PDA

View Full Version : Makkal thilagam mgr part 22



Pages : 1 2 3 4 5 6 [7] 8 9 10 11 12 13 14 15 16 17

oygateedat
12th November 2017, 10:53 PM
https://s7.postimg.org/g1d2bygvv/1510499400891.jpg (https://postimages.org/)

oygateedat
12th November 2017, 10:56 PM
https://s7.postimg.org/ybtrz9fuz/IMG_5756.jpg (https://postimages.org/)
வெற்றிகரமாக
தற்பொழுது
கோவை
டிலைட்டில்

oygateedat
12th November 2017, 11:15 PM
https://s18.postimg.org/5i66px67t/1510508140769.jpg (https://postimg.org/image/uo74wr7hx/)

orodizli
13th November 2017, 10:23 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒரு தீர்க்கதரிசி

1969ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் ''நம்நாடு '' திரைப்படத்தில் இடம் பெற்ற காட்சிகள் , உரையாடல்கள் நேற்றைய அரசியல் கட்சிகளுக்கும் இன்றைய அரசியல் கட்சிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் மிகவும் பொருத்தமாக உள்ளது . எதிர்கால அரசியல் கட்சிகளுக்கும் எச்சரிக்கை உணர்த்தும் படமாக நம்நாடு படம் இருப்பது குறிப்பிடத்தக்கது .

பேரறிஞர் அண்ணா , புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கொள்கைகளை மறந்து சுயநலத்தோடு உதட்டளவில் எம்ஜிஆர் பெயரை கூறிக்கொண்டு நாடகமாடி அளவிற்கு மேல் சொத்துக்களை குவித்து தண்டனை பெற்று குற்றவாளியாக ஜெயலலிதா மறைந்தது அதிமுகவிற்கு மிகப்பெரிய அவப்பெயரை உண்டாக்கிவிட்டது . மேலும் சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரையும் கைது செய்து அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் .

இன்றய ஆட்சியாளர்கள் அனைவரின் சொத்துக்களையும் பறிமுதல் செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் .

ஊழலின் மொத்த வடிவமான திமுக வின் 2ஜி வழக்கில் கருணாநிதி குடும்பத்தினர் மற்றும் மாறன் குடும்பத்தினர் அனைவையும் கைது செய்து தண்டனை அனுபவிக்க வேண்டும் .

இனி வரும் அரசியல்வாதிகள் தவறு செய்ய கனவில் கூட நினைத்து பார்க்க கூடாத அளவிற்கு சட்டம் பாதுகாக்க வேண்டும் .

கொள்ளை கூட்டத்தை சேர்ந்தவர்களை ஆதரித்து கோடிக்கணக்கில் பணம் பெற்று வரும் எல்லா கட்சி நிர்வாகிகளையும் . ஊடக நிறுவனங்களையும்
வருமான வரி துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் .
புரட்சித்தலைவரின் இயக்கம் மற்றும் இரட்டை இலை சின்னம் தற்காலிமாக இந்த பதவி பித்தர்களின் கைகளுக்கு செல்லாமல் சற்று ஓய்வெடுக்கட்டும் ...

orodizli
13th November 2017, 10:30 PM
12-11-2017 வேலூர், திருச்சி தின மலர் நாளிதழில் "எம்.ஜி.ஆர்., ஆக முடியுமா கமல் என்ற கட்டுரை...

oygateedat
15th November 2017, 08:12 AM
https://s33.postimg.org/tcoh8pfvj/1510592282485.jpg (https://postimg.org/image/cc5l012u3/)

oygateedat
15th November 2017, 08:13 AM
https://s33.postimg.org/houfdy0yn/IMG_6687.jpg (https://postimages.org/)

Gambler_whify
15th November 2017, 03:42 PM
http://i67.tinypic.com/okpwfl.jpg

மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்களும் , அண்ணன் சக்ரபாணியும் சிறு வயதில் கந்தசாமி முதலியார் நாடகக் கம்பெனியில் சேர, அப்போது அங்கு ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த காமாட்சி என்பவர் பெரும் உதவி செய்தார். பாகவதர், சின்னப்பா, எம்.கே.ராதா, எம்ஜிஆர், சிவாஜி ஆகியோர் வரவுக்குப் பின் நாடகங்கள் குறைந்து சினிமா பிரபலமானது.

காமாட்சிக்கு நடிப்பு வாய்ப்பு குறைந்து பாடல்கள் எழுத ஆரம்பித்தார். இவர்தான்

"உன் கண் உன்னை ஏமாற்றினால் " - வாழ்க்கை,

"புதுப்பெண்ணின் மனதைத் தொட்டுப் போறவரே ", "ஓ ரசிக்கும் சீமானே வா" - பராசக்தி,

"தேனுண்ணும் வண்டு மாமலரைக் கண்டு " _ அமரதீபம்,

"சிற்பி செதுக்காத பொற்சிலையே" - எதிர் பாராதது

ஆகிய சிறந்த பாடல்களை எழுதிய காமாட்சி என்கிற கவி கே.பி. காமாட்சி.

புரட்சித் தலைவர் எம். ஜி ஆர் தன் சொந்த தயாரிப்பான நாடோடி மன்னன் படத்திற்கு பாட்டெழுத , செய்த நன்றியை மறவாமல் கவி கே.பி. காமாட்சியை தமக்கு கந்தசாமி முதலியார் நாடக கம்பெனியில் சேர பெரிதும் உதவி
செய்ததற்கு நன்றிக்கடனாக பாடல் எழுத அழைத்திருந்தார்.

எம் ஜி ஆரை சந்திக்கச் சென்ற காமாட்சிக்கு இருந்த குடிப்பழக்கத்தினால் நாடோடி மன்னன் படத்திற்கு வாய்ப்பு கிடைக்காமல் போயிற்று. இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் எம்ஜிஆர் எதுவும் சொல்லாமல் அனுப்பி விட்டார்.

சில நாட்களுக்குப் பின் கவி.காமாட்சி காலமாகிவிட விஷயத்தைக் கேள்விப்பட்ட எம் ஜி ஆர், என்.எஸ்.கிருஷ்ணன், வி.கே.ராமசாமி, கே.ஆர்.ராமசாமி போன்றவர்கள் வீட்டிற்கே வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

காமாட்சியின் உடல் அலங்கரிக்கப்பட்ட பாடையில் வைக்கப்பட்டது. உடலைத் தூக்கிச் செல்ல சரியான ஆட்கள் இல்லை. இதை கவனித்த மக்கள் திலகம் சிறிதும் யோசிக்கவில்லை.

உடல் வைக்கப்பட்ட பாடையின் முன்புற கைப்பிடியை பற்ற அடுத்த கைப்பிடியை என்.எஸ்.கிருஷ்ணன் பற்ற பின்புறம் கே.ஆர்.ராமசாமியும் ,வி.கே.ராமசாமியும் தூக்கிக் கொண்டார்கள். சுமார் முக்கால் கிலோ மீட்டர் சுமந்து வந்த எம் ஜி ஆர், என்.எஸ்.கே ஆகிய நால்வரும் கண்ணம்மாபேட்டையில் வந்து தான் இறக்கினார்கள்.

அங்கு போயும் எம்.ஜி.ஆர் சும்மா இருந்தாரா. காமாட்சியின் உறவினர்கள் யார் எனக் கேட்டார். தயாரிப்பாளரும், கதைவசனகர்த்தாவும், இயக்குநருமான கலைஞானம்

"நான் தான் அவருடையதம்பி "என்றார்.. "

"காமாட்சி அண்ணன் ஏதாவது கடன் எவச்சிருக்காரா "? என்றார்.

"ஆயிரம் ரூபாய் கடன் இருக்குதுங்கண்ணே" என்றார் கலைஞானம்.

" நாளைக்கு வந்து ஆபீஸ்ல வாங்கி கொண்டு போய் கடனை அடைத்து விடு" என்றார் மக்கள் திலகம்.

அதே போல் அடுத்த நாள் எம் ஜி ஆர் பிக்சர்ஸ் ஆபீஸ் சென்ற போது தயாராக ஒரு கவரில் ரூ 1000 போட்டு ரெடியாக இருந்தது. பிணம் தூக்கியதுமல்லாமல் கடனையும் அடைத்த தர்மதேவன் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர்.

இந்த கவி கே.பி. காமாட்சி வேறு யாருமல்ல. பராசக்தி படத்தில் போலி பூசாரி் நடித்தவர் இவர்தான்.

புரட்சித் தலைவரைப் பாேன்ற மகானை இனிமேல் காண முடியுமா?

கலைஞானம் அவர்களின் சினிமா சீக்ரெட் என்ற புத்தகத்திலிருந்து படித்ததில் பிடித்ததைப்
பகிர்கிறேன்.

நன்றி லட்சுமண குமார் - எம்ஜிஆர் முகநூல் பக்கம்

Gambler_whify
15th November 2017, 03:51 PM
http://i63.tinypic.com/2cqikhv.jpg

நன்றி - அண்ணார் நெல்லை எஸ்.எஸ். மணி

ifucaurun
15th November 2017, 05:49 PM
எங்கள் தங்கம் நடித்த 'எங்கவீட்டு பிள்ளை' படம் எல்லா நடிகர்களையும் ஏங்க வைத்த படம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. எப்படி ஒரு நடிகரால் மாறி மாறி இதில் இயற்கை நடிப்பை காட்டமுடிந்தது என்ற பிரமிப்பு அனைவருக்கும் இருந்தது..இன்னுமொரு செய்தி..'நான் ஆணையிட்டால்..அது நடந்து விட்டால் பாடலில் வரும்..ஒரு காட்சியில் புரட்சித்தலைவர் எலெக்ட்ரிக் சுறுசுறுப்பில் பிரமாதமாக நடித்திருப்பார்..

அதில் முத்தாய்ப்பாக, ஒரு சுற்று சுற்றி இரண்டு கால்களையும், ஒரு கையையும் தரையில் ஊன்றி, ஒரு கையை உயர்த்தும் காட்சியில்,.....
http://i66.tinypic.com/2zjjlf6.jpg

திரு. திலீப்குமார் மற்றும் திரு. என்.டி.ஆர். அவர்களால் மக்கள் திலகத்தைப் போல நடிக்க முடியாததால் அந்த ஸ்டெப் தவிர்க்கப்பட்டது.

http://i65.tinypic.com/23uo6xf.jpg


நன்றி - பால சுப்பிரமணியன் முகநூல்.

ifucaurun
15th November 2017, 05:54 PM
http://i63.tinypic.com/2dj5elw.jpg

http://i68.tinypic.com/14y8sh4.jpg

ifucaurun
15th November 2017, 05:57 PM
http://i68.tinypic.com/2hp3hn5.jpg

http://i63.tinypic.com/33f3wpw.jpg

Gambler_whify
16th November 2017, 08:37 PM
http://i68.tinypic.com/2wggpa8.jpg

சிரித்து வாழவேண்டும் ரிலீஸ் போது பல ஊர்களில் 2 நாள் 6 காட்சிகள் ஓடியிருக்கிறது. 1974ல் சின்ன ஊரான திருப்பூரில் இப்பவும் கூட பெரிய நகரம் இல்லை. ஒரு நாளில் 7 காட்சிகள் ஓடி இருக்கிறது. அதாவது ரிலீஸ் அன்று அதிகாலை 5 மணியில் இருந்து படம் போட்டிருக்கிறார்கள். அதை விளம்பரத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஒரு நாளான 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 18 மணி நேரம் முதல் நாளில் மக்கள் ஆர்வத்தால் 7 காட்சிகள் படத்தை போட்டுள்ளனர்.

சாதனை சக்கரவர்த்தி புரட்சித் தலைவருக்கு இதுவும் ஒரு சாதனை.

Gambler_whify
16th November 2017, 08:39 PM
1971 பேசும் படம் கேள்வி பதில்

http://i63.tinypic.com/wiv5zq.jpg

Gambler_whify
16th November 2017, 08:41 PM
http://i66.tinypic.com/t0sp3d.jpg

ifucaurun
16th November 2017, 08:45 PM
http://i67.tinypic.com/qnvadx.jpg

ifucaurun
16th November 2017, 08:49 PM
http://i67.tinypic.com/6tobx5.jpg

Richardsof
16th November 2017, 09:18 PM
http://i65.tinypic.com/1g4qkk.jpg

Richardsof
16th November 2017, 09:22 PM
http://i67.tinypic.com/2ah61ae.jpg

fidowag
16th November 2017, 11:51 PM
கடந்த 10/11/17 முதல் சென்னை பாட்சாவில் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நடித்த
"நான் ஏன் பிறந்தேன் " தினசரி 3 காட்சிகளில் 4 நாட்கள் திரையிடப்பட்டது .
http://i63.tinypic.com/wv2trc.jpg

fidowag
16th November 2017, 11:53 PM
கடந்த 10/11/17 முதல் சென்னை பாலாஜியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின்
"உழைக்கும் கரங்கள் " தினசரி 3 காட்சிகள் திரையிடப்பட்டது
http://i65.tinypic.com/w02opj.jpg

fidowag
16th November 2017, 11:54 PM
கடந்த 10/11/17 ,முதல் சென்னை ஸ்ரீனிவாஸாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
நடித்த "நேற்று இன்று நாளை " தினசரி 3 காட்சிகள் திரையிடப்பட்டது .
http://i63.tinypic.com/23sx98j.jpg

fidowag
16th November 2017, 11:54 PM
http://i65.tinypic.com/10drujr.jpg

fidowag
16th November 2017, 11:55 PM
http://i65.tinypic.com/23su8zo.jpg

fidowag
16th November 2017, 11:56 PM
தின இதழ் -16/11/17
http://i66.tinypic.com/x3sd3t.jpg

fidowag
16th November 2017, 11:58 PM
http://i66.tinypic.com/34fhezd.jpg

fidowag
16th November 2017, 11:59 PM
சத்தியமங்கலம் நண்பர் திரு.சாமுவேல் வரைந்த ஓவியம்
http://i63.tinypic.com/2dqsf29.jpg

fidowag
17th November 2017, 12:02 AM
முற்றிலும் புதிய தொழில்நுடபத்தில் , டிஜிட்டல் வடிவில் வெளியிட தயாராக
உள்ள மக்கள் திலகத்தின் பிரம்மாண்ட வெற்றி படைப்பு ஆகிய "இதயக்கனி "
படத்தின் புகைப்படங்கள்
http://i67.tinypic.com/2mmogz.jpg

fidowag
17th November 2017, 12:03 AM
http://i64.tinypic.com/11ka5hd.jpg

fidowag
17th November 2017, 12:06 AM
நக்கீரன் வார இதழ்
http://i66.tinypic.com/syb0k3.jpg
http://i65.tinypic.com/jb6wlg.jpg

fidowag
17th November 2017, 12:07 AM
கடந்த 10/11/17 முதல் மதுரை மீனாட்சியில் நடிக மன்னன் எம்.ஜி.ஆர். நடித்த
"அரச கட்டளை " தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டது .
http://i65.tinypic.com/ei5ugw.jpg

fidowag
17th November 2017, 12:08 AM
http://i65.tinypic.com/1z5i1jb.jpg

fidowag
17th November 2017, 12:09 AM
http://i68.tinypic.com/rhlheg.jpg

fidowag
17th November 2017, 12:10 AM
http://i64.tinypic.com/2eefvyc.jpg

fidowag
17th November 2017, 12:11 AM
http://i66.tinypic.com/t813qb.jpg

fidowag
17th November 2017, 12:12 AM
http://i63.tinypic.com/16116vc.jpg

fidowag
17th November 2017, 12:13 AM
http://i66.tinypic.com/25k767a.jpg

fidowag
17th November 2017, 12:14 AM
http://i68.tinypic.com/23ll8w5.jpg

fidowag
17th November 2017, 12:16 AM
http://i67.tinypic.com/ofd7h3.jpg

புகைப்படங்கள் உதவி :மதுரை நண்பர்திரு.எஸ். குமார்

fidowag
17th November 2017, 12:17 AM
http://i66.tinypic.com/imntk0.jpg

fidowag
17th November 2017, 12:18 AM
http://i66.tinypic.com/rkq0w2.jpg

fidowag
17th November 2017, 12:21 AM
மதுரையில் வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதியில் நடைபெற உள்ள மக்கள் தலைவர்
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா பற்றிய பேனர் .
http://i64.tinypic.com/amvd52.jpg

fidowag
17th November 2017, 12:22 AM
http://i65.tinypic.com/s4yyxc.jpg

fidowag
17th November 2017, 12:27 AM
நெல்லையில் வரும் டிசம்பர் மாதம் 17ம் தேதியில் நடைபெற உள்ள மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா பற்றிய பேனர் .
http://i66.tinypic.com/9scgwl.jpg

fidowag
17th November 2017, 12:28 AM
http://i67.tinypic.com/4qla1y.jpg

fidowag
17th November 2017, 12:29 AM
http://i65.tinypic.com/105nsxy.jpg

fidowag
17th November 2017, 12:29 AM
http://i68.tinypic.com/2mgjjav.jpg

fidowag
17th November 2017, 12:32 AM
வரும் வெள்ளி முதல் (17/11/17) மதுரை சென்ட்ரலில் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர்.
நடித்த "தாழம்பூ " தினசரி 3 காட்சிகள் நடைபெற உள்ளது .
http://i63.tinypic.com/idt1jp.jpg

fidowag
17th November 2017, 12:35 AM
வரும் வெள்ளி முதல் (17/11/17) நெல்லை கணேசில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின்
"தர்மம் தலை காக்கும் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i67.tinypic.com/fa7gvo.jpg

Richardsof
17th November 2017, 09:19 PM
நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே......

எம்ஜிஆர் மீது மயக்கம் கொண்ட கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். அவர் போடும் டைட்டான சட்டையை இன்றும் விரும்பி அணிகிறேன். நேர்மை, நியாயத்திற்காக வாதாடும் குணம், ஏழைகள் மீது கருணை, முதியோர் மற்றும் உழைப்பாளிகளுடன் தோழமை, குழந்தைகள் மீதான பிரியம், அழகான பெண்களுடன் காதல் லீலைகள், தத்துவம், போன்ற எம்ஜிஆரின் முத்திரைகள் தெரிந்தோ தெரியாமலோ என்னைப் போன்ற லட்சக்கணக்கான ஆண்களின் அடையாளமாகி விட்டுள்ளது.


இறைவன் இருப்பதை நானறிவேன் என்னை அவனே தானறிவான்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்
உன் கண்ணில் ஒருதுளி நீர்வழிந்தாலும் உலகம் அழவேண்டும்
மாபெரும் சபையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்
கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் தரவேண்டும்
என்ற வரிகள் யாவும் எனக்காக எழுதப்பட்டது போல் தோன்றுகின்றன. இருள் வந்த போது ஒளி ஒன்று உண்டு என்ற நம்பிக்கையை எம்ஜிஆரின் பாடல்கள் ஏற்படுத்துகின்றன.
கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், ஆலங்குடி சோமு, நா.காமராசன், முத்துலிங்கம், பூவை செங்குட்டவன், உள்ளிட்ட பல பாடலாசிரியர்கள் எம்ஜிஆருக்காக எழுதினாலும் அவை அத்தனையும் எம்ஜிஆரின் ஒற்றைக்குரலாகவே ரசிகர்களுக்கு ஒலித்தது.


எம்ஜிஆரை நான் ஒருமுறைதான் நேரில் பார்த்திருக்கிறேன். அப்போது எனக்கு பதின்பருவம். மக்கள் குரல் மாலை நாளிதழில் டி.ஆர்.ஆர். கட்டுரைகளை விரும்பிப் படிப்பேன். எனது அரசியல் அரிச்சுவடி அதுதான்.


அண்ணா நினைவு நாளில் அவரது நினைவிடத்திற்கு எம்ஜிஆர் மலர் வளையம் வைக்க வருகிறார் என அறிந்து காலை 6 மணிக்கே கடற்கரைக்கு போய்விட்டேன். கையில் மாலை வாங்கிய மக்கள் குரல் இருந்தது. 8 மணிக்கு செக்க செவேல் என சூரியனை விட பிரகாசமாக ஜொலித்தபடி வந்தார் எம்ஜிஆர்.

ஒளியே ரூபமெடுத்து நடந்துவருவது போல் இருந்த்து. வெள்ளை கரை வேட்டி சட்டையுடன் வழக்கமான தொப்பியும் கண்ணாடியும் அணிந்திருந்த எம்ஜிஆர் தொண்டர்களிடம் வணக்கம் கூறியபடியும் கைகளை உயர்த்தி ஆட்டியபடியும் சென்றுக்கொண்டிருந்தார். ஆரவாரமும் கரவொலிகளும் அடங்கவே இல்லை.இத்தனை ஆர்ப்பாட்டத்திலும் என்கையில் இருந்த மக்கள் குரலை பார்த்துவிட்டார் எம்ஜிஆர். நான் அதனை கையில் பிடித்து அவரை நோக்கி அசைத்துக் கொண்டிருந்தேன். என் அருகில் வந்த அவர் என் கன்னத்தைத் தொட்டு தடவி சிரித்தபடி சென்றுவிட்டார். எனக்கு சொர்க்கத்தில் மிதக்கிற நினைப்பு


எங்கவீட்டுப் பிள்ளையில் நான் ஆணையிட்டால் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றுதான். எம்ஜிஆரின் சுறுசுறுப்பும் நடன அசைவுகளும் டிஎம்எஸ் சின் கம்பீரமான குரலும் வாலியின் வைர வரிகளும் கொண்ட பாடல் அது. இந்தப் பாட்டு எனக்கு மட்டுமின்றி என்னை விட 40 வயது குறைந்த விக்கிக்கும் பிடித்த பாட்டாக இருப்பதுதான் ஆச்சரியமளிக்கிறது.


எம்ஜிஆரின் புகழ் தலைமுறைகளைக் கடந்து தொடர்வதற்கான சாட்சி எனக்கு என் வீட்டிலேயே இருக்கிறது.
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி.தானுங்க.....

தமிழ்த்திரையுலகம் கண்ட ஜோடிப் பொருத்தங்களில் முதன்மையானது எம்ஜிஆர் ஜெயலலிதா ஜோடிதான். எம்.ஜிஆரும் ஜெயல லிதாவும் சேர்ந்து நடித்த படங்களின் பட்டியல் நீளமானது. இதில் முக்கியமாக ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண், குடியிருந்த கோவில், ராமன் தேடிய சீதை, அன்னமிட்டகை, ஒருதாய் மக்கள்,
ரகசிய போலீஸ்115, காவல்காரன், மாட்டுக்கார வேலன்,தேடி வந்த மாப்பிள்ளை, முகராசி, புதிய பூமி. முகராசி ஆகிய படங்கள் உடனடியாக நினைவுக்கு வருகின்றன.

குமரிக்கோட்டம் படத்தில் ஜெயலலிதாவை எம்ஜிஆர் ஆணவக்காரியாக சித்தரித்து பாடுவார் என்பதால் அப்படமும் பாடலும் கலைஞர் டிவியில் அடிக்கடி இடம் பெறுவதுண்டு.
அரசியலை விட சினிமாவில்தான் ஜெயலலிதா மனம் கவர்கிறார். அதுவும் எம்ஜிஆர் படங்களில் அவரது திறமை மிக அற்புதமாக வெளிப்படுகிறது.

ரகசிய போலீஸ் 115ல் கணவன்-மனைவியாக எம்ஜிஆர்-ஜெயல லிதா சண்டை போடும் காட்சியும் குடியிருந்த கோவிலில் நீயேதான் என் மணவாட்டி என ஊஞ்சலில் ஆடிப்பாடுவதும் எனக்கு மிகவும் பிடித்த திரைக்காட்சிகள்.


அதெல்லாம் விடுங்கள் .ஆறுகுணங்கள் கொண்டவளாம் ஒரு பாவை என்று ராமன் தேடிய சீதையில் எம்ஜிஆரும் எனது மடியில் வா ராமா என எம்ஜி ராமச்சந்திரனை ஜெயலலிதா அழைப்பதும் பரவசமான காதல் காட்சிகளில் ஒன்று

திரைவாழ்வைப் போல எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் நிஜவாழ்விலும் ஜோடி சேர வேண்டும் என விரும்பிய ரசிகர்களில் நானும் ஒருவன்தான்.நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க என்று ஒளிவிளக்கில் அவர்கள் ஆடிப்பாடினார்கள். ராமன் தேடிய சீதையில்தான் எம்ஜிஆரும் ஜெயல லிதாவும் மணக்கோலத்தில் வரும் காட்சி வரும். அது வரலாற்றால் பதிவு செய்யப்பட்ட அற்புதக் காட்சியாகும்.
----------------------------------------------------------------------------------------------------

courtesy - net
 
 
 
 
 

Richardsof
17th November 2017, 09:21 PM
எம்ஜிஆரின் படங்களில் டாப் டென் பட்டியலிட சொன்னால் எனது தேர்வு இதுதான்
1. அன்பே வா
2 குடியிருந்த கோவில்
3 உலகம் சுற்றும் வாலிபன்
4. நம்நாடு
5. நான் ஏன் பிறந்தேன்
6.எங்க வீட்டுப் பிள்ளை
7 இதயக்கனி
8.பணம் படைத்தவன்
9. படகோட்டி
10.ஆயிரத்தில் ஒருவன்
இதில் முதல் படத்தைத் தவிர மற்ற படங்களை விருப்பம் போல நம்பர்களை மாற்றிக் கொள்ளலாம்.
எல்லா படங்களிலும் வசனம், காட்சி, பாடல்கள் மூலம் கருத்துகளை சொன்னவர் எம்ஜிஆர்.
தவறு செய்தால் தட்டிக் கேட்பதும், குழந்தைகள், பெண்களை நேசிப்பதும் எம்ஜிஆரின் பார்முலா.இன்றுவரை ரஜினி, கமல், விஜய் வரை இந்த பார்முலாதான் நீடிக்கிறது. எவ்வளவு நாளைக்கு நல்லவனாவே இருப்பது போரடிக்குது என்று அஜித் பேசும் வசனமும் இதன் நீட்சிதான்.
மனிதன் தவறுகளை செய்பவன்தான் .ஆனால் திருத்திக் கொள்ள வேண்டும் என்பது எம்ஜிஆரின் அவதானிப்பு. திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் வருந்தாத உள்ளங்கள் பிறந்தென்ன லாபம் இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற எம்ஜிஆரின் பணம் படைத்தவன் படத்துக்காக வாலி எழுதிய பாடல் வரிகள் பசுமரத்தாணி போல சிறுவயதில் என் மனதுக்குள் பதிந்து விட்டன. இன்று வரை அதன் தடயம் அழியவே இல்லை.

எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் தமிழக மக்களின் மனசாட்சியின் குரலாக ஒலிக்கிறது.

courtesy - net

Richardsof
17th November 2017, 09:25 PM
எம்ஜிஆர் எனும் நாமம் !..


எம்ஜிஆர் எனும் நாமம் !.. எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் ..
வண்ணத் திரையினில் வலம்வந்தார் நாயகனாய்
எண்ணமெலாம் எம்ஜிஆர் எனும்நினைப்பை ஊட்டிநின்றார்
கண்ணுக்குள் பதியும்படி காட்சிகள் பலவமைத்து
மண்ணிலுள்ளோர் மனமெல்லாம் வந்தமர்ந்தார் எம்ஜிஆர் !ஏழையாய் வாழ்ந்தாலும் கோழையாய் வாழாமல்
வாழ்நாளை வளமாக்கி வாழ்வதற்கு அவருழைத்தார்
நாளையதை மனமிருத்தி நல்லவற்றைத் தேர்ந்தெடுத்து
ஆழமுள்ள ஆள்மையுடன் அவர்வாழத் தொடங்கினரே !


தாய்ப்பாசம் அவரிடத்துப் பெருக்கெடுத்து ஓடியதே
தாய்க்குலத்தின் பெருமைகளை தன்படத்தில் காட்டினரே
வாய்க்கின்ற தருணமெலாம் மனிதகுல உயர்வினுக்கு
வடிகாலாய் இருக்கும்படி வகுத்தளித்தார் வசனமெலாம் !

எம்ஜிஆர் படங்களிலே எப்பாட்டு வந்திடினும்
அப்பாட்டில் பலகருத்தை அவர்புகுத்த முனைந்திடுவார்
படம்பார்ப்போர் வாழ்க்கையிலே புடம்போட்டு வருவதற்கு
பாட்டமைத்த எம்ஜிஆர் பாடமாய் ஆகிநின்றார் !

தானதர்மம் செய்வதுதான் தலைசிறந்த தருமமென
தன்வாழ்வில் அதைப்புகுத்தி இயன்றவரை உதவிநின்றார்
பணம்கிடைத்த போதெல்லாம் பலபணிகள் அவர்செய்து
பாமரரின் தோழமையை பரிசெனவே பெற்றுநின்றார் !

வெள்ளித்திரை நாயகனாய் வீதியெல்லாம் வந்தாலும்
உள்ளமெலாம் உயர்கருத்தை உவந்தேற்ற விரும்பினரே
நல்லமனம் அவரிடத்து இயல்பாக அமைந்ததனால்
நாட்டுமக்கள் வாழ்வுபற்றி நாளுமவர் எண்ணினரே !

நடிக்கின்ற காட்சிகளில் குடிக்கின்ற காட்சிகளை
வெறுத்துவிட்ட நாயகனாய் வெற்றிநடை போட்டாரே
குடிப்பழக்கம் தனையொதுக்கி குடிமக்கள் தனைப்பற்றி
நடிப்பாலும் உணர்த்திநின்ற நாயகனே எம்ஜிஆர் !

ஆத்திகம் நாத்திகம் அனைத்தையும் அரவணைத்தார்
அநியாயம் கண்டவுடன் ஆத்திரமும் அவர்கொண்டார்
ஆதாலால் அரசியலை அவசியமாய் ஆக்கிக்கொண்டு
ஆட்சியினை வசமாக்க ஆக்கமுடன் அவருழைத்தார் !

மக்களது ஆணையுடன் வந்தமர்ந்தார் எம்ஜிஆர்
மக்களெலாம் அவராலே மறுவாழ்வு பெற்றனரே
பாமரர்க்கு பயனைநல்கும் பலத்திட்டம் அவர்கொணர்ந்தார்
பார்த்தவர்கள் வியந்தபடி போற்றினரே எம்ஜிஆரை !




படகோட்டியாய் இருந்து பலதுன்பம் பட்டாலும்
எங்கவீட்டுப் பிள்ளையாய் எம்ஜிஆர் இருந்துவிட்டார்
நாடோடி மன்னனாய் நற்கருத்தை விதைத்தஅவர்
ஊர்கூடித் தேர்ந்தெடுக்க உட்கார்ந்தார் ஆட்சியிலே !

பட்டிதொட்டி எல்லாமே எம்ஜிஆர் எனும்வெளிச்சம்
பட்டுத் தெறித்தனால் பலருமே பயனடைந்தார்
கிட்டவந்து தொட்டுப்பார்க முட்டிமோதி நின்றார்கள்
அத்தனையும் எம்ஜிஆரின் ஆளுமையின் மகத்துவமே !

புதுக்கட்சி புதுப்பாடம் புதுஆட்சி அத்தனையும்
புறப்பட்டு வரச்செய்த புரட்சிதான் எம்ஜிஆர்
நிதம்மக்கள் வாழ்க்கையிலே நெருங்கிநின்ற உறவாக
உரம்பெற்று வளர்ந்தவர்தான் உணர்வுநிறை எம்ஜிஆர் !

எம்ஜிஆர் எனும்நாமம் இன்றளவும் ஒலிக்கிறது
எல்லோரும் அவர்பெயரை இதயத்தில் வைத்துள்ளார்
தமிழ்நாட்டின் விடிவுக்காய் தனைக்கொடுத்த எம்ஜிஆர்
தமிழர்களின் மந்திரமாய் தானுயர்ந்து நிற்கின்றார் !

courtesy - எம் . ஜெயராமசர்மா … net

Richardsof
17th November 2017, 09:49 PM
10 ஆயிரம் சதுர அடியில் எம்ஜிஆர் உருவத்தை ஓவியமாக வரைந்த அரசுப் பள்ளி மாணவிகள்

பெரம்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் பள்ளி மாணவிகள் 100 பேர் சேர்ந்து 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் உருவத்தை வரைந்து சாதனை படைத்துள்ளனர்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகிறது. இதன் ஒருபகுதியாக பெரம்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் நேற்று 100 அடி நீளம், 100 அடி அகலத்தில் எம்.ஜி.ஆர் உருவத்தை ஓவியமாக வரையும் நிகழ்ச்சி நடைபெற்றது.




நிகழ்ச்சியில், பெரம்பலூர், பாடாலூர், சத்திரமனை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகள் 100 பேர், ஓவிய ஆசிரியர்கள் வேல்முருகன், செல்வராஜ் ஆகியோர் மேற்பார்வையில் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் எம்ஜிஆர் உருவத்தை தத்ரூபமாக வரைந்து சாதனை படைத்தனர். இந்த ஓவியத்தை பார்த்து ரசித்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவிகளை பாராட்டினர்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்மொழி தேவி ஆகியோரும் ஓவியம் வரைந்த மாணவிகளைப் பாராட்டினர்.

orodizli
18th November 2017, 10:03 PM
திரையரங்குகளில் கலக்கும் மக்கள் திலகம் அவர்தம் தீர்க்க தரிசன காவியம் "அரச கட்டளை" தற்போது சன் லைப் சானலில் காட்சிக்கு நடை பெறுகிறது...

orodizli
18th November 2017, 10:10 PM
கலையுலக சக்ரவர்த்தி புரட்சி நடிகர் காவியங்களில் டிஜிட்டல் வடிவில் தயாராகும் படைப்புகள்... "ஆசை முகம்", "🎂குடும்ப தலைவன்"...

Richardsof
19th November 2017, 07:03 AM
திரைப்படங்களை அரசியல் ஆயுதமாக்கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்!


தனது படத்தின் தொடக்கக்காட்சியில் வரும் பேனரிலேயே எதிர்க்கட்சிக் கொடியை தைரியமாக பட்டொளி வீசிப்பறக்கவிட்டவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அதனால்தான் அவர் இன்றும் தலைவராக இருக்கிறார். பொதுமக்களின ஊடகமான திரைப்படத்தை எப்படிப் பயன்படுத்தினால் எவ்வளவு உயரத்தை அடையமுடியும் என்பதை வெற்றிகரமாக நிரூபித்தவர், எம்.ஜி.ஆர்.

இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தவர் மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன். இதன் சுருக்கம்தான் எம்.ஜி.ஆர். சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தாயார் சத்யாவுடன் தமிழகம் வந்தார். கும்பகோணத்தில் ஆரம்பக்கல்வி பயின்றார். குடும்பச் சூழல் காரணமாக படிப்பு தடைபட்டது. எம்.ஜி.ஆரும் அவரது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியும் நாடகங்களில் நடித்து வந்தனர். திரைப்படத்துறை வளர்ச்சி பெற்றுவந்த காலம் அது. அண்ணனும் தம்பியும் அந்தத் துறையிலும் கவனம் செலுத்தினர். வாய்ப்புகள் மிக அரிதாகவே கிடைத்துவந்தன.

‘சதி லீலாவதி’ (1936) படத்தின் மூலம் எம்.ஜி.ஆர் திரையுலகில் அறிமுகமானார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம். எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய இப்படத்தில் எம்.கே.ராதா கதாநாயகன். கலைவாணர் என்.எஸ்.கே, பாலைய்யா உள்ளிட்ட பலருக்கும் இதுதான் முதல் படம்.



பிரபல நடிகர்களாக இருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா போன்றவர்கள் நாயகர்களாக நடித்த அசோக்குமார், ரத்னகுமார் உள்ளிட்ட படங்களில் சிறுபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகளே எம்.ஜி.ஆருக்குக் கிடைத்து வந்தன. அவர் சோர்ந்துவிடவில்லை. முயற்சிகளைத் தொடர்ந்துகொண்டே இருந்தார். டி.ஆர்.ரகுநாத் இயக்கிய தமிழறியும் பெருமாள், கிருஷ்ணன்-பஞ்சு இயக்கிய பைத்தியக்காரன் உள்ளிட்ட படங்களிலும் எம்.ஜி.ஆருக்கு வாய்ப்புக் கிடைத்தது.

அவரது விடாமுயற்சி வீண்போகவில்லை. கோவையில் எம்.ஜி.ஆரும் கலைஞரும் ஒன்றாகத் தங்கி திரையுலக வாய்ப்புகளைப் பெற்று வந்தனர். ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் வெளியான ‘அபிமன்யு’ (கலைஞர் வசனம்- ஆனால் அவரது பெயர் இடம் பெறவில்லை) படத்தில் அபிமன்யுவின் அப்பா அர்ஜூனன் கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். மகனை இழந்த சோகத்துடன், நியாயம் கேட்கும் வசனங்கள் இடம்பெற்ற காட்சிகளில் எம்.ஜி.ஆரின் நடிப்பு கவனம் பெற்றது. எம்.ஜி.ஆரின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அது துணை நின்றது.

‘ராஜகுமாரி’ (1947) படத்தில் முதன்முதலாக நாயகன் ஆனார் எம்.ஜி.ஆர். ஏறத்தாழ 10 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு அவருக்குக் கிடைத்த வாய்ப்பு. இந்தப் படத்திற்கும் கலைஞர்தான் வசனம். படம் வெற்றிபெறவே, வாய்ப்புகள் தொடர்ந்தன. எல்லீஸ் ஆர் டங்கன் இயக்கத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் கலைஞரின் திரைக்கதை-வசனத்தில் உருவான ‘மந்திரிகுமாரி’ (1950) படத்தில், கொள்ளையர்களைப் பிடித்து நீதிமுன் நிறுத்தும் தளபதி வேடத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார்.



இந்த கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர்தான் நடிக்கவேண்டும் என இயக்குநரிடமும் தயாரிப்பாளரிடமும் போராடியவர் கலைஞர். படம் பெருவெற்றி பெறவே எம்.ஜி.ஆரின் திரையுலகப் பயணம் சிறப்பாகத் தொடர்ந்தது. கலைஞரின் வசனத்தில் ‘மருதநாட்டு இளவரசி’ படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்த வி.என்.ஜானகி, பின்னாளில் அவரது வாழ்க்கைத்துணையானார். மருதநாட்டு இளவரசிக்கு கலைஞர்தான் வசனம் எழுதவேண்டும் என படத்தயாரிப்பாளர்களிடம் வலியுறுத்தியவர் எம்.ஜி.ஆர். “மிருகஜாதியிலே புலி, மானை வேட்டையாடுகிறது. மனித ஜாதியிலே மான், புலியை வேட்டையாடுகிறது” என்கிற புகழ்பெற்ற வசனம் இடம்பெற்றது இப்படத்தில்தான்.

எம்.ஜி.ஆர் தொடர்ந்து நடித்தவை, சரித்திர சாயல்கொண்ட படங்களே என்றாலும் அவற்றில் அவருடைய கதாபாத்திரங்கள் பெரும்பாலும், மக்களின் ஜனநாயகக் குரலை ஆட்சியாளர்களிடம் முன்வைப்பதாகவே அமைந்திருந்தன. எம்.ஜி.ஆர். தனக்கான ஃபார்முலாவை மெல்ல மெல்ல உருவாக்கத் தொடங்கினார். மகாதேவி,, புதுமைப்பித்தன், குலேபகாவலி, சக்கரவர்த்தி திருமகள், தமிழின் முதல் ‘ஏ’ சர்டிபிகேட் (திகில் காட்சிகளுக்காக) படமான ‘மர்மயோகி’ உள்ளிட்டவை அத்தகைய படங்களே. தமிழ் சினிமாவின் முதல் வண்ணப்படமான (கேவா கலர்) ‘அலிபாபாவும் நாற்பது திருடர்கள்’ படத்திலும் எம்.ஜி.ஆருக்கேற்றபடி திரைக்கதையும் காட்சிகளும் அமைக்கப்பட்டன.

படம் பார்க்கவரும் எளிய மக்களின் மனதில் தேங்கிக் கிடக்கும் குமுறல்களை திரையில் எதிரொலிக்கும் நாயகனாக எம்.ஜி.ஆர். இருந்தார். அவர்களுக்காக ஆட்சியாளர்களுடன் போராடுபவராகவும், எதிரிகளை வீழ்த்தி நீதி கிடைக்கச் செய்பவராகவும் எம்.ஜி.ஆரின் படங்கள் அமைந்தன. தாங்கள் கனவில் காணும் ஒரு நாயகன் இதோ நிஜத்தில் வந்துவிட்டார் என ரசிகர்கள் எம்.ஜி.ஆரைக் கொண்டாடினர். பணக்காரர்களிடம் பறித்து ஏழைகளுக்கு வழங்கும் ராபின் ஹூட் டைப் படமான மலைக்கள்ளன், எம்.ஜி.ஆருக்குப் புகழ் பெற்றுத் தந்தது. (நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் கதைக்கு வசனம் எழுதியவர் கலைஞர்)தமிழக நாட்டுப்புறக் கதை மரபிலான ‘மதுரை வீரன்’ படம் எம்.ஜி.ஆரின் திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல். செருப்புத் தைக்கும் சமுதாயத்தினரால் வளர்க்கப்படும் மதுரைவீரன் பாத்திரத்தில் அவர் நடித்தார். (வசனம்- கவிஞர் கண்ணதாசன்) திரையிடப்பட்ட அரங்குகள் பலவற்றிலும் 100 நாட்களைக் கடந்து ஓடியது. மக்களின் நாயகனாக எம்.ஜி.ஆர் முழுப் பரிமாணம் பெற்றது மதுரைவீரன் படத்தில்தான்.



தொடர்ந்து ஏற்றமும் இறக்கமுமாக அவருடைய திரைப்பயணம் அமைந்த நேரத்தில், தனது வெற்றிசூத்திரத்தின்படி சொந்தமாக ஒரு படம் தயாரித்து-இயக்கவும் முடிவு செய்தார் எம்.ஜி.ஆர். அந்தப் படம்தான் ‘நாடோடி மன்னன்’. திரையுலகில் போராடி சம்பாதித்ததையெல்லாம் முதலீடு செய்து, இருவேடங்களில் அவரே நடித்தார். படத்தின் ஒரு பகுதி மட்டும் கலரில் எடுக்கப்பட்டது. “இப்படம் வெற்றிபெற்றால் நான் மன்னன். இல்லையென்றால் நாடோடி” என்று எம்.ஜி.ஆர் சொன்னார். திரையுலகின் முடிசூடா மன்னனாக அவரை மாற்றியது ‘நாடோடி மன்னன்’ (1958) படத்தின் பெரும் வெற்றி. (வசனம்-கவிஞர் கண்ணதாசன்). இப்படத்தின் மூலம் ‘புரட்சி நடிகர்’ என்ற பாராட்டும் அடைமொழியும் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்தது. (இந்தப் பட்டத்தை வழங்கியவர், கலைஞர்). எம்.ஜி.ஆர், தான் வெறும் நடிகனல்ல, தனக்கேற்றபடி திரைப்படத்தை உருவாக்கும் படைப்பாளி என்பதை நாடோடி மன்னன் வெற்றியின் மூலம் நிரூபித்தார்.

அதன்பிறகு அவர் நடித்து வெளியான சரித்திரக் கதை படங்களாக இருந்தாலும் சமூகப் படங்களாக இருந்தாலும் எல்லாமும் அவருக்கேயுரிய ஃபார்முலாவுடன்தான் அமைந்தன. (பாசம், அன்பேவா போன்ற ஒரு சிலபடங்கள் தவிர) வசனங்களை எழுதிய கலைஞர் மு.கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், ஆர்.கே.சண்முகம், சொர்ணம் உள்ளிட்ட யாராக இருந்தாலும், பாடல்களை எழுதிய கவிஞர்கள் கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம், நா.காமராசன் போன்றவர்களாக இருந்தாலும், இசையமைப்பாளர்களான எஸ்.எம்.சுப்பையா(நாயுடு), விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் ஆகியோரும், படங்களை தயாரித்தவர்களும் இயக்கியவர்களுமான சின்னப்பாதேவர், டி.ஆர்.ராமண்ணா, ப.நீலகண்டன், கே.சங்கர் உள்ளிட்டவர்களும் எம்.ஜி.ஆரை மனதில் வைத்தே தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தினர். எம்.ஜி.ஆருக்கேற்றபடி சிந்திப்பவர்கள்தான் அவருடைய படங்களில் தொடரும் சூழ்நிலை அமைந்தது.

தி.மு.கவில் எம்.ஜி.ஆர் இருந்ததால் கட்சியால் தனக்கும், தன்னால் கட்சிக்கும் பலன் இருக்கும்வகையில் திரைப்படங்களில் கவனம் செலுத்தினார். அவருடைய எம்ஜியார் பிக்சர்ஸின் பேனரே ஓர் ஆணும் பெண்ணும் தி.மு.க கொடியை உயர்த்திப் பிடித்திருப்பதுதான். (தனிக்கட்சி தொடங்கியபிறகு, அது அ.தி.மு.க கொடியாக ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் மாறியது). பகுத்தறிவுக் கொள்கையை அன்றைய தி.மு.க உறுதியாகக் கடைப்பிடித்ததால் எம்.ஜி.ஆர் தனது படங்களில் மூடநம்பிக்கை சார்ந்த காட்சிகளை அனுமதிக்கமாட்டார். கதையோட்டத்திற்கு அது தேவையென்றாலும் அவர் அதில் இடம்பெறமாட்டார். திருமணக் காட்சிகள் பெரும்பாலும் சுயமரியாதை திருமணங்களாகவே இருக்கும். புரோகிதர் இருக்கமாட்டார்.



கட்சிக்கொடியின் இருவண்ணமான கறுப்பும் சிவப்பும் கதாபாத்திரங்களின் உடை, மேஜை விரிப்பு, திரைச்சீலை, சுவரின் நிறம் எனப் பலவற்றிலும் வெளிப்படும். எம்ஜியார் பிக்சர்ஸின் தயாரிப்பான ‘அடிமைப் பெண்’ (இயக்குநர் கே.சங்கர்) படத்தில், உலகம் அறியாமல் வளர்ந்த எம்.ஜி.ஆருக்கு சூரியனைக் காட்டுவார் ஜெயலலிதா. அது என்ன என்பதுபோல எம்.ஜி.ஆர் சைகையால் கேட்க, “அதுதான் உதயசூரியன்” என்பார் ஜெயலலிதா. இப்படி, தி.மு.கவின் சின்னமான உதயசூரியனும் அவரது பல படங்களில் அடையாளம் காட்டப்பட்டது. பத்திரிகை படிக்கும் காட்சி என்றால் நம்நாடு, முரசொலி போன்ற தி.மு.க பத்திரிகைகளைத்தான் எம்.ஜி.ஆர் படிப்பார். (தனிக்கட்சி தொடங்கிய பிறகு, ‘தென்னகம்’ பத்திரிகை படிப்பதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றன). தி.மு.கவை நிறுவியவரான அறிஞர் அண்ணாவின் படத்தைக் காட்டி அவரைப் புகழும் வசனமோ, பாடல்களோ தன் படத்தில் இடம்பெறுவதை எம்.ஜி.ஆர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த சூழலில் எம்.ஜி.ஆரின் இந்த பங்களிப்பு பாமர மக்களிடம் கட்சிக்கான செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது. அவருக்கும் எம்.எல்.சி பதவி கிடைக்க வழி வகுத்தது. பின்னர் 1967ல் அவர் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் பரங்கிமலை தொகுதியில் வென்று எம்.எல்.ஏவானார். 1971லும் வென்றார். சிறுசேமிப்புத்துறை தலைவர் என்ற பொறுப்பையும் பெற்றார். சினிமாவில் தனக்கென்று தனி பாணியைப் பின்பற்றுவதில் அவர் உறுதியாக இருந்தார். மது, புகைப்பழக்க காட்சிகளில் நடிக்க மாட்டார். பெண்களுக்கு ஆபத்து என்றால் எங்கிருந்தாலும் தாவி வந்து உதவுவார். ஏழைகளுக்குத் தோழனாக இருப்பார். எதிரிகளைப் பந்தாடுவார்.

எம்.ஜி.ஆரின் நடிப்பு, அலட்டிக்கொள்ளாத வகையைச் சேர்ந்தது. அவருடைய ரசிகர்களுக்கு அதுதான் பிடிக்கும். கவர்ந்திழுக்கும் புன்னகை, நெருக்கமான காதல் காட்சிகள், அசத்தும் சண்டைக்காட்சிகள், நெஞ்சில் மையம் கொள்ளும் பாடல்கள், சமுதாயத்திற்கானக் கருத்துகளைக் கொண்ட வசனங்கள் இவற்றின் அடிப்படையிலானதுதான் அவரது படம். இந்த ரெடிமேட் ஃபார்முலாவுக்குள் உடன்பட முடியாத புகழ்பெற்ற இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஒருநேரத்தில் எம்.ஜி.ஆர் பக்கம் கவனத்தைத் திருப்பவில்லை என்றாலும் பிறகு அவர்களும் அவரை வைத்து படம் இயக்கினார்கள்.



ஏ.வி.எம் நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான ‘அன்பே வா’ (இயக்கம்-ஏ.சி.திருலோகச்சந்தர்), ஜெமினி நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான ‘ஒளிவிளக்கு’ ஆகியவை எம்.ஜி.ஆர் நடித்தவையாகும். (ஒளிவிளக்கு, எம்.ஜி.ஆரின் 100வது படம்). பத்மினி பிக்சர்ஸ் அதிபர் பி.ஆர்.பந்தலு தயாரித்து இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ தமிழ்த் திரையின் முக்கியமான படங்களில் ஒன்று. நீண்டகாலம் எம்.ஜி.ஆர் பக்கம் திரும்பாமல் இருந்த இயக்குநர் ஸ்ரீதர் பின்னர் ‘உரிமைக்குரல்’, ‘மீனவநண்பன்’ ஆகிய படங்களை எம்.ஜி.ஆரை வைத்து இயக்கினார். (அண்ணா நீ என் தெய்வம் என்ற படத்தையும் அவர் இயக்கினார். எம்.ஜி.ஆர் முதல்வரானதால் படம் பாதியில் நின்றுபோய், பின்னர் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பிறகு பாக்யராஜ் இயக்கத்தில் ‘அவசர போலீஸ் 100’ என்ற தலைப்பில் எம்.ஜி.ஆர் நடித்த காட்சிகளுடன் வெளியானது). புராணப்படங்களை வெற்றிகரமாகத் தந்த இயக்குநர் ஏ.பி.நாகராஜன் எம்.ஜி.ஆரை வைத்து ’நவரத்தினம்’ என்ற படத்தை இயக்கினார். இவர்களும் எம்.ஜி.ஆர் ஃபார்முலாவுக்குட்பட்டே இப்படங்களை இயக்கினர்.

துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் மீண்ட எம்.ஜி.ஆரின் குரல் பாதிக்கப்பட்டபோதும், படங்களில் அவரே சொந்தக் குரலில் பேசினார். அவரது ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். அதுபோல சண்டைக் காட்சிகளில் வாள் சுழற்றுதல், சிலம்பம், மான்கொம்பு, சுருள்கத்தி சுழற்றுதல், பூட்டுப்போட்டு தாக்குதல் எனப் பலவகைகளைக் கையாண்டு ரசிகர்களைக் கவர்ந்தார். ரிக்*ஷாக்காரன் படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது(பாரத்) கிடைத்தது. தமிழ் நடிகர்களில் முதலில் தேசிய விருது வாங்கியவர் எம்.ஜி.ஆரே. அவர் நடித்த மொத்த படங்கள் 136. கடைசியாக வெளியான படம் எம்.ஜி.ஆரின் இயக்கத்தில் உருவான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’(1978). படவேலைகள் நிறைவடைந்து எம்.ஜி.ஆர் முதல்வரானபிறகு வெளியானது. அவரது மறைவுக்குப்பிறகு வெளியான ‘அவசர போலீஸ் 100‘, ‘நல்லதை நாடு கேட்கும்’ ஆகியவற்றில் அவர் நடித்து வெளிவராத படங்களின் காட்சிகள் இடம்பெற்றன.

தனது படங்கள் மூலம் தன்னுடைய திரையுலக-அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்துவதில் எம்.ஜி.ஆர் தீவிரமாகவும் திட்டமிட்டும் கவனம் செலுத்தினார். அன்று தென்னிந்திய (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) நடிகர்களிலேயே அதிக சம்பளம் பெற்றவர் எம்.ஜி.ஆர்தான் (6 முதல் 8 லட்ச ரூபாய் வரை). மதுரை வீரனில் தொடங்கி நாடோடி மன்னன் வழியாகப் பல படங்களிலும் ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்காகவும் அவர் பேசிய வசனங்களும், வாயசைத்த பாடல்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்கு அடிப்படையாக அமைந்தன.




‘படகோட்டி’ படம் மூலம் மீனவ சமுதாயத்திடம் அவர் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை அவருடைய கட்சிக்கான வாக்கு வங்கியாக நிலைபெற்றிருக்கிறது. தொழிலாளி, விவசாயி, எங்க வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல படங்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்குத் துணை நின்றன. தி.மு.கவிலிருந்து அவர் நீக்கப்பட்டு, தனிக்கட்சியான அ.தி.மு.கவைத் தொடங்கிய சூழ்நிலையில் வெளியான ‘ரிக்*ஷாக்காரன்’ படத்திற்கு நெருக்கடி வந்தபோது, பல ஊர்களிலும் ரிக்*ஷா தொழிலாளர்கள் அந்தப் படத்திற்கு பாதுகாப்பாக இருந்து, திரையிடச் செய்தனர். எம்.ஜி.ஆரின் தயாரிப்பு- இயக்கத்தில் அன்றைய சூழலில் பெரும்பொருட்செலவில் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் வெளியீட்டின்போது, தி.மு.க ஆட்சி கொடுத்த நெருக்கடியால் சென்னையில் சுவரொட்டி ஒட்டமுடியாத நிலை ஏற்பட்டது. அதற்குப் பதிலாக ஸ்டிக்கர்கள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. அதனை வாகனங்களிலும் கடைகளிலும் ஒட்டும் பணியில் அவருடைய ரசிகர் மன்றத்தினர் முழுமையாக ஈடுபட்டனர்.

தனது ரசிகர்களை மன்றங்கள் என்ற அமைப்பின் கீழ் ஒன்றிணைத்து அதனை அரசியல் தளத்திற்கு நகர்த்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். 1972ல் அ.தி.மு.க என்ற தனிக்கட்சியைத் தொடங்கியபிறகு, திரைப்படத்தின் சில காட்சிகளையும், பாடல்களையும் நேரடி அரசியல் பிரச்சாரமாக்கி, 5ஆண்டுகளில் ஆட்சியையும் பிடித்தவர் அவர். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். மும்முறை தொடர்ச்சியாக அவரது கட்சி தேர்தலில் வென்றது. 11ஆண்டுகாலம்(1977ஜூன்-1987டிசம்பர்) தமிழகத்தின் முதலமைச்சராக செயல்பட்டார்.

திரைப்படங்களை தன்னுடைய பிரச்சார ஊடகமாக, அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். அவரது இந்த அணுகுமுறையைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் உண்டு. எனினும், திரைப்படங்களை நுட்பமாகப் பயன்படுத்தி அவர் வெற்றி பெற்றார் என்பது மறுக்கமுடியாதது. எம்.ஜி.ஆருடைய படங்கள் சில, வெளியான காலத்தில் வணிகரீதியில் தோல்வியடைந்துள்ளன. ஆனால், பின்னர் அவை திரும்பத் திரும்ப வெளியிடப்பட்டு வசூலைக் குவித்தன. அவரது படப்பாடல்கள்தான் இன்றளவும் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருப்பதுடன் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரப் பாடல்களாகவும் நிலைத்திருக்கின்றன. தொலைக்காட்சி, இணையதளம் என நவீனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்த நிலையிலும் எம்.ஜி.ஆரின் புகழ் ஒளிவீசுகிறது.

எம்…ஜி….ஆர்… என்ற ஆங்கில எழுத்துகள், இங்கே தமிழுக்குரிய எழுத்துகளைப்போல ஆகிவிட்டன...

-கோவி.லெனின்.

Richardsof
19th November 2017, 05:57 PM
MGR’s Aayirathil Oruvan Screening in IFFI at G0A



20-11-17 அன்று கோவாவில் தொடங்க உள்ள (International Film Festival of India) 48வது உலக திரைப்பட விழாவில் புரட்சி தலைவரும் புரட்சி தலைவியும் நடித்த “ஆயிரத்தில் ஒருவன்”திரைப்படம் பங்குபெற தேர்வாகியுள்ளது.

அதனை Digitalல் வடிவமைத்தவன் என்ற முறையில் எனக்கு விமான டிக்கட், மற்றும் நட்சத்திர அந்தஸ்த்து விடுதியில் உபசரிப்பு போன்றவைகளுடன் விழாவில் கலந்து கொள்ள சிறப்பு அழைப்பாளராக மத்திய அரசு அழைப்பு அனுப்பியுள்ளது, எங்கள் முயற்சிக்கு கிடைத்த மாமரியாதை என பூரிப்படைகிறேன்.

இதனை எற்பாடு செய்த IFFI, NFDC Govt of India, மற்றும் SIFCC அனைவர்க்கும் எனது பணிவான நன்றியினை தெறிவித்துக்கொள்கிறேன்.

மற்றும் 1965ல் ஆயிரத்தில் ஒருவன் -ஐ படைத்த இயக்குனர் B.R. பந்துலு ஐயா அவர்களுக்கு இது எமது சமர்ப்பணம் .

DIVYA FILMS- CHOKKALINGAM

Richardsof
19th November 2017, 06:16 PM
எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் - சிறப்பு பார்வை
நன்றி - சாரதா
இணையத்தளம்


தமிழ்ப் படங்களில் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு ஒரு தனிச் சிறப்பு எப்போதுமே உண்டு. தமிழ்ப் படங்களில் புராணப் படங்கள் ஏராளமாக வந்திருக்கின்றன. ராஜா ராணியை மையமாக வைத்து சரித்திரப் படங்களும் அதிக அளவில் வந்துள்ளன. சமூகப் படங்கள், மற்றும் நாட்டு விடுதலையை மையமாகக் கொண்ட படங்களும், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் அராஜகங்களை தோலுரித்துக் காட்டும் படங்களும் அதிகமாக வந்துள்ளன. நகைச்சுவைப் படங்களின் பட்டியலும் நீளம்தான்.

காதலை மையமாகக் கொண்ட படங்களோ திகட்டத் திகட்ட வந்திருக்கின்றன.

ஆனால் இது வரை கடற் கொள்ளையர்களை கதைக் கருவாகக் கொண்டு வெளி வந்த ஒரே படம் ஆயிரத்தில் ஒருவன் மட்டுமே. கதை, வசனம், காட்சியமைப்புகள், பாடல்கள், இசை, பொருத்தமான நடிகர் நடிகையர் தேர்வு, பொழுதுபோக்கு அம்சங்கள், கதையோடு ஒன்றிய கதைக் களங்கள் என, ஒரு வெற்றிப் படத்துக்குரிய எல்லா அம்சங்களும் ஒரு சேர அமைந்த படம் ஆயிரத்தில் ஒருவன்.


இப்படத்தின் கதாநாயனான ‘மக்கள் திலகம்’ எம்ஜியார் ஏற்றிருந்த மணிமாறன் என்ற கதாபாத்திரம், ஒரு கை தேர்ந்த தையற் கலைஞர் அளவெடுத்து தைத்த சட்டை பொருந்துவது போல வெகு அருமையாகப் பொருந்தியது. அவர் திறமைக்குத் தீனி போடுவது போல கத்திச் சண்டைக் காட்சிகள், அளவு மீறாத காதல் காட்சிகள், அவருக்கே பொருந்துவது போல அற்புதமாக அமைந்த பாடல்கள் என கனகச்சிதமாகச் சேர்ந்திருந்தது.


ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கதைச் சுருக்கத்தைச் சொல்வது என்பது அவசியமில்லாத ஒன்று. அந்த அளவுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு பழகிப்போன திரைப்படம் இது. இன்றைய இளம் தலைமுறையினரும் கூட அறிந்து கொள்ளும் விதமாக, இன்றைக்கும் ஏதாவது ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கும் படம்.


கதாநாயகியாக ஜெயலலிதா. இதிலும் பந்துலு மற்றும் எம்ஜியாரின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அது வரை (பானுமதிக்குப் பின்) சரோஜா தேவிதான் எல்லாப் படங்களிலும் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வந்தார். அப்படியிருக்க, திடீரென்று அப்போதுதான் அறிமுகமாகி ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்த ஜெயலலிதாவை கதாநாயகியாக (அதுவும் எம்ஜியாருக்கு ஜோடியாக) போட்டிருந்தார்கள். (ஜெயலலிதா இப்போது நாடறிந்த புள்ளியாக இருந்தாலும், அப்போது அவர் புது முகம்தானே). ஆனால் படத்தில் அவர் நடிப்பைப் பார்க்கும்போது அவரை புதுமுகம் என்று யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அந்த அளவுக்குத் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.


பருவம் எனது பாடல் என்ற பாடல் காட்சியில் ஜெயலலிதாவை அறிமுகம் செய்வதே அழகாக இருக்கும். கண்ணின் கருவிழியிலும், தாமரைப்பூவின் நடு இதழிலும்,கோயிலின் நடு மண்டபத்திலும் அவருடைய முகத்தை அறிமுகப்படுத்துவதே ஒரு அழகு.
எம்.ஜி.ஆரின் அறிமுகம் வழக்கம் போல “வெற்றி… வெற்றி…” என்ற வசனத்துடன் துவங்கும். (பாம்பு கடிக்கு மருந்து கண்டுபிடிப்பதில் வெற்றியடைந்திருப்பார்). சர்வாதிகாரி மனோகரால் கன்னித் தீவுக்கு அடிமைகளாக விற்கப்படும் போதாகட்டும், கப்பலில் பாயாசம் கேட்டு போராட்டம் செய்வதாகட்டும், தன்னை விரும்பும் இளவரசி பூங்கொடியிடம் அவருடைய காதலுக்கு கொஞ்சமும் தகுதியில்லாதவன் என்பதை விளக்குவதாகட்டும், நம்பியாரை நல்லவர் என்று நம்பி அவரிடம் மாட்டிக் கொண்டபின் தன்னை நம்பி வந்தவர்களின் உயிரைக் காக்க தன் மனச்சாட்சிக்கு விரோதமாக ‘கடற் கொள்ளையனாக’ சம்மதிப்பதாகட்டும், மனோகர் தன் எதிரியாக இருந்தபோதும் கூட கோழைத்தனமாக நம்பியார் விஷம் தோய்ந்த கத்தியை அவர் மீது வீசியதைக் கண்டு கொதித்துப் போய் அவரைக் காப்பாற்றும் இடத்திலாகட்டும்… இப்படி எல்லா காட்சிகளிலும் எம்.ஜி.ஆரின் நடிப்பு பாராட்டும்படியாக இருக்கும்.


கத்திச் சண்டைக் காட்சிகள் மூன்று இடங்களிலும் மிக அருமையாக படமாக்கப் பட்டிருக்கும். மணிமாறனும் பூங்கொடியும் (எம்ஜிஆர்+ஜெ) குடியிருக்கும் குடிலில் எம்ஜியாருக்கும் நம்பியாருக்கும் நடக்கும் கத்திச் சண்டை (முழுக்க முழுக்க மூங்கிலிலேயே அமைக்கப்பட்ட அருமையான செட்), கார்வார் மலைப் பகுதியில் அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் வாள் சண்டை (நம்பியார்: “இப்போட்டியில் வெற்றி பெறுபவனே இந்த தீவின் தலைவனாவான். முடிந்தால் நீ தலைவனாகு. இருந்தால் நான் தொண்டனாகிறேன்”), மூன்றாவதாக மனோகரின் படை வீரர்களோடு கப்பலில் மோதும் வாள் சண்டை. இவையனைத்திலும் எம்.ஜி.ஆர். (வழக்கம் போல) தன்னுடைய திறமையைக் காட்டி அசத்தியிருப்பார்.


பின்னர் வரப் போகும் மூன்று கத்திச் சண்டைக் காட்சிகளும் ரொம்ப சீரியசாக இருக்கும் என்பதால்தானோ என்னவோ, இவற்றுக்கு முதலில், கன்னித் தீவில் கொள்ளையடிக்க வரும் நம்பியாரின் ஆட்களோடு நடக்கும் சண்டையை ரொம்பவும் நகைச்சுவை ததும்பும் விதமாக படமாக்கியிருப்பார் பந்துலு.


பாடல்களும் இசையும்:

இப்படம் இன்னொரு விதத்திலும் மறக்க முடியாத படமாக அமைந்தது. ஆம், அது வரை தமிழ்த் திரை இசையில் இரட்டையர்களாக கோலோச்சி வந்த ‘மெல்லிசை மன்னர்கள்’ விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் கடைசியாக இணைந்து இசையமைத்தது ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்குத்தான். அதனால்தானோ என்னவோ இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் வெரைட்டியாகவும், இசையில் இன்றைக்கும் ஒரு சாதனையாகவும் திகழ்கின்றன. பாடல்கள் அனைத்தும் கிட்டத்தட்ட தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மனப்பாடம் ஆகிவிட்ட ஒன்று. இன்றைக்கும் ஏதாவது ஒரு வகையில் தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருக்கின்றன. சிறப்பு தேன்கிண்ணம் வழங்க வரும் திரையுலக வி.ஐ.பி.க்கள் மறக்காமல் தொடும் பாடல்கள் இடம் பெற்ற படங்கள் ஆயிரத்தில் ஒருவன், புதிய பறவை, அன்பே வா… இவற்றிலிருந்து பாடல்களைச் சொல்லாமல் அவர்கள் நிகழ்ச்சிகளை நிறைவு செய்வதேயில்லை. காரணம் அந்த அளவுக்கு தேன் சொட்டும் பாடல்கள்.


1. பருவம் எனது பாடல்
நான் முதலிலேயே சொன்னபடி, கதாநாயகி ஜெயலலிதா அறிமுகம் ஆகும் பாடல். தோழிகளோடு அவர் ஆடிப்பாடும் காட்சி என்பதால், பி.சுசீலாவின் குரலோடு கோரஸ் சிறப்பாக சேர்க்கப்பட்டிருக்கும்.
பருவம் எனது பாடல்
பார்வை எனது ஆடல்
கருணை எனது கோயில் கலைகள் எனது காவல்
கருணை உனது கோயில் கலைகள் உனது காவல்
பல்லவியை பாடி முடித்த சுசீலா, உச்ச ஸ்தாயியில் ஹம்மிங் ஆரம்பித்து அப்படியே படிப்படியாக கீழ் ஸ்தாயி வரையில் கொண்டு வர*, கூடவே அதுக்கு அனுசரணையாக கோரஸ் கலந்து ஒலிக்க, அப்பப்பா.. மெல்லிசை மன்னர்கள் இங்கு மெல்லிசை சக்கரவர்த்திகளாக உயர்ந்து நிற்பார்கள். பல்லவி முடிந்து
இதயம் எனது ஊராகும் இளமை எனது பேராகும்
என்று சரணம் தொடங்கும்போது, பாங்கோஸ் அருமையாக பாடலை அணைத்துச் செல்லும். அதனால்தான், பிற்காலத்தில் எத்தனையோ இசைக்கொம்பர்கள் வந்தும் கூட இந்தப் பாடல்களை மக்கள் மனத்திலிருந்து அகற்ற முடியவில்லை.
(நண்பர்கள் நிச்சயம் இங்கு அதற்கான ‘link’ தருவார்கள். Songs கேட்டுப் பாருங்கள். வேறொரு உலகத்துக்குப் போவீர்கள்).


2. ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை

வழக்கம் போல எம்.ஜி.ஆரின் தன்னம்பிக்கை ஊட்டும் பாடல் வரிசையில் ஒன்று.
ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே
வரும் காலத்திலே நம் பரம்பரைகள்
நாம் அடிமையில்லை என்று முழங்கட்டுமே
இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் எல்லாம் இப்படி எண்ணியதால்தானே இன்று நாம் சுத*ந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு இருக்கிறோம்.


3. ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ


இந்தப் பாடலைப் பற்றி நண்பர்கள் ஏற்கெனவே இங்கு சொல்லியிருக்கிறார்கள். மக்கள் திலகம் பல கவிஞர்களிடம் பாடல் எழுதியும் திருப்தியடையாமல், அப்போது தன்னிடம் கருத்து வேறுபாடு கொண்டிருந்த கவியரசர் கண்ணதாசனை அழைத்து இந்தப் பாடலை எழுதச் சொல்லி திருப்தியடைந்தார் என்பார்க*ள். பாதிப் பாட*ல் அர*ண்ம*னை செட்டிலும் பாதிப்பாட*ல் கார்வார் க*ட*ற்க*ரையிலும் க*ண்டினியூட்டி கெடாம*ல் எடுக்க*ப்ப*ட்டிருக்கும்.


4. உன்னை நான் ச*ந்தித்தேன் நீ ஆயிர*த்தில் ஒருவ*ன்

பி.சுசீலா தனியாக*ப் பாடிய* பாட*ல். கூட*வே ஆண்க*ளின் கோர*ஸ். ம*ணிமாற*னைப் பிரிந்த* பூங்கொடி, செங்க*ப்ப*ரின் அர*ண்ம*னையில் சோக*மே உருவாக* பாடும் பாட*ல், கூட*வே க*ப்ப*லில் போய்க்கொண்டிருக்கும் ம*ணிமாற*னைக் காண்பிக்கும்போது, அவ*ர*து கூட்டாளிக*ளின் உற்சாக*மான* கோர*ஸ்.
பொன்னைத்தான் உட*ல் என்பேன் சிறு பிள்ளை போல் ம*ன*மென்பேன்
க*ண்க*ளால் உன்னை அள*ந்தேன் தொட்ட* கைக*ளால் நான் ம*ல*ர்ந்தேன்
உள்ள*த்தால் வ*ள்ள*ல்தான் ஏழைக*ளின் த*லைவ*ன்
அடுத்து வ*ரும் இசை ‘பிட்’டைக் கேட்க* முடியாது, கார*ண*ம் ப*ல*த்த* கைத*ட்ட*லும், விசில் ச*த்த*மும். பாட*ல் முடியும்போது, கோர*ஸுட*ன் க*ப்ப*ல்க*ள் முல்லைத்தீவு க*ரையில் ஒதுங்குவ*தாக* காட்டுவ*து அருமை. (கப்பல்கள் கரை ஒதுங்கும்போது, முல்லைத்தீவின் அரசியான எல்.விஜயலட்சுமி கறுப்பு நிற உடையில் அழகுப் பதுமையாக நடந்து வருவது எடுப்பான காட்சி).


4. ஆடாமல் ஆடுகிறேன்

கடற்கொள்ளையின்போது கிடைத்த பொருட்கள் மட்டுமின்றி, மனிதர்கள் கூட பொருட்களாக கருதப்பட்டு ஏலத்தில் விடப்பட வேண்டும் என்ற தீவின் சட்டப்படி, ஜெயலலிதா ஏலம் விடப்படும்போது அவர் மனம் நொந்து ஆண்டவனை அழைக்கும் பாடல். சுசீலா மேடத்துக்கு இப்படத்தில் அற்புதமான மூன்று தனிப்பாடல்கள், அதில் இதுவும் ஒன்று. இசை அருமையோ அருமை. முதலில் சாட்டையடி சத்தம், அதைத் தொடர்ந்து ஒவ்வொரு சாட்டையடிக்கும் அதைப் பிரதிபலிக்கும் வண்ணம் வயலினின் ஓசை.
ஆடாமல் ஆடுகிறேன்… பாடாமல் பாடுகிறேன்
ஆண்டவனைத் தேடுகிறேன் வா…வா…வா….
நான் ஆண்டவனைத் தேடுகிறேன்
வா…வா…வா…. வா….வா…வா…
முதல் இரண்டு வரிகளுக்கு பாங்கோஸ் இசைக்க, ‘ஆண்டவனைத் தேடுகிறேன்’ என்ற வரி ஆரம்பிக்கும்போது அருமையாக தபேலா ஆரம்பிக்கும். இடையிசையில் முதலில் வயலின், பின்னர் கிடார், அடுத்து ஃப்ளூட், பின் மீண்டும் வயலின் அடுத்து தபேலா சோலோ என்று மாறி மாறி ஒலித்து பாடலை எங்கோ கொண்டு செல்லும்.
விதியே உன் கை நீட்டி வலை வீசலாம்
ஊரார்கள் என்னைப் பார்த்து விலை பேசலாம்
அழகென்ற பொருள் வாங்க பலர் கூடலாம்
அன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார்
‘கன்னித்தீவின் இளவரசியாக கவலையில்லாமல் வாழ்ந்தேனே, இன்று இவர்கள் கையில் மாட்டி ஏலம் போகவா செங்கப்பரை வற்புறுத்தி கடல் பயணம் வந்தேன்’ என்ற ஏக்கம் பொங்க ஜெயலலிதா காட்டும் முகபாவம் நம் கண்களில் நீரை வரவழைக்கும். வயலினும் தபேலாவும் உச்ச ஸ்தாயியில் போய் பாடல் முடியும்போது மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருக்கும்.
(மெல்லிசை மன்னர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அருமையான ‘send off ‘கொடுத்திருக்கிறார்கள் இப்படத்தில்).


5. நாணமோ… இன்னும் நாணமோ

நீ இளவரசி, நான் அடிமை யென்று பேதம் பார்த்து ஒதுங்கிருந்த மணிமாறனை ஒருவழியாக (விஷம் அருந்தியதாக பொய் சொல்லி) தன் காதலுக்கு சம்மதிக்க வைத்தாயிற்று. பின்னர் என்ன? காதலர்களுக்கு ஒரு பாடலாவது வேண்டாமா? அதுதான் இந்தப் பாடல். சிங்கம் ஒரு குட்டி போட்டாலும் அது சிங்கக் குட்டியாக இருக்கும் என்பது போல, படத்தில் இடம் பெற்றது ஒரேயொரு டூயட் பாடல் என்றாலும், மனதை அள்ளிக்கொண்டு போகும் பாடல். பாடலின் ‘prelude’அருமையாக துவங்கும். (prelude, interlude என்பவை என்ன என்று தெரிந்து கொள்ள இன்றைய இளைஞர்கள் இதுபோன்ற படங்களின் பாடல்களைக் கேட்பது நல்லது).
தோட்டத்துப் பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
ஆடையில் ஆடுது வாடையில் வாடுது
ஆனந்த வெள்ளத்தில் நீராடுது – அது எது?
ஆடவர் கண்கள் காணாதது
அது காலங்கள் மாறினும் மாறாதது
காதலன் பெண்ணிடம் தேடுவது
காதலி கண்களை மூடுவது – அது இது
பாடலின் முதல் பாதியில் ஜெயலலிதாவுக்கு பூக்களால் ஆடை செய்திருப்பார்கள். மறுபாதியில் எம்ஜியார், ஜெயலலிதா இருவருக்கும் ஆடை அழகாக கண்ணைக் கவரும் வண்ணம் இருக்கும்.


6. அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்

அடிக்கடி தொலைக்காட்சியில் கேட்டு, பார்த்து ரசித்த பாடல். எல்லோருமே இப்பாடலை பாராட்டிப் பேசுவார்கள். ஆகவே நானும் இழுத்துக் கொண்டு போவது அவசியமற்றது. கப்பலில் எம்ஜியார், ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார் என அனைவரும் இடம்பெறும் பாடல் காட்சி. பாடலின் பல்லவியை முதலிலேயே கிடாரில் ‘prelude’ ஆக வாசித்துக் காட்டுவார்கள். இதன் இடையிசையில் வரும் ல..லா..லா.. ல..லா.. லா என்ற கோரஸ் ரொம்ப பிரசித்தம்.
கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை
இன்றைக்கு இந்தப்பாடல்களை தொலைக்காட்சியில் வசதியாக கண்டு ரசிக்கிறோம். ஆனால், இது போன்ற வசதியற்ற அந்நாட்களில் இப்படத்தின் பாடல்களை தமிழர்களின் காதுகளுக்கு கொண்டு சென்று சேர்த்த பெருமை இலங்கை வானொலியைச் சேரும் என்பதை நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்.
இப்படத்தில் நாகேஷின் நகைச்சுவை நம்மை வயிறு குலுங்க சிரிக்கவைக்கும். உதாரணத்துக்கு ஒன்று. பூங்கொடியின் தோழி தேன்மொழியை (மாதவி) நாகேஷ் ஏலத்தில் எடுத்து வருவார். அப்போது எம்ஜியார் “என்னப்பா, தேன்மொழியை நீ ஏலத்தில் எடுத்தியா?”


நாகேஷ்: “அட நீங்க வேறே. இவள் வாயைப் பார்த்ததும்தான் திடலே காலியா போச்சே. பழகின தோஷத்துக்காக சும்மா பாத்துக்கிட்டு நின்னேன். என்னைப்பார்த்து ‘ஈ’ன்னு சிரிச்சா. ‘கொன்னுடுவேன்’ அப்படீன்னு ஒரு விரலைக் காட்டினேன். அந்த ஏலக்காரன், நான் ஒரு பவுனுக்கு இவளைக் கேட்கிறேனாக்கும்னு நினைச்சு இவளை என் தலையில் கட்டிட்டான்”.


‘ஆயிரத்தில் ஒருவன்’ திரையிடப்பட்டபோது சென்னை புரசைவாக்கம் மேகலா தியேட்டரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடன் பந்துலுவும் அமர்ந்து படத்தைப் பார்த்தார். படத்தின் முதல் நாள் முதல் காட்சியிலேயே தெரிந்து விட்டது, படம் மாபெரும் வெற்றி யென்பது. தமிழ்நாட்டின் பல ஊர்களில மாபெரும் வெற்றி பெற்று சாதனை புரிந்தது.
எப்போது பார்த்தாலும் புத்தம் புதியதாகவும் பிரமிப்பூட்டும் படமாகவும் அமைந்த படம் தான் ஆயிரத்தில் ஒருவன்.

இப்படத்தைப்பற்றிய கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டது பற்றி மிகவும் சந்தோஷம்.

orodizli
20th November 2017, 10:00 PM
15.11.1963 released PARISU

orodizli
20th November 2017, 10:09 PM
17-11-2017 அன்று "தந்தி" தொலைக்காட்சியில் விரைவில் வெளி வரவிற்குகின்ற டிஜிட்டல் "எங்க வீட்டுப் பிள்ளை" பற்றிய தகவல்களும் , காட்சிகளும் செய்திகள் பகுதியில் ஒளி பரப்பானது...

Richardsof
21st November 2017, 09:29 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் பொன்விழா நினைவலைகள் .

1967.

மக்கள் திலகம் எம்ஜிஆர் 12.1.1967ல் மறுபிறவி கண்டார் . குரலில் பாதிப்பு ஏற்பட்டாலும் ரசிகர்களும் , மக்களும் எம்ஜிஆரை தங்கள் வீட்டு பிள்ளயாக ஏற்று கொண்டு மாபெரும் ஆதரவு தந்தார்கள் .
1967ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள்
தாய்க்கு தலைமகன்
அரசகட்டளை
காவல்காரன்
விவசாயி .
சத்யா மூவிஸின் காவல்காரன் மாபெரும் வெற்றி. 1967ன் சிறந்த படமாக தமிழக அரசு விருது பெற்றது .

1967 தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் திலகம் முதல் முறையாக பரங்கிமலை தொகுதியில் போட்டியிட்டு மாநிலத்திலேயே அதிக வாக்குக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார் .

1968

1968ல் நடந்த தென்காசி இடைத்தேர்தலில் எம்ஜிஆரின் பிரச்சாரத்தில் திமுக வெற்றி .


மக்கள் திலகம் எம்ஜிஆரின் 8 படங்கள் வெளிவந்தது .அத்தனை படங்களிலும் ஜெயலலிதா ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது ,
ரகசிய போலீஸ் 115
தேர்திருவியிழா
குடியிருந்த கோயில்
கண்ணன் என் காதலன்
புதியபூமி
கணவன்
ஒளிவிளக்கு
காதல் வாகனம் .

எம்ஜிஆரின் முதல் படம் 1936ல் சதிலீலாவதி
1968ல் ஒளிவிளக்கு எம்ஜிஆரின் 100 வது படம் .

எம்ஜிஆர் கதை எழுதிய ஒரே படம் ''கணவன் ''
ஜானகி , எம்ஜிஆர் நினைவாக ஜேயார் மூவிஸ் என்ற பெயரில் வி.சி .குகநாதனின் வசனத்தில் புதிய பூமி படம் .
ரசிகர்களுக்கு விருந்த 3 வண்ணப்படங்கள்
ரகசியபோலீஸ் 115 , குடியிருந்தகோயில் , ஒளிவிளக்கு பிரமாண்ட வெற்றி பெற்றது .
கண்ணன் என் காதலன் ரசிகர்களுக்கு இன்னிசை விருந்து படைத்த படம் .
காதல் வாகனம் - புதுமையான படம் .
தேர்த்திருவிழா - எல்லா பாடல்களும் ரசிகர்களுக்கு தித்திக்கும் விருந்து
அடிமைப்பெண் - ராஜஸ்தான் அரண்மனை , பாலைவனத்தில் படப்பிடிப்பு நடந்தது ..


1969

காதல் வாகனம் படத்திற்கு பின் 6 மாத இடைவெளிக்கு பின்னர் அடிமைப்பெண் வெளிவந்து மாபெரும் பாராட்டையும் , வசூலையும் குவித்து மதுரை நகரில் வெள்ளிவிழா கண்டது .
சென்னை நகரில் 4 திரை அரங்கில் தொடர்ந்து 400 காட்சிகள் நிறைந்து சாதனை .
தீபாவளி வெளியீடாக நம்நாடு படம் வெளிவந்து பிரமாண்ட வெற்றி அடைந்தது .
மக்கள் திலகம் சிறுசேமிப்பு துணை தலைவராகவும் , திமுகவின் பொருளாளராகவும் பதவி வகித்தார் .

1970

எம்ஜிஆரின் 5 படங்கள் வெளிவந்தது
மாட்டுக்கார வேலன் .
சென்னை நகரில் 4 திரை அரங்கில் தொடர்ந்து 444 காட்சிகள் நிறைந்து மீண்டும் சாதனை .
மாட்டுக்கார வேலன் வெள்ளிவிழா . சென்னை மற்றும் மதுரை .

என் அண்ணன் - மாபெரும் வெற்றி . சேலம் நகரில் 70 அடி உயர கட் வுட் வைத்து சாதனை
தலைவன் - ஜனரஞ்சகமான பொழுது போக்கு படம்
தேடிவந்த மாப்பிள்ளை - இன்னிசை விருந்து படம்
எங்கள் தங்கம் - திமுக தலைவரின் குடும்ப கடனை மீட்டு இன்றளவும் பணம் குவிக்கும் அமுதசுரபி படம் .
உலகம் சுற்றும் வாலிபன் கீழ்த்திசை நாடுகளில் படப்பிடிப்பு நடந்து . சென்ற இடமெல்லாம் எம்ஜிஆருக்கு மக்கள் வெள்ளம் .
ராமன் தேடிய சீதை - முதல் முறையாக எம்ஜிஆர் படம் காஷ்மீரில் படப்பிடிப்பு நடந்தது .



1971ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள்
குமரிக்கோட்டம்
ரிக் ஷாக்காரன்
நீரும் நெருப்பும்
ஒருதாய் மக்கள்

1971ல் நடந்த தமிழ் நாடு சட்ட மன்ற தேர்தலில் திமுக பிரமாண்ட வெற்றிக்காக மக்கள் திலகம் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு தானும் பரங்கிமலை தொகுதியில் வெற்றிபெற்று திமுகவை 2 வது முறையாக ஆட்சி கட்டிலில் அமர்த்தினார் .

குமரிக்கோட்டம் படம் 26.1.1971 அன்று வெளிவந்தது 100 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றி .
29.5.1971 அன்று வெளிவந்த ரிக் ஷாக்காரன் தென்னிந்திய திரை உலகில் பிரமாண்ட வெற்றி பெற்று வசூலை வாரி குவித்தது .
ரிக் ஷாக்காரன்
நீரும் நெருப்பும்
இரண்டு படங்களின் ஆரம்ப விசேஷ காட்சிகள் தேவி பாரடைஸ் அரங்கில் அன்றைய தமிழக முதல்வர் தலைமையில் விழா நடந்தது .

மக்கள் திலகத்தை வைத்து மணியன் அவர்கள் இதயவீணை படத்தை துவக்கினார் . ஆனந்த விகடனில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் ''நான் ஏன் பிறந்தேன் '' தொடர்கட்டுரையையும் , பொம்மை சினிமா இதழில் ''திரைக்கடலோடி திரைப்படம் எடுத்தோம் ''என்ற தலைப்பில் உலகம் சுற்றும் வாலிபன் படமாக்கப்பட்ட காட்சிகளை விவரித்து தொடர்கட்டுரை எழுதினர் .

ஒரே நேரத்தில் காஷ்மீரில் மக்கள் திலகத்தின் புதிய படங்கள்
உலகம் சுற்றும் வாலிபன்
இதயவீணை
நினைத்ததை முடிப்பவன்
நேற்று இன்று நாளை
4 படங்களின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது .
சென்னை வானொலியில் எம்ஜிஆர் அவர்கள் சுதந்திர தினத்தன்று சிறப்பு தேன்கிண்ணம் நிகழ்ச்சி நடத்தினார் .

மக்கள் திலகம் புகழ் பெற்ற முன்னிலை நிறுவனங்களிலும் , புதிய தயாரிப்பிலும் சுமார் 15 படங்களுக்கு ஒப்பந்தம் ஆகியிருந்தார் .

அனைத்துலக எம்ஜிஆர் மன்றம் மிகவும் சிறப்பாக செயல் பட்டு கொண்டு வந்தது. திரை உலகம் மற்றும் திரைச்செய்தி இதழ்கள் வெளிவந்தது .
பொம்மை , பேசும்படம் , பிலிமாலயா , சித்ராலயா போன்ற சினிமா இதழ்களில் எம்ஜிஆர் படங்கள் பற்றிய தகவல்கள் இடம் பெற்றது .

முரசொலி, நவமணி , சுதேசமித்திரன் ,தினத்தந்தி தினசரி இதழ்களில் எம்ஜிஆர் பற்றிய சினிமா , மற்றும் அரசியல் இடம் பெற்று இருந்தது .

பொம்மை இதழ் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிர்ஷ்டசாலி வாசகி மக்கள் திலகம் எம்ஜிஆரை நினைத்ததை முடிப்பவன் படப்பிடிப்பில் நேரிடையாக பேட்டி கண்டார் .

1972.....
தொடரும்

Richardsof
21st November 2017, 09:42 PM
புரட்சி நடிகராய் இருந்து , புரட்சி தலைவராக உயர்ந்தவர் எம்ஜிஆர்


முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.இராமசந்திரன் அவர்களின் நூறாவது ஆண்டு விழாவில் அவர் புகழ் மேலும் மேலும் ஓங்க அன்னை பராசக்தியை பிரார்த்திக்கிறேன்
.
சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து, வறுமையை துணையாகக் கொண்டு, வாழ்க்கையை துவங்கி ஒரு நேரம் ஒரு வயிறு கஞ்சி குடிக்க வேண்டும் என்றாலும், இவர் உழைத்தால் தான் உண்டு என்கின்ற நிலையிலும் பள்ளிப் படிப்பை படிக்க வேண்டிய வயதில் நாடக வேடம் தரித்து இளம் வயதில் சினிமாவில் நடிப்பதற்கு ஒரு வாய்ப்புக் கிடைக்காதா என்ற ஏக்கத்தில் ,சின்னஞ் சிறு வேடங்களை கூட தட்டிக் கழிக்காமல் நடிப்பினை காட்டி நீண்ட காலப் போராட்டத்திற்கு பிறகு கதாநாயகன் வேடம் கிட்டிய போது, தான் பெற்ற செல்வத்தை தனக்கென சேர்த்துக் வைக்காமல் தன்னை நாடி வந்த சக நடிகர் நடிகையர்க்கும், ஏழை எளியவர்க்கும் வாரி வழங்கிய வள்ளல் என பேரெடுத்து தமிழ் கூறும் நல்லுலகின் திரைப்பட நாயகனாய் உயர்ந்து புரட்சி நடிகர் என்ற சிறப்பினை பெற்றவர்எம்.ஜி.இராமசந்திரன் அவரகள் .


தான் நடித்த திரைப்படங்களில் புகை பிடித்தல் , மது அருந்துதல் , களவு செய்தல், பெண் பித்தன் ஆதல் போன்ற சமூகத்தைப் பாதிக்கும் எந்த ஒரு தன்மையையும் தன் கதாபாத்திரத்தில் ஏற்காது அதர்மத்திற்கு எதிராய் போராடி தர்மத்தை காக்கும் உயர்ந்த குணம் படைத்த நன் மனிதராய் நடித்து தமிழக மக்களின் குறிப்பாய் பெண்களின் அன்பிற்குப்பாத்திரமாய் எம்.ஜி.இராமசந்திரன் அவர்களை அவரது ஒவ்வொருரசிகர்களும்தங்கள் குடும்பத்தின் தலைவராய்மதிக்கப் பெற்றார்கள்.


எம்.ஜி.இராமசந்திரன் அவர்கள் பெற்ற பெயரையும், புகழையும் திராவிட முன்னற்ற கழகத்தின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்த வசதியாக தான் நடித்த அனைத்து திரைப்படங்களில் வசனம் அல்லது காட்சி அல்லது பாடல் ஏதேனும் ஒன்றின் மூலம் தான் கொண்ட கொள்கையை மக்கள் மத்தியில் கொண்டு சென்று திராவிட முன்னேற்ற கழகத்தின் வளர்ச்சிக்கு உரமாக நின்றவர் எம்.ஜி.இராமசந்திரன் அவர்கள்.



திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை அக்கட்சியின் கணக்கு வழக்குகளில் தவறு செய்திருக்கிறது என்று உணர்ந்த போது அக்கட்சியில் கணக்கை காட்ட வேண்டும் என்று குரல் கொடுத்து, அது நடவாத போது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்கின்ற புதிய கட்சியை தோற்றுவித்து, புரட்சி நடிகராய் இருந்தவர் , புரட்சி தலைவராக உயர்ந்தார்.
திராவிடர்கழகம், திராவிடமுன்னேற்ற கழகம் ஆகிய இரண்டு கட்சிகளும், ஆன்மீகத்திற்கு எதிராகவும், தேசிய சிந்தனைக்கு எதிராகவும், ஜாதிய காழ்ப்புணர்ச்சியை தூண்டும் வகையில் செயல்பட்டு வந்த தன்மைக்கு மாற்றாக, அன்னை மூகாம்பிகையை தரிசிப்பதற்காக கொல்லூர் சென்று கழக அரசியலில் ஆன்மீகத்தை மலரச்செய்த பெருமை இந்த புரட்சித்தலைவரை மட்டுமே சேரும்.


தேசிய சிந்தனைக்கு மாற்றாக அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எக்காலத்திலும் உருவாகிடக்கூடாது என்று, அது தன்னுடைய காலமாக இருந்தாலும், தன் காலத்திற்குப் பின்பாக இருந்தாலும், தன் கட்சியில் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, அ.தி.மு.க. என்று இருந்ததை அ.இ.அ தி.மு.க. என்றுபெயர் மாற்றி,தரம் உயர்த்தி, தான் என்றும் தேசியத்தின் பக்கம்தான் என்று உறுதிபட காட்டியவர் தேசபக்தர் எம்.ஜி.ஆர்.


தனது ஆட்சியை முதல் முறையாக 1977 ஆம் ஆண்டு தமிழகத்தில் நிறுவிய போது, தன்னால்தான் அனைவரும் வெற்றி பெற்றார்கள் மற்றும் எம்.எல்.ஏ, அமைச்சர் ஆனார்கள் என்று நன்கு தெரிந்த பிறகும் கூட, தன்கட்சியை சார்ந்த எம்பி மற்றும் எம்.எல்.ஏக்களையும், அடி மட்டத் தொண்டர் முதல் அனைவரையும் மிகுந்த மரியாதையோடு நடத்திய மனிதாபிமானத்தின் வடிவமானவர்இந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள்.


தனது ஆட்சிக்காலத்தில், தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கையை கூட்ட, பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் கொண்டு வரப்பெற்ற மதிய உணவு திட்டத்தை அப்படியே ஏற்று, அதனை சத்துணவு திட்டமாக உருவாக்கி கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு உணவு வழங்கி படிக்க வைத்தவர் இந்த ஏழை பங்காளர். மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரு தலைவன் உடல் நலம் இன்றி அயல் நாட்டில் சிகிச்சை பெற்றாலும், தமிழ் நாட்டில் அவரது பெயரும், புகழும் அவரது கட்சியை வெற்றி பெற வைக்க முடியும் என்று சரித்திரம் படைத்தவர், இந்த சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர்.



தர்மம் தலைகாக்கும் என்று சொல்வார்கள். இனி இவர் பிழைக்கவே முடியாது என்ற நிலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு இவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதும், இரண்டாவது முறையாக, உடல் நலம் குன்றி, சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற போதும், அவர் செய்த தர்மம் அவரை காத்தது
.
கோடிக்கணக்கான தமிழர்களின் நெஞ்சில் குடிகொண்ட இவர் பிழைக்க வேண்டும் என நம் மக்கள் செய்த பிரார்த்தனைகள் அவரை மீண்டும்பிழைக்க வைத்தது. இவ்வாறு, இரண்டு முறை எமதர்மனின் வீடு வரை சென்று திரும்பிய பெருமை இத்தர்மத்தலைவன் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மட்டுமே உண்டு.


திரு.எம்.ஜி.ஆரின் பேருக்கும், புகழுக்கும் ஏராளமான விஷயங்கள் இருந்தாலும், இந்திய அரசின் பாரத ரத்னா என்ற உயரிய விருதை பெற்ற மகத்தான தலைவர் என்ற பெருமையை கொண்டு விளங்கும் எம்.ஜி.ஆர்.அவர்களின் 100 ஆவது பிறந்த நாளில் அவர் தன்னைச் சார்ந்தவர்களுக்கு உணர்த்தி வைத்த ஆன்மீக உணர்வும், தேசபக்த உணர்வும், அணையாமல் காப்பது மட்டுமே எம்.ஜி.ஆர். பக்தர்களுக்கும், எம்.ஜி.ஆரை மதிக்கின்ற நம்மைப்போன்ற அனைவருக்கும் அவர் விட்டுச்சென்ற செய்தியாகும்.

அந்த உயர்ந்த இரு இலட்சியங்களை மனதில் ஏற்றி தமிழகத்தை தேசியத்தின் பக்கமும், தெய்வீகத்தின் பக்கமும் எடுத்துச்செல்வது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். அது ஒன்றே, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவில் நாம் எடுக்க வேண்டிய சபதம் ஆகும்.


புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் மேலான இத்தனலமற்ற குணங்களை போற்றுகின்ற வகையில் பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், திரு.எம்.ஜி. ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா சிறப்பு தபால் தலை வெளியிட்டிருப்பதற்காக பாரத பிரதமர் அவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பிலும், ஒட்டு மொத தமிழ் சமுதாயத்தின் சார்ப்பிலும், மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மாண்புமிகு மத்திய நெடுஞ்சாலைசாலைப் போக்குவரத்து மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன்

Richardsof
22nd November 2017, 10:00 AM
1972
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு மகத்தான ஆண்டாக திகழ்ந்தது என்றால் அது மிகையல்ல .
கலைத்துறையில எம்சிஆருக்கு பாரத் பட்டம்
அரசியல் துறையில் புரட்சித்தலைவர் பட்டம்
புதிய அரசியல் கட்சி அதிமுக நிறுவன தலைவர்
மக்கள் செல்வாக்கின் முதல்வர்
சோதனைகளை சாதனைகளாக மாற்றிய தலைவராக எம்ஜிஆர்
ரசிகர்களுக்கு எம்ஜிஆர் படைத்த விருந்து 5 படங்கள்
சங்கே முழங்கு
நல்ல நேரம்
ராமன் தேடிய சீதை
நான் ஏன் பிறந்தேன்
அன்னமிட்ட கை
இதய வீணை

எம்ஜிஆர் என்ற மாமனிதரின் ரசிகர்கள் மற்றும் மக்களின் செல்வாக்கு .கண்டு பத்திரிகைகளும் அரசியல் கட்சிகளும் வியந்து பாராட்டினார்கள் .
மூதறிஞர் ராஜாஜி அவர்களை நேரில் சந்தித்து எம்ஜிஆர் வாழ்த்து பெற்றார் .

அன்றய திமுகவின் அராஜக போக்கினாலும் , அதிகார மிரட்டல்களாலும் எம்ஜிஆர் ரசிகர்கள் , மற்றும் அனுதாபிகள் , எம்ஜிஆர் பட தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் , திரை அரங்கு உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள் . இருந்தாலும் அனைவரும் எம்ஜிஆர் என்ற மாபெரும் தலைவருக்காக இன்னல்களை தாங்கி கொண்டு எம்ஜிஆரின் பக்க பலமாக நின்றார்கள் . வெற்றியும் கண்டார்கள்

குறிப்பாக ஒரு சிலர் எம்ஜிஆரின் வளர்ச்சியை கண்டு மனம் வெதும்பி எம்ஜிஆரின் சாதனைகளை தவறான கண்ணோட்டத்தில் விமர்சனம் செய்து படு தோல்வி கண்டார்கள் .

எம்ஜிஆரின் மதுரை ரயில் பயணம் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது .மக்களின் ஆதரவும் கண்கூடாக காண முடிந்தது .திரையில் மட்டுமல்ல அரசியலிலும் எம்ஜிஆர் எங்க வீட்டுப்பிள்ளை என்று மக்கள் முழக்கமிட்டது கண்டு எதிரணியினர் மிரண்டு அடங்கி போனார்கள் .

1973... தொடரும் ///.

fidowag
22nd November 2017, 10:59 PM
தினமலர்-வாரமலர் -19/11/17
http://i66.tinypic.com/2lsk7b7.jpg

fidowag
22nd November 2017, 11:02 PM
தமிழ் இந்து -22/11/17
http://i66.tinypic.com/211v3ex.jpg
http://i65.tinypic.com/2jb7iib.jpg
http://i64.tinypic.com/15xuvj6.jpg

fidowag
22nd November 2017, 11:08 PM
குமுதம் லைப் -22/11/17
http://i64.tinypic.com/2ijp0eq.jpg

முன்னாள் முதல்வர்கள் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிடம்
விருது பெறும் பிரபல பின்னணி பாடகி திருமதி பி.சுசீலா .

fidowag
22nd November 2017, 11:09 PM
தினமலர் -21/11/17
http://i67.tinypic.com/24vv6og.jpg

fidowag
22nd November 2017, 11:11 PM
திவ்யா பிலிம்ஸ் உரிமையாளர் திரு.சொக்கலிங்கம் அனுப்பிய புகைப்படங்கள்
அடங்கிய வாட்ஸ் அப் செய்திகள்
http://i64.tinypic.com/15rxncg.jpg

fidowag
22nd November 2017, 11:12 PM
http://i67.tinypic.com/1fgz00.jpg

fidowag
22nd November 2017, 11:13 PM
http://i68.tinypic.com/dgqmah.jpg

fidowag
22nd November 2017, 11:15 PM
குமுதம் ரிப்போர்ட்டர்
http://i64.tinypic.com/24g0jtt.jpg
http://i65.tinypic.com/smfrqa.jpg

fidowag
22nd November 2017, 11:16 PM
http://i66.tinypic.com/30t2kw7.jpg

fidowag
22nd November 2017, 11:17 PM
நக்கீரன் வார இதழ்
http://i64.tinypic.com/izlz4l.jpg

fidowag
22nd November 2017, 11:23 PM
கோவாவில் ,உலக திரைப்பட திருவிழாவில் பெருமையுடன் திரையிடப்படும் சமயத்தில் சென்னை கிருஷ்ணவேணி , மற்றும் மதுரை அரவிந்த் அரங்குகளில்
வெளியாகி வெற்றிநடை போடுகிறது மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "ஆயிரத்தில் ஒருவன் "

17/11/17 முதல் சென்னை கிருஷ்ணவேணி அரங்கில் தினசரி 3 காட்சிகள்
http://i63.tinypic.com/mjwpxs.jpg

fidowag
22nd November 2017, 11:24 PM
தினகரன் -17/11/17
http://i63.tinypic.com/n50nqb.jpg

fidowag
22nd November 2017, 11:25 PM
http://i66.tinypic.com/zkki12.jpg

fidowag
22nd November 2017, 11:25 PM
http://i63.tinypic.com/28gxxt0.jpg

fidowag
22nd November 2017, 11:26 PM
http://i67.tinypic.com/21axt8n.jpg

fidowag
22nd November 2017, 11:30 PM
17/11/17 முதல் மதுரை அரவிந்தில் தினசரி 4 காட்சிகள்
http://i68.tinypic.com/fvedkg.jpg

fidowag
22nd November 2017, 11:32 PM
http://i67.tinypic.com/10ngeq9.jpg

fidowag
22nd November 2017, 11:32 PM
http://i65.tinypic.com/293h9tt.jpg

fidowag
22nd November 2017, 11:33 PM
http://i65.tinypic.com/wlvfcz.jpg

fidowag
22nd November 2017, 11:34 PM
புகைப்படங்கள் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .
http://i66.tinypic.com/yjlza.jpg

fidowag
22nd November 2017, 11:35 PM
http://i68.tinypic.com/2463ome.jpg

fidowag
22nd November 2017, 11:36 PM
http://i67.tinypic.com/294pfd3.jpg

fidowag
22nd November 2017, 11:37 PM
http://i68.tinypic.com/j7gcaf.jpg

fidowag
22nd November 2017, 11:38 PM
http://i66.tinypic.com/348gaah.jpg

fidowag
22nd November 2017, 11:39 PM
http://i65.tinypic.com/2vt402e.jpg

fidowag
22nd November 2017, 11:39 PM
http://i64.tinypic.com/k12a77.jpg

fidowag
22nd November 2017, 11:40 PM
http://i67.tinypic.com/10r3ed0.jpg

fidowag
22nd November 2017, 11:41 PM
http://i64.tinypic.com/x26qlz.jpg

fidowag
22nd November 2017, 11:43 PM
http://i67.tinypic.com/10e2er4.jpg

fidowag
22nd November 2017, 11:45 PM
http://i64.tinypic.com/2hrhb14.jpg

fidowag
22nd November 2017, 11:46 PM
http://i64.tinypic.com/2dvolch.jpg

fidowag
22nd November 2017, 11:51 PM
வரும் டிசம்பர் மாதம் 3 ம் தேதியன்று மதுரையில் நடைபெற உள்ள மக்கள் தலைவர்
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா பற்றிய விளம்பரங்கள்
http://i67.tinypic.com/23t1hmf.jpg

fidowag
22nd November 2017, 11:51 PM
http://i64.tinypic.com/amvd52.jpg

fidowag
22nd November 2017, 11:52 PM
http://i66.tinypic.com/aw505g.jpg

fidowag
22nd November 2017, 11:53 PM
http://i64.tinypic.com/30lz4gl.jpg

fidowag
22nd November 2017, 11:53 PM
http://i65.tinypic.com/dvslrl.jpg

fidowag
22nd November 2017, 11:59 PM
வரும் டிசம்பர் 3ம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ள மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் நிகழ்ச்சி பற்றிய விளம்பரம்
http://i63.tinypic.com/1266yhz.jpg

fidowag
23rd November 2017, 12:00 AM
http://i68.tinypic.com/ipmtlk.jpg

fidowag
23rd November 2017, 12:01 AM
http://i67.tinypic.com/fekiz5.jpg

fidowag
23rd November 2017, 12:01 AM
http://i65.tinypic.com/106kmxh.jpg

fidowag
23rd November 2017, 02:20 PM
பாக்யா வார இதழ் -17/11/17
http://i68.tinypic.com/k49ute.jpg
http://i67.tinypic.com/2wf670o.jpg
http://i68.tinypic.com/14ybxwg.jpg
http://i66.tinypic.com/30udb0x.jpg

fidowag
23rd November 2017, 02:26 PM
பாக்யா வார இதழ் - 24/11/17

http://i65.tinypic.com/n17bk3.jpg
http://i67.tinypic.com/2h4fbli.jpg
http://i64.tinypic.com/2058chj.jpg

http://i64.tinypic.com/15i894k.jpg

http://i68.tinypic.com/4zzret.jpg

fidowag
23rd November 2017, 02:32 PM
குங்குமம் வார இதழ் -17/11/17
http://i64.tinypic.com/2n83sk6.jpg
http://i66.tinypic.com/6ignr8.jpg
http://i67.tinypic.com/264t4k6.jpg
http://i68.tinypic.com/wjcbb5.jpg

fidowag
23rd November 2017, 02:36 PM
புதிய தலைமுறை வார இதழ் -16/11/17
http://i66.tinypic.com/3009nrt.jpg
http://i66.tinypic.com/2di0g9j.jpg
http://i68.tinypic.com/21n2xkm.jpg
http://i65.tinypic.com/e9j82g.jpg

fidowag
23rd November 2017, 02:41 PM
புதிய தலைமுறை வார இதழ் - 23/11/17
http://i63.tinypic.com/2ev5fdl.jpg
http://i66.tinypic.com/27yy3k5.jpg
http://i68.tinypic.com/fp9f1t.jpg
http://i64.tinypic.com/iyg1op.jpg

fidowag
24th November 2017, 09:14 PM
இன்று முதல் (24/11/17) சென்னை ஸ்ரீநிவாஸாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த
"குமரிக்கோட்டம் " தினசரி 3 காட்சிகளில் வெளியாகி உள்ளது
http://i68.tinypic.com/2d1wkev.jpg

fidowag
24th November 2017, 09:15 PM
http://i68.tinypic.com/30de0yf.jpg

fidowag
24th November 2017, 09:16 PM
இன்று முதல் (24/11/17) மதுரை சென்ட்ரல் சினிமாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
நடித்த "தாழம்பூ "தினசரி 4காட்சிகள் நடைபெறுகிறது
http://i66.tinypic.com/2jbw1w5.jpg

fidowag
24th November 2017, 09:17 PM
http://i68.tinypic.com/5k2f4g.jpg

fidowag
24th November 2017, 09:18 PM
http://i66.tinypic.com/2iqehwk.jpg

fidowag
24th November 2017, 09:19 PM
http://i64.tinypic.com/15pmvxt.jpg

fidowag
24th November 2017, 09:23 PM
இன்று முதல் (24/11/17) கோவை டிலைட்டில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
"தனிப்பிறவி " தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i66.tinypic.com/kbvjwl.jpg

fidowag
24th November 2017, 09:25 PM
நக்கீரன் வார இதழ்
http://i68.tinypic.com/2yvt8bs.jpg

fidowag
24th November 2017, 09:26 PM
http://i66.tinypic.com/34t4t50.jpg

fidowag
24th November 2017, 09:27 PM
http://i64.tinypic.com/14e2xbd.jpg

fidowag
24th November 2017, 09:28 PM
http://i67.tinypic.com/4uz2vn.jpg

fidowag
24th November 2017, 09:30 PM
http://i66.tinypic.com/90dlsp.jpg

fidowag
24th November 2017, 09:31 PM
http://i66.tinypic.com/ade1og.jpg

fidowag
24th November 2017, 09:32 PM
http://i64.tinypic.com/14ax8q8.jpg

fidowag
24th November 2017, 09:32 PM
http://i66.tinypic.com/66yc93.jpg

fidowag
24th November 2017, 09:35 PM
தினத்தந்தி -24/11/17
http://i68.tinypic.com/s3eiqe.jpg

fidowag
24th November 2017, 09:35 PM
http://i64.tinypic.com/54w4rs.jpg

fidowag
24th November 2017, 09:55 PM
மக்கள் குரல் -24/11/17
http://i65.tinypic.com/339sfeo.jpg

fidowag
24th November 2017, 09:55 PM
http://i65.tinypic.com/27yv3o5.jpg

fidowag
24th November 2017, 10:04 PM
புதிய தலைமுறை வார இதழ் -30/11/17
http://i65.tinypic.com/24pjgrc.jpg
http://i66.tinypic.com/jikuv6.jpg
http://i67.tinypic.com/2nk1lcm.jpg
http://i64.tinypic.com/2505g7c.jpg

fidowag
24th November 2017, 10:22 PM
http://i63.tinypic.com/zmnsra.jpg
http://i63.tinypic.com/2r2vn0g.jpg

fidowag
24th November 2017, 11:12 PM
நெல்லையில் வரும் 17/12/2017 அன்று நடைபெற உள்ள மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
நூற்றாண்டு பிறந்த நாள் விழா பற்றிய விளம்பரங்கள் நண்பர்களின் பார்வைக்கு
http://i67.tinypic.com/4qla1y.jpg

fidowag
24th November 2017, 11:13 PM
http://i66.tinypic.com/9scgwl.jpg

fidowag
24th November 2017, 11:14 PM
http://i65.tinypic.com/105nsxy.jpg

fidowag
24th November 2017, 11:14 PM
http://i68.tinypic.com/2mgjjav.jpg

fidowag
24th November 2017, 11:18 PM
http://i68.tinypic.com/73pc3m.jpg
http://i66.tinypic.com/16k9rw1.jpg

fidowag
24th November 2017, 11:19 PM
http://i64.tinypic.com/2sadnpy.jpg

fidowag
24th November 2017, 11:20 PM
http://i64.tinypic.com/2ez0bco.jpg

fidowag
24th November 2017, 11:21 PM
http://i68.tinypic.com/fxzf4y.jpg

fidowag
24th November 2017, 11:21 PM
http://i67.tinypic.com/14xfg49.jpg

fidowag
24th November 2017, 11:23 PM
http://i67.tinypic.com/fvzs50.jpg

fidowag
24th November 2017, 11:24 PM
http://i65.tinypic.com/14v62o6.jpg

fidowag
24th November 2017, 11:25 PM
http://i63.tinypic.com/kbqbs4.jpg

fidowag
24th November 2017, 11:25 PM
http://i63.tinypic.com/2hzpk4p.jpg

fidowag
24th November 2017, 11:27 PM
http://i66.tinypic.com/24qla3l.jpg

fidowag
24th November 2017, 11:27 PM
http://i65.tinypic.com/f9qfti.jpg

fidowag
24th November 2017, 11:28 PM
http://i68.tinypic.com/xcw4rp.jpg

fidowag
24th November 2017, 11:38 PM
தமிழ் இந்து --24/11/17
http://i67.tinypic.com/2na01zb.jpg

fidowag
24th November 2017, 11:39 PM
http://i66.tinypic.com/67mybk.jpg

fidowag
24th November 2017, 11:40 PM
http://i63.tinypic.com/26038yr.jpg

fidowag
24th November 2017, 11:41 PM
http://i63.tinypic.com/wapsag.jpg

fidowag
24th November 2017, 11:42 PM
http://i67.tinypic.com/1glyj9.jpg

fidowag
24th November 2017, 11:56 PM
தின இதழ் --24/11/17
http://i68.tinypic.com/21jzx1k.jpg

fidowag
24th November 2017, 11:58 PM
தின செய்தி -23/11/17
http://i67.tinypic.com/beaoef.jpg

fidowag
24th November 2017, 11:59 PM
http://i68.tinypic.com/343nj2t.jpg

fidowag
25th November 2017, 12:02 AM
தின இதழ் -23/11/17
http://i64.tinypic.com/vj6nl.jpg
http://i67.tinypic.com/15n28p1.jpg
http://i63.tinypic.com/18yvlc.jpg

fidowag
25th November 2017, 12:09 AM
http://i66.tinypic.com/2he9etu.jpg

fidowag
25th November 2017, 12:09 AM
http://i67.tinypic.com/65swol.jpg

fidowag
25th November 2017, 12:10 AM
http://i64.tinypic.com/1zf377k.jpg

fidowag
25th November 2017, 12:16 AM
மக்கள் குரல் -18/11/17
http://i66.tinypic.com/htz4pe.jpg

fidowag
25th November 2017, 12:17 AM
http://i63.tinypic.com/idx2k7.jpg

fidowag
25th November 2017, 12:22 AM
தின இதழ் -22/11/17
http://i65.tinypic.com/2uf7g38.jpg

fidowag
25th November 2017, 12:22 AM
http://i64.tinypic.com/2mo5jbl.jpg

Richardsof
25th November 2017, 06:11 PM
இனிய நண்பர் திரு லோகநாதன்

மய்யம் திரியில் 18,000 பதிவுகளை கடந்தமைக்கு பாராட்டுக்கள் . வாழ்த்துக்கள் . மக்கள் திலகத்தின் அனைத்து செய்திகள், நிழற்படங்கள் பற்றி தொடர்ந்து பதிவிட்டு வரும் தங்களின் உழைப்பிற்கு நன்றி .

orodizli
25th November 2017, 07:06 PM
மக்கள் திலகம் புகழ் பாடி கொண்டிருக்கும் பாச தோழர் திரு. லோகநாதன் அவர்களின் சாதனை தடங்கள் 18001 கடந்து பீடு நடை போடுவதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்...

oygateedat
25th November 2017, 10:02 PM
https://s18.postimg.org/3suh890y1/IMG_6867.jpg (https://postimages.org/)

fidowag
26th November 2017, 10:03 PM
http://i63.tinypic.com/23utzbm.jpg
என்னுடைய 18000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் /பாராட்டுக்கள் தெரிவித்த
நண்பர்கள் திரு.வினோத், திரு.சி.எஸ். குமார், திரு.கா.நா. பழனி, (பெங்களூரு )
நெறியாளர் திரு.ரவிச்சந்திரன் (திருப்பூர் ), திரு.சுகாராம் , திரு.ஸ்ரீதர் சுவாமிநாதன்
திரு.ரவி, (ஹைதராபாத் ), திரு.எஸ். குமார் , திரு.தமிழ் நேசன், திரு.ம.சோ.நாராயணன் (மதுரை ) திரு.பி.எஸ். ராஜு,(உரிமைக்குரல் ஆசிரியர் ),
திரு.இளங்கோவன், திரு.வீரராகவன் , திரு.சுரேந்திரபாபு , திரு.பி.ஜி.சேகர் ,
திரு.ரவிசங்கர் ஆகிய நல் இதயங்களுக்கு மனமார்ந்த நன்றி .


ஆர்.லோகநாதன் ,
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு .

fidowag
26th November 2017, 10:05 PM
மக்கள்குரல் -22/11/17
http://i65.tinypic.com/20hsh76.jpg

fidowag
26th November 2017, 10:45 PM
தினச்செய்தி -22/11/17
http://i63.tinypic.com/21oo35w.jpg

fidowag
26th November 2017, 10:46 PM
http://i63.tinypic.com/nlq0zn.jpg

fidowag
26th November 2017, 10:52 PM
தின இதழ் -22/11/17
http://i65.tinypic.com/90vojo.jpg

fidowag
26th November 2017, 10:53 PM
http://i64.tinypic.com/2nu4ot1.jpg

fidowag
26th November 2017, 10:55 PM
மக்கள் குரல் 24/11/17
http://i67.tinypic.com/2cerll1.jpg

fidowag
26th November 2017, 11:00 PM
மாலை முரசு -25/11/17
http://i68.tinypic.com/v5g07d.jpg

fidowag
26th November 2017, 11:03 PM
http://i67.tinypic.com/bc30o.jpg

fidowag
26th November 2017, 11:04 PM
http://i65.tinypic.com/20t075s.jpg

fidowag
26th November 2017, 11:05 PM
http://i68.tinypic.com/24cz8tk.jpg

fidowag
26th November 2017, 11:15 PM
மக்கள் குரல் -25/11/17
http://i64.tinypic.com/jl5awh.jpg
http://i68.tinypic.com/jj4i77.jpg

fidowag
26th November 2017, 11:24 PM
தினச்செய்தி -25/11/17
http://i67.tinypic.com/11gsmbm.jpg

Richardsof
27th November 2017, 11:25 AM
1962ல் வெளிவந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த படங்கள்

ராணி சம்யுக்தா
மாடப்புறா
தாயை காத்த தனயன்
குடும்பத்தலைவன்
பாசம்
விக்கிரமாதித்தன்


ராணி சம்யுக்தா

ப்ரித்விராஜ் சம்யுக்தா கதை வடக்கே மிகவும் பிரபலமானது. நம்மூரில் முத்துப்பட்டன் கதை, மதுரை வீரன் கதை, கட்டபொம்மன் கதை போன்று அதற்கும் ஒரு folk ballad பாரம்பரியம் உண்டு. அழையாத ஸ்வயம்வரத்துக்கு போய் சம்யுக்தையை தூக்கி வரும் சாகசத்தில் ஒரு கவர்ச்சி இருக்கிறது. எம்ஜிஆரும் அந்த வீர சாகசத்தால் கவரப்பட்டுத்தான் இந்த படத்தை எடுத்திருக்கவேண்டும்.

கொஞ்சம் உரிமை எடுத்துக்கொண்டு கதையை அங்கங்கே மாற்றி இருக்கிறார்கள். ஜெயச்சந்திரனும் தில்லி அரசுக்கு ஒரு வாரிசு என்றும் அதனால்தான் அவருக்கும் ப்ரித்விராஜுக்கும் பகை ஆரம்பித்தது என்று ஒரு ரீல் விட்டிருக்கிறார்கள். மற்றபடி தெரிந்த கதைதான். சம்யுக்தாவை காதலிக்கும் ப்ரித்விராஜ் அவரை ஜெயச்சந்திரனுக்கு பாவ்லா காட்டிவிட்டு சம்யுக்தாவை தூக்கி சென்று மனம் செய்துகொள்கிறார். முஹம்மது கோரி ஜெயச்சந்திரன் உதவியுடன் ப்ரித்விராஜை தோற்கடிக்கிறார்.

ப்ரித்விராஜ் போர்க்களத்தில் இறப்பதாக காட்டுகிறார்கள். அவர் சிறைப்படுத்தப்பட்டு இறக்கிறார். ப்ரித்விராஜ் ராஸோவின் படி அவர் குருடாக்கப்படுகிறார். கோரி பிறகு ப்ரித்விராஜின் சத்தம் மட்டுமே கேட்டு அம்பு விடும் திறமையை பார்க்க விரும்பும்போது அவர் கோரியின் குரலை வைத்து கோரியை தன் அம்பால் கொன்றுவிடுகிறார். இந்த பழி வாங்கல் ராஸோவை எழுதிய சாந்த் பர்டாயின் உதவியோடு செயப்படுகிறது.


நீண்ட நாள் தயாரிக்கப்பட்ட படம்.
ரிச்சாக எடுத்திருக்கிறார்கள். நல்ல செட்கள், அழகான எம்ஜிஆர், பத்மினி.
பல பாட்டுகளை நான் முன்னால் கேட்டதில்லை. ஆனால் இனிமையாக இருந்தன. நினைவில் இருக்கும் பாட்டுகள் இவைதான்.
“முல்லை மலர்க்காடு எங்கள் மன்னவர் தம் நாடு” என்ற பாட்டுக்கு ராகினி நன்றாக ஆடுகிறார்.
“நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்” என்ற பாட்டு
“இதழ் இரண்டும் பாடட்டும் இமை இரண்டும் மூடட்டும்” பாட்டும் நன்றாக இருக்கிறது. கண்ணதாசன். வைரமுத்துவுக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் பாட்டு இதுதானாம். டிஎம்எஸ், ஏ.பி. கோமளா பாடி இருக்கிறார்கள்.
“சித்திரத்தில் பெண்ணெழுதி” சுமாரான பாட்டு.
இந்த 4 பாட்டுகளையும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்துபவர்கள் மட்டும் இங்கேகேட்கலாம்.
“நிலவென்ன பேசும் குயிலென்ன பாடும்” என்பது மிக அருமையான பாட்டு. டிஎம்எஸ்ஸும் சுசீலாவும் கலக்கி இருக்கிறார்கள். இந்த வீடியோவை கட்டாயம் பாருங்கள்.
“ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா” என்பது மட்டும்தான் நான் முன்னால் கேட்டிருக்கிறேன். அருமையான பாட்டும் கூட. இந்த வீடியோவையும் கட்டாயம் பாருங்கள்.


மாடப்புறா

M. G. Ramachandran, B. Saroja Devi, M. R. Radha, M. N. Nambiar, K. Vasanthi, Gemini Chandra, ‘Kuladeivam’ V. R. Rajagopal, M. K. Mustafa, T. K. Balachandran, N. S. Narayana Pillai, Seethalakshmi


The film was written by ‘Thilakam’ Narayanaswami, a well-known playwright of the time. His play Thilakam was made into a fairly successful film; hence, his prefix. He also worked as a dubbing-in-charge in some of this writer’s film ventures. S. A. Subburaman, the director, was a school teacher before his love for writing stories helped him become a filmmaker. The story of Madappura is rather confusing. Two women (Vasanthi and Saroja Devi) fall in love with MGR, whose younger brother (T. K. Balachandran) is suspected of murdering a lawyer. MGR takes the blame and becomes a fugitive from justice. Nambiar, as was the norm, is the villain and heads a gang of crooks. He wears many disguises, including that of a police officer. M. R. Radha, as a father, is remarkable with his characteristic style of dialogue delivery and brings about the story’s resolution.

M. K. Mustafa, a well-known character actor of the day, plays a police officer who runs from pillar to post to nab the real killer (Nambiar). The murder, fortunately for him, is witnessed by a young woman who helps him catch the culprit.The film was shot at the erstwhile Majestic Studios in Kodambakkam. Successful writer, director and producer K. S. Gopalakrishnan, who hit the bull's-eye with his first film Karpagam, took over it and renamed it Karpagam Studios before it eventually shut shop.

Madappura was edited by Surya, a top editor, who created many successful editors including K. Shankar. The songs were by K. V. Mahadevan, who was assisted by his right-hand man Pugazhenthi, while the background music was by ‘Violin’ Mahadevan.A. Marudhakasi penned the lyrics, while the singers included illustrious names such as T. M. Soundararajan and P. Susheela.


Remembered for: the performances of M. R. Radha, MGR, and Saroja Devi, and pleasing music.

தாயை காத்த தனயன்


மவுண்ட்ரோடு ஏரியாவில் பிளாசாவில் தாயைக் காத்த தனயனும், மிட்லண்டில் படித்தால் மட்டும் போதுமாவும் ரசிகர்கள் கூட்டத்துடன் ஓடிக்கொண்டிருந்தது.
அன்று காலை எம்ஜிஆரின் அடுத்த படத்துக்காக வசனம் எழுதச் சென்றிருந்தபோது எம்ஜிஆர் என்னை அழைத்து, ‘போன படம் வெற்றியடைஞ்சதுக்கு உனக்கு எந்த பரிசும் நான் கொடுக்கலை. இப்போ தாயைக் காத்த தனயன் பெரிய வெற்றியடைஞ்சிருக்கு உனக்கு என்ன பரிசு வேணும்?’ என்று கேட்க, ‘அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்ணே, உங்க அன்பு இருந்தா போதும்’ என்றேன். ‘அப்படியா அப்போ நானே ஏதாவது பண்றேன்’ என்று சொல்லிவிட்டார்.
அன்று பிற்பகல் சிவாஜி பட ஷூட்டிங் போனபோது அவர் என்னை தனியே அழைத்து, ‘ஆரூரான், இதற்கு முந்தி நீ எழுதின பாசமலர் பெரிய வெற்றியாச்சு. அதுக்கு நான் பரிசு எதுவும் தரலை. இப்போ நீ எழுதின படித்தால் மட்டும் போதுமாவும் நல்லா ஓடிக்கிட்டிருக்கு. உனக்கு என்ன பரிசு வேணும் சொல்லு. அண்ணன் கிட்டே இருந்தா தர்ரேன். இல்லேன்னா வாங்கித் தர்ரேன்” என்று கேட்டதும் நான் ஆடிப்போனேன். அதெப்படி அவர்கள் இருவரது மனதிலும் ஒரே மாதிரி எண்ணம் ஓடுதுன்னு ஆச்சரியப்பட்டேன். எம்ஜிஆருக்கு சொன்ன அதே பதிலையே இவருக்கும் சொன்னேன். ‘அன்புதான் நிறைய இருக்கே, வேறென்ன வேணும்?’ என்றார். நான் ஒண்ணும் சொல்லவில்லை.


இரண்டு நாள் கழித்து எம்ஜிஆர் பிக்சர்ஸ் அலுவலகத்தில் இருந்து போன் பண்ணி வரச் சொன்னாங்க. போனபோது எம்ஜிஆர் இருந்தார். ஒரு பெரிய வெள்ளித் தட்டில் நான்கு மூலைகளிலும் சிறிய தங்கத் தகடுகள் பொருத்தியிருக்க, தட்டின் நடுவில் ‘எம்ஜியார் பிக்சர்ஸ் தாயைக் காத்த தனயன் வெற்றிக்கு ஆரூர் தாஸ் அவர்களுக்கு அன்பளிப்பு’ என்று பொறிக்கப்பட்டிருந்த அந்த தட்டை எம்.ஜி.ஆர். வழங்கினார்.

1962 – ஆம் ஆண்டு, தமிழ்ப்புத்தாண்டில், திரைக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டிய ‘தாயைக் காத்த தனயன்’திரைப்படத்தைத் தொடர்ந்து தேவர் பிலிம்சாரின் ‘குடும்பத் தலைவன்’ திரைப்படம் அதே ஆண்டு சுதந்திரதிருநாளன்று வெளியிடப் பெற்று மகத்தான வெற்றியைக் கண்டது.

இதில் அதிசயம் என்னவென்றால், தேவர் பிலிம்ஸ் என்ற ஒரே நிறுவனம் தொடர்ந்து வெளியிட்ட இரண்டுபடங்களிம் வெற்றியை ஈட்டின என்பது மட்டுமன்று. இரண்டு படங்களிலும் கதாநாயகன் எம்.ஜி.ஆர்,கதாநாயகி சரோஜாதேவி; கதை வசனம் ஆரூர்தாஸ், இயக்கம் எம்.ஏ. திருமுகம்; இசை கே.வி.மகாதேவன்; பாடல்கள் கண்ணதாசன்.

இப்படியொரு கூட்டமைப்பினரின் இரு படங்கள் இடைவெளியின்றி, நான்கு மாதங்களுக்குள்வெளியிடப்பட்டு வெற்றி பெற்றதாக உலகப்பட வரலாற்றில் எங்கும் காண இயலாது என்பதே உயர்வானஅதிசயம்.

‘குடும்பத்தலைவன்’ படத்தில் கண்ணதாசன் எழுதியுள்ள பாடல்கள் எல்லாம் நல்ல பாடல்களே!

“மழை பொழிந்து கொண்டே இருக்கும்
உடல் நனைந்து கொண்டே இருக்கும்!”

இவ்விதம் தொடங்கும் பாடலில்,

“ஆயிரம் யானை பலமிருக்கும்
அல்லிக்கொடி போல் மனமிருக்கும்
தாயின் பாசம் நிறைந்திருக்கும்
தாவியணைத்தால் மெய் சிலிர்க்கும்!”

என்று, புரட்சிநடிகரைப் பார்த்து நாயகி பாடுவதுபோல் கவியரசர் எழுதிய பாடல், எம்.ஜி.ஆரைஎடைபோட்டுப் பார்த்து, இந்தப் புவியோர்க்குச் சொன்ன உண்மையைப்போல் உள்ளதல்லவா?

பலம் – ஆயிரம் யானை பலம்!

மனம் – அல்லிக்கொடிபோல் மென்மை மனம்!

பாசம் – தாயின் பாசம்!

அணைப்பு – ஆடவர்க்கும் மெய்சிலிர்க்கும் அணைப்பு!

கவியரசர் எம்.ஜி.ஆரைப் பார்த்த பார்வைகள் அனைத்துமே பாங்கானவையே.

“திருமணமாம் திருமணமாம்
தெருவெங்கும் ஊர்வலமாம்!”

என்று தொடங்கும் பாடலும், இன்றும் திருமண மேடைகள்தோறும் ஒலிக்கக் கேட்கிறோம்.

“அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்!”

இப்படித் தொடங்கும் கவிஞர் பாடலில், எம்.ஜி.ஆரின் புகழ் எப்படியெல்லாம் எடுத்துக் கூறப்பெற்றுள்ளனஎன்பதைப் பாருங்களேன்!

“வேண்டியவர் வேண்டாதவர் அவனுக்கில்லை – மன
வீட்டுக்குள்ளே அவனிருந்தும் காண்பவரில்லை!
…………………………………
அத்திப்பூ முகத்தைக் காண எத்தனைக் கூட்டம் – அதைத்
தொடர்ந்து நானும் பார்த்து வந்தால் தீர்ந்திடும் வாட்டம்!”

பார்த்தீர்களா?

எல்லோர்க்கும் எங்க வீட்டுப் பிள்ளையாய்த் திகழ்ந்து, ‘நான் உங்கள் வீட்டுப்பிள்ளை’, என்று கூறியஎம்.ஜி.ஆருக்கு எல்லோரும் வேண்டியவர்கள்தானே! மக்களின் மனமெனும் வீடுகளுக்குள் அவர் என்றும்இருப்பார்! அதனால்தானே அவர் ‘மக்கள் திலகம்’ எனும் மகுடத்தைச் சூடிக்கொள்ள முடிந்தது.

மனங்களுக்குள் இருக்கும் அவரைக் காணாமல், அழகு மிளிரும் அவரது அத்திப்பூப் போன்ற முகத்தைக்கண்டு தரிசிக்கவே தினம் மக்கள் கூட்டம் எல்லையின்றி அலைமோதுகிறதாம்.

இதனால்தான் அறிஞர் அண்ணாவும், எம்.ஜி.ஆரைப் பார்த்து, ‘தம்பீ! நீ முகத்தைக் காட்டினால் போதும்!முப்பது இலட்சம் ஓட்டு வரும்!’ என்று கூறினாரோ?

அத்தகு அருள்பாலிக்கும் முகத்தைத் தொடர்ந்து பார்த்து வந்தால், மனதிலுள்ள வாட்டமெல்லாம் தீர்ந்துபோகுமாம்!

இப்படியோர் திரையிசைப் பாடலில், அதுவும் காதலி கூற்றாக வரும் பாடலில், எம்.ஜி.ஆர் எனும்தனிமனிதரின் குணநலன்களைக் கூறிப் பக்குவமாகப் புகழ யாரால் முடியும்? கவியரசரால் மட்டுமேமுடியும்!

இன்னும்;

“கட்டான கட்டழகுக் கண்ணா! – உன்னைக்
காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?….”

எனும் வினாவோடு தொடங்கும் பாடலில்;

“மதயானை வடிவமே!
நடமாடும் வீரனே!
மலர் போன்ற உள்ளமே வா!….”

என்று மதுரைவீரனாய், மன்னாதிமன்னனாய்த் திகழ்ந்த எம்.ஜி.ஆரின் வடிவப் பொலிவினையும், வீரத்தின்திட்பத்தையும்; கண்ணதாசன் பாடலை யாரால்தான் கேட்காமல் இருக்க முடியும்?
உலகியல் தத்துவம்!

புரட்சித் தலைவர் நடித்துக் கவியரசர் பாடல்கள் எழுதியுள்ள படங்கள் பெரும்பாலனவற்றுள்,தத்துவார்த்தமான பாடல்கள் ஒன்றிரண்டு நிச்சயமாக இடம் பெற்றிருக்கும்.

அப்பாடல்களே கதையின் உச்சகட்ட நிலையின் உயர்மகுடங்களாகவும் திகழ்ந்திருக்கும் என்பதில்ஐயமில்லை.

விளையாட்டு வீரராக, சமூகசேவை செய்யும் வாலிபராகக் ‘குடும்பத் தலைவன்’ படத்தில் வரும் நாயகன்எம்.ஜி.ஆர், உலகியல் தத்துவத்தைக் கூறி நடிப்பதாக வரும் பாடல் காட்சிக்கென்று, கண்ணதாசன் எழுதி,டி.எம். சௌந்தரராஜன் இனிய குரலில் பாடிய பாடலைக் காணுங்களேன்!

“மாறாதய்யா மாறது!
மனமும் குணமும் மாறாது!
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும்…(மாறா)

காட்டுப் புலியை வீட்டில் வச்சு
கறியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின் மேல் நிக்க வச்சாலும்… (மாறா)

வரவறியாமல் செலவழிச்சாலும் நிலைக்காது!
மனசறியாமல் காதலிச்சாலும் பலிக்காது!
காலமில்லாமல் விதை விதைச்சாலும் முளைக்காது!
காத்துலே விளக்கை ஏத்தி வச்சாலும் எரியாது!

திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும்
திருடும் கையைக் கட்டி வச்சாலும்
தேடும் காதைத் திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்….(மாறா)”

பாடலைக் கண்டீர்கள்!

இதில் இடம்பெற்றுள்ள உலகியல் உண்மைத் தத்துவங்களில், எவற்றைப் பொய்யென்று நம்மால்புறந்தள்ள முடியும்?

இவற்றைப் புரட்சித்தலைவர், திரையில் கூறித் தோன்றும் காட்சிகளில் திரையரங்குகளில் எழுந்ததரவொலிகளைக் கேட்டு மனம் மகிழாதாரும் இருந்ததுண்டோ? இப்படி எத்தனையோ நாட்டு நடப்புத்தத்துவப் பாடல்களை, நல்லவர் எம்.ஜி.ஆர். படங்களில், கவியில் வல்லவராம் நம் கண்ணதாசன்எழுதியுள்ளார். முடிந்த மட்டும் நாமும் பார்ப்போமாக.
உலகம் பிறந்தது எனக்காக!
எம்.ஜி.ஆருக்காக!

1962 – ஆம் ஆண்டு, தமிழ்ப்புத்தாண்டில், திரைக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டிய ‘தாயைக் காத்த தனயன்’திரைப்படத்தைத் தொடர்ந்து தேவர் பிலிம்சாரின் ‘குடும்பத் தலைவன்’ திரைப்படம் அதே ஆண்டு சுதந்திரதிருநாளன்று வெளியிடப் பெற்று மகத்தான வெற்றியைக் கண்டது.

இதில் அதிசயம் என்னவென்றால், தேவர் பிலிம்ஸ் என்ற ஒரே நிறுவனம் தொடர்ந்து வெளியிட்ட இரண்டுபடங்களிம் வெற்றியை ஈட்டின என்பது மட்டுமன்று. இரண்டு படங்களிலும் கதாநாயகன் எம்.ஜி.ஆர்,கதாநாயகி சரோஜாதேவி; கதை வசனம் ஆரூர்தாஸ், இயக்கம் எம்.ஏ. திருமுகம்; இசை கே.வி.மகாதேவன்; பாடல்கள் கண்ணதாசன்.

இப்படியொரு கூட்டமைப்பினரின் இரு படங்கள் இடைவெளியின்றி, நான்கு மாதங்களுக்குள்வெளியிடப்பட்டு வெற்றி பெற்றதாக உலகப்பட வரலாற்றில் எங்கும் காண இயலாது என்பதே உயர்வானஅதிசயம்.

‘குடும்பத்தலைவன்’ படத்தில் கண்ணதாசன் எழுதியுள்ள பாடல்கள் எல்லாம் நல்ல பாடல்களே!

“மழை பொழிந்து கொண்டே இருக்கும்
உடல் நனைந்து கொண்டே இருக்கும்!”

இவ்விதம் தொடங்கும் பாடலில்,

“ஆயிரம் யானை பலமிருக்கும்
அல்லிக்கொடி போல் மனமிருக்கும்
தாயின் பாசம் நிறைந்திருக்கும்
தாவியணைத்தால் மெய் சிலிர்க்கும்!”

என்று, புரட்சிநடிகரைப் பார்த்து நாயகி பாடுவதுபோல் கவியரசர் எழுதிய பாடல், எம்.ஜி.ஆரைஎடைபோட்டுப் பார்த்து, இந்தப் புவியோர்க்குச் சொன்ன உண்மையைப்போல் உள்ளதல்லவா?

பலம் – ஆயிரம் யானை பலம்!

மனம் – அல்லிக்கொடிபோல் மென்மை மனம்!

பாசம் – தாயின் பாசம்!

அணைப்பு – ஆடவர்க்கும் மெய்சிலிர்க்கும் அணைப்பு!

கவியரசர் எம்.ஜி.ஆரைப் பார்த்த பார்வைகள் அனைத்துமே பாங்கானவையே.

“திருமணமாம் திருமணமாம்
தெருவெங்கும் ஊர்வலமாம்!”

என்று தொடங்கும் பாடலும், இன்றும் திருமண மேடைகள்தோறும் ஒலிக்கக் கேட்கிறோம்.

“அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்!”

இப்படித் தொடங்கும் கவிஞர் பாடலில், எம்.ஜி.ஆரின் புகழ் எப்படியெல்லாம் எடுத்துக் கூறப்பெற்றுள்ளனஎன்பதைப் பாருங்களேன்!

“வேண்டியவர் வேண்டாதவர் அவனுக்கில்லை – மன
வீட்டுக்குள்ளே அவனிருந்தும் காண்பவரில்லை!
…………………………………
அத்திப்பூ முகத்தைக் காண எத்தனைக் கூட்டம் – அதைத்
தொடர்ந்து நானும் பார்த்து வந்தால் தீர்ந்திடும் வாட்டம்!”

பார்த்தீர்களா?

எல்லோர்க்கும் எங்க வீட்டுப் பிள்ளையாய்த் திகழ்ந்து, ‘நான் உங்கள் வீட்டுப்பிள்ளை’, என்று கூறியஎம்.ஜி.ஆருக்கு எல்லோரும் வேண்டியவர்கள்தானே! மக்களின் மனமெனும் வீடுகளுக்குள் அவர் என்றும்இருப்பார்! அதனால்தானே அவர் ‘மக்கள் திலகம்’ எனும் மகுடத்தைச் சூடிக்கொள்ள முடிந்தது.

மனங்களுக்குள் இருக்கும் அவரைக் காணாமல், அழகு மிளிரும் அவரது அத்திப்பூப் போன்ற முகத்தைக்கண்டு தரிசிக்கவே தினம் மக்கள் கூட்டம் எல்லையின்றி அலைமோதுகிறதாம்.

இதனால்தான் அறிஞர் அண்ணாவும், எம்.ஜி.ஆரைப் பார்த்து, ‘தம்பீ! நீ முகத்தைக் காட்டினால் போதும்!முப்பது இலட்சம் ஓட்டு வரும்!’ என்று கூறினாரோ?

அத்தகு அருள்பாலிக்கும் முகத்தைத் தொடர்ந்து பார்த்து வந்தால், மனதிலுள்ள வாட்டமெல்லாம் தீர்ந்துபோகுமாம்!

இப்படியோர் திரையிசைப் பாடலில், அதுவும் காதலி கூற்றாக வரும் பாடலில், எம்.ஜி.ஆர் எனும்தனிமனிதரின் குணநலன்களைக் கூறிப் பக்குவமாகப் புகழ யாரால் முடியும்? கவியரசரால் மட்டுமேமுடியும்!

இன்னும்;

“கட்டான கட்டழகுக் கண்ணா! – உன்னைக்
காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?….”

எனும் வினாவோடு தொடங்கும் பாடலில்;

“மதயானை வடிவமே!
நடமாடும் வீரனே!
மலர் போன்ற உள்ளமே வா!….”

என்று மதுரைவீரனாய், மன்னாதிமன்னனாய்த் திகழ்ந்த எம்.ஜி.ஆரின் வடிவப் பொலிவினையும், வீரத்தின்திட்பத்தையும்; கண்ணதாசன் பாடலை யாரால்தான் கேட்காமல் இருக்க முடியும்?
உலகியல் தத்துவம்!

புரட்சித் தலைவர் நடித்துக் கவியரசர் பாடல்கள் எழுதியுள்ள படங்கள் பெரும்பாலனவற்றுள்,தத்துவார்த்தமான பாடல்கள் ஒன்றிரண்டு நிச்சயமாக இடம் பெற்றிருக்கும்.

அப்பாடல்களே கதையின் உச்சகட்ட நிலையின் உயர்மகுடங்களாகவும் திகழ்ந்திருக்கும் என்பதில்ஐயமில்லை.

விளையாட்டு வீரராக, சமூகசேவை செய்யும் வாலிபராகக் ‘குடும்பத் தலைவன்’ படத்தில் வரும் நாயகன்எம்.ஜி.ஆர், உலகியல் தத்துவத்தைக் கூறி நடிப்பதாக வரும் பாடல் காட்சிக்கென்று, கண்ணதாசன் எழுதி,டி.எம். சௌந்தரராஜன் இனிய குரலில் பாடிய பாடலைக் காணுங்களேன்!

“மாறாதய்யா மாறது!
மனமும் குணமும் மாறாது!
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும்…(மாறா)

காட்டுப் புலியை வீட்டில் வச்சு
கறியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின் மேல் நிக்க வச்சாலும்… (மாறா)

வரவறியாமல் செலவழிச்சாலும் நிலைக்காது!
மனசறியாமல் காதலிச்சாலும் பலிக்காது!
காலமில்லாமல் விதை விதைச்சாலும் முளைக்காது!
காத்துலே விளக்கை ஏத்தி வச்சாலும் எரியாது!

திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும்
திருடும் கையைக் கட்டி வச்சாலும்
தேடும் காதைத் திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்….(மாறா)”

பாடலைக் கண்டீர்கள்!

இதில் இடம்பெற்றுள்ள உலகியல் உண்மைத் தத்துவங்களில், எவற்றைப் பொய்யென்று நம்மால்புறந்தள்ள முடியும்?

இவற்றைப் புரட்சித்தலைவர், திரையில் கூறித் தோன்றும் காட்சிகளில் திரையரங்குகளில் எழுந்ததரவொலிகளைக் கேட்டு மனம் மகிழாதாரும் இருந்ததுண்டோ? இப்படி எத்தனையோ நாட்டு நடப்புத்தத்துவப் பாடல்களை, நல்லவர் எம்.ஜி.ஆர். படங்களில், கவியில் வல்லவராம் நம் கண்ணதாசன்எழுதியுள்ளார். முடிந்த மட்டும் நாமும் பார்ப்போமாக.
உலகம் பிறந்தது எனக்காக!
எம்.ஜி.ஆருக்காக!

‘குடும்பத்தலைவன்’ படம் வெளிவந்து பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த இரண்டாவதுவாரமே, ஆர்.ஆர். பிக்சர்ஸாரின் ‘பாசம்’ திரைப்படம் 31.8.1962 அன்று திரையிடப்பட்டது.

தித்திக்கும் தேனாறாய் இப்படத்தின் பாடல்கள் தமிழகமெங்கும் ஒலிக்கத் தொடங்கின.

“ஜல் ஜல ஜல்லெனும் சலங்கையொலி”

என்று, ஒலி எழுப்பி,

“அவன்தான் திருடன் என்றிருந்தேன்
அவனை நானும் திருடிவிட்டேன்!
முதல் முதல் திருடும் காரணத்தால்
முழுசாய்த் திருட மறந்துவிட்டேன்!….”

எனத் தொடரும் பாடலை, எஸ். ஜானகியின் இன்பக் குரலில் எழுந்த பாடலை, சரோஜாதேவியினஇன்முகத் தோற்றத்தில் காட்சி வடிவாய் வரும் பாடலை, பெண்மனக் காதலை, புதிய இலக்கிய நயத்தில்கண்ணதாசன் எழுதிய பாடலை எவரால் மறக்க முடியும்?

கவிச்சக்கரவர்த்தி கம்பரின் கவிதைக் கடலில் நீந்தியவர் கவியரசர். அந்தக் கம்பரின் இலக்கியத்தைத்தேன்சுவைச் சாறாக்கிக் கொடுப்பதில் தனி இன்பம் கண்டவர் கவியரசர்.

இப்படத்தில் கம்பரின்,

“கால்வண்ணம் அங்கே கண்டேன்!
கைவண்ணம் இங்கே கண்டேன்!”

எனும் பாடலைச் சுவைத்த கவியரசர்,

“பால்வண்ணம் பருவம் கண்டு
வேல்வண்ணம் விழிகள் கண்டு
மான்வண்ணம் நான் கண்டு
வாடுகிறேன்!…..
கண்வண்ணம் அங்கே கண்டேன்
கைவண்ணம் இங்கே கண்டேன்
பெண்வண்ணம் நோய் கொண்டு
வாடுகிறேன்!….”

என்றெல்லாம் ஆரம்பமாகி, மெல்லிசைக் குரலோன் பி.பி. ஸ்ரீநிவாசனும், கொஞ்சும் சலங்கைக் குரல் எஸ்.ஜானகியும் மெல்லிசை மன்னர்கள் விசுவநாதன் – ராம்மூர்த்தி இருவரது இணைந்த இசையில் மயங்கிப்பாடும் பாடலாக யார்த்துத் தந்தார்.

இன்றைய திரைக் கவிஞர்கள் இதுபோன்ற பாடல்களைத் தினமும் கேட்டு, சிந்தித்தால் தரமானபாடல்களைத் தமிழ்த் திரையுலகிற்குச் சீதனமாகத் தரலாமே! சிந்திப்பார்களா?

‘பாசம்’ படத்தில் வரும் பரவசமான பாடல்! பைந்தமிழ் நாடெங்கும் இன்னும் இனிமையாய் ஒலிக்கும்பாடல்! டி.எம். சௌந்தரராஜன் குரலில் இப்படத்தில் இடம்பெற்ற ஒரே பாடல்! புரட்சித்தலைவருக்கென்றேபுத்துணர்ச்சியோடு, புதுமை எண்ணங்களோடு, புவியே பாராட்டக் கவியரசர் உருவாக்கித் தந்த உயர்வானபாடல்! எதுவென்று எல்லோர்க்கும் தெரியுமே! பாடலை ஆனந்தமாய்ப் படித்து… ஏன்? பாடித்தான்பாருக்களேன்!

“உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக – அன்னை
மடியை விரித்தாள் எனக்காக!…..”

படித்து, பாடித்தான் பார்த்தீர்களா?
உலகம் பிறந்ததும்
ஓடும் நதிகளும்
மலர்கள் மலர்வதும் எனக்காக!
என்று சொல்வது யார்? எம்.ஜி.ஆர்!
சொல்ல வைத்தவர் யார்? கண்ணதாசன்.
எல்லாமே எம்.ஜி.ஆருக்காக! அதற்காகத்தான் இயற்கை
அன்னையும்; சத்யா அன்னையும் மடியை விரித்தார்களாம்!

இன்னும் பாருங்களேன்!

“காற்றில் மிதக்கும் ஒலிகளிலே
கடலில் தவழும் அலைகளிலே
இறைவன் இருந்ததை நான்றிவேன்
என்னை அவனே தான்றிவான்!….”

ஆம்!

பண்டைத்தமிழர் மரபுப்படி, இயற்கையின் வடிவங்கள் எல்லாம் இறைவனே! அம்முறைப்படி, காற்றின்ஒலியில், கடலின் அலையில் இறைவன் இருப்பதைப் புரட்சித்தலைவர் அறிவாராம்! பூமி தந்த அந்தப்புனிதனை இறைவனும் அறிவானாம்!

அவரது அரசாங்கம் எத்தன்மையாதாம்? கவிஞரின் கவிதையே சொல்லட்டுமே!

“தவழும் நிலவாம் தங்கரதம்
தாரகை பதித்த மணிமகுடம்
குயில்கள் பாடும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம்!”

தன்னைத் தாங்கும் தங்க ரதமே வானத்தில் தவழும் நிலவாம்! தனது மணிமகுடமோ வானத்துநட்சத்திரங்கள் பதிக்கப்பட்ட மணிமகுடமாம்! அரச மாளிகையோ, இன்னிசைக் குயில்கள் பாடும்கலைக்கூடமாம்! இவையனைத்தும் கொண்டதுதான் எம்.ஜி.ஆரின் அரசாங்கமாம்!

அவர் ஆண்டபோது, தமிழக மக்களின் மனமகிழ்ச்சியும், எழுச்சியும் இப்படித்தானே எட்டமுடியாதனவற்றையெல்லாம் எட்ட முடிந்த நிலையில் இருந்தன….

நியாயவிலைக் கடைகளில் அரிசி முதல் அனைத்திற்கும் பஞ்சமில்லையே! ஐந்துகிலோ எடையுள்ளபாமாயில் டின்கள் அல்லவா தங்களைத் தாங்குவார் கரங்களித் தேடித்தேடி அலைந்தன?

எதற்கும் பஞ்சமில்லாத ஆட்சியல்லவா எம்.ஜி.ஆரின் ஏற்றமிகு பொற்கால ஆட்சி!

படங்களில் பாடியதுபோல் பாராண்ட பண்பாளர் அல்லவா எம்.ஜி.ஆர்! இதிலென்ன ஐயம் என்றுதானேஅனைவரும் கேட்பார்கள்?

எல்லாம் இருந்தாலும் எம்.ஜி.ஆரின் எண்ணம் மட்டும் எப்படி இருந்ததாம்….?

கண்ணதாசன் கவி வழியில் கேட்போமே!

“எல்லாம் எனக்குள் இருந்தாலும்
என்னைத் தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில்
அவளே என்றும் என் தெய்வம்!….”

கேட்டீர்களா?

பொங்கித் ததும்பும் தாய்ப்பாசத்தை….! கருவறைக்குள் பத்துமாதங்களாக உருவாகும் பச்சைப்பசும்பொன்னாம் பச்சிளங்குழந்தைக்காக, கண்ணிலே உறக்கமின்றி, ஊன் உண்ணும் உற்சாகமுமின்றி,வயிற்றில் எட்டி உதைக்கும் மழலை எப்படிப்பிறக்குமோ என்று எண்ணியெண்ணி, ஈன்றபொழுதுபெரிதுவக்கும் பெறற்கரிய அன்னையைவிடப் பெருந்தெய்வம் உலகில் உண்டா? இல்லை! இல்லவேஇல்லை.

இதனால்தான்,

‘எல்லா நலங்களும், வளங்களும் எனக்கென்றே இருந்தாலும், என்னைத் தனக்குள்ளேயே வைத்திருக்கும்அன்னையின் மனமே என் ஆலயம்! அவளே என்றும் என்னை ஆளுகின்ற தெய்வம்!’ என்றார் எம்.ஜி.ஆர்.

அன்னையை வணங்காமல் எந்தச் செயலையும், எந்நாளும் செய்தறியாத எம்.ஜி.ஆரைப் பற்றிஅறிந்ததால்தான், கண்ணதாசனால் அவருக்கு ஏற்றபடி, காலத்தை வெல்லும் பாடலை எழுத முடிந்தது.

கண்ணதாசன் பாடல்களையும், எம்.ஜி.ஆரால் என்றும் அறிந்து, புரிந்து போற்ற முடிந்தது.


1962 – ஆம் ஆண்டு வெளியான ‘விக்கிரமாதித்தன்’ படத்திலும்,

“கன்னிப் பெண்ணின் ரோஜா
கன்னங்கண்ட ராஜா கவிஞரம்மா…
சிறுவிழிப் பார்வையில் காணாத சொல்லையே
செந்தமிழ்க் காவியம்தான் காணவில்லையே!”

என்றதோர் அருமையான பாடலைக் கண்ணதாசன் எழுதினார்.
Courtesy .net.

fidowag
27th November 2017, 02:22 PM
தினச்செய்தி -25/11/17
http://i65.tinypic.com/153quqb.jpg

fidowag
27th November 2017, 02:23 PM
http://i65.tinypic.com/1zmiftc.jpg

fidowag
27th November 2017, 02:54 PM
தினமலர் -26/11/17
http://i64.tinypic.com/29bbp5w.jpg

fidowag
27th November 2017, 02:56 PM
தினஇதழ் -26/11/17
http://i67.tinypic.com/2ewh93r.jpg
http://i67.tinypic.com/2e6hb4j.jpg

fidowag
27th November 2017, 02:58 PM
தினசெய்தி -26/11/17
http://i64.tinypic.com/2nu4ot1.jpg

fidowag
27th November 2017, 02:59 PM
http://i63.tinypic.com/2n6rej7.jpg

fidowag
27th November 2017, 03:01 PM
http://i63.tinypic.com/34hukk5.jpg

fidowag
27th November 2017, 03:02 PM
மக்கள் குரல் -26/11/17
http://i67.tinypic.com/dh2t0g.jpg

fidowag
27th November 2017, 03:05 PM
http://i64.tinypic.com/2nrk3eg.jpg

fidowag
27th November 2017, 03:06 PM
http://i63.tinypic.com/kedegx.jpg

fidowag
27th November 2017, 03:07 PM
ராமநாதபுரம் பொதுக்கூட்டத்தில் ஓ.பி.எஸ்.பேசியதாவது
http://i68.tinypic.com/6hibgg.jpg
http://i64.tinypic.com/mccdqu.jpg

fidowag
28th November 2017, 11:56 AM
தின இதழ் -27/11/17
http://i64.tinypic.com/10h2kit.jpg

fidowag
28th November 2017, 11:57 AM
http://i68.tinypic.com/16jpsuw.jpg

fidowag
28th November 2017, 11:59 AM
http://i66.tinypic.com/14n362h.jpg

fidowag
28th November 2017, 12:00 PM
http://i64.tinypic.com/2e0n5zt.jpg

fidowag
28th November 2017, 12:03 PM
தின மலர் -
http://i67.tinypic.com/iqzdy1.jpg

fidowag
28th November 2017, 12:04 PM
நக்கீரன் வார இதழ்
http://i66.tinypic.com/2yo5xmp.jpg

fidowag
28th November 2017, 12:09 PM
http://i64.tinypic.com/2iqyiau.jpg

fidowag
28th November 2017, 12:13 PM
1/12/2017 முதல் கோவை நாஸ் , மற்றும் ப்ருக்ளின் அரங்கில் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய "நினைத்ததை முடிப்பவன் "
சாதனை படைக்க வருகிறது .
http://i63.tinypic.com/6ibamt.jpg

தகவல் உதவி : திரு.சாமுவேல், சத்தியமங்கலம்

fidowag
28th November 2017, 12:14 PM
http://i66.tinypic.com/2evwx1i.jpg

fidowag
28th November 2017, 12:16 PM
தற்போது வெற்றி நடை போடுகிறது - மதுரை சென்ட்ரல் சினிமாவில்

http://i64.tinypic.com/2eurkhw.jpg

தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .

fidowag
28th November 2017, 12:20 PM
26/11/17 முதல் மதுரை வண்டியூர் பழனிமுருகனில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
"தர்மம் தலை காக்கும் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i67.tinypic.com/5upa8i.jpg

தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார்.

fidowag
28th November 2017, 12:20 PM
http://i66.tinypic.com/2zzrlfr.jpg

fidowag
28th November 2017, 12:21 PM
http://i64.tinypic.com/28qywq1.jpg

fidowag
28th November 2017, 12:22 PM
http://i63.tinypic.com/j60h2u.jpg

fidowag
28th November 2017, 12:23 PM
http://i68.tinypic.com/fdt20m.jpg

fidowag
28th November 2017, 12:29 PM
மாலை மலர் -27/11/17
http://i67.tinypic.com/4ibfo0.jpg

fidowag
28th November 2017, 12:31 PM
மாலை முரசு -27/11/17
http://i68.tinypic.com/2n7r48p.jpg

oygateedat
29th November 2017, 08:27 PM
https://s2.postimg.org/b9td2l361/IMG_6916.jpg (https://postimg.org/image/u25865zk5/)

oygateedat
29th November 2017, 08:50 PM
https://s2.postimg.org/997evhweh/IMG_6858.jpg (https://postimages.org/)
இப்பொழுது
வெற்றி நடைபோடுகிறது
கோவை
டிலைட்
திரையரங்கில்

oygateedat
29th November 2017, 11:15 PM
https://s17.postimg.org/axpt16xhb/IMG_6920.jpg (https://postimg.org/image/6btosuby3/)

oygateedat
29th November 2017, 11:17 PM
https://s17.postimg.org/sp1ffghz3/1511790881680.jpg (https://postimg.org/image/vvvyz32ez/)

orodizli
1st December 2017, 08:50 PM
1974 ஆம் ஆண்டில் மிக பிரமாண்ட வெற்றி அடைந்த, இப்பொழுதும் சகாப்தம் படைத்து கொண்டிருக்கும் காவியம் மக்கள் திலகம் வசூல் படைப்பு தற்போது சன் லைப் சானலில் ஒளி பரபாக்கின்றது...

orodizli
1st December 2017, 08:53 PM
Now screening "Urimaikural" @ SunLife channel...

Gambler_whify
2nd December 2017, 12:41 AM
http://i67.tinypic.com/v45n6f.jpg


புரட்சித் தலைவர் புகழ் பெருமை பாடி 18 ஆயிரம் பதிவுகளை தாண்டி பதிவுகள் பாேடும் நண்பர் லோகநாதன் அவர்களக்கு புரட்சித் தலைவர் பக்தர்கள் சார்பில் நன்றி.

காெஞ்சம் கூட சலிக்காமல் புரட்சித் தலைவர் பற்றிய எல்லா ஆவணங்களை ேபப்பர் பத்திரிக்கை செய்திகைளை பதிவு போட்டு வரும் உன்ைன எவ்வளவு பாராட்டினாலும் போதாது நண்பா.

தமிழக மக்களின் இதய தெய்வம் புரட்சித் தலைவர் வாழ்க.

நண்பர் லாேகநாதன் வா்ழ்க.

புரட்சித் தலலைவர் பக்தர்கள் எல்லாரும் வாழ்க.

Gambler_whify
2nd December 2017, 01:18 AM
இலங்கை அரசை கிலி கொள்ள செய்தது புலிகள் மட்டுமல்ல, அவர்களின் உறக்கத்தை கலைத்தது #புரட்சித்தலைவரின் படப்பாடலும் தான்...

1983-க்கு பிறகு இன்று வரை இலங்கை வானொலியில் ஒலிபரப்ப தடை செய்யப்பட்ட #மக்கள்திலகத்தின் பாடல் ஒன்று உண்டு..

குறிப்பாக இந்த வரிகளுக்காகவே தடை செய்தார்கள்... "பூனைகள் இனம்போலே பதுங்குதல் இழிவாகும்.. புலி இனம் நீ எனில் வாராய்.. வீரமுண்டு வெற்றி உண்டு.. விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா..."

#எம்ஜிஆர் அவர்களின் கடைசி படமான "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" படத்தில் கவிஞர் முத்துலிங்கத்தின் கை வண்ணத்தில் உருவான அந்த பாடல்தான்...

"தாயகத்தின் சுதந்திரமே ....
தாயாகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
தாயாகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்

ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்
ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்
தாயாகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்

கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்

கண் கவரும் கலைகள் எல்லாம் வளர்ந்தது இங்கே
களங்கமுள்ள பகைவராலே தாழ்ந்தது இங்கே
நீதியோடு நேர்மை காக்கும் மறவர்கள் இங்கே
நிமிர்ந்தெழுந்தால் தாடகை எல்லாம் உடைந்திடும் இங்கே
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா

பூனைகள் இனம்போலே பதுங்குதல் இழிவாகும்
புலி இனம் நீ எனில் வாராய்
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா

தென்பாங்கு தென்றல் பண்பாடும் நாட்டில்
தீராத புயல் வந்ததேனோ
தென்பாங்கு தென்றல் பண்பாடும்
நாட்டில் தீராத புயல் வந்ததேனோ
நீர் வாழும் மீன்கள் நிலம் வீழல் போலே
நெஞ்சங்கள் துடித்திடலாமோ
வா வா என் தோழா
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா"

http://i67.tinypic.com/2ikp6hw.jpg

நன்றி முகநூல் துரை வேலுமணி

Gambler_whify
2nd December 2017, 01:33 AM
http://i64.tinypic.com/ivzfk6.jpg

#அவரது (எம்ஜிஆர்) இழப்பு ஈழத்தமிழர்களுக்கு மிகப்பெரிய இழப்பு. அவர் இருந்திருந்தால் நிச்சயம் எங்களுக்கு இப்போதும் உதவியிருப்பார். மத்திய அரசு எங்கள் மீது ஒரு தவறான நிலைப்பாடு எடுத்தபோதும்கூட, அது மத்திய அரசின் கருத்து என்னைப்பொறுத்தவரை நான் உனக்கு ஆதரவாகவே நிற்பேன் என்று சொன்னவர்.

#இந்திய ராணுவத்துக்கு எதிராக நாங்கள் போரிடும் நிலைவந்தபோதுகூட அதுபற்றி கிட்டு, எம்ஜிஆரிடம் நேரில் சந்தித்து நிலவரம் பற்றிக்கூறியபோது அந்த சூழ்நிலையிலும் கிட்டுவிடம் மிகப்பெரிய தொகை ஒன்றைக்கொடுத்து எங்களுக்கு உதவினார். காரணம் இந்திய ராணுவம் எங்களையும், எங்கள் மக்கள் மீதும் தாக்குதல் நடத்தியதில் அவருக்கு உடன்பாடு இல்லை. எங்கள் ஆயுதப்போராட்டத்தை அவர் நம்பினார்.

#மேதகு. பிரபாகரன் அவர்கள்,
விடுதலைப்புலிகள் தலைவர்

நன்றி ஜெயராமன். ரெ. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.முகாநூல் .

Gambler_whify
2nd December 2017, 02:02 AM
Santhanam Admk


ஒருமுறை உள்ளாட்சிமன்ற தேர்த*லில் மதுரை வேட்பாளர்க*ளை அறிமுக*ம் செய்தார் எம்ஜிஆர். அப்போது ஒவ்வொரு வேட்பாளரின் பெய*ரைச்சொல்லி அவ*ர*து கையை பிடித்து உய*ர்த்தி அறிமுக*ம் செய்வார் எம்ஜிஆர்.
இப்ப*டி அறிமுக*ம் செய்யும்போது மதுரை தெப்ப*க்குள வார்டு க*வுன்சில*ர் வேட்பாள*ரை அழைத்து அறிமுக*ம் செய்ய முற்ப*ட்டார். அவ*ரின் கையை பிடித்து உய*ர்த்திய வேக*த்திலேயே ச*டாரென விட்டுவிட்டு வேறொரு ந*ப*ரை அறிமுக*ப்ப*டுத்தினார் எம்ஜிஆர். நிக*ழ்ச்சி முடிந்ததும் அந்த* ந*ப*ர் என்ன* த*லைவ*ரே! க*டைசி நேர*த்தில் என்னை மாற்றி விட்டீர்க*ளே என்று கெஞ்சினார். அத*ற்கு எம்ஜிஆர் அந்த* ந*ப*ரிட*ம், நீ போட்டிருக்கும் விலையுய*ர்ந்த செண்ட் வாங்கக்கூட உனக்கு கிடைக்கும் ச*ம்பளம் போதாது. இந்நிலையில் நீ எப்ப*டி ஒழுக்க*மாக மக்கள் ப*ணி ஆற்றுவாய். முத*லில் நேர்மையாக ந*ட*க்க க*ற்றுக்கொள். பிறகு வேட்பாளர் ஆக*லாம்.
இதுதான் த*லைவ*ர்.

http://i66.tinypic.com/51pu2v.jpg

Gambler_whify
2nd December 2017, 02:08 AM
முக்தா சீனிவாசன் மகள் திருமணத்தில்...

http://i63.tinypic.com/14aza01.jpg

நன்றி பழனியப்பன் சுப்பு - மக்கள் திலகம் எம்ஜிஆர் முகநூல்.

Gambler_whify
2nd December 2017, 02:34 AM
காத*ல் மன்னன் ஜெமினி க*ணேச*ன் ந*மது புன்னகை மன்ன*னுட*ன் ந*டித்த ஒரே ப*ட*ம் முக*ராசி.

http://i67.tinypic.com/2mz9m3n.jpg

இந்த* ப*ட*ம் வெளியானபோது சென்னையில் க*ட் அவுட் மற்றும் பேனர்க*ள் கெயிட்டி திரை அர*ங்கில் வைக்க*ப்பட்ட*து. அதில் எம்ஜிஆர் க*ட் அவுட் பெரிய*தாக*வும், ஜெமினியின் க*ட் அவுட் ஒற்றைக்காலுட*ன் சிறிய*தாக*வும் இருந்தது. ஜெமினி இதை பெரிதுப*டுத்த*வில்லை. ஆனால், இதை அறிந்த புரட்சித் த*லைவ*ர் வினியோக*ஸ்த*ருக்கு போன் செய்து த*ன் கட் அவுட் உய*ரத்திற்கே ஜெமினியின் க*ட் அவுட் வைக்கவேண்டும். அதுவும் அவ*ர் ப*டத்தில் இருகால்க*ளுட*ன் வ*ரும் காட்சியின் உருவ*மே இட*ம்பெற வேண்டும். அதை தான் மறுநாள் வ*ந்து பார்ப்பேன் என்றும் க*ண்டிப்பாக கூறிவிட்டார். பின் அவ்வாறே மாற்ற*ப்ப*ட்ட*து. இத*னை ஜெமினியே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதில் ஒரு* முக்கிய விஷயம். படத்தின் *விநியாேகஸ்தர் எம்ஜிஆர்* பிக்சர்ஸ்தான். தன் குழுவினர் ஜெமினி கணேசன்தானே என்று அலட்சி*யமாக இருந்தாலும் அதை கவனித்*து மற்ற நடிகர்களுக்கும் உரிய மரியாதை*யை புரட்சித் தலை*வர் அளிப்பார் என்பதற்கு இ*ந்த நிகழ்ச்சி உதாரணம்.


முக*ராசி ப*ட*த்திற்காக எம்ஜிஆரின் உத்த*ர*வின்பேரில் கெயிட்டி திரையரங்க முகப்பில் மாற்றி அமைக்க*ப்ப*ட்ட* ஜெமினியின் க*ட் அவுட்.
http://i68.tinypic.com/2nk8d35.jpg

நன்றி Santhanam Admk

fidowag
2nd December 2017, 12:45 PM
http://i67.tinypic.com/2vb4klt.jpg
இரங்கல் செய்தி
-------------------------

அருமை நண்பரும், மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் மூத்த பக்தரும் ஆகிய
சைதை திரு.மூர்த்தி அவர்களின் அன்பு தாயார் நேற்று அதிகாலை (01/12/17) இயற்கை எய்தினார். அவருக்கு வயது 96. அன்னாரின் பூத உடல் நேற்று மாலை 5 மணியளவில் கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது .
அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளை சார்ந்த அன்பர்கள் /நண்பர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

தனது தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு.மூர்த்தி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் என் சார்பிலும், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பிலும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் .
மறைந்த திரு.மூர்த்தி அவர்களின் தாயார் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல
இறைவன் அருள் புரிவாராக


ஆர். லோகநாதன் ,
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு .

fidowag
2nd December 2017, 12:47 PM
http://i65.tinypic.com/33p8xoo.jpg
எனது 18000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் வழங்கிய நண்பர் திரு.மஸ்தான் சாஹிப்
அவர்களுக்கு இதயங்கனிந்த நன்றி .

fidowag
2nd December 2017, 12:59 PM
01/12/17 வெள்ளி முதல் சென்னை சரவணாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த
"குமரிக்கோட்டம் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i66.tinypic.com/2ed1buh.jpg

fidowag
2nd December 2017, 01:01 PM
01/12/17 வெள்ளி முதல் கோவை நாஸில் மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கலக்கிய "நினைத்ததை முடிப்பவன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது
http://i64.tinypic.com/6od9jb.jpg

fidowag
2nd December 2017, 01:02 PM
01/12/17 முதல் மதுரை மீனாட்சியில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நடித்த
"நான் ஏன் பிறந்தேன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i64.tinypic.com/e6yfll.jpg

fidowag
2nd December 2017, 01:03 PM
http://i68.tinypic.com/xcvcpf.jpg

fidowag
2nd December 2017, 01:04 PM
http://i68.tinypic.com/f396c2.jpg

fidowag
2nd December 2017, 01:06 PM
புகைப்படங்கள் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார்
http://i64.tinypic.com/2drhx8y.jpg

fidowag
2nd December 2017, 01:07 PM
http://i67.tinypic.com/29qeicp.jpg

fidowag
2nd December 2017, 01:08 PM
http://i68.tinypic.com/33z8yo5.jpg

fidowag
2nd December 2017, 01:09 PM
http://i64.tinypic.com/30cw39j.jpg

fidowag
2nd December 2017, 01:10 PM
http://i68.tinypic.com/2a7sazd.jpg

fidowag
2nd December 2017, 01:10 PM
http://i66.tinypic.com/25u32oz.jpg

fidowag
2nd December 2017, 01:11 PM
http://i63.tinypic.com/2e4xl7a.jpg

fidowag
2nd December 2017, 01:12 PM
http://i64.tinypic.com/15hk38x.jpg

fidowag
2nd December 2017, 01:13 PM
http://i66.tinypic.com/vhgwuo.jpg

fidowag
2nd December 2017, 01:14 PM
http://i66.tinypic.com/vfh5yu.jpg

fidowag
2nd December 2017, 01:16 PM
தினமலர்
http://i64.tinypic.com/27yr5zo.jpg

fidowag
2nd December 2017, 01:16 PM
http://i67.tinypic.com/id6dso.jpg

fidowag
2nd December 2017, 01:18 PM
http://i63.tinypic.com/345oal2.jpg

fidowag
2nd December 2017, 01:19 PM
http://i66.tinypic.com/rbazk4.jpg

fidowag
2nd December 2017, 01:19 PM
http://i64.tinypic.com/ruvbm1.jpg

fidowag
2nd December 2017, 01:20 PM
http://i63.tinypic.com/rsxyzr.jpg
தமிழ் இந்து -28/11/17

fidowag
2nd December 2017, 01:22 PM
http://i66.tinypic.com/10h6peb.jpg
நக்கீரன் வார இதழ்

fidowag
2nd December 2017, 01:24 PM
தஞ்சையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா
புகைப்படங்கள் உதவி :மதுரை நண்பர் திரு. எஸ். குமார் .
http://i67.tinypic.com/mu8xeu.jpg

fidowag
2nd December 2017, 01:25 PM
http://i65.tinypic.com/ehkos6.jpg

fidowag
2nd December 2017, 01:25 PM
http://i65.tinypic.com/2emfrs1.jpg

fidowag
2nd December 2017, 01:27 PM
http://i68.tinypic.com/292007b.jpg

fidowag
2nd December 2017, 01:27 PM
http://i66.tinypic.com/j09m6c.jpg

fidowag
2nd December 2017, 01:29 PM
http://i68.tinypic.com/33aux4o.jpg

fidowag
2nd December 2017, 01:30 PM
http://i67.tinypic.com/2m5ni3n.jpg

fidowag
2nd December 2017, 01:31 PM
http://i63.tinypic.com/ritcht.jpg