப்பட்ட முதல் படம் (இந்தியில் திலீப் குமார்) என்று பல பெருமைகளைப் பெற்றது மலைக் கள்ளன்.

Richardsof
22nd July 2018, 11:04 AM
எம்.ஜி.ஆருடன் பானுமதி நடித்த படங்கள் மாபெரும் வெற்றி பெற்று வெள்ளி விழா கொண்டாடின. எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படம் 'ராஜகுமாரி' (1947). அதன் பிறகு சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். என்றாலும் அவருடைய முழுத்திறமையையும் வெளிப்படுத்தி வசூல் மன்னன் என்ற பெயரை வாங்கித்தந்த படம் 'மலைக்கள்ளன்'.

கோவை பட்சிராஜா ஸ்டூடியோவில், ஸ்ரீராமுலு நாயுடு டைரக்ஷனில் உருவான இப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி பானுமதி. 22-7-1954-ல் வெளிவந்த இந்தப்படம், மகத்தான வெற்றி பெற்று, வசூலைக் குவித்தது. எம்.ஜி.ஆரும், பானுமதியும் இணைந்து நடிப்பதற்கு, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது.

எனவே 'மதுரை வீரன்', 'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்', 'தாய்க்குப்பின் தாரம்' முதலான படங்களில் எம்.ஜி.ஆரும் சேர்ந்து நடித்தார்கள். எம்.ஜி.ஆர். சொந்தமாகத் தயாரித்து டைரக்ட் செய்த 'நாடோடி மன்னன்' படத்திலும், பானுமதிதான் கதாநாயகி. கலைஞர் கருணாநிதி வசனம் எழுத, மேகலா பிக்சர்ஸ் தயாரித்த 'காஞ்சித் தலைவன்' படத்தில் எம்.ஜி.ஆரும், பானுமதியும் இணைந்து நடித்தனர்.

Richardsof
22nd July 2018, 11:07 AM
திருப்புமுனை திரைப்படங்கள்

எம். ஜி. ராமச்சந்திரன் நடித்து இரண்டே படங்கள்தான் 1954ம் ஆண்டு வெளியானது. ஒன்று சிவாஜிகணேசனுடன் சேர்ந்து நடித்த ""கூண்டுக்களி'', அடுத்தது பட்சிராஜா ஸ்டுடியோ தயாரித்த ""மலைக்கள்ளன்''.

இதில் "மலைக்கள்ளன்' மாபெரும் வெற்றிப்படமானது. அத்துடன் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதும் கிடைக்கப் பெற்றது. தேசிய விருது பெற்ற முதல் தமிழ்ப் படம் இது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆகிய ஆறு மொழிகளில் வெளிவந்து வசூலில் சாதனை படைத்த படமும் இதுதான்.

1952ல் ஆண்டில் எம்.ஜி.ஆர். நடித்த "என் தங்கை', அந்தமான் காதலி வெளிவந்தன. எம்.ஜி.ஆர். சினிமா வாழ்க்கை ஒரு நிரந்தரமான அடிதளம் அமைந்த வேளையில்தான் 1954 "மலைக்கள்ளன்' படம் வெளிவந்தது.
கதைச்சுருக்கம்
"ராபின் ஹுட்'டைப் போல ஏழைகளின் தோழனான மலைக்கள்ளன் காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்தான். அவன் கள்வன் அல்ல போலீஸ்காரர்களும், அவனுக்கு வேண்டாதவர்களும், அந்த நல்லவனுக்குக் கொடுத்த பட்டம் தான் அது. அவனோ ஏழைகளுக்கு உதவினான், பொதுநலத் தொண்டு புரிந்தான். அவன் மலைக்கள்ளனாக மாறுவதற்கு அவன் குடும்பத்திற்குள் நடந்த நிகழ்ச்சிகளே காரணம். பச்சோந்திகளுக்குப் பாடம் புகட்டினான். வஞ்சகர்களை வீழ்த்தி வெற்றி கண்டான்.

விமர்சன சுருக்கம்

மலைக்கள்ளன் படத்தில் எம்ஜிஆர் முஸ்லிம் பெரியவராக வயதான தாத்தாவாக, பலவிதமான மாறுவேடங்களில் தோன்றி பொருத்தமாகப் பேசி திறமையை வெளிபடுத்திப் பாராட்டு பெற்றார். அத்துடன் சண்டைக் காட்சிகளில் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி, ரசிகர்களின் பாராட்டையும், கைதட்டல்களையும் வாரிக் குவித்தார்.

படத்தில் இடம்பெற்ற பாடல்கள், மக்களுக்கு ஒரு புதிய எழுச்சியை கொடுத்தது. ""எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே, தமிழன் என்றொரு இனம் உண்டு, இன்பம் தாராய் போன்ற இனிமையான பாடல்கள் செவிக்கினிமையாக அமைந்திருந்தன. ஏற்கனவே நாவலாக வெளிவந்து பிரபலமான மலைக்கள்ளன் கதையை எந்தக் குழப்பமும் இல்லாமல் திரைக்கதை அமைத்து இருந்தார் டைரக்டர் ஸ்ரீராமுலு நாயுடு. கருணாநிதி வசனங்களில் முத்திரை பதித்திருந்தார்.

கண்டிப்பான போலீஸ் இன்ஸ்பெக்டராக, தனது யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தியிருந்தார் எம்.ஜி. சக்ரபாணி. அவருடன் வரும் ஏட்டு டி.எஸ். துரைராஜ் நகைச்சுவை விருந்து படைத்தார். கதாநாயகியாக நடித்த, பி. பானுமதி தனது இனிமையான பாடல்களாலும் நடிப்பாலும் ரசிகர்களை மகிழ்வித்தார். இந்தப் படத்தின் மாபெரும் வெற்றி எம்.ஜி.ஆரின் வாழ்க்கையை திசை திருப்பி, திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். பாமர மக்களின் மனதில் எளிதாக எம்.ஜி.ஆர். இடம்பிடித்து மக்கள் திலகமாக இடம்பிடிக்க காரணமாக அமைந்தது மலைக்கள்ளன் படம்தான்.

ஆறு மொழிகளில் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்ற படம் - "மலைக்கள்ளன்'. ரசிகர்கள் மத்தியில், சிவாஜி ரசிகர்கள், எம்.ஜி.ஆர். ரசிகர்கள் என்று கட்சி அடிப்படையில் உருவாகி இரு துருவங்களாக்கப்பட்டது இந்த படம் வெளியான பிறகுதான். அப்போது எம்.ஜி.ஆர். தூய்மையான கதர் ஆடை, கழுத்தில் துளசிமாலையுடன் காட்சியளிப்பார். சிவாஜி தி.மு.க. நடிகர் என்று முத்திரை குத்தப்பட்டிருந்தார்.

நடிக, நடிகையர்: எம்.ஜி. ராமச்சந்திரன், எம்.ஜி. சக்ரபாணி, டி.எஸ். துரைராஜ், பாலசுரமணியம், சகாதேவன், துரைசாமி, பி. பானுமதி, பி.எஸ். ஞானம், சுரபி பாலசரஸ்வதி, சந்தியா மற்றும் பலர்.
கதை: நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை
வசனம்: மு. கருணாநிதி
இசை: சுப்பையா நாயுடு
தயாரிப்பு: பட்சிராஜா
டைரக்ஷன் : எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு.

Richardsof
22nd July 2018, 11:07 AM
Malaikallan 1954

RANDOR GUY

M. G. Ramachandran, P. Bhanumathi, M. G. Chakrapani, T. S. Durairaj, Sriram, D. Balasubramaniam, P. S. Gnanam, E. R. Sahadevan and Sai-Subbulakshmi (dance)

runaway hit Malaikallan
The crowning glory of the Coimbatore movie mogul S. M. Sriramulu Naidu's career was Malaikallan (1954). The film established M. G. Ramachandran as a box office hero. Besides Tamil, Naidu forged ahead to produce and direct Malaikallan in Telugu ( Aggi Ramudu), Malayalam ( Taskara Veeran), Kannada ( Bettadha Kalla), Hindi ( Azad) and Sinhala ( Soorasena).

The Hindi version Azad (the first film of Dilip Kumar as a swashbuckling hero, cast opposite Meena Kumari) proved a raving hit! (Years later, Naidu told this writer that he had dreams of making it in English but wiser counsel prevailed to his benefit!)

Malaikallan was written by the famous Tamil scholar and poet Namakkal Ramalingam Pillai, inspired by “Mark of Zorro” and “Robin Hood.” The screenplay and dialogue were by Mu. Karunanidhi. S. M. Subbaiah Naidu scored the music, while the lyrics were penned by Namakkal Ramalingam Pillai and Thanjai Ramaiah Das. Bhanumathi played the female lead well supported by D. Balasubramaniam, M. G. Chakrapani, T. S. Durairaj and P. S. Gnanam. The film won a Central Government award. The music also contributed to its success, with one of the songs, a satire on social conditions, ‘Ethanai kaalam thaan ematruvaar indha naatiley', becoming a hit. This song rendered off-screen by T. M. Soundararajan and filmed on MGR riding a horse set the trend for many future MGR movies which had similar thematic songs sung by TMS.

All the versions of Malaikallan were box office hits and the best of them was Azad, the Hindi version. This film broke all box office records and proved to be a moneyspinner. Naidu was a no-nonsense person who never tolerated indiscipline and believed in calling a spade a spade. While launching Azad (1955), he approached Dilip to play the lead. The tragedy king of Hindi Cinema was amused that a Tamil film producer based in Coimbatore, whom he had never heard of before, should have come all the way to Bombay to engage him to play a swashbuckling role in his first Hindi film production! Naidu, who would never take ‘no' for an answer, persuaded Dilip to work in the Hindi version. He also brought on board Meena Kumari which proved to be one of the memorable movies of Hindi Cinema. During that period, there were no star-hotels in Coimbatore, and Naidu took Dilip around many bungalows in the city and the rooms in Pakshiraja Studios. Dilip chose to stay in the studio and so did Meena Kumari — something incredible today.

The pleasing music score by C. Ramchandra was also a major attraction with lyrics by Rajendra Krishan. Songs such as ‘Radha na bole re', ‘Apalam chapalam' and ‘Kitna haseen hai mausam' were hits. Naidu used some of these tunes in some versions of the film.

Not many are aware that the multi-talented Tamil filmmaker A. P. Nagarajan was cast as a police inspector wearing a turban and all. However, after shooting some scenes with him, Naidu for some reason chose to replace him with M. G. Chakrapani.

Even after half a century and more, Malaikallan, one of the most memorable movies of Tamil Cinema, sustains interest and is often revived on television.

Remembered for: the popular storyline, tuneful music, excellent onscreen narration, and good performances by MGR and Bhanumathi.

randor guy- the hindu

Richardsof
22nd July 2018, 11:16 AM
முதல் முறையாக எம்.ஜி.ஆர். பல மாறுவேடங்களில் வந்து அசத்தினார். அவருடைய முழுத்திறமையும் இந்தப் படத்தில் பிரகாசித்தது.

எம்.ஜி.சக்ரபாணி, டி.எஸ்.துரைராஜ், ஈ.ஆர்.சகாதேவன், சந்தியா, சுரபி பாலசரஸ்வதி ஆகியோரும் நடித்தனர். மாம்பழ நாயுடு என்ற போலீஸ்காரர் கதாபாத்திரம் ஏற்ற டி.எஸ்.துரைராஜ், ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.

பாடல்களை நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, கு.மா.பாலசுப்பிரமணியம், தஞ்சை ராமையாதாஸ், மக்களன்பன் ஆகியோர் எழுதியிருந்தனர். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்தார்.

பானுமதியை குதிரையில் அமரச் செய்து எம்.ஜி.ஆர். அழைத்துச் செல்லும் காட்சியில் இடம் பெற்ற "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்ற பாடலை கணீர் குரலில் டி.எம்.சவுந்தரராஜன் பாட, அது சூப்பர் ஹிட்டாக அமைந்தது. எம்.ஜி.ஆருக்கு டி.எம்.எஸ். குரல் மிகவும் பொருந்தியிருந்ததால், தொடர்ந்து அவர் எம்.ஜி.ஆருக்கு பாடலானார்.

இவ்வகையில், மற்ற எந்தப் படத்துக்கும் கிடைக்காத தனிச்சிறப்பை "மலைக்கள்ளன்" பெற்றது.

Richardsof
22nd July 2018, 11:17 AM
http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/http://i59.tinypic.com/10eocp0.jpg

Richardsof
22nd July 2018, 11:18 AM
http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/http://i58.tinypic.com/2m5klrl.jpg

Richardsof
23rd July 2018, 09:31 AM
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சினிமாவிலும் அரசியலிலும் எதிர்பார்த்த வெற்றிகளை பெற முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் அவரை சுற்றி இருந்த ஜால்ராக்களும் சிவாஜி ரசிக மன்றங்களும் தான் என்பது நாடறிந்த விஷயம் . சிவாஜிக்கு தவறான தகவல்களை சொல்லி ஏமாத்தினார்கள் .சிவாஜியும் இந்த பிள்ளைகளை நம்பியே காலத்தை தள்ளினார் . சிவாஜிக்கு விசுவாசம் இல்லாமல் சிவாஜி மன்றங்கள் செய்த பித்தலாட்டங்கள் ஏராளம் . பட்டியல் நீளும் . சிவாஜி ஆதரவு பத்திரிகைகள் தமிழ்நாட்டில் மதி ஒளி மற்றும் இலங்கை யில் சில பத்திரிகைகள் சிவாஜி புகழ் பாடுவதாக கூறிக்கொண்டு எம்ஜிஆரை தரமின்றி அநாகரீகமாக நோட்டீஸ் அடித்து தங்களை அறிமுகப்படுத்தி சிவாஜிக்கு சிறுமை சேர்த்தார்கள் பொய்யான தகவல்களையும் வசூல் பட்டியலையும் அச்சிட்டு தங்களை தாங்களே ஏமாற்றி கொண்டார்கள் .

விளைவு ?

சிவாஜி பல தோல்வி படங்களை சந்திக்க ஆராம்பித்தார் .
சிவாஜி மன்றத்து பிள்ளைகள் ஆதரவு தராமல் சிவாஜிக்கு மோசம் செய்தார்கள்
உழைப்பு என்பதையே மறந்தவர்கள்
மன உளைச்சலும் எரிச்சலும் நிரம்பியவர்கள்

எம்ஜிஆர் ரசிகர்கள் எம்ஜிஆர் மீது உயிரையே வைத்து அவருடைய தொடர் வெற்றிகளுக்கு உண்மையாக உழைத்த வெற்றி வீரர்கள் .
1957 முதல் இன்று வரை 60 ஆண்டுகளாக களப்பணியில் வெற்றி மேல் வெற்றி கண்டவர்கள் . இன்னும் பெறப்போகிறவர்கள் .
சிவா ஆனந்தம் பெயருக்குத்தான் . .சிந்திக்க தெரியாதவனுக்கு ஆனந்தம் என்றுமே கிடைக்காது .

Gambler_whify
23rd July 2018, 01:16 PM
இப்பவாவது ரோசம் வந்ததே..

Gambler_whify
23rd July 2018, 01:18 PM
http://i63.tinypic.com/15h29eb.jpg

Gambler_whify
23rd July 2018, 01:19 PM
http://i66.tinypic.com/168vd5c.jpg

Gambler_whify
23rd July 2018, 01:29 PM
http://i66.tinypic.com/2ijj95j.jpg

Richardsof
23rd July 2018, 02:20 PM
1961 தீபாவளி அன்று வெளிவந்த 2 படங்கள் பற்றி திரு விசு இயக்குனர் அளித்த ஒரு பேட்டியில்

சென்னை அண்ணா சாலையில் இருந்த பிளாசா திரை அரங்கில் எம்ஜிஆரின் தாய் சொல்லை தட்டாதே திரைப்படம் வெளிவந்தது .
பாரகன் திரை அரங்கில் சிவாஜியின் கப்பலோட்டிய தமிழன் வெளிவந்தது , முதல் நாள் காலை காட்சிக்கு விசுவும் அவரது நண்பர்களும் பாரகன் அரங்கிற்கு சென்றபோது கூட்டமே இல்லை என்றும் ரசிகர்கள் ஓரளவிற்கு இருந்தார்கள் என்பதை நேரில் பார்த்த பின் எம்ஜிஆரின் படம் வெளிவந்த பிளாசா அரங்கிற்கு சென்று பார்த்த போதுதான் அவர்களுக்கு உண்மை நிலவரம் புரிந்ததுள்ளது . கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டமும் பொதுமக்களும் திரண்டு திருவிழா போல் காட்சி தந்ததை கண்டுள்ளார்கள் . ஆச்சரியமும் வியப்பும் என்னவென்றால் அந்தகூட்டத்தில் வரிசையில் நின்றவர்கள் ஏராளமான கதர் ஆடை அணிந்த காங்கிரஸ் பக்தர்கள் .

இப்போது புரிகிறதா ...?
தாய் சொல்லை தட்டாதே பிரமாண்ட வெற்றி ..1961ல் வசூலில் சாதனை புரிந்த காவியம் .

Richardsof
23rd July 2018, 02:26 PM
[quote=masthaan saheb;1335636]இப்பவாவது ரோசம் வந்ததே

திரு மஸ்தான்

உங்கள் கவனத்தை ஆக்கபூர்வமாக பதிவிடுங்கள் . கிண்டலும் கேலியும் தேவை இல்லை ..மக்கள் திலகம் எம்ஜிஆர் எப்போதும் கண்ணியத்தை கடைபிடித்தார் . இனி மேல் தவறு செய்யாதீர்கள் .
வாழ்த்துக்கள் .

Gambler_whify
23rd July 2018, 06:20 PM
நன்றி எஸ்வி அய்யா. மக்கள் திலகத்தை தனிப்பட்ட முறையில் தாக்கி பதிவு போடுகிறார்கள் . ரத்தம் கொதிக்கிறது.
இதற்கு எல்லாம் இனி விளக்கம் சொல்லி பயான் இல்லை.

நாம்பளும் பதிவுகள் போடவேண்டிதான்.

ரவிசந்திரன் பதிவுகளை நீக்காததற்கு உங்களுக்கும் நன்றி. அங்கெ போயி பாருங்கள். அவர்கள் நீக்கினால் நாம்பளும் நீக்கலாம். அதுவரை இருக்கட்டும். அவர்கள் நெறியாளருக்கு என்ன விதியோ அதுவே தான் உங்களுக்கும் விதி. அவர்களுக்கு இல்லாத பெருந்தன்மை நம்பளுக்கு மட்டும் தேவை இல்லை. அவர்கள் புரட்சி தலைவரை தனிப்படட முறையில் தாக்கி உள்ள பதிவுகளை நீக்காத வரையில் தலைவரின் பக்தரான நீங்களும் நீக்காதீர்கள் ரவிச்சந்திரன். நீங்களும் உண்மையான புரட்சி தலைவர் பக்தர். நன்றி.

Gambler_whify
23rd July 2018, 06:32 PM
http://i65.tinypic.com/x364wl.jpg

Gambler_whify
23rd July 2018, 06:34 PM
http://i67.tinypic.com/v6ptgk.jpg

Gambler_whify
23rd July 2018, 06:36 PM
http://i68.tinypic.com/2vhu068.jpg

Gambler_whify
23rd July 2018, 06:38 PM
http://i63.tinypic.com/sn2p9x.jpg

Richardsof
23rd July 2018, 08:07 PM
இறைவா உன் மாளிகையில்
ஒரு மன்னரும் அவரது அமைச்சரும் நகர சோதனை நிமித்தம் செல்கையில் சற்றுத் தொலைவில் இறந்தவர் ஒருவரின் சடலம் இறுதிச் சடங்குக்காக எடுத்துச் செல்லப்படுவதைக் கண்டனர். மன்னர் அமைச்சரிடம் அங்கே சென்று விவரம் அறிந்துவரக் கூறினார். அமைச்சரும் அங்கு சென்று இறந்தவர் குறித்த விவரத்துடன் திரும்பினார். அவரிடம் மன்னர் கேட்டார், "இறந்தவர் எங்கே செல்கிறார்? சொர்க்கத்துக்கா நரகத்துக்கா?" என்று. அவர் சொர்க்கத்துக்குச் செல்வதாக அமைச்சர் கூறினாராம். "ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்?" என்று மன்னர் கேட்டதற்கு அமைச்சர் கூறினாராம், "இறந்தவர் தாம் வாழ்ந்த காலம் முழுவதும் தன் உற்றார், உறவினர், சுற்றத்தார் மற்றும் ஊரார் யாவருக்கும் பேருதவி புரிந்து வந்தார். அவர் இழப்பினால் யாவரும் மிகவும் கவலை கொண்டுள்ளனர். இனி யார்
தங்களைத் துன்பங்களிலிருந்து காப்பார் என மன வருத்தம் அடைந்துள்ளனர்." என்றார்.

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-001/panam-padaiththavan/kan-pona-

pokkile.php

நம் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தம் வாழ்நாள் உள்ளளவும் மக்கள் நலமாக வாழ உண்மையாக உழைத்தவர். தன்னிடமுள்ள செல்வங்களனைத்தையும் பிறர் நலனுக்கென ஈந்தவர். அவர் சிறுநீரகக் கோளாறினால் அவதியுற்று சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவ மனையில் சில நாட்கள் சிகிச்சை பெற்ற பின் அப்பொழுதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அனைத்து மருத்துவ வசதிகளுடன் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்த ஒரு விமானத்தில் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள மருத்துவமனையொன்றில் சிறுநீரக அறுவை
சிகிச்சை பெற்றுவந்தார்.

அந்த சமயத்தில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களும் சதாசர்வகாலமும் எம்ஜிஆர் நலம் பெற்றுத் திரும்ப வேண்டுமெனத் தொடர்ந்து பிரார்த்தனை செய்தனர். தெருவெங்கும் தினம்தோறும் இதுகுறித்த பிரார்த்தனைப் பாடல் தொடர்ந்து ஒலிபரப்பப் பட்டது. உலகிலேயே இன்றுவரை வேறு யாருக்காகவும் இத்தகைய ஒருமனதான பிரார்த்தனை நடந்ததில்லை எனக் கூறலாம். மக்களின் பிரார்த்தனையின் பலனாகவும், அவரது சகோதரர் எம்.ஜி. சக்கரபாணியின் மகள் தனது சிறுநீரகம் ஒன்றை அவருக்கு தானமாக அளித்ததாலும் எம்ஜிஆர் உடல் நலம் பெற்று மீண்டுவந்தார்.

இதற்கிடையே நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மருத்துவமனியில் இருந்தவாறே போட்டியிற்று வெற்றியும் பெற்ற அவர் தாயகம் திரும்பியதும் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுச் சில காலம் இருந்த பின்னர் காலமானார்.

உள்ளத்தை உருகச் செய்யும் அந்தப் பாடல் இதோ:

திரைப்படம்: ஓளி விளக்கு
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1968

இறைவா உன் மாளிகையில்

இறைவா உன் மாளிகையில்
எத்தனையோ மணிவிளக்கு
தலைவா உன் காலடியில்
என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு
நம்பிக்கையின் ஒளிவிளக்கு

ஆண்டவனே உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன் இந்த
ஓருயிரை நீ வாழவைக்க இன்று
உன்னிடம் கையேந்தினேன் முருகையா

ஆண்டவனே உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன் இந்த
ஓருயிரை நீ வாழவைக்க இன்று
உன்னிடம் கையேந்தினேன்

பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்
உள்ளமதில் உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால் மண்ணூலகம் என்னாகும்?

ஆண்டவனே உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன் இந்த
ஓருயிரை நீ வாழவைக்க இன்று
உன்னிடம் கையேந்தினேன் முருகையா

மேகங்கள் கண் கலங்கும் மின்னல் வந்து துடிதுடிக்கும்
வானகமே உருகாதோ வள்ளல் முகம் பாராமல்
உன்னுடனே வருகின்றேன் என்னுயிரைத் தருகின்றேன்
மன்னனுயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு
இறைவா நீ ஆணையிடு ஆணையிடு
COURTESY
Posted by A K Rajagopalan

Richardsof
23rd July 2018, 08:15 PM
போயும் போயும் மனிதனுக்கிந்த
இன்று தேதி 13. ஆங்கிலேயர்களின் நம்பிக்கைப்படி 13 ஒரு அதிர்ஷ்டமில்லாத எண் (அன்லக்கி நம்பர்). ஆனால் இதே எண் தமிழர்களுக்கு அதிர்ஷடத்தைக் கொண்டு வந்துள்ளதென எண்ணுமளவிற்கு இன்று வெளியிடப்பட்ட மாநிலத் தேர்தல் முடிவுகள் மக்கள் விரோதமான அரசியல்வாதிகளின்ன் போக்கிற்கு பதிலடி கொடுத்துள்ளதைக் காட்டுகின்றன.

சிலர் பிறரது தவறுகளால் விளையும் பலன்களைக் கண்டு தங்களைத் திருத்திக் கொள்வர். இன்னும் சிலம் தமது தவறுகளால் விளையும் பலன்களைக் கண்டு திருந்துவர். வேறு சிலர் எதனைக் கண்டும் திருந்த மாட்டார்கள். இத்தகைய திருந்தாத மனிதர்களையே திரும்பத் திரும்பத் தங்களது தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கும் வழக்கம் இன்னமும் மாறியதாகத் தெரியவில்லை.

தற்போதைய ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுத்ததவர்கள் சுமார் 45% வாக்காளர்களே. 40% வாக்காளர்கள் பழைய ஆட்சியே தொடர்வதற்கே வாக்களித்துள்ளனர். இந்த நிலை மிகவும் தெளிவாக உணர்த்துவது என்னவெனில் மக்களில் ஒரு சாரார் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்கையில் அவரை நல்லவர் என்று கண்மூடித் தனமாக நம்புவதும், ஒரு சாரார் அனைவருமே தவறு செய்பவர்களே என்று அலட்சிய மனப் பான்மையுடன் வாக்களிக்காதிருப்பதும், ஒரு சாரார் நேர்மையைக் கடைபிடிக்காமல் கையூட்டும் இலவசப் பரிசுகளையும் பெற்றுக்கொண்டு தங்களுக்கு சாதகமாக செயல்படும் தலைவர்களை மட்டுமே தேர்ந்துடுப்பதும், ஒரு சாரார் நாட்டு நடப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளாது தெளிவில்லாத மன நிலையில் யாரோ ஒருவருக்கு வாக்களிப்பதும், பலர் வாக்களிக்காதிருப்பதுமே ஆகும்.

மக்களில் பலர் சமுதாய உணர்வின்றி வாழ்ந்து வருவது இதன் மூலம் தெளிவாகிறது. தன் வாழ்நாள் முழுவதும் பொய்மையே பேசிப் பிறரை என்றும் ஏமாற்றியே வாழ்ந்து வரும் சிலர் அவர்களது குற்றங்கள் ஆதாரபூர்வமாகப் பலரும் அறியும் வண்ணம் வெளீயான பின்னரும் தங்களைக் குற்றமற்றவர்களென்று கூறிக்கொண்டு மீண்டும் மீண்டும் மக்களின் அறியாமையைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து தன் சுயநலனை மட்டுமே பேணி வாழ இடமளிக்கும் இத்தகைய பகுத்தறிவற்ற சமுதாய நிலை மாறி உண்மையைத் தெளிவாக அறிந்து அதன் அடிப்படையில் தம்மை ஆள்வோரைத் தேர்ந்தெடுக்கும் அறிவுபூர்வமான சமுதாய நிலை என்று நம் நாட்டில் மலர்கிறதோ அன்றே மக்கள் நல்வாழ்வு வாழ வழிபிறக்கலாகும். அதுவரை தற்போது நிகழ்ந்துள்ளது போன்ற மாற்றங்கள் எவையும் நிரந்தரமான நற்பலனை ஏற்படுத்துவது நிச்சயமல்ல.

மனிதனை மனிதன் மதிப்பது மட்டுமின்றி மனித மனத்தின் தன்மையை அறிந்து அவ்வறிவின் மூலம் தெளிவான முடிவுகளை மேற்கொள்ளும் தகுதியை என்று மக்கள் அடைகின்றனரோ அன்றே சமுதாயம் வளம் பெறும். பொய் முகங்களை அணிந்து மெய்யன்பர்கள் போல் நாடகமாடும் போலிகளை அடையாளம் காண்பதே மெய்யான பகுத்தறிவாகும்.

போயும் போயும் மனிதனுக்கிந்த

திரைப்படம்: தாய் சொல்லைத் தட்டாதே
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1962

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே இறைவன்
புத்தியைக் கொடுத்தானே அதில்
பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே மனிதன்
பூமியைக் கெடுத்தானே

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே

கண்களிரண்டில் அருளிருக்கும் சொல்லும்
கருத்தினில் ஆயிரம் பொருளிருக்கும்
கண்களிரண்டில் அருளிருக்கும் சொல்லும்
கருத்தினில் ஆயிரம் பொருளிருக்கும்
உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும் அது
உடன் பிறந்தோரையும் கருவறுக்கும்

பாயும் புலியின் கொடுமையை இறைவன்
பார்வையில் வைத்தானே புலியின்
பார்வையில் வைத்தானே இந்தப்
பாழும் மனிதன் குணங்களை மட்டும்
போர்வையில் மறைத்தானே இதயப்
போர்வையில் மறைத்தானே

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே

கைகளைத் தோளில் போடுகிறான் அதைக்
கருணை என்றவன் கூறுகிறான்
கைகளைத் தோளில் போடுகிறான் அதைக்
கருணை என்றவன் கூறுகிறான்
பைகளில் எதையோ தேடுகிறான் கையில்
பட்டதை எடுத்து ஓடுகிறான்

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே இறைவன்
புத்தியைக் கொடுத்தானே அதில்
பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே மனிதன்
பூமியைக் கெடுத்தானே

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே
COURTESY
Posted by A K Rajagopalan

Richardsof
23rd July 2018, 08:17 PM
சீர்மேவு குருபதம்
ஆதிகாலந்தொட்டே மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வசித்து வந்த நிலையில் ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒருவர் தலைமை வகித்து அக்கூட்டத்தினர் அனைவரையும் வழிநடத்திச் செல்வது மரபாக இருந்தது. நாகரீகமடையாத நிலையில் தலைவனாயிருக்க ஒருவரது வலிமை ஒன்றே அடிப்படையாக இருந்த நிலை நாகரீகம் வளர வளர மாறி ஒரு தலைவன் வல்லவனாக இருந்தால் மட்டும் போதாது நல்லவனாகவும் அறிவுள்ளவனாகவும் இருக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. ஆதியில் காடுகளில் மிருகங்களோடு மிருகங்களாக வாழ்ந்த மனிதர்கள் அதன் பின்னர் ஏற்பட்ட அறிவு வளர்ச்சியால் காடுகளில் ஒரு பகுதியை அழித்து நாடுகளை உருவாக்கி சமுதாயங்களாக மிருகங்களிடமிருந்து விலகி வாழத் தலைப்பட்டனர். ஒரு சமுதாயத்தின் தலைவன் அரசனாக அமைக்கப்பெற்று அவனுக்குப் பின்னர் அவனது தலைமுறையினர் பாரம்பரிய முறையில் அரசர்களாக விளங்கும் வகையில் மனித சமுதாயம் வளர்ந்த நிலையில் பல சந்தர்ப்பங்களிலும் வீரத்தில் சிறந்தவரைத் தேர்ந்தெடுக்க வீர விளையாட்டுப் போட்டிகளும் அறிவாளிகளைத் தேர்வு செய்யத் தர்க்கம் முதலிய பல்வித அறிவுப் போட்டிகளும் நடைபெறுவது நடைமுறை ஆனது.

அறிவுப் போட்டிகளில் பங்குபெறுவோரது சமுதாய நோக்கும் தனிமனிதக் கடமைகளும் குறித்த விழிப்புணர்வும் முக்கிய அம்சங்களாகக் கருதப்பட்டன. இத்தகைய அறிவுப் போட்டிகளில் அரச குடும்பத்தினர் மட்டுமின்றி மத, சமூகநல அமைப்புகளில் முனைந்து ஈடுபட்டவர்களும், புலவர்களும் பங்கு பெற்றனர் என்பது பல புராண, இதிகாச சரித்திரக் கதைகள் மற்றும் குறிப்புகளிலிருந்து தெளிவாகிறது. மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவி ஒற்றுமை உணர்வுடன் வாழ்வதும், உண்மையே பேசி, மூத்தோரை மதித்து, சக மனிதர் அனைவரிடமும் விலங்குகள் உட்பட ஏனைய பிற உயிரினங்களிடத்தும் அன்பு செலுத்தி எல்லோருக்கும் நன்மை பயக்கும் விதமான வாழ்வை மேற்கொள்வது ஒவ்வொரு மனிதருக்கும் தலையாய கடமையாக அன்று முதல் இன்று வரையிலும் கருதப்பட்டு வருகிறது.

வரலாற்றில் சொல்லப்பட்ட இத்தகைய அறிவுப்போட்டிகளும் அவற்றின் மூலம் விளங்கும் பலவித செய்திகளும் மக்களால் என்றும் நினைவில் கொள்ளப்பட வேண்டும் எனும் நோக்கத்தில் இத்தகைய அறிவுப் போட்டிகள் பல நாடகங்களிலும் திரைப்படங்களிலும் அமைக்கப்பெற்று அதன் மூலம் அவற்றைக் காணும் ரசிகர்களது அறிவையும் பண்பையும் வளர்க்கப் பயன்பட்டு வருகின்றன.

அத்தகைய அறிவுப் போட்டி ஒன்று புரட்சித் தலைகர் எம்ஜிஆர் அவர்களும் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களும் பங்குபெற்று நடித்த காட்சி ஒன்றில் அவ்விருவரும் தம் கேள்விகளையும் பதில்களையும் இனிய இசையுடன் பாடுவது போன்ற ஒரு பாடல் காட்சியாக சக்கரவர்த்தித் திருமகள் எனும் திரைப்படத்தில் படமாக்கப் பட்டது. என்.எஸ். கிருஷ்ணன் தன் சொந்தக் குரலில் பாட, எம்ஜிஆர் அவர்களுக்கு சீர்காழி கோவிந்த ராஜன் குரல் கொடுக்க மிகவும் கருத்தாழம் மிக்கதாகவும் எத்துணை முறைகள் கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கும் ஆவலைத் தூண்டும் விதத்திலும் இப்பாடல் அமைந்துள்ளது.

சீர்மேவு குருபதம்

திரைப்படம்: சக்கரவர்த்தித் திருமகள்
இயற்றியவர்: கிளௌன் சுந்தரம்
இடை: ஜி. ராமநாதன்
பாடியோர்: என்.எஸ். கிருஷ்ணன், சீர்காழி கோவிந்தராஜன்

சீர்மேவு குருபதம் சிந்தையொடு வாய்க்கினும்
சிரமீது வைத்துப் போற்றி
ஜெகமெலாம் மெச்சச் ஜெயக்கொடி பறக்கவிடும்
தீரப் பிரதாபன் நானே

சங்கத்துப் புலவர் பல தங்கத்தோழா பொற்பதக்கம்
வங்கத்துப் பொன்னாடை பரிசளித்தார்
எனக்கிங்கில்லை இதெனச் சொல்லிக் களித்தார் இந்த
சிங்கத்துக்கு முன்னே ஓடி பங்கப்பட்டு தாரார் நேரர்

ஈரெழுத்துப் பாடி வாரேன் பேரே அதற்கு
ஓரெழுத்துப் பதில் சொல்லிப் பாரேன்

யானையைப் பிடித்து
யானையைப் பிடித்து ஓரு பானைக்குள் அடைத்து வைக்க
ஆத்திரப்படுபவர் போல் அல்லவா உம
தாரம்பக் கவி சொல்லுதே புலவா வீட்டுப்
பூனைக்குட்டி காட்டிலோடி புலியைப் பிடித்துத் தின்னப்
புறப்பட்ட கதை போலே அல்லவா தற்
புகழ்ச்சிப் பாடுகிறாயே புலவா

ஆங்.. அப்புறம் ஓஹோ.. சர்தான்
பூதானம் கன்னிகாதானம் சொர்ணதானம் அன்னதானம்
கோதானம் உண்டு பற்பல தானங்கள் இதற்கு
மேலான தானம் இருந்தால் சொல்லுங்கள்

ஹாய் கேள்விக்குப் பதிலக் கொண்டா டேப்பே
ஒடைச்செறிவேன் ரெண்டா ஒன்னே
ஜெயிச்சுக் காட்டுவேன் முண்டா அப்புறம்
பறக்க விடுவேன் செண்டா
ஜெயக்கொடி ஜெயக்கொடி பறக்குது ஜெயக்கொடி

பதில்.. சொல்றேன்

எத்தனை தானந்தந்தாலும் எந்த லோகம் புகழ்ந்தாலும்
தானத்தில் சிறந்தது நிதானந்தான்
நிதானத்தை இழந்தவர்க்கு ஈனந்தான்

சொல்லிட்டான்! இரு

கோவிலைக் கட்டி வைப்பதெதனாலே? இப்போ
வேலைக்குப் பெருமை உண்டு அதனாலே

ஹஹங் ஹங் சர்தான் ம்

அன்ன சத்திரம் இருப்பதெதனாலே பல
திண்ணை தூங்கிப் பசங்கள் இருப்பதாலே எப்படி? ஹங் ஹங்

பரதேசியாய்த் திரிவதெதனாலெ?
ஹங் அவன் பத்து வீட்டு ஆங் ஆஆங் சரி வேணாம்
அவன் பத்து வீட்டு சோறு ருசி கண்டதாலே

தம்பி இங்கே கவனி

காரிருள் சூழுவது எவ்விடத்திலே? தம்பி
காரிருள் சூழுவது எவ்விடத்திலே?
கற்றறிவில்லாத மூடர் நெஞ்சத்திலே

சொல்லிப் புட்டியே!

புகையும் நெருப்பில்லாமல் எரிவதெது?
புகையும் நெருப்பும் இல்லாம அது எப்படி எரியும்?
நாஞ்சொல்லட்டுமா? சொல்லு
புகையும் நெருப்பில்லாமல் எரிவதெது?
பசித்து வாடும் மக்கள் வயிறு அது

சர்தான் சர்தான் சர்தான்

உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?
கத்தி இல்லே கோடாலி இல்லே
ஈட்டி ம்ஹ்ம் ஆங் கடப்பாரை இல்லே
அதுவும் இல்லையா? அப்புறம்.. பயங்கரமான ஆயுதம்
அக்கினி திராவகமோ? அது ஆயுதம் இல்லையே
சரி தெரியமாட்டேங்குதே அட நீயே சொல்லப்பா

உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?
நிலைகெட்டுப் போன நயவஞ்சகரின் நாக்குத் தான் அது ஆஹாஹா!
நிலைகெட்டுப் போன நயவஞ்சகரின் நாக்குத் தான் அது
COURTESY
Posted by A K Rajagopalan

Richardsof
23rd July 2018, 08:18 PM
நீங்க நல்லாயிருக்கோணும்
தமிழ்த் திரை வரலாற்றிலும் தமிழக அரசியல் வரலாற்றிலும் என்றும் அழியா இடம்பெற்ற மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் எனும் இயற்பெயர் கொண்ட ஒரு உன்னதமான மனிதர் எம்.ஜி.ஆர். இவர் நடித்த திரைப்படங்கள் யாவும் சமுதாய நோக்குடன் தயாரிக்கப்பட்டு தமிழ்த் திரை ரசிகர்களுக்கு என்றும் இனிய விருந்தாக அமைந்தன என்பதை யாரும் மறுக்க இயலாது. தனது இளம் வயதிலேயே நாடகத்துறையில் புகுந்து அதன் வழியாகத் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்த இவர் நாளடைவில் தனது கடின உழைப்பாலும் திறமையாலும் வளர்ந்து தமிழ்த் திரையுலக நாயகர்களுள் முதலிடத்தைப் பெற்று, அதன் பின்னர் தன் வாழ்நாள் உள்ளளவும் அந்த முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்ட பெருமைக்குரியவர். தான் ஈட்டிய பொருளில் குறிப்பிடத்தக்க ஒரு பகுதியை ஏழை எளிய மக்களின் சமுதாய நலனுக்காகத் தொடர்ந்து செலவிட்டு வந்தவர் எம்.ஜி.ஆர். இவ்வாறு மக்களின் மேல் மிகுந்த அக்கரை கொண்டு விளங்கியமையால் அவருக்கு "மக்கள் திலகம்" எனும் பட்டத்தை வழங்கினார் புகழ்பெற்ற எழுத்தாளர் தமிழ்வாணன்.

வறியார்க்கொன்றீவதே ஈகை மற்றெல்லாம்
குறியெதிர்ப்பை நீரதுடைத்து

எனும் குறளின் வழி நின்று தன் வாழ்நாள் உள்ளளவும் வறுமையில் வாடும் மக்களுக்கு வாரி வழங்கிய கலியுக வள்ளல் எம்.ஜி.ஆர். இவரது கருணை உள்ளம் கண்டு வியந்து திருமுருக கிருபானந்த வாரியார் இவருக்கு இட்ட பெயர் "பொன்மனச் செம்மல்" என்பதாகும்.

1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் 1967ஆம் ஆண்டுவரை நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியே ஆட்சியைப் பிடித்து வந்தது. தமிழகத்தில் காங்கிரஸ் தவிரப் பிற கட்சிகள் 1967 வரையிலும் மிகவும் பலவீனமான நிலையிலேயே தொடர்ந்து இருந்து வந்தன. வெற்றி எளிதில் கிடைத்து வந்த மமதையால் காங்கிரசார் மக்கள் நலனில் போதிய அக்கரை செலுத்தத் தவறியதால் விலைவாசி உயர்வு மற்றும் சாலை வசதிகள் போன்ற பொதுப் பணிகள் நடைபெறாமை முதலிய குறைபாடுகள் மலிந்து வந்தன.

அந்த நிலையில் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்து பின்னர் சுதந்திரா கட்சியைத் தொடங்கி அதன் தலைவராக இருந்த மூதறிஞர் ராஜாஜியின் ஆலோசனையில் இந்திய அரசியலில் முதன்முதலாக திராவிட முன்னேற்றக் கழகம், கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், ஃபார்வார்டு பிளாக், சுதந்திரா கட்சி ஆகிய எதிர்க் கட்சிகள் ஒன்று திரண்டு கூட்டணியமைத்து 1967ஆம் ஆண்டு தமிழகத்தின் சட்டசபைத் தேர்தலில் பேரறிஞர் அண்ணா அவர்களது தலைமையில் போட்டியிட்டு மாபெரும் வெற்றியடைந்தனர். அறிஞர் அண்ணா தமிழக முதலமைச்சராக மிகக்குறுகிய காலமே பதவிவகித்த பின்னர் தொண்டைப் புற்று நோயால் மரணமடைந்தார். அதன் பின்னர் முதலமைச்சர் பொறுப்பேற்ற கலைஞர் கருணாநிதி கட்சியிலும் ஆட்சியிலும் முறையான கணக்கு வழக்கு வைக்கத் தவறியதால் அவரிடம் கணக்குக் கேட்டார் எம்.ஜி.ஆர். இதனால் எம்ஜியார் உடனடியாக திராவிட முன்னேற்றக் கழகத்தினின்றும் வெளியேற்றப்பட்ட பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கி திமுகவைத் தோற்கடித்து ஆட்சியைப் பிடித்தார். எம்ஜிஆர் இருந்தவரையிலும் அவரை எவராலும் அசைக்க முடியவில்லை.

அறிஞர் அண்ணாவின் இதயக்கனி என்று அனைவராலும் புகழப்பெற்ற எம்ஜிஆர் சத்துணவுத் திட்டம், இலவச வேட்டி சேலை திட்டம், வறட்சிக் காலத்தில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குகின்ற திட்டம்.முதலிய திட்டங்களின் மூலம் தமிழகத்தில் பொருளாதார நிலையில் நலிந்த மக்களுக்குப் பேருதவி புரிந்து வந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் பிற அமைச்சர்கள் அனைவரும் அவரது கட்டளைக்குக் கீழ்ப்படிந்தே என்றும் நடக்கும்படியான ஒரு கட்டுப்பாடு இருந்ததால் குறிப்பிடத்தக்க பெரும் ஊழல்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கப்பட்டது.

இன்று தமிழகம் உள்ள நிலைமை நான் சொல்லாமலே அனைவரும் அறிவர். வேலியே பயிரை மேய்வது போல் மக்களைக் காப்பதாக மார்தட்டிப் பேசியே மக்களைச் சுரண்டி வாழும் மந்திரிகளும். காமராஜர் ஆட்சியிலும் அதனைத் தொடர்ந்து சில ஆண்டுகளும் இலவசமாக இருந்த கல்வித்துறையைத் தனியாருக்கு விற்று அதன் பின்னர் கல்விக் கட்டணம் லட்சக்கணக்கில் உயர்ந்த நிலையில் தங்கள் பெயரிலும் தங்கள் பினாமி பெயரிலும் பொறியியற் கல்லூரிகளும் மருத்துவக்கல்லூரிகளும் ஏற்படுத்தி மக்களை மொட்டையடித்துப் பெரும் பொருள் சேர்க்கும் அரசியல்வாதிகளும் தமிழகத்தையும் நம் பாரத நாட்டையும் ஆளும் இழிநிலை நிலவுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் எம்ஜிஆர் அன்று நடத்திய நல்லாட்சியை மீண்டும் தருவதாக அவரது வழித் தோன்றல்கள் வாக்குறிதி தருகின்றனர். எம்ஜிஆர் அவர்களின் மறைவுக்குப் பின் இதன் முன்னர் பலமுறை இந்த வழித் தோன்றல்கள் ஆட்சியில் இருந்தபோதிலும் மக்கள் நலனில் போதிய அக்கரை செலுத்தியதாகத் தெரியவில்லை. ஆயினும் இவர்கள் செய்ததாகக் கருதப்படும் தவறுகள் இன்று ஆட்சியிலுள்ளோர் அடிக்கும் பகல் கொள்ளைக்கு முன்னர் ஒரு தூசளவேயாகும். நம் துரதிருஷ்டவசமாக இந்தியத் திருநாட்டின் சட்டதிட்டங்கள் முறையாக வகுக்கப்படாமல் நேர்மையானவர் யாரும் அரசியலுக்கு வந்து தேர்தல்களில் வெற்றிபெறுதல் சாத்தியமில்லாத நிலையே தொடர்ந்து நிலவுவதால் தற்பொழுது உள்ள அரசியல்வாதிகளில் யாரும் மிகவும் நேர்மையாளர் என்று சொல்ல இயலாது.

இருப்பினும் இருப்பவர்களில் குறைவான தீமையைத் தருபவர்களையே மக்கள் தேர்ந்தெடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் வேறு வழியில்லை. எம்ஜிஆர் அவர்களை மனதில் நிறுத்தி அவரது வழித்தோன்றல்கள் இனியாகிலும் எம்ஜிஆர் அவர்களது வழியில் உண்மையாக நின்று மக்களுக்காக உழைக்க வேண்டுமென வேண்டி நம் ஜனநாயகக் கடமையைத் தவறாமல் நிறைவேற்றுவோம். தேர்தலில் தவறாது வாக்களிப்போம். தீயவர்களை அகற்றி நல்லவர்களை நாற்காலிகலில் அமர்த்துவோம். அவ்வாறு நல்லவர்கள் எனக் கருதி நாம் தேர்ந்தெடுத்துப் பதவியில் அமர்த்துபவர்கள் தவறு செய்தால் அவர்களுக்குத் தக்க தண்டனை தருவோம்.

நீங்க நல்லாயிருக்கோணும்

திரைப்படம்: இதயக்கனி
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ். ஜானகி
ஆண்டு: 1975

தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர்
கன்னடத்துக் குடகுமலைக் கனிவயிற்றில் கருவாகி
தலைக்காவிரி என்னும் தாதியிடம் உருவாகி
ஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க சிவசமுத்திர
நீர்வீழ்ச்சி எனும் பேரில் நீண்ட வரலாறாய்

வண்ணம் பாடியொரு வளர்த்தென்றல் தாலாட்ட
கண்ணம்பாடி அணைகடந்து ஆடுதாண்டும் காவிரிப்பேர் பெற்று
அகண்ட காவிரியாய்ப் பின் நடந்து
கல்லணையில் கொள்ளிடத்தில் காணும் இடமெல்லாம்
தாவிப் பெருகி வந்து தஞ்சை வளநாட்டைத்
தாயாகிக் காப்பவளாம் தனிக்கருணை காவிரிபோல்
செல்லும் இடமெல்லாம் சீர் பெருக்கித் தேர் நிறுத்தி
கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும்
பிள்ளையென நாளும் பேசவந்த கண்மணியே
வள்ளலே எங்கள் வாழ்வே இதயக் கனி
எங்கள் இதயக் கனி இதயக் கனி

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க
நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே
என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க
நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாடெங்கும் இல்லாமை இல்லையென்றாக

பாடுபட்டுச் சேர்த்த பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம்
வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம் நாம்
பாடுபட்டு்ச் சேர்த்த பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம்
வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம்
பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை
சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை
பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை
சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை
அமைதி என்றும் இல்லை

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது மனிதன்
காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது
காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது மனிதன்
காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது
பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே
பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே உலகில்
பிரிவு மாறி ஒருமை வந்தால் அமைதி நிலவுமே
அமைதி நிலவுமே

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

நதியைப் போல நாமும் நடந்து பயன் தர வேண்டும்
கடலைப் போலே விரிந்த இதயம் இருந்திட வேண்டும்
வானம் போலப் பிறருக்காக அழுதிட வேண்டும்
வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிட வேண்டும்
விளங்கிட வேண்டும்

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
COURTESY
Posted by A K Rajagopalan

oygateedat
23rd July 2018, 11:13 PM
திரு.r.m.வீரப்பன் அவர்கள் அளித்த பேட்டியில் இருந்து:

Mgr முதலமைச்சராக இருந்தபொழுது, ஒருநாள் நான் ராமாவரம் தோட்டத்திற்கு போயிருந்தேன்.அப்போது
ஒரு பழைய நாடக நடிகர் அங்கு வந்திருந்தார்.

அவரிடம் என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள?'

என்று கேட்டேன்அவர் தயங்கித் தயங்கி 'குடும்பமே பட்டினி..ஒன்றும் முடியவில்லை.நான் சின்னவரோட நாடகத்தில நடிச்சிருக்கேன் ஏதாவது உதவி கேட்கலாம்னு வந்திருக்கேன் என்றார்!

சரி உட்காருங்க எம்.ஜி.ஆர் வெளிய
வந்ததும் கேளுங்க..செய்வார்' என்றேன்.

சிறிது நேரம் கழித்து எம்.ஜி.ஆர் வெளியே வந்தார். தூரத்தில் நின்று
அந்த நாடக நடிகரைப் பார்த்து, 'எப்படி
வந்தே' என்று சைகயால் கேட்டுவிட்டு,
" இருந்து சாப்பிட்டுவிட்டுத் தான் போகணும் " என்று சொல்லிவிட்டு,காரில்
ஏறிச் சென்றுவிட்டார்.

அந்த நடிகரோ ஒன்றும் புரியாமல்
தவிப்புடன் நின்றார்.
இருந்து சாப்பிட்டுவிட்டு போகச்
சொன்னாருல்ல,மதியம் சாப்டுட்டு
போங்க " என்றேன். "நான் எப்படிச் சாப்பிடுவது..என்
குடும்பமே பட்டினியா இருக்கும் போது? "
என்றார் அவர்.

'நான் ஒரு ஐநூறு ரூபா தருகிறேன்,
அத வச்சு சமாளியுங்கள்' என்றேன்.
சந்தோஷப்பட்டார். மதியம் அவர்
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது
எம்.ஜி.ஆர் கோட்டையிலிருந்து வந்து
விட்டார்.

அந்த நடிகரிடம்,மதியம் திரும்ப
எம்.ஜி.ஆர் வெளியே புறப்படும்போது
அவரைப் பார்த்து சொல்லிவிட்டுப்
போங்க..என்றேன். சரி..என்றார்.
வெளியே வந்த எம்.ஜி.ஆர் அவரைப்
பார்த்து " சாப்பிட்டுவிட்டாயா " என்று
கேட்டு விட்டு காரில் ஏறிவிட்டார்.அந்த
நடிகருக்கோ ஒரே பதற்றம். புறப்பட்ட கார்
மீண்டும் நின்றது.எம்.ஜி.ஆர் சைகையால் அந்த நடிகரை அழைத்தார்.
அவர் காருக்கு அருகில் சென்று சற்று
தள்ளி நிற்க...நெருக்கமாக அழைத்தார்.
அவரும் காருக்கு மிக அருகில் போய்
நிற்க, சட்டென்று அவருடைய பாக்கட்டில்
ஒரு கவரை யாருக்கும் தெரியாமல்
எம்.ஜி.ஆர் வைத்துவிட்டார். கார் புறப்பட்டுச் சென்றுவிட்டது.
அவர் என்னருகே வந்து கவரைப்
பிரித்தார். அதில் பத்தாயிரம் ரூபாய்
இருந்தது. அவர் கண்கள் கலங்கிப் போய்
விட்டது.அவருடைய ஆனந்தக் கண்ணீரைக் கண்டு அவரைவிட
எனக்குத் தான் அதிக சந்தோஷம்.
மறுநாள், திரும்ப தோட்டத்திற்கு
சென்றிருந்த போது எம்.ஜி.ஆரிடம்
கேட்டேன்..." கஷ்டத்துல வந்த அந்த
நடிகரை சாப்பிடச் சொன்னீங்க,ஆனா
அவரப் பத்தி எதுவுமே அவர்கிட்ட
கேட்காம போயிட்டீங்க.திரும்ப மதியம்
வந்து அப்பவும் காருல ஏறிட்டீங்க.அந்த
நடிகர் ரொம்பவும் பதறிப் போயிட்டாரு.
இவ்வளவுக்கும் பிறகு அவரைக் கூப்பிட்டு பாக்கட்டுல பத்தாயிரம் ரூபா
வச்சு அனுப்புறீங்க. ஏன் அண்ணே
அப்படிச் செஞ்சீங்க " என்று கேட்டேன்.
சில கணங்கள் என்னை அமைதியாகப்
பார்த்துவிட்டு அவர் சொன்னார்.
" எப்பவும் கஷ்டப்பட்டு வர்றவங்களை
அவங்க வாயால் பணம் கேட்க வைக்கக்
கூடாது. அதுவும் அவர் கொஞ்சம் கூச்ச
சுபாவம் உள்ளவர். கேட்க சங்கடப்
படுவார்.அவரா கேட்டா கம்மியாத் தான்
கேட்டிருப்பார்.அதனால் தான் நம்மளா
கொடுத்திடனும் " என்றார்.

எனக்குத் தான் இப்ப கண் கலங்குச்சு.
அவருடைய கொடை உள்ளம் பற்றியும்
அவரது ரத்தத்தில் கலந்திருந்த அந்த
ஈகை இயல்பு பற்றியும் இருவேறு
கருத்துக்கு எப்பொழுதுமே இடமில்லை.

அதனால் தான் அவர் இறந்தும் இன்னும்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்!

oygateedat
23rd July 2018, 11:25 PM
நேற்று ஈரோட்டில் கவிதாலயம் சார்பில் நடைபெற்ற விழாவில் கலையரசி லதா அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அந்நிகழ்விற்கு முன்பு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலையரசி தெரிவித்த கருத்துக்கள் இன்றைய ஈரோடு நாளிதழ்களில் வெளியானது. தினமணி, தினமலர் & தினத்தந்தி நாளிதழ்களில்வெளியான செய்திகள்.
https://s22.postimg.cc/jt6erqzyp/IMG_9448.jpg (https://postimg.cc/image/59z9qc6tp/)

தினமணி - கோவை

oygateedat
23rd July 2018, 11:29 PM
https://s22.postimg.cc/zfxo4z0u9/IMG_9443.jpg (https://postimg.cc/image/ydnhmfi0t/)
தினமலர் - ஈரோடு

oygateedat
23rd July 2018, 11:32 PM
https://s22.postimg.cc/dtino4x6p/IMG_9442.jpg (https://postimg.cc/image/is662o0zh/)
தினத்தந்தி - ஈரோடு

Richardsof
24th July 2018, 02:34 PM
நாங்கள் ஏன் ஜெயிக்கவில்லை ?

எங்கள் அபிமான நடிகரின் படங்கள் வெளி வந்த நேரத்தில் திரை அரங்கு முன் கூடி நின்று வேடிக்கை பார்த்தோம் . சில நண்பர்கள் ஸ்டார் வைத்தார்கள்.
சிலர் நோட்டீஸ் விநியோகித்தார்கள். சில படங்கள் வெற்றிகரமாக ஓடியது , பல படங்கள் வெளிவந்த சில நாட்களில் பெட்டிக்குள் புகுந்துவிட்டது எங்கள் அபிமான நடிகர் நடித்த 70 படங்கள் முதல் வெளியீட்டிற்கு பின்னர் மறு வெளியீடு காணவே இல்லை .

எதிர் முகாம் நடிகரின் பல படங்கள் வெற்றி அடைந்தது எங்களால் ஜீரணிக்க முடியவில்லை . எதிர் முகம் நடிகரையும் , அவருடைய படஙககளின் பெயரையும் அவருடைய ரசிகர்களையும் மிகவும் கேவலமாகவும் தரமின்றி விமர்சித்து நோட்டீஸ் விநியோகித்தோம்

எதிர் முகாம் நடிகரின் ரசிகர்கள் உண்மையுடனும் உற்சாகத்துடனும் அவர் நினைவாகவாக வாழ்ந்தார்கள் . உழைத்தார்கள் . வெற்றி மேல் வெற்றி கண்டார்கள் .
நாங்களோ வேதனை தீயில் அன்றும் வெந்தோம் .இன்றும் அவர்களை நினைத்து வெந்து நொந்து மீண்டும் பழைய எங்கள் குப்பைகளை பதிவிட்டு மகிழ முயற்சிக்கிறோம் .

சத்தியமாக எங்களுக்கு நிம்மதியே கிடைக்காது .
எங்கள் ராசி அப்படி .
எதிர் முகாம் நடிகரின் ரசிகர்கள் நினைத்ததை முடித்தவர்கள் . உணர்கிறோம் , ஆனாலும்
எங்கள் பாடல் நினைவிற்கு வருகிறது
சிறிய காயம் பெரிய துன்பம்
ஆறும் முன்னே அடுத்த காயம் ....

நாங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்

இப்படிக்கு
ஆனந்தத்தின் மனசாட்சி

எங்கள் சோக கதை தொடரும் ..........இனியும் சொல்வேன் .

Richardsof
24th July 2018, 03:44 PM
இனிய நண்பர்கள்
திரு மஸ்தான்
திரு அக்பர்
திரு மகாலிங்கம்
திரு சுந்தரபாண்டியன்
மக்கள் திலகத்தின் அன்பு உள்ளங்களாகிய நீங்கள் நால்வரும் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் மற்றவர்கள் போட்ட பதிவுகளை பாராட்டி பதிவிடுகிறீர்கள் . மாற்று திரியில் தவறான தகவலுக்கு பதில் ஆர்வம் காட்டுகிறீர்கள் . ஆனால் மக்கள் திலகத்தின் நடிப்பை பற்றியும் அவருடைய சாதனைகள் மற்றும் அரசியல் சரித்திரங்களை பற்றியும் உங்கள் சொந்த கருத்துக்களை பதிவிடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை .
மக்கள் திலகம் எம்ஜிஆரின் அடுத்த பாகத்தை துவக்க உங்களில் ஒருவர் முன் வரவேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் . இனி வரும் காலத்தில் நீங்கள் நால்வரும் தொடர்ந்து திரியில் பங்கு பெற்று சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறேன்

oygateedat
25th July 2018, 05:19 AM
https://s15.postimg.cc/ba5iymg63/80b85394-7109-4e41-bc98-c45d23c57409.jpg (https://postimages.org/)
FROM

27.07.2018

COIMBATORE

ROYAL THEATRE

Richardsof
25th July 2018, 08:47 AM
[QUOTE=ravichandrran;1335725]https://s15.postimg.cc/ba5iymg63/80b85394-7109-4e41-bc98-c45d23c57409.jpg (https://postimages.org/)

FROM

27.07.2018

COIMBATORE

ROYAL THEATRE[/QUOTE
super.
tnx
Ravi sir

Richardsof
25th July 2018, 08:49 AM
நாங்கள் ஏன் புலம்புகிறோம் ?

1959ல் எங்கள் சிவாஜி நடித்த படங்களும் ஜெமினி நடித்த படங்களும் வெற்றி பெற்ற நிலையில் எம்ஜிஆர் படங்களே கிடையாது .நாங்கள் மிகவும் சந்தோஷம் அடைந்தோம் .ஆனால் எங்களுக்கு அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை . 1960ல் மன்னாதி மன்னன் அசுர வேகம் எடுத்தார் .பல படங்களும் நடிகர்களும் காணாமல் போனார்கள் . எங்கள் அபிமான நடிகர் மட்டும் உயிரை கொடுத்து உரக்க கத்தி அழுது புரண்டு நடித்த பல படங்களில் சில படங்கள் மட்டும் வெற்றி பெற்றது .1960-1977 வரை எங்களால் போராடமுடியவில்லை .வெற்றிகளை விட தோல்விகளே எங்களுக்கு அதிகம் .
எம்ஜிஆர் ரசிகர்கள் அன்றும் வெற்றிகண்டார்கள் . இன்றும் வெற்றிகளை கொண்டாடுகிறார்கள் . எங்களுக்கு அப்படி ஒரு கொடுப்பினை இல்லையே?
பகல் முழுவதும் நாங்கள் கேவலமாக வெளியிட்ட செல்லரித்த பத்திரிகைகளை மீண்டும் மீண்டும் இரவுநேரத்தில் பதிவிட்டு மனதிற்கு சாந்தி தேட முயல்கிறோம் . முடியவில்லையே ?

புலம்பல் நாளை தொடரும் ........

Scottkaz
25th July 2018, 07:22 PM
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்

orodizli
25th July 2018, 08:13 PM
மக்கள் திலகம் புகழும், மாண்பும் புவி உள்ளவரை யாரும், எவரும் நெருங்கவோ, நினைத்து கூட பார்க்க இயலாது... முடியாது... என்பது புத்தியுள்ளவர்கள் அனைவரும் அறிந்த உண்மை நடப்பு... திரு வினோத் சார் பதிவுகள் நியாயமான ஒன்றே... நாம் நமது பதிவுகள் தொடுத்தால் அவர்கள் பாவம்... தாங்குவார்களா? அற்பம் அவர்களுக்கே அவ்வளவு என்றால்?! நமக்கு??!!!

orodizli
25th July 2018, 08:17 PM
வணக்கம், வாழ்த்துக்கள் திரு ராம மூர்த்தி சார், பொன் மன செம்மல் புகழ் வாய்ந்த ஆவணங்கள் பதிவுகள் பதிவிட உரிமையுடன் அழைக்கிறோம்...

orodizli
25th July 2018, 09:58 PM
1950 களில் தனி கதா நாயகனாக நடித்து, முதலில் வெள்ளி விழா கண்ட காவியம் " மதுரை வீரன்", வசூல் சக்ரவர்த்தியாக அவதாரம் எடுத்தார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., அதற்கு அடுத்த வாய்ப்பு கிட்டியது ஜெமினி கணேசன் நடிகருக்குத்தான்... படம் : " கல்யாண பரிசு"... சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 நகரங்களில் வெள்ளி விழா கண்டது... இதற்கு அடுத்துதான் ஜெமினி கணேசன் அவர்களோடு இணைத்து சி. கணேசன் நடித்த காங்கிரஸ் கட்சி அனுதாபி பந்துலு புண்ணியம் கட்டி கொண்ட சித்திரம் வி பா க பொ.. என்ன நண்பர்களே, சரிதானா இந்த தகவல்?!

oygateedat
25th July 2018, 10:08 PM
https://s33.postimg.cc/7pik4lon3/1532532407165.jpg (https://postimg.cc/image/a6ubbv8jf/)

fidowag
25th July 2018, 10:58 PM
http://i66.tinypic.com/15zf3ib.jpg
கடந்த வெள்ளி முதல் (20/7/18) சென்னை பாட்சாவில் (மினர்வா ) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "நேற்று இன்று நாளை " தினசரி 3 காட்சிகளில் 4 நாட்களுக்கு மட்டும் திரையிடப்பட்டது .

fidowag
25th July 2018, 11:01 PM
வெகு நீண்ட இடைவெளிக்கு பிறகு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில் பதிவுகள்
ஆரம்பித்தவரும், என்னை திரியில் பதிவிட அறிமுகம் செய்து ஊக்குவித்தவருமான
திரு.ராமமூர்த்தி, வேலூர் அவர்களுக்கு வணக்கம். மனமார்ந்த பாராட்டுக்கள்
தொடரட்டும் தங்களின் மேலான பதிவுகள். சிறக்கட்டும் தங்களின் பணிகள் .துரிதமாக .

fidowag
25th July 2018, 11:02 PM
கடந்த வெள்ளி முதல் ( 20/7/18) சென்னை சரவணாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "ராமன் தேடிய சீதை " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i66.tinypic.com/2s6on4h.jpg

fidowag
25th July 2018, 11:03 PM
http://i65.tinypic.com/x2qr8p.jpg

fidowag
25th July 2018, 11:04 PM
கடந்த வெள்ளி முதல் (20/7/18) சென்னை ஸ்ரீநிவாஸாவில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 3காட்சிகள் நடைபெறுகிறது .
http://i65.tinypic.com/2nv9ll4.jpg

fidowag
25th July 2018, 11:05 PM
http://i65.tinypic.com/qnoily.jpg

fidowag
25th July 2018, 11:06 PM
http://i65.tinypic.com/25upeg1.jpg

fidowag
25th July 2018, 11:09 PM
வரும் வெள்ளி முதல் (27/7/18 ) கோவை ராயலில் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நடித்த , தேவரின் "விவசாயி " தினசரி 4 காட்சிகளில் வலம் வருகிறது .
கடந்த சில வாரங்களுக்கு முன் மதுரை சென்ட்ரல் சினிமாவில் திரைக்கு வந்து
ஒரு வாரத்தில் ரூ.1 லட்சத்திற்கு மேல் வசூல் ஈட்டிய படம் என்பது குறிப்பிடத்தக்கது
http://i67.tinypic.com/r1bk2u.jpg

fidowag
25th July 2018, 11:15 PM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். மக்களின் உள்ளங்களை
கொள்ளை கொண்ட "மலைக்கள்ளன் " தினசரி 4 காட்சிகளில் 10/8/18 முதல் வெள்ளித்திரைக்கு விஜயம்
http://i63.tinypic.com/v5ikjo.jpg


தகவல் உதவி : மதுரை பக்தர் திரு.எஸ். குமார் .

fidowag
25th July 2018, 11:17 PM
திரை மற்றும் அரசியல் உலகின் கலங்கரை விளக்கம் எம்.ஜி.ஆர்.
http://i67.tinypic.com/2yws27t.jpg

fidowag
25th July 2018, 11:19 PM
மாலை மலர் -22/7/18
http://i67.tinypic.com/10ynltt.jpg

fidowag
25th July 2018, 11:21 PM
தினத்தந்தி -22/7/18
http://i63.tinypic.com/mbls7k.jpg

fidowag
25th July 2018, 11:25 PM
http://i64.tinypic.com/p1svq.jpg
http://i64.tinypic.com/9sw8ea.jpg
http://i63.tinypic.com/2wmqfb8.jpg
http://i65.tinypic.com/2j35qxl.jpg

fidowag
25th July 2018, 11:27 PM
http://i65.tinypic.com/eknk2a.jpg

fidowag
25th July 2018, 11:28 PM
http://i67.tinypic.com/eolxy.jpg

fidowag
25th July 2018, 11:29 PM
http://i64.tinypic.com/nwcuo9.jpg

Scottkaz
25th July 2018, 11:30 PM
http://i66.tinypic.com/23wpvt4.png

fidowag
25th July 2018, 11:30 PM
http://i67.tinypic.com/k323jk.jpg

fidowag
25th July 2018, 11:32 PM
http://i67.tinypic.com/3zjms.jpg

fidowag
25th July 2018, 11:34 PM
http://i66.tinypic.com/xoduts.jpg

fidowag
25th July 2018, 11:34 PM
http://i63.tinypic.com/5pjuyt.jpg

fidowag
25th July 2018, 11:37 PM
http://i67.tinypic.com/2ptyvcl.jpg
http://i65.tinypic.com/35mkrxt.jpg

fidowag
25th July 2018, 11:38 PM
http://i64.tinypic.com/k2eogw.jpg

fidowag
25th July 2018, 11:40 PM
தினத்தந்தி -25/7/18
http://i65.tinypic.com/mj5qox.jpg

fidowag
25th July 2018, 11:43 PM
சென்னை சைதாப்பேட்டை , கோடம்பாக்கம் சாலையில் உள்ள ஒரு கடையின் முன்பு கண்டெடுக்கப்பட்ட விளம்பரம்
http://i63.tinypic.com/2vtqrh0.jpg

fidowag
25th July 2018, 11:45 PM
மாலைசுடர் -25/7/18
http://i65.tinypic.com/vdg4f7.jpg

fidowag
25th July 2018, 11:47 PM
மாலைமலர் -24/7/18
http://i64.tinypic.com/29x9dfb.jpg

fidowag
25th July 2018, 11:51 PM
வண்ணத்திரை வார இதழ் -27/7/18
http://i64.tinypic.com/t5j50n.jpg
http://i68.tinypic.com/4jp05w.jpg
http://i66.tinypic.com/2mqvyac.jpg

fidowag
25th July 2018, 11:52 PM
http://i68.tinypic.com/2jevazt.jpg
http://i66.tinypic.com/2hhq6av.jpg

fidowag
25th July 2018, 11:55 PM
கல்கி வார இதழ் -29/7/18
http://i63.tinypic.com/abjfi8.jpg
http://i68.tinypic.com/2zztd9z.jpg

fidowag
26th July 2018, 12:00 AM
ராணி வார இதழ் -29/7/18
http://i67.tinypic.com/34dlz6e.jpg
http://i64.tinypic.com/15rmrk2.jpg
http://i66.tinypic.com/vdo7ic.jpg
http://i64.tinypic.com/2nl94p4.jpg

fidowag
26th July 2018, 12:01 AM
http://i63.tinypic.com/sgo9bp.jpg
http://i66.tinypic.com/n5t2jk.jpg

Richardsof
26th July 2018, 08:58 AM
மக்கள் செல்வாக்கு பெற்ற நடிகர்
ரசிகர்கள் நிறைந்துள்ள நடிகர்
திரை உலக முடிசூடா மன்னன்
திரை உலக வசூல் சக்கரவர்த்தி
உலகம் போற்றும் சிறந்த மனிதர்
1947-1977 வரை கலை உலகை தன் கட்டுக்குள் வைத்த நடிகர்
ஜனாதிபதி விருது பெற்ற முதல் நடிகர் -1954
சிறந்த நடிகருக்கான பாரத் விருது பெற்ற முதல் நடிகர் -1971
இயற்கையாக நடித்த ஒரே நடிகர்
மறு வெளியீடுகளில் 1977 முதல் 2018 இன்று வரை நிலைத்திருக்கும் நடிகர்
பத்திரிகைகள் புகழ் பாடும் ஒரே நடிகர்
ஊடகங்களில் நிலையான புகழில் இருக்கும் ஒரே நடிகர்
7 தலை முறை ரசிகர்களை இன்னமும் வைத்திருக்கும் ஒரே நடிகர்
உலகெங்கிலும் வாழும் ரசிகர்களை பெற்றுள்ள ஒரே நடிகர்
சாதனை - சரித்திரம் - சகாப்தம் நிறைந்த ஒரே நடிகர்

************இப்படி பெருமையாக கொண்டாடி வரும்நடிகரின் ரசிகர்களை பார்த்து
எதிர் முகாம் ரசிகர்களாகிய நாங்கள் கிடைக்காத பெருமைகளுக்கு ஏங்கி தவித்து
மனம் புழுங்கி வேதனையுடன் வாழ்ந்து வரும் எங்களுக்கு என்றுமே நிம்மதி இல்லை . மனசாந்தி இல்லை .
கண்ணீருடன் *****m

Scottkaz
26th July 2018, 09:42 AM
http://i63.tinypic.com/rmlldh.jpg

Scottkaz
26th July 2018, 09:45 AM
http://i63.tinypic.com/33lglki.jpg

Scottkaz
26th July 2018, 09:46 AM
http://i67.tinypic.com/11tuzvp.jpg

Scottkaz
26th July 2018, 09:50 AM
http://i66.tinypic.com/359mxsk.jpg

Scottkaz
26th July 2018, 09:52 AM
http://i68.tinypic.com/9vcea0.jpg

Scottkaz
26th July 2018, 09:57 AM
http://i66.tinypic.com/2iu3xvs.jpg

Scottkaz
26th July 2018, 10:01 AM
http://i63.tinypic.com/2mqkwgy.jpg

Scottkaz
26th July 2018, 10:04 AM
http://i63.tinypic.com/9plwnp.jpg

Scottkaz
26th July 2018, 10:18 AM
http://i67.tinypic.com/2ef6wrm.jpg

fidowag
26th July 2018, 07:56 PM
16/7/18 மாலை சுடர்
http://i66.tinypic.com/292s3tu.jpghttp://i67.tinypic.com/5v0qjs.jpg
http://i65.tinypic.com/2z6ro0o.jpg
http://i64.tinypic.com/14cg0eh.jpg

fidowag
26th July 2018, 08:00 PM
மக்கள் குரல் 16/7/18
http://i64.tinypic.com/2d00w9y.jpg
http://i63.tinypic.com/154vx9u.jpg
http://i64.tinypic.com/23kz1cp.jpg

fidowag
26th July 2018, 08:01 PM
தின செய்தி -24/7/18
http://i65.tinypic.com/2q80t2e.jpg

fidowag
26th July 2018, 08:04 PM
அரிய புகைப்படம் .-நடிகர் சந்திரபாபு திருமணத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர்.
http://i64.tinypic.com/2qlewlz.jpg

fidowag
26th July 2018, 08:08 PM
புதிய தலைமுறை வார இதழ் -26/7/18
http://i63.tinypic.com/211whlc.jpg
http://i63.tinypic.com/2r27lh2.jpg
http://i64.tinypic.com/2sb1sb9.jpg

oygateedat
26th July 2018, 08:50 PM
அன்பு நண்பர் திரு ராமமூர்த்தி (வேலூர்) அவர்களுக்கு

தாங்கள் தொடர்ந்து
மக்கள் திலகத்தின்
கலை மற்றும் அரசியல்
சாதனைகளை
பதிவிடுங்கள்.

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

orodizli
26th July 2018, 08:59 PM
பாசமிக்க சகோதரர் திரு வேலூர் ராமமூர்த்தி அவர்களின் ஆவண பதிவுகள் சூப்பர்... மக்கள் திலகம் புகழ் தொடர்ந்து பாடுவதே நம் லட்சியம்...

fidowag
26th July 2018, 10:10 PM
சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலை கழக வளாகத்தில் கடந்த 15/7/18 ஞாயிறு அன்று நடைபெற்ற உலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு குறித்த
புகைப்படங்கள் தொகுப்பு நண்பர்களின் பார்வைக்கு .
http://i68.tinypic.com/10pvrpe.jpg

fidowag
26th July 2018, 10:12 PM
http://i65.tinypic.com/23rsvo3.jpg

fidowag
26th July 2018, 10:13 PM
http://i66.tinypic.com/2jvzv6.jpg

fidowag
26th July 2018, 10:14 PM
http://i66.tinypic.com/2ibeohd.jpg

fidowag
26th July 2018, 10:15 PM
http://i65.tinypic.com/jfcep1.jpg

fidowag
26th July 2018, 10:15 PM
http://i64.tinypic.com/11m7rdx.jpg

fidowag
26th July 2018, 10:17 PM
http://i68.tinypic.com/2co1xdg.jpg

fidowag
26th July 2018, 10:18 PM
http://i66.tinypic.com/2q9jg2d.jpg

fidowag
26th July 2018, 10:19 PM
http://i64.tinypic.com/2gt0wbd.jpg

fidowag
26th July 2018, 10:20 PM
http://i65.tinypic.com/35n2ccz.jpg

fidowag
26th July 2018, 10:21 PM
http://i64.tinypic.com/2r6ch8j.jpg

fidowag
26th July 2018, 10:22 PM
http://i63.tinypic.com/8vqh51.jpg

fidowag
26th July 2018, 10:24 PM
http://i67.tinypic.com/2czpxep.jpg

fidowag
26th July 2018, 10:25 PM
வேல்ஸ் பல்கலை கழக வளாகம் செல்லும் சாலை
http://i66.tinypic.com/167qmpi.jpg

fidowag
26th July 2018, 10:26 PM
http://i65.tinypic.com/wkfhc9.jpg

fidowag
26th July 2018, 10:27 PM
http://i67.tinypic.com/2s1sxa0.jpg

fidowag
26th July 2018, 10:28 PM
http://i63.tinypic.com/28jfat5.jpg

fidowag
26th July 2018, 10:29 PM
http://i66.tinypic.com/6j3wvo.jpg

fidowag
26th July 2018, 10:30 PM
http://i63.tinypic.com/2wp5uea.jpg

fidowag
26th July 2018, 10:31 PM
http://i67.tinypic.com/2nh25wm.jpg

fidowag
26th July 2018, 10:32 PM
http://i68.tinypic.com/2jdnxnn.jpg

fidowag
26th July 2018, 10:33 PM
http://i65.tinypic.com/2ur9rhd.jpg

fidowag
26th July 2018, 10:34 PM
http://i68.tinypic.com/28uu68z.jpg

fidowag
26th July 2018, 10:34 PM
http://i66.tinypic.com/rr11xz.jpg

fidowag
26th July 2018, 10:37 PM
http://i67.tinypic.com/dmcy6v.jpg

fidowag
26th July 2018, 10:39 PM
http://i68.tinypic.com/10d6zrt.jpg

fidowag
26th July 2018, 10:40 PM
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு பேனர்
http://i65.tinypic.com/11jqfc4.jpg

fidowag
26th July 2018, 10:41 PM
http://i63.tinypic.com/160x9iu.jpg

fidowag
26th July 2018, 10:42 PM
http://i63.tinypic.com/xpq4ya.jpg

fidowag
26th July 2018, 10:43 PM
http://i68.tinypic.com/dw86rt.jpg

fidowag
26th July 2018, 10:45 PM
http://i66.tinypic.com/2n0sha8.jpg

fidowag
26th July 2018, 10:47 PM
புகைப்படங்கள் , சிடிக்கள், டிவிடிக்கள் விற்பனை காட்சி .
http://i64.tinypic.com/ao03yh.jpg

fidowag
26th July 2018, 10:48 PM
http://i64.tinypic.com/rm76t1.jpg

fidowag
26th July 2018, 10:49 PM
http://i64.tinypic.com/2w6vyfn.jpg

fidowag
26th July 2018, 10:50 PM
http://i64.tinypic.com/23ubn95.jpg

fidowag
26th July 2018, 10:50 PM
http://i64.tinypic.com/29ditmf.jpg

fidowag
26th July 2018, 10:51 PM
http://i67.tinypic.com/2hqt383.jpg

fidowag
26th July 2018, 10:52 PM
http://i67.tinypic.com/mmxv0l.jpg

fidowag
26th July 2018, 10:53 PM
http://i68.tinypic.com/jgk2dx.jpg

fidowag
26th July 2018, 10:54 PM
http://i65.tinypic.com/296lzkj.jpg

fidowag
26th July 2018, 10:56 PM
http://i66.tinypic.com/4kbo29.jpg

fidowag
26th July 2018, 10:56 PM
http://i65.tinypic.com/35ko588.jpg

fidowag
26th July 2018, 10:57 PM
http://i66.tinypic.com/2yts6lz.jpg

fidowag
26th July 2018, 10:59 PM
http://i65.tinypic.com/2dqptte.jpg

fidowag
26th July 2018, 10:59 PM
http://i66.tinypic.com/29duxx3.jpg

fidowag
26th July 2018, 11:01 PM
http://i68.tinypic.com/25zr0nl.jpg
http://i65.tinypic.com/au74hz.jpg

fidowag
26th July 2018, 11:02 PM
http://i66.tinypic.com/2r7adee.jpg

fidowag
26th July 2018, 11:04 PM
நிகழ்ச்சி தொடங்கும் சமயம் நாதஸ்வர கலைஞர்கள் வாசிக்க தயாராக இருந்த காட்சி .
http://i65.tinypic.com/2wnvbqe.jpg

fidowag
26th July 2018, 11:07 PM
மேடையின் முன்புறம் அலங்கரிக்கப்பட்டிருந்த மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். உருவம்
http://i67.tinypic.com/30u7c01.jpg

fidowag
26th July 2018, 11:08 PM
http://i63.tinypic.com/20zut4z.jpg

fidowag
26th July 2018, 11:10 PM
வேல்ஸ் பல்கலை கழக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள்
http://i64.tinypic.com/5d9qmq.jpg

fidowag
26th July 2018, 11:11 PM
http://i63.tinypic.com/fvb75u.jpg

fidowag
26th July 2018, 11:12 PM
http://i64.tinypic.com/dewutz.jpg

fidowag
26th July 2018, 11:14 PM
http://i63.tinypic.com/21mye60.jpg

fidowag
26th July 2018, 11:15 PM
http://i65.tinypic.com/21no9kg.jpg

fidowag
26th July 2018, 11:16 PM
http://i65.tinypic.com/2m6mo3m.jpg

fidowag
26th July 2018, 11:17 PM
http://i66.tinypic.com/feqtzb.jpg

fidowag
26th July 2018, 11:18 PM
http://i66.tinypic.com/2nulkqe.jpg

fidowag
26th July 2018, 11:19 PM
http://i67.tinypic.com/2rfanpl.jpg

fidowag
26th July 2018, 11:20 PM
http://i63.tinypic.com/2435cab.jpg
தொடரும் ...............!!!!!!!!

Scottkaz
27th July 2018, 11:04 AM
http://i1276.photobucket.com/albums/y472/mgrraamamoorthi/f6405e48-0288-412d-9131-74f532f15e32_zpsxsthu4gf.jpg (http://s1276.photobucket.com/user/mgrraamamoorthi/media/f6405e48-0288-412d-9131-74f532f15e32_zpsxsthu4gf.jpg.html)

fidowag
27th July 2018, 04:39 PM
இன்று முதல் (27/7/18) மதுரை சென்ட்ரல்சினிமாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "மலைக்கள்ளன் " தினசரி 4 காட்சிகளில் வெற்றி விஜயம் .
http://i63.tinypic.com/f1gyo0.jpg

தகவல் உதவி : மதுரை பக்தர் திரு. எஸ்.குமார்.

fidowag
27th July 2018, 04:40 PM
http://i64.tinypic.com/2sb1iwy.jpg

fidowag
27th July 2018, 04:42 PM
புதிய தலைமுறை வார இதழ் -02/08/18
http://i68.tinypic.com/2j16k2c.jpg
http://i63.tinypic.com/30ngn76.jpg

http://i65.tinypic.com/208w7xe.jpg
http://i64.tinypic.com/55nrde.jpg

fidowag
27th July 2018, 11:04 PM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் இரட்டை வேடத்தில் உருவான , உன்னத,
பிரம்மாண்ட தயாரிப்பான "நாடோடி மன்னன் " திரைப்பட வைரவிழா நிகழ்ச்சி
19/08/2018 ஞாயிறு அன்று சென்னையில் நடைபெற உள்ளது.அதன் அழைப்பிதழின்
தோற்றம் நண்பர்களின் பார்வைக்கு .
http://i68.tinypic.com/i769eq.jpg

fidowag
27th July 2018, 11:06 PM
http://i68.tinypic.com/160amid.jpg

fidowag
27th July 2018, 11:07 PM
http://i67.tinypic.com/ogkheo.jpg

fidowag
27th July 2018, 11:15 PM
"நாடோடி மன்னன் " வைரவிழா அழைப்பிதழ், முன்னாள் சென்னை மாநகர மேயர் .சைதை துரைசாமி அவர்களின் அலுவலகத்தில் இன்று இரவு 8 மணியளவில் உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி. எஸ்.ராஜு தலைமையில் எம்.ஜி.ஆர். அபிமானிகள் சிலர் இணைந்து அளித்தபோது எடுத்த புகைப்படம் .

http://i65.tinypic.com/usu8y.jpg

fidowag
27th July 2018, 11:16 PM
http://i63.tinypic.com/vevhty.jpg

fidowag
27th July 2018, 11:18 PM
உலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு புகைப்படங்கள் தொடர்ச்சி.......
http://i64.tinypic.com/2v3k5r9.jpg

fidowag
27th July 2018, 11:19 PM
http://i63.tinypic.com/6hs3gw.jpg

fidowag
27th July 2018, 11:20 PM
http://i67.tinypic.com/2r3z69d.jpg

fidowag
27th July 2018, 11:20 PM
http://i64.tinypic.com/2s1x1e0.jpg

fidowag
27th July 2018, 11:21 PM
http://i65.tinypic.com/rucyoh.jpg

fidowag
27th July 2018, 11:22 PM
http://i63.tinypic.com/2rps0w4.jpg

fidowag
27th July 2018, 11:22 PM
http://i68.tinypic.com/2uy1404.jpg

fidowag
27th July 2018, 11:23 PM
http://i63.tinypic.com/315j1tt.jpg

fidowag
27th July 2018, 11:24 PM
http://i65.tinypic.com/2a4sr6d.jpg

fidowag
27th July 2018, 11:25 PM
http://i65.tinypic.com/b3vqc4.jpg

fidowag
27th July 2018, 11:25 PM
http://i65.tinypic.com/2czaw03.jpg

fidowag
27th July 2018, 11:26 PM
http://i67.tinypic.com/2wcpoac.jpg

fidowag
27th July 2018, 11:27 PM
http://i63.tinypic.com/2w3qrzb.jpg

fidowag
27th July 2018, 11:28 PM
http://i66.tinypic.com/m7yybo.jpg

fidowag
27th July 2018, 11:29 PM
http://i66.tinypic.com/c6kcj.jpg

fidowag
27th July 2018, 11:30 PM
http://i66.tinypic.com/nghhs.jpg

fidowag
27th July 2018, 11:31 PM
http://i63.tinypic.com/339na8j.jpg

fidowag
27th July 2018, 11:32 PM
http://i67.tinypic.com/9905km.jpg

fidowag
27th July 2018, 11:32 PM
http://i63.tinypic.com/funod0.jpg

fidowag
27th July 2018, 11:33 PM
http://i65.tinypic.com/2eg4suo.jpg

fidowag
27th July 2018, 11:34 PM
http://i67.tinypic.com/2z7e904.jpg

fidowag
28th July 2018, 02:40 PM
http://i64.tinypic.com/2qrzr0p.jpg

fidowag
28th July 2018, 02:41 PM
http://i66.tinypic.com/s30lsz.jpg

fidowag
28th July 2018, 02:42 PM
http://i65.tinypic.com/ejzjad.jpg

fidowag
28th July 2018, 02:44 PM
http://i66.tinypic.com/fm5gn.jpg

fidowag
28th July 2018, 02:44 PM
http://i65.tinypic.com/2j4ubes.jpg

fidowag
28th July 2018, 02:49 PM
http://i66.tinypic.com/2gxpelv.jpg

fidowag
28th July 2018, 02:50 PM
http://i64.tinypic.com/33f40om.jpg

fidowag
28th July 2018, 02:56 PM
http://i65.tinypic.com/ng3jhh.jpg

fidowag
28th July 2018, 02:56 PM
http://i67.tinypic.com/2wrhxts.jpg

fidowag
28th July 2018, 02:57 PM
http://i67.tinypic.com/2gtw2v7.jpg

fidowag
28th July 2018, 02:58 PM
http://i68.tinypic.com/szh8gz.jpg

fidowag
28th July 2018, 02:59 PM
http://i67.tinypic.com/zwgg3r.jpg

fidowag
28th July 2018, 03:03 PM
வேல்ஸ் பல்கலை கழக வளாகத்தில் நடைபெற்ற புகைப்பட கண்காட்சியில் பல அபூர்வ /அரிய புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் சில நண்பர்களின் பார்வைக்கு .
http://i64.tinypic.com/1gpqth.jpg

fidowag
28th July 2018, 03:04 PM
http://i63.tinypic.com/2ag2pt3.jpg

fidowag
28th July 2018, 03:05 PM
http://i63.tinypic.com/9kwkn5.jpg

fidowag
28th July 2018, 03:05 PM
http://i67.tinypic.com/10z2tqe.jpg

fidowag
28th July 2018, 03:06 PM
http://i63.tinypic.com/2enti76.jpg

fidowag
28th July 2018, 03:07 PM
http://i68.tinypic.com/14kw0ub.jpg

fidowag
28th July 2018, 03:08 PM
http://i67.tinypic.com/5w9tds.jpg

fidowag
28th July 2018, 03:10 PM
http://i63.tinypic.com/pomzc.jpg

fidowag
28th July 2018, 03:11 PM
http://i67.tinypic.com/2n6zrk0.jpg

fidowag
28th July 2018, 03:12 PM
http://i64.tinypic.com/10ojuie.jpg

fidowag
28th July 2018, 03:13 PM
http://i66.tinypic.com/15gpkqu.jpg

fidowag
28th July 2018, 03:14 PM
http://i64.tinypic.com/2cmnd45.jpg

fidowag
28th July 2018, 03:15 PM
http://i67.tinypic.com/357r03d.jpg

fidowag
28th July 2018, 03:16 PM
http://i68.tinypic.com/5l6zac.jpg

fidowag
28th July 2018, 03:18 PM
http://i65.tinypic.com/2dgw84o.jpg

fidowag
28th July 2018, 03:21 PM
http://i68.tinypic.com/2dgolzt.jpg

fidowag
28th July 2018, 03:22 PM
http://i65.tinypic.com/141ntw1.jpg

fidowag
28th July 2018, 03:23 PM
http://i65.tinypic.com/30s7lo0.jpg

fidowag
28th July 2018, 03:24 PM
http://i66.tinypic.com/23lnw55.jpg

fidowag
28th July 2018, 03:26 PM
http://i66.tinypic.com/6ohfh3.jpg

fidowag
28th July 2018, 03:27 PM
http://i67.tinypic.com/2zjajyb.jpg

fidowag
28th July 2018, 03:28 PM
http://i67.tinypic.com/2ailro5.jpg

fidowag
28th July 2018, 03:29 PM
http://i67.tinypic.com/foztdc.jpg

fidowag
28th July 2018, 03:30 PM
http://i63.tinypic.com/2uxzry9.jpg

fidowag
28th July 2018, 03:31 PM
http://i65.tinypic.com/2drhydy.jpg

fidowag
28th July 2018, 03:33 PM
http://i67.tinypic.com/t06xid.jpg

fidowag
28th July 2018, 03:34 PM
http://i64.tinypic.com/166aiac.jpg

fidowag
28th July 2018, 03:36 PM
http://i66.tinypic.com/59sl68.jpg

fidowag
28th July 2018, 03:39 PM
http://i63.tinypic.com/ygck2.jpg

fidowag
28th July 2018, 03:41 PM
http://i64.tinypic.com/2rrkwb7.jpg

fidowag
28th July 2018, 03:42 PM
http://i63.tinypic.com/3355hcn.jpg

fidowag
28th July 2018, 03:44 PM
http://i65.tinypic.com/xghaf7.jpg

fidowag
28th July 2018, 03:45 PM
http://i67.tinypic.com/1zmf4wg.jpg

fidowag
28th July 2018, 03:47 PM
http://i64.tinypic.com/2l9ryj8.jpg

fidowag
28th July 2018, 03:49 PM
http://i63.tinypic.com/2yx2612.jpg

fidowag
28th July 2018, 03:50 PM
http://i66.tinypic.com/jsgjut.jpg

fidowag
28th July 2018, 03:56 PM
http://i67.tinypic.com/28we6au.jpg

fidowag
28th July 2018, 03:57 PM
http://i64.tinypic.com/119v0x2.jpg

fidowag
28th July 2018, 03:58 PM
http://i65.tinypic.com/30wnssl.jpg

fidowag
28th July 2018, 03:59 PM
http://i65.tinypic.com/rack5s.jpg

fidowag
28th July 2018, 04:01 PM
http://i65.tinypic.com/20gecqs.jpg

fidowag
28th July 2018, 04:03 PM
http://i65.tinypic.com/2n7hfm.jpg

fidowag
28th July 2018, 04:07 PM
http://i65.tinypic.com/6ehn9e.jpg